பக்கங்கள் செல்ல

cross tab2

Sunday, January 14, 2018

எதிர்தொடர் 26: நபி(சல்) அவர்களது விண்ணுலகப் பயனம்

ஏக இறைவனின் திருப்பெயரால்


      நபி(ஸல்) அவர்களது விண்ணுலகப் பயனம் குறித்த விமர்சனத்தை இம்முறை கட்டுரையாளர் முன்வைத்துள்ளார்(1). நபி (சல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின் ஒரு பகுதியாக பைத்துல் முக்கத்தஸ் பள்ளிக்கு சென்றதாக., அதாவது சுலைமான் அலை அவர்களால் கட்டியெழுப்பப்பட்டு பல முறை புணரமைக்கப்பட்ட ஆலயத்திற்கு சென்றதாக இஸ்லாமிய ஆவணங்கள் கூறுகின்றன. அதை மறுக்க புகுந்த கட்டுரையாளர். ஜெருசலேத்தில் அந்த ஆலயம் இல்லை அது இடிக்கப்பட்டுவிட்டது என்பதை நிறுவுவதன் மூலம் அந்த ஆலயத்திற்கு நபி(சல்) அவர்கள் சென்றதாக கூறப்படும் குர்ஆனின் வசனங்களும், ஹதீஸ்களும் இட்டுகட்டப்பட்ட கட்டுகதைகள் என்று நிறுவ கட்டுரையாளர் முற்பட்டுள்ளார். ஆனால் இந்த கருத்தானது கட்டுரையாளர் இன்னும் வரலாறு குறித்து அப்டேட் ஆகவில்லை என்பதையே காட்டுகிறது. அதற்கான தக்க ஆவணங்களை சமர்ப்பித்து மேற்குறிப்பிட்ட செய்திகள் யாவும் உண்மையே என்பதை இன்ஷா அல்லாஹ் நிறுவுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

குற்றச்சாட்டு 1: நெஞ்சம் பிளந்து பாவத்தை நீக்க முடியுமா:



அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
                  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர்களைப் பிடித்துப் படுக்கவைத்து, அவர்களின் நெஞ்சைத் திறந்து இருதயத்தை வெளியிலெடுத்தார்கள். ஓர் (சதைத்) துண்டை வெளியில் எடுத்து, "இதுதான் உம்மிடமிருந்த ஷைத்தானுக்குரிய பங்கு" என்று ஜிப்ரீல் கூறினார். பிறகு ஒரு தங்கத் தாம்பூலத்தில் இதயத்தை வைத்து ஸம்ஸம் நீரால் அதைக் கழுவினார். பின்னர் முன்பு இருந்த இடத்தில் இதயத்தைப் பொருத்தினார். (நபியவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த) அந்தச் சிறுவர்கள் நபியவர்களின் செவிலித் தாயிடம் ஓடிச் சென்று "முஹம்மத் கொல்லப்பட்டுவிட்டார்" என்று கூறினர். குடும்பத்தார் நபியவர்களை நோக்கி வந்தபோது (அச்சத்தால்) நபியவர்கள் நிறம் மாறிக் காணப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

            நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் ஊசியால் தைத்த அந்த அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்.  (நூல்: முஸ்லிம் 261)

              இந்த செய்தியை நேரடியாக நபி(சல்) அவர்கள் அறிவிக்கவில்லை. அறிவிக்கும் நபித்தோழர் அனஸ்(ரலி) அவர்கள் யாரிடம் இருந்து அறிவிக்கிறார்கள் என்ற செய்தி இடம்பெறவில்லை. நபி(சல்) அவர்களது சிறுவயது சம்பவத்தை அனஸ்(ரலி) அவர்கள் அறிவிப்பது என்பது சாத்தியமற்றது. அனஸ்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்கள் மரணிக்கும் தருவாயில் அவர்களது வயது இருபதே. ஆக சிறு வயதில் நெஞ்சம் பிளக்கப்பட்டாதாகவும், சைத்தானின் பங்கு நீக்கப்பட்ட்தாகவும் கூறப்படும் செய்திகள் யாவும் அனஸ்(ரலி) அவர்களாலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக செய்தி ஏற்கும் தரத்தை அடையாதது. ஆக சிறுவயதில் இருந்து நபி(சல்) அவர்கள் இந்த கதையை கூறிவருவதாக கட்டுரையாளர் அப்பட்டமான கதையை கூறுகிறார்.


மொழிப்பெயர்ப்பில் இருட்டடிப்பு:

                முதலில் கட்டுரையாளரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் முன்பு இந்த கட்டுரையாளரின் மொழியறிவையும் ஆவணங்களை ஆய்வு செய்யும் லட்சனத்தையும் சற்று காண்போம். அவர் தனது குற்றச்சாட்டின் முதல் ஆவணத்தை ஆய்வு செய்த விதத்தை காண்போம்.



            இப்னு இஸ்ஹாகின் ஆவணத்தில் நபி(சல்) அவர்கள் இரவு பயணம் குறித்த செய்திகளை காணும் போது.....அதில் உம்மு ஹானி அவர்களது அவணத்தை பதிவு செய்துள்ளார். அதில் இடம்பெறும் “Umm (Hani), Abu Talib’s daughter, Said: “The Apostle went on no journey except while he was in my house- இந்த சொற்றொடரை மொழிபெயர்க்க புகுந்தவர்...அல்லாஹ்வின் தூதர் என் வீட்டிலிருந்ததைதவிர எந்த பயணத்திற்கும் செல்லவில்லை என்று மொழிபெயர்த்துள்ளார். ஆனால் அந்த சொற்றொடரில் இரண்டு “negative” வாக்கியங்கள் இடம்பெற்று “என் வீட்டில் இருக்கும் போதெ தவிர அல்லாஹ்வின் தூதர் இரவுப்பயணத்திற்கு செல்லவில்லை” என்று பொருள்படும். அதாவது “என் விட்டில் இருந்துதான் இரவுப்பயணத்திற்கு நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள் என்று பொருள்படும்.

          இந்த அளவில்தான் கட்டுரையாளரின் ஆய்வுத்திறன் உள்ளது. சரி நாம் கட்டுரைக்குள் செல்வோம்.


பைத்துல் முக்கதஸிற்கு நபி(சல்) அவர்கள் செல்லவில்லையா?

          இது குறித்து நமது கருத்துகளை வைப்பதற்கு முன்பு கட்டுரையாளர் என்ன கருத்துகளை முன்வைத்துள்ளார் என்பதை பார்த்துவிட்டு அதன் உண்மை தன்மையை அறிவோம்.

குற்றச்சாட்டு 2:

 
நமது பதில்:

                இஸ்லாமிய படையெடுப்பு குறித்த மேற்குறிபிட்ட ஆதாரம் எந்த நூலில் உள்ளது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் கட்டுரையாளர் குறிப்பிடவில்லை. முதலில் இந்த இடத்தில் ஒரு விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன். இஸ்லாமிய மரபில் அல்லது அரபிய மொழி வழக்கில் மஸ்ஜித் என்பது சஜ்தா செய்யும் இடம் என்ற பொருளை கொண்டதுதான். ஆக மஸ்ஜித் என்பது கட்டிடம் என்பதே கட்டுரையாளரின் தவறான புரிதல்தான். சரி அவரது பொருளிலேயே மஸ்ஜித் என்ற சொல்லை கையாண்டாலும் இந்த செய்திகளில் எந்த குறையும் இல்லை என்பதுதான் உண்மை.

 ஆவணம் 1:

இது குறித்து விளங்க நாம் தபரியின் வரலாற்றில் இருந்து காண்போம்.

              ஜெருசலேமும் அதன் முழுவதும் அஜ்னதைனை தவிர உமர்(ரலி) அவர்களால் கைப்பற்றப்பட்டது. அஜ்னதைன் அம்ர் பின் அல் ஆஸ்(ரலி) அவர்களாலும், சிசேரா முஆவியா(ரலி) அவர்களால் கைப்பற்றப்பட்டது. அபூ உஸ்மான் மற்றும் அபூ ஹாரித் அவ்ர்களது கூற்றுப்படி ஜெருசலேம் மற்றும் அதன் பகுதிகளும் ரபியுல் ஆகிர் மாதத்தில் ஹிஜ்ரி 16ல் கைபற்றப்பட்டது.

               சலாமாவின் அடிமையாகிய அபூமர்யம் அவர்களது கூற்றின்படி: நான் ஜெருசலேம் மற்றும் அதன் பகுதி உமர்(ரலி)யால் வெற்றி கொள்ளபட்டதை கண்ணுற்றேன். அவர் அல் ஜாபியாவில் இருந்து ஜெருசலேம் சென்றார். அவர் மஸ்ஜிதினுள் நுழைந்தார். பிறகு தாவூத்(அலை) அவர்களின் தொழுமிடத்திற்குள் நுழைந்தார்கள். தாவூத்(அலை) அவர்களின் துதியை கூறியவராக சஜ்தாவில் விழுந்தார்கள். நாங்களும் சஜ்தாவில் விழுந்தோம்.
               ரஜா பின் ஹைவா அவர்களது கூற்றின் படி – (நிகழ்வின் போது அங்கிருந்த மக்கள்): உமர்(ரலி0 அவர்கள் அல் ஜாபியாவில் இருந்து ஜெருசலேம் அடைந்த போது அவர்கள் மஸ்ஜிதின் அருகாமைக்கு வந்தார்கள். கஃப் அவர்களை எனக்காக தேடுங்கள். அவர்களுக்காக நுழைவாயில் திறக்கப்பட்டது. “ யா அல்லாஹ்! நான் உனக்கு விருப்பானவற்றில் தொண்டாற்ற காத்திருக்கிறேன் என்று கூறினார்கள். பிறகு தாவூத்(அலை) அவர்களின் தொழுமிடம் நோக்கி திரும்பினார்கள். அங்கு இரவுத்தொழுகையை நிறைவேற்றினார்கள்....................உமர்(ரலி) அவர்கள் மஸ்ஜிதின் முன் பகுதியை கிப்லாவாக ஆக்கினார். (இதுதான் மஸ்ஜித் அல் கிப்லி என்று மேற்குறிபிட்ட அல் அக்ஸா வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது) பிறகு அவரது தொழுமிடத்தில் இருந்து எழுந்து ஆலயத்தை எந்த இடத்தில் ரோமர்கள் கட்டிட சிதிலங்கள் மற்றும் விணானவற்றை கொண்டு புதைத்தார்களோ அந்த இடத்திற்கு சென்றார்கள்.............(பக்கம் 195-196 பாகம் 12, தாரிக் தபரி). 
     ஆக தபரியின் கூற்றை நாம் உற்று நோக்கினால் மஸ்ஜிதில் நுழைந்து தாவுத்(அலை) அவர்களின் தொழுமிடத்திற்குள் நுழைந்தார்கள் என்ற சொற்பிரயோகம் குறிப்பது ஜெருசலேம் கோயில் மலையின் 35 ஏகர் நிலப்பரப்பையுமே குறிக்கும்.  

ஆவணம் 2:

          இந்த வார்த்தை பிரோயகத்தை ஜோசப்பஸின் “JEWISH WARS” பாகம் 5ல் காணமுடியும். .ஜோசப்பஸின் கூற்றின் படி ஆலயம் என்பது சுற்றுச்சுவர், துறவிகள் மற்றும் தலைமை போதகர் ஆகியோருக்கான வசிப்பிடம், தொழுமிடங்கள், திராட்சை தோட்டங்கள், ஆசாரிப்புக் கூடம் என்று அனைத்தையும் உள்ளடக்கியது. இது குறித்த வர்ணனையை தெளிவாக விளக்கியுள்ளார் ஜோசப்பஸ். 

ஆவணம் 3:
 
         இதேபோன்று மிஸ்னாஹ்வை ஆய்வு செய்தால் ஆலய சுற்றுசுவர் உள்ளே இருக்கும் ஒவ்வொரு பகுதியுமே புனிதமானது என்பதை அறியமுடியும். அதனால்தான் இன்றும் மேற்குச்சுவரில் யூதர்கள் வணக்கத்தில் ஈடுபடுகின்றனர்.  

         ஆக மஸ்ஜித் அல் அக்ஸா என்பது 35 சதுர ஏக்கர் நிலத்தையும் ஒட்டுமொத்தமாக குறிக்கும். அதாவது இன்றிருக்கும் மக்கா பள்ளி எவ்வாறு அங்கிருக்கும் 3,56,000 சதுர அடியில் காபாவுடன் அமைந்த ஒட்டுமொத்த கட்டமைபும் புனிதமாக, மஸ்ஜித் அல் ஹரம் என்று முஸ்லிம்களால் அறியப்படுகிறதோ அதுபோல.  இதே கருத்தைத்தான் வரலாற்று ஆய்வாளர் ஓலெக் கிராப்பர் முன்வைக்கிறார்கள். ஆக கிபி 70ல் தரைமட்டமாக்கப்பட்டது என்பது எல்லாம். உள்ளே இருந்த தொழுமிடத்தைதான். அதைதான் இஸ்லாமிய ஆவணங்களும் கூறுகின்றன. ஆக நபி(சல்) அவர்கள் சென்ற போது அங்கே சுற்றுச்சுவரும் ஏனைய பகுதிகளும் இருக்கவே செய்தது.

ஆவணம் 4:
 
போர்டியக்ஸ் பயணியின் குறிப்பு

        அதாவது போர்டியக்ஸ் பயணியின் குறிப்பு கிபி 314 ல் இயற்றப்பட்டது. அதில் யூதர்கள் ஒவ்வொரு வருடமும் துளையிடப்பட்ட கல்லை தரிசித்து யூதர்கள் சுகந்தவர்கமிட்டுவந்தனர் என்ற குறிப்பு இடம்பெறுகிறது. மேலும் அந்த இடத்திலேயே எசெக்கியா யூதேயாவின் அரசனின் வீடும் அமைந்திருந்ததாக அந்த குறிப்பு கூறுகிறது.  ( P.No.22.,Itenarary from Bordeaux to Jerusalem)


            சுகந்த வர்கமிட நிச்சயம் ஆலயத்தின் மத்தியில் அமைந்த கல் தெரியும் படியே இருந்திருக்கும். இந்த கல்லை சுற்றித்தான் இன்றிருக்கும் பைத்துள் முக்கத்தஸில் இருக்கும் பள்ளி அமைந்துள்ளது. ஆக இதுபோன்ற ஏராளமான ஆவணங்கள் மஸ்ஜித் அல் அக்ஸாவின் 35 ஏகர் நிலப்பரப்பில் ஒரு இடத்தில் அமையபெற்ற தொழுமிடம் அழிக்கப்பட்டதையே காட்டுகிறது. எசேக்கியாவின் வீடு, இது குறித்து (ஜெரோம் கூறுகையில் இது ஆலயத்தின் எல்லை சுவற்றிற்குள் இருந்ததாக கூறுகிறார்.) சுற்றுச்சுவர்கள், துளையிடப்பட்ட கல் உள்ளிட்டவை நிலைத்திருந்தன.

             இவை அனைத்தும் பைத்துல் முக்கத்தஸின் ஒவ்வொரு காலத்திலும் அமையப்பட்டவை. அத்தகைய வரலாற்று (கிபி70 முதல் - கிபி 698 வரை) சம்பவங்களின் சிறு வரைபடம் இதோ,



மேற்குறிபிட்ட வரை படத்தை சற்று கவனித்தால் பல கேள்விகள் ஏழும் அதாவது. கிபி 70ல் மொத்த ஆலயமும் அழிக்கப்பட்டு இருந்தால்

1.எந்த இடத்தை நோக்கி யூதர்கள் தொழுது வந்தனர் ?

2.எந்த இடத்திற்கு செல்வதற்கு பலமுறை யூதர்களுக்கு தடையும் அனுமதியும் வழங்கப்பட்டது.

3.போர்டியக்ஸின் பயணியின் குறிப்பு கூறும் அந்த கல் அமைந்த பகுதி எது.? அதுவே அந்த இடத்திற்கான குறிப்பு இல்லையா???

4.பலமுறை யூதர்களோடு பரிசீலனை செய்து நபி(சல்) அவர்களிடம் வினாத்தொடுத்த குறைஷி காஃபிர்கள். ஏன் இது குறித்து அவர்களோடு பரிசீலிக்கவில்லை. இந்த சம்பவம் ஹிஜ்ரதிற்கு முன்பு நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆவணம் 5:

1927 நிலநடுக்கம் வெளிக்கொணர்ந்த ஆதாரங்கள்:

           1927ல் ஜெருசலேம் நகரத்தை ஒரு நிலநடுக்கம் தாக்கியது. இஸ்லாமிய வக்ஃப் , ஆலயத்தை செப்பனிடும் பணியில் ஈடுபட்டது. இந்த தருனத்தில் அன்றைய தொல்பொருள்துறை தலைவர் ராபர்ட் ஹேமில்டன் அவர்களால் பல கட்டட இடிபாடுகள் புகைப்படம் எடுக்கப்பட்டது. ஆலய குவிமாடத்தில் 2000 வருத்திற்கு முந்தைய சைப்ரஸ் மற்றும் கேதுரு மரத்தினால் ஆன உத்திரங்களும், பண்டைய காலத்தில் ஆலயத்தின் உள் நுழைய பயனபடுத்தப்பட்ட சுரங்கப்பாதை , இரண்டாம் ஆலயத்தின் தூண்கள் எனப்பல ஆதாரங்கள் கிடைக்கப்பட்டது. இவை அனைத்தும் இரண்டாம் ஆலயத்தின் பகுதிகள் என்றே கருத்தப்படுகிறது. 



ஆவணம் 6:

இன்றும் இருக்கும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆலயத்தின் மிச்சம்

         இன்றும் முதலாம் மற்றும் இரண்டாம் ஆலயத்தின் பல பகுதிகள் நிலைத்து நிற்கின்றன என்பது கட்டுரையாளர் ஏனோ அறியவில்லை. அவற்றுள் சில

1.தங்க வாயில்- (Golden Gate) 2.வாரன் வாயில் 3.மூன்று வாயில் 4.இரட்டை வாயில் 5.ஒற்றை வாயில் 6.ஹுல்தா வாயில்


         இப்படியாக பல கட்டிடங்கள் 1ம் மற்றும் 2ம் ஆலயத்தின் பகுதிகள் இன்றும் உள்ளன. அதே போல் புணரமைப்பு செய்யபட்டதின் பகுதிகளையும் இன்றும் காணமுடிகிறது.


         ஆக இந்த கட்டுரையாளர் வரலாற்றையும், மொழியமைப்பையும் குறித்து எந்த அறிவும் அற்றவர். வெறும் இஸ்லாமின் மீது காழ்புணர்ச்சியால் எழுந்த விமர்சனம்தான் இவரது கட்டுரை.

          இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.  இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு 24:1-2)

          என்ற பைபில் முன்னறிவிப்பினை உண்மைபடுத்த கிறித்தவ மிசனரிகள் உருவாக்கிய கட்டுகதையையே இங்கு பதிந்துள்ளார். என்பது நிறுபனமாகிறது.

குற்றச்சாட்டு 3: பூமியில் இரண்டாவதாக உருவாக்கப்பட்ட ஆலயம்:

நமது பதில்:


         நான் முன்பே கூறியது போல கட்டுரையாளரும் நாம் கூறும் கருத்தாகிய எந்த இடத்தில் தொழும் நேரத்தை அடைவோமோ அதுதான் நமக்கு தொழுமிடம். இதுதான் இவரது இந்த விமர்சனத்திற்கான பதிலாகும். ஆதம் அலை அவர்கள் முதலில் எந்த இடத்தில் ஆலயம் அமைத்து அல்லாஹ்வை தொழுதார்களோ அது மஸ்ஜித் அல் ஹரம், இரண்டாம் முறை ஆலயம் அமைத்து தொழுத இடம் மஸ்ஜித் அல் அக்ஸா அவ்வளவே. இங்கு கட்டிடம் இருக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. ஆக அவறிற்கு இடைப்பட்ட காலம் 40 ஆண்டுகள்.

        மேற்குறிபிட்ட அடிப்படையில் நோக்கும் போது அதே அடிப்படையில் நபி(சல்) அவர்களின் பின்வரும் ஹதீஸை காணும் போது இந்த செய்தியில் கட்டுரையாளர் கூறுவது போல எந்த கால முரண்பாடும் இல்லை.

அபூ தர்(ரலி) அறிவித்தார்

        நான் (நபி(ஸல்) அவர்களிடம்),'இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அவர்கள்,'அல் மஸ்ஜிதுல் ஹராம் - மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்" என்று பதிலளித்தார்கள். நான்,'பிறகு எது?' என்று கேட்டேன். அவர்கள்,'ஜெரூஸத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா" என்று பதிலளித்தார்கள். நான்,'அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது" என்று கேட்டேன். அவர்கள்,'நாற்பதாண்டுகள்" (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு,'நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது" என்று கூறினார்கள். (புஹாரி 3366.)


          மேலும் கட்டுரையாளர் கூறுவது அவரது அறியாமையையே காட்டுகிறது. உதாரணமாக யூதர்கள் மோசேயுடன் எகிப்தில் இருந்து வெளியேறிய பிறகு பலகாலம் சுற்றித்திரிந்த போது, மோசேக்கு கர்த்தர் தற்காலிக ஆலயம் அமைத்து அங்கு கர்த்தரை வழிபட வழிகாட்டியதாக பழைய ஏற்பாட்டில் காணமுடிகிறது

          நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக. (யாத்திராகமம் 25:9)

அதேபோன்று அந்த தற்காலிக ஆலயத்தை நகர்த்திக் கொண்டு செல்வதற்கான வழிகாட்டல்களும் அதில் உள்ளதை காணமுடியும்.

           பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே.(எண்ணாகமம்: 4:15)

          ஆக தற்காலிக ஆலயம் அமைத்து தொழுவது என்பது சுலைமான்(அலை) அவர்கள் ஜெருசலேமில் ஆலயம் அமைக்கும் வரை இருந்து வந்த பழக்கம் என்பதை பைபிளும் ஒத்துக்கொள்ளத்தான் செய்கிறது. இதை ஏனோ கட்டுரையாளர் காணத்தவறிவிட்டார்.

Reference:


1. The Jewish encyclopedia by Isidore Singer

2.The works of Flavius Josephus : Translated by William Wiston A.M
 

3.Itinerary from Bordeaux to Jerusalem. 'THE BORDEAUX PILGRIM' translated by AUBREY   STEWART, Esq., M.A.,


4.Tareekh Tabari translated by Franz Rosenthal

5.The Lost history of Jerusalem Compiled by Roger Waite

6.The history: the temple of Jerusalem by Jalaluddin Suyuti translated by Rev James Reynold

7.Futhuhusham: the Islamic conquest of Syria

8. The History of Palestine: A Study By Fawzy Al-Ghadiry

9.Jerusalem: the Topography economics and history from the earliest times to 70 AD by George Adam Smith

10. ISLAM A GUIDE FOR JEWS AND CHRISTIANS by F. E. Peters

11. THE MISHNAH: T R A N S L A T E D FROM THE HEBREW WITH INTRODUCTION
AND BRIEF EXPLANATORY N O T E S By HERBERT DANBY, D.D.

12. https://en.wikipedia.org/wiki/Al-Aqsa_Mosque



13.http://jcpa.org/secrets-under-the-al-aqsa-mosque-a-photographic-essay/

Notes :
                According to historian Oleg Grabar, "It is only at a relatively late date that the Muslim holy space in Jerusalem came to be referred to as al-haram al-sharif (literally, the Noble Sacred Precinct or Restricted Enclosure, often translated as the Noble Sanctuary and usually simply referred to as the Haram). While the exact early history of this term is unclear, we know that it only became common in Ottoman times, when administrative order was established over all matters pertaining to the organization of the Muslim faith and the supervision of the holy places, for which the Ottomans took financial and architectural responsibility. Before the Ottomans, the space was usually called al-masjid al-aqsa (the Farthest Mosque), a term now reserved to the covered congregational space on the Haram, or masjid bayt al-maqdis (Mosque of the Holy City) or, even, like Mecca's sanctuary, al-masjid al-haram."


Friday, January 12, 2018

எதிர்தொடர் 25: போர்களத்தில் வானவர்களும் அல்லாஹ்வின் அற்புதமும்

ஏக இறைவனின் திருப்பெயரால்


             சென்ற தொடரில் நிலவு பிளந்தது குறித்து கண்டோம். இத்தொடரில் போர்களங்களில் அல்லாஹ் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்த நமது எதிர் தரப்பினரின் விமர்சனங்களையும்(1) அது எவ்வளவு கண்மூடித்தனமானது என்பதையும் காண்போம் இன்ஷா அல்லாஹ். சென்ற தொடரில் நாம் அற்புதம் குறித்து ஓரளவிற்கு விளக்கியுள்ளதால் இந்த தொடரில் வீணான விளக்கங்கள் தேவைபடாது என்று எண்ணுகிறேன்.
  
   போர்க்களங்களில் வானவர்கள் இறக்கப்படுவதும், அவர்கள் போரிடுவதும் இறைவனின் விதிப்படிதான். இறைநம்பிக்கையாளரை எதிர்த்த எதிரிகள் யார்? அந்த கூட்டுபடையினரையும், அவர்களது நிலையையும், இறைநம்பிக்கையாளர்களின் நிலையையும் ஒப்பிட்டாலே வானவர்களை போர்க்களத்தில் இறக்கியதில் எந்த தவறும் இல்லை. இறைநம்பிகையை ஏற்றதால் மட்டும் ஒருவருக்கு எளிமையாக சொர்க்கம் கிடைக்கும் என்பதை இஸ்லாம் மறுக்கிறது. இந்த உலக வாழ்வை சோதனை களமாக அல்லாஹ் ஆக்கியுள்ளான். ஆக சோதனைக்கு பிறகு அல்லாஹ் தனது வல்லமையால் வெற்றியளிக்கிறான். அவ்வளவே. அல்லாஹ் நம்பிக்கை என்னும் கீற்றை இதன் மூலம் இறைநம்பிக்கையாளர்களுக்கு விதைக்கிறான்.

இதுபோக பல தொடர்களில் விடையளிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையே கட்டுரையாளர் முன்வைக்கிறார்.

1.நபி(சல்) அவர்களின் மனைவிமாரிடையே ஏற்பட்ட சச்சரவை தீர்க்கவா அல்லது மனித சமுதாயத்திற்கு வழிகாட்ட இறைசெய்தி இறங்கியதா? என்பதை இந்த தொடரில் காண்க 
http://theervaithedi.blogspot.in/2015/04/7.html

2.நபி(சல்) அவர்களை படைக்காவிட்டால் இந்த பிரபஞ்சத்தை படைத்திருக்க மாட்டேன் என்பதின் விளக்கம் இந்த தொடரில் உள்ளது 

3.உயிர் ரூஹ் குறித்து இஸ்லாமின் நிலைபாடு எந்த அளவிற்கு அறிவியல் பூர்வமானது, எந்த அளவிற்கு விளக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பின்வரும் தொடர்களில் காண்க

Sunday, July 16, 2017

உயிர்: 3.உயிர் என்றால் என்ன: இஸ்லாமிய பார்வை:

ஏக இறைவனின் திருப்பெயரால்


உயிர் என்றால் என்ன: இஸ்லாமிய பார்வை:
சென்ற தொடரில் கூறியவாறு நபி(சல்) அவர்கள் இஸ்லாமை முன்வைப்பதற்கு முன்பும் பின்பும் பல தத்துவவியலாளர்கள் உயிர் குறித்து பல கருத்துகளை முன்வைத்துள்ளனர். இஸ்லாம் உயிர் குறித்து என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம். 

உயிர் குறித்து குர் ஆன் கூறுவது என்ன?

    உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.(அல் குர்ஆன் 39:42)

மேற்கூறிய வசனம் அல்லாஹ் உயிர்களை இரண்டு தருவாயில் கைப்பற்றுவதாக கூறுகிறான். அதாவது தூங்கும் போதும், மரணத்தின் போதும் என்றும் கூறுகிறான். நாம் தூங்கும் போது நமது உயிர் கைப்பற்றப்படுகிறது ஆயினும் நம் உடலை சோதிக்கும் போது நமது உடல் உறுப்புக்களின் இயக்கமான மூச்சு, இதயதுடிப்பு போன்றவற்றை உணரவியலும். நமது உடலில் இருந்த உணர்வுநிலை இல்லாமல் போய்விடுகிறது. இந்த உணர்வுநிலைக்கும் பகுத்தறிவிற்கும் ஆதாரமாக அமைந்த ஆன்மாவான அந்த உயிர்தான் கைப்பற்றப்படுகிறது. மனித உடலில் இருக்கும் இதயதுடிப்பு உள்ளிட்டவை மற்றுமொரு ஆன்மாவால் கட்டுபடுத்தப்படுகிறது. இதை நாம் உடல் என்றே புரிந்து கொள்கிறோம். அதாவது ஒவ்வொரு மனித உடலிலும் இரண்டு ஆன்மாக்கள் இருக்கின்றன. ஒன்று நன்மை தீமையை பகுத்தறிந்து உடலிற்கு கட்டளையிடும் உயிர். இதை காலம் தோறும் உயிர், ஆன்மா,(SOUL, CONCIOUS MIND என்று தத்துவவியலாளர்களால் அழைக்கப்படுகிறது) மற்றொன்று உடல் உறுப்புகளின் செயல்பாட்டை உறுதி செய்யும் உயிர். அதாவது ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் செயல்பாட்டை உறுதி செய்யும் உயிர். இந்த உடலும் அதன் இயக்கத்தை உறுதி செய்யும் உயிர் என்ற இந்த மொத்த அமைப்பையும் உடல் (BODY) என்று தத்துவவியலாளர்கள் அழைப்பார்கள். இந்த இணைப்பு குறித்த விவாதத்தை MIND-BODY PROBLEM என்று தத்துவவியலாளர்கள் அழைப்பார்கள். இந்த இரண்டு உயிர்களும் மொத்தமாக கைப்பற்றப்படுவது மரணமாகும் .

மேலும் மேற்கூறிய இருமைத்துவத்தைதான் இஸ்லாம் முன்வைக்கிறது என்பதற்கு பின்வரும் வசனங்களை கவனிப்போம்.  
  
அல்லாஹ்வை எப்படி மறுக்கிறீர்கள்? உயிரற்று இருந்த உங்களுக்கு அவன் உயிரூட்டினான். பின்னர் உங்களை மரணமடையச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே கொண்டு வரப்படுவீர்கள்!(அல் குர்ஆன் 2:28)

    பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
                                                                                                                               (அல்குர்ஆன் 32:9)

      "எங்கள் இறைவா! எங்களை இரண்டு தடவை மரணிக்கச் செய்தாய். இரண்டு தடவை உயிர்ப்பித்தாய். எங்கள் குற்றங்களை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். தப்பிக்க வழி ஏதும் உள்ளதா?'' என்று அவர்கள் கேட்பார்கள்.
                                                                                                                            (அல்குர் ஆன் 40:11)

மேற்குறிய வசனம் நாம் உயிரற்று இருந்தோம் என்பது கருவின் ஆரம்ப நிலையை கூறுவதாகும். கருவின் ஆரம்ப நிலையில் செல்லின் உயிர் இருக்கத்தான் செய்யும். ஆனால் அவற்றிற்கு ஆன்மாவை பின்னாளில்தான் அல்லாஹ் வழங்குவதாக கூறுகிறான். அதை பின்வரும் நபிமொழி உறுதிசெய்கிறது.

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார். அவர் அதில் உயிரை ஊதுகிறார். (அதற்கு முன்பே) அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் நற்பேறற்றவனா அல்லது நற்பேறு பெற்றவனா ஆகிய நான்கு விஷயங்களை எழுதுமாறு அவர் பணிக்கப்படுகிறார்.
(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) நூல்: முஸ்லிம் 5145.)

ஆனால் எவ்வளவுதான் குர்ஆனும் நம்பகமான ஹதீஸ்களும் உடல் உயிர் குறித்து இருமைத்துவ வாதத்தை (DUALISM) முன்வைத்தாலும் உடல் மற்றும் உயிரின் இணைப்பு குறித்து (MIND BODY PROBLEM) நமக்கு எந்த விளக்கமும் இல்லை. இது குறித்து மனிதன் பல ஆயிரம் ஆண்டுகளாக விவாதித்து வந்தாலும் போதிய முடிவுகளை தற்போதுவரை எட்டவில்லை , என்றும் எட்டப்போவதுமில்லை என்பதுதான் நிதர்சன் உண்மையாகும் அதைத்தான் இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் பதிவிட்ட செய்தியானது பின்வரும் குர் ஆன் வசனத்தினால் எடுத்துரைக்கிறது.

   (முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக! (அல் குர் ஆன் 17:85)

வில்டர் பென்ஃபீல்டின் ஆய்வுகள்: ஒரு பொருள்முதல்வாதியின் சவக்குழி


வில்டர் பென்ஃபீல்ட் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுனர். வலிப்பு நோய் அறுவை சிகிச்சையின் தந்தை. மாண்ட் ரியல் நரம்பியல் கல்வி நிறுவனத்தின் முதல் தலைவர். புகழ் பெற்ற நரம்பியல் நிபுனர் நோபல் பரிசு பெற்ற செர்ரிங்க்டன் அவர்களது மாணவர். இன்று இருக்கும் நவீன நரம்பியலின் முன்னோடி. மூளை வரைபடத்தினை திரம்பட செய்வித்தவர் என்று பல புகழுக்கு சொந்தகாரர். 
ஒரு பொருள்முதல்வாதியாக தனது ஆய்வுகளை ஆரம்பம் செய்து முடிவுகளால் பொருள் இருமைத்துவத்தை முன்வைத்தவர். பொருள்முதல் வாதியான வில்டர் பென்ஃபீல்ட் எப்படி தனது ஆய்வுகளால் வீழ்த்தப்பட்டு இருமைத்துவத்தை ஏற்று கொண்டார் என்பதைதான் பின்வரும் பகுதியில் காணவிருக்கிறோம்.   

பென்ஃபீல்ட் வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை வழங்குவதில் வள்ளவர். அவ்வாறு சிகிச்சை அளிக்கும் போது அவர்களை விழிப்பு நிலையிலேயே அவர்களது மூளையின் பகுதிகளை ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாட்டோடு எவ்வாறு தொடர்புடையது என்பதை ஆய்வு செய்தபின் சேதம் அடைந்த பகுதியில் மட்டுமே திரம்பட அறுவை சிகிச்சையை மேற்கொள்வார். அதாவது 60Hz கொண்ட குறைந்த மின்னோட்டத்தை கொண்டு மூளையின் பகுதிகளை தூண்டும் போது குறிப்பிட்ட மூளையின் பகுதியுடன் தொடர்புடைய உடல் உறுப்பில் அசைவை காண்வியலும். இவ்வாறு ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வு முடிவுகளை பின்வரும் படத்தினால் விளக்கினார்.

Add caption


      இவ்வாறு தொடர் ஆய்வில் ஈடுபட்ட பென்ஃபீல்ட் மனிதனின் உயிர் அல்லது உள்ளம்* என்பது குறித்து பின்வரும் ஆய்வு முடிவுகளை முன்வைக்கிறார். அதாவது உள்ளம் என்று நாம் இன்று கூறிவரும் ஒன்றிற்கும் மூளையின் நரம்பியல் செயல்பாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. உள்ளம் என்பது தனித்த ஒன்று என்று குறிப்பிடுகிறார். மேலும் உள்ளத்தின் செயல்பாடான விழிப்பானது எந்த நரம்பியல் செய்ல்பாட்டையும் சார்ந்தில்லை எங்கிறார் பென்ஃபீல்ட். தனது ஆய்வுமுடிவுகளை தனது எண்ண மாற்றங்களையும் வில்டர் பென்ஃபீல்ட்  “The mystery of Mind: A critical study of Consciousness and Human Brain” என்ற புத்தகத்தின் வாயிலாக வெளியிட்டார்.

   *உயிரும் உள்ளமும் ஒன்றாய்தான் அல்லது உயிரின் பகுதியாய்தான் வரலாறு நெடுக காணவியலும்.[1] نفس -- நஃப்ஸ் என்ற அரபுச்சொல் உள்ளம் ஆன்மா இரண்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கிரேக்க சொல்லான Psyche[2] என்ற சொல் உள்ளம் ஆன்மா இரண்டையும் குறிக்கும்.


சிந்தனையும் முடிவுகளும் மூளையிலா பிறக்கிறது:

பல காலமாய் மனித சமுகத்தின் கூற்று ஒன்றையே கேள்விக்கு உடப்டுத்துகிறார் பென்ஃபீல்ட். அதாவது சிந்தனையும் முடிவெடுத்தலும் மூளையில் உதிக்கிறது என்று நாம் கூறிவரும் நெடுநாள் நம்பிக்கையையே மறுக்கப்பட்டுவிட்ட்து என்பதுதான் வில்டரின் ஆய்வு முடிவுகள் நமக்கு தரும் அதிர்ச்சியே என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது பென்ஃபீல்ட் உள்ளம் எவற்றை எல்லாம் செய்கிறது என்று நாம் நம்புவதை பட்டியலிடுகிறார்.


மேலும் நாம் அறியப்படும் உள்ளம் என்பதற்கும் மூளைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறார். அதாவது உள்ளமானது மூளையின் எந்த பகுதியிலும் இல்லை. அது தனித்து இயங்குவதாய் உள்ளது. மேலும் அந்த உள்ளம்தான் தான் இருக்கும் சூழலை அறிந்து அதை உணர்த்துவதாய் இருக்கிறது. அவர் நினைவில் இருக்கும் நோயாளியின் மூளையை மின்முனையினால் இயக்கி அதன் விளைவை விளக்குகிறார்.


         மேற்குறிப்பிடும்  முடிவு என்ன காட்டுகிறது. மூளையின் இயக்கத்திற்கும் “நான்” என்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. “நான்” என்று அறியப்படும் உள்ளமானது மூளை என்ற உறுப்பில் இல்லை. மூளையில் தான் “நான்” என்பது இருக்குமானால் ஏன் அந்த நோயாளி “தான்” செய்யவில்லை என்று கூறவேண்டும். மூளைதான் உள்ளத்தின் இருப்பிடமாக இருந்தால் எப்படி அந்த நோயாளியினால் தனது செயலை தானே தடுக்கவியலும். மின்முனையால் ஏற்படும் செயலை எதிர்க்கும் முடிவானது மூளையில் எட்டப்படவில்லை. மூளை என்பது வெறும் கருவிதான். அதைதான் பின்வரும் பகுதியில் பென்ஃபீல்ட் விளக்குகிறார்


     அதாவது இந்த இடத்தில்தான் ஒரு பொருள்முதல்வாதியின் நம்பிக்கை தகர்ந்ததை உணரமுடிகிறது. வில்டரின் ஆய்வுகள் எதுவும் உள்ளத்தின் செயல்பாடுகளை தோற்றுவிக்கவில்லை. மூளை என்பது ஒரு உறுப்பாக பதிவு செய்வதையும், ஆன்மாவுடன் உடலின் ஏனைய பாகத்தை இணைக்கும் ஒரு பாலமாகவும்தான் உள்ளதே தவிர, சிந்தனை முடிவெடுத்தல் சூழல் குறித்த விழிப்பு போன்ற எதையும் மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் வாசிப்பை தொடர்வோம்.


     அதாவது உள்ளமும் மூளையும் தனித்தவை. ஆனால் ஒன்றை கொண்டு மற்றொன்று இயங்குவதாய் இருக்கிறது. இந்த இணைப்பைதான் உயர்ந்த மூளை இயக்கம் என்று வில்டர் கூறுகிறார். மேலும் தனது இறுதி கருத்தை, பல வருட உழைப்பின் முடிவுகளை பின்வருமாறு கூறுகிறார்.


            ஆக மனித இருப்பு என்பது இரண்டு மூல கூறுகளால் ஆனது. ஒன்று நமது உடல் உறுப்புகளிலும் செல்களிலும் காணப்படும் ஆற்றல் அல்லது உயிர்.  மற்றோன்று அறியமுடியாத உள்ளத்தை இயக்கும் உயிர். இந்த உயிர்தான் முடிவெடுத்தல் போன்ற செயல்களை செய்கிறது. இந்த உயிர்தான் நமது உறக்கத்தில் காணாமல் போகிறது. இந்த உயிர்தான் நம்மை விழிப்பில் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் புரிந்துகொள்ளவும் வைக்கிறது. அதனால்தான் மூளையை கணிணி போன்றது என்றும் அதை நிரலாக்கம் செய்து இயக்கும் தனித்த சுதந்திரமான  புரிதலுடைய செய்லாண்மைதான் நமது ஆன்மா அல்லது உள்ளம் என்று கூறுகிறார் வில்டர். பொருள்முதல் வாதத்தை அடிப்படையாக கொண்டு நாத்திகர்கள் ஆன்மா குறித்து எடுத்துவைத்த அத்துனை வாதங்களுக்கும் வில்டரின் அறிவியல் ஆய்வுகள் சம்மட்டி அடி கொடுத்தது என்பதை மூஸ்லிம்களாகிய நாம் சொல்லி புரியவைக்கத்தேவை இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
  மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். (அல் குர்ஆன் 50:16. )

உயிர்: 2. வரலாற்றில் உயிர்:

ஏக இறைவனின் திருப்பெயரால்


வரலாற்றில் உயிர்:
உயிர் என்றால் என்ன?????? இந்த  கேள்வியை மானுட சமுதாயம் பல நூற்றாண்டுகளாய் எழுப்பி வந்துள்ளது. இந்த கேள்வியை எழுப்பாத சமுதாயங்களே இல்லை என்றே கூறலாம். உயிர் குறித்து பல நூற்றாண்டுகாய் மனித சமுதாயம் ஆய்வுகளையும் பல சித்தாந்தங்களையும் முன் வைத்து வந்துள்ளது. அவை குறித்த ஒரு சிறிய பார்வை இதோ......... 

தேல்ஸ்:(கிமு. 624-548) 
அனைத்து உயிர்களுக்கும் மூலம் நீர். ஈரப்பதமே அனைத்து உயிர்களுக்கும் ஊட்டசத்தாக அமைகிறது. ஈரப்பத்தத்தில் இருந்து வெப்பம் உணடாகிறது. அந்த வெப்பமே உயிரின் ஆதாரம் என்ற கருத்தை தேல்ஸ் முன்வைத்தார்

பித்தகோரஸ்:(கிமு 582-500)
அழுகும் குப்பைகளில் இருந்து விலங்கினங்கள், கடவுளின் உயிரில் இருந்து தோன்றின. ஒரு விலங்கின் வாழ்வானது இந்த ஆன்மாவும், மண்ணுடலும் இணைந்திருக்கும் காலமே ஆகும். இந்த மண்ணுடல் இறக்கும் போது இந்த அழிவற்ற ஆன்மாவானது வேறொரு மண்ணுடல் ( அது விலங்காகவோ, மனிதனாகவோ இருக்கலாம்) அதனுள் நுழைகிறது. இதுவே மண்ணில் தோன்றும் அனைத்து நன்மை தீமைக்கும் காரணம். மேலும் உயிரானது மூன்று மூலக்கூறுகளை உடையது. 
1. உள்ளுணர்வுப்பகுதி: இந்த பகுதிதான் மண்ணுடல் மற்றும் பவ்தீக தேவை குறித்து உணர்வதாய் அமைந்தது.
2. ஆன்மாப்பகுதி: இதுதான் அன்பு, கோபம் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடயது.
3. கல்வியறிவு: இந்த பகுதி இறைசட்டங்களை புரிந்து செய்படுத்தும் பகுதி.
பித்தகோரஸின் சிந்தனை பள்ளிகள் பிளேட்டோவின் சிந்தனை பள்ளிகளுக்குப் பிறகு காணமல் போனது.

ஹிராகிளைட்டஸ்:(கிமு 535 –  475 )
உலக ஆன்மா என்பது அக்னிதான். மூச்சின் மூலமாக இந்த உலக ஆன்மாவை மனிதன் எடுத்து கொண்டு உயிர்வாழ்கிறான். எங்கும் காணப்படும் அறிவே கடவுள். உணர்வு என்பதே எதோ ஒன்று வெளியில் இருந்து நமக்குள் பாய்வது என்று கூறினார். 

எம்படொகில்ஸ்:(கிமு  490 – 430)
இவர்தான் நிறை அழிவின்மை குறித்து முதன்முதலில் பேசியவர். முன்பே இருக்கும் பொருடகளோடு இணைவதாலும் பிரிவதாலுமே பிறப்பு மற்றும் இறப்பு ஏற்படுகிறது. நீர் நெருப்பு காற்று ஆகிவைதான் முன்பே இருக்கும் பொருட்களாகும். இரண்டு விசைகள் இவ்வுலகை இயக்குகின்றன. விலக்கு விசை, ஈர்ப்புவிசை. ஆன்மா தனித்தவை அல்ல. இறைமறுப்பையும், இன்பமே நோக்கம் என்ற கொள்கையின் அடிப்படையில் உயிர் குறித்த கருத்துகளையும் முன்வைத்தார்.
மேலும் மனோதத்துவவியலுக்கு அடிகோலிட்டவர். மனிதனின் குணங்கள் உடல் கூறு கலவையின் அடிப்படையில் அமைகின்றன என்று வாதிட்டார். தகுதியற்றவை வாழாது என்பதை கூட முன்வைத்தார். இன்றிருக்கும் பல பொருள்முதல்வாதிகளின் மூல கொள்கை இங்கிருந்துதான் ஆரம்பமானது என்று கூறலாம்.

டெமொகிரைடஸ்:(கிமு 460 – 370)
இவ்வுலகமானது எண்ணில்லா அணுக்களினால் ஆனவை. உயிரானது உலகின் ஒரு பகுதி. அது உயிர்ப்புடன் நகர்வதாய் இருந்தாலும் அதுவும் இவ்வுலகின் ஒரே வகையான அணுக்களினால்தான் ஆனது. இந்த அணுக்கள் யாவும் நெருப்பை போன்ற வெப்பத்துகள்களாகும். இவை உடலின் அனைத்து பகுதியிலும் ஊடுருவி உடலிற்கு உயிரை தருகிறது. இந்த உயிரை பல கூறுகளாக பிரித்து அவை உடலின் ஒவ்வொரு பகுதிக்கானது என்றும் கூறினார். அதாவது சிந்தனை என்பது மூளையின் உயிர், பார்வை கண்ணின் உயிர், கோபம் இதயத்தின் உயிர், ஆசை ஈரலின் உயிர் என்று குறிப்பிட்டார்.

ஹிப்பொகிரேடஸ்:((கிமு 460 – 370))
தத்துவவியலையும், மருத்துவத்தையும் இரு துறையாக முதன் முதலில் பிரித்தவர். உடல் என்பது அண்டத்தின் சிறிய மாதிரி. அண்டத்தில் நீர், நிலம், நெருப்பு மற்றும் காற்று போல் உடலில் ரத்தம்,  மஞ்சள் பித்தம், சளி மற்றும் கரும் பித்தம் அமைந்துள்ளது. இவையே மனிதனின் மனோநிலையை நிர்ணயிக்கின்றன. இதே போல் உடல் நோய்கள் அனைத்தும் இந்த நான்கு திரவங்களின் சமநிலையில் ஏற்படும் ஏற்றத்தாள்வுகளே என்ற கருத்தை முன்வைத்தார். இந்த அனைத்து திரவங்களின் ஊற்றுக்கண் மூளையே. ஆக அனைத்து நோயின் மூலமும் மூளையே. உள்ளத்தின் இருப்பிடம் மூளையே. மனநோய் என்பது இந்த உறுப்பில் ஏற்படும் பாதிப்பேயாகும். கரும்பித்தமே மனிதனின் தீய எண்ணங்களான பொறாமை, சந்தேகம், வெறுப்பு, பழியுணர்ச்சி போன்றவற்றிற்கு காரணமாகும் என்றும் குறிபிட்டார்.

சாக்ரட்டீஸ்:

        ஓர் இறைக்கொள்கையை முன்மொழிந்தார். டெல்ஃபியின் இறைவனை தனது ஒரே இறைவனாக எடுத்துக்கொண்டார். (அந்த கடவுள் அப்பலோதான் என்பது அறிஞர்களின் வாதம்) மற்ற கிரேக்க கடவுளர்களை முழுமையாக மறுத்துவிட்டார். இதனாலேயே நாத்தீக குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டது. இந்த கொள்கையினால் இளைஞர்களை வழிகெடுக்கிறார் என்று குற்றம்சுமத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.

உயிர் குறித்து இருமைதத்துவத்தை முன்வைத்தார். அதாவது உடலும் உயிரும் தனித்தவை என்ற தத்துவம். உடல் இயங்கக்கூடியது. உயிர் இயக்கக்கூடியது. உடல் அழியக்கூடியது. உயிர் அல்லது ஆன்மா அழிவில்லாதது. அதாவது உடல் இயங்கும் அற்றலை பெற்றிருக்கும். அந்த உடலை ஆன்மா இயக்கும் இதுதான் இருமைதத்துவம்

பிளாட்டோ:


பிளாட்டோ தனது “ரீபப்ளிக்” என்ற புத்தகத்தில் உயிர் குறித்து விளக்கியுள்ளார். இதற்கு முன்சென்ற தத்துவவியலாளர்கள் கூறிவந்த உடலின் அனைத்து பகுதியிலும் உயிர் என்ற பொருள் உடுறுவியுள்ளது, ஒவ்வொரு உறுப்பிற்கும் தனித்தனி ஆன்மா உள்ளது என்ற கருத்தியல்களை மறுத்தார். பிளாட்டோ முன்வைத்ததும் இருமைத்துவம் தான். அதாவது ஆன்மாவும் உடலும் தனித்தனியானவை.

       உயிர் என்பது மூன்று கூறுகளால் ஆனவை. 1. கடவுளிடம் இருந்து வந்த பகுத்தறியும் அழிவில்லா பகுதி, 2. உணர்வைத்தரும் ஆன்மா பகுதி 3.இவை இரண்டையும் இணைக்கும் பகுதி. ஆகிய மூன்று பகுதிகளை கொண்டதுதான் உயிர் என்ற கருத்தை முன்வைத்தார்.
ஆன்மாவின் புணர் ஜென்மம், வேறு ஜென்மம், ஒரு சரிரத்தில் இருந்து மற்றொரு சரிரத்திற்கு செல்லுதல் போன்ற கருத்தை முன்வைத்தார். ஆன்மாவானது மரணத்திற்கு பிறகு ஒரு இடைநிலையில் காக்க கூலி வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருக்கும். பல ஜென்மங்கள் எடுத்து தூய்மை அடைந்த ஆன்மாவே இறுதியில் சுவனத்தில் அதன் இடத்தை அடைந்து கொள்ளும்.
பகுத்தறியும் ஆன்மாவானது மூன்று நிலைகளாக காணப்படுகிறது:
1. உன்மையுடன் தொடர்புடைய அறிவாக 
2. கூட்டாக செயல்படும் போது கருத்தாக 
3. இல்லாதவை குறித்து அறியாமையாகவும் இருக்கிறது.


          அறிவாற்றல் என்பது ஒரு உணர்ச்சியே.  மேலும் ஆன்மா ஒரு வஸ்தாகும். ஆக நினைவாற்றலும் கற்பனையும் வஸ்துக்களே. பகுத்தறியும் உயிரானது சுவனத்திற்கு மிக நெருக்கமானது. இதுதான் மூளையை மையமாக கொண்டது. உணர்வைத்தரும் பகுத்தறியாத உயிரின் பகுதி தண்டுவடத்துடன் தொடர்புடையது. தண்டுவடமும் மூளையும் தான் உயிர் சக்தியை எடுத்து செல்கிறது என்ற கருத்தை முன்வைத்தார். மேலும் இணக்கும் உயிர் பகுதியானது இதயத்தில்தான் இருக்கிறது என்றும் கூறினார்.
ஒன்றை குறித்த எண்ணம் என்பது உள்ளத்தில் முற்பிறவியில் ஏற்பட்ட பதிவாகும். அவற்றை கல்வியின் மூலம் வெளிக்கொணர்கிறோம் என்று கூறினார்.

அரிஸ்டாடில்:
உடலின் செயல்பாடுதான் உயிர். உயிர் உடலில் இருந்து தனித்த பொருள் அல்ல. உடலில்லாமல் உயிர் இல்லை. உயிர் இல்லாமல் உடல் இல்லை என்ற கருத்தை முன்வைத்தார். உயிருக்கு தூய்மைபடுத்துதல் அல்லது பல பிறப்பிகளை அடைந்து தூய்மை பெறும் என்பன் போன்ற எந்த தேவையும் அற்றது. மேலும் உயிர் என்பது ஓர் இயக்கவிதி. அதுவே உயிர் வாழ்க்கையின் முதல் தோற்றுவாய். உயிரின் ஏனைய ஆற்றல்களான உணவு உட்கொள்ளுத, நகர்வு , சிந்தனை போன்றவையாவும் உயிர்வாழ்க்கையின் இரண்டாம் தோற்றுவாய். ஒரு உயிர் மரணத்திற்கு பிறகு வெறு ஓர் அசையும் உடலோடு கலந்து விடுகிறது. ஆனால் முற்பிறப்பின் கருத்தியல்களை அது கடத்திச் செல்வதில்லை. உடலின் உள்ளுறுப்புகள் என்பவை வெப்பத்தையும், குளிர்ச்சியையும் சமநிலையில் வைத்துகொள்ளும் இயந்திரங்களாகும். அனைத்து உணர்ச்சிகளும் மூளையுடன் தொடர்புடையவை அல்ல மாறாக இதயத்துடன் தொடர்புடையவை. மேலும் உயிரினங்களின் உயிரை மூன்று வகையாக வரையறுத்தார்.
1.தாவர உயிர்
2.விலங்கின் உயிர்
3.மனித உயிர். 

வரும் தொடரில் இஸ்லாமும் அறிவியலும் உயிர் குறித்து என்ன சொல்கிறது என்று காண்போம் இன்ஷா அல்லாஹ்.