பக்கங்கள் செல்ல

cross tab2

Saturday, August 3, 2019

நபி(சல்) அவர்கள் பிணத்துடன் உறவு கொண்டார்களா????


ஏக இறைவன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

                            மிசனரிகள் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால் தொடர்ந்து நபி(சல்) அவர்கள் மீது பரப்பப்படும் அவதூறுகளில் இதுவும் ஒன்று. அதாவது நபி(சல்) அவர்கள் அலி(ரலி) யின் தாயார் ஃபாத்திமா பின்த் அசத்(ரலி) அவர்கள் மரணித்த போது அவரது பிரேதத்துடன் உறவு கொண்டார்கள் என்பதுதான். ஃபாத்திமா பின்த் அசத்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களது பெரிய தந்தையான அபூதாலிப் அவர்களது மனைவியும், நபி(சல்) அவர்களது பெரியன்னையும் ஆவார்கள், மேலும் நபி(சல்) அவர்களது தாயாரான ஆமினா அவர்கள் மரணித்த,  பிறகு நபி(ஸல்) அவர்களை வளர்த்த அன்னை ஆவார்கள். இவர்களது பிரேத்துடந்தான் நபி(சல்) அவர்கள் உறவுகொண்டார்கள் என்ற அவதூறை பரப்பி திரிகின்றனர். அது குறித்து இஸ்லாமிய ஆதாரங்களான ஹதீஸ்களில் என்ன காணப்படுகிறது என்பதை காண்போம். இது குறித்து இரண்டு செய்திகள் காணப்படுகிறது: 


செய்தி 1: 

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ، ثَنَا مُحَمَّدُ بْنُ غَالِبِ بْنِ حَرْبٍ َحَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ أَحْمَدَ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْبُسْتِنْبَانِ بِسُرَّ مَنْ رَأَى، قَالَا: ثَنَا الْحَسَنُ بْنُ بِشْرٍ الْبَجَلِيُّ، ثَنَا سَعْدَانُ بْنُ الْوَلِيدِ، بَيَّاعُ السَّابِرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَمَّا مَاتَتْ فَاطِمَةُ أُمُّ عَلِيٍّ خَلَعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَمِيصَهُ وَأَلْبَسَهَا إِيَّاهُ وَاضْطَجَعَ فِي قَبْرِهَا فَلَمَّا سَوَّى عَلَيْهَا التُّرَابَ، قَالَ بَعْضُهُمْ: يَا رَسُولَ اللهِ رَأَيْنَاكَ صَنَعْتَ شَيْئًا لَمْ تَصْنَعْهُ بِأَحَدٍ، قَالَ: «إِنِّي أَلْبَسْتُهَا قَمِيصِي لِتَلْبِسَ مِنْ ثِيَابِ الْجَنَّةِ وَاضْطَجَعْتُ مَعَهَا فِي قَبْرِهَا لِأُخَفِّفَ عَنْهَا مِنْ ضَغْطَةِ الْقَبْرِ، إِنَّهَا كَانَتْ أَحْسَنَ خَلْقِ اللهِ صَنِيعًا إِلَيَّ بَعْدَ أَبِي طَالِبٍ» لَفْظُ سُلَيْمَانَ يُكْنَى أَبَا الْحَسَنِ وَكَنَّاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا تُرَابٍ وَيُكْنَى أَبَا قَضْمٍ  
معرفة الصحابة لأبي نعيم 289

           இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியதாவது: அலி(ரலி) யின் தாயார் ஃபாத்திமா அவர்கள் இறந்த போது நபி(ஸல்) அவர்கள் அவருக்கு தனது மேலாடையை கழட்டி அனிவித்து, பின்னர் அவரது கப்ரில் படுத்தார்கள். அப்போது சிலர் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே நீங்கள் யாருக்கும் இதுவரை செய்திராத ஒன்றை செய்தீர்களே?? என்று கூறினர். அதற்கு நபி(சல்) அவர்கள் “:அவர், அல்-ஜன்னத்தின் ஆடையை அணியவேண்டும் என்பதற்காக என்னுடைய ஆடையை அவருக்கு அணிவித்தேன்,. மேலும் அவரின் கப்ர் வேதனை குறைக்கப்படும் என்பதற்காக நான் அவரது கப்ரில் அவருடன் படுத்தேன். அபூதாலிப்பிற்கு பிறகு அல்லாஹ்வின் படைப்புகளில் எனக்கு மிக சிறந்தவர் அவரே" என்றார்கள் (கிதாப்: மாஃரிஃபத்தில் சஹாபா 289/271/273)
              மேற்குறிபிட்ட செய்தி மாரிஃபத்துல் சஹாபா என்ற நூலில் இருந்து கன்சுல் உம்மாலின் நூல் ஆசிரியர் பதிந்துள்ளார். மேற்குறிபிட்ட இந்த செய்தியில் இரண்டு பலவீனம் காணப்படுகிறது.

1. سَعْدَانُ بْنُ الْوَلِيدِ என்ற அறிவிப்பாளர் ஹதீஸில் யார் என்று அறியப்படாதவர். இவரை பற்றி அல் ஹாக்கிம் அவர்கள் இவர் ஹதீஸில் மதிப்பில்லாதவர் என்று கூறுகிறார். மேலும் அல் ஹைதமி குறிப்பிடும் போது இவர் அறியப்படாதவர் என்கிறார்.

2.அவரிடமிருந்து செவியுரும் الْحَسَنُ بْنُ بِشْرٍ الْبَجَلِيُّ என்பவர் பலவீனமானவர் என்று நஸயீ குறிப்பிடுகிறார். அப்துர் ரஹ்மான் இப்னு யூஸூஃப் அல் ஹராஸ் இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்று கூறுகிறார். நினைவாற்றல் குறைபாடு உடையவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜரால் தரப்படுத்தப்பட்டவர் (அல்தக்ரீப் அல்தஹ்தீப்:158). ஆக மேற்குறிபிட்ட செய்தி பலவீனமானது.

செய்தி 2:
)حديث مرفوع(  حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَمَّادِ بْنِ زُغْبَةَ ، قَالَ : نا رَوْحُ بْنُ صَلاحٍ ، قَالَ : نا سُفْيَانُ الثَّوْرِيُّ ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : لَمَّا مَاتَتْ فَاطِمَةُ بِنْتُ أَسَدِ بْنِ هَاشِمٍ أُمُّ عَلِيٍّ ، دَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَجَلَسَ عِنْدَ رَأْسِهَا ، فَقَالَ : " رَحِمَكِ اللَّهُ يَا أُمِّي ، كُنْتِ أُمِّي بَعْدَ أُمِّي ، تَجُوعِينَ وتُشْبِعِينِي ، وتَعْرَيْنَ وتَكْسُونَنِي ، وتَمْنَعِينَ نَفْسَكِ طَيِّبَ الطَّعَامِ وتُطْعِمِينِي ، تُرِيدِينَ بِذَلِكَ وَجْهَ اللَّهِ وَالدَّارَ الآخِرَةَ " ، ثُمَّ أَمَرَ أَنْ تُغْسَلَ ثَلاثًا وَثَلاثًا ، فَلَمَّا بَلَغَ الْمَاءَ الَّذِي فِيهِ الْكَافُورُ ، سَكَبَهُ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ ، ثُمَّ خَلَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَمِيصَهُ فَأَلْبَسَهَا إِيَّاهُ ، وكُفِّنَتْ فَوْقَهُ ، ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسَامَةَ بْنَ زَيْدٍ ، وَأَبَا أَيُّوبَ الأَنْصَارِيَّ ، وَعُمَرَ بْنَ الْخَطَّابِ ، وَغُلامًا أَسْوَدَ يَحْفِرُوا ، فَحَفَرُوا قَبْرَهَا ، فَلَمَّا بَلَغُوا اللَّحْدَ حَفَرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ ، وَأَخْرَجَ تُرَابَهُ بِيَدِهِ ، فَلَمَّا فَرَغَ ، دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فاضْطَجَعَ فِيهِ ، وَقَالَ : " اللَّهُ الَّذِي يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لا يَمُوتُ ، اغْفِرْ لأُمِّي فَاطِمَةَ بِنْتِ أَسَدٍ ، ولَقِّنْهَا حُجَّتَهَا ، وَوَسِّعْ عَلَيْهَا مُدْخَلَهَا ، بِحَقِّ نَبِيِّكَ وَالأَنْبِيَاءِ الَّذِينَ مِنْ قَبْلِي ، فَإِنَّكَ أَرْحَمُ الرَّاحِمِينَ " ، ثُمَّ كَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا ، ثُمَّ أدْخَلُوهَا الْقَبْرَ ، هُوَ وَالْعَبَّاسُ ، وَأَبُو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُمْ . لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ عَاصِمٍ الأَحْوَلِ ، إِلا سُفْيَانُ الثَّوْرِيُّ ، تَفَرَّدَ بِهِ : رَوْحُ بْنُ صَلاحٍ .


           அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்ததாவது: அலி(ரலி)யின் தாயார் ஃபாத்திமா பின்த் அசத் அவர்கள் இறந்த போது நபி(சல்) அவர்கள் அவர்களது தலைக்கருகில் அமர்ந்து” என் அன்னையே! அல்லாஹ் உங்களுக்கு கருணை புரிவானாக. எனது அன்னைக்கு பிறகு உங்களையே எனது அன்னையாக அழைத்தேன். நீங்கள் பசித்திருந்தும் எனக்கு வயிறு நிரம்ப உணவளித்தீர்கள்.. உங்களுக்கு இல்லாதபோதும் எனக்கு நல்ல உணவும் உடையும் கொடுத்தீர்கள். அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவும் மறுமை வெற்றிக்காகவும் தாங்கள் இவற்றை செய்தீர்கள்”,என்று கூறினார்கள். பின்பு அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் அவர்களை மூன்று முறை குளிப்பாட்ட உத்தரவிட்டார்கள். கற்பூரம் கலந்த நீர் கொண்டுவரப்பட்டதும், நபி(சல்) அவர்கள் தனது கைகளில் சிறிதளவு ஊற்றிக்கொண்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் தனது மேலாடையை கழற்றி அவர்களுக்கு அணிவித்து தனது ஆடையினால் அவர்களுக்கு கஃபனிட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் உசாமா பின் ஜைத்(ரலி), அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி), உமர் இப்னு அல் கத்தாப்(ரலி) மற்றும் ஒரு கருப்புநிற அடிமை ஆகியோரை அழைத்து கப்றினை தோண்ட கட்டளையிட்டார்கள். அவர்கள் கப்றினை தோண்டி( பிரேதம் வைக்கும் பகுதியை அடைந்ததும்) “லஃஹ்த்” என்ற பிரதேம் வைக்கும் பகுதியை நபி(சல்) அவர்கள் தனது கைகளினாலே தோண்டினார்கள். (“லஃஹ்த்” என்பது குழியின் பக்கவாட்டில் அறை போன்று தோண்டுவதாகும்). அனைத்தும் முடிந்ததும் நபி(சல்) அவர்களே அதில் படுத்தார்கள் பிறகு “அல்லாஹ்வே பிறப்பையும் இறப்பையும் கட்டுபடுத்துபவன்.அவனே என்றும் வாழ்பவன். என்றும் மரணிக்காதவன் .(யா அல்லாஹ்) எனது அன்னை ஃபாத்திமா பின்த் அஸத் அவர்களை மன்னிப்பாயாக. கேள்வி கேடகப்படும் போது அவர்களை சரியாக பதிலளிக்கச் செய்வாயாக. உனது தூதரின் பொருட்டும், முன் சென்ற தூதர்களின் பொருட்டும் அவர்களது கப்றை விரிவுபடுத்துவாயாக. நிச்சயமாக நீ அளவில்லா கருணையாளன்” என்றார்கள்.மீண்டும் “அல்லாஹ் மிகப்பெரியவன்” என்று நான்கு முறை கூறினார்கள். பிறகு நபி(சல்) அவர்கள், அப்பாஸ்(ரலி) மற்றும் அபுபக்கர் (ரலி) ஆகியோர் அவர்களை(ஃபாத்திமா பின்த் அசத்) கபறினில் இறக்கினார்கள்.
(நூல்: தப்ரானி அல் அவ்ஸத் பக்கம் 67 ஹதீஸ் எண்:189)
     மேற்குறிபிட்ட ஹதீஸை காணும் போது முதல் செய்தியை விட விளக்கமானதாக தோன்றினாலும் இந்த ஹதீஸும் பலவீனமானதுதான். ஹதீஸின அறிவிப்பாளர் தொடரில் ரவ்ஹ் இப்னு ஸலாஹ் என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களில் தவறிழைகக்கூடியவர் என்று ஹைதமீ குறிப்பிடுகிறார் (மஜ்ம உல் ஜாவாயித்). இவரது ஹதீஸ்கள் மறுக்கப்பட வேண்டியவை என்று இப்னு அதீ அவர்கள் கூறுகிறார்கள் (அல் காமில் இப்னு அதீ) தாரக்குத்தினீ இவர் பலவீனமானவர் என்று குறிப்பிடுகிறார்கள் (லீசான் அல் மீசான்).


      கிறித்தவ மிசனரிகள் மேற்குறிபிட்ட இரண்டு செய்திகளையும் சுட்டிகாட்டி நபி(ஸல்) அவர்கள் பிணத்துடன் உறவு கொண்டதாக கூறுகின்றன. ஆனால் அவை இரண்டும் பலவீனமான செய்திகள். இவை பலவீனமான செய்திகள் என்பதை ஒருபுறம் ஒதுக்கிவைத்து விட்டாலும். இந்த ஹதீஸின் கருத்தை மிக மோசமாக தங்களது இச்சைக்கு ஏற்றவாரு திரித்தும் உள்ளனர். முதலில் இவர்களுக்கு இஸ்லாமியர்கள் குறிப்பாக அரபியர்களின் கப்றுகள் குறித்த அறிவு சிறிதும் இல்லை. லஃஹ்த் இருக்கும் கப்ருகள் எப்படி இருக்கும் என்பதை கண்டாலே இவர்களது கருத்து எவ்வளவு அரைவேக்காட்டுத்தனமானது என்பது விளங்கும்


  
          மேற்குறிபிட்ட வகையிலான கப்ருகள்தாம் நபி(சல்) அவர்களது காலத்தில் பயன்பாட்டில் இருந்தன என ஹதீஸ்கள் கூறுகின்றன. நபி(சல்) அவர்களுக்கே இந்தவகை கபர்தான் பயன்படுத்தப்பட்டது. 

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الْمِسْوَرِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ، مُحَمَّدِ بْنِ سَعْدٍ عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، أَنَّ سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ، قَالَ فِي مَرَضِهِ الَّذِي هَلَكَ فِيهِ الْحَدُوا لِي لَحْدًا وَانْصِبُوا عَلَىَّ اللَّبِنَ نَصْبًا كَمَا صُنِعَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
முஸ்லீம் 1761. ஆமிர் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயில் இருந்தபோது, "(நான் இறந்ததும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகச் செய்யப்பட்டதைப் போன்று, (குழியினுள்) எனக்காக உட்குழியொன்றை வெட்டுங்கள்; என்மீது நன்கு செங்கற்களை அடுக்கிவையுங்கள்!" என்று சொன்னார்கள்.
                இன்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் இத்தகைய கப்றுகள் பயன்பாட்டில் உள்ளது. ஆக இந்த கபரில் படுத்து உறவு கொண்டார்கள் என்பது எவ்வளவு முட்டாளதனமானது.
                          
                  அது போக இந்த ஹதீஸில் இடம் பெறும் வார்த்தையான் اضْطَجَعَ -  என்ற சொல் உடலுறவை குறிப்பதாக டெமிட்ரிகஸ் கூறுவதாக கதை வேறு.அந்த கிரேக்க அரேபிய அறிஞரின் பெயர் கூட தெரியாத கூமுட்டைகள்தான் அவரது குறிப்பை முன்னிறுத்துகின்றன. அவரது பெயர் டெமிட்ரி கூடஸ் என்பதாகும். அமெரிக்காவின் யேல் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர். அவர் கிரேக்க அரபியே மொழியின் நமது சமகால அறிஞர். இவரது எந்த குறிப்பில் இருந்து இதை எடுத்தார்கள் எனபதை பாதிரி ஜக்கரியா எதிலும் குறிப்பிடவில்லை என்பது குறிபிடத்தக்கது.  ஆக اضْطَجَعَ என்பதின் பொருளை நாம் லேன்ஸ் லெக்ஸிகனில் பார்த்தோம் என்றால் பின் வருமாறு இடம் பெறுகிறது. 
      ஆக اضْطَجَعَ எனபதற்கு ஒருபக்கமாக சாய்ந்து படுப்பது என்பதுதான் பொருளாகும். மேலும் இந்த வார்த்தை இடம்பெறும் சில ஹதீஸ்களை கண்டோம் என்றால் ஒருபக்கமாக சாய்ந்து படுப்பதுதான் பொருள் என்பதை விளங்க முடியும். 
حَدَّثَنَا بِشْرُ بْنُ الْحَكَمِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا صَلَّى ‏{‏سُنَّةَ الْفَجْرِ‏}‏ فَإِنْ كُنْتُ مُسْتَيْقِظَةً حَدَّثَنِي وَإِلاَّ اضْطَجَعَ حَتَّى يُؤْذَنَ بِالصَّلاَةِ‏.‏

1160. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் தொழுததும் வலப்புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 19. தஹஜ்ஜுத்
          லஹ்த் வகை கப்ருகளில் ஒருபக்கமாய் அதாவது கிப்லா திசையை நோக்கி சாய்த்துதான் பிரேத்தை கிடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதை படத்தில் சுட்டிகாட்டியுள்ளோம்.

மேலும் மேற்கண்ட ஹதீஸிக்கு ஜகாரியா என்பவர் கூறுவதாவது: 

" முஹம்மது நபியவர்கள் அவருடன் படுத்ததால் அவள் அவனுக்கு மனைவியாகி விட்டாள். அதனால் அவள் மூமின்களுக்கு தாய் எனும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விட்டார் என்று குறிப்பிடுகிறார். "
நமது பதில்:

1.முதலாவது இது ஒரு பொருந்தாத வாதம் ஆகும். ஏனெனில் திருமணம் என்பதற்கு இரு தரப்பு உடன்படிக்கையையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதனால் இறந்து போன ஒருவர் உடன் படுப்பதன் மூலம் மனைவி என்ற அந்தஸ்தை ஒருவருக்கு கொடுத்து விட முடியாது.

2.இரண்டாவது இஸ்லாத்தில் ஒருவருக்கு திருமணம் செய்ய முடியாத உறவு முறைகள் என்று சில உறவு முறைகள் வரையறை செய்யப்பட்டுள்ளது. அத்தகையை உறவுமுறைகளில் அம்மா சித்தி பெரியம்மா அத்தை போன்ற உறவு முறைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இஸ்லாம் தடுத்திருக்கும் ஒரு உறவுடன் திருமணத்தை முஹம்மது நபியவர்கள் செய்தார் என்பது பொய்யானது.

3.மூன்றாவது நபியின் மனைவி என்ற சிறப்பு அந்தஸ்தை காட்டிலும் நபியின் வளர்ப்பு தாய் என்ற மிக உயர்ந்த அந்தஸ்தை அவர் பெற்றிருந்தார். அதனால் பாத்திமா அவர்கள் சிறப்பு அந்தஸ்தை பெற வேண்டும் என்பதற்காக முஹம்மது நபியவர்கள் அவரை திருமணம் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இதன் மூலம் சக்கரியாவின் வாதம் இங்கு உடைந்துவிடுகிறது.




             ஆக இவர்களின் இந்த குற்றச்சாட்டு அரைவேக்காட்டு தனத்தினாலும் காழ்புணர்ச்சியாலும் தோன்றியது என்பது தெள்ளத்தெளிவாக நிருபனமாகிறது

Sunday, July 21, 2019

எறும்புகள் - திருக்குர்ஆன் சொல்வது அறிவியலா அல்லது அபத்தமா?

ஏக இறைவனின் திருப்பெயரால்

                இவ்வுலகில் எத்தனையோ சித்தாந்தங்கள் மக்களால் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. இவற்றில் பல கடல் போல் பெருகி சிறிய குட்டையாக மாறி வழக்கொழிந்து சுவடுகளே இல்லாமல் காணமல் போனவையும் உண்டு. இப்படி தோன்றி மறையும் சித்தாங்கள் மத்தியில் வெறும் 14 நூற்றாண்டுகளில் கிட்டத்தட்ட 200 கோடி மக்களை வென்றெடுத்த, உலக மக்கள் தொகையில் 3ல் 1 வரை வென்றெடுத்த, அந்த மக்களின் வாழ்க்கையில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களது அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் நிர்ணயம் செய்த, செய்து கொண்டிருக்கும் அந்த மாபெரும் மார்க்கமான இஸ்லாம், இன்றும் அதன் எதிரிகளால் சித்தாந்த ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. எதிர்ப்பால் வளர்ந்த இஸ்லாம், இன்றும் மக்களை வென்றெடுத்த வண்ணமே உள்ளது. இப்படி கடும் எதிர்ப்புகளின் மத்தியிலும் மனிதனை தன் பால் ஈர்க்கும், அந்த மகத்தான மார்க்கமான இஸ்லாமில் என்னதான் உள்ளது என்பதையும் அதன் மீது வைக்கப்படும் சித்தாந்த ரீதியிலான விமர்சனங்களுக்கும் தக்க ஆதாரங்களுடன் பதிலளிப்பதே இந்த தொடரின் நோக்கமாகும்.

குர்ஆன் கூறும் எறும்புகள் உலகம்:

     குர்ஆன் தன்னகத்தே அது இறைவேதம் என்பதை மெய்ப்பிக்கும் பல சான்றுகளை கொண்டாதாக விளங்குகிறது, அதன் வரிசையில் எறும்புகள் பற்றி குர்ஆன் கூறும் வசனமும் ஒன்று. அது என்னவென்றால் எறும்புகள் பேசியது என்பதும், அவைகள் வசிக்கும் இடமும் மேலும் பேசிய எறும்பின் பாலினம் பற்றிய தகவல்தான் அது.  இந்த தகவல் கட்டுக்கதை என்றும் அறிவியல் உண்மைக்கு புறம்பானது என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே எறும்புகள் பற்றி திருக்குர்ஆன் சொல்வது அறிவியலா அல்லது அபத்தமா? என்பதை அறிவியல் துணையோடு அலசி ஆராய்வது இங்கே அவசியமாகிறது.

       பொதுவாக கூறுவது என்றால் குர்ஆனுக்கென்றே ஒர் தனித்துவம் உள்ளது. அதாவது சில வார்த்தைகளில் பரந்த பொருளை விவரிக்குமாறுதான் குர்ஆனின் வசனங்கள் அமைந்திருக்கும். எனவேதான்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

                      "நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் வழங்கப் பெற்று அனுப்பப்பட்டுள்ளேன். ......(புகாரி 7273) 


          அதற்கு ஏற்ப குர்ஆன் வசனமான் 27:18 வசனம் எறும்புகள் பற்றி குறிப்பிடுகிறது என்று கூறுவதை விட எறும்புகளின் உலகத்தை பற்றி விவரிக்கிறது என்றுதான கூறவேண்டும்

அல் குர்ஆன் அந்-நம்ல்:18

حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِ النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لا يَشْعُرُونَ (١٨) 
فَتَبَسَّمَ ضَاحِكًا مِنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ (١٩)

                    அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது "எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். "என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!'' என்றார். [27:18-19]

மேற்குறிபிட்ட வசனம் எறும்புகளின் உலகம் குறித்த சில அறிவியல் உண்மைகளை உணர்த்துகிறது
1.எறும்புகளின் பள்ளத்தாக்கு



              மேற்குறிபிடப்பட்ட வசனத்தில் அல்லாஹ் எறும்புகளின் இருப்பிடத்தை குறிக்க وَادِ النَّمْلِ (வாதில் நம்ல்) - எறும்புகளின் பள்ளத்தாக்கு என்ற சொல்லை பயன்படுத்துகிறான். எறும்புகள் குறித்து இந்நூற்றாண்டில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் எறும்புகளின் புற்றுகளின் அடியில் ஒரு நகரமே அமைந்திருப்பதாக கூறுகிறது. மேலும் அந்த நகரத்தில் தோட்டங்கள், சாலைகள், உணவு கிடங்குகள் என்று பல பகுதியாக பிரிக்கப்பட்டு திறம்பட பயன்டுத்துவதற்கு எதுவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து தெளிவான வீடியோ ஆவணப்படம் பெர்ட்ஹாஹால்டாப்லர் (Prof. Bert Holldobler) என்ற அறிவியலாளர் வழங்கினார். அதன் சிறு பகுதி இதோ (6)
லூயிஸ் ஃபோர்ஜ் என்பவரின் தலைமையில் எறும்பின் இருப்பிடம் குறித்த அகழ்வாராய்ச்சி குறித்த அவணப்படத்தின் பகுதிதான் அது. தரையின் அடியில் உள்ள இருப்பிடத்தின் வார்ப்பை பாதுகாக்க கிட்டத்தட்ட 10டண் சிமெண்ட் எறும்பின் புற்றினில் ஊற்றப்பட்டது. ஒருமாதத்திற்கு பிறகு அந்த பகுதி அகழப்பட்டது. அந்த அகழ்வாராய்ச்சியின் முடிவில் எறும்பின் பள்ளத்தாக்கு வெளிப்பட்டது. 
எறும்புகளின் வசிப்பிடமும் அதன் அமைப்பும் 
            அதில் பூன்சை தோட்டங்களும், சேமிப்பு கிடங்குகளும், நெடுஞ்சாலைகள் என்று அனைத்து விதாமான வசதிகளும் அமையப்பெற்றதாக இருந்தது என்று அந்த ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. இந்த நகரமானது 50 சதுர.மீ பரப்பளவும், 8 மீ ஆளம் கொண்டதாகவும், அதாவது ஒரு சிறிய பள்ளதாக்காக இருப்பதை அந்த ஆவணத்தில் காணமுடிகிறது. கிட்டத்தட்ட 40 டன் மண்ணை அந்த எறும்புக்கூட்டம் வெளியே எடுத்துள்ளது.

2. எறும்புகள் பேசுகின்றன:

             மேற்குறிபிட்ட இறைவசனம் எறும்புகள் பேசுவதாக ஒரு தகவலை தருகிறது. பல ஆண்டுகளாக அறிவியல், எறும்புகள் தான் உற்பத்தி செய்யும் பெர்மோன் என்னும் வேதியல் பொருளின் மூலமே தகவல் பரிமாற்றம் செய்வதாக நம்பி வந்தனர். இந்த பெர்மோனை கொண்டே தங்களது குடும்பத்தினர் அடையாளம் குறித்தும் எறும்புகள் அறிந்து வந்தன. எறும்புகளின் வாசனை அறியும் திரண் மனிதனை விட பலமடங்கு மேம்பட்டதாகவும் மாறுபட்டதாகவும் அறிவியல் கூறுகிறது. (P.No: 517 Ants: Thier Structure Development and Behaviour)(1). இவ்வாறாக தனது உடலில் இருந்து சுரக்கும் பெர்மோங்களை கொண்டு தனது புற்றின் உறுப்பினர்களை சரியாக அடையாளம் காண்கின்றன. மேலும் தான் உணவை நோக்கி சென்ற பாதையை மற்ற எறும்புகளுக்கு தெரிவிக்க இந்த பெர்மோன்களினால் பாதையில் தடத்தினை விட்டு செல்கின்றன. ஆனால் இவ்வாறான பெர்மோன் களை மட்டுமே கொண்டு தங்களுக்குள் தகவல் பரிமாற்றத்தை செய்வதில்லை.
உணவைக் கண்டுபிடித்த எறும்பு, தன் சக எறும்புகள் அதை கண்டுபிடிக்கும் பொருட்டு "இரசாயன" சுவட்டை விற்றுச் செல்வதை பார்க்கலாம்.
சமிபகால ஆய்வுகள் எறும்புகள் சத்தத்தின் மூலமாகவும் தகவல் பரிமாற்றம் செய்வதாக குறிப்பிடுகிறது. இதனை ஆங்கிலத்தில் Stridulation என்று அழைப்பார்கள். இது பூச்சி இணங்கள் தங்களது உடல் உறுப்புகளை அதிர்வடைய செய்வதின் மூலமும் உறுப்புகள் ஒன்றை ஒன்று உராய்வதினாலும் ஏற்படுத்தும் சத்தமாகும்.மனிதர்கள் எப்படி தங்களது குறள்வளைகளின் மூலம் ஓலியை எழுப்புகிறோமோ, அதே போன்று எறும்புகள் தங்களது வயிற்றுப்பகுதியில் இருக்கும் ப்லெக்ட்ரம்(Plectrum) என்ற பகுதியை அதிரச் செய்வதன் மூலம் சத்ததை உற்பத்தி செய்கின்றன. இதனை ஹெர்மான் லேண்டாய்ஸ் என்ற ஜெர்மன் அறிஞர் 1874ல் தான் வெளியிட்ட Theirstimmen என்ற புத்தகத்தில் குறிப்பிட்டார். மேலும் எறும்புகளின் வயிற்று பகுதியில் மெல்லிய அரம் போன்ற அமைப்புகளால் அவை சத்தத்தை எழுப்புவதாக அறிவியலாளரான வில்லியம் மார்டான் வீலர் தனது புத்தகமான (P.No:26 "Ants: Thier Structure Development and Behaviour)(1) என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பூச்சிகள் அதற்கென உரிய அதிர்வெண்களில் சத்தத்தை எழுப்புகின்றன. அதே போல் ஒவ்வொரு வகை எறும்புகளும் அதற்கென உரிய அதிர்வெண்களில் சத்தத்தை எழுப்புகின்றன.
Myrmica Schenki 'எறும்புகளின் இராணி எறும்பு, வேலை எறும்புகள், பூப்பா மற்றும் புழுக்களின் ஒலி உறுப்புகளும் அவற்றால் ஏற்படுத்தப்பட்ட சத்தங்களின் அலைவரிசையை விளக்கும் படம் 
எறும்புகளின் காதுகள்:
                இவ்வாறாக எறும்புகள் தங்களுக்குள் எழுப்பும் சத்தம் கிட்டதட்ட 1KHz வரை உடையாதாக இருக்கிறது. இந்த சத்தங்களை எறும்புகள் தங்களது ஆண்டனாக்களின் மூலமும், கால்களில் உள்ள மெல்லிய முடிகளின் மூலமாகவும் அறிந்து கொள்கின்றன. P.No: 513 Ants: Thier Structure Development and Behaviour)(1)(5)(6) . கணுக்காலிகளான எறும்புகள் தங்களது உடலின் எந்த பகுதிகள் வழியாக சத்தத்தை உணர்ந்து கொள்கின்றன என்பதை கீழுள்ள படம் விளக்குகிறது




       இத்தகைய சத்தத்தை உணரும் உறுப்புகள் (Chordotonal Organs) இசை கருவிகளில் உள்ள கம்பி போன்ற அமைப்புகள் ஒலி அலைகளால் அதிர்வடைந்து எறும்பிற்கு ஒலியை உணர்த்துகின்றன். இத்தகைய ஒலி உறுப்புக்கள் எறும்பின் உடலில் இருப்பதை லப்பாக் என்ற அறிவியலாளர் 1877ல் கண்டறிந்தார். மேலும் அவர் காற்றில் பரவும் இத்தகைய சத்தங்களையும் எறும்புகள் உணரும் என வாதிட்டார். மேலும் காற்றில் ஏற்படும் சத்தங்களையும் எறும்புகள் அறிந்து கொள்கின்றன என வில்லியம் மார்ட்டான் வீலர் மற்றும் டர்னர் ஆகியோர் 1907 பல கட்ட ஆய்வுகளின் மூலம் நிறுவினர். டர்னர் அவர்கள் 3Khz சத்தத்தை கொண்டு எறும்புகளை சோதித்து அந்த சத்தத்திற்கு எறும்புகள் எதிர்வினையாற்றுகின்றன என்பதையும் நிறுவினார். இவ்வாறாக அவை உண்ணும் உணவின் தரம் குறித்தும், எச்சரிக்கை சமிக்கைகளையும், கட்டளைகளயும் இந்த சத்தங்களின் மூலமாகவே தெரிவிக்கின்றன(P.No:512-513 Ants: Thier Structure Development and Behaviour). இதன்மூலம் பல மீட்டர் தொலைவில் உள்ள தனது இணத்தாருக்கு தகவலை தெரிவிப்பதாக கணடறியப்பட்டது. உதரணமாக இலை வெட்டும் எறும்புகளில் உள்ள இந்த மேற்பார்வையாளர் எறும்பு தான் கண்டறிந்த உணவின் தரத்தை தனது வேலைகார எறும்புகளுக்கு எவ்வாறு தெரிவிக்கின்றது என்பதை விளக்கும் Prof. Bert Holldoblerன் ஆவணப்படத்தின் பகுதி (6) 

4. மேற்பார்வையிடும் பெண் எறும்புகள்: نَمْلَةٌ


          نمْل -- என்ற சொல்லானது எறும்பு என்ற பொருள் தரும் சொல்லாகும். இது ஆண்பால் ஒருமை சொல்லாகும். ஆயினும் இந்த சொல்லானது பன்மையை குறிக்கவும் பயன்படுத்த முடியும். அதாவது கூட்டு பெயர் சொல்லாக பயன்படுத்தும் போது பன்மையாக பயன்படுத்தப்படும்

نَمْلَة • ‎(namla) f ‎(singulative, collective نَمْل ‎(naml), plural نِمَال ‎(nimāl))

       உதாரணமாக அதே வசனத்தில் ‘வாதில் நம்ல்’ என்ற பதத்திலும் ‘யா அய்யுகள் நம்லு’ என்ற பதத்திலும் “எறும்புகளின் பள்ளதாக்கு” என்றும் “ஓ எறும்புகள் சமுதாயமே!” எனும் போதும் نمل என்ற சொல் பன்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 
           قَالَتْ نَمْلَةٌ .-- என்ற பதத்தில் பயன்படுத்தப்பட்ட نَمْلَةٌ என்ற சொல்லானது எறும்பு என்ற பெண்பால் ஒருமையாகும். 

அரபு இலக்கணத்தில் மனிதனல்லாதவற்றின் பன்மையை குறிக்க பெண்பால் ஒருமையை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

உதாரணமாக

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ قَتْلِ أَرْبَعٍ مِنَ الدَّوَابِّ النَّمْلَةُ وَالنَّحْلَةُ وَالْهُدْهُدُ وَالصُّرَدُ ‏.‏ 

நபி(சல்) அவர்கள் நான்கு உயிரின்ங்களை கொள்வதை தடை செய்தார்கள்: எறும்புகள், தேனீக்கள், சிட்டு குருவிகள் மற்றும் கொண்டலத்தி பறவைகள் ஆகியவையாகும் (அபூ தாவூத்: 5267)

        இங்கு கவனிக்கப்படவேண்டியது என்ன வென்றால் نمل என்ற ஒருமை சொல்லிருக்க இங்கு نَمْلَةٌபன்மைக்கு பயன்படுத்தும் பெண்பால் சொல் ஒர் எறும்பு என்ற பொருள் பட பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை. ஆக இந்த வசனத்தில் نَمْلَةٌ என்பது பெண் எறும்பு என்பதையே குறிக்கிறது. 

அத்தியாயம் மற்றும் வசனங்களின் அமைப்பு : 

       குர் ஆனில் ஒரு வசனத்தில் இடம் பெறும் கருத்தை அது இடம் பெற்றிருக்கும் இடம் மேலும் அந்த வசனத்தை தெளிவு படுத்தும். அந்த வகையில் மேற்கூறிய வசனத்திற்கு பிறகு இடம் பெறும் வசன்ங்கள் மேற்கூறிய வசனத்தில் இடம் பெறும்

               نَمْلَةٌ பெண் எறும்பைதான் குறிக்கும் என்பதை வலுவூட்டுகிறது. அதாவது இந்த வசனத்தை தொடர்ந்து இடம்பெறும் வசனங்கள் 27:19ல் இருந்து 27:40 வரை உள்ள வசன்ங்கள் ஒரு பெண் அரசியால் ஆளப்பட்ட சமுதாயத்தின் வரலாற்றை கூறுகிறது. அதாவது பெண் அரசியால் ஆளப்படும் சமுகம் குறித்த ஓர் முன்னறிவிப்பு சுலைமான்(அலை) அவர்களுக்கு வாதில் நம்லில் உணர்த்தப்படுகிறது. 
      பெண் எறும்புகள்தான் வேலை செய்யும் எறும்புகள். மேற்குறிபிட்ட வசனத்தில் கட்டளையிட்ட எறும்பு குறித்து பெண் எறும்பு என்ற சொல்லையே குர்ஆன் பயன்படுத்துகிறது. வேலை செய்யும் எறும்புகளில் ஒரு பிரிவு எறும்புகள் தான் மேற்பார்வை பணியை செய்கின்றன. 



இந்த எறும்புகள் வேலைகார எறும்புகளை கட்டுபடுத்துதல், மற்றும் எச்சரிக்கை செய்யும் பணியையும், கூடுகளை காக்கும் பணியையும் மேற்கொள்கிறது.


             இந்த மேற்பார்வை இடும் எறும்புகள் வேலைகார எறும்புகளைவிட அளவில் பெரியதாகவும் , பெரிய அலகுகளை உடையதாகவும் இருக்கும்.(2) இது குறித்து வீலர் அவர்களின் Polymorphism in Ants( எறும்புகளின் பல்லுருத்தோற்றம்- 1907) என்ற கட்டுரையில் முழுமையாக விளக்கியுள்ளார்.(3) மேற்கூறிய இறைவசனத்தில் இடம்பெறும் “ஓ எறும்புகள் சமுதாயமே!” என்ற அந்த மேற்பார்வையாளரின் அழைப்பை குர்ஆன் மிக அழகாக பதிவு செய்துள்ளது, இந்த வேதமானது அனைத்தையும் அறிந்த நுண்ணறிவாளனிடம் இருந்துதான் வந்தது என்பதை பறைசாட்டுகிறது. மேற்பார்வை என்னும் பணியை மேற்கொள்ளும் எறும்புகள் குறித்து பின்வருமாறு 2013 ல் நேசனல் ஜியோகிராஃபிக் சேனலினால் வெளியிடப்பட்ட ஆவணப்படம் இது குறித்து விவரிக்கிறது.(7)

படிப்பினைகள்:

     அல்லாஹ் கூறுகிறான்: இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; (17:41) எவருக்கு (நல்ல) இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அ(த்தகைய)வருக்கு நிச்சயமாக இதில் நினைவுறுத்தலும் (படிப்பினையும்) இருக்கிறது.( 50:37) 
      
     அல்லாஹ் குர்ஆனில் சில படைப்பினங்களை சிலாகித்து கூறுகிறான். அதில் நமக்கு படிப்பினைகள் இருக்கின்றன. படைப்பை நம்பாத நாத்திக அறிவியலார்கள் பரிணாமத்தை நம்புவர். காலப் போக்கில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் உடலமைப்பை மாற்றிக் கொண்டன, நிறைய விஷயங்களை அதுவாகவே பெற்றுக் கொண்டன என்பதுதான் அது. நாம் இங்கே எறும்பை பற்றி பார்ப்போம். எறும்பும் குளவி போன்ற மூதாதையிடம் இருந்து 99 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு Cretaceous காலத்தில் பரிணாம அடைந்த ஒரு இனம் என்று கருதுகின்றனர். எல்லா படைப்புகளும் எறும்புகளும் மனித இனத்தை போன்ற ஒன்றே என்று குரான் கூறுகிறது. பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (6:38) இந்த எறும்பு சம்பவம் மூலம் என்ன படிப்பினைகளைநாம் பெறுகிறோம் என்பதை பார்ப்போம். 

1. எறும்பு போன்ற உயிரினங்களும் தனக்கென்று ஒரு வாழ்வையும், சமுதாய வாழ்வையும் வாழ்கிறது.
2. எறும்புகளுக்கும் இன்ன பிற எல்லா உயிரினங்களுக்கும் அதனுடைய வாழ்வியல் அமைப்பை கற்றுக் கொள்ளவும் மொழியை பேசவும் அதற்க்கான உள்ளணர்வை புரோகிராம் செய்யப்பட்டது போல அளிப்பவன் இறைவனே!
       மனிதர்கள் எவ்வாறு இனங்களாகவும், மொழி மூலம் விஷயங்களை பரிமாறிக் கொண்டும், ஒருவரை சார்ந்தும், தலைவன்-மக்கள் என்னும் ஒரு வகையான சமூக கட்டமைப்பு உடன் வாழ்வது போன்றே ஒவ்வொரு படைப்புகளும் அதன் இயல்புகளை ஏற்ப இருக்கின்றன. எறும்புகளும் உட்பட.. அவைகள் பேசும், உணவை சேமிப்பதற்கு, தேடுவதற்கு, தமது இனத்தை காப்பாற்றுவதற்கு, தலைமை நடத்துவதற்கு, கட்டுப்படுத்துவதற்கு என்ன என்ன செய்ய வேண்டுமோ அவற்றை எல்லாம் உள்ளடக்கியே இருக்கின்றன.. அல்லாஹ் அதை கொடுத்து இருக்கிறான் .

            வெறுமனே பரிணாமவியல் தியரியை நம்பிக் கொண்டு யதார்த்தமான fact களை தவற விட்டுவிடாதீர்கள். ஆகவே இந்த சம்பவங்களையும், அறிவியல் உண்மைகளையும் வெறுமனே கடந்து செல்லாமல் பயப்படுத்திக் கொள்ளவேண்டியது நமது பொறுப்பு. 


Updated on Sep 25th 2019:

எறும்புகள் தங்களின் ஆன்டெனா மூலம் தகவல்களை பெறுவது மட்டுமில்லாமல் தங்களின் சமூகம் சார்ந்த தகவல்களையும் பரிமாறிக்கொள்கின்றன.
125 வருடங்களுக்கு முன்பு புகழ் பெற்ற பூச்சியியல் வல்லுநர் அகஸ்டே ஃபோரல், நான்கு வகை எறும்புகளின் ஆன்டெனாவை நீக்கியபோது அவை தங்களுக்குள் அடித்துக்கொள்ளாமல், அமைதியாக ஒற்றுமையுடன் இருந்ததை கண்டுபிடித்தார்.
"அகஸ்டேவின் ஆய்வு எறும்புகள் தகவல்களை ஆன்டெனா மூலம் பெறுகின்றன என்று நிரூபணமாகியது ஆனால் எங்களின் ஆய்வில் இருவழி தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது என்பது உறுதியாகியுள்ளது" என்று இந்த ஆய்வின் தலைமை அறிவியலார் வாங் கூறியுள்ளார்.







Books

1.Ants: Thier Structure Development and Behaviour By William Morton Wheeler

2.Ant Ecology By Lori Lach, Catherine L. Parr, and Kirsti L. Abbott

3.Poly morphism in Ants by William Morton Wheeler

4.Book of Common Ants by Eleanor

5.Chordotonal Organs of Insects By Lurence H. Field and Thomas Mathesan(1998)

6.Analysis of Accoustic Communication By Ants By Richard Hickling(2000)

Documentaries:


7. ANTS Nature's Secret Power Full With Bert Hölldobler

8. National Geographic Wild City Of Ants

Links:

9. http://acoustics.org/pressroom/httpdocs/137th/hickling.html

10. http://antark.net/

11. http://www.sciencemag.org/news/2013/02/shhh-ants-are-talking

12. http://www.cell.com/current-biology/abstract/S0960-9822(13)00013-4


நன்றி: திருக்குரானும் அறிவியலும் - ஆய்வுக் கட்டுரைகள்

Monday, May 27, 2019

என்னை சுமந்து சொல்ல ஏன் இந்த மக்கள் போட்டி போடுகின்றனர்?

"மற்றவர்களின் இதயங்களை வென்றடுப்பது எப்படி" என்று தேடினால் ஹார்வார்ட் பல்கலை கழகத்திலிருந்து மோடிஜி வரை அவரவரின் அறிவுக்கு ஏற்ப  பல வழிகளை சொல்வார்கள் ஆனால் எந்தவித அறிவுரையும் இல்லாமல் வெறும்  செய்கைகளின் மூலம் மட்டும்   பல தேச மக்களை  ஒரே  நேரத்தில்   வென்றெடுக்க முடியமா  என்றால் சாத்தியமே.

இதோ ஒரு உண்மைச் சம்பவம்:

நபியின் பள்ளியில் ஜனாஸாக்கள் (இறந்தவர்களின் சடலங்கள்) கொண்டுவரப்படுகின்றன. யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது சொல்லப்படுவதில்லை.

 அங்கெ  உள்ள அனைத்து மக்களும் அவர்களுக்காக தொழுகை நடத்துகின்றனர். எப்படி அடக்கம் செய்கிறார்கள் என்பதைக் காண நானும் பின்தொடர்ந்தேன்.

தொழுகை முடிந்தவுடன்  நான்கு ஜனாஸாக்கள்  கொண்டு செல்லப்பட்டன. அந்த ஜனாஸாக்களை சுமந்து செல்ல கடும் போட்டி நடக்கின்றது.  ஒவ்வொருவருக்குமென தனியாக குறிப்பிட்ட இடம் இல்லை. எங்கே காலியாக உள்ளதோ அங்கெ அடக்கம் செய்கின்றனர்.

அடக்கம் செய்யும் இடத்தில்  பொறுமையாக நின்று ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து,   இறுதியில் அமைதியாக கலைந்து செல்கின்றனர்.

நான் யாரோ ஒருவன்.. ...என்னை சுமந்து சொல்ல  ஏன்  இந்த மக்கள் போட்டி போடுகின்றனர்?  முகமறியா எனக்காக  அவர்கள் பிரார்த்தனை செய்வது ஏன்? நபி அவர்களின்  அடக்கத்தலத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ள மேலும் புகழ் பெற்ற  நபித்தோழர்கள் அடங்கியுள்ள இடத்தில் அந்நியனாகிய என்னை எப்படி இங்கே அடக்கம் செய்கின்றார்கள்?

பொதுவாக இறந்தவரின் சமூக, மத அந்தஸ்த்தை வைத்து அவரின் இறப்பு தொடர்பான காரியங்களும், அடக்கத்தலங்களும் வேறுபடுவது தான் உலகில்  நாம் காணும் ஒன்று ஆனால் அரசன் முதல் ஆண்டி வரை எல்லோருக்கும் ஒரே முறையை  செயல்படுத்தி வருவது இஸ்லாம் மட்டுமே.

நபியின் காலம் முதல் இன்று வரை இப்படித்தான் நடக்கின்றது. இஸ்லாம் கூறுவது வெறும் வாரத்தை ஜாலம் அல்ல.  செயல்முறை விளக்கம் அதனால் தான் மிகவும் குறுகிய காலத்தில் அதிகமான மக்களை  வென்றெடுத்தது, வென்று வருகின்றது மேலும் வென்றெடுக்கும்.

Saturday, May 18, 2019

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்!!



பறவைகளைப் போல் வானத்தில் பறக்க வேண்டும் என்பது மனிதனின் நீண்ட கால கனவு. பல ஆயிரக்கணக்கான வருடங்கள் இதற்காக முயற்சி செய்தும் 20ம் நூற்றாண்டில்  காற்றின் அடுக்குகளை பற்றி ஆய்வு  செய்த பின்பு  தான், விண்ணில் பறப்பதற்கும்,  வான் மண்டலங்களுக்கு செல்வதற்குமான அறிவு கிடைத்தது.

வானில் உயரமாக செல்லும்போது, காற்றில் உள்ள ஆக்சிஜன் குறைந்து விடும் அதனால்  தான் விமானங்களில் ஆக்சிஜன் முகமூடிகள் வைத்துள்ளார்கள்.

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.

ஆனால், இந்த விடயம்  எப்படி  ஆயிரம் வருடங்களுக்கு முன்புள்ள, கல்வியறிவு பெறாத ஒரு நபரால் சொல்லப்பட்டிருக்க முடியும் என்பதது தான் மிகவும் ஆச்சரியமான ஒன்று.

"அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக விசாலமாக்குகிறான் -யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான்" [திருக்குர்ஆன் 6:125]

சமீபத்தில் சவுத்வெஸ்ட்  விமான பயணத்தின் போது, என்ஜினிலிருந்து உடைந்த பாகம் ஒன்று விமான ஜன்னலைத் தாக்கியதால் விமானத்தில் காற்றின் அழுத்தம் குறையவே, பயணிகள் அனைவரையும் ஆக்சிஜன் முகமூடி அணியுமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதிகமானோர் சரியாக அணியாததை விளக்கும் படம் இது

இது நிச்சயமாக மனிதனால் சொல்லப்பட்டது என்பதை உண்மையான பகுத்தறிவு ஏற்க மறுக்கின்றது. காற்றையும், மனிதனையும், வானங்களையும் படைத்த ஒருவனால் மட்டுமே சொல்லியிருக்க முடியும்.

Ref: http://kaheel7.com/eng/index.php/earth-science/289-as-if-he-is-climbing-up-to-the-sky-
        https://www.telegraph.co.uk/travel/travel-truths/truth-about-oxygen-masks-on-planes/


Friday, February 8, 2019

தொடர் 5:பரிணாமம் : உண்மையா ஊகமா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்


உயிரினத் தோற்றம்:
                                     நாம் சென்ற தொடரில் பரிணாமத்தின் முக்கிய ஆதாரமாய் அமையும் இனப் பிரிகை அல்லது உயிரின தோற்றத்தின் மையமாக அமைந்த இனம் என்றால் என்ன என்பதை விளக்கும் கருத்தியல்களில் இருக்கும் சிக்கல்களையும் அதன் பலவீனங்களையும், அந்த கருத்துக்கள் மத்தியில் இருக்கும் பல முரண்களையும் பட்டியலிட்டு விவாதித்திருந்தோம். நிச்சயமாக அவற்றை எல்லாம் பரிணாமவியல் உலகம் ஒன்றினைக்குமா என்ற கேள்வி நிழலாடி கொண்டிருக்கையில், அறிவியல் உலகில் பரிணாமவியலாளர்கள் நவீன பரிணாமவியலை “உயிரியலை ஒருங்கிணைக்கும் கோட்பாடு (Unifying Theory of Biology” என்று சுயத்தம்பட்டம் அடித்து வருகின்றனர். ஆனால் அந்த சுயதம்பட்டத்திற்கு சென்ற தொடரில் விளக்கப்பட்ட இனம் என்ற சொல்லாக்கம் எப்படியெல்லாம் முடிவுரை எழுதுகிறது என்பதை கண்டோம். ஆனால் உன்மையில் பரிணாமம் என்பது அறிவியல் தானா அல்லது அது ஒரு நம்பிக்கை சார்ந்த ஊகமா என்பதை அறிவியலின் அளவு கோலை கொண்டு இனிவரும் தொடர்களில் ஆய்வு செய்வோம். இனப்பிரிகையை பரிணாமவியலால் விளக்க முடிகிறதா, அதன் இயங்கியல்கள் அதை தோற்றுவிக்குமா உள்ளிட்ட பலவற்றை நாம் அறிவியல் கண்ணாடி அணிந்து வரவிருக்கும் தொடர்களில் பார்க்கவுள்ளோம் இன் ஷா அல்லாஹ். மேலும் இந்த தொடரில் நாம் ஒரு விசயத்தை தெளிவு படுத்துகிறோம். அதாவது இஸ்லாம் கூறும் இறையியல் கோட்பாடு எவ்வாறு அறிவியலுடன் ஒத்து அமைகிறது என்பதை இந்த தொடர்களின் இறுதி பகுதியில் நாம் தர இருக்கிறோம். பொதுவாக நாத்திகர்கள் தாங்கள் முன்வைக்கும் பரிணாமவியல் குறித்து கேள்வி எழுப்பப்படும் போது தங்களை தற்காத்துக்கொள்ள அவர்கள் இறைகொள்கை குறித்து கேள்வி எழுப்பி தப்பிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர். இதுவே அவர்களால் அறிவியல் தளத்தில் இருந்து பரிணாமம் குறித்து வாதிக்க முடியாது என்பதைவிட பரிணாமம் அறிவியலே இல்லை என்பதற்கு போதிய சான்று. ஆக எதற்கும் ஆகாத நாத்திகர்களின் வெத்து வாதங்களை தவிர்த்து நாம் அறிவியல் தளத்தில் இருந்து நமது பரிணாமவியல் ஆய்வை முன்னெடுப்போம் இன் ஷா அல்லாஹ்.

அறிவியல் கோட்பாடு என்றால் என்ன?

                    அறிவியல் கோட்பாடு என்பதற்கு காலம் தோறும் பல வரைவுகளை (இதிலுமா??????) அறிவியல் உலகம் வழங்கி வந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அறிவியல் உலகத்தால் ஏற்கப்படும் வரையறையை முதலில் நாம் விளக்குவோம். அந்த வரையறைக்குள் பரிணாமத்தின் அடிப்படை முதல் கட்ட விளக்கம் வருகிறதா என்பதை இந்த தொடரில் சோதிப்போம். 

          ஆக அறிவியல் கோட்பாடு குறித்த வரைவுகளில் கார்ல் பாப்பரின் வரைவு மிகவும் எளிமையானது, நிதர்சன மனித பகுத்தறிவிற்கு மிக நெருக்கமானது. மேலும் படைப்பு கோட்பாடை எதிர் கொள்ள நாத்திக உலகம் எடுத்தாளும் அறிவியல் தத்துவவியலின் அளவுகோல். ஆக அதை கீழே வழங்குகிறோம்.
These considerations led me in the winter of 1919-20 to conclusions which I may now reformulate as  follows.

1. It is easy to obtain confirmations, or verifications, for nearly every theory--if we look for confirmations.
ஒவ்வொரு கோட்பாட்டிற்கும் நாம் அதன் உறுதி படுத்தலை தேடும் போது உறுதிபடுத்தலையும், சரிபார்த்தலையும் பெறுவது எளிது.
2. Confirmations should count only if they are the result of risky predictions; that is to say, if, unenlightened by the theory in question, we should have expected an event which was incompatible with the theory--an event which would have refuted the theory. 

துணிகரமான கணிப்பினால் கிடைக்கும் முடிவுகளே உறுதிபடுத்தல் என எடுத்துக்கொள்ளப்படும். அதை விளக்குவதென்றால், நமக்கு நாம் கருத்தில் கொள்ளும் அந்த கோட்பாடு குறித்து எந்த அறிவும் இல்லாத நிலையில் , நாம் இந்த கோட்பாட்டுடன் பெருந்தாத ஒரு நிகழ்வை நாம் எதிர் நோக்கி இருக்க வேண்டும்--- ஒரு நிகழ்வு அந்த கோட்பாட்டை மறுப்பதாய் இருப்பதை எதிர் நோக்கி இருக்க வேண்டும். 



               பாப்பர் அவர்களது உதாரணத்தையே இங்கு மேற்கோள் காட்டுவோம். அதாவது ஒளியானது சூரியன போன்ற நிறை அதிகமானவற்றின் ஈர்ப்புவிசையால் பாதிக்கப்படும் என்பது ஐண்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் கருத்து. இதனை சோதனை செய்ய சூரியனிற்கு சற்று விலகிய கோட்டில் அமைந்த ஒரு நடசத்திரத்தின் ஒளி நம்மை அடையும் போது சற்று சூரியனுக்கு அருகாமையில் இருப்பது போன்று தெரியும். அதன் நிலையை சோதிக்க இரவில் அதே நட்சத்திரத்தை கண்டால் இது உறுதியாகிவிடும். பகல் பொழுதில் இத்தகைய நடசத்திரங்களை காணவியலாது. ஆக இதை உறுதி படுத்த கிரணகனத்தின் போது இந்த நட்சத்திரத்தை கண்டால் அதன் ஒளி சூரியனின் நிறையால் பாதிக்கப்படுவதை காணமுடியும். இவ்வாறு நாம் ஒரு கோட்பாட்டை மறுக்கும் எண்ணத்துடனான ஆய்வை முன்வைக்க வேண்டும். இதன் விடையே உறுதிபடுத்தலாகும். 
3. Every 'good' scientific theory is a prohibition: it forbids certain things to happen. The more a theory forbids, the better it is.
ஒவ்வொரு நல்ல அறிவியல் கோட்பாடு என்பதும் தடையே. அது சில விஷயங்களை நடைபெறமால் தடைசெய்கிறது. எது அதிகமாக தடை செய்கிறதோ அதுவே சிறந்த கோட்பாடு. (நாம் முன் சென்ற தொடரில் கூறியது போல் எது வேண்டுமானாலும் எப்படியும் நடக்கலாம் என்று ஒரு கோட்பாடு கூறுமானால் அது அறிவியல் கோட்பாடு அல்ல. ஆக இனம் குறித்த வரைவுகளில் இந்த சிக்கலை முன்னமே கண்டிருக்கிறோம்- Link of art-4)
4. A theory which is not refutable by any conceivable event is nonscientific. Irrefutability is not a virtue of a theory (as people often think) but a vice.
எந்த கோட்பாடு அறியப்படக்கூடிய நிகழ்வால் மறுக்க முடியவில்லையோ அது அறிவியல் பூர்வமானது அல்ல. மறுக்க முடியாதது என்பது ஒரு கோட்பாட்டின் சிறப்பல்ல (மக்கள் நினைப்பது போல்) அதற்கு மாறானது.


         உதாரணமாக ஆர்தோஜெனிஸிஸில் உள்ளார்ந்த தோற்றுவாய் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. உள்ளார்ந்த தோற்றுவாய் என்ற ஒன்றை இல்லை என்று நிறுவ இயலாது. ஏனென்றால் உள்ளார்ந்த தோற்றுவாய் இல்லை என்பதை நிறுவ முதலில் அது என்ன என அறியப்பட்டிருக்க வேண்டும். ஆக உள்ளார்ந்த தோற்றுவாய் இல்லை என நிறுவும் எந்த அறியப்பட்ட நிகழ்வும் அதற்கு இருக்காது. உள்ளார்ந்த தோற்றுவாயால் இந்த நிகழ்வு நிகழ்ந்தது என கூறவும் முடியாது மறுக்கவும் முடியாது. ஆக காணப்படும் நிகழ்வுகளால் இத்தகைய கோட்பாட்டை நிறுவமுடியாது. 
5. Every genuine test of a theory is an attempt to falsify it, or to refute it. Testability is falsifiability; but there are degrees of testability: some theories are more testable, more exposed to refutation, than others; they take, as it were, greater risks.
ஒரு கோட்பாட்டிற்கான ஒவ்வொரு உண்மையான சோதனை என்பதும் அதை மறுப்பதற்கான அல்லது அதை பொய்ப்பிப்பதற்கான ஒரு முயற்ச்சியே. சில கோட்பாடுகள் அதிகமாக சோதிக்கப்படக்கூடியவை, ஏனையவற்றை விட அதிக மறுதலிப்பிற்கு ஆளாகியிருக்கும். அதனால் அவை அதிக துணிகர சோதனையை எதிர் கொண்டிருக்கும். 
6.Confirming evidence should not count except when it is the result of a genuine test of the theory; and this means that it can be presented as a serious but unsuccessful attempt to falsify the theory . (I now speak in such cases of 'corroborating evidence'.)

உண்மையான சோதனையின் முடிவுகளாக இல்லாதவை ஒரு கோட்பாட்டின் உறுதிபடுத்தும் ஆதாரமாய் எடுத்துக்கொள்ளப்படாது. அதாவது அந்த கோட்பாட்டை பொய்பிப்பதற்கான தீவிரமான சோதனைகள், அவை (கோட்பாட்டை பொய்பிப்பதில்) தோல்வியுற்ற முயற்சிகளாய் இருக்க வேண்டும்.



7. Some genuinely testable theories, when found to be false, are still upheld by their admirers--for example by introducing ad hoc some auxiliary assumption, or by re-interpreting the theory ad hoc in such a way that it escapes refutation. Such a procedure is always possible, but it rescues the theory from refutation only at the price of destroying, or at least lowering, its scientific status. (I later described such a rescuing operation as a 'conventionalist twist' or a 'conventionalist stratagem'.) 
சில உண்மையாக சோதனைக்கு தகுதியான கோட்பாடுகள், பொய்யென் அறியப்பட்டும் இன்னமும் அதன் ஆதாரவாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது- அதற்கமையும் படியான சில துணை அனுமானங்கள் நுழைக்கப்பட்டு அது மறுதளிப்பில் இருந்து காப்பாற்றப்படுகிறது. அத்தகைய முறைமை சாத்தியமே ஆனால் அந்த கோட்பாட்டின் அழிவை விலையாக கொடுத்தோ அல்லது அறிவியல் அஸ்தஸ்த்தில் இருந்து கீழ்யிறக்கியோ அந்த கோட்பாட்டை மறுதளிப்பில் இருந்து காப்பாற்றலாம். 
One can sum up all this by saying that the criterion of the scientific status of a theory is its falsifiability, or refutability, or testability.(1)
ஒருவர் இதை அனைத்தையும் ஒன்றினைத்து பின்வருமாரு கூறலாம்
“ஒரு அறிவியல் கோட்பாடு என்பது பொய்மை படுத்தவதற்கு, அல்லது மறுக்கப்படுவத்ற்கு அல்லது சோதிக்கப்படுவதற்கு ஏதுவானதாய் இருக்க வேண்டும். 


பாப்பரின் கருத்தில் இருந்து நாம் பெறும் முக்கிய முடிவுகள்:
1. ஒரு அறிவியல் கோட்பாடு என்பது சோதிக்கத்தக்கதாய் இருக்க வேண்டும்.  
2. சோதனை என்பது அதை பொய்பிக்கும் எண்ணத்துடன் நிகழ்த்தப்பட்டதாய் இருக்க வேண்டும். அதாவது முன்னமே முடிவு செய்துவிட்டு அதை நிறுவும் படி சோதிக்கக்கூடாது. 
3. இவ்வாறு சோதிப்படும் போது அந்த கோட்பாடு பொய்ப்பிக்கப்படும் நிலையில், அனுமானங்களை கொண்டு அந்த கோட்பாட்டிற்கு முட்டு கொடுக்க முற்பட்டால் அது அந்த கோட்பாட்டை அறிவியல் அந்தஸ்தில் இருந்து கீழிறக்கிவிடும். அதாவது சோதனையில் பொய்பிக்கப்படும் நிலையில் அந்த கோட்பாட்டை நிறுவ எத்துனை அனுமானங்களை துணைக்கு அழைத்து நிறுவ முற்பட்டாலும் அந்த கோட்பாடு அறிவியல் என்ற அந்தஸ்தை இழந்து விடும்.  
4. இது இப்படித்தான் நடக்கும் என தெளிவாக இருக்க வேண்டும். எதுவும் எப்படியும் நடக்கலாம் என்றிருகக்கூடாது.
        மேற்குறிபிட்ட இந்த நான்கு புரிதல்களின் அடிப்படையில் பரிணாமம் சோதிக்கப்பட்டால் நிலைத்து நிற்குமா என்பதைத்தான் நாம் நமது ஆய்வில் சோதிக்க இருக்கிறோம். மேலும் பரிணாமத்தின் முதல் நிலை அனுமானங்களை நாம் விவரித்து விமர்சிப்போம் இன்ஷா அல்லாஹ். 

பரிணாமம் சோதிக்கதக்கதா?
          உயிரியலில் பரிணாமம் என்பது இரண்டு வகையாகயான பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று ஒரு உயிரினத்தில் அந்த இனத்தை பாதுக்காக்க அவற்றில் தோன்றும் மாற்றங்கள். இன்னொன்று ஒரு உயிரினம் வேறு ஒரு உயிரினமாக மாறுவது. இவற்றில் ஒரு உயிரினம் அவை ஓர் இனமாக நிலைத்து நிற்க தேவையான மாற்றங்கள் நிகழ்வதை நம்மால் சோதித்து அறிய முடிகிறது அல்லது காணமுடிகிறது( இந்த கருத்து குறித்து பின்வரும் தொடர்களில் இன் ஷா அல்லாஹ் தெளிவாக காண்போம்) ஒரு இனத்தில் இருந்து இன்னொரு இனம் தோன்றுவதை( அதாவது இனப்பெருக்க தடை (அதாவது hybridization- இனக்கலப்பு உள்ளிட்டவற்றிலும் தடை ) மற்றும், உருவ மாற்றங்களுடன் கூடிய வேறு இனம் தோன்றுவதை சோதித்து சோதனை கூடத்தில் அறிய முடியுமா என்றால் இதுவரை அது நிகழ்தப்படவில்லை. அது இயற்கையாக நிகழ்வதையும் காணமுடியவில்லை.ஆக இந்த நிகழ்வை சோதனை கூடத்தில் நிகழத்தி சோதிக்கவும் முடியாது. அதனை பரிணாமவியலாளர்களே ஏற்கிறார் ஒரு இனம் இன்னொன்றாக மாற பல லட்சவருடங்கள் ஆகலாம் என்று பரிணாம கோட்பாட்டிற்கு ஒரு அனுமானத்தை கொண்டு முட்டு கொடுக்கிறார்கள். உதாரணமாக பழ ஈக்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அவற்றுள் இனப்பிரிகை ஏற்பட 1,500,000 முதல் 3,500,000 ஆண்டுகள் ஆகலாம் என ஜெர்ரி காய்ன் குறிப்பிடுகிறார்.(2)(3)
                     ஒரு இனம மற்றோர் இனமாக மாறுவதை சோதித்து அறிய முடியாது. ஆக அறிவியல் கோட்பாட்டின் ஆரம்ப வரைவிலக்கணத்தின் அடிப்படையிலும், பரிணாமவியலாளர்கள் அனுமானத்தால் கொடுக்கும் முட்டினாலும் ஒரு இனம் வேறு ஒரு இனமாக மாறும் என்பது அறிவியல் கோட்பாடு எனும் அந்தஸ்தை இழக்கிறது என்பது நிறுபனமாகிறது.  
( மேற்குறிபிட்ட பரிணாமத்திற்கு ஆதாரமாய் சில உதாரணங்களை சிலர் முன்வைக்கின்றனர். அது அறிவியல் மற்றும், நிதர்சனத்திற்கு எவ்வளவு எதிரானது என்பதனை ஆதாரங்கள் என்ற தலைப்பின் கீழ் விவரிக்கவுள்ளோம்). ஆக பரிணாமம் என்பது குறித்த ஒரு சாமனியனின் புரிதலுக்கு பூசப்பட்ட அறிவியல் சாயம் சற்று வெளுத்துள்ளது. பரிணாமம் என்பது மொத்தமும் ஊகம்தான என்பதை விளக்க பரிணாமம் சோதனைக்குரியது என்ற அனுமானத்தை??????? நாம் ஏற்று கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வோம்...

நவீன டார்வினிஸம்: (MODERN EVOLUTIONARY SYNTHESIS) என்றால் என்ன???


               சென்ற தொடரில் உயிரியல் இனத்தோற்ற கருத்தியலுக்கு முழுவடிவம் கொடுத்த ஏர்ண்ஸ்ட் மைர் அவர்களின் இனப்பெருக்க பாகுபாடு அல்லது பிரிவின் அடிப்படையிலான கருத்தை அறிந்தோம். நாம் 2ம் மற்றும் 3ம் தொடர்களில் ஏன் உருவ அமைப்பில் தோன்றும் மாற்றங்கள் அடுத்தத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுவதில்லை என்பது குறித்து வைஸ்மேனின் ஆய்வுகள் அடிப்படையில் விளக்கி இருந்தோம். ஆக உடலியல் ரீதியான மாறுபாடுகள் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாது என்பது நிறுவப்பட்ட நிலையில் பரிணாமத்தை அறிவியல் என வாதிட மாற்று கருத்து தேவைபட்டது. ஆக பரிணாமவியலை நிறுவ கிரிகர் மெண்டலின் கருத்து, மரபியல் கருத்துக்கள் ஆகியவற்றை தொகுத்து உருவாக்கப்பட்ட கருத்துதான் நவீன தொகுப்பு பரிணாமவியல் (MODERN EVOLUTIONARY SYNTHESIS) ஆகும்.

                20ம் நூற்றாண்டில் அதாவது 1918 முதல் 1970 வரை பரிணாமவியல் கருத்தாக்கத்தில் தோன்றிய, மாறிய புதிய புரிதல்களின் தொகுப்புத்தான் நவீன தொகுப்புப் பரிணாமம் ஆகும். கிரிகர் மெண்டலின் மரபியல், (MENDELIAN HERIDITARY) உயிரியல் அமைப்பு முறைப்படுத்தல் (BIOLOGICAL SYSTEMATICS) மற்றும் டார்வினின் இயற்கை தேர்வு (NATURAL SELECTION) ஆகியவற்றை ஒன்றினைத்து ஏர்ன்ஸ்ட் மைர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கோட்பாட்டியல் புரட்சிதான் இந்த நவீன தொகுப்புப் பரிணாமம் (MODERN EVOLUTIONARY SYNTHESIS) எனப்படுகிறது.

                பரிணாமவியலுக்கு மிக சாதகமாக இனத்தோற்ற அடிப்படையிலான இனக்கருத்து இருந்த போதிலும், ஏர்ண்ஸ்ட் மைர் போன்றவர்கள் இனப்பெருக்க பிரிவினை அடிப்படியிலான இனக்கருத்தை உயர்த்திப்பிடிக்க காரணம் இந்த நவீன தொகுப்பு பரிணாமத்தின் ஆதர்வு நிலைதான். ஆக இனங்கள் தோன்றுவதற்கு இருக்க வேண்டிய முக்கிய காரணி இனப்பெருக்க பிரிவினைதான் என்பதை ஏர்ண்ஸ்ட் மைரின் கருத்துக்கள் ஆணித்தனமாக மேற்குறிபிட்ட பரிணாமவியல் கொள்கையில் முன்வைக்கப்படுகிறது. ஆக படிமங்களினால் நிறுவப்படும் கருத்தியலும், பரிணாம உயிரிலாளர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களும் நேர் எதிரானவை. ஆனால் இவை இரண்டும் இணைந்து பரிணாமத்திற்கு முழு சான்று அளிக்கிறது என்பது எத்தகைய கேலிக்குறியது என்பதை இந்த தொடர்களை வாசிப்பவரின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.

   பரிணாம்ம் குறித்து எர்ண்ஸ்ட் மைர் அவர்களது நேரடி வார்த்தைகளினாலே புரிந்து கொள்ள முயல்வோம்

THE LOGIC OF THE THEORY OF NATURAL SELECTION
Darwin's theory consisted of three inferences based on five facts derived in part from population ecology and in part from phenomena of inheritance.
Fact 1: All species have such great potential fertility that their population size would increase exponentially (Malthus called it geometrically) if all individuals that are born would again reproduce successfully.
Fact 2: Except for minor annual fluctuations and occasional major fluctuations, populations normally display stability.
Fact 3: Natural resources are limited. In a stable environment they remain relatively constant.
Inference 1: Since more individuals are produced than can be supported by the available resources but population size remains stable, it means that there must be a fierce struggle for existence among the individuals of  a population, resulting in the survival of only a part, often a very small part, of the progeny of each generation. 

These facts derived from population ecology lead to important conclusions when combined with certain genetic facts.
டார்வினின் கோட்பாடு இனத்திரள் சூழலியலியல் (Population Ecology) மற்றும் மரபுவழி பெறுகை(inheritance) நிகழ்வின் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் உண்மைகளின் அடிப்படையில் மூன்று அனுமானங்களை அல்லது உய்த்துணர்தல்களை கொண்டது. 
உண்மை  1: ஒவ்வொரு இனத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் இனப்பெருக்கம் செய்யும் பட்சத்தில், அனைத்து இனங்களின் தொகையும் பல்கிப்பெருகும் இனப்பெருக்க வளம் கொண்டவை. (மால்துஸ் இதனை வடிவியல் பெருக்கம் எனக்குறிப்பிடுகிறார்) 
உண்மை 2: ஆண்டுதோறுமான சிறு மற்றும் பெரும் ஏற்றத்தாழ்வுகளை தவிர்த்து இனத்திரள் நிலைத்தன்மையை கொண்டிருக்கும். 
உண்மை 3: இயற்கை வளங்கள் வரையறுக்கப்பட்டவை. நிலையான சூழலில் அவை ஒப்பீட்டளவில் நிலையானது. 

அனுமானம் 1: இருக்கும் வளங்கள் ஆதரிக்கும் எண்ணிக்கையை விட ஒரு இனத்தின் தனித்த உயிர்களின் இனப்பெருக்கும் அதிகமாய் இருக்கின்ற போதும், இனத்திரள் நிலைத்தன்மையை கொண்டிருப்பது, அந்த இனத்திரளில் உள்ள தனித்த உயிர்களுக்கு மத்தியிலும் கடுமையான வாழ்கை போராட்டம் நிகழ்கிறது என்பதை காட்டுகிறது. இதனால் ஒரு இனத்திரளில் ஒரு பகுதி மட்டுமே பிழைத்து வாழ்கின்றது, பல நேரங்களில் ஒவ்வொரு தலைமுறையின் சிறு பகுதி மட்டுமே தப்பி பிழைக்கின்றது. 



இனத்திரள் சூழலியலின் இந்த உண்மைகளை சில மரபியல் உண்மைகளுடன் இணைக்கும் போது சில முக்கிய முடிவுகளை அடையமுடிகிறது. 


Fact 4: No two individuals are exactly the same; rather, every population displays enormous variability. 
Fact 5: Much of this variation is heritable. 

Inference 2: Survival in the struggle for existence is not random but depends in part on the hereditary constitution of the surviving individuals.  This unequal survival constitutes a process of natural selection. 


Inference 3: Over the generations this process of natural selection will lead to a continuing gradual change of populations, that is, to evolution and to the production of new species.(4)
உண்மை 4: (ஒரு இனத்திரளின்) இரண்டு தனித்த உயிர்கள் ஒரே போன்று இருப்பதில்லை. மாறாக ஒவ்வொரு இனத்திரளும் மிகப்பெறும் மாறுபாடுகளை தனக்குள்ளே காட்டுகிறது.

உண்மை 5: இந்த மாறல்கள் பெரும்பான்மையானவை பாரம்பரிமானவை. 

அனுமானம் 2: இந்த வாழ்கை போராட்டத்தில் தப்பிப்பிழைப்பது என்பது எதேச்சையான ஒன்றல்ல மாறாக இதன் ஒரு பகுதி தப்பிப்பிழைக்கும் தனித்த உயிரின் பாரம்பரிய உள்ளமைப்பினை சார்ந்து இருக்கிறது. இந்த சமமில்லாத தப்பிப்பிழைத்தல் இயற்கை தேர்வு என்ற செயல்முறையை தோற்றுவிக்கிறது. 


அனுமானம் 3: பல தலைமுறைகளாக இயற்கைதேர்வு என்ற இந்த செயல்முறை இனத்திரள்களில் தொடரும் படிநிலை மாற்றங்களை தோற்றுவிக்கிறது அதாவது பரிணாமத்தை தோற்றுவிக்கிறது. மேலும் புது இனங்களை உருவாக்குகிறது.

           நாம் மேற்குறிபிட்ட கருத்தியலை விளக்கி ஆய்வு செய்வோம். இதில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படும் உய்த்துணர்தல் எந்த அளவு சரியானது என்பதை பரிணாமவியலின் ஏனைய கருத்துகளையும் தலைப்புக்களையும் ஆய்வு செய்வதற்கு முன்பே புரிந்து கொள்வது இந்த பரிணாமவியல் என்ற கோட்பாட்டின் அடித்தளத்தின் வலிமை?????? எத்தகையது என்பதை புரிந்து கொள்ள போதுமானதாய் இருக்கும்.

அனுமானம் 1: இருக்கும் வளங்கள் ஆதரிக்கும் எண்ணிக்கையை விட ஒரு இனத்தின் தனித்த உயிர்களின் இனப்பெருக்கும் ஆற்றல் அதிகமாய் இருக்கின்ற போதும், இனத்திரள் நிலைத்தன்மையை கொண்டிருப்பது, அந்த இனத்திரளில் உள்ள தனித்த உயிர்களுக்கு மத்தியில் கடுமையான வாழ்கை போராட்டம் நிகழ்கிறது என்பதை காட்டுகிறது. இதனால் ஒரு இனத்திரளில் ஒரு பகுதி மட்டுமே பிழைத்து வாழ்கின்றது, பல நேரங்களில் ஒவ்வொரு தலைமுறையின் சிறு பகுதி மட்டுமே தப்பி பிழைக்கின்றது.

           மேற்குறிபிட்ட இந்த அனுமானத்தை கார்ல் பாப்பர் அவர்களின் அறிவியல் கோட்பாட்டின் வரைவிலக்கணத்தில் அடிப்படையில் சோதிக்க முடியுமா என்று பார்போம். அவ்வாறு சோதிக்கப்படும் போது அது எந்தளவிற்கு உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதை பார்ப்போம். 

               அதாவது ஒரு இனத்தில் இருக்கும் தனித்த ஒவ்வொரு உயிர்களும் பல்கிப்பெருகும் ஆற்றல் கொண்டவை. எண்ணிக்கையில் ஆண்டுதோறும் சிறு மாற்றங்கள் தோன்றினாலும் ஒரு இனத்தில் உள்ள உயிர்களின் மொத்த எண்ணிக்கை நிலையாகவே இருக்கிறது. அது போல இயற்கை வளத்தின் அளவு வரையறுக்கப்பட்டதுதான். இந்நிலையில் ஒரு பல்கிப்பெருகும் இனத்திரளின் எண்ணிக்கை நிலையாக இருப்பது என்பது எதை காட்டுகிறது என்றால் தனித்த உயிர்களுக்கு இடையே கடுமையான போராட்டம் நிகழ்கிறது. இந்த போராட்டதில் தப்பிப்பிழைப்பவை சில உயிர்கள் மட்டுமே. இந்த தப்பிப்பிழைக்கும் உயிர்களிலும் அவற்றின் சந்ததிகளிலும் சில உயிர்களே தப்பிப்பிழைக்கின்றன. 

              மேற்குறிபிட்ட இந்த அனுமானம் சரியாக தோன்றினாலும் இந்த கருத்து அறிவியல் ஆய்வு மற்றும் உண்மை புரிதலுக்கு மாற்றமானதாகும். இந்த அனுமானத்தின் மூலமாக அமைந்த இனத்திரள் சூழலியல், இந்த கருத்து குறித்து என்ன கூறுகிறது என்பதை காண்போம். 

            இது குறித்த தற்கால ஆய்வுகள் ஒரு இனத்திரளில் இருக்கும் உயிர்களின் எண்ணிக்கை நிலையாக இருப்பது போராட்டத்தினால் மட்டும் அல்ல அந்த உயிர்களின் இனப்பெருக்க ஆற்றலில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளினால்தான். அதாவது ஒரு இனத்திரளில் இருக்கும் உயிர்களின் இனப்பெருக்க ஆற்றல் மொத்த உயிர்களின் ஜனத்தொகைக்கு ஏற்றவாறு மாறுகிறது. அதாவது ஜனத்தொகை அதிகமாக இருக்கும் போது இனப்பெருக்க ஆற்றல் தானே குறைகிறது. அதுபோல் ஜனத்தொகை குறையும் போது இனப்பெருக்க ஆற்றல்(Fecundity) தானே உயர்கிறது. (Fecundity- என்பது கரு உற்பத்தி ஆற்றல் எனப்படுகிறது. இவ்வாறான ஜனத்தொகை சார்ந்து கரு உற்பத்தி அளவில் ஏற்படும் மாறுபாடுகளை Density Dependent Regulation of Fecundity என்று இனத்திரள் சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்(5)
மேலும் இத்தகைய செயல்பாட்டிற்கான காரணம் இன்னும் புலப்படவில்லை என்பது அதிகப்படியான தகவல். (6)



            ஆக முதல் அனுமானம் கூறுவது போல் உயிர்களில் என்றும் போராட்டம் நிகழ்வதில்லை. ஆக முதல் அனுமானம் முழுவதும் சரியல்ல. அதில் குறைகள் இருக்கிறது என்பதுடன் வாழ்கை போராட்டத்தினால் பலவீனமான உயிர்கள் ஒரு இனத்திரளில் முற்றிலும் அழியாது என்பதும் நிருபனம் ஆகிறது. பலவீனமானவை அல்லது சூழலுக்கு ஏற்ப தாக்குபிடிக்காதவை அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்யும், அதன் இழப்பை ஈடு செய்ய. மேலும் மால்தூஸ் என்ற பாதிரியின் (1766- 1834) இந்த வாழ்க்கை போராட்டம் குறித்த கருத்துக்கள் கார்ல் மார்கஸ் போன்றவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. முதலாளித்துவத்திற்கு வெண்சாமரம் வீசும் கருத்தாக எடுதுக்கொள்ளப்பட்டதால்தான் என்னவோ சோவியத்தில் மால்தூஸின் கருத்தியல் அடிப்படையிலான டார்வினிஸம் ஒதுக்கப்பட்டு லாமார்க்கியம் 1965 வரை கோலோச்சி இருந்தது போலும்..


      ஆக பரிணாமவியல் குறித்த முதல் அனுமானம் சோதனையில் தாக்குபிடிக்கவில்லை. ஆக இதனை அடிப்படையாக கொண்ட அடுத்த அனுமானம் என்ன ஆகும் என்பதையும் காண்போம்.
அனுமானம் 2: இந்த வாழ்கை போராட்டத்தில் தப்பிப்பிழைப்பது என்பது எதேச்சையான ஒன்றல்ல மாறாக இதன் ஒரு பகுதி தப்பிப்பிழைக்கும் தனித்த உயிரின் பாரம்பரிய உள்ளமைப்பினை சார்ந்து இருக்கிறது. இந்த சமமில்லாத தப்பிப்பிழைத்தல் இயற்கை தேர்வு என்ற செயல்முறையை தோற்றுவிக்கிறது. 
                அதாவது சூழலுக்கு தக்க தாக்கு பிடிக்கும் மாறல் இருக்கும் உயிரினம் ஒரு இனத்திரளில் அழியாது நிலைத்துவிடும். முன் கூறியது போல இந்த அனுமானமும் முழுமையும் சரியானதல்ல. அதாவது முன் கூறியது போலவே பலவீனமான உயிர்கள் தங்களது இருப்பை தக்கவைக்க அதிகமாக பல்கிபெருகுகிறது. அதன் விளைவாக தனது மரபை பெருமளவில் அடுத்த சந்ததிக்கு கடத்தி விடுகிறது. இதனால்தான் இன்றும் நிறக்குருடு போன்ற மரபியல் குறை இருக்கும் மனிதர்களை காணமுடிகிறது. உலக மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீத மக்கள் இத்தகைய மரபியல் குறைபாட்டுடனேயே இன்றும் இருப்பதை காணமுடிகிறது. இன்னும் தெளிவாக Mutation- Selection Balance theory இதை விளக்குகிறது.(7)
அனுமானம் 3: பல தலைமுறைகளாக இயற்கைதேர்வு என்ற இந்த செயல்முறை இனத்திரள்களில் தொடரும் படிநிலை மாற்றங்களை தோற்றுவிக்கிறது அதாவது பரிணாமத்தை தோற்றுவிக்கிறது. மேலும் புது இனங்களை உருவாக்குகிறது.
             ஆக மேற்குறிபிட்ட மூன்றாவது அனுமானம் இதற்கு முன் நாம விளக்கிய இரண்டு பலவீனமான அனுமானங்களின் மேல் கட்டமைக்கப்பட்டது. ஆக மூன்றாவது அனுமானம் தானகவே பலவீனமடைந்துவிடும். ஆயினும் இயற்கை தேர்வு என்பது நிகழத்தான் செய்கிறது. ஆனால் இயற்கை தேர்வும் அதை அடிப்படையாக கொண்ட டார்வினிஸ்மும் இனத்தோற்றத்தின் காரணம் என்பதெல்லாம் சுத்த கட்டுக்கதை. மாறாக இயற்கை தேர்வுதான் ஒரு இனத்தினை அழியாமல் பாதுகாக்கிறது என்பதை பின்வரும் தொடர்களில் இன் ஷா அல்லாஹ் விளக்குவோம். இந்த இயற்கை தேர்வுதான் இனங்களின் தோற்றத்திற்கும் , வாழ்க்கை போராட்டம்தான் இனங்களின் மறைவிற்கும் காரணம் என விளக்கவே இந்த அனுமானங்களை பிடித்து தொங்கிகொண்டுள்ளனர் பரிணாமவியலாளர்கள். மேலும் இந்த விளக்கத்தை பிடித்து தொங்கினால்தான் ஓரளவிற்காவது படிமங்களை பரிணாமத்திற்கு ஆதாரமாய் கொள்ளமுடியும். அதாவது மூதாதைகள் வாழ்க்கை போராட்டத்தில் அழிந்தன. மாறுபாட்டுடனான உயிர்கள் தப்பிப்பிழைத்தன என வாதிட முடியும், அழிந்த உயிர்களின் படிமங்களையும் எழும்பு கூடுகளையும் வைத்துக்கொண்டு இவைதான் இன்றிருக்கும் உயிர்களின் மூதாதை என பொய்யாக வாதிக்க முடியும்.

       ஆனால் படிமங்களிலும் பரிணாமவியலாளர்களுக்கு சிக்கல்கள் இருக்கின்றன. அதாவது படிமங்களில் உயிர்கள் திடிரென அழிந்திருக்கின்றன. அதே போல் தோன்றியும் இருக்கின்றன. இது இங்கு பேசப்படும் பரிணாமவியலின் படிநிலையில் சிறு சிறு தொடர் மாற்றங்களினால் உயிர் இனங்கள் இயற்கை தேர்வால் தோன்றும் என்பதற்கு நேர் எதிரானது. இயற்கை தேர்வினால் இனங்கள் தோன்றி இருந்தால் பூமி துவக்கம் முதல் இன்று வரை உள்ள இனங்கள் அப்படியே இருக்கும். சில அழிந்து படிமமாய் இருக்காது. அவ்வாறு அழிந்து ஒத்ததோற்றத்துடன் படிமமாய் இருப்பவற்றை “Pseudo extinct”(பொய்யாக அழிந்தவை)(8) என்று அழைக்கிறார்கள் படிமவியலாளர்கள்.


    அதாவது மூதாதைகள் அழிந்திருக்கும் ஆனால் அவற்றின் ஒத்த தோற்றமுடைய உயிர்கள் இன்றும் இருக்கும். அவை எந்த அளவிற்கு ஒத்திருக்கும் என்றால் அவற்றின் பாகுபாட்டை அவை இன்றிருக்கும் இனங்களுடன் அவை இனப்பெருக்கம் செய்தனவா என்பதை அறிந்தால் மட்டுமே சாத்தியம் எனும் அளவிற்கு அமைந்திருக்கும். நாம் சென்ற தொடரில் குறிபிட்டது போல் உருவத்தில் இருக்கும் சிறு வேற்றுமையின் அடிப்படையில் தொல்லியலாளர்கள் அவற்றை தனி இனமாக பிரித்திருப்பார்கள் ஆக படிநிலையில் சிறு தொடர் மாற்றங்களினால் உயிர் இனங்கள் தோன்றும் என்பதும், வாழ்க்கை போராட்டத்தில் உயிரினங்கள் முற்றிலும் அழிந்தன என்பதும் படிமங்களின் அடிப்படையில் நம்பும் படியாக இல்லை. இவ்வாறு உயிர் இனங்கள் படிநிலையில் சிறு சிறு தொடர் மாற்றங்களினால் தோன்றியதற்கான ஆதாரங்கள் படிமங்களில் இல்லாத காரணத்தினால்தான் ஜே கோல்ட் போன்றவர்கள் “Punctuated Equilibrium” எனும் கோட்பாட்டை முன்வைக்கின்றார்கள். எது பரிணாமத்தின் இயற்கை???? என்பதிலேயே கோல்டும் டாவ்கின்ஸும் மோதிக்கொள்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். (9) ஆனால் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட ஆயிரம் சிக்கல்களை அறிவியல் முன்வைக்கும் போது கோட்பாட்டியல் ரீதியில் பெருமாற்றங்கள் திடிரென உயிர்களில் தோன்றி அவை வேறு இனமாக எப்படி மாற முடியும் என்பது டாக்கின்ஸ் போன்ற பரிணாமவியலாளர்களால் எழுப்பப்படும் கேள்வி. கோல்ட் போன்றவர்கள் இத்தகைய சிறு சிறு தொடர் மாற்றங்களால் உயிர் இனங்கள் வேறு இனங்களில் இருந்து தோன்றின (Anagenesis)  என்பதற்கான படிம ஆவணங்கள் மிகவும் அரிதானது என்கிறார்கள்.(10) ஆக படிம ஆதாரங்கள் டாக்கின்ஸ் போன்ற பரிணாம ஆதரவாளர்களின் கருத்துக்கு ஒத்துவரவில்லை, ஆக உயிர்கள் திடிரென தோன்றி இருக்கின்றன என வாதிக்கின்றனர்.


        இன்னும் தெளிவாக கூறுவதாக இருந்தால் படிம ஆவணங்களில் உயிர் இனங்கள் திடீரென தோன்றியும் மறைந்தும் உள்ளது. ஆனால் ஒரு இனம் வேறு இனமாக பரிணமிக்க வேண்டுமாயின்,  படிநிலையில் சிறு சிறு தொடர் மாற்றங்கள் ஏற்பட்டு பிறகு ஒரு இனம் வேறு ஒரு இனமாக பரிணாமிக்கும் என உயிரியல், மரபியல், மற்றும் செல்லியல் தொடர்பான அறிவியல் ஆய்வுகள் காட்டுகிறது. ஆனால் இத்தகைய ஆய்வுகள் குறிப்பிடும் கால அளவு நேரடி ஆதாரங்களான படிமங்களோடு ஒத்துவரவில்லை. ஆக ஆய்வு குறிப்பிடும படிநிலை தொடர்மாற்றங்கள் என்பது கண்முன்னே இருக்கும் படிம ஆவணங்களுக்கு நேர்மாறாக இருக்கிறது. ஆக பரிணாம இயங்கியலின் இயற்கை என்ன என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது.

       அதுபோல் ஒரு உயிரியல் செயலாக்கம் என்பது அடிப்படையாக சில தன்மைகளை கொண்டிருக்கும். அதாவது அந்த செயலாக்கத்திற்கு உள்ளீடு இருக்கும், அடுத்து வெளியீடு இருக்கும். இதனை கொண்டு அந்த செயலாக்கத்தின் செயல்திறன் என்ன என்பனவற்றை அறிய முடியும். உதாரணமாக ஒளிச்சேர்கையை எடுத்துக்கொள்வோம் அதன் உள்ளீடு சூரிய ஒளி, கார்பன் டை ஆக்ஸைடு, நீர் உள்ளிட்டவை. வெளியீடு: குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜன்.


           இது போல் இயற்கை தேர்வு என்ற செயலாக்கத்தின் உள்ளீடு என்ன. வெறும் வெளியீட்டை மட்டும் வைத்து ஒரு செயல்முறை இருப்பதாக வாத்திப்பதானால், ஏன் படைப்பு என்ற செயல்முறை நிகழ்ந்து இருக்கக்கூடாது?, என்ற வாதத்தை முன்வைக்கலாமே??? இயற்கை தேர்வின் செயல்திறன் என்ன? எவ்வளவு கால அளவை எடுத்துக்கொள்ளும் போன்ற அளவீடுகளை இயற்கை தேர்விற்கு வழங்க இயலுமா???? அந்த அளவீடுகள் படிமங்களோடு எந்த அளவிற்கு ஒத்தமைகின்றது போன்ற கேள்விகளுக்கு பரிணாமவியலில் பதில் இருக்கிறதா??? ஆக இயற்கை தேர்வுதான் உயிர்களில் இனங்களை தோற்றுவித்தது என்பது ஒரு முழு ஊகம். அது செயலாக்கத்திற்கான எந்த அளவீடுகளையும் கொண்டிருக்க வில்லை.

     பரிணாமத்தின் இறுதி இலக்கான “இனம்” என்ற வரைவில் குழப்பம். பரிணாமத்தின் அடிப்படை இயங்கியல் எப்படி நடைபெறுகிறது என்பதில் பரிணாமவியலாளர்களுக்கு இடையில் குழப்பம்....இப்படி இலக்கிலும், இயங்கியலிலும் கருத்து வேறுபாடுகளும் குழப்பமும் நிகழும் போது பரிணாமவியல் எப்படி அறிவியல் கோட்பாடு எனும் நிலையை அடையும்....... இதனால்தான் என்னவோ பாப்பர் ஆரம்பத்தில் பரிணாமம் என்பது அறிவியல் அல்ல என்று குறிபிட்டார். பின்னர் ஏற்பட்ட அழுத்தத்தினால் பரிணாமம் அறிவியல் என ஏற்கும் படியானது. ஆனால் மேல் குறியவற்றிற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அனுமான்ங்கள் பல இணைக்கப்பட்டு கொண்டே செல்கிறது எனும் போது பரிணாமம் அறிவியலா???? என்பதற்கான விடையை வாசிப்பவர் புரிந்து கொள்ளட்டும்.

Citation:
1.P.no: 36 , CONJECTURES AND REFUTATIONS by Karl Popper
2.https://www.ncbi.nlm.nih.gov/pubmed/28568554 , 3.https://onlinelibrary.wiley.com/doi/epdf/10.1111/j.1558-5646.1989.tb04233.x
4.P.No 479-480 The Growth of Biological Thought Diversity, Evolution, and Inheritance by ERNST MAYR
5.https://www.nature.com/scitable/knowledge/library/introduction-to-population-demographics-83032908
6.https://courses.lumenlearning.com/wm-biology2/chapter/population-dynamics-and-regulation/
7.P.No.702-704 Introduction to Genetic Analysis by Anthony J. F. Griffiths, Susan R. Wessler, Sean B. Carroll, John Doebley
8.https://en.wikipedia.org/wiki/Pseudoextinction
9.P.No.4 Dawkins Vs. Gould: Survival of the Fittest
10.P.No:606, The Structure of Evolutionary theory by Stephen Jay Gould.


References:
1.CONJECTURES AND REFUTATIONS by Karl Popper
2.The Growth of Biological Thought Diversity, Evolution, and Inheritance by ERNST MAYR
3.Introduction to Genetic Analysis by Anthony J. F. Griffiths, Susan R. Wessler, Sean B. Carroll, John Doebley
4.Dawkins Vs. Gould: Survival of the Fittest by Kim Sterelny
5.Essentials of Ecology by G.Tyler Miller Jr. and Scott E.Spoolman
6.The Structure of Evolutionary theory by Stephen Jay Gould

7.Prehistoric Life: evolution and fossil record by Bruce S.Lieberman and Roger Kaesler