பக்கங்கள் செல்ல

Sunday, July 31, 2016

எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-5-புதிய ஏற்பாடு: ஒர் அறிமுகம்


ஏக இறைவனின் திருப்பெயரால்

   நாம் கிறித்தவ நம்பிக்கைக்கு யார் காரணம் என்ற தலைபிட்ட கட்டுரைக்கு மறுப்பாக இந்த எதிர்தொடர் கட்டுரையை தொடராக தந்து கொண்டிருக்கிறோம்.[refer:Source] சென்ற தொடர்களில் பழைய ஏற்பாடு குறித்து பதிவு செய்தோம். இந்த தொடரில் புதிய ஏற்பாடு குறித்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ். நாம் சென்ற பழைய ஏற்பாடு குறித்த ஆய்வு தொடரில் கையாண்ட அதே முறையையே இந்த தொடருக்கும் பயன்படுத்த வுள்ளோம். அதாவது புதிய ஏற்பாடின் மூலங்களின் ஆசிரியர் குறித்து ஆய்வு செய்ய வெளிப்புற ஆதாரங்கள் மற்றும் உள் ஆதாரங்களை ஒப்பீடாக வழங்க உள்ளோம். இன்ஷா அல்லாஹ்.

புதிய ஏற்பாட்டின் மூல ஏடுகள்:
இன்று கிறித்தவர்கள் கைகளில் இருக்கும் புதிய ஏற்பாடானது ஏற்று கொள்ளப்பட்ட 27 ஆகமங்களை கொண்டுள்ளது. ஏசுவின் மொழி அரமாயிக்காக இருந்தாலும் புதிய ஏற்பாடின் மூல ஏடுகள் யாவும் கிரேக்க ஏடுகள்தான். அவற்றில் மிக பழமையான சில சுருள்கள் கிழே தரப்பட்டுள்ளது. மேலும் புதிய ஏற்பாட்டின் ஆகமங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக பாப்பிரேய சுருள்களில் காணப்பட்டாலும் புதிய ஏற்பாடு வடிவம் பெற தொடங்கிய காலம் மூன்றாம் நூற்றாண்டின் மத்திய பகுதிதான். மேலும் ஏசுவின் மூல மொழியான அரமேய சுருள்கள் இன்றளவும் நமக்கு கிடைக்கப்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. அந்த மூல ஏடுகளில் சிலவற்றை காண்போம்.

ஜான் ரேலண்ட் பாப்பிரஸ் 


ஜான் ரேலண்ட் பாப்பிரஸ்
     இது மிக பழமையான புதிய ஏற்பாட்டின் துண்டுகளாகும். இது கிபி 117-138 காலத்தை சேர்ந்தது. இது யோவான் 18:31 -33,37-38 ஆகிய வசன்ங்க்ளை கொண்டுள்ளது. இது கிரேக்க மொழியில் அமைந்த சுருள்களாகும்.
ஜெஸ்டர் பீட்டி பாப்பிரஸ் 


ஜெஸ்டர் பீட்டி பாப்பிரஸ்
       இது கிபி 250 காலத்தை சேர்ந்த பாப்பிரஸ் ஆகும். இந்த காலகட்டத்தை சேர்ந்த பாப்பிரேய பகுதிகளில் ரோமர் 5:17-6:3, 5-14;8:15-25,27-35;16:1-23,25-27; எபிரேயர்; 1&2 கொரிந்தியர்; எபேசியர்; கலாத்தியர்;பிலிப்பியர்; கொலோசெயர்; 1தெசலோனியர் 1:1,9-10;2:1-3; 5:5-9,23-28 ஆகிய ஆகமங்களை கொண்டுள்ளது. இது கிரேக்க மொழியில் அமைந்த சுருள்களாகும்.
ஆக்ஸிரின்கஸ் பாப்பிரஸ்




ஆக்ஸிரின்கஸ் பாப்பிரஸ்
    இது 1 முதல் 6ம் நூற்றாண்டுவரை உள்ள பாப்பிரேய ஏடுகளின் தொகுப்பாகும். இதில் குறிபிட்ட 3ம் நூற்றாண்டுகள் வரை உள்ள ஏடுகள் புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியை கொண்டுள்ளது. அதுவல்லாமல் 2 முதல் 3 நூற்றாண்டுகளை சேர்ந்த கினாஸ்டிக் பைபில்களின் பல பகுதிகளும் இதில் உள்ளது. (கினாஸ்டிக்கள் குறித்தும் ஏனைய பிரிவுகள் குறித்தும் அவர்களது கொள்கைகள் குறித்தும் பல பகுதிகள் வரும் தொடர்களில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்) இது கிரேக்க மொழியில் அமைந்த சுருள்களாகும்
போட்மர் பாப்பிரஸ்



போட்மர் பாப்பிரஸ்
        இது 2-3ம் நூற்றாண்டை சேர்ந்த பல ஏடுகளை கொண்டுள்ளது. யோவான், லூக்கா, 1&2 பேதுரு, போன்றவற்றின் மிக பழைய (கிபி 175-250 வரை) ஏடுகளை கொண்டுள்ளது. லூக்காவின் பகுதிகள் வாடிகானஸ் சுருள்களுடன் ஒத்ததாக இருப்பது குறிப்பிட தக்கது.  இது கிரேக்க மொழியில் அமைந்த சுருள்களாகும்

சினாய்டிகஸ் சுருள்கள்

சினாய்டிகஸ் சுருள்கள்
     நான்காம் நூற்றாண்டின் மத்திய காலத்தை சேர்ந்த சுருள்கள். இது கிரேக்க மொழியில் அமைந்த சுருள்கள்தாம். ஆனால் பைபிலின் வடிவம் பெறத்தொடங்கியதை பறைசாட்டுவதாக ஒரே புத்தகமாக பல ஆகமங்களை உடையதாய் இருந்தாலும் பல பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டின் வசனங்கள் இல்லை.

இவை அல்லாது பண்டைய சுருள்களும் இருக்கின்றன. மேற்கூறியவற்றில் ஜான் ரேலண்ட் பாப்பிரஸ் தான இன்று நம் கைகளில் இருக்கும் சுருளகளில் மிகப்பழையது. ஆனால் அது புதிய ஏற்பாட்டின் சிறு பகுதியை மட்டுமே கொண்டுள்ளது. இது வல்லாத நாக் ஹமீதி பாப்பிரேய சுருள்கள் போன்றவையும் இன்று கைகளில் இருந்த போதும் அவற்றை கினாஸ்டிக் ஏடுகள் என்று இன்றைய கிறித்தவ உலகம் தூக்கி எறிந்து விட்டது. 
நாம் மேலே குறிப்பிட்ட பாப்பிரஸ் சுருள்களை ஆய்வு செய்தால ஒன்று தெளிவாக புலப்படுகிறது. 

1. இந்த சுருள்கள் எதுவும் ஏசுவின் காலத்தையோ அல்லது ஏசுவை கண்டவர்களின் காலத்தையோ சேர்ந்தது இல்லை. 
2. ஏசுவை அறியாதவர்களால் மொழிமாற்றம் செய்யப்பட்டது. 
3. ஏசுவின் சமகாலத்தவர்களால் சரிபார்க்கப்பாடாதது.

     மேற்குறிபிட்ட இந்த மூன்று முடிவுகளும் ஏசுவிற்கு வேதம் வழங்கப்பட்டதா ? அதன் நிலை என்ன? என்ற கேள்வியை நம்மிடம் எழுப்புகின்றன. ஏசுவிற்கு நிச்சயமாக வேதம் வழங்கப்பட்டதாகவும் அவற்றை அவர் பிரசங்கித்ததாகவும் புதிய ஏற்பாடு பல இடங்களில் கூறுகிறது.

           யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து; காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். (மாற்கு 1:14,15). 

            ஆனால் மேலே குறிபிட்ட வசனத்தின் அடிப்படையில் புதிய ஏற்பாட்டை அணுகினால் அதில் இருக்கும் செய்திகள் இறை கட்டளைகளை விளக்கும் ஒரு வேதமாக இல்லை. அது ஏசுவின் வாழ்க்கையை கூறும் மூன்றாம் நபரின் சித்தரிப்பாகத்தான் உள்ளது. அந்த மூன்றாம் நபர்கள் உன்மையில் ஏசுவை கண்டவர்களா? அவர்கள் ஏசுவின் நேரடி சாட்சிகளா? இவை குறித்து வரும் தொடர்களில் இன்ஷா அல்லாஹ் காணலாம்.....

எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண                    உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண


Sunday, July 17, 2016

எதிர்தொடர் 19: உடைந்த சிலுவை- பாகம் 4: பழைய ஏற்பாடு ஆகமங்களின் எழுத்தரகள்



ஏக இறைவனின் திருப்பெயரால்
        
சீர்திருத்தத் திருச்சபைகள்:

சீர்திருத்தத் திருச்சபைகள் (Protestantism, புரட்டஸ்தாந்தம்) என்பது கிபி 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை தொடர்ந்து தொடங்கப்பட்ட கிறித்தவச் சபைகளைக் குறிக்கும். சீர்திருத்தச் சபைகளின் கோட்பாடுகள் விவிலியத்தின் உள்ளடக்கத்துக்கு ஏனையவர்கள் கொடுத்துள்ள விளக்கங்களை பின்பற்றாது விவிலியத்தை நேரடியாக பின்பற்றுகிறது. அது மார்ட்டின் லூதர் புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் என அழைக்கப்பட்டார். விவிலியத்தை கடவுளை அறிவதற்கான ஒரே வழியாகவும், மீட்படைய மனித செயல்களால் அல்ல, மாறாக கடவுளின் கருணையால் மட்டுமே முடியும் எனவும் போதிக்கிறது.
     --------கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

     மேலும் நாம் அறிந்த வரைக்கும் இன்னும் ஒரு முக்கிய வேறுபாடும் இவர்கள் மத்தியில் உள்ளது. அதாவது இருவரின் வேத புத்தகங்களுக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு. அதாவது புராட்டஸ்டண்ட்களின் பைபில் கத்தோலிக்க பைபிலை காட்டிலும் குறைவான ஆகமங்களையும், பல ஆகமங்கள் குறைந்த வசன்ங்களையும் கொண்டிருப்பது. அதாவது புராட்டஸ்டண்ட்களின் பைபில் கிட்டதட்ட கத்தொலிக்க பைபிலை விட 7 ஆகமங்கள் குறைவாக கொண்டுள்ளது. அதன் வசன எண்ணிக்கையை வரிசை படுத்தினால் இது எவ்வளவு மிகப்பெரிய வேறுபாடு என்பதை அறிய முடியும்.

1.தொபியாஸ் ஆகமம்
297 வசனங்கள்
2.யூதித் ஆகமம்
346 வசனங்கள்
3.ஞான ஆகமம்
439 வசனங்கள்
4.சிராக் ஆகமம்
1589 வசனங்கள்
5.பாரூக் ஆகமம்
213 வசனங்கள்
6.முதலாம் மக்கபே ஆகமம்
928 வசனங்கள்
7.இரண்டாம் மக்கபே ஆகமம்
558 வசனங்கள்
8.தானியேல் 3,13,14வது அதிகாரம்
67+64+43= 174 வசனங்கள்
9.எஸ்தர்10,11,12,13,14,15,16வது அதிகாரம்
10+12+6+18+19+19+24=108 வசனங்கள்
மொத்தம்
4652 வசனங்கள்
 
மேலே குறிபிட்ட ஆகமங்கள் நீக்கப்பட்டதற்கு பிராடஸ்டண்ட்கள் முன்வைக்கும் முக்கிய காரணங்கள்  
  1.  கிறித்தவத்தின் பல கொள்கைகளை அது மறுப்பது. 
  2. அவற்றை இயற்றியவர்கள் அறியப்படாதது. அதாவது 16 நூற்றாண்டுகளாக யார் யாரோ இயற்றிய குப்பைகளை வேதம் என்று எண்ணி கிறித்தவ உலகம் ஏமாற்றப்பட்டுவிட்டதாம்.
மேற் கூறிய காரணிகளில் நாம் இப்போது இரண்டாவது காரணத்தை அடிப்படையாக கொண்டு கிறித்தவத்தின் இரு பிரிவினராலும் ஏற்று கொள்ளப்பட்ட ஏனைய ஆகமங்களை ஆய்வு செய்தோமென்றால் இன்று இருக்கும் பைபிலின் முக்கால் பகுதி இருக்காது. நாம் நமது ஆய்வினை தொடர்வதற்கு முன்பு பைபில் கூறும் காலவரிசை குறித்த படத்தை பார்ப்போம்.

பழைய ஏற்பாட்டின் ஆகமங்களின் ஆய்வை விளக்கும் அட்டவணை
 
ஆகமம் இயற்றியவர்
(Living Application Bible)
இயற்றியவர்
(பாபிலோனிய தல்மூத்)
மறுப்பிற்கான காரணம்

ஆதியாகமம்
யாத்திராகமம்
லேவியராகமம்
எண்ணாகமம்
உபாகமம்
மோசே
மோசே மற்றும் ஜோசுவா
       
    ஆதியாகமம் 11:31 வசனம் ‘ஊர் என்ற கல்தேயருடைய பட்டிணம் குறித்து கூறுகிறது. கல்தேயர் எனும் நாடோடி செமிடிக் இன மக்கள் கி.மு. 6ஆம் நூற்றாண்டில்தான் பாபிலோன் நகரங்களில் குடியேறினர் என்பது ஆதியாகமம் கி.மு 600 பிறகு இயற்றப்பட்டது என்பதை உறுதி படுத்துகிறது.
   உபாகமம் 34:1 முதல் 34:12 வரை இருக்கும் வசனங்கள் மோசேயின் மரணம் குறித்தும், மோசே அடக்கம் செய்தது குறித்தும் கூறுகிறது. குறிப்பாக 34:10-12 கவனித்தால் மோசே மரணித்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்த ஆகமங்கள் இயற்றபட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது
யோசுவா
யோசுவா
யோசுவா
யோசுவா 24:29-33 வரையிலான வசனங்கள் யோசுவாவின் மரணச் செய்தி குறித்தும், அடக்கம் செய்யப்பட்டது குறித்தும் கூறுகிறது. குறிப்பாக 24:31 யோசுவாவிற்கு பின் வெகுநாள் வாழ்ந்த மூப்பருக்கு பின்பு உள்ள காலத்தை சேர்ந்த யாரோ ஒருவரால் இயற்றப்பட்டுள்ளது என்பதை தெளிவாக்கிறது.
ரூத்
சாமுவேல்
சாமுவேல்
        ரூத் 1:1 நியாயாதிபதிகள் காலத்தில் நடைபெற்ற ஒரு இறந்த கால நிகழ்வை கூறுவதாக கூறுகிறது. சாமுவேல் இறுதியாக வந்த நியாயாதிபதி என்பது குறிபிடதக்கது. ஆக இது சாமுவேலுக்கு பிறகு வந்த ஒருவரால இயற்றப்பட்டிருக்க வேண்டும்.
         யூத குலத்தை சேர்ந்த மெகலோனை திருமணம் புரிந்த மோவாபிய இனத்தை சார்ந்த  ரூத் என்ற பெண்மணியை சிறப்பித்து இந்த ஆகமம் பேசுகிறது. ஆனால் எஸ்றாவின் காலம் வரைக்கும்(கி.மு 5ம் நூற்றாண்டு) இத்தகைய திருமணங்கள் பழிப்புக்குரியவையாய் இருந்துள்ளதை எஸ்றா 10:10 தெளிவாக கூறுகிறது.(மேலும் பார்க்க நெகமியா 13:1-3) ஆக ரூத் ஆகமம் கி.மு 5ம் நூற்றாண்டிற்கு பின்னுள்ள பெயர்தெரியாதவரால் இயற்றபட்டது என்பது தெளிவாகிறது.  ஆக இதுக்கும் கிமு 10ம் நூற்றாண்டை சார்ந்த சாமுவேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 
1 சாமுவேல்
2 சாமுவேல்
சாமுவேல் (1சாமு) மற்றும் எஸ்றாவாக      (2 சாமு) இருக்கலாம்
சாமுவேல்
        சாமுவேலின் மரணச் செய்தியும்  அதன் பின் நடந்தவையும் 1 சாமு 25:1 கூறுகிறது. இன்னும் தாவீதின் ஆட்சிகாலம் குறித்தும் கூறுகிறது.
        தாவீதின் சம காலத்தவர்களான நாத்தான் மற்றும் காத்தின் தொகுப்பாக இந்த ஆகமங்கள் கூறப்பட்டாலும் (1நாளாகமம் 29:29) இந்த ஆகமங்களில் காணப்படும் சொல்லாக்கங்கள் ராஜ்ஜியம் இஸ்ரவேல் யூதா என பிரிந்ததற்கு பிற்பட்ட காலத்தை(கிமு.922) சார்ந்தாய் உள்ளது. உதாரணமாக 1 சாமு 27:6, 11:8, 2 சாமு 19:42-43, 24:9)
1 நாளாகமம்
2 நாளாகமம்
எஸ்றாவாக இருக்கலாம்
எஸ்றா
        நாளாகமம் தாவீதை சிறப்பித்து பேசுகிறது. எஸ்ரா அதற்கு மாறாக மோசேயின் சட்டத்தையும் இனகலப்பு திருமணத்தை கடுமையாக சாடுகிறது. ஓரே ஆசிரியர் தரும் முரண்பட்ட தகவல்.   மேலும் செருபாபேலின் வம்சம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அது பின் வருமாறு உள்ளது.
எக்கோனியா(614)-->பெதாயா(589)-->செருபாபேல்(564)--> அனனியா(539)-->எசாயா(514)-->ரெபாயா(489)-->அர்னான்(464)  --> ஒபதியா(439)--செக்கனியா(414)--> செமாயா(389)--> நெயாரியா(364)-->எலியோனாய்(339)--> ஒதாயா(314).
        அதாவது எக்கோனியா கிமு.597 ஆட்சி ஏற்கும் போது வயது 18 (2ராஜாக்கள்24:8). ஒவ்வோர் தலை முறைக்கும் 25 வருடம் என்று கணக்கிட்டு இந்த ஆகமத்தை இயற்றியவரின் வயதை 100 என்று கணக்கிட்டாலும் அவரது காலம் கிமு 414 முதல் 314 வரை உடையதாய் இருக்கும். அப்படி பார்க்கையில் எஸ்ராவால் (கிமு 480-440) இந்த ஆகமம் இயற்றப்படவில்லை என்பது தெளிவாகிறது. மேலும் இன்றைய அறிஞர்கள் இது ஒரு கதை சொல்லியின்(chronicler) திரட்டாகவே கருதுகின்றனர். (Oxford annotated Bible).
ராஜாக்கள் 1
ராஜாக்கள் 2
எரேமியாவாக இருக்கலாம்
எரேமியா
                  
                   2 ராஜாக்கள் 25:27-30 வரையிலான வசனங்கள் பாபிலோனில் கிமு 561 ல் ஏவில்மெரொதாக் என்னும் பாபிலோனிய அரசனால்  யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச்  சிறையிலிருந்து விடுவித்த சம்பவம் இடம்பெறுகிறது. ஆனால் ஏரேமியாவின் காலமானது கிமு 626- 585 ஆகும். இந்த சம்பவம் இந்த ஆகமங்களை ஏரேமியா இயற்றவில்லை என்பதை காட்டுகிறது. மேலும் ஏரேமியா 43: 4-7 வரை உள்ள வசனங்கள் எரேமியா தனது இறுதி காலத்தை எகிப்தில் கழித்தார் என்பதை காட்டுகிறது.
       2 ராஜ்ஜாக்கள் 13:32 சமேரியாவின் பட்டிணங்கள் என்ற சொல்லாடல்  இஸ்ரேலில் இருந்து தனிமாகாணமாக சமேரியாவை காட்டுகிறது. ஆனால் சமேரியா தனி மாகாணமாக மாறியது எல்லாம் கிமு 432 (எஸ்ரா வின் காலத்திற்கு) பிறகுதான் என்பது குறிப்பிடதக்கது.
எஸ்றா
நெகமியா
எஸ்றா-நெகமியா
எஸ்றா-நெகமியா
            எஸ்றா- நெகமியாவும் ஒரே ஆகமமாகவே மூல ஆதாரங்களில் காணப்படுகிறது. நெகமியா 12:47 காணப்படும் “நெகமியாவின் நாட்களில் என்ற சொல்லாக்கம், இந்த ஆகமம் நெகமியாவின் காலத்திற்கு(கிமு 407 பிறகு) பிறகு இயற்றப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது. மேலும் நெகமியா 12:11 யதுவா குறித்து கூறுகிறது. யதுவா 3ம் டாரியஸின் ஆட்சி காலத்தில் (கிமு336-332) பூசாரியாக இருந்தவர். ஆக இந்த ஆகமம் கிமு.400 பிறகு இயற்றப்பட்டது என்பது தெளிவு.
சங்கீதம்
1.தாவீது
 (சங் 1-41) 2.கோராவின் புதல்வர்கள்
(சங்42,44-49,84-85,87)
3.அசாஃப்
(சங் 50,73-83)
4.ஹேமான் (சங் 88)
5.ஏதன் (சங் 89)
6.எசேக்கியா
(சங் 120-123,128-130,132,134-136)
7.சாலமோன் (சங் 72,127)
தாவீது
               சங்கீதம் 74, 79 எருசலமின் அழிவு குறித்தும் ஆலயங்களில் சத்துருக்களின் கொடிகள் பறப்பதையும் பேசுகிறது. அதாவது ஏரேமியா காலத்திற்கு பின்புள்ள யூதர்களின் மனநிலையை பிரதிபலிப்பதாய் உள்ளது. ஆசாப், தாவீது நாத் மற்றும் காதின் சமகாலத்தவராயின் சங்கீத்த்தின் 74 மற்றும் 79 ஆசிரியர் ஆசாப் இல்லை என்பது தெளிவாகிறது. அதுபோல் சங் 102, 137, 145 முதலானவை பாபிலோனிய இடம்பெயர்தலுக்கு பின்னர்(கிமு 585) உள்ளவை. எழுத்தராக அறியப்பட்டது போக சங்கீதத்தில் விடுபட்ட சங்:43, 51-71, 86,90-119,124-126,131,133,137-150 ஆகிய 76 அதிகாரங்களை இயற்றியவர்கள் யார் என்பது தெரியவில்லை. மேலும் சங் 22,31,35,38,40,55,69,71 ஆகியவை ஏரேமியாவால் எழுதப்பட்டதாக சில அறிஞர்கள் கூறுகின்றனர். இவ்வாறு சங்கீதத்தினை இயற்றியவர்கள் குறித்து பல கருத்துகள் காணப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
நீதிமொழிகள்
1.சாலமோன்
(நீதி 1-29)
2.அகூர் (நீதி 30)
3.லேமுவேல்(நீதி 31)
எசேக்கியா
       இந்த ஆகமம் சாலமோன்( நீதி 10:1), ஆகூர்(நீதி 30:1), லெமுவேல்(31:1) ஆகியோருக்கு உரியதாய் கூறப்பட்டாலும் இந்த ஆகமம் இன்னும் சில ஞானிகளின் வார்த்தைகள் இதில் உள்ளதாக கூறுகிறது உதரணமாக நீதி 22:17, நீதி 24:23. இவ்வாறாக பெயர் குறிப்பிடப்படாத ஞானிகளின் வாசகங்களும் இந்த ஆகமத்தில் இடம் பெற்றுள்ளது.  
பிரசங்கி
சாலமோன்
எசேக்கியா
      பாரசீக வார்த்தைகளின் கலப்பு காணப்படுகிறது. உதரணமாக 2:5 இடம்பெரும் பூங்கா என்ற வார்த்தையின் ஹீப்ரு மூலமான “பார்-தெஸ் மற்றும் (8:11) தண்டனை என்பதின் மூலமான ஹீப்ரு சொல்லான “பித்காம் போன்றவை இந்த ஆகமம் இடம்பெயர்தலுக்கு(கிமு 6ம் நூற்றாண்டுக்கு) பிறகுதான் இயற்றப்பட்டது என்பதை உறுதிபடுத்துகிறது.

உன்னதப்பாட்டு
சாலமோன்
எசேக்கியா
      பாரசீக வார்த்தைகளின் கலப்பு காணப்படுகிறது. உதரணமாக 4:13, காணப்படும் பூங்கா என்ற வார்த்தையின் ஹீப்ரு மூலமான “பார்-தெஸ் போன்றவை இந்த ஆகமம் இடம்பெயர்தலுக்கு(கிமு 6ம் நூற்றாண்டுக்கு) பிறகுதான் இயற்றப்பட்டது என்பதை உறுதிபடுத்துகிறது.  
ஏசாயா
ஏசாயா
எசேக்கியா
      40-66 அதிகாரங்கள் கிமு 6ம் நூற்றாண்டிற்கு பிறகு உள்ள சம்பவங்களை பிரதிபலிப்பதாய் உள்ளது. ஏசாயாவின் காலம் கிமு 740-680 ஆகும். கிமு 585 பிறகு இயற்றபட்டதுதான் மேற்குறிபிட்ட அதிகாரங்கள். இவற்றின் எழுத்தாளர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.
எரேமியா
புலம்பல்
எரேமியா
எரேமியா
      எரேமியா 51:64 வசனம் எரேமியாவின் வசன்ங்கள் இத்துடன் முடிவுற்றதாக கூறுகிறது. அதன் பிறகு இருக்கும் 52 அதிகாரம் யாருடையது என்று புலப்படவில்லை. மேலும் எரேமியா 36:4 இந்த ஆகமத்தை எழுதியது பாருக் என்று குறிப்பிடுகிறது. மேலும் ஹீப்ரு சுருள்களும் கிரேக்க சுருள்களும் அதிகாரங்களின் எண்ணிக்கையில் முரண்பட்டு நிற்கின்றன. அதாவது கிரேக்க சுருள்கள் குறைந்த அளவிலான அதிகாரங்களை கொண்டுள்ளது. மேலும் ஏரேமியா 31:29-30 அவனவன் செய்த பாவத்திற்கான கூலி அவனவன் அனுபவிப்பான் என்று கூறுகிறது. ஆனால் புலம்பல் 5:7 பிதாக்கள் செய்த பாவம் தங்களை சூழ்ந்ததாக கூறுகிறது. ஆக இந்த இரண்டு ஆகமங்களின் எழுத்தர்களும் ஒருவர் அல்ல என்பது தெளிவாகிறது.

எஸ்தர்
மொர்தெகாயாக இருக்கலாம்
(நெ 10:2-29) வரை கூறப்படும் யூததீர்க்கதரசிகள் மற்றும் பெரியார்களை உள்ளடக்கிய மேன்மைதாங்கிய சினோகாக்
        இந்த ஆகமத்தை இயற்றியவர் குறித்த எந்த தகவலையும் காணமுடியவில்லை. எஸ்தர் 10:1-3 மொர்தெகாயின் சிறப்புகளையும் தன் யூத ஜன்ங்களுக்கு எப்படி பட்டவராய் இருந்தார் என்பதை விவரிப்பதில் இருந்து இந்த ஆகமத்தின் ஆசிரியர் மொர்தெகாய் இல்லை என்பது உறுதியாகிறது. மேலே குறிபிட்ட வசனங்கள் ராஜா அகாஸ்வேரு குறித்த குறிப்புகள் அனைத்தும் மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடிகளில் இருப்பதாக கூறுவதில் இருந்து இந்த புத்தகமானது நிச்சயம் அகாஸ்வேரின் காலத்திற்கு பிந்தையது என்பதை அறியலாம். அகாஸ்வேரு கிமு 465ல் கொல்லப்பட்டார். ஆக இந்த ஆகமம் அதிகபட்சமாக கிமு 460ல் எழுதப்பட்டிருக்கலாம். இதில் இந்த ஆகம்ம் ஹீப்ரு மற்றும் கிரேக்க மூல ஏடுகளில் மாறுபட்டு காணப்படுகிறது. கும்ரான் சாக்கடல் சுருள்களில் இந்த ஆகமம் ஒட்டுமொத்தமாக காணவில்லை

யோபு
யோபுவாக இருக்கலாம்
     
        யோபு 1:15-17 வசனங்கள் கல்தேயர்களின் டிரன்ஸ் ஜோர்டான் பகுதியில் நடத்தப்பட்ட சூரையாடல் குறித்து பேசுகிறது. ஆனால் கல்தேயர்களின் சூறையாடல் அரங்கேறிய காலம் கிமு 6-5ம் நூற்றாண்டுகள்தாம். யோபு கிமு 15-16நூற்றாண்டில் வாழ்ந்தவராக கருதப்படுபவர். மேலும் யோபு 1:1 ல் இடம்பெறும் அறிமுகம் இந்த ஆகமம் யோபினால் இயற்றப்பட்டது அல்ல என்பதை உறுதிபடுத்துகிறது. யோபு ஆகமத்தினை இயற்றியவர் குறித்து எந்த தெளிவான ஆதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை.

எசேக்கியேல்
எசேக்கியல்
எசேக்கியேல் 26:4-6 மற்றும் 29:18-20 முரண்பாடு.
தானியேல்
தானியேல்
        தானியேல் 5:1-2 வசனங்கள்  பெல்ஷாத்சாரை நேபுகாத்நேச்சாரின் மகனாக கூறுகிறது. ஆனால் பெல்ஷாத்சாரின் தந்தை நெபோனிடஸ் ஆவார். அதாவது நேபுகாத்நேச்சாரின் வம்சத்தின் ஆட்சியானது  ஏவில்மெரொதாக்கின் படுகொலையுடன் நிறைவடைந்துவிட்டது (கிமு 560). ஏவில்மெரோதொக்கின் மனைவிவழி சஹோதரன் அல்லது தங்கையின் கணவனால் படுகொலைசெய்யப்பட்டார் எனும் போது எவ்வழியிலும் பெல்ஷாத்சாரின் தந்தையாக நெபுகாத்நேச்சார் வரவாய்ப்பில்லை. இந்த வரலாற்றை எந்த கிறித்தவ கலைகளஞ்சியமும் கூறும். இத்தகைய தவறு இன்று இருப்பவரிடம் தோன்றினாலும் பரவாயில்லை. ஆனால் நெபுகாத்நேச்சரின் அரசவையில் அங்கம் வகித்த, சமகாலத்தை சார்ந்த ஒரு முக்கியஸ்தரான தானியேலுக்கு(2:48) தெரியவில்லை என்பது இந்த ஆகமம் தானியேலினால் எழுதப்பட்டதில்லை என்பதற்கு போதிய சான்று. மேலும் இவ்வாறான வார்த்தை பிரயோகம் பைபிலின் எந்த இடத்திலும் இருப்பதாகவும் தெரியவில்லை. இது போன்ற பல வரலாற்று (கிமு 6ம்  நூற்றாண்டின்) பிழைகளை கொண்டதாக தானியேல் இருப்பது இந்த ஆகம்ம் நிச்சயம் தானியேலினால் இயற்றப்படவில்லை என்பதற்கு போதிய சான்று.
ஓசியா
ஓசியா
         ஓசியாவின் ஆரம்ப வசனம் 1:1 இந்த ஆகமம் ஏசெக்கியா ராஜாவின் (கிமு 715-687) காலத்தை சேர்ந்ததாக கூறுகிறது. ஆனால் ஓசியாவின் இறுதி பகுதிகளில் 13:16 சமேரியாவின் வீழ்ச்சி குறித்த தீர்க்கதரிசனம் காணப்படுகிறது. சமேரியாவின் வீழ்ச்சியானது கிமு 726-722ல் ஏற்பட்டது. இது தீர்க்கதரிசனமாக ஏன் இடம்பெறவேண்டும்? ஆக முதல் வசனம் இடை செருகலா என்பது தெரியவில்லை. ஒசியாவின்  காலம் 8ம் நூற்றாண்டிற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஓசியாவின் வார்த்தைகள் அதிகளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
யோவேல்
யோவேல்
        யோவேலின் காலம் கிமு 8ம் நூற்றாண்டாக கூறப்படுகிறது. ஆனால் யோவேல் 1:14, 2:15 மற்றும்  2:9 ஆகிய வசனங்கள் ஜெருசலேமின் ஆலயம் குறித்தும் அதன் மதில்கள் குறித்தும் பேசுகிறது. கிரேக்கத்தின் ஐயோனியர்கள் (yev-aw-nee’) கோலோச்சி இருப்பது குறித்து வசனம் 3:6 கூறுகிறது,  இவையெல்லாம் நெகமியாவின் காலத்திற்கு(கிமு 5ம் நூற்றாண்டிற்கு) பிற்பட்டது ஆகும். ஆக இந்த ஆகமத்தின் ஆசிரியரும் யோவேல் அல்ல. மேலும் Oxford annotated Bible கிமு 4ம் நூற்றாண்டைத்தான் இந்த ஆகமத்தின் இயற்றப்பட்ட காலமாக சூட்டுகிறது.
ஆமோஸ்
ஆமோஸ்
        ஆமோஸ் 7ம் அத்தியாயத்தின் வசனங்கள் யாவும் ஆமோஸ் தீர்க்கதரசி குறித்த ஒரு மூன்றாம் நபரின் சித்தரிப்பாகவே காணப்படுகிறது. இது இந்த ஆகமம் ஆமோஸினால் எழுதப்பட்டது அல்ல என்பதை உறுதி படுத்துகிறது. ஆனால் ஆமோசின் சமகாலத்தவரால் இயற்றப்பட்டது என்பது சிறிய ஆறுதல்.
ஒபதியா
ஒபதியா
       ஒபதியாவின் காலத்தை நிறுவுவதிலேயே குழப்பங்கள் நிலவுவதால் இதனை இயற்றியவர் குறித்த தெளிவான பார்வை கிடைக்கப்பெறவில்லை. இது ஒபாதியாவால் இயற்றப்பட்டதா என்பதில் தீர்க்கமான பார்வை எதுவும் இன்றளவும் எட்டப்படவில்லை.
யோனா
யோனா
       யோனாவின் காலம் கிமு.760. இந்த ஆகமத்தை இயற்றியவர் குறித்த வழுவான சான்றுகள் ஏதும் இல்லை. யோனாதான் இதன் ஆசிரியர் என்று கூறினாலும் தல்மூத், International Standard Bible, Oxford annotated bible, Jewish study bible-Tanakh  உள்ளிட்டவை ஒவ்வொன்றும் ஒரு காலத்தை கூறுகிறது. இந்த ஆகமத்தில் இடம் பெறும் அரமேய வார்த்தைகளும், யோனாவை மூன்றாம் நபராக சித்தரிப்பதும், முக்கிய குறிப்புகளான நினிவேயின் அரசர் பெயர் குறித்த தெளிவின்மை போன்றவை இந்த ஆகமம் யோனாவின் காலத்தில் இயற்றப்பட்ட்து அல்ல என்பதை பறைசாட்டுகின்றன.
மீகா
மீகா
        பாபிலோனிய இடம்பெயர்தல்(கிமு 585) குறித்த தகவல் மீகா 4:10ல் காணப்படுகிறது. மீகாவின் காலம் கிமு 700-647 என்பது குறிப்பிட்தக்கது. ஆக இதன் ஆசிரியர் மீகா அல்ல.


      மேலே குறிபிட்ட படி கிட்டதட்ட பழைய ஏற்பாட்டில் மட்டும் 32   (மொத்தம் 39) புத்தகங்கள் தெளிவற்றதாக இயற்றியவர் குறித்த சந்தேகத்துடன் அல்லது இயற்றிவர் அறியப்படாத நிலையில், வரலாற்று முரணுடன் காணப்படுகிறது. புரோட்டஸ்டண்டுகள் மற்றும் கத்தோலிக்க பைபிலில் எது உன்மையுடையது என்பதை சரிவர தீர்மானிக்க முடியாத அவல நிலையே உள்ளது. கத்தோலிக்கர்கள் சொல்வதை ஏற்றால் யார் வேண்டும் என்றாலும் வேதத்தின் எந்த பகுதியையும் மறுக்கலாம், அதையும் கிறித்தவ உலகம் ஏற்று கொள்ளும். புரோட்டஸ்டண்டுகள் கூறுவதை ஏற்றால் யார் யாரோ வேத்தத்தின் பெயரால் சேர்த்தவற்றை இறைவேதமாக கொள்ளும் அவல நிலையில் கிறித்தவ உலகம் 16நூற்றாண்டாக இருந்தது என்ற நிலை ஏற்படும். இந்த அவலத்திற்கெல்லாம் முடிவு கெட்ட ஒரெ வழி மூல ஏடுகள்தான். அவற்றை தொலைத்து விட்டு திக்கற்ற நிலையில் பைபிலின் பழைய ஏற்பாடு நிற்பதைதான் சென்ற மூன்று தொடர்கள் படம் பிடித்து காட்டியது. இனி வரும் தொடர்களில் புதிய ஏற்பாடு குறித்தும் பார்ப்போம். 

Reference:
  1. The Catholic Encyclopedia ,Charles G. Herbermann.
  2. The Jewish Encyclopedia, Isidore Singer.
  3. The Babylonian Talmud ,Translated by Michael Rodkinson
  4. The International Standard Bible Encyclopedia, James Orr, M.A., D.D.
  5. The Jewish Study Bible,Tanakh Translation, Adele Berlin and Marc Zvi Brettler
  6. The Oxford Annotated Bible R.S.V ,Herbert G. May and Bruce M.Metzger
  7. The Companion Bible, Published by C. T. HAYWOOD SEVIERVILLE, TENNESSEE, USA MARCH 2005 
  8. Software Used: e sword .www.e-sword.net