பக்கங்கள் செல்ல

Wednesday, September 28, 2022

உபை இப்னு கஅப்(ரலி) முஸ்ஹஃப்பில் அல்ஹஃப்த் மற்றும் அல்ஃஹலா ஸுராக்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

        
    குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பி வரும் விமர்சனங்களின் வரிசையில் அடுத்தாக இடம் பெறும் பகுதி உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் அதிகப்படியான இரண்டு சூராக்களை குர்ஆனின் பகுதியாக கொண்டிருந்தார்கள், அது இன்றைய குர்ஆனில் இடம்பெறவில்லை என்பதாகும். அது குறித்த இஸ்லாமோஃபோபுகளின் வாதத்தையும், அதற்கு அடிப்படையாக அமைந்த ஆதாரங்களையும் அதற்கான பதிலையும்  பார்ப்போம்.
عَنِ ابْن سِيرِينَ، قَالَ: كَتَبَ أُبَيُّ بْنُ كَعْبٍ فِي مُصْحَفِهِ فَاتِحَةَ الْكِتَابِ وَالْمُعَوِّذَتَيْنِ، وَاللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ، وَاللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ

இப்னு ஸீரின் கூறியதாவது, "உபை இப்னு கஅப்(ரலி) அவரது முஸ்ஹஃபில் அல் ஃபாத்திஹா, அல் முஅவ்விததைன் (113 மற்றும் 114 ஆகிய சூராக்கள்) அல்லாஹும்ம இன்னா நஸ்தயீனுக்க( அல் ஃஹலா) ,அல்லாஹும்ம இய்யாக நஃபுது (அல் ஹஃப்த்) ஆகியவற்றை எழுதியுள்ளார்கள். (நூல்:அபூ உபைத்யின் ஃபதாயில் அல் குர்ஆன் 1/318, அஸ்ஸுயூத்தியின் இத்கான் 1/226)


இஸ்லாமோஃபோபுகளின் வாதம்:

    மேற்குறிப்பிட்ட ஆதாரத்தின் அடிப்படையில் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பில் ஸூரத் அல்ஹஃப்த் மற்றும் ஸூரத் அல்ஃஹலா ஆகிய இரண்டு ஸூராக்கள் அதிகப்படியாக உள்ளன. இன்றைய குர்ஆனில் அது இடம்பெறவில்லை. ஆகவே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பது இஸ்லாமோஃபோபுகளின் வாதம்.


        இஸ்லாமோஃபோபுகள் முன்வைத்த ஆதாரத்தை ஆய்வு செய்வதற்கு முன்பு உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த ஒரு அடிப்படை தகவலை நாம் அறிந்து கொள்வோம். அரைகுறை ஓரியண்டலிஸ்ட் ஆர்தர் ஜெஃப்ரியின் நூலினை தொழுரிக்கும் போது முழுமையாக விளக்குவோம் இன்ஷா அல்லாஹ். அதற்கு முன்பாக இந்த கட்டுரையின் தேவை கருதி ஒரு சிறு பகுதியை மட்டும் இங்கு பதிகிறோம்.

               உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் என்பது உஸ்மான்(ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தின் இறுதி அதாவது ஹிஜ்ரி 30க்குள் உஸ்மான்(ரலி) அவர்களிடம் ஒப்படைக்கப்படுவிட்டது.. அதனை பின்வரும் செய்தி நமக்கு தெளிவாக கூறுகிறது.
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﺮﺑﻴﻊ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ اﺑﻦ )ﻭﻫﺐ، ﺃﺧﺒﺮﻧﻲ ﻋﻤﺮﻭ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺑﻜﻴﺮ: ﺣﺪﺛﻨﻲ ﺑﺴﺮ ﺑﻦ ﺳﻌﻴﺪ، ﻋﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﺃﻥ §ﻧﺎﺳﺎ ﻣﻦ ﺃﻫﻞ اﻟﻌﺮاﻕ ﻗﺪﻣﻮا ﺇﻟﻴﻪ ﻓﻘﺎﻟﻮا: ﺇﻧﻤﺎ ﺗﺤﻤﻠﻨﺎ ﺇﻟﻴﻚ ﻣﻦ اﻟﻌﺮاﻕ، ﻓﺄﺧﺮﺝ ﻟﻨﺎ ﻣﺼﺤﻒ ﺃﺑﻲ ﻗﺎﻝ ﻣﺤﻤﺪ: " ﻗﺪ ﻗﺒﺾﻫ ﻋﺜﻤﺎﻥ ﻗﺎﻟﻮا: ﺳﺒﺤﺎﻥ اﻟﻠﻪ ﺃﺧﺮﺟﻪ ﻟﻨﺎ ﻗﺎﻝ: ﻗﺪ ﻗﺒﺾﻫ ﻋﺜﻤﺎﻥ "
 பஸ்ர் இப்னு ஸயீத் கூறியதாவது: 
            இராக் வாசிகளில் சிலர் முஹம்மத் இப்னு உபை (உபை(ரலி) அவர்களது மகன் முஹம்மத்) அவர்களிடம் வந்து " நாங்கள் இராக்கில் இருந்து வருகிறோம். எங்களிடம் உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃபை கொண்டு வாருங்கள் " என்று கூறினார்கள். அதற்கு முஹம்மத் அவர்கள், "உஸ்மான்(ரலி) அதை கைப்பற்றி கொண்டார்கள்." என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் ," அல்லாஹ் தூயவன். அதை எங்களிடம் கொண்டு வாருங்கள்", என்றனர். அதற்கு (முஹம்மத்) அவர்கள், "உஸ்மான்(ரலி) அதை கைப்பற்றி கொண்டார்கள்." என்று கூறினார்கள்.
(மஸாஹிஃப் இப்னு அபீ தாவூத் 1/103)
    உபை இப்னு கஅப்(ரலி), ஸைத்(ரலி) ஆகியோரை உள்ளடக்கிய குர்ஆன் தொகுப்புக்குழுவின் அறிவுறைப்படி இவ்வாறு கைப்பற்றபட்ட முஸ்ஹஃப்களை உஸ்மான்(ரலி) அழிக்க உத்தரவிட்டார்கள என்பது நாம் அறிந்ததே. எனவே உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பும் ஹி.30 க்குள் அழிக்கப்பட்டுவிட்டது. இப்னு அபீதாவுத் அவர்களது மஸாஹிஃப் என்ற நூலில் இருந்து பல ஆதாரங்களை தூக்கித்திரியும் இஸ்லாமோஃபுகளின் கண்களில் இது போன்ற ஆதாரங்கள் படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




2. மேலே கூறப்படும் ஆதாரங்களில் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பை கண்டாதாக கூறும் அஸ்ரா, மைமூன் இப்னு மஹ்ராம் மற்றும் ஹம்மாத் இப்னு ஸலாமா ஆகியோர் அனைவருமே ஹி 30 பிறகு பிறந்தவர்கள். இப்னு ஸீரின் அவர்களுக்கு அதிகபட்சம் ஹி.30ல். இரண்டு வயது. ஆகவே இவர்கள் நிச்சயம் பார்த்தது உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் அல்ல. ஹி.30க்கு முன்பாகவே உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃப் அழிக்கப்பட்டுவிட்டது.

3. அதே போல மேற்குறிபிட்ட ஒவ்வொரு ஆதாரங்களிலும் ஸூரத் அல் ஹ்ஃப்த் மற்றும் ஸூரத் அல் ஃஹலா ஆகிய இரண்டு சூராக்களின் வாசகமும் மாறுபட்டு உள்ளது. எனவே இவர்கள் கண்ட முஸ்ஹஃப்புகள் ஒரே முஸ்ஹஃப் அல்ல. உபை (ரலி) அவர்களது பெயரால் இட்டுகட்டபட்ட முஸ்ஹஃப்புகள் என்பது இதன் மூலம் விளங்குகிறது. அறிவிப்பாளர்கள் இதனை தவறாக உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃப் என்று எண்னிக்கொண்டார்கள் என்பது விளங்குகிறது.

4. இன்றைய குர்ஆன் என்பதே உபை(ரலி) மற்றும் ஸைத்(ரலி) ஆகியோரின் ஓதல் எனும் போது, அதில் ஸூரத் அல் ஹஃப்த் மற்றும் ஸூரத் அல் ஃஹலா ஆகிய இரண்டு சூராக்கள் இடம் பெறவில்லை என்பது, அறிவிப்பாளர்கள் கண்ட முஸ்ஹஃப்கள் உபை(ரலி) அவர்களுடையது அல்ல என்பதை உறுதி படுத்துகிறது.

5. இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக பின்வரும் செய்தி இடம்பெறுகிறது.
ﻗﺎﻝ ﺃﺑﻮ اﻟﺤﺴﻦ ﻋﻠﻲ ﺑﻦ ﺇﺳﻤﺎﻋﻴﻞ اﻷﺷﻌﺮﻱ: "ﻭﻗﺪ ﺭﺃﻳﺖ ﺃﻧﺎ ﻣﺼﺤﻒ ﺃﻧﺲ ﺑﺎﻟﺒﺼﺮﺓ ﻋﻨﺪ ﺑﻌﺾ ﻭﻟﺪ ﺃﻧﺲ، ﻓﻮﺟﺪﺗﻪ ﻣﺴﺎﻭﻳﺎ ﻟﻣﺼﺤﻒ اﻟﺠﻤﺎﻋﺔ ﻻ ﻳﻐﺎﺩﺭ ﻣﻨﻪ ﺷﻴﺌﺎ" ﻭﻛﺎﻥ ﻳﺮﻭﻯ ﻋﻦ ﻭﻟﺪ ﺃﻧﺲ ﻋﻦ ﺃﻧﺲ ﺃﻧﻪ ﺧﻂ ﺃﻧﺲ ﻭﺇﻣﻼء ﺃﺑﻲ،

அபூ அல்ஹஸன் அல் அஸ்அரி கூறியதாவது:
                    நான் அனஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பை பஸராவில் அவரது வழிதோன்றல்களிடம் கண்டேன். இன்றைய முஸ்ஹஃப்புடன் எந்த மாற்றமுமின்றி அது சரியாக ஒத்திருப்பதை கண்டேன். மேலும் இது உபை(ரலி) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்டு அனஸ்(ரலி) அவர்களால் எழுதப்பட்டது என்று அவரது வழித்தோன்றல்கள் கூறினார்கள்.(அல் இன்திஸார் 1/277)

6.மேலும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது ஓதலை அடிப்படையாக கொண்டே ஆறு முத்தவாத்திரான கிராத் ஒன்றிலும் இந்த அதிகப்படியான இந்த  இரண்டு ஸூராக்கள் இடம்பெறவில்லை

         மேற்குறிபிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பில் ஸூரத் அல் ஹஃப்த் மற்றும் ஸூரத் அல் ஃஹலா ஆகிய இரண்டு சூராக்கள் இடம் பெற்றிருந்தன என்பதற்கு எந்த உறுதியான தகவலும் இல்லை என்பது இங்கு நிறுவப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஸூரத் அல் ஹ்ஃப்த் மற்றும் ஸூரத் அல் ஃஹலா ஆகிய இரண்டு சூராக்கள் குர்ஆனின் பகுதியில்லை என்பதை உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை உள்ளடக்கிய குழுவால் தொடுக்கப்பட்ட இன்றைய குர்ஆனும் அவரது ஓதலை அடிப்படையாக கொண்ட ஆறு முத்தவாத்தீரான கிராத்களும் சந்தேகமின்றி உறுதிபடுத்துகிறது.  எனவே ஸூரத் அல் ஹ்ஃப்த் மற்றும் ஸூரத் அல் ஃஹலா ஆகிய இரண்டு சூராக்கள் இடம் பெறாததால் இன்றைய குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பது இஸ்லாமோஃபோபுகளின் குருட்டு வாதம் என்பது உறுதியாகியுள்ளது. அல்லாஹு அஃலம்.


No comments:

Post a Comment