பக்கங்கள் செல்ல

Wednesday, October 28, 2020

பெரும்பான்மை மக்களின் ஓதலும் உஸ்மான்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு, உஸ்மான்(ரலி),குர்ஆன் தொகுப்பு,கிராத் அல் ஆம்மா,அர்தத் அல் ஆஹிரா,


        குர்ஆன் எப்படி மக்கள் உள்ளங்களில் மனனம் செய்யப்பட்டு தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டது என்பதை இஸ்லாமியர்கள் ஆதாரப்பூர்வமாக நிரூவும் போது, இங்கிருக்கும் கிறித்தவ மிசனரிகளும், இஸ்லாமோஃபோபுகளும் , ஹதீஸ்களில் காணப்படும் குர்ஆன் தொகுக்கப்பட்டது குறித்த வரலாற்று குறிப்புகளை முன்வைத்து சில மூடத்தனமான விமர்சனங்களை முன்வைத்த ஆர்தர் ஜெஃப்ரி போன்ற ஓரியண்டலிஸ்டுகளின் புத்தகங்களில் இருந்தும், தற்காலத்தில் சில இஸ்லாமிய எதிர்ப்பு ஆங்கில வளைத்தளத்தில் பதியப்பட்டவைகளையும் அடிப்படையாக கொண்டு தாங்களே தேடி கண்டறிந்தது போன்று விமர்சனங்களை செய்து வருகின்றனர். உண்மையில் சொல்வதாக இருந்தால் ஆர்தர் ஜெஃப்ரி போன்ற ஓரியண்டலிஸ்டுகளே, இஸ்லாமிய அறிஞர்கள் சிலர் இது குறித்து எழுதிய பண்டைய கிரந்தங்களில் இருந்துதான் இத்தகைய விமர்சனங்களை, அறியாமையையும், காழ்புணர்ச்சியையும் அதில் ஏற்றி தங்களது புத்தகங்களில் வழங்கி உள்ளனர். இந்த விசயங்களில் ஆர்தர் ஜெஃரியின் தந்தையாக கருத்தப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களின் நூல்கள் எல்லாம் கிபி 10ம் நூற்றாண்டுகளில் இருந்து இஸ்லாமிய சமூகத்தால் பார்க்கப்பட்டு , அதற்கான தெளிவுரைகளையும் இஸ்லாமிய அறிஞர்களே வழங்கியும் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதையும் இந்த கட்டுரையின் இறுதியில் காணவுள்ளோம்.

   மேற்குறிபிட்ட படியான விமர்சனங்களில், உஸ்மான்(ரலி) அவர்களது காலத்தில் தொகுக்கப்பட்டு பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட குர்ஆன் பிரதிகளின் தொகுத்தலுக்கான நடைமுறைகள் குறித்தவைகளையே இங்கிருக்கும் இஸ்லாமோஃபோபுகள் தங்களது முதன்மை விமர்சனமாக முன்வைத்து வருகின்றனர். உஸ்மான்(ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்ட குர்ஆன் நபி(சல்) அவர்களுக்கு இறுதியாக ஓதிக்காண்பிக்கப்பட்ட குர்ஆன் அல்ல என்பது இவர்களின் பிரதான வாதம். அதற்கான விளக்கத்தை தகுந்த தரவுகளுடன் இந்த கட்டுரையில் விளக்கவுள்ளோம்.
உஸ்மான்(ரலி) அவர்களது தொகுப்புதான் அர்தத் அல் ஆகிரா

        நபி(சல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்களால் இறுதி வருடத்தில் ஓதிகாண்பிக்கப்பட்ட  அர்தத் அல் ஆகிரா- இறுதி ஓதல் என்றால் என்ன என்பதை நாம் விளங்கிகொள்ளவது அவசியமாகும்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்:
      ஒவ்வோர் ஆண்டுக்கொரு முறை (வானவர் ஜிப்ரீல் அதுவரை அருளப்பெற்ற) குர்ஆன் வசனங்களை நபி(ஸல்) அவர்களுக்கு (மொத்தமாக) ஓதிக்காட்டுவது வழக்கம். நபி(ஸல்) அவர்கள் இறந்த ஆண்டில் இரண்டுமுறை அவர்களுக்கு (ஜிப்ரீல்) ஓதிக்காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் (ரமளான் மாதத்தின் இறுதிப்)பத்து நாள்கள் 'இஃதிகாஃப்' மேற்கொள்வது வழக்கம். அவர்கள் இறந்த ஆண்டு, (ரமளானில்) இருபது நாள்கள் 'இஃதிகாஃப்' மேற்கொண்டார்கள். (புஹாரி 4998)

    மேற்குறிபிட்ட செய்தியில் கூறப்பட்டது போல் நபி(சல்) அவர்கள் இறந்த வருடத்தில் குர்ஆன் இரண்டுமுறை நபி(சல்) அவர்களுக்கு ஜிப்ரைல்(அலை) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டது. இந்த இறுதி ஓதல்தான் அர்தத் அல் ஆகிரா என்று அழைக்கப்படுகிறது. இது குறித்த நபித்தோழரான சமூரா(ரலி) பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்
 
أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ الْخَلَدِيُّ، ثنا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْبَغَوِيُّ، بِمَكَّةَ، ثنا حَجَّاجُ بْنُ الْمِنْهَا، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: عُرِضَ الْقُرْآنُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَاتٍ فَيَقُولُونَ: إِنَّ قِرَاءَتِنَا هَذِهِ هِيَ الْعَرْضَةُ الْأَخِيرَةُ
சமூரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(சல்) அவர்களுக்கு பல முறை குர்ஆன் ஓதிகாண்பிக்கப்பட்டது. இன்று நமது ஓதல்தான் அர்தத் அல் ஆகிரா என்று கூறப்படுகிறது. ( முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் 2904)
    மேற்குறிபிட்ட இறுதி ஓதல் குறித்து பேசுவதோடு வேறு ஒரு அதிகப்படியான தகவலையும் தருகிறது. மேற்குறிபிட்ட செய்தியில் அல்ஹசன் அல் பஸரி வழியாக சமூரா(ரலி) அறிவிக்கிறார்கள். அல்ஹசன் அல் பஸரி கிபி 642ல் பிறந்தவர் ஆவார். உஸ்மான(ரலி) அவர்களது ஆட்சிக்காலம் கிபி 644- 656 வரையிலானது கிபி 650ல் தான் குர்ஆனை தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அல்ஹசன் அல் பஸரி அவர்களிடம் சமூரா(ரலி) (மரணம் கிபி 680) குறிப்பிட்டு கூறுவதாக மேற்குறிபிட்ட செய்தி இடம் பெறுகிறது. ஆக மேற்குறிபிட்ட செய்தியானது உஸ்மான்(ரலி) அவர்களின் தொகுப்பு குறித்துதான் பேசுகிறது என்பது நமக்கு தெளிவாக நிருபனமாகிறது. 

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَعَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبِيدَةَ، قَالَ: الْقِرَاءَةُ الَّتِي عُرِضَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعَامِ الَّذِي قُبِضَ فِيهِ هِيَ الْقِرَاءَةُ الَّتِي يَقْرَؤُهَا النَّاسُ الْيَوْمَ فِيهِ 

   உபைதா அவர்கள் கூறியதாவது: 
            நபி(சல்) அவர்கள் இறந்த ஆண்டில் ஓதப்பட்டதுதான் நபி(சல்) அவர்களது ஓதல் ஆகும். அதைதான் இன்று மக்கள் ஓதி கொண்டிருக்கிறார்கள். (முஸன்னஃப் இப்னு அபிஷைபா 30291)
       மேலும் உபைதா அவர்கள் அபூபகர்(ரலி) அவர்களது காலத்தின் குர்ஆன் தொகுப்பையும் கண்டவர், உஸ்மான்(ரலி) காலத்தின் குர்ஆன் தொகுப்பையும் கண்டவர் ஆவார்.
     ஆக மேற்குறிபிட்ட இரண்டு செய்திகளும் ஒரு விசயத்தை தெளிவாக உணர்த்துகின்றன. உஸ்மான்(ரலி) அவர்களின் தொகுப்பானது நபி(சல்) அவர்களது குர்ஆனின் இறுதி ஓதல்தான் என்பதை உறுதிப்பட நிறுவுகிறது. மேலும் உஸ்மான்(ரலி) அவர்களால் குர்ஆனை தொகுக்க நியமிக்கப்பட்ட ஜைத் பின் ஸாபித்(ரலி) அவர்களின் ஓதல்தான் நபி(ஸல்) அவர்களது இறுதி ஓதலும், அன்றைய பெரும்பான்மையினரின் ஓதலும் ஆகும். பெரும்பான்மை மக்களின் ஓதல் இஸ்லாமிய வரலாற்றில் கிராத் அல் ஆம்மா என்று அழைக்கப்படுகிறது.

ﻭﺭﻭﻱ ﻋﻦ ﺃﺑﻲ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ اﻟﺴﻠﻤﻲ، ﻗﺎﻝ: ﻛﺎﻧﺖ ﻗﺮاءﺓ ﺃﺑﻲ ﺑﻜﺮ، ﻭﻋﻤﺮ، ﻭﻋﺜﻤﺎﻥ، ﻭﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ، اﻟﻤﻬﺎﺟﺮﻳﻦ ﻭاﻷﻧﺼﺎﺭ ﻭاﺣﺪﺓ، ﻛﺎﻧﻮا ﻳﻘﺮءﻭﻥ ﻗﺮاءاﻟﻌﺎﻣﺔ، ﻭﻫﻲ اﻝﻗﺮاءاﻟﺘﻲ ﻗﺮﺃﻫﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ ﺟﺒﺮﻳﻞ ﻣﺮﺗﻴﻦ ﻓﻲ اﻟﻌﺎﻡ اﻟﺬﻱ ﻗﺒﺾ ﻓﻴﻪ، ﻭﻛﺎﻥ ﻋﻠﻰ ﻃﻮﻝ ﺃﻳﺎﻣﻪ ﻳﻘﺮﺃ ﻣﺼﺤﻒ ﻋﺜﻤﺎﻥ، ﻭﻳﺘﺨﺬﻩ ﺇﻣﺎﻣﺎ. ﻭﻳﻘﺎﻝ: ﺇﻥ ﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﺷﻬﺪ اﻟﻌﺮﺿﺔ اﻷﺧﻴﺮﺓ اﻟﺘﻲ ﻋﺮﺿﻬﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ ﺟﺒﺮﻳﻞ، ﻭﻫﻲ اﻟﺘﻲ ﺑﻴﻦ ﻓﻴﻬﺎ ﻣﺎ ﻧﺴﺦ ﻭﻣﺎ ﺑﻘﻲ.

      அபூபகர், உமர், உஸ்மான் , ஸைத் இப்னு ஸாபித், அனைத்து முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளின் ஓதல் ஒன்றுதான். அவர்கள் குர்ஆனை கிராத் அல் ஆம்மா (பெரும்பான்மை மக்களின் ஓதல்) அடிப்படையில் ஓதினார்கள். இதே ஓதல்தான் நபி(சல்) அவர்கள் மரணித்த ஆண்டில் ஜிப்ரீல் அவர்களால் இரண்டு முறை ஓதிக்காண்பிக்கப்பட்டது. ஸைத் இப்னு ஸாபித் அவர்கள், இந்த இறுதி ஓதலின் (அர்தா அல் ஆகிரா) போது அங்கிருந்தார்கள். அவர் மரணிக்கும் வரை இந்த ஓதலைத்தான் மக்களுக்கு கற்பித்தார்கள்       ( அறிவிப்பாளர்: அபூ அப்திர் ரஹ்மான் அஸ்ஸலாமி, ஸரஹ் ஸுன்னா 4/525)

மேலும் ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களை ஒருமுறை உமர்(ரலி) அவர்கள் ஓதச் சொல்லி, அதைதான் தாங்களும் ஓதுவதாகவும் குறிப்பிடுகிறார்கள்.

ﻓﻘﺎﻝ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﻟﺰﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ اﻗﺮﺃ ﻳﺎ ﺯﻳﺪ ﻓﻘﺮﺃ ﺯﻳﺪ ﻗﺮاءاﻟﻌﺎﻣﺔ ﻓﻘﺎﻝ ﻋﻤﺮ اﻟﻠﻬﻢ ﻻ ﺃﻋﺮﻑ ﺇﻻ ﻫﺬا

     ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை ஓத உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) கட்டளை இட்டார்கள். ஸைத்(ரலி) அவர்கள் பெரும்பான்மை மக்களின் ஒதலை(கிராத் அல் ஆம்மாவை) ஓதிக்காட்டினார்கள். அதற்கு உமர் (ரலி) இதைத்தான் நானும் அறிவேன் என்று கூறினார்கள்( தாரிக் திமிஸ்க் லி இப்னு அஸாகிர் 7/338, 68/102)
        மேற்குறிபிட்ட ஆதாரங்கள் கிராத் அல் ஆம்மா  - பெரும் பான்மை மக்களின் ஓதலில்தான் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுத்தார்கள் என்பதை விளக்க போதுமானது. மேலும் இந்த கிராத் அல் ஆம்மா தான் நபி(சல்) அவர்களின் இறுதி ஓதல். அன்றைய சமூகத்தின் பெரும்பான்மை ஓதலும் ஆகும். 




          மேற்குறிபிட்ட உதாரணங்களில் இன்றிருக்கும் பெரும்பான்மை மக்களின் ஓதல் நபி(சல்) அவர்களின் இறுதி ஓதலான கிராத் அல் ஆம்மாவுடன் ஒத்திருப்பதை காண இயலும். சென்ற தொடரில் குர்ஆன் என்பது வெகுஜன ஓதல்-கேட்டல் முறை மூலமாக ஒவ்வொரு தலைமுறையிலும் கடத்தப்பட்டது என்பதை வரலாற்று ஆவணங்களின் மூலம் விளக்கியிருந்தோம். 
    
    அதனால் இன்றிருக்கும் பெரும்பான்மை மக்களின் ஒதல்தான் சென்ற தலைமுறையின் பெரும்பான்மை ஓதாலாக இருந்திருக்கும். குர்ஆன் கிராத் பரவலில் உலகளாவிய அளவில் எந்த காலத்திலும் அரசியல் அழுத்தம் இருந்ததில்லை. உஸ்மான்(ரலி) அவர்களது காலத்தில் கூட உலகின் சிறு பகுதிதான் இஸ்லாமிய ஆளுகையில் இருந்தது என்பது குறிப்பிடதக்கது. மேலும் பாரசீகத்தில் தபரி குறிப்பிடும் கிராத் அல் ஆம்மாதான் இஸ்லாமிய ஸ்பெயினின் குர்துபி குறிப்பிடும் கிராத் அல் ஆம்மா.அந்த பெரும்பான்மை ஓதல்தான் இன்றைய பெரும்பான்மை ஓதலாக இருக்கிறது என்பதை மேலே இருக்கும் தஃப்ஸீர் குறிப்புகளால் புரிந்து கொள்ள முடியும்.  குர்ஆன் , வெகுஜன ஓதல்-கேட்டல் முறை மூலமாக ஒவ்வொரு தலைமுறையிலும் கடத்தப்பட்டது என்பதால் இன்றைய பெரும்பான்மை ஓதல்தான் 1400 வருடங்களுக்கு முந்தைய மக்களின் பெரும்பான்மை ஓதலாக இருந்தது என்பதை உறுதியாக கூறமுடியும். நபி(சல்) அவர்களது இறுதி ஓதல்தான் அன்றைய சமூகத்தின் மற்றும் அடுத்து வந்த சமூகத்தின் பெரும்பான்மையினர் ஓதல் என்பதையும் அதனையே ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் உஸ்மான்(ரலி) காலத்தில் தொகுத்தார்கள்  என்பது வரலாற்றில் தெளிவாக பதியப்படுள்ளது என்பதை மேலே விளக்கியுள்ளோம். 

      இத்தகைய தரப்படுத்துதல் துள்ளியமாக இஸ்லாமிய அறிஞர்களால் வரலாற்றில் பதியப்பட்டுள்ளதால்தான் எது பெரும்பான்மை ஓதல் என்பதையும் எது மாறுபட்ட ஓதல் என்பதையும் இன்றும் சரியாக பிரித்து அறிய முடிகிறது.     மேலும் இத்தகைய மாறுபட்ட ஓதல் முறைகள் குறித்து பேசும் நூல்களும், தஃப்ஸீர்களும் இஸ்லாமிய வரலாற்றில் ஏராளம். இஸ்லாமியர்கள் 12 நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆனின்   " Variant Reading"களை இனம் கண்டு அதை பிரித்து அறிவித்திருப்பது இஸ்லாமிய சமூகம் குர்ஆனின் மீது கொண்ட அக்கறையை பறைசாற்றுவதாய் உள்ளது. அல்லாஹ் மிகைத்தவன்....  
 

3 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்
    ஜஸாக்கல்லாஹ்ஹைரன்

    #Fakrudeen Abubacker

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ்.
    ஜசாக்கல்லாஹ் ஹைரன் சகோ

    #Fakrudeen

    ReplyDelete
    Replies
    1. அன்த ஃபீ ஜஸாக்குமுல்லாஹு ஹைரா.....

      Delete