http://theervaithedi.blogspot.in/2015/04/7.html
பக்கங்கள் செல்ல
1.மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்
2.அர்த்தமுள்ள கேள்விகள், அறிவு பூர்வமான பதில்கள்!
3.பறையோசை வேர்ட்பிரஸ்-ஆரம்பத்தை நோக்கி தொடருக்கான எதிர் தொடர்
4.உடைந்த சிலுவை
5.உயிர் ஓர் ஆய்வு
6.பரிணாமம் : உண்மையா ஊகமா
7.பரிணாமம் (பல எழுத்தாளர்கள்)
8.இஸ்லாமும் பால்யவிவாகமும்
9.குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கபட்டுள்ளது
10.புதிய ஏற்பாடும் குறைவில்லா குளறுபடிகளும்
1.உடைந்த சிலுவை-பாகம் 1:அறிமுகம்
2.உடைந்த சிலுவை-பாகம் 2: பழைய ஏற்பாடும் கிரேக்க செப்டகணும்
3.உடைந்த சிலுவை-பாகம் 3: பைபிலின் மூலங்கள் ஒரு பார்வை
4.உடைந்த சிலுவை-பாகம் 4: பழைய ஏற்பாடு ஆகமங்களின் எழுத்தரகள்
5.உடைந்த சிலுவை-பாகம் 5: புதிய ஏற்பாடு: ஒர் அறிமுகம்
6.உடைந்த சிலுவை-பாகம் 6: புதிய ஏற்பாடு ஆகமங்களின் எண்ணிக்கை
7.உடைந்த சிலுவை-பாகம் 7: மாற்கு சுவிஷேசம்
8.உடைந்த சிலுவை-பாகம் 8: மார் ஷபா கடிதம்
9.உடைந்த சிலுவை-பாகம் 9: ஏக இறைவனுக்கு வழிபட்ட முதலாம் நூற்றாண்டு முஸ்லிம்கள்
10.உடைந்த சிலுவை-பாகம் 10: போந்தியு பிலாத்தும் இரண்டு ஏசுவும் !!!!!!!!
11.உடைந்த சிலுவை-பாகம் 11: பழைய ஏடுகளில் ஏசுவின் சிலுவை மரணம் மறுக்கப்பட்டதா?
12.உடைந்த சிலுவை-பாகம் 12: கிறித்தவமும் பேய்வணக்கமும்
13.உடைந்த சிலுவை-பாகம் 13: இஸ்லாம் கூறும் யூத கிறித்தவ வேதம்
14.உடைந்த சிலுவை-பாகம் 14: மெசோரெடிக் ஏடுகளும் பழைய ஏற்பாடும்
15.உடைந்த சிலுவை-பாகம் 15: மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள புதிய ஏற்பாடு மூல கையெழுத்து பிரதிகள்
16.இஸ்லாமிய ஆவணங்கள் கூறும் இன்ஜீல்
17.புதிய ஏற்பாட்டின் மொழி குழப்பமும் அது ஏற்படுத்தும் சிக்கலும்
18.ஒத்தமை நற்செய்தி நூல்களும் அது குறித்த அனுமானக் குழப்பங்களும்
19.நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்
20.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மத்தேயுவின் படியான சுவிஷேசம்
21.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மாற்கின் படியான சுவிஷேசம்
22.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- லூக்காவின் படியான சுவிஷேசம்
23.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யோவானின் படியான சுவிஷேசம்
24.கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்
25.திருச்சபை பிதாக்களின் மேற்கோள்களும் காணாமல் போன தேவ வாக்குகளும்
26.பவுலின் கடிதங்களின் தொகுப்பும் குழப்பமும்
27.பவுலிய கடித தொகுப்பு குறித்த அனுமானமும் அது பலிதீர்த்த பவுலும்
28.பவுலிய கடிதங்களும் இடைச்செருகல்களும்
29.சர்ச்சைக்குரிய பவுலிய கடிதங்கள்
30.கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யாக்கோபின் நிருபம்
31.யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்
32.யாக்கோபின் நிருபமும் சிக்கலை உருவாக்கும் அதன் கிரேக்கமும்
Friday, January 12, 2018
எதிர்தொடர் 25: போர்களத்தில் வானவர்களும் அல்லாஹ்வின் அற்புதமும்
http://theervaithedi.blogspot.in/2015/04/7.html
Sunday, June 28, 2015
எதிர் தொடர் 16,17: வானவர்கள், மனிதர்கள், ஷைத்தான்கள்
அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்பட்ட செய்தி அல்ல. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்தி, ஒவ்வொரு பொருளையும் விளக்கிக் கூறுகிறது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.( அல் குர்ஆன் 12:111)
அல்லாஹ் நபிமார்களின் செய்திகளில் பல படிப்பினைகளை வைத்துள்ளான். ஆதம்(அலை) அவர்களது செய்தியும் அத்தகைய பாடத்தை உள்ளடக்கியது தான். அது குறித்து தனது திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.
படைப்பின் ரகசியம் குறித்து எப்படி வானவர்கள் அறிந்து கொண்டார்கள் :
வானவர்களுக்கு பகுத்தறிவு உண்டா?
"அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் .( அல் குர்ஆன் 21:26)
யார் இந்த இப்லீஸ்?
"ஆதமுக்குப் பணியுங்கள்!'' என்று நாம் வானவர்களுக்குக் கூறியபோது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.( அல் குர் ஆன் 2:34)
மேற்குறிப்பிட்ட வசனம் அல்லாஹ் வானவர்களை பணிய கூறியதாகவும், இப்லீஸ் ஏன் பணியவில்லை என்று அல்லாஹ் கேட்பது என்பது தவறான ஒன்று என்று கட்டுரையாளர் கூறுகிறார். பணிய கூறப்பட்டவர்கள் வான்வர்கள் , ஜின் இனத்தை சார்ந்த இப்லீஸிடம் ஏன் பணியவில்லை என்று கேட்பது முரண்பாடு இல்லையா? என்று கட்டுரையாளர் கேட்கிறார். இது அரபிய மொழியின் பேச்சு வழக்கில் உள்ள ஒரு முறையாகும். இதை தக்லிபா( ஒன்றை விட ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்) என்று கூறுவார்கள். இவ்வாறு இருகூட்டத்தினர் இருக்கையில் ஒரு கூட்டத்தினரை மட்டும் அழைத்து கட்டளை பிறப்பித்தால் இரண்டு கூட்டத்தினருக்கும் அந்த கட்டளை பொருந்தும் . இது குறித்து WILLIAM WRIGHT அரபிய இலக்கணம் குறித்த நூலில் விளக்கியுள்ளார். இருவரில் ஒருகூட்டத்தினரின் முக்கியத்துவம், எண்ணிக்கை போன்றவற்றை கருத்தில் கொண்டு இவ்வாறு பேச்சு வழக்கில் பயன்படுத்தும் முறைதான் தக்லிபா ஆகும். இது அனைத்து மொழிகளிலும் காணப்படும் ஒரு முறைதான். உதாரணமாக பெற்றோர்களும் காப்பாளர்களும் உள்ள ஒரு சபையில் "பெற்றோர்களே வருக வருக" என்று வரவேற்கிறார்கள் என்றால் அது காப்பாளர்களுக்கும் பொருந்தும். இதே போன்ற முறைதான் அந்த குர்ஆன் வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரபியர்கள் இன்னும் அதிக இடங்களில் இதை பயன்படுத்துகின்றனர் என்பதற்கு பல உதாரணங்களை WILLIAM WRIGHT தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஆனால் ஒன்று மட்டும் தெளிவு இவரது இந்த கேள்வி கூட இஸ்லாமிய எதிர்ப்பு வலைதளத்தில் இருந்து சுட்டதுதான். இன்னும் அவர்கள் தக்லிபா குறித்தும் பல கேள்விகளை பதிந்துள்ளனர். ஆனால் அவை அனைத்தும் DR. ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த உதாரணத்திற்கு பதிலாக உள்ளதே தவிர தக்லிபா என்ற முறையே அரபியில் இல்லை என்பதை நிறுபிப்பதாக இல்லை. அதனால் தான் WILLIAM WRIGHT அவர்களது நூலை REFERENCE ஆக குறிபிட்டுள்ளேன்.
இப்லீஸின் உள்ளத்தை அல்லாஹ்வால் அறிய முடியவில்லையா?
சஜ்தா என்பதின் பொருள் என்ன?
"ஆதமுக்குப் பணியுங்கள்!''¹¹ என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான். (அல் குர்ஆன்: 2:34.)
இந்த வசனத்தில் இடம்பெறும் சஜ்தா என்ற சொல்லிற்கு பணிதல் என்று பொருளாகும். பொதுவாக இஸ்லாம் தொழுகை குறித்து கூறுவதற்கு முன்பும் சஜ்தா என்ற சொல் அரபியில் இருக்கத்தான் செய்தது அதற்கு பணிதல் கட்டுப்படுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது (Refer : Lanes Lexicon vol 4 p.no 1307) . ஆக சஜ்தா என்பதற்கு தலைவணங்குதல் என்ற பொருள் மட்டும் அல்ல என்பதை அகராதி காட்டுகிறது. குர் ஆனும் இந்த வேர்சொல் அமைந்த இடங்களில் எல்லாம் இதே பொருளை தரவில்லை. உதாரணமாக அல்குர் ஆன் 22:18 வசனத்தை எடுத்துக்கொள்வோம்.
இந்த வசனத்தில் மலைகளும், மரங்களும் சஜ்தா செய்வதாக உள்ளது. இதற்கு பணிகின்றன என்ற பொருள்தான் தர முடியும். பணிதல் என்பது கட்டுப்படுதல் என்று 2: 34 வசனத்திற்கு பொருள் தந்தால் எந்த விதத்திலும் இஸ்லாமிய நம்பிக்கையை பாதிக்காது. இன்றும் வானவர்கள் மனிதனுக்கு பணிவிடை செய்வோராகத்தான் உள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு இட்ட கட்டளை மனிதனுக்கு அடிபணிய வேண்டும் என்பதுதான். அதன் விளைவாக இன்று மனிதன் தீய காரியங்களில் ஈடுபட்டாலும் அவனை பாதுகாக்கும் வானவர்கள் அவனை பாதுகாக்கின்றனர். ஆக இந்த கட்டுரையாளாரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இது விஷயத்தில் இவரது தவறான புரிதல் அல்லது காழ்புணர்ச்சியால் உருவானது என்பது தெளிவு.
அல்லாஹ் எதை ஆதமுக்கு கற்றுகொடுத்தான்
அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!'' என்று கேட்டான்.(அல் குர்ஆன் 2:31)
அல்லாஹ் ஆதம்(அலை) அவர்களுக்கு அனைத்தின் பெயரையும் கற்று கொடுத்ததாக மேலுள்ள வசனம் கூறுகிறது. ஆனால் அஃறினைகளின் பெயரை மற்றும் அல்லாஹ் கற்று கொடுத்தான் என்பது கதையாசிரியரின் இடைச்சொருகள். அடுத்ததாக ஆக அதம் (அலை) அவர்களுக்கு ஆட்சி என்றால் என்ன என்பதையும் கற்று கொடுத்துள்ளான், உயிருள்ளது எது உயிரற்றது எது என்று அனைத்தும் அல்லாஹ் கற்றுகொடுத்தான் என்றுதான் அந்த வசனத்திற்கு பொருள். அடுத்ததாக் யாரை ஆதம்(அலை) அவர்கள் ஆட்சி செய்ய விரும்பினார்கள் என்று ஒரு கேள்வியை கட்டுரையாளர் முன்வைக்கிறார்.
அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப் பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.) (அல் குர் ஆன் 20:120)
இவ்வசனத்தில் இடம் பெறும் وَمُلْكٍ لا يَبْلَى என்பதற்கு அழிவில்லா உடைமை அல்லது உரிமை என்பதுதான் பொருளாகும். இதில் இடம் பெறும் முல்க் - உடைமை ,உரிமை((Refer : Lanes Lexicon Supplement) என்று பொருள் உண்டு. நிரந்தரமாக நிலை பெற்று விடுவீர்கள் என்பதைதான் அந்த வசனம் குறிக்கிறது. இதோ அந்த கருத்தை தெளிவாக கூறும் வசனம்.
அவ்விருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த வெட்கத்தலங்களைப் பற்றிப் புரிய வைப்பதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். "இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை'' என்று கூறினான்.(அல் குர்ஆன் 7:20)
ஆக அல்லாஹ்வின் வாக்குறுதி பொய்யானது என்று ஷைத்தான் கூறுகிறான். அதைதான் அல்லாஹ் சூழ்ச்சி எங்கிறான். அடுத்ததாக ஷைத்தானை மன்னிக்க ஏனோ அல்லாஹ்விற்கு மனம் இல்லை என்று கட்டுரையாளர் புலம்புகிறார். ஷைத்தான் தலைகணம் கொண்டு தன்னை மன்னிக்க எந்த இடத்திலும் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோரவில்லை. ஆகவே அவன் மன்னிக்கப்படவில்லை.
அடுத்ததாக ஆதம்(அலை) அவர்கள் மன்னிப்பு கேட்க முஹம்மது(சல்) அவர்களது பெயரை பயன் படுத்தியதாக கூறப்படும் செய்திகள் ஹாக்கிம் பைஹகீ போன்ற நூல்களில் இடம் பெறுகிறது ஆயினும் இதில் இடம் பெறும் பல அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள். அப்துர் ரஹ்மான் பின் ஜைத் பின் அஸ்லாம், அப்துல்லாஹ் பின் முஸ்லிம் அல்ஃபிஹ்ரி போன்ற வர்கள் இடம் பெறுவதால் இது பலவீன்மான செய்தியாகும். அதே போன்று நபி(சல்) அவர்களை படைக்கவில்லை என்றால் இந்த உலகத்தை படைத்திருக்க மாட்டேன் என்ற செய்தியையும் குறிப்பிட்டு சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த செய்திகளும் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்தான். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அம்ர் இப்னு அவ்ஸ் அல் அன்ஷாரி என்ற அறிவிப்பாளர் இட்டுகட்ட கூடியவர் என்று தஹபி போன்ற ஹதீஸ்கலை வல்லுனர்களால் விமர்சிக்கப்பட்டவர்இதன் பிறகு கட்டுரையாளர் சில கேள்விகளை முன்வைத்துள்ளார். அது குறித்து விதி குறித்த அடுத்த தொடரில் காணலாம். இன்ஷா அல்லாஹ்....