பக்கங்கள் செல்ல

cross tab2

Sunday, May 3, 2020

மனித வரலாற்றில் வெற்றிகரமான தொழிலதிபர் மற்றும் குடும்ப வாழ்க்கையிலும் மிகச் சிறந்த ஒரு பெண்ணை பின்பற்ற வேண்டுமா?

மனித வரலாற்றில் வெற்றிகரமான  தொழிலதிபர்  மற்றும் குடும்ப வாழ்க்கையிலும் மிகச் சிறந்த ஒரு பெண்ணை பின்பற்ற வேண்டுமா?
அன்னை கதிஜாவின் வாழ்க்கையைப் பாருங்கள்:




அன்னை கதிஜா:

  • கதீஜாவின் தந்தை மிகச் சிறந்த தொழிலதிபர் மட்டுமில்லாது, அன்றைய குறைஷிகளில் ஒருவர் 
  • 1440 ஆண்டுகளுக்கு முந்தைய, அன்றைய ஆணாதிக்க முதலாளிகளில், மிகச்  சிறந்த பெண் தொழிலதிபராக வியாபாரத்தை சிறந்த முறையில் நிர்வகித்து வந்தார்
  • விமானப்பயணமில்லாத, மிகவும் ஆபத்தான, உயிருக்கு உத்திரவாதமற்ற  நாடு விட்டு நாடு சென்று செய்யும்  அன்றைய வியாபாரத்தில் சாதனைப் படைத்தவர்   
  • அவருடைய வியாபாரம், அனைத்து குறைஷி தொழிலதிபர்களின் மொத்த வருமானத்தை விட பெரியது மட்டுமில்லாமல் மிகவும் தரமிக்க மற்றும் நேர்மையான முறை கொண்டதாகும் 
  • இவரின் நாணயமான வியாபார முறை மற்றும் கண்ணியத்தால் அக்கால மக்கள் "குறைஷிகளின் தலைவி" என்றும் "அல்-தாஹிரா தூய்மையானவர்" என்றும்  அழைத்து  வந்தனர்


  • பல தொழிலதிபர்கள் இவரை திருமணம் செய்ய விரும்பினாலும், இவர் ஏற்காமல்  ஏழ்மையிலும் நேர்மையான, தனது ஊழியர்களில் ஒருவரான நபிகள் பெருமானாரை திருமணம் செய்து கொண்டார்;நபிகளாரை விட 15 வயது மூத்தவர் அன்னை கதிஜா 


  • தன்னுடைய செல்வத்தை ஏழை மற்றும் அனாதைகளுக்காக செலவிட்டு வந்தார்
  • தனது அனைத்து செல்வத்தையும் இறை வழியில் செலவிட்டு, நபிகளாருக்கு சிறந்த அரணாக தன்னுடைய இறுதிக் காலம் வரை வாழ்ந்தார்கள்.
  •  தன்னுடைய கணவர் மேல் அளப்பரிய அன்பு வைத்திருந்தார்; நபிகளாரின் பிரச்சாரத்தால் கோபமடைந்த எதிரிகள், சமூக விலக்கல்  செய்த போது பெரும் செல்வந்தரான அன்னை கதிஜா அனைத்தையும் துறந்து தனது கணவரோடு  சென்று  மூன்று  வருடம் வரை கடும் சோதனைக்குள்ளானார்


மக்காவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம்
அன்னை கதிஜா இறந்து பல வருடங்கள் கழித்தும்  அவர்கள் மீதுள்ள அன்பு ஒரு போதும் குறைந்ததில்லை. ஒரு முறை நபி (ஸல்), அவர்களின் அன்னை கதிஜாவின்  நெக்லஸை கண்டு அழுதார்கள்.

நபியவர்கள்  கதீஜா மீது கொண்டுள்ள அளப்பரிய அன்பின் மீது சிறிது பொறாமை கொண்டவர்களாக  அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், "கதிஜா மட்டும் தான் உங்களின் அன்பிற்கு பொருத்தமானவரா?" என்று கேட்டபோது, நபியவர்கள் இவ்வாறு கூறினார்கள் :

"யாருமே என்னை ஏற்றுக்கொள்ளாதபோது, என் மீது முழு நம்பிக்கை கொண்டார். மக்கள் எல்லாம்  என்னை நிராகரித்தபோது, அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். யாருமே எனக்கு உதவி செய்ய முன்வராதபோது, அவர் எனக்கு உதவி செய்தார்."

மனித குல வரலாற்றில் சிறந்த நான்கு பெண்மணிகள் என நபிகள் பெருமகனார் இந்த  நால்வரைக் குறிப்பிட்டார்கள்:


  1. அன்னை மேரி  (இயேசுவின் தாய்)
  2. அன்னை ஆசியா  (எகிப்தின் அரசன் பிரவுனின் மனைவி)
  3. அன்னை கதிஜா  (நபியவர்களின் மனைவி)
  4. அன்னை பாத்திமா  (நபி (ஸல்) & கதீஜாவின் மகள்)

Thursday, March 19, 2020

இஸ்லாமிய நிக்காஹ்வின் திருமணக்கொடை (மஹர்) விமர்சனமும் விளக்கமும்

﷽‎

              சில காலமாக சில இந்துத்துவா கும்பலும், கிறித்தவ மிசனரிகளும் இஸ்லாமிய திருமணத்தில் வழங்கப்படும் மஹர் குறித்து விமர்சனம் செய்து வருகின்றன. அது பெண்ணின் யோனியை உபயோகிக்க விதிக்கப்படும் தொகை என கூறி அதை விமர்சித்து வருகின்றன. இஸ்லாமிய திருமண முறையில் இடம் பெறும் மஹர் குறித்து பார்ப்பதற்கு முன்பு திருமணம் என்றால் என்ன என்பதையே இவர்களுக்கு விளக்க வேண்டிய அவல நிலை இங்கு ஏற்பட்டுள்ளது என்பதையே இவர்களின் இந்த அறிவீன வாதம் உணர்த்துகிறது.

திருமணம் ஏன் ?
                 ஒரு மனிதனின் வாழ்வில் திருமணம் என்பது என்ன? மனித வாழ்வில் திருமணம் என்பது சட்டபூர்வமாக பாலியல் இச்சையை தீர்த்து கொள்ளும் ஒரு வடிகால்.அதன் பலனையும் , நஷ்டத்தையும் சட்டபூர்வமாக அனுமதிக்கும் ஒரு முறைதான் திருமணம். இவ்வாறு திருமணம்( அதாவது பாலியல் தேவையை பூர்த்தி செய்வதற்கான அனுமதியை பெற) செய்ய ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு நடைமுறையை கொண்டுள்ளது. சிலர் தாலி கட்டுகிறார்கள், சிலர் மோதிரம் மாற்றுகிறார்கள், சிலர் பதிவு அலுவலகத்தில் பதிந்து நடைமுறையை பின்பற்றி திருமணம் செய்கிறார்கள்.....இஸ்லாமிய மஹர் எனும் முறைமையை கேலி செய்யும் கூமுட்டைகளின் வார்த்தையில் சொல்வதாக இருந்தால் பாலியல் சுகத்தை அடைய தாலி கட்டுகிறார்கள்....விருந்து வைக்கிறார்கள்,... மோதிரம் மாற்றுகிறார்கள்..... இன்னும் இவர்களது பாசையில் சொல்வதாக இருந்தால் மந்திரம் ஓதி ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக பயன்படுத்த கூட்டி கொடுக்கிறார் ஐயர்.  முதலிரவுக்கு செய்யப்படும் முறைமை என அனைத்தும்.... திருமணத்தின் ஒவ்வொரு பரிமானமும் இருவரின் பாலியல் தேவையை பூர்த்தி செய்ய அனுமதிக்கும் முறைமையே.

        இத்தகைய ஒரு நடைமுறைதான் இஸ்லாமிய திருமணத்தில் நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்படும் பரிசு அல்லது கொடை என்ற இந்த மஹர் ஆகும்.ஆனால் இஸ்லாம் இதை மூடி மறைத்து சொல்லாமல் நாம் மேலே குறிபிட்டது போல பட்டவர்த்தணமாய் சொல்கிறது அவ்வளவே...ஆக இனி மஹர் குறித்த இஸ்லாமிய பார்வை என்ன என்பதையும் பார்ப்போம்..

இஸ்லாமில் மஹர் என்றால் என்ன??

             அல்லாஹ் தனது வேதத்தில் இன்று வழக்கத்தில் இருக்கும் மஹர் குறித்து குறிப்பிடும் போது எந்த இடத்திலும் அதை மஹர் (கூலி) என்று குறிப்பிடவில்லை. குர்ஆன் 4:4 இல் குறிப்பிடும் போது صَدُقَا - தர்மம் என்று கூறுகிறான்

وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِن طِبْنَ لَكُمْ عَن شَيْءٍ مِّنْهُ نَفْسًا فَكُلُوهُ هَنِيئًا مَّرِيئًا
பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுட னும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!(திருக்குர்ஆன் 4:4)

                     அது போல குர்ஆன் 4:24, 5:5, 60:10 குறிப்பிடும் போது أُجُورَ - பரிசு என்று கூறுகிறான்.

وَالْمُحْصَنَاتُ مِنَ النِّسَاءِ إِلَّا مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۖ كِتَابَ اللَّهِ عَلَيْكُمْ ۚ وَأُحِلَّ لَكُم مَّا وَرَاءَ ذَٰلِكُمْ أَن تَبْتَغُوا بِأَمْوَالِكُم مُّحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ ۚ فَمَا اسْتَمْتَعْتُم بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا تَرَاضَيْتُم بِهِ مِن بَعْدِ الْفَرِيضَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا

24. உங்கள் அடிமைப் பெண்களைத்107 தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை108 கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.(திருக்குர்ஆன் 4:24)
 
الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ ۖ وَطَعَامُ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حِلٌّ لَّكُمْ وَطَعَامُكُمْ حِلٌّ لَّهُمْ ۖ وَالْمُحْصَنَاتُ مِنَ الْمُؤْمِنَاتِ وَالْمُحْصَنَاتُ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلِكُمْ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ وَلَا مُتَّخِذِي أَخْدَانٍ ۗ وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ عَمَلُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

5. தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின்27 உணவு உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.137 உங்கள் உணவு அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை கொண்ட கணவனில்லாத பெண்களையும், உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்ட27 கணவனில்லாத பெண்களையும் வைப்பாட்டிகளாக்கிக் கொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை108 வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.138 தனது நம்பிக்கையை (இறை)மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் நட்டமடைந்தவராக இருப்பார்.(திருக்குர்ஆன் 5:5)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ ۖ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ ۖ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ ۖ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ ۖ وَآتُوهُم مَّا أَنفَقُوا ۚ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَن تَنكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ ۚ وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ وَاسْأَلُوا مَا أَنفَقْتُمْ وَلْيَسْأَلُوا مَا أَنفَقُوا ۚ ذَٰلِكُمْ حُكْمُ اللَّهِ ۖ يَحْكُمُ بَيْنَكُمْ ۚ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
10. நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத்460 செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏகஇறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்.91 அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை108 நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏகஇறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.(திருக்குர்ஆன் 60:10)

                     ஆக மேற்குறிபிட்ட வசனங்களை வைத்துப்பார்க்கும் போது மஹர் அல்லது உஜ்ர என்பது திருமணத்தில் பின்பற்றப்படும் ஒரு நிபந்தனை. பளிச்சென்று சொல்ல வேண்டும் என்றால் ஒருவர் தனது பாலியல் இச்சையை மேற்கொள்ள பெறும் அனுமதிக்காக நிறைவேற்றும் நிபந்தனைகளில் ஒன்று....

அதனால்தான் பின்வரும் ஹதீஸ் இப்படி கூறுகிறது

புகாரி 5350. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
                      சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த அந்தத் தம்பதியரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர்’ என்று கூறிவிட்டு, (கணவரான உவைமிரைப் பார்த்து), ‘இனி அவளின் மீது உமக்கு எந்த அதிகாரமும் கிடையாது’ என்று கூறினார்கள்.
     அதற்கு அவர், ‘இறைத்தூதர் அவர்களே! (அவளுக்கு நான் மணக்கொடையாக அளித்திருந்த) என்னுடைய பொருள் (என்னாவது)?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘உமக்கு (அந்த)ப் பொருள் கிடைக்காது. நீர் அவளின் மீது உண்மை(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், அவளுடைய கற்பை நீர் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். நீர் அவளின் மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், (அவளை அனுபவித்துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தினால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகுதொலைவில் உள்ளது’ என்று கூறினார்கள். 

மேலும் இந்த அனுமதியைப்பெற இன்னும் அதிகப்படியான நிபந்தனைகளை விதிக்கும் அதிகாரம் பெண்ணுக்கு உண்டு அதைத்தான் பதிவாளர் குறிப்பிடும் நஸயீ 3282 குறிப்பிடுகிறது

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ تَمِيمٍ، قَالَ سَمِعْتُ حَجَّاجًا، يَقُولُ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ أَبَا الْخَيْرِ، حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ "إِنَّ أَحَقَّ الشُّرُوطِ أَنْ يُوَفَّى بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ"
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
      நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளே ஆகும்.இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல் : நஸயீ 3282)

           ஆக மேற்குறிபிட்ட ஹதீஸ் தெளிவாக ஒன்றை கூறுகிறது அதாவது நிக்காஹ் (பாலுறவு அனுமதி)என்பதற்கு பல நிபந்தனைகளை விதிக்கலாம்...அதில் மஹர் என்பதும் ஒன்று......அதனால்தான் الشُّرُوطِ - நிபந்தனைகள் என்ற பன்மை சொல் ஹதீஸில் பயன்படுத்தப்படுவதை பார்க்க முடிகிறது.

            மேலும் இவர்கள் கூறுவது போன்று இருந்தால் அதாவது மஹர் என்பது பாலுறவுக்கான கூலி இல்லை என்பதால்தான் பெண்கள் குலாஉ அதாவது விவாக முறிவு கோரும் போது பெற்ற மஹரை திருப்பி செலுத்த வேண்டும் என்ற கட்டளையை இஸ்லாம் பிறப்பிக்கிறது, இதோ பின் வரும் ஹதீஸ் அதை உறுதி செய்கிறது

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்
          ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ்(ரலி) அவர்களின் துணைவியர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) ஸாபித் இப்னு கைஸின் குணத்தையோ, மார்க்கப் பற்றையோ நான் குறைகூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டே இறைநிராகரிப்புக்குரிய செயல்களைச் செய்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்' என்று கூறினார். அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஸாபித் உனக்கு (மணக்கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?' என்று கேட்டார்கள் அவர், 'ஆம் (தந்து விடுகிறேன்)' என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), 'தோட்டத்தை ஏற்றுக் கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுங்கள்!' என்று கூறினார்கள். (புகாரி : 5273.)

       ஆக மேற்குறிபிட்ட செய்தி தெளிவாக உணர்த்துவது ஒன்றைத்தான் அதாவது மஹர் என்பது நிபந்தனைதான் அது உறவு கொள்வதற்கான கூலி அல்ல....எப்படி தங்கத்தால் ஆன குறிபிட்ட டிசைன் தாலி கட்டுவது நிபந்தனையோ அது போல...அப்படி கூலியாக இருந்தால் கூலி கழிக்கப்பட்ட மஹ்ரை அல்லவா திருப்பி செலுத்த கட்டளையிடப்பட்டிருக்கும்.

       மஹர் என்பது எப்படி ஒவ்வொரு திருமணத்திலும் (அதாவது உறவு கொள்ள அனுமதிக்கும் விழாவிலும்) நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதோ, அது போன்ற ஒன்றுதான் . அதனால்தான் இரும்பு மோதிரத்தையாவது மணக்கொடையாக வழங்க அறிவுறுத்தப்பட்ட நிகழ்வும் மணவாளர் அதுவும் இல்லை எனக்கூறி திருகுர்ஆனின் சில வசனங்களுக்காக திருமணம் செய்யப்பட்ட சம்பவங்களை காணமுடியும் ( முஸ்லீம் 2785)...

       மேலும் இஸ்லாமிய நடைமுறையில் திருமணத்திற்காக கோரப்படும் நிபந்தனைகள் அனைத்தும் பெண்ணின் பாதுக்காப்பை அடிப்படையாக கொண்டது. அதில் பெண்களுக்கான முழு சுதந்திரத்தை இஸ்லாம் வழங்குகிறது.

       இதற்கு மேலும் திருமணம் என்பது சாம்பிராணி போடுவதற்கான அனுமதி நிகழ்வு என்று யாராவது வாதிட்டால் பெண்களே சிந்தித்துக்கொள்ளுங்கள்..... உங்கள் வாழ்கையை காத்துக்கொள்ளுங்கள்.

Thursday, November 7, 2019

"பிள்ளைகள், தங்களுடைய தாயின் முன்னாள் கணவர்களின் பண்புகளைப் பெறுகின்றன" -

பெண்ணோடு  உறவு கொள்ளும் ஒவ்வொரு ஆணின் விந்தும், அவள் உடலில் சில அடையாளங்களை விட்டுச் செல்கின்றது என்பததாக உயிரியலாளர்கள் கூறி  வந்தனர். நவீன மரபணு பற்றிய ஆய்வுகள் (1979) இது அறிவியல் ரீதியான எந்தவித ஆதாரமும்  இல்லாத கட்டுக்கதை என்று மறுத்து வந்தது ஆனால் தற்போதைய ஆய்வுகள்(2010 & 2013) முந்தைய நம்பிக்கையை உறுதி செய்யும் வண்ணம் ஒவ்வொரு ஆணின் விந்தும்  மூலக்கூறு மற்றும்
உடலியல் தடங்களை விட்டுச் செல்வதாக நிரூபணமாகிவுள்ளன மேலும் பிள்ளைகள், தங்களுடைய  தாயின் முன்னாள் கணவர்/துணைவர்களின் பண்புகளைப்  பெறுவதாகவும் நிரூபணமாகியுள்ளது.

விவாகரத்து பெற்ற பெண்கள் 3 மாதவிடாய் தவணைகளும், விதவைகள் 4 மாதம் 10 நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் மேலும் கர்ப்பிணியாக இருந்தால் குழந்தை பிறக்கும் வரை காத்திருக்கவேண்டும்  என்ற இறைக்கட்டளை  முந்தைய கணவனால்  பெண்ணின் கருவறையில்  ஏற்படும் மாற்றங்களை முற்றிலுமாக நீக்கியப்  பின்பு தான் வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் இருக்கலாம்.

வரும் காலங்களில் இது தொடர்பான அறிவியல் ஆய்வுகள்  இன்னும் அதிகப்படியான விளக்கங்களை  நிச்சயம் கொடுக்கும் .

அல்லாஹ்வே அறிந்தவன்.


Ref:

1. https://www.telegraph.co.uk/news/science/science-news/11133203/Could-previous-lovers-influence-appearance-of-future-children.html

2. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4282758/

3. https://www.dailymail.co.uk/sciencetech/article-2776723/Children-look-like-mother-s-EX-partner-flies-Previous-sexual-partner-influence-male-s-offspring-study-claims.html

Monday, October 14, 2019

பசுமைப் புரட்சியைப் பறைசாற்றும் 10 நபிமொழிகள்!

1. மரம் நடுதலின் சிறப்பு:

மரம் வளர்ப்பது பற்றி இஸ்லாம் கூறுவது என்ன? குறிப்பாக முஸ்லிம்கள் ஏன் இதில் அதிகம் ஈடுபடவேண்டும்?
-------------------------------
"ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால் நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை.
அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்;
அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்.
அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்;
அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்" (நபிமொழி)

2.

Sunday, September 15, 2019

நபி(சல்) அவர்கள் ஹசன்(ரலி) ஹுசைன்(ரலி) யை துஷ்பிரயோகம் செய்தார்களா??

﷽‎

     
  நபி(சல்) அவர்களின் வாழ்க்கையை விமர்சனம் செய்ய புகுந்த மிசனரிகளும், இஸ்லாமிய எதிர்பாளர்களும் அவர்களது குணத்திற்கு களங்கம் ஏற்படுத்த எடுத்த ஆயுதம் தான் அவர்களது இரத்த உறவுகளுடனேயே கீழான செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற விமர்சனம். முன்சென்ற தொடரில் இவர்களது கீழ்த்தரமான விமர்சனமான தனது பெரிய அன்னையின் பிணத்துடனேயே உறவு கொண்டார்கள் என்ற உளரலுக்கு பதிலளித்தோம். அதே போல இவர்கள் நபி(சல்) அவர்களின் சொந்த பேரன்களான ஹசன்(ரலி), ஹுசைன்(ரலி) அவர்களிடம் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும், அதன் அடிப்படையில் உறவு முறைகளை துஷ்பிரயோகம் செய்தவர்,ஓரிணச்சேர்க்கையில் ஈடுபடுபவர், சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்தவர் என்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த படாதபாடு படுகின்றனர் மிசனரிகள். ஆனால் இவர்கள் என்றும் போல் தங்களது வாதத்திற்கு அறியப்பட்ட பொய்களை ஆதாரமாக கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நபி(சல்) அவர்கள் தனது பேரன்களின் மறைவுறுப்பை முத்தமிட்டதாக கூறும் பலவீனமான செய்திகளை முன்வைத்து விமர்சனத்தை முன்வைத்துள்ளனர் danielpipes.org போன்ற இணையத்தளங்கள் . ஆக இந்த ஹதீஸ்களை வரிசையாக பதிவிட்டு அதன் நிலை என்ன என்பதை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். 

          மேற்குறிபிட்ட கருத்து பட இருக்கும் ஹதீஸ்கள் பின்வரும் கிரந்தங்களில் பின் வரும் அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படுகிறது. இந்த ஹதீஸ்களை ஒவ்வொன்றாக பதிந்து அவற்றை இன் ஷா அல்லாஹ் ஆய்விற்கு உட்படுத்துவோம்.

.எண்
கிதாப்
அறிவிப்பாளர்
1.
தப்ரானி அவர்களின்  
அல் முஹ்ஜம் உல் கபீர்ஹதீஸ் எண்:2658
இப்னு அப்பாஸ்(ரலி)
2.
அல் ஹைதமி அவர்களின் அல் மஜ்ம உல் ஜவாயித்
ஹதீஸ் எண்: 15108
இப்னு அப்பாஸ்(ரலி)
3.
இப்னு அஸாகிர் அவர்களின் தாரிக் திமிஸ்க்-
பாகம் 14: .எண்:224
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
4.
இப்னு அஸாகிர் அவர்களின் தாரிக் திமிஸ்க்-
பாகம் 13: .எண்:222
அனஸ்(ரலி)
5.
இப்னு அபி துன்யா அவரகளின் அல் இயால்-
ஹதீஸ் எண்:211
அபி தப்யான்
6.
பைஹகீ அவர்களின்    சுனன் அல் குப்ரா-
ஹதீஸ் எண்:651
அப்துர் ரஹ்மான் இப்னு அபி லைலா

ஹதீஸ் 1: தப்ரானி அவர்களின் அல் முஹ்ஜம் உல் கபீர் – ஹதீஸ் எண்:2658
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْفَسَوِيُّ، ثنا خَالِدُ بْنُ يَزِيدَ الْعُرَنِيُّ، ثنا جَرِيرٌ، عَنْ قَابُوسَ بْنِ أَبِي ظَبْيَانَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَّجَ مَا بَيْنَ فَخِذَيِ الْحُسَيْنِ وَقَبَّلَ زَبِيبَتَهُ
இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:

         நபி(சல்) அவர்கள் ஹூசைன்(ரலி) அவர்களின் கால்களை விரித்து அவரது மறைவுறுப்பை முத்தமிட்டதை நான் கண்டேன்.
ஹதீஸ் 2: அல் ஹைதமி அவர்களின் அல்மஜ்மு அல்ஜவாயித் ஹதீஸ் எண்: 15108

وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَرَّجَ مَا بَيْنَ فَخِذَيِ الْحُسَيْنِ، وَقَبَّلَ زَبِيبَتَهُ » رَوَاهُ الطَّبَرَانِيُّ
இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாவது:
             நபி(சல்) அவர்கள் ஹூசைன்(ரலி) அவர்களின் கால்களை விரித்து அவரது மறைவுறுப்பை முத்தமிட்டதை நான் கண்டேன். (தப்ரானியின் அறிவிப்பு.)
             மேற்குறிபிட்ட இரண்டு செய்திகளிலும் قَابُوسَ بْنِ أَبِي ظَبْيَانَ - காபூஸ் இப்னு அபி தப்யான் என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் குறித்து இப்னு சாஃத் குறிப்பிடும் போது இவர் பலவீனமானவர். இவரது அறிவிப்பு ஏற்கப்படாது.(தபகத் இப்னு சாஃத் பாகம் 6) இப்னு மயின் குறிப்பிடும் போது இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என்று குறிப்பிடுகிறார், அபு ஹாத்தம் அர்ராஸி குறிப்பிடுகையில் பல்வீனமானவர். பலவீனமான ஹதீஸ்களை அறிவிப்பவர். இவரது ஹதீஸ்கள் ஏற்கப்படாது என்று கூறுகிறார். இப்னு ஹிப்பான் குறிப்பிடுகையி இவர் பலவீனமான நினைவாற்றல் உடையவர். இவர் தனது தந்தை வழியாக ஏனையோர் அறிவிக்காதவற்றை அறிவிப்பர் என்று குறிப்பிடுகிறார், நஸயீ குறிப்பிடும் போது இவர் பலவீனமானர் என்று குறிப்பிடுகிறார். (தஹ்தீப் அல் தஹ்தீப் பாகம்: 8) இப்னு அதீ குறிப்பிடுகையில் இவரது ஹதீஸ்கள் மறுக்கப்பட்டவை எங்கிறார்( மீசான் அல் இஃதிதால்: பாகம் 3). இப்னு ஹஜர் குறிப்பிடும் போது இவர் பலவீனமானவர் என்று கூறுகிறார்(தக்ரீப் அல் தஹ்தீப் 449) ஆக மேற்குறிபிட்ட செய்தி பலவீனமானது, ஏற்க முடியாதது.


ஹதீஸ் 3: இப்னு அஸாகிர் அவர்களின் தாரிக் திமிஸ்க்- பாகம் 14: ப.எண்:224
أخبرنا أبو القاسم علي بن إبراهيم، و أبو الحسن علي بن أحمد، قالا: نا و أبو منصور بن زريق، أنا أبو بكر أحمد بن علي الخطيب‏ (3)، أخبرني الأزهري، أنا المعافى بن زكريا، نا محمّد بن مزيد بن أبي الأزهر، نا علي بن مسلم‏ (5) الطوسي، نا سعيد بن عامر، عن قابوس بن أبي ظبيان، عن أبيه، عن جده، عن جابر بن عبد اللّه- قال: و حدّثنا مرة أخرى عن أبيه‏ (6) عن جابر- قال: رأيت رسول اللّه (صلىّهصَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ) و هو يفحج بين فخذي الحسين و يقبل زبيبته و يقول: لعن اللّه قاتلك
ஜாபிர் (ரலி) கூறியதாவது:
              நபி(சல்) அவர்கள் ஹூசைன்(ரலி) அவர்களின் கால்களை விரித்து அவரது மறைவுறுப்பை முத்தமிட்டவாறு உன்னை கொல்பவனின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டுமாக என்று கூறியதை நான் கண்டேன்.
             மேற்குறிபிட்ட அறிவிப்பில் இடம்பெறும் محمّد بن مزيد بن أبي الأزهر - முஹம்மத் இப்னு மசீத் இப்னு அல் அஸ்ஹர் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். இவர் குறித்து அல் கதீப் அல் பக்தாதீ கூறுகையில் இவர் ஹதீஸ்களில் நம்பத்தன்மையற்றவர். இவர் மிகவும் பலவீனமானவர் இவரிடம் இருந்து அறிவிக்கப்படும் செய்திகள் மறுக்கத்தக்கவை என்று கூறுகிறார். இவர் குறித்து தாரகுத்னி குறிப்பிடுகையில் இவர் பலவீனமானவர் இவரிடம் இருந்து அறிவிக்கப்படும் செய்திகள் மறுக்கத்தக்கவை என்று கூறுகிறார். (லீசான் அல் மீஸான் பாகம் 7). மேலும் அபுல் அபு அல் ஃப்த்ஹி உபைதுல்லாஹ் இப்னு அஹ்மத நஹ்வி அவர்கள் கூறுகையில் அபு குரைபாவிடமும் மற்றவர்களிடமும் கேட்காதவற்றை கேட்டதாக பொய்யுரைப்பவர் என்று கூறுகிறார். நம்பிக்கையானவர்கள் பேரில் இட்டுக்கட்டுபவர் என்று அல் கதீப் கூறுகிறார். தஹபீ குறிப்பிடுகையில் இவர் பொய்யர் என்று குற்றம் சாட்டப்பட்டவர் என்று கூறுகிறார்.(ஸியார் அஃலம் அல் நுபூலா ) 
         அடுத்ததாக இந்த செய்தியிலும் முன் சென்ற செய்தியில் இடம் பெற்ற قابوس بن أبي ظبيانகாபூஸ் இப்னு அபி தப்யான் என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். ஆக மேற்குறிபிட்ட செய்தி இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்களை கொண்ட இட்டுக்கட்டபட்ட செய்தியாகும்.

            மேலும் இந்த ஹதீஸ் குறித்து இப்னு ஜவ்ஸி தனது மவ்ளூவுல் குறிப்பிடும் போது இது இட்டுக்கட்டபட்ட செய்தி என்று கூறுகிறார். (2/207). தஹபி அவர்களும் இதை இட்டுக்கட்டபட்ட செய்தி என்று மீசான் அல் இஃதிதாலில் குறிப்பிடுகிறார்(4/35). மேலும் கதீப் அல் பக்தாதீ கூறுகையில் இந்த செய்தியும் அறிவிப்பாளர் தொடரும் இட்டுக்கட்டபட்டவை என்று கூறுகிறார்.(தாரிக் அல் பக்தாதீ 4/58). மேலும் இந்த செய்தியை பதிவிட்ட அஸாகிர் அவர்கள் இந்த ஹதீஸ் இடம்பெறும் அடுத்த பக்கத்தில் கதீப் அல் பக்தாதீ அவர்களது விமர்சனத்தை பதிவிட்டு இந்த ஹதீஸை தனது தந்தையிடம் இருந்து அபி திப்யான் அறிவிக்கிறார். ஆனால் இவரது தந்தை யார் என்று அறியப்படாதவர் என்ற விமர்சனத்தையும் முன்வைத்து மேற்குறிபிட்ட ஹதீஸை மறுக்கிறார் அஸாகிர் அவர்கள். ஆக மேற்குறிபிட்ட செய்தியும் நிராகரிக்கப்படுகிறது.

ஹதீஸ் 4: இப்னு அஸாகிர் அவர்களின் தாரிக் திமிஸ்க்- பாகம் 13: ப.எண்:222
و أخبرناه عاليا أبو محمّد إسماعيل بن أبي القاسم القارئ، أنا أبو حفص عمر بن أحمد بن مسرور، نا الحاكم أبو أحمد محمّد بن محمّد بن أحمد الحافظ، أنا أبو يوسف محمّد بن سفيان الصّفار- بالمصّيصة-، نا اليمان بن سعيد، نا الحارث بن عطية، عن شعبة، عن الحكم، عن إبراهيم، عن أنس قال: رأيت رسول اللّه(صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ)  يفرّج بين رجلي الحسن و يقبّل ذكره.
அனஸ் (ரலி) கூறியதாவது:
நபி(சல்) அவர்கள் ஹசன்(ரலி) அவர்களின் கால்களை விரித்து அவரது மறைவுறுப்பை முத்தமிட்டதை நான் கண்டேன்.
       மேற்குறிபிட்ட ஹதீஸில் இடம் பெறும் أبو يوسف محمّد بن سفيان الصّفار - அபூயூஸூப் முஹம்மத் இப்னு சுஃப்யான் அல் சஃபர் யார் என்று அறியப்படாதவர். அடுத்ததாக அவர் செவியுறும் اليمان بن سعيد - அல் யாமான் இப்னு சயீத் குறித்து தாரகுத்னீ இவர் விடப்பட்டவர் என்று கூறுவதாக தஹபீ தனது முஃனீ, மீசான் ஆகியவற்றில் குறிப்பிடுகிறார். ஆக மேற்குறிபிட்ட செய்தியும் ஏற்கத்தக்க செய்தியல்ல. 

ஹதீஸ் 5: இப்னு அபி துன்யா அவரகளின் அல் இயால்- ஹதீஸ் எண்:211
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ قَابُوسَ بْنِ أَبِي ظَبْيَانَ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُفَرِّجُ بَيْنَ رِجْلَيِ الْحُسَيْنِ وَيُقَبِّلُ زَبِيبَتَهُ
       காபூஸ் இப்னு அபி தப்யான் தனது தந்தை கூறியதாக கூறினார்கள்:        நபி(சல்) அவர்கள் ஹூசைன்(ரலி) அவர்களின் கால்களை விரித்து அவரது மறைவுறுப்பை முத்தமிடுவார்கள்
          இந்த செய்தியிலும் முன் சென்ற செய்தியில் இடம் பெற்ற காபூஸ் இப்னு அபி தப்யான் என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். மேலும் இந்த செய்தியை அறிவிக்கும் அபி திப்யானின் தந்தை சஹாபா அல்ல. ஆக இந்த செய்தி பலவீன்மான நிராகரிக்கத்தக்க செய்தியாகும்.

ஹதீஸ் 6: பைஹகீ அவர்களின் சுனன் அல் குப்ரா- ஹதீஸ் எண்:651

أنبأ أَبُو بَكْرٍ الْقَاضِي، وَأَبُو سَعِيدِ بْنُ أَبِي عَمْرٍو، قَالَا: نا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، ثنا مُحَمَّدُ بْنُ عِمْرَانَ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي ابْنُ أَبِي لَيْلَى، عَنْ عِيسَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، قَالَ: " كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ الْحَسَنُ فَأَقْبَلَ يَتَمَرَّغُ عَلَيْهِ، فَرَفَعَ عَنْ قَمِيصِهِ، وَقَبَّلَ زَبِيبَتَهُ ". [ص:216] فَهَذَا إِسْنَادُهُ غَيْرُ قَوِيٍّ،
அப்துர் ரஹ்மான் இப்னு அபி லைலா அவர்கள் கூறியதாவது:        நாங்கள் நபி(சல்) அவர்களது சபையில் இருக்கும் போது ஹசன்(ரலி) அவர்கள் வந்தார்கள், அவரது சட்டையை தூக்கி அவரது  மறைவுறுப்பை நபி(சல்) அவர்கள் முத்தமிட்டார்கள்.

     இந்த செய்தியை பைஹகீ பதிவிட்டு இதன் அறிவிப்பாளர் தொடர் பலமானது அல்ல என்று கூறுகிறார். இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ابْنُ أَبِي لَيْلَى - இப்னு அபி லைலா என்பவர் பலவீனமானவர். நினைவாற்றல் குறைபாடு உடையவர் ஆவார்.இவரை பற்றி நஸ்யீ குறிப்பிடுகையில் பலவீனமானவர் என்று கூறுகிறார். தாரகுத்னி குறிப்பிடுகையில் இவர் நினைவாற்றல் குறையுடையவர் என்று கூறுகிறார்.(மீஸான் அல் இஹ்திதால்)

   இவ்வாறு நபி(சல்) குறித்து கூறப்படும் செய்திகள்யாவும் இட்டுக்கட்டபட்டவை கள் பலவீனமானவை. ஆனால் இத்தகைய அவதூறுகளை பரப்பும் யூத கிறித்தவ மிசனரிகள் ஒன்றை மறந்துவிட்டனர். அதாவது உண்மையில் இந்த பழக்கத்தையுடையவர்கள் யூதர்கள்தாம். ஆம் அவர்கள்தான் விருத்த சேதனம் நிகழத்தும் போது பெரியவரோ சிறியவரோ அவர்களது மறைவுறுப்பில் இருந்து சிந்தும் இரத்தத்தை உறிஞ்சி எடுக்கும் பழக்கமுடையவர்கள் என்பது குறிபிடத்தக்கது. இந்த முறையை “metzitzah” என்று அழைப்பார்கள். இந்த பழக்கம் பைபிலின் பழைய ஏற்பாட்டின் காலம் தொட்டே இருந்து வருவதாக கூறப்படுகிறது(1). ஆக பவுலும் கூட இளவயதுடைய தீமோதி என்பவருக்கு விருத்தசேதனம் செய்ததாக ஒரு தகவல் இடம் பெறுகிறது(2). (அப்போஸ்தல் நடபடிகள் 16:3). ஆக பவுலும் அதைதான் செய்திருப்பர் போலும்.......