பக்கங்கள் செல்ல

Saturday, July 20, 2024

நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மாற்கின் படியான சுவிஷேசம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


    
புதிய ஏற்பாட்டின் நூல்களின் பாதுகாப்பு மற்றும் வரலாற்று ஆவாணங்களை நிலை குறித்து தொடராக கண்டு வருகிறோம். அந்த வரிசையில் அடுத்ததாக காணவிருப்பது மாற்கு சுவிஷேசமாகும். மாற்கு சுவிஷேசத்தை பொறுத்தவரை பீட்டரின் சீடர் அல்லது மொழிபெயர்ப்பாளரான மாற்கு என்பவரால் இயற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மாற்கு குறித்த வரலாற்று ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துவற்கு முன்பாக, யார் இந்த மாற்கு? என்பதையும், கிறித்தவ உலகம் எப்படி யார் இந்த மாற்கு என்பதில் தெளிவற்று நிற்கிறது என்பதையும் முதலில் காண்போம்.


    நாம் சென்ற கட்டுரையில் கண்டது போலவே மாற்கின் படியான சுவிஷேத்தின் எந்த இடத்திலும் இது மாற்கு எழுதியது என்பதற்கோ, நேரடியாக கண்ட சாட்சியம் என்பதற்கோ எந்த வெளிப்படையான செய்திகளையோ, நேரடியாக கண்ட சாட்சியங்கள் விவரிக்கும் முறையயோ இந்த சுவிஷேசம் பெற்றிருக்க வில்லை. இந்த மாற்கு யார் என்பது குறித்து கிறித்தவ உலகம் என்ன கூறிவருகிறது என்பதை முதலில் இங்கு காண்போம்.

    “இந்த சுவிஷேசத்தை எழுதிய மாற்கு, பேதுருவிற்கு நெருக்கமான மொழிபெயர்ப்பாளர் அல்லது விரிவுரையாளர் ஆவார். எனவே பேதுருவிடம் கேட்டே இந்த சுவிஷேசம் எழுதப்பட்டது” என்பது கிறித்தவ உலகம் இந்த சுவிஷேசம் குறித்து கூறிவருவதாகும். பின்வரும் வசனங்ககளில் குறிப்பிடப்படும் ஜான் மாற்கு என்பவர்தான் இந்த சுவிஷேசத்தின் எழுத்தாளர் என்று கிறித்தவ உலகம் கூறி வருகிறது.
அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். (அப்போஸ்தல நடபடிகள்  12:12)
பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.(அப்போஸ்தல நடபடிகள்  12:25) 
சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெபஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.
(அப்போஸ்தல நடபடிகள்  13:5) 
பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.(அப்போஸ்தல நடபடிகள்  13:13)

பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான். அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானை கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான். பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான். இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான். 
(அப்போஸ்தல நடபடிகள் 15:35-39)
என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.(பிலேமோன் 1:24) 
என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.(கொலோசெயர் 4:10)

லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.(2 தீமோத்தேயு 4:11)  
உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.(1 பேதுரு 5:13)

    மேற்குறிபிட்ட வசனங்களில் 1பேதுரு தவிர எந்த இடத்திலும் மாற்க் பேதுருவுடன் இணைந்து செயல் பட்டதாக அறியப்பட வில்லை. ஆனால் மேற்குறிபிட்ட புதிய ஏற்பாட்டின் தரவுகளும் முழுமைபெறாமல் சிக்கலை தோற்றுவிக்கிறது. பவுல் பிலேமோனிற்கு நிருபம் எழுதும் போது அவர் செசரியாபட்டணத்தில் சிறைக்காவலில் இருந்த போது எழுதியதாகும்.
பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி ஒரு நிருபத்தையும் எழுதினான்; ……………அவர்கள் செசரியாபட்டணத்தில் சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள். தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது: உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான்.( Acts 23:24-35)

இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்குத் தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான். (Acts 24:27) 

        மேற்குறிபிட்ட செய்திகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் இந்த சம்பவம் நடை பெற்றது என்பதை காட்டுகிறது. அதாவது செசரியாபட்டணத்தில் பேலிக்ஸ் மற்றும் பொர்க்கியுபெஸ்து ஆகிய இருவர் தேசாதிபதியாக இருந்த காலத்தில் என்று கூறுகிறது. ரோம வரலாற்றாளர் ஜோஸபஸின் படி கிபி 60ல் பேலிக்ஸின் ஆட்சிக்காலம் முடிகிறது. ஆக பேலிக்ஸின் ஆட்சிக்காலம் முடிவடையும் தருவாயில் பவுல் சிறையில் இரண்டாண்டு காலம் கழித்தார் என்றால் அது கிட்டதட்ட கிபி 59 முதல் 60 வரை உள்ள காலம்.

    மறுபுறம் 1பேதுரு நிருபம், பாபிலோனிய சபையில் இருந்து பேதுரு எழுதுவதாக கூறுகிறது. அன்று பாபிலோனிய சபை என்று எதுவும் இருக்கவில்லை. அது ரோம் திருச்சபையையே குறிக்கிறது என்று கிறித்தவ விரிவுரையாளர்கள் சப்பை கட்டு கட்டி வருகின்றனர்(1). அது ரோம் திருச்சபையை குறிக்கிறது என்று எடுத்துக்கொண்டால், பேதுருவின் ரோமின் ஊழியக்காலம் நீரோ மன்னனின் ஆட்சிக்காலத்தின் இறுதி பகுதி. அதாவது கிபி 64-68.(2). அதன் கடினத்தை கருத்தில் கொண்டே 1பேதுரு ரோமை, “பாபிலோனிய சபை” என்று கூறுகிறது என்று அனுமானிப்போம். கி.பி.60 வரை ஜான் மாற்கு தன்னுடன் கழித்ததாக பவுல் பிலேமோன், கொலோசெயர் ஆகிய நிரூபத்தில் கூறுவதை காணமுடிகிறது. அதன் பிறகும் தன்னிடம் அழைத்து வர பவுல் கூறுவதாக தீம்மோத்தியுவிற்கு கடிதம் எழுதியதை அறிய முடிகிறது. தீம்மோத்தியு தன்னுடைய ஊழியகாலத்தை துருக்கி நாட்டில் செலவிட்டதாக அப்போஸ்தல நடபடிகள் 20:4-5, மற்றும் யூஸுபியஸின் சர்ச் வரலாறு கூறுகிறது. இதற்கு முன்பும் பிறகும் மாற்கு பேதுருவிடம் சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே 1பேதுருவில் கூறப்படும் மாற்க்தான், பவுலின் ஊழியக்காரனான ஜான் மாற்கு என்பதையும், அவர்தான் மாற்கின் படியான சுவிஷேசத்தை எழுதினார் என்பதை ஆணித்தரமாக நிறுவ இயலாது. அனுமானிக்க கூட போதிய முகாந்திரம் இல்லை.

    மேலும் இதே சிறையில் இருக்கும் போது பவுல் எழுதிய நிருபமான ரோமர் 16:3-15 வரை, ரோம சபையில் இருந்த தனது வேலையாட்கள் முதற்கொண்டு பலருக்கு வாழ்த்து தெரிவிக்கும் பவுல் பேதுருவையே விட்டுவிட்டார், ரோமில் மாற்கு இருந்ததாக எந்த குறிப்பும் புதிய ஏற்பாட்டில் இல்லை. மேலும் அன்றைய காலத்தில் யூதர்கள் மத்தியில் மிகப்பிரபலமான 99 பெயர்களில் மாற்கு என்ற பெயரும் ஒன்று. அதிகமான யூதர்கள் அந்த பெயரை சூட்டிக்கொண்டிருந்தனர் (Ref: Jesus and the eyewitnesses by Richard Bauckham, Ch.4.Palestinian Jewish Names, Table 6: The 99 Most Popular Male Names among Palestinian Jews, 330 BCE-200 CE58). இந்நிலையில் மிக எளிமையாக கூறுவது என்றால், புதிய ஏற்பாட்டின் தரவுகளை கொண்டு பேதுருவுடன் தொடர்பில் இருந்த மாற்குதான், பவுலின் அடிமையாக இருந்த ஜான் மாற்கு என்று நிறுவ இயலாது. வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவல்களை ஒப்பு நோக்கும் போது இன்னும் சிக்கல்கள் எப்படி வருகிறது என்பதை காண்போம்.

வரலாற்று தரவுகளில் இருக்கும் குளறுபடிகள்:

    நாம் சென்ற தொடரில் நற்செய்தி நூல்களின் வரலாற்று தரவுகளை கண்டிருக்கிறோம். அந்த தரவுகளில் இருக்கும் குளறுபடிகள் என்ன என்ன என்பதை முதலில் காண்போம்.
👉மாற்கு சுவிஷேசம்தான் முதலில் எழுதப்பட்டதாக மொழியியல் மற்றும் உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டு நாம் அறிய இயலும். ஆனால் மேற்குறிபிட்ட ஆதாரங்கள் அனைத்தும் மத்தேயூவிற்கு பிறகு எழுதப்பட்டதாக கூறுகிறது. 

👉மாற்கு பேதுருவின் மரணத்திற்கு பிறகு மாற்கு சுவிஷேசத்தை எழுதியதாக ஐரீனியஸ் கூறுகிறார். ஆனால் அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் பேதுரு உயிருடன் இருக்கும் போதே எழுதியதாக கூறுகிறார். மேலும் அதனை பேதுரு கண்டுகொள்ளவில்லை என்று கூறுகிறார். ஆனால் கி.பி, 4ம் நூற்றண்டை சார்ந்த எபிஃபேனியஸ் பேதுருதான் மாற்கிற்கு சுவிஷேசம் எழுத கட்டளையிட்டதாக கூறுகிறார்.  

👉யோவான் கிறிசோஸ்தோம் மாற்கு எகிப்தில் சுவிஷேசம் எழுதியதாக கூறுகிறார். மேலே குறிபிட்ட அனைவரும் ரோமில் எழுதியதாக கூறுகிறார்கள்.
ஆரம்ப கால திருச்சபைகள் மாற்கின் படியான சுவிஷேசத்தை ஏற்றிருந்தன, என்றால் அதன் ஆசிரியரின் வரலாற்று குறிப்பில் ஏன் இத்துனை குளறுபடிகள். கி.பிக்கு முன்பே பலரும் அறிந்த நூல்களின், ஆசிரியர்களின் வரலாற்று குறிப்புகள்  தெளிவாக வரலாற்றில் பதிக்கப்பட்டிருக்கையில், அனைவரும் அறிந்த பரவலான நூலின் வரலாறு இவ்வளவு குளறுபடிகளுடன் இருக்காது. அதற்கு மாற்றமாக இங்கு இருப்பதை காணமுடிகிறது. எழுதப்படிக்க தெறியாத கூட்டத்திடம் இந்த நற்செய்தி நூல்கள் வந்து சேரவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இனி வரலாற்று தரவுகள் எப்படி புதிய ஏற்பாட்டின் தரவுகளுடன் மோதுகிறது என்பதை காண்போம்.


நாம் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே புதிய ஏற்பாட்டின் மாற்கு குறித்த குறிப்புக்கள் அரைகுறையாக, தெளிவற்றதாக இருப்பதை விளக்கியுள்ளோம். மேலே கொடுக்கப்பட்ட வரலாற்றுத்தரவுகள் மேலும் குளறுபடிகளை இங்கு அதிகப்படுத்துவதை கீழே காண்போம். 4ம் நூற்றாண்டிற்கு முன்புள்ள எந்த வரலாற்று தரவுகளும், எந்த இடத்திலும் மாற்கை பவுலுடன் இணைத்து கூறவில்லை. மாற்கை பேதுருவுடன் மட்டுமே இணைத்து கூறுகிறார்கள். 
Mark the disciple and interpreter of Peter wrote a short gospel at the request of the brethren at Rome embodying what he had heard Peter tell. When Peter had heard this, he approved it and published it to the churches to be read by his authority as Clemens in the sixth book of his Hypotyposes and Papias, bishop of Hierapolis, record. Peter also mentions this Mark in his first epistle, figuratively indicating Rome under the name of Babylon “She who is in Babylon elect together with you saluteth you and so doth Mark my son.” So, taking the gospel which he himself composed, he went to Egypt and first preaching Christ at Alexandria he formed a church so admirable in doctrine and continence of living that he constrained all followers of Christ to his example. Philo most learned of the Jews seeing the first church at Alexandria still Jewish in a degree, wrote a book on their manner of life as something creditable to his nation telling how, as Luke says, the believers had all things in common at Jerusalem, so he recorded that he saw was done at Alexandria, under the learned Mark. He died in the eighth year of Nero and was buried at Alexandria, Annianus succeeding him. ( Jerome, Lives of Illustrious Men. Chapter VIII, Mark)
பேதுருவின் சீடரும் மொழிபெயர்ப்பாளருமான மார்க், ரோமில் உள்ள சகோதரர்களின் வேண்டுகோளின் பேரில் பேதுரு சொன்னதைக் கேட்டு ஒரு சிறிய நற்செய்தியை எழுதினார். கிளெமென்ஸ் அவருடைய ஹைப்போடைபோஸ்ஸின் ஆறாவது புத்தகம் மற்றும் ஹைராபோலிஸின் பிஷப் பாபியஸ் பதிவின் படி, பேதுரு இதைக் கேட்டதும், அதை அங்கீகரித்து, படிக்கும்படி தேவாலயங்களுக்கு வெளியிட்டார், பேதுரு தனது முதல் நிருபத்தில், இந்த மாற்க்கை குறிப்பிடுகிறார். பாபிலோன் என்ற பெயரில் ரோமை அடையாளப்பூர்வமாகக் குறிப்பிடுகிறார் “உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்” எனவே, அவரே இயற்றிய நற்செய்தியை எடுத்துக் கொண்டு, அவர் எகிப்துக்குச் சென்று, முதலில் அலெக்ஸாண்டிரியாவில் கிறிஸ்துவைப் பிரசங்கித்து, கோட்பாட்டிலும், வாழ்வாதாரத்திலும் போற்றத்தக்க ஒரு தேவாலயத்தை உருவாக்கினார், அவர் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அனைவரையும் தனது முன்மாதிரிக்குக் கட்டுப்படுத்தினார். அலெக்ஸாண்டிரியாவில் உள்ள முதல் தேவாலயம் இன்றும் ஓரளவு யூதமயமாக இருப்பதை பார்த்த யூதர்களில் மிகவும் கற்றறிந்த ஃபிலோ, அவர்களின் வாழ்க்கை முறை பற்றி, அது எப்படி அவரது தேசத்திற்கு பெருமை சேர்க்கும்? என்று ஒரு புத்தகத்தை எழுதினார், லூக்கா சொல்வது போல, விசுவாசிகளுக்கு ஜெருசலேமில் எல்லா விஷயங்களும் பொதுவானவை, எனவே கற்றறிந்த மார்க்கின் கீழ் அலெக்ஸாண்டிரியாவிலும் இவ்வாறு நடந்ததைக் கண்டதாக அவர் பதிவு செய்தார். அவர் நீரோவின் எட்டாவது ஆண்டில் இறந்து, அலெக்ஸாண்ட்ரியாவில் அடக்கம் செய்யப்பட்டார், அவருக்குப் பிறகு அன்னியனஸ் பொறுப்பேற்றார். ( Jerome, Lives of Illustrious Men. Chapter VIII, Mark)
When Nero was in the eighth year of his reign, Annianus succeeded Mark the evangelist in the administration of the parish of Alexandria. (The Church History of Eusebius, Book 2, Chapter XXIV.—Annianus the First Bishop of the Church of Alexandria after Mark.)
நீரோ தனது ஆட்சியின் எட்டாவது ஆண்டில் இருந்தபோது, அலெக்ஸாண்டிரியாவின் திருச்சபையின் நிர்வாகத்தில் சுவிசேஷகரான மாற்கு மறைந்த பிறகு பிறகு அன்னியனஸ் பதவியேற்றார்.(The Church History of Eusebius, Book 2, Chapter XXIV.—Annianus the First Bishop of the Church of Alexandria after Mark.)
        புதிய ஏற்பாட்டின் செய்திகள், மாற்க் பேதுருவுடன் கிபி 64ல் ரோமில் ஓர் இடத்திலும், துருக்கியில் திமோத்தியுடன் இருந்ததாக மற்றோர் இட்த்திலும் கூறுகிறது. கூறுகிறது. வரலாற்று தரவுகள் கிபி 62ல் மாற்க் அலெக்ஸாண்டிரியாவில் மரித்து விட்டதாக கூறுகிறது புதிய ஏற்பாட்டின் செய்திகள், மாற்க் கிபி 60ல் பவுலுடன் இருந்ததாக கூறுகிறது. கிபி 60ல் பவுலுடன் பயணப்பட்ட மாற்கு கிபி 62ல் அலெக்ஸாண்டிரியாவில் மரித்து, பிறகு மீண்டும் பேதுருவுடன் கி.பி.64ல் ரோமில் வலம் வந்தாரா என்ன. இந்த பகுதிகள் ஒவ்வொன்றையும் அந்த காலத்தில் கடக்கவே இந்த ஆண்டுகள் போதுமானதாய் இருக்காது. அப்படி இருக்கையில் இது தெளிவான முரணாக இருக்கிறது. மேலே நாம் குறிபிட்ட கருத்துக்களை உறுதி படுத்தும் வண்ணம் ஹிப்போபோலிடஸ் (மரணம் கி.பி. 236), தனது “On the Seventy Apostles” என்ற நூலில், நற்செய்தியாளர் மாற்கு(வ.எண்:14), பார்னபாவின் உறவினர் மாற்கு(வ.எண்:56) மற்றும் ஜான் மாற்கு வ.எண்:65) ஆகிய மூவரையும் தனித்தனியே பிரித்து காட்டுகிறார்.

    எனவே மேற்குறிபிட்ட வாதங்களின் அடிப்படையில் வரலாற்று தரவுகளும், புதிய ஏற்பாட்டின் தரவுகளும் முரண்பட்டு நிற்பதை காண முடிகிறது. கிறித்தவ உலகின் நம்பிக்கையை உறுதி படுத்தும்படி குழப்பங்களற்ற ஆணித்தரமான ஆதாரங்கள் புதிய ஏற்பாட்டின் உள்ளேயும் வெளியேயும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.  எனவே மாற்கின் சுவிஷேசத்தின் உள்ளடக்கத்தை கொண்டு, யார் இந்த மாற்க் என்பதை உறுதி படுத்துவோம்.


    கிறித்தவ உலகின் நம்பிக்கையை உறுதி படுத்தும் வகையில், புதிய ஏற்பாட்டின் எந்த இடத்திலும் “மாற்காகிய நான் பேதுருவிடம் கேட்டு இந்த சுவிஷேசத்தை எழுதினேன்” அல்லது மாற்கு பேதுருவிடம் கேட்டு சுவிஷேசம் எழுதினார் என்று இடம் பெறவில்லை. அதன் உள்ளடக்கத்தை சற்று ஆய்வு செய்தோம் என்றால் இந்த சுவிஷேசத்தை எழுதியவர் நிச்சயம் மேலே கூறப்பட்ட பேதுருவின் விரிவுரையாளரும் அல்ல, பவுலின் அடிமையான ஜான் மாற்கும் அல்ல என்பது விளங்கும்


    மாற்கின் படியான சுவிஷேசத்தை ஆய்வு செய்தால் ஒரு விஷயம் தெளிவாக புலப்படும். அது, இயேசுவின் சீடரான பேதுருவிற்கு மட்டும் உரித்தான செய்திகள் மறைக்கப்பட்டிருப்பது அல்லது விடுபட்டிருப்பதாகும். உதாரணமாக பின்வரும் நிகழ்வை எடுத்துக்கொள்வோம்.
அதற்கு சீமோன் பேதுரு, “நீரே கிறிஸ்து, (ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்)” என்று பதிலளித்தான். இயேசு அவனிடம், “யோனாவின் குமாரனாகிய சீமோனே! நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். உனக்கு யாரும் அதைக் கற்பிக்கவில்லை. நான் யார் என்பதைப் பரலோகத்தில் இருக்கும் என் பிதா உனக்குக் காட்டினார். எனவே, நான் சொல்கிறேன். நீயே பேதுரு (பாறை போன்றவன்.) என் சபையை இப்பாறையின் மீது கட்டுவேன். மரணத்தின் வலிமை என் சபையை வீழ்த்த முடியாது.(மத்தேயூ 16:16-18)
    மேலே கூறப்படும் நிகழ்வில் இயேசுவை கிறிஸ்து என்று பேதுரு அறிக்கை இடுகிறார். அதற்கு பகரமாக இயேசு பேதுருவை ஆசீர்வதித்தும் உயர்த்தியும் பேசுவதை மத்தேயூவின் படியான சுவிஷேசத்தில் காணமுடிகிறது. ஆனால் மாற்கு சுவிஷேசம் இதே செய்தியை எப்படி இருட்டடிப்பு செய்கிறது என்று பார்ப்போம்.
அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான். அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார். (மாற்கு 8:29-30)
அதேபோல் பின்வரும் நிகழ்வையும் கவனிப்போம்.
அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான். நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார். நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லை என்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது. அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; (யோவான் 18:5-10)

    இயேசுவை கைது செய்யும் போது நிகழ்ந்ததை யோவான் சுவிஷேசம் பதிவு செய்துள்ளது. அது பேதுரு இயேசுவின் மீது கொண்டிருந்த பற்றை பட்டவர்த்தனமாக பதிவு செய்கிறது. ஆனால் மாற்கு சுவிஷேசம் எப்படி இந்த நிகழ்வை பதிவு செய்கிறது என்பதை பார்ப்போம்

அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார். அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். (மாற்கு 14:46-50)

அதேபோல் பின்வரும் நிகழ்வையும் கவனிப்போம்:

அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து, அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து, சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான். (யோவான் 20: 3-7)

மாற்கு சுவிஷேசத்தில் மேற்குறிபிட்ட செய்தி இடம் பெறவில்லை. உண்மையில் மாற்கு சுவிஷேசத்தை எழுதியவர் பேதுருவின் சீடராக இருக்கும் பட்சத்தில் பேதுருக்கு மட்டுமே உரித்தான் தகவல்கள் ஏன் இல்லாமல் போனது. இந்த செய்தி விடுபடுதல் என்பது மாற்கின் படியான சுவிஷேசத்தை எழுதியவர், நிச்சயம் பேதுருவின் விவரிப்பாளர் அல்ல என்பதை காட்டுகிறது.  


    மாற்கு ஆகமத்தை இயற்றிவர் ஜான் மாற்கு யூதர் என்று கிறித்தவ உலகம் கூறிவருகிறது. ஆனால் இந்த சுவிஷேசத்தில் இடம்பெறும் பல கருத்துகள் இதை இயற்றியவர் ஒரு யூதராக இருக்கமாட்டார் என்பதை ஆணித்தரமாக கூறுகிறது. உதாரணமாக பின்வரும வசனத்தை காண்போம்.   
எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.(மாற்கு 7:10)
        ஆதாவது மோசே கூறியதாக ஒரு சட்டத்தை ஏசு பரிசேயருக்கு விளக்குவதாக மாற்கு குறிப்பிடுகிறார். இது ஏசுவின் வார்த்தையாக இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. காரணம் இது கர்த்தர் மக்களுக்கு வழங்கியதாக மோசே கூறியது. (எண்: 21:15) எந்த யூதரும் இதை மோசேயின் கருத்தாக தவறுதலாகவும் கூறமாட்டார். இதை பேதுருவோ, பவுலோ கூறியிருக்க மாட்டார்கள். இதை நிச்சயம் பேதுரு/பவுலின் சீடரான மாற்கு என்ற யூதர் பதிவு செய்திருக்க மாட்டார். இதன் காரணத்தினால்தான் மத்தேயுவில் இதே சம்பவம் சரிசெய்யப்பட்டு கையாளப்பட்டுள்ளதை காணமுடியும்.
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. (மத்தேயு: 15:4).
இது போல பழைய ஏற்பாடின் வசனங்கள் மாற்கால குளறுபடியுடனே கையாளப்பட்டுள்ளது. அடுத்ததாக
தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்; யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான். (மாற்கு 1:1-3)
அதாவது இரண்டாவது வசனம் தீர்க்கதரிசனத்தில் இருப்பதாக மாற்கு கூறுகிறார். அது யோவான் குறித்து பேசுவதாக கூறுகிறார் மாற்கு. ஆனால் மலாச்சியில் இடம்பெறும் வசனம் எதை கூறுகிறது என்பதை காண்போம்.
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார். அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ் செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (மல்கியா: 3:1-5).
        மேலே குறிப்பிடப்படும் வசனமானது அந்த நாள் எத்தகையது என்பதையும் கூறுகிறது. அதாவது ஏசு விண்ணேற்றம் அடையும் காலம் வரை யூதர்கள் முழுமையாக சுத்திகரிக்கப்படவில்லை என்பதை நான் குறிப்பிட தேவையில்லை என்று எண்ணுகிறேன். இன்றும் முழு யூதர்களும் கிறித்தவதத்தை ஏற்று கொள்ளவில்லையே. மேலும் யூதா மற்றும் எருசலேமின் காணிக்கைகள் கர்த்தருக்கு பிரியமாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏசுவின் விண்ணேறத்திற்கு பிறகு யூதர்கள் காணிக்கை செலுத்தும் எருசலேம் ஆலயம் கிபி 70ல் தீக்கிரையாக்கப்பட்டது. ஆக மாற்கு குறிப்பிடுவது போல இந்த பழைய ஏற்பாட்டின் வசனத்திற்கும் யோவானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை புரிந்து கொண்ட மத்தேயு இந்த வசனத்தை தூக்கிவிட்டார் தனது ஆகமத்தில் (மத்தேயு 3:3). ஒன்று பேதுரு/ பவுல் ஆகிய இருவரும் தப்பும் தவறுமாக யூதரான மாற்கிற்கு சொல்லி கொடுத்திருக்க வேண்டும். அல்லது மாற்கு சுவிஷேசத்தை இயற்றிவர் நிச்சயம் பேதுரு/ பவுலிற்கு நேரடி தொடர்பில்லாத, யூதரல்லாதவராக இருக்கவேண்டும். எனவேதான் அமேரிக்காவின் விவிலிய அறிஞரான கிரைக் எவான்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
The difficulty is ascertaining the identity of Mark. Scholars debate whether he is John Mark of Jerusalem, associate of Paul (Acts 12:12, 25; 13:5, 13; 15:36–41; 2 Tim 4:11), and the one who may well be assumed by Papias as an associate of Peter (e.g. Hengel 45–53; Gundry 1026–45), or another person simply named Mark who was not native to Palestine. Many scholars have opted for the latter option due to the Gospel’s lack of understanding of Jewish laws (1:40–45; 2:23–28; 7:1–23), incorrect Palestinian geography (5:1–2, 12–13; 7:31), and concern for Gentiles (7:24–28:10) (e.g. Marcus, 1999: 17–21). (The Routledge Encyclopedia of the Historical Jesus by Craig A. Evans (ed.), P.No.252)

மார்க்கின் அடையாளத்தைக் கண்டறிவதே சிரமம். அவர், பவுலின் கூட்டாளியான ஜெருசலேமின் ஜான் மாற்கா (Acts 12:12, 25; 13:5, 13; 15:36–41; 2 Tim 4:11) மேலும் அவரே பேதுருவின் கூட்டாளியாக பேப்பியஸால் அனுமானிக்கப்பட்டவராக இருக்கக்கூடும், (e.g. Hengel 45–53; Gundry 1026–45), அல்லது பாலஸ்தீனத்தை பூர்வீகமாகக் கொண்டிராத மாற்கு என்ற மற்றொரு நபரா என்று அறிஞர்கள் விவாதிக்கின்றனர். யூதச் சட்டங்களைப் பற்றிய நற்செய்தியின் புரிதல் இல்லாததாலும்,(மாற்கு 1:40–45; 2:23–28; 7:1–23) தவறான பாலஸ்தீன புவியியல் குறிப்புக்கள் (மாற்கு 5:1–2, 12–13; 7:31), மற்றும் புறஜாதிகள் மீதான அக்கறை(மாற்கு 7:24–28:10) ஆகிய காரணங்களினால்  பல அறிஞர்கள் பிந்தைய கருத்தையே தேர்ந்தெடுத்துள்ளனர். (The Routledge Encyclopedia of the Historical Jesus by Craig A. Evans (ed.), P.No.252)

மாற்கு எழுதப்பட்ட காலம்:

    மாற்கு சுவிஷேசத்தின் வரலாற்று ஆதாரம் என்று கூறப்பட்டும், நம்பப்படும் கூற்றுகள் எதுவும் இன்றிருக்கும் மாற்கு சுவிஷேசத்தின் உள்ளடக்கத்தினை உறுதிபடுத்துவதாய் இல்லை. மத்தேயூ சுவிஷேசம் எழுதப்பட்ட காலமாக பின்வரும் காலங்களை கிறித்தவ உலகம் கூறி வருகிறது.  அது குறித்த தகவலை An introduction to the literature of The New Testament by JAMES MOFFATT. B.D., D.D. Oct 1918 P.No.213 என்ற நூலில் இருந்து வழங்குகிறோம்.

c. 44 A.D. Belser
c. 48 A.D. Birks
c. 44-49 A.D. Allen
c. 55-57 A.D. Hitzig
c.  ̴55 A.D. Gloag
c. 63 A.D. Mill
c. 64-67 A.D. Bartlet, Schafer, Kuppers, Schanz, Zimmermann, Zahn, J.Weiss
c. 65-70 A.D. Abbott, Alford, W. Bruckner, Stanton, Swete, Salmond, Wendt, Weiss, Harnack Maclean, Barth, Peake, Hoffmann, Burkitt.
c. 70 A.D. Carpenter, Menzies, Feine, W. Haupt
c. 70-80 A.D.Volkmar , Renan, Beyschlag, Wright, Wernle, Bacon, Well- hausen, von Soden, Loisy, O.Schmiedel, Montefiore
c. 75-85 A.D. Goguel 
c. 80-90 A.D. Holsten, Hilgenfeld, Rovers , Bleek.
c. 100 A.D. Hoekstra
c. 100-110 A.D.
Kostlin 
c. 115-120 A.D. Keim 
c. 120 A.D. S. Davidson
c. 120-130 A.D. Usener
c. 130 A.D. Baur

        கிறித்தவ அறிஞர்களால் கிட்டதட்ட 90 ஆண்டு கால இடைவெளி மாற்கு சுவிஷேசம் எழுதப்பட்டதற்கான காலமாக அனுமானிக்கப்படுகிறது,. இது ஒவ்வொருவரும் அவர் அவர்களது அனுமானத்திற்கு ஒரு ஆதாரத்தை கொண்டிருப்பார்கள். இயற்றப்பட்ட வருடத்திலும் எந்த ஒரு உறுதியான நிலைபாடும் இல்லை. வரலாற்று ஆவணங்களின் பலவீனம்தான் இந்த நிலைக்கு காரணம் என்பது தெளிவாக விளங்குகிறது.

    எனவே யார் மாற்கு என்று சரியாக அறியப்படாத நிலையில், வரலாற்றுத்தரவுகள் தனக்குள்ளேயே முரண்படுகின்றது என்ற நிலையில், மாற்கு என்ற நபர் குறித்த புதிய ஏற்பாட்டின் தரவுகளும் அரைகுறையாகத்தான் இருக்கிறது என்ற நிலையில், புதிய ஏற்பாட்டின் தரவுகளும், வரலாற்று தரவுகளும் முரண்பட்டு நிற்கும் நிலையில், எப்போது எழுதப்பட்டது என்பதில் கூட கருத்து ஒற்றுமை இல்லாத நிலையில், வரலாறு கூறும் மாற்கால் நேரடியாக எழுதப்பட்ட ஒரு ஆவணம் , “மாற்கின் படியான சுவிஷேசம்” என்று யார் என்று அட்ரஸில்லாத நபரின் விவரிப்பாக தலைப்பை இன்று தாங்கி நிற்கும் நிலையில், “மாற்கின் படியான சுவிஷேசம் அட்ரஸ் இல்லாத அனாமதேய எழுத்தர்களால் முன்பிருந்த நற்செய்தி நூல்களில் இருந்தும், சில வாய்வழிச் செய்திகளில் இருந்தும், கட்டுக்கதைகளில் இருந்தும் ஒன்று திரட்டி மாற்கின் பெயரால் இட்டுக்கட்டபட்ட நூல்” என்ற முடிவிற்கே வர இயலும்.

Saturday, July 6, 2024

நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மத்தேயுவின் படியான சுவிஷேசம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

    நற்செய்தி நூல்களின் எழுத்தாளர்கள் யார்? யாரின் வழியாக இவர்களது அறிவிப்பை பெற்றார்கள்? இவர்கள் யாரிடம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்? என்று, இந்த எழுத்தாளர்கள் விஷயத்தில் கிறித்தவ உலகின் நிலை குறித்தும், அந்த எழுத்தாளர்கள் குறித்த வரலாற்று ஆவணங்களும், புற ஆதாரங்களும், அதே நற்செய்தி நூல்களின் உள்ளடக்கமும் எவ்வாறு முரண்பட்டு அந்த புற ஆதாரங்களையே பதம் பார்க்கிறது என்பதையும் விரிவாக காணயிருக்கிறோம் இன் ஷா அல்லாஹ். அந்த வரிசையில் முதலாவதாக வேதம் என்று அழைக்கப்படும் புதிய ஏற்பாட்டின் மத்தேயூ சுவிஷேசத்தின் அவல நிலையை இங்கு தோழுரிக்கவுள்ளோம்.

     யார் இந்த மத்தேயூ???
    லேவியும் மத்தேயூவும் ஒன்றா?
        ✔அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் (காலம் கி.பி.150 – 215)
        ✔குழம்பிப்போன் ஓரிகன் (காலம் கி.பி.185 – 253)
            ☑மத்தேயூவும் லேவியும் ஒன்று என்று கூறும் ஓரிகன்
            ☑மத்தேயூ வேறு லேவி வேறு என்று கூறும் ஓரிகன்
        ✔பஸ்ராவின் பிஷப் சாலமோன் (காலம் கி.பி. 13ம் நூற்றாண்டு)
    மொழி குழப்பம்
    யாரும் கண்டிராத இன்றைய மத்தேயூ சுவிஷேசத்தின் எபிரேய வடிவம்
    ✅இயற்றப்பட்ட காலம்/ வரிசை: வரலாற்று ஆவணங்கள் கூறுவதும் உள்ளடக்கம் கூறுவதும்
    ✅அட்ரஸ் இல்லாத அனாமதேய எழுத்தரால்/எழுத்தர்களால் எழுதப்பட்ட மத்தேயூவின் படியான சுவிஷேசம்    
மத்தேயூ சுவிஷேசம்:
நாம் முன்சென்ற தொடரில் கண்ட வரலாற்று ஆவணங்களின் படியும், தற்கால கிறித்தவ உலகின் நம்பிக்கையின் படியும் புதிய ஏற்பாட்டின் முதலாம் நூலின் ஆசிரியர் மத்தேயூ என்பவராகும். மத்தேயூ சுவிஷேசத்தின் எந்த இடத்திலும் இந்த கருத்து வெளிப்படையாக இடம் பெறவில்லை. இந்த “மத்தேயூ” என்று பிரபலமாக கருதப்படும் இந்த நூலாசிரியர் குறித்தும், அவர் இயற்றியதாக கூறப்படும் மத்தேயூவின் படியான சுவிஷேசத்தின் வரலாற்று ஆவணங்கள், மற்றும் அதன் முரண்கள், சிக்கல்கள் குறித்தும் இங்கு காண்போம். 

    புதிய ஏற்பாட்டின் வரிசையில் முதலாவதாக இடம் பெறும் நூலை இயற்றியதாக கூறப்படும் மத்தேயூ, என்பவர் இயேசுவின் சீடராக, இயேசுவை கண்டவராக இருந்தார் என்பது கிறித்தவர்களின் கருத்து. இதற்கு ஆதாரமாக அவர்கள் பின்வரும் வசனங்களை முன்வைக்கின்றனர்.

மத்தேயூ:
    இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான். பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். (மத்தேயூ 9:9-10)

    அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே. (மத்தேயூ 10:1-4)
மாற்கு :
    அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்குப் போதகம்பண்ணினார். அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான். அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் அவரோடுகூட வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். (மாற்கு 2:13-15)

அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார். செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார், அந்திரேயா, பிலிப்பு, பற்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் காரியோத்து என்பவர்களே. (மாற்கு 3:14-19)

லூக்கா: 

    இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார். அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான். அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள். (லூக்கா 5:27-29)

        பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார். அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பற்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன், யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே. (லூக்கா 6:13-16)

லேவியும் மத்தேயூவும் ஒன்றா?

மத்தேயூ குறித்து புதிய ஏற்பாட்டில் போதிய தகவல்கள் இல்லாத காரணத்தினால், லேவியும் மத்தேயூவும் ஒன்றுதான் என்று பல காலமாக  திருச்சபை தந்தை முதல் இன்றிருக்கும் கிறித்தவ மிசனரிகள் வரை கதை அளந்து வருகின்றனர்.(1),(2),(3). லேவி என்பவர் மத்தேயூதான் என்பதற்கு எந்த நேரடி ஆதாரமும் புதிய ஏற்பாட்டில் இல்லை. மத்தேயூவில் மட்டுமே ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தவர் மத்தேயூ என்று அறியப்படுகிறார். மாற்கிலும் லூக்காவிலும் ஆயத்துறையில் உட்கார்ந்திருந்தவர் லேவி என்று அறியப்படுகிறார். மாற்கில் மேலும் ஒரு கூடுதல் தகவல் இடம் பெறுகிறது ஆதாவது ஆயத்துறையில் அமர்ந்திருந்தவர் "அல்பேயுவின் குமாரன் லேவி" என்ற தகவல் தான் அது. மத்தேயூதான் லேவி என்று வாதிக்க போதிய வெளிப்படையான ஆதாரங்கள் இல்லாதிருக்கும் நிலையில், யாக்கோபு தான் லேவி என்று வாதிக்க அதிக வாய்ப்பும் இருக்கிறது. ஏன்னென்றால் மாற்கு 3:14-19ல் குறிப்பிடும் போது யாக்கோபை அல்பேயுவின் குமாரன் என்று கூறுகிறார்.  

    மேலும் மாற்கும் லூக்காவும் பெயர் மாற்றத்தை அறியவில்லை என்று வாதிக்க இயலாது. ஓர் இடத்தில் மாற்கும் (மாற்கு 2:13-15)  லூக்காவும்(லூக்கா 5:27-29)  லேவி என்று அழைக்கின்றனர். மற்ற இடத்தில் மத்தேயூ என்று அழைக்கின்றனர். பேதுரு, சீமோன், யாக்கோப் யோவான் ஆகியோரின் பெயர் மாற்றத்தையும், புனை பெயர்களையும் குறிபிட்டு எழுதிய மாற்கும், லூக்காவும், லேவி என்ற பெயர் மத்தேயூ என்று மாற்றப்பட்டது என்பதை குறிப்பிடாததே லேவியும், மத்தேயூவும் வேறு வேறு நபர்கள் என்பதற்கு போதிய சான்று. நாம் மட்டும் இந்த கருத்தை முன்வைக்கவில்லை. கிறித்தவ வரலாற்றிலும், தற்காலம் வரையிலும் இந்த கருத்து முரணை காண முடிகிறது.  

அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் (காலம் கி.பி.150 – 215): 

    For all the saved have confessed with the confession made by the voice, and departed. of whom are Matthew, Philip, Thomas, Levi, and many others.

இரட்சிக்கப்பட்ட அனைவரும் குரல் கொடுத்த சாட்சியத்தை ஒப்புக்கொண்டு, புறப்பட்டு சென்றார்கள். அவர்களில் மத்தேயு, பிலிப், தாமஸ், லெவி மற்றும் பலர். (Stromata, Book IV, Chapter IX.—Christ’s Sayings Respecting Martyrdom)

    அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் மத்தேயூவையும், லேவியையும் தனித்தனியாக பிரித்து காட்டுகிறார்.


    So, the Scripture says, "He went out and saw a tax collector named Levi." This man is Matthew the Evangelist. Mark and Luke conceal his name by using his earlier name: whereas Matthew makes his own name known when he says, "He saw Matthew the tax collector."He says this so that we might wonder at the skill of the God who healed him and might believe in [God] fully.( Homilies on Luke by Origen, I08. Luke 5.27)
      எனவே, "அவர் வெளியே சென்று லேவி என்ற வரி வசூலிப்பவரைக் கண்டார்" என்று வேதம் கூறுகிறது. இந்த மனிதர் மத்தேயு என்ற நற்செய்தியாளர் ஆவார். மாற்கும் லூக்காவும் அவருடைய முந்தைய பெயரைப் பயன்படுத்தி அவரது பெயரை மறைத்துக்கொள்கிறார்கள்: அதேசமயம் மத்தேயு தனது சொந்தப் பெயரைத் தெரியப்படுத்துகிறார், "அவர் வரி வசூலிப்பவரான மத்தேயுவைப் பார்த்தார்" என்று அவர் கூறுகிறார். "அவரைக் ஆற்றிய கடவுளின் திறமையைக் கண்டு நாம் ஆச்சரியப்படவும், கடவுளை முழுமையாக நம்பவும் அவர் இதைச் சொல்கிறார்.( Homilies on Luke by Origen, I08. Luke 5.27)

மத்தேயூ வேறு லேவி வேறு என்று கூறும் ஓரிகன்:

ὅτι δώδεκα ἀποστόλους ὁ Ἰησοῦς ἐπελέξατο, τελώνην μὲν τὸν Ματθαῖον, οὓς δ' εἶπε συγκεχυμένως ναύτας τάχα τὸν Ἰάκωβον καὶ τὸν Ἰωάννην φησίν, ἐπεὶ καταλιπόντες τὸ πλοῖον καὶ «τὸν πατέρα αὐτῶν Ζεβεδαῖον» ἠκολούθησαν τῷ Ἰησοῦ. Τὸν γὰρ Πέτρον καὶ τὸν ἀδελφὸν αὐτοῦ Ἀνδρέαν, ἀμφιβλήστρῳ χρωμένους διὰ τὰς ἀναγκαίας τροφάς, οὐκ ἐν ναύταις ἀλλ' ὡς ἀνέγραψεν ἡ γραφή, ἐν ἁλιεῦσιν ἀριθμητέον. Ἔστω δὲ καὶ ὁ Λευὴς τελώνης ἀκολουθήσας τῷ Ἰησοῦ• ἀλλ' οὔτι γε τοῦ ἀριθμοῦ τῶν ἀποστόλων αὐτοῦ ἦν εἰ μὴ κατά τινα τῶν ἀντιγράφων τοῦ κατὰ Μάρκον εὐαγγελίου. Τῶν δὲ λοιπῶν οὐ μεμαθήκαμεν τὰ ἔργα, ὅθεν πρὸ τῆς μαθητείας τοῦ Ἰησοῦ περιεποίουν ἑαυτοῖς τὰς τροφάς.

……….. that Jesus selected twelve apostles, and that of these Matthew alone was a publican; that when he calls them indiscriminately sailors, he probably means James and John, because they left their ship and their father Zebedee, and followed Jesus; for Peter and his brother Andrew, who employed a net to gain their necessary subsistence, must be classed not as sailors, but as the Scripture describes them, as fishermen. And Levi also, who was a follower of Jesus, may have been a publican; but he was not of the number of the apostles, except according to a statement in one of the copies of Mark's Gospel. (Origen, Against Celsus , Book 1, Chapter LXIII)

…….. இயேசு பன்னிரண்டு அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தார், மேலும் இவர்களில் மத்தேயு மட்டும் ஆயக்காரராக இருந்தார்; அவர் அவர்களை வேறுபடுத்தாமல் மாலுமிகளே என்று அழைக்கும்போது, அவர் ஜேம்ஸ் மற்றும் யோவானை குறிப்பிடுவதாக இருக்கக்கூடும், ஏனென்றால் அவர்கள் தங்கள் கப்பலையும் தங்கள் தந்தை செபதேயுவையும் விட்டுவிட்டு, இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்; ஏனெனில், பீட்டரும் அவருடைய சகோதரர் ஆண்ட்ரூவும், தங்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தைப் பெற வலையைப் பயன்படுத்தியவர்கள், வேதம் அவர்களை மாலுமிகள் என்று அல்ல, மாறாக மீனவர்கள் என்று விவரிக்கிறது. இயேசுவின் சீடராக இருந்த லேவியும் ஆயக்காரராக இருந்திருக்கலாம்; ஆனால் அவர் மாற்கு நற்செய்தியின் பிரதிகளில் ஒன்றில் கூறப்பட்டுள்ளதைத் தவிர, அப்போஸ்தலர்களின் எண்ணிக்கையில் இல்லை.(Origen, Against Celsus , Book 1, Chapter LXII)

    மாற்கின் பிரதிகள் ஒன்றில் லேவியும் சீடராக இடம் பெற்றிருந்தார் என்று ஓரிகன் கூறுவது, எழுத்துப்பிரதிகளிலேயே இடம் பெறும் அளவிற்கு இந்த முரண் பரவலாக இருந்துள்ளது என்பதை காட்டுகிறது.

பஸ்ராவின் பிஷப் சாலமோன் (காலம் கி.பி. 13ம் நூற்றாண்டு):

    Matthew the Evangelist was from Nazareth, of the tribe of Issachar. He preached in Palestine, Tyre and Sidon, and went as far as Gabbulla. He died and was buried in Antioch, a city of Pisidia...........  Levi was slain by Charmus , while he was teaching in Paneas.

    நற்செய்தியாளர் மத்தேயு நாசரேத்தைச் சேர்ந்தவர், இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவர் பாலஸ்தீனம், டயர் மற்றும் சிடோன் ஆகிய இடங்களில் பிரசங்கித்தார், மேலும் கப்புல்லா வரை சென்றார். அவர், பிசிடியாவின் நகரமான அந்தியோக்கியாவில் இறந்து, அடக்கம் செய்யப்பட்டார்.............லேவி பனியாஸில் கற்பித்துக் கொண்டிருந்தபோது, சார்மஸால் கொல்லப்பட்டார்.  (Kṯāḇā ḏ-debboriṯā by Solomon of Akhlat Translation : The book of bee by Sir Ernest Alfred Thompson Wallis Budge P.No.106- 112). 
    பஸ்ராவின் பிஷப் சாலமோனை பொறுத்தவரையில் மத்தேயூவும், லூக்காவும் வேறு வேறு. அவர்கள் இறந்த இடமும் வேறு. மத்தேயூ இறந்த இடம் குறித்தும் கிறித்தவ வரலாற்றில் குழப்பமே நிலவுகிறது என்பது கூடுதல் தகவல். 

    தற்கால கிறித்தவ இறையியலாளரான ரிச்சர்ட் பொக்காம் (Richard Bauckham)  தனது நூலில் இது குறித்து கூறுகையில் மத்தேயூவும் லேவியும் ஒன்றல்ல என்ற முடிவிற்கே வருகிறார். (Ref: Jesus and the eyewitnesses by Richard Bauckham, Ch.4.Palestinian Jewish Names, A Note on Matthew and Levi). மேற்குறிபிட்ட செய்திகள் நமக்கு ஒன்றை படம் பிடித்து காட்டுகிறது. அதாவது யார் மத்தேயூ என்பதில் கூட குழப்பம் நீடித்துள்ளது, நீடிக்கிறது என்பதை. கிறித்தவ மிசனரிகள் மத்தேயூதான் முதல் சுவிஷேசத்தை எழுதினார் என்பதற்கு ஆதாரம் அதனை ஆதிகால கிறித்தவ சபைகள் அனைத்தும் ஏற்றிருந்ததே ஆகும் என்று கூறி வருகின்றன. இப்படி பலராலும் பிரபலமாக அறியப்பட்ட ஒரு சுவிஷேசத்தின் ஆசிரியரின் வரலாற்றின் அவல நிலைதான் மேலே காட்டப்பட்டுள்ளது. உண்மையில் இதனை ஆதிகால அனைத்து சபைகளும் அறிந்திருக்கும் பட்சத்தில், மத்தேயூ குறித்த தகவல்கள் வரலாற்றில் குழப்பம் இன்றி பதிவு செய்யப்பட்டிருக்கும், ஆனால் அதற்கு நேர் முரணான நிலையை இங்கு காணமுடிகிறது. இது “மத்தேயூவின் படியான சுவிஷேசம்” என்ற தலைப்பே இடைக்கால இடைச்செருகல் என்பதை தெளிவாக காட்டுகிறது. 

    Thus this Evangelist has appropriated Mark’s story of the call of Levi, making it a story of Matthew’s call instead, but has not continued this appropriation by setting the following story in Matthew’s house. He has appropriated for Matthew only as much as Mark’s story of Levi as he needed. If this explanation of the name Matthew in Matt 9:9 is correct, it has one significant implication: that the author of Matthew’s Gospel intended to associate the Gospel with the apostle Matthew but was not himself the apostle Matthew. Matthew himself could have described his own call without having to take over the way Mark described Levi’s call.

    இவ்வாறு, இந்த சுவிசேஷகர், லெவியின் அழைப்பைப் பற்றிய மார்க்கின் கதையை பொருத்தியுள்ளார், அதற்கு பதிலாக அதை மத்தேயுவின் அழைப்பின் கதையாக மாற்றியுள்ளார், ஆனால் அதன் பின்வரும் மத்தேயுவின் வீட்டில் இடம் பெறும் கதையில் இந்த பொருத்தலை  தொடரவில்லை. மத்தேயுவுக்குத் தேவையான அளவு மட்டுமே மார்க்கின் லெவியின் கதையை  பொருத்தியுள்ளார். மத்தேயு 9:9 இல் உள்ள மத்தேயு என்ற பெயரின் இந்த விளக்கம் சரியானது என்றால், அது ஒரு குறிப்பிடத்தக்க உட்கருத்தை கொண்டுள்ளது: மத்தேயுவின் நற்செய்தியின் ஆசிரியர், அப்போஸ்தலன் மத்தேயுவுடன் சுவிசேஷத்தை இணைக்க விரும்பியுள்ளார், ஆனால் அவர் அப்போஸ்தலன் மத்தேயு அல்ல. லெவியின் அழைப்பை மார்க் விவரித்த விதத்தை எடுத்துக் கொள்ளாமல் மத்தேயூ தனது சொந்த அழைப்பை விவரித்திருக்கலாம்.((Ref: Jesus and the eyewitnesses by Richard Bauckham, Ch.4.Palestinian Jewish Names, A Note on Matthew and Levi). 

    அதாவது சுவிஷேசத்தை எழுதியது அப்போஸ்தலன் மத்தேயூ அல்ல. மத்தேயூ விவரித்ததை, யார் என்று அறியப்படாத அந்த எழுத்தாளர் மாற்கின் சரக்கில் இடைசெருகல் செய்திருக்கிறார் என்று கூறுகிறார். லேவி-மத்தேயூ இருவேறாக இருந்தால் அதுவே மத்தேயூ சுவிஷேசம் அப்போஸ்தலன் மத்தேயூவினால் எழுதப்படவில்லை என்பதற்கு போதிய சான்று என்பது அவரது வாதத்தின் சாரம். மேலும் பாப்பியஸிற்கு முற்பட்ட எந்த சர்ச் பிதாவும் மத்தேயூ என்ற பெயரிடப்பட்ட சுவிஷேசம் இருப்பதாக எந்த இடத்திலும் கூறவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.


        மத்தேயூவின் படியான சுவிஷேசத்தை பொறுத்த வரையில் கூறப்படும் வரலாற்று ஆதாரங்கள் அனைத்தும், மத்தேயூவின் மூல மொழி எபிரேயம் என்று வாதிக்கின்றன. நாம் சென்ற தொடரில், இன்றிருக்கும் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களின் மூல மொழி எபிரேயம் அல்ல, மாறாக அது இயற்றப்பட்டத்தே கிரேக்கத்தில் தான் என்பதற்கு கிறித்தவ உலகம் முன்வைக்கும் ஆதாரங்கள் சிலவற்றை முன்வைத்திருந்தோம். “இம்மானுவேல்”, “ஏலி! ஏலி! லாமா சபக்தானி”, போன்ற  சொற்கள் அனைத்தும் எபிரேய சொற்கள்,  ஆனால் அவற்றை எல்லாம் மொழியாக்கம் செய்துள்ளனர். மத்தேயூவின் படியான சுவிஷேசம் உண்மையில் எபிரேயம் பேசும் மக்களுக்காக எழுதப்பட்டிருந்தால் அவற்றை மொழியாக்கம் செய்யும் அவசியம் ஏற்பட்டிருக்காது. எனவே இன்றிருக்கும் மத்தேயூ சுவிஷேசம் கிரேக்கம் பேசும் மக்களுக்காக கிரேக்கத்தில் எழுதப்பட்டது. 

    இதனை உறுதி படுத்தும் விதமாக ஜெரோமும் “மத்தேயூவின் படியான சுவிஷேசம் யாரோ அட்ரஸ் இல்லாதவரால் மொழியாக்கம் செய்யப்பட்டது” என்று கூறுகிறார். இதனை உறுதி படுத்தும் விதமாக “மத்தேயு எபிரேய மொழியில் [கர்த்தரின்] அற்புதங்களை ஒன்றாக தொகுத்தார், மேலும் ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்தவரை அவற்றை விளக்கினர்.” என்று பாப்பியஸும் கூறுவதாக யூஸிபியஸும் உறுதிபடுத்துகிறார். எனவே மத்தேயூவின் சுவிஷேசத்தை மொழிப்பெயர்த்தவர் யார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதாவது மத்தேயூவின் படியான சுவிஷேசம் என்று தலைப்பிட்டு அதனை எழுதியவர் யார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
(லிங்க் இணைக்கப்பட வேண்டும்)……. 


மேலும் இன்றைய மத்தேயூ சுவிஷேசத்தின் எபிரேய வடிவத்தை யாரும் வரலாற்றில் கண்டதாக ஆதாரங்கள் இல்லை. நாம் முன்சென்ற  கட்டுரையில் ஜெரோம் எபிரேய மத்தேயூவின் சுவிஷேத்தை கண்டதாக கூறியுள்ளார் என்பதை குறிப்பிட்டிருந்தோம். அது குறித்த சிறு தெளிவை இங்கு முன்வைக்கிறோம் ஜெரோம் கண்டதாக கூறும் நசரேயர்களின் மத்தேயூ சுவிஷேசத்திற்கும், இன்றிருக்கும் மத்தேயூவின் சுவிஷேசத்திற்கும் கொள்கை முரண்களே உண்டு.  அதுபோல பல வசனங்களும் வேறுபட்டு உள்ளன. உதாரணமாக 

இன்றிருக்கும் மத்தேயூவின் படியான சுவிஷேசம்
  அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.( மத்தேயூ 18:21-22)

எபிரேய மத்தேயூவின்  சுவிஷேசம்            அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் "தீர்க்கதரிசிகளில் கூட, அவர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட பிறகும், பாவத்தின் வார்த்தை காணப்பட்டது." என்று உனக்குச் சொல்லுகிறேன் (எம்.எஸ்.எஸ் 566, 899)

    மேற்குறிபிட்ட ஜெரோமின் கூற்றை பின்வரும் வரலாற்று செய்தி தெளிவுபடுத்துவதாய் உள்ளது. அதாவது ஸலாமிஸின் எபிஃபேனியஸ் ஜெரோமின் சமகாலத்தவர் ஆவார் (கி.பி. 320 – 403). இவர் ஜெரோம் கண்டதாக கூறும் எபிரேய மத்தேயூ குறித்து பின்வருமாறு கூறுகிறார்.
13,1 But I shall resume the thread of my argument against Ebion— because of the Gospel according to Matthew the course of the discussion obliged me to insert the whole of the knowledge which I had gained. (2) Now in what they call a Gospel according to Matthew, though it is not the entire Gospel but is corrupt and mutilated—and they call this thing “Hebrew”!—( Epiphanius, Panarion, 30, 13, 1-2)

13,1 ஆனால் எபியோனுக்கு எதிரான எனது வாதத்தின் இழையை மீண்டும் தொடர்கிறேன் - மத்தேயுவின் படியான நற்செய்தியின் காரணமாக, விவாதத்தின் போக்கில் நான் பெற்ற அறிவை முழுவதுமாக நுழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. (2) இப்போது அவர்கள் மத்தேயுவின்படி ஒரு சுவிசேஷம் என்று அழைக்கிறார்கள், அது முழு நற்செய்தியாக இல்லாவிட்டாலும், அது சிதைந்ததாகவும், சிதைக்கப்பட்டதாகவும் இருக்கிறது - மேலும் அவர்கள் இதை "ஹீப்ரு" என்று அழைக்கிறார்கள்! ”!( Epiphanius, Panarion, 30, 13, 1-2)
    இப்படி மாறுபட்ட, சிதைக்கப்பட்ட எபிரேய மத்தேயூவை பார்த்துதான் ஜெரோம் உண்மை எபிரேய மத்தேயூவை கண்டதாக கதை விடுகிறார். மேலும் ஜெரோமே பல இடங்களில் அதில் இருந்த, தற்போதைய மத்தேயூவில் இருந்து மாறுபட்டு இருக்கும் வசனங்களை தனது ஆக்கங்களில் கூறியும் இருக்கிறார். எனவே யாரும் மூல மத்தேயூ சுவிஷேசத்தை கண்டதில்லை. கண்டதாக கூறிய ஜெரோமும் மாறுபட்ட எபிரேய மத்தேயூவைதான் கண்டிருக்கிறார். இன்றிருக்கும் கிரேக்க மத்தேயூவின் எபிரேய வடிவத்தை அல்ல.

    இப்படி மூல ஆவணத்தை மேலே குறிபிட்டுள்ள யாரும் கண்டதாகவும் எந்த தகவலும் இல்லை. பாப்பியஸ் முதற்கொண்டு மத்தேயூவின் படியான சுவிஷேசத்திற்கு யாரும் நேரடி சாட்சிகள் அல்ல. அப்போஸ்தலிக்க பிதாக்களில் இறுதி கால பகுதியான கி.பி. 2ம் நூற்றாண்டை சார்ந்த பாப்பியஸ்தான் மத்தேயூ சுவிஷேசம் இருந்ததற்கான முதல் சாட்சி. அவரும் நேரடியாக இயேசுவின் சீடர்கள் யாரையும் சந்தித்திருக்கவில்லை. மேலும் இன்றுவரை இந்த வரலாற்று குறிப்புக்களை உறுதி செய்யும் படியாக கிரேக்க மத்தேயூ எழுத்துப்பிரதிக்கு முற்பட்ட எபிரேய மத்தேயூ எழுத்துப்பிரதிகள் எதுவும் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மத்தேயூ சுவிஷேசத்தின் வரலாற்று ஆதாரம் என்று கூறப்பட்டும், நம்பப்படும் கூற்றுகள் எதுவும் இன்றிருக்கும் மத்தேயூ சுவிஷேசத்தின் உள்ளடக்கத்தினை உறுதிபடுத்துவதாய் இல்லை. மத்தேயூ சுவிஷேசம் எழுதப்பட்ட காலமாக பின்வரும் காலங்களை கிறித்தவ உலகம் கூறி வருகிறது. A Critical and Exegetical Commentary on the Gospel according to Saint Matthew. Written by W.D. Davies and Dale C. Allison (P.No.127-128) என்ற மத்தேயூ சுவிஷேசத்தின் விளக்கவுரையில் இருந்து அது இயற்றப்பட்ட காலம் குறித்து எத்துனை கருத்து நிலவுகிறது என்பதை காணத்தருகிறோம்.

(1) Scholarly opinion:  The spectrum of opinion concerning the dating of Matthew's gospel may be illustrated as follows:


A.D. 40-50 H. Grotius
A.D. 50-60 M. Meinertz, J. A. T. Robinson
A.D. 50-64 B. Reicke
ca. A.D. 60 G. Maier
before A.D. 63 R. H. Gundry
A.D. 60-70 F. Godet, W. Michaelis
A.D. 65-75 W. C. Allen
before A.D. 70 C.F.D. Moule (tentatively), E. E. Ellis
A.D. 70-110 K. Stendahl, A. Wikenhauser, P. S. Minear
A.D. 70-75  A. von Harnack
A.D. 70-80 J. Weiss, W. Sanday, W. R. Farmer
before A.D. 75 A. Plummer
ca. A.D. 80 D. Hare
A.D. 80-100
E. Renan, T. Zahn (in Greek), F. C. Burkitt, B. W. Bacon, A. H. McNeile, C. G. Montefiore, F. V. Filson, G. Bornkamm, R. Walker, D. Hill, R. H. Fuller, W. Marxsen, W. G. Kümmel, E. Schweizer, J. D. Kingsbury, R. E. Brown
A.D. 80-90 P. Bonnard, W. Grundmann, J. P. Meier, U. Luz
ca. A.D. 85 B. H. Streeter
A.D. 85-105 J. C. Fenton
ca. A.D. 90  E. Lohse
A.D. 90-100  E. von Dobschütz, C. D. Kilpatrick
A.D. 90-5 G. Strecker
ca. A.D. 100  M. S. Enslin, F. W. Beare
after A.D. 100  F. C. Baur, O. Pfleiderer, H. J. Holtzmann, A. Loisy, H. von Sode

    மேற்குறிபிட்ட கிபி 40 முதல் கி.பி 110 வரை சுழலும் அட்டவணையை காணும்யாரும் சொல்வார்கள், "22 கருத்துக்களில், பெரும்பான்மை கிறித்தவ அறிஞர்கள் கி.பி.70 க்கு பிறகுதான் மத்தேயூவின் படியான சுவிஷேசம் எழுதப்பட்டது என்று கூறுகின்றனர்" என்று. இந்த கருத்தை மேலும் உறுதிபடுத்தும் விதமாக அதன் உள்ளடக்கம் அமைந்துள்ளது. மேலும் மாற்கு சுவிஷேசம் தான் முதலில் எழுதப்பட்டது என்பது இன்றைய கிறித்தவ அறிஞர்களில் பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.
    The theory of Markan priority, although not uncontested, continues to be held by a majority of scholars today, the present author included.
    மாற்கு முதன்மை கோட்பாடு, போட்டியற்றதாக இல்லாவிட்டாலும், தற்போதைய ஆசிரியர் உட்பட இன்று பெரும்பான்மையான அறிஞர்களால் தொடர்ந்து முன்னிறுத்தப்படுவதாகும்,. (The Gospel According To Mark , By James R. Edwards, Introduction, History Of The Interpretation Of Mark )
    மேற்குறிபிட்டதற்கு முரணாக மத்தேயூ சுவிஷேசம் தான் ஏனைய சுவிஷேத்தை விட முதலில் இயற்றப்பட்டதாக வரலாற்று கூற்றுக்கள் அனைத்தும் கூறுகின்றன. ஆனால் அதன் உள்ளடக்கம் பெரும்பாலான தற்கால கிறித்தவ அறிஞர்களின் கூற்றையே உறுதிபடுத்துகிறது. அதாவது மத்தேயூ, மாற்கு சுவிஷேசத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதை உறுதி படுத்துகிறது. இதனை சென்ற தொடரில் கண்டோம். அந்த ஆய்வின் முடிவினை முன்னிறுத்தி மேற்கூறிய வரலாற்று கூற்றுக்களை சற்று ஆய்வு செய்வோம்.
✅மாற்கின் 661 வசனங்களில் 641 வசனங்களை மத்தேயூ கொண்டிருக்கிறது. மாற்கின் 14:36 அப்பா என்ற அரமேய சொல் Αββα என்று கிரேக்கத்தில் ஒலிபெயர்ப்பு(Transliterate) செய்யப்பட்டு பிறகு அது கிரேக்கத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டோம். மத்தேயூ மாற்கில் இருந்து எழுதப்பட்டதால்தான், மத்தேயூ 26:39ல் நேரடியாக கிரேக்க வார்த்தையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மத்தேயூவில் இருந்து மாற்கு காப்பியடிக்கப்படவில்லை என்பதை உறுதிபடுத்துகிறது. அல்லது மத்தேயூ மாற்கிற்கு முன்பாக எழுதப்படவில்லை என்பதை உறுதி படுத்துகிறது. 
✅மத்தேயூவும், லூக்காவும், ஒரு சேர மாற்கின் நிகழ்ச்சி நிரலை அப்படியே பின்பற்றியுள்ளமை. மத்தேயூவும், லூக்காவும், முரண்படும் தருணங்களிலும் கூட இரண்டில் ஒன்று மாற்கின் நிரலையே பின்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
✅மேற்குறிபிட்டது போல இன்னும் பல காரணங்கள், மத்தேயூவின் உள்ளடக்கம் அது மாற்கில் இருந்துதான் எழுதப்பட்டது என்பதை உறுதிபடுத்தும் நிலையில், மாற்கில் இருந்து மத்தேயூ எழுதப்பட்டிருந்தால் இன்னொரு சிக்கல் இங்கு உருவாகிறது. அதாவது மத்தேயூ உண்மையில் ஏசுவின் சீடர் என்றால், ஏன் ஏசுவின் சீடாரான பீட்டரின் கூற்றுக்களை தாங்கி நிற்ப்பதாக கூறப்படும் பீட்டரின் சீடரான மாற்கின் நூலை காப்பியடிக்க வேண்டும். 
✅மேலும் பேதுரு, மத்தேயூ ஆகியோரது மரணத்திற்கு பிறகே மாற்கு சுவிஷேசம் எழுதப்பட்டதாக ஐரினியஸ் கூறுகிறார். நிலை இப்படி இருக்கையில் மத்தேயூவின் சுவிஷேசம் மாற்கில் இருந்து எழுதப்பட்டிருந்தால், நிச்சயம் இன்றிருக்கும் மத்தேயூ சுவிஷேசம் ஏசுவின் சீடர் மத்தேயூவினால் எழுதப்பட்டது அல்ல. 
✅இதை எல்லாம் விட முத்தாய்ப்பாக அனைத்து வரலாற்று ஆவணங்களும் மத்தேயூ நேரடியாக எழுதியதாக கூறும் போது தற்போதைய நூல் மத்தேயூவின் கூற்றின் படியான நூல் என்ற தலைப்பை கொண்டிருப்பது, யாரோ அடரஸில்லாத ஒருவர், மத்தேயுவின் பெயரை பயன்படுத்தி, முன்பிருந்த நற்செய்தி நூல்களில் இருந்தும், சில வாய்வழிச் செய்திகளில் இருந்தும், கட்டுக்கதைகளில் இருந்தும் ஒன்று திரட்டி எழுதிய நூலாகத்தான் இன்றைய மத்தேயூவின் படியான நற்செய்தி நூல் உள்ளது என்பது உறுதியாகிறது. யார் அந்த அட்ரஸில்லாத எழுத்தர் என்பதற்கு எந்த வரலாற்று தரவுகளும் இல்லை.  
    எனவே யார் மத்தேயூ என்று சரியாக அறியப்படாத நிலையில், எபிரேய மூல மத்தேயூவை யாரும் கண்டிராத நிலையில், மொழியியல் ரீதியாக இன்றைய மத்தேயூ வரலாற்று ஆவணத்திற்கு முரணாக கிரேக்கத்தில்தான் எழுதப்பட்டுள்ளது என்ற நிலையில், மத்தேயூ சுவிஷேம் எழுதப்பட்ட காலம் எது என உறுதியாக அறியப்படாத நிலையில், மத்தேயூ சுவிஷேசம், மத்தேயூ உள்ளிட்ட சீடர்கள் இறந்த பிறகு எழுதப்பட்ட மாற்கு சுவிஷேசத்தில் இருந்துதான் காப்பி அடிக்கப்பட்டது என்ற நிலையில், “மத்தேயூ சுவிஷேசம் அட்ரஸ் இல்லாத அனாமதேய எழுத்தரால்/எழுத்தர்களால் முன்பிருந்த நற்செய்தி நூல்களில் இருந்தும், சில வாய்வழிச் செய்திகளில் இருந்தும், கட்டுக்கதைகளில் இருந்தும் ஒன்று திரட்டி மத்தேயூவின் பெயரால் இட்டுக்கட்டபட்ட நூல்” என்ற முடிவிற்கே வர இயலும்.  

Sunday, June 30, 2024

நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

        நாம் புதிய ஏற்பாட்டின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து தொடராக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் சென்ற தொடரில் ஒத்தமை நற்செய்தி நூல்களின் ஒத்தமை சிக்கல் குறித்தும், அந்த சிக்கலை தீர்க்க கிறித்தவ உலகம் எப்படியெல்லாம் கதையளந்து வருகிறது என்பதையும், அவர்கள் அளந்த அந்த அனுமானக் கதைகளே எப்படி ஒத்தமை நற்செய்தி நூலின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது என்பதையும் அவர்களது வாய்களினாலே ஆதாரப்பூர்வமான வாத பிரதி வாதங்கள் அடிப்படையில் விளக்கி இருந்தோம். இந்த கட்டுரை அதனுடைய தொடர்ச்சி என்று கூட கூறலாம். இந்த கட்டுரையில் இன் ஷா அல்லாஹ், புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களின் எழுத்தாளர்கள் குறித்த வரலாற்று தரவுகளை காணவிருக்கிறோம். அந்த தரவுகளை அடுத்தடுத்த கட்டுரைகளில் ஆய்வுக்கு உடப்டுத்துவதன் மூலம் நற்செய்தி நூல்களின் வரலாற்று தரவுகளின் நிலையையும், அது ஏற்படுத்தும் குழப்பமே ஒத்தமை சிக்கலுக்கு தீர்வில்லாத அனுமானங்களை உருவாக்க கிறித்தவ அறிஞர்களை தள்ளியுள்ளது என்பதையும் தோழுரிக்கவுள்ளோம்.

        புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூலாசிரியர்கள் யார்? என்பதற்கு கிறித்தவ உலகம் மத்தேயூ, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்று கூறிவருகின்றது. இதற்கான வரலாற்று தரவுகளையும், அதனை தரும் கிறித்தவ திருச்சபைத் தந்தையர்கள் குறித்தும் சிறிது காணவுள்ளோம். அதற்கு முன்பாக புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்கள் என்று இன்று கூறப்படுபவற்றின் தலைப்பும், இன்றைய கிறித்தவ உலகமும் என்ன கூறி வருகிறது என்பதை முதலில் பார்ப்போம்.

        Raymond E. Brown, S.S.
        Kurt Aland
        Catholic Encyclopedia

              கிறித்தவர்களின் கைகளில் இருக்கும் நற்செய்தி நூல்கள் மற்றும் அதன் மூல கையெழுத்துப்பிரதிகள் என்ன கூறுகிறது என்பதை நாம் முதலில் பார்ப்போம். உதாரணமாக இன்று சுருக்கமாக மத்தேயூவின் நற்செய்தி நூலின் தலைப்பு தாங்கிய கிரேக்க மூல கையெழுத்துப்பிரதி பின்வருமாறு கூறுகிறது.


            மேற்குறிபிட்ட கையெழுத்துப்பிரதி மத்தேயூவின் படியான நற்செய்தி நூல் என்று கூறுகிறது. இதன் பொருளை விளங்க வேண்டும் என்றால், ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம், வெங்கடேஷனின் படி என்று கூறப்பட்டால், அதன் கருத்து, வெங்கடெஷனின் கூற்றின் படி என்பதாகும். வெங்கடேசன் ஒரு நூலை எழுதுகிறார் என்றால், எந்த இடத்திலும் இப்படி ஒரு சொல்பிரயோகத்தை கைகொள்ள மாட்டார். வெங்கடேஷனின் கருத்தை ஒருவர் மேற்கொள் காட்டும் போதுதான் வெங்கடேஷனின் படி, வெங்கடேஷனின் கூற்றின் படி என்ற சொல்லாடலை கைகொள்வார். ஆக அடிப்படையில் நற்செய்தி நூல்களாக இன்றிருக்கும் பைபிளில் எதுவும் அதன் நூலாசிரியர்கள் எழுதியது அல்ல. மாறாக மத்தேயூ கூறுகிறார், மாற்கு கூறுகிறார், லூக்கா கூறுகிறார், யோவான் கூறுகிறார் என்று யாரோ ஒருவரால் மேற்கொள்காட்டி எழுதப்பட்ட நூல்கள்தான் இன்றைய பைபிளின் நற்செய்தி நூல்கள் என்பதற்கு அதன் தலைப்பும், கிடைத்திருக்கும் இரண்டாம் நூற்றாண்டின் கையெழுத்துப்பிரதியுமே சான்று. அந்த “யாரோ” மத்தேயூ, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகியோரின் நேரடி மாணவரா, அதற்கு ஏதும் ஆதாரம் இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை. அதனால்தான் கிறித்தவ அறிஞர்களில் பலரும்,, நற்செய்தி நூல்கள் அனைத்தும் முகவரி இல்லாதவர்களால் எழுதப்பட்டது என்கிறார்கள். கிறித்தவ உலகத்தால் நற்செய்தி நூல்களில் மத்தேயூ மற்றும் யோவான் ஆகிய இரண்டு மட்டுமே இயேசுவின் நேரடி சீடர்களால் எழுதப்பட்டதாக கோரப்படுகிறது. ஆனால் தற்காலத்தில் வெளிவரும் சில  பைபிள் ஆங்கில மொழியாக்கங்கள் தங்களது முன்னுரைகளில் நற்செய்தி நூல்கள் குறித்து பின்வருமாறு பதிவிட்டு வருகின்றன. அவற்றுள் சிலவற்றை இங்கே காண்போம். 


                    Some scholars have seen the Gospel’s replacement of Mark’s tax-collector Levi (Mk 2.13–17) with Matthew (9.9–13) as a sort of authorial signature. Yet, the fact that the Evangelist was so reliant upon Mark and a collection of Jesus’ sayings (“Q”) seems to point to a later, unknown, author. The Gospel’s time of writing is likewise unknown. 
    சில அறிஞர்கள், லேவி என்ற மாற்கின் வரி வசூலிப்பவர்(மாற்கு 2.13-17) இந்த நற்செய்தியில்(மத்தேயூ), மத்தேயூ (மத்தேயூ 9.9-13) என்று மாற்றப்பட்டுள்ளதை, அதிகாரப்பூர்வ கையொப்பமாக பார்க்கிறார்கள். ஆனால், இந்த சுவிஷேசக்காரர் மாற்கின் மீதும், இயேசுவின் கூற்றுக்களின் தொகுப்பு (“Q”) வின் மீதும் சார்ந்திருப்பது, இது பிற்கால அறியப்படாத எழுத்தரையே சுட்டிக்காட்டுகிறது. அதேபோல் இந்த நற்செய்தி எழுதப்பட்ட காலமும் அறியப்படவில்லை.( (The New Oxford Annotated Bible with Apocrypha- NRSV(2018), P.No.1746)
The Fourth Gospel is named for John, the son of Zebedee, one of the Twelve (see Mk 1.19; 3.17; etc.), traditionally thought to be its author and identified as the “beloved disciple” repeatedly mentioned in the Gospel. Modern scholars think it was more likely written by a disciple of John. It may have been the “beloved disciple,” who is never called John in the Gospel, or someone to whom he dictated it (see Jn 21.24n.). Most scholars date the Gospel to about 90 ce, although some have proposed an earlier date for it, or for an earlier version of it. 
நான்காவது நற்செய்தி நூல், யோவானுக்கானதாக குறிப்பிடப்படுகிறது, இவர் பன்னிருவரில் ஒருவரான செபதேயுவின் மகன் (பார்க்க Mk 1.19; 3.17; முதலியன), இவர் பாரம்பரியமாக இதன் ஆசிரியராகக் கருதப்படுகிறார். மேலும் நற்செய்தி மீண்டும் மீண்டும் குறிப்பிடும் “அன்பான சீடர்” என்ற அடையாளத்திற்கு உரியவர். தற்கால அறிஞர்கள் இது ஜானின் சீடரால் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறார்கள். நற்செய்தியில் ஜான் என்று அழைக்கப்படாத "அன்பான சீடர்" ஆகவும் அவர் இருக்கலாம் அல்லது அவர் அதைக் கட்டளையிட்ட ஒருவராகவும் இருக்கலாம்.(யோவான் 21:24). பெரும்பாலான அறிஞர்கள் சுவிசேஷத்தை சுமார் கிபி 90 ஐ சார்ந்தது என்று குறிப்பிடுகிறார்கள், இருப்பினும் சிலர் அதற்கோ அல்லது அதன் முந்தைய வடிவத்திற்கோ, முந்தைய காலத்தை முன்மொழிந்துள்ளனர். (The New Oxford Annotated Bible with Apocrypha- NRSV(2018), P.No.1879) 

✅ Brooke Foss Westcott, D. D. And Fenton John Anthony Hort. D.D.

The original autographs* of the apostolic writings are lost beyond all reasonable hope of discovery, and are not even mentioned by the post-apostolic  authors as being extant anywhere, or as having been seen by them. 
அப்போஸ்தலிக்க எழுத்துக்களின் அசல் ஆட்டோகிராஃப்கள் கண்டுபிடிப்பு பற்றிய நியாயமான நம்பிக்கைக்கு அப்பால் தொலைந்துவிட்டன, மேலும் அப்போஸ்தலிக்கத்திற்குப் பிந்தைய ஆசிரியர்களால் எங்கும் இருப்பதாகவோ அல்லது அவர்களால் பார்க்கப்பட்டதாகவோ கூட குறிப்பிடப்படவில்லை. (The New Testament In The Original Greek, The Text Revised By Brooke Foss Westcott, D. D. And Fenton John Anthony Hort. D.D. P.No.xii) 

✅ D. A. Carson & Douglas J. Moo

Unlike most other ancient biographies, the gospels are anonymous; they lack the literary pretensions characteristic of most biographies; and, most of all, they combine teaching and action in a preaching-oriented work that stands apart from anything else in the ancient world 
    மற்ற பண்டைய சுயசரிதைகளைப் போலல்லாமல், நற்செய்திகள் அநாமதேயமாக உள்ளன; பெரும்பாலான சுயசரிதைகளின் சிறப்பியல்பு இலக்கிய பாசாங்குகள் அவற்றில் இல்லை; மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் கற்பித்தலையும் செயலையும் ஒரு பிரசங்கம் சார்ந்த வேலையில் இணைக்கிறார்கள், இது பண்டைய உலகில் வேறு எதிலும் இருந்து தனித்து நிற்கிறது.(An Introduction To The New Testament – Second Edition, Zondervan Press,  By D. A. Carson & Douglas J. Moo,  P.No.115)

✅ Raymond E. Brown, S.S.

The Gospels, for instance, are anonymous; they do not identify their authors (see, however, John 21:24); the attributions to Matthew, Mark, Luke, and John that appear in titles stem from the (late?) 2d century and are not part of the original works. 
உதாரணமாக, சுவிசேஷங்கள் அநாமதேயமானவை; அவை தங்கள் ஆசிரியர்களை அடையாளம் காட்டவில்லை (எவ்வாறாயினும், ஜான் 21:24 ஐப் பார்க்கவும்); தலைப்புகளில் மத்தேயு, மார்க், லூக் மற்றும் ஜான் என்று இணைத்து கூறப்படுவது, (பிற்பகுதி?) இரண்டாம் நூற்றாண்டிலிருந்து தோன்றியதாகும், அது அசல் உருவாக்கத்தில் இல்லை. (AN INTRODUCTION TO THE NEW TESTAMENT BY Raymond E. Brown, S.S., Footnote, P.No.585) 

✅ Kurt Aland

‘In my opinion it is beyond doubt that all the gospels were published anonymously. Our present opinion about their authors dates from information which derives from the time of Papias or later’ (K. Aland, ‘The Problem of Anonymity and Pseudonymity in Christian Literature of the First Two Centuries’ P.No.41) 
    'எனது கருத்துப்படி, அனைத்து நற்செய்திகளும் பெயர் குறிப்பிடாமல் வெளியிடப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. அவற்றின் ஆசிரியர்களைப் பற்றிய நமது தற்போதைய கருத்து பாபியஸ் அல்லது அதற்குப் பிறகான காலத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களில் இருந்தே வருகிறது. (K. Aland, ‘The Problem of Anonymity and Pseudonymity in Christian Literature of the First Two Centuries’ P.No.41)

✅ Catholic Encyclopedia

“The first four historical books of the New Testament are supplied with titles (Euangelion kata Matthaion, Euangelion kata Markon, etc.), which, however ancient, do not go back to the respective authors of those sacred writings. […] It thus appears that the present titles of the Gospels are not traceable to the evangelists themselves.”
    "புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு வரலாற்றுப் புத்தகங்கள் தலைப்புகளுடன் வழங்கப்பட்டுள்ளன (யுவாஞ்செலியன் கடா மத்தாயோன், யூவாஞ்செலியன் கடா மார்கோன், முதலியன), அவை எவ்வளவு பழமையானதாக இருந்தாலும், அந்த புனித எழுத்தாக்கங்களுடன் தொடர்புடைய ஆசிரியர்களை சென்றடையாது.[…] சுவிசேஷங்களின் தற்போதைய தலைப்புகள், அந்த சுவிஷேசக்கார்ரகள் வரை செல்வதை கண்டறிய இயலாது என்று தோன்றுகிறது.( Catholic Encyclopedia, “Gospel and  Gospels”,   Vol.VI , P.No.1673)

✅ The New Testament with the Apocryphal/Deuterocanonical Books (NRSV)

Scholars generally agree that the Gospels were written forty to sixty years after the death of Jesus. They thus do not present an eyewitness or contemporary account of Jesus' life and teaching. Even the language has changed. 
சுவிசேஷங்கள் இயேசு இறந்து நாற்பது முதல் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டதாக அறிஞர்கள் பொதுவாக ஒப்புக்கொள்கிறார்கள். இவ்வாறு இயேசுவின் வாழ்க்கை மற்றும் போதனைகளின் நேரடி சாட்சியத்தையோ அல்லது சமகால குறிப்புக்களையோ அவை முன்வைக்காது . மொழி கூட மாறிவிட்டது. (The New Testament with the Apocryphal/ Deuterocanonical Books, Division of Christian Education of the National Council of the Churches of Christ in the United States of America, P.No. 4-5) 

✅ The Blackwell Companion to the New Testament

(to call attention to the problem of “ authorship, ” i.e., while all of the canonical gospels were originally anonymous, if the names of authors later affixed to the text are incorrect, they are examples of secondary pseudepigraphy; if correct, however, they are instances of secondary orthonymity) 
எழுத்தாக்கம் என்ற சிக்கலில் கவனம் செலுத்துதல்:  அனைத்து நியமன நற்செய்தி நூல்களும் முதலில் அநாமதேயமாக இருந்தபோது, உரையுடன் பிந்நாட்களில் இணைக்கப்பட்ட ஆசிரியர்களின் பெயர்கள் தவறாக இருந்தால், அவை இரண்டாம் நிலை சூடிபிகிராஃபிக்கு எடுத்துக்காட்டுகளாகும் (அதாவது ஒரு எழுத்தாக்கத்திற்கு இரண்டாம் நிலை பொய் எழுத்தர் பெயர் சூட்டல்;) மாறாக சரியாக இருந்தால், அவை இரண்டாம் நிலை ஆர்த்தோனிமிட்டி (அதாவது வேறு ஒருவர் அந்த ஆசிரியர் எழுதியதாக கூறுவது) (The Blackwell Companion to the New Testament P.No.5)

✅ Introduction To The New Testament, Completely Re-edited by Werner Georg Kummel

The author of Matthew, whose name is unknown to us, was a Greek-speaking Jewish Christian, who possibly had rabbinic knowledge, and in any case was bound to a form of the Jesus tradition which had strongly assimilated the sayings of Jesus to Jewish views.
மத்தேயுவின் ஆசிரியர், அவருடைய பெயர் நமக்குத் தெரியவில்லை, அவர் ஒரு கிரேக்க மொழி பேசும் யூத கிறிஸ்தவர், அவர் யூதக் குருசார் அறிவு பெற்றவராக இருந்ததற்கான வாய்ப்புகள் உள்ளன, எப்படியிருந்தாலும், இயேசுவின் வாசகங்களை யூதக் கருத்துக்களுடன் வலுவாக ஒருங்கிணைக்கும் இயேசுவின் மரபின் ஒரு வடிவத்திற்குக் உட்பட்டவர். ( Introduction To The New Testament, Completely. Re-edited by Werner Georg Kummel,  Professor of New Testament at Marburg University 14th Revised Edition, P.No.86)
That is to say, the author of John is unknown to us. It has often been maintained that he must have been a born Jew (lately, e.g.. Smith, Schnackenburg, Grundmann). But this supposition is not convincing at all, (..) We do not know more about the author of John, and all additional conjectures about the origin of the later tradition about John, the son of Zebedee, as the author of John, contribute nothing to its understanding.  
அதாவது யோவானின் ஆசிரியர் யார் எனறு நமக்குத் தெரியவில்லை. அவர் பிறப்பால் ஒரு யூதராக இருக்க வேண்டும் என்று அடிக்கடி தக்கவைக்கப்படுகிறது (சமீபத்தில், எ.கா. ஸ்மித், ஷ்னாக்கன்பர்க், கிரண்ட்மேன்). ஆனால் இந்த அனுமானம் நம்பத்தகுந்ததாக இல்லை, (..)யோவானின்(நற்செய்தி) ஆசிரியரைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது, யோவான் (நற்செய்தி) பற்றிய பிற்கால பாரம்பரியத்தின் தோற்றம் பற்றிய அனைத்து கூடுதல் அனுமானங்களும், யோவான் (நற்செய்தி)யின் ஆசிரியர் செபதேயுவின் மகன், என்ற புரிதலுக்கு எதுவும் பங்களிக்கவில்லை….( Introduction To The New Testament, Completely. reedited by Werner Georg Kummel,  Professor of New Testament at Marburg University 14th Revised Edition, P.No.174)
        நாம் மேற்குறிபிட்ட அறிஞர்கள், பைபில் மற்றும் நூற்களின் கருத்துக்களை முன்வைத்ததற்கு காரணம், நாம் மட்டும், நற்செய்தி நூல்கள் அட்ரஸ் இல்லாத நூல் என்ற கருத்தை முன்வைக்கவில்லை, மாறாக கிறித்தவ அறிஞர்களும் இந்த கருத்தை கொண்டுள்ளார்கள் என்பதை நிறுவத்தான். இனி நாம் இந்த கருத்தை உறுதி படுத்தும் நமது ஆய்வுகளையும், நற்செய்தி நூல்கள் குறித்த ஆசிரியர்கள் குறித்து இருக்கும் ஆதாரங்களின் அவலங்களையும் தோழுரிக்கவுள்ளோம்.


புதிய ஏற்பாட்டின் நூல்களின் வரலாற்று சான்றுகளை ஆய்வு செய்வதற்கு முன்பு அந்த சான்றுகள் யார் வழியாக நமக்கு கிடைக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகும். அந்த வகையில் புதிய ஏற்பாட்டின் வரலாற்று குறிப்புக்களை தாங்கி நிற்பது திருச்சபை தந்தையர்களின் எழுத்தாக்கங்களே. எனவே அவர்கள் குறித்த கால பாகுபாட்டினையும், அதில் இடம் பெறும் முக்கிய பிதாக்கள் யார் யார் என்பதையும் அறிந்து கொள்வது அவசியமாகும். அதனை விளக்கும் படம் கீழே தரப்பட்டுள்ளது. 



    தற்கால மிசனரிகள் திருச்சபை பிதாக்களின் குறிப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறும் பட்சத்தில், புதிய ஏற்பாடு வரலாறு அற்ற நூல் என்பதை அவர்கள் ஏற்கும் சூழல் ஏற்படும். அவர்கள் நாங்கள் நம்புகிறோம், அதனால் வரலாற்று ஆவணங்கள் எங்களுக்கு தேவை இல்லை என்று கூறினால், அவர்கள், எந்த மத நூலின் வரலாற்று குறிப்பு விமர்சனத்திற்குள்ளும் நுழையும் அருகதை அற்று போவார்கள் என்பதை நாம் தெரிவித்துக்கொண்டு உள்ளடக்கத்தில் நுழைவோம்.


புதிய ஏற்பாட்டில் இடம்பெறும் நற்செய்தி நூல்களின் ஆசிரியர்கள் மத்தேயூ, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்று பாரம்பரியமாக கிறித்தவர்களால் கூறப்பட்டு வருகிறது.  பின்வரும் வரலாற்று குறிப்புக்கள் அது குறித்து பேசுகின்றன. அந்த வரலாற்று குறிப்புகளின் நம்பகத்தன்மை என்ன என்பதையும் இங்கு ஆய்வு செய்வோம்.

        And the presbyter said this. Mark having become the interpreter of Peter, wrote down accurately whatsoever he remembered. It was not, however, in exact order that he related the sayings or deeds of Christ. For he neither heard the Lord nor accompanied Him. But afterwards, as I said, he accompanied Peter, who accommodated his instructions to the necessities [of his hearers], but with no intention of giving a regular narrative of the Lord’s sayings. Wherefore Mark made no mistake in thus writing some things as he remembered them. For of one thing he took especial care, not to omit anything he had heard, and not to put anything fictitious into the statements. [This is what is related by Papias regarding Mark; but with regard to Matthew he has made the following statements]: Matthew put together the oracles [of the Lord] in the Hebrew language, and each one interpreted them as best he could. [The same person uses proofs from the First Epistle of John, and from the Epistle of Peter in like manner. And he also gives another story of a woman who was accused of many sins before the Lord, which is to be found in the Gospel according to the Hebrews.] 
    மேலும் அந்த பிரசங்கி இவ்வாறு கூறினார். பீட்டரின் மொழிபெயர்ப்பாளராக மாறிய மார்க், அவர் நினைவில் வைத்திருந்த அனைத்தையும் துல்லியமாக எழுதினார். இருப்பினும், அவர் கிறிஸ்துவின் சொற்கள் அல்லது செயல்களை சரியான வரிசையில் குறிப்பிடவில்லை. ஏனென்றால், அவர் கர்த்தரிடம் செவியுறவுமில்லை, அவருடன் இருக்கவுமில்லை. ஆனால் பின்னர், நான் சொன்னது போல், அவர் பீட்டருடன் சென்றார், அவர் தனது அறிவுறுத்தல்களை [கேட்பவர்களிடம்] தேவைப்படும் போது [கேட்பவர்களிடம் கொடுத்தார், ஆனால் இறைவனின் வார்த்தைகளை வழக்கமான விவரிப்பைக் கொடுக்க எந்த நோக்கமும் அவரிடம் இல்லை. எனவே மார்க் சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொண்டு இவ்வாறு எழுதுவதில் எந்த தவறும் இழைக்கவில்லை.. அவர் ஒரு விஷயத்தில் குறிப்பாக கவனமாக இருந்தார், அவை அவர் கேள்விப்பட்ட எதையும் விட்டுவிடக்கூடாது, மேலும் கற்பனையான எதையும் அறிக்கைகளில் போடக்கூடாது என்பதில். [மார்க்கைப் பற்றி பாபியாஸ் கூறியது இதுதான்; ஆனால் மத்தேயுவைப் பொறுத்தவரை அவர் பின்வரும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்]: மத்தேயு எபிரேய மொழியில் [கர்த்தரின்] அற்புதங்களை ஒன்றாக தொகுத்தார், மேலும் ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்தவரை அவற்றை விளக்கினர். (Eusebius, Hist. Eccl. iii. Chapter 39)
    He said “I considered what Andrew and Peter said, what Philip, what Thomas, what James, what John, what Matthew or anyone else among the disciples of our Lord, what also Aristion and the elder John, disciples of the Lord had said, not so much that I have their books to read, as that their living voice is heard until the present day in the authors themselves.”
    அவர் (பாப்பியஸ்) கூறினார், “நான், ஆண்ட்ரூவும் பேதுருவும் கூறியதையும், எதை பிலிப்பும், தாமஸும், ஜேம்ஸும், ஜானும், மத்தேயுவும், நம்முடைய கர்த்தருடைய சீஷர்களில் வேறு யாரேனும், அரிஸ்ஷனும், மூத்த ஜானும், கர்த்தருடைய சீஷர்களும் கூறியதையும் கருத்தில் கொண்டேன். அவர்களின் புத்தகங்களை வாசிப்பதற்கு என்னிடம் அதிகம் இல்லை, அவர்களின் உயிருள்ள குரல் இன்றைய நாள் வரை எழுத்தர்களிடமே கேட்கப்படுகிறது.” (Jerome Lives of Illustrious Men, Chapter XVIII. Papias the bishop)

ஐரீனியஸின் குறிப்பு (காலம் கி.பி.130 - 200 )

            For, after our Lord rose from the dead, [the apostles] were invested with power from on high when the Holy Spirit came down [upon them], were filled from all [His gifts], and had perfect knowledge: they departed to the ends of the earth, preaching the glad tidings of the good things [sent] from God to us, and proclaiming the peace of heaven to men, who indeed do all equally and individually possess the Gospel of God. Matthew also issued a written Gospel among the Hebrews in their own dialect, while Peter and Paul were preaching at Rome, and laying the foundations of the Church. After their departure, Mark, the disciple and interpreter of Peter, did also hand down to us in writing what had been preached by Peter. Luke also, the companion of Paul, recorded in a book the Gospel preached by him. Afterwards, John, the disciple of the Lord, who also had leaned upon His breast, did himself publish a Gospel during his residence at Ephesus in Asia. 

        ஏனெனில், நம் ஆண்டவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, பரிசுத்த ஆவியானவர் [அவர்கள் மீது] இறங்கியபோது, [அப்போஸ்தலர்கள்] மேலிருந்து வல்லமை பெற்றனர், எல்லாவற்றிலும் [அவருடைய வரங்களிலிருந்து] நிரப்பப்பட்டு, பரிபூரண அறிவைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் பூமியின் எல்லைகள் வரை புறப்பட்டு, கடவுளிடமிருந்து நமக்கு அனுப்பப்பட்ட நற்செய்திகளைப் பிரசங்கித்து, பரலோக அமைதியை மனிதர்களுக்கு அறிவித்தார்கள். உண்மையில் அவர்கள் அனைவரும் சமமாகவும், தனித்தனியாகவும் கடவுளின் நற்செய்தியை பெற்றிருந்தனர். மத்தேயு எபிரேயர்களிடையே எழுதப்பட்ட நற்செய்தியை அவர்களின் சொந்த பேச்சுவழக்கில் வெளியிட்டார், அதே நேரத்தில் பேதுருவும் பவுலும் ரோமில் பிரசங்கித்து, தேவாலயத்தின் அடித்தளத்தை அமைத்தனர். அவர்கள் இறந்த பிறகு, பேதுருவின் சீடரும் மொழிபெயர்ப்பாளருமான மார்க், பேதுருவால் பிரசங்கிக்கப்பட்டதை எழுத்துப்பூர்வமாக நம்மிடம் ஒப்படைத்தார். அதன்பிறகு, இறைவனின் சீடரான, அவருடைய மார்பில் சாய்ந்திருந்த யோவான், ஆசியாவிலுள்ள எபேசஸ் என்ற இடத்தில் தாம் தங்கியிருந்தபோது ஒரு நற்செய்தியை அவரும் வெளியிட்டார். ( Against Heresies:Book III, Chapter I)

அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் (காலம் கி.பி. 150 – 215): 

        And in the Gospel according to Matthew, the genealogy which begins with Abraham is continued down to Mary the mother of the Lord. (Stromata, Chapter XXI.—The Jewish Institutions and Laws of Far Higher Antiquity Than the Philosophy of the Greeks.)

    மேலும் மத்தேயுவின் நற்செய்தியில், ஆபிரகாமுடன் தொடங்கும் வம்சாவளியானது கர்த்தருடைய தாயான மரியா வரை தொடர்கிறது. (Stromata, Chapter XXI.—The Jewish Institutions and Laws of Far Higher Antiquity Than the Philosophy of the Greeks.)

        Mark, the follower of Peter, while Peter publicly preached the Gospel at Rome before some of Cæsar’s equites, and adduced many testimonies to Christ, in order that thereby they might be able to commit to memory what was spoken, of what was spoken by Peter, wrote entirely what is called the Gospel according to Mark. As Luke also may be recognised by the style, both to have composed the Acts of the Apostles, and to have translated Paul’s Epistle to the Hebrews. (Fragments of Clemens Alexandrinus.—From the Latin Translation of Cassiodorus Chapter.I)

        பேதுரு ரோமில் சீசரின் சில சமயங்களுக்கு முன்பாக நற்செய்தியைப் பகிரங்கமாகப் பிரசங்கித்தபோது, கிறிஸ்துவுக்குப் பல சாட்சியங்களைச் சொன்னார்கள், இதன்மூலம் பேதுரு பேசியதையும், (பேதுருவால்) பேசப்பட்டதையும் பீட்டரின் சீடரான மார்க்,  நினைவில் வைத்துக் கொண்டு, மார்க் படியான நற்செய்தி என்று அழைக்கப்படுவதை முழுமையாக எழுதினார். அதேபோல, அப்போஸ்தல நடபடிகளை தொகுத்ததையும், எபிரேயருக்கு பவுல் எழுதிய நிருபத்தை மொழிபெயர்த்த்தையும், அவ்விரண்டின் பாணியால் லூக்கா எழுதியதை அறிந்து கொள்ள முடியும். 

Again, in the same books, Clement gives the tradition of the earliest presbyters, as to the order of the Gospels, in the following manner:

6. The Gospels containing the genealogies, he says, were written first. The Gospel according to Mark had this occasion. As Peter had preached the Word publicly at Rome, and declared the Gospel by the Spirit, many who were present requested that Mark, who had followed him for a long time and remembered his sayings, should write them out. And having composed the Gospel he gave it to those who had requested it.

7. When Peter learned of this, he neither directly forbade nor encouraged it. But, last of all, John, perceiving that the external facts had been made plain in the Gospel, being urged by his friends, and inspired by the Spirit, composed a spiritual Gospel.”1876 This is the account of Clement.  

(Eusebius, Historia Ecclesiastica, Book VI, Chapter XIV.—The Scriptures mentioned by Him (Clement of Alexandria))

மீண்டும், அதே புத்தகங்களில், சுவிசேஷங்களின் வரிசை பற்றி, ஆரம்பகால பிரஸ்பைட்டர்களின் பாரம்பரியத்தை கிளெமென்ட் பின்வருமாறு கொடுக்கிறார்:

6. வம்சாவளியைக் கொண்ட சுவிசேஷங்கள் முதலில் எழுதப்பட்டவை என்று அவர் கூறுகிறார். மார்க்கின் படியான சுவிசேஷம் இந்த (பின்வரும்) விஷயத்தை கொண்டது. பேதுரு ரோமில் பகிரங்கமாக வார்த்தையைப் பிரசங்கித்து, ஆவியின் மூலம் சுவிசேஷத்தை அறிவித்தபோது, அங்கு இருந்த பலர், அவரை நீண்ட காலமாக பின்பற்றி, அவருடைய வார்த்தைகளை நினைவில் வைத்திருந்த மாற்கு அவற்றை எழுதும்படியாக கேட்டுக் கொண்டனர். மேலும் அவர் நற்செய்தியை இயற்றி, அதைக் கேட்டவர்களுக்குக் கொடுத்தார்.

7. பீட்டர் இதைப் பற்றி அறிந்தபோது, அவர் அதை நேரடியாகத் தடுக்கவோ அல்லது ஊக்குவிக்கவோ இல்லை. ஆனால், எல்லாவற்றிற்கும் கடைசியாக, ஜான், சுவிசேஷத்தில் வெளிப்புற உண்மைகள் தெளிவுபடுத்தப்பட்டிருப்பதை உணர்ந்து, அவரது நண்பர்களால் உந்தப்பட்டு, ஆவியின் தூண்டுதலால், ஒரு ஆன்மீக நற்செய்தியை இயற்றினார். (Eusebius, Historia Ecclesiastica, Book VI, Chapter XIV.—The Scriptures mentioned by Him (Clement of Alexandria))

டெர்டுள்ளியன் (காலம் கி.பி.160 – 225):

        Even wasps make combs; so also these Marcionites make churches. The same authority of the apostolic churches will afford evidence to the other Gospels also, which we possess equally through their means, and according to their usage—I mean the Gospels of John and Matthew—whilst that which Mark published may be affirmed to be Peter’s whose interpreter Mark was. For even Luke’s form of the Gospel men usually ascribe to Paul. And it may well seem that the works which disciples publish belong to their masters. Well, then, Marcion ought to be called to a strict account concerning these (other Gospels) also, for having omitted them, and insisted in preference on Luke; as if they, too, had not had free course in the churches, as well as Luke’s Gospel, from the beginning. Nay, it is even more credible that they existed from the very beginning; for, being the work of apostles, they were prior, and coeval in origin with the churches themselves. (Anti-Marcion, Book IV.Chapter V.—By the Rule of Antiquity, the Catholic Gospels are Found to Be True, Including the Real St. Luke’s. Marcion’s Only a Mutilated Edition. The Heretic’s Weakness and Inconsistency in Ignoring the Other Gospels)

    குளவிகள் கூட கூட்டினை உருவாக்குகின்றன; இந்த மார்சியோனைட்டுகளும் தேவாலயங்களை உருவாக்குகிறார்கள். அப்போஸ்தலிக்க தேவாலயங்களின் அதே அதிகாரம் மற்ற சுவிசேஷங்களுக்கும் ஆதாரங்களை வழங்கும், அவை அவற்றின் வழிகளிலும், அவற்றின் பயன்பாட்டிலும் சமமாக நம்மிடம் உள்ளன. ஜான் மற்றும் மத்தேயுவின் சுவிசேஷங்களை நான் சொல்கிறேன் - அதே நேரத்தில் மார்க் வெளியிட்டது, பீட்டரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த மார்க்கினது என்று உறுதிபடுத்தலாம். லூக்காவின் நற்செய்தியின் வடிவம் கூட பொதுவாக பவுலைடையது என்று கூறுகிறார்கள். மேலும் சீடர்கள் வெளியிடும் படைப்புகள் அவர்களின் குருக்களுக்குரியதாகத் தோன்றலாம். சரி அப்படியானால் இவற்றை (மற்ற நற்செய்திகளை) தவிர்த்துவிட்டு, அவை லூக்காவை போன்று தேவாலயங்களில் பெரும் புலக்கத்தில் இல்லாதவை போன்று, லூக்காவை மட்டும் முன்னுரிமைப்படுத்துமாறு வலியுறுத்தியதற்காக, மார்சியன் கடுமையான கணக்கிற்கு அழைக்கப்பட வேண்டும். மாறாக, அவை (மற்ற நற்செய்திகள்) ஆரம்பத்திலிருந்தே இருந்தன என்பது இன்னும் நம்பகமானது; ஏனெனில், அப்போஸ்தலருடைய வேலையாக இருந்ததால், அவை தேவாலயங்களுக்கு முந்தியவையாகவும், சமகாலத்தவையாகவும் இருந்தன. (Anti-Marcion, Book IV.Chapter V.—By the Rule of Antiquity, the Catholic Gospels are Found to Be True, Including the Real St. Luke’s. Marcion’s Only a Mutilated Edition. The Heretic’s Weakness and Inconsistency in Ignoring the Other Gospels)

ஓரிகன் (காலம் கி.பி.185 – 253):

1)….Matthew, Mark, John, and Luke did not "try" to write; they wrote their Gospels when they were filled with the Holy Spirit. Hence, "Many have tried to compose an account of the events that are clearly known among US."  

2). The Church has four Gospels. Heretics have very many. One of them is entitled According to the Egyptians, another According to the Twelve Apostles. Basilides, too, dared to write a gospel and give it his own name." "Many have tried" to write, but only four Gospels have been approved. Our doctrines about the Person of our Lord and Savior should be drawn from these approved Gospels. (ORIGEN HOMILIES ON LUKE FRAGMENTS ON LUKE P.No.6)

1)…… மத்தேயு, மார்க், ஜான், லூக்கா ஆகியோர் எழுத "முயற்சி" செய்யவில்லை; அவர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டபோது அவர்கள் தங்கள் சுவிசேஷங்களை எழுதினார்கள். எனவே, "நம்மிடையே தெளிவாகத் தெரிந்த நிகழ்வுகளின் குறிப்பை எழுத பலர் முயன்றனர்."

2) தேவாலயம் நான்கு நற்செய்திகளைக் கொண்டுள்ளது. பேதக்காரர்கள் மிக அதிகமாக கொண்டுள்ளனர்.. இந்த அங்கீகரிக்கப்பட்ட நற்செய்திகளிலிருந்து நமது இறைவன் மற்றும் இரட்சகரின் நபர் பற்றிய நமது கோட்பாடுகள் எடுக்கப்பட வேண்டும். அவற்றில் ஒன்று எகிப்தியர்களின் படியானது என்றும், மற்றது பன்னிரு அப்போஸ்தலர்களின் படியானது என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது. பேசிலிடிஸ் கூட, ஒரு நற்செய்தியை எழுதி அதற்குத் தன் பெயரைச் சூட்டத் துணிந்தார். "பலர் எழுத முயற்சி செய்துள்ளனர்" ஆனால் நான்கு சுவிசேஷங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நமது இறைவன் மற்றும் இரட்சகரின் நபரைப் பற்றிய நமது கோட்பாடுகள் இந்த அங்கீகரிக்கப்பட்ட நற்செய்திகளிலிருந்தே பெறப்பட வேண்டும். (ORIGEN HOMILIES ON LUKE FRAGMENTS ON LUKE P.No.6)

குறிப்பு: லூக்காவின் 1:2ம் வசனத்தின் விளக்கம்தான் சுட்டிக்காட்டப்பட்ட பகுதி. ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால்(லூக்கா 1:2)

யூசிபியஸ் (காலம் கி.பி. 260-339)
7. But Luke, who was of Antiochian parentage and a physician by profession, and who was especially intimate with Paul and well acquainted with the rest of the apostles, has left us, in two inspired books, proofs of that spiritual healing art which he learned from them. One of these books is the Gospel, which he testifies that he wrote as those who were from the beginning eye witnesses and ministers of the word delivered unto him, all of whom, as he says, he followed accurately from the first. The other book is the Acts of the Apostles which he composed not from the accounts of others, but from what he had see himself.

8. And they say that Paul meant to refer to Luke’s Gospel wherever, as if speaking of some gospel of his own, he used the words, “according to my Gospel.” (Rom. ii. 16, xvi. 25; 2 Tim. ii. 8.) ( Eusebius, Historia Ecclesiastica, Book III. Chapter IV.—The First Successors of the Apostles).

7.ஆனால், அந்தியோக்கியாவின் வம்சாவழியை சார்ந்தவராகவும், தொழிலில் மருத்துவராகவும், குறிப்பாக பவுலுடன் நெருக்கமாகவும், மற்ற அப்போஸ்தலர்களுடன் நன்கு பழகியவராகவும் இருந்த லூக்கா, அவர்களிடமிருந்து அவர் கற்றுக்கொண்ட அந்த ஆன்மீக குணப்படுத்தும் கலையின் சான்றுகளை இரண்டு உந்தப்பட்ட புத்தகங்களில் நமக்கு விட்டுச்சென்றுள்ளார். இந்த புத்தகங்களில் ஒன்று சுவிசேஷம், அதில் முதலில் இருந்து கண்ணார கண்ட சாட்சிகளினாலும், ஊழியக்கார்ரகளினாலும் அவருக்கு தெரிவிக்கப்பட்ட வார்த்தைகளை, அவர் சொல்வது போலவே முதலில் இருந்து சரியாக பின்பற்றியுள்ளார், என்று அவர் சாட்சி பகர்கிறார். மற்ற புத்தகம் அப்போஸ்தலர்களின் நடபடிகள் ஆகும், இது மற்றவர்களின் சொற்களிலிருந்து அல்ல, அவரே தான் கண்டவற்றிலிருந்து இயற்றினார்.

8.மேலும், பவுல் லூக்காவின் நற்செய்தியை எங்கு குறிப்பிட்டாலும் அவர் தனது சொந்த நற்செய்தியைப் பற்றி பேசுவது போல் குறிப்பிடுகிறார், என்று அவர்கள் கூறுகிறார்கள், "என் சுவிசேஷத்தின்படி" என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார். (ரோமர் 2:16, 16:26, 2தீமோத்தேயு 2:8) ( Eusebius, Historia Ecclesiastica, Book III. Chapter IV.—The First Successors of the Apostles).

ஸலாமிஸின் எபிஃபேனியஸ் (காலம் கி.பி.310 – 403)

Matthew himself wrote and issued the Gospel in the Hebrew alphabet, and did not begin at the beginning, but traced Christ’s pedigree from Abraham. 

மத்தேயு தானே எபிரேய எழுத்துக்களில் நற்செய்தியை எழுதி வெளியிட்டார், ஆரம்பத்தில் இருந்து தொடங்கவில்லை, ஆனால் ஆபிரகாமில் இருந்து கிறிஸ்துவின் பரம்பரையைக் பட்டியலிட்டார். (The Panarion of Epiphanius of Salamis Books II and III. De Fide, 6.1, 5,3)

Mark, who came directly after Matthew, was ordered by St. Peter at Rome to issue the Gospel, and after writing it was sent by St. Peter to Egypt. (The Panarion of Epiphanius of Salamis Books II and III. De Fide, 6.1, 6,10)

மத்தேயுவுக்குப் பிறகு நேரடியாக வந்த மார்க், நற்செய்தியை வெளியிடுமாறு ரோமில் புனித பீட்டரால் கட்டளையிடப்பட்டார், அதை எழுதிய பிறகு புனித பீட்டரால் எகிப்துக்கு அனுப்பப்பட்டார். (The Panarion of Epiphanius of Salamis Books II and III. De Fide, 6.1, 6,10)

    Matthew, also called Levi, apostle and a foretimes publican, composed a gospel of Christ at first published in Judea in Hebrew  for the sake of those of the circumcision who believed, but this was afterwards translated into Greek though by what author is uncertain. The Hebrew itself has been preserved until the present day in the library at Cæsarea which Pamphilus so diligently gathered. I have also had the opportunity of having the volume described to me by the Nazarenes of Beroea, a city of Syria, who use it.( Jerome, Lives of Illustrious Men. Chapter III. Matthew, surnamed Levi) 
லெவி, அப்போஸ்தலன் மற்றும் முன்னொரு காலத்தில் வரிவசூலிப்பவர் என்றும் அழைக்கப்படும் மத்தேயு, முதலில் கிறிஸ்துவின் நற்செய்தியை யூதேயாவில் ஹீப்ருவில், நம்பிக்கைக்கொண்ட விருத்தசேதனம் செய்தவர்களுக்காக வெளியிட்டார். ஆனால் இது பின்னர் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது, ஆனால் யாரால் என்பது அறியப்படவில்லை. பாம்பிலஸ் மிகவும் விடாமுயற்சியுடன் சேகரித்த Cæsarea நூலகத்தில் இன்று வரை எபிரேயத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிரியாவின் நகரமான பெரோயாவின் நாசரேன்கள் என்னிடம் விவரித்த அந்த தொகுப்பினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது, அவர்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள்.( Jerome, Lives of Illustrious Men. Chapter III. Matthew, surnamed Levi)

யோவான் கிறிசோஸ்தோம் (காலம் கி.பி.347 – 407):

        Of Matthew again it is said, that when those who from amongst the Jews had believed came to him, and besought him to leave to them in writing those same things, which he had spoken to them by word, he also composed his Gospel in the language of the Hebrews. And Mark too, in Egypt is said to have done this self-same thing at the entreaty of the disciples. (Homilies of St. John Chrysostom, archbishop of constantinople, on the gospel according to st. matthew. Homily 1)

மத்தேயுவைப் பற்றி மீண்டும் சொல்லப்படுகிறது, யூதர்களில் இருந்து விசுவாசித்தவர்கள் அவரிடம் வந்து, அவர் தங்களுக்கு வார்த்தையாகப் பேசியதையே தங்களுக்கு எழுதித் தரும்படி வேண்டிக்கொண்டபோது, அவர் தனது நற்செய்தியை எபிரேயர்களின் மொழியில் இயற்றினார். மேலும், மாற்குவும், எகிப்தில், சீடர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இதையே செய்ததாகக் கூறப்படுகிறது. (Homilies of St. John Chrysostom, archbishop of constantinople, on the gospel according to st. matthew. Homily 1)

    மேற்குறிபிட்ட வரலாற்று கூற்றுக்களின் அடிப்படையில், நற்செய்தி நூல்களின் உள்ளடக்கத்தையும், வெளிப்புற வரலாற்று ஆதாரங்களுடன், இருக்கும் முரண்களையும், அந்த முரண்கள் எப்படி கிறித்தவ உலகின் நெடுநாள் நம்பிக்கையை ஆட்டுவிக்கிறது என்பதையும், இஸ்லாமிய அறிஞர்கள் இந்த நற்செய்தி நூல் குறித்து என்ன நிலைபாட்டை கொண்டுள்ளனர் என்பதையும் வரும் தொடர்களில் காணவிருக்கிறோம், இன் ஷா அல்லாஹ்……..