பக்கங்கள் செல்ல

cross tab2

Wednesday, June 29, 2016

ஜப்பானில் உள்ள ஒரு அழகிய மஸ்ஜித்!

அடர்ந்த பாலைவனத்தினிடையே உள்ள ஒரு சிறிய ஊரில் வாழ்ந்த  கல்வி பயிலாத ஒரு மனிதரின் கொள்கை, பூமியின் அனைத்து திசைகளுக்கும் சென்றடையும் என்றால், 21ம் நூற்றாண்டில் வாழும் அறிவு ஜீவிகளின் கொள்கைகள் ஏன் இவ்வாறு வெற்றி அடைவதில்லை (அல்லது) இனிமேலும் அடையப்போவதில்லை?

 இது தனி மனிதரின் கொள்கை அல்ல. இறைவனின் சட்டம்.

ஜப்பானில் உள்ள ஒரு அழகிய  மஸ்ஜித் 



"இணை கற்பிப்போர் வெறுத்தாலும், எல்லா மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அவனே தனது தூதரை அனுப்பினான்." [9:33]

“நிச்சயமாக அல்லாஹ் எனக்கு பரந்து விரிந்த இந்த உலகின் எல்லைகளைக் காட்டினான். அவன் எனக்கு கிழக்கையும் காட்டினான், அவன் எனக்கு மேற்கையும் காட்டினான். மேலும் அவன் என்னிடம், என்னுடைய உம்மத்து (சமுதாயம்) நான் கண்ட எல்லை வரையிலும் பரவும் என்று கூறினான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். [Muslim]



Saturday, May 21, 2016

திருக்குர்ஆன் கூறும் மனநலம் - 1

#‎தற்கொலை‬ செய்து கொள்வதற்கான காரணங்களில் முதலாவது மிகுந்த கவலையும், நம்பிக்கையற்ற தன்மையும் தான்.
"இதிலிருந்து தப்புவதற்கு வழியே இல்லை" என்று நினைக்கும் மனித அறிவின் உச்சக்கட்டமாகத் தான் தற்கொலை செய்துகொள்கின்றான்.

ஒரு ‪#‎முஸ்லிம்‬ எந்த சூழ்நிலையிலும் இவ்வாறு என்ன மாட்டான் காரணம், ஒவ்வரு மனிதனுக்கும் ஏற்படும் சோதனை இறைவனின் கட்டளையே என்ற நம்பிக்கை தான்.

இறைவனின் உதவி கொண்டு தான் வெற்றி பெற வேண்டுமே தவிர, #தற்கொலை இறைக் கோபத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் ஆழமாக பதிய வைக்கப்படுகின்றது.
அதன் ஒரு பகுதியாகத் தான், இந்த வசனத்தின் நினைவூட்டல்.

Sunday, April 17, 2016

ஏன் இனிமேல் புதிதாக உண்மையான இறைதூதர் வர முடியாது?

நபி (ஸல்) அவர்களின் கருத்துக்களை ஏற்காத மக்கள், நபி அவர்களை பலவாறு குற்றம் சாட்டி வந்தனர்.
  •  ஏமாற்றுபவர்
  •  பொய்யர்
  •  பைத்தியம் பிடித்தவர்
  •  சில கிருஸ்துவ அறிஞ்சர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று, "அவர் அன்றைய கிறிஸ்த்துவ கொள்கைக்கு எதிரான கிறிஸ்த்துவ பாதிரியார்...அரபு நாட்டிற்கு தப்பிச் சென்று மறைமுக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்"

உதாரணமாக, "ஒருவர் தற்போது தன்னை இறைவனின் தூதர் என்று சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரை மக்கள் எப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள்.. அனைத்திற்கும் அவர் பதில் சொல்லியாக வேண்டும். சொல்லப்படும் பதிலை வைத்தே, அவரின் ஏமாற்று வேலை தெரிந்துவிடும்."

நபி (ஸல்) அவர்களோ, சொல்லும் பதிலை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இல்லாமல் எழுத்துப் பூர்வமான ஆதாரத்துடன், எல்லா காலத்திலும் பரிசோதித்துக் கொள்ளக் கூடியதாக சொல்லியுள்ளார்கள் என்றால் அது மனிதனால் முடியாது.

இறைவனின் உதவியால் மட்டுமே முடியும்.
Ref Book: The Man in the Red Under Pants
Author: A.R.Green

Saturday, April 9, 2016

நகபாஹ் தினம் - 1948 ல் நடந்த மாபெரும் படுகொலை

நகபாஹ் தினம் - 1948ல் இன்றைய தினத்தில் நடந்த மாபெரும் படுகொலை:
--------------------------

ஏப்ரல் 09, 1948ல்  அமைதியாக  வாழ்ந்து வந்த மிக அழகிய பாலஸ்தீன கிராமம் தேர் யாசீன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் எந்த வித தூண்டுதலுமின்றி அழித்தொழிக்கப்பட்ட கிராமம். பெண்கள், குழந்தைகள். முதியவர்கள் அனைவரும் சுட்டுக்  கொல்லப்பட்டனர். சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் பயத்தினால் வெளியேறவே, இந்த பகுதிகள் அனைத்தும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களால் அபகரிக்கப்பட்டு, இன்று வரை சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இந்த அட்டூழியத்தில் ஈடுபட்ட யாரும் தண்டிக்கப்படவில்லை மாறாக குற்றம் சாட்டப்பட்ட அமைப்பில் உள்ள ஒருவன் இஸ்ரேலின் 6வது பிரதம மந்திரியாக பதவி வகித்துள்ளான்.

1947-49:


  •  750,000 பாலஸ்தீனியன் மக்கள் (முஸ்லிம் & கிறிஸ்த்துவர்) கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர் 
  • 531 பாலஸ்தீனிய கிராமங்கள் அழிக்கப்பட்டன
  • 33 இடங்களில் மக்கள் படுகொலைச் செய்யப்பட்டனர் 


ஆயிரக்கணக்கான யூதர்களை இரண்டாவது உலகப் போரின் பொது காப்பாற்றிய, ஸ்வீடன் செஞ்சிலுவைச் சங்க முன்னாள் அதிகாரி போல்கே பெர்நோடட்டே,  ஐநாவின் பிரதிநிதியாக  பாலஸ்தீன்  பிரச்சனையில் நியமிக்கப்பட்டவர். பாலேச்தீன அகதிகள் விடயத்தில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

" வெளியேற்றப்பட்ட இந்த அகதிகளை தங்களின் வசிப்பிடங்களுக்கு வரவிடாமல் தடுப்பது,  நீதி முறையின் அடிப்படைக்கு முரணானது".



ஆயிரகணக்கான யூதர்களை காப்பாற்றிய அந்த அதிகாரியின் நேர்மையான கருத்திற்கு கிடைத்தப் பலன், ஒரு யூதனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த யூதன், பின்பு இஸ்ரேலிய பிரதமராக வந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று வரை இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பின் மூலம் பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்து வருகின்றது. எந்த அராஜகமும் நீடித்ததாக வரலாறு இல்லை. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ஒரு நாள் முடிவுக்கு வரும்.. அந்த நாள் இஸ்ரேலுக்கு மிகக் கெட்ட நாளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Ref:
1. http://www.ifamericansknew.org/history/ref-nakba.html
2. https://en.wikipedia.org/wiki/1948_Palestinian_exodus
3. http://www.theguardian.com/world/2014/may/02/nakba-israel-palestine-zochrot-history
4. http://whatreallyhappened.com/WRHARTICLES/mapstellstory.html

Saturday, March 12, 2016

புற்று நோய் மிகக் குறைவாக இருந்த நாட்டில் 4000 மடங்கு அதிகரிப்பு - அதிர்ச்சி ரிப்போர்ட்! ஹிரோஷிமாவை விட அதிகம் பாதிப்பு!!

புற்று நோய் மிகக் குறைவாக இருந்த நாட்டில் 4000 மடங்கு அதிகரிப்பு - அதிர்ச்சி ரிப்போர்ட்! ஹிரோஷிமாவை விட அதிகம் பாதிப்பு!!


அமெரிக்கா இராக்கின் மேல் குண்டு வீசுவதை இப்போது நிறுத்தி இருக்கலாம் ஆனால் குண்டு வீச்சினால் ஏற்பட்ட பாதிப்புகள் இராக்கில் உள்ள மனித உடல்களை பல தலைமுறைகளுக்கு பாதிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டு வருகின்றது. பிறக்கும் குழந்தைகளின் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள், அதிசியமான வியாதிகள், மேலும் எண்ணிலடங்கா புற்று நோய் பாதிப்புகள் என அந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஆயுதங்களால் ஏற்பட்ட சுற்றுப்புற சூழல் பாதிப்பு, குறிப்பாக யுரானிய வெடிமருந்துகளால் ஏற்பட்ட தாக்கம் தான் இராக் மக்களை மிகவும் கடுமையாக பாதித்து வருகின்றது. இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தைகள், ஒரு கண்ணுடன் பிறந்த குழந்தைகள், முற்றிலும் சிதைக்கப்பட்ட நிலையில் பிறக்கும் குழந்தைகள் என மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள் பிறப்பதற்கான காரணம் இந்த ஆயுந்தங்களினால் ஏற்பட்ட தாக்கம் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று, 15 சதவீத பலூஜா குழந்தைகள் பிறக்கும்போதே ஊனமுற்றதாக பிறக்கின்றன. இது 14 மடங்கு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகஷாக்கி மாநிலங்களை விட அதிகம். ஐரோப்பாவை விட 33 மடங்கு அதிகம். மேலும் இந்த பாதிப்பு ஆண்/பெண் சதவீதத்தையும் தாக்கியுள்ளது. தற்போது, 100 பெண்களுக்கு, 86 ஆண்கள் மட்டுமே உள்ளனர்.

பொய்யை மூலதனமாக வைத்து ஒரு நாட்டு மக்களையே நாசப்படுத்திய ரவுடிப் படைகளோ, இதைப்பற்றிக் கவலைகொள்வதாக இல்லை. ஒரு காலத்தில் மருத்துவத்தில் மட்டுமில்லாமல் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சிய இராக், இப்போது அநியாயக்காரர்களின் அக்கிரமத்தால் தன வளத்தை இழந்து, வருங்கால சந்ததிகளையும் இழந்து வருவது வேதனையிலும் வேதனை.

இந்த அக்கிரமக்காரர்களுக்கு என்ன தான் தண்டனை? இதைப்பற்றி திருக்குர்ஆன் என்ன சொல்கின்றது என்று பார்ப்போம்.

"மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்." [14:42]
"அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளைச் செய்து கொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக்கூடியவையாக இருந்தபோதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது." [14:46]

"இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்." [14:48]


"இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்." [14:49]