பக்கங்கள் செல்ல

Thursday, April 30, 2015

அர்த்தமுள்ள கேள்விகள் - 11 - மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் இருப்பது ஏன்?



நாத்திகர்கள் & பகுத்தறிவாதிகள் பொதுவாக எழுப்பும் கேள்விகளில் இதுவும் ஒன்று முஸ்லிம்கள் ஆதாம், ஏவாலில் இருந்து வந்ததாக சொல்கின்றனரே அப்போது ஏன் மனிதர்கள் வெவ்வேறு தோற்றத்துடன் காணப்படுகின்றனர் என்று?? நியாயமான கேள்விதான் இதற்கு நமது பதில்,

கேள்வி: 

ஒரு இந்து சகோதரரிடம் உரையாடும் போது 'மனித சமுதாயம் ஆதம்' ஹவ்வா' எனும் இருவர் வழியாகவே உருவாகியுள்ளது'என்று கூறினேன். அதற்கு அவர் அப்படியெனில் ஆப்பிரிக்கர்கள், வெள்ளையர்கள், சீனர்கள், ஆதிவாசிகள் வெவ்வேறு தோற்றத்துடன் இருக்கிறார்களே? என்றார். இதற்கு எப்படி விளக்கம் கொடுக்க வேண்டும்?

பதில்:

இந்த வாதத்தில் உள்ள அடிப்படைத் தவறை விளக்கினாலே போதும்.

ஒரு தாய்க்கும், ஒரு தந்தைக்கும் பிறந்தவர்கள் ஒரே தோற்றத்தில், ஒரே நிறத்தில் இருப்பார்கள் என்ற அடிப்படையே தவறாகும். இதற்குப் பெரிய ஆராய்ச்சிஎதுவும் தேவையில்லை. உங்கள் குடும்பத்தில், உங்கள் தெருவில், உங்கள் ஊரில் உள்ளவர்களை ஆராய்ந்தாலே போதுமானதாகும். ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்த அண்ணன் தம்பிகளை முரண்பட்ட நிறத்திலும், தோற்றத்திலும் சர்வசாதாரணமாக நாம்பார்க்கிறோம்.

அவர்களின் புறத்தோற்றம் மட்டுமின்றி பண்பாடு, பழக்க வழக்கம், குணாதிசயம் போன்றவையும் மாறுபட்டிருப்பதை நாம் காண்கிறோம். மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினால் இரண்டு சகோதரர்களின் இரத்தங்களும் கூட ஒரே வகையைச் சேர்ந்ததாக இருக்காது. நேரடிப் பிள்ளைகள் மத்தியிலேயே இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கும்போது, பல தலைமுறைகள் கடக்கும் போது ஏன் வித்தியாசம் இருக்காது என்று கூறினால் ஏற்றுக் கொள்வார்கள். இந்த வேற்றுமைகளை விட முக்கியமான ஒரு ஒற்றுமையையும் நீங்கள் சுட்டிக் காட்டலாம். ஒரு மரத்தில் காய்க்கும் காய்கள் பல்வேறு அளவுகளிலும், வடிவங்களிலும், தோற்றத்திலும் இருந்தாலும் அவை ஒரே மரத்தில் உருவான ஒரு இனத்தைச் சேர்ந்த காய்கள் என்று கூறுகிறோம். அதுபோல் பகுத்தறிவு என்னும் அம்சத்தில் ஐரோப்பியர்களும், ஆப்ரிக்கர்களும் ஒன்றுபட்டுள்ளனர்.

இதைவிட முக்கியமாக, இக்கொள்கையை உலகம் ஏற்பதால் உலகத்துக்குக் கிடைக்கும் நன்மைகளையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்டவேண்டும். எல்லா மனிதர்களும் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவர்கள் என்பதை ஏற்றால், அனைத்து மனிதர்களும் சகோதரர்கள் என்பதும், பிறப்பால் எவரும் உயர முடியாது என்பதும் நிரூபணமாகும். குலம், சாதியின் பெயரால் மனிதர்கள் பிளவுபட்டிருப்பது இந்தக் கொள்கையைத் தழுவிய மறு வினாடியே ஒழிந்து போய் விடும்.

முஸ்லிம்கள் இதை நம்புவதால் தான் அவர்களிடம் தலித் முஸ்லிம், நாடார் முஸ்லிம் என்றெல்லாம் சாதி வேற்றுமை இல்லாமல் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டலாம்.

சகோதரர் P. ஜெயினுலாப்பதீனால் எழுதப்பட்ட அர்த்தமுள்ள கேள்விகள் அறிவு பூர்வமான பதில்கள் என்னும் புத்தகத்தில் இருந்து.........

Wednesday, April 29, 2015

"பாரதத்தில் இஸ்லாமும்-பசுக்கொலையும்"- இஸ்லாம், உணவுக்காக பசுவை கொல்வதை தடைசெய்கின்றதா?

"பாரதத்தில் இஸ்லாமும்-பசுக்கொலையும்", என்ற தலைப்பில் முகநூளில் வந்த பதிவிற்கு, பதில்.

இதை பார்க்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும்,  இது  இஸ்லாம் சொன்னது அல்ல என்று தெரிந்துவிடும். மாற்று
மத சகோதரர்களுக்கு தெளிவாக்க வேண்டும் என்ற காரணத்தினால் இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


இஸ்லாம் என்று எதையேனும் கொண்டுவந்தால், அது இந்த இரண்டு மட்டுமே:

1. திருக்குரானில் இடம்பெற்று இருக்கவேண்டும்
2. ஆதாரபூர்வமான நபிவழியாக இருக்கவேண்டும் 

இது அல்லாமல், யார் என்ன சொன்னாலும், அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் எடுபடாது. இதை மனதில் படிய வைத்துக்கொள்ளுங்கள்.
மற்ற மதங்கள் போல் கலப்படம் செய்ய முடியாமல் போனதற்கு மேலே சொன்ன அடிப்படை அளவுகோல்கள் தான் காரணம். உலகம் அழியும் வரை எவராலும் இதை மாற்ற முடியாத அளவிற்கு இருப்பதால் தான் இஸ்லாம் தனித்து நிற்கின்றது.

//• அரபு தேசங்களை இஸ்லாமின் கீழ் ஒரே ஆட்சிக்கு அடிகோலிய ஹசரத் முகம்மது அவர்கள், “பசுவின் பால் ஒரு மருந்து; அதன் நெய் அமிர்தம்; அதன் மாமிசம் ஒரு நோய்”// 


மேலே சொல்லப்பட்ட ஹதீத், " முலய்காஹ் பின்த் உமர்"   என்பவரின் மூலமாக அறிவிக்கப்பட்டதாக அல்-பாகவி  என்ற புத்தகத்திலும், இப்னு மசூத் அவர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டதாக (Mustadrak al-Hakim) முஷ்ததர்க் அல்-ஹகீம் என்ற புத்தகத்திலும் இடம்பெற்றத்தாக ஷேய்க் ரியாத் அல்-,முசைமிரி அறிவிக்கின்றார்கள். இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீத் என்பது பெரும்பான்மையான அறிஞ்சர்களின் கருத்து. மேலும் இன்னும் பல ஆதாரபூர்வமான ஹதீத்கள் இதை மறுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

எதை உண்ணக்கூடாது?
 நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மை யானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின்,  அவனுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
  •  (தானாகச்) செத்த பிராணி, 
  •   உதிரம், 
  •   பன்றியிறைச்சி, 
  •   அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்ட பிராணி 
ஆகியவற்றையே உங்களுக்கு அல்லாஹ் தடைசெய்துள்ளான். ஆயினும், எவரேனும் விருப்பமில்லாமலும் வரம்பு மீறாமலும் (உண்ண) நிர்ப்பந்திக்கப் பட்டால், அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. (2:172, 173) 
"... ஆனால், உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமை யினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (விலக்கப் பட்டவற்றைப் புசித்து)விட்டால் (அது குற்றமாகாது)" (5:3). 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள். (புஹாரி  3914).


நபி (ஸல்) அவர்கள் மாட்டை குர்பானி கொடுத்தார்கள்:

"...இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தம் துணைவியருக்காக மாடுகளை அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள்' ...." (புஹாரி  5559).
இதிலிருந்து இஸ்லாத்தில் மாட்டிறைச்சியை தடை செய்யப்பட வில்லை என்று தெளிவாக தெரிகிண்றது.


பிற  உயிரினங்களிடம் கருணை காட்டுதல்::

இஸ்லாம் எந்த நிலையிலும், எந்த ஒரு உயிரினத்தையும் துன்புறுத்தக்கூடாது என்றும், உணவுக்காக கொல்ல நேரும்போது கூட, கடுமையான  வழிமுறைகளை வைத்துள்ளது .

"'ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி 174)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒரு பூனையை, அது சாகும்வரை சிறைவைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்துவைத்தபோது, அவள் அதற்கு உண்பதற்கும் கொடுக்கவில்லை; பருகுவதற்கும் கொடுக்கவில்லை;பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதனால் அவள் நரகத்தில் நுழைந்தாள். ((புஹாரி 4514)

நான் இரண்டு விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே,கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும். (புஹாரி 3955)




Tuesday, April 28, 2015

Darwin-னின் பரிணாமக் கொள்கைக்கு அறிவியல் அடிக்கும் ஆப்பு!

பகுத்தறிவாள நாத்தீகர்களிடம் நீங்கள் விவாதத்தில் ஈடுபட்டிருக்கும்போது அவர்கள் பகுத்தறிவிற்கு ஆதரவாக எப்பொழுதும் கீழ் வரும் விசயங்களைத் தவராமல் பட்டியலிடுவார்கள். 
அறிவியல் மனித சமூகம் சந்தித்த கொள்ளை நோய்களை இல்லாமல் ஆக்கிவிட்டது, மனிதர்களின் வாழ்வை எளிமையாக்கிவிட்டது, கடுமையான நோய்களுக்கும் மருந்து கண்டுவிட்டது, மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திவிட்டது, மனிதர்களின் இறப்பு விகிதத்தை குறைத்துவிட்டது, மனிதனின் ஆயுளை அதிகரித்துவிட்டது.

இப்படியாகப்பட்ட நாத்தீகர்களின் அறிவியல் குறித்த புளித்த விளக்கங்களைக் கேட்டு உங்களுடைய காதுகளுக்கு மந்தத் தன்மை வந்திருந்தால் நிச்சயம் நீங்கள் படித்தே ஆகவேண்டியக் கட்டுரை இது. யாம் ஏற்கனவே பகுத்தறிவாள நாத்தீகர்கள் பிடித்துக்கொண்டு அழும் டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு பின்னால் இருக்கும் அரசியலைக் குறித்து இந்த தளத்தில் ஒரு கட்டுரைத் தொடரை எழுதிவிட்டமையால் மீண்டும் ஒருமுறை டார்வினின் பரிணாமக் கொள்கை தவறு என்று நிருபிக்கப்போவதில்லை.
மாறாக பகுத்தறிவாள நாத்தீகர்களின் சாப விமோசனமான அறிவியல் எப்படி டார்வினின் பரிணாமக் கொள்கைக்கு ஆப்பு அடிக்கிறது என்பதையே இந்தக் கட்டுரையில் சொல்லப் போகிறோம். Harvard பல்கலைக் கழகத்தின் Evolutionary Biologist Daniel Liberman, Dysevolution என்கிற வார்த்தையை முன்வைத்திருக்கிறார். அவர் தனது புத்தகமான The Story of the Human Body Evolution, Health, and Disease-ல் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் எத்தகைய தாக்கத்தை நம்முடைய மரபணுக்களில் உண்டாக்குகின்றன என்பதைப் பற்றி விளக்கமா பேசியிருக்கிறார்.
Homo Sapien-களுக்கு இருந்த உடல் ஆரோக்கியத்தை, தற்காலத்தில் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் இருக்கும் நம்முடைய உடல் ஆரோக்கியம் ஏணி வைத்துக்கொண்டு முக்கி முக்கி எட்டினாலும் எட்டிவிட முடியாது என்கிறார். விவசாயம் கண்டுபிடிக்கப்பட்ட 10,000 வருடங்களுக்கு முன்பே மனிதனின் மரபணுவிற்கானத் தீவினை தொடங்கிவிட்டது என்கிறார். அப்படி கொஞ்சமாக இருந்த தீவினையை தொழில் புரட்சி காலகட்டத்தின் அறிவியல் கடந்த 250 ஆண்டுகளில் மிகவும் தீவிரப் படுத்திவிட்டது என்பதை ஆதாரப் பூர்வமாக விளக்குகிறார்.
இதற்கு Liberman துணையாக கொள்வது Mismatch Hypothesis Evolution கொள்கையை. Mismatch Hypothesis Evolution கொள்கையைப் பற்றி எளிதாக விளக்குவதென்றால், பரிணாமக் கொள்கையின் படி நம்முடைய மரபணுக்கள் நம்முடைய சுற்றுச் சூழலின் இயல்பை ஆமை வேகத்தில் உள்வாங்கி கொண்டிருக்கிறது. இங்கே ஆமை வேகம் என்பது பல லட்ச கணக்கான வருடங்கள். இப்படிப் பல லட்சக் கணக்கான வருடங்களாக நமது மரபணுக்கள் புறச் சூழ்நிலைக்கு ஏற்ப நமது உடம்பு தகவமைப்பதை நமது இயல்புகளில், பழக்கங்களில் ஒன்றாகப் பதிவுச் செய்து வருகிறது.
அப்படி 2,00,000 வருடங்களுக்கு முன்பு விவசாயம் கண்டுபிடிக்கப்படாத வேட்டை நாகரீகத்திற்கு பழக்கப்பட்டுவிட்ட நமது முன்னோர்களான Homo Sapien-களின் மரபணு, Homo Sapien-களின் உணவு, உடை, ஓய்வு, தொழில் ஆகியவற்றின் பண்புகளைத் தன்னுடைய DNA கேந்திரங்களில் சேமித்து வந்திருக்கிறது. Homo Sapien-களின் உணவு, உடை, ஓய்வு, தொழில் ஆகியவையும் இயற்க்கையைச் சார்ந்தே இருந்திருக்கிறது.

ஆனால் 10,000 வருடங்களுக்கு முன்புத் தீடிரென்று விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டதும் Homo Sapien-களின் உணவு, உடை, ஓய்வு, தொழில் ஆகிய பழக்கவழக்கங்களும் தேவைகளும் மாற்றமடைகின்றன. அப்படியே புறச் சூழ்நிலைகளும் விவசாயத்திற்கு ஏற்ப மாற்றம் அடைகிறது.
அதேசமயத்தில் ஆமை வேகத்தில் (லட்சம் ஆண்டுகள்) புற சூழ்நிலைக்கு தகவமைக்கும் மரபணு, Homo Sapien-களின் தீடிரென்ற விவசாயக் கண்டுபிடிப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறது. இந்த திணறலின் விளைவு மரபணுவின் malfunction. இந்த malfunction காரணமாக வேட்டை நாகரீகத்தில் Homo Sapien-கள் அறிந்திராத நோய்கள் எல்லாம் விவசாயம் கண்டுபிடிக்கப்பட்டப் பிறகான காலகட்டத்தில் Homo Sapien-களுக்கு உண்டாகிறது. Mismatch Hypothesis Evolution கொள்கை.
விவசாய நாகரீகம் மக்களை ஒரிடத்தில் கூடி வாழும் வாழ்க்கை முறைக்கு அழைத்துச் சென்றது. இது நகரமயமாக்கலுக்கு வழி வகுத்தது. இந்த நகரமயமாதல் கழிவுகளை உண்டாக்கி அதன் வழி புதுப் புது கிருமிகளை உண்டாக்கியது. இந்த செயல்பாடுகள் புறச் சூழலில் அதிவேகமாக நடந்தேருகிறது அதாவது ஒரு சில ஆயிரம் ஆண்டுகளில். ஆனால் மரிணாமக் கொள்கைப் படி ஆமை வேகத்தில் அதாவது பல லட்சம் ஆண்டுகளில் புறச் சூழலுக்கு ஏற்பத் தன்னை தகவமைக்கும் மனிதனின் மரபணு இந்த தீடீர் பாய்ச்சலான நகரமயமாதலை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகிறது.
விளைவு நகரமயமாதலின் காரணமாகத் தோன்றிய புதுப் புத கிருமிகள் பிளேக், காலரா, மலேரியா, எய்ட்ஸ் போன்றக் கொள்ளை நோய்களை உண்டாக்க இந்த நோய்களுக்கு எதிராகத் தன்னை தகவமைத்து பாதுகாத்துக்கொள்ள முடியாத மனிதனின் மரபணு அந்த கிருமிகளுக்கு பலியாகி மனித உயிர் இழப்புகளை உண்டாக்கிவிட்டது.
ஆனால் பகுத்தறிவாள நாத்தீகர்கள் நமக்கு கடா வெட்டி பொங்கல் வைத்து காது குத்திக் கொடுக்கும் விளக்கம் என்னமோ மதம்தான் பிளேக், காலரா, மலேரியா, எய்ட்ஸ் போன்றக் கொள்ளை நோய்களை மூடநம்பிக்கையாக கட்டமைத்து மனிதர்களை ஏமாற்றியதாகவும் அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்துதான் எல்லாவற்றையும் ஒழித்ததாகவும். ஆனால் Mismatch Hypothesis Evolution கொள்கையின் படி விவசாயம் என்கிறக் கண்டுபிடிப்புதானே பிளேக், காலரா, மலேரியா, எய்ட்ஸ் போன்றக் கொள்ளை நோய்களுக்கு காரணமாகிப்போனது.
ஒரே கண்டுபிடிப்பான விவசாயத்திற்கே மனிதனின் மரபணு பழக்கம் பொருந்திவராமல் திணறி நோய்களை உண்டாக்குமானால் இன்றைய நிலையை நீங்களே நினைத்துப் பாருங்கள். தூங்கி கண் விழித்தால் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு. புறச் சூழலில் நிகழும் இந்த படுவேகமான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மனிதனின் மரபணு திணறிக்கொண்டிருக்கிறது. அந்த திணறலின் வெளிப்பாடு இன்றைய நோய்கள்.
பரிணாமக் கொள்கை முன்வைக்கும் மரபணுவின் Natural Selection புறச் சூழலில் நடந்தேரும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி mismatch-ஆகி தொடர்ச்சியாக நோய்களை உண்டாக்குகிறது. இன்றைய அறிவியல் நோய்களுக்கு தான் மருந்து கண்டுவிட்டதாகச் சொன்னாலும் தான் கண்டுபிடிக்கும் மருந்துகள் நோய்களை இல்லாமல் ஆக்காது என்றும் தன் வாலை கால்களுக்கு இடுக்கில் சுருட்டிக்கொண்டு விளக்கமும் தருகிறது.
அறிவியல் இன்று மனித வாழ்வை எளிமையாக்கிவிட்டதாகவும் அர்த்த முள்ளதாக்கிவிட்டதாகவும் மார்த்தட்டிக்கொள்ளும் அதே வேலையில் டார்வீனின் மரிணாமக் கொள்கைப் படி தோற்றுக்கொண்டருக்கிறது. டார்வீனின் மரிணாமக் கொள்கையின் சாராம்சமான Natural Selection படி இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித வாழ்வை பேராபத்திற்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன.
Darwin-னின் பரிணாமக் கொள்கைக்கு அறிவியல் அடிக்கும் இந்த ஆப்பு குறித்து பகுத்தறிவாள நாத்தீகர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்.
-Thanks to : David Praveen -

எதிர் தொடர் 12: இஸ்லாம் எந்த வகையான ஒழுக்க நெறிகளை போதிக்கிறது

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

எதிர்தொடர் 12:இஸ்லாம் எந்த வகையான ஒழுக்கநெறியை போதிக்கிறது
      இந்த கட்டுரையில் ஒரு சேர பல குற்றச்சாட்டுகளை கட்டுரையாளர் அடுக்கியுள்ளார்.[refer:Source] அடிமை முறை குறித்து முன் சென்ற கட்டுரையில் தெளிவாக கண்டுவிட்டோம். அவரது அறியாமை இந்த தொடரிலும் பல்லிளிக்கிறது. இந்த தொடரில் அவரது அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரப்பூர்வமான சான்றுகளைக் கொண்டு பதிலளித்துள்ளோம்.

குற்றச்சாட்டு 1:


நமது பதில்:
உமர்(ரலி) அவர்களை கண்டு விருண்டோடும் ஷைத்தான்கள்:
            இந்த தொடரில் உமர்(ரலி) அவர்களின் நச்சரிப்பால்தான் பர்தா வந்ததாக உளரியுள்ளார். அது தவறு என்பதை சென்ற தொடர்களில்( எதிர் தொடர் 10) விளக்கியுள்ளோம். அது போகட்டும் இந்த தொடரில் உமர்(ரலி) அவர்களின் ஒழுக்கத்தை எடை போட முற்பட்டுள்ளார். அவர் பதிவு செய்த ஆதாரம் இதோ, 

أخبرنا محمد بن عمر أخبرنا سيف بن سليمان عن قيس مولى بن علقمة عن داود بن أبي عاصم الثقفي عن سعيد بن المسيب قال خرج عمر بن الخطاب على أصحابه يوما فقال أفتوني في شيء صنعته اليوم فقالوا ما هو يا أمير المؤمنين قال مرت جارية لي فأعجبتني فوقعت عليها وأنا صائم قال فعظم عليه القوم وعلي ساكت فقال ما تقول يا بن أبي طالب فقال جئت حلالا ويوما مكان يوم فقال أنت خيرهم فتوى

இதன் அறிவிப்பாளர் தொடர்:
Qays bin Sa'd al-Mky-->Syf bin Sulaiman(death 150 ah)-->Muhammad ibn Umar al-Waqidi(birth 130 ah)-->Muhammad ibn Sa'd ibn Mani' al-Hashimi al-Baghdadi(ibn sa'd)

    இப்னு சஅத் அவர்கள் முஹம்மது இப்னு உமர் அல் வாகிதி என்பாரிடம் செவியேற்றதாக இந்த செய்தியை பதிவு செய்துள்ளார். ஆனால் இவர் பொய்யர் என்று பல அறிஞ்கர்களால் சாடப்பட்டவர். நவவீ , தாரகுத்னீ இவரை பலவீனமானவர் என்றும், ஷாஃபிஹ், அஹமது இப்னு ஹம்பல், புஹாரி,நஸயீ ஆகியோர் வாகிதியை பொய்யர் என்றும் ஹதீஸ்களில் இட்டுகட்டுபவர் என்றும் கூறுகின்றனர். ஆக இவர் கூறும் இந்த செய்தி பலவீனமானதாகும். ஏற்கத்தக்கது அல்ல. இந்த ஆசிரியர் சரியான செய்திகளில் இருந்து எந்த குற்றச்சாட்டையும் கூற முடியாத காரணத்தால்தான் இத்தகைய இட்டுகட்டபட்ட செய்திகளின் பக்கம் ஓடிகொண்டிருக்கிறார். தனது ஹதீஸ் குறித்த அறிமுகத்தில் இவர் கூறியது எதையுமே இவர் ஏற்று கொள்ள வில்லை. அல்லது செயல் படுத்தவில்லை என்பது தெளிவு..

குற்றச்சாட்டு 2: முஸ்லிம்கள் அடிமைகளுக்கு காயடித்தனரா?

நமது பதில்:
அடிமைகளை சேதப்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?
நபி(சல்) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:
      தனது அடிமையை கொலை செய்தவரை நாமும் கொலை செய்வோம் சேதப்படுத்தியவரை நாமும் சேதப்படுத்துவோம்.யார் காயடித்தாரோ அவருக்கு நாம் காயடிப்போம்.
அறிவிப்பாளர்: சமுரா பின் ஜுன்துப்(ரலி)
நூல்: நஸயீ(4740), இப்னு மாஜா(2663)

  இஸ்லாம அடிமைகளை இவ்வாறு சேதப்படுத்துவதையும் காயடிப்பதையும் இஸ்லாம் தடை செய்து உள்ளது எனபதை மேற்குறிப்பிட்ட அறிவிப்பு கூறுகிறது. அப்படி இருக்கும் போது இவர் கூறும் குற்றச்சாட்டுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் இவர் முன் சென்ற கட்டுரையில் ஒரு குற்றச்சாட்டை பதிந்து உள்ளார். அதாவது அடிமைகளை உற்பத்தி செய்வதற்குதான் இஸ்லாம் அடிமை முறையை ஆதரித்ததாக கூறினார்.( தொடர் 11: வன் கலவியும் வேதவெளிப்பாடும்) அடிமைகளை உற்பத்தி செய்வது நோக்கமாக இருந்தால் ஏன் அடிமைகளுக்கு காயடிக்க வேண்டும் . ஏன் இவரது ஒவ்வோறு தொடரும் இவரது குற்றச்சாட்டை இவரே மறுப்பதாக அமைந்துள்ளது என்பதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்

அடிமைகளுக்கு காயடித்த பாதிரிகள்:
                ஆனால் இவ்வாறு காயடிக்கப்படாவிட்டால் ஏன் அடிமைகள் பெருக வில்லை. என்பதற்கான விடையை நாம் வரலாற்றில் தேடுவோம். இது குறித்து ஆய்வு செய்த இஸ்ரேலிய அறிஞர் EHUD TOLEDANO பின்வருமாறு கூறுகிறார்

P.No.383 
        அதாவது 19ம் நூற்றாண்டு வரை காயடிக்கும் பழக்கத்திற்கான சான்றுகளை உஸ்மானிய பேரசுகளில் காணமுடியவில்லை என்று கூறுகிறார். பிறகு எப்படி காயடிக்கப்பட்ட அடிமைகள் உள்ளே கொண்டுவரப்பட்டனர். அதற்கான காரணத்தையும் அவர் விளக்குகிறார்.
THE IMPERIAL EUNUCHS OF ISTANBUL FROM AFRICA TO THE HEART OF ISLAM-P.No.383 

      அதாவது கிறித்தவ பகுதிகளில் கிறித்தவ பாதிரிகளால் காயடிக்கப்பட்டு இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் UNESCO வின் International  Scientific Committee for Drafting of a Genaral History of Africa வெளியிட்டுள்ள ஆப்ரிக்க வரலாற்று நூல் 16ம் பக்கத்தின் அடிக்குறிப்பு பின்வருமாறு கூறுகிறது.


           அதாவது Reinhard Dozy என்ற பிரஞ்சு அறிஞர் ஐரோப்பாவின் வெர்டுன் நகரைஅரவாணி தொழிற்சாலைஎன்று கூறுவதாக அந்த நூல் சாடுகிறது. ஆக இஸ்லாமியர்கள் இப்படி ஒரு அநீதியை இழைக்கவில்லை என்பது தெள்ளத்தெளிவு.

       ஆனால் இதற்கு பின்னால் ஒரு சூழ்ச்சி ஒளிந்து உள்ளது. கிறித்தவ சாம்ராஜ்ஜியத்தில் அடிமைகளை இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தில் விற்பதற்கு தடை பலமுறை கிறித்தவ போப்புகளால் விதிக்கப்பட்டது ( 1317, 1323, 1329, 1338,  1425 ). இது தடை செய்யப்பட்டதற்கான காரணம் இவ்வாறு விற்கப்படும் அடிமைகள் இஸ்லாமியர்களின் போர்படைகளில் இணைக்கப்பட்டனர். அந்த அடிமைகள் பிற்காலத்தில் விடுதலை அடைந்த்தோடு அல்லாமல் அவர்கள் தங்களது முன்னால் எஜமானர்களை போர்களில் வீரியமாக எதிர்த்தனர் என்ற கவலைதானாம்.( Slavery, Slave Trade. ed. Strayer, Joseph R. Dictionary of the Middle Ages. Volume 11. New York: Scribner, 1982) உன்மையில் முஸ்லிம்கள் அடிமைகளை துன்புறுத்தியிருந்தால் ஏன் தங்களது முன்னால் எஜமானர்களை வீரியத்துடன் எதிர்க வேண்டும். சரி இதன் பின்னணியில் உள்ளதை நாம் தொடர்வோம். பலமுறை போப் அடிமை முறையை தடை செய்தும் ஏன் அரவாணி உற்பத்தி நிலையங்கள் வெனிஸ் நகரத்திலேயே செயல்பட்டது. (Mary A. Valante, Castrating Monks: Vikings, the Slave Trade, and the Value of Eunuchs, in 'Castration and Culture in the Middle Ages' ed. Larissa Tracy). கிறித்தவ போப் அடிமைகளை விற்பதை தடை செய்ய காரணம அவர்கள் முஸ்லிம்களால் போர்விரர்களாக ஆகப்பட்டதுதான் என்று முன்பே குறிப்பிட்டோம். இது தான் அந்த அடிமைகளுக்கு காயடிக்கவும் காரணம். அவர்களை ஆண்மை நீக்கம் செய்வதால் பேடிகளாக்கலாம், போர்படையின் எண்ணிக்கையை கட்டுபடுத்தலாம், என்ற கிறித்தவ உலகின் எண்ணத்தில் இஸ்லாமிய அரசுகள் மண்ணைவாரி இறைத்தது. ஆம் இவ்வாறு ஆன்மைநீக்கம் செய்யப்பட்ட ஆண்களை போர்வீரர்களாக்க இஸ்லாமிய அரசுகளால் PALACE SCHOOLல் அரச பிள்ளைகளுடன் பயிற்றுவிக்கப்பட்டு ஈட்டி வீர்ர்களாகவும் , மெய்காப்பாளராகவும் மாற்றப்பட்ட்தாக வரலாற்று அவனங்கள் பதிவு செய்துள்ளன. நாத்திகர்கள் இஸ்லாமியர்களின் சாதனைகளை என்றும் வெளிகூறமாட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று. கிறித்தவதிற்கு என்றுமே ஓத்தூதும் கயவர்கள்தான் நாத்திகர்கள் என்பது தெள்ளத் தெளிவு.

குற்றச்சாட்டு 3:


நமது பதில்:
      கற்பழிப்பிற்கு தண்டனை இல்லை என்பது பொய் என்பதை முன்பே விளக்கியுள்ளோம். எங்கே இஸ்லாம் குறித்து மக்கள் விழிப்படைந்துகொள்வார்களோ என்ற கள்ளத்தனம்தான் மேற்குறிப்பட்ட விமர்சனத்தில் காணப்படுகிறது.

குற்றச்சாட்டு 4:

நமது பதில்:
      முதலில் அந்த ஹதீஸை இவர் முழுமையாக படிக்க வில்லை. இந்த குறிப்பிட்ட ஹதீஸ் முழுமையாக முழுவிவரத்துடன் புஹாரியிலேயே இடம் பெற்றுள்ளது.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
      ஒருவர் தமக்குச் சொந்தமான அடிமை தம் மரணத்திற்குப் பின் விடுதலையாவார் என்று கூறியிருந்தார். அம்மனிதருக்குப் பொருள் தேவை ஏற்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையைப் பெற்று, 'இவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்பவர் யார்?' என்று கேட்டார்கள். அவரை நுஅய்கி இப்னு அப்தில்லாஹ்(ரலி) இன்ன விலைக்கு வாங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள், அவரிடம் அந்த அடிமையைக் கொடுத்தார்கள்.
புஹாரி  2141. 

         மரணத்திற்கு பிறகு விடுவிப்பதாக அறிவிப்பு செய்தவருக்கு சிக்கல் ஏற்பட்ட போது அந்த அடிமையை பெற்று நபி(சல்) அவர்கள் விற்றதாகத்தான் உள்ளது. மேலும் மனிதன் இறந்த பிறகு அவன் விட்டுச்செல்லும் எதற்கும் சொந்தம் கொண்டாட முடியாது. அடிமையை விடுவிப்பவர் இறக்கும் முன்பு விடுவிப்பதுதான் சிறந்தது. இதோ பின் வரும் செய்தி அதை தெளிவாக உணர்த்துகிறது..

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
          ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆகி விட்டிருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
புஹாரி: 2748

குற்றச்சாட்டு 5:

நமது பதில்:
        இந்த செய்தியில் இடம்பெறும் வாசகம் என்ன கூறுகிறது. இறுதி வாசகம் மர்வான் தனது அடிமைப்பெண்ணின் கால்களை கண்டதற்காக தனது மகனை அந்த பெண்ணை நெருங்கக்கூடாது என்று தனது மகனுக்கு அறிவுறுத்தியதாக கூறி மர்வான் அவர்களின் குணத்தை சுட்டுகிறார். இத்தகைய ஒழுக்க விழுமியங்களைதான் இஸ்லாம் மக்களுக்கு போதித்தது. கச முசா செய்ய சொன்னதை அடிக்கொடிட்டு கச முசாக்களை தேடுபவருக்கு இது தெரிய வாய்ப்பில்லை. இந்த ஆசிரியரின் எண்ண ஓட்டம் எதுவோ அதுதான் அவரது கேள்விகளில் தெரிகிறது. (மேலும் அடிமைப்பெண்கள் தொடர்பான தெளிவிற்கு முன் சென்ற எதிர்தொடர் 11 காண்க. refer: source )

குற்றச்சாட்டு 6:

நமது பதில்:  
      முதலில் அல்மூத்ஆ திருமணம் குறித்து  இந்த ஆசிரியரின் போதிய தெளிவு இன்மையைதான் காட்டுகிறது. மூத்ஆ திருமணம் அல்லது தற்காலிக திருமணம் நபி(சல்) அவர்களது காலத்திற்கு முன்பே நடைமுறையில் இருந்த ஒன்று. இதை நபி(சல்) அவர்கள் முதலில் இக்கட்டான சுழலில் மட்டும் அனுமதித்து ஏனைய காலங்களில் தடை செய்கிறார்கள். இதுவே மாபெரும் சமுக மாற்றம் இல்லையா? என்றும் செய்யலாம் என்பதற்கும் இக்கட்டான சூழலில் மட்டும் செய்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இதை பின் வரும் அறிவிப்பு கூறுகிறது. 

உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
       (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அஸ் ஸுபைர் (ரலி) அவர்கள் (ஒரு நாள்) மக்காவில் (சொற்பொழிவாற்ற) எழுந்து நின்று, "அல்லாஹ், மக்களில் சிலருடைய கண்களைக் குருடாக்கியதைப் போன்று அவர்களின் உள்ளங்களையும் குருடாக்கிவிட்டான்;அவர்கள் "அல்முத்ஆ" திருமணம் (தற்போதும்) செல்லும் எனத் தீர்ப்பளிக்கின்றனர்" என்று கூறி, ஒரு மனிதரைச் சாடையாக விமர்சித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை அந்த மனிதர் அழைத்து, "நீர் ஒரு விவரமற்ற முரடர்; என் ஆயுளின் (அதிபதி) மீதாணையாக! பயபக்தியாளர்களின் தலைவர் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது) காலத்தில் "அல்முத்ஆ" திருமணம் நடைமுறையில் இருந்தது" என்று கூறினார். அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், "(அது அப்போதே மாற்றப்பட்டுவிட்டது என்பதை அறிந்து) உம்மை நீர் பக்குவப்படுத்திக்கொள்வீராக! (இந்த விவரம் தெரிந்த பின்பும்) அவ்வாறு நீர்("அல்முத்ஆ" திருமணம்) செய்தால், (அது விபசாரக் குற்றம் என்பதால்) உம்மைக் கல்லால் எறிந்து கொல்வேன்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
               என்னிடம் காலித் பின் அல்முஹாஜிர் பின் சைஃபில்லாஹ் (ரஹ்) அவர்கள், "நான் ஒரு மனிதருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது அவரிடம் ஒருவர் வந்து "அல் முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் குறித்துத் தீர்ப்புக் கேட்டார். அப்போது அந்த மனிதர் அதற்கு அனுமதியளித்தார். அப்போது (தீர்ப்பளித்த) அந்த மனிதரிடம் இப்னு அபீஅம்ரா அல்அன்சாரி (ரலி) அவர்கள், "நிதானி(த்துத் தீர்ப்பளி)ப்பீராக!" என்றார்கள். அதற்கு அவர், "அவ்வாறில்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! பயபக்தியாளர்களின் தலைவர் (நபி (ஸல்) அவர்களது) காலத்தில் அது ("அல்முத்ஆ" திருமணம்) நடைபெற்றது" என்று கூறினார்.
          அதற்கு இப்னு அபீஅம்ரா (ரலி) அவர்கள், "அல்முத்ஆ (தவணை முறைத்) திருமணம், இஸ்லாத்தின் ஆரம்பத்தில் நிர்ப்பந்தத்திற்குள்ளானவருக்கு மட்டும் செத்த பிராணி, இரத்தம், பன்றி இறைச்சி ஆகியவை அனுமதிக்கப்பட்டதைப் போன்று அனுமதிக்கப்பட்டிருந்தது. பிறகு அல்லாஹ் இந்த மார்க்கத்தை உறுதியாக்கியதும் அத்திருமணத்திற்குத் தடை விதித்துவிட்டான்" என்று கூறினார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: சப்ரா பின் மஅபத் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறினார்கள் என அவர்களுடைய புதல்வர் ரபீஉ பின் சப்ரா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு என்னிடம் தெரிவித்தார்கள்:
             நான் பனூ ஆமிர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இரு சிவப்புப் போர்வைகளைக் கொடுத்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் "அல்முத்ஆ" (தவணை முறைத்) திருமணம் செய்திருந்தேன். பின்னர், "அல்முத்ஆ" திருமணம் செய்யலாகாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்துவிட்டார்கள்.
தொடர்ந்து இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
              ரபீஉ பின் சப்ரா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது நான் அங்கு அமர்ந்திருந்தேன்.
முஸ்லிம் 2736.
        அல்மூத்ஆ குறித்து பெண்கள் கேட்டுஇருந்தால் என்னவாகிருக்கும் என்று கூறுகிறார். பெண்கள் கேட்காததற்கு ஒரு காரணம் உண்டு. அல்மூத்ஆ இதற்கு முன்பு என்றுமே நடைமுறையில் இருந்ததை, நபி(சல்) அவர்கள் இக்கட்டான சுழலில் மட்டும் என்று மாற்றும் போது அன்றைய பெண்களின் எண்ண ஓட்டம் எப்படி இருந்து இருக்கும் என்பதை வாசிப்பவரின் எண்ணத்திற்கு விடுகிறேன். பெண்கள் குறித்த கேவலமான எண்ண ஓட்டத்தைதான் இந்த கட்டுரையாளரின் கற்பனை நமக்கு காட்டுகிறது.
         அதாவது மக்கா வெற்றிக்கு பிறகும் படையெடுப்புகள் இருக்கத்தான் செய்தது. இன்னும் சொல்வதாக இருந்தால் நெடுந்தொலைவிற்கான படையெடுப்புகள் இதற்கு பிறகுதான நடைபெற்றது. மூத்ஆவின் தேவை அப்போதுதான். ஆனால் அப்பொழுது இத்தகைய திருமணம் தடை செய்யப்பட்டு விட்டது. முன் கூட்டியே நபி(சல்) அவர்கள் எப்படி தனது ஆசை நிறைவேறியதாக அறிந்து கொண்டார்கள்? தனது ஆசை இதுதான் என எங்கும் கூறியுள்ளார்களா? ஆக நபி(சல்) அவர்களுக்கு முன்னறிவிப்பு வந்தது என்பதை கட்டுரையாளர் ஏற்று கொள்கிறாரா? அடுத்ததாக சஹாபாக்களுக்காக இந்த வகையான முறையை கைகொண்டதாகவும் தனது ஆசையை அதன்மூலமாக நிறைவேற்றிகொண்டதாகவும் கூறுகிறார். போர் போன்று எந்த ஒரு காரணமும் இல்லாமல் என்றும் அனுபவிக்கும் ஒரு ( மூத்ஆ போன்ற ) சுகத்தை இஸ்லாத்தை ஏற்காமல் என்றும் நபிதோழர்கள் அனுபவித்து இருக்கலாம். ஏன் கல்லால் அடிவாங்கி, நட்டை துறந்து சென்று, பிறகு போரில் ரத்தம் சிந்தி பெறவேண்டும். இவரது எண்ண ஓட்டத்தின் அடிப்படையில் பார்த்தால் இஸ்லாம் எவ்வாறு மக்களிடம் சென்றிருக்கும். இத்தகைய லாஜிக்கான கேள்விகளுக்கு கதை ஆசிரியர் என்ன பதில் வைத்திருக்கிறார் ......
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்..........    




Thursday, April 23, 2015

அர்த்தமுள்ள கேள்வி -10 - நல்லதை அறிய அறிவு மட்டும் போதுமா? - மார்க்ஸ் வழி வந்த ரஷ்யாவே, மார்க்ஸை ஏன் ஓரம் கட்டியது?



கேள்வி : மனிதனின் அறிவு நல்லதை மட்டும் ஏவுமாதீயதையும் ஏவுமாகாரல்மார்க்ஸ் வாதிகள் 'மனிதனின் அறிவாற்றல் தான் எல்லாமேமற்ற எந்த நம்பிக்கையும் வீண்என்கிறார்கள்கல்லூரி மாணவிகள் இதைப் பற்றி அறிய பெரிதும் ஆவல்கொள்கிறார்கள்விளக்கவும்!

பதில் : மனிதனின் அறிவு மகத்தானது என்பதில் ஐயமில்லைபல விஷயங்களை அறிவுசரியாகவே கண்டு பிடித்து விடும்ஆயினும் சில விஷயங்களில் அறிவு தவறிழைத்துவிடுவதும் உண்டு.
பல விஷயங்களை அறிவு சரியாகக் கண்டு பிடித்து விட்டாலும் அறிவின் கண்டுபிடிப்பைக் காலில் போட்டு மிதித்து விட்டு வேறு வழியில் மனிதனை இழுத்துச் செல்லும்இன்னொரு ஆற்றல் மனிதனிடம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பது நன்மையாஎனக் கேட்டால் அதில் உள்ளகேடுகளை நம்மை விட விரிவாக அவர் விளக்குவார்அவரது அறிவு புகை பிடிப்பதைத்தவறு என்று தீர்ப்பளித்த பிறகும் ஏன் புகை பிடிக்கிறார்தவறு எனக் கண்டு பிடித்தவுடன்அதை அந்த மனிதனால் ஏன் விட முடியவில்லைஎனச் சிந்தித்தால் அறிவுக்குப் பெரியஆதிக்கம் ஏதுமில்லை என அறியலாம்.
திருடுபவன்மது அருந்துபவன்கொலை செய்பவன் என பல்வேறு தீமைகளில்மூழ்கியிருப்போர்க்கு அவை தீமைகள் என்று அவர்களின் அறிவுகள் உணர்த்துகின்றன.உணர்த்துவதைத் தவிர அவர்களது அறிவால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.செவிடன் காதில் ஊதிய சங்காக இதை மனிதன் 

எடுத்துக் கொள்கிறான்.

சர்வாதிகார நாட்டின் அதிபருக்கும்ஒரு பள்ளிக் கூட வாத்தியாருக்கும்  எவ்வளவு வித்தியாசம் இருக்கிறதோ அதை விட அதிக வித்தியாசம்  மனிதனின்
அறிவுக்கும் அவனை இயக்கும் மற்றொரு சக்திக்கும் இருக்கிறது.
பள்ளிக்கூட வாத்தியார் நல்லது கெட்டது இது எனச் சொல்லித் தருவார்அந்த வழியில்மாணவனை நடத்திச் செல்ல அவருக்கு ஆற்றல் இல்லைஒரு  
 சர்வாதிகாரி ஒருஉத்தரவின் மூலம் மனிதனை வழி நடத்திச் செல்வான்.

இந்த வகையில் அறிவு என்பது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாத 
பள்ளிக் கூடவாத்தியார் போன்ற பரிதாப நிலையில் உள்ளது.
எத்தனையோ விஷயங்கள் நன்மையானவை என்று மனிதனின் அறிவு 
கூறுகிறது.ஆயினும் அவற்றை அவன் செய்வதில்லைஅறிவு மூலம் நன்மையைக் கண்டு பிடிக்கமுடிந்ததே தவிர அவ்வழியில் மனிதனை வழி நடத்த 
முடியவில்லை.
காரல் மார்க்ஸுக்கு இது தெரியா விட்டாலும் நம் அனைவருக்கும் இது கண் 
கூடாகத்தெரிகிறதுநாமே கூட நமது அறிவை இப்படித் தான் நடத்துகிறோம்.


அறிவு சொல்லும் பாதையில் மனிதனை நடத்திச் செல்ல அவனை விட வலிமையானஒரு சக்தியை நம்ப வேண்டும்தவறுதீமை எனத் தெரிந்தவற்றை நாம் செய்தால்நம்மை ஒருவன் தண்டிப்பான் என்ற நம்பிக்கை மட்டுமே அறிவுக்கு மரியாதையைப்பெற்றுத் தரும்.
இது முதல் விஷயம்எல்லா விஷயத்திலும் நன்மையையும்தீமையையும் அறிவுகண்டு பிடித்து விடுகிறதா என்றால் இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.
இரண்டு அறிவாளிகள் ஒரு விஷயத்தை தீமை என்று முடிவு செய்வதில் மாறுபட்டகருத்துக் கொள்கின்றனர்இவர்களில் ஏதோ ஒருவரது அறிவு தவறான முடிவை அவருக்குக் காட்டியுள்ளதுபுதிய பொருளாதாரக் கொள்கை நன்மை பயப்பது எனவாதிடுவோரும்தீமை பயப்பது என வாதிடுவோரும் முட்டாள்கள் அல்லர்மாபெரும்மேதைகள் தான் முரண் பட்ட இவ்விரண்டு வாதங்களையும் முன் வைக்கின்றனர்.

இவ்விரண்டும் ஒரு சேர உண்மையாக இருக்க முடியாதுஏதோ ஒன்று தான் 
இதில்உண்மையாக இருக்க முடியும்அப்படியானால் ஒரு தரப்புடைய  
அத்தனைஅறிவாளிகளின் அறிவும் அவர்களுக்குச் சரியான முடிவைக் காட்ட வில்லை என்பது தெளிவு.
வட்டி ஒரு வன்கொடுமை என வாதிடும் காரல் மார்க்ஸும்வட்டி  ஒரு வணிகமே எனக்கூறுவோரும் அறிவாளிகள் தாம்முரண்பட்ட இவ்விரண்டில் எது சரியானது எனவைத்துக் கொண்டாலும் ஒரு சாரரின் அறிவு சரியானதைக் கண்டு பிடிக்கவில்லைஎன்பது உறுதி.

அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உடைய விஷயங்கள் ஆயிரமாயி 
ரம் உள்ளனஇதிலிருந்து மனித அறிவின் லட்சணத்தை அறிந்து கொள்ளலாம்
அறிவாற்றல் தான் எல்லாமே என்பது ஒரு மாயைமார்க்ஸ் வழி   வந்த ரஷ்யாவே மார்க்ஸை ஏன் ஓரம் ட்டியதுமார்க்ஸுக்குச் சரி   எனப்பட்டது அவர் வழிவந்தவர்களுக்கே தவறு எனப்பட்டது ஏன்

என்றெல்லாம் சிந்தித்தால் அறிவுமமதையிருந்து விடுபட்டுஆன்மீக  நெறியின் மூலம் மனிதன் தன்னைபக்குவப்படுத்துவதன் அவசியத்தை 
உணரலாம்.


பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து