பக்கங்கள் செல்ல

Thursday, May 13, 2021

அபூதர்தா(ரலி) அல் லைல் சூராவை (அல் குர்ஆன் 92:3) மாற்றி ஓதினார்களா???

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
textual variants in the quran,அபூதர்தா(ரலி) அல் லைல் சூராவை -அல் குர்ஆன் 92:3-  மாற்றி ஓதினார்களா??


            குர்ஆனின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்படும் குற்றச்சாட்டில் அடுத்து இடம் பெறுவது அபூதர்தா(ரலி) அவர்கள் அறிவிக்கும் அல் குர்ஆன் 92 வது அத்தியாயம் குறித்த ஹதீஸ் ஆகும். இந்த செய்தி பல கிரந்ததங்களில் அபூதர்தா(ரலி) அவர்களிடம் இருந்து அல்கமா(ரஹ்) அவர்கள் வழியாக ஒற்றை அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி புகாரியில் 4944 ஆவது செய்தியாக இடம் பெறுகிறது. இன் ஷா அல்லாஹ் அதன் விளக்கத்தை காண்போம்.

 இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அறிவித்தார்
    அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்து அபுத்தர்தா(ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா(ரலி) தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள்.
       பிறகு, 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி உங்களில் ஓதத் தெரிந்தவர் யார்?' என்று அபுத்தர்தா(ரலி) கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'நாங்கள் அனைவரும் தாம்' என்று பதிலளித்தோம். அபுத்தர்தா(ரலி), '(இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறையை) நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்?' என்று கேட்டார்கள். தோழர்கள், அல்கமா(ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். 'வல்லைலி இஃதா யஃக்ஷா' எனும் வசனத்தில் இப்னு மஸ்வூத்(ரலி) எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்? என்று கேட்டார்கள். அல்கமா(ரஹ்), 'வஃத்தகரி வல் உன்ஸா' என்றே ஓதினார்கள்' என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா(ரலி), 'நான் சாட்சியம் கூறுகிறேன்: நபி(ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) 'வமா கலக்கஃத் தக்கர வல் உன்ஸா' என்றே நான் ஓதவேண்டுமென விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களைப் பின்பற்றமாட்டேன்' என்று கூறினார்கள்.

மேற்குறிபிட்ட செய்தியை முன்வைத்து இஸ்லாமோஃபோபுகள் பின்வரும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
       அபூதர்தா, இப்னு மஸ்வூத்(ரலி) ஆகியோர், மற்றும் ஈராக்வாசிகளும் இன்று குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் 92 சூராவான அல்லைல் சூராவிற்கு மாற்றமாக ஓதியுள்ளனர். இன்று இருக்கும் குர்ஆனில் அல் லைல் சூராவின் மூன்றாம் ஆயத் வமா ஹலக்க தக்கர வல் உன்ஸா என்று இடம் பெறுகிறது. ஆனால் அபூதர்தா(ரலி) அவர்களும் , இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களும் மற்றும் ஈராக்வாசிகளும் இதற்கு மாற்றமாக "வத்தக்கர வல் உன்ஸா" என்று ஓதியுள்ளனர். நபித்தோழர்களே இப்படி மாறுபட்டு அறிவிப்பதால் குர்ஆனில் பின்னாளில் வார்த்தைகள் சேர்க்கப்பட்டு கறைபடுத்தப்பட்டுள்ளது என்று வாதிக்கின்றனர்.
        மேற்குறிபிட்ட செய்தியானது முதலில் ஒற்றை அறிவிப்பாளர் தொடரை கொண்டிருக்கிறது. நாம் முன்பே அல் குர்ஆன் பலர் ஓதி பலர் கேட்கும் முறையினால் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டுள்ளது என்பதை விளக்கியுள்ளோம். அதற்கு மாற்றமாக ஒற்றை அறிவிப்பாளர் வழியாக வரும் செய்தி பலவீனமானதாகவே எடுத்துக்கொள்ளப்படும். ஒரு தலைமுறையே கடத்திய ஒரு செய்திக்கு மாற்றமாக ஒருவர், இருவர் அறிவிக்கும் செய்தி எந்த மதிப்பும் அற்றது என்பதுதான் சரியானதாகும் அதனால் தான் இமாம் குர்துபி அவர்கள் தனது தஃப்சிரில் 92 அத்தியாயத்தின் விளக்கவுரையில் பின்வரும் அபூபக்கர் அல்அன்பாரி அவர்களது கருத்தை முன்வைக்கிறார்கள்:

قَالَ أَبُو بَكْر : كُلّ مِنْ هَذَيْنَ الْحَدِيثَيْنِ مَرْدُود بِخِلَافِ الْإِجْمَاع لَهُ , وَأَنَّ حَمْزَة وَعَاصِمًا يَرْوِيَانِ عَنْ عَبْد اللَّه بْن مَسْعُود مَا عَلَيْهِ جَمَاعَة الْمُسْلِمِينَ , وَالْبِنَاء عَلَى سَنَدَيْنِ يُوَافِقَانِ الْإِجْمَاع أَوْلَى مِنْ الْأَخْذ بِوَاحِدٍ يُخَالِفُهُ الْإِجْمَاع وَالْأُمَّة , وَمَا يُبْنَى عَلَى رِوَايَة وَاحِد إِذَا حَاذَاهُ رِوَايَة جَمَاعَة تُخَالِفهُ , أُخِذَ بِرِوَايَةِ الْجَمَاعَة , وَأُبْطِلَ نَقْل الْوَاحِد لِمَا يَجُوز عَلَيْهِ مِنْ النِّسْيَان وَالْإِغْفَال . وَلَوْ صَحَّ الْحَدِيث عَنْ أَبِي الدَّرْدَاء وَكَانَ إِسْنَاده مَقْبُولًا مَعْرُوفًا , ثُمَّ كَانَ أَبُو بَكْر وَعُمَر وَعُثْمَان وَعَلِيّ وَسَائِر الصَّحَابَة - رَضِيَ اللَّه عَنْهُمْ يُخَالِفُونَهُ , لَكَانَ الْحُكْم الْعَمَل بِمَا رَوَتْهُ الْجَمَاعَة , وَرَفْض مَا يَحْكِيهِ الْوَاحِد الْمُنْفَرِد , الَّذِي يُسْرِع إِلَيْهِ مِنْ النِّسْيَان مَا لَا يُسْرِع إِلَى الْجَمَاعَة , وَجَمِيع أَهْل الْمِلَّة
   அபூபக்ர் கூறியதாவது: இந்த இரண்டு ஹதீஸ்களுமே நிராகரிக்கத்தக்கவை ஏனென்றால் பெரும்பான்மையினரிடம் இருந்து முரண்படுகிறது.. ஹம்ஸாவும், ஆஸிமும் பெரும்பான்மையினரின் ஓதலைத்தான் இப்னு மஸ்வூத் அவர்களிடம் இருந்து அறிவிக்கிறார்கள். மேலும் எந்த அறிவிப்பு ஒருமித்த கருத்துடன் ஒத்தமைகிறதோ அதுவே சமூகத்தின் ஒருமித்த கருத்துடன் முரண்படும் அறிவிப்பை காட்டிலும் ஏற்பதற்கு முதன்மையானது. ஒற்றை அறிவிப்பாளரின் அறிவிப்பானது பெரும்பான்மையினரால் அறிவிக்கப்பட்டதற்கு முரணாக அமையும் போது பெரும்பாமையினரின் அறிவிப்பைத்தான் ஏற்கவேண்டும் என்ற அடிப்படையில் அது அமைந்ததாகும். அந்த ஒற்றை அறிவிப்பானது மறதியினாலும், அறியாமையாலும் பாதிக்கப்பட்டிருக்கும். அபூதர்தாவின் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாகவும், அதன் அறிவிப்பாளர்கள் ஏற்கப்பட்டவர்களாக இருந்தாலும், அபூபக்ர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி) மற்றும் பெரும்பான்மை நபித்தோழர்களிடம்(ரலி) இருந்து முரண்படுகிறது. அதனால் பெரும்பான்மையினரின் அறிவிப்பையே நாம் ஏற்க வேண்டும். தனி நபரால் அறிவிக்கப்படும் செய்தி மறதியினால் பாதிக்கப்பட்டிருப்பதால் அதனை ஏற்கக்கூடாது. அது ஏனைய பெரும்பான்மையினரையும், ஏனைய இந்த மார்க்க நம்பிக்கையாளர்களையும் பாதிக்காது. (தஃப்ஸீர் அல் குர்துபி சூரா அல் லைலின் விளக்கம்)

هَذِهِ الْقِرَاءَةُ لَمْ تُنْقَلْ إِلَّا عَمَّنْ ذكر هُنَا وَمن عداهم قرؤوا وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَى وَعَلَيْهَا اسْتَقَرَّ الْأَمْرُ مَعَ قُوَّةِ إِسْنَادِ ذَلِكَ إِلَى أَبِي الدَّرْدَاءِ وَمَنْ ذُكِرَ مَعَهُ وَلَعَلَّ هَذَا مِمَّا نُسِخَتْ تِلَاوَتُهُ وَلَمْ يَبْلُغِ النَّسْخُ أَبَا الدَّرْدَاءِ وَمَنْ ذُكِرَ مَعَهُ وَالْعَجَبُ مِنْ نَقْلِ الْحُفَّاظِ مِنْ الْكُوفِيّين هَذِه الْقِرَاءَة عَن عَلْقَمَة وَعَن بن مَسْعُودٍ وَإِلَيْهِمَا تَنْتَهِي الْقِرَاءَةُ بِالْكُوفَةِ ثُمَّ لَمْ يَقْرَأْ بِهَا أَحَدٌ مِنْهُمْ وَكَذَا أَهْلُ الشَّامِ حَمَلُوا الْقِرَاءَةَ عَنْ أَبِي الدَّرْدَاءِ وَلَمْ يَقْرَأْ أَحَدٌ مِنْهُمْ بِهَذَا فَهَذَا مِمَّا يُقَوِّي أَنَّ التِّلَاوَة بهَا نسخت
      இந்த ஓதலை மேலே குறிப்பிடப்பட்டவர்கள் தவிர யாரும் அறிவிக்கவில்லை. மேலும் ஏனையோர் "வமா ஹலக்க தகர வல் உன்ஸா என்றே ஓதினர். மேலும் அபூதர்தா மற்றும் அவருடன் இணைத்துக்கூறப்படுவோர் வழியாக வலிமையான அறிவிப்பாளர் வரிசையை மற்ற ஓதல் பெற்றிருந்தாலும் இதுதான் நிறுவப்பட்ட ஓதலாகும். அது மாற்றம் செய்யப்பட்ட ஓதலில் ஒன்றாகவும், இதனை அபூதர்தா(ரலி) அவர்களும் அவருடன் இணைத்துக்கூறப்படுவோரும் ஏற்காமல் இருந்ததாகத்தான் இதை கூறமுடியும். இதில் வினோதம் என்னவென்றால் கூஃபாவின் ஹுஃப்பாஸ்கள் அறிவிக்கும் இந்த ஓதல், இப்னு மஸ்வூத் மற்றும் அல்கமா அவர்களுடன் கூஃபாவில் முடிந்துவிடுகிறது. ஏனையோர் இந்த முறையில் ஓதவில்லை. அதுபோல அபுதர்தாவின் ஓதலை அறிவித்த ஸாம் வாசிகளும் இதனை அறிவிக்கவில்லை. இது அந்த ஓதல் மாற்றப்பட்டுவிட்டது என்பதை உறுதிபடுத்துகிறது.(ஹாபிழ் இப்னு ஹஜரின் ஸஹீஹ் புகாரியின் விளக்கமான பத்ஹுல் பாரி ஹதீஸ் எண்: 4944)
        ஹாபிழ் இப்னு ஹஜரின் கூற்றின் படி ஏனைய கிராத் அறிவிப்புக்களில் இந்த வசனம் இவ்வாறு இடம் பெறவில்லை. மேலும் இப்னு மஸ்வூத்(ரலி), அவர்களது ஓதல் முறையை பின்பற்றி இடம் பெறும் ஹஃப்ஸின் கிராத்திலும் சரி, அபூதர்தா(ரலி) அவர்களது ஓதல் முறையை பின்பற்றும் ஹிஷாம் மற்றும் இப்னு தக்வானின் ஓதல் முறையிலும் சரி, ஏனைய இராக்வாசிகளின் கிராத்கள் ஆன அல் கிஸாய், அல் ஹம்ஸாவின் ஓதல்முறைகளிலும் சரி, இன்று இருக்கும் குர்ஆனில் போன்றே அமைந்திருப்பது, மேற்குறிபிட்ட அபூதர்தா(ரலி) அவர்களது அறிவிப்பு ஒற்றை அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் சாத் வகை ஹதீஸ் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதாவது பெரும்பான்மை அறிவிப்பிற்கு மாற்றமாக இடம் பெறும் ஒற்றை அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் செய்தியாகும்.




மேலும் இதே செய்தி சுனன் அல் குப்ராவில் பின்வருமாறு இடம் பெறுகிறது:
ﺃﺧﺒﺮﻧﺎ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺳﻠﻴﻤﺎﻥ ﻗﺎﻝ ﺃﻧﺎ ﻣﺴﻜﻴﻦ ﺑﻦ ﺑﻜﻴﺮ ﻋﻦ ﺷﻌﺒﺔ ﻋﻦ ﻣﻐﻴﺮﺓ ﻋﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ ﻋﻦ ﻋﻠﻘﻤﺔ ﻗﺎﻝ ﻗﺪﻣﺖ اﻟﺸﺎﻡ ﻓﺪﺧﻠﺖ ﻣﺴﺠﺪ ﺩﻣﺸﻖ ﻓﺼﻠﻴﺖ ﺭﻛﻌﺘﻴﻦ ﺛﻢ ﻗﻠﺖ اﻟﻠﻬﻢ اﺭﺯﻗﻨﻲ ﺟﻠﻴﺴﺎ ﺻﺎﻟﺤﺎ ﻓﺠﻠﺴﺖ ﺇﻟﻰ ﺃﺑﻲ اﻟﺪﺭﺩاء ﻓﻘﺎﻝ ﻣﻤﻦ ﺃﻧﺖ ﻗﻠﺖ ﻣﻦ ﺃﻫﻞ اﻟﻌﺮاﻕ ﻗﺎﻝ ﻓﻜﻴﻒ ﻛﺎﻥ ﻳﻘﺮﺃ ﻋﺒﺪ اﻟﻠﻪ {ﻭاﻟﻠﻴﻞ ﺇﺫا ﻳﻐﺸﻰ ﻭاﻟﻨﻬﺎﺭ ﺇﺫا ﺗﺠﻠﻰ ﻭﻣﺎ ﺧﻠﻖ اﻟﺬﻛﺮ ﻭاﻷﻧﺜﻰ} ﻗﻠﺖ ﻫﻜﺬا ﻛﺎﻥ ﻳﻘﺮﺅﻫﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻓﻘﺎﻝ ﺃﺑﻮ اﻟﺪﺭﺩاء ﻫﻜﺬا ﺳﻤﻌﺘﻬﺎ ﻣﻦ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺛﻢ ﻗﺎﻝ ﻓﻴﻜﻢ اﻟﺬﻱ ﺃﺟﻴﺮ ﻣﻦ اﻟﺸﻴﻄﺎﻥ ﻋﻤﺎﺭ ﺑﻦ ﻳﺎﺳﺮ ﻭﻓﻴﻜﻢ اﻟﺬﻱ ﻳﻌﻠﻢ اﻟﺴﺮ ﻻ ﻳﻌﻠﻤﻪ ﻏﻴﺮﻩ ﻳﻌﻨﻲ ﺣﺬﻳﻔﺔ اﺑﻦ اﻟﻴﻤﺎﻥ

அல்கமா (ரஹ்) கூறினார்.நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அங்கு டமாஸ்கஸ் பள்ளி வாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்துக்கள் தொழுதேன். பிறகு, 'இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரைக் கொடு" என்று பிரார்த்தித்தேன். பிறகு, அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் அமர்ந்தேன். அவர்கள் " உங்களில் யார் இராக் வாசி என்று கூறுங்கள் " என்று கூறினார்கள். பிறகு, 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், 'வல்லய்லி இதாயஃக்ஷா வன்னஹாரி இதா தஜல்லா வமா ஹலக்க தகர வல் உன்ஸா' ஆகிய இறைவசனங்களை எப்படி ஓதுகிறார்" என்று கேட்டார்கள். அதற்கு நான் "இப்படித்தான் ஓதுகிறார்கள்" என்று கூறினேன்.அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! அதை எனக்கு நபி(ஸல்) அவர்கள் தம் வாயால் (இவ்வாறே) ஓதிக்காட்டினார்கள். மேலும் ஷைத்தானிடமிருந்து காப்பாற்றப்பட்ட அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களும் , வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவரான ஹுதைஃபா இப்னு யாமான் (ரலி) அவர்களும் உங்களிடையே உள்ளார்களே" என்று கூறினார்கள் (அந்நஸயீ அவர்களது சுனன் அல் குப்ரா 8299)
  ஆக ஹதீஸ்களும் முன்னுக்குபின் முரணாக இந்த விசயத்தில் இடம் பெறுவதை காண முடிகிறது. ஆக பெரும்பான்மை ஓதலுடன் எந்த செய்தி பொருந்துகிறதோ அதுவே ஆதாரப்பூர்வமான செய்தி என்பதை விளங்கலாம். ஆக மறுக்கப்படும் ஹதீஸின் மீது எழுப்பப்படும் இஸ்லாமோஃபோபுகளின் வாதங்கள் எந்த மதிப்பும் அற்றவை...

Sunday, May 2, 2021

ஆதரவற்ற குழந்தைகளின் பராமரிப்பில் மிகுந்த கவனம் தேவை!!

இஸ்ளாம்-  ஆதரவற்ற குழந்தைகள்-  பராமரிப்பு- மிகுந்த கவனம் தேவை!!

யுனிசெப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 10,000 குழந்தைகள் அனாதைகளாகிறார்கள். சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, உலகில் குறைந்தது 140 மில்லியன் அனாதைகள் உள்ளனர்.

ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பதில் இஸ்லாம் சொல்லும் வழிமுறையை விட வேறு சிறந்த ஒன்றை இன்று வரை கூட எந்த சட்டமும் சொல்வதில்லை.


"நீங்கள் அநாதைகளின் பொருட்களை (அவர்களுக்கு வயது வந்தவுடன் குறைவின்றிக்) கொடுத்து விடுங்கள்; நல்லதற்குப் பதிலாக கெட்டதை மாற்றியும் கொடுத்து விடாதீர்கள்; அவர்களுடைய பொருட்களை உங்கள் பொருட்களுடன் சேர்த்துச் சாப்பிட்டு விடாதீர்கள் - நிச்சயமாக இது பெரும் பாவமாகும்" [4:2]


"நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் - இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள்." [4:10]


"அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; " [6:152]


"(அநாதைகளின் பொருளுக்கு நீங்கள் மேலாளராக ஏற்பட்டால்) அவர்கள் புத்தி குறைவானவர்களாகயிருப்பின் (வாழ்க்கைக்கு) ஆதாரமாக அல்லாஹ் உங்களிடம் ஆக்கித் தந்த செல்வத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் - எனினும், அவர்களுக்கு அதிலிருந்து உணவளியுங்கள்; ஆடையும் அளியுங்கள்; இன்னும் அவர்களிடம் கனிவான வார்த்தைகள் கொண்டே பேசுங்கள்." [4:5]


"அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்; மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்." [4:6]