பக்கங்கள் செல்ல

Sunday, June 21, 2020

இஸ்லாம் கூறும் திருமண வயது


                நாம் சென்ற மூன்று தொடர்களாக ஏணைய மதங்கள் கூறும் திருமண வயது குறித்து கண்டோம். கிறித்தவ யூத மதங்கள் திருமண வயது குறித்து எந்த தெளிவான அறநெறிகளியும் வகுக்கவில்லை, அதனால் யூத கிறித்தவ வரலாற்றில் மூன்று வயதில் இருந்து திருமணம் செய்வித்தற்கான போதிய ஆதாரங்கள் சென்ற தொடர்களில் பதிந்துள்ளோம். மனித வாழ்வின் மிக முக்கியமான நிகழ்வான திருமணம் அதன் வயது குறித்த வழிகாட்டல்களே ஒரு இறை வேதத்தில் இல்லை என்பதை விளக்கியுள்ளோம். அடுத்ததாக இந்து மதத்தில் திருமண வயதிற்கான நெறிகள் காணப்பட்டாலும் பாலுறவுக்கான வயதாக சிறு வயதை கூறுவதை தெளிவு படுத்தியுள்ளோம். இன் ஷா அல்லாஹ் இந்த தொடரில் இஸ்லாம் கூறும் திருமண வயதும் அதன் குறிகாட்டிகள் எவை என்பதையும் விளக்குவோம்.

திருமண வயது:

            இஸ்லாம் திருமண குறித்து பேசும் போது இந்த வயதில்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணிட்டு குறிப்பிட வில்லை. மாறாக உயிரியல் குறிகாட்டிகளை(Biological Indicators) முன்வைக்கிறது. இது குறித்து முதலில் குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை காண்போம்.
وَابْتَلُوا الْيَتَامَى حَتَّى إِذَا بَلَغُوا النِّكَاحَ فَإِنْ آنَسْتُم مِّنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَلَا تَأْكُلُوهَا إِسْرَافًا وَبِدَارًا أَن يَكْبَرُوا وَمَن كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ وَمَن كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ فَأَشْهِدُوا عَلَيْهِمْ وَكَفَى بِاللَّهِ حَسِيبًا
அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;. அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்;. மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன்.(அல் குர்ஆன் 4:6) 
       மேற்குறிபிட்ட வசனம்தான் குர்ஆனில் மனிதனின் திருமண வயது குறித்து பேசும் வசனமாகும். அதாவது அனாதைகள் திருமண வயதை அடையும் வரை அவர்களது சொத்துக்களை பாதுகாத்து வைத்திருந்து அவர்களிடம் ஒப்படைத்தல் குறித்து பேசுகிறது. ஆக இஸ்லாம் பொறுத்தவரை திருமண வயது என்று ஒன்று உள்ளது என்பது தெளிவாகிறது. ஆக திருமண வயது என்று இஸ்லாம் வரையறுக்கும் வயது எது என்பதுதான் அடுத்த கேள்வி. நாம் குர்ஆனில் அநாதைகளின் சொத்துக்களை ஒப்புவிப்பது குறித்து இடம் பெறும் ஏனைய வசனங்களை காண்போம். 

وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ أَشُدَّهُ وَأَوْفُوا بِالْعَهْدِ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا 
அனாதையின் சொத்தை அவர் பருவ வயதை அடையும் வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும்.(அல் குர்ஆன் 17:34) 
وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ أَشُدَّهُ وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا ذَلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ 
அநாதையின் பொருளின் பக்கம் அவன் பருவ வயதை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை. நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து) கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான்.(6:152) 
          மேற்குறிபிட்ட இரண்டு தரப்பான வசனங்களையும் ஆய்வு செய்தோம் என்றால் அல் குர்ஆன் குறிப்பிடும் திருமண வயது வாலிப வயது என்பது புலப்படும்.

                                    بْلُغَ أَشُدَّهُ (1) = بَلَغُوا النِّكَاح
திருமண வயது = வாலிப வயது

      بْلُغَ أَشُدَّهُ என்பதின் அகராதியை பார்த்தோம் என்றால் முழுவயதை அல்லது பருவ வயதை அடைவதை குறிப்பிடுகிறது(1) மேலும் இந்த بْلُغَ أَشُدَّهُ குறித்து ஏனைய குர் ஆன் வசனங்களை காண்போம்  யூஸுஃப்(அலை) அவர்களது வரலாற்றில் ஒரு சிறு பகுதி…
وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَن نَّفْسِهِ وَغَلَّقَتِ الْأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ قَالَ مَعَاذَ اللَّهِ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ 
அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம். அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) "வாரும்" என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) "அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக் நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்" என்று சொன்னார்.(12:22-23) 
அதாவது வாலிபத்தை அடைதல் (بْلُغَ أَشُدَّهُ ) என்பது பாலுறவுக்கு தகுதியான வயது என்பதை தெளிவாக உணர்த்துகிறது மேலே உள்ள வசனம். அதுபோல் மனித வாழ்வின் பகுதிகள் குறித்து அல் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது. 

يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي رَيْبٍ مِّنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِّنُبَيِّنَ لَكُمْ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ وَمِنكُم مَّن يُتَوَفَّى وَمِنكُم مَّن يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِن بَعْدِ عِلْمٍ شَيْئًا وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنبَتَتْ مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ 
மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்); மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக் கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.(22:5)

மேலும் அல் குர்ஆன் 4:6 இல் இடம்பெறும்  بَلَغُوا النِّكَاح  என்பதை பின்வருமாறு முஜாஹித்(ரஹ்) அவர்கள் தனது தஃப்ஸீரில் விளக்குகிறார்கள் 

{حَتَّى إِذَا بَلَغُوا النِّكَاحَ} [النساء: 6] يَقُولُ: «إِذَا بَلَغُوا الْحُلُمَ»
بَلَغُوا النِّكَاح என்பது பருவ வயது (بَلَغُوا الْحُلُمَ) என்று விளக்குகிறார்.

         மேற்குறிபிட்ட வசனங்களையும் தஃப்ஸீர் விளக்கத்தையும் வாசிக்கும் யாரும் திருமண வயது بَلَغُوا النِّكَاح என்பது வாலிப வயதைத்தான் குறிக்கும் என்று புரிந்து கொள்ளலாம். ஆக இஸ்லாம் குழந்தை திருமணத்தை ஏற்கவில்லை என்பதற்கு மேற்குறிபிட்ட வசனங்களே போதிய சான்று. 

குழந்தைப்பருவம் மற்றும் வாலிப வயது என்பதின் வரைவிலக்கணம்:


               நாம் குர்ஆன் கூறிப்பிடும் போது மனித வாழ்வை மூன்று பகுதியாக பிரித்து இருப்பதை கண்டோம். அந்த பகுப்பு குறித்த இஸ்லாமிய நிலைபாடு என்ன என்று காண்போம்.
وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِن قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ 
இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம்மிக்கவன். (24:59)
மேலும் பருமடையாதவரின் நிலை குறித்து பின்வருமாறு நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்.
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ عَلِيٍّ، عَلَيْهِ السَّلاَمُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلاَثَةٍ عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ ابْنُ جُرَيْجٍ عَنِ الْقَاسِمِ بْنِ يَزِيدَ عَنْ عَلِيٍّ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم زَادَ فِيهِ ‏"‏ وَالْخَرِفِ ‏"‏ ‏.‏ 
நபி(சல்) அவர்கள் கூறியதாவது மூவரை விட்டும் எழுது கொள் உயர்த்தப்பட்டுள்ளது "தூங்குபவர் விழிக்கும் வரை, சிறுவன் பருவமடையும் வரை மற்றும் பைத்தியத்திற்கு பைத்தியம் தெளியும் வரை (அறிவிப்பாளர்: அலி(ரலி), அபூதாவூத் 4403)
      பருவமடையாதவர்களுக்கு இஸ்லாமின் கடமைகள் கட்டாயம் அல்ல. அவர்கள் செயல்கள் குறித்து எந்த பதிவும் செய்யப்படாது அவர்களுக்கு கடமைகள் குறித்த கேள்விகள் இல்லை என்பதைத்தான் மேற்குறிபிட்ட செய்தி குறிப்பிடுகிறது. 

பருவ வயது என்றால் எது: 

    பருவ வயது என்பது இஸ்லாமிய நெறிகளில் எது என்பதை அது தொடர்பான வார்த்தைகளை விளக்குவதில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். யூதர்களைப்போல் 3 வயதில் இருந்தே என்றெல்லாம் இஸ்லாமிய அறிஞர்கள் உளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பினவரும் குறிப்பு அதனை உறுதி செய்கிறது.

قَالَ الْمَاوَرْدِيُّ: ثُمَّ بَدَأَ الشَّافِعِيُّ بِذِكْرِ الصِّغَرِ وَحَدِّ الصِّغَرِ إِلَى زَمَانِ الْبُلُوغِ وَالْبُلُوغُ يَكُونُ بِخَمْسَةِ أَشْيَاءَ، ثَلَاثَةٌ مِنْهَا يَشْتَرِكُ فِيهَا الرِّجَالُ والنساء وهي: الاحتلام، والإنبات، وَالسِّنُّ، وَشَيْئَانِ مِنْهَا يَخْتَصُّ بِهِمَا النِّسَاءُ دُونَ الرِّجَالِ وَهُمَا الْحَيْضُ وَالْحَمْلُ.
فَأَمَّا الِاحْتِلَامُ فَإِنَّمَا كَانَ بُلُوغًا لِقَوْلِ اللَّهِ تَعَالَى:{وَإِذَا بَلَغَ الأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا} [النور: 59]
وَلِمَا رُوِيَ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ - أَنَّهُ قَالَ: " رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلَاثَةٍ " وَذَكَرَ مِنْهَا الصَّبِيَّ حَتَّى يَحْتَلِمَ.
وَالِاحْتِلَامُ هُوَ إِنْزَالُ الْمَنِيِّ الدَّافِقِ مِنْ رَجُلٍ أَوِ امْرَأَةٍ مِنْ نَوْمٍ أَوْ جِمَاعٍ أَوْ غَيْرِهِمَا.
وَأَقَلُّ زَمَانِ الِاحْتِلَامِ فِي الْغِلْمَانِ عَشْرُ سِنِينَ، تِسْعُ سِنِينَ وَاللَّهُ أَعْلَمُ.

மாவர்தீ கூறியதாவது : பிறகு ஷாஃபீ அவர்கள் குழந்தைப்பருவம் குறித்து கூறும்போது, “குழந்தைப்பருவம் என்பதின் வரம்பு பருவம் எய்தும்வரை என்பதாகும். பருவமடைதல் என்பது ஐந்து குறிகாட்டிகளை கொண்டது. அவற்றில் மூன்று ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவை. அவை: தூக்கத்தில் ஸ்கலிதமாதல், முடிமுளைத்தல் மற்றும் குறித்த வயதை அடைதல். ஆண்களில் இருந்து வேறுபட்டு பெண்களுக்கு மட்டுமே உரிய இரண்டு குறிகாட்டிகள்: மாதவிடாய் ஏற்படுவதும், குழந்தைப் பேறுக்கு தகுதியான நிலையில் இருத்தலும் ஆகும். இஹ்திலாம் (பருவவயதை) அடைவதை பொருத்தவரை , இது குறித்து அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான், “இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்;(அந்நூர்: 59).
மேலும் நபி(சல்) அவர்களது அறிவிப்பில் “ மூன்று பேரை விட்டும் எழுதுகோள் உயர்த்தப்பட்டுள்ளது: 1. சிறுவன் பருவமடையும் வரை , என்று இடம் பெறுகிறது. இஹ்திலாம் என்பது ஆணோ பெண்ணோ தூக்கத்திலோ, விளிப்பிலோ, உறவின் போதோ ஸ்கலிதமாதலை குறிப்பதாகும். இவவாறு ஸ்கலிதமாகும் குறைந்த பட்ச வயது, எங்களது பகுதியில்  10 வயது மற்றும் 9 வயதாகும். அல்லாஹ்வே அறிந்தவன்.(அல் மாவர்தீயின் அல் ஹாவி 6ம் பாகம், 343ம் பக்கம்) 
மேலும் சென்ற தொடரில்(2) ஷாஃபீ(ரஹ்) அவர்களது கருத்தான ஒன்பது வயதில் பூப்பெய்துவது குறித்த விளக்கத்தை கண்டோம். அதை மேற் குறிபிட்ட மாவர்தீ அவர்களும் உறுதி செய்கிறார். ஆக மேற்குறிபிட்ட இந்த விளக்கம் எது பருவ வயது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. மேலும் இஸ்லாம் திருமணம் குறித்த என்னவெல்லாம் கூறுகிறது என்பதை சுருக்கமாக கண்டால் இஸ்லாம் திருமண வயதாக எதை கூறுகிறது என்பதை நம்மால் விளங்க முடியும்.

கடமைகள் எந்த வயதில் கட்டாயம் ஆகும்

           நாம் சென்ற பகுதியில் கடமைகள் எப்போது கட்டாயம் ஆகும் என்பது குறித்த நபிமொழியை கண்டிருந்தோம். அல்லாஹ் பெண்களுக்கும் திருமணத்தில் கடமைகளும், பொறுப்புகளும்  இருப்பதாக குறிப்பிடுகிறான். 
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும்¹ அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இதற்குள் (இந்தக் காலகட்டத்துக்குள்) அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.(2:228)
    அய்லாவின் அதிகாரியாக இருந்த ருஸைக் இப்னு ஹகீம், வாதில்குரா கிராமத்தில், தாம் ஜும்ஆ நடத்தலாமா என இப்னு ஷீஹாபுக்கு எழுதிக் கேட்டார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அக்கிரமாத்தில் சூடான் நாட்டவரும் பிறரும் இருந்தனர். இப்னு ஷீஹாப், ஜும்ஆ நடத்துமாறு ருஸைக் இப்னு ஹகீமுக்குக் கட்டளையிட்டார்கள். இப்னு உமர்(ரலி) வழியாக ஸாலிம் அறிவிக்கும் பின்வரும் நபிமொழியை அதற்கு ஆதாரமாக காட்டினார்கள்.
"உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்கள். ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்."
"ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்" என்றும் கூறினார்கள் எனக் கருதுகிறேன். (புகாரி 893. )
  மேற்குறிபிட்ட அல் குர்ஆன் வசனமும், ஹதீஸும் திருமணத்தில் பெண்ணுக்கு கடமைகளும் பொறுப்புகளும் இருப்பதாக கூறுகின்றன. மேலும் அது குறித்து அவர்கள் விசாரிக்கவும் படுவார்கள் என்பது திருமணத்தில் பெண்கள் பூப்பெய்தி, அதன் அறிவை பெற்றிருக்க வேண்டும் என்பதற்கு போதிய சான்றாய் இருக்கிறது. 

நன்மை தீமையை தேர்வு செய்யும்  பெண்களை திருமணம் முடித்தல்
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ عَلِيٍّ، عَلَيْهِ السَّلاَمُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلاَثَةٍ عَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ وَعَنِ الْمَجْنُونِ حَتَّى يَعْقِلَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ ابْنُ جُرَيْجٍ عَنِ الْقَاسِمِ بْنِ يَزِيدَ عَنْ عَلِيٍّ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم زَادَ فِيهِ ‏"‏ وَالْخَرِفِ ‏"‏ ‏.‏ 
நபி(சல்) அவர்கள் கூறியதாவது மூவரை விட்டும் எழுது கொள் உயர்த்தப்பட்டுள்ளது "தூங்குபவர் விழிக்கும் வரை, சிறுவன் பருவமடையும் வரை மற்றும் பைத்தியத்திற்கு பைத்தியம் தெளியும் வரை (அறிவிப்பாளர்: அலி(ரலி), அபூதாவூத் 4403) 
நாம் மீண்டும் மீண்டும் இந்தசெய்தியை முன்வைக்கக்காரணம் இந்த செய்தி இஸ்லாமின் கடமைகள், பொறுப்புகள் எப்போது கட்டாயம் ஆகும் என்பதை புரியவே. 
وَلَا تَنكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ 
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.(2:221) 
وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை)களை மகிழ்வோடு (கொடையாக) கொடுத்துவிடுங்கள் - அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள்.(4:4) 

وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَ الَّذِي بِيَدِهِ عُقْدَةُ النِّكَاحِ وَأَن تَعْفُوا أَقْرَبُ لِلتَّقْوَى وَلَا تَنسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
2:237. அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (2:237) 
திருமணம் என்ற வழுவான ஒப்பந்தம்:

         இஸ்லாம் ஒரு ஒப்பந்தம் நிறைவேற சில நியபந்தனைகளை முன்வைக்கிறது அவை ஒப்பந்தத்தில் ஈடுபடும் இருவரும் பருவமடைந்திருக்க வேண்டும், இருவரும் அந்த ஒப்பந்ததை கையாளும் அறிவு பெற்றிருக்க வேண்டும் பின்பு அதற்கான சாட்சிகள் வேண்டும். இது அல் குர்ஆன்(4:6) அதாவது அநாதைகளிடம் சொத்தை ஒப்புவிக்க கூறப்படும் நிபந்தனைகளில் இருப்பது ஆகும். இதை அடிப்படையாக் கொண்டே ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் முன்வைக்கப்படுகிறது. இஸ்லாமை பொறுத்த வரை திருமணம் என்பதும் ஒப்பந்தமே. அதை பின்வரும் வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. 
அவர்களுக்கு மஹர் தொகையை முடிவு செய்து, தீண்டுவதற்கு முன் அவர்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் முடிவு செய்ததில் பாதி(யைக் கொடுப்பது கடமை). அப்பெண்களோ அல்லது திருமண ஒப்பந்தத்தில் அதிகாரம் உள்ள(கண)வரோ பெருந்தன்மையாக நடந்து கொண்டால் தவிர. (ஆண்களாகிய) நீங்கள் விட்டுக் கொடுப்பதே இறையச்சத்திற்கு நெருக்கமானது. உங்களுக்கிடையே (சிலருக்கு) இருக்கும் உயர்வை மறந்து விடாதீர்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (2:237)
وَكَيْفَ تَأْخُذُونَهُ وَقَدْ أَفْضَى بَعْضُكُمْ إِلَى بَعْضٍ وَأَخَذْنَ مِنكُم مِّيثَاقًا غَلِيظًا 
உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்து விட்ட நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்? (4:21) 
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.(2:228)
         மேற்குறிபிட்ட வசனங்கள் திருமணம் என்பது ஒப்பந்தம் என்றும் அதன் அடிப்படையில் பெண்களுக்கு கடமைகளும் உரிமைகளும் இருப்பதை உணர்த்துகிறது. மேலும் ஒரு ஒப்பந்தத்தில் எப்படி இருதரப்பாரும் ஏற்கும் நிபந்தனைகள் இருக்குமோ அது போன்று திருமண ஒப்பந்ததிலும் உண்டு. மேலும் இது குறித்த முடிவை பெண்ணிடம் கேட்பது கடமையாக்கப்பட்டுள்ளது.  அதாவது திருமணத்திற்கான அறிவு முதிர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும் என்பதைத்தான அது காட்டுகிறது அதனை பின்வரும் நபி மொழி உறுதி படுத்துகிறது. 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கன்னி கழிந்த பெண், தன் காப்பாளரைவிடத் தனது விஷயத்தில் (முடிவு செய்ய) மிகவும் தகுதி வாய்ந்தவள். கன்னிப் பெண்ணிடம் அனுமதி பெறப்பட வேண்டும். அவளது மௌனம் அவளது அனுமதி ஆகும். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம் 2776)
      ஆக திருமணம் என்ற ஒப்பந்தத்தின் உரிமைகளையும் கடமைகளையும் பொறுப்பேற்க பருவ வயது அவசியமான ஒன்று என்பதைத்தான் மேற்குறிபிட்ட குர்ஆன் வசனங்களும், ஹதீஸும் உறுதிபடுத்துகின்றன. இது போக் பெண்ணிற்கான விவாகரத்து தொடர்பான சட்டங்கள், உறவு கொள்ளும் சட்டங்கள் அனைத்தும் பூப்பெய்த பெண்ணிற்கானதாகத்தான் இருப்பது பெண் பூப்பெய்த பிறகுதான் திருமணத்திற்குரியவள் என்பதை உறுதிபடுத்துகிறது. 
      மேற்குறிபிட்ட விஷயங்கள் போக பெண் குழந்தைகளை பருவ வயது அடையும் வரை பராமரிப்பதை ஆர்வமூட்டவும் செய்கிறது இஸ்லாம் என்பது குறிபிடத்தக்கது. 
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும் வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்" என்று கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். (முஸ்லிம் 5127.)
           பெண்ணின் திருமணத்திற்கான தகுதி பருவ வயதும் ,பொறுப்புக்களை சுமப்பதற்கான அறிவு முதிர்ச்சியுமே என்பதற்கு மேற்குறிபிட்ட செய்திகளும் விளக்கமுமே போதுமானது. மேலும் பருவ வயதிர்கு இஸ்லாம் உயிரியல் குறிகாட்டிகளையே முன்னிலை படுத்துகிறது. இன்றும் பருவ வயது குறித்த விதிகளில் ஏற்படும் சிக்கல்தான் கற்பழிப்பு வழக்கில் கூட சிறார் நீதிமன்றங்களில் குற்றவாளிகள் விசாரிக்கப்படுகின்றனர் என்பதே உயிரியல் குறிகாட்டிகளை அளவீடாக கொள்வதின் நுட்பத்தை விளக்க போதிய சான்றாய் உள்ளது. மேலும் பருவம் அடைதல் மற்றும் அறிவு முதிர்ச்சி என்பது ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொர் வயதாக இருந்துள்ளதைத்தான் வரலாறுகள் நமக்கு காட்டுகின்றன. இஸ்லாம் ஒரே வயதை அதில் வரையறுக்காமல் அதற்கு உயிரியல் குறிகாட்டிகளை முன்னிலைபடுத்தியுள்ளது இது படைத்தவனின் மார்க்கம் என்பதற்கு போதிய சான்று. இன் ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் இஸ்லாம் கூறும் திருமண வயது குறித்த விஷயத்தில் அவதூறு பரப்பிகளால் வைக்கப்படும் விமர்சனத்திற்கான பதிலை காண்போம்…...


No comments:

Post a Comment