பக்கங்கள் செல்ல

cross tab2

Friday, November 7, 2025

கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- 1 பேதுரு

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- 1 பேதுரு

        நாம் புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மை குறித்தும் அதில் இருக்கும் வரலாற்று குளறுபடிகள் குறித்தும் தொடராக கண்டுவருகிறோம். அந்த வரிசையில் அடுத்ததாக இடம்பெறும் நூல் 1பேதுரு. இந்த தொடரில் ஒவ்வொரு கட்டுரையிலும் புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு நூலின் நம்பகத்தன்மை எப்படி அவர்களது கிறித்தவ அறிஞர்களாலேயே கேள்விக்குள்ளாகி கேலிகூத்தாக்கியுள்ளது என்பதை வரிசையாக ஆதாரப்பூர்வமாக விளக்கிவந்துள்ளோம். இந்த கட்டுரையிலும், இந்த புதிய ஏற்பாட்டின் நூலாகிய 1பேதுரு என்ற கத்தோலிக்க நிருபத்தையும் அதே பாணியில் தோழுரிக்க உள்ளோம் இன் ஷா அல்லாஹ்….

1பேதுரு நிருபம்: எழுத்தர் யார்? கோட்பாடுகளும் குழப்பங்களும்

          நாம் முன்சென்ற பல கட்டுரைகளில் இந்த கருத்தை முன்வைத்துள்ளோம். அதாவது என்றும் உறுதிபடுத்தப்பட்ட உண்மையை விளக்க நமக்கு அனுமானங்களும் கோட்பாடுகளும் தேவை இல்லை. ஒரு நூலின் ஆசிரியர் இவர்தான் என்று அந்த நூலே கோரும்போது, அந்த நூல்களின் உள்ளே இருக்கும் செய்திகள் அதற்கே முரணாக அமையும் போதுதான், அந்த நூலின் ஆசிரியர் யார் என்று உறுதிபடுத்த அனுமானங்களும், கோட்பாடுகளும் தேவை படுகிறது. புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு நூலிற்கும் இருக்கும் இந்த அவல நிலை, ஏனைய புதிய ஏற்பாட்டின் நூலை காட்டிலும் ஒரு படி மேலாக இருப்பதை இந்த நிருபத்தின் எழுத்தர் குறித்த கோட்பாடுகளை முன்வைக்கும் அறிஞர்களுக்கு ஏற்பட்டுள்ளதை நாம் வரும் சில கட்டுரைகளில் காண்யிருக்கிறோம். இப்படியாக 1 பேதுருவின் எழுத்தர் குறித்தும் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மத்தியில் உலாவும் பல கோட்பாடுகளில் சிலவற்றை அலசவுள்ளோம்.

1 பேதுரு , பேதுருவின் பெயரில் புனையப்பட்டது

    கிறித்தவ புதிய ஏற்பாட்டு அறிஞர்களில் பெரும்பகுதியினர் இந்த நிருபம் பேதுருவின் பெயரில் புனையப்பட்ட ஒரு நிருபம் என்று கூறுகிறார்கள். 1 பேதுரு நிருபம் பேதுருவினால் இயற்றப்பட்டது என்று கூறிக்கொண்டிருக்கையில், ஏன் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மத்தியில் இப்படி ஒரு அவல நிலை இருக்கிறது என்பதை முதலில் பார்ப்போம்.

    இந்த வாதத்தை முன்வைப்பவர்கள், தங்களது விமர்சனத்திற்கு ஆதாரங்களை புதிய ஏற்பாட்டில் இருந்தே முன்வைக்கின்றனர். பின்வரும் விமர்சனத் தொகுப்பை புதிய ஏற்பாட்டு ஆய்வுகள் சங்கத்தின் Studiorum Novi Testamenti Societas  (SNTS- Society for New Testament Studies. ), 2019- ஆசிய பசிபிக் தொடர்புக் குழுவின் மாநாட்டில்,  இறையியல் முனைவர் Manabu Tsuji, Hiroshima University, Japan  அவர்களால் வழங்கப்பட்ட கட்டுரையில் இருந்து தருகிறோம்.(P.No. 208-209, Matthew, Paul, and Others: Asian Perspectives on New Testament Themes, by William Loader, Boris Repschinski, Eric Wong (Eds.), © innsbruck university press, 2019)
        The majority of exegetes regard the name “Peter” as a pseudonym. The main reasons for this view, asserted since the 19th century, are as follows:

1) Why did Peter need to write to churches that he was not familiar with? Peter devoted himself to missionary work mainly with the Jews of Palestine, as the agreement of the Apostolic Council shows (see Gal 2:9). In addition, the contents of 1 Peter were too general to be an answer to the specific questions sent from these churches to Peter.

2) The letter is addressed not to Jewish Christians but to Christians in pagan lands, and the recipients are those who converted from paganism (1:8, 12; 2:10, 12; 4:3). But Peter understands himself as the apostle for the circumcised, sc. Jews (cf. Gal 2:8).

3) The letter reflects the circumstances under which Christianity has already spread not only in Asia Minor but throughout the Roman Empire by the missionaries (1:12; cf. also Eph 4:11; 2 Tim 4:5), who were exposed to objections and persecution (5:9). This indicates that it was written (or at least set) after Peter’s lifetime.

4) The author does not argue about the relationship between Christianity and Judaism, which was quite important to Peter (Gal 2:12, 13; Acts 10:9ff.).

5) The author is familiar with the text of the Old Testament—such literacy cannot be expected from Peter, a Galilean fisher. Besides, its interpretation and comments are very similar to those of Paul; also typical Pauline expressions and terms appear in the letter…..

6) the fact that the author calls himself “fellow elder” (συμπρεσβύτερος) in 5:12 

7) the fact that the author refers to Rome (5:13) as “Babylon.”

        பெரும்பாலான உரையாசிரியர்கள் "பேதுரு" என்ற பெயரை ஒரு புனைப்பெயராகக் கருதுகின்றனர். 19 ஆம் நூற்றாண்டிலிருந்து வலியுறுத்தப்படும் இந்த பார்வைக்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

1) பேதுரு தனக்குப் பரிச்சயமில்லாத தேவாலயங்களுக்கு ஏன் எழுத வேண்டியிருந்தது? அப்போஸ்தலிக்க கவுன்சிலின் உடன்பாடுகள் காட்டுவது போல், பேதுரு முக்கியமாக பாலஸ்தீன யூதர்களின் மிஷனரி பணிக்காக தன்னை அர்ப்பணித்தார் (கலா 2:9 ஐப் பார்க்கவும்). கூடுதலாக, 1 பேதுருவின் உள்ளடக்கங்கள் இந்த தேவாலயங்களில் இருந்து பீட்டருக்கு அனுப்பப்பட்ட குறிப்பிட்ட கேள்விகளுக்கு மிகவும் பொதுவான பதில்களாக உள்ளது.

2) இந்தக் கடிதம் யூத கிறிஸ்தவர்களுக்கு அல்ல, மாறாக புறமத நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டுள்ளது, மேலும் பெறுநர்கள் புறமதத்திலிருந்து மதம் மாறியவர்கள் (1:8, 12; 2:10, 12; 4:3). ஆனால் பேதுரு தன்னை விருத்தசேதனம் செய்யப்பட்ட யூதர்களுக்கான அப்போஸ்தலனாகப் புரிந்துகொள்கிறார் (கலா 2:8 ஐப் பார்க்கவும்).

3) இந்தக் கடிதம், மிஷனரிகளால் ஆசியா மைனரில் மட்டுமல்ல, ரோமானியப் பேரரசு முழுவதும் கிறிஸ்தவம் ஏற்கனவே பரவியுள்ள சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கிறது (1:12; cf. எபே 4:11; 2 தீமோத்தேயு 4:5), ஆட்சேபனைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் (5:9). இது பேதுருவின் வாழ்நாளுக்குப் பிறகு எழுதப்பட்டது (அல்லது குறைந்தபட்சம் அமைக்கப்பட்டது) என்பதைக் குறிக்கிறது.

4) கிறிஸ்தவத்திற்கும் யூத மதத்திற்கும் இடையிலான உறவைப் பற்றி ஆசிரியர் வாதிடவில்லை, இது பேதுருவுக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது (கலா 2:12, 13; அப்போஸ்தலர் 10:9 தொடர்ச்சி).

5) பழைய ஏற்பாட்டின் உரையை ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார் - கலிலிய மீனவரான பேதுருவிடமிருந்து அத்தகைய எழுத்தறிவை எதிர்பார்க்க முடியாது. மேலும், அதன் விளக்கமும் கருத்துகளும் பவுலின் விளக்கங்களுடன் மிகவும் ஒத்தவை; மேலும் வழக்கமான பவுலிய சொல்திறம் மற்றும் சொற்கள் கடிதத்தில் காணப்படுகின்றன…

6) 5:12 இல் ஆசிரியர் தன்னை "இணை மூப்பர்" (συμπρεσβύτερος) என்று அழைத்துக் கொள்வது..

7) ஆசிரியர் ரோமை (5:13) "பாபிலோன்" என்று குறிப்பிடுவது.

    இந்த நிருபம் பேதுருவின் பெயரில் இட்டுகட்டி புனையப்பட்டது என்று விமர்சிக்கும் புதிய ஏற்பாட்டின் வல்லுனர்களில் Raymond E. Brown, Paul Achtemeier , John E. C. O’Neill , Ernest Best ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். மேற்குறிபிட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்க புறப்பட்ட புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் ஒருசாராரின் ஆதாரமற்ற அனுமானங்களின் சிறுதொகுப்பு இதோ.

 1) 1 பேதுருவை பேதுருவே தனது கைப்பட எழுதினார்:

இந்த கருத்துதான் கி.பி.19ம் நூற்றாண்டு வரை கிறித்தவ உலகில் நிலவிவந்தது. இந்த கருத்தை முன்வைக்கும் அறிஞர்களை பொறுத்தவரையில் 1 பேதுருவை இயற்றியது பேதுரு என்று அந்த நிருபம் கூறுவது பிரதான ஆதாரமாகும். 

    இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில், பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது. (1 பேதுரு 1:1-2) 

அடுத்ததாக ஏசுவின் பாடுகளுக்கு தன்னை சாட்சியாக கூறுகிறார் இந்த நிருபத்தின் ஆசிரியர் என்று கூறப்படும் பேதுரு.

    உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறது என்னவென்றால் (1 பேதுரு 5:1).

மேற்குறிபிட்ட இருவசனங்களையும் முன்னிறுத்தி புதிய ஏற்பாட்டின் அறிஞர்களில் ஒரு சாரார் இந்த நிருபத்தை இயற்றியவர் இயேசுவின் அப்போஸ்தலர் பேதுருதான் என்று வாதிக்கிறார்கள். இந்த கருத்தை முன்னிறுத்தும் புதிய ஏற்பாட்டின் அறிஞர்களில் Myers, I. Howard Marshall Marshall, Wayne Grudem, D.A.Carson and Douglas J.Moo, F. F. Bruce, ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆனால் இவர்களினால், இந்த நிருபம் பேதுருவின் பெயரில் புனையப்பட்டது என்று கூறுவோரின் குற்றச்சாட்டை முழுமையாக எதிர்கொள்ள முடியவில்லை. பேதுருவின் வேறு எழுத்தாக்கங்கள் எதுவும் நமக்கு ஆதாரப்பூர்வமானதாக கிடைக்காததால், இந்த நிருபம் பேதுரு எழுதியதுதான் என்பதை உரையின் நடையை ஒப்பிட்டு உறுதி படுத்த இயல வில்லை. இத்தகைய அவல நிலை இருப்பதால் பின்வரும் அனுமானங்களை சேர்த்து இருக்கும் ஓட்டைகளை அடைக்க முற்பட்டுள்ளனர். ஆனால் அதுவும் குழப்பத்திலேயே முடிந்துள்ளது.

1. அ) 1 பேதுரு, பேதுருவின் எழுத்தரினால் எழுதப்பட்டது:

புதிய ஏற்பாட்டின் அறிஞர்களில் ஒரு பிரிவினர் 1 பேதுரு,  பேதுருவின் எழுத்தரால் எழுதப்பட்டது என்று கூறுகிறார்கள். அதற்கு மூல காரணமாய் அமைந்திருப்பது 1 பேதுருவின் மெருகூட்டப்பட்ட கிரேக்கம். பேதுருவின் கல்விப்புலமை குறித்து புதிய ஏற்பாடு பின்வருமாறு சாட்சி பகர்கிறது.

    பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.(அப்போஸ்தல நடபடிகள் 4:13)

எனவே மேற்குறிபிட்ட ஆதாரத்தை எதிர்கொள்ள கிறித்தவ புதிய ஏற்பாட்டு அறிஞர்களில் ஒரு சாரார் 1 பேதுருவை இயற்றியது பேதுருவின் எழுத்தர்தான். அந்த கூட்டத்திலும் ஒரு பிரிவினர் 1 பேதுருவை இயற்றியது சில்வானு என்று கூறுகிறார்கள். அதற்கு ஆதாரமாய் பின்வரும் வசனத்தை முன்வைக்கின்றனர்.

உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன். (1 பேதுரு 5:12)

1 பேதுருவை இயற்றியது பேதுருவின் எழுத்தர் என்று வாதிப்பவர்களில் இருக்கும் மற்றொரு பிரிவினர் 1 பேதுருவை இயற்றியது மாற்க் என்று வாதிக்கிறார்கள். மேற்குறிபிட்ட வசனத்தில் சில்வானு வெறும் கடிதத்தை கொண்டு சென்றவர்தான், பேதுருவின் உண்மையான எழுத்தர் மாற்க்தான் என்று வாதிக்கிறார்கள். அதற்கு இவர்கள் முன்வைக்கும் ஆதார வசனம்

உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். (1 பேதுரு 5:13)

இங்கு மாற்க்-ஐ, பேதுரு குமாரன் என்று அழைப்பது அவருடனான நெருக்கத்தை காட்டுவதால் 1 பேதுருவை இயற்றியது மாற்குதான் என்று அனுமானிக்கிறார்கள். இப்படி 1 பேதுருவை இயற்றியது பேதுருவும் அவரது எழுத்தரும்தான் என்று வாதிக்கும் அறிஞர்கள் மற்றும் அவர்களது கருத்துக்களின் பட்டியலை காண்போம்.

1 பேதுருவின் ஆசிரியர் பேதுரு / பேதுருவின் உதவியாளர்
 
வ.
 எண்
அறிஞர் கருத்து / வாதம் எழுதப்பட்டதாக கருதும் காலம் நூல்
1. F. F. Bruce  1 பேதுரு இயல்பாகவே பேதுருவின் வாழ்க்கை மற்றும் இறையியலுடன் பொருந்துகிறது; பேதுருவின் ஆக்கம் என்பதை மறுக்க எந்த வலுவான காரணத்தையும் காணவில்லை. பேதுருவின் உதவியாளர் சில்வானு நிருபத்தின் மொழிநடையின் காரணம். 63 - 64 AD1)The New Testament Documents: Are They Reliable?

2)The Canon of Scripture 

2. I. Howard Marshall பேதுரு எழுதியது நம்பத்தகுந்தது.  பேதுரு  சில்வானுவை எழுத்தராக பயன்படுத்தியிருக்கலாம்.  Early 60s AD 1)1 Peter  (IVP Commentary)

2)New Testament Theology 

3. Donald Guthrie  பாரம்பரியமாக கூறப்படும் பேதுருவே ஆசிரியர் ; எழுத்தர்  சில்வானு மற்றும் கிரேக்க சூழலைப் முன்வைப்பதன் மூலம் மொழியியல் வேறுபாடுகளை விளக்குகிறார். ஆனால் பண்டைய மரபுகள் மாற்கை பேதுருவின் விரிவுரையாளராக கூறுகிறது என்று கூறுகிறார். Early 60s AD New Testament Introduction (rev. ed., 1990) 
4. John R. W. Stott  பேதுருவை உண்மையான ஆசிரியராக எடுத்துக்கொள்கிறார்; கடிதத்தின் தனிப்பட்ட தொனியையும் அப்போஸ்தலிக்க அதிகாரத்தையும் ஏற்கிறார். பேதுருவின் அதிகாரம், கெடாமல் சில்வானு இந்த நிருபத்தை இயற்றி இருக்கலாம் Early 60s AD The Message of 1 Peter (BST Series) 
5. Thomas R. Schreiner  பேதுருவின் எழுத்துத்துவத்தை ஏற்கிறார்; சில்வானுவின் உதவி மற்றும் பேதுருவின் இருமொழிப் புலமை ஆகியவற்றால் மொழிநடையின் சிக்கல்கள் இருப்பதாக வாதிடுகிறார். Early 60s AD 1, 2 Peter, Jude (NAC, 2003) 
6. Karen H. Jobes  உள் மற்றும் வரலாற்று சான்றுகள் பேதுருவின் எழுத்தாக்கத்தை உறுதிபடுத்துகின்றன.; அதிநவீன கிரேக்கம் அதனை மறுக்க போதுமான வாதம் அல்ல.  அதிநவீன கிரேக்கத்திற்கு பேதுருவின் உதவியாளர் சில்வானுவே காரணம் Early 60s AD 1 Peter (Baker Exegetical Commentary, 2005)
7. Craig S. Keener சில்வானுவின் உதவியுடன் பேதுரு இதை எழுதியிருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறார்; சூழலுக்கு ஏற்ப கி.பி 60களின் ரோம் நகருக்குப் பொருந்துகிறது. Early 60s AD The IVP Bible Background Commentary: New Testament 
8.Ben Witherington III பேதுரு எழுத்தாக்க சார்புநிலையை நோக்கிய  மத்தியஸ்த நிலைப்பாட்டை முன்வைக்கிறார். பேதுருவின் செய்திகளை சில்வானு வடிவமைத்து வழங்கியவராக கருதுகிறார். Early 60s AD Letters and Homilies for Hellenized Christians, Vol. II 
9. D. A. Carson & Douglas J. Moo  அனைவராலும் ஏற்கப்படாத போதும், பேதுருவின் எழுத்தாக்கத்தை சரிகாண்கிறார்.  சில்வானுவை பலர் எழுத்தராக முன்வைப்பதை சரிகாண்கிறார்.  Early 60s AD An Introduction to the New Testament (2nd ed., 2005)
10. Leonhard Goppelt  பேதுருவின் மரணத்திற்கு முந்தைய ஆரம்பகால கிறிஸ்தவ சூழ்நிலையுடன் ஒத்திசைவைப் கருத்தில் கொண்டு பேதுருவின் எழுத்தாக்கத்தை சரிகாண்கிறார். எழுத்தர் சில்வானுவே பேதுருவின் எண்ணங்களுக்கு கிரேக்க வடிவம் தந்தவர் Early - Mid 60s ADA Commentary on 1 Peter (Eerdmans, 1993 [German orig.]) 
11. William Barclay  பேதுருவை ஆசிரியராகக் கருதுகிறார்; கிரேக்க பாணி பேதுருவின் உதவியாளரான சில்வானுவினால் ஏற்பட்டதாக கூறுகிறார். 63 or 64 AD The Letters of James and Peter 
12.J. N. D. Kelly  பேதுருவின் எழுத்துத்துவத்தை ஏற்கிறார். சில்வானு எழுத்தராக இருந்தமையே மெருகூட்டப்பட்ட கிரேக்கத்திற்கு காரண்மாக இருக்கலாம்  63 - 64 AD A Commentary on the Epistles of Peter and Jude (1969) 
13. A. T. Robertson  பேதுருவின் எழுத்துத்துவத்தை ஏற்கிறார். 63 or 64 AD Word Pictures in the New Testament (1933).
14. Myers, Elizabeth A. பேதுருவின் எழுத்துத்துவத்தை ஏற்கிறார். 1 பேதுருவில் இடம்பெறும் பேதுருவின் சுயசாட்சியே போதுமானது என்று கூறுகிறார். Early 60s AD Authorship of 1 Peter and Hebrews: New Evidence in Light of Probable Intertextual Borrowing. (2020)
15. Wayne Grudem பேதுருவின் எழுத்துத்துவத்தை ஏற்கிறார். பேதுரு மெருகூட்டப்பட்ட கிரேக்க அறிவு உடையவராக கருதுகிறார். 63 or 64 AD 1 Peter: An Introduction and Commentary (Volume 17) (TNTC) (2009)
16. Peter H. Davids சில்வானுவிற்கு 1 பேதுருவின் வடிவம் மற்றும் நடையில் பெரும்பங்குள்ளது என்று கருதுகிறார். Early 60s AD The First Epistle of Peter (NICNT, 1990)
17. C. E. B. Cranfield சில்வானுவின் எழுத்துருவாக்கத்தினால்தான் மொழியியல் மெருகு இருப்பதாக  கருதுகிறார் Early 60s AD The First Epistle of Peter (1960ன் கட்டுரைகள்)
18. E. Earle Ellis பவுலிய கடித நடைமுறைகளை போன்று, சில்வானு இந்த கடித்தத்தை வடிவமைத்தவர், மாற்கு தொகுத்தலுக்கும், திருத்தத்திற்கும் காரணமானவர் என்று கூறுகிறார். Early 60s AD The Making of the New Testament Documents (1999)
19. E. G. Selwyn கிரேக்க பாணி மற்றும் இறுதி அமைப்புக்கு மாற்கு காரணமாக இருக்கலாம் என்றும், அவர் ரோமில் பேதுருவின் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார். 64 AD The First Epistle of St. Peter: The Greek Text with Introduction, Notes, and Essays (2nd ed., 1946)
20. William L. Lane 1 பேதுருவை இயற்ற பேதுருவிற்கு மாற்க் தனது இலக்கிய பங்களிப்பை செய்திருப்பதற்கு சாத்தியம் உள்ளது என்று கூறுகிறார் 63 or 64 AD The Gospel According to Mark (NICNT, 1974) 
21. C. F. D. Moule பேதுருவின் மரணத்திற்கு முன்பு / பிறகு 1 பேதுருவை இயற்ற மாற்க் விரிவுரையாளராகவோ, இலக்கிய துனைவராகவோ செயல்பட்டிருக்கலாம் Early 60s AD or

80s AD

The Birth of the New Testament (3rd ed., 1982)
22. Oscar Cullmann பேதுருவுடன் மாற்கிற்கு இருந்த தொடர்பு, பேதுருவின் மரணத்திற்கு பிறகு,  மெருகூட்டப்பட்ட கிரேக்கத்தில், இந்த நிருபம் இயற்றப்படுவதை சாத்தியமாக்கி இருக்கலாம் என்று வாதிக்கிறார். 63 - 64 AD Peter: Disciple, Apostle, Martyr (1952 [Eng. 1953])
23. Bo Reicke பேதுருவின் ரோம சமூகத்தில், 1 பேதுருவின் வடிவமைப்பு அல்லது திருத்தத்தில் மாற்க் உதவியிருக்கலாம் என்று அவர் கருதுகிறார். just prior to 64 CE  The Epistles of James, Peter, and Jude (AB 37, 1964)
24. Martin Hengel 1 பேதுரு மற்றும் மாற்குவின் நற்செய்தி பேதுருவின் ஒரே ரோமானிய சூழலில் இருந்து தோன்றியிருக்கலாம். இது மாற்குவின் இலக்கியப் பங்களிப்பை காட்டுவதாக இருக்கலாம். 70 – 80 AD Studies in the Gospel of Mark (1985)
25. R. Alan Cole பேதுருவின் மகனான மாற்கு பேதுருவின் உதவியாளராகவும், இந்த நிருபத்தின் ஆசிரியராகவும் இருப்பதை ஏற்கிறார்.  63 - 64 AD The First Epistle of Peter (Tyndale NT Commentary, 1989)

அனுமானங்கள் அடிப்படை ஆதரமல்ல: 

    உதவியாளர்கள் பேதுரு உயிருடன் இருக்கும் போதே இந்த நிருபத்தை இயற்றினார்களா? பேதுரு உள்ளிட்ட அப்போஸ்தலர்களின் மரண குறிப்புக்கள் மறைந்த வருடத்தை கூட அனுமானிக்க முடியாத படிக்கு சிக்கலாக இருக்கிறது. 
        These sources suggest dates as late as 67/69 CE, and as early as 55 CE.This cluster of accounts resists efforts to place them in a logical progression showing development of different dating schemes over time. Instead, we see here again that even basic questions about the deaths of Peter and Paul, in this case the date(s), have never had a single, clear answer. The sources are characterized by their variety every bit as much as their continuity. (P.No.102, The Many Deaths of Peter and Paul By DAVID L. EASTMAN) 
    இந்த ஆதாரங்கள் கி.பி 67/69 ஆம் ஆண்டு போல் பிந்தைய தேதிகளையும், கி.பி 55 ஆம் ஆண்டு போல் முந்தைய தேதிகளையும் பரிந்துரைக்கின்றன. இந்தக் தகவல்களின் தொகுப்பு, அவற்றை தர்க்கரீதியான முன்னெற்ற இடத்தில் வைப்பதற்கான  முயற்சிகளை தடுக்கிறது, காலப்போக்கில் வெவ்வேறு கால வரைவுகளின் வளர்ச்சியைக் காட்டுகிறது. மாறாக, பேதுரு மற்றும் பவுலின் மரணம் பற்றிய அடிப்படை கேள்விகளுக்கு கூட, இந்த விஷயத்தில், தேதி(கள்) ஒருபோதும் ஒரு தெளிவான பதிலைக் கொண்டிருக்கவில்லை என்பதை இங்கே மீண்டும் காண்கிறோம். மூலங்கள் அவற்றின் தொடர்ச்சியைப் போலவே அவற்றின் பன்முகத்தன்மையாலும் வகைப்படுத்தப்படுகின்றன. (P.No.102, The Many Deaths of Peter and Paul By DAVID L. EASTMAN)
அதாவது ஆதாரங்கள், ஒருகிணைந்து ஒற்றை திசையை காட்ட இயலாமல் இருப்பதால் அப்போஸ்தலர்களின் மரண வருடம் இதுவேன கணிப்பதிலேயே பெரும் சிக்கல் இருக்கும் போது,  புதிய ஏற்பாட்டு அறிஞர்களான C. F. D. Moule, Martin Hengel போன்றவர்கள் இந்த நிருபம் பேதுருவின் மரணத்திற்கு பிறகும் இயற்றப்பட்டிருக்கலாம் என்று  கருதுகிறார்கள். C. F. D. Moule, Martin Hengel போன்றவர்கள் பகிரங்கமாகவே 1 பேதுரு, பேதுருவின் மரணத்திற்கு பிறகு இயற்றப்பட்டிருக்கலாம் என்று கூறுவது, 1 பேதுரு, எழுத்தாளரை கொண்டு  பேதுருவால் எழுதப்பட்டது என்ற கருத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதை காட்டுகிறது. "1 பேதுரு , பேதுருவின் பெயரில் இட்டுக்கட்டி புனையப்பட்டது" , என்று வாதிக்கும் அணியினரின் வாதத்தை எதிர் கொள்ள இயலாத நிலை இருப்பதையும், அதனை சரிகெட்ட “எழுத்தாளர் உதவி” என்ற கற்பனை மட்டுமே உள்ளது. 
அந்த கற்பனையும் யார் அந்த எழுத்தாளர்? அந்த எழுத்தாளர் பேதுரு உயிருடன் இருக்கும் போது பேதுரு சொல்ல சொல்ல இயற்றினாரா? அல்லது பேதுரு மரணித்த பிறகு அந்த எழுதரால் எழுதப்பட்டதா? என்பதில் குழப்பத்தை தோற்றுவித்து கிறித்தவ அறிஞர்களை அலறவிட்டுள்ளது என்பதை நமது கட்டுரை தெளிவாக காட்டுகிறது.  கற்பனைகள் என்றும் அடிப்படை ஆதாரமாகாது என்பதற்கும் அது எத்தகைய அவலத்தை தோற்றுவிக்கும் என்பதற்கும் சரியான உதாரணமாக இது இருக்கிறது….அல்லாஹு அஃலம். 

Friday, September 12, 2025

யாக்கோபின் நிருபமும் சிக்கலை உருவாக்கும் அதன் கிரேக்கமும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم


    ஒரு ஆக்கத்தின் மொழியியல் இரண்டு விஷயங்களை நமக்கு வெளிப்படுத்தும் ஒன்று எழுதுபவரின் மொழியாற்றல். அடுத்ததாக அதை வாசிப்பவரின் மொழியாற்றல். குறிப்பாக கடிதங்களில், அது தொலைத்தொடர்பு சாதனமாக இருப்பதால் இது மிகவும் அவசியமான ஒன்று. யாக்கோபு நிருபத்தின் கிரேக்க மொழியை புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மிகவும் மெருகூட்டப்பட்டதாய் இருப்பதாக கூறுகின்றனர். "கலியேயாவில் இருந்த, அரமேயத்தை தாய்மொழியாக கொண்ட ஒரு மீனவரான யாக்கோபிற்கு இது எப்படி சாத்தியப்பட்டது ?" என்பதுதான் புதிய ஏற்பாட்டு அறிஞர்களை சந்தேகிக்க வைத்த கேள்வி. இப்படி சிக்கலை தோற்றுவித்த இந்த நிருபத்தின் கிரேக்க மொழியியல் குறித்து இந்த கட்டுரையில் காண்போம் இன் ஷா அல்லாஹ். 


    கி.பி. 1ம் நூற்றாண்டில் ரோமானியர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனிய யூதர்கள் குறித்தும் குறிப்பாக சமூகத்தின் கடைநிலை மக்களின் கல்வித்தரம் குறித்து யூத கலிவியாளரும், லண்டன் பல்கலைகழக பேராசிரியரான Catherine Hezser  பின்வருமாறு கூறுகிறார்.
        The lack of evidence of private letters authored by members of the lower strata of society may be due to the phenomenon, already suggested above, that elementary education and the knowledge of writing were not widespread amongst ancient Jews, at least until the third century C.E., and that, in contrast to the rabbinic letter writers, ordinary people would not have scribes and letter carriers readily available. The relatively high fees charged by professional scribes and letter bearers, in addition to the cost of papyrus, and the general distrust of and suspicion against the correctness of the written message will have contributed to people's reliance on oral means of communication. (P.No.290, Part II: The Occurrence of Writing, Jewish Literacy in Roman Palestine by Catherine Hezser)

சமூகத்தின் கீழ்மட்ட உறுப்பினர்களால் எழுதப்பட்ட தனிப்பட்ட கடிதங்களுக்கான சான்றுகள் இல்லாததற்கு, ஏற்கனவே மேலே கூறப்பட்ட நிகழ்வு காரணமாக இருக்கலாம், தொடக்கக் கல்வியும் எழுத்து அறிவும் பண்டைய யூதர்களிடையே, குறைந்தபட்சம் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை பரவலாக இல்லை. மேலும், யூத மதபோதகர்களில் கடிதம் எழுதுபவர்களைப் போலன்றி, சாதாரண மக்களுக்கு எழுத்தாளர்கள் மற்றும் கடிதங்களை எடுத்துச் செல்பவர்கள் உடனடியாகக் கிடைப்பதில்லை. பாப்பிரஸின் விலைக்கு கூடுதலாக, தொழில்முறை எழுத்தாளர்கள் மற்றும் கடிதம் எழுதுபவர்களால் வசூலிக்கப்படும் ஒப்பீட்டளவில் அதிக கட்டணம், எழுதப்பட்ட செய்தியின் சரியான தன்மை குறித்த பொதுவான அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் ஆகியவை மக்கள் வாய்மொழி தொடர்பு வழிமுறைகளை நம்பியிருப்பதற்கு பங்களித்திருக்கும். (P.No.290, Part II: The Occurrence of Writing, Jewish Literacy in Roman Palestine by Catherine Hezser) 

மேலும் ஜோசபஸ் கிரேக்கத்தை கற்றுக்கொள்வதில் இருந்த சிரமத்தை அவர் பின்வருமாறு விவரிக்கிறார்.

I have also taken a great deal of pains to obtain the learning of the Greeks, and understand the elements of the Greek language, although I have so long accustomed myself to speak our own tongue, that I cannot pronounce Greek with sufficient exactness; for our nation does not encourage those that learn the languages of many nations, and so adorn their discourses with the smoothness of their periods;

கிரேக்கர்களின் கல்விகளைப் பெறுவதற்கும், கிரேக்க மொழியின் கூறுகளைப் புரிந்துகொள்வதற்கும் நான் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டேன், ஆனால் நான் நீண்ட காலமாக எனது சொந்த மொழியைப் பேசப் பழகியிருந்தாலும், போதுமான துல்லியத்துடன் என்னால் கிரேக்கத்தை உச்சரிக்க முடியவில்லை;ஏனென்றால், பல தேசங்களின் மொழிகளைக் கற்று, அவர்களின் ஆக்கங்களை அவர்களின் காலகட்டங்களின் சமூகம் அலங்கரிக்கிறவர்களை நம் தேசம் ஊக்குவிப்பதில்லை;  ( Antiquities of Jews XX, chapter XI) 

     இப்படி யூதர்கள் கி.பி.3ம் நூற்றாண்டுவரை ஆரம்பகல்வியை கற்பதே கடினமான காரியமாக இருந்துள்ளது. மேலும் மத ரீதியிலான காரணங்களினாலும் கிரேக்கம் கற்பது ஜோசபஸ் போன்றவர்களுக்கே சவலான ஒன்றாக அமைந்துள்ளது. எனவே மீனவரான யாக்கோபு எப்படி ஏனைய புதிய ஏற்பாட்டில் இல்லாத சொல்லாடலையும், மொழியியல் நயத்தையும் கையாண்டிருக்க முடியும் என்பது மொழியியலை அடிப்படையாக கொண்டு சந்தேகிக்கும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் வாதம். இப்படி யாக்கோபின் நிருபத்திற்கே உரிய தனித்த சொல்லாடல்களை இங்கு பட்டியலாக தருகிறோம்.

அதிகாரம் 1:

வ.
எண்
Strong's Greek Number தனித்த வார்த்தைகள் பொருள்* வசன எண்
01. 182 ἀκατάστατος inconstant 1:8
02. 416 ἀνεμιζομένῳ driven with the wind 1:6
03. 551 ἀπείραστός not to be tempted 1:13
04. 574 ἁπλῶς liberally, sincerely 1:5
05. 616 ἀποκυεῖ beget, produce 1:15, 1:18
06. 644 ἀποσκίασμα shadow 1:17
07. 1374 δίψυχοι  double minded 1:8
08. 1503 ἔοικεν be like 1:6,1:23
09. 1721 ἔμφυτον engrafted, implanted 1:21
10. 1828 ἐξελκόμενος  draw away. 1:14
11. 1953 ἐπιλησμονῆς  forgetful 1:25
12. 2143 εὐπρέπεια grace, beauty 1:11
13. 2357 θρῆσκος religious 1:26
14. 3133 μαρανθήσεται fade away 1:11
15. 3883 παραλλαγὴ fickleness, variableness 1:17
16. 4162 ποιήσει deed 1:25
17. 4494 ῥιπιζομένῳ toss 1:6
18. 4507 ῥυπαρίαν dirtiness, turpitude 1:21
19. 5036 ταχὺς swift 1:19
20. 5157 τροπῆς turning 1:17
21. 5468 χαλιναγωγέω bridle 1:26

அதிகாரம் 2:

வ.
எண்
Strong's Greek Number தனித்த வார்த்தைகள் பொருள் வசன எண்
22. 448 ἀνέλεος without mercy 2:13
23. 2006 ἐπιτήδεια things which are needful 2:16
24. 2184 ἐφημέρου daily 2:15
25. 4380 προσωπολημπτεῖτε to show partiality 2:9
26. 5425 φρίσσουσιν  tremble 2:19
27. 5554 χρυσοδακτύλιος with a gold ring 2:2
28. 4382 προσωπολημψίαις respect of persons 2:1

அதிகாரம் 3

வ.
எண்
Strong's Greek Number தனித்த வார்த்தைகள் பொருள் வசன எண்
29. 87 ἀδιάκριτος  impartial 3:17
30. 182 ἀκατάστατος inconstant 3:8
31. 252 ἁλυκὸν salt  3:12
32. 3166 αὐχεῖ  boast  3:5
33. 1032 βρύει send forth 3:11
34. 1141 δαιμονιώδης devilish 3:15
35. 1724 ἐναλίων thing in the sea 3:7
36. 1990 ἐπιστήμων endued with knowledge 3:13
37. 2138 εὐπειθής compliant, obedient 3:17
38. 2287 θανατηφόρος deadly 3:8
39. 3329 μετάγεται  to guide, direct 3:3, 3:4
40. 4089 πικρόν bitter 3:11, 3:14
41. 5164 τροχός course 3:6
42. 5208 ὕλην a forest, wood, timber 3:5
43. 5394 φλογίζουσα set on fire 3:6
44. 5468 χαλιναγωγέω bridle 3:2
45. 5534 χρή ought 3:10
46. 3699 ὁμοίωσιν the similitude 3:9

அதிகாரம் 4

வ.
எண்
Strong's Greek Number தனித்த வார்த்தைகள் பொருள் வசன எண்
47. 1071 γέλως  laughter 4:9
48. 1374 δίψυχοι  double minded 4:8
49. 2726 κατήφειαν gloominess, dejection 4:9
50. 2761 κενός in vain 4:5
51. 3550 νομοθέτης lawgiver 4:12
52. 5003 ταλαιπωρήσατε endure 4:9
53. 5373 φιλία  friendship 4:4
54. 2730 κατῴκισεν dwelleth 4:5

அதிகாரம் 5

வ.
எண்
Strong's Greek Number தனித்த வார்த்தைகள் பொருள் வசன எண்
55. 270 ἀμησάντων reaped down 5:4
56. 650 ἀφυστερημένος kept back by fraud 5:4
57. 995 βοαὶ cry 5:4
58. 2252 κακοπάθεια suffering, affliction 5:10
59. 2728 κατιόω corrode, rust 5:3
60. 3649 ὀλολύζοντες  howl 5:1
61. 3797 ὄψιμον spring rain 5:7
62. 4184 πολύσπλαγχνός  compassionate, pitiful 5:11
63. 4406 πρόϊμον early rain, early crops 5:7
64. 4595 σέσηπεν be corrupted, perish 5:2
65. 4598 σητόβρωτα  moth-eaten 5:2
66. 5171 ἐτρυφήσατε revel, live in pleasure 5:5

    மேலே இருக்கும் பட்டியல் biblehub என்ற வலைதளத்தில் இடம்பெறும்  Concordance உதவியுடன் தயாரிக்கப்பட்டது. பட்டியலில் ἀκατάστατος, δίψυχοι மற்றும் χαλιναγωγέω  ஆகிய மூன்று வார்த்தைகள் தவிர்த்த 63 வார்த்தைகள் யாக்கோபு நிருபத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களில் கூட இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

It is clear that the writer of the epistle is an able master of literary Koine. This can be concluded from a host of observations: the use of subordination (with conjunctions) and participial constructions rather than coordination, the careful control of word order (e.g. the placing of the stressed object before the verb, the separation of correlated sentence elements for emphasis as in 1:2; 3:3, 8; 5:10), the relative lack of barbarisms and anacolutha, the use of the gnomic aorist (1:11, 24), and choice of vocabulary (e.g. ἔοικεν in 1:6, 23; χρή in 3:10; κάμνω in 5:15; the accusative with ὀμνύμαι in 5:12; the careful use of ὅστις in 2:10; 4:14; the use of τινα in ἀπαρχήν τινα in 1:18). All of these point to a developed literary ability.
Furthermore, a variety of elements belong to good rhetorical style and show that the author was a master not just of literary grammar, but of oral composition as well: paronomasia (χαίρειν-χαράν, 1:1–2), parechesis (ἀπελήλυθεν-ἐπελάθετο, 1:24), alliteration (πειρασμοῖς περιπέσητε ποικίλοις, 1:2), rhyme (ἀνεμιζομένῳ-ῥιπιζομένῳ, 1:6), and similarity in word sounds (note the grouping in 3:17). To this one can add rhythm; in many cases the shift of sentence elements (e.g. placing of the genitive in 1:13 and 4:4) and the choice of vocabulary appear to serve the flow and euphony of the sentence rather than its meaning.
In addition to the above there are a number of further indications of oral style: relatively short sentence structure, frequent use of the imperative (49 in 108 verses) and the forms of direct address (17 occurrences of the vocative, mostly ἀδελφοί), vivid examples, personification (1:15; 2:13), simile (1:6, 10–11; 5:7), rhetorical questions (2:6–7, 14, 17; 4:1, 5), and negative terms (2:20; 4:4, 8). All of these examples together show that despite its careful literary crafting, the letter partakes of the characteristics of oral rather than written discourse.
A further characteristic of James is his unusual vocabulary. Dibelius, 35, is certainly correct to say that much of this data is circumstantial—other NT writers simply do not pick the same figures of speech, but the words themselves must have been common in the language—yet the data are striking in both quantity and source. There are, according to Mayor, ccxlvi–ccxlviii, 63 NT hapax legomena in James. Of these 13 appear in James for the first time in Greek: ἀνέλεος (2:13), ἀνεμιζόμενος (1:6), ἀπείραστος (1:13), ἀποσκίασμα (1:17), δαιμονιώδης (3:15), δίψυχος (1:8; 4:8), θρησκός (1:26), πολύσπλαγχνος (5:11), προσωπολημπτέω (2:9), προσωπολημψία (2:1), ῥυπαρία (1:21), χαλιναγωγέω (1:26; 3:2), χρυσοδακτύλιος (2:2). Some of these may have been in the language previously, while one or two James may have coined himself (e.g. χρυσοδακτύλιος). Of the remaining terms 45 are found in the LXX; thus another characteristic of his language is the use of biblicisms and Semitisms. (P.No.109, The Epistle of James by Peter H.Davids, THE NEW INTERNATIONAL GREEK TESTAMENT COMMENTARY)

    இந்த நிருபத்தின் எழுத்தாளர் இலக்கிய கோயின் கிரக்கத்தில் திறமையான தேர்ச்சி பெற்றவர் என்பது தெளிவாகிறது. பல அவதானிப்புகளிலிருந்து இந்த முடிவுக்கு வரலாம்: இணைப்பு வாக்கியங்களுக்கு பதிலாக (இணைப்புச் சொற்கள் கொண்ட) கலவை வாக்கியங்கள் மற்றும் எச்ச வாக்கிய அமைப்புக்களை பயன்படுத்துதல், சொல் வரிசையை கவனமாக கையாளுதல்,  (எ.கா. வினைச்சொல்லுக்கு முன் முக்கியப்படுத்தப்படும் செயப்படுபொருளை வைப்பது, 1:2; 3:3, 8; 5:10 இல் உள்ளபடி, வலியுறுத்தலுக்காக தொடர்புடைய வாக்கிய கூறுகளைப் பிரித்தல்), முறையற்ற மற்றும் அறிமுகமற்ற வாக்கிய அமைப்புக்கள் இல்லாமல் இருப்பது, சுருக்கமான இறந்தகால வினைச்சொல்லை நிகழ்காலத்திற்கு பயன்படுத்துதல்(1:11,24) மற்றும் சொற்களஞ்சியத்தின் தேர்வு (எ.கா. 1:6, 23 இல் ἔοικεν; 3:10 இல் χρή; 5:15 இல் κάμνω; 5:12 இல் ὀμνύμαι இரண்டாம் வேற்றுமைச்சொல் பயன்பாடு; 2:10 இல் ὅστις கவனமாகப் பயன்படுத்துதல்; 4:14; 1:18 இல் ἀπαρχήν τινα இல் τινα இன் பயன்பாடு) இவை அனைத்தும் வளர்ந்த இலக்கியத் திறனைச் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும், பலவிதமான கூறுகள் நல்ல சொல்லாட்சி பாணியைச் சேர்ந்தவை என்பதையும் எழுத்தாளர் இலக்கிய இலக்கணத்தில் மட்டுமல்ல, வாய்மொழி அமைப்பிலும் தேர்ச்சி பெற்றவர் என்பதையும் காட்டுகின்றன:சிலேடை (χαίρειν-χαράν, 1:1–2), ஒத்த ஓசை சொற்களை நெருக்கமாக வரிசைப்படுத்துதல்(ἀπελήλυθεν-ἐπελάθετο, 1:24), மோனை (πειρασμοῖς περιπέσητε ποικίλοις, 1:2), எதுகை, இயைபு (ἀνεμιζομένῳ-ῥιπιζομένῳ, 1:6), ஒத்த ஓசையுடைய வார்த்தைகள் (3:17-ல் உள்ள சொல் குழுவாக்கத்தை கவனியுங்கள்) இதனுடன் ஒருவர் தாளத்தைச் சேர்க்கலாம்; பல சந்தர்ப்பங்களில் வாக்கிய கூறுகளின் மாற்றம் (எ.கா. 1:13 மற்றும் 4:4 இல் ஆறாம் வேற்றுமையை வைப்பது) மற்றும் சொற்களஞ்சியத்தின் தேர்வு ஆகியவை வாக்கியத்தின் அர்த்தத்தை விட அதன் ஓட்டம் மற்றும் சுவைக்கு துணை செய்வதாகத் தெரிகிறது.

மேற்கூறியவற்றுடன் கூடுதலாக, வாய்மொழி பாணியின் பல அறிகுறிகள் உள்ளன அவை: ஒப்பீட்டளவில் குறுகிய வாக்கிய அமைப்பு, கட்டளைகளின் அடிக்கடி பயன்பாடு (108 வசனங்களில் 49) மற்றும் நேரடி முகவரியின் வடிவங்கள். (பெரும்பாலும் ἀδελφοί என்ற அழைப்புச்(விளிப்புச்) சொல் 17 முறை இடம்பெறுகிறது), தெளிவான உதாரணங்கள், உருவகப்படுத்துதல் (1:15; 2:13), உவமை (1:6, 10–11; 5:7), சொல்லாட்சிக் கேள்விகள் (2:6–7, 14, 17; 4:1, 5), மற்றும் எதிர்மறை சொற்கள் (2:20; 4:4, 8). ஆகியவை. இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தும், இந்த நிருபம் கவனமான இலக்கிய வடிவமைப்பை கொண்டிருந்தபோதிலும், , எழுதப்பட்ட சொற்பொழிவின் சிறப்பியல்புகளை  காட்டிலும் வாய்மொழியின் சிறப்பியல்புகளை எடுத்துக்கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

யாக்கோபின் மற்றொரு சிறப்பியல்பு அவரது அசாதாரண சொற்களஞ்சியம். 35 வயதான டிபெலியஸ், இந்தத் தரவுகளில் பெரும்பாலானவை சூழ்நிலை சார்ந்தவை என்று கூறுவது நிச்சயமாக சரியானது - மற்ற NT எழுத்தாளர்கள் ஒரே மாதிரியான பேச்சு வடிவங்களை வெறுமனே தேர்ந்தெடுப்பதில்லை, மாறாக அந்த சொற்கள் மொழியில் பொதுவானதாக இருந்திருக்க வேண்டும் - இருப்பினும் தரவுகள்,  அளவு மற்றும் மூலம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. மேயரின் ccxlvi–ccxlviii கூற்றுப்படி, யாக்கோபில் 63 புதிய ஏற்பாட்டின் தனித்த வார்த்தைகள் உள்ளன. யாக்கோபில் இடம்பெறும் 13, முதன்முறையாக கிரேக்க மொழியில் தோன்றுகிறது. அவை: ἀνέλεος (2:13), ἀνεμιζόμενος (1:6), ἀπείραστος (1:13(σακαστος), (1:17), δαιμονιώδης (3:15), δίψυχος (1:8; 4:8), θρησκός (1:26), πογλύσ1σπλλλ6), προσωπολημπτέω (2:9), προσωπολημψία (2:1), ῥυπαρία (1:21), χααλιια (1:21), χαλγιια 3:2), χρυσοδακτύλιος (2:2). இவற்றில் சில முன்னர் அந்த மொழியில் இருந்திருக்கலாம், அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு யாக்கோபு தானே உருவாக்கிக் கொண்டிருக்கலாம் (எ.கா. χρυσοδακτύλιος). மீதமுள்ள சொற்களில் 45 சொற்கள் LXX இல் காணப்படுகின்றன; எனவே அவரது மொழியின் மற்றொரு சிறப்பியல்பு விவிலியம் மற்றும் செமிட்டிஸங்களைப் பயன்படுத்துவதாகும். (P.No.109, The Epistle of James by Peter H.Davids, THE NEW INTERNATIONAL GREEK TESTAMENT COMMENTARY) 

    நாம் மேலே சுட்டிகாட்டிய Peter H.Davids அவர்களது விளக்கம் நாம் சுட்டி காட்டிய சொற்களஞ்சிய தனித்துவத்தை மட்டும் எடுத்துக்காட்டவில்லை, மாறாக அதில் இருக்கும் இலக்கிய நயம், அணி, ஓசைநயம் , இலக்கண செம்மை என்று பல கோணங்களை முன்னிறுத்துகிறது. அவரது இறுதி வார்த்தைகளான LXX உடனான ஒப்பீடு யாக்கோபை சாதரண மீனவனாக காட்டவில்லை, மாறாக யூத மத கல்வியை கற்றவராக காட்டுகிறது. எனவெ இந்த நிருபத்தை உருவாக்கியவர் ஒரு கிரேக்கத்தை தாய்மொழியாக கொண்ட  யூத கிறித்தவராக இருக்கவேண்டும். நிச்சயமாக பாலஸ்தீன யூதராக இருக்க மாட்டார். எனவே தான் Pierre-Antoine Bernheim என்ற புதிய ஏற்பாட்டு அறிஞர் பின்வருமாறு கூறுகிறார் 

    The Letter of James is indubitably a complex and ambiguous document. There is no feature in it which allows us to reject it as inauthentic. However, the language, style and structure of the letter make it more probable that it was composed by a Hellenized Jewish Christian in the 60s or 70s. (P.No.244, James, Brother of Jesus by Pierre-Antoine Bernheim)

யாக்கோபின் நிருபம் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சிக்கலான மற்றும் தெளிவற்ற ஆவணம். அதை நம்பகத்தன்மையற்றது என்று நிராகரிக்க அனுமதிக்கும் எந்த அம்சமும் அதில் இல்லை. இருப்பினும், கடிதத்தின் மொழி, பாணி மற்றும் அமைப்பு 60கள் அல்லது 70களில் ஒரு  ஹெலனிஸ்ட யூத கிறிஸ்தவரால் இது இயற்றப்பட்டிருக்கலாம் என்பதை அதிக சாத்தியமாக்குகிறது. (P.No.244, James, Brother of Jesus by Pierre-Antoine Bernheim) 

    ஒவ்வொரு நூற்றாண்டிலும் இந்த நிருபத்தின் மேலான சந்தேகம் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மத்தியில் அதிகரித்துவருவதையும், விடையில்லா கேள்விகள் இந்த நிருபத்தை சுற்றி அதிகரித்து வருவதையும், நாம் பதிவிட்ட தரவுகள் தெளிவாக காட்டுகிறது.  

கழுகுப்பார்வை:

சென்ற மூன்று கட்டுரைகளின் வழியாக பின்வரும் முடிவுகள் யாக்கோபின் நிருபம் குறித்து நம்மால் பெறமுடிகிறது:

1.நியதியாக அங்கிகரிக்கப்பட எடுத்துக்கொள்ளப்பட்ட காலம்:

இந்த நிருபத்தின் உண்மை எழுத்தராக கருதப்படும் யாக்கோபு கி.பி.62ல் மரணித்துவிடுகிறார். முதன் முதலில் யாக்கோபின் பெயரில் ஒரு நிருபம் இருக்கிறது என்ற தகவலே ஓரிகன்தான் பதிவிடுகிறார். அதாவது மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில். அதாவது யாக்கோபிற்கு கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு பிறகு. அப்போது அது மிகப்பரவலாக ஆகவில்லை என்பதை ஓரிகன் வார்த்தை காட்டுகிறது. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இன்னும் சர்ச்சைக்குரிய நூலாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு பிற்குதான் இந்த நிருபம் மக்கள் மத்தியில் பரவலாகிறது. அதாவது யாக்கோபின் தலைமுறையினர், யாக்கோபின் சீடர்கள் இவர்கள் எல்லாம் மறைந்த பிற்குதான் இந்த நிருபம் பரவலாகிறது. இந்த கால இடைவெளியும், எழுத்தர் குறித்த சர்ச்சையுமே இந்த நிருபத்தில் போதிய இடைச்செருகள்கள் நுழைவதற்கும், யாக்கோபின் பெயரில் இட்டுக்கட்டப்படுவதற்கும் போதிய காலாமாக இருக்கிறது. எனவே இந்த நிருபத்தை யாக்கோபு என்ற சீடனுடையது என்று அருதியிட்டு கூற இயலாது.

2.கொள்கை மாறுபாடு:

இந்த நிருபத்தின் கொள்கை பவுலிய கொள்கைக்கு மாற்றமாய் அல்லது எதிராக அமைந்திருப்பது, கிறிஸ்துவை பற்றி பேசிய யாக்கோபு ஒரு இடத்திலும் சிலுவை பாடுகள், அதன் மீதான நம்பிக்கை பற்றி வாய்திறக்காதது, நியாயப்பிரமானத்தை பின்பற்றுவதை உயர்த்தி பிடிப்பது, உள்ளிட்டவை இந்த நிருபத்தை மார்டின் லூதர் போன்றவர்கள் சந்தேகிக்க போதுமானதாய் இருக்கிறது. பவுலிய கொள்கை பரவல் என்பது பவுலிய கடித பரவலுடன் தொடர்புடையது. பவுலிய கடிதங்களின் வெளிரங்க மேற்கோல்கள் கி.பி.150 க்கு பிறகுதான். அதற்கு மாற்று கருத்தினை கொண்ட நிருபமாக இது இருப்பதனால் இந்த நிருபம் இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாக சில அறிஞர்கள் கருதுவது கவனிக்கத்தக்கது.

3.நிருபத்தின் மெருகூட்டப்பட்ட கிரேக்கமும், LXXன் நிபுனத்துவமும்:

இந்த நிருபத்தின் மெருகூட்டப்பட்ட கிரேக்கமும், LXXன் நிபுனத்துவமும்  பல அறிஞர்களை இது கலியேயே மீனவரான யாக்கோபினால் எழுதப்பட்ட்து அல்ல. மாறாக இது யாரோ ஒரு ஹெல்லனிஸ்ட் யூத கிறித்தவரால் இயற்றப்பட்டது என்கிறார்கள். ஒருவேளை அவர் எழுத்தரை கொண்டு எழுதியிருப்பார் என்று அனுமானிக்கலாம். அந்த எழுத்தர் யார் என்ற கேள்வி அதை வால்பிடித்து வரும். இன்னும் ஒரு படி மேலே சென்ற F.Spitta, Massebieau  போன்ற புரோட்டஸ்டண்ட் அறிஞர்கள் இந்த நிருபம் அடிப்படையில் ஒரு யூத ஏடு. அதனை கிறித்தவர்கள் யாக்கோபின் பெயரில் இட்டுக்கட்டி இடைச்செருகல் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள். 

இப்படி புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு நூலும் அதன் நம்பகத்தன்மையில் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மத்தியில் பெரும் குளறுபடிகளை  கொண்டிருப்பதை நம்மால் கண்கூடாக காண முடிகிறது. அதற்கு யாக்கோபின் நிருபமும் விதிவிலக்கல்ல. அல்லாஹு அஃலம்.

Saturday, September 6, 2025

யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்

 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم 

யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்

        நாம் சென்ற தொடரில் யாக்கோபின் நிருபத்தின் வரலாற்று அறிமுகம், அதன் நியமன அங்கிகாரம் பெற்றத்தின் படி நிலைகளையும்  தரவுகளுடன் விளக்கியிருந்தோம். மேலும் அதன் நம்பகத்தன்மை எப்படி கிறித்தவ உலகில் நிலையற்றதாய் இருக்கிறது என்பதையும் அதே நிலை தற்காலத்திலும் நீடிக்கிறது என்பதையும், புதிய ஏற்பாட்டின் அறிஞர்களின் கூற்றினாலும், புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் இந்த நிருபம் எழுதப்பட்டதாக குறிப்பிடும் கால நிர்ணயத்தில் இருக்கும் முரண்பாடுகளை கொண்டும் விளக்கியிருந்தோம். இந்த நிருபத்தின் எழுத்தர் குறித்த நம்பகத்தன்மையை சந்தேகிப்பதற்கு தற்காலத்தில் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் முன்வைக்கும் காரணங்களையும், அந்த காரணங்களில் சிலவற்றையும் விளக்கமாக காணவுள்ளோம்.

யாக்கோபும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களும்

        தற்காலத்தில் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள், யாக்கோபின் நிருப எழுத்தர்  குறித்து சந்தேகிப்பதற்கு முன்வைக்கும் காரணங்களையும், அவர்களது ஆக்கங்களையும் பட்டியலிடுகிறோம்

அறிஞர் முன்வைக்கும் காரணம்/வாதம் காரணம் முன்வைக்கப்படும் அறிஞரின் ஆக்கம்
 Oecumenius (Byzantine commentator)

அதன் தாமதமான நியமன ஏற்பு.

Commentary on the Catholic Epistles
Martin Luther (1483–1546) விசுவாசத்தினால் மட்டுமே நீதிமான்களாக்கப்படுதல் (ரோமர், கலாத்தியர்) என்ற பவுலின் போதனைக்கு யாக்கோபு முரண்படுவதாகத் தோன்றுவது. Preface to the New Testament (1522 revised 1546)
Andreas Karlstadt (1486–1541 யாக்கோபின் அப்போஸ்தலத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியது Apologia(1520)
Erasmus of Rotterdam (1466–1536) நீதியாளன் யாக்கோப்பின் (கலிலேய அராமேய மொழி பேசுபவர்) அசாதாரணமான  பாணியிலான கிரேக்க மொழியின் நேர்த்தி. Annotations on the New Testament (1516)
Louis Cappellus (1585- 1658) மொழியியல் சிக்கல்கள் Critica Sacra(1650)
Johann Salomo Semler
(1725–1791)
யாக்கோபு அப்போஸ்தலர் அல்லாதவராகக் கருதப்படுகிறது. 2 ஆம் நூற்றாண்டு அநாமதேய கிறிஸ்தவரால் எழுதப்பட்டிருக்கலாம். கடிதம் படிப்படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதன் சந்தேகத்திற்குரிய தோற்றத்தை பிரதிபலிக்கிறது என்று கூறப்படுகிறது. Abhandlung von freier Untersuchung des Kanon (1771- 1775)
Jean Le Clerc (1657- 1736)மொழியியல் மெருகு மற்றும் ஆரம்பகால சபை பிதாக்களின் சாட்சியங்களின் பற்றாக்குறை Ars Critica and  Annotations on the New Testament(1703)
Johann David Michaelis (1717–1791) கலிலேயே யூதரான  யாக்கோப்பின்  மிகவும் நேர்த்தியான கிரேக்கம யாக்கோப்பு நிருபத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. ஆரம்பகால பேட்ரிஸ்டிக் எழுத்துக்களில் ஜேம்ஸ் அரிதாகவே மேற்கோள் காட்டப்பட்டதாகவும், இது தாமதமான மற்றும் சந்தேகத்திற்குரிய ஏற்றுக்கொள்ளலைக் குறிக்கிறது  Introduction to the New Testament(Einleitung in die gottlichen Schriften des Neuen Bundes, 1750- 1767)
Edward Evanson (1731–1805)யாக்கோபின் நிருபம், பவுலின் நம்பிக்கையின் இறையியலை சமப்படுத்த வடிவமைக்கப்பட்ட பிற்கால மோசடியாகக் கருதப்படுகிறது The Dissonance of the Four Generally Received Evangelists: And the Evidence of Their Respective Authenticity, Examined; with that of Some Other Scriptures Deemed Canonical
Gotthold Ephraim Lessing (1729-1781) ஆரம்பகால நியதி சர்ச்சைகள் Theological writings (1774-1778)
Johann Gottfried Eichhorn (1752- 1827) ஹெலனிஸ்டிக் கிரேக்க பாணி மற்றும் பாலஸ்தீனிய யூத கிறிஸ்தவத்துடன் தொடர்பு இல்லாதது Einleitung in das Neue  Testament (1804)
Ferdinand Christian Baur (1792–1860) பவுலிய மற்றும் யூத-கிறிஸ்தவ பிரிவுகளை சமரசம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட 2 ஆம் நூற்றாண்டின் உருவாக்கமாக யாக்கோபின் நிருபத்தை கண்டார். இது புனைப்பெயரில் எழுதப்பட்ட்து.  யாக்கோபின்  மரணத்திற்குப் பிறகு நீண்ட காலத்திற்குப் பிறகான சர்ச் மோதல்களைப் பிரதிபலிக்கிறது. Paulus, der Apostel Jesu Christi(1845) and Kirchengeschichte der drei ersten Jahrhunderte (1853)
Karl Weizsacker (1822- 1899) மிகவும் மெருகூட்டப்பட்ட கிரேக்கம். அசல் நிருப  அம்சங்கள் ஏதுமில்லாத ஒரு ஒழுக்கவியல் பிரசங்கமாக யாக்கோபின் நிருபத்தை கருதுகிறார். Das apostolische Zeitalter der christlichen Kirche (1886)
Albrecht Ritschl (1822–1889) யாக்கோபு நிருபத்தின் கிரியைக்கான முக்கியத்துவம், பவுலிய எதிர்ப்புக்கு வேண்டுமென்றே செய்யப்பட்ட திருத்தமாகக் கருதப்படுகிறது. Die Entstehung der altkatholischen Kirche(1850)
Adolf Hilgenfeld (1823–1907) பவுலின் இறையியலை மென்மையாக்குவதற்காக எழுதப்பட்ட, அப்போஸ்தலிக்கத்திற்குப் பிந்தையது என்று யாக்கோபின் நிருபம் என்று வாதிடுகிறார். கிரியைக்கான நீதி தொடர்பாக தேவாலயத்திற்குள் நடந்த போராட்டத்தின் சான்றாக இதைக் காண்கிறார். Einleitung in das Neue  Testament (1875)
Martin Dibelius (1883–1947) 19 ஆம் நூற்றாண்டின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட அவரது விளக்கவுரை, யாக்கோபின் நிருபத்தை ஒரு உண்மையான அப்போஸ்தலிக்க கடிதமாக அல்லாமல் ஒரு ஞான அறிவுரையாகக் கருதியது. ஜேம்ஸை அசல் நிருபத்தின் அம்சங்கள் இல்லாத ஒரு ஒழுக்கவியல் பிரசங்கமாகக் கருதினார். James (Hermeneia, 1975; orig. 1921)
Heinrich Julius Holtzmann (1832- 1910) இது முதலாம் நூற்றாண்டு பாலஸ்தீனத்திற்குப் பொருந்தாது, ஆனால் பிற்கால ஹெலனிஸ்டிக் சூழலைப் பிரதிபலிக்கிறது. Lehrbuch der neutestamentlichen Theologie(1896)
James Moffatt (1870–1944) யாக்கோபின் பெயரில் இட்டுக்கட்டபட்ட ஒன்று. ஜெருசலேமின் யாக்கோபு அல்லாத வேறொருவரால் நேர்த்தியான கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. An Introduction to the Literature of the New Testament. (1911)
Rudolf Bultmann (1884–1976) யாக்கோபின் நிருபத்தை ஹெலனிஸ்டிக்-யூத ஞான மரபில் அப்போஸ்த்தலர் அல்லாத ஒருவரால் எழுதப்பட்டது.  யாக்கோபின்  கடிதமாக அல்ல, ஒழுக்கவியல்  கூற்றுக்களின் தளர்வான தொகுப்பாக இதைப் பார்த்தார். Theology of the New Testament(1948)
Hans Conzelmann (1915–1989) Martin Dibelius உடன் உடன்படுகிறார்: யாக்கோபின் நிருபம்  அப்போஸ்தலருக்குப் பிந்தையது. மேலும்  யாக்கோபின்  சொந்த போதனையை விட பொதுவான திருச்சபை போதனையை பிரதிபலிக்கிறது. Einleitung in das Neue  Testament (1963)
Raymond E. Brown (1928–1998) பாணி மற்றும் இறையியல் காரணமாக, யாக்கோபு வரலாற்று  யாக்கோபாக  இருக்க வாய்ப்பில்லை. An Introduction to the New Testament (1997)
Luke Timothy Johnson (b. 1943) 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பான்மையான அறிஞர்களின் ஒருமித்த கருத்தான,  யாக்கோபின் நிருபம்  அப்போஸ்தலருடையது அல்ல என்பதை அவர் ஏற்கிறார். The Letter of James (AYB, 1995)
 Werner Kümmel (1905-1995)   யாக்கோபின் நிருபம்  புனையப்பட்டது, 1 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 2 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாக்கோபின்  பெயரை பயன்படுத்தி யாரோ எழுதியது. Introduction to the New Testament(1966)
James Hardy Ropes (1866- 1933) சிறந்த கிரேக்க பாணி மற்றும் பாலஸ்தீனிய பின்னணி இல்லாமை. ஜெருசலேம் அல்லாத புலம்பெயர் ஹெலனிஸ்டிக் கிறிஸ்தவத்தின் தயாரிப்பு. The Epistle of St. James (ICC Commentary 1916)
 John Painter (b. 1935) ஜெருசலேமின் யாக்கோபின் நேரடி எழுத்துருவாக்கத்திற்கு எதிராக வாதிடுகிறார். பிற்கால சூழலில் யூத-கிறிஸ்தவ நெறிமுறை மரபை வலுப்படுத்த  யாக்கோபின்  பெயரில் புனையப்பட்ட கடிதமாக பார்க்கிறார். James(2004)
Dale C. Allison Jr. (b. 1955)இவர், யாக்கோபு நிருபத்தின் முன்னணி  நிபுணர்.  யாக்கோபின் கிரேக்க பாணி மற்றும் ஞான அறிவுரை வகை  யாக்கோபின் நேரடி எழுத்துருவாக்கத்தை சாத்தியமற்றதாக்குகிறது. இது 1 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்டதைக் குறிக்கிறது. A Critical and Exegetical Commentary on the Epistle of James (ICC, 2013)
Richard Bauckham (b. 1946) இதன் நம்பகத்தன்மைக்கு அதிக சார்பு நிலையை கொண்டிருந்தாலும், புனையப்பட்டது என்ற அறிஞர்களின் ஒருமித்த கருத்தை ஏற்கிறார். யாக்கோபின் நேரடி எழுத்துருவாக்கம் என்பதற்குப் பதிலாக யாக்கோபை மையமாகக் கொண்ட மரபினால் இந்த நிருபம் எழுத்தப்பட்டது என்கிறார். Essays on James (Collected in studies of jude/james, 2000s)
Patrick J. Hartin (b. 1949) யாக்கோபின் நிருபத்தை ஹெலனிஸ்டிக் யூத-கிறிஸ்தவ ஞானத்தைப் பிரதிபலிப்பதாகக் கருதுகிறார், வரலாற்று ஜேம்ஸ் அல்லாமல் பிற்கால சீடர் ஒருவர் அவரது பெயரில் எழுதியதாகக் கூறுகிறார். James (Sacra Pagina, 2003)
Dan McCartney, Sophie Laws’ successors, Margaret Mitchell) மிகவும் மெருகூட்டப்பட்ட கிரேக்கம், நிருப வடிவம் அல்லாமல் ஞானம்/பிரசங்க வடிவம்,. ஆரிகன் /யூசிபியஸுக்கு போன்றவர்களுக்கு முன் அரிதான ஆதி திருச்சபை பிதாக்களின் சான்றுகள், பவுலுடன் இறையியல் மோதல் ஆகிய காரணத்தை முன்னிறுத்துகின்றனர். --
Pheme Perkins இந்த உரையை ஒரு அப்போஸ்தலிக்கத் தலைவருக்கு அல்ல, கிரேக்கமயமாக்கப்பட்ட கிறிஸ்தவ ஒழுக்க ஆசிரியருக்குக் முன்மொழிகிறார் The Letter of James” (New Interpreter’s Bible, Vol. XII, 1998)
Peter H. Davids பெயர் தெரியாத புனைவாக கருதுகிறார். "யாக்கோபின் நிருபம்" அதிகாரத்திற்காக ஏற்கனவே உள்ள ஞான உரையுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் The Epistle of James (NIGTC, 1982) 

💥தாமதமான நியமன ஏற்பு 
💥பவுலின் போதனைக்கு யாக்கோபு முரண்படுவதாகத் தோன்றுவது 
💥நீதியாளன் யாக்கோப்பின் (கலிலேய அராமேய மொழி பேசுபவர்) அசாதாரணமான ஹெலனிஸ்டிக் பாணியிலான கிரேக்க மொழியின் நேர்த்தி. 
💥அசல் நிருப அம்சங்கள் ஏதுமில்லாத ஒரு ஒழுக்கவியல் பிரசங்கமாக இருப்பது.

        மேலே பட்டியலிடப்பட்ட காரணத்தில் முதலில் கூறப்பட்டது குறித்து சென்ற கட்டுரையில் விளக்கியுள்ளோம். மேலும் சில காரணங்களை நாம் விளக்குவதை விட, கிறித்தவ வரலாற்றில் மிக முக்கியமானவராக கருத்தப்படும் ஒருவரின் விளக்கத்தை முன்வைப்பதே இங்கு ஆகப்பொருத்தமானதாக இருக்கும். அவர் வேறு யாரும் அல்ல, புரோட்டஸ்டண்டின் தந்தை என்று கிறித்தவ உலகால் அழைக்கப்படும் மார்டின் லூதர் அவர்கள்தான். 

மார்டின் லூதரின் விமர்சனம்

        யாக்கோபின் நிருபம் குறித்த விமர்சனத்தை பொருத்தவரை பலர் இதனை சர்ச்சைக்குரியது என்று கி.பி.3ம் நூற்றாண்டு முதல் கூறிவந்திருந்தாலும், இந்த விமர்சனத்தை நாம் அறிந்த வரையில் நேர்த்தியாக முதன் முதலில் முன்வைத்தவர் புரட்டஸ்தாந்தத்தின் தந்தையான மார்டின் லூதர்தான். அதனை அவரது எழுத்துக்களில் இருந்தும், பேச்சுக்களில் இருந்தும் முன்வைக்கிறோம்.

        In a word, St. John’s Gospel and his first Epistle, St. Paul’s Epistles, especially Romans, Galatians and Ephesians, and St. Peter’s first Epistle are the books that show you Christ and teach you all that it is necessary and good for you to know, even though you were never to see or hear any other book or doctrine. Therefore St. James’ Epistle is really an epistle of straw, compared to them; for it has nothing of the nature of the Gospel about it.

சுருக்கமாகச் சொன்னால், புனித யோவானின் நற்செய்தி மற்றும் அவரது முதல் நிருபம், புனித பவுலின் நிருபங்கள், குறிப்பாக ரோமர், கலாத்தியர் மற்றும் எபேசியர், மற்றும் புனித பேதுருவின் முதல் நிருபம் ஆகியவை உங்களுக்கு கிறிஸ்துவைக் காட்டி, உங்கள் அனைவருக்கும் கற்பிக்கும் புத்தகங்கள். நீங்கள் வேறு எந்த புத்தகத்தையும் கோட்பாட்டையும் பார்க்கவோ கேட்கவோ இல்லை என்றாலும், அதை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம் மற்றும் நல்லது. எனவே, புனித யாக்கோபின் நிருபம், அவற்றுடன் ஒப்பிடும்போது உண்மையில் வைக்கோலால் ஆன நிருபம்; ஏனெனில் அதில் நற்செய்தியின் தன்மை எதுவும் இல்லை. ( PREFACE TO THE NEW TESTAMENT 1545 (1522), WORKS OF MARTIN LUTHER VOL. 6 by Martin Luther , THE AGES DIGITAL LIBRARY COLLECTIONS P.No. 339)

        Though this Epistle of St. James was rejected by the ancients, I praise it and hold it a good book, because it sets up no doctrine of men and lays great stress upon God’s law. But to state my own opinion about it, though without injury to anyone, I consider that it is not the writing of any apostle.

My reasons are as follows. 

First: Flatly against St. Paul and all the rest of Scripture, it ascribes righteousness to works, and says that Abraham was justified by his works, in that he offered his son Isaac, though St. Paul, on the contrary, teaches, in Romans 4:2, that Abraham was justified without works, by faith alone, before he offered his son, and proves it by Moses in Genesis 15:6. Now although this Epistle might be helped and a gloss be found for this work-righteousness, it cannot be defended against applying to works the saying of Moses in Genesis 15:6, which speaks only of Abraham’s faith, and not of his works, as St. Paul shows in Romans 4. This fault, therefore, leads to the conclusion that it is not the work of any apostle.  

Second: Its purpose is to teach Christians, and in all this’ long teaching it does not once mention the Passion, the Resurrection, or the Spirit of Christ. He names Christ several times, but he teaches nothing about Him, and only speaks of common faith in God. For it is the duty of a true apostle to preach of the Passion and Resurrection and work of Christ, and thus lay the foundation of faith, as He Himself says, in John 15:27, “Ye shall bear witness of me.” All the genuine sacred books agree in this, that all of them preach Christ and deal with Him. That is the true test, by which to judge all books, when we see whether they deal with Christ or not, since all the Scriptures show us Christ (Romans 3:21), and St. Paul will know nothing but Christ (1 Corinthians 15:2). What does not teach Christ is not apostolic, even though St. Peter or Paul taught it; again, what preaches Christ would be apostolic, even though Judas, Annas, Pilate and Herod did it.

        But this James does nothing more than drive to the law and its works; and he mixes the two up in such disorderly fashion that it seems to me he must have been some good, pious man, who took some sayings of the apostles’ disciples and threw them thus on paper; or perhaps they were written down by someone else from his preaching. He calls the law a “law of liberty,” though St. Paul calls it a law of slavery, of wrath, of death and of sin (Galatians 3:23; Romans 7:11).  
       Moreover, in James 5:20, he quotes the sayings of St. Peter, “Love covereth the multitude of sins” (1 Peter 4:8) and “Humble yourselves under the hand of God” (1 Peter 5:6), and of St. Paul (Galatians 5:10), “The Spirit lusteth against hatred”; and yet, in point of time, St. James was put to death by Herod, in Jerusalem, before St. Peter.  So it seems that he came long after Sts. Peter and Paul.  
        In a word, he wants to guard against those who relied on faith without works, and is unequal to the task [in spirit, thought, and words, and rends the Scriptures and thereby resists Paul and all Scripture], and would accomplish by insisting on the Law what the apostles accomplish by inciting men to love. Therefore, I cannot put him among the chief books, though I would not thereby prevent anyone from putting him where he pleases and estimating him as he pleases; for there are many good sayings in him.
    புனித யாக்கோபின் இந்த நிருபம் பழங்காலத்தவர்களால் நிராகரிக்கப்பட்டாலும், நான் அதைப் பாராட்டுகிறேன், இதை ஒரு நல்ல புத்தகமாக வைத்திருக்கிறேன், ஏனெனில் இது மனிதர்களின் எந்தக் கோட்பாட்டையும் அமைக்கவில்லை மற்றும் கடவுளின் சட்டத்தின் மீது அதிக அழுத்தத்தை அளிக்கிறது. ஆனால், அதைப் பற்றி யாருக்கும் பாதிப்பில்லாமல் என் சொந்தக் கருத்தைச் சொன்னால், “அது எந்த இறைத்தூதர் எழுதியது அல்ல என்று கருதுகிறேன்” என்பதே. 
என்னுடைய காரணங்கள் பின்வருமாறு

முதலாவது: புனித பவுலுக்கும் வேதாகமத்தின் மற்ற எல்லா பகுதிகளுக்கும் எதிராக, அது கிரியைக்கு நீதியைக் கூறுகிறது, மேலும் ஆபிரகாம் தனது மகன் ஈசாக்கை பலியாகக் கொடுத்ததன் மூலம் தனது கிரியையினால் நீதிமானாக்கப்பட்டதாகக் கூறுகிறது, ஆனால் புனித பவுல், மாறாக, ரோமர் 4:2 இல், ஆபிரகாம் தனது மகனை பலியாகக் கொடுப்பதற்கு முன்பு, கிரியையினால் இல்லாமல், விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்பட்டதாகக் கற்பிக்கிறார், மேலும் ஆதியாகமம் 15:6 இல் மோசேயின் மூலம் இதை நிரூபிக்கிறார். இந்த கிரியை-நீதி என்பதற்கு, இந்த நிருபம் துணையாக இருந்து அதற்கு விளக்கத்தை , கொண்டிருந்தாலும், ஆதியாகமம் 15:6-ல் மோசேயின் வார்த்தையை, கிரியைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதை தடுக்க முடியாது, ரோமர் 4 இல் புனித பவுல் காட்டுவது போல, இது ஆபிரகாமின் விசுவாசத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறது, அவருடைய செயல்களைப் பற்றி அல்ல. எனவே, இந்தக் குறை, இது எந்த அப்போஸ்தலரின் எழுத்தும் அல்ல என்ற முடிவுக்கு இட்டுச் செல்கிறது. 

இரண்டாவது: இதன் நோக்கம் கிறிஸ்தவர்களுக்குக் கற்பிப்பதாகும், மேலும் இந்த நீண்ட போதனைகளில் அது ஒருமுறை கூட பாடுகள், உயிர்த்தெழுதல் அல்லது கிறிஸ்துவின் ஆவியைக் குறிப்பிடவில்லை. அவர் பலமுறை கிறிஸ்துவின் பெயரைக் குறிப்பிடுகிறார், ஆனால் அவரைப் பற்றி எதுவும் கற்பிக்கவில்லை, மேலும் கடவுள் மீதான பொதுவான நம்பிக்கையைப் பற்றி மட்டுமே பேசுகிறார். ஏனென்றால், கிறிஸ்துவின் பாடுகள், உயிர்த்தெழுதல் மற்றும் கிரியையைப் பற்றிப் பிரசங்கிப்பதும், அதன் மூலம் விசுவாசத்தின் அடித்தளத்தை அமைப்பதும் ஒரு உண்மையான அப்போஸ்தலரின் கடமையாகும், அவர் தாமே யோவான் 15:27 இல், "நீங்கள் என்னைக் குறித்துச் சாட்சி கொடுப்பீர்கள்" என்று கூறுகிறார். எல்லாப் புத்தகங்களும் கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகின்றனவா இல்லையா என்பதைப் பார்க்கும்போது, எல்லாப் புத்தகங்களையும் மதிப்பிடுவதற்கான உண்மையான சோதனை அதுதான், ஏனென்றால் எல்லா வேதவாக்கியங்களும் நமக்குக் கிறிஸ்துவைக் காட்டுகின்றன (ரோமர் 3:21), மேலும் புனித பவுல் கிறிஸ்துவைத் தவிர வேறு எதையும் அறியமாட்டார் (1 கொரிந்தியர் 15:2). கிறிஸ்துவைப் போதிக்காதது அப்போஸ்தலருடையது அல்ல, புனித பேதுரு அல்லது பவுல் அதைக் கற்பித்திருந்தாலும் கூட; இன்னும், கிறிஸ்துவைப் பிரசங்கிப்பது அப்போஸ்தலருடையதாய் இருக்கும். அதை யூதாஸ், அன்னாஸ், பிலாத்து மற்றும் ஏரோது செய்திருந்தாலும் கூட,.

    ஆனால் இந்த யாக்கோபு நியாயப்பிரமாணத்தையும் அதன் செயல்களையும் நோக்கிச் செல்வதைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை; இரண்டையும் மிகவும் ஒழுங்கற்ற முறையில் குழப்புகிறார், அவர் ஒரு நல்ல, பக்தியுள்ள மனிதராக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது, அவர் அப்போஸ்தலர்களின் சீடர்களின் சில கூற்றுகளை எடுத்து காகிதத்தில் எழுதியிருக்கலாம்; அல்லது ஒருவேளை அவை வேறொருவரால் அவரது பிரசங்கத்திலிருந்து எழுதப்பட்டிருக்கலாம். அவர் நியாயப்பிரமாணத்தை "சுதந்திரத்தின் சட்டம்" என்று அழைக்கிறார், ஆனால் புனித பவுல் அதை அடிமைத்தனம், கோபம், மரணம் மற்றும் பாவத்தின் சட்டம் என்று அழைக்கிறார். (கலாத்தியர் 3:23; ரோமர் 7:11) 
        மேலும், யாக்கோபு 5:20-ல், அவர் புனித பேதுருவின் கூற்றுகளான "அன்பு திரளான பாவங்களை மூடும்" (1 பேதுரு 4:8) மற்றும் "தேவனுடைய பலத்த கைக்குள் தாழ்மைப்படுங்கள்" (1 பேதுரு 5:6, யாக்கோபு 4:10) மற்றும் புனித பவுலின் கூற்றுகளான "ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது;" (கலாத்தியர் 5:17) ஆகியவற்றை மேற்கோள் காட்டுகிறார்; ஆனாலும், அந்த காலப்பகுதியில், புனித யாக்கோபு எருசலேமில், புனித பேதுருவுக்கு முன்பாக ஏரோதுவால் கொல்லப்பட்டிருந்தார். எனவே இவர் புனித பேதுரு மற்றும் பவுல் ஆகியோருக்கு பின்னர் நீண்ட காலத்திற்கு பிறகு வந்ததாகத் தெரிகிறது.  
        சுருக்கமாகச் சொன்னால், கிரியைகள் இல்லாமல் விசுவாசத்தை நம்பியிருப்பவர்களிடமிருந்தும், [ஆவி, சிந்தனை மற்றும் வார்த்தைகளில், வேதவசனங்களைக் கிழித்து, அதன் மூலம் பவுலையும் எல்லா வேதவசனங்களையும் எதிர்ப்பவர்களிடமிருந்தும்] அவர் தற்காக்க விரும்புகிறார், மேலும் அப்போஸ்தலர்கள் மனிதர்களை அன்பு செய்யத் தூண்டுவதன் மூலம் நிலைநிறுத்துவதை நியாயப்பிரமாணத்தை வலியுறுத்துவதன் மூலம் நிலைநிறுத்துகிறார். ஆகையால், அவருடையதை முக்கிய புத்தகங்களில் சேர்க்க முடியாது, இருப்பினும் யாரும் அவருடையதை அவர் விரும்பும் இடத்தில் வைப்பதையும், அவர் விரும்பும் விதமாக மதிப்பிடுவதையும் நான் தடுக்க மாட்டேன்; ஏனென்றால் அவரிடம் பல நல்ல வார்த்தைகளும் உள்ளன. (PREFACE TO THE EPISTLES OF SAINT JAMES AND SAINT JUDE 1545 (1522), WORKS OF MARTIN LUTHER VOL. 6 by Martin Luther , THE AGES DIGITAL LIBRARY COLLECTIONS P.No. 374-375)

        மேலே குறிப்பிட்ட மார்டின் லூதரின் கருத்து யாக்கோபின் நிரூபம் பின்வரும் காரணங்களால் இது அப்போஸ்தலிக்க தகுதியை இழக்கிறது

👉   நம்பிக்கையினால் மட்டும் அல்ல செய்யும் செயலினால் ஒருவர் நியாயம்       தீர்க்கப்படுவார் என்ற யாக்கோபு நிருபத்தின் மையக்கருத்து பவுல் உள்ளிட்டோரின் கொள்கைக்கு மாற்றமானது. 

👉   கிறிஸ்துவை பற்றி பேசிய யாக்கோபு ஒரு இடத்திலும் சிலுவை பாடுகள், அதன் மீதான நம்பிக்கை பற்றி வாய்திறக்கவில்ல 

👉 நியாயப்பிரமானத்தை பின்பற்றுவதை உயர்த்தி பிடிக்கிறது. ஆனால் பவுல் நியாயப்பிரமானம் அடிமைகளின் சட்டம் என்கிறார். 
👉 பேதுரு மற்றும் பவுலின் வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளது இதை எழுதிய யாக்கோபு அப்போஸ்தலர் யாக்கோபு அல்ல மாறாக பேதுரு மற்றும் பவுலிற்கு பிறகு வந்த யார் என்று தெரியாத யாக்கோபு.
    நாம் பட்டியலிட்ட காரணங்களையும் தாண்டி மார்டின் லூதர் தெளிவாக இந்த நிருபத்தின் அப்போஸ்தலிக்க தன்மையை கேள்விக்குள்ளாக்கும் காரணங்களை பட்டியலிட்டுவிட்டார் என்று எண்ணுகிறோம். மொழியியல் குறித்த சிக்கலை அடுத்த பகுதியில் பார்ப்போம்…இன் ஷா அல்லாஹ்.