பக்கங்கள் செல்ல

Thursday, March 19, 2020

இஸ்லாமிய நிக்காஹ்வின் திருமணக்கொடை (மஹர்) விமர்சனமும் விளக்கமும்

﷽‎

              சில காலமாக சில இந்துத்துவா கும்பலும், கிறித்தவ மிசனரிகளும் இஸ்லாமிய திருமணத்தில் வழங்கப்படும் மஹர் குறித்து விமர்சனம் செய்து வருகின்றன. அது பெண்ணின் யோனியை உபயோகிக்க விதிக்கப்படும் தொகை என கூறி அதை விமர்சித்து வருகின்றன. இஸ்லாமிய திருமண முறையில் இடம் பெறும் மஹர் குறித்து பார்ப்பதற்கு முன்பு திருமணம் என்றால் என்ன என்பதையே இவர்களுக்கு விளக்க வேண்டிய அவல நிலை இங்கு ஏற்பட்டுள்ளது என்பதையே இவர்களின் இந்த அறிவீன வாதம் உணர்த்துகிறது.

திருமணம் ஏன் ?
                 ஒரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது என்ன? மனித வாழ்வில் திருமணம் என்பது சட்டபூர்வமாக பாலியல் இச்சையை தீர்த்து கொள்ளும் ஒரு வடிகால்.அதன் பலனையும் , நஷ்டத்தையும் சட்டபூர்வமாக அனுமதிக்கும் ஒரு முறைதான் திருமணம். இவ்வாறு திருமணம்( அதாவது பாலியல் தேவையை பூர்த்தி செய்வதற்கான அனுமதியை பெற) செய்ய ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு நடைமுறையை கொண்டுள்ளது. சிலர் தாலி கட்டுகிறார்கள், சிலர் மோதிரம் மாற்றுகிறார்கள், சிலர் பதிவு அலுவலகத்தில் பதிந்து நடைமுறையை பின்பற்றி திருமணம் செய்கிறார்கள்.....இஸ்லாமிய மஹர் எனும் முறைமையை கேலி செய்யும் கூமுட்டைகளின் வார்த்தையில் சொல்வதாக இருந்தால் பாலியல் சுகத்தை அடைய தாலி கட்டுகிறார்கள்....விருந்து வைக்கிறார்கள்,... மோதிரம் மாற்றுகிறார்கள்..... இன்னும் இவர்களது பாசையில் சொல்வதாக இருந்தால் மந்திரம் ஓதி ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்த கூட்டி கொடுக்கிறார் ஐயர்.  முதலிரவுக்கு செய்யப்படும் முறைமை என அனைத்தும்.... திருமணத்தின் ஒவ்வொரு பரிமானமும் இருவரின் பாலியல் தேவையை பூர்த்தி செய்ய அனுமதிக்கும் முறைமையே.

        இத்தகைய ஒரு நடைமுறைதான் இஸ்லாமிய திருமணத்தில் நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்படும் பரிசு அல்லது கொடை என்ற இந்த மஹர் ஆகும்.ஆனால் இஸ்லாம் இதை மூடி மறைத்து சொல்லாமல் நாம் மேலே குறிபிட்டது போல பட்டவர்த்தணமாய் சொல்கிறது அவ்வளவே...ஆக இனி மஹர் குறித்த இஸ்லாமிய பார்வை என்ன என்பதையும் பார்ப்போம்..

இஸ்லாமில் மஹர் என்றால் என்ன??

             அல்லாஹ் தனது வேதத்தில் இன்று வழக்கத்தில் இருக்கும் மஹர் குறித்து குறிப்பிடும் போது எந்த இடத்திலும் அதை மஹர் (கூலி) என்று குறிப்பிடவில்லை. குர்ஆன் 4:4 இல் குறிப்பிடும் போது صَدُقَا - தர்மம் என்று கூறுகிறான்

وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுட னும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!(திருக்குர்ஆன் 4:4)

                     அது போல குர்ஆன் 4:24, 5:5, 60:10 குறிப்பிடும் போது أُجُورَ - பரிசு என்று கூறுகிறான்.

وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۖ كِتَابَ اللَّهِ عَلَيْكُمْ ۚ وَأُحِلَّ لَكُم مَّا وَرَاءَ ذَٰلِكُمْ أَن تَبْتَغُوا بِأَمْوَالِكُم مُّحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ ۚ فَمَا اسْتَمْتَعْتُم بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُم بِهِ مِن بَعْدِ الْفَرِيضَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا

24. உங்கள் அடிமைப் பெண்களைத்107 தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை108 கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.(திருக்குர்ஆன் 4:24)
 
الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ ۖ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَّكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ ۖ وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ ۗ وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

5. தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின்27 உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.137 உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட27 கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை108 வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.138 தனது நம்பிக்கையை (இறை)மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் நட்டமடைந்தவராக இருப்பார்.(திருக்குர்ஆன் 5:5)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ ۖ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ ۖ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ ۖ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ ۖ وَآتُوهُم مَّا أَنفَقُوا ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ ۚ وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ وَاسْأَلُوا مَا أَنفَقْتُمْ وَلْيَسْأَلُوا مَا أَنفَقُوا ۚ ذَٰلِكُمْ حُكْمُ اللَّهِ ۖ يَحْكُمُ بَيْنَكُمْ ۚ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
10. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத்460 செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏகஇறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்.91 அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை108 நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏகஇறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.(திருக்குர்ஆன் 60:10)

                     ஆக மேற்குறிபிட்ட வசனங்களை வைத்துப்பார்க்கும் போது மஹர் அல்லது உஜ்ர என்பது திருமணத்தில் பின்பற்றப்படும் ஒரு நிபந்தனை. பளிச்சென்று சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் தனது பாலியல் இச்சையை மேற்கொள்ள பெறும் அனுமதிக்காக நிறைவேற்றும் நிபந்தனைகளில் ஒன்று....

அதனால்தான் பின்வரும் ஹதீஸ் இப்படி கூறுகிறது

புகாரி 5350. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
                      சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த அந்தத் தம்பதியரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர்’ என்று கூறிவிட்டு, (கணவரான உவைமிரைப் பார்த்து), ‘இனி அவளின் மீது உமக்கு எந்த அதிகாரமும் கிடையாது’ என்று கூறினார்கள்.
     அதற்கு அவர், ‘இறைத்தூதர் அவர்களே! (அவளுக்கு நான் மணக்கொடையாக அளித்திருந்த) என்னுடைய பொருள் (என்னாவது)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘உமக்கு (அந்த)ப் பொருள் கிடைக்காது. நீர் அவளின் மீது உண்மை(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், அவளுடைய கற்பை நீர் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். நீர் அவளின் மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், (அவளை அனுபவித்துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தினால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகுதொலைவில் உள்ளது’ என்று கூறினார்கள். 

மேலும் இந்த அனுமதியைப்பெற இன்னும் அதிகப்படியான நிபந்தனைகளை விதிக்கும் அதிகாரம் பெண்ணுக்கு உண்டு அதைத்தான் பதிவாளர் குறிப்பிடும் நஸயீ 3282 குறிப்பிடுகிறது

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ تَمِيمٍ، قَالَ سَمِعْتُ حَجَّاجًا، يَقُولُ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ أَبَا الْخَيْرِ، حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ "إِنَّ أَحَقَّ الشُّرُوطِ أَنْ يُوَفَّى بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ"
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளே ஆகும்.இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல் : நஸயீ 3282)

           ஆக மேற்குறிபிட்ட ஹதீஸ் தெளிவாக ஒன்றை கூறுகிறது அதாவது நிக்காஹ் (பாலுறவு அனுமதி)என்பதற்கு பல நிபந்தனைகளை விதிக்கலாம்...அதில் மஹர் என்பதும் ஒன்று......அதனால்தான் الشُّرُوطِ - நிபந்தனைகள் என்ற பன்மை சொல் ஹதீஸில் பயன்படுத்தப்படுவதை பார்க்க முடிகிறது.

            மேலும் இவர்கள் கூறுவது போன்று இருந்தால் அதாவது மஹர் என்பது பாலுறவுக்கான கூலி இல்லை என்பதால்தான் பெண்கள் குலாஉ அதாவது விவாக முறிவு கோரும் போது பெற்ற மஹரை திருப்பி செலுத்த வேண்டும் என்ற கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது, இதோ பின் வரும் ஹதீஸ் அதை உறுதி செய்கிறது

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
          ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்' என்று கூறினார். அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள் அவர், 'ஆம் (தந்து விடுகிறேன்)' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), 'தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!' என்று கூறினார்கள். (புகாரி : 5273.)

       ஆக மேற்குறிபிட்ட செய்தி தெளிவாக உணர்த்துவது ஒன்றைத்தான் அதாவது மஹர் என்பது நிபந்தனைதான் அது உறவு கொள்வதற்கான கூலி அல்ல....எப்படி தங்கத்தால் ஆன குறிபிட்ட டிசைன் தாலி கட்டுவது நிபந்தனையோ அது போல...அப்படி கூலியாக இருந்தால் கூலி கழிக்கப்பட்ட மஹ்ரை அல்லவா திருப்பி செலுத்த கட்டளையிடப்பட்டிருக்கும்.

       மஹர் என்பது எப்படி ஒவ்வொரு திருமணத்திலும் (அதாவது உறவு கொள்ள அனுமதிக்கும் விழாவிலும்) நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதோ, அது போன்ற ஒன்றுதான் . அதனால்தான் இரும்பு மோதிரத்தையாவது மணக்கொடையாக வழங்க அறிவுறுத்தப்பட்ட நிகழ்வும் மணவாளர் அதுவும் இல்லை எனக்கூறி திருகுர்ஆனின் சில வசனங்களுக்காக திருமணம் செய்யப்பட்ட சம்பவங்களை காணமுடியும் ( முஸ்லீம் 2785)...

       மேலும் இஸ்லாமிய நடைமுறையில் திருமணத்திற்காக கோரப்படும் நிபந்தனைகள் அனைத்தும் பெண்ணின் பாதுக்காப்பை அடிப்படையாக கொண்டது. அதில் பெண்களுக்கான முழு சுதந்திரத்தை இஸ்லாம் வழங்குகிறது.

       இதற்கு மேலும் திருமணம் என்பது சாம்பிராணி போடுவதற்கான அனுமதி நிகழ்வு என்று யாராவது வாதிட்டால் பெண்களே சிந்தித்துக்கொள்ளுங்கள்..... உங்கள் வாழ்கையை காத்துக்கொள்ளுங்கள்.