பக்கங்கள் செல்ல

Friday, October 8, 2021

அல் குர்ஆனில் எழுத்தர் பிழைகளா?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
குர்ஆனில் பிழைகள் - எழுத்தர்


       நாம் சென்ற தொடரில் நபித்தோழர்கள் எப்படி அல்குர்ஆனின் ஆயத்துக்களுடன் அதன் பொருளாக்கத்தையும் இணைத்து ஓதுவார்கள் என்பதை இஸ்லாமோஃபோபுகளின் விளங்காத விமர்சனத்தின் வாயிலாகவே விளக்கி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த தொடரில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது அறிவிப்பு ஒன்றை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் இந்த செய்தி எப்படி முன் சென்ற தொடரிற்கு மேலதிக விளக்கமாகவும் சான்றாகவும் உள்ளது என்பதை காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ். முதலில் அவர்கள் முன்வைக்கும் ஆதாரத்தையும் அதில் இருந்து அவர்கள் வைக்கும் விமர்சனத்தையும் காண்போம்.

حَدَّثَنَا أَبُو عَلِيٍّ الْحَافِظُ، أَنْبَأَ عَبْدَانُ الْأَهْوَازِيُّ، ثنا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، ثنا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، ثنا سُفْيَانُ، عَنْ شُعْبَةَ، عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فِي قَوْلِهِ تَعَالَى: {لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا} [النور: 27] قَالَ: «أَخْطَأَ الْكَاتِبُ حَتَّى تَسْتَأْذِنُوا»
      இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள்: லா தத்ஹுலு புயூதன் ஃகைர புயூதிக்கும் ஹத்தா தஸ்தஃனிஸூ என்ற வசனத்தில் (ஹத்தா தஸ்தஃனிஸூ) இது எழுத்தர் பிழையாகும். ஹத்தா தஸ்தஃதனூ (என்பதுதான் சரியானதாகும்) என்று கூறினார்கள்.(அறிவிப்பாளர்: முஜாஹித்(ரஹ்), நூல்:  முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் 3496
மேலும் மேற்குறிபிட்ட ஹதீஸை போன்று சயீத் இப்னு ஜுபைர் அவர்களும் அறிவிக்கிறார்கள். இது போன்று பல அறிவிப்புக்கள் தஃப்ஸீர் கிரந்தங்களில் இடம் பெறுகிறது.

மேற்குறிபிட்ட ஹதீஸை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள் 
 இன்றைய குர்ஆனில் அந்நூர் அத்தியாத்தின் 27 ம் வசனம் " லா தத்ஹுலு புயூதன் ஃகைர புயூதிக்கும் ஹத்தா தஸ்தஃனிஸூ" என்று இடம்பெறுவதாலும், அதனை எழுத்தர் பிழை என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களே கூறுவதாலும் அல் குர்ஆனில் எழுத்தர் பிழைகள் இருக்கிறது ஆகவே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை " 

 என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். 

        ஆனால் மேற்குறிபிட்ட இவர்களது இந்த வாதம் நபித்தொழர்கள் வேதத்தை மட்டுமே கற்றனர், கற்பித்தனர் என்ற அறியாமையினாலும், நபித்தோழர்கள் குர்ஆன் வசனத்தின் பொருளாக்கத்தையும் சில நேரம் இணைத்து ஓதக்கூடியவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறியாததாலும் ஏற்பட்டதாகும். முன்சென்ற தொடரில் இது குறித்து நாம் விளக்கியிருந்தோம். மீண்டும் இது குறித்த இந்த விஷயத்தில் நிபுனத்துவம் பெற்ற இரு அறிஞர்களின் கருத்தை நினைவூட்டுகிறொம்.

அபூ பகர் அல் பாக்கீலானி (ஹிஜ்ரி 340 - 403) அவர்களது கருத்து:
ﻭﻛﺎﻥ ﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﻘﺮﺃ اﻝﺗﺄﻭﻳﻞ ﻣﻊ اﻝﺗﻨﺰﻳﻞ ﻧﺤﻮ ﻗﻮﻟﻪ: ﻭاﻟﺼﻼﺓ اﻟﻮﺳﻄﻰ، (ﻭﻫﻲ ﺻﻼﺓ اﻟﻌﺼﺮ) .
         அவர்களில் ( சஹாபாக்களில்) சிலர் பொருளாக்கத்தையும் இறக்கப்பட்ட வசனங்களுடன் ஓதுபவர்களாக இருந்துள்ளனர் . உதாரணமாக நடுத்தொழுகை (அதுதான் அஸர் தொழுகை). (அபூபக்ர் அல் பாக்கீலானி அவர்களது அல் இன்திஸார் லில் குர்ஆன் 1/351)

இப்னு அல் ஜஸரீ (ஹிஜ்ரி 751- 833) அவர்களது கருத்து

نَعَمْ كَانُوا رُبَّمَا يُدْخِلُونَ التَّفْسِيرَ فِي الْقِرَاءَةِ إِيضَاحًا وَبَيَانًا لِأَنَّهُمْ مُحَقِّقُونَ لِمَا تَلَقَّوْهُ عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قُرْآنًا فَهُمْ آمِنُونَ مِنَ الِالْتِبَاسِ وَرُبَّمَا كَانَ بَعْضُهُمْ يَكْتُبُهُ مَعَهُ

  சிலநேரங்களில் அவர்கள் (நபித்தோழர்கள்) கிராஆத்தில் தஃப்ஸீரையும் இணைத்தது விளக்கத்திற்காவும் தெளிவுபடுத்துவதற்காகவும் தான். ஏனென்றால் அவர்கள் நபி(சல்) அவர்களிடம் இருந்து நேரடியாக கற்ற குர்ஆனில் வல்லவர்களாய் இருந்தனர். அதனால் அவர்களுக்கு இடையே குழப்பம் ஏற்படாமல் பாதுக்காக்கப்பட்டனர். மேலும் சிலநேரங்களில் அவர்களில் சிலர் அவற்றை (தஃப்ஸீரை) அதனுடன் (குர்ஆனுடன்) எழுதவும் செய்தனர். (இப்னு ஜஸரீ அவர்களது நஸர் பீ கிராத் அல் அஸர் 1/32)
      இவர்கள் குறிப்பிடும் இப்னு அப்பாஸ் அவர்களது அறிவிப்பானது பொதுவான வார்த்தைகளிலேயே இடம் பெறுகிறது. அதாவது أَخْطَأَ الْكَاتِبُ - என்பதின் பொருள் எழுத்தர் பிழை என்பதாகும். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் எதன் எழுத்தர் குறித்து பேசுகிறார் என்பதற்கு எந்த குறிப்பும் இல்லை. இப்னு அப்பாஸ்(ரலி) போன்ற நபிதோழர்கள் பொருளாக்கத்தை (தாவில்) குர்ஆன் வசனங்களுடன் ஓதக்கூடியவர்களாகவும், அத்தகைய தாவில் கிதாப்களை எழுத்தாக்கம் செய்ய பணிப்பவர்களாகவும் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது குறித்து பின்வரும் செய்திகள் தெளிவாக உணர்த்துகின்றன.

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﻴﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ: ﻭﺣﺪﺛﻨﻲ ﺃﺑﻲ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﻲ اﻟﻬﺬﻳﻞ ﻋﻦ اﻟﻤﺴﻴﺐ ﻋﻦ اﻷﻋﻤﺶ ﻋﻦ اﺑﻦ ﺟﺒﻴﺮ ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ- ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ- ﻗﺎﻝ: ﺗﻌﻠﻤﻮا اﻟﺘﺄﻭﻳﻞ ﻗﺒﻞ ﺃﻥ ﻳﺠﻲء ﺃﻗﻮاﻡ ﻳﺘﺄﻭﻟﻮﻧﻪ ﻋﻠﻰ ﻏﻴﺮ ﺗﺄﻭﻳﻠﻪ

   இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது: தவறான பொருளின் அடிப்படையில் (குர்ஆனை)விளக்கும் மக்கள் வருவதற்கு முன் பொருளாக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள். (தஃப்ஸீர் முகாத்தில் இப்னு சுலைமான் 1/26)

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﻛﺮﻳﺐ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻃﻠﻖ ﺑﻦ ﻏﻨﺎﻡ، ﻋﻦ ﻋﺜﻤﺎﻥ اﻟﻤﻜﻲ، ﻋﻦ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﻠﻴﻜﺔ ﻗﺎﻝ: ﺭﺃﻳﺖ ﻣﺠﺎﻫﺪا ﻳﺴﺄﻝ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻋﻦ ﺗﻔﺴﻴﺮ اﻟﻘﺮﺁﻥ، ﻭﻣﻌﻪ ﺃﻟﻮاﺣﻪ، ﻓﻴﻘﻮﻝ ﻟﻪ اﺑﻦ ﻋﺒﺎﺱ: "اﻛﺘﺐ"، ﻗﺎﻝ: ﺣﺘﻰ ﺳﺄﻟﻪ ﻋﻦ اﻟﺘﻔﺴﻴﺮ ﻛﻠﻪ

          இப்னு அபீ மாலிக்கா கூறியதாவது:" முஜாஹித் (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் குர்ஆனின் விளக்கம் குறித்து கேட்பார்கள். அவர்களிடம் அவரது குறிப்பேடுகள் இருக்கும். இப்னு அப்பாஸ்(ரலி) அவரிடம் "எழுதுக" என்று கூறுவார்கள்.   மேலும் (இப்னு அபீ மாலிக்கா )கூறினார்கள் :அவர் அவரிடம் முழு விளக்கத்தை பெறும் வரை கேட்டுகொண்டே இருப்பார். (தஃப்ஸீர் தபரீ 1/90 ஹதீஸ் எண்: 107)
    இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் பொருளாக்கத்தை(தாவில்) கற்றுக்கொடுப்பவராகவும் அதனை எழுத கட்டளையிடுபவர்களாகவும் இருந்துள்ளார்கள் என்பதை மேற்குறிபிட்ட செய்தி விளக்குகிறது. மேலும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களே தஸ்தஃனிஸூ என்பதின் பொருள் தஸ்தஃதனூ என்று விளக்கிய செய்தியும் இந்த வசனம் குறித்த விளக்கத்தில் நாம் காண முடிகிறது, இதோ
حدثنا محمد بن سعد، قال: ثني أبي، قال: ثني عمي، قال: ثني أبي، عن أبيه، عن ابن عباس، قوله:( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ) قال: الاستئناس: الاستئذان.
     இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள், லா தத்ஹுலு புயூதன் ஃகைர புயூதிக்கும் ஹத்தா தஸ்தஃனிஸூ வ துஸல்லிமூ அலா அஹ்லிஹிம் என்பதில் தஸ்தஃனிஸூ என்பதின் பொருள் தஸ்தஃதனூ என்பதாகும் என்று கூறினார்கள்.(தப்ஸீர் தபரி அந்நூர் சூராவின் 27ம் வசனத்தின் விளக்கம்).
மேலும் இந்த வசனத்தின் இந்த தஸ்தஃனிஸூ என்ற சொல் குறித்து மாலிக் இப்னு அனஸ்(ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது:
اﺑﻦ ﻭﻫﺐ، ﻭاﺑﻦ اﻟﻘﺎﺳﻢ ﻋﻦ ﻣﺎﻟﻚ ﺃﻥ اﻻﺳﺘﺌﻨﺎﺱ ﻫﻮ اﻻﺳﺘﺌﺬاﻥ ﻋﻠﻰ اﻟﺘﺄﻭﻳﻞ اﻷﻭﻝ
மாலிக் (ரஹ்) கூறியதாவது: நிச்சயமாக தஸ்தஃனிஸூ என்பதின் முதன்மை பொருளாக்கம் தஸ்தஃதனூ என்பதாகும்.(அல் அஹ்காம் அல் குர்ஆன் 3/371)
ﺳﻔﻴﺎﻥ ﻋﻦ ﺟﺎﺑﺮ ﻋﻦ ﻣﺠﺎﻫﺪ ﻓﻲ ﻗﻮﻟﻪ ﻻ ﺗﺪﺧﻠﻮا ﺑﻴﻮﺗﺎ ﻏﻴﺮ ﺑﻴﻮﺗﻜﻢ ﺣﺘﻰ ﺗﺴﺘﺄﻧﺴﻮا ﻗﺎﻝ ﻫﻮ اﻟﺘﻨﺤﻨﺢ
    முஜாஹித்(ரஹ்) அவர்கள் "லா தத்ஹுலு புயூதன் ஃகைர புயூதிக்கும் ஹத்தா தஸ்தஃனிஸூ (உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெறாமல் நுழைய வேண்டாம்.) " இது நிபந்தனை ஆகும் என்று கூறினார்கள்.(தஃப்ஸீர் சுஃப்யான் அல் ஸவ்ரி 1/224)


 1.  இப்னு அப்பாஸ் அவர்களது வழியாக வரும் முத்தவாதீரான ஓதலில் "ஹத்தா தஸ்தஃனிஸூ" என்றே இடம் பெறுகிறது.
2. இந்த வசனத்தை ஓதி விளக்கும் போது இந்த ஹதீஸை அறிவிக்கும் முஜாஹித்(ரஹ்) அவர்கள் "ஹத்தா தஸ்தஃனிஸூ" என்றே ஓதி விளக்கியுள்ளார்கள்.

3.   தஸ்தஃனிஸூ என்ற  வார்த்தையின் முதன்மை பொருளாக்கம் 
"தஸ்தஃதனூ" என்று மாலிக் இப்னு அனஸ்(ரஹ்) அவர்கள் விளக்குகிறார்கள்.

4. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களே தஸ்தஃனிஸூ என்ற வார்த்தையின் பொருளாக்கம் "தஸ்தஃதனூ" என்று விளக்கிவிட்டார்கள். 
       ஆகவே இஸ்லாமோஃபோபுகள் விமர்சனத்திற்காக முன்வைத்த செய்தியில் இப்னு அப்பாஸ்(ரலி) பேசுவது தாவில் கிதாப்பின் எழுத்தர் பிழை பற்றித்தான் என்பது தெள்ளத்தெளிவாக நிறுவப்படுகிறது.