பக்கங்கள் செல்ல

cross tab2

Wednesday, May 6, 2020

நபி(ஸல்), ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம்




             இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கிய பங்குவகிப்பவை பால்ய விவாகம் குறித்ததாகவே இருக்கிறது. இவை அனைத்தும் தனித்த கட்டுரைகளாக, சில நேரங்களில் இஸ்லாமிய அறிஞர்களின் மறுப்புக்கு மறுப்பாக காணப்படுகிறது. இவை அனைத்தையும் தொகுத்து அதன் சாரத்தை விளக்கி விமர்சனத்தை உடைப்பதே நமது இந்த தொடரின் நோக்கம் ஆகும். இவர்களின் இந்த விமர்சனங்கள் யாவும் இரண்டு மையபொருளில் அமைந்துள்ளன. 

1.நபி(ஸல்) அவர்களது சிறுவயது ஆயிஷா(ரலி)யுடனான திருமணம்.

2.பால்ய விவாகம் குறித்த இஸ்லாமின் நிலைப்பாடு.

ஆக மேற்குறிபிட்ட இரண்டு மையப்பொருள்களின் அடிப்படையில் நமது இந்த கட்டுரை தொடர்களை இன்ஷா அல்லாஹ் காண்போம்.

                    நபி(சல்) அவர்களது ஆயிஷா(ரலி) உடனான பால்ய விவாகம் குறித்து எழுப்பப்படும் விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கும் முன்பு நபி(ஸல்) அவர்களது இந்த திருமணம் குறித்து விளக்கமாக இடம்பெறும் செய்தியை காண்போம். இந்த திருமணம் குறித்து பல செய்திகள் ஹதீஸ்களில் தனிதனியாக துண்டுச்செய்திகளாக இடம் பெறுவதால் முஸ்னத் அஹ்மதின் இந்த செய்தி முழுமையாக ஒரே செய்தியாக அனைத்தையும் விளக்குவதால் இந்த செய்தியில் இருந்து நமது கட்டுரையை ஆரம்பம் செய்வோம். 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، وَيَحْيَى، قَالَا: لَمَّا هَلَكَتْ خَدِيجَةُ، جَاءَتْ خَوْلَةُ بِنْتُ حَكِيمٍ امْرَأَةُ عُثْمَانَ بْنِ مَظْعُونٍ، قَالَتْ: يَا رَسُولَ اللهِ أَلَا تَزَوَّجُ؟ قَالَ: " مَنْ؟ " قَالَتْ: إِنْ شِئْتَ بِكْرًا، وَإِنْ شِئْتَ ثَيِّبًا؟ قَالَ: " فَمَنِ الْبِكْرُ؟ " قَالَتْ: ابْنَةُ أَحَبِّ خَلْقِ اللهِ عَزَّ وَجَلَّ إِلَيْكَ عَائِشَةُ بِنْتُ أَبِي بَكْرٍ، قَالَ: " وَمَنِ الثَّيِّبُ؟ " قَالَتْ: سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ، آَمَنَتْ (3) بِكَ، وَاتَّبَعَتْكَ عَلَى مَا تَقُولُ "، قَالَ: " فَاذْهَبِي فَاذْكُرِيهِمَا عَلَيَّ "، فَدَخَلَتْ بَيْتَ أَبِي بَكْرٍ، فَقَالَتْ: يَا أُمَّ رُومَانَ مَاذَا أَدْخَلَ اللهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ مِنَ الْخَيْرِ وَالْبَرَكَةِ؟ قَالَتْ: وَمَا ذَاكَ؟ قَالَتْ: أَرْسَلَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْطُبُ عَلَيْهِ عَائِشَةَ، قَالَتْ: انْتَظِرِي أَبَا بَكْرٍ حَتَّى يَأْتِيَ، فَجَاءَ أَبُو بَكْرٍ، فَقَالَتْ: يَا أَبَا بَكْرٍ مَاذَا أَدْخَلَ اللهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ مِنَ الْخَيْرِ وَالْبَرَكَةِ؟ قَالَ: وَمَا ذَاكَ؟ قَالَتْ: أَرْسَلَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْطُبُ عَلَيْهِ عَائِشَةَ، قَالَ: وَهَلْ تَصْلُحُ لَهُ؟ إِنَّمَا هِيَ ابْنَةُ أَخِيهِ، فَرَجَعَتْ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ (1) ، قَالَ: " ارْجِعِي إِلَيْهِ فَقُولِي لَهُ: " أَنَا أَخُوكَ، وَأَنْتَ أَخِي فِي الْإِسْلَامِ، وَابْنَتُكَ تَصْلُحُ لِي "، فَرَجَعَتْ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ، قَالَ: انْتَظِرِي وَخَرَجَ، قَالَتْ أُمُّ رُومَانَ: إِنَّ مُطْعِمَ بْنَ عَدِيٍّ قَدْ كَانَ ذَكَرَهَا عَلَى ابْنِهِ، فَوَاللهِ مَا وَعَدَ وَعْدًا قَطُّ، فَأَخْلَفَهُ لِأَبِي بَكْرٍ، فَدَخَلَ أَبُو بَكْرٍ عَلَى مُطْعِمِ بْنِ عَدِيٍّ وَعِنْدَهُ امْرَأَتُهُ أُمُّ الْفَتَى، فَقَالَتْ يَا ابْنَ أَبِي قُحَافَةَ لَعَلَّكَ مُصْبِئُ (2) صَاحِبَنَا مُدْخِلُهُ فِي دِينِكَ الَّذِي أَنْتَ عَلَيْهِ، إِنْ تَزَوَّجَ إِلَيْكَ، قَالَ أَبُو بَكْرٍ لِلْمُطْعِمِ بْنِ عَدِيٍّ: أَقَوْلُ هَذِهِ تَقُولُ، قَالَ: إِنَّهَا تَقُولُ ذَلِكَ، فَخَرَجَ مِنْ عِنْدِهِ، وَقَدْ أَذْهَبَ اللهُ عَزَّ وَجَلَّ مَا كَانَ فِي نَفْسِهِ مِنْ عِدَتِهِ الَّتِي وَعَدَهُ فَرَجَعَ، فَقَالَ لِخَوْلَةَ: ادْعِي لِي رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَعَتْهُ فَزَوَّجَهَا إِيَّاهُ وَعَائِشَةُ يَوْمَئِذٍ بِنْتُ سِتِّ سِنِينَ، ثُمَّ خَرَجَتْ فَدَخَلَتْ عَلَى سَوْدَةَ بِنْتِ زَمْعَةَ، فَقَالَتْ: مَاذَا أَدْخَلَ اللهُ عَزَّ وَجَلَّ عَلَيْكِ مِنَ الْخَيْرِ وَالْبَرَكَةِ؟ قَالَتْ: مَا ذَاكَ؟ قَالَتْ: أَرْسَلَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْطُبُكِ عَلَيْهِ، قَالَتْ: وَدِدْتُ ادْخُلِي إِلَى أَبِي فَاذْكُرِي ذَاكَ لَهُ، وَكَانَ شَيْخًا كَبِيرًا، قَدْ أَدْرَكَتْهُ (3) السِّنُّ، قَدْ تَخَلَّفَ عَنِ الْحَجِّ، فَدَخَلَتْ عَلَيْهِ، فَحَيَّتْهُ (4) بِتَحِيَّةِ الْجَاهِلِيَّةِ، فَقَالَ: مَنْ هَذِهِ؟ فَقَالَتْ: خَوْلَةُ بِنْتُ حَكِيمٍ، قَالَ: فَمَا شَأْنُكِ؟ قَالَتْ: أَرْسَلَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ أَخْطُبُ عَلَيْهِ سَوْدَةَ، قَالَ: كُفْءٌ (1) كَرِيمٌ، مَاذَا تَقُولُ صَاحِبَتُكِ؟ قَالَتْ: تُحِبُّ ذَاكَ، قَالَ: ادْعُهَا لِي فَدَعَتْهَا، فَقَالَ (2) : أَيْ بُنَيَّةُ إِنَّ هَذِهِ تَزْعُمْ أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ قَدْ أَرْسَلَ يَخْطُبُكِ، وَهُوَ كُفْءٌ (3) كَرِيمٌ، أَتُحِبِّينَ أَنْ أُزَوِّجَكِ بِهِ، قَالَتْ: نَعَمْ، قَالَ (4) : ادْعِيهِ لِي، فَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِ فَزَوَّجَهَا إِيَّاهُ، فَجَاءَهَا أَخُوهَا عَبْدُ بْنُ زَمْعَةَ مِنَ الْحَجِّ، فَجَعَلَ يَحْثِي عَلَى (5) رَأْسِهِ التُّرَابَ، فَقَالَ بَعْدَ أَنْ أَسْلَمَ: لَعَمْرُكَ (6) إِنِّي لَسَفِيهٌ يَوْمَ أَحْثِي فِي رَأْسِي التُّرَابَ أَنْ تَزَوَّجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَوْدَةَ بِنْتَ زَمْعَةَ، قَالَتْ عَائِشَةُ: فَقَدِمْنَا الْمَدِينَةَ فَنَزَلْنَا فِي بَنِي الْحَارِثِ مِنَ (7) الْخَزْرَجِ فِي السُّنْحِ، قَالَتْ: فَجَاءَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ بَيْتَنَا وَاجْتَمَعَ إِلَيْهِ رِجَالٌ مِنَ الْأَنْصَارِ، وَنِسَاءٌ فَجَاءَتْ بِي (8) أُمِّي وَإِنِّي لَفِي (1) أُرْجُوحَةٍ بَيْنَ عَذْقَيْنِ تَرْجَحُ بِي، فَأَنْزَلَتْنِي مِنَ الْأُرْجُوحَةِ، وَلِي جُمَيْمَةٌ فَفَرَقَتْهَا، وَمَسَحَتْ وَجْهِي بِشَيْءٍ مِنْ مَاءٍ، ثُمَّ أَقْبَلَتْ تَقُودُنِي حَتَّى وَقَفَتْ بِي عِنْدَ الْبَابِ، وَإِنِّي لَأَنْهَجُ حَتَّى سَكَنَ مِنْ نَفْسِي، ثُمَّ دَخَلَتْ بِي فَإِذَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ عَلَى سَرِيرٍ فِي بَيْتِنَا، وَعِنْدَهُ رِجَالٌ وَنِسَاءٌ مِنَ الْأَنْصَارِ، فَأَجْلَسَتْنِي (2) فِي حِجْرِهِ، ثُمَّ قَالَتْ: هَؤُلَاءِ أَهْلُكِ فَبَارَكَ اللهُ لَكِ فِيهِمْ، وَبَارَكَ لَهُمْ فِيكِ، فَوَثَبَ الرِّجَالُ وَالنِّسَاءُ، فَخَرَجُوا وَبَنَى بِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِنَا، مَا نُحِرَتْ عَلَيَّ جَزُورٌ، وَلَا ذُبِحَتْ عَلَيَّ شَاةٌ، حَتَّى أَرْسَلَ إِلَيْنَا سَعْدُ بْنُ عُبَادَةَ بِجَفْنَةٍ كَانَ يُرْسِلُ بِهَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا دَارَ إِلَى نِسَائِهِ وَأَنَا يَوْمَئِذٍ بِنْتُ تِسْعِ سِنِينَ " (3) 
                 அபூ ஸலாமா அவர்கள் கூறியதாவது: கதீஜா ரலி இறந்தபின் ஹவ்லா பின்த் (ரலி) உஸ்மான் (ரலி) அவர்களது மனைவி அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் “நீங்கள் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “யாரை” என்று கேட்டார்கள். அதற்கு ஹவ்லா(ரலி) அவர்கள் “நீங்கள் கண்ணி பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறீர்களா? அல்லது விதவையை திருமணம் செய்ய விரும்புகிறீர்களா? என்று வினவினார்கள். அதற்கு நபி(சல்) அவர்கள் :கண்ணிப்பெண் யார்? அதற்கு (ஹவ்லா(ரலி)) அவர்கள் “இவ்வுலகில் உங்களுக்கு பிரியமானவரான அபூபக்ர்(ரலி) அவர்களது மகள் ஆயிஷா(ரலி).” என்று பதிலளித்தார்கள். நபி(சல்) அவர்கள் விதவை யார்?” என வினவினார்கள். அதற்கு (ஹவ்லா(ரலி)) அவர்கள் “சவ்தா பிந்த் சம்ஆ(ரலி); அவர்கள் உங்களை நம்பிக்கை கொண்டு உங்களை பின்பற்றினார்கள் ” என்று பதிலளித்தார்கள்.. நபி(சல்) அவ்ர்கள் “ அப்படியானால் அவர்களிடம் என்னைபற்றி கூறுங்கள்” என்று கூறினார்கள்.  அதனால் அபூபகர்(ரலி) அவர்களது வீட்டிற்கு சென்று “உம்மு ரூமானே! என்ன ஒரு சிறந்த நன்மையையும், அருளையும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான்! அதற்கு உம்மு ரூமான் அவர்கள் “என்ன அது?” என்று வினவினார்கள். அதற்கு ஹவ்லா(ரலி) அவர்கள் “ நபி(சல்) அவர்கள் ஆயிஷாவை பெண் கேட்டு அனுப்பியுள்ளார்கள்” என்று கூறினார்கள். அதற்கு உம்மூ ரூமான் அவர்கள் “அபூபக்ர்(ரலி) வரட்டும். பொறுத்திருங்கள்” என்று கூறினார்கள். அபூபக்ர்(ரலி) அவர்கள் வந்ததும், ஹவ்லா(ரலி) அவர்கள்” அபூபக்ரே! என்ன ஒரு சிறந்த நன்மையையும், அருளையும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான்!” என்று கூறினார்கள் . அதற்கு அபூபக்ர்(ரலி) அவர்கள் : “என்ன அது?” என்று வினவினார்கள். அதற்கு ஹவ்லா(ரலி) அவர்கள் “ நபி(சல்) அவர்கள் ஆயிஷாவை பெண் கேட்டு அனுப்பியுள்ளார்கள்” என்று கூறினார்கள். அதற்கு அபூபகர்(ரலி) அவர்கள் “அவருக்கு அவள் ஏற்றவளா? அவள் அவரது சகோதரனின் மகள் ஆயிறே?” என்று வினவினார்கள். பின்பு ஹவ்லா(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களிடம் சென்று இது குறித்து கூறினார்கள்” அதற்கு நபி)சல்) அவர்கள்,” நீங்கள் திருப்பிச்சென்று நீங்களும் நானும் இஸ்லாமிய கொள்கை சகோதரர்கள் தான். மேலும் உங்களது மகள் எனக்கு ஏற்றவள்தான் என்று கூறுவீராக” என்று கூறினார்கள். ஹவ்லா(ரலி) திரும்பிச் சென்று அபூபகர்(ரலி) அவர்களிடம் அதை கூறினார்கள். அதற்கு அபூபக்ர்(ரலி)” சற்று பொறுங்கள்” என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்கள். உம்மூ ரூமான்(ரலி) கூறினார்கள், “முத்யீம் பின் அதீ அவர்கள் தனது மகனிற்கு அவளை நிச்சயித்து இருந்தார்கள். அல்லாஹ்வின் மீதனையாக அபூபகர்(ரலி) வாக்குறுதி கொடுத்துவிட்டு மீறமாட்டார்கள்” என்று கூறினார்கள். அபூபக்ர்(ரலி) அவர்கள் முத்யீம் பின் அதீ அவரது மனைவியுடன் இருக்கும் போது சென்றார்கள். அப்போது அவர்து மனைவி, உம்மு அல் சபி “ உங்களது மகளிற்கு எனது மகனை திருமணம செய்தால் அவனையும் உங்களது மார்கத்திற்கு மாற்றி அவனையும் ஸாபியீயாக மாற்றிவிடுவீர்கள்” என்று கூறினார்கள். அபுபகர்(ரலி) முத்யீம் அவர்களை பார்த்து, “இதற்கு என்ன பொருள்” என்று கேட்டார்கள். அதற்கு முத்யீம் அவர்களும் அதையே கூறிவிட்டார்கள். அபூபக்ர(ரலி) அவர்கள் தனது சத்தியத்தை திரும்பப்பெறும் பாதையை அல்லாஹ் எளிமையாக்கிவிட்டான் என்று எண்ணிக்கொண்டார்கள். எனவே அவர்கள் வீட்டிற்கு திரும்பி "அல்லாஹ்வின் தூதரை அழைத்து வாருங்கள்” என்று ஹவ்லா(ரலி)விடம் கூறினார்கள். ஹவ்லா(ரலி) அழைத்துவ்ந்த்தார்கள். ஆயிஷா(ரலி)வை அவர்களது ஆறாம் வயதில் நபி(சல்) அவர்களுக்கு திருமணம் முடித்து கொடுத்தார்கள். பிறகு(ஹவ்லா(ரலி) சவ்தா பிந்த் ஜம்ஆ(ரலி) அவர்களிடம் சென்று, “என்ன ஒரு சிறந்த நன்மையையும், அருளையும் அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான்! என்று கூறினார்கள். அதற்கு(ஸவ்தா(ரலி)) அவர்கள், “அது என்ன?”, என்று வினவினார்கள். அதற்கு ஹவ்லா(ரலி) அவர்கள் “ நபி(சல்) அவர்கள் உங்களி பெண் கேட்டு அனுப்பியுள்ளார்கள்” என்று கூறினார்கள். அதற்கு (ஸவ்தா(ரலி)) அவர்கள் “நீங்கள் எனது தந்தையிடம் சென்று இதை கூற விரும்புகிறன்” என்று குறிபிட்டார்கள். அவரது வயது அவரை மிகவும் முதிர்ந்த பெரியவராய் காட்டியது. அவர் அப்போது அவர் ஹஜ்ஜிற்கு செல்ல வில்லை. அவரிடம் சென்று அறியாமை கால வழக்கப்படி முகமன் கூறினார்கள். அவர் “யாரது?” என்று கேட்டார். அதற்கு “ஹவ்லா பின்த் ஹாக்கிம்” என்று கூறினார்கள். “என்ன விசயமாக வந்திருக்கிறீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு ஹவ்லா(ரலி) “ஸவ்தாவை பெண் பேசிவர முஹம்மது பின் அப்துல்லாஹ் என்னை அனுப்பியுள்ளார்கள்” என்று கூறினார்கள். அதற்கு “சரியான தேர்வுதான்”, என்று கூறிவிட்டு “உனது தோழி என்ன கூறினார்” என்று வினவினார். அதற்கு “உங்களது விருப்பம்” என்று கூறிவிட்டார் என்று கூறினார். அவரை என்னிடம் வரச்சொல்லுங்கள் என்றதும் (ஹவ்லா) அழைத்தார்கள். “உன்னுடைய நிலை என்ன? முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப் அவர்கள் உன்னை பெண் கேட்டுள்ளார்கள்; அவர் சரியான தேர்வு, அவருக்கு உன்னை மனம் முடிக்கலாம் என்று விரும்புகிறேன்” என்று கூறினார்கள். அதற்கு “சரி” என்று (ஸவ்தா(ரலி)) அவர்கள் பதிலளித்தார்கள். “அவரை என்னிடம் அழைத்துவாருங்கள்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் அவர்களிடம் வந்து, அவருக்கு முகமன் கூறினார்கள். அவரை திருமணம் முடித்தார்கள். பிறகு ஹஜ்ஜில் இருந்து திரும்பிய அப்த் இப்னு ஜம்ஆ, அவரின் (ஸவ்தா(ரலி) சகோதரர் இதனை அறிந்து தனது தலையில் மண்ணை வாரி இறைத்துக்கொண்டார். அவர் இஸ்லாத்தை ஏற்ற பின் “அன்றைய நாளில் நபி(சல்) அவர்கள் சவ்தா பிந்த் ஜம்ஆவை திருமணம் செய்ததற்காக மடமையினால் எனது தலையில் மண்ணை வாரி இறைத்துக்கொண்டேன்” என்று கூறினார். ஆயிஷா(ரலி) கூறியதாவது, “பிறகு நாங்கள் மதீனாவிற்கு சென்ற பிறகு அல் ஜன்ஹ் (எனும் இடத்தில்) கஸ்ரஜின் பனீ அல் ஹாரீதாவின் குலத்தாரோடு தங்கவைக்கப்பட்டோம். மேலும் கூறினார்கள்: பிறகு நபி(சல்) அவர்கள் எங்களது வீட்டில் நுழைந்தார்கள். அங்கு அன்சாரிகளும் கூடினார்கள். மேலும் எனது தாயார், நானும் என் தோழிகள் சிலரும் இரண்டு மரங்களுக்கு இடையே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது எங்களிடம் வந்தார். என்னை ஊஞ்சலில் இருந்து அழைத்துச்சென்றார்கள். முடியை இரண்டாக வகுடெடுத்து சீவினார்கள். பிறகு என் முகத்தை நீரினால் கழுவினார்கள். பிறகு என்னை கதவின் அருகில் அழைத்துச்சென்றார்கள். எனக்கு மூச்சு வாங்கியது , அமைதி அடையும் வரை அங்கேயே நின்றிருந்தேன். பிறகு என்னை உள்ளே அழைத்து சென்றார்கள். அங்கு நபி(சல்) அவர்கள் எங்களது வீட்டின் கட்டிலில் அமர்ந்து இருந்தார்கள்., மேலும் அவர்களுடன் அன்சாரி ஆண்களும் பெண்களும் இருந்தார்கள். அவர்கள் என்னை எனது இருக்கையில் அமர்த்தினார்கள். அதன் பிறகு (எனது தாயார்) “இவர்கள்தான் உனது குடும்பத்தினர். அல்லாஹ் உன்னை அவர்களுக்கு அருளாகவும்,அவர்களை உனக்கு அருளாகவும் ஆக்குவானாக” என்று கூறினார்கள், பிறகு அங்கிருந்த அன்சாரி ஆண்களும் பெண்களும் எழுந்து சென்றுவிட்டனர். எங்களுடைய இந்த வீட்டில்தான நபி(சல்) அவர்கள் என்னோடு வீடு கூடினார்கள். ஒட்டகமோ ஆடோ எனக்காக அறுக்கப்படவில்லை. பிறகு சஃத் பின் உபாதா எங்களுக்கு ஒரு உணவுதட்டை அனுப்பிவைத்தார்கள், என்றும் நபி(சல்) அவர்கள் மனைவியர்களுடன் இருக்கும் போது அனுப்பிவைப்பார்களே அது போல. அப்போது எனக்கு வயது ஒன்பது ஆகும்.( முஸ்னது அஹ்மத் 25769)
மேற்குறிபிட்ட செய்தியை கவனித்தோம் என்றால் பின்வரும் புரிதல்களை நாம் பெறமுடியும்.

1.நபி(சல்) ஆயிஷா(ரலி) அவர்களது பால்ய திருமணம் என்பது அவர்கள் மட்டுமே செய்த ஒரு திருமணம் அல்ல. அது முன்பே இருந்த நடைமுறைதான். முன்பே ஆயிஷா(ரலி) அவர்கள் முத்யீம் பின் அதீ அவர்களது மகனான ஜுபைர் பின் முத்யீம்(ரலி) (ஜுபைர் பின் முத்யீம்(ரலி பின்னாளில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.) அவர்களுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

2.ஆயிஷா(ரலி)ன் தந்தை அபூபக்ர்(ரலி) அவர்கள் மனமுவந்தே இந்த திருமணத்தை செய்வித்தார்கள். நபி(சல்) அவர்களது வற்புறுத்தல் இதற்கு காரணமல்ல. அல்லாஹ் முத்யீம் அவர்களிடம் செய்த சத்தியத்தை முறிக்க வாய்பளித்துவிட்டான் என்று அபூபக்ர்(ரலி) அவர்களின் எண்ணம் அதை பிரதிபலிக்கிறது. 

        நாம் மேற்குறிபிட்ட நபிமொழியானது மேற்குறிபிட்ட புரிதல்களை தருகிறது. இனி நபி(சல்)- ஆயிஷா(ரலி) அவர்களது திருமணம் குறித்து இஸ்லாம் குறித்து அவதூறு பரப்புவதையே பிழைப்பாக கொண்டிருக்கும் சில வலைத்தளங்களில் வைக்கப்படும் அரைவேக்காட்டு விமர்சனங்களையும் அதன் விளக்கத்தையும் இன்ஷா அல்லாஹ் காண்போம்.

Sunday, May 3, 2020

மனித வரலாற்றில் வெற்றிகரமான தொழிலதிபர் மற்றும் குடும்ப வாழ்க்கையிலும் மிகச் சிறந்த ஒரு பெண்ணை பின்பற்ற வேண்டுமா?

மனித வரலாற்றில் வெற்றிகரமான  தொழிலதிபர்  மற்றும் குடும்ப வாழ்க்கையிலும் மிகச் சிறந்த ஒரு பெண்ணை பின்பற்ற வேண்டுமா?
அன்னை கதிஜாவின் வாழ்க்கையைப் பாருங்கள்:




அன்னை கதிஜா:

  • கதீஜாவின் தந்தை மிகச் சிறந்த தொழிலதிபர் மட்டுமில்லாது, அன்றைய குறைஷிகளில் ஒருவர் 
  • 1440 ஆண்டுகளுக்கு முந்தைய, அன்றைய ஆணாதிக்க முதலாளிகளில், மிகச்  சிறந்த பெண் தொழிலதிபராக வியாபாரத்தை சிறந்த முறையில் நிர்வகித்து வந்தார்
  • விமானப்பயணமில்லாத, மிகவும் ஆபத்தான, உயிருக்கு உத்திரவாதமற்ற  நாடு விட்டு நாடு சென்று செய்யும்  அன்றைய வியாபாரத்தில் சாதனைப் படைத்தவர்   
  • அவருடைய வியாபாரம், அனைத்து குறைஷி தொழிலதிபர்களின் மொத்த வருமானத்தை விட பெரியது மட்டுமில்லாமல் மிகவும் தரமிக்க மற்றும் நேர்மையான முறை கொண்டதாகும் 
  • இவரின் நாணயமான வியாபார முறை மற்றும் கண்ணியத்தால் அக்கால மக்கள் "குறைஷிகளின் தலைவி" என்றும் "அல்-தாஹிரா தூய்மையானவர்" என்றும்  அழைத்து  வந்தனர்


  • பல தொழிலதிபர்கள் இவரை திருமணம் செய்ய விரும்பினாலும், இவர் ஏற்காமல்  ஏழ்மையிலும் நேர்மையான, தனது ஊழியர்களில் ஒருவரான நபிகள் பெருமானாரை திருமணம் செய்து கொண்டார்;நபிகளாரை விட 15 வயது மூத்தவர் அன்னை கதிஜா 


  • தன்னுடைய செல்வத்தை ஏழை மற்றும் அனாதைகளுக்காக செலவிட்டு வந்தார்
  • தனது அனைத்து செல்வத்தையும் இறை வழியில் செலவிட்டு, நபிகளாருக்கு சிறந்த அரணாக தன்னுடைய இறுதிக் காலம் வரை வாழ்ந்தார்கள்.
  •  தன்னுடைய கணவர் மேல் அளப்பரிய அன்பு வைத்திருந்தார்; நபிகளாரின் பிரச்சாரத்தால் கோபமடைந்த எதிரிகள், சமூக விலக்கல்  செய்த போது பெரும் செல்வந்தரான அன்னை கதிஜா அனைத்தையும் துறந்து தனது கணவரோடு  சென்று  மூன்று  வருடம் வரை கடும் சோதனைக்குள்ளானார்


மக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம்
அன்னை கதிஜா இறந்து பல வருடங்கள் கழித்தும்  அவர்கள் மீதுள்ள அன்பு ஒரு போதும் குறைந்ததில்லை. ஒரு முறை நபி (ஸல்), அவர்களின் அன்னை கதிஜாவின்  நெக்லஸை கண்டு அழுதார்கள்.

நபியவர்கள்  கதீஜா மீது கொண்டுள்ள அளப்பரிய அன்பின் மீது சிறிது பொறாமை கொண்டவர்களாக  அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், "கதிஜா மட்டும் தான் உங்களின் அன்பிற்கு பொருத்தமானவரா?" என்று கேட்டபோது, நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் :

"யாருமே என்னை ஏற்றுக்கொள்ளாதபோது, என் மீது முழு நம்பிக்கை கொண்டார். மக்கள் எல்லாம்  என்னை நிராகரித்தபோது, அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். யாருமே எனக்கு உதவி செய்ய முன்வராதபோது, அவர் எனக்கு உதவி செய்தார்."

மனித குல வரலாற்றில் சிறந்த நான்கு பெண்மணிகள் என நபிகள் பெருமகனார் இந்த  நால்வரைக் குறிப்பிட்டார்கள்:


  1. அன்னை மேரி  (இயேசுவின் தாய்)
  2. அன்னை ஆசியா  (எகிப்தின் அரசன் பிரவுனின் மனைவி)
  3. அன்னை கதிஜா  (நபியவர்களின் மனைவி)
  4. அன்னை பாத்திமா  (நபி (ஸல்) & கதீஜாவின் மகள்)

Thursday, March 19, 2020

இஸ்லாமிய நிக்காஹ்வின் திருமணக்கொடை (மஹர்) விமர்சனமும் விளக்கமும்

﷽‎

              சில காலமாக சில இந்துத்துவா கும்பலும், கிறித்தவ மிசனரிகளும் இஸ்லாமிய திருமணத்தில் வழங்கப்படும் மஹர் குறித்து விமர்சனம் செய்து வருகின்றன. அது பெண்ணின் யோனியை உபயோகிக்க விதிக்கப்படும் தொகை என கூறி அதை விமர்சித்து வருகின்றன. இஸ்லாமிய திருமண முறையில் இடம் பெறும் மஹர் குறித்து பார்ப்பதற்கு முன்பு திருமணம் என்றால் என்ன என்பதையே இவர்களுக்கு விளக்க வேண்டிய அவல நிலை இங்கு ஏற்பட்டுள்ளது என்பதையே இவர்களின் இந்த அறிவீன வாதம் உணர்த்துகிறது.

திருமணம் ஏன் ?
                 ஒரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது என்ன? மனித வாழ்வில் திருமணம் என்பது சட்டபூர்வமாக பாலியல் இச்சையை தீர்த்து கொள்ளும் ஒரு வடிகால்.அதன் பலனையும் , நஷ்டத்தையும் சட்டபூர்வமாக அனுமதிக்கும் ஒரு முறைதான் திருமணம். இவ்வாறு திருமணம்( அதாவது பாலியல் தேவையை பூர்த்தி செய்வதற்கான அனுமதியை பெற) செய்ய ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு நடைமுறையை கொண்டுள்ளது. சிலர் தாலி கட்டுகிறார்கள், சிலர் மோதிரம் மாற்றுகிறார்கள், சிலர் பதிவு அலுவலகத்தில் பதிந்து நடைமுறையை பின்பற்றி திருமணம் செய்கிறார்கள்.....இஸ்லாமிய மஹர் எனும் முறைமையை கேலி செய்யும் கூமுட்டைகளின் வார்த்தையில் சொல்வதாக இருந்தால் பாலியல் சுகத்தை அடைய தாலி கட்டுகிறார்கள்....விருந்து வைக்கிறார்கள்,... மோதிரம் மாற்றுகிறார்கள்..... இன்னும் இவர்களது பாசையில் சொல்வதாக இருந்தால் மந்திரம் ஓதி ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்த கூட்டி கொடுக்கிறார் ஐயர்.  முதலிரவுக்கு செய்யப்படும் முறைமை என அனைத்தும்.... திருமணத்தின் ஒவ்வொரு பரிமானமும் இருவரின் பாலியல் தேவையை பூர்த்தி செய்ய அனுமதிக்கும் முறைமையே.

        இத்தகைய ஒரு நடைமுறைதான் இஸ்லாமிய திருமணத்தில் நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்படும் பரிசு அல்லது கொடை என்ற இந்த மஹர் ஆகும்.ஆனால் இஸ்லாம் இதை மூடி மறைத்து சொல்லாமல் நாம் மேலே குறிபிட்டது போல பட்டவர்த்தணமாய் சொல்கிறது அவ்வளவே...ஆக இனி மஹர் குறித்த இஸ்லாமிய பார்வை என்ன என்பதையும் பார்ப்போம்..

இஸ்லாமில் மஹர் என்றால் என்ன??

             அல்லாஹ் தனது வேதத்தில் இன்று வழக்கத்தில் இருக்கும் மஹர் குறித்து குறிப்பிடும் போது எந்த இடத்திலும் அதை மஹர் (கூலி) என்று குறிப்பிடவில்லை. குர்ஆன் 4:4 இல் குறிப்பிடும் போது صَدُقَا - தர்மம் என்று கூறுகிறான்

وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுட னும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!(திருக்குர்ஆன் 4:4)

                     அது போல குர்ஆன் 4:24, 5:5, 60:10 குறிப்பிடும் போது أُجُورَ - பரிசு என்று கூறுகிறான்.

وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۖ كِتَابَ اللَّهِ عَلَيْكُمْ ۚ وَأُحِلَّ لَكُم مَّا وَرَاءَ ذَٰلِكُمْ أَن تَبْتَغُوا بِأَمْوَالِكُم مُّحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ ۚ فَمَا اسْتَمْتَعْتُم بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُم بِهِ مِن بَعْدِ الْفَرِيضَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا

24. உங்கள் அடிமைப் பெண்களைத்107 தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை108 கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.(திருக்குர்ஆன் 4:24)
 
الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ ۖ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَّكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ ۖ وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ ۗ وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

5. தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின்27 உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.137 உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட27 கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை108 வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.138 தனது நம்பிக்கையை (இறை)மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் நட்டமடைந்தவராக இருப்பார்.(திருக்குர்ஆன் 5:5)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ ۖ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ ۖ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ ۖ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ ۖ وَآتُوهُم مَّا أَنفَقُوا ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ ۚ وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ وَاسْأَلُوا مَا أَنفَقْتُمْ وَلْيَسْأَلُوا مَا أَنفَقُوا ۚ ذَٰلِكُمْ حُكْمُ اللَّهِ ۖ يَحْكُمُ بَيْنَكُمْ ۚ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
10. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத்460 செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏகஇறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்.91 அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை108 நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏகஇறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.(திருக்குர்ஆன் 60:10)

                     ஆக மேற்குறிபிட்ட வசனங்களை வைத்துப்பார்க்கும் போது மஹர் அல்லது உஜ்ர என்பது திருமணத்தில் பின்பற்றப்படும் ஒரு நிபந்தனை. பளிச்சென்று சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் தனது பாலியல் இச்சையை மேற்கொள்ள பெறும் அனுமதிக்காக நிறைவேற்றும் நிபந்தனைகளில் ஒன்று....

அதனால்தான் பின்வரும் ஹதீஸ் இப்படி கூறுகிறது

புகாரி 5350. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
                      சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த அந்தத் தம்பதியரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர்’ என்று கூறிவிட்டு, (கணவரான உவைமிரைப் பார்த்து), ‘இனி அவளின் மீது உமக்கு எந்த அதிகாரமும் கிடையாது’ என்று கூறினார்கள்.
     அதற்கு அவர், ‘இறைத்தூதர் அவர்களே! (அவளுக்கு நான் மணக்கொடையாக அளித்திருந்த) என்னுடைய பொருள் (என்னாவது)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘உமக்கு (அந்த)ப் பொருள் கிடைக்காது. நீர் அவளின் மீது உண்மை(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், அவளுடைய கற்பை நீர் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். நீர் அவளின் மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், (அவளை அனுபவித்துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தினால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகுதொலைவில் உள்ளது’ என்று கூறினார்கள். 

மேலும் இந்த அனுமதியைப்பெற இன்னும் அதிகப்படியான நிபந்தனைகளை விதிக்கும் அதிகாரம் பெண்ணுக்கு உண்டு அதைத்தான் பதிவாளர் குறிப்பிடும் நஸயீ 3282 குறிப்பிடுகிறது

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ تَمِيمٍ، قَالَ سَمِعْتُ حَجَّاجًا، يَقُولُ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ أَبَا الْخَيْرِ، حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ "إِنَّ أَحَقَّ الشُّرُوطِ أَنْ يُوَفَّى بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ"
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளே ஆகும்.இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல் : நஸயீ 3282)

           ஆக மேற்குறிபிட்ட ஹதீஸ் தெளிவாக ஒன்றை கூறுகிறது அதாவது நிக்காஹ் (பாலுறவு அனுமதி)என்பதற்கு பல நிபந்தனைகளை விதிக்கலாம்...அதில் மஹர் என்பதும் ஒன்று......அதனால்தான் الشُّرُوطِ - நிபந்தனைகள் என்ற பன்மை சொல் ஹதீஸில் பயன்படுத்தப்படுவதை பார்க்க முடிகிறது.

            மேலும் இவர்கள் கூறுவது போன்று இருந்தால் அதாவது மஹர் என்பது பாலுறவுக்கான கூலி இல்லை என்பதால்தான் பெண்கள் குலாஉ அதாவது விவாக முறிவு கோரும் போது பெற்ற மஹரை திருப்பி செலுத்த வேண்டும் என்ற கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது, இதோ பின் வரும் ஹதீஸ் அதை உறுதி செய்கிறது

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
          ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்' என்று கூறினார். அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள் அவர், 'ஆம் (தந்து விடுகிறேன்)' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), 'தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!' என்று கூறினார்கள். (புகாரி : 5273.)

       ஆக மேற்குறிபிட்ட செய்தி தெளிவாக உணர்த்துவது ஒன்றைத்தான் அதாவது மஹர் என்பது நிபந்தனைதான் அது உறவு கொள்வதற்கான கூலி அல்ல....எப்படி தங்கத்தால் ஆன குறிபிட்ட டிசைன் தாலி கட்டுவது நிபந்தனையோ அது போல...அப்படி கூலியாக இருந்தால் கூலி கழிக்கப்பட்ட மஹ்ரை அல்லவா திருப்பி செலுத்த கட்டளையிடப்பட்டிருக்கும்.

       மஹர் என்பது எப்படி ஒவ்வொரு திருமணத்திலும் (அதாவது உறவு கொள்ள அனுமதிக்கும் விழாவிலும்) நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதோ, அது போன்ற ஒன்றுதான் . அதனால்தான் இரும்பு மோதிரத்தையாவது மணக்கொடையாக வழங்க அறிவுறுத்தப்பட்ட நிகழ்வும் மணவாளர் அதுவும் இல்லை எனக்கூறி திருகுர்ஆனின் சில வசனங்களுக்காக திருமணம் செய்யப்பட்ட சம்பவங்களை காணமுடியும் ( முஸ்லீம் 2785)...

       மேலும் இஸ்லாமிய நடைமுறையில் திருமணத்திற்காக கோரப்படும் நிபந்தனைகள் அனைத்தும் பெண்ணின் பாதுக்காப்பை அடிப்படையாக கொண்டது. அதில் பெண்களுக்கான முழு சுதந்திரத்தை இஸ்லாம் வழங்குகிறது.

       இதற்கு மேலும் திருமணம் என்பது சாம்பிராணி போடுவதற்கான அனுமதி நிகழ்வு என்று யாராவது வாதிட்டால் பெண்களே சிந்தித்துக்கொள்ளுங்கள்..... உங்கள் வாழ்கையை காத்துக்கொள்ளுங்கள்.

Thursday, November 7, 2019

"பிள்ளைகள், தங்களுடைய தாயின் முன்னாள் கணவர்களின் பண்புகளைப் பெறுகின்றன" -

பெண்ணோடு  உறவு கொள்ளும் ஒவ்வொரு ஆணின் விந்தும், அவள் உடலில் சில அடையாளங்களை விட்டுச் செல்கின்றது என்பததாக உயிரியலாளர்கள் கூறி  வந்தனர். நவீன மரபணு பற்றிய ஆய்வுகள் (1979) இது அறிவியல் ரீதியான எந்தவித ஆதாரமும்  இல்லாத கட்டுக்கதை என்று மறுத்து வந்தது ஆனால் தற்போதைய ஆய்வுகள்(2010 & 2013) முந்தைய நம்பிக்கையை உறுதி செய்யும் வண்ணம் ஒவ்வொரு ஆணின் விந்தும்  மூலக்கூறு மற்றும்
உடலியல் தடங்களை விட்டுச் செல்வதாக நிரூபணமாகிவுள்ளன மேலும் பிள்ளைகள், தங்களுடைய  தாயின் முன்னாள் கணவர்/துணைவர்களின் பண்புகளைப்  பெறுவதாகவும் நிரூபணமாகியுள்ளது.

விவாகரத்து பெற்ற பெண்கள் 3 மாதவிடாய் தவணைகளும், விதவைகள் 4 மாதம் 10 நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் மேலும் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிறக்கும் வரை காத்திருக்கவேண்டும்  என்ற இறைக்கட்டளை  முந்தைய கணவனால்  பெண்ணின் கருவறையில்  ஏற்படும் மாற்றங்களை முற்றிலுமாக நீக்கியப்  பின்பு தான் வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம்.

வரும் காலங்களில் இது தொடர்பான அறிவியல் ஆய்வுகள்  இன்னும் அதிகப்படியான விளக்கங்களை  நிச்சயம் கொடுக்கும் .

அல்லாஹ்வே அறிந்தவன்.


Ref:

1. https://www.telegraph.co.uk/news/science/science-news/11133203/Could-previous-lovers-influence-appearance-of-future-children.html

2. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4282758/

3. https://www.dailymail.co.uk/sciencetech/article-2776723/Children-look-like-mother-s-EX-partner-flies-Previous-sexual-partner-influence-male-s-offspring-study-claims.html

Monday, October 14, 2019

பசுமைப் புரட்சியைப் பறைசாற்றும் 10 நபிமொழிகள்!

1. மரம் நடுதலின் சிறப்பு:

மரம் வளர்ப்பது பற்றி இஸ்லாம் கூறுவது என்ன? குறிப்பாக முஸ்லிம்கள் ஏன் இதில் அதிகம் ஈடுபடவேண்டும்?
-------------------------------
"ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால் நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை.
அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்;
அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்.
அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்;
அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்" (நபிமொழி)

2.