பக்கங்கள் செல்ல

Friday, May 19, 2023

சமர்கண்ட் எழுத்துப்பிரதியும் இஸ்லாமோஃபோபுகளும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

        குர்ஆன் பாதுகாப்பு குறித்து அடுத்ததாக இஸ்லாமோஃபோபுகளும், கிறித்தவ மிசனரிகளும் முன்வைக்கும் வாதம் குர்ஆன் கையெழுத்து பிரதியான சமர்கண்ட் கையெழுத்து பிரதி அல்லது தாஸ்கண்ட் கையெழுத்து பிரதி குறித்ததாகும். இந்த சமர்கண்ட் மூலபிரதிகள் எப்படி இன்றைய குர்ஆனில் இருந்து மாறுபட்டுள்ளது என்பது குறித்த நீண்ட(???) பட்டியல் ஒன்றை ஆன்சரிங் இஸ்லாம் போன்ற வலைத்தளங்கள் வெளியிட்டு தங்களின் மே(ல்)தாவி தனத்தை காட்டியுள்ளனர். அதற்கான விளக்கத்தை இன் ஷா அல்லாஹ் காணவுள்ளோம்

 

சமர்கண்ட் எழுத்துப்பிரதி- ஒரு பார்வை

Ø  வரலாறு

            சமர்கண்ட் குர்ஆன் குறித்த ஆரம்பகால குறிப்புகள் 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மத்திய ஆசியாவில் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து வந்தவை. ஆசிய , ஆஃப்ரிக்கா நாடுகளின் பண்டைய தொல்பொருட்களையும், கையெழுத்து பிரதிகளையும், கலைபொருட்களையும் திருடியோ/ வாங்கியோ பெருஞ்செல்வத்திற்கு விற்பதில் ஐரோப்பாவில் பெரும் போட்டி நிகழ்ந்த காலம் அது. அன்றைய ஸார் ரஷ்யாவின் ஜெனரல் அலெக்சாண்டர் கே. அப்ரமோவ், தைமூரின் (1370-1405) நூலகத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேடலின் போது, இந்த குர்ஆனைப் பற்றி அறிந்து கொண்டார், அந்த நேரத்தில் அது சமர்கண்டில் உள்ள கோட்ஜா-அஹ்ரார் மசூதியில் பாதுகாக்கப்பட்டிருந்தது. அது குறித்து பின்வரும் கருத்துக்கள் அந்த பகுதியில் அலெக்சாண்டர் ஜெனரல் கே. அப்ரமோவ்- அவர்களிடம் கூறப்படுகிறது.
  • உள்ளூர் வாசிகளின் கதையின் படி இது உஸ்மான்ரலி) அவர்களது சொந்த குர்ஆன் பிரதி. அவர் அதை ஓதிகொண்டிருக்கும் நிலையிலேயே கொல்லப்பட்டார். அதில் அவரது இரத்தம் படிந்துள்ளது என்று கூறப்படுகிறது.
  • இந்த கையெழுத்து பிரதி, உஸ்மானிய சுல்தான் பாயஸீத்-I அவர்களால் கோட்ஜா உபைதுல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று அந்த பள்ளிவாசலின் இஸ்லாமிய அறிஞர்களால் கூறப்படுகிறது.
  • இந்த கையெழுத்து பிரதி தைமூரினால் சமர்கண்டிற்கு கொண்டுவரப்பட்டது என்று புகாராவின் அமீரால் உறுதிப்பட ரஷ்யர்களிடம் கூறப்படவே, ரஷ்ய ஜெனரல் அலெக்சாண்டர் கே. அப்ரமோவ் அந்த கையெழுத்து பிரதியை கைபற்றிக்கொண்டார்.
         இது 1869 ஆண்டு பீட்டர்ஸ்பர்க் அரச நூலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. 1917 வரை அது அங்கிருந்தது. 1917ல் பாஷ்கொர்டொஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பிறகு 1924ல் தாஸ்கண்டிற்கு வந்து சேர்ந்தது. ரஷ்யாவில் இருந்த காலப்பகுதியில் 1905ல் இது S. பிஸாரெவ் என்ற ரஷ்ய ஓரியண்டலிஸ்டால் பிரதி எடுக்கப்பட்டு சுமார் 50 பிரதிகள் உருவாக்கப்பட்டது. இன்று இந்த பிரதிகள்தான் சமர்கண்ட் குர்ஆனின் கையெழுத்து பிரதியாக காட்டப்படுகிறது.

Ø  உஸ்மான்(ரலி) அவர்கள் உருவாக்கிய மூலபிரதியா?????

         இந்த எழுத்துப்பிரதியின் காலக்கட்டத்தை ரேடியோ கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வு செய்ததில் இந்த எழுத்துப்பிரதியின் தோலானது கிபி 775 க்கும்- கிபி 995க்கும் இடைபட்ட காலத்தை சேர்ந்தது என்பதற்கு 95.4% வாய்ப்புள்ளது. எழுத்தின் வடிமானது எட்டாம் நூற்றாண்டின் இறுதி கால் பகுதிக்கு பிந்தையது. இது சரியாக ரேடியோ கார்பன் டேட்டிங் குறிப்பிடும் காலத்துடன் ஒத்தமைந்த காலமாகும்(1).

        எனவே சமர்கண்ட் எழுத்து பிரதி என்பது உஸ்மான்(ரலி) அவர்களது கையெழுத்து பிரதி அல்ல என்பது உறுதிபட தெரிகிறது. ஆனால் உஸ்மான்(ரலி) அவர்களது பிரதிகள் என்று கூறப்படுபவை அனைத்தும் ஒரே மூல பிரதியில் இருந்து பிரதி எடுக்கப்பட்டவை. உஸ்மான்(ரலி) அவர்களின் குர்ஆன் எழுத்துப்பிரதிகள் என்று கூறப்படும் ஆவணங்களின் வார்த்தை வடிவங்களை ஆய்வு செய்த மரிஜின் வான் பூட்டன் பின்வருமாறு கூறுகிறார்.


            அதாவது உஸ்மான்(ரலி) அவர்களது எழுத்துப்பிரதிகள் என்று கூறப்படும் குர்ஆன் எழுத்துப்பிரதிகளில், வார்த்தைகளின் நிலையான பிற்கால மறுஉருவாக்கம் எவ்வாறு சாத்தியமானது என்பதை “ ஒரே மூல எழுத்துப்பிரதியில் இருந்து பிரதி எடுக்கப்பட்டவை என்று அனுமானிப்பதின் மூலமே விளக்க முடியும்” என்று மரிஜின் வான் பூட்டன் கூறுகிறார்.

Ø  உண்மை பிரதியின் இன்றைய நிலை

        தற்காலத்தில் சமர்கண்ட் உண்மை எழுத்துப்பிரதியின் நிலை குறித்து அறிந்து கொள்வது நமது ஆய்விற்கு உதவியாக இருக்கும் என்பதால் அது குறித்து பார்ப்போம். சமர்கண்ட் உண்மை எழுத்துப்பிரதி இன்று தாஸ்கண்டின் ஹஜ்ரதி இமாம் பள்ளியின் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது குர்ஆன் 2ம் அத்தியாயத்தின் 7ம் வசனம் முதல் 43ம் அத்தியாயத்தின் 10ம் வசனம் வரை கொண்டுள்ளது. ஏனைய பகுதிகள் உலகின் பல பாகங்களில் உள்ளன. எங்கெங்கு இந்த மூலப்பைரதியின் பாகங்கள் உள்ளன என்ற பட்டியலை எலியோனூர் செல்லார்ட் என்ற அறிஞர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். கிட்டத்தட்ட 40 பகுதிகள் உலகின பல கலைபொருள் சந்தைகளிலும்,அதன் ஏலத்திலும் தனியார் தொகுப்புகளிலும் இருப்பதாக குறிபிட்டு பின்வரும் பட்டியலை தருகிறார்.


            பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் இவ்வாறு படையெடுப்பகளின் மூலமும், கொள்ளையிட்டு, கையாடல் செய்து கைபற்றிய குர்ஆன் பிரதிகளை ஏலம் விட்டு பெரும்வணிகத்தினை நடத்தி வருகின்றன. இதனை எகிப்து போன்ற நாடுகள் எதிர்த்து வருவது குறிப்பிடதக்கது.

Ø  ஓரியண்டலிஸ்ட் S. பிஸாரெவ் செய்த மோசடி

            ரஷ்யாவில் இந்த கையெழுத்துப்பிரதிகள் இருந்த காலப்பகுதியில், ஜார் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் 1905ல் S. பிஸாரெவ் என்ற ரஷ்ய ஓரியண்டலிஸ்டால் பிரதி எடுக்கப்பட்டு சுமார் 50 பிரதிகள் உருவாக்கப்பட்டது. இந்த பிஸாரெவ் குறித்து தெளிவான தகவல் ஏதும் இல்லை. இவர் குறித்து ரஷ்யாவின் அரசு நூலகத்தின் வலைத்தளம் பின்வருமாறு கூறுகிறது.
                From other documents we learn that the publication, one copy of which was valued at 500 rubles, was undertaken by "an assistant clerk of the Board of the People's Teachers' Pension Fund, who does not have a rank", "the head of the Museum of the Archaeological Institute" Vasily Uspensky and "St. Petersburg Merchant Semyon Pisarev". (Semyon Pisarev, contrary to some unknown opinion, was not an Arabist. The merchant of the second guild sold fabrics in his own shop on Staro-Nevsky Prospekt and at the same time took part in publishing activities under the auspices of the Archaeological Institute.)(3)
       இந்த கையெழுத்துப்பிரதிகளை பிரதி எடுப்பதற்கு முன்பு அரபு அறிஞர்???? அல்லாத பிஸாரெவ் ஒரு மோசடியான வேலையை மேற்கொண்டார். அதாவது மூலபிரதிகளில் தெளிவில்லாமல் இருக்கும் வார்த்தைகளை அவரே நிரப்பி எழுதினார். இதனால் பல பிழைகள் அவர் விரும்பியோ விரும்பாமலோ அதில் ஏற்பட்டது. வெளியில் சுழற்சியில் இருக்கும் எஞ்சிய பிரதிகளுடன் அதனை ஒப்பிட்டு பார்க்கையில் பின்வரும் வேறுபாடுகளை பிஸாரெவ்வினால் மாற்றப்பட்ட பிரதிகள் கொண்டிருப்பதாக எலியோனூர் செல்லார்ட் குறிப்பிடுகிறார்.
                These stylistic discrepancies between the dispersed leaves and Pisarev’s facsimile raise the possibility of an improvement during the writing process, as well as questions about the reliability of the facsimile. The degree to which the reinking of the leaves – which is not discernible in the facsimile – and the warping of the parchment may have affected the letters and causing fluctuations in the interlinear spacing. These questions can be answered only by physically inspecting the manuscript in Tashkent.( Elleonore Cellard,The Samarkhand Quran P.No.7)
                வெளிய பரவி இருக்கும் பிரதியின் பகுதிக்கும், பிஸாரெவின் பிரதிக்கும் இடையிலான இந்த ஸ்டைலிஸ்டிக் முரண்பாடுகள், எழுதும் போது ஏற்பட்ட மாற்றங்களுக்கான சாத்தியத்தையும், பிஸாரெவின் பிரதியின் உண்மை தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. எந்த அளவிற்கு இந்த பிரதி மறு மையிடப்பட்டுள்ளது என்றால்,- (அது (பிஸாரெவின்) பிரதியில் புலனாக வில்லை) பிரதிகளை மடிப்பதே அதிலுள்ள எழுத்துக்களை பாதித்து, இரண்டு வரிகளுக்கான இடைவெளியில் கூட மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேள்விகளுக்கான விடையை நிஜ மூலப்பிரதியை தாஸ்கண்டில் நேரிடையாக ஆய்வு செய்தே அறிய முடியும்.( Elleonore Cellard,The Samarkhand Quran P.No.7)
            அதாவது இரண்டு வரிகளுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியை கூட பாதிக்கும் அளவிற்கு குருட்டுத்தனமாக மறு மையிட்டுளார் பிஸாரெவ். இப்படி மறு மையிட்டுவிட்டு அதனை பிரதி எடுத்துள்ளார் பிஸாரெவ் என்ற அட்ரஸ் இல்லாத நபர் அதுதான் இன்றைய மிஸனரிகளின் குர்ஆன் பிரதிகள் குறித்த ஆய்வின் மையம்???????
        Another Russian orientalist S. Pissareff, went over the illegible parts in the original copy with ink trying to make it more legible before the facsimile edition was made in 1905  However, numerous unintentional mistakes were made in this attempt."( Al Mushaf al Sharif Attributed to Ali b. Abi Talib P.No.83 by Tayyar Altikulac)
        மற்றொரு ரஷ்ய ஓரியண்டலிஸ்ட் எஸ்.பிஸாரெவ், 1905ல் பிரதிகளை உருவாக்கும் முன்னர், நிஜ மூலபிரதியில் உள்ள தெரியாத பகுதியை, மையை கொண்டு தெரியும் படி செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும், இந்த முயற்சியில் எண்ணற்ற பிழைகள் ஏற்பட்டுள்ளன." ( Al Mushaf al Sharif Attributed to Ali b. Abi Talib P.No.83 by Tayyar Altikulac)

        இதே குற்றச்சாட்டை அன்றைய இஸ்லாமிய அறிஞர்களும் கூறியதாக ஆர்தர் ஜேஃப்ரீயும் குறிப்பிடுகிறார்.(THE ORTHOGRAPHY OF THE SAMARQAND CODEX by A. JEFFERY and I. MENDELSOHN P.No.3).

Ø  செபூனின் என்ற அறிஞரின் அறிக்கை

        1902 ஆம் ஆண்டு (அதாவது பிஸாரெவ் பிரதிகளில் கையாடல் செய்வதற்கு முன்பு) இந்த சமர்கண்ட் எழுத்துபிரதிகள், கெய்ரோவில் இருக்கும் பண்டைய எழுத்துப்பிரதியுடன் (Cairo, al-Maktaba al-Markaziyya li-l-Maḫṭūṭāt al-Islāmiyya: Great Qur'anic Codex) அனைத்து வகையிலும் ஒத்திருப்பதாக செபூனின் குறிப்பிடுகிறார். (14th volume of "Proceedings of the Eastern Branch of the Eastern Branch of the Imperial Russian Archaeological Society" )

        செபூனின் கூறியது போல நாம் பிஸாரெவின் பிரதிகளை , கெய்ரோவின் எழுத்து பிரதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அதற்கு மாற்றமாக அமைந்திருப்பதை காண முடிகிறது. நாம் செய்த இந்த ஒப்பீடு 1902 செபூனின் ஆய்வு செய்த போது இருந்த சமர்கண்ட் பிரதி பிஸாரெவ் என்ற அரைகுறை ஓரியண்டலிஸ்டினால் 1905ல் மாற்றப்பட்டுள்ளதை உறுதி செய்கிறது. சில எடுத்துக்காட்டுகள்.


Ø  ஆன்சரிங்க் இஸ்லாம் வலைதளத்தின் கூச்சலும் நமது பதிலும்

        இவ்வாறு ரீ இன்கிங்க் செய்து மாற்றப்பட்ட மூல பிரதியில் இருந்து எடுக்கப்பட்ட பிரதிகளைத்தான் இன்றைய இஸ்லாமோஃபோபுகள் எடுத்து வந்து இன்றைய குர்ஆனுடன் ஒப்பிட்டுக்கொண்டுள்ளனர். இதில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் அனைத்தும் பிஸாரெவ் வின் எழுத்தர் பிழைகள்தாம் என்பதை உறுதி படுத்த சமர்கண்ட் பிரதியின் ஒத்த காலத்தை உடைய ஏனைய பிரதிகளை இங்கு ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.











































            இப்படி அறியப்படாத மாறுபாடுகள் உள்ளதாக உளறித்திரியும் ஜே ஸ்மித் போன்ற அறைவேக்காடுகளுக்கு ஹைதம் சித்கீ என்ற ஆய்வாளரின் ஆய்வு முடிவுகள் சம்மட்டி அடியை கொடுத்துள்ளது. அனைத்து எழுத்துப்பிரதிகளில் எத்துனை சதவீதம் ஓதல் முறைகளுடன் ஒத்தமைந்துள்ளது என்பதை தனது “ON THE REGIONALITY OF QURʾĀNIC CODICES” என்ற ஆய்வில் விளக்கி பின்வரும் ஒப்பீடு அட்டவனையை வழங்கியுள்ளார்.


        அதாவது சமர்கண்ட் எழுத்துப்பிரதியின் ஓதல் என்பது 92% கூஃபாவினரின் ஓதலாகவும் மீதம் 8% சிரியாவினரின் ஓதலை கொண்டிருக்கிறது என்று கூறுகிறார். அரைவேக்காடு மிசனரிகள் உளறுவதுபோல் இருக்குமானால் சமர்கண்ட் எழுத்துப்பிரதி தனித்த ஓதல் முறை என்று கூறியிருப்பார்.

Ø  மேற்குறிபிட்ட குர்ஆன் பிரதிகளின் ஒப்பிட்டில் கிறித்தவ மிஸனரிகள் பின்வரும் தங்களது அறியாமையை வெளிபடுத்தியுள்ளனர்.

1.  கிறித்தவ மிசனரிகள் இந்த ஆய்வில் தவற விட்ட முதல் விஷயம் குர்ஆன் என்பது எழுத்து வடிவம் பெற்று அந்த பிரதிகள் பரவலாக்கப்படுவதற்கு முன்பே ஓசை வடிவில் பெரும் பகுதி முஸ்லிம்களால் மனனமிடப்பட்டிருந்தது என்பதைத்தான். எழுத்துப்பிரதிகள் என்றும் குர்ஆனின் மூல ஆதாரமாக இருந்ததில்லை. அது ஒரு துணைச்சாதனமே. உஸ்மான்(ரலி) அவர்களால் எழுத்துவடிவில் கொடுக்கப்பட்ட குர்ஆன் பெரும்பான்மை மக்களின் ஓதல் வடிவத்துடன் ஓத்திருந்ததாலேயே அது இன்றுவரை பெரும்பான்மை மக்களின் முத்தவாத்திரான கிராத் ஆக நிலை பெற்றுவிட்டது என்ற அடிப்படை விஷயத்தை மறந்துவிட்டனர். மேலும் இது குறித்த ஆய்வை முன்பே நாம் வழங்கியுள்ளோம்.

2. மொழியியல், எழுத்து வடிவங்கள் மற்றும் ஓசை மாற்றங்கள் குறித்த அடிப்படை அறிவே சமர்கண்ட் பிரதி குறித்த விமர்சனத்தை முன்வைத்தவரிடம் இல்லை என்பதை நிறுவியுள்ளனர். 3:147, 6:11, 6:39, 6:54, 6:68, 7:3, 7:9, 7:38, 7:40, 7:51, 7:58, 18:57, 20:42, 20:76, 27:5, 42:21, 42:25, 37:106, 41:31 ஆகிய 19 ஆயத்துக்களில் இவர்களின் குறிப்புக்களில், இவர்களின் எழுத்து வடிவ மாற்றம் மற்றும் ஒலிக்குறியீடு குறித்த அறியாமை பல்லிளிக்கிறது. நாம் அரபு எழுத்து மற்றும் ஓசை மாற்றம் குறித்த வரலாற்று தகவல்களை கிபி 10ம் நூற்றாண்டை சார்ந்த அபூ அம்ரு அல் தானீ அவர்களது அல் முக்னீ ஃபீ ரஸ்ம் மஸாஹிஃப் அல் அம்ஸார் என்ற நூலை கொண்டு நிறுவியுள்ளோம்.

3. சாதரணமாக எழுத்துப்பிரதிகள் காலத்தால் பாதிப்படைந்து சிதைவடையும் என்ற அடிப்படை அறிவு இல்லை. 2:170, 37:103-105, 27:3-4, 36:18 ஆகிய இடங்களில் இந்த அறியாமை பல்லிளிக்கிறது

4.  எழுத்தர் பிழைகளா? அல்லது மாறுபடுகளா(Variants)? என்பதை ஏனைய சமகால பிரதிகளை ஒப்பிட்டு அறியும் அறிவு அறவே இல்லை. எனவே தான் தனித்தனி எழுத்துப்பிரதிகளை எடுத்துகொண்டு அவை மாறுபட்ட குர்ஆன் என்று மக்களை நம்பவைக்க பெரும் முயற்சி எடுப்பது பல்லிளிக்கிறது.

Ø  மேற்குறிப்பிட்ட ஆய்வின் அடிப்படையில் பின்வரும் முடிவுகளை நாம் அடைகிறோம் 

1. சமர்கணட் மூல பிரதி என்பது உஸ்மான்(ரலி) அவர்களால் எழுதப்பட்டது அல்ல. மாறாக அந்த பிரதியில் இருந்து பிரதி எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்பதை மாரிஜின் வான் பூட்டன் அவர்களது முடிவின் மூலம் விளக்கியுள்ளோம்.

2. சமர்கண்ட் பிரதி எஸ்.பிஸாரெவ் என்ற அட்ரஸில்லாத ஓரியண்டலிஸ்டினால் மறு மையிடப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது என்பதை செபூனின், எலியோனூர் செல்லார்ட், தய்யார் ஆல்டிகுலாக் போன்ற ஆய்வாளர்களின் கூற்றை கொண்டு நிருவியுள்ளோம்.

3. மாற்றம் செய்த பிறகு எடுக்கப்பட்ட பிரதிகளின் அடிப்படையிலேயே இன்றைய கிறித்தவ மிசனரிகள் தங்களது உளறலை முன்வைத்துள்ளனர். ஏனைய சமகால/அதற்கு முந்தைய பிரதிகளை ஒப்பிட்டு அதனை நிறுவியுள்ளோம்.

4. எழுத்துப்பிழைகள், மாறுபாடுகள் என்று எந்த கையாடல் செய்தாலும், எது சரியான பிரதி என்பதை இன்றிருக்கும் ஓதல் முறைகளை கொண்டு பிரித்து அறியக்கூடிய வகையில் இருப்பதை இந்த ஆய்வு உறுதிபடுத்துகிறது.

5. “Literary Critcism” என்று என்ன முயன்றாலும், உண்மை குர்ஆனின் ஓதல் இன்றும் பாதுக்கப்பட்டுதான் இருக்கிறது என்பதனை இன்றிருக்கும் குர்ஆனின் எழுத்து வடிவங்களை, பண்டைய எழுத்துப்பிரதிகளுடன் ஒப்பிட்டு அறிய முடிகிறது. Keith E.Small போன்ற ஓரியண்டலிஸ்ட்களே இந்த விஷயத்தில் பண்டைய எழுத்துபிரதிகளின் சூராக்களில் இருப்பவையே இன்றிருக்கும் குர்ஆனின் சூராக்களில் இருப்பதாக ஒத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also, while there may have been a longer period of flexibility of the order of surahs in collected Qur’āns, it appears that the basic content of the surahs that are represented in early manuscripts is the same as what is observed today. (Textual Criticism and Quran Manuscripts by Keith Small P.No.174)
எழுத்துபிரதிகள் பரவலாவதற்கு முன்பு குர்ஆன் வேறுபட்டிருந்தது என்று ஓரியண்டலிஸ்ட்கள் முன்வைக்கும் ஹதீஸ்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களை, முன்சென்ற தொடர்களில் அந்த ஹதீஸ்கள் மற்றும் அந்த செய்திகளின் நிலையையும் விளக்கிவிட்டோம்.

    மேற்குறிபிட்ட ஆய்வின் மூலம் “நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.” என்ற அல்லாஹ்வின் வாக்கு உறுதியாகியுள்ளது. அல்லாஹூ அஃலம்

 Reference:

1. On the Dating of an “Uthmanic Quran” from St.Petersburg bt E.A.Rezvan
2. Van Putten “ ‘The Grace of God’ as Evidence for a Written’Uthmanic Archetype: The Importance of       Shared Orthographic Idiosncrasies” P.No.286