பக்கங்கள் செல்ல

cross tab2

Sunday, May 31, 2015

எதிர்தொடர் 15: சூரியன் இன்னும் கிழக்கில்தான் உதிக்கிறது!


ஏக இறைவனின் திருப்பெயரால்...............


       சென்ற தொடரில் பூமி தட்டையானது இல்லை என்பதை தெளிவாக இஸ்லாம் கூறுவதை கண்டோம். இந்த முறை நமது அருமை கட்டுரையாளர் இஸ்லாம் டாலமியின் ‘பூமி மையக்கோட்பாட்டை’(geocentricism) ஆதரிப்பதாக வாதிட முயற்சிக்கிறார்[ refer:Source]. ஆனால் இஸ்லாம் உரைப்பது இன்றை நவீன அறிவியலைத்தான் என்பதும் இந்த கட்டுரையாளரின் அறிவியல் குறித்த புரிதல் 17ம் நூற்றாண்டை இன்னும் தாண்ட வில்லை என்பதும் புட்டு புட்டு வைக்கப்படும் இந்த தொடரில், இன்ஷா அல்லாஹ்

குற்றச்சாட்டு 1:





நமது பதில்:
அல் குர்ஆன் 36:38 வசனத்திற்கான விளக்கம்:
 وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا ذَلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ (٣٨)

       சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.



      மேற்குறிப்பிட்ட வசனம். சூரியனுக்கு என்று ஒரு நிலை கொள்ளும் இடம் இருப்பதாகவும். அதை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் கூறுகிறது. முதலில் இதற்கான விளக்கத்தை நாம் குர்ஆனில் இருந்து பெறுவோம். பின் வரும் இறைவசனம் ஒரு குறிப்பை தருகிறது.

 خَلَقَ السَّمَاوَاتِ وَالأرْضَ بِالْحَقِّ يُكَوِّرُ اللَّيْلَ عَلَى النَّهَارِ وَيُكَوِّرُ النَّهَارَ عَلَى اللَّيْلِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لأجَلٍ مُسَمًّى أَلا هُوَ الْعَزِيزُ الْغَفَّارُ (٥)
 
     தக்க காரணத்துடனேயே வானங்களையும், பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடும். கவனத்தில் கொள்க! அவனே மிகைத்தவன்; மன்னிப்பவன்.(அல் குர்ஆன் 39:5 )
      அதாவது சூரியனும் சந்திரனும் குறிபிட்ட காலம் வரை ஒடும்.அதில் எந்த தடையும் தளர்வும் இருக்காது. அதை பின் வரும் வசனம் தெளிவாக கூறுகிறது. 
 وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ (٣٣)
 
      தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும், சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும், பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்.  (அல் குர்ஆன்14:33)


     ஆக சூரியன் தொடர்ந்து இயங்குவதாய் உள்ளது. அது எங்கும் ஓய்வு கொள்ள போவதில்லை. இந்த உலகம் அழியும் நாள் வரை எனபது தெளிவாக மேற்கூறிய வசனம் கூறுகிறது. இதற்கு நபி(சல்) அவர்களது விளக்கமாக பின்வரும் ஹதீஸை நமது கட்டுரையாசிரியர் பதிந்துள்ளார்.

அபூ தர்(ரலி) அறிவித்தார்.

      நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த நேரத்தில் என்னிடம், 'அது (சூரியன்) எங்கு செல்கிறது என்று உனக்குத் தெரியுமா?' என்று கேட்டார்கள். நான், 'அல்லாஹ்வும்,அவனது தூதருமே அறிவார்கள் என்று கூறினேன். நபி(ஸல்) அவர்கள், 'அது அர்ஷுக்கு (இறை சிம்மாசனத்திற்குக்) கீழே ஸஜ்தா (வணக்கம்) செய்வதற்காகச் செல்கிறது. அங்கு அது (கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு இறைவனிடம்) அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. (இறுதியாக ஒரு நாள்) அது ஸஜ்தா செய்ய, அந்த ஸஜ்தா ஏற்கப்படாமல் போகவிருக்கிறது. அப்போது அது (வழக்கம் போன்று) கிழக்கிலிருந்து உதயமாகுவதற்கு அனுமதி கேட்கும்; அதற்கு அனுமதியளிக்கப்படாது. மாறாக, 'வந்த வழியே திரும்பி விடு" என்று அதற்கு உத்தரவிடப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும்" என்றார்கள். இதைத் தான், 'சூரியன், தான் நிலை கொள்ளம் ஓர் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்க (இறை)வனின் நிர்ணயமாகும்" என்னும் (திருக்குர்ஆன் 36:38) இறைவசனம் குறிக்கிறது" என்றார்கள்.


நூல்: புஹாரி 3199



     மேலும் இதே போன்ற செய்தி அதிகப்படியான விளக்கத்துடன் முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மொழிபெயர்ப்பின் அவசியம் கருதி மூலத்துடன் பதிவு செய்யப்படுகிறது.

 حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنِ ابْنِ عُلَيَّةَ، - قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، - حَدَّثَنَا يُونُسُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ يَزِيدَ التَّيْمِيِّ، - سَمِعَهُ فِيمَا، أَعْلَمُ - عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَوْمًا ‏"‏ أَتَدْرُونَ أَيْنَ تَذْهَبُ هَذِهِ الشَّمْسُ ‏"‏ ‏.‏ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ ‏.‏ قَالَ ‏"‏ إِنَّ هَذِهِ تَجْرِي حَتَّى تَنْتَهِيَ إِلَى مُسْتَقَرِّهَا تَحْتَ الْعَرْشِ فَتَخِرُّ سَاجِدَةً وَلاَ تَزَالُ كَذَلِكَ حَتَّى يُقَالَ لَهَا ارْتَفِعِي ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ فَتَرْجِعُ فَتُصْبِحُ طَالِعَةً مِنْ مَطْلِعِهَا ثُمَّ تَجْرِي حَتَّى تَنْتَهِيَ إِلَى مُسْتَقَرِّهَا تَحْتَ الْعَرْشِ فَتَخِرُّ سَاجِدَةً وَلاَ تَزَالُ كَذَلِكَ حَتَّى يُقَالَ لَهَا ارْتَفِعِي ارْجِعِي مِنْ حَيْثُ جِئْتِ فَتَرْجِعُ فَتُصْبِحُ طَالِعَةً مِنْ مَطْلِعِهَا ثُمَّ تَجْرِي لاَ يَسْتَنْكِرُ النَّاسُ مِنْهَا شَيْئًا حَتَّى تَنْتَهِيَ إِلَى مُسْتَقَرِّهَا ذَاكَ تَحْتَ الْعَرْشِ فَيُقَالُ لَهَا ارْتَفِعِي أَصْبِحِي طَالِعَةً مِنْ مَغْرِبِكِ فَتُصْبِحُ طَالِعَةً مِنْ مَغْرِبِهَا ‏"‏ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَتَدْرُونَ مَتَى ذَاكُمْ ذَاكَ حِينَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا ‏"‏

 அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இந்தச் சூரியன் எங்கு செல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிவார்கள்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது (சூரியன்) இறை அரியாசனத்துக்கு (அர்ஷுக்கு)க் கீழே தலைவணங்குவதற்காகத் தனது நிலையை நோக்கிச் செல்கிறது. அதனிடம், "எழுந்து, நீ வந்த வழியே சென்றுவிடு" என்று கூறப்படும் வரை அது அவ்வாறே இருந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு கூறப்பட்டதும் அது சென்று கிழக்கிலிருந்து உதயமாவதை தொடர்கிறது. பிறகு இறை அரியாசனத்துக்குக் கீழே தனது நிலையை நோக்கிச் சென்று தலைவணங்குகிறது, அதனிடம், "நீ எழுந்து, வந்த வழியே திரும்பிச் சென்றுவிடு!" என்று கூறப்படும்வரை அது அவ்வாறே இருந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு கூறப்பட்டதும் அது திரும்பிச் சென்று கிழக்கிலிருந்து உதயமாவதை தொடர்கிறது. பிறகு மக்களுக்கு (எந்த வித்தியாசமும்) தெரியாத விதத்தில் இறை அரியாசனத்துக்குக் கீழே தனது நிலையை நோக்கிச் செல்கிறது. அப்போது அதனிடம், "நீ எழுந்து மேற்கிலிருந்து உதயமாகு!" என்று கூறப்படும். அப்போது அது (வழக்கத்திற்கு மாறாக) மேற்கிலிருந்து உதயமாகும்" என்று கூறினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது எந்த நாள் என்று உங்களுக்குத் தெரியுமா? அது, முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத (இறுதி) நாளாகும்" என்று கூறினார்கள்.(6:158)
                                                    நூல்:  முஸ்லிம் 250
          மேற்குறிபிட்ட ஹதீஸில் இடம் பெறும் فَتُصْبِحُ  - ஃபதுஷ்பிஹு என்ற சொல்லிற்கு உதயமாகி கொண்டே இருகிறது என்று பொருள் படும். சொல்லில் இடம்பெறும் 'து' மற்றும் இறுதி எழுத்தில் இடம் பெறும் தம்மா ( ‘உ’ ஒசை) நிகழ்கால முற்றா வினையை குறிப்பதாகும். மேலும் மேலே குறிப்பிட்ட அந்த செய்தியில் கதையாசிரியர் கூறுவதை போன்று தினமும் அல்லது  அன்றாடம் இரவு அல்லது அன்று மாலையே சூரியன் அல்லாஹ்வின் அர்ஷ்க்கு அடியில் செல்வதாகவும் அதன் இயக்கத்தை நிறுத்திக்கொள்வதாகவும் இல்லை. அந்த இடத்தில் ثُمَّ – அதன் பிறகு என்ற பொதுவான வார்த்தைதான் இடம்பெறுகிறது என்பது குறிப்பிட்தக்கது இந்த ஹதீஸிற்கு அல்லாஹ்வின் அர்ஷுக்கு அடியில் குறிபிட்ட காலதவணைக்கு ஒரு முறை சூரியன் செல்வதாகவும், அல்லாஹ்வின் அர்ஷுக்கு அடியில் சென்றாலும் கிழக்கில் இருந்து உதிப்பதும் மேற்கில் மறைவதும் எந்த இடையூறும் இன்றி நடப்பதாகவும் பொருள் தந்தால்தான் பின் வரும் இந்த இறை வசனத்திற்கு "தொடர்ந்து இயங்கும் நிலையில் சூரியனையும், சந்திரனையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். இரவையும், பகலையும் உங்களுக்காகப் பயன்படச் செய்தான்.  (அல் குர்ஆன்14:33)" முரண் இன்றி அமையும். இப்னு அப்பாஸ்(ரலி) போன்றவர்கள் சூரியனும் சந்திரனும் தொடர்ந்து இயங்கும் நிலையில் உள்ளதாக இந்த வசனத்தின் விளக்கத்தில் தெரிவிக்கின்றனர் (தஃப்ஸீர் இப்னு கஸீர்). மேலும் ஒரு இடத்தை அடிப்படையாக கொண்டு கூறப்பட்டது என்றும் கூறஇயலாது. அல்லாஹ் தனது திருமறையில்  (அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன்.( அல் குர்ஆன் 37:5). பல உதிக்கும் திசைகள் உள்ளதாக கூறுகிறான்.   ஆக பல இடங்களில் உதிக்க வேண்டும் என்றால் தொடர்ச்சியாக இயங்க வேண்டும்.  மேலும் இவ்வாறு இறை அரியாசனத்தின் அடியில் செல்வதை நம்மால் அறிய முடியாது என்பதையும் அதே ஹதீஸ் கூறுகிறது. மேலும் அல்லாஹ் பின் வருமாறு தனது திருமறையில் கூறுகிறான்.

  تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالأرْضُ وَمَنْ فِيهِنَّ وَإِنْ مِنْ شَيْءٍ إِلا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا (٤٤)
 
        ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவைகளும் அவனைத் துதிக்கின்றன. அவனைப் போற்றிப் புகழாத எதுவுமே இல்லை. ஆயினும் அவை துதிப்பதைப் புரிந்து கொள்ள மாட்டீர்கள்! அவன் சகிப்புத் தன்மையுடையவன்; மன்னிப்பவன்.( அல் குர்ஆன் 17:44)
 
இந்த ஹதீஸின் சாரம் இதுதான்:
1. அல்லாஹ்வின் அர்ஷின் அடியில் சூரியன் செல்வது என்பது தினம்    இரவில் நடைபெறுவதாக எந்த செய்தியும் இல்லை

2. சூரியன் குறிப்பிட்ட காலக்கெடுவில் அல்லாஹ்வின் அர்ஷின் அடியில்  தனது நிலைகொள்ளும் இடத்திற்கு செல்கிறது.

3. இவ்வாறு அர்ஷின் அடியில் செல்வதை மக்களால் அறிய முடியாது.

4. அல்லாஹ்வின் கட்டளை இறுதி முறையாக அர்ஷின் அடியில் செல்லும்போது சூரியனுக்கு இடப்படுகிறது. இதை தொடர்ந்து சூரியன் மேற்கில் இருந்து உதிக்கிறது.

5. தன் பிறகு இறைநம்பிக்கை கொள்வது வீண்.  

      மேலே நான் குறிபிட்டது போல் சரியாக பொருள் கொண்டால் 20 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து சூரியன் ஓடிவரும் தேவை ஏற்படாது என்று எண்ணுகிறேன்.

குற்றச்சாட்டு 2:


 நமது பதில்:

      பூமியில் ஏற்படும் சுழற்ச்சிதான் இரவு பகல் ஏற்பட காரணம் என்பது உன்மைதான். ஆயினும் பூமியின் சுழற்சிக்கு காரணம் பூமி மட்டும் அல்ல. பூமியின் சுய சுழற்சிக்கும் , சூரியனை சுற்றி வருவதற்கும்  சூரியன்தான் காரணம் என்று இன்றைய அறிவியல் கூறிக்கொண்டிருக்கும் போது 17ம் நூற்றாண்டின் அறிவியலில் இருந்து தனது கருத்தை பதிவு செய்கிறார் கதாசிரியர். Nainan Varghese என்ற அறிவியலாளரின் கருத்து இதோ1.



 ஆக இரவு பகல் ஏற்படுவதற்கு பூமி மட்டுமே காரணமல்ல. சூரியன் தான் பூமியின் சுழற்ச்சியை தீர்மானிக்கும் மைய ஆற்றல். இது குறித்த மேலும் அறிந்து கொள்ள இந்த வலைதளத்தை சொடுக்கவும் 2. ஆக மேலே குறிப்பிடும் ஹதீஸ் இன்றைய அறிவியலுடன் ஒத்துபோவதாய்தான் உள்ளது. மேலே பதியப்பட்டிருக்கும் அறிவியல் ஆய்வில் சூரியனின் நகர்வு, அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை கோல்களின் சுழற்சி பாதையில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. . மேலும் கட்டுரையாளர் குறிபிட்ட அல் குர்ஆன் வசனம், அந்த ஹதீஸ் மற்றும் அறிவியல் எப்படி நேர்கொட்டில் உள்ளது என்பதற்கு சரியான சான்றாக மேற்கூறிய அறிவியல் கட்டுரை அமைந்துள்ளது. மேலும் பூமியின் சுழற்ச்சியை சூரியனின் காந்தபுயலும் 3 , சூரியனின் ஈர்ப்பால்  பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் அலை( Crustal Tide) போன்றவை வெகுவாக பாதிப்பதாகவும் இன்றைய அறிவியல் கூறிக்கொண்டு இருக்கிறது.4 இப்படி பூமி, சூரியன், சந்திரன் ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கையில் சூரியனுக்கு பூமியின் சுழற்ச்சியில் எந்த பங்கும் இல்லை என்பது சரியானது அல்ல. கதாசிரியர் இன்னும் கோப்பர்நிக்கஸ் காலத்தை விட்டு வெளிவரவே இல்லை என்று தோன்றுகிறது.



குற்றச்சாட்டு 3:

நமதுபதில்:
      அதுதான் அற்புதமே. விண்கலை, எண் கணிதம் போன்றவற்றை கூட அறியாத சமுகத்தில் பிறந்தவர் எப்படி இன்றை அறிவியலுக்கு எந்த முரணும் இன்றி உரைக்க முடிந்தது என்பதுதான். மேலும் இந்த கட்டுரையாளர் பூமி மைய கோட்பாட்டை நபி(சல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறினாலும் நபி(சல்) அவர்கள் அறியாத விண்கலை குறித்து  17ம் நுற்றாண்டுவரை கோலோச்சிய கருத்தை எப்படி எழுதப்படிக்க தெரியாதவர் கூற முடியும் என்ற கேள்விக்கு ஏதேனும் ஆதாரப்பூர்வமான பதிலை கட்டுரையாளரால் பதிய முடியுமா? மேலும் இங்கு ஒரு கருத்தை குறிப்பிட எண்ணுகிறேன். ஒரு கோட்பாட்டை ஒரு நூல் சொல்கிறது என்று கூற வேண்டும் என்றால் அந்த கோட்பாட்டின் மையத்தை அந்த நூல் கூறியிருக்க வேண்டும். பூமி மைய கோட்பாடிற்கும், இன்றை நவீன அறிவியலுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. உதாரணமாக சூரியன் நகர்கிறது என்பது. சூரியன் நகர்வதாக ஒரு நூல் கூறுவதால் அது பூமி மையகோட்பாட்டை விளக்குவதாக கொள்ள முடியாது. அது எதை சுற்றி நகர்கிறது என்ற குறிப்புதான் அது பூமி மைய கோட்பாட்டை விளக்குகிறதா அல்லது இன்றைய அறிவியலை கூறுகிறதா எனபதை நிறுபிக்கும். ஆக கட்டுரையாளர் சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்று நேரடியான வார்த்தைகளை குர்ஆனிலிருதோ, ஆதாரப்பூர்வ ஹதீஸ்களில் இருந்தோ எடுத்துகாட்டாத வரை தனது குற்றச்சாட்டை நிலைநிறுத்த இயலாது. இதே தவறைதான் ஆங்கில இஸ்லாமிய எதிர்ப்பு வலைதளங்களும் செய்கின்றன. இதே போன்ற தவறைதான் சென்ற கட்டுரையிலும் கண்டோம்.

குற்றச்சாட்டு 4:



நமது பதில்:
      இது இஸ்லாம் குறித்து இஸ்லாமின் மைய கோட்பாடுகள் குறித்த ஆசிரியரின் அறியாமையைதான் காட்டுகிறது. மனிதனுக்கு கேடு விளைவிப்பவையை அல்லாஹ்வும் , நபி(சல்) அவர்களும் பல இடங்களில் சைத்தான் என்றே கூறியிருக்கின்றனர். இவரது அறியாமை சூரியனை மூக்கில் இருந்து உதிக்க செய்துவிட்ட்து. இதோ பின் வரும் செய்திகளை பார்க்க.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது "நம்பிக்கை கொண்டுள்ளோம்'' எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.( அல்குர்ஆன் 2:14. )

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக்கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக! (அல்குர்ஆன் 6:112. )

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அல்அர்ஜ்" எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று" என்று கூறினார்கள். ( முஸ்லிம் 4548. )

    ஆக மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் மனிதனையும் சைத்தான் என்று இஸ்லாம் கூறுகிறது. தூங்கி எழும் போது மூக்கை சுத்தம் செய்வதற்கு அறிவுறுத்தபட்ட ஒரு செயலை இந்த ஆசிரியர் அறியாமையால் எப்படி அனுகியிருக்கிறார் எனபதற்கு சிறந்த உதாரணம் இந்த கட்டுரை.

குற்றச்சாட்டு 5:



நமது பதில்:
      இதுவும் இஸ்லாம் குறித்த இவரது அறியாமையைதான் காட்டுகிறது. அற்புதங்கள் யாவும் இறைவன் புறத்தில் உள்ளது என்பதுதான் இஸ்லாமிய நம்பிக்கை. நபியாக இருந்தாலும் அவர் நாடிய போது அற்புதங்கள் செய்ய இயலாது. அப்படி இருக்கையில் நபி(சல்) அவர்களால் ஏன் மறைவானவற்றை அறிய முடியவில்லை என்ற கேள்வியே தவறானது.

அவன் மறைவானதை அறிபவன். தனது மறைவான விஷயங்களை அவன் பொருந்திக் கொண்ட தூதரைத் தவிர யாருக்கும் வெளிப்படுத்த மாட்டான். அவர்கள் தமது இறைவனின் தூதுச் செய்திகளை எடுத்துச் சொன்னார்களா என்பதை அறிவிப்பதற்காக அவருக்கு முன்னும், அவருக்குப் பின்னும் கண்காணிப்பாளரை ஏற்படுத்துகிறான். அவர்களிடம் உள்ளதை அவன் முழுமையாக அறிவான். ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான்.( அல்குரஆன் 72:26, 27, 28)

     இவையெல்லாம் நபி(சல்) அவர்கள் மனிதர்தான் என்பதற்கு சான்று. இன்றும் அவர்கள் கடவுளாக மாற்றப்படாமல் இருப்பதற்கு காரணம். அல்லாஹ் மனிதனுக்கு தேவையானதை கொடுக்கத்தான் தூதர்களை அனுப்பி வைத்தான் தூதர்களை வளமாக்க அல்ல என்பது 15 கட்டுரை எழுதியப் பிறகும் கட்டுரையாளருக்கு தெரியவில்லை என்பதை என்ன சொல்ல....
அல்லாஹ்வே அனைத்தயும் அறிந்தவன்.....




Saturday, May 30, 2015

முன்பு தந்தையும் & மகனும், இப்போது தம்பதிகள் - அமெரிக்காவில் ஓர் அதிசிய திருமணம்!



கடந்த ஞாயிறன்று Norman MacArthur, 74, Bill Novak, 76 இருவரும் திருமணம் செய்துகொண்டனர்..  என்னடா இருவரும் ஆண்களாக இருக்கின்றனரே  என்று பார்கிரீர்களா? இது தான் அமெரிக்காவின் நவீன திருமணம். இன்னும் யார் யாருக்கு இடையே எல்லாம் திருமணம் வரும்காலங்களில் நடக்கலாம் என்பதை உங்களின் கற்பனைக்கு விட்டு விடுகின்றேன்.

நியு யார்க் சட்டத்தின் படி, இவர்கள் இருவரும் தன 20 வயதில் இருந்து சேர்ந்தது வாழ்ந்து  வந்தார்கள் (Domestic Partners). இவர்கள் இருவரும் கடந்த 15 வருடங்களாக சட்டப்படி  தந்தை & மகனாக (adapted  son) இருந்தவர்கள்.     பென்சில்வேனிய மாநிலத்தில் வசிப்பதற்காக செல்லும் போது, அங்கே இது போன்ற வேலைகளுக்கு தடை உள்ளதால் தந்தை மகனாக பதிவு செய்துகொண்டு, வீட்டிற்குள்ளே தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.


இப்போது தந்தை & மகன் என்ற உறவை சட்ட ரீதியாக ரத்து செய்துவிட்டு, திருமணம்(!!) செய்து கொண்டுள்ளனர்.முழு விபரத்திற்கு, இந்த கட்டுரையை படிக்கவும்.


இதிலே பல விடயங்கள் உள்ளன.

1. தத்து எடுத்தல்: எவ்வளவு தான் சில மனிதர்கள் வாய் கிழிய கத்தினாலும், தத்து எடுக்கப்படும் மகனோ/மகளோ உண்மையான மகனாகவோ/ மகளாகவோ ஆகா முடியாது. அவர்கள் ஒரு "காகித உறவே"! காகிதம் இல்லையென்றால் சக மனிதர்களே! அதனால் தான் இஸ்லாம் தெளிவாகவே சொல்கின்றது, ஒருபோதும் அவர்கள், உங்களின் இரத்த உறவிற்கு இணையாக முடியாது. இங்கே. இந்த "காகித உறவு" இரத்து செய்யப்பட்டு, திருமணம்(!!!) நடந்துள்ளது. நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் அமெரிக்க, இதை அனுமதித்து உள்ளது.

" உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்.[33:4]"

2. பகுத்தறிவின் உச்சக்கட்டத்தில் இருப்பதாக பெருமை  அடித்துக்கொள்ளும் மனிதன் ஒரு நாட்டின் அனைத்து பகுதியிலும் கூட ஒரே சட்டம் அமுல் படுத்த முடியவில்லை. ஒரு இடத்தில் "ஒழுக்கமானது" என்று கருதப்படும் ஒரு செயல், அதே நாட்டின் மற்றொரு பகுதியில் "ஒழுக்கக்கேடு" என்று கருதப்படுகின்றது. இதில் யார் சொல்வது சரி? இந்த நிலைமை நீடித்தால், எவ்வளவு மோசாமான சம்பவங்களும் நியாயப்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்படாதா?

3. ஒரினச் சேர்க்கை: இறைவனின் வழிகாட்டல் என்ற ஒன்று இல்லை என்றால், மனிதன் எவ்வாரல்லாம் சீரழிந்து விடுவான் என்பதற்கு இது ஒரு உதாரணம். சில மாதங்களுக்கு முன்னால், ஒரு பெண் கழுதையை  திருமணம் செய்ததான தகவலை படித்த நினைவு உண்டு. இன்னும் என்னன்ன வழிகேடுகளின் பக்கம் மனிதன் செல்வான் என்பதை சொல்ல வேண்டியதில்லை.


இதற்கெல்லாம் தீர்வு, இறை வழிகாட்டல் மட்டும் தான். இதனால் மட்டும் தான் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சரியான, மனித குலத்திற்கு நன்மை பயக்கக் கூடிய வழியை கொடுக்க முடியும்.

ஒரு இயந்திரத்தை உருவாகியவன் தான், அதற்கான சரியான கையேடு கொடுக்க முடியும். இயந்திரத்தை பார்ப்பவனோ அல்லது உபயோகப்படுத்துவனோ உருவாக்கும் கையேடு குழப்பத்தை தான் ஏற்படுத்தும்.

"பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை." [6:116]

நன்றி: நாடோடி தமிழன்  

பகவத் கீதை படிக்கும் முஸ்லிம் - 2


By Nadodi Tamilan 

பகவத் கீதையை படிக்க ஆரம்பித்தவுடன் ஏற்படும் முதல் சிக்கல், எந்த மொழியாக்கம் சரியானது,  ஆதாரப்பூர்வமானது  என்பது தான்?

மூல மொழியோடு சில மொழிபெயர்ப்பு  இருந்தாலும், அதிலும் சுய/சொந்த கருத்து திணிக்கப்பட்டுள்ளன.

ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கும் பொது, அதில் எது சிறந்த்தது என்று மொழிபெயர்ப்பாளர் நினைக்கின்றாரோ, அதை போடுவதற்கு அவருக்கு உரிமையுண்டு.  சரி, இதற்காக சம்ஸ்கிருத அகராதி (dictionary) தமிழில் இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் ஒரு தளம் பார்த்தேன் (இன்னும் முழுமையாக இயங்கவில்லை)


உதாரணத்திற்கு, மேல உள்ள வசனம் சொல்கின்றது... "என்னையே வணங்குங்கள்" என்று இறைவன் சொல்வதாக. என்னையே வணங்குங்கள் எனும்போது மற்றவைகளை வணங்குவது தவறு என்று தானே பொருள்.

மற்றொரு வசனத்தில் (9:25), சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மிகத் தெளிவான வசனம்:

" தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்,
  பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார்,
  பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்,
என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்." 
 (9:25)
முன்பு வந்த வேதங்களில் மனித கையாடல் ஏற்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த உண்மை இருந்த போதிலும், ஏகத்துவத்தின் குரல் இங்கும் அங்கும் ஒழித்துக்கொண்டு தான் இருக்கின்றது.

இதுபோன்ற வசங்களின் கருத்துக்களை நண்பர்களுடன் விவாதிக்கும்போது , அவர்கள் எடுத்த எடுப்பிலே, அது சரியான கருத்து அல்ல என்கிறார்கள்.  இதோ இது தான் சரி என்று அவர்கள் சொல்லும் கருத்து, மற்ற மொழியாக்கங்களுக்கு நேரிடை மாற்றமாகவே உள்ளது.

இது என்னடா குழப்பமாக உள்ளதே, சரி நாமாவது இன்னும் சிறிது தேடலாம் என்று மிகவும்  நடுநிலைமையான,  ஆதாரப்பூர்வமான பகவத் கீதையின் ஆங்கில மொழியாக்கம்  எது, என்ற கேள்வியை நமது அருமை நண்பர் திரு.கூகுளிடம் கேட்டேன்.

அவர் கொடுத்த பதில்: நடுநிலைமையான மொழியாக்கம் ஒரு போதும் கிடைக்காது. அந்தந்தந்த குழுவின் கருத்திற்கு ஏற்ப, அதன் மொழியாக்கம் மாறுபடும்.

மாற்று மதத்தவர்கள், கீதையை ஒரு நடுநிலை கண்ணோட்டத்துடன்  படிக்க ஆரம்பிக்கும் பொது, இந்த குழப்பங்கள் இன்னும் அதிகரிக்கும்.

மற்றொரு சகோதரர், நீங்கள் ஒரு சிறந்த குருவின் துணையோடு மட்டுமே படிக்க வேண்டும் என்றார். நல்ல கருத்து தான், ஆனால் குரு சொல்வது தான் 100% சரி என்று எப்படி முடிவு செய்வது. மனிதன் என்ற முறையில் அவரும் தவறுகள் செய்யலாம் அல்லவா. இதனால், இந்த கருத்தும் சரியானதாக தோன்றவில்லை.


இஸ்லாத்தை பொருத்தவரை, திருக்குர்ஆன் வேதமாக கொடுக்கப்பட்டு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே  பூர்ணமாக்கப்பட்டது.
இறைவனின்  தூதர் என்ற முறையில் அவர்கள் சொல்வது சரி என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இவர்கள் தான் இறை தூதர் என்று உறுதி படுத்த, அவர்கள் கொடுத்த வேதமே சான்று.

நபியை தவிர, வேறு எந்த மனிதரும் 100% சரி என்று சொல்ல முடியாது. இறைவனை அடையும் வழியை சொல்லும்போது, தவறான வழியை குரு சொல்லிவிட்டால், பாதிப்பு குருவோடு மட்டுமில்லாமல் நமக்கும் தான்.

நமக்கு முன்னே உள்ள சிறந்த வழிகள்:

1.  நாமே சமஸ்க்ரிதம் படித்து, அதன் விளக்கத்தை அறிய வேண்டியது

2.   பல மொழியாக்கங்களையும் ஆராய்ந்து, நமக்கு  எது சரி என்று தெரிகின்றதோ , அந்த கருத்தை  எடுத்துகொள்வது

3. எந்த வேதம் கரைபடாமல் ஏகத்துவத்தை மிக எளிமையாக உரைக்கின்றதோ அதன் அடிப்படையில் அணுகுவது
.
என்னை பொருத்தவரை இந்த மூன்றையும் இணைத்து ஆராயும்போது, பல உண்மைகள் வெளி வரும்  என்பது மட்டும் உறுதி.

 நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

நன்றி: நாடோடி தமிழன்

Ref: பகவத் கீதை படிக்கும் முஸ்லிம் - 1

Thursday, May 21, 2015

பகவத் கீதை படிக்கும் முஸ்லிம் - 1


சமீபத்தில் நண்பர் ஒருவரின் கீதை & ரிக் வேதம் பற்றிய பதிவை  பதிவிட்டு  இருந்தேன். பதிவின் வசனம் இது தான்:

"எவர் ஒருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகின்றாரோ, அவர் பொய்யானதையே வணங்குகிறார்" [ கீதை 7:20]

மாற்று மத நண்பர் ஒருவர், இந்த  "விளக்கம் திரித்து சொல்லப்பட்டிருக்கிறது", சரியான விளக்கம் இது தான் என்றார்:

"அவரவர் ஆசைகளுக்கு கட்டுப்படும் அறிவுடையவர்கள், 
இயற்கைக்குள் கட்டுண்டு தங்கள் பிரதான தேவதையை வழிப்பட்டு 
அதன் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு நிற்பார்கள்"

முடிந்தவரை  சொல்லப்பட்ட கருத்துக்கள் தெளிவாக இருக்கும்போது, அந்த கருத்தை அப்படியே எடுப்பது தான் சிறந்தது. ஒரு வசனத்தை ஆராயும்போது, பொதுவாக கீழ்க்கண்ட வழிமுறைகள் உள்ளதை பார்க்கலாம்:

1.  அந்த வசனம் சொல்லப்படும் சூழ்நிலை, முந்தய/பிந்தைய வசங்களின் தொகுப்புகளின் மூலம், அந்த வசனத்தின் கருத்தை அறியலாம்

2. ஏதெனும் ஒரு வார்த்தையின்  பிரயோகத்தில் குழப்பம் ஏற்பட்டால், அந்த வார்த்தை மற்ற இடங்களில் எவ்வாறு கையாளப்பட்டுள்ளது  என்பதும், சரியான கருத்தை அடைய உதவும்

மேலும் ஒரு முஸ்லிமின் கண்ணோட்டம் எப்படிபட்டது என்றால், வேதத்தின் கருத்து தெளிவாக இருக்கும்போது எந்த மனிதருக்கும், வேறு பொருள் கொடுக்க உரிமையில்லை.  தனி மனித கருத்து பின்னுக்கு தள்ளப்பட்டு, வேதத்தின் கருத்து தான் எடுத்துக்கொள்ளப்படும்.

 இந்த வசனத்தின் கருத்து என்ன என்று அறிய, பல மொழியாக்கங்களை அலசினேன். சில இடங்களில், ஆங்கில/தமிழ்  மொழியாக்கத்திற்கு இடையிலும் வேற்பாடுகள் இருப்பதும் தெரிகின்றது.


     

காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்யந்தேந்யதேவதா:தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா
தை: தை: காமை:-அந்த அந்த விருப்பங்களால்,
ஹ்ருதஜ்ஞாநா:-கவரப்பட்ட அறிவினையுடையோர்,
ஸ்வயா ப்ரக்ருத்யா நியதா:-தத்தம் இயற்கையால் கட்டுண்டு,
தம் தம் நியமம் ஆஸ்தாய-வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய்,
அந்ய தேவதா: ப்ரபத்யந்தே-அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர். (தினமலர்:)

மேற்கண்ட வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு:
       
"Those whose minds are distorted by material desires surrender unto demigods and follow the particular rules and regulations of worship according to their own natures." 



இதற்க்கு அடுத்த வசனம் 7:21, 22  இதை கண்டிக்கும் விதமாகவே நான் கருதுகின்றேன்.



21. யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஸ்ரத்தயார்சிதுமிச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்
: : பக்த:-எந்த எந்த பக்தன், யாம் யாம் தநும்-எந்த எந்த வடிவத்தை (தெய்வத்தை), ஸ்ரத்தயா அர்சிதும்-நம்பிக்கையுடன் அர்ச்சிக்க விரும்புகிறானோ, தஸ்ய தஸ்ய ஸ்ரத்தாம்-அந்த அந்த பக்தனுக்கு சிரத்தையை, அஹம் தாம் ஏவ-நான் அந்த தேவதையிடமே, அசலாம் விததாமி-ஸ்திரமாக செய்கிறேன்(தினமலர்:)

I am in everyone's heart as the Super soul. As soon as one desires to worship the demigods, I make his faith steady so that he can devote himself to some particular deity.

எப்போது உண்மையான இறைவனை அல்லாமல், அந்நிய/மாற்று தேவதைகளை எவன் வழிபடுகின்றானோ, அவன் உள்ளத்தை அதன் பக்கமே விழ செய்கின்றேன், என்பது தானே இதன் அர்த்தம்!



22. தயா ஸ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே
லபதே தத: காமாந்மயைவ விஹிதாந்ஹிதாந்
தயா ஸ்ரத்தயா யுக்த:-அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து, தஸ்ய ஆராதநம் ஈஹதே-அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான், தத: காமாந் லபதே-மேலும் அதனின்றும் விரும்பியனவற்றை எய்துகிறான், ஹி தாந் விஹிதாந் மயா ஏவ-எனினும் அவை என்னாலேயே வகுத்துக் கொடுக்கப் பட்டது(தினமலர்:)

Endowed with such a faith, he seeks favors of a particular demigod and obtains his desires. But in actuality these benefits are bestowed by Me alone.
மனிதன் யாரை வழிபட்டாலும், அவனு கிடைக்கும் நன்மை/தீமை இரண்டுமே அந்நிய/மற்று தேவதைகளால் கிடப்பது இல்லை மாறாக அதற்க்கு காரணம் நானே, என்று கடவுள் சொல்வதாகவே தானே தெரிகின்றது.


இதை வைத்து "demigods"  என்ற வார்த்தையை தேடும் போது, கிடைத்த மற்றொரு வசனம்::



23. யேऽப்யந்யதேவதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா:
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்  
கௌந்தேய-குந்தியின் மகனே, யே பக்தா-எந்த பக்தர்கள், ஸ்ரத்தயா அந்விதா: அபி-நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்த போதிலும், அந்ய தேவதா: யஜந்தே-மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ, தே அபி அவிதி பூர்வகம்- அவர்களும் விதிமுறைப்படி அல்லாமல் (அஞ்ஞானத்துடன்), மாம் ஏவ யஜந்தி-என்னையே தொழுகின்றனர்(தினமலர்:)


O Arjuna, even those devotees who worship demigods with faith, they too worship Mebut in an improper way. (9.23)


இந்த வசனத்தை படிக்கும்போது நமக்கு ஏற்பட்ட கேள்விகள்:
தவறான வழிமுறைப்படி வணங்குபவனின் வணக்கம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?  
ஒரு மாணவன், தான் தேர்வில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தேர்வை எழுதுகின்றான். தவறான பதிலை கொடுத்தால் வெற்றி அடைய முடியுமா?
  இது கடவுளின் வார்த்தையாக நீங்கள் நம்பினால், "கடவுளே, என்னையல்லாமல் வேறு யாரையும் வணங்குபவர் தவறான முறையிலே வணங்குகின்றனர்  என்று சொல்லும்போது", 
சரியான வழியை கண்டறிந்து வணங்குவது முறையா அல்லது கடவுளே சொன்னாலும் நான் தவறாகத்தான் வணங்குவேன் என்று சொல்வது  சரியே?

இன்னும் ஓர் தெளிவான வசனம்:



9/25. யாந்தி தேவவ்ரதா தேவாந்பித்ரூந்யாந்தி பித்ருவ்ரதா:
பூதாநி யாந்தி பூதேஜ்யா யாந்தி மத்யாஜிநோபி மாம்  
தேவவ்ரதா: தேவாந் யாந்தி-தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்
பித்ருவ்ரதா: பித்ரூந் யாந்தி-பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார், பூதேஜ்யா பூதாநி யாந்தி-பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார், மத்யாஜிந: அபி மாம் யாந்தி-என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள். (தினமலர்:)

Worshippers of the demigods go to the demigods,

the worshippers of the ancestors go to the ancestors, 

and the worshippers of the ghosts go to the ghosts, 

but My devotees come to Me . (9.25)


தெளிவாக இந்த வசனம் சொல்கின்றது, இறைவனை வழிபடுபவன் மட்டும் தான் இறைவனை அடைவதாக.


நேர்மையாக சிந்திக்கும் மக்களுக்கு, இவைகள் மிக  தெளிவான, சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில்,  உண்மையான இறைவனை அல்லாமல் வேறு யாரையும். எவைகளையும் வணங்குபவன், இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டன் என்று  நிரூபணம் ஆகின்றது, மேலும் இந்த கீழ்க்கண்ட மொழியாக்கமும் சரியாகவே படுகின்றது.

"எவர் ஒருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகின்றாரோ, அவர் பொய்யானதையே வணங்குகிறார்" [7:20]

இதைபற்றி குரான் என்ன சொல்கின்றது, என்று பார்ப்போம்:


"என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!)" [2:186]

"அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!"

"அவனையன்றி கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். தமக்கே தீங்கும், நன்மையும் செய்ய அவர்களுக்கு இயலாது. வாழ்வதற்கோ, மரணிப்பதற்கோ, (பின்னர்) எழுப்புவதற்கோ அவர்கள் அதிகாரம் படைத்தோராக இல்லை." [25:3]

By: Nadodi Tamilan


 Thanks:
1. (தினமலர்:) (temple.dinamalar.com)
2. Bhagavad-gita (www.AsItIs.com)