பக்கங்கள் செல்ல

Friday, October 30, 2020

உஸ்மான்(ரலி) அரசாணையும் இப்னு மஸ்ஊத்(ரலி) எதிர்ப்பும் ஏற்பும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு,இப்னு மஸ்ஊத்(ரலி),இப்னு மஸ்ஊத்(ரலி),குர்ஆன் குழு,உபை இப்னு கஅப்(ரலி),பிரதிகள் எரிப்பு,அலி(ரலி),

        உஸ்மான்(ரலி) அவர்கள், அவர்களால் நியமிக்கப்பட்ட குழுவினால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனை இஸ்லாமிய பேரரசின் பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார்கள். அதனோடு ஒரு கட்டளையும் பிறப்பித்தார்கள். அதாவது ஏனைய குர்ஆன் பிரதிகளை அழிக்க கட்டளை பிறப்பித்தார்கள். குர்ஆனை ஸைத் இப்னு ஸாபித்(ரலி) தொகுத்ததற்கும், ஏனைய குர்ஆன் பிரதிகளை பரிமுதல் செய்து எரிக்கவும் பிறபிக்கப்பட்ட கட்டளையை எதிர்த்தவர் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆவார்கள். இதற்கு இஸ்லாமோஃபோபுகள் வைக்கும் வாதங்களும் அதற்கான பதிலும்  இதோ. 

وَلِذَلِكَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ يَا أَهْلَ الْعِرَاقِ اكْتُمُوا الْمَصَاحِفَ الَّتِي عِنْدَكُمْ وَغُلُّوهَا فَإِنَّ اللَّهَ يَقُولُ وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ فَالْقُوا اللَّهَ بِالْمَصَاحِفِ قَالَ الزُّهْرِيُّ فَبَلَغَنِي أَنَّ ذَلِكَ كَرِهَهُ مِنْ مَقَالَةِ ابْنِ مَسْعُودٍ رِجَالٌ مِنْ أَفَاضِلِ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم

     மேலும் இது குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்கள்: இராக் மக்களே! உங்களிடம் இருக்கும் மஸாஹிஃப்களை மறைத்து வைத்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: "யார் மறைக்கிறாரோ அவர், தாம் மறைத்தவற்றுடன் மறுமை நாளில் வருவார், எனவே அல்லாஹ்வை உங்களது மஸாஃஹிப்களுடன் சந்தியுங்கள்” அல் ஜுஹ்ரி கூறியதாவது: “இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களது இந்த முடிவை தலைசிறந்த நபிதோழர்கள் சிலர் எதிர்த்ததாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது” (திர்மிதி 3104)
இஸ்லாமோ போஃபுகளின் குருட்டு வாதமும் நமது பதிலும்:

             மேற்குறிபிட்ட செய்தியை பதிவிட்டு மிசனரிகள் ஒரு நிகழவின் ஒரு பக்கத்தை மட்டுமே கூறுகின்றன. அதாவது

1. அதாவது ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் குர்ஆன் தொகுப்பினை இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் எதிர்த்தது அன்றைய மொத்த சமூகத்தின் எதிர்ப்பு. 

2. குர்ஆன் பிரதிகளை எரிப்பது என்பது உஸ்மான்(ரலி) இன் தனிப்பட்ட முடிவு. அதற்கும் சமூகத்திற்கு தொடர்பில்லை 

உஸ்மான்(ரலி) அமைத்த குர்ஆன் தொகுப்பு குழுவும் அதன் முடிவும்:

     உஸ்மான்(ரலி) குர்ஆனை தொகுக்க முடிவு செய்தபோது ஸைத் இப்னு சாபித்(ரலி) உட்பட நான்கு எழுத்தர்களையும் உள்ளடக்கிய பன்னிரண்டு பேர் கொண்ட குழுவினை அமைத்தார்கள்.
خْبَرَنَا عَارِمُ بْنُ الْفَضْلِ قَالَ: أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ وَهِشَامٍ عَنْ مُحَمَّدٍ بْنِ سِيرِينَ أَنَّ عُثْمَانَ جَمَعَ اثْنَيْ عَشَرَ رَجُلا مِنْ قُرَيْشٍ وَالأَنْصَارِ فِيهِمْ أُبَيُّ بْنُ كَعْبٍ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي جَمْعِ الْقُرْآنِ.

      இப்னு சீரின் கூறியதாவது:  உஸ்மான்(ரலி) குர்ஆனை தொகுக்க முடிவு செய்ததும் குரைஷி மற்றும் அன்சாரிகளில் இருந்து பன்னிரண்டு பேர் கொண்ட சபையை உருவாக்கினார்கள். அதில் உபை இப்னு காஃப் (ரலி) மற்றும் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) உள்ளடங்குவர்.(தபக்கத் இப்னு சாஃத் 3/381)

      உபை இப்னு கஆப்(ரலி) அவர்களும் அந்த குழுவில் இடம் பெற்றி ருந்தார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட குழுவிற்கு உஸ்மான்(ரலி) மேலும் ஒரு கட்டளையை பிறப்பித்தார்

أخبرنا أبو بكر محمد بن عبد الباقي أنا الحسن بن علي أنبأ أبو عمر بن حيوية أنا أحمد بن معروف نا الحسين بن الفهم نا محمد بن سعد قال وأنا محمد بن عمر حدثني هشيم عن المغيرة عن مجاهد أن عثمان أمر أبي بن كعب يملي ويكتب زيد بن ثابت ويعربه سعيد بن العاص وعبد الرحمن بن الحارث 
முஜாஹித்(ரஹ்) கூறியதாவது: 
உஸ்மான்(ரலி), உபை இப்னு காஃப்(ரலி) அவர்களை ஓதவும், அதை ஜைத் இப்னு தாபித்(ரலி) அவர்கள் எழுதவும் , அதை ஸயீத் இப்னு அல் ஆஸ்(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அல் ஹாரித்(ரலி) அவர்களை பிரதி எடுக்கவும் கட்டளை இட்டார்கள் (தாரிக் திமிஸ்க் 34/276:3779) 
      அதனால்தான் மேற்குறிப்பிட்ட செய்தியை ஒத்த செய்தியை அலி இப்னு அப்துல் மாலிக் தனது நூலான கன்சூல் உம்மாலில் பதிவிட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறார். 

عن عطاء أن عثمان بن عفان لما نسخ القرآن في المصاحف أرسل إلى أبي بن كعب، فكان يملي على زيد بن ثابت وزيد يكتب ومعه سعيد بن العاص يعربه، فهذا المصحف على قراءة أبي وزيد.
       அதாஃ அவர்கள் கூறியதாவது: உஸ்மான்(ரலி) குர்ஆனை தொகுத்த போது, உபை இப்னு கஅப்(ரலி)யை அழைத்து ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் ஓதிக்காண்பிக்கவும்,அதை ஸைத் இப்னு ஸாபித்(ரலி) எழுதவும் கட்டளை இட்டார்கள். அவருடன் ஸயீத் (ரலி) அவர்களும் அதை செய்தார்கள். அதனால் இந்த முஸ்ஹஃப் உபை மற்றும் கஅப் அவர்களது ஓதலில் அமைந்ததாகும் .(கன்சூல் உம்மால் 4789) 
     மேலும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் குறித்து நபி(சல்) அவர்கள் குறிப்பிடும் சில செய்திகள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது முக்கியத்துவம் குறித்து நாம் புரிந்து கொள்ள அவசியமாகும்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم” أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ وَأَشَدُّهُمْ فِي أَمْرِ اللَّهِ عُمَرُ وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ وَأَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ أُبَىُّ بْنُ كَعْبٍ وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ وَأَعْلَمُهُمْ بِالْحَلاَلِ وَالْحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ أَلاَ وَإِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا وَإِنَّ أَمِينَ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ “هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
அனஸ் பின் மாலிக்(ரலி) அறிவிப்பதாவது: 
    அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் கூறியதாவது: எனது சமூதாயத்தில் மிக்க கருணையுள்ளவர் அபூபகர் ஆவார். அல்லாஹ்வின் கட்டளைகளை கைகொள்வதில் மிக்க உறுதியானவர் உமர் ஆவார். உண்மையில் மிகுந்த அடக்கமுடையவர் உஸ்மான் இப்னு அஃபான் ஆவார். அவர்களில் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுவதில் தலைசிறந்தவர் உபை இப்னு கஅப் ஆவார். சொத்துரிமை சட்டங்களில் மிகுந்த அறிவுடையவர் ஸைத் இப்னு சாபித் ஆவார். ஹலால் ஹராம் ஆகியவற்றில் மிகுந்த அறிவுடையவர் முஆத் இப்னு ஜபல் ஆவார். ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு நம்பிக்கைக்கு உரியவர் இருப்பார், அதுபோல் இந்த சமூதாயத்தின் நம்பிக்கைக்கு உரியவர் அபூ உபைதா பின் ஜர்ராஹ் ஆவார் (திர்மிதி 3791) 
     குர்ஆனை தொகுக்க அமைக்கப்பட்ட குழுவில் குர்ஆன் குறித்து நன்கு அறிந்த, முழு குர்ஆனையும் அதன் இறுதி வடிவத்தையும் மனனமிட்ட ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும், குர்ஆனை நன்கு ஓதக்கூடிய உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடதக்கது. இவ்வாறு தொகுக்கப்பட்ட குர்ஆன் ஏனைய நபித்தொழர்களிடம் ஓதிக்காண்பிக்கப்பட்டு அனைத்து பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டதாக இப்னு கதீர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: 
وإنما كتبها زيد بن ثابت فى أيامه وغيره، فنسبت إلى عثمان؛ لأنها بأمره واشارته، ثم قُرِئَتْ على الصحابة بين يدى عثمان، ثم نفذت إلى الآفاق, رضى الله عنه.
         அல்லது அவர்களது காலத்தில் அவர்களது கட்டளையால் ஸைத் பின் ஸாபித் அவர்களால் எழுதப்பட்டதால் இது உஸ்மான்(ரலி) அவர்களது என்று அழைக்கப்படுகிறது. இது நபி தோழர்களிடம் உஸ்மான்(ரலி) முன்னிலையில் ஓதிக்காண்பிக்கப்பட்டு நாட்டின் எல்லைகளுக்கு அனுப்பப்பட்டது. அல்லாஹ் அவர்களை பொருந்திக்கொள்வானாக..(அல் ஃபதாயில் குர்ஆன் இப்னு கதீர் 1/89) 
     இவ்வாறு நபித்தோழர்களின் அங்கிகாரம் பெற்ற குர்ஆன் பிரதிதான் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டது. மேலும் முன் சென்ற தொடரில் உஸ்மான்(ரலி) அவர்களது தொகுப்பு, அர்தா அல் அஹீரா தான் என்ற சாட்சியம் பகிரும் சமூர(ரலி) அவர்களின் செய்தியையும் பார்த்தோம் என்பது குறிப்பிடதக்கது. 


      மேலும் இப்படி குர்ஆன் ஓதலில் தலைசிறந்தவர்கள் மற்றும் ஏனைய நபித்தோழர்களின் முடிவின் அடிப்படையில்தான் ஏனைய குர்ஆன் பிரதிகள் அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது:
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنِ الْعَيْزَارِ بْنِ جَرْوَلٍ، مِنْ رَهْطِ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، قَالَ: سَمِعْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ: " اللَّهَ اللَّهَ أَيُّهَا النَّاسُ، وَإِيَّاكُمْ وَالْغُلُوَّ فِي عُثْمَانَ وَقَوْلَكُمْ: حَرَّاقُ الْمَصَاحِفِ، فَوَاللَّهِ مَا حَرَقَهَا إِلَّا عَنْ مَلَأٍ مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ 
   சுவைத் இப்னு ஃகஃபாலா கூறியதாவது: “நான் அலி பின் அபிதாலிப்(ரலி) கூறுவதை செவியுற்றேன். “மக்களே! உஸ்மான்(ரலி) அவர்களின் மீது வரம்பு மீறுதல் குறித்தும் அவர்களை குர்ஆன் பிரதிகளை எறித்தவர் என்று கூறுவதில் இருந்தும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக முஹம்மது (சல்) அவர்களது தோழர்களின் சபையின் அறிவுரையின் பேரிலேயே அதை அவர்கள் எறித்தார்கள்.         (நூல்: தாரிக் மதினா அல் இப்னு ஸபாஹ் ஹதீஸ் எண் 1598, 3/996)

மேலும் அலி(ரலி) அவர்கள் கூறினார்கள்

حَدَّثَنا عَبْدُ اللَّهِ قَالَ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ النَّهْشَلِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، وَمُحَمَّدُ بْنُ أَبَانَ الْجُعْفِيُّ، كِلَاهُمَا عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ قَالَ شُعْبَةُ: عَمَّنْ سَمِعَ سُوَيْدَ بْنَ غَفَلَةَ يَقُولُ: سَمِعْتُ عَلِيًّا يَقُولُ: رَحِمَ اللَّهُ عُثْمَانَ، لَوْ وُلِّيتُهُ لَفَعَلْتُ مَا فَعَلَ فِي الْمَصَاحِفِ (وإسناده صحيح، كما قال الحافظ في " الفتح " ٩ / ١٦)
       அலி (ரலி) அவர்கள் கூறியதாவது : உஸ்மான்(ரலி) மீது அல்லாஹ் கருணை புரியட்டும். நான் உஸ்மான்(ரலி) அவர்களின் இடத்தில் இருந்திருந்தால் , குர்ஆன் பிரதிகளுக்கு உஸ்மான்(ரலி) செய்ததையே நானும் செய்திருப்பேன்.( அல் மஸாஹிஃப் இப்னு அபி தாவூத் 1/98)
         இஸ்லாமோஃபோபுகளின் இரண்டு வாதங்களும் மேற்குறிபிட்ட அலி(ரலி) அவர்களது கூற்றினால் தவிடு பொடி ஆவதை காணமுடிகிறது. 

இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் எதிர்ப்பும் ஏற்பும் 

      இப்னு மஸ்ஊத்(ரலி) ஆரம்பத்தில் கூஃபாவில் இருக்கும் காலங்களில் உஸ்மான்(ரலி அவர்களின் இந்த முடிவை எதிர்த்த போதும், பிற்காலத்தில் அதன் நியாயங்களை அறிந்து அதை சரி கண்டார்கள். மேலும் அவர்கள் மதீனாவிற்கு சென்ற பிறகும் பல தூதுக்குழுக்கள் அவர்களை சந்தித்து இது குறித்து தெளிவு பெற்று வந்தார்கள் என்பதை அறிய முடிகிறது
عَمْرُو بْنُ شُرَحْبِيلَ عن عبد الله بن مسعود أنه أتاه ناس من أهل الكوفة فقرأ عليهم السلام وأمرهم بتقوى الله عز وجل وأن لا يختلفوا في القرآن ولا يتنازعوا فيه فإنه لا يختلف ولا ينسى ولا ينفد لكثرة الرد
    அம்ர் இப்னு ஸுரஹ்பீல், இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிப்பதாக கூறுவதாவது : கூஃபாவில் இருந்து சிலர் அவரிடம் வந்தனர். அவர்களுக்கு சலாம் கூறிவிட்டு, அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! இந்த குர்ஆன் குறித்து வேறுபட கூடாது , அதனோடு மாறுபட கூடாது, ஏனென்றால் அது மாறுபடவோ மறக்கடிக்கவோ படாது, தொடர் எதிர்ப்பால் நீர்த்தும் போகாது , என்று அறிவுரை கூறினார்கள். (தப்ராணி அல் கபீர் 10076: 10/97, அல் மஜ்மு அல் ஜவாயித் 11582: 7/153 )

 حَدَّثَنَا إبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ ح وَحَدَّثَنَا فَهْدُ بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو غَسَّانَ مَالِكُ بْنُ إسْمَاعِيلَ النَّهْدِيُّ قَالَا: حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنِي الْوَلِيدُ بْنُ قَيْسٍ الْيَشْكَرِيُّ أَبُو هَمَّامٍ، عَنْ عُثْمَانَ بْنِ حَسَّانَ الْعَامِرِيِّ، عَنْ فُلْفُلَةَ الْجُعْفِيِّ قَالَ: " فَزِعْتُ فِيمَنْ فَزِعَ إلَى عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ فِي الْمَصَاحِفِ، فَدَخَلْنَا عَلَيْهِ، فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: إنَّا لَمْ نَأْتِكَ زَائِرِينَ؛ وَلَكِنَّا جِئْنَا حِينَ رَاعَنَا هَذَا الْخَبَرُ، قَالَ: " إنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى نَبِيِّكُمْ مِنْ سَبْعَةِ أَبْوَابٍ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، وَإِنَّ الْكِتَابَ كَانَ يَنْزِلُ أَوْ يُنْزَلُ مِنْ بَابٍ وَاحِدٍ عَلَى حَرْفٍ وَاحِدٍ " 

                           ஃபுல்ஃபுலா அல் ஜுஃபீ கூறியதாவது; “அல் மஸாஹிஃப்"  (உஸ்மான்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பு) குறித்து அறிந்து கொள்ள சென்றவர்களில் நானும் ஒருவர், நாங்கள் சென்ற போது எங்களில் ஒருவர் , “ நாங்கள் உங்களை சந்திக்க வந்திருப்பது , இது குறித்த செய்தி எங்களை அடைந்ததும் அதை பற்றி அறியவே என்று கூறினார். அதற்கு இப்னு மஸ்ஊத்(ரலி) பின் வருமாறு பதிலளித்தார்கள்.: நிச்சயமாக குர்ஆன் ஏழு உச்சரிப்பு முறைகளில் ஏழுவாசல்களின் வழியாக இறக்கப்பட்டதாகும். உங்களுக்கு அனுப்பப்பட்ட ஏடுகள் ஒரு வாசல் வழியாக வந்தது. ஒரே உச்சரிப்பையும் கொண்டது. (இமாம் தஹவீ யின் முஸ்கில் அல் அஸார் 3094) 

இப்னு அபி தாவூத் அவர்களின் கருத்து:
    மேற்குறிபிட்ட ஹதீஸை இப்னு மஸ்ஊத்(ரலி) உஸ்மான்(ரலி) குர்ஆன் தொகுப்பு குறித்த கருத்து எனும் தலைப்பின் கீழ் இப்னு அபிதாவூத் கொண்டுவருகிறார்.(ப.எண்:82)

இப்னு அதிர் அவர்களது வரலாற்று குறிப்பு:

فَلَمَّا نَسَخُوا الصُّحُفَ رَدَّهَا عُثْمَانُ إِلَى حَفْصَةَ، وَأَرْسَلَ إِلَى كُلِّ أُفُقٍ بِمُصْحَفٍ، وَحَرَقَ مَا سِوَى ذَلِكَ، وَأَمَرَ أَنْ يَعْتَمِدُوا عَلَيْهَا وَيَدَعُوا مَا سِوَى ذَلِكَ. فَكُلُّ النَّاسِ عَرَفَ فَضْلَ هَذَا الْفِعْلِ, إِلَّا مَا كَانَ مِنْ أَهْلِ الْكُوفَةِ فَإِنَّ الْمُصْحَفَ لَمَّا قَدِمَ عَلَيْهِمْ فَرِحَ بِهِ أَصْحَابُ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَإِنَّ أَصْحَابَ عَبْدِ اللَّهِ وَمَنْ وَافَقَهُمُ امْتَنَعُوا مِنْ ذَلِكَ وَعَابُوا النَّاسَ فَقَامَ فِيهِمُ ابْنُ مَسْعُودٍ وَقَالَ وَلَا كُلُّ ذَلِكَ فَإِنَّكُمْ وَاللَّهِ قَدْ سُبِقْتُمْ سَبْقًا بَيِّنًا، فَارْبِعُوا عَلَى ظَلْعِكُمْ. وَلَمَّا قَدِمَ عَلِيٌّ لْكُوفَةَ فَعَابَ عُثْمَانَ بِجَمْعِ النَّاسِ عَلَى الْمُصْحَفِ فَصَاحَ بِهِ وَقَالَ: اسْكُتْ فَعَنْ مَلَأٍ مِنَّا فَعَلَ ذَلِكَ، فَلَوْ وُلِّيتُ مِنْهُ مَا وُلِّيَ عُثْمَانُ لَسَلَكْتُ سَبِيلَهُ.
   அவர்கள் குர்ஆன் தொகுப்பை பிரதி எடுத்தப்பிறகு, அதனை (அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதியை ) ஹஃப்ஸா(ரலி) இடமே திருப்பி அனுப்பினார்கள். குர்ஆனின் பிரதிகளை அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பினார்கள்.. ஏனைய பிரதிகளை எறித்து விட்டார்கள். மேலும் அதை சார்ந்திருக்கவும் ஏனையவற்றை விட்டுவுடவும் கட்டளை பிறப்பித்தார்கள். அனைத்து மக்களும் அதன் நன்மையை கருதி அதன் படி செயல்பட்டனர், கூஃபா மக்களை தவிர. நபி(சல்) அவர்களது தோழர்கள் குர்ஆன் பிரதிகள் கொண்டுவரப்பட்டபோது மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களது தோழர்களும் அவர்களை ஏற்றவர்களும் அதை ஏற்க மறுத்து நிந்தித்தனர். அதனால் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களிடம்; “இது அனைவருக்குமானது அல்ல. அல்லாஹ்வின் மீது ஆணையாக முன்பே உங்களுக்கு இது குறித்து கூறப்படுள்ளது. அதாவது உங்களது பிரதிகளை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று. ஆனால் அலி(ரலி) அவர்கள் கூஃபா வந்த போது, ஒரு மனிதர் அவரிடம் வந்தார், மக்கள் கூடினர். உஸ்மான்(ரலி) அவர்களை குர்ஆன் தொகுத்தல் குறித்து ஏசத் துவங்கினர். உடனே (இப்னு மஸ்ஊத் (ரலி) எழுந்து “அனைவரும் அமைதியாக இருக்குமாறு கத்தினார்கள். மேலும் இது நம் கண் முன்னே நடந்துள்ளது. உஸ்மான்(ரலி) அவர்களது பொறுப்பு என்னிடம் ஒப்புவிக்கப்பட்டாலும் நானும் நிச்சயம் அதே வழியையே தேர்வு செய்திருப்பேன் என்று கூறினார்கள். (காமில் இப்னு அதீர் 2/482-483)

இப்னு அஸாகிரின் கருத்து:

روي عن ابن مسعود أنه رضي بذلك وتابع ووافق رأي عثمان في ذلك وراجع وذلك

     இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் பிற்காலத்தில் உஸ்மான்(ரலி) அவர்களது முடிவை சரி கண்டு ஏற்றுக்கொண்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது (இப்னு அஸாகிரின் தாரிக் அல் திமிஸ்க் 33/140) 

இப்னு கஸீரின் கருத்து 

كَتَبَ إِلَيْهِ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ يَدْعُوهُ إِلَى اتِّبَاعِ الصَّحَابَةِ فِيمَا أَجْمَعُوا عَلَيْهِ مِنَ الْمَصْلَحَةِ فِي ذَلِكَ، وَجَمْعِ الْكَلِمَةِ، وَعَدَمِ الِاخْتِلَافِ، فَأَنَابَ وَأَجَابَ إِلَى الْمُتَابَعَةِ، وَتَرَكَ الْمُخَالَفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَ…… وَفِي رِوَايَةٍ الْخِلَافُ شَرٌّ فَإِذَا كَانَ هذا متابعة من ابن مسعود إلى عُثْمَانَ فِي هَذَا الْفَرْعِ فَكَيْفَ بِمُتَابَعَتِهِ إِيَّاهُ في أصل القرآن؟…..
     உஸ்மான்(ரலி) ஏனைய நபித்தோழர்கள் எதை அதன் நன்மை கருதியும், கருத்தொற்றுமையினாலும் ஏற்கொண்டார்களோ அதை பின்பற்றுமாறு (இப்னு மஸ்ஊத்(ரலி)) அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். அதனால் அதை ஏற்று தனது எதிர்ப்பை கைவிட்டு அதை பின்பற்றினார்கள்…அல்லாஹ் அவர்கள் அனைரையும் பொருந்திக்கொள்வானாக…. ஆக உஸ்மான்(ரலி) அவர்களை ஏனைய சிறிய விசயங்களிலேயே இப்னு மஸ்ஊத்(ரலி) ஏற்று செயல் பட்டார்கள் என்றால் , குர்ஆன் விசயத்திலும், மக்களுக்கான ஓதலை நிர்ணயம் செய்ததிலும் எந்த அளவிற்கு பின்பற்றி இருப்பார்கள்’ (இப்னு கஸீரின் அல் பிதாயா வநிகாயா 7/217)

  அபுபக்கர் அல் அன்பாரியின் கருத்து

قَالَ أَبُو بَكْرٍ: وَمَا بَدَا مِنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ مِنْ نَكِيرِ ذَلِكَ فَشَيْءٌ نَتَجَهُ الْغَضَبُ، وَلَا يُعْمَلُ بِهِ ولا يؤخذ به، ولا يشك في ان رَضِيَ اللَّهُ عَنْهُ قَدْ عَرَفَ بَعْدَ زَوَالِ الْغَضَبِ عَنْهُ حُسْنَ اخْتِيَارِ عُثْمَانَ وَمَنْ مَعَهُ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَبَقِيَ عَلَى مُوَافَقَتِهِمْ وَتَرَكَ الْخِلَافَ لَهُمْ. فَالشَّائِعُ الذَّائِعُ الْمُتَعَالَمُ 

        அபுபக்கர் அல் அன்பாரி கூறியதாவது: ஆரம்பத்தில் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களது எதிர்ப்பானது கோபத்தினால் ஏற்பட்டதாகும் ஆனால் அதில் அவர்கள் செயல் படவும் இல்லை அதில் அவர்கள் நிலைக்கவும் இல்லை. பின்னாளில் அவரது கோபம் மறைந்த போது உஸ்மான்(ரலி) மற்றும் ஏனைய நபித்தோழர்களின் முடிவை ஏற்றுக்கொண்டு தனது எதிர்ப்பை விடவும் செய்தார்( தஃப்ஸீர் அல் குர்துபீ 1/54)
    மேற்குறிபிட்ட ஹதீஸ்களின் அடிப்படையிலும், அதன் வரலாற்று குறிப்புகளின் அடிப்படையிலும் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் எதிர்ப்பு ஆரம்பத்தில் அறியாமையினால் ஏற்பட்டது என்பதையும், பிற்காலத்தில் அலி(ரலி) அவர்களின் வருகையின் போதும், உஸ்மான்(ரலி) அவர்களின் விளக்க கடிதத்தினாலும் அவர்கள் எதிர்ப்பை கைவிட்டர்கள் என்பதை விளங்க முடிகிறது. குருட்டு இஸ்லாமோஃபோபுகளின் வாதங்கள் அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சியால் தோன்றியது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment