பக்கங்கள் செல்ல

Sunday, September 15, 2019

நபி(சல்) அவர்கள் ஹசன்(ரலி) ஹுசைன்(ரலி) யை துஷ்பிரயோகம் செய்தார்களா??

﷽‎

     
  நபி(சல்) அவர்களின் வாழ்க்கையை விமர்சனம் செய்ய புகுந்த மிசனரிகளும், இஸ்லாமிய எதிர்பாளர்களும் அவர்களது குணத்திற்கு களங்கம் ஏற்படுத்த எடுத்த ஆயுதம் தான் அவர்களது இரத்த உறவுகளுடனேயே கீழான செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற விமர்சனம். முன்சென்ற தொடரில் இவர்களது கீழ்த்தரமான விமர்சனமான தனது பெரிய அன்னையின் பிணத்துடனேயே உறவு கொண்டார்கள் என்ற உளரலுக்கு பதிலளித்தோம். அதே போல இவர்கள் நபி(சல்) அவர்களின் சொந்த பேரன்களான ஹசன்(ரலி), ஹுசைன்(ரலி) அவர்களிடம் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், அதன் அடிப்படையில் உறவு முறைகளை துஷ்பிரயோகம் செய்தவர்,ஓரிணச்சேர்க்கையில் ஈடுபடுபவர், சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்தவர் என்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த படாதபாடு படுகின்றனர் மிசனரிகள். ஆனால் இவர்கள் என்றும் போல் தங்களது வாதத்திற்கு அறியப்பட்ட பொய்களை ஆதாரமாக கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நபி(சல்) அவர்கள் தனது பேரன்களின் மறைவுறுப்பை முத்தமிட்டதாக கூறும் பலவீனமான செய்திகளை முன்வைத்து விமர்சனத்தை முன்வைத்துள்ளனர் danielpipes.org போன்ற இணையத்தளங்கள் . ஆக இந்த ஹதீஸ்களை வரிசையாக பதிவிட்டு அதன் நிலை என்ன என்பதை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். 

          மேற்குறிபிட்ட கருத்து பட இருக்கும் ஹதீஸ்கள் பின்வரும் கிரந்தங்களில் பின் வரும் அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படுகிறது. இந்த ஹதீஸ்களை ஒவ்வொன்றாக பதிந்து அவற்றை இன் ஷா அல்லாஹ் ஆய்விற்கு உட்படுத்துவோம்.

.எண்
கிதாப்
அறிவிப்பாளர்
1.
தப்ரானி அவர்களின்  
அல் முஹ்ஜம் உல் கபீர்ஹதீஸ் எண்:2658
இப்னு அப்பாஸ்(ரலி)
2.
அல் ஹைதமி அவர்களின் அல் மஜ்ம உல் ஜவாயித்
ஹதீஸ் எண்: 15108
இப்னு அப்பாஸ்(ரலி)
3.
இப்னு அஸாகிர் அவர்களின் தாரிக் திமிஸ்க்-
பாகம் 14: .எண்:224
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
4.
இப்னு அஸாகிர் அவர்களின் தாரிக் திமிஸ்க்-
பாகம் 13: .எண்:222
அனஸ்(ரலி)
5.
இப்னு அபி துன்யா அவரகளின் அல் இயால்-
ஹதீஸ் எண்:211
அபி தப்யான்
6.
பைஹகீ அவர்களின்    சுனன் அல் குப்ரா-
ஹதீஸ் எண்:651
அப்துர் ரஹ்மான் இப்னு அபி லைலா

ஹதீஸ் 1: தப்ரானி அவர்களின் அல் முஹ்ஜம் உல் கபீர் – ஹதீஸ் எண்:2658
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْفَسَوِيُّ، ثنا خَالِدُ بْنُ يَزِيدَ الْعُرَنِيُّ، ثنا جَرِيرٌ، عَنْ قَابُوسَ بْنِ أَبِي ظَبْيَانَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَّجَ مَا بَيْنَ فَخِذَيِ الْحُسَيْنِ وَقَبَّلَ زَبِيبَتَهُ
இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:

         நபி(சல்) அவர்கள் ஹூசைன்(ரலி) அவர்களின் கால்களை விரித்து அவரது மறைவுறுப்பை முத்தமிட்டதை நான் கண்டேன்.
ஹதீஸ் 2: அல் ஹைதமி அவர்களின் அல்மஜ்மு அல்ஜவாயித் ஹதீஸ் எண்: 15108

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَرَّجَ مَا بَيْنَ فَخِذَيِ الْحُسَيْنِ، وَقَبَّلَ زَبِيبَتَهُ » رَوَاهُ الطَّبَرَانِيُّ
இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:
             நபி(சல்) அவர்கள் ஹூசைன்(ரலி) அவர்களின் கால்களை விரித்து அவரது மறைவுறுப்பை முத்தமிட்டதை நான் கண்டேன். (தப்ரானியின் அறிவிப்பு.)
             மேற்குறிபிட்ட இரண்டு செய்திகளிலும் قَابُوسَ بْنِ أَبِي ظَبْيَانَ - காபூஸ் இப்னு அபி தப்யான் என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் குறித்து இப்னு சாஃத் குறிப்பிடும் போது இவர் பலவீனமானவர். இவரது அறிவிப்பு ஏற்கப்படாது.(தபகத் இப்னு சாஃத் பாகம் 6) இப்னு மயின் குறிப்பிடும் போது இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என்று குறிப்பிடுகிறார், அபு ஹாத்தம் அர்ராஸி குறிப்பிடுகையில் பல்வீனமானவர். பலவீனமான ஹதீஸ்களை அறிவிப்பவர். இவரது ஹதீஸ்கள் ஏற்கப்படாது என்று கூறுகிறார். இப்னு ஹிப்பான் குறிப்பிடுகையி இவர் பலவீனமான நினைவாற்றல் உடையவர். இவர் தனது தந்தை வழியாக ஏனையோர் அறிவிக்காதவற்றை அறிவிப்பர் என்று குறிப்பிடுகிறார், நஸயீ குறிப்பிடும் போது இவர் பலவீனமானர் என்று குறிப்பிடுகிறார். (தஹ்தீப் அல் தஹ்தீப் பாகம்: 8) இப்னு அதீ குறிப்பிடுகையில் இவரது ஹதீஸ்கள் மறுக்கப்பட்டவை எங்கிறார்( மீசான் அல் இஃதிதால்: பாகம் 3). இப்னு ஹஜர் குறிப்பிடும் போது இவர் பலவீனமானவர் என்று கூறுகிறார்(தக்ரீப் அல் தஹ்தீப் 449) ஆக மேற்குறிபிட்ட செய்தி பலவீனமானது, ஏற்க முடியாதது.


ஹதீஸ் 3: இப்னு அஸாகிர் அவர்களின் தாரிக் திமிஸ்க்- பாகம் 14: ப.எண்:224
أخبرنا أبو القاسم علي بن إبراهيم، و أبو الحسن علي بن أحمد، قالا: نا و أبو منصور بن زريق، أنا أبو بكر أحمد بن علي الخطيب‏ (3)، أخبرني الأزهري، أنا المعافى بن زكريا، نا محمّد بن مزيد بن أبي الأزهر، نا علي بن مسلم‏ (5) الطوسي، نا سعيد بن عامر، عن قابوس بن أبي ظبيان، عن أبيه، عن جده، عن جابر بن عبد اللّه- قال: و حدّثنا مرة أخرى عن أبيه‏ (6) عن جابر- قال: رأيت رسول اللّه (صلىّهصَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ) و هو يفحج بين فخذي الحسين و يقبل زبيبته و يقول: لعن اللّه قاتلك
ஜாபிர் (ரலி) கூறியதாவது:
              நபி(சல்) அவர்கள் ஹூசைன்(ரலி) அவர்களின் கால்களை விரித்து அவரது மறைவுறுப்பை முத்தமிட்டவாறு உன்னை கொல்பவனின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டுமாக என்று கூறியதை நான் கண்டேன்.
             மேற்குறிபிட்ட அறிவிப்பில் இடம்பெறும் محمّد بن مزيد بن أبي الأزهر - முஹம்மத் இப்னு மசீத் இப்னு அல் அஸ்ஹர் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். இவர் குறித்து அல் கதீப் அல் பக்தாதீ கூறுகையில் இவர் ஹதீஸ்களில் நம்பத்தன்மையற்றவர். இவர் மிகவும் பலவீனமானவர் இவரிடம் இருந்து அறிவிக்கப்படும் செய்திகள் மறுக்கத்தக்கவை என்று கூறுகிறார். இவர் குறித்து தாரகுத்னி குறிப்பிடுகையில் இவர் பலவீனமானவர் இவரிடம் இருந்து அறிவிக்கப்படும் செய்திகள் மறுக்கத்தக்கவை என்று கூறுகிறார். (லீசான் அல் மீஸான் பாகம் 7). மேலும் அபுல் அபு அல் ஃப்த்ஹி உபைதுல்லாஹ் இப்னு அஹ்மத நஹ்வி அவர்கள் கூறுகையில் அபு குரைபாவிடமும் மற்றவர்களிடமும் கேட்காதவற்றை கேட்டதாக பொய்யுரைப்பவர் என்று கூறுகிறார். நம்பிக்கையானவர்கள் பேரில் இட்டுக்கட்டுபவர் என்று அல் கதீப் கூறுகிறார். தஹபீ குறிப்பிடுகையில் இவர் பொய்யர் என்று குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறுகிறார்.(ஸியார் அஃலம் அல் நுபூலா ) 
         அடுத்ததாக இந்த செய்தியிலும் முன் சென்ற செய்தியில் இடம் பெற்ற قابوس بن أبي ظبيانகாபூஸ் இப்னு அபி தப்யான் என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். ஆக மேற்குறிபிட்ட செய்தி இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்களை கொண்ட இட்டுக்கட்டபட்ட செய்தியாகும்.

            மேலும் இந்த ஹதீஸ் குறித்து இப்னு ஜவ்ஸி தனது மவ்ளூவுல் குறிப்பிடும் போது இது இட்டுக்கட்டபட்ட செய்தி என்று கூறுகிறார். (2/207). தஹபி அவர்களும் இதை இட்டுக்கட்டபட்ட செய்தி என்று மீசான் அல் இஃதிதாலில் குறிப்பிடுகிறார்(4/35). மேலும் கதீப் அல் பக்தாதீ கூறுகையில் இந்த செய்தியும் அறிவிப்பாளர் தொடரும் இட்டுக்கட்டபட்டவை என்று கூறுகிறார்.(தாரிக் அல் பக்தாதீ 4/58). மேலும் இந்த செய்தியை பதிவிட்ட அஸாகிர் அவர்கள் இந்த ஹதீஸ் இடம்பெறும் அடுத்த பக்கத்தில் கதீப் அல் பக்தாதீ அவர்களது விமர்சனத்தை பதிவிட்டு இந்த ஹதீஸை தனது தந்தையிடம் இருந்து அபி திப்யான் அறிவிக்கிறார். ஆனால் இவரது தந்தை யார் என்று அறியப்படாதவர் என்ற விமர்சனத்தையும் முன்வைத்து மேற்குறிபிட்ட ஹதீஸை மறுக்கிறார் அஸாகிர் அவர்கள். ஆக மேற்குறிபிட்ட செய்தியும் நிராகரிக்கப்படுகிறது.

ஹதீஸ் 4: இப்னு அஸாகிர் அவர்களின் தாரிக் திமிஸ்க்- பாகம் 13: ப.எண்:222
و أخبرناه عاليا أبو محمّد إسماعيل بن أبي القاسم القارئ، أنا أبو حفص عمر بن أحمد بن مسرور، نا الحاكم أبو أحمد محمّد بن محمّد بن أحمد الحافظ، أنا أبو يوسف محمّد بن سفيان الصّفار- بالمصّيصة-، نا اليمان بن سعيد، نا الحارث بن عطية، عن شعبة، عن الحكم، عن إبراهيم، عن أنس قال: رأيت رسول اللّه(صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ)  يفرّج بين رجلي الحسن و يقبّل ذكره.
அனஸ் (ரலி) கூறியதாவது:
நபி(சல்) அவர்கள் ஹசன்(ரலி) அவர்களின் கால்களை விரித்து அவரது மறைவுறுப்பை முத்தமிட்டதை நான் கண்டேன்.
       மேற்குறிபிட்ட ஹதீஸில் இடம் பெறும் أبو يوسف محمّد بن سفيان الصّفار - அபூயூஸூப் முஹம்மத் இப்னு சுஃப்யான் அல் சஃபர் யார் என்று அறியப்படாதவர். அடுத்ததாக அவர் செவியுறும் اليمان بن سعيد - அல் யாமான் இப்னு சயீத் குறித்து தாரகுத்னீ இவர் விடப்பட்டவர் என்று கூறுவதாக தஹபீ தனது முஃனீ, மீசான் ஆகியவற்றில் குறிப்பிடுகிறார். ஆக மேற்குறிபிட்ட செய்தியும் ஏற்கத்தக்க செய்தியல்ல. 

ஹதீஸ் 5: இப்னு அபி துன்யா அவரகளின் அல் இயால்- ஹதீஸ் எண்:211
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ قَابُوسَ بْنِ أَبِي ظَبْيَانَ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفَرِّجُ بَيْنَ رِجْلَيِ الْحُسَيْنِ وَيُقَبِّلُ زَبِيبَتَهُ
       காபூஸ் இப்னு அபி தப்யான் தனது தந்தை கூறியதாக கூறினார்கள்:        நபி(சல்) அவர்கள் ஹூசைன்(ரலி) அவர்களின் கால்களை விரித்து அவரது மறைவுறுப்பை முத்தமிடுவார்கள்
          இந்த செய்தியிலும் முன் சென்ற செய்தியில் இடம் பெற்ற காபூஸ் இப்னு அபி தப்யான் என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். மேலும் இந்த செய்தியை அறிவிக்கும் அபி திப்யானின் தந்தை சஹாபா அல்ல. ஆக இந்த செய்தி பலவீன்மான நிராகரிக்கத்தக்க செய்தியாகும்.

ஹதீஸ் 6: பைஹகீ அவர்களின் சுனன் அல் குப்ரா- ஹதீஸ் எண்:651

أنبأ أَبُو بَكْرٍ الْقَاضِي، وَأَبُو سَعِيدِ بْنُ أَبِي عَمْرٍو، قَالَا: نا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، ثنا مُحَمَّدُ بْنُ عِمْرَانَ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي ابْنُ أَبِي لَيْلَى، عَنْ عِيسَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ: " كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ الْحَسَنُ فَأَقْبَلَ يَتَمَرَّغُ عَلَيْهِ، فَرَفَعَ عَنْ قَمِيصِهِ، وَقَبَّلَ زَبِيبَتَهُ ". [ص:216] فَهَذَا إِسْنَادُهُ غَيْرُ قَوِيٍّ،
அப்துர் ரஹ்மான் இப்னு அபி லைலா அவர்கள் கூறியதாவது:        நாங்கள் நபி(சல்) அவர்களது சபையில் இருக்கும் போது ஹசன்(ரலி) அவர்கள் வந்தார்கள், அவரது சட்டையை தூக்கி அவரது  மறைவுறுப்பை நபி(சல்) அவர்கள் முத்தமிட்டார்கள்.

     இந்த செய்தியை பைஹகீ பதிவிட்டு இதன் அறிவிப்பாளர் தொடர் பலமானது அல்ல என்று கூறுகிறார். இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ابْنُ أَبِي لَيْلَى - இப்னு அபி லைலா என்பவர் பலவீனமானவர். நினைவாற்றல் குறைபாடு உடையவர் ஆவார்.இவரை பற்றி நஸ்யீ குறிப்பிடுகையில் பலவீனமானவர் என்று கூறுகிறார். தாரகுத்னி குறிப்பிடுகையில் இவர் நினைவாற்றல் குறையுடையவர் என்று கூறுகிறார்.(மீஸான் அல் இஹ்திதால்)

   இவ்வாறு நபி(சல்) குறித்து கூறப்படும் செய்திகள்யாவும் இட்டுக்கட்டபட்டவை கள் பலவீனமானவை. ஆனால் இத்தகைய அவதூறுகளை பரப்பும் யூத கிறித்தவ மிசனரிகள் ஒன்றை மறந்துவிட்டனர். அதாவது உண்மையில் இந்த பழக்கத்தையுடையவர்கள் யூதர்கள்தாம். ஆம் அவர்கள்தான் விருத்த சேதனம் நிகழத்தும் போது பெரியவரோ சிறியவரோ அவர்களது மறைவுறுப்பில் இருந்து சிந்தும் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் பழக்கமுடையவர்கள் என்பது குறிபிடத்தக்கது. இந்த முறையை “metzitzah” என்று அழைப்பார்கள். இந்த பழக்கம் பைபிலின் பழைய ஏற்பாட்டின் காலம் தொட்டே இருந்து வருவதாக கூறப்படுகிறது(1). ஆக பவுலும் கூட இளவயதுடைய தீமோதி என்பவருக்கு விருத்தசேதனம் செய்ததாக ஒரு தகவல் இடம் பெறுகிறது(2). (அப்போஸ்தல் நடபடிகள் 16:3). ஆக பவுலும் அதைதான் செய்திருப்பர் போலும்.......