பக்கங்கள் செல்ல

cross tab2

Friday, January 1, 2016

பன்றி இறைச்சி குறித்து நவீன மருத்துவ அறிவியலும், திருக்குர்ஆனும், பைபிளும் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்..!

பன்றி இறைச்சி குறித்து நவீன மருத்துவ அறிவியலும், திருக்குர்ஆனும், பைபிளும் என்ன கூறுகின்றது என்று பார்ப்போம்..!  (Posted by Brother Tink Fair ) 
பன்றி இறைச்சி குறித்து விக்கிபீடியா
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
2007 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகம் நடாத்திய ஆராய்ச்சியின் படி, பதனம் செய்த பன்றி இறைச்சியை உட்கொள்வதற்கும், நுரையீரலைத் தாக்கும் நோய்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. பாதுகாப்புப் பொருளான சோடியநைத்திரைற்று அதற்கு காரணமாகும். அதிக அளவில் பன்றி இறைச்சி போன்ற சிகப்பு மாமிசம் உண்பதால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சூழ்நிலை காணப்படுவதாக சொல்லப்படுகிறது. பன்றி இறைச்சி பொதுவாக உப்பு மற்றும் தெவிட்டிய கொழுப்பு அதிக அளவில் கொண்டதாகும். இவற்றை அதிக அளவில் உட்கொள்வதால் பல தரப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாக விக்கிபீடியா தெரிவிக்கின்றது.
மேலும் பன்றி இறைச்சி உண்பதால் ‘டேனியா சோலியம்’ -Taenia solium- (pork tapeworm) என்கின்ற புழு நமது உணவுக்குழாயின் அடிப்பகுதியில் நிரந்தரமாக தங்கி, அங்கே முட்டை இடுகின்றது.. இந்த முட்டைகள் இரத்த நாளங்களினூடாக பயணித்து இதயம், மூளை, கண், நுரையீரல் போன்ற உடல் உறுப்புக்களை செயலழிக்கச் செய்யக்கூடிய மிக ஆபத்தானவையென தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்ற மற்றொரு ஆபத்தான புழுவான Trichura Tichurasis என்கின்ற புழுவும் பன்றி இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் மனித உடலில் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. டேனியா சோலியமும், Trichura Tichurasisம் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தமான புழுவகைகளாகும்.
திருக்குர்ஆனின் ஒளியில் –
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
பன்றி இறைச்சி உண்பதை சர்வ வல்லமை பொருந்திய இறைவன் தடைசெய்துள்ளதாக இறைவேதம் திருக்குர்ஆன் பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.
“தாமாகச் செத்தவை, இரத்தம்,
பன்றியின் இறைச்சி , அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப் பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (ஏக இறைவனை) மறுப்போர், உங்கள் மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.”-
(அல்குர்ஆன் 5:3)
இறுதி நாளின் அடையாளமாக இறைத்தூதர் இயேசு – (அலை) அவர்கள் பன்றியைக் கொல்வார்கள் என்று முஹம்மது நபிகளார் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
“என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! மர்யமுடைய மகன் (ஈஸா) உங்களிடம் நேர்மையான (தீர்ப்பு சொல்லும்) நீதிபதியாக இறங்கவிருக்கிறார்! அவர் சிலுவையை முறிப்பார்! பன்றியைக் கொல்வார்! ஜிஸ்யாவை (வரியை) நீக்குவார்! (அந்நாளில்) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்”. – அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),
நூல்: ஸஹீஹுல் புஹாரி-2222
பைபிளின் ஒளியில் –
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
இறைவாக்கினர் மோசேயின் போதனைகளென நம்பப்படுகின்ற பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலான லேவியராகமம் அசுத்தமான மிருகமான பன்றியின் இறைச்சியை சாப்பிட வேண்டாமென்றும், பன்றியின் உடலைத் தொட வேண்டாமென்றும் கட்டளையிடுகின்றது.
“பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.” – லேவியராகமம் 11:7-8
பன்றியின் இறைச்சியை சாப்பிட வேண்டாமென்றும், பன்றியின் உடலைத் தொட வேண்டாமென்றும் இறைவாக்கினர் மோசேயின் போதனைகளென நம்பப்படுகின்ற மற்றொரு பழைய ஏற்பாட்டு நூலான உபாகமும் கட்டளையிடுகின்றது.
“பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.” – உபாகமம் 14:8
பன்றி இறைச்சியை சாப்பிடுபவர்களை மிகக் கடுமையாகத் தண்டிப்பேன் என்று கர்த்தர் எச்சரித்ததாக பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலான ஏசாயா குறிப்பிடுகின்றது.
“என்னைக் குறித்து விசாரித்துக்கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன். நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன். அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி, பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி,
பன்றியிறைச்சியைத் தின்று , தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து: நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள் முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள்.” – ஏசாயா 65:1-5
கோபம் கொண்ட கர்த்தர் பன்றி இறைச்சி சாப்பிடுகின்றவர்களை உக்கிரமாக, அக்கினி ஜுவாலையால் தண்டிப்பதாக இறைவாக்கினர் ஏசாயாவின் போதனைகளென நம்பப்படுகின்ற ஏசாயா ஆகமம் எச்சரிக்கின்றது.
“தங்களைத் தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர் பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும்,
பன்றியிறைச்சியையும் , அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
– ஏசாயா 66:17
நவீன கிறிஸ்த்தவத்தின் நிறுவனரான சவுல் என்கின்ற இயற்பெயரையுடைய பவுலின் மார்க்கத்தை ஏற்று, பன்றி இறைச்சி பைபிளின் பழைய ஏற்பாட்டு நூலில்தான் தடுக்கப்பட்டுள்ளது எனவே, பன்றி இறைச்சி தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உணவுதான் என்று வாதிடுகின்ற நவீன கிறிஸ்த்தவர்களுக்கு: –
‘வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது’ – என்று குறிப்பிடுவதன் மூலம் ‘நியாயப்பிரமாணத்தை – பழைய ஏற்பாட்டை ’- நிறைவேற்றவே வந்தேன் என்று இயேசு (அலை) அவர்கள் கூறியதாக இயேசுவின் போதனைகளென நம்பப்படுகின்ற பைபிளின் புதிய ஏற்பாட்டு நூலான மத்தேயு ஆகமம் குறிப்பிடுகின்றது.
“நியாயப்பிரமாணத்தையானாலும், தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
மத்தேயு 5:17,18
இயேசு , ஓரிறைக் கொள்கையை உரத்துச் சொன்னார். மக்களுக்கு நல்லதையே போதித்தார்..! அவர் போதித்தவைகளை முஸ்லிம்கள் பின்பற்றுகிறார்கள். முஸ்லிம்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை ஆனால் கிருஸ்த்துவர்கள் சாப்பிடுகிறார்கள் ! முஸ்லிம்கள் மது அருந்துவதில்லை..கிருஸ்த்துவர்கள் அருந்துகிறார்கள்! முஸ்லிம்களுக்குப் போல் இயேசுவிற்கும் விருத்தசேதம் நுனித்தோலில் 8ம் நாள் செய்யப்பட்டது ( இதயத்தில் நுனித்தோல் இல்லை என்பதைக் கவனித்துக் கொள்ளவும்) முஸ்லிம்கள் அனைவருமே விருத்தசேதம் செய்கிறார்கள். கிருஸ்தவர்கள் செய்வதில்லை..! இயேசு விபச்சாரத்தை நெருங்கவேயில்லை..அதேபோல் இஸ்லாமிய நாடுகளிலும் விபச்சாரம் குறைந்தேயுள்ளது..! ஆனால் உலகில் விபச்சாரம் மலிந்த 10 நாடுகள் வரிசையில் 9 கிருஸ்த்துவ நாடுகளே முன்னணியில் உள்ளது..!
இதில் என்ன விளங்குகிறது என்றால், இயேசு ஒரு முஸ்லிமாகவே வாழ்ந்தார். முஸ்லிம்கள் பின்பற்றுவதையே போதித்தார்..ஆனால் கிருஸ்த்துவர்களோ பவுலர்களாகவே இருக்கின்றனர். பவுலையே பின்பற்றுகின்றனர்..!
இயேசுவின் பல போதனைகளை பவுல் சிதைத்துள்ளார்..இதற்கான ஆதாரம் பைபிலில் நிறைய உண்டு!. விருத்தசேதத்தினை சிதைத்தவரும் பவுல் தான்..!
இயேசுவின் போதனையில் பன்றி இறைச்சி விலக்கலும் இருந்தது..! 

Thursday, December 31, 2015

"அல்குர்ஆன் உலகத்தையே மாற்றியது" உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் போலோ கொயல்கோ(Paulo Coelho)



"அல்குர்ஆன் உலகத்தையே மாற்றியது" உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்
போலோ கொயல்கோ(Paulo Coelho)
ççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççç
முகநூல் பக்கத்தில் இவர் பதிந்த இப்பதிவு 40,000 ற்கும் அதிகமான லைக்ஸும், (Like) 5000 ற்கு அதிகமான பகிர்வுகளையும் பெற்றுள்ளது.
இது சகல மதங்களையும் பொறுமையுடன் ஆராயக்கூடிய மக்களிடம் இவருக்கிருக்கும் செல்வாக்கை காட்டுகிறது.
இப்பதிவுக்கு ஹிபா என்ற பெண்மணி, "கலவரங்களுக்கும், கொலைகளுக்கும் இப்புத்தகம்தான் காரணம்" என்ற கருத்தை வெளியிட்ட பொழுது, இவ் எழுத்தாளர் கீழ்வருமாறு பதிலடி கொடுத்தார்.
"நீங்கள் கூறுவது உண்மையல்ல, நானும் ஒரு கிறிஸ்தவன்தான்.பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள்
வாழ் முனையில் தங்களுடைய மதத்தை வற்புறுத்தி பரப்பினார்கள்."
"தேவையென்றால் Cruzades என்ற சொல்லின் அர்த்தத்தை அகராதியில் பாருங்கள்." 
"பெண்களை சூனியக்காரர்கள் என்று கொலை செய்தோம். விஞ்ஞான உண்மைகளை மறுதளித்தோம். இதற்கு உதாரணம் கலிலியோவின் மரணமாகும்." (பூமி உருண்டை என்று கூறியதற்காக கொலை செய்யப்பட்டார்)
"ஆகவே மதத்தை குறை கூறாதீர்கள். கிறிஸ்தவத்தை மாற்றிய மக்களை குறை கூறுங்கள்."
இப்பெண்ணிற்கு கூறிய பதிலுக்கு 7277 லைக்ஸ் கிடைத்துள்ளது.

நன்றி : Meezan - தராசு


இரசாயண பொறியியலில் அற்புதமான கண்டுபிடிப்புக்காக அதிஉயர் விருது பெற்ற முஸ்லிம்பெண் விஞ்ஞானி.

இரசாயண பொறியியலில் அற்புதமான கண்டுபிடிப்புக்காக அதிஉயர் விருது பெற்ற முஸ்லிம்பெண் விஞ்ஞானி.
========================================================
சிங்கப்பூரை தலைமையகமாக கொண்ட IBN (Institute of Bio Engineering and Nano Technology) என்ற இரசாயண பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் ஐந்து இலட்சம் அமெரிக்க டாலர்களையும், விருதையும் பரிசாக வென்றுள்ளது.
இப்போட்டியில் இஸ்லாமிய கூட்டமைப்பில் வாழும் முஸ்லிம் விஞ்ஞானிகளும், உலகில் மற்றைய நாடுகளில் வாழும் முஸ்லிம் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டார்கள்.
இவரின் வெற்றியை பெற்றுத்தந்த கண்டுபிடிப்பானது மிகச்சிறிய நனோ உயிரியல் துகளாகும். Nano Particles) இது உடம்பில் நீரிழிவுநோயாளிகளுக்கு சீனியின் அளவை கணக்கிட்டு, எப்பொழுது இன்சுலின் உடம்புக்குள் செலுத்த வேண்டுமென்பதை நோயாளிக்கு அறியத்தரும். அப்பொழுது அவர்கள் இன்சுலினை வாயினூடாகவோ, நாசியினூடாகவோ உடம்பில் சேர்க்க முடியும். இன்சுலின் ஊசி குத்துவது தவிர்க்கப்படும்.
இது மனித குலத்திற்கு மிகவும் வரப்பிரசாதமாகுமென்று போட்டியைநடாத்தியவர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஈரானில் தெஹ்ரானில் உள்ள விஞ்ஞான ஆராச்சிகழகம் இப்போட்டியை நடாத்துகிறது. உலகிலுள்ள 600 இஸ்லாமிய விஞ்ஞானிகள் இப்போட்டியில் கலந்து கொண்டார்கள். நோபல் பரிசுக்கு சமமாக இஸ்லாமிய உலகில் இவ்விருது கருதப்படுகிறது. IBN நிறுவனம் இதுவரை 150 ற்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்காக, கண்டுபிடிப்பு உரிமைகளை (Patent Rights) கொண்டுள்ளது.
இதில் வெற்றிபெற்ற சிங்கப்பூரை சேர்ந்த இந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஓர் இஸ்லாமிய பெண்ணாவார். 49 வயதுடைய பேராசிரியர் ஜாக்கி இங்க், தாய்வானிலுள்ள தாய்பேயை பிறப்பிடமாக கொண்டவர். 30 வயதில் இஸ்லாத்தை தழுவிய இவர் சிங்கபூரிலும், தாய்வானிலும், அமெரிக்காவிலும் இரசாயண பொறியியலில் உயர் கல்வி கற்றார்.
1992 ல் உலகின் புகழ்பெற்ற அமெரிக்க பல்கலைக்கழகமான மஸசூஸெட் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் சேர்ந்து 2005 ம் ஆண்டுவரை இரசாயண பொறியியலில் பேராசிரியராக பணி புரிந்தார். அக்கால கட்டத்தில் ( 2003 ம் ஆண்டு) IBN என்ற ஆராச்சி நிறுவனத்தை உருவாக்கினார்.



Tuesday, December 29, 2015

புகழ்பெற்ற ஹார்ட்வர்ட் சட்டப் பல்கலைகழகத்தால் சிறந்த நீதிச் சட்டங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட வசனம்!

புகழ்பெற்ற ஹார்ட்வர்ட் சட்டப் பல்கழைகழகம், திருக்குரானின் வசனத்தை மிகச் சிறந்த நீதிச் சட்டங்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்துள்ளது.
மனித வரலாற்றில் வெளியான, நீதி தொடர்புடைய சட்டங்களில் சிறந்த ஒன்றாக, ஹார்ட்வர்ட் பல்கழைகழக நூலக நுழைவாயிலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.






தும்மலில் ஒளிந்துள்ள தத்துவம்!


இஸ்லாம் மதம் அல்ல, ஒரு முழுமையான வாழ்க்கைச் சட்டம் என்று அறிந்து இருப்பீர்கள்... அதே போல் தான் ஒவ்வரு மதத்தைப் பின்பற்றுபவர்களும் சொல்கின்றனர்...இது எந்த அளவிற்கு சரியானது என்பதை ஆராய இந்த பதிவு ஒரு அளவுகோல்.

இஸ்லாத்தைப் பொருத்தவரை, ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்துச் சட்ட திட்டங்களையும் தெளிவாக தந்து விடுகின்றது... வேறு எந்த ஒரு சட்டமும் தேவையில்லாத அளவிற்கு ஒரு முஸ்லிம் எந்தக் காலத்திலும், சூழலிலும் வாழ முடியும், வாழ வேண்டும். இதன் ஒரு பகுதியாக, "தும்மல்" எப்படி மக்களால் எதிர்கொள்ளப்படுகின்றது என்பதை ஆராயுங்கள்.

அமெரிக்காவில் ஒருவன் தும்மினால், தும்மியவன் எதுவும் சொல்லாவிட்டாலும், அதைக் கேட்பவர்கள் "God Bless You" (இறைவன் அருள் புரியட்டும்) என்று சொல்வான்.

தும்மல் ஏற்பாட்டால் உலகில் உள்ள மக்கள் அனைவரும் மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மொழி, கலாச்சாரத்தின் அடிப்படையில் அணுகுகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் தான், உலகம் முழுவதிலும் ஒரே மாதிரியான அணுகுமுறை.

முஸ்லிம் தும்மினால், "எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே" (அல்ஹம்துலில்லாஹ்) என்று சொல்வான்..அதைக் கேட்பவன், "உனக்கு இறைவன் அருள்புரியட்டும்" என்று சொல்வான். இது  தான் ஆண்டிப்பட்டியில் உள்ள முஸ்லிமும், அமெரிக்காவில் உள்ள முஸ்லிமும் செய்கின்றான். அதுவும் இன்று நேற்றல்ல...1400 வருடங்களுக்கும் மேல், இன்னும் கடைசி முஸ்லிம் இருக்கும் வரை. இது எப்படி சாத்தியம்?

உலகில் எவ்வளவு மிகப்  பெரிய தலைவராக இருந்தாலும் (அ) அரசாக இருந்தாலும் இது போன்ற காலத்தால் அழியாத, உலக மக்கள் அனைவருக்கம் ஏற்ற ஒரு பழக்கத்தை கொண்டு வரவே முடியாது. தும்மல் ஒரு சிறிய உதாரணம் மட்டுமே....இஸ்லாத்தின் எந்த சட்டத்தை வேண்டுமென்றாலும்  எடுத்துக்கொள்ளுங்கள்... universal principal..

சமூகத்தில் உயர்ந்த்தவனுக்கு  ஒரு கலாச்சாரம், தாழ்ந்தவனுக்கு ஒன்று  அல்ல என்று நிரூபிக்கும் நெறி முறைகள்..

இறைவனால் மட்டுமே முடியும்... இஸ்லாம் சான்று பகிகின்றது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!


குறிப்பு:"ரிதர்ந்கு" என்ற மொழி பேசும் மக்கள் மட்டும், தும்மியவனைப் பார்த்து, " நீ மூக்குத் தண்ணீரை வெளியாக்கிவிட்டாய்" என்று சொல்வார்களாம்.


 மருத்துவ ரீதியாக சரியான முறையில் தும்முவது எப்படி?



Ref:Responses_to_sneezing