பக்கங்கள் செல்ல
1.மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்
2.அர்த்தமுள்ள கேள்விகள், அறிவு பூர்வமான பதில்கள்!
3.பறையோசை வேர்ட்பிரஸ்-ஆரம்பத்தை நோக்கி தொடருக்கான எதிர் தொடர்
4.உடைந்த சிலுவை
5.உயிர் ஓர் ஆய்வு
6.பரிணாமம் : உண்மையா ஊகமா
7.பரிணாமம் (பல எழுத்தாளர்கள்)
8.இஸ்லாமும் பால்யவிவாகமும்
9.குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கபட்டுள்ளது
10.புதிய ஏற்பாடும் குறைவில்லா குளறுபடிகளும்
1.உடைந்த சிலுவை-பாகம் 1:அறிமுகம்
2.உடைந்த சிலுவை-பாகம் 2: பழைய ஏற்பாடும் கிரேக்க செப்டகணும்
3.உடைந்த சிலுவை-பாகம் 3: பைபிலின் மூலங்கள் ஒரு பார்வை
4.உடைந்த சிலுவை-பாகம் 4: பழைய ஏற்பாடு ஆகமங்களின் எழுத்தரகள்
5.உடைந்த சிலுவை-பாகம் 5: புதிய ஏற்பாடு: ஒர் அறிமுகம்
6.உடைந்த சிலுவை-பாகம் 6: புதிய ஏற்பாடு ஆகமங்களின் எண்ணிக்கை
7.உடைந்த சிலுவை-பாகம் 7: மாற்கு சுவிஷேசம்
8.உடைந்த சிலுவை-பாகம் 8: மார் ஷபா கடிதம்
9.உடைந்த சிலுவை-பாகம் 9: ஏக இறைவனுக்கு வழிபட்ட முதலாம் நூற்றாண்டு முஸ்லிம்கள்
10.உடைந்த சிலுவை-பாகம் 10: போந்தியு பிலாத்தும் இரண்டு ஏசுவும் !!!!!!!!
11.உடைந்த சிலுவை-பாகம் 11: பழைய ஏடுகளில் ஏசுவின் சிலுவை மரணம் மறுக்கப்பட்டதா?
12.உடைந்த சிலுவை-பாகம் 12: கிறித்தவமும் பேய்வணக்கமும்
13.உடைந்த சிலுவை-பாகம் 13: இஸ்லாம் கூறும் யூத கிறித்தவ வேதம்
14.உடைந்த சிலுவை-பாகம் 14: மெசோரெடிக் ஏடுகளும் பழைய ஏற்பாடும்
15.உடைந்த சிலுவை-பாகம் 15: மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள புதிய ஏற்பாடு மூல கையெழுத்து பிரதிகள்
16.இஸ்லாமிய ஆவணங்கள் கூறும் இன்ஜீல்
17.புதிய ஏற்பாட்டின் மொழி குழப்பமும் அது ஏற்படுத்தும் சிக்கலும்
18.ஒத்தமை நற்செய்தி நூல்களும் அது குறித்த அனுமானக் குழப்பங்களும்
19.நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்
20.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மத்தேயுவின் படியான சுவிஷேசம்
21.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மாற்கின் படியான சுவிஷேசம்
22.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- லூக்காவின் படியான சுவிஷேசம்
23.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யோவானின் படியான சுவிஷேசம்
24.கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்
25.திருச்சபை பிதாக்களின் மேற்கோள்களும் காணாமல் போன தேவ வாக்குகளும்
26.பவுலின் கடிதங்களின் தொகுப்பும் குழப்பமும்
27.பவுலிய கடித தொகுப்பு குறித்த அனுமானமும் அது பலிதீர்த்த பவுலும்
28.பவுலிய கடிதங்களும் இடைச்செருகல்களும்
29.சர்ச்சைக்குரிய பவுலிய கடிதங்கள்
30.கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யாக்கோபின் நிருபம்
31.யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்
32.யாக்கோபின் நிருபமும் சிக்கலை உருவாக்கும் அதன் கிரேக்கமும்
cross tab2
1. ஹிஜ்ரி முதலாம் -இரண்டாம் நூற்றாண்டு அல் குர்ஆன் எழுத்துபிரதிகள்
2. உள்ளத்தில் பாதுக்காக்கப்பட்ட அல் குர்ஆன்
3.பெரும்பான்மை மக்களின் ஓதலும் உஸ்மான்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பும்
4.குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத் பின் ஸாபித்(ரலி)
5.ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுக்க தகுதியற்றவரா?
6.உஸ்மான்(ரலி) அரசாணையும் இப்னு மஸ்ஊத்(ரலி) எதிர்ப்பும் ஏற்பும்
7. ஏழு அஹ்ரூஃபும் ஏழு கிராத்தும்
8.நபி(சல்) அவர்களிடமிருந்து வந்த கிராத்கள்
9.அல் பராஅத் சூராவிற்கு நிகரான சூரா குர்ஆனில் காணவில்லையா?
10. அபூதர்தா(ரலி) அல் லைல் சூராவை (அல் குர்ஆன் 92:3) மாற்றி ஓதினார்களா???
11. நபித்தோழர்கள் இன்றைய குர்ஆனிற்கு மாற்றமாக ஓதினார்களா??!!!!!!!!
12. அல் குர்ஆனில் எழுத்தர் பிழைகளா?
13. கல்லெறி தண்டனை குர்ஆனில் காணவில்லையா???
14. பால்குடி வசனம் குர்ஆனில் காணவில்லையா???
15.இப்னு மஸ்வூத்(ரலி)யும் அவர்களது ஓதலும்
16.அல் ஃபாத்திஹா மற்றும் அல் முஅவ்விததைன் சூராக்கள் குர்ஆனின் பகுதிகளா?
17.உபை இப்னு கஅப்(ரலி)யும் அவர்களது ஓதலும்
18. உபை இப்னு கஅப்(ரலி) முஸ்ஹஃப்பில் அல்ஹஃப்த் மற்றும் அல்ஃஹலா ஸுராக்கள்
19.யமாமா யுத்தத்தில் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டதா???
20. இப்னு உமர்(ரலி) குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று கூறினார்களா??
21.அல்குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று ஹதீஸ்கள் கூறுகிறதா??
22. சமர்கண்ட் எழுத்துப்பிரதியும் இஸ்லாமோஃபோபுகளும்
23.ஆர்தர் ஜெஃப்ரி “ Materials for the History of the Text of the Qur'ān” நூல் ஆய்வு - பாகம் 1
24.முரண்பாட்டின் மொத்த உருவம் ஆர்தர் ஜெஃப்ரி
25.அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) மட்டும்தான் சாட்சியா???
Friday, May 8, 2015
அர்த்தமுள்ள கேள்விகள் - 15 - இஸ்லாம் ஏன் போரை விதிக்க வேண்டும்?
இணையதளங்களிலும் & சமூக வலைத்தளங்களிலும் இஸ்லாம் அனைவரிடமும் போர் செய்ய தூண்டுவதாக ஒரு வதந்தி அண்மைக்காலமாக பரவுகின்றது. இஸ்லாம் போர் செய்ய அனுமதித்ததை இவர்கள் தமக்கு ஏற்றாற் போல் வளைத்து அவதூறு பரப்பி வருகின்றனர் உண்மையில் இஸ்லாம் எதற்காக போரை அனுமதித்தது ?? வேண்டுமென்றே அனைவருடனும் யுத்தம் செய்ய சொல்கிறதா?? என்பதை இப்போது பார்ப்போம்.
கேள்வி :
எங்கள் பக்கத்து வீட்டு இந்து நண்பரிடம் எனக்கு நீண்ட நாளாக பழக்கம் உண்டு. அவரிடம் இஸ்லாத்தை அறிமுகம் செய்தேன். குர்ஆனையும் அவருக்கு படிக்கக் கொடுத்தேன். அவருக்கு அதில் சந்தேகம் ஏற்பட்டது. அதில் இஸ்லாம் ஏன் போரை விதிக்க வேண்டும் மனிதனை மனிதன் கொன்று குவிப்பதும் பொருளாதாரத்தைச் சேதப்படுத்துவதும் தன்னுடைய பாதையில் போர் செய்வதாக சிறப்பித்துக் கூறுவதா? இது இறைவனின் மகா கருணைக்கு இழுக்காக இல்லையா? என்று கேட்கிறார் விளக்கம் தரவும்.
- எம். முஹம்மது மூஸா, மதுரை.
பதில்:
போர் செய்யுமாறு கட்டளையிடும் வசனங்களைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். திருக்குர்ஆனில் உள்ள பல கட்டளைகள் அனைத்து முஸ்லிம்களுக்கும் உரியது என்றாலும் ஆட்சியாளர்கள் மீதும், அரசுகள் மீதும் மட்டும் சுமத்தப்பட்ட கட்டளைகளும் உள்ளன. அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட கடமைகளைத் தனி நபர்கள் செயல்படுத்தக் கூடாது. திருடினால் கையை வெட்டுதல், விபச்சாரத்துக்கு மரண தண்டனை, அல்லது நூறு கசையடி வழங்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பன போன்ற சட்டங்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளன. இச்சட்டங்களைத் தனிப்பட்ட எந்த முஸ்லிமும், முஸ்லிம் குழுவும் கையில் எடுக்க முடியாது. மாறாக இஸ்லாமிய அரசு தான் இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.
போர் குறித்த வசனங்களும் இது போல் அரசின் மீது சுமத்தப்பட்ட கடைமையயே தவிர தனி நபர்கள் மற்றும் குழுக்கள் மீது சுமத்தப்பட்டதல்ல. இவ்வாறு நாம் கூறுவதற்கு குர்ஆனிலேயேசான்றுகள் உள்ளன. 4:75 வசனத்தில் பலவீனர்களுக்காக நீங்கள் ஏன் போரிடக் கூடாது? என்று கூறப்படுகிறது. பலவீனர்கள் என்பது மக்காவில் சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்களைக் குறிக்கும். அவர்கள் மக்காவில் சொல்லொனாத துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். ஊரை விட்டு தப்பித்தால் போதும் என்ற அளவுக்கு அவர்களுக்குக் கொடுமைகள் இழைக்கப்பட்டன. ஆயினும் அவர்களை அழைத்துப் போர் செய்யுமாறு கட்டளையிடாமல், அவர்களுக்காக நீங்கள் ஏன் போர் செய்யக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) தலைமையில் அமைந்த முஸ்லிம் அரசுக்கு திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது. பலவீனர்களும், பாதிக்கப்பட்டவர்களும் போர் நடவடிக்கையில் இறங்கலாம் என்றிருந்தால் போரிடுமாறு அந்தப் பலவீனர்களுக்குத் தான் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். 8:60 வசனத்தில் பலவிதமான போர்த் தளவாடங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. ஒரு நாட்டுக்குள் பலவீனமாகவும், சிறுபான்மையாகவும் உள்ள தனி நபரோ, குழுக்களோ இப்படி திரட்டிக் கொள்வது சாத்தியமாகாது. இது அரசாங்கத்தினால் மட்டுமே சாத்தியமாகக் கூடியதாகும். இஸ்லாமிய அரசு அமைந்து, போர் செய்ய வேண்டிய காரணங்கள் அனைத்தும் இருந்து, போர் செய்வதற்கான படை பலம் இல்லாவிட்டால் அப்போது இஸ்லாமிய அரசின் மீது கூட போர் செய்வது கடமையாகாது. எதிரிகளின் படை பலத்தில் பத்தில் ஒரு பங்குதான் போதுமான படை பலமாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. (திருக்குர்ஆன் 8:65)
பின்னர் மக்களிடம் காணப்பட்ட பலவீனத்தைக் கருத்தில் கொண்டு எதிரியின் படை பலத்தில் பாதி படை பலம் இருந்தால் மட்டுமே இஸ்லாமிய அரசின் மீது போர் கடைமயாகும்; அதை விடக் குறைவாக இருந்தால் போர் செய்யாமல் அடங்கிச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இது தான் குர்ஆனின் கட்டளை. (திருக்குர்ஆன் 8:66). படை பலம் பாதிக்கும் குறைவாக இருந்தால் இஸ்லாமிய அரசாங்கம் கூட போரிடக் கூடாது என்றால் நாட்டில் சிறுபான்மையாக வாம் மக்கள் மீது போர் எவ்வாறு கடமையாகும்? இதனால் மிகப்பெரிய இழப்புகள் தான் சமுதாயத்துக்கு ஏற்படும் என்பதால் தான் போரைக் கடமையாக்காமல் பொறுமையை இறைவன் கடமையாக்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பட்ட கஷ்டத்தை யாரும் பட்டிருக்க முடியாது. அந்த நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படை திரட்டவில்லை. பொறுமையைத் தான் கடைப்பிடித்தனர். மதீனாவுக்குச் சென்று ஆட்சியும் அமைத்து போர் செய்வதற்கான காரணங்கள் ஏற்பட்ட போது தான் போர் செய்தனர். இதை முஸ்லிம்கள் சரியாகப்
புரிந்து நடந்து கொண்டால் மக்கள் இஸ்லாத்தை நோக்கி தம் பார்வையைத் திருப்புவார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே அரசாங்கத்தின் மீது தான் தேவையேற்படும் போது போர் கடமையாகும். தனி நபர்கள் மீது அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் வீடு வாசல், சொத்து, சுகங்கள் அனைத்தையும் பறி கொடுத்து மக்காவை விட்டு வெளிேயற்றப்பட்டனர். மதீனா வந்து தனி அரசையும் உருவாக்கினார்கள். இதன் பிறகும் மக்காவாசிகள் படையெடுத்து வந்ததாலும், மக்காவில் இஸ்லாத்தை ஏற்றவர்களில் எஞ்சியிருந்தோரைத் துன்புறுத்தியதாலும், சிலரைக் கொன்று குவித்ததாலும் போர் செய்யும் கடைமையயை இறைவன் விதித்தான்.
எந்த ஒரு நாடும் வம்பு செய்யும் நாட்டுடன் கடைப்பிடிக்கும் கடினப் போக்கை விட மிகக் குறைந்த அளவே இஸ்லாம் கடினப் போக்கை கையாண்டது. கொல்லுங்கள்! வெட்டுங்கள்! என்றெல்லாம் கூறப்படும் கட்டளைகள் போர்க்களத்தில் நடைமுறைப்படுத்த வேண்டியவை. போர்க்களத்தில் இப்படித்தான் நடக்க வேண்டும். வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்! (திருக்குர்ஆன் 2:190, 9:13) சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர்! (திருக்குர்ஆன் 2:191, 22:40) போரிலிருந்து விலகிக் கொள்வோருடன் போர் இல்லை! (திருக்குர்ஆன் 2:192) அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர்! (திருக்குர்ஆன் 4:75, 22:39-40) சமாதானத்தை விரும்புேவாருடன் போர் இல்லை! (திருக்குர்ஆன் 8:61) · மதத்தைப் பரப்புவோர் உடன் இல்லை!(திருக்குர்ஆன் 2:256, 9:6, 109:6) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. நியாயமான காரணம் இருந்தால் மட்டும் முஸ்லிம் அரசாங்கம் போர் செய்யலாம் என்று தான் இஸ்லாம் கூறுகிறது. தனி நபர்கேளா, குழுக்களோ ஜிஹாத் என்ற பெயரில் வன்முைறையில் இறங்கினால் அது தவறாகும். சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டவர்கள் போட்டு, இழந்த உரிமையை மீட்பதை யாரும் குறை கூற முடியாது. அதனடிப்படையில் தான் மக்காவின் மீது போர் தொடுக்கப்பட்டது. போரை முதல் துவக்கக் கூடாது என்று தெளிவான கட்டளையும் இருக்கிறது. (திருக்குர்ஆன் 2:190, 9:12,13)
சகோதரர் P. ஜெயினுலாப்பதீனால் எழுதப்பட்ட அர்த்தமுள்ள கேள்விகள் அறிவு பூர்வமான பதில்கள் என்னும் புத்தகத்தில் இருந்து........
எதிர்தொடர் 13: குர்ஆனும் ஹதீஸும்
அல்லாஹ்வின் திருப்பெயரால்.....
நூல் : அலி இப்னு அஹமத் அல் வாஹிதியின் அஸ்பாப் அல் நுசூல்
அறிவிப்பாளர் தொடர்:
Muhammad ibn ‘Abd Allah ibn Nu‘aym Muhammad ibn ‘Ali al-Saghani> Ishaq ibn Ibrahim al-Dabari> ‘Abd al-Razzaq> Ma‘mar> Ayyub al-Sikhtiyyani> ‘Ikrimah> Ibn ‘Abbas
ஆக மேற்கூறிய நபிமொழி குர் ஆன கவிதை யல்ல என்பதையும். வலீத் பின் அல் முகீரா அது எந்த வகையான கவிதை நடையிலும் சேரவில்லை என்பதையும் தெளிவாக கூறுகிறார். ஆம் அவரது வாசகங்கள் உன்மையானவை. அரபு கவிதையை சொல்லின் ஓசையை அடிப்படையாக கொண்டு பின் வரும 16 வகைகளாக பிரிக்கலாம். இந்த இலக்கணத்தின் அடிப்படையிலேயே அனைத்து அரபு கவிதைகளும் அடங்கி விடும். அவை தாவில் (طويل) . பாஸித்(بسيط) . வாஃபிர்(وافر) . காமில்(كامل) . ரஜ்ஸ்(رجز) .ஃகாஃபிஃப்(خفيف) . ஹசஜ்(هزج) . முதகாரிப்(متقارب) . முன்சரிஹ்(منسرح) . முக்ததப்(مقتضب) . முதாரிய்(مضارع) .மதீத்(مديد) .முஜ்தத்(مجتثّ) .ரமால்(رمل) .முதாரிக் (متدارك) . சரீஹ்(سريع) [REFER]
இதில் எந்த வகையான ஓசைநயத்திற்கும் ஒத்ததாய் அல் குர்ஆன் இல்லை. ஆக அது கவிதையல்ல என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹ்வும் தன்னுடைய வேதத்தில் அதை தெளிவாக குறிப்பிடவும் செய்கிறான் .(அல் குர்ஆன் 36:69). ஆக குர்ஆன் இலக்கியத்தின் எந்த வகையை சார்ந்தது. ஒருவேளை அது உரைநடையா என்று ஆய்வு செய்வோம். அரபிய உரைநடை இரண்டு வகையானது 1. சஜ் 2. முர்சல். இவற்றில் இரண்டாமவது சாதரண உரைநடை. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உரைநடை. முதலாமவது ஒசைநயத்துடன் கூடிய உரைநடை. ஆக குர் ஆனின் நடை சஜ் வகையதா என்றால் அது அதன் தன்மையுலும் இருந்து வேறுபட்டுள்ளது. சஜ் வகையான உரைநடைகளில் இறுதி ஒசையானது பரவலாக பல எழுத்து வடிவங்கள் மாறி மாறி இடம் பெறும். ஆனால் குர் ஆனில் ஒசை முடிவு பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் ஓரே ஒசை யுடையதாய் முடிவுறுவதாக Devin J. Stewart கூறுகின்றனர். இதனால்தான் Arthur J. Arberry, பின்வருமாறு கூறுகிறார்: குர் ஆன் உரையும் அல்ல கவிதையும் அல்ல. ஆனால் இவற்றின் தனிதன்மையுடைய இணைவு (Arthur J. Arberry, The Koran, Oxford University Press, 1998) மேலும் இது குறித்து . Devin J. Stewart குறிப்பிடும் போது குர்ஆனின் நடையானது குரானிக் சஜ்( Quranic Saj) என்ற தனிதன்மையுடைய இலக்கிய அமைப்பு என்று கூறுகிறார்.( Devin J. Stewart, Saj’ in the Qur’an: Prosody and Structure). ஆக குர்ஆன் தனக்கென ஒரு இலக்கிய நடையுடையது என்பதை பார்த்தோம். இதுவல்லாத சில சிறப்புகள் இருப்பதாகவும் அறிஞர்கள் கூறுகினறனர். அவற்றுள் சில இந்த வசனங்களின் சொற்களில் நாம் எந்த வகையான மாற்றமும் செய்ய இயலாது. மீறி செய்யும் போது அதன் ஓசை நயம் கெட்டுவிடும் அல்லது பொருந்தா பொருள் ஏற்படும். அந்த இடத்தில் இருக்கும். அதற்கு இணையான வெறு வார்த்தைகளை அங்கு பொருத்த இயலமல் இருப்பதும் அதன் தனிச்சிறப்பில் ஒன்று. இதனால் தான் முஸைலமா முதல் பஸ்ஸார் இப்னு புர்த் என்று பல வித்தகர்களும் குர் ஆன் போன்ற ஒன்றை உருவாக்க எண்ணி மண்ணை கவ்வியதாக வரலாறு கூறுகிறது. [REFER]
இந்த வசனம் (அல் குர்ஆன் 3: 7) பல மொழிப்பெயர்ப்புகளில் இவர் குறிப்பிடும் படியாகவே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசனத்தை எப்படி பொருள் கொள்வது என்பது குறித்து முதலில் பார்ப்போம். அரபு மொழியின் அடிப்படையில் இந்த வசனத்திற்கு இருவாராக பொருள் கொள்ள முடியும் . ஆயினும் இந்த வசனத்திற்கு பின்வருமாறு பொருள்கொள்வதுதான் சரியானதாகும்.
(முஹம்மதே!) அவனே உமக்கு இவ்வேதத்தை அருளினான். அதில் உறுதி செய்யப்பட்ட வசனங்களும் உள்ளன. அவையே இவ்வேதத்தின் தாய். இரு கருத்தைத் தருகின்ற மற்றும் சில வசனங்களும் உள்ளன. உள்ளங்களில் கோளாறு இருப்போர் குழப்பத்தை நாடியும், அதற்கேற்ப விளக்கத்தைத் தேடியும் அதில் இரு கருத்துடையவற்றைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வையும், கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர அதன் விளக்கத்தை (மற்றவர்கள்) அறிய மாட்டார்கள். அவர்கள் "இதை நம்பினோம்; அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே'' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர (மற்றவர்கள்) சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 3:7)
நமது பதில்:
Wednesday, May 6, 2015
இஸ்லாம்: விமர்சனங்களும் பதில்களும் பகுதி - 01 - ஜிஸ்யா வரி
ஜிஸ்யா வரி
சமூக இணையத்தளங்களில் இஸ்லாத்தின் விரோதிகளால் முஸ்லிம்கள் மற்றும் இஸ்லாம் தவறாக சித்தரிக்கப்பட்டு காட்டப்படுகின்றது. இதற்கு இஸ்லாத்தின் விரோதிகள் பயன்படுத்தும் ஓர் ஆயுதம் ஜிஸ்யா வரியாகும். ஜிஸ்யா என்றால் என்ன? அது ஏன்? என்பதை பார்ப்போம்.
இவ்வசனத்தில் (9:29) முஸ்லிம் அல்லாதவரிடம் ஜிஸ்யா வரி வசூலிக்குமாறு கூறப்படுகிறது. இது பிற மதத்தவர் மீது செய்யும் அக்கிரமம் போல் கருதப்படுகிறது. இது பற்றி உண்மை நிலையை அறிந்து கொண்டால் ஜிஸ்யா வரியை யாரும் குறை கூற மாட்டார்கள்.
இஸ்லாமிய ஆட்சியில் எவ்வாறு வரி விதிக்கப்படுகின்றது?
இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது இஸ்லாம் ஸகாத் எனும் வரியைக் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால் நடைகள், விளைவிக்கும் தானியங்கள் மற்றும் பயறு வகைகள் ஆகிய அனைத்திலிருந்தும் ஸகாத் எனும் வரி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.
தங்கம், வெள்ளி மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்படும் பொருட்களில் ஐந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஸகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஸகாத் என்பது இஸ்லாமிய அரசால் கட்டாயமாகக் கணக்குப் பார்த்து வசூலிக்கப்பட வேண்டிய வரியாகும். ஸகாத் என்ற பெயரில் பெரும் தொகையை இஸ்லாமிய சமுதாயம் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.
ஏழைகள், பரம ஏழைகள், கடன்பட்டிருப்பவர்கள், அடிமைகள், அறப் போருக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகள் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். சுருங்கச் சொன்னால், ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஸகாத் எனும் வரியிலிருந்தே செய்யப்பட்டன.
மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஸகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிமல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமல் இருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.
முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்திக் கொண்டிருக்கும் போது முஸ்லிமல்லாதவர்கள் விஷயமாக கீழ்க்காணும் மூன்று வழிகளில் ஒன்றை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.
1. முஸ்லிமல்லாதவர்கள் மீது எந்த வரியும் விதிக்காமலிருப்பது.
2. முஸ்லிம்களைப் போலவே முஸ்லிமல்லாதவர்களுக்கும் ஸகாத் வரி விதிப்பது.
3. முஸ்லிமல்லாதவர்கள் மீது வேறு விதமான வரி விதிப்பது.
இதில் முதல் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளை முதலில் அலசுவோம்.
முஸ்லிம்கள் மட்டும் வரி செலுத்தும் போது முஸ்லி மல்லாதவர்கள் எந்த வித வரியும் செலுத்தாமல் அரசாங்கத்தின் நன்மைகளைப் பெற்று வந்தால் வரி செலுத்துவோர் கூடுதலான உரிமையை இயல்பாகவே எதிர்பார்க்கும் நிலை ஏற்படும்.
வரி ஏதும் செலுத்தாமல் அரசாங்கத்தின் பயன்களை அவர்கள் அனுபவிக்கக் கூடாது என்று எதிர்ப்புக் குரல் கேட்கும்.
முஸ்லிம் அல்லாதவர்கள் வரி ஏதும் செலுத்தாததால் அவர்களே கூட தங்கள் உரிமையைக் கேட்கத் தயங்குவார்கள். மனோரீதியாக தாங்கள் இரண்டாம் தரக் குடிமக்கள் என்று எண்ணத் துவங்குவர்.
ஒரு சமுதாயத்திடம் மட்டும் வரி வாங்கி இன்னொரு சமுதாயத்திடம் வரி வாங்காவிட்டால் இதில் அவமானம் வரி வாங்கப்படாதவர்களுக்கே. வரி வாங்கப்படாதது சட்டப்படியான உரிமை அவர்களுக்கு இல்லை என்பதற்கு அடையாளமாகும். ஆக, இந்த நிலையை நடைமுறைப்படுத்தும் போது இரு தரப்பிலும் எதிர்ப்பு கடுமையாகும்.
தங்களிடம் மட்டும் வரி வாங்கி விட்டு மற்றவர்களுக்கு விலக்களிக்கப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பார்கள். தங்களிடம் மட்டும் வரி வாங்காததால் தங்களுக்குச் சட்டப்பூர்வ உரிமை வழங்கப்படவில்லை எனக் கருதி முஸ்லிமல்லாதவர்களும் இதை எதிர்ப்பார்கள். எனவே முதல் வழி சாத்தியமாகாது.
இரண்டாம் வழியை நடைமுறைப்படுத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம்.
ஸகாத் என்பது ஒரு வரியாக இருந்தாலும், முஸ்லிம்களைப் பொறுத்த வரை தொழுகை, நோன்பு போன்ற மதக் கடமையாகவும் ஸகாத் அமைந்துள்ளது.
இந்த ஸகாத் வரியை முஸ்லிமல்லாதவர்கள் மீது திணிக்கும் போது, இன்னொரு மதச் சட்டம் தங்கள் மீது திணிக்கப்படுவதாக அவர்களுக்குத் தோன்றும். இஸ்லாமியர்கள் செய்ய வேண்டிய கடமைகள், வணக்கங்கள் யாவும் தங்கள் மீதும் கடமையாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்படும். இது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாததாக அமைந்து விடும்.
முஸ்லிமல்லாதவர்களின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுவதாக அமையும் என்பதால் அவர்கள் மீது ஸகாத் எனும் வரியை விதிக்க முடியாது.
ஸகாத் வரி என்பது அவரவர் சொத்துக்களை மதிப்பிட்டு வசூலிக்கப்பட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்களும் சரியாகக் கணக்குக் காட்டி ஒத்துழைத்தால் மட்டுமே ஸகாத்தை முழுமையாக வசூலிக்க முடியும். முஸ்லிம்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு அது மதக் கடமையாகவும், உள்ளதால் இறைவனுக்கு அஞ்சி முறையாக அவர்கள் கணக்குக் காட்டுவார்கள்.
முஸ்லிமல்லாதவர்களைப் பொறுத்த வரை இது ஒரு வரியாக மட்டுமே கருதப்படும். இன்னொரு மதத்தின் கடமை என்பதால் அதில் அவர்கள் முழு ஒத்துழைப்புத் தர மாட்டார்கள். இயன்ற வரை தவறாகக் கணக்குக் காட்டி குறைவான வரி செலுத்தும் வழிகளையே தேடுவார்கள். இந்தக் காரணத்தினாலும் ஸகாத் என்ற வரியை இவர்கள் மீது விதிக்க முடியாது.
வரி விதிக்காமலும் இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு விதிப்பது போன்ற வரியையும் அவர்கள் மீது விதிக்க முடியாது.
இப்போது மூன்றாவது வழியை நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.
"ஸகாத்" என்ற வகையிலில்லாத புதிய வரியை அவர்கள் மீது விதிப்பதன் மூலம் இந்தத் தீய விளைவுகளைத் தவிர்க்க முடியும். இந்த அடிப்படையிலேயே "ஜிஸ்யா" எனும் வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம்கள் ஸகாத் என்ற பெயரால் ஜிஸ்யாவை விடப் பல மடங்கு அதிகமாக வரி செலுத்தினர்.
இஸ்லாமிய ஆட்சி நடந்த நாடுகளில் பாரபட்சம் காட்டப்பட்டு பாதிப்புக்கு ஆளானார்கள் என்று சொல்வதென்றால் முஸ்லிம்கள் தான் பாதிப்புக்கு ஆளானார்களே தவிர முஸ்லிமல்லாதவர்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ளாத காரணத் தினாலேயே ஜிஸ்யா வரி பற்றி தவறான விமர்சனம் செய்து வருகின்றனர்.
நன்றி: இந்தப்பதிவை உருவாக்கியவருக்கு! (Facebook இல் இருந்த எடுத்த கட்டுரை)






