பக்கங்கள் செல்ல

Sunday, November 20, 2022

இப்னு உமர்(ரலி) குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று கூறினார்களா??

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ



    குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பும் விமர்சனங்களில் அடுத்ததாக நாம் காணயிருப்பது இப்னு உமர்(ரலி) அவர்களின் கூற்றை அடிப்படியாக கொண்டது. அவர்கள் அதற்கு முன்வைக்கும் ஆதாரத்தையும் அதன் அடிப்படையில் எழுப்பப்படும் விமர்சனத்தை முதலில் பார்ப்போம்.

 

    இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரமும் வாதமும்
    ஆதாரம் 1:
    `Abdullah b. `Umar reportedly said, 'Let none of you say, "I have got the whole of the Qur'an." How does he know what all of it is? MUCH OF THE QUR'AN HAS GONE. Let him say instead, "I have got what has survived."' (Jalal al Din `Abdul Rahman b. Abi Bakr al Suyuti,al-Itqan fi `ulum al-Qur'an, Halabi, Cairo, 1935/1354, Volume 2, p. 25)

         இப்னு உமர்(ரலி) கூறியதாவது "உங்களில் ஒருவர் குர்ஆன் முழுவதையும் ஓதிவிட்டேன் என்று கூறவேண்டாம். அதை முழுவதுமாக அவர் அறிவாரா? குர்ஆனின் பெரும்பகுதி சென்றுவிட்டது. மாறாக அவர் " எது தப்பியதோ அதனை பெற்றுக்கொண்டேன்" என்று சொல்லட்டும். (அல் சுயூத்தி அவர்களது இத்கான் ஃபீ உளூம் அல் குர்ஆன், பாகம் 2 பக்கம் 25, ).

    ஆதாரம் 2:
    Isma’il b. Ibrahim related to us from Ayyub from Nafi‘ from Ibn ‘Umar who said – Let none of you say, “I have learned the whole of the Koran,” for how does he know what the whole of it is, WHEN MUCH OF IT HAS DISAPPEARED? Let him rather say, “I have learned what is extant thereof.” (Ibn Warraq, Origins of the Koran – Classic Essays on Islam’s Holy Book [Prometheus Books, Amherst, NY 1998], Part Two: The Collections and the Variants of the Koran, 9. Abu ‘Ubaid on the Verses Missing from the Koran, by Arthur Jeffery, p. 151: bold, capital and underline emphasis ours)
        இப்னு உமர்(ரலி) கூறியதாவது "உங்களில் ஒருவர் குர்ஆன் முழுவதையும் ஓதிவிட்டேன் என்று கூறவேண்டாம். அதை முழுவதுமாக அவர் அறிவாரா? குர்ஆனின் பெரும்பகுதி மறைந்து போய்விட்டது. மாறாக அவர் " அதில் எது இருக்கிறதோ அதை கற்றுக்கொண்டேன்" என்று சொல்லட்டும்.
    ஆதாரம் 3:
    حدثنا إسماعيل بن إبراهيم ، عن أيوب ، عن نافع ، عن ابن عمر ، قال : « لا يقولن أحدكم قد أخذت القرآن كله وما يدريه ما كله ؟ قد ذهب منه قرآن كثير ، ولكن ليقل : قد أخذت منه ما ظهر منه
    Ismail bin Ibrahim narrated from Ayub from Naf’ee from Ibn Umar who said: ‘Verily among you people one would say that he has found the Quran whilst he is unaware of what the total quantity of the Quran was, because most of the Quran has been lost. Rather one should say that verily he has found the Quran that has appeared.’(Fadhail al-Quran by Qasim bin Salam, Volume 2 p. 135)
    இப்னு உமர்(ரலி) கூறியதாவது "உங்களில் ஒருவர் குர்ஆன் முழுவதையும் ஓதிவிட்டேன் என்று கூறவேண்டாம். குர்ஆன் முழுவதும் என்ன என்று அவர் அறிவாரா? ஏனென்றால் குர்ஆனின் பெரும்பகுதி தொலைந்துவிட்டது. மாறாக அவர் " குர்ஆனில் எது இருக்கிறதோ அதை கண்டுகொண்டேன்" என்று சொல்லட்டும்.(காஸிம் இப்னு ஸல்லாம் அவர்களது ஃபதாயில் அல் குர்ஆன், பாகம் 2 பக்கம் 135)
    இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் வாதம்:
           மேற்குறிபிட்ட ஆதாரங்களை அடிப்படையில் அல் குர்ஆனின் பெரும் பகுதி காணாமல் போய்விட்டதாக நபித்தோழரான இப்னு உமர்(ரலி) கூறுகிறார்கள். எனவே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்பது இஸ்லாமோஃபோபுகளின் வாதம்.

        மேற்குறிப்பிட்ட மூன்று ஆதாரங்களை பொறுத்தவரையில் இரண்டாவது ஆதாரம், இஸ்லாமோஃபோபியாவை பரப்புவதையே முழுநேர தொழிலாக கொண்ட இப்னு வராக்கின் புத்தகத்தில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அபூ உபைத் அவர்களின் நூலில் இருந்து மேற்கோள் காட்டி ஆர்தர் ஜெஃப்ரியின் நூலில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இப்னு வராக் மேற்கோள்காட்டும் ஆர்த்தர் ஜெஃப்ரியின் ஆதாரமும் அபூ உபைத்தின் ஆதாரத்தின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதால் 1 மற்றும் 3ம் ஆதாரத்தை மட்டும் நாம் ஆய்வுக்கு உட்படுத்துவதே போதுமானது.

    மொழியாக்க பித்தலாட்டம்

            இஸ்லாமோஃபோபுகள் முன்வைத்த ஆதாரங்களான அல் சுயூத்தி அவர்களது இத்கான் மற்றும் அபூ உபைத் காஸிம் இப்னு ஸல்லாம் அவர்களது ஃபதாயில் அல் குர்ஆன் ஆகிய இரண்டுமே ஒரே வாசகத்தையே கொண்டிருக்கிறது.


                அப்படி இருக்கையில் எப்படி ஒவ்வொரு ஆதாரமும் வேறு பட்ட பொருளை தரும். இவர்கள் மொழிபெயர்ப்பில் மொசடி செய்துள்ளனர். இரண்டு நூற்களிலும் " قد ذهب منه قرآن كثير " என்ற வாசகமே இடம் பெற்றிருக்கிறது. அதனை மொழியாக்கம் செய்த இஸ்லாமோஃபோபுகள் அல் சுயூத்தி அவர்களது இத்கானின் ஆதாரம் என்று குறிப்பிடுவதில் "குர்ஆனின் பெரும்பகுதி சென்றுவிட்டது" என்றும், அபூ உபைத் அவர்களது ஃபதாயில் அல் குர்ஆனின் ஆதாரம் என்று குறிப்பிடுவதில் "ஏனென்றால் குர்ஆனின் பெரும்பகுதி தொலைந்துவிட்டது" என்றும் மொழியாக்கம் செய்துள்ளனர். இவ்வாறு மொழியாக்கத்தில் தில்லு முல்லு செய்துவிட்டு இஸ்லாமோஃபோபியா பிடித்த இப்னு வராக்கின் மேற்கோளில் "குர்ஆனின் பெரும்பகுதி மறைந்து போய்விட்டது" என்று இடம்பெறுவதாக கூறுகின்றனர். இப்படி இடத்துக்கிடம் மொழியாக்கம் மாறுவதே இவர்கள் மொழியாக்கத்தில் பெரும் மோசடி செய்துள்ளனர் என்பதற்கு போதிய சான்று.

        மேற்குறிபிட்ட ஆதாரங்களில் இரண்டு சொற்களின் மொழியாக்கத்தில் மோசடி செய்துள்ளனர்.
    1. ذهب
    2. كثير

    ذهب  - என்ற சொல்லின் பொருள்:

        “ذهب " - என்ற சொல்லின் பொருள் மிகவும் பறந்து விரிந்த பொருளை கொண்டது. அல்மானி அரபிய அகராதி அல்குர்ஆனில் பின்வரும் பொருளில் இந்த சொல்  1.புறப்படுதல், 2.சென்று விடுதல் 3.தொலைதூரம் சென்று விடுதல் 4.எடுத்துக்கொள்ளுதல். ஆகிய பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது. இந்த நான்கு பொருளில் எது இவர்கள் குறிப்பிடும் செய்தியில் இடம் பெறும் என்பதை இரண்டு முறைகளில் அறிந்து கொள்ளலாம்.

    1.வேறு நூல்களில் இடம்பெறும் இப்னு உமர்(ரலி) அவர்களது அறிவிப்புகளின் அடிப்படையில்

    2. எந்த தலைப்பின் கீழ் இந்த ஆதாரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்ற அடிப்படையில்

    1.வேறு நூற்களில் இடம்பெறும் இப்னு உமர்(ரலி) அவர்களது அறிவிப்புகள்:

                வேறு எந்த நூற்களில் அல்லது அறிவிப்பாளர்கள் வழியாக இந்த செய்தி இடம்பெறுகிறது என்பதை அல் இத்கானின் ஆசிரியரான அல் சுயூத்தி அவர்கள் தனது துர்ருல் மன்சூரில் பதிவிட்டுள்ளார்.
    ﻭﺃﺧﺮﺝ ﺃﺑﻮ ﻋﺒﻴﺪ ﻭاﺑﻦ اﻟﻀﺮﻳﺲ ﻭاﺑﻦ اﻷﻧﺒﺎﺭﻱ ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ ﻗﺎﻝ: ﻻ ﻳﻘﻮﻟﻦ ﺃﺣﺪﻛﻢ ﻗﺪ ﺃﺧﺬﺕ اﻟﻘﺮﺁﻥ ﻛﻠﻪ ﻣﺎ ﻳﺪﺭﻳﻪ ﻣﺎ ﻛﻠﻪ ﻗﺪ ﺫﻫﺐ ﻣﻨﻪ ﻗﺮﺁﻥ ﻛﺜﻴﺮ ﻭﻟﻜﻦ ﻟﻴﻘﻞ: ﻗﺪ ﺃﺧﺬﺕ ﻣﺎ ﻇﻬﺮ ﻣﻨﻪ
        அபூ உபைத் , இப்னு தூரைஷ், இப்னு அன்பாரியின் முஸ்ஹஃப்பில் ஆகிய அறிவிப்புக்களில் இப்னு உமர் கூறுவதாக அமைந்த செய்தி என்று மேற்குறிப்பிட்ட செய்தியை துர்ருல் மன்சூர் 1/258ல் அல் சுயூத்தி அவர்கள் பதிவிட்டுள்ளார்கள்.

        அபூ உபைத் அவர்கள் மட்டும் இந்த செய்தியை அறிவிக்கவில்லை. இப்னு தூரைஷ் அவர்களும் இந்த செய்தியை அறிவித்துள்ளதாக அல் சுயூத்தி அவர்கள் கூறுகிறார்கள். இப்னு தூரைஷ் அவர்களது அறிவிப்பை ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தனது ஃபத்ஹுல் பாரியில் பதிவிட்டுள்ளார்கள்.

    ﺃﺣﺎﺩﻳﺚ ﺻﺤﻴﺤﺔ ﻭﻗﺪ ﺃﺧﺮﺝ ﺑﻦ اﻟﻀﺮﻳﺲ ﻣﻦ ﺣﺪﻳﺚ ﺑﻦ ﻋﻤﺮ ﺃﻧﻪ ﻛﺎﻥ ﻳﻜﺮﻩ ﺃﻥ ﻳﻘﻮﻝ اﻟﺮﺟﻞ ﻗﺮﺃﺕ اﻟﻘﺮﺁﻥ ﻛﻠﻪ ﻭﻳﻘﻮﻝ ﺇﻥ ﻣﻨﻪ ﻗﺮﺁﻧﺎ ﻗﺪ ﺭﻓﻊ

        இப்னு தூரைஷ் ஸஹீஹான் அறிவிப்பாளர் வரிசையில் பின்வருமாறு அறிவிக்கிறார். இப்னு உமர்(ரலி) அவர்கள் ஒரு மனிதர் " நான் முழு குர்ஆனையும் ஓதிவிட்டேன் " என்று கூறுவதை வெறுப்பவர்களாக இருந்தார்கள். குர்ஆனின் ஒரு பகுதி உயர்த்தப்பட்டுவிட்டது (எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது) என்று கூறுவார்கள். ( ஃபத்ஹுல் பாரி 9/65)
    அதே போல் மேற்கொண்ட செய்தியை அதே அறிவிப்பாளர் வரிசையில் இப்னு வஹ்ப் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்கள்.
    ﻗﺎﻝ: ﻭﺣﺪﺛﻨﻲ ﺣﻤﺎﺩ ﺑﻦ ﺯﻳﺪ ﻋﻦ ﺃﻳﻮﺏ ﻋﻦ ﻧﺎﻓﻊ ﺃﻥ اﺑﻦ ﻋﻤﺮ ﻛﺎﻥ ﻳﻜﺮﻩ ﺃﻥ ﻳﻘﻮﻝ: ﻗﺮﺃﺕ اﻟﻘﺮﺁﻥ ﻛﻠﻪ، ﻭﻗﺎﻝ: ﺇﻥ ﻣﻨﻪ ﻣﺎ ﻗﺪ ﺭﻓﻊ، ﺃﻭ ﻧﺴﻲ.
        இப்னு உமர்(ரலி)  "நான் முழு குர்ஆனையும் ஓதிவிட்டேன்",என்று கூறப்படுவதை வெறுப்பார்கள். மேலும் அவர்கள், "அதில் சில உயர்த்தப்பட்டுவிட்டது (எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது) அல்லது மறக்கச் செய்யப்பட்டுவிட்டது", என்று கூறினார்கள்.(இப்னு வஹ்ப் அவர்களது தஃப்ஸீர் அல் குர்ஆன் மின் ஜாமீ 3/19 ஹதீஸ் 24)
    அல்லாஹ்வும் அல் குர்ஆனில் இதே அடிப்படையில் கூறுவதை நாம் காணலாம்
            ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதைவிடச் சிறந்ததையோ, அதற்குச் சமமானதையோ தருவோம். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா? [அல்குர்ஆன் 2:106]
        எனவே இப்னு உமர்(ரலி) அவர்களது மேற்குறிபிட்ட ஹதீகளின் அடிப்படையில்,  "ذهب " என்ற சொல் "எடுத்துக்கொள்ளப்படுதல்" என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது உறுதியாகிறது.


            மேற்குறிபிட்ட செய்தியை அல் சூயூத்தி அவர்கள் நாஸிஹ் மன்சூஹ் குறித்த பகுதியில் கொண்டுவந்துள்ளார். குர்ஆனை பொறுத்தவரை "நாஸிஹ் மன்சூஹ் " என்ற சொல்லாடல் எது குறித்தது என்பது அனைவரும் அறிந்தது.  இந்த தலைப்பானது 462 முதல் 475 வரை உள்ள பக்கங்களை உள்ளடக்கியது. மேற்குறிபிட்ட செய்தி 470ம் பக்கத்தில் இடம்பெறுகிறது.



            மேலும் இந்த பகுதியில் இப்னு உமர்(ரலி) இது போன்று அறிவிக்கும் ஏனைய செய்திகளையும் பதிவிட்டுள்ளார். அதில் தப்ரானீ அவர்களது அல் கபீர் என்ற நூலில் 13141 ஹதீஸாக இடம் பெறும் இந்த செய்தியையும் கொண்டுவருகிறார்.

    இப்னு உமர்(ரலி) கூறியதாவது
            இருவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிய ஒரு சூராவை மனனமிட்டிருந்தார்கள். ஒர் இரவு அவர்கள் தொழுகையில் நின்ற போது , ஒரு எழுத்தை கூட ஓத இயலவில்லை. காலையில் இருவரும் அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களிடம் வந்து இது குறித்து கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ," அது ரத்து செய்யபட்டுவிட்டது.( ரத்து செய்யப்பட்டு, மறக்க செய்யபட்டுவிட்டது என்று தப்ரானீயில் இடம்பெற்றுள்ளது) எனவே அதை விட்டுவிடுங்கள் " என்று கூறிவிட்டார்கள். (அல் இத்கான் பக்கம் எண்: 472)

            மேற்குறிபிட்ட செய்தி அறிவிப்பாளர் தொடர் பலவீனமானது. ஆனால் சூயுத்தி அவர்கள் "ذهب " என்ற சொல்லை "எடுத்துக்கொள்ளப்படுதல்" என்ற பொருளில்தான் பதிந்துள்ளார்கள் என்பதை உறுதிப்பட நிறுவவே இந்த செய்தியை இங்கு கொண்டுவந்துள்ளோம்.

    எந்த தலைப்பின் கீழ் அபூ உபைத் காஸிம் இப்னு ஸல்லாம் அவர்கள் தனது ஃபதாயில் அல் குர்ஆன் என்ற நூலில் இந்த செய்தியை கொண்டுவதுள்ளார்கள்.

           அதுபோல அபூ உபைத் காஸிம் இப்னு ஸல்லாம் அவர்களும் இந்த செய்தியை "அல் குர்ஆனில் இறங்கிய பிறகு எடுத்துக்கொள்ளப்பட்டவையும், அவை அல் மஸாஹிஃப்பில் இடம்பெறாமையும் குறித்த பாடம்" என்ற தலைப்பின் கீழ் கொண்டுவந்துள்ளார்கள்.

        மேலும் இப்னு உமர்(ரலி) அவர்களை பொறுத்தவரையில் குர்ஆனில் யாரும் எந்த மாற்றமும் செய்ய இயலாது, அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டது என்பதுதான் அவர்களது நிலைபாடு. அதனை பின்வரும்செய்தி விளக்குகிறது.
    ﺣﺪﺛﻨﻲ ﻳﻌﻘﻮﺏ ﺑﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ ﻗﺎﻝ، ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﻋﻠﻴﺔ، ﻋﻦ ﺃﻳﻮﺏ، ﻋﻦ ﻧﺎﻓﻊ ﻗﺎﻝ: ﺃﻃﺎﻝ اﻟﺤﺠﺎﺝ اﻟﺨﻄﺒﺔ، ﻓﻮﺿﻊ اﺑﻦ ﻋﻤﺮ ﺭﺃﺳﻪ ﻓﻲ ﺣﺠﺮﻱ، ﻓﻘﺎﻝ اﻟﺤﺠﺎﺝ: ﺇﻥ اﺑﻦ اﻟﺰﺑﻴﺮ ﺑﺪﻝ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ! ﻓﻘﻌﺪ اﺑﻦ ﻋﻤﺮ ﻓﻘﺎﻝ: ﻻ ﺗﺴﺘﻄﻴﻊ ﺃﻧﺖ ﺫاﻙ ﻭﻻ اﺑﻦ اﻟﺰﺑﻴﺮ! ﻻ ﺗﺒﺪﻳﻞ ﻟﻜﻠﻤﺎﺕ اﻟﻠﻪ!
           நாஃபீ கூறியதாவது, " அல் ஹஜ்ஜாஜ் குத்பாவை நீட்டிவிட்டார். இப்னு உமர்(ரலி) என் மடிமீது தலையை சாய்த்துக்கொண்டார்கள். அப்போது ஹஜ்ஜாஜ் " இப்னு ஜுபைர் அல்லாஹ்வின் வேதத்தை மாற்றிவிட்டார்" என்று கூறினார். உடனே நிமிர்ந்து அமர்ந்த இப்னு உமர்(ரலி) அவர்கள், "நீயோ , இப்னு ஜுபைரோ அதை செய்ய இயலாது. அல்லாஹ்வின் வாக்கிற்கு எவ்வித மாற்றமும் இல்லை", என்று கூறினார்கள். (தஃப்ஸீர் தபரி 15/141, முஸ்தத்ரக் அல் ஹாகிம் 3301)
                அல் குர்ஆன் அல்லாஹ்வால் பாதுக்காக்கப்பட்டது (அல் குர்ஆன் 15:9) என்பதை உறுதியாக நம்பும் ஒருவர், அல்லாஹ் அளித்த வாக்குறுதியை யாராலும் மாற்ற முடியாது என்பதை நம்பும் ஒருவர்,  குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று நிச்சயம் கூறமாட்டார், என்பதை மேற்குறிபிட்ட செய்தி ஆணித்தரமாக உணர்த்துகிறது.

    كثير -  என்ற சொல்லின் பொருள்

            அடுத்ததாக كثير என்ற சொல்லை இஸ்லாமோஃபோபுகள் பெரும்பகுதி என்று மொழியாக்கம் செய்து குர்ஆனின் பெரும்பான்மையான பகுதிகள் காணாமல் போய்விட்டதாக பொய் கூறி திரிகின்றனர். கஸீர் என்ற சொல் எப்படி பயன்படுத்தப்படும் என்பதற்கு இரண்டு உதாரணங்கள் இங்கு முன்வைக்கப்படுகிறது
    ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ اﻟﻨﻀﺮ اﻷﺯﺩﻱ، ﺛﻨﺎ ﺧﺎﻟﺪ ﺑﻦ ﺧﺪاﺵ، ﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻌﺰﻳﺰ ﺑﻦ ﻣﺤﻤﺪ اﻟﺪﺭاﻭﺭﺩﻱ، ﻋﻦ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻤﺮﻭ، ﻋﻦ اﻟﺰﻫﺮﻱ، ﻋﻦ ﺧﺎﺭﺟﺔ ﺑﻦ ﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ، ﻋﻦ ﺃﺑﻴﻪ ﻗﺎﻝ: §ﻟﻤﺎ ﻛﺎﻥ ﻳﻮﻡ اﻟﻴﻤﺎﻣﺔ ﺃﺻﻴﺐ ﻣﻤﻦ ﻳﻘﺮﺃ اﻟﻘﺮﺁﻥ ﻧﺎﺱ ﻛﺜﻴﺮ
        ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறியதாவது: யமாமா யுத்த நாளில் குர்ஆன் காரிகள் உட்பட மக்களில் கணிசமானவர்கள் கொல்லப்பட்டனர்.(மஜ்மவுல் கபீர் 4843)
        மேற்குறிபிட்ட செய்தியில்  "كثير" - என்ற பதத்திற்கு மக்களில் பெரும்பான்மையினர் கொல்லப்பட்டுவிட்டார்கள், அதாவது மக்களில் 60% கொல்லப்பட்டுவிட்டார்கள், என்று பொருள் கொடுப்பார்களா??? அல்லது மக்களில் கணிசமானவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று பொருள் கொடுப்பார்களா???

    حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَعُودُنِي وَأَنَا بِمَكَّةَ، وَهْوَ يَكْرَهُ أَنْ يَمُوتَ بِالأَرْضِ الَّتِي هَاجَرَ مِنْهَا قَالَ "" يَرْحَمُ اللَّهُ ابْنَ عَفْرَاءَ "". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ "" لاَ "". قُلْتُ فَالشَّطْرُ قَالَ "" لاَ "". قُلْتُ الثُّلُثُ. قَالَ "" فَالثُّلُثُ، وَالثُّلُثُ كَثِيرٌ.......
    ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
                மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை நபி(ஸல்) அவர்கள் (தம் ஹஜ்ஜின் போது) நலம் விசாரித்து வந்தார்கள். நான் துறந்து வந்த பூமியில் (மக்காவில்) மரணிப்பதை நான் விரும்பவில்லை. (மக்காவிலேயே மரணித்துவிட்ட மற்றொருவரான) 'அஃப்ராவின் புதல்(வர் ஸஅத்பின் கவ்லா என்ப)வருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அவர்கள், 'வேண்டாம்' என்று கூறினார்கள். நான், 'அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அதற்கும், 'வேண்டாம்' என்றே பதிலளித்தார்கள். நான், 'மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா?)' என்று கேட்டேன். அவர்கள், 'மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். ......   (ஸஹீஹ் புகாரி : 2742)
            மேற்குறிபிட்ட செய்தியில் மூன்றிலொரு பகுதியே அதிகம் தான் என்று கூறுவது சரியா அல்லது மூன்றில் ஒரு பகுதி பெரும் பகுதி அல்லது 60% பகுதி என்று கூறுவார்களா???

        எனவே கஸீர் என்ற சொல், "அதிகமான பகுதி” , "பல:”,  "கணிசமான" போன்ற பொருளில் பயன்படுத்தும் சொல். இதற்கு பெரும்பான்மை பகுதி என்று மொழியாக்கம் செய்துவிட்டு குர் ஆனின் பெரும்பான்மை பகுதி காணாமல் போய்விட்டது என்று பித்தலாட்டம் செய்துள்ளனர் அன்ஸரிங் இஸ்லாம் வளைதளத்தினர்.......

            மேற்குறிப்பிட்ட வாதங்கள், ஆதாரங்கள், அரபு அகராதிகளின் குறிப்புக்கள், குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் குறிபிட்ட பதங்களின் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் சரியான மொழியாக்கம் இதுவே  
     இப்னு உமர்(ரலி) கூறியதாவது "உங்களில் ஒருவர் குர்ஆன் முழுவதையும் ஓதிவிட்டேன் என்று கூறவேண்டாம். அதை முழுவதுமாக அவர் அறிவாரா? குர்ஆனில் கணிசமானது எடுத்துக்கொள்ளப்பட்டு விட்டது. மாறாக அவர் " அதிலிருந்து தெரியவந்ததை எடுத்துக்கொண்டேன்" என்று சொல்லட்டும். (ஃபாதாயில் அல் குர்ஆன் 1/320).
                குர்ஆனின் பாதுகாப்பு குறித்து மோசடியாக மொழியாக்கம் செய்துதான் கேள்வி எழுப்ப வேண்டிய அவலநிலையே இஸ்லாமோஃபோபுகளுக்கு உள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும் இவர்களது இருட்டடிப்பு வேலைகளே குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை பறைசாட்ட போதிய சான்று.. அல்ஹம்துலில்லாஹ்....