பக்கங்கள் செல்ல

Saturday, August 21, 2021

நபித்தோழர்கள் இன்றைய குர்ஆனிற்கு மாற்றமாக ஓதினார்களா??

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

நபித்தோழர்கள் குர்ஆனுக்கு மாற்றமாக ஓதினார்களா


       குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் கேள்விகளுக்கு தொடர்களாக நாம் பதிலளித்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த கட்டுரையில் குர்ஆனில் இடம் பெறும் வசனங்கள் சில ஹதீஸ்களில் கூறப்பட்ட அதே வசனங்களுக்கு மாறுபட்டு சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறி, அதனால் அல்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்களுக்கு பதிலை காணவுள்ளோம், இன் ஷா அல்லாஹ்.



1. ஸஹீஹுல் புகாரி 4971, முஸ்லீம் 355
حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا نَزَلَتْ ‏‏وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ‏ وَرَهْطَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ، خَرَجَ رَسُولُ
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

'(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!' (அதாவது,) 'தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!') எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) இறைவசனம் அருளப்பட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டுச்......
2.ஸஹீஹுல் புகாரி  4727

ابْنُ عَبَّاسٍ يَقْرَأُ وَكَانَ أَمَامَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ صَالِحَةٍ غَصْبًا، وَأَمَّا الْغُلاَمُ فَكَانَ كَافِرًا‏.

           இப்னு அப்பாஸ்(ரலி), (திருக்குர்ஆன் 18:79 வது வசனத்தின் மூலத்தில் வகான அமாமகும் மலிக்குன் யஃகுது குல்ல சஃபீனத்தின் ஸாலிஹத்தின் ஃகஸ்பா’ என்று ஓதுவார்கள். (பொருள்: அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது.  அவன் பழுதில்லா நல்ல மரக்கலங்கள் ஒவ்வொன்றையும் அபகரித்துக்கொண்டிருந்தான்.) மேலும், (திருக்குர்ஆன் 18:80 வது வசனத்தின் மூலத்தில்)வ அம்மல் ஃகுலாமு ஃபகான காஃபிரன் என்று ஓதுவார்கள். (பொருள்: அந்தச் சிறுவன் இறைமறுப்பாளனாக இருந்தான்.)  
3.ஸஹீஹுல் புகாரி 1770
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ كَانَ ذُو الْمَجَازِ وَعُكَاظٌ مَتْجَرَ النَّاسِ فِي الْجَاهِلِيَّةِ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ كَأَنَّهُمْ كَرِهُوا ذَلِكَ حَتَّى نَزَلَتْ لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلاً مِنْ رَبِّكُمْ‏‏ فِي مَوَاسِمِ الْحَجِّ‏.
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
        துல்மஜாஸ், உக்காழ் ஆகியவை அறியாமைக்கால வியாபாரத் தலங்களாகும். அவ்வியாபாரத்தலங்களை வெறுக்கலானார்கள். அப்போது 'ஹஜ்ஜின் போது உங்களுடைய இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்களின் மீது குற்றமாகாது" என்ற02:198வது வசனம் அருளப்பட்டது. இது ஹஜ்ஜுக் காலங்களில் வியாபாரம் செய்வதைக் குறிக்கிறது.
4. ஸஹீஹ் முஸ்லீம் 2931
وَحَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَيْمَنَ، مَوْلَى عَزَّةَ يَسْأَلُ ابْنَ عُمَرَ وَأَبُو الزُّبَيْرِ يَسْمَعُ ذَلِكَ كَيْفَ تَرَى فِي رَجُلٍ طَلَّقَ امْرَأَتَهُ حَائِضًا فَقَالَ طَلَّقَ ابْنُ عُمَرَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَ عُمَرُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ إِنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ طَلَّقَ امْرَأَتَهُ وَهْىَ حَائِضٌ ‏.‏ فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ لِيُرَاجِعْهَا ‏”‏ ‏.‏ فَرَدَّهَا وَقَالَ ‏”‏ إِذَا طَهَرَتْ فَلْيُطَلِّقْ أَوْ لِيُمْسِكْ ‏”‏ ‏.‏ قَالَ ابْنُ عُمَرَ وَقَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَطَلِّقُوهُنَّ فِي قُبُلِ عِدَّتِهِنَّ
அபுஸ் ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 
"அஸ்ஸா" என்பாரின் முன்னாள் அடிமையாயிருந்த அப்துர் ரஹ்மான் பின் அய்மன் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "ஒருவர் தம் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டார். இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டார். -அப்போது (அங்கிருந்த) நான் அதைச் செவியுற்றுக் கொண்டிருந்தேன்.- அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது மணவிலக்குச் செய்துவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அப்துல்லாஹ் பின் உமர்,மாதவிடாயிலிருந்த தம் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டார்" என்று கூறி, அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உங்கள் புதல்வர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்!" என்று சொன்னார்கள். அவ்வாறே நான் அவளைத் திரும்ப அழைத்துக்கொண்டேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், "மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்ததும் அவர் மணவிலக்குச் செய்து கொள்ளட்டும்; அல்லது தம்மிடமே (மனைவியாக) வைத்துக்கொள்ளட்டும்!" என்றார்கள். மேலும், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "நபி (ஸல்) அவர்கள் "நபியே! பெண்களை நீங்கள் மணவிலக்குச் செய்தால், அவர்கள் "இத்தா"வைக் கடைப்பிடிப்பதற்கேற்ப அதன் ஆரம்பப் பகுதியில் மணவிலக்குச் செய்யுங்கள்" (65:1)என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்" என்று கூறினார்கள்.

5.முஸ்லீம் 1109 

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنِ الْقَعْقَاعِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي يُونُسَ، مَوْلَى عَائِشَةَ أَنَّهُ قَالَ أَمَرَتْنِي عَائِشَةُ أَنْ أَكْتُبَ لَهَا مُصْحَفًا وَقَالَتْ إِذَا بَلَغْتَ هَذِهِ الآيَةَ فَآذِنِّي ‏{‏ حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلاَةِ الْوُسْطَى‏}‏ فَلَمَّا بَلَغْتُهَا آذَنْتُهَا فَأَمْلَتْ عَلَىَّ حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلاَةِ الْوُسْطَى وَصَلاَةِ الْعَصْرِ ‏.‏ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ ‏.‏ قَالَتْ عَائِشَةُ سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم
ஆயிஷா (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த அபூயூனுஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆன் பிரதியொன்றைத் தமக்காகப் படியெடுத்துத் தருமாறு என்னிடம் கூறினார்கள். மேலும் "அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள்" எனும் இந்த (2:238ஆவது) வசனத்தை நீ எட்டும்போது என்னிடம் தெரிவிப்பாயாக! என்றும் கூறினார்கள். அவ்வாறே நான் (அதைப் படியெடுத்துக்கொண்டிருந்தபோது) அந்த வசனம் வந்ததும் அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது அவர்கள் "அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத்தொழுகையையும் (அதாவது) அஸ்ர் தொழுகையையும் பேணி(த் தொழுது) வாருங்கள். நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வழிபடுங்கள்" என்று எழுதுமாறு என்னிடம் கூறினார்கள். மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், "இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றுள்ளேன்" என்றும் கூறினார்கள்.
     மேற்குறிபிட்ட இன்னும் இது போன்ற செய்திகளை பதிவிட்டு இஸ்லாமோஃபோபுகள் " " நபித்தோழர்களே இன்றிருக்கும் குர்ஆனில் இருந்து மாறுபட்ட சில சொற்களை இணைத்து ஓதியுள்ளனர். இன்றிருக்கும் குர்ஆன் பிரதிகளில் அது இல்லை. ஆக குர்ஆனில் சில பகுதிகள் நீக்கப்பட்டுவிட்டது என்பதால் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை" என்று விமர்சித்து வருகின்றனர். 
          
          ஆனால் இந்த வாதமானது இஸ்லாம் குறித்த போதிய அறிவில்லாததாலும், அரபு மொழியின் சொற்றொடர்கள் குறித்து போதிய புரிதல் இல்லாததாலும் ஏற்பட்டதாகும்.

    ஆங்கிலத்தில் சொற்றொடர்களில், விளக்கமளிக்கும் சொற்றொடர்(Explanatory Phrase) என்றொரு வகை உண்டு. அது போல அரபு மொழியிலும் இத்தகைய சொற்றொடர்கள் உண்டு. அவற்றை عطف البيان என்பார்கள். இது இரு வகையானது

1. ஒரு சொற்றொடரில் அதனை விளக்கும் சொற்றொடர் தொடர்ச்சியாக அமைவது. உதாரணாமாக أبو موسى جابر بن حيّان - அபூ மூஸா ஜாபிர் இப்னு ஹய்யான் என்ற பெயரில் அபூ மூஸா என்பது மூஸாவின் தந்தை என்று பொருள் படும். அது போல் இப்னு ஹய்யான் என்பது ஹய்யானின் மகன் என்று பொருள் படும். குறித்த நபரின் பெயர் ஜாபிர் என்பது. மேற்குறிபிட்ட ஹதீஸ்களில் வ.எண்: 2,3,4 ஆகியவை இந்த அடிப்படையில் குர்ஆனின் வசனங்களுக்கு மேலதிக விளக்கம் கொடுக்கும்படி அமைந்தவை ஆகும்.
2. ஒரு சொற்றொடரில் அதனை மேலதிகமாக விளக்கும் சொற்றொடர் واو - வாவ் என்ற இணைப்புச் சொல்லினால் பிரிக்கப்பட்டிருக்கும். இதனை واو الحالو  என்று அழைப்பார்கள். மேற்குறிபிட்ட ஹதீஸ்களில் வ.எண்: 1,5, ஆகியவை இந்த அடிப்படையில் குர்ஆனின் வசனங்களுக்கு மேலதிக விளக்கம் கொடுக்கும்படி அமைந்தவை ஆகும்.
         இந்த விஷயத்தில் விளக்கம் மேற்குறிபிட்ட படி இருந்ததால் தான் எத்துனை ஸஹீஸான ஹதீஸ்கள் கிராத்களில் அதிகப்படுத்தல் இருப்பதாக கூறினாலும் அவை குர்ஆனின் கிராத்களில் இன்றுவரை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. காலம் காலமாக இஸ்லாமிய சமூகம் இந்த விசயத்தை தெளிவாக புரிந்து வந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. இது குறித்த இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தை காண்போம்.

அபூ ஜாஃபர் அந்நகாஸ் (மரணம் ஹிஜ்ரி 338) அவர்களது கருத்து

ﻭﺭﻭﻱ ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻭاﻟﺼﻼﺓ اﻟﻮﺳﻄﻰ ﺻﻼﺓ اﻟﻌﺼﺮ . ﻭﻫﺬﻩ اﻟﻘﺮاءﺓ ﻋﻠﻰ اﻟﺘﻔﺴﻴﺮ ﻷﻧﻬﺎ ﺯﻳﺎﺩﺓ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ،
    இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது அறிவிப்பில் "நடுத்தொழுகையையும் அசர் தொழுகையையும் " என்பது விளக்கத்தின் அடிப்படையிலான ஓதலாகும். ஏனென்றால் இது முஸ்ஹஃபில் இருப்பதற்கு மேலதிகமாக இடம் பெறுவதாகும்         ( அந்நகாஸ் அவர்களது அல் இஹ்ரப் அல் குர்ஆன் 1/119. குர்ஆன் 2:238ந் விளக்கம்)

ﻭﻛﺎﻥ ﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﻘﺮﺃ اﻝﺗﺄﻭﻳﻞ ﻣﻊ اﻝﺗﻨﺰﻳﻞ ﻧﺤﻮ ﻗﻮﻟﻪ: ﻭاﻟﺼﻼﺓ اﻟﻮﺳﻄﻰ، (ﻭﻫﻲ ﺻﻼﺓ اﻟﻌﺼﺮ)
   அவர்களில் ( சஹாபாக்களில்) சிலர் பொருளாக்கத்தையும் இறக்கப்பட்ட வசனங்களுடன் ஓதுபவர்களாக இருந்துள்ளனர் . உதாரணமாக நடுத்தொழுகை( அதுதான் அஸர் தொழுகை). (அபூபக்ர் அல் பாக்கீலானி அவர்களது அல் இன்திஸார் லில் குர்ஆன் 1/351)

ﻭﻫﺬﻩ اﻟﻘﺮاءﺓ ﻣﺨﺎﻟﻔﺔ ﻟﺴﻮاﺩ اﻟﻤﺼﺤﻒ اﻟﻤﺠﻤﻊ ﻋﻠﻴﻪ، ﻓﻴﻨﺒﻐﻲ ﺃﻥ ﻳﺠﻌﻞ ﺗﻔﺴﻴﺮا، ﻭﻛﺬا ﻣﺎ ﻭﺭﺩ ﻋﻨﻪ ﻭﻋﻦ ﻏﻴﺮﻩ ﻣﻤﺎ ﺧﺎﻟﻒ ﺳﻮاﺩ اﻟﻤﺼﺤﻒ
     இந்த ஓதலானது அல் முஸ்ஹஃப்பின் எழுத்தாக்கத்திற்கு மாற்றமாக இருக்கிறது, ஆகவே இது ஒரு விளக்கமாக இருக்கும். அவராலும் ( இப்னு மஸ்வூத் (ரலி)) ஏனையோராலும் அல் முஸ்ஹஃபின் எழுத்தாக்கத்திற்கு மாற்றமாக அறிவிக்கப்படும் அறிவிப்புகள் அனைத்திற்கும் இதுவே பொருந்தும்.                               ( அபூ ஹய்யான் அவர்களது பஹ்ர் உல் முஹீத் 1/260)
இப்னு அல் ஜஸரீ (ஹிஜ்ரி 751- 833) அவர்களது கருத்து

نَعَمْ كَانُوا رُبَّمَا يُدْخِلُونَ التَّفْسِيرَ فِي الْقِرَاءَةِ إِيضَاحًا وَبَيَانًا لِأَنَّهُمْ مُحَقِّقُونَ لِمَا تَلَقَّوْهُ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قُرْآنًا فَهُمْ آمِنُونَ مِنَ الِالْتِبَاسِ وَرُبَّمَا كَانَ بَعْضُهُمْ يَكْتُبُهُ مَعَهُ
    சிலநேரஙளில் அவர்கள் (நபித்தோழர்கள்) கிராஆத்தில் தஃப்ஸீரையும் இணைத்தது விளக்கத்திற்காவும் தெளிவுபடுத்துவதற்காகவும் தான். ஏனென்றால் அவர்கள் நபி(சல்) அவர்களிடம் இருந்து நேரடியாக கற்ற குர்ஆனில் வல்லவர்களாய் இருந்தனர். அதனால் அவர்களுக்கு இடையே குழப்பம் ஏற்படாமல் பாதுக்காக்கப்பட்டனர். மேலும் சிலநேரங்களில் அவர்களில் சிலர் அவற்றை (தஃப்ஸீரை) அதனுடன் (குர்ஆனுடன்) எழுதவும் செய்தனர். (இப்னு ஜஸரீ அவர்களது நஸர் பீ கிராத் அல் அஸர் 1/32)
        மேற்குறிபிட்ட இப்னு ஜஸரீ மற்றும் அபூ ஜாஃபர் அந்நகாஸ் ஆகியோர் இந்த கிராத் துறையில் வல்லுநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


      மேற்குறிபிட்ட இந்த கருத்தை அல் குர்ஆனும் உண்மை படுத்துகிறது அல்லாஹ் அல் குர்ஆனில் பல இடங்களில் தான் வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியதாக குறிப்பிடுகிறான். உதாரணமாக
وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ ۚ وَلَا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِتَعْتَدُوا ۚ وَمَنْ يَفْعَلْ ذَٰلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ ۚ وَلَا تَتَّخِذُوا آيَاتِ اللَّهِ هُزُوًا ۚ وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ وَمَا أَنْزَلَ عَلَيْكُمْ مِنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهِ ۚ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால்⁶⁶ அவர்கள் தமக்குரிய காலக்கெடுவை⁶⁹ நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதத்தையும் ஞானத்தையும் வழங்கியதை எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! "அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்!(அல் குர்ஆன் 2:231)
          இவ்வாறு அல் குர்ஆனில் இடம் பெறும் الْكِتَابِ وَالْحِكْمَةِ - வேதமும் ஞானமும் என்ற பதத்திற்கு வேதமும் அதன் விளக்கமும் என்று முற்கால அறிஞர்கள் பொருள் கொள்கிறார்கள்.
اﻝﺣﻜﻤﺔ : اﻟﺴﻨﺔ ﻭﻓﻬﻢ اﻟﻘﺮﺁﻥ

அல்ஹிக்மா- சுன்னாவும் குர்ஆனின் விளக்கமும் (தஃப்ஸீர் அன் நஸஃபீ - 1/131)
ﻭﻗﺎﻝ ﻣﺠﺎﻫﺪ: اﻟﺤﻜﻤﺔ: ﻓﻬﻢ اﻟﻘﺮﺁﻥ.

முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறியதாவது                                                  அல் ஹிக்மா : குர்ஆனின் விளக்கம் (தஃப்ஸீர் அல் வஸீத் , பஹ்ர் அல் முஹீத் 1/626)

        மேலும் அல் ஹிக்மா என்றால் விளக்கம் என்று பொருள் என்று இப்னு வஹ்ப் அவர்களது தஃப்ஸீர் அல் குர்ஆன் மின் ஜாமி லி இப்னு வஹ்ப் 1/8 இடம்பெறுகிறது. இதில் முஜாஹித்(ரஹ்) அவர்கள் நபித்தோழர்களை கண்ட தாபியீ(பிறப்பு - ஹிஜ்ரி 21) . அரம்பகால தஃப்ஸீர் அறிஞரில் ஒருவர். இப்னு வஹ்ப் இமாம் மாலிக் அவர்களின் மாணவர் ஆவார்.( பிறப்பு - ஹிஜ்ரி 125)

       ஆகவே அல்லாஹ்வே தனது குர்ஆனில், வேதம் அதன் ஞானம் என்று இரண்டையும் இறக்கியிருப்பதாக கூறுகிறான். மேலும் அந்த ஞானம் என்பது சுன்னாஹ் மற்றும் வேத விளக்கம் என்பதே என்பதை ஆரம்பகால அறிஞர்களின் கூற்றை கொண்டு விளக்கியிருக்கிறோம். இதற்கு மேல் சென்று அல்லாஹ் பின்வரும் செய்தியையும் குறிப்பிடுகிறான்.
وَاذْكُرْنَ مَا يُتْلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا
உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான் . (அல் குர்ஆன்33:34)
       மேற்குறிபிட்டபடி அல்லாஹ் கூறுவது போல நபித்தோழர்கள் குர்ஆனை அதன் விளக்கத்தையும் மனனமிட்டு ஓதிக்கொண்டிருந்தனர் என்பதை பின்வரும் செய்தி நமக்கு உறுதி படுத்துகிறது.
     'நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை, அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களைத் தவிர. அவர்களிடம் கொஞ்சம் நபிமொழிகள் இருந்தன. காரணம் அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துள்ளேன்) எழுதி வைத்ததில்லை" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி 113 )
     நபித்தோழர்கள் நபி(சல்) அவர்களிடம் வேதத்தையும் ஞானத்தையும் மனனமிட்டு அதனை நினைவு கூர்ந்தும் வந்துள்ளனர். அதனால் தான் நபித்தோழர்கள் வழியாக பெறப்பட்ட இந்த இஸ்லாமிய சமூகத்தின் கிராத்கள் எந்த ஒன்றிலும் மேற்குறிபிட்ட இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஹதீஸ்களில் இடம் பெறும் அதிகப்படுத்துதல் எதுவும் இடம் பெற்வில்லை. அதாவது மேற்குறிபிட்ட செய்திகளை அறிவிக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது கிராத்களான கிராத் அன் நாஃபீ, கிராத் அன் அபூ அம்ரூ ஆகியவற்றில் இந்த அதிகப்படுத்துதல்கள் இடம் பெறவில்லை. நபித்தோழர்கள் குர்ஆன் ஆயத் எது அதன் விளக்கம் எது( தஃப்ஸீர்) என்பதை விளக்கியிருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

        வேதத்தையும் ஞானத்தையும்(விளக்கத்தையும்) ஒரு சேர நபித்தோழர்கள் கற்பிக்கும் செய்திகளைத்தான் அது குறித்த எந்த அறிவுமின்றி இஸ்லாமோஃபோபுகள் கூறி அல்குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்று உளறித்திரிகின்றனர் என்பதை மேற்குறிபிட்ட விளக்கத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம். அல்லாஹு அஃலம்...