பக்கங்கள் செல்ல

Thursday, December 31, 2015

"அல்குர்ஆன் உலகத்தையே மாற்றியது" உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் போலோ கொயல்கோ(Paulo Coelho)



"அல்குர்ஆன் உலகத்தையே மாற்றியது" உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்
போலோ கொயல்கோ(Paulo Coelho)
ççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççççç
முகநூல் பக்கத்தில் இவர் பதிந்த இப்பதிவு 40,000 ற்கும் அதிகமான லைக்ஸும், (Like) 5000 ற்கு அதிகமான பகிர்வுகளையும் பெற்றுள்ளது.
இது சகல மதங்களையும் பொறுமையுடன் ஆராயக்கூடிய மக்களிடம் இவருக்கிருக்கும் செல்வாக்கை காட்டுகிறது.
இப்பதிவுக்கு ஹிபா என்ற பெண்மணி, "கலவரங்களுக்கும், கொலைகளுக்கும் இப்புத்தகம்தான் காரணம்" என்ற கருத்தை வெளியிட்ட பொழுது, இவ் எழுத்தாளர் கீழ்வருமாறு பதிலடி கொடுத்தார்.
"நீங்கள் கூறுவது உண்மையல்ல, நானும் ஒரு கிறிஸ்தவன்தான்.பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள்
வாழ் முனையில் தங்களுடைய மதத்தை வற்புறுத்தி பரப்பினார்கள்."
"தேவையென்றால் Cruzades என்ற சொல்லின் அர்த்தத்தை அகராதியில் பாருங்கள்." 
"பெண்களை சூனியக்காரர்கள் என்று கொலை செய்தோம். விஞ்ஞான உண்மைகளை மறுதளித்தோம். இதற்கு உதாரணம் கலிலியோவின் மரணமாகும்." (பூமி உருண்டை என்று கூறியதற்காக கொலை செய்யப்பட்டார்)
"ஆகவே மதத்தை குறை கூறாதீர்கள். கிறிஸ்தவத்தை மாற்றிய மக்களை குறை கூறுங்கள்."
இப்பெண்ணிற்கு கூறிய பதிலுக்கு 7277 லைக்ஸ் கிடைத்துள்ளது.

நன்றி : Meezan - தராசு


No comments:

Post a Comment