பக்கங்கள் செல்ல

Saturday, May 18, 2019

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்!!



பறவைகளைப் போல் வானத்தில் பறக்க வேண்டும் என்பது மனிதனின் நீண்ட கால கனவு. பல ஆயிரக்கணக்கான வருடங்கள் இதற்காக முயற்சி செய்தும் 20ம் நூற்றாண்டில்  காற்றின் அடுக்குகளை பற்றி ஆய்வு  செய்த பின்பு  தான், விண்ணில் பறப்பதற்கும்,  வான் மண்டலங்களுக்கு செல்வதற்குமான அறிவு கிடைத்தது.

வானில் உயரமாக செல்லும்போது, காற்றில் உள்ள ஆக்சிஜன் குறைந்து விடும் அதனால்  தான் விமானங்களில் ஆக்சிஜன் முகமூடிகள் வைத்துள்ளார்கள்.

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.

ஆனால், இந்த விடயம்  எப்படி  ஆயிரம் வருடங்களுக்கு முன்புள்ள, கல்வியறிவு பெறாத ஒரு நபரால் சொல்லப்பட்டிருக்க முடியும் என்பதது தான் மிகவும் ஆச்சரியமான ஒன்று.

"அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக விசாலமாக்குகிறான் -யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான்" [திருக்குர்ஆன் 6:125]

சமீபத்தில் சவுத்வெஸ்ட்  விமான பயணத்தின் போது, என்ஜினிலிருந்து உடைந்த பாகம் ஒன்று விமான ஜன்னலைத் தாக்கியதால் விமானத்தில் காற்றின் அழுத்தம் குறையவே, பயணிகள் அனைவரையும் ஆக்சிஜன் முகமூடி அணியுமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதிகமானோர் சரியாக அணியாததை விளக்கும் படம் இது

இது நிச்சயமாக மனிதனால் சொல்லப்பட்டது என்பதை உண்மையான பகுத்தறிவு ஏற்க மறுக்கின்றது. காற்றையும், மனிதனையும், வானங்களையும் படைத்த ஒருவனால் மட்டுமே சொல்லியிருக்க முடியும்.

Ref: http://kaheel7.com/eng/index.php/earth-science/289-as-if-he-is-climbing-up-to-the-sky-
        https://www.telegraph.co.uk/travel/travel-truths/truth-about-oxygen-masks-on-planes/


No comments:

Post a Comment