பக்கங்கள் செல்ல

Monday, December 14, 2020

ஏழு அஹ்ரூஃபும் ஏழு கிராத்தும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

variant readings of the quran,ஏழு ஹர்ஃபுக்கள்  ஏழு கிராஅத்துகள்


      குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் வைக்கும் அறைவேக்காட்டு வாதங்களுக்கு , ஆதாரப்பூர்வமான வரலாற்று தரவுகளை முன்வைத்து விரிவான பதில்களை கண்டுவருகிறோம். அல்ஹம்துலில்லாஹ். இந்த வரிசையில் குர்ஆன் வரலாறு குறித்த விமர்சனங்களில் ஏழு அஹ்ரூஃப் குறித்த இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கான விளக்கம் எளிமையாக புரிந்து கொள்ளும் படியாக இருந்தாலும், முன் சென்ற அறிஞர்களின் ஆய்வை முன்னிறுத்தி சில வாதங்களை கிறித்துவ மிசனரிகளும், Ex- முஸ்லிம் என்று கூறித்திரிவோரும் முன்வைத்து வருகின்றனர். அதற்கான பதிலை இந்த பாகத்தில் காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ். இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் வாதங்களை முதலில் பார்ப்போம்.


1. குர்ஆன் ஏழு வட்டார வழக்கில் இறங்கியது. ஆனால் இன்றிருப்பது ஓரே வழக்குதான். அதனால் குர்ஆனின் முழு பகுதியும் பாதுக்காக்கப்பட வில்லை.

2. உஸ்மான்(ரலி) அவர்கள் குர்ஆனை தொகுக்கும் போது குரைஷியரின் வட்டார வழக்கில் தொகுக்க கட்டளை இட்டுவிட்டார். அதனால் அவர் நபி(சல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்து விட்டார்.

3. இன்று பல ஓதல்கள் உள்ளன. அதில் எது நபி(சல்) அவர்களின் ஓதல் என்பதை அறிய இயலாது.
    மேற்குறிபிட்ட மூன்று வாதங்களை முன்னிறுத்தி குர்ஆன் என்பது பாதுகாக்கப்படவில்லை என்றும், உஸ்மான்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களுக்கு மாறு செய்துவிட்டார் என்றும் கூறுகின்றனர். இந்த குருட்டு வாதங்களை இஸ்லாமோஃபோபுகள் முன்வைப்பதற்கான நோக்கம் இவையே

1.நபித்தோழர்கள் நம்பகத்தன்மை அற்றவர்கள். அல்லாஹ்வின் வேதத்தின் ஒரு பகுதியையே அழிக்கத்துணித்தவர்கள்.
2.அல்லாஹ்வின் குர்ஆன் ஓதலிலும் பாதுக்காக்கப்படவில்லை
  மேற்குறிபிட்ட தங்களது துவேச நோக்கத்தை நிறைவேற்ற இந்த அரைவேக்காடுகள் குர்ஆன் ஏழு அஹ்ரூஃபில் இறங்கியது என்ற ஹதீஸை தங்களது முதன்மை ஆதாரமாக முன்வைக்கின்றனர். 

 குருட்டு வாதங்களும் நமது விளக்கமும்

      இஸ்லாமோஃபோபுகளின் வாதங்களுக்கான பதில்களை ஏழு அஹ்ரூஃப்  குறித்த இஸ்லாமிய அறிஞர்களின் மாறுபட்ட கருத்தியல்களை விளக்குவதில் இருந்து ஆரம்பிப்போம். ஏழு அஹ்ரூஃப் குறித்த தெளிந்த பார்வையே மேற்குறிபிட்ட வாதங்களுக்கு தக்க பதிலாக அமையும்.


ஏழு அஃரூஃப் குறித்து இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் நிழவுகின்றன. அவை

கருத்து 1: 
         அன்றிருந்த ஏழு அரபு கோத்திரத்தாரின் வட்டார வழக்கு என்று ஓரு சாரார் கூறுகின்றனர். இந்த கருத்தை அபூ உபைத், அல் பைஹக்கி உள்ளிட்ட அறிஞர்கள் இந்த கருத்தை முன்வைக்கின்றனர்.

கருத்து 2:

    குர்ஆன் வார்த்தைகளில் மற்றும், வாக்கிய அமைப்பில் இருக்கும் ஏழு வகையான மாறுபாடுகள் என்றும் கூறுகின்றனர். அவை ஒருமை பன்மை மாறுபாடு, செய்வினை, செய்யப்படுவினை மாறுபாடு, ஆண்பால் பெண்பால் உருபுகளில் இருக்கும் மாறுபாடு உள்ளிட்ட இலக்கண ரீதியான மாறுபாடுகள் , உயிர் குறியீடு மாறுபாடுகள் உச்சரிப்புகளில் தோன்றும் மாறுபாடுகள் உள்ளிட்ட மாறுபாடுகள் ஆகும். இந்த கருத்தை மாலிக் பின் அனஸ், இப்னு ஹுதைபா, அபூ ஃபதல் அல் ராஸி, அபூபகர் அல் பாக்கிலானி, இப்னு ஜஸரி போன்ற அறிஞர்கள் முன்வைக்கின்றனர். ஆனால் எந்த ஏழு மாறுபாடுகள் என்பதில் அறிஞர்கள் மாறுபடுகின்றனர். 

        இவ்விரு கருத்துக்கல்தான் இஸ்லாமிய அறிஞர்களின் பெரும்பாலோரின் கருத்தாக இருக்கிறது. அஹ்ரூஃப் குறித்த சரியான கருத்து எது என்பதை இறுதியில் காண்போம்.


       மேற்குறிபிட்ட இந்த இரண்டு கருத்துக்களையும் தரும் ஹதீஸை முதலில் காண்போம்.
عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ أَقْرَأَنِي جِبْرِيلُ عَلَى حَرْفٍ، فَلَمْ أَزَلْ أَسْتَزِيدُهُ حَتَّى انْتَهَى إِلَى سَبْعَةِ أَحْرُفٍ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

         ஒரேயொரு அஹ்ரூஃபின் படி ஜிப்ரீல் (திருக்குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத் தந்தார். ஆனால், நான் அதை இன்னும் பல அஹ்ரூஃபின் படி எனக்கு ஓதக் கற்றுத் தருமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்க, கேட்க அதிகப்படுத்தப்பட்டுக் கொண்டே வந்து,) இறுதியில் ஏழு அஹ்ரூஃப் அளவிற்கு வந்து நின்றது. என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி 3219)

          மேற்குறிபிட்டஹதீஸில் இடம் பெறும் أَحْرُفٍ என்ற சொல்லிற்கு “எல்லைகள், முனைகள், எழுத்துக்கள் “ என்ற பொருளாகும். அதற்கு வட்டார வழக்கு என்பது நேரடி பொருள் அன்று. أَحْرُفٍ என்பது حرف என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததாகும். அது குறித்து லேன்ஸ் லெக்ஸிகான் பின்வருமாறு கூறுகிறது.

حَرْفُ √) حرف) The extremity, verge, border, margin, brink, brow, side, or edge of anything.

          லேன்ஸ் லெக்ஸிகான் குறிப்பிடுவது போன்ற பொருளில் அல் குர்ஆனிலும் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.

وَمِنَ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَىٰ حَرْفٍ ۖ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ ۖ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انْقَلَبَ عَلَىٰ وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ۚ ذَٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ

இன்னும்; மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் - அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்.(அல் குர்ஆன் 22:11)

حرف என்ற வேர்ச்சொல்லில் இருந்து தோன்றும் أَحْرُف என்ற சொல்லின் பொருளையும் லேன்ஸ் லெக்ஸிகான் தெளிவு படுத்துகிறது.

آحْرُفُ : so in the saying (of Mohammad, TA) نَزَلَ القُرْأٓنُ عَلَى سَبْعَةِ آحْرُفٍ The Kur-án has been revealed according to seven dialects, of the dialects of the Arabs: (A'Obeyd, Az, IAth, K:) or this means, according to seven modes, or manners, (Mgh, Msb,) of reading

        மேற்குறிபிட்ட பொருள்களான வட்டார வழக்கு அல்லது முறைகள் என்பதில் எது மிகச்சரியானது என்பதை தெளிவு படுத்துவதுதான் அரைவேக்காடுகளின் வாதங்களிற்கு தக்க பதிலைதரும்.

அஹ்ரூஃப் என்றால் வட்டார வழக்கா???

           குர்ஆன் ஏழு வட்டார மொழிகளில் இறங்கியதா அல்லது நபி(சல்) அவர்களது மொழியில் இறங்கியதா என்பது அல் குர்அனில் குறிப்பிடப்பட்டுள்ளது:
فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِينَ وَتُنْذِرَ بِهِ قَوْمًا لُدًّا

(நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் - பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும். ( அல்குர்ஆன் 19:97)
فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்.(அல் குர்ஆன் 44:58) 
         மேற்குறிபிட்ட வசனங்கள் ஒன்றை தெளிவாக உணர்த்துகின்றன குர்ஆன் நபி(சல்) அவர்களது மொழியில் அதுவும் بِلِسَانِكَ என்பது உம்முடைய பேச்சு வழக்கில் என்றே பொருளை குறிக்கும் சொல்லாகும். ஆக நபி(சல்) அவர்களது பேச்சு வழக்கு அல்லாது வழக்குகளில் குர்ஆன் இறங்கவில்லை என்று குர்ஆனே கூறிப்பிடுகிறது. மேலும் இதை உறுதி படுத்தும் விதமாக நபிதோழர்களும் இந்த கருத்தை முன்வைத்துள்ளனர்.

وَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ الْقُرَشِيِّينَ الثَّلاَثَةِ إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي شَىْءٍ مِنَ الْقُرْآنِ فَاكْتُبُوهُ بِلِسَانِ قُرَيْشٍ فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ فَفَعَلُوا

       மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறைஷியரின் மொழிவழக்குப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள்.(புகாரி 4987)
      மேலும் உமர்(ரலி) அவர்களும் அவரது குரைஷி கோத்திரத்தை சேர்ந்த ஹிஸாம் இப்னு ஹகீம்(ரலி) அவர்களோடே ஓதலில் மாறுபட்டதாக ஹதீஸ் கூறுகிறது. 

உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்

         இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) 'அல்ஃபுர்கான்' எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அவர் அதை ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே அவரை நான் தண்டிக்க முனைந்தேன். (சற்று நிதானித்து) அவர் தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும் வரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

       (அவர் தொழுகையை முடித்ததும் அவரின் மேல் துண்டை) அவரின் கழுத்தில் போட்டுப் பிடித்து, 'இந்த அத்தியாயத்தை நான் (உம்மிடமிருந்து) செவியேற்றபடி உமக்கு ஓதிக்கொடுத்தது யார்?' என்று கேட்டேன். அவர், 'இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஓதிக் கொடுத்தார்கள்' என்று பதிலளித்தார். உடனே நான், 'நீர் பொய் சொல்லிவிட்டீர்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உம்மிடம் நான் செவியேற்ற இந்த அத்தியாயத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களே எனக்கு (நீர் ஓதியதற்கு மாற்றமாக) ஓதிக் கொடுத்தார்கள்' என்று கூறியபடி அவரை இழுத்துக்கொண்டு இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்களிடம், '(இறைத்தூதர் அவர்களே!) தாங்கள் எனக்கு ஓதிக் கொடுக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் 'அல்ஃபுர்கான்' அத்தியாயத்தை இவர் ஓதக் கேட்டேன். இந்த அத்தியாயத்தை நீங்கள் எனக்கு (வேறு முறையில்) ஓதிக் கொடுத்துள்ளீர்கள்' என்று சொன்னேன். அப்போது, நபி(ஸல்) அவர்கள், 'ஹிஷாமே, அதை ஓதுங்கள்!' என்றார்கள். உடனே அவர் நான் அவரிடமிருந்து செவியேற்றபடியே (நபி(ஸல்) அவர்களுக்கு முன்னாலும்) ஓதிக் காட்டினார். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் 'இப்படித்தான் (இந்த ) அருளப்பெற்றது' என்று கூறினார்கள்.

     பிறகு (என்னைப் பார்த்து), 'நீங்கள் ஓதுங்கள், உமரே!' என்று கூறினார்கள். எனக்கு அவர்கள் ஓதிக் கொடுத்தபடி நான் ஓதினேன். (அதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இப்படித்தான் (இந்த ) அருளப்பெற்றது' என்று கூறிவிட்டு, இந்தக் குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டுள்ளது. எனவே, உங்களுக்கு அதில் சுலபமானது எதுவோ அதை ஓதிக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள். (புகாரி 5401)
           ஒரே கோத்திரத்தார் மத்தியில் ஓதலில் மாறுபாடு இருக்கிறது எனும் போது நிச்சயம் அஹ்ரூஃப் என்பது வாட்டார மொழியிலான மாறுபாடு அல்ல என்பது தெளிவாகிறது. மேலும் நபி(சல்) அவர்கள் இந்த ஏழு அஹ்ரூஃபை அல்லாஹ்விடம் வேண்டி பெற்றதின் நோக்கம் தனது சமூகத்தின் மாறுபட்ட கோத்திரத்தாரின் சிரமத்தை கருத்தில் கொண்டு அல்ல மாறாக தனது சமூகத்தில் இருக்கும் புத்தகத்தை வாசிக்க முடியாத மக்களுக்காக என்பது தெளிவாக பின்வரும் செய்தி கூறுகிறது. 

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ لَقِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جِبْرِيلَ فَقَالَ يَا جِبْرِيلُ إِنِّي بُعِثْتُ إِلَى أُمَّةٍ أُمِّيِّينَ مِنْهُمُ الْعَجُوزُ وَالشَّيْخُ الْكَبِيرُ وَالْغُلاَمُ وَالْجَارِيَةُ وَالرَّجُلُ الَّذِي لَمْ يَقْرَأْ كِتَابًا قَطُّ قَالَ يَا مُحَمَّدُ إِنَّ الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ
    அல்லாஹ்வின் தூதர் (சல்) அவர்கள் ஜிப்ரீலை சந்தித்து கூறினார்கள்; ஜிப்ரீலே! நான் எழுத படிக்க தெரியாத சமூகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளேன். அதில் புத்தகத்தை ஓத முடியாத வயதான பெண்களும், ஆண்களும், சிறுவர்களும் சிறுமிகளும் இருக்கிறார்கள். அதற்கு “முஹம்மதே: நிச்சயமாக இந்த குர்ஆன் ஏழு அஃரூஃப்களில் அருளப்பட்டுள்ளது என்று (ஜிப்ரீல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: உபை இப்னு காஃப் நூல்:திர்மிதி 2944)
மேற்குறிபிட்ட செய்தி தெளிவாக உணர்த்துகிறது குர்ஆன் ஏழு அஃரூஃபில் வழங்கப்பட்டது மக்களின் ஓதலை எளிமையாகத்தான்.
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

        (ஒரு முறை) நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு மனிதர் (பள்ளிவாசலுக்குள்) வந்து தொழலானார்; (தொழுகையில் குர்ஆன் வசனங்களை) ஒரு விதமாக ஓதினார். அதை நான் அறிந்திருக்கவில்லை. பிறகு மற்றொருவர் வந்து (அதே வசனங்களை) முதலாமவர் ஓதியதற்கு மாற்றமாக ஓதித் தொழலானார். தொழுகை முடிந்ததும் நாங்கள் அனைவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். நான் "இவர் குர்ஆனை நான் அறிந்திராத (ஓதல்) முறையில் ஓதினார். பின்னர் மற்றவர் வந்து முதலாமவர் ஓதியதற்கு மாறாக (அதையே) வேறு முறையில் ஓதினார்" என்றேன். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் ஓதிக் காட்டும்படி பணித்தார்கள். அவ்விருவரும் ஓதினர். நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரும் சரியாகவே ஓதினர் எனக் கூறினார்கள். (இதைக் கேட்டவுடன்) என் உள்ளத்தில் நபியவர்கள் பொய்யுரைக்கிறார்கள் என்ற எண்ணம் விழுந்தது. அறியாமைக் காலத்தில்கூட இத்தகைய எண்ணம் எனக்கு ஏற்பட்டதில்லை. என்னை ஆட்கொண்டிருந்த (அந்த எண்ணத்)தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டபோது என் நெஞ்சில் ஓர் அடி அடித்தார்கள். (அடி விழுந்ததும்) எனக்கு வியர்த்துக் கொட்டியது. அச்சத்தால் எனக்கு அல்லாஹ்வே காட்சியளிப்பதைப் போன்றிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் "உபை, "குர்ஆனை ஓர் ஓதல் முறைப்படி ஓதுவீராக" என எனக்கு (இறைவனிடமிருந்து) செய்தியறிவிக்கப்பட்டது. உடனே நான் என் சமுதாயத்தாருக்கு இன்னும் சுலபமாக்கும்படி (இறைவனிடம்) கோரினேன். அப்போது "குர்ஆனை இரண்டு ஓதல் முறைப்படி ஓதுவீராக!" என எனக்கு இரண்டாவது முறையாக இறைவன் அறிவித்தான். உடனே நான் இன்னும் என் சமுதாயத்தாருக்கு சுலபமாக்கும்படி கோரினேன். மூன்றாவது முறையில் குர்ஆனை ஏழு ஓதல் முறைகளின் படி ஓதும்படி எனக்கு இறைவன் அறிவித்தான். மேலும், "நீர் கோரிய (மூன்று கோரிக்கைகளில்) ஒவ்வொரு கோரிக்கைக்கும் பகரமாக என்னிடம் உமக்கு ஓர் (அங்கீகரிக்கப்பட்ட) பிரார்த்தனை உண்டு" என்றும் (இறைவன்) கூறினான். எனவே நான் "இறைவா! என் சமுதாயத்தாரை மன்னிப்பாயாக! இறைவா! என் சமுதாயத்தாரின் குற்றங்குறைகளை மறைப்பாயாக!" என (இரண்டு) பிரார்த்தனை செய்தேன். (இவ்விரு பிரார்த்தனைகள் அல்லாமல்) மூன்றாவது பிரார்த்தனையை நான் ஒரு நாளைக்காகத் தாமதப்படுத்தி (பத்திரப்படுத்தி) வைத்துள்ளேன். அந்நாளில் படைப்பினங்கள் அனைத்தும் என்னிடம் (பரிந்துரைக்கும்படி) ஆவலுடன் வருவார்கள்; இப்ராஹீம் (அலை) அவர்கள் உட்பட" எனக் கூறினார்கள்.(முஸ்லிம் 1491)
   மேற்குறிபிட்ட செய்திகளை காணும் போது மக்களுக்கு எளிமையாக்கவும்,ஓதுவதில் ஏற்படும் சிக்கலினால் , அல்லாஹ் அருளியதற்கு மாற்றமாக மக்கள் ஓதுவதற்கு அவர்களுக்கான சலுகையாகத்தான் ஏழு அஹ்ரூஃப் வழங்கப்பட்டது என்பதை மேற்குறிபிட்ட ஹதீஸ்கள் தெளிவாக உணர்த்துகின்றன.மேலும் அந்த ஏழு அஹ்ரூஃப்பும் ஒரே பொருளைத்தான் கொண்டிருக்கின்றன என்பதை பின்வரும் செய்தியும் உறுதி படுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

        ஒரேயொரு அஹ்ரூஃபின்படி (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (குர்ஆனை) எனக்கு ஓதக் கற்றுத்தந்தார்கள். அதை இன்னும் பல அஃரூஃப்களின்படி எனக்கு ஓதக் கற்றுத்தருமாறு அவர்களிடம் நான் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். (நான் கேட்கக் கேட்க) எனக்கு அவர்கள் அதிகப்படுத்திக்கொண்டே வந்து இறுதியில் ஏழு அஹ்ரூஃப்கள் அளவிற்கு வந்து நின்றது.

         இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

        அந்த ஏழு அஃரூஃப்கள் ஒரே கருத்தை பிரதிபலிப்பவையே ஆகும்; அனுமதிக்கப் பெற்றவை (ஹலால்) தடை செய்யப்பெற்றவை (ஹராம்) விஷயத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்தைத் தருபவை அல்ல. 

- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.(முஸ்லிம் 1490)

மேற்குறிபிட்ட செய்திகளில் இருந்து பார்க்கும் போது பின்வரும் முடிவுகளை பெற முடியும்

1. ஏழு அஹ்ரூஃப் என்பது மக்களுக்கு ஓதலில் இருக்கும் சிரமத்தை குறைக்க அல்லாஹ்வால் வழங்கப்பட்ட சலுகை. ஓதலுக்கான பிரத்தியேக சலுகை மட்டுமே. 

2. ஏழு அஹ்ரூஃப் இடையே கருத்து முரண்பாடு இல்லை.
       மக்களின் சிரமத்தால் ஓதலில் மட்டுமே ஏற்படும் மாறுபாடு என்பதை மேலே கூறும் செய்திகள் தெளிவு படுத்துகிறது. இந்த அஹ்ரூஃப் நிச்சயம் வட்டார வழக்கு இல்லை என்பது தெளிவாகிறது. மேலும் இவ்வாறு ஏற்படும் மாறுபாடு செயல்வடிவத்தில் எந்த முரணையும் ஏற்படுத்தாது. நாம் முன் சென்ற தொடரில் மக்களின் பெரும்பான்மை ஓதல் குறித்து விளக்கியிருந்தோம். அதுவே செயல் வடிவத்திற்கான நபி(சல்) அவர்களது இறுதி ஓதல். மக்கள் சிரமத்தினால் மாற்றி ஓதினாலும் கிராத் அல் ஆம்மாவின் அடிப்படையிலேயே செயல் வடிவம் இருக்கும். அதுதான் நபி(ஸல்) அவர்களது இறுதி ஓதலான் அர்தா அல் ஆகீரா ஆகும்.

       உதாரணமாக அல் குர்ஆன் 5:6 எடுத்து கொண்டோமென்றால்,  أَرْجُلَكُمْ - உங்கள் கால்களை இரு கணுக்கால் வரைக் கழுவிக் கொள்ளுங்கள் என்பது பெரும்பான்மை ஓதல். தூரியின் ஓதல் أَرْجُلِكُمْ - உங்கள் கால்களை இரு கணுக்கால் வரைக் தடவிக் கொள்ளுங்கள் என்பதாகும். ஆனால் தூரியின் ஓதலை பின்பற்றும் சூடான் போன்ற நாட்டில் கூட மக்கள் ஓழு செய்யும் போது கால்களை கழுவுவதையே காண முடியும். அதே போல் அல் குர்ஆன் 2:184 مِسْكِينٍ - அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் என்பது பெரும்பான்மை ஓதல். مَسَاكِين - அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக -  மிஸ்கீன்களுக்கு (ஏழைகளுக்கு) உணவளிக்க வேண்டும் என்பது வர்ஸ் மற்றும் காலுனின் ஓதல். ஆனால் வர்ஸ் கிராததை ஓதும் மக்கள் ஒரு ஏழைக்கு உணவளிப்பதையே பின்பற்றுகிறார்கள். இதில் கருத்து வேறுபாடு கொள்வதில்லை. ஆக ஜுஹ்ரி அவர்கள் கூறுவதை போன்று, மக்கள் எது செயல்பாட்டிற்கான பெரும்பான்மையினர் ஓதல் என்பதையும் எது ஓதுவதற்கான் சலுகை என்பதையும் அறிந்துவைத்திருக்கிறார்கள்.

        இந்த அடிப்படை விசயம் தெரியாமல் தான் தங்களை முன்னால் முஸ்லீம் என்று கூறிக்கொள்ளும் சிலரும், மிசனரிகளும் இதை கேள்வியாக கேட்டு தங்களை அறிவு ஜீவிகள் போன்று படம் காட்டித்திரிகின்றனர்.

ஏழு அஹ்ரூஃப் என்பது இலக்கண மாறுபாடுகள் மட்டுமா????

   ஏழு அஃரூஃப் என்பது குறித்து மிக நீண்ட கருத்துரையாடல்கள் இஸ்லாவரலாற்றில் காணமுடியும். அவற்றுள் ஒரு சாரார் இது ஏழு வட்டார வழக்கு என்று வாதிடுகின்றனர். அந்த கருத்தின் பலவீனத்தை அறிந்தோம். இது அல்லாமல் மற்றொரு முக்கியமான கருத்து சொல்லின் இலக்கண அடிப்படையில் ஆனது. ஒருமை, பன்மை , ஆண்பால், பெண்பால், செய்வினை, செய்யப்பாட்டுவினை, என்று இலக்கண அடிப்படையிலான மாறுதல்கள், உயிர் குறியீட்டில் ஏற்படும் மாற்றம் என்று பல அறிஞர்கள் பல இலக்கண அடிப்படியிலான மாறுபாடுகளை இதுதான் ஏழு மாறுபாடுகள் என்று வாதிக்கின்றனர். எந்த ஏழு இலக்கண அலகுகள் என்பதில் இந்த அறிஞர்களிடம் ஒத்த கருத்து இல்லை. ஆக இந்த கருத்தும் முழுமையானது அல்ல.


     இவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருக்கும் ஒரு விசயம் அன்றைய சமூகத்திற்கு எந்த குழப்பத்தையும் தோற்றுவிக்கவில்லை என்றால், அது குறித்து எந்த நபித்தொழர்களும் எந்த கேள்வியையும் எழுப்பவில்லை என்றால் அதன் பொருள் நிச்சயம் அவர்கள் புரிந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

            மேற்குறிபிட்ட இரண்டு கருத்துக்கள் அல்லாமல்  தற்கால அறிஞர்களிடம் வேறு ஒரு கருத்தும் உள்ளது.  ஏழு அஃரூஃப் என்பது ஒரு வசனத்தை ஓதுவதில் இருக்கும் உட்சபட்ச மாறுபாட்ட முறைகள் ஏழு ஆகும். அதாவது ஒரு வசனத்தை அதிகபட்சமாக ஏழு மாறுபட்ட முறைகளில் ஓத முடியும். நபி(சல்) அவர்களது அங்கீகாரத்தின் அடிப்படையிலும், அரபு இலக்கணத்தின் அடிப்படையிலும் அதற்கு மேல் மாற்றி ஓத இயலாது . இதை தற்கால அறிஞரான அப்துல் அஜீஸ் அல் காரி தனது நூலான “ ஹதீஸ் அல் அஃரூஃப் அல் ஸபாஹ்”ல் விரிவாக விளக்கியுள்ளார். இதுதான் இந்த விசயத்தில் நமது கருத்தும் ஆகும். 


    அஹ்ரூஃப் என்பது குர்ஆன் வசனங்களை, நபி(சல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட மாறுபாட்டுடன் ஓதுவதாகும். கிராத் என்பது ஓதல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. மேற்குறிபிட்டபடி ஒரு காரி, சில வசனங்களை நபி(சல்) அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட மாறுதலுடன் பெரும்பான்மை ஓதலில் இருந்து மாறுபட்டு ஓதுகிறார் என்றால் அது ஒரு கிராத் என்றழைக்கப்படும்.

     குர்ஆனை பொருத்தவரை குர்ஆனின் கிராத்தும்- ஓதலும் வஹியால் கட்டுப்படுத்தப்பட்டது ஆகும். அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
குர்ஆனை திருத்தமாக ஓதூவீராக.(அல்குர்ஆன் 73:4)
         மேற்குறிபிட்ட வசனத்தில் تَرْتِيلًا என்பதின் பொருள் சரியான அளவீட்டின் படி என்பது பொருளாகும். ஆக ஓதுவதும் வஹியால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் நபித்தொழர்கள் குர்ஆனின் கிராத் குறித்து பின்வருமாறு கூறுகின்றனர்.
حَدثنِي مُحَمَّد بن الجهم قَالَ حَدثنَا عبد الله بن عَمْرو بن أبي أُميَّة الْبَصْرِيّ قَالَ أخبرنَا عبد الرَّحْمَن بن أبي الزِّنَاد عَن أَبِيه عَن خَارِجَة بن زيد بن ثَابت عَن أَبِيه قَالَ الْقِرَاءَة سنة فَاقْرَءُوهُ كَمَا تجدونه
    ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறியதாவது ஓதல் என்பது நபிவழியாகும். ஆகவே அதை உங்களிடம் வந்தவாறே ஓதுங்கள்.(கிதாப் அல் ஸபாஹ் ஃபீ கிராத் 1/50) 
حَدثنِي عبد الله بن سُلَيْمَان قَالَ حَدثنَا عَمْرو بن عُثْمَان الْحِمصِي قَالَ حَدثنَا إِسْمَاعِيل بن عَيَّاش عَن شُعَيْب بن أبي حَمْزَة عَن مُحَمَّد بن الْمُنْكَدر قَالَ سمعته يَقُول قِرَاءَة الْقُرْآن سنة يَأْخُذهَا الآخر عَن الأول قَالَ وَسمعت أَيْضا بعض أشياخنا يَقُول عَن عمر بن الْخطاب وَعمر بن عبد الْعَزِيز مثل ذَلِك 
       உமர் அல் கத்தாப்(ரலி) கூறியதாவது: குர்ஆனின் கிராத் என்பது நபிவழியாகும். அதை முன்னவரிடம் இருந்து பின்னவர் எடுத்துக்கொள்வதாகும்.(கிதாப் அல் ஸபாஹ் ஃபீ கிராத் 1/51) 
     கேட்டவாறு ஓதுவதுதான் நபிவழி என்பதால், கிராத் என்பது நபி(சல்) அவர்களிடம் இருந்து எவ்வாறு நபிதோழர்கள் பெற்றார்களோ , அவ்வாறே அவர்களிடம் இருந்து தாபீயீன்கள் பெற்றார்கள். அவர்களிடம் இருந்து ஏனையோர் பெற்றார்கள். ஏழு அஹ்ரூஃபிற்கு அனுமதி இருப்பதால் மனம் போன போக்கில் வசனத்தில் இருக்கும் வார்த்தைகளை மாற்ற முடியாது. 

அதனால்தான் இப்னு அத்தியா பின்வருமாறு கூறுகிறார்கள்; 
       அல்லாஹ் ஏழு அஹ்ரூஃபை நபி(சல்) அவர்களுக்கு அனுமத்தித்ததும், அதன்படி ஜிப்ரீல் கொண்டுவந்ததும், உருவாக்க இயலாமை மற்றும் துள்ளிய ஓத்திசைவு ஆகியவற்றை உறுதி படுத்துவதாகவே இருந்தது. நபி(சல்) அவர்களது சொல்லான “உங்களுக்கு எது எளியதோ அவ்வாறு ஓதுங்கள் “ என்பது நபித்தோழர்கள் தாங்கள் விரும்பிய எதாவது ஒரு ஹர்ஃபில் சொற்றொடரை மாற்றியமைப்பதற்கான அனுமதியன்று. அப்படி இருக்குமாயின் குர்ஆன் உருவாக்க முடியாததாக இருக்காது, மக்கள் அதையும் இதையும் மாற்றி, அது அல்லாஹ் அருளாத வேறொன்றாக மாறியிருக்கும். நபி(சல்) அவர்களுக்கு ஏழு அஹ்ரூஃபின் அனுமதியானது அவர்களது சமூகத்திற்கு எளிமை படுத்ததான் அல்லாஹ்வால் வழங்கப்பட்டது. உபை அவர்களக்கு ஜிப்ரீல் கொண்டு வந்ததும் நபி(சல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள். இப்னு மஸுத் அவர்களுக்கும், அவர்களுக்கு (நபி(சல்) வழங்கப்பட்டதை ஓதிக்காட்டினார்கள்.(தஃப்ஸீர் குர்துபி 1/48)
       மேலும் கிராத் என்பது அரபு இலக்கணத்திற்கு பொருந்த வேண்டும் எனும் சரத்திற்கு குர்ஆனில் இடம் பெறும் இந்த வசனம் அடிப்படையாக அமைந்துள்ளது.
எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார். (அல்குர் ஆன் 26:193-195)
அவர்கள் (நம்மை) அஞ்சுவதற்காக அரபு மொழியில் எவ்விதக் கோணலும் இல்லாத குர்ஆனை அருளினோம்.(அல் குர்ஆன் 39:28).
             நபி(ஸல்) அவர்களது அங்கீகாரம் மற்றும் அரபு இலக்கணம் ஆகிய இரண்டு சரத்துக்களும் எண்ணிலடங்கா ஓதலாக குர்ஆன் இருப்பதை கட்டுக்குள் வைக்கிறது. அதனால்தான் கிபி 150ல் வாழ்ந்த அபூ உபைத் அவர்களால் 25 கிராத்களை மட்டுமே ஆதாரப்பூர்வமானதாக காண முடிந்தது. ஏழு அஹ்ரூஃபில் ஓதலாம் என்ற சலுகையை இரண்டு சரத்துகள் கட்டுப்படுத்தியதால் இது சாத்தியமானது. அடுத்ததாக இப்னு முஜாஹித் அவர்கள் கிபி 900ல் அதில் ஏழு கிராத்தை நபி(சல்) அவர்களின் நேரடி அறிவிப்பாளர் தொடருடன் கூடிய வெகுஜன ஓதலாக சரிகண்டார்கள். அதுதான் இன்றுவரை இருக்கும் ஏழு கிராத்கள் ஆகும். நாம் முன்பே குர்ஆன் எப்படி கற்றுக்கொடுக்கப்பட்டது என்பதை விளக்கியுள்ளோம். வெகுஜன மக்கள் ஓதுவார்கள், அதை வெகுஜன மக்கள் கற்பார்கள். இதனால்தான் தனித்த ஓதல்கள் மறுக்கப்படுகிறது. எனவே  தற்காலத்தில் இருக்கும் பெரும்பான்மை ஓதல் அல்லாத ஏனைய முத்தவாதீரான ஓதல்களும் நபி(ஸல்) அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட ஓதல்கள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


       இன்றைய கிறித்தவ மிசனரிகள் மற்றும் இஸ்லாமோஃபோபுகளின் மூல ஆதாரமாக விளங்கும் ஆன்சரிங்க் இஸ்லாம் வலைதளத்தில் சாமூவேல் கிரீன் குர்ஆனின் மாறுபட்ட ஓதல்கள் பற்றி எழுதிய கட்டுரையில் வர்ஸிற்கும் ஹஃப்ஸுக்கும் (இதை நாம் பெரும்பான்மை மக்களின் ஓதல் என்று கூறுகிறோம்) இடையில் 1354 வேறுபாடுகள் இருப்பதாக கதை அளந்துள்ளார். இது குறித்து இங்கு விளக்க வேண்டும் . எழுத்து வடிவங்களின் அடிப்படையில் ஹஃப்ஸ் மற்றும் வர்ஸுக்கு இடையே 51 அங்கிகரிக்கப்பட்ட  மாறுபாடுகள் உள்ளது. சில வட்டார மொழிகளில் சில எழுத்துக்களை அலிஃபுடன் கூடிய ஃபத்தாவை( நெடில் ‘அ’) நெடில் ‘எ’ என வாசிப்பார்கள். இத்தகைய உச்சரிப்பையும் உள்ளடக்கினால்தான் 1354. அதே போல் குர்ஆனில் 10243 வேறுபாடு உள்ளதாக கதை விட்டுள்ளார். அதுவும் அது போலத்தான் . அவர் அதற்கு ஆதாரமாக مـعـجـم الـقـراءات الـقـرآنـيـة مـع مـقـدمـة فـي الـقـراءات لأشـهـر الـقـراء என்ற நூலில் 10243 என்று கூறப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அதன் இறுதி அத்தியாயத்தின் படத்தையும் இணைத்துள்ளார். 



அதில் கூறிய படி ஹஃப்ஸின் ஓதலுக்கும், அல் தூரியின் ஓதலுக்கும் என்ன வேறுபாடு என்பதை கேட்போம்.
அல் தூரியின் ஓதல்


ஹஃப்ஸின் ஓதல்


           மேற்குறிபிட்ட மாறுபாட்டை இமாலா என்ற பதத்தால் مـعـجـم الـقـراءات الـقـرآنـيـة مـع مـقـدمـة فـي الـقـراءات لأشـهـر الـقـراء நூல் ஆசிரியர் கூறியுள்ளார். அவர் கூறிய உதாரணத்தில் மலிக்கினாஸ் என்பது ஹஃப்ஸின் ஓதல் என்றால் மலிக்கினேஸ் என்பது தூரியின் ஓதல். இத்தகைய உச்சரிப்பு மாறுபாடுகளையும் சேர்த்துதான் மொத்தம் 10243. இந்த அடிப்படை கூட தெரியாத ஒரு கூமுட்டைத்தான் இவர்களுக்கு ஆதாரம் என்றால்….சாமூவேல் கிரீன் போன்றவர்கள் இந்த இஸ்லாமோஃபோபுகளையும், கிறித்தவ மிசனரிகளையும் என்ன நினைத்துள்ளார் என்று விளங்கிக்கொள்ள வேண்டும். இதையும் ஆதாரமாக இந்த கூமுட்டைகள் தூக்கித்திரிகிறார்கள்.

மேற்குறிபிட்ட மொத்த கட்டுரையில் இருந்து பின்வரும் முடிவுகளை அடைய முடியும்:
1. அஹ்ரூஃப் என்பது மக்கள் ஓதும்போது ஏற்படும் சிரமத்தை குறைக்க அல்லாஹ்வால் வழங்கப்பட்ட சலுகை ஆகும்.

2. இது சலுகை என்பதை மக்கள் புரிந்து கொண்டதால்தான் சட்ட விளக்கங்களை பெரும்பான்மை ஓதலில் அதாவது நபி(சல்) அவர்களது இறுதி ஓதலில் இருந்து எடுத்துக்கொள்கிறார்கள். 

3. ஏழு அஹ்ரூஃப் என்பது ஒரு வசனத்தை இலக்கண அடிப்படையிலும், மொழிவழக்கின் அடிப்படையிலும் மாறுபட்டு ஓதுவதற்கான உட்சபட்ச வரம்பாகும். ஹர்ஃப் என்பதற்கு வரம்பு என்ற பொருளும் உண்டு என்பது குறிப்பிடதக்கது.

4. கிராத் என்பது அஹ்ரூஃபின் அடிப்படையில் தோன்றும் எண்ணிலடங்கா ஓதல்களாகும். அங்கிகரிக்கப்பட்ட ஓதல் என்பதை 1) நபி(சல்) அவர்களது அங்கீகாரிக்கப்பட்ட வெகுஜன ஓதல்முறையும், 2)அரபு இலக்கணமும் கட்டுப்படுத்துகிறது. அதனால்தான் 7 முத்தவாதீரான கிராத்களை மட்டுமே இன்று காண முடிகிறது.

5. மேற்குறிபிட்ட புரிதலின் அடிப்படையில் குர்ஆனை எழுத்து வடிவில் கொண்டுவரும் போது எண்ணிலடங்கா கிராத்தில் கொண்டு வர இயலாது. ஏதேனும் ஒரு ஓதலில்தான் தொகுக்க இயலும். அதனால்தான் ஏழு மாறுபட்ட முறைகளிலும் குர்ஆனை  எழுத யாரிடமும் நபி(சல்) அவர்கள் கட்டளையிட்ட ஆதாரத்தை காண முடியவில்லை. அதனால்தான் உஸ்மான்(ரலி) அவர்களின் முஸ்ஹஃப் நபி(சல்) அவர்களது இறுதி ஓதலில் - அர்தா அல் ஆகிராவில் என்ற கிராத் அல் ஆம்மா- பெரும்பான்மை ஓதல் என்னும் ஓரே கிராத்தில் தொடுக்கப்பட்டது.  ஓதல் என்பதை மேற்குறிபிட்ட இரண்டு அலகுகள் கட்டுப்படுத்தும் போது மக்களே தாங்கள் கற்றவாறு ஓதிக்கொள்வார்கள். எழுத்து வடிவிலான மஸாஹிஃப் எந்த தாக்கத்தையும் ஓதலில் ஏற்படுத்தாது. அதனால்தான் ஒவ்வொரு முஸ்ஹஃபுடன் கிராத் அல் ஆம்மாவை ஓதும் காரிகளையும் அனுப்பிவைத்தார்கள். மக்கள் அதை புரிந்து கொண்டதால்தான் சட்டத்தை கிராத் அல் ஆம்மாவில் இருந்து எடுத்துக்கொண்டார்கள், ஓதலில் இருக்கும் சலுகையை பயன்படுத்தி ஓதிக்கொண்டார்கள்.

     மேற்குறிபிட்ட கருத்துக்களை புரிந்து கொண்டாலே போதும் கிறித்தவ மிசனரிகள் மற்றும் இஸ்லாமோஃபோபுகளின் மூன்று வாதங்களும் அதன் நோக்கமும்  எவ்வளவு மூடத்தனமாது என்பதை விளங்க . அல்லாஹு அஃலம்….