பக்கங்கள் செல்ல

Sunday, April 17, 2016

ஏன் இனிமேல் புதிதாக உண்மையான இறைதூதர் வர முடியாது?

நபி (ஸல்) அவர்களின் கருத்துக்களை ஏற்காத மக்கள், நபி அவர்களை பலவாறு குற்றம் சாட்டி வந்தனர்.
  •  ஏமாற்றுபவர்
  •  பொய்யர்
  •  பைத்தியம் பிடித்தவர்
  •  சில கிருஸ்துவ அறிஞ்சர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று, "அவர் அன்றைய கிறிஸ்த்துவ கொள்கைக்கு எதிரான கிறிஸ்த்துவ பாதிரியார்...அரபு நாட்டிற்கு தப்பிச் சென்று மறைமுக வாழ்க்கை வாழ்ந்து வந்தார்"

உதாரணமாக, "ஒருவர் தற்போது தன்னை இறைவனின் தூதர் என்று சொல்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவரை மக்கள் எப்படியெல்லாம் கேள்வி கேட்பார்கள்.. அனைத்திற்கும் அவர் பதில் சொல்லியாக வேண்டும். சொல்லப்படும் பதிலை வைத்தே, அவரின் ஏமாற்று வேலை தெரிந்துவிடும்."

நபி (ஸல்) அவர்களோ, சொல்லும் பதிலை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் இல்லாமல் எழுத்துப் பூர்வமான ஆதாரத்துடன், எல்லா காலத்திலும் பரிசோதித்துக் கொள்ளக் கூடியதாக சொல்லியுள்ளார்கள் என்றால் அது மனிதனால் முடியாது.

இறைவனின் உதவியால் மட்டுமே முடியும்.
Ref Book: The Man in the Red Under Pants
Author: A.R.Green

No comments:

Post a Comment