பக்கங்கள் செல்ல

Thursday, January 14, 2016

குறிப்பு 1 - எந்த ஒரு நற்செயலையும் குறைத்து மதிப்பிடவேண்டாம்

இன்றிலிருந்து நாம் ஒரு புதிய புத்தகம் படிக்கலாம்......புத்தகத்தின் தலைப்பு..."70 Tips to win mutual Love and RESPECT (மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்)"

திருக்குர்ஆன் & ஹதீத் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தின் ஒவ்வரு குறிப்புகளையும் சுருக்கமாக பார்ப்போம். நான் ஆங்கிலத்தில் உள்ளதை, நான் புரிந்த  வ
கையில் மொழிபெயர்த்துத் தருகின்றேன்... சரியான மொழிபெயர்பிற்கு, மூல ஹதீத்களை பார்க்கவும்.

குறிப்பு 1:-  

தன்னை மக்கள் விரும்பவேண்டும் என்று ஆசைப்படும் ஒருவன், மக்களை நெருங்கச் செய்யும், எந்த ஒரு செயலையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்.

ஒரு சிறிய ஆறுதல் அல்லது செயல் அல்லது தர்மம், நமக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அது கிடைக்கப் பெரும் நபரிடத்தில் அதன் மதிப்பு பல மடங்காக இருக்கும்.

நபி (ஸல்) சொன்னார்கள்:

"எந்த ஒரு நற்செயலையும் குறைத்து மதிப்பிடவேண்டாம். அது உன் சகோதரனை முக மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக இருந்தாலும் சரியே."|(சஹீஹ் முஸ்லிம் Book of Goodness to Parents and Keeping Ties. Hadeeth No. 1782)

யாரவது ஒருவன், "இது  மிகவும் குறைவு" என்று எண்ணி, ஒரு செயலை விடுவது, ஷைத்தானின் வழிமுறையில் ஒன்று, மேலும் நல்ல செயல்கள் செய்வதை விட்டும் ஒரு மனிதன் தடுக்கப்படுவதும் இந்த வகையில் தான்.

ஒரு மனிதன் இப்படியே நினைத்து தன் வாழும் காலமெல்லாம் பல முறை நல்லது செய்ய வாய்ப்புக் கிடைத்தும் செய்யாமல், வயது முதிர்ந்ந்து இறந்தும் விடுகின்றான்.

குரான் இதற்க்கு சரியான பதிலாக, நாம் செய்யும் எந்த ஒரு செயலும் அது சிறியதோ அல்லது பெரியதோ, எதுவும் நிராகரிக்கப்படாது என்பதை தெளிவாக்குகின்றது.


"அவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அது மறுக்கப்படாது. (தன்னை) அஞ்சுவோரை அல்லாஹ் அறிந்தவன். (திருக்குர்ஆன் 3:115)"

Saturday, January 9, 2016

பிற மதத்தவர்களுடன் நல்லுறவு............. (பதிவு : சகோதரர் அப்துல் சலாம் , வரைகலை : Meezan-தராசு )





பிற மதத்தவர்களுடன் நல்லுறவு............. 
==================================
முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களை முஸ்லிம்கள் உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் பல இடங்களில் கட்டளையிடுகிறது. இஸ்லாம் இன வெறியைத் தூண்டுவதாக இவ்வசனங்களைப் பார்க்கும் சிலர் எண்ணலாம்.
இவ்வாறு எண்ணுவது தவறாகும். திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் முஸ்லிம்களைச் சுற்றி வாழ்ந்த பல தெய்வ நம்பிக்கையாளர்களும், யூதர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகப் படை திரட்டிக் கொண்டிருந்தார்கள். எப்படியாவது முஸ்லிம்களை அழித்து இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள். போர் நடக்காத வருடமே இருக்கவில்லை. சில வருடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட போர்களையும் முஸ்லிம்கள் சந்தித்தனர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சில முஸ்லிம்களின் உறவினர்களும், நண்பர்களும் எதிரிகளின் பகுதிகளில் இருந்தனர். அவர்களுடன் முஸ்லிம்கள் உறவாடி வந்தனர். முஸ்லிம்கள் மூலம் அவர்களுக்குத் தகவல்கள் கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
திருக்குர்ஆனிலேயே இது பற்றி விளக்கமும் உள்ளது. இஸ்லாத்தைக் கேலிப் பொருளாக ஆக்கியவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 5:57)
………………………………….
உங்களுக்குப் பகைவர்களாக இருப்போரையும், கைகளாலும் நாவுகளாலும் உங்களுக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுவோரையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 60:2)
…………………………………
உங்கள் பகைவர்களாகவும் இருந்து கொண்டு, உங்களையும், நபிகள் நாயகத்தையும் ஊரை விட்டே விரட்டியடித்தவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 60:1)
…………………………………
மார்க்கத்துக்கு எதிராக உங்களுடன் போருக்கு வருவோரையும், உங்களையும் நபிகள் நாயகத்தையும் விரட்டியடித்தவர்களையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள்! அவ்வாறு நடக்காத முஸ்லிமல்லாதவர்களுடன் நட்புப் பாராட்டுவது மட்டுமின்றி அவர்களுக்கு நன்மையும் செய்யுங்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 60:8-9)
…………………………………
வெளிப்படையாக எதிர்ப்பைக் காட்டி, உள்ளுக்குள் உங்களை ஒழிக்கத் திட்டமிடுவோரை நண்பர்களாக்காதீர்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 3:118)
…………………………………
அன்றைய கிறித்தவ சமுதாயத்தினர் முஸ்லிம்களிடம் நெருக்கமான அன்பு கொண்டவர்கள். (பார்க்க: திருக்குர்ஆன் 5:82)
…………………………………
ஒரு சமுதாயம் உங்களுக்குச் செய்த தீமை காரணமாக அவர்களுக்கு அநியாயம் செய்யாதீர்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 5:2, 5:8)
………………………………….
உடன்படிக்கை செய்து முறையாக நடப்போரிடம் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! (பார்க்க: திருக்குர்ஆன் 9:4)
…………………………………
முஸ்லிமல்லாதவர் அடைக்கலம் தேடி வந்தால் அவருக்கு அடைக்கலம் அளிக்குமாறு திருக்குர்ஆன் 9:6 வசனம் கூறுகிறது.
………………………………………
பெற்றோர்கள் முஸ்லிம்களாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுமாறு திருக்குர்ஆனின் 31:15, 29:8 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
………………………………..
இவ்வசனங்களையும் சேர்த்துக் கவனித்தால் போர்ப் பிரகடனம் செய்யாத முஸ்லிமல்லாத மக்களுடன் நன்றாகப் பழகவே இஸ்லாம் கட்டளையிடுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். அது மட்டுமின்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் சகல உரிமையும் பெற்று வாழ்ந்தனர்.
…………………………………….
நபிகள் நாயகத்தின் மிகப் பெரிய எதிரிகளாக இருந்த யூத சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பணியாளர்களில் ஒருவராக வைத்திருந்தார்கள். (நூல்: புகாரி 1356)
…………………………………………………
நபிகள் நாயகம் (ஸல்) தமது கவச ஆடையை யூதரிடம் அடைமானம் வைத்தனர். (நூல்: புகாரி 2916, 2068) யூதப் பெண்ணின் விருந்தை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுள்ளனர். (நூல்: புகாரி 2617)
யூதர்களே நியாயம் கேட்டு நபிகள் நாயகத்திடம் வந்தனர். (நூல்: புகாரி 2412, 2417)
…………………………………………
இவர்களெல்லாம் போர்ப் பிரகடனம் செய்யாது முஸ்லிம்களுடன் பழகியவர்கள். இன்னும் சொல்லப் போனால் நட்பு பாராட்டுவதாக நடித்த நயவஞ்சகர்கள் கூட, வெளிப்படையாகப் போர்ப் பிரகடனம் செய்யாததால் அவர்களுடனும் முஸ்லிம்கள் பழகி வந்தனர். அதனால் தான் இஸ்லாம் அந்த மக்களை வென்றெடுத்தது. போர்ச் சூழ்நிலையில் எந்த ஒரு நாடும் எடுக்கக் கூடிய அவசர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இடப்பட்ட கட்டளை தான் இந்த வசனங்களில் (3:28, 4:89, 4:139, 4:144, 5:51, 5:80, 9:23) கூறப்பட்டுள்ளன.

நன்றி :Meezan-தராசு

Saturday, January 2, 2016

திருகுர்ஆனின் அல் பாத்திஹா சூராவிற்கு உருக்கமாக விளக்கமளித்து சபையோரை கண்ணீர் சிந்தவைத்த அமெரிக்க திரைப்படதுறை ஜாம்பவான் பிரான்ஸிஸ் போர்ட் கொப்போலா



















திருகுர்ஆனின் அல் பாத்திஹா சூராவிற்கு உருக்கமாக விளக்கமளித்து சபையோரை கண்ணீர் சிந்தவைத்த அமெரிக்க திரைப்படதுறை ஜாம்பவான் பிரான்ஸிஸ் போர்ட் கொப்போலா
=====================================================
அமெரிக்காவின் Detroit, மிக்ஸிகன் மாநிலத்தில் பிறந்த பிரான்ஸிஸ் போர்ட் கொப்போலா(Francic Ford Coppola) அமெரிக்க ஒஸ்கார் வரலாற்றில் இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை இம்மூன்றுக்காகவும் ஒஸ்கார் பரிசுபெற்ற ஆறு பேரில் ஒருவராவார். இவர் 15 பேரை கொண்ட திரைப்படதுறை நீதிபதிகளின் தலைவரும், The God Father, Apocalypse போன்ற பிரமாண்டமான படங்ககளின் தயாரிப்பாளரும் ஆவார்.
மொரோக்கோவில் மரகஸ் என்னும் இடத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், கேள்வி நேரத்தின்பொழுது இஸ்லாம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு புனித திருகுர்ஆனின் முதல் சூராவாகிய அல்ஹம்து சூராவின் கருத்தை மிக அழகாகவும், உணர்வுபூர்வமாகவும், சபையோர் முன்நிலையில் எடுத்துக்கூறினார். 
இது பலருடைய மனதை வருடக்கூடியதாகவும், கண்ணீரை வரவழைப்பதாகவும் இருந்தது.
அவர் மைக்ரோபோனை கையிலெடுத்து, சூரா அல் பாத்திஹா கூறும் சமாதானம், அன்பு, சகிப்புத்தன்மை, போன்றவற்றை எவ்வாறு கையாள்கிறது என்பதற்கு விளக்கம் கூறியபொழுது, சபையோர்கள் மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
அழகான இம்மார்க்கம் அராபிய நாகரீகத்தில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் விஞ்ஞானம், கணிதம், மருத்துவம் போன்ற துறைகளில் அதிஉயர் பீடங்களை அடைந்திருந்தது.
இப்புனித புத்தகத்தில் முதல் பக்கத்திலேயே இறைவன் அளவற்ற அருளாளனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் கூறப்பட்டு, கடைப்பிடிக்கவும்பட்டது. அத்தகைய இறைவன் அனுப்பிய இந்த புனித நூல் இன்று நம் மத்தியில் மிகத்தவறாக சித்தரிக்கப்பட்டதன் மூலமாக மக்களின் மனதை நாம் துன்பப்படுத்துவதை விட்டும் எம்மை பாதுகாப்பானாக.
அங்கிருந்த சபையோரில் அதிகமானோர் பேசா மடந்தைகளாகவும், கண்ணீர் சொரிந்தவர்களாகவும் காணப்பட்டனர்.

நன்றி : Meezan-தராசு

Friday, January 1, 2016

பன்றி இறைச்சி குறித்து நவீன மருத்துவ அறிவியலும், திருக்குர்ஆனும், பைபிளும் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்..!

பன்றி இறைச்சி குறித்து நவீன மருத்துவ அறிவியலும், திருக்குர்ஆனும், பைபிளும் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்..!  (Posted by Brother Tink Fair ) 
பன்றி இறைச்சி குறித்து விக்கிபீடியா
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
2007 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகம் நடாத்திய ஆராய்ச்சியின் படி, பதனம் செய்த பன்றி இறைச்சியை உட்கொள்வதற்கும், நுரையீரலைத் தாக்கும் நோய்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. பாதுகாப்புப் பொருளான சோடியநைத்திரைற்று அதற்கு காரணமாகும். அதிக அளவில் பன்றி இறைச்சி போன்ற சிகப்பு மாமிசம் உண்பதால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சூழ்நிலை காணப்படுவதாக சொல்லப்படுகிறது. பன்றி இறைச்சி பொதுவாக உப்பு மற்றும் தெவிட்டிய கொழுப்பு அதிக அளவில் கொண்டதாகும். இவற்றை அதிக அளவில் உட்கொள்வதால் பல தரப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக விக்கிபீடியா தெரிவிக்கின்றது.
மேலும் பன்றி இறைச்சி உண்பதால் ‘டேனியா சோலியம்’ -Taenia solium- (pork tapeworm) என்கின்ற புழு நமது உணவுக்குழாயின் அடிப்பகுதியில் நிரந்தரமாக தங்கி, அங்கே முட்டை இடுகின்றது.. இந்த முட்டைகள் இரத்த நாளங்களினூடாக பயணித்து இதயம், மூளை, கண், நுரையீரல் போன்ற உடல் உறுப்புக்களை செயலழிக்கச் செய்யக்கூடிய மிக ஆபத்தானவையென தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்ற மற்றொரு ஆபத்தான புழுவான Trichura Tichurasis என்கின்ற புழுவும் பன்றி இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் மனித உடலில் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. டேனியா சோலியமும், Trichura Tichurasisம் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தமான புழுவகைகளாகும்.
திருக்குர்ஆனின் ஒளியில் –
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
பன்றி இறைச்சி உண்பதை சர்வ வல்லமை பொருந்திய இறைவன் தடைசெய்துள்ளதாக இறைவேதம் திருக்குர்ஆன் பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.
“தாமாகச் செத்தவை, இரத்தம்,
பன்றியின் இறைச்சி , அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப் பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.”-
(அல்குர்ஆன் 5:3)
இறுதி நாளின் அடையாளமாக இறைத்தூதர் இயேசு – (அலை) அவர்கள் பன்றியைக் கொல்வார்கள் என்று முஹம்மது நபிகளார் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
“என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்”. – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: ஸஹீஹுல் புஹாரி-2222
பைபிளின் ஒளியில் –
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
இறைவாக்கினர் மோசேயின் போதனைகளென நம்பப்படுகின்ற பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலான லேவியராகமம் அசுத்தமான மிருகமான பன்றியின் இறைச்சியை சாப்பிட வேண்டாமென்றும், பன்றியின் உடலைத் தொட வேண்டாமென்றும் கட்டளையிடுகின்றது.
“பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.” – லேவியராகமம் 11:7-8
பன்றியின் இறைச்சியை சாப்பிட வேண்டாமென்றும், பன்றியின் உடலைத் தொட வேண்டாமென்றும் இறைவாக்கினர் மோசேயின் போதனைகளென நம்பப்படுகின்ற மற்றொரு பழைய ஏற்பாட்டு நூலான உபாகமும் கட்டளையிடுகின்றது.
“பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.” – உபாகமம் 14:8
பன்றி இறைச்சியை சாப்பிடுபவர்களை மிகக் கடுமையாகத் தண்டிப்பேன் என்று கர்த்தர் எச்சரித்ததாக பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலான ஏசாயா குறிப்பிடுகின்றது.
“என்னைக் குறித்து விசாரித்துக்கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன். நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன். அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி, பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி,
பன்றியிறைச்சியைத் தின்று , தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து: நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள் முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.” – ஏசாயா 65:1-5
கோபம் கொண்ட கர்த்தர் பன்றி இறைச்சி சாப்பிடுகின்றவர்களை உக்கிரமாக, அக்கினி ஜுவாலையால் தண்டிப்பதாக இறைவாக்கினர் ஏசாயாவின் போதனைகளென நம்பப்படுகின்ற ஏசாயா ஆகமம் எச்சரிக்கின்றது.
“தங்களைத் தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர் பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும்,
பன்றியிறைச்சியையும் , அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
– ஏசாயா 66:17
நவீன கிறிஸ்த்தவத்தின் நிறுவனரான சவுல் என்கின்ற இயற்பெயரையுடைய பவுலின் மார்க்கத்தை ஏற்று, பன்றி இறைச்சி பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலில்தான் தடுக்கப்பட்டுள்ளது எனவே, பன்றி இறைச்சி தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உணவுதான் என்று வாதிடுகின்ற நவீன கிறிஸ்த்தவர்களுக்கு: –
‘வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது’ – என்று குறிப்பிடுவதன் மூலம் ‘நியாயப்பிரமாணத்தை – பழைய ஏற்பாட்டை ’- நிறைவேற்றவே வந்தேன் என்று இயேசு (அலை) அவர்கள் கூறியதாக இயேசுவின் போதனைகளென நம்பப்படுகின்ற பைபிளின் புதிய ஏற்பாட்டு நூலான மத்தேயு ஆகமம் குறிப்பிடுகின்றது.
“நியாயப்பிரமாணத்தையானாலும், தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
மத்தேயு 5:17,18
இயேசு , ஓரிறைக் கொள்கையை உரத்துச் சொன்னார். மக்களுக்கு நல்லதையே போதித்தார்..! அவர் போதித்தவைகளை முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள். முஸ்லிம்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை ஆனால் கிருஸ்த்துவர்கள் சாப்பிடுகிறார்கள் ! முஸ்லிம்கள் மது அருந்துவதில்லை..கிருஸ்த்துவர்கள் அருந்துகிறார்கள்! முஸ்லிம்களுக்குப் போல் இயேசுவிற்கும் விருத்தசேதம் நுனித்தோலில் 8ம் நாள் செய்யப்பட்டது ( இதயத்தில் நுனித்தோல் இல்லை என்பதைக் கவனித்துக் கொள்ளவும்) முஸ்லிம்கள் அனைவருமே விருத்தசேதம் செய்கிறார்கள். கிருஸ்தவர்கள் செய்வதில்லை..! இயேசு விபச்சாரத்தை நெருங்கவேயில்லை..அதேபோல் இஸ்லாமிய நாடுகளிலும் விபச்சாரம் குறைந்தேயுள்ளது..! ஆனால் உலகில் விபச்சாரம் மலிந்த 10 நாடுகள் வரிசையில் 9 கிருஸ்த்துவ நாடுகளே முன்னணியில் உள்ளது..!
இதில் என்ன விளங்குகிறது என்றால், இயேசு ஒரு முஸ்லிமாகவே வாழ்ந்தார். முஸ்லிம்கள் பின்பற்றுவதையே போதித்தார்..ஆனால் கிருஸ்த்துவர்களோ பவுலர்களாகவே இருக்கின்றனர். பவுலையே பின்பற்றுகின்றனர்..!
இயேசுவின் பல போதனைகளை பவுல் சிதைத்துள்ளார்..இதற்கான ஆதாரம் பைபிலில் நிறைய உண்டு!. விருத்தசேதத்தினை சிதைத்தவரும் பவுல் தான்..!
இயேசுவின் போதனையில் பன்றி இறைச்சி விலக்கலும் இருந்தது..!