பக்கங்கள் செல்ல

Showing posts with label Epistle of James. Show all posts
Showing posts with label Epistle of James. Show all posts

Friday, September 12, 2025

யாக்கோபின் நிருபமும் சிக்கலை உருவாக்கும் அதன் கிரேக்கமும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم


    ஒரு ஆக்கத்தின் மொழியியல் இரண்டு விஷயங்களை நமக்கு வெளிப்படுத்தும் ஒன்று எழுதுபவரின் மொழியாற்றல். அடுத்ததாக அதை வாசிப்பவரின் மொழியாற்றல். குறிப்பாக கடிதங்களில், அது தொலைத்தொடர்பு சாதனமாக இருப்பதால் இது மிகவும் அவசியமான ஒன்று. யாக்கோபு நிருபத்தின் கிரேக்க மொழியை புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மிகவும் மெருகூட்டப்பட்டதாய் இருப்பதாக கூறுகின்றனர். "கலியேயாவில் இருந்த, அரமேயத்தை தாய்மொழியாக கொண்ட ஒரு மீனவரான யாக்கோபிற்கு இது எப்படி சாத்தியப்பட்டது ?" என்பதுதான் புதிய ஏற்பாட்டு அறிஞர்களை சந்தேகிக்க வைத்த கேள்வி. இப்படி சிக்கலை தோற்றுவித்த இந்த நிருபத்தின் கிரேக்க மொழியியல் குறித்து இந்த கட்டுரையில் காண்போம் இன் ஷா அல்லாஹ். 


    கி.பி. 1ம் நூற்றாண்டில் ரோமானியர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனிய யூதர்கள் குறித்தும் குறிப்பாக சமூகத்தின் கடைநிலை மக்களின் கல்வித்தரம் குறித்து யூத கலிவியாளரும், லண்டன் பல்கலைகழக பேராசிரியரான Catherine Hezser  பின்வருமாறு கூறுகிறார்.
        The lack of evidence of private letters authored by members of the lower strata of society may be due to the phenomenon, already suggested above, that elementary education and the knowledge of writing were not widespread amongst ancient Jews, at least until the third century C.E., and that, in contrast to the rabbinic letter writers, ordinary people would not have scribes and letter carriers readily available. The relatively high fees charged by professional scribes and letter bearers, in addition to the cost of papyrus, and the general distrust of and suspicion against the correctness of the written message will have contributed to people's reliance on oral means of communication. (P.No.290, Part II: The Occurrence of Writing, Jewish Literacy in Roman Palestine by Catherine Hezser)

சமூகத்தின் கீழ்மட்ட உறுப்பினர்களால் எழுதப்பட்ட தனிப்பட்ட கடிதங்களுக்கான சான்றுகள் இல்லாததற்கு, ஏற்கனவே மேலே கூறப்பட்ட நிகழ்வு காரணமாக இருக்கலாம், தொடக்கக் கல்வியும் எழுத்து அறிவும் பண்டைய யூதர்களிடையே, குறைந்தபட்சம் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரை பரவலாக இல்லை. மேலும், யூத மதபோதகர்களில் கடிதம் எழுதுபவர்களைப் போலன்றி, சாதாரண மக்களுக்கு எழுத்தாளர்கள் மற்றும் கடிதங்களை எடுத்துச் செல்பவர்கள் உடனடியாகக் கிடைப்பதில்லை. பாப்பிரஸின் விலைக்கு கூடுதலாக, தொழில்முறை எழுத்தாளர்கள் மற்றும் கடிதம் எழுதுபவர்களால் வசூலிக்கப்படும் ஒப்பீட்டளவில் அதிக கட்டணம், எழுதப்பட்ட செய்தியின் சரியான தன்மை குறித்த பொதுவான அவநம்பிக்கை மற்றும் சந்தேகம் ஆகியவை மக்கள் வாய்மொழி தொடர்பு வழிமுறைகளை நம்பியிருப்பதற்கு பங்களித்திருக்கும். (P.No.290, Part II: The Occurrence of Writing, Jewish Literacy in Roman Palestine by Catherine Hezser) 

மேலும் ஜோசபஸ் கிரேக்கத்தை கற்றுக்கொள்வதில் இருந்த சிரமத்தை அவர் பின்வருமாறு விவரிக்கிறார்.

I have also taken a great deal of pains to obtain the learning of the Greeks, and understand the elements of the Greek language, although I have so long accustomed myself to speak our own tongue, that I cannot pronounce Greek with sufficient exactness; for our nation does not encourage those that learn the languages of many nations, and so adorn their discourses with the smoothness of their periods;

கிரேக்கர்களின் கல்விகளைப் பெறுவதற்கும், கிரேக்க மொழியின் கூறுகளைப் புரிந்துகொள்வதற்கும் நான் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டேன், ஆனால் நான் நீண்ட காலமாக எனது சொந்த மொழியைப் பேசப் பழகியிருந்தாலும், போதுமான துல்லியத்துடன் என்னால் கிரேக்கத்தை உச்சரிக்க முடியவில்லை;ஏனென்றால், பல தேசங்களின் மொழிகளைக் கற்று, அவர்களின் ஆக்கங்களை அவர்களின் காலகட்டங்களின் சமூகம் அலங்கரிக்கிறவர்களை நம் தேசம் ஊக்குவிப்பதில்லை;  ( Antiquities of Jews XX, chapter XI) 

     இப்படி யூதர்கள் கி.பி.3ம் நூற்றாண்டுவரை ஆரம்பகல்வியை கற்பதே கடினமான காரியமாக இருந்துள்ளது. மேலும் மத ரீதியிலான காரணங்களினாலும் கிரேக்கம் கற்பது ஜோசபஸ் போன்றவர்களுக்கே சவலான ஒன்றாக அமைந்துள்ளது. எனவே மீனவரான யாக்கோபு எப்படி ஏனைய புதிய ஏற்பாட்டில் இல்லாத சொல்லாடலையும், மொழியியல் நயத்தையும் கையாண்டிருக்க முடியும் என்பது மொழியியலை அடிப்படையாக கொண்டு சந்தேகிக்கும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் வாதம். இப்படி யாக்கோபின் நிருபத்திற்கே உரிய தனித்த சொல்லாடல்களை இங்கு பட்டியலாக தருகிறோம்.

அதிகாரம் 1:

வ.
எண்
Strong's Greek Number தனித்த வார்த்தைகள் பொருள்* வசன எண்
01. 182 ἀκατάστατος inconstant 1:8
02. 416 ἀνεμιζομένῳ driven with the wind 1:6
03. 551 ἀπείραστός not to be tempted 1:13
04. 574 ἁπλῶς liberally, sincerely 1:5
05. 616 ἀποκυεῖ beget, produce 1:15, 1:18
06. 644 ἀποσκίασμα shadow 1:17
07. 1374 δίψυχοι  double minded 1:8
08. 1503 ἔοικεν be like 1:6,1:23
09. 1721 ἔμφυτον engrafted, implanted 1:21
10. 1828 ἐξελκόμενος  draw away. 1:14
11. 1953 ἐπιλησμονῆς  forgetful 1:25
12. 2143 εὐπρέπεια grace, beauty 1:11
13. 2357 θρῆσκος religious 1:26
14. 3133 μαρανθήσεται fade away 1:11
15. 3883 παραλλαγὴ fickleness, variableness 1:17
16. 4162 ποιήσει deed 1:25
17. 4494 ῥιπιζομένῳ toss 1:6
18. 4507 ῥυπαρίαν dirtiness, turpitude 1:21
19. 5036 ταχὺς swift 1:19
20. 5157 τροπῆς turning 1:17
21. 5468 χαλιναγωγέω bridle 1:26

அதிகாரம் 2:

வ.
எண்
Strong's Greek Number தனித்த வார்த்தைகள் பொருள் வசன எண்
22. 448 ἀνέλεος without mercy 2:13
23. 2006 ἐπιτήδεια things which are needful 2:16
24. 2184 ἐφημέρου daily 2:15
25. 4380 προσωπολημπτεῖτε to show partiality 2:9
26. 5425 φρίσσουσιν  tremble 2:19
27. 5554 χρυσοδακτύλιος with a gold ring 2:2
28. 4382 προσωπολημψίαις respect of persons 2:1

அதிகாரம் 3

வ.
எண்
Strong's Greek Number தனித்த வார்த்தைகள் பொருள் வசன எண்
29. 87 ἀδιάκριτος  impartial 3:17
30. 182 ἀκατάστατος inconstant 3:8
31. 252 ἁλυκὸν salt  3:12
32. 3166 αὐχεῖ  boast  3:5
33. 1032 βρύει send forth 3:11
34. 1141 δαιμονιώδης devilish 3:15
35. 1724 ἐναλίων thing in the sea 3:7
36. 1990 ἐπιστήμων endued with knowledge 3:13
37. 2138 εὐπειθής compliant, obedient 3:17
38. 2287 θανατηφόρος deadly 3:8
39. 3329 μετάγεται  to guide, direct 3:3, 3:4
40. 4089 πικρόν bitter 3:11, 3:14
41. 5164 τροχός course 3:6
42. 5208 ὕλην a forest, wood, timber 3:5
43. 5394 φλογίζουσα set on fire 3:6
44. 5468 χαλιναγωγέω bridle 3:2
45. 5534 χρή ought 3:10
46. 3699 ὁμοίωσιν the similitude 3:9

அதிகாரம் 4

வ.
எண்
Strong's Greek Number தனித்த வார்த்தைகள் பொருள் வசன எண்
47. 1071 γέλως  laughter 4:9
48. 1374 δίψυχοι  double minded 4:8
49. 2726 κατήφειαν gloominess, dejection 4:9
50. 2761 κενός in vain 4:5
51. 3550 νομοθέτης lawgiver 4:12
52. 5003 ταλαιπωρήσατε endure 4:9
53. 5373 φιλία  friendship 4:4
54. 2730 κατῴκισεν dwelleth 4:5

அதிகாரம் 5

வ.
எண்
Strong's Greek Number தனித்த வார்த்தைகள் பொருள் வசன எண்
55. 270 ἀμησάντων reaped down 5:4
56. 650 ἀφυστερημένος kept back by fraud 5:4
57. 995 βοαὶ cry 5:4
58. 2252 κακοπάθεια suffering, affliction 5:10
59. 2728 κατιόω corrode, rust 5:3
60. 3649 ὀλολύζοντες  howl 5:1
61. 3797 ὄψιμον spring rain 5:7
62. 4184 πολύσπλαγχνός  compassionate, pitiful 5:11
63. 4406 πρόϊμον early rain, early crops 5:7
64. 4595 σέσηπεν be corrupted, perish 5:2
65. 4598 σητόβρωτα  moth-eaten 5:2
66. 5171 ἐτρυφήσατε revel, live in pleasure 5:5

    மேலே இருக்கும் பட்டியல் biblehub என்ற வலைதளத்தில் இடம்பெறும்  Concordance உதவியுடன் தயாரிக்கப்பட்டது. பட்டியலில் ἀκατάστατος, δίψυχοι மற்றும் χαλιναγωγέω  ஆகிய மூன்று வார்த்தைகள் தவிர்த்த 63 வார்த்தைகள் யாக்கோபு நிருபத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களில் கூட இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

It is clear that the writer of the epistle is an able master of literary Koine. This can be concluded from a host of observations: the use of subordination (with conjunctions) and participial constructions rather than coordination, the careful control of word order (e.g. the placing of the stressed object before the verb, the separation of correlated sentence elements for emphasis as in 1:2; 3:3, 8; 5:10), the relative lack of barbarisms and anacolutha, the use of the gnomic aorist (1:11, 24), and choice of vocabulary (e.g. ἔοικεν in 1:6, 23; χρή in 3:10; κάμνω in 5:15; the accusative with ὀμνύμαι in 5:12; the careful use of ὅστις in 2:10; 4:14; the use of τινα in ἀπαρχήν τινα in 1:18). All of these point to a developed literary ability.
Furthermore, a variety of elements belong to good rhetorical style and show that the author was a master not just of literary grammar, but of oral composition as well: paronomasia (χαίρειν-χαράν, 1:1–2), parechesis (ἀπελήλυθεν-ἐπελάθετο, 1:24), alliteration (πειρασμοῖς περιπέσητε ποικίλοις, 1:2), rhyme (ἀνεμιζομένῳ-ῥιπιζομένῳ, 1:6), and similarity in word sounds (note the grouping in 3:17). To this one can add rhythm; in many cases the shift of sentence elements (e.g. placing of the genitive in 1:13 and 4:4) and the choice of vocabulary appear to serve the flow and euphony of the sentence rather than its meaning.
In addition to the above there are a number of further indications of oral style: relatively short sentence structure, frequent use of the imperative (49 in 108 verses) and the forms of direct address (17 occurrences of the vocative, mostly ἀδελφοί), vivid examples, personification (1:15; 2:13), simile (1:6, 10–11; 5:7), rhetorical questions (2:6–7, 14, 17; 4:1, 5), and negative terms (2:20; 4:4, 8). All of these examples together show that despite its careful literary crafting, the letter partakes of the characteristics of oral rather than written discourse.
A further characteristic of James is his unusual vocabulary. Dibelius, 35, is certainly correct to say that much of this data is circumstantial—other NT writers simply do not pick the same figures of speech, but the words themselves must have been common in the language—yet the data are striking in both quantity and source. There are, according to Mayor, ccxlvi–ccxlviii, 63 NT hapax legomena in James. Of these 13 appear in James for the first time in Greek: ἀνέλεος (2:13), ἀνεμιζόμενος (1:6), ἀπείραστος (1:13), ἀποσκίασμα (1:17), δαιμονιώδης (3:15), δίψυχος (1:8; 4:8), θρησκός (1:26), πολύσπλαγχνος (5:11), προσωπολημπτέω (2:9), προσωπολημψία (2:1), ῥυπαρία (1:21), χαλιναγωγέω (1:26; 3:2), χρυσοδακτύλιος (2:2). Some of these may have been in the language previously, while one or two James may have coined himself (e.g. χρυσοδακτύλιος). Of the remaining terms 45 are found in the LXX; thus another characteristic of his language is the use of biblicisms and Semitisms. (P.No.109, The Epistle of James by Peter H.Davids, THE NEW INTERNATIONAL GREEK TESTAMENT COMMENTARY)

    இந்த நிருபத்தின் எழுத்தாளர் இலக்கிய கோயின் கிரக்கத்தில் திறமையான தேர்ச்சி பெற்றவர் என்பது தெளிவாகிறது. பல அவதானிப்புகளிலிருந்து இந்த முடிவுக்கு வரலாம்: இணைப்பு வாக்கியங்களுக்கு பதிலாக (இணைப்புச் சொற்கள் கொண்ட) கலவை வாக்கியங்கள் மற்றும் எச்ச வாக்கிய அமைப்புக்களை பயன்படுத்துதல், சொல் வரிசையை கவனமாக கையாளுதல்,  (எ.கா. வினைச்சொல்லுக்கு முன் முக்கியப்படுத்தப்படும் செயப்படுபொருளை வைப்பது, 1:2; 3:3, 8; 5:10 இல் உள்ளபடி, வலியுறுத்தலுக்காக தொடர்புடைய வாக்கிய கூறுகளைப் பிரித்தல்), முறையற்ற மற்றும் அறிமுகமற்ற வாக்கிய அமைப்புக்கள் இல்லாமல் இருப்பது, சுருக்கமான இறந்தகால வினைச்சொல்லை நிகழ்காலத்திற்கு பயன்படுத்துதல்(1:11,24) மற்றும் சொற்களஞ்சியத்தின் தேர்வு (எ.கா. 1:6, 23 இல் ἔοικεν; 3:10 இல் χρή; 5:15 இல் κάμνω; 5:12 இல் ὀμνύμαι இரண்டாம் வேற்றுமைச்சொல் பயன்பாடு; 2:10 இல் ὅστις கவனமாகப் பயன்படுத்துதல்; 4:14; 1:18 இல் ἀπαρχήν τινα இல் τινα இன் பயன்பாடு) இவை அனைத்தும் வளர்ந்த இலக்கியத் திறனைச் சுட்டிக்காட்டுகின்றன.

மேலும், பலவிதமான கூறுகள் நல்ல சொல்லாட்சி பாணியைச் சேர்ந்தவை என்பதையும் எழுத்தாளர் இலக்கிய இலக்கணத்தில் மட்டுமல்ல, வாய்மொழி அமைப்பிலும் தேர்ச்சி பெற்றவர் என்பதையும் காட்டுகின்றன:சிலேடை (χαίρειν-χαράν, 1:1–2), ஒத்த ஓசை சொற்களை நெருக்கமாக வரிசைப்படுத்துதல்(ἀπελήλυθεν-ἐπελάθετο, 1:24), மோனை (πειρασμοῖς περιπέσητε ποικίλοις, 1:2), எதுகை, இயைபு (ἀνεμιζομένῳ-ῥιπιζομένῳ, 1:6), ஒத்த ஓசையுடைய வார்த்தைகள் (3:17-ல் உள்ள சொல் குழுவாக்கத்தை கவனியுங்கள்) இதனுடன் ஒருவர் தாளத்தைச் சேர்க்கலாம்; பல சந்தர்ப்பங்களில் வாக்கிய கூறுகளின் மாற்றம் (எ.கா. 1:13 மற்றும் 4:4 இல் ஆறாம் வேற்றுமையை வைப்பது) மற்றும் சொற்களஞ்சியத்தின் தேர்வு ஆகியவை வாக்கியத்தின் அர்த்தத்தை விட அதன் ஓட்டம் மற்றும் சுவைக்கு துணை செய்வதாகத் தெரிகிறது.

மேற்கூறியவற்றுடன் கூடுதலாக, வாய்மொழி பாணியின் பல அறிகுறிகள் உள்ளன அவை: ஒப்பீட்டளவில் குறுகிய வாக்கிய அமைப்பு, கட்டளைகளின் அடிக்கடி பயன்பாடு (108 வசனங்களில் 49) மற்றும் நேரடி முகவரியின் வடிவங்கள். (பெரும்பாலும் ἀδελφοί என்ற அழைப்புச்(விளிப்புச்) சொல் 17 முறை இடம்பெறுகிறது), தெளிவான உதாரணங்கள், உருவகப்படுத்துதல் (1:15; 2:13), உவமை (1:6, 10–11; 5:7), சொல்லாட்சிக் கேள்விகள் (2:6–7, 14, 17; 4:1, 5), மற்றும் எதிர்மறை சொற்கள் (2:20; 4:4, 8). ஆகியவை. இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தும், இந்த நிருபம் கவனமான இலக்கிய வடிவமைப்பை கொண்டிருந்தபோதிலும், , எழுதப்பட்ட சொற்பொழிவின் சிறப்பியல்புகளை  காட்டிலும் வாய்மொழியின் சிறப்பியல்புகளை எடுத்துக்கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

யாக்கோபின் மற்றொரு சிறப்பியல்பு அவரது அசாதாரண சொற்களஞ்சியம். 35 வயதான டிபெலியஸ், இந்தத் தரவுகளில் பெரும்பாலானவை சூழ்நிலை சார்ந்தவை என்று கூறுவது நிச்சயமாக சரியானது - மற்ற NT எழுத்தாளர்கள் ஒரே மாதிரியான பேச்சு வடிவங்களை வெறுமனே தேர்ந்தெடுப்பதில்லை, மாறாக அந்த சொற்கள் மொழியில் பொதுவானதாக இருந்திருக்க வேண்டும் - இருப்பினும் தரவுகள்,  அளவு மற்றும் மூலம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. மேயரின் ccxlvi–ccxlviii கூற்றுப்படி, யாக்கோபில் 63 புதிய ஏற்பாட்டின் தனித்த வார்த்தைகள் உள்ளன. யாக்கோபில் இடம்பெறும் 13, முதன்முறையாக கிரேக்க மொழியில் தோன்றுகிறது. அவை: ἀνέλεος (2:13), ἀνεμιζόμενος (1:6), ἀπείραστος (1:13(σακαστος), (1:17), δαιμονιώδης (3:15), δίψυχος (1:8; 4:8), θρησκός (1:26), πογλύσ1σπλλλ6), προσωπολημπτέω (2:9), προσωπολημψία (2:1), ῥυπαρία (1:21), χααλιια (1:21), χαλγιια 3:2), χρυσοδακτύλιος (2:2). இவற்றில் சில முன்னர் அந்த மொழியில் இருந்திருக்கலாம், அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு யாக்கோபு தானே உருவாக்கிக் கொண்டிருக்கலாம் (எ.கா. χρυσοδακτύλιος). மீதமுள்ள சொற்களில் 45 சொற்கள் LXX இல் காணப்படுகின்றன; எனவே அவரது மொழியின் மற்றொரு சிறப்பியல்பு விவிலியம் மற்றும் செமிட்டிஸங்களைப் பயன்படுத்துவதாகும். (P.No.109, The Epistle of James by Peter H.Davids, THE NEW INTERNATIONAL GREEK TESTAMENT COMMENTARY) 

    நாம் மேலே சுட்டிகாட்டிய Peter H.Davids அவர்களது விளக்கம் நாம் சுட்டி காட்டிய சொற்களஞ்சிய தனித்துவத்தை மட்டும் எடுத்துக்காட்டவில்லை, மாறாக அதில் இருக்கும் இலக்கிய நயம், அணி, ஓசைநயம் , இலக்கண செம்மை என்று பல கோணங்களை முன்னிறுத்துகிறது. அவரது இறுதி வார்த்தைகளான LXX உடனான ஒப்பீடு யாக்கோபை சாதரண மீனவனாக காட்டவில்லை, மாறாக யூத மத கல்வியை கற்றவராக காட்டுகிறது. எனவெ இந்த நிருபத்தை உருவாக்கியவர் ஒரு கிரேக்கத்தை தாய்மொழியாக கொண்ட  யூத கிறித்தவராக இருக்கவேண்டும். நிச்சயமாக பாலஸ்தீன யூதராக இருக்க மாட்டார். எனவே தான் Pierre-Antoine Bernheim என்ற புதிய ஏற்பாட்டு அறிஞர் பின்வருமாறு கூறுகிறார் 

    The Letter of James is indubitably a complex and ambiguous document. There is no feature in it which allows us to reject it as inauthentic. However, the language, style and structure of the letter make it more probable that it was composed by a Hellenized Jewish Christian in the 60s or 70s. (P.No.244, James, Brother of Jesus by Pierre-Antoine Bernheim)

யாக்கோபின் நிருபம் சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சிக்கலான மற்றும் தெளிவற்ற ஆவணம். அதை நம்பகத்தன்மையற்றது என்று நிராகரிக்க அனுமதிக்கும் எந்த அம்சமும் அதில் இல்லை. இருப்பினும், கடிதத்தின் மொழி, பாணி மற்றும் அமைப்பு 60கள் அல்லது 70களில் ஒரு  ஹெலனிஸ்ட யூத கிறிஸ்தவரால் இது இயற்றப்பட்டிருக்கலாம் என்பதை அதிக சாத்தியமாக்குகிறது. (P.No.244, James, Brother of Jesus by Pierre-Antoine Bernheim) 

    ஒவ்வொரு நூற்றாண்டிலும் இந்த நிருபத்தின் மேலான சந்தேகம் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மத்தியில் அதிகரித்துவருவதையும், விடையில்லா கேள்விகள் இந்த நிருபத்தை சுற்றி அதிகரித்து வருவதையும், நாம் பதிவிட்ட தரவுகள் தெளிவாக காட்டுகிறது.  

கழுகுப்பார்வை:

சென்ற மூன்று கட்டுரைகளின் வழியாக பின்வரும் முடிவுகள் யாக்கோபின் நிருபம் குறித்து நம்மால் பெறமுடிகிறது:

1.நியதியாக அங்கிகரிக்கப்பட எடுத்துக்கொள்ளப்பட்ட காலம்:

இந்த நிருபத்தின் உண்மை எழுத்தராக கருதப்படும் யாக்கோபு கி.பி.62ல் மரணித்துவிடுகிறார். முதன் முதலில் யாக்கோபின் பெயரில் ஒரு நிருபம் இருக்கிறது என்ற தகவலே ஓரிகன்தான் பதிவிடுகிறார். அதாவது மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில். அதாவது யாக்கோபிற்கு கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு பிறகு. அப்போது அது மிகப்பரவலாக ஆகவில்லை என்பதை ஓரிகன் வார்த்தை காட்டுகிறது. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இன்னும் சர்ச்சைக்குரிய நூலாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு பிற்குதான் இந்த நிருபம் மக்கள் மத்தியில் பரவலாகிறது. அதாவது யாக்கோபின் தலைமுறையினர், யாக்கோபின் சீடர்கள் இவர்கள் எல்லாம் மறைந்த பிற்குதான் இந்த நிருபம் பரவலாகிறது. இந்த கால இடைவெளியும், எழுத்தர் குறித்த சர்ச்சையுமே இந்த நிருபத்தில் போதிய இடைச்செருகள்கள் நுழைவதற்கும், யாக்கோபின் பெயரில் இட்டுக்கட்டப்படுவதற்கும் போதிய காலாமாக இருக்கிறது. எனவே இந்த நிருபத்தை யாக்கோபு என்ற சீடனுடையது என்று அருதியிட்டு கூற இயலாது.

2.கொள்கை மாறுபாடு:

இந்த நிருபத்தின் கொள்கை பவுலிய கொள்கைக்கு மாற்றமாய் அல்லது எதிராக அமைந்திருப்பது, கிறிஸ்துவை பற்றி பேசிய யாக்கோபு ஒரு இடத்திலும் சிலுவை பாடுகள், அதன் மீதான நம்பிக்கை பற்றி வாய்திறக்காதது, நியாயப்பிரமானத்தை பின்பற்றுவதை உயர்த்தி பிடிப்பது, உள்ளிட்டவை இந்த நிருபத்தை மார்டின் லூதர் போன்றவர்கள் சந்தேகிக்க போதுமானதாய் இருக்கிறது. பவுலிய கொள்கை பரவல் என்பது பவுலிய கடித பரவலுடன் தொடர்புடையது. பவுலிய கடிதங்களின் வெளிரங்க மேற்கோல்கள் கி.பி.150 க்கு பிறகுதான். அதற்கு மாற்று கருத்தினை கொண்ட நிருபமாக இது இருப்பதனால் இந்த நிருபம் இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாக சில அறிஞர்கள் கருதுவது கவனிக்கத்தக்கது.

3.நிருபத்தின் மெருகூட்டப்பட்ட கிரேக்கமும், LXXன் நிபுனத்துவமும்:

இந்த நிருபத்தின் மெருகூட்டப்பட்ட கிரேக்கமும், LXXன் நிபுனத்துவமும்  பல அறிஞர்களை இது கலியேயே மீனவரான யாக்கோபினால் எழுதப்பட்ட்து அல்ல. மாறாக இது யாரோ ஒரு ஹெல்லனிஸ்ட் யூத கிறித்தவரால் இயற்றப்பட்டது என்கிறார்கள். ஒருவேளை அவர் எழுத்தரை கொண்டு எழுதியிருப்பார் என்று அனுமானிக்கலாம். அந்த எழுத்தர் யார் என்ற கேள்வி அதை வால்பிடித்து வரும். இன்னும் ஒரு படி மேலே சென்ற F.Spitta, Massebieau  போன்ற புரோட்டஸ்டண்ட் அறிஞர்கள் இந்த நிருபம் அடிப்படையில் ஒரு யூத ஏடு. அதனை கிறித்தவர்கள் யாக்கோபின் பெயரில் இட்டுக்கட்டி இடைச்செருகல் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள். 

இப்படி புதிய ஏற்பாட்டின் ஒவ்வொரு நூலும் அதன் நம்பகத்தன்மையில் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மத்தியில் பெரும் குளறுபடிகளை  கொண்டிருப்பதை நம்மால் கண்கூடாக காண முடிகிறது. அதற்கு யாக்கோபின் நிருபமும் விதிவிலக்கல்ல. அல்லாஹு அஃலம்.

Saturday, September 6, 2025

யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்

 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم 

யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்

        நாம் சென்ற தொடரில் யாக்கோபின் நிருபத்தின் வரலாற்று அறிமுகம், அதன் நியமன அங்கிகாரம் பெற்றத்தின் படி நிலைகளையும்  தரவுகளுடன் விளக்கியிருந்தோம். மேலும் அதன் நம்பகத்தன்மை எப்படி கிறித்தவ உலகில் நிலையற்றதாய் இருக்கிறது என்பதையும் அதே நிலை தற்காலத்திலும் நீடிக்கிறது என்பதையும், புதிய ஏற்பாட்டின் அறிஞர்களின் கூற்றினாலும், புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் இந்த நிருபம் எழுதப்பட்டதாக குறிப்பிடும் கால நிர்ணயத்தில் இருக்கும் முரண்பாடுகளை கொண்டும் விளக்கியிருந்தோம். இந்த நிருபத்தின் எழுத்தர் குறித்த நம்பகத்தன்மையை சந்தேகிப்பதற்கு தற்காலத்தில் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் முன்வைக்கும் காரணங்களையும், அந்த காரணங்களில் சிலவற்றையும் விளக்கமாக காணவுள்ளோம்.

யாக்கோபும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களும்

        தற்காலத்தில் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள், யாக்கோபின் நிருப எழுத்தர்  குறித்து சந்தேகிப்பதற்கு முன்வைக்கும் காரணங்களையும், அவர்களது ஆக்கங்களையும் பட்டியலிடுகிறோம்

அறிஞர் முன்வைக்கும் காரணம்/வாதம் காரணம் முன்வைக்கப்படும் அறிஞரின் ஆக்கம்
 Oecumenius (Byzantine commentator)

அதன் தாமதமான நியமன ஏற்பு.

Commentary on the Catholic Epistles
Martin Luther (1483–1546) விசுவாசத்தினால் மட்டுமே நீதிமான்களாக்கப்படுதல் (ரோமர், கலாத்தியர்) என்ற பவுலின் போதனைக்கு யாக்கோபு முரண்படுவதாகத் தோன்றுவது. Preface to the New Testament (1522 revised 1546)
Andreas Karlstadt (1486–1541 யாக்கோபின் அப்போஸ்தலத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியது Apologia(1520)
Erasmus of Rotterdam (1466–1536) நீதியாளன் யாக்கோப்பின் (கலிலேய அராமேய மொழி பேசுபவர்) அசாதாரணமான  பாணியிலான கிரேக்க மொழியின் நேர்த்தி. Annotations on the New Testament (1516)
Louis Cappellus (1585- 1658) மொழியியல் சிக்கல்கள் Critica Sacra(1650)
Johann Salomo Semler
(1725–1791)
யாக்கோபு அப்போஸ்தலர் அல்லாதவராகக் கருதப்படுகிறது. 2 ஆம் நூற்றாண்டு அநாமதேய கிறிஸ்தவரால் எழுதப்பட்டிருக்கலாம். கடிதம் படிப்படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, அதன் சந்தேகத்திற்குரிய தோற்றத்தை பிரதிபலிக்கிறது என்று கூறப்படுகிறது. Abhandlung von freier Untersuchung des Kanon (1771- 1775)
Jean Le Clerc (1657- 1736)மொழியியல் மெருகு மற்றும் ஆரம்பகால சபை பிதாக்களின் சாட்சியங்களின் பற்றாக்குறை Ars Critica and  Annotations on the New Testament(1703)
Johann David Michaelis (1717–1791) கலிலேயே யூதரான  யாக்கோப்பின்  மிகவும் நேர்த்தியான கிரேக்கம யாக்கோப்பு நிருபத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. ஆரம்பகால பேட்ரிஸ்டிக் எழுத்துக்களில் ஜேம்ஸ் அரிதாகவே மேற்கோள் காட்டப்பட்டதாகவும், இது தாமதமான மற்றும் சந்தேகத்திற்குரிய ஏற்றுக்கொள்ளலைக் குறிக்கிறது  Introduction to the New Testament(Einleitung in die gottlichen Schriften des Neuen Bundes, 1750- 1767)
Edward Evanson (1731–1805)யாக்கோபின் நிருபம், பவுலின் நம்பிக்கையின் இறையியலை சமப்படுத்த வடிவமைக்கப்பட்ட பிற்கால மோசடியாகக் கருதப்படுகிறது The Dissonance of the Four Generally Received Evangelists: And the Evidence of Their Respective Authenticity, Examined; with that of Some Other Scriptures Deemed Canonical
Gotthold Ephraim Lessing (1729-1781) ஆரம்பகால நியதி சர்ச்சைகள் Theological writings (1774-1778)
Johann Gottfried Eichhorn (1752- 1827) ஹெலனிஸ்டிக் கிரேக்க பாணி மற்றும் பாலஸ்தீனிய யூத கிறிஸ்தவத்துடன் தொடர்பு இல்லாதது Einleitung in das Neue  Testament (1804)
Ferdinand Christian Baur (1792–1860) பவுலிய மற்றும் யூத-கிறிஸ்தவ பிரிவுகளை சமரசம் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட 2 ஆம் நூற்றாண்டின் உருவாக்கமாக யாக்கோபின் நிருபத்தை கண்டார். இது புனைப்பெயரில் எழுதப்பட்ட்து.  யாக்கோபின்  மரணத்திற்குப் பிறகு நீண்ட காலத்திற்குப் பிறகான சர்ச் மோதல்களைப் பிரதிபலிக்கிறது. Paulus, der Apostel Jesu Christi(1845) and Kirchengeschichte der drei ersten Jahrhunderte (1853)
Karl Weizsacker (1822- 1899) மிகவும் மெருகூட்டப்பட்ட கிரேக்கம். அசல் நிருப  அம்சங்கள் ஏதுமில்லாத ஒரு ஒழுக்கவியல் பிரசங்கமாக யாக்கோபின் நிருபத்தை கருதுகிறார். Das apostolische Zeitalter der christlichen Kirche (1886)
Albrecht Ritschl (1822–1889) யாக்கோபு நிருபத்தின் கிரியைக்கான முக்கியத்துவம், பவுலிய எதிர்ப்புக்கு வேண்டுமென்றே செய்யப்பட்ட திருத்தமாகக் கருதப்படுகிறது. Die Entstehung der altkatholischen Kirche(1850)
Adolf Hilgenfeld (1823–1907) பவுலின் இறையியலை மென்மையாக்குவதற்காக எழுதப்பட்ட, அப்போஸ்தலிக்கத்திற்குப் பிந்தையது என்று யாக்கோபின் நிருபம் என்று வாதிடுகிறார். கிரியைக்கான நீதி தொடர்பாக தேவாலயத்திற்குள் நடந்த போராட்டத்தின் சான்றாக இதைக் காண்கிறார். Einleitung in das Neue  Testament (1875)
Martin Dibelius (1883–1947) 19 ஆம் நூற்றாண்டின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட அவரது விளக்கவுரை, யாக்கோபின் நிருபத்தை ஒரு உண்மையான அப்போஸ்தலிக்க கடிதமாக அல்லாமல் ஒரு ஞான அறிவுரையாகக் கருதியது. ஜேம்ஸை அசல் நிருபத்தின் அம்சங்கள் இல்லாத ஒரு ஒழுக்கவியல் பிரசங்கமாகக் கருதினார். James (Hermeneia, 1975; orig. 1921)
Heinrich Julius Holtzmann (1832- 1910) இது முதலாம் நூற்றாண்டு பாலஸ்தீனத்திற்குப் பொருந்தாது, ஆனால் பிற்கால ஹெலனிஸ்டிக் சூழலைப் பிரதிபலிக்கிறது. Lehrbuch der neutestamentlichen Theologie(1896)
James Moffatt (1870–1944) யாக்கோபின் பெயரில் இட்டுக்கட்டபட்ட ஒன்று. ஜெருசலேமின் யாக்கோபு அல்லாத வேறொருவரால் நேர்த்தியான கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. An Introduction to the Literature of the New Testament. (1911)
Rudolf Bultmann (1884–1976) யாக்கோபின் நிருபத்தை ஹெலனிஸ்டிக்-யூத ஞான மரபில் அப்போஸ்த்தலர் அல்லாத ஒருவரால் எழுதப்பட்டது.  யாக்கோபின்  கடிதமாக அல்ல, ஒழுக்கவியல்  கூற்றுக்களின் தளர்வான தொகுப்பாக இதைப் பார்த்தார். Theology of the New Testament(1948)
Hans Conzelmann (1915–1989) Martin Dibelius உடன் உடன்படுகிறார்: யாக்கோபின் நிருபம்  அப்போஸ்தலருக்குப் பிந்தையது. மேலும்  யாக்கோபின்  சொந்த போதனையை விட பொதுவான திருச்சபை போதனையை பிரதிபலிக்கிறது. Einleitung in das Neue  Testament (1963)
Raymond E. Brown (1928–1998) பாணி மற்றும் இறையியல் காரணமாக, யாக்கோபு வரலாற்று  யாக்கோபாக  இருக்க வாய்ப்பில்லை. An Introduction to the New Testament (1997)
Luke Timothy Johnson (b. 1943) 20 ஆம் நூற்றாண்டின் பெரும்பான்மையான அறிஞர்களின் ஒருமித்த கருத்தான,  யாக்கோபின் நிருபம்  அப்போஸ்தலருடையது அல்ல என்பதை அவர் ஏற்கிறார். The Letter of James (AYB, 1995)
 Werner Kümmel (1905-1995)   யாக்கோபின் நிருபம்  புனையப்பட்டது, 1 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 2 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாக்கோபின்  பெயரை பயன்படுத்தி யாரோ எழுதியது. Introduction to the New Testament(1966)
James Hardy Ropes (1866- 1933) சிறந்த கிரேக்க பாணி மற்றும் பாலஸ்தீனிய பின்னணி இல்லாமை. ஜெருசலேம் அல்லாத புலம்பெயர் ஹெலனிஸ்டிக் கிறிஸ்தவத்தின் தயாரிப்பு. The Epistle of St. James (ICC Commentary 1916)
 John Painter (b. 1935) ஜெருசலேமின் யாக்கோபின் நேரடி எழுத்துருவாக்கத்திற்கு எதிராக வாதிடுகிறார். பிற்கால சூழலில் யூத-கிறிஸ்தவ நெறிமுறை மரபை வலுப்படுத்த  யாக்கோபின்  பெயரில் புனையப்பட்ட கடிதமாக பார்க்கிறார். James(2004)
Dale C. Allison Jr. (b. 1955)இவர், யாக்கோபு நிருபத்தின் முன்னணி  நிபுணர்.  யாக்கோபின் கிரேக்க பாணி மற்றும் ஞான அறிவுரை வகை  யாக்கோபின் நேரடி எழுத்துருவாக்கத்தை சாத்தியமற்றதாக்குகிறது. இது 1 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்டதைக் குறிக்கிறது. A Critical and Exegetical Commentary on the Epistle of James (ICC, 2013)
Richard Bauckham (b. 1946) இதன் நம்பகத்தன்மைக்கு அதிக சார்பு நிலையை கொண்டிருந்தாலும், புனையப்பட்டது என்ற அறிஞர்களின் ஒருமித்த கருத்தை ஏற்கிறார். யாக்கோபின் நேரடி எழுத்துருவாக்கம் என்பதற்குப் பதிலாக யாக்கோபை மையமாகக் கொண்ட மரபினால் இந்த நிருபம் எழுத்தப்பட்டது என்கிறார். Essays on James (Collected in studies of jude/james, 2000s)
Patrick J. Hartin (b. 1949) யாக்கோபின் நிருபத்தை ஹெலனிஸ்டிக் யூத-கிறிஸ்தவ ஞானத்தைப் பிரதிபலிப்பதாகக் கருதுகிறார், வரலாற்று ஜேம்ஸ் அல்லாமல் பிற்கால சீடர் ஒருவர் அவரது பெயரில் எழுதியதாகக் கூறுகிறார். James (Sacra Pagina, 2003)
Dan McCartney, Sophie Laws’ successors, Margaret Mitchell) மிகவும் மெருகூட்டப்பட்ட கிரேக்கம், நிருப வடிவம் அல்லாமல் ஞானம்/பிரசங்க வடிவம்,. ஆரிகன் /யூசிபியஸுக்கு போன்றவர்களுக்கு முன் அரிதான ஆதி திருச்சபை பிதாக்களின் சான்றுகள், பவுலுடன் இறையியல் மோதல் ஆகிய காரணத்தை முன்னிறுத்துகின்றனர். --
Pheme Perkins இந்த உரையை ஒரு அப்போஸ்தலிக்கத் தலைவருக்கு அல்ல, கிரேக்கமயமாக்கப்பட்ட கிறிஸ்தவ ஒழுக்க ஆசிரியருக்குக் முன்மொழிகிறார் The Letter of James” (New Interpreter’s Bible, Vol. XII, 1998)
Peter H. Davids பெயர் தெரியாத புனைவாக கருதுகிறார். "யாக்கோபின் நிருபம்" அதிகாரத்திற்காக ஏற்கனவே உள்ள ஞான உரையுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் The Epistle of James (NIGTC, 1982) 

💥தாமதமான நியமன ஏற்பு 
💥பவுலின் போதனைக்கு யாக்கோபு முரண்படுவதாகத் தோன்றுவது 
💥நீதியாளன் யாக்கோப்பின் (கலிலேய அராமேய மொழி பேசுபவர்) அசாதாரணமான ஹெலனிஸ்டிக் பாணியிலான கிரேக்க மொழியின் நேர்த்தி. 
💥அசல் நிருப அம்சங்கள் ஏதுமில்லாத ஒரு ஒழுக்கவியல் பிரசங்கமாக இருப்பது.

        மேலே பட்டியலிடப்பட்ட காரணத்தில் முதலில் கூறப்பட்டது குறித்து சென்ற கட்டுரையில் விளக்கியுள்ளோம். மேலும் சில காரணங்களை நாம் விளக்குவதை விட, கிறித்தவ வரலாற்றில் மிக முக்கியமானவராக கருத்தப்படும் ஒருவரின் விளக்கத்தை முன்வைப்பதே இங்கு ஆகப்பொருத்தமானதாக இருக்கும். அவர் வேறு யாரும் அல்ல, புரோட்டஸ்டண்டின் தந்தை என்று கிறித்தவ உலகால் அழைக்கப்படும் மார்டின் லூதர் அவர்கள்தான். 

மார்டின் லூதரின் விமர்சனம்

        யாக்கோபின் நிருபம் குறித்த விமர்சனத்தை பொருத்தவரை பலர் இதனை சர்ச்சைக்குரியது என்று கி.பி.3ம் நூற்றாண்டு முதல் கூறிவந்திருந்தாலும், இந்த விமர்சனத்தை நாம் அறிந்த வரையில் நேர்த்தியாக முதன் முதலில் முன்வைத்தவர் புரட்டஸ்தாந்தத்தின் தந்தையான மார்டின் லூதர்தான். அதனை அவரது எழுத்துக்களில் இருந்தும், பேச்சுக்களில் இருந்தும் முன்வைக்கிறோம்.

        In a word, St. John’s Gospel and his first Epistle, St. Paul’s Epistles, especially Romans, Galatians and Ephesians, and St. Peter’s first Epistle are the books that show you Christ and teach you all that it is necessary and good for you to know, even though you were never to see or hear any other book or doctrine. Therefore St. James’ Epistle is really an epistle of straw, compared to them; for it has nothing of the nature of the Gospel about it.

சுருக்கமாகச் சொன்னால், புனித யோவானின் நற்செய்தி மற்றும் அவரது முதல் நிருபம், புனித பவுலின் நிருபங்கள், குறிப்பாக ரோமர், கலாத்தியர் மற்றும் எபேசியர், மற்றும் புனித பேதுருவின் முதல் நிருபம் ஆகியவை உங்களுக்கு கிறிஸ்துவைக் காட்டி, உங்கள் அனைவருக்கும் கற்பிக்கும் புத்தகங்கள். நீங்கள் வேறு எந்த புத்தகத்தையும் கோட்பாட்டையும் பார்க்கவோ கேட்கவோ இல்லை என்றாலும், அதை நீங்கள் அறிந்து கொள்வது அவசியம் மற்றும் நல்லது. எனவே, புனித யாக்கோபின் நிருபம், அவற்றுடன் ஒப்பிடும்போது உண்மையில் வைக்கோலால் ஆன நிருபம்; ஏனெனில் அதில் நற்செய்தியின் தன்மை எதுவும் இல்லை. ( PREFACE TO THE NEW TESTAMENT 1545 (1522), WORKS OF MARTIN LUTHER VOL. 6 by Martin Luther , THE AGES DIGITAL LIBRARY COLLECTIONS P.No. 339)

        Though this Epistle of St. James was rejected by the ancients, I praise it and hold it a good book, because it sets up no doctrine of men and lays great stress upon God’s law. But to state my own opinion about it, though without injury to anyone, I consider that it is not the writing of any apostle.

My reasons are as follows. 

First: Flatly against St. Paul and all the rest of Scripture, it ascribes righteousness to works, and says that Abraham was justified by his works, in that he offered his son Isaac, though St. Paul, on the contrary, teaches, in Romans 4:2, that Abraham was justified without works, by faith alone, before he offered his son, and proves it by Moses in Genesis 15:6. Now although this Epistle might be helped and a gloss be found for this work-righteousness, it cannot be defended against applying to works the saying of Moses in Genesis 15:6, which speaks only of Abraham’s faith, and not of his works, as St. Paul shows in Romans 4. This fault, therefore, leads to the conclusion that it is not the work of any apostle.  

Second: Its purpose is to teach Christians, and in all this’ long teaching it does not once mention the Passion, the Resurrection, or the Spirit of Christ. He names Christ several times, but he teaches nothing about Him, and only speaks of common faith in God. For it is the duty of a true apostle to preach of the Passion and Resurrection and work of Christ, and thus lay the foundation of faith, as He Himself says, in John 15:27, “Ye shall bear witness of me.” All the genuine sacred books agree in this, that all of them preach Christ and deal with Him. That is the true test, by which to judge all books, when we see whether they deal with Christ or not, since all the Scriptures show us Christ (Romans 3:21), and St. Paul will know nothing but Christ (1 Corinthians 15:2). What does not teach Christ is not apostolic, even though St. Peter or Paul taught it; again, what preaches Christ would be apostolic, even though Judas, Annas, Pilate and Herod did it.

        But this James does nothing more than drive to the law and its works; and he mixes the two up in such disorderly fashion that it seems to me he must have been some good, pious man, who took some sayings of the apostles’ disciples and threw them thus on paper; or perhaps they were written down by someone else from his preaching. He calls the law a “law of liberty,” though St. Paul calls it a law of slavery, of wrath, of death and of sin (Galatians 3:23; Romans 7:11).  
       Moreover, in James 5:20, he quotes the sayings of St. Peter, “Love covereth the multitude of sins” (1 Peter 4:8) and “Humble yourselves under the hand of God” (1 Peter 5:6), and of St. Paul (Galatians 5:10), “The Spirit lusteth against hatred”; and yet, in point of time, St. James was put to death by Herod, in Jerusalem, before St. Peter.  So it seems that he came long after Sts. Peter and Paul.  
        In a word, he wants to guard against those who relied on faith without works, and is unequal to the task [in spirit, thought, and words, and rends the Scriptures and thereby resists Paul and all Scripture], and would accomplish by insisting on the Law what the apostles accomplish by inciting men to love. Therefore, I cannot put him among the chief books, though I would not thereby prevent anyone from putting him where he pleases and estimating him as he pleases; for there are many good sayings in him.
    புனித யாக்கோபின் இந்த நிருபம் பழங்காலத்தவர்களால் நிராகரிக்கப்பட்டாலும், நான் அதைப் பாராட்டுகிறேன், இதை ஒரு நல்ல புத்தகமாக வைத்திருக்கிறேன், ஏனெனில் இது மனிதர்களின் எந்தக் கோட்பாட்டையும் அமைக்கவில்லை மற்றும் கடவுளின் சட்டத்தின் மீது அதிக அழுத்தத்தை அளிக்கிறது. ஆனால், அதைப் பற்றி யாருக்கும் பாதிப்பில்லாமல் என் சொந்தக் கருத்தைச் சொன்னால், “அது எந்த இறைத்தூதர் எழுதியது அல்ல என்று கருதுகிறேன்” என்பதே. 
என்னுடைய காரணங்கள் பின்வருமாறு

முதலாவது: புனித பவுலுக்கும் வேதாகமத்தின் மற்ற எல்லா பகுதிகளுக்கும் எதிராக, அது கிரியைக்கு நீதியைக் கூறுகிறது, மேலும் ஆபிரகாம் தனது மகன் ஈசாக்கை பலியாகக் கொடுத்ததன் மூலம் தனது கிரியையினால் நீதிமானாக்கப்பட்டதாகக் கூறுகிறது, ஆனால் புனித பவுல், மாறாக, ரோமர் 4:2 இல், ஆபிரகாம் தனது மகனை பலியாகக் கொடுப்பதற்கு முன்பு, கிரியையினால் இல்லாமல், விசுவாசத்தினால் மட்டுமே நீதிமானாக்கப்பட்டதாகக் கற்பிக்கிறார், மேலும் ஆதியாகமம் 15:6 இல் மோசேயின் மூலம் இதை நிரூபிக்கிறார். இந்த கிரியை-நீதி என்பதற்கு, இந்த நிருபம் துணையாக இருந்து அதற்கு விளக்கத்தை , கொண்டிருந்தாலும், ஆதியாகமம் 15:6-ல் மோசேயின் வார்த்தையை, கிரியைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதை தடுக்க முடியாது, ரோமர் 4 இல் புனித பவுல் காட்டுவது போல, இது ஆபிரகாமின் விசுவாசத்தைப் பற்றி மட்டுமே பேசுகிறது, அவருடைய செயல்களைப் பற்றி அல்ல. எனவே, இந்தக் குறை, இது எந்த அப்போஸ்தலரின் எழுத்தும் அல்ல என்ற முடிவுக்கு இட்டுச் செல்கிறது. 

இரண்டாவது: இதன் நோக்கம் கிறிஸ்தவர்களுக்குக் கற்பிப்பதாகும், மேலும் இந்த நீண்ட போதனைகளில் அது ஒருமுறை கூட பாடுகள், உயிர்த்தெழுதல் அல்லது கிறிஸ்துவின் ஆவியைக் குறிப்பிடவில்லை. அவர் பலமுறை கிறிஸ்துவின் பெயரைக் குறிப்பிடுகிறார், ஆனால் அவரைப் பற்றி எதுவும் கற்பிக்கவில்லை, மேலும் கடவுள் மீதான பொதுவான நம்பிக்கையைப் பற்றி மட்டுமே பேசுகிறார். ஏனென்றால், கிறிஸ்துவின் பாடுகள், உயிர்த்தெழுதல் மற்றும் கிரியையைப் பற்றிப் பிரசங்கிப்பதும், அதன் மூலம் விசுவாசத்தின் அடித்தளத்தை அமைப்பதும் ஒரு உண்மையான அப்போஸ்தலரின் கடமையாகும், அவர் தாமே யோவான் 15:27 இல், "நீங்கள் என்னைக் குறித்துச் சாட்சி கொடுப்பீர்கள்" என்று கூறுகிறார். எல்லாப் புத்தகங்களும் கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகின்றனவா இல்லையா என்பதைப் பார்க்கும்போது, எல்லாப் புத்தகங்களையும் மதிப்பிடுவதற்கான உண்மையான சோதனை அதுதான், ஏனென்றால் எல்லா வேதவாக்கியங்களும் நமக்குக் கிறிஸ்துவைக் காட்டுகின்றன (ரோமர் 3:21), மேலும் புனித பவுல் கிறிஸ்துவைத் தவிர வேறு எதையும் அறியமாட்டார் (1 கொரிந்தியர் 15:2). கிறிஸ்துவைப் போதிக்காதது அப்போஸ்தலருடையது அல்ல, புனித பேதுரு அல்லது பவுல் அதைக் கற்பித்திருந்தாலும் கூட; இன்னும், கிறிஸ்துவைப் பிரசங்கிப்பது அப்போஸ்தலருடையதாய் இருக்கும். அதை யூதாஸ், அன்னாஸ், பிலாத்து மற்றும் ஏரோது செய்திருந்தாலும் கூட,.

    ஆனால் இந்த யாக்கோபு நியாயப்பிரமாணத்தையும் அதன் செயல்களையும் நோக்கிச் செல்வதைத் தவிர வேறொன்றையும் செய்யவில்லை; இரண்டையும் மிகவும் ஒழுங்கற்ற முறையில் குழப்புகிறார், அவர் ஒரு நல்ல, பக்தியுள்ள மனிதராக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது, அவர் அப்போஸ்தலர்களின் சீடர்களின் சில கூற்றுகளை எடுத்து காகிதத்தில் எழுதியிருக்கலாம்; அல்லது ஒருவேளை அவை வேறொருவரால் அவரது பிரசங்கத்திலிருந்து எழுதப்பட்டிருக்கலாம். அவர் நியாயப்பிரமாணத்தை "சுதந்திரத்தின் சட்டம்" என்று அழைக்கிறார், ஆனால் புனித பவுல் அதை அடிமைத்தனம், கோபம், மரணம் மற்றும் பாவத்தின் சட்டம் என்று அழைக்கிறார். (கலாத்தியர் 3:23; ரோமர் 7:11) 
        மேலும், யாக்கோபு 5:20-ல், அவர் புனித பேதுருவின் கூற்றுகளான "அன்பு திரளான பாவங்களை மூடும்" (1 பேதுரு 4:8) மற்றும் "தேவனுடைய பலத்த கைக்குள் தாழ்மைப்படுங்கள்" (1 பேதுரு 5:6, யாக்கோபு 4:10) மற்றும் புனித பவுலின் கூற்றுகளான "ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது;" (கலாத்தியர் 5:17) ஆகியவற்றை மேற்கோள் காட்டுகிறார்; ஆனாலும், அந்த காலப்பகுதியில், புனித யாக்கோபு எருசலேமில், புனித பேதுருவுக்கு முன்பாக ஏரோதுவால் கொல்லப்பட்டிருந்தார். எனவே இவர் புனித பேதுரு மற்றும் பவுல் ஆகியோருக்கு பின்னர் நீண்ட காலத்திற்கு பிறகு வந்ததாகத் தெரிகிறது.  
        சுருக்கமாகச் சொன்னால், கிரியைகள் இல்லாமல் விசுவாசத்தை நம்பியிருப்பவர்களிடமிருந்தும், [ஆவி, சிந்தனை மற்றும் வார்த்தைகளில், வேதவசனங்களைக் கிழித்து, அதன் மூலம் பவுலையும் எல்லா வேதவசனங்களையும் எதிர்ப்பவர்களிடமிருந்தும்] அவர் தற்காக்க விரும்புகிறார், மேலும் அப்போஸ்தலர்கள் மனிதர்களை அன்பு செய்யத் தூண்டுவதன் மூலம் நிலைநிறுத்துவதை நியாயப்பிரமாணத்தை வலியுறுத்துவதன் மூலம் நிலைநிறுத்துகிறார். ஆகையால், அவருடையதை முக்கிய புத்தகங்களில் சேர்க்க முடியாது, இருப்பினும் யாரும் அவருடையதை அவர் விரும்பும் இடத்தில் வைப்பதையும், அவர் விரும்பும் விதமாக மதிப்பிடுவதையும் நான் தடுக்க மாட்டேன்; ஏனென்றால் அவரிடம் பல நல்ல வார்த்தைகளும் உள்ளன. (PREFACE TO THE EPISTLES OF SAINT JAMES AND SAINT JUDE 1545 (1522), WORKS OF MARTIN LUTHER VOL. 6 by Martin Luther , THE AGES DIGITAL LIBRARY COLLECTIONS P.No. 374-375)

        மேலே குறிப்பிட்ட மார்டின் லூதரின் கருத்து யாக்கோபின் நிரூபம் பின்வரும் காரணங்களால் இது அப்போஸ்தலிக்க தகுதியை இழக்கிறது

👉   நம்பிக்கையினால் மட்டும் அல்ல செய்யும் செயலினால் ஒருவர் நியாயம்       தீர்க்கப்படுவார் என்ற யாக்கோபு நிருபத்தின் மையக்கருத்து பவுல் உள்ளிட்டோரின் கொள்கைக்கு மாற்றமானது. 

👉   கிறிஸ்துவை பற்றி பேசிய யாக்கோபு ஒரு இடத்திலும் சிலுவை பாடுகள், அதன் மீதான நம்பிக்கை பற்றி வாய்திறக்கவில்ல 

👉 நியாயப்பிரமானத்தை பின்பற்றுவதை உயர்த்தி பிடிக்கிறது. ஆனால் பவுல் நியாயப்பிரமானம் அடிமைகளின் சட்டம் என்கிறார். 
👉 பேதுரு மற்றும் பவுலின் வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளது இதை எழுதிய யாக்கோபு அப்போஸ்தலர் யாக்கோபு அல்ல மாறாக பேதுரு மற்றும் பவுலிற்கு பிறகு வந்த யார் என்று தெரியாத யாக்கோபு.
    நாம் பட்டியலிட்ட காரணங்களையும் தாண்டி மார்டின் லூதர் தெளிவாக இந்த நிருபத்தின் அப்போஸ்தலிக்க தன்மையை கேள்விக்குள்ளாக்கும் காரணங்களை பட்டியலிட்டுவிட்டார் என்று எண்ணுகிறோம். மொழியியல் குறித்த சிக்கலை அடுத்த பகுதியில் பார்ப்போம்…இன் ஷா அல்லாஹ்.                

Wednesday, August 27, 2025

கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யாக்கோபின் நிருபம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم 

கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யாக்கோபின் நிருபம்

    கிறித்தவர்களின் புதிய ஏற்பாட்டின் நம்பகத்தன்மை குறித்து தொடராக கண்டுவருகிறோம். சென்ற கட்டுரைகளில் பவுலிய நிருபங்களின் அவல நிலையையும், அதன் நம்பகத்தன்மை குறித்து கிறித்தவ புதிய ஏற்பாட்டின் அறிஞர்களே சந்தேகத்தை எழுப்பி வருவது குறித்தும் சுருக்கமாக கண்டிருந்தோம். அந்த வரிசையில் அடுத்ததாக இடம் பெறுவது புதிய ஏற்பாட்டின் கத்தோலிக்க நிருபங்கள் என்று அழைக்கப்படும், 1) யாக்கோபு, 2) 1 பேதுரு, 3) 2 பேதுரு, 4) 1 யோவான், 5) 2 யோவான், 6) 3 யோவான், 7) யூதா ஆகிய ஏழு நிருபங்களின் நம்பகத்தன்மை குறித்து கிறித்தவ உலகில் என்ன கருத்து நிலவுகிறது என்பதை தனிதனியாக காணவிருக்கிறோம் இன் ஷா அல்லாஹ். இந்த ஏழு நிருபங்களும் கி.பி.4ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தே கத்தோலிக்க நிருபங்கள் என்று அழைக்கபடலாயிற்று. அதில் முதலாவதாக யாக்கோபு நிருபம் குறித்து இந்த பகுதியில் காண்போம்.

யாக்கோபு நிருபம்- அறிமுகம்

        யாக்கோபு நிருபத்தை பொறுத்தவரையில் அதனை இயற்றியது யாக்கோபு என்பவராவார். இவர் இந்த கடிதத்தை சிதறிக்கிடக்கும் 12 யூத கோத்திரத்திற்கு எழுதியதாக இந்த நிருபமே கூறுகிறது. ஆனால் என்றும் போல் நிருபத்தின் அங்கிகாரம், யார் இந்த யாக்கோபு என்பதில் எல்லாம் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இந்த கேள்வி நமது வழமையான கேள்விதான். ஒரு நூல் உண்மையில் ஏசுவின் காலத்தை சேர்ந்தவரால் எழுதப்பட்டு, அது திருச்சபைகளில் வாசிக்கப்பட்டும் வரும் அளவிற்கு பிரபலமானதாக இருந்தால் ஆசிரியரை அடையளப்படுத்துவதில் ஏன் சிக்கல் நிலவுகிறது என்ற கேள்விதான் அது. சரி கிறித்தவ அறிஞர்கள் மத்தியில் என்ன என்ன கருத்து குழப்பம் நிலவுகிறது என்பதை முதலில் காண்போம்.


யாக்கோபு நிருபம் ஆதிகால கிறித்தவத்தில் அதன் நிலை குறித்த வரலாற்று தரவுகளில் மிக சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் தக்க தரவுகளுடனும் Werner Georg Kümmel என்ற ஜெர்மானிய புதிய ஏற்பாட்டு அறிஞரால்  தனது Einleitung in das Neue Testament [Introduction to the New Testament] வழங்கப்பட்டுள்ளது
        From early times until today opinions about the origin and character, time and value of James have varied widely (cf. the detailed presentation in A. Meyer, 8 ff.). Already in I Clement and the Shepherd of Hermas are found echoes of James, but they are not so clear that they would not be understandable from common dependence upon paraenetic tradition (see Dibelius, 30 ff.). The Epistle is missing from the Muratorian canon and the chief witnesses of the “Vetus Latina.” It is never quoted by Tertullian, Cyprian, Irenaeus, and Hippolytus. Not until after 200 do definite traces of James appear in Palestine and epistles "De virginitate,” falsely ascribed to Clement of Rome, in the papyrus fragment and in Origen, who often cites it as "Scripture,” but once as ἡ φερομένη Ἰακώβου ἐπιστόλη (the alleged epistle of James) (Commentary on John, 8, 24; edited by Preuschen, 325), and thereby hints that it is disputed. Eusebius (EH II, 23, 25; III 25, 3) still enumerates James among the "Antilegomena,” but mentions for the first time that many recognize the Lord’s brother as the author. In the Syrian Church scruples against James did not cease, even after James was taken up into the Peshitta. Theodore of Mopsuestia rejected it. 
    In the Greek Church, however, James was generally recognized since the Synod of Laodicea (360) and Athanasius. In the West the earliest witness is the Codex Corbeiensis (ff), which reproduces an old Latin translation from the fourth century. Under the influence of Hilary, Hieronymus, and Augustine, James was defined as canonical at the Synods of Rome (382) and Carthage (397). Yet Hieronymus’ de viris illustribus 2 carried doubts about the authenticity of James into the Middle Ages, to which were joined the cautious doubt of Erasmus and the sharp polemic of Luther.
    ஆரம்ப காலங்களிலிருந்து இன்று வரை யாக்கோபின் தோற்றம் மற்றும் தன்மை, காலம் மற்றும் மதிப்பு பற்றிய கருத்துக்கள் பரவலாக வேறுபடுகின்றன (cf. A. Meyer, 8 ff இல் விரிவான விளக்கக்காட்சி). ஏற்கனவே முதலாம் கிளெமென்ட் மற்றும் ஹெர்மாஸின் மேய்ப்பர் ஆகியவற்றில் ஜேம்ஸின் எதிரொலிகள் காணப்படுகின்றன, ஆனால் அதன் அறிவுரை பாரம்பரியத்தின் பொதுவான சார்பிலிருந்து அது புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு தெளிவாக இல்லை (பார்க்க டிபெலியஸ், 30 ff.). இந்த நிருபம் முரடோரியன் நியதியிலும், "வெட்டஸ் லத்தினா" வின் முக்கிய ஆவாணங்களிலும் இல்லை. இது டெர்டுல்லியன், சைப்ரியன், ஐரேனியஸ் மற்றும் ஹிப்போலிட்டஸ் ஆகியோரால் ஒருபோதும் மேற்கோள் காட்டப்படவில்லை. 200 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பாலஸ்தீனத்தில், ரோமின் கிளெமெண்டினுடையது என்று பொய்யாகக் கூறப்பட்ட "டி வர்ஜினிடேட்" என்ற நிருபங்களின் பாப்பிரஸ் துண்டில் யாக்கோபின் திட்டவட்டமான தடயங்கள் தோன்றின.  அதனை வேதம் என்று அடிக்கடி மேற்கோள்காட்டும் ஓரிகன் தனது ஆக்கத்தில், ஒருமுறை “யாக்கோபின் நிருபம் என்று கூறப்படும்” என்று குறிப்பிட்டிருப்பது அது சர்ச்சைக்குரியது என்று சுட்டிக்காட்டுகிறது  யூசிபியஸ் (EH II, 23, 25; III 25, 3) இன்னும் யாக்கோபை "ஆண்டிலெகோமெனா"வில் பட்டியலிடுகிறார், ஆனால் பலர் கர்த்தருடைய சகோதரரை ஆசிரியராக அங்கீகரிப்பதாக முதல் முறையாகக் குறிப்பிடுகிறார். (ஆண்டிலெகோமெனா- என்பது சர்ச்சைக்குரிய கிறித்தவ நூல்களை குறிப்பதற்கு யூசிபியஸினால் பயன்படுத்தப்பட்ட சொல்லாக்கம்). . யாக்கோபு பெஷிட்டாவில் சேர்க்கப்பட்ட பிறகும் கூட, சிரிய திருச்சபையில் யாக்கோபு க்கு எதிரான மனக்கசப்புகள் நிற்கவில்லை. மோப்சுவெஸ்டியாவின் தியோடர் அதை நிராகரித்தார். 
இருப்பினும், கிரேக்க திருச்சபையில், லாவோதேக்கியா (கி.பி 360) மற்றும் அதானசியஸ் ஆயர் பேரவைக்குப் பிறகு யாக்கோபு பொதுவாக அங்கீகரிக்கப்பட்டது. மேற்கில், நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழைய லத்தீன் மொழிபெயர்ப்பை மீண்டும் மறு உருவாக்கம் செய்த கோடெக்ஸ் கோர்பியென்சிஸ் தான் முதல் சாட்சி. ஹிலாரி, ஹைரோனிமஸ் மற்றும் அகஸ்டின் ஆகியோரின் செல்வாக்கின் கீழ், யாக்கோபு ரோம் (382) மற்றும் கார்தேஜ் (397) ஆயர் சபைகளில் நியமனமாக வரையறுக்கப்பட்டது. ஆயினும்கூட, ஹைரோனிமஸின் டி விரிஸ் இல்லஸ்ட்ரிபஸ் 2, யாக்கோபின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களை இடைக்காலம் வரை கொண்டு சென்றது, அவற்றுடன் எராஸ்மஸின் எச்சரிக்கையான சந்தேகமும் லூதரின் கூர்மையான விவாதமும் இணைந்தன. (P.No.285 Einleitung in das Neue Testament [Introduction to the New Testament translated in Eng., by A. J. Mattill, Jr.] 
        மேற்குறிப்பிட்ட படியே தற்கால The New Oxford Annotated Bible with Apocrypha- New Revised Standard Version பின்வருமாறு கூறுகிறது.
    The early fourth-century ce church historian Eusebius noted that the letter found slow acceptance into the Christian canon despite the fact that it was “regularly used in very many churches” as one of the       “ ‘general’ epistles” (Hist. eccl. 2.23; 3.25). The Muratorian Canon (late second century) does not mention James, but the letter was included in Bishop Athanasiuss influential canon list ca. 367 ce. Its canonicity was then largely secure until the Protestant Reformation in the sixteenth century when Martin Luther moved it (along with Hebrews, Jude, and Revelation) to the end of the New Testament; in Luther’s view it lacked essential elements of the gospel. But John Calvin and Philip Melanchthon, like the Council of Trent (1546), defended both the canonical status and theological value of the letter. 

 நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த சர்ச் வரலாற்றாசிரியர் யூசிபியஸ், இந்தக் கடிதம் "பொதுவான" நிருபங்களில் ஒன்றாக "பல சர்ச்சுகளில் வழக்கமாகப் பயன்படுத்தப்பட்ட போதிலும்" கிறிஸ்தவ நிருபத்தில் மெதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று குறிப்பிடுகிறார். (Hist. eccl. 2.23; 3.25). முராடோரியன் நியதி (இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி) யாக்கோபைப் பற்றி குறிப்பிடவில்லை, ஆனால் அந்தக் கடிதம் பிஷப் அதனாசியஸின் செல்வாக்குமிக்க நியதி பட்டியலில் சுமார் கி.பி.367 ல் சேர்க்கப்பட்டுள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் வரை அதன் நியமனத்தன்மை பெரும்பாலும் பாதுகாப்பாக இருந்தது, மார்ட்டின் லூதர் அதை (எபிரேயர், யூதா மற்றும் வெளிப்படுத்துதலுடன் சேர்த்து) புதிய ஏற்பாட்டின் கடைசிக்கு நகர்த்தினார்; லூதரின் பார்வையில் இது நற்செய்தியின் அத்தியாவசிய கூறுகளைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஜான் கால்வின் மற்றும் பிலிப் மெலன்ச்டன், ட்ரெண்ட் கவுன்சிலைப் போலவே (1546), கடிதத்தின் நியமன நிலை மற்றும் இறையியல் மதிப்பு இரண்டையும் பாதுகாத்தனர். (P.No.2119, The New Oxford Annotated Bible with Apocrypha- New Revised Standard Version)

          மேலே நாம் குறிப்பிட்டு காட்டிய குறிப்புக்கள், யாக்கோபின் நிருபம் கி.பி.4ம் நூற்றாண்டில் தான் பெரும்பகுதி கிறித்தவர்களால் நியமன நிருபமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை தெளிவாக கூறுகின்றன. மீண்டும் கி.பி.16ம் நூற்றாண்டில் லூதர் போன்றவர்கள் அது அப்போஸ்தொலிக்க எழுத்தக்களா?? என்று சந்தேகித்தனர் என்று கூறுகிறது. 

 யார் இந்த யாக்கோபு????

யாக்கோபு நிருபத்தை பொறுத்தவரையில் யார் இந்த யாக்கோபு என்று எந்த குறிப்பும் இடம் பெறவில்லை. புதிய ஏற்பாட்டை பொறுத்தவரை யாக்கோபு என்ற பெயர் கொண்ட குறைந்த பட்சம் நான்கு நபர்களை காண இயலும். 

வ.எண் யாக்கோபும் அடையாளமும் வசனம்
1 பன்னிருவரில் ஒருவரான யோவானின் சகோதரன் செபதேயுவின் மகன் யாக்கோபு- பெரிய யாக்கோபு மத்தேயு: 4:21; 10:2-3; 17:1; 20:20-23; 26:37; 
மாற்கு: 1:19-20; 1:29; 3:17; 5:37; 9:2; 10:35, 41; 13:3; 14:33; லூக்கா 5:10; 8:51; 9:28, 54;
 அப்போஸ்தலர் நடபடிகள்: 1:13; 12:2
2 பன்னிருவரில் ஒருவரான அல்பேயுவின் மகனான யாக்கோபு- சின்ன யாக்கோபு
மத்தேயு 10:3; மாற்கு 3:18; லூக்கா 6:15;
அப்போஸ்தலர் நடபடிகள் 1:13;
3 ஏசுவின் சகோதரனாகிய யாக்கோபு
மத்தேயு 12:46-50, 13:55; மாற்கு 3:21, 6:3;
யோவான் 7:3-5; அப்போஸ்தலர் நடபடிகள் 1:14; கலாத்தியர் 1:19,2:9;
4 பன்னிருவரில் ஒருவரான யூதாவின் சகோதரனாகிய யாக்கோபு


லூக்கா 6:16; அப்போஸ்தலர் நடபடிகள் 1:13

    இவர்களில் எந்த யாக்கோபினால் இந்த கடிதம் எழுதப்பட்டது என்பது கிறித்தவர்களின் ஆதிகாலம் முதலே குழப்பத்தில் இருப்பதாக கிறித்தவ வரலாற்று ஆவணம் கூறுகிறது.

யாக்கோபிற்கு தொடர்பில்லாத கடிதம்-  2ம் நூற்றாண்டின் முற்பகுதி
     Hegesippus who lived near the apostolic age, in the fifth book of his Commentaries, writing of James, says “After the apostles, James the brother of the Lord surnamed the Just was made head of the Church at Jerusalem. Many indeed are called James. This one was holy from his mother’s womb. He drank neither wine nor strong drink, ate no flesh, never shaved or anointed himself with ointment or bathed. He alone had the privilege of entering the Holy of Holies, since indeed he did not use woolen vestments but linen and went alone into the temple and prayed in behalf of the people, insomuch that his knees were reputed tohave acquired the hardness of camels’ knees.”( De Viris Illustribus Liber Ad Dextrum Lives of Illustrious Men NPNF (V2-03) Philip Schaff P.No.625)
    அப்போஸ்தலர் காலத்திற்கு அருகில் வாழ்ந்த ஹெகெசிப்பஸ், யாக்கோபின் எழுக்களை, தனது விளக்கவுரைகளின் ஐந்தாவது புத்தகத்தில், "அப்போஸ்தலர்களுக்குப் பிறகு, நீதிமான் என்ற வேறு பெயர் கொண்ட கர்த்தருடைய சகோதரரான யாக்கோபு எருசலேமில் உள்ள திருச்சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார்" என்று கூறுகிறார். உண்மையில் பலர் யாக்கோபு என்று அழைக்கப்படுகிறார்கள். இவர் தாயின் கர்ப்பத்திலிருந்தே பரிசுத்தமானவர். அவர் திராட்சை ரசமோ மதுபானமோ குடிக்கவில்லை, இறைச்சி சாப்பிடவில்லை, மொட்டையடிக்கவில்லை, தைலம் பூசவில்லை, குளிக்கவில்லை. அவர் மாத்திரமே மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிக்கும் பாக்கியத்தைப் பெற்றார், ஏனென்றால் அவர் கம்பளி ஆடைகளை உபயோகிக்கவில்லை, ஆனால் கைத்தறி ஆடைகளை மட்டுமே பயன்படுத்தினார், மேலும் அவர் தனியாக கோவிலுக்குள் சென்று மக்கள் சார்பாக ஜெபம் செய்தார், அதனால் அவரது முழங்கால்கள் ஒட்டகங்களின் முழங்கால்களின் கடினத்தன்மையைப் பெற்றதாகப் புகழ் பெற்றன. .”( De Viris Illustribus Liber Ad Dextrum Lives of Illustrious Men by Jerome NPNF (V2-03) Philip Schaff P.No.625)

        யாக்கோபு யார் என்று விவரித்த ஹெகேசிப்பஸ் இவரது மடல் குறித்து வாய் திறக்க வில்லை. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் எருசலேம் சபை குறித்து மிக சிரத்தை எடுத்துக்கொண்ட ஒரு கிறித்தவ வரலாற்று ஆசிரியர் ஹெகேசிப்பஸ்.   

    Now, if the one who does not believe that Jesus is the Christ will die in his sins, it is clear  that the one who does not die in his sins has believed in the Christ. But he who dies in his sins, even if he says that he believes in the Christ, has not believed in him so far as truth is concerned, and if faith is mentioned but it lacks works, such faith is dead, as we have read in the epistle that is in circulation as the work of James.(Commentary of Origen on Gospel of John 8:24)

    இயேசுவே, கிறிஸ்து என்று விசுவாசியாதவன் தன் பாவங்களிலே மரிப்பான் என்றால், தன் பாவங்களிலே மரியாதவன் கிறிஸ்துவை விசுவாசித்தான் என்பது தெளிவாகிறது. ஆனால், கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் என்று சொன்னாலும், தன் பாவங்களில் மரித்தவன், சத்தியத்தை பொறுத்தவையில், அவரை இதுவரை அவன் விசுவாசிக்கவில்லை. விசுவாசம் சொல்லப்பட்டாலும், அதில் கிரியைகள் இல்லாவிடில், அந்த விசுவாசம் செத்துவிட்டது என்று, யாக்கோபின் எழுத்து என்று புழக்கத்தில் உள்ள நிருபத்தில் நாம் படித்திருக்கிறோம்.(Commentary of Origen on Gospel of John 8:24)  

     அதாவது மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஓரிகன்தான் முதன் முதலில் இப்படி ஒரு மடல் யாக்கோபின் பெயரில் புழக்கத்தில் இருப்பதாக குறிப்பிடுகிறார். ஓரிகனின் இந்த வார்த்தை பிரயோகம் ஓரிகனே இந்த கடிதத்தின் எழுத்தர் குறித்து உறுதியற்ற நிலையில் இருந்துள்ளார் என்பதை காட்டுகிறது.

யாக்கோபுதான் இந்த மடலை எழுதனாரா?- சர்ச்சையான 3ம் நூற்றாண்டின் பிற்பகுதி

    25. These things are recorded in regard to James, who is said to be the author of the first of the so-called catholic epistles. But it is to be observed that it is disputed; at least, not many of the ancients have mentioned it, as is the case likewise with the epistle that bears the name of Jude, which is also one of the seven so-called catholic epistles. Nevertheless we know that these also, with the rest, have been read publicly in very many churches. (P.No.236, The Martyrdom of James, who was called the Brother of the Lord, The Church History of Eusebius). 

25.கத்தோலிக்க நிருபங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் முதலாவது நிருபத்தின் ஆசிரியர் என்று கூறப்படும் யாக்கோபைப் பற்றி இந்தக் காரியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அது சர்ச்சைக்குரியது என்பதைக் கவனிக்க வேண்டும்; கத்தோலிக்க நிருபங்கள் என்று அழைக்கப்படும் ஏழு நிருபங்களில் ஒன்றான யூதாவின் பெயரைக் கொண்ட நிருபத்தைப் போலவே, முன்னோர்களில் பலர் இதைக் குறிப்பிடவில்லை. ஆயினும்கூட, இவையும், மற்றவற்றுடன், பல தேவாலயங்களில் பகிரங்கமாக வாசிக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம்(P.No.236, The Martyrdom of James, who was called the Brother of the Lord, The Church History of Eusebius).  

யாரோ யாக்கோபின் பெயரில் இட்டுக்கட்டியுள்ளார்- கி.பி 4ம் நூற்றாண்டு 

James, who is called the brother of the Lord, surnamed the Just, the son of Joseph by another wife, as some think, but, as appears to me, the son of Mary sister of the mother of our Lord of whom John makes mention in his book, after our Lord’s passion at once ordained by the apostles bishop of Jerusalem, wrote a single epistle, which is reckoned among the seven Catholic Epistles and even this is claimed by some to have been published by someone else under his name, and gradually, as time went on, to have gained authority.”( De Viris Illustribus Liber Ad Dextrum Lives of Illustrious Men NPNF (V2-03) Philip Schaff P.No.625)

    சிலர் நினைப்பது, யாக்கோபு, கர்த்தரின் சகோதரன் என்று அழைக்கப்படும் ஜோசப்பின் மற்றொரு மனைவியின் மகன், நீதிமான் என்று புனைப்பெயரிடப்பட்டவர், ஆனால், எனக்குத் தோன்றுவது, அவர், யோவான் தனது புத்தகத்தில் குறிப்பிடும், நம் ஆண்டவரின் தாயின் சகோதரி மேரியின் மகன், நமது கர்த்தரின் பாடுகளுக்கு பின்பு அப்போஸ்தலர்களால் எருசலேமின் பிஷப்பாக நியமிக்கப்பட்டவர், ஏழு கத்தோலிக்க நிருபங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு நிருபத்தை எழுதியவர். மேலும் இது கூட வேறு யாரோ ஒருவரால் அவரது பெயரில் வெளியிடப்பட்டதாகவும், காலப்போக்கில் படிப்படியாக அதிகாரம் பெற்றதாகவும் சிலர் கூறுகின்றனர் .”( De Viris Illustribus Liber Ad Dextrum Lives of Illustrious Men by Jerome NPNF (V2-03) Philip Schaff P.No.625)

யார் இந்த யாக்கோபு? கி.பி 16ம் நூற்றாண்டு 

    But as to the author, there is somewhat more reason for doubting. It is indeed certain that he was not the Son of Zebedee, for Herod killed him shortly after our Lord’s resurrection. The ancients are nearly unanimous in thinking that he was one of the disciples named Oblias and a relative of Christ, who was set over the Church at Jerusalem; and they supposed him to have been the person whom Paul mentioned with Peter and John, who he says were deemed pillars, (Galatians 2:9.) But that one of the disciples was mentioned as one of the three pillars, and thus exalted above the other Apostles, does not seem to me probable. I am therefore rather inclined to the conjecture, that he of whom Paul speaks was the son of Alpheus. I do not yet deny that another was the ruler of the Church at Jerusalem, and one indeed from the college of the disciples; for the Apostles were not tied to any particular place. But whether of the two was the writer of this Epistle, it is not for me to say. (Commentaries on the Catholic Epistles by John Calvin P.No,245)

ஆனால் அந்த ஆசிரியரைப் பொறுத்தவரை, சந்தேகிக்க இன்னும் கொஞ்சம் காரணம் இருக்கிறது. அவர் செபதேயுவின் மகன் அல்ல என்பது நிச்சயமாக உறுதி, ஏனென்றால் நம் கர்த்தர் உயிர்த்தெழுந்த சிறிது காலத்திலேயே ஏரோது அவரைக் கொன்று விட்டார். அவர் சீடர்களில் ஒருவரான ஒப்லியாஸ் என்றும், எருசலேம் தேவாலயத்தின் மீது பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் என்றும்,  கிறிஸ்துவின் உறவினர் என்றும் முன்னோர்கள் ஏறக்குறைய ஒருமனதாக எண்ணுகிறார்கள்; அவர், பவுலால், தூண்களாக கருதி, பேதுரு மற்றும் யோவானுடன் குறிப்பிடுப்படும் நபர் என்றும் அவர்களால் கருதப்படுகிறார் (கலாத்தியர் 2:9.). ஆனால், மூன்று தூண்களில் ஒருவராக குறிப்பிடப்பட்டு, மற்ற அப்போஸ்தலர்களை விட உயர்ந்தவர் என்று குறிப்பிடப்படும் அந்த சீடர்களில் ஒருவர், எனக்குச் சாத்தியமானவராக தோன்றவில்லை. எனவே, பவுல் யாரைப் பற்றிப் பேசுகிறாரோ அவர் அல்பேயுவின் மகன் என்ற யூகத்தை நான் ஏற்கிறேன். மற்றொருவர் எருசலேம் திருச்சபையின் ஆட்சியாளராக இருந்தார் என்பதையும், ஒருவர் சீடர் குழுவைச் சேர்ந்தவர் என்பதையும் நான் இன்னும் மறுக்கவில்லை; ஏனென்றால் அப்போஸ்தலர்கள் எந்த குறிப்பிட்ட இடத்துடனும் தொடர்புடையவர்கள் அல்ல. ஆனால் இருவரில் ஒருவர் இந்த நிருபத்தை எழுதியவரா என்பதை நான் சொல்ல முடியாது. (Commentaries on the Catholic Epistles by John Calvin P.No,245)

        யூசிபியசின் காலத்திலும் (கி.பி.260- 339), ஜேரோமின் காலத்திலும், ஏன் ஜான் கால்வினின் காலத்திலும் கூட இந்த கடிதத்தின் எழுத்தர் யார் என்பது சர்ச்ச்சைக்குரிய விஷயமாக இருந்துள்ளது என்பது இதன் மூலம் விளங்குகிறது. ஒரு நூல் வேதத்தில் நுழையும் அளவிற்கு தனித்துவமிக்கது எனும் போது அதன் சொந்தக்காரர் யார் என்பதில் சர்ச்சை நிலவியது என்றால், ஆரம்ப காலம் முதலே மக்களின் பெரும் பயன்பாட்டில் அந்த கடிதம் இருந்தது என்பது ஏற்புடைய கருத்தல்ல. இது அல்லாமல் தற்காலத்தில் இந்த கடிதம் அறியப்படாத ஒருவரால் எழுதப்பட்டது என்ற அனுமானமும் கிறித்தவ அறிஞர்களிடம் உலாவுகிறது. இதனை விளக்க தற்கால புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் இந்த மடலின் எழுதப்பட்ட காலம் குறித்த மாறுபட்ட யூகங்களை Dale C. Allison Jr.' அவர்களது "James: A Critical and Exegetical Commentary": P.No.28-29ல் இருந்து  கீழ்வரும் அட்டவணையில் தருகிறோம்.

எழுதப்பட்ட காலமும்- குழம்பித்திரியும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களும்

வ.எண் புதிய ஏற்பாட்டு அறிஞர் எழுதப்பட்டதாக கருதப்படும் காலம்
1. Harnack 120–150 A.D
2. Spitta before 50 A.D
3. Zahn 44–66 A.D
4. Knowling 40–50 A.D
5. Ropes 75–125 A.D
6. Jülicher120–150 A.D
7. Dibelius 80–130 A.D
8. Chaine57–62 A.D
9. Marty late first,early second century A.D
10. Massebieaubefore 50 A.D
11. Kittel 40–50 A.D
12. Enslin 70–125 A.D
13. Schoeps 100–150 A.D
14. Young 117–138 A.D
15. Hunter 60–100 A.D
16. Mussnerbefore the death of James the Just A.D
17. Elliott-Binns40–50 A.D
18. Kümmel 80–100 A.D
19. Cantinat the last decades of the first century A.D
20.Lawspost-60s A.D
21. J.A.T. Robinson 47 or 48 A.D
22.Ruckstuhl 80–100 A.D
23. Frankemölle the last quarter of the first century or beginning of the second century
24. Floor 40–50  A.D
25. Wolmarans 125–130  A.D
26. S. Wilson the last quarter of the first century  A.D
27. Webber late first or early second century  A.D
28. Penner 40–60  A.D
29. Hahn-Müller not before the last third of the first century  A.D
30. Sleeper 75–85  A.D
31. P. Rolland the year 56  A.D
32. Moo the middle 40s 
33.Riesner before the middle 40s
34. Hartin the late sixties after James’ death
35. Burchard the last decades of the 1st century A.D
36. Popkesshortly before or after CE 100 
37. Maier before or around 50 A.D
38. Fabris 70–100 A.D
39. Dschulniggca. ca. 60 
40. Nienhuis the middle of the second century A.D
41. Konradt before 85 A.D
42. McKnightthe 50s
43. Varner 48 or earlier 
44. Broer 70–100 A.D

       மேலே கொடுக்கப்பட்ட கால அட்டவணையில் கணிசமான புதிய ஏற்பாட்டின் அறிஞர்கள் இந்த நிருபம் அப்போஸ்தலர்களாக கருதப்படும் யாக்கோபுகளின் மரணத்திற்கு பிறகு எழுதப்பட்டதாக கூறுகிறார்கள். அதாவது யாக்கோபு என்ற பெயரால் யாரோ ஒருவர் எழுதியிருக்கிறார் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். எனவே தான் யாக்கோபு நிருபத்தின் நிலை குறித்து Robert M. Grant பின்வருமாரு கூறுகிறார்.
        In view of the prominence of James it is rather surprising that the epistle is used by no Christian writer before Origen, writing at Alexandria early in the third century. No Western writer mentioned it until the fourth century, and at that time it was still rejected by some Syrian churchmen. Both Erasmus and Luther, for different reasons, doubted its apostolic authorship. Today such doubts persist.  (A Historical Introduction to the New Testament by Robert M. Grant ,P.No.183) 
யாக்கோபின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்ளும் போது, மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அலெக்ஸாண்ட்ரியாவின் ஓரிகன் எழுதியதற்கு முன்பு எந்த கிறிஸ்தவ எழுத்தாளரும் இந்த நிருபத்தைப் பயன்படுத்தவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நான்காம் நூற்றாண்டு வரை எந்த மேற்கத்திய எழுத்தாளரும் இதைக் குறிப்பிடவில்லை, அந்தச் சமயத்திலும் அது சில சிரிய சர்ச் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டது. இராஸ்மஸ் மற்றும் லூதர் இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக, அதன் அப்போஸ்தலிக்க எழுத்தாக்கத்தை சந்தேகித்தனர். இன்றும் அத்தகைய சந்தேகங்கள் நீடிக்கின்றன.  (A Historical Introduction to the New Testament by Robert M. Grant ,P.No.183)

    யாக்கோபின் நிருபம் இன்றும் சந்தேத்திற்குரிய ஒரு நிருபமாகவே புதிய ஏற்பாட்டில் இடம் பெறுகிறது என்று Robert M. Grant குறிப்பிடுகிறார். மேலும் லூதர் போன்றவர்கள் இதை எழுதியது, ஏசுவின் சீடரா என்பதையே சந்தேகித்ததாக கூறுகிறார் Robert M. Grant.   யாரால் எழுதப்பட்டது என்பதே இன்று வரை சர்ச்சையாக இருக்கும் ஒரு நிருபம்தான் யாக்கோபின் இந்த நிருபம். இந்த நிருபத்தை ஏன் கிறித்தவ உலகம் சந்தேகக் கண்ணுடன் அணுகுகிறது?????......அதன் காரணங்களை நாம் அடுத்த பகுதியில் பட்டியலிடுவோம். இன் ஷா அல்லாஹ்...