பக்கங்கள் செல்ல
1.மக்களின் அன்பையும், நெருக்கத்தையும் பெற 70 குறிப்புகள்
2.அர்த்தமுள்ள கேள்விகள், அறிவு பூர்வமான பதில்கள்!
3.பறையோசை வேர்ட்பிரஸ்-ஆரம்பத்தை நோக்கி தொடருக்கான எதிர் தொடர்
4.உடைந்த சிலுவை
5.உயிர் ஓர் ஆய்வு
6.பரிணாமம் : உண்மையா ஊகமா
7.பரிணாமம் (பல எழுத்தாளர்கள்)
8.இஸ்லாமும் பால்யவிவாகமும்
9.குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கபட்டுள்ளது
10.புதிய ஏற்பாடும் குறைவில்லா குளறுபடிகளும்
1.உடைந்த சிலுவை-பாகம் 1:அறிமுகம்
2.உடைந்த சிலுவை-பாகம் 2: பழைய ஏற்பாடும் கிரேக்க செப்டகணும்
3.உடைந்த சிலுவை-பாகம் 3: பைபிலின் மூலங்கள் ஒரு பார்வை
4.உடைந்த சிலுவை-பாகம் 4: பழைய ஏற்பாடு ஆகமங்களின் எழுத்தரகள்
5.உடைந்த சிலுவை-பாகம் 5: புதிய ஏற்பாடு: ஒர் அறிமுகம்
6.உடைந்த சிலுவை-பாகம் 6: புதிய ஏற்பாடு ஆகமங்களின் எண்ணிக்கை
7.உடைந்த சிலுவை-பாகம் 7: மாற்கு சுவிஷேசம்
8.உடைந்த சிலுவை-பாகம் 8: மார் ஷபா கடிதம்
9.உடைந்த சிலுவை-பாகம் 9: ஏக இறைவனுக்கு வழிபட்ட முதலாம் நூற்றாண்டு முஸ்லிம்கள்
10.உடைந்த சிலுவை-பாகம் 10: போந்தியு பிலாத்தும் இரண்டு ஏசுவும் !!!!!!!!
11.உடைந்த சிலுவை-பாகம் 11: பழைய ஏடுகளில் ஏசுவின் சிலுவை மரணம் மறுக்கப்பட்டதா?
12.உடைந்த சிலுவை-பாகம் 12: கிறித்தவமும் பேய்வணக்கமும்
13.உடைந்த சிலுவை-பாகம் 13: இஸ்லாம் கூறும் யூத கிறித்தவ வேதம்
14.உடைந்த சிலுவை-பாகம் 14: மெசோரெடிக் ஏடுகளும் பழைய ஏற்பாடும்
15.உடைந்த சிலுவை-பாகம் 15: மூன்றாம் நூற்றாண்டு வரை உள்ள புதிய ஏற்பாடு மூல கையெழுத்து பிரதிகள்
16.இஸ்லாமிய ஆவணங்கள் கூறும் இன்ஜீல்
17.புதிய ஏற்பாட்டின் மொழி குழப்பமும் அது ஏற்படுத்தும் சிக்கலும்
18.ஒத்தமை நற்செய்தி நூல்களும் அது குறித்த அனுமானக் குழப்பங்களும்
19.நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்
20.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மத்தேயுவின் படியான சுவிஷேசம்
21.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மாற்கின் படியான சுவிஷேசம்
22.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- லூக்காவின் படியான சுவிஷேசம்
23.ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யோவானின் படியான சுவிஷேசம்
24.கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்
25.திருச்சபை பிதாக்களின் மேற்கோள்களும் காணாமல் போன தேவ வாக்குகளும்
26.பவுலின் கடிதங்களின் தொகுப்பும் குழப்பமும்
27.பவுலிய கடித தொகுப்பு குறித்த அனுமானமும் அது பலிதீர்த்த பவுலும்
28.பவுலிய கடிதங்களும் இடைச்செருகல்களும்
29.சர்ச்சைக்குரிய பவுலிய கடிதங்கள்
30.கத்தோலிக்க நிருபங்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- யாக்கோபின் நிருபம்
31.யாக்கோபின் நிருபமும் புதிய ஏற்பாட்டு அறிஞர்களின் விமர்சனமும்
32.யாக்கோபின் நிருபமும் சிக்கலை உருவாக்கும் அதன் கிரேக்கமும்
cross tab2
1. ஹிஜ்ரி முதலாம் -இரண்டாம் நூற்றாண்டு அல் குர்ஆன் எழுத்துபிரதிகள்
2. உள்ளத்தில் பாதுக்காக்கப்பட்ட அல் குர்ஆன்
3.பெரும்பான்மை மக்களின் ஓதலும் உஸ்மான்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பும்
4.குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத் பின் ஸாபித்(ரலி)
5.ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுக்க தகுதியற்றவரா?
6.உஸ்மான்(ரலி) அரசாணையும் இப்னு மஸ்ஊத்(ரலி) எதிர்ப்பும் ஏற்பும்
7. ஏழு அஹ்ரூஃபும் ஏழு கிராத்தும்
8.நபி(சல்) அவர்களிடமிருந்து வந்த கிராத்கள்
9.அல் பராஅத் சூராவிற்கு நிகரான சூரா குர்ஆனில் காணவில்லையா?
10. அபூதர்தா(ரலி) அல் லைல் சூராவை (அல் குர்ஆன் 92:3) மாற்றி ஓதினார்களா???
11. நபித்தோழர்கள் இன்றைய குர்ஆனிற்கு மாற்றமாக ஓதினார்களா??!!!!!!!!
12. அல் குர்ஆனில் எழுத்தர் பிழைகளா?
13. கல்லெறி தண்டனை குர்ஆனில் காணவில்லையா???
14. பால்குடி வசனம் குர்ஆனில் காணவில்லையா???
15.இப்னு மஸ்வூத்(ரலி)யும் அவர்களது ஓதலும்
16.அல் ஃபாத்திஹா மற்றும் அல் முஅவ்விததைன் சூராக்கள் குர்ஆனின் பகுதிகளா?
17.உபை இப்னு கஅப்(ரலி)யும் அவர்களது ஓதலும்
18. உபை இப்னு கஅப்(ரலி) முஸ்ஹஃப்பில் அல்ஹஃப்த் மற்றும் அல்ஃஹலா ஸுராக்கள்
19.யமாமா யுத்தத்தில் குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டதா???
20. இப்னு உமர்(ரலி) குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று கூறினார்களா??
21.அல்குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று ஹதீஸ்கள் கூறுகிறதா??
22. சமர்கண்ட் எழுத்துப்பிரதியும் இஸ்லாமோஃபோபுகளும்
23.ஆர்தர் ஜெஃப்ரி “ Materials for the History of the Text of the Qur'ān” நூல் ஆய்வு - பாகம் 1
24.முரண்பாட்டின் மொத்த உருவம் ஆர்தர் ஜெஃப்ரி
25.அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) மட்டும்தான் சாட்சியா???
Sunday, May 31, 2015
எதிர்தொடர் 15: சூரியன் இன்னும் கிழக்கில்தான் உதிக்கிறது!
Saturday, May 30, 2015
முன்பு தந்தையும் & மகனும், இப்போது தம்பதிகள் - அமெரிக்காவில் ஓர் அதிசிய திருமணம்!
கடந்த ஞாயிறன்று Norman MacArthur, 74, Bill Novak, 76 இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.. என்னடா இருவரும் ஆண்களாக இருக்கின்றனரே என்று பார்கிரீர்களா? இது தான் அமெரிக்காவின் நவீன திருமணம். இன்னும் யார் யாருக்கு இடையே எல்லாம் திருமணம் வரும்காலங்களில் நடக்கலாம் என்பதை உங்களின் கற்பனைக்கு விட்டு விடுகின்றேன்.
நியு யார்க் சட்டத்தின் படி, இவர்கள் இருவரும் தன 20 வயதில் இருந்து சேர்ந்தது வாழ்ந்து வந்தார்கள் (Domestic Partners). இவர்கள் இருவரும் கடந்த 15 வருடங்களாக சட்டப்படி தந்தை & மகனாக (adapted son) இருந்தவர்கள். பென்சில்வேனிய மாநிலத்தில் வசிப்பதற்காக செல்லும் போது, அங்கே இது போன்ற வேலைகளுக்கு தடை உள்ளதால் தந்தை மகனாக பதிவு செய்துகொண்டு, வீட்டிற்குள்ளே தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இப்போது தந்தை & மகன் என்ற உறவை சட்ட ரீதியாக ரத்து செய்துவிட்டு, திருமணம்(!!) செய்து கொண்டுள்ளனர்.முழு விபரத்திற்கு, இந்த கட்டுரையை படிக்கவும்.
இதிலே பல விடயங்கள் உள்ளன.
1. தத்து எடுத்தல்: எவ்வளவு தான் சில மனிதர்கள் வாய் கிழிய கத்தினாலும், தத்து எடுக்கப்படும் மகனோ/மகளோ உண்மையான மகனாகவோ/ மகளாகவோ ஆகா முடியாது. அவர்கள் ஒரு "காகித உறவே"! காகிதம் இல்லையென்றால் சக மனிதர்களே! அதனால் தான் இஸ்லாம் தெளிவாகவே சொல்கின்றது, ஒருபோதும் அவர்கள், உங்களின் இரத்த உறவிற்கு இணையாக முடியாது. இங்கே. இந்த "காகித உறவு" இரத்து செய்யப்பட்டு, திருமணம்(!!!) நடந்துள்ளது. நாகரீகத்தின் உச்சத்தில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் அமெரிக்க, இதை அனுமதித்து உள்ளது.
" உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்.[33:4]"
2. பகுத்தறிவின் உச்சக்கட்டத்தில் இருப்பதாக பெருமை அடித்துக்கொள்ளும் மனிதன் ஒரு நாட்டின் அனைத்து பகுதியிலும் கூட ஒரே சட்டம் அமுல் படுத்த முடியவில்லை. ஒரு இடத்தில் "ஒழுக்கமானது" என்று கருதப்படும் ஒரு செயல், அதே நாட்டின் மற்றொரு பகுதியில் "ஒழுக்கக்கேடு" என்று கருதப்படுகின்றது. இதில் யார் சொல்வது சரி? இந்த நிலைமை நீடித்தால், எவ்வளவு மோசாமான சம்பவங்களும் நியாயப்படுத்தப்படும் சூழ்நிலை ஏற்படாதா?
3. ஒரினச் சேர்க்கை: இறைவனின் வழிகாட்டல் என்ற ஒன்று இல்லை என்றால், மனிதன் எவ்வாரல்லாம் சீரழிந்து விடுவான் என்பதற்கு இது ஒரு உதாரணம். சில மாதங்களுக்கு முன்னால், ஒரு பெண் கழுதையை திருமணம் செய்ததான தகவலை படித்த நினைவு உண்டு. இன்னும் என்னன்ன வழிகேடுகளின் பக்கம் மனிதன் செல்வான் என்பதை சொல்ல வேண்டியதில்லை.
இதற்கெல்லாம் தீர்வு, இறை வழிகாட்டல் மட்டும் தான். இதனால் மட்டும் தான் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சரியான, மனித குலத்திற்கு நன்மை பயக்கக் கூடிய வழியை கொடுக்க முடியும்.
ஒரு இயந்திரத்தை உருவாகியவன் தான், அதற்கான சரியான கையேடு கொடுக்க முடியும். இயந்திரத்தை பார்ப்பவனோ அல்லது உபயோகப்படுத்துவனோ உருவாக்கும் கையேடு குழப்பத்தை தான் ஏற்படுத்தும்.
"பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை." [6:116]
நன்றி: நாடோடி தமிழன்
பகவத் கீதை படிக்கும் முஸ்லிம் - 2
பகவத் கீதையை படிக்க ஆரம்பித்தவுடன் ஏற்படும் முதல் சிக்கல், எந்த மொழியாக்கம் சரியானது, ஆதாரப்பூர்வமானது என்பது தான்?
மூல மொழியோடு சில மொழிபெயர்ப்பு இருந்தாலும், அதிலும் சுய/சொந்த கருத்து திணிக்கப்பட்டுள்ளன.
ஒரு வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருக்கும் பொது, அதில் எது சிறந்த்தது என்று மொழிபெயர்ப்பாளர் நினைக்கின்றாரோ, அதை போடுவதற்கு அவருக்கு உரிமையுண்டு. சரி, இதற்காக சம்ஸ்கிருத அகராதி (dictionary) தமிழில் இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஆங்கிலத்தில் ஒரு தளம் பார்த்தேன் (இன்னும் முழுமையாக இயங்கவில்லை)
உதாரணத்திற்கு, மேல உள்ள வசனம் சொல்கின்றது... "என்னையே வணங்குங்கள்" என்று இறைவன் சொல்வதாக. என்னையே வணங்குங்கள் எனும்போது மற்றவைகளை வணங்குவது தவறு என்று தானே பொருள்.
மற்றொரு வசனத்தில் (9:25), சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் மிகத் தெளிவான வசனம்:
" தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்,
பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார்,
பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்,
என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்." (9:25)
அவர் கொடுத்த பதில்: நடுநிலைமையான மொழியாக்கம் ஒரு போதும் கிடைக்காது. அந்தந்தந்த குழுவின் கருத்திற்கு ஏற்ப, அதன் மொழியாக்கம் மாறுபடும்.
மாற்று மதத்தவர்கள், கீதையை ஒரு நடுநிலை கண்ணோட்டத்துடன் படிக்க ஆரம்பிக்கும் பொது, இந்த குழப்பங்கள் இன்னும் அதிகரிக்கும்.
மற்றொரு சகோதரர், நீங்கள் ஒரு சிறந்த குருவின் துணையோடு மட்டுமே படிக்க வேண்டும் என்றார். நல்ல கருத்து தான், ஆனால் குரு சொல்வது தான் 100% சரி என்று எப்படி முடிவு செய்வது. மனிதன் என்ற முறையில் அவரும் தவறுகள் செய்யலாம் அல்லவா. இதனால், இந்த கருத்தும் சரியானதாக தோன்றவில்லை.
இஸ்லாத்தை பொருத்தவரை, திருக்குர்ஆன் வேதமாக கொடுக்கப்பட்டு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே பூர்ணமாக்கப்பட்டது.
இறைவனின் தூதர் என்ற முறையில் அவர்கள் சொல்வது சரி என்பதை ஏற்றுக்கொள்ளலாம். இவர்கள் தான் இறை தூதர் என்று உறுதி படுத்த, அவர்கள் கொடுத்த வேதமே சான்று.
நபியை தவிர, வேறு எந்த மனிதரும் 100% சரி என்று சொல்ல முடியாது. இறைவனை அடையும் வழியை சொல்லும்போது, தவறான வழியை குரு சொல்லிவிட்டால், பாதிப்பு குருவோடு மட்டுமில்லாமல் நமக்கும் தான்.
நமக்கு முன்னே உள்ள சிறந்த வழிகள்:
1. நாமே சமஸ்க்ரிதம் படித்து, அதன் விளக்கத்தை அறிய வேண்டியது
2. பல மொழியாக்கங்களையும் ஆராய்ந்து, நமக்கு எது சரி என்று தெரிகின்றதோ , அந்த கருத்தை எடுத்துகொள்வது
3. எந்த வேதம் கரைபடாமல் ஏகத்துவத்தை மிக எளிமையாக உரைக்கின்றதோ அதன் அடிப்படையில் அணுகுவது
.
என்னை பொருத்தவரை இந்த மூன்றையும் இணைத்து ஆராயும்போது, பல உண்மைகள் வெளி வரும் என்பது மட்டும் உறுதி.
நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
நன்றி: நாடோடி தமிழன்
Ref: பகவத் கீதை படிக்கும் முஸ்லிம் - 1
Thursday, May 21, 2015
பகவத் கீதை படிக்கும் முஸ்லிம் - 1
சமீபத்தில் நண்பர் ஒருவரின் கீதை & ரிக் வேதம் பற்றிய பதிவை பதிவிட்டு இருந்தேன். பதிவின் வசனம் இது தான்:
"எவர் ஒருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகின்றாரோ, அவர் பொய்யானதையே வணங்குகிறார்" [ கீதை 7:20]
மாற்று மத நண்பர் ஒருவர், இந்த "விளக்கம் திரித்து சொல்லப்பட்டிருக்கிறது", சரியான விளக்கம் இது தான் என்றார்:
"அவரவர் ஆசைகளுக்கு கட்டுப்படும் அறிவுடையவர்கள்,
இயற்கைக்குள் கட்டுண்டு தங்கள் பிரதான தேவதையை வழிப்பட்டு
அதன் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு நிற்பார்கள்"
முடிந்தவரை சொல்லப்பட்ட கருத்துக்கள் தெளிவாக இருக்கும்போது, அந்த கருத்தை அப்படியே எடுப்பது தான் சிறந்தது. ஒரு வசனத்தை ஆராயும்போது, பொதுவாக கீழ்க்கண்ட வழிமுறைகள் உள்ளதை பார்க்கலாம்:
1. அந்த வசனம் சொல்லப்படும் சூழ்நிலை, முந்தய/பிந்தைய வசங்களின் தொகுப்புகளின் மூலம், அந்த வசனத்தின் கருத்தை அறியலாம்
2. ஏதெனும் ஒரு வார்த்தையின் பிரயோகத்தில் குழப்பம் ஏற்பட்டால், அந்த வார்த்தை மற்ற இடங்களில் எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்பதும், சரியான கருத்தை அடைய உதவும்
மேலும் ஒரு முஸ்லிமின் கண்ணோட்டம் எப்படிபட்டது என்றால், வேதத்தின் கருத்து தெளிவாக இருக்கும்போது எந்த மனிதருக்கும், வேறு பொருள் கொடுக்க உரிமையில்லை. தனி மனித கருத்து பின்னுக்கு தள்ளப்பட்டு, வேதத்தின் கருத்து தான் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த வசனத்தின் கருத்து என்ன என்று அறிய, பல மொழியாக்கங்களை அலசினேன். சில இடங்களில், ஆங்கில/தமிழ் மொழியாக்கத்திற்கு இடையிலும் வேற்பாடுகள் இருப்பதும் தெரிகின்றது.
காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்யந்தேऽந்யதேவதா:தம் தம் நியமமாஸ்தாய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா
தை:
தை:
காமை:-அந்த அந்த விருப்பங்களால்,
ஹ்ருதஜ்ஞாநா:-கவரப்பட்ட அறிவினையுடையோர், ஸ்வயா ப்ரக்ருத்யா நியதா:-தத்தம் இயற்கையால் கட்டுண்டு, தம் தம் நியமம் ஆஸ்தாய-வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய், அந்ய தேவதா: ப்ரபத்யந்தே-அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர். ( |
மேற்கண்ட வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு:
"Those whose minds are distorted by
material desires surrender unto demigods and follow the particular rules and
regulations of worship according to their own natures."
|
இதற்க்கு அடுத்த வசனம் 7:21, 22 இதை கண்டிக்கும் விதமாகவே நான் கருதுகின்றேன்.
21. யோ யோ யாம் யாம் தநும் பக்த: ஸ்ரத்தயார்சிதுமிச்சதி
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்ரத்தாம் தாமேவ விததாம்யஹம்
ய: ய: பக்த:-எந்த எந்த பக்தன், யாம் யாம் தநும்-எந்த எந்த வடிவத்தை (தெய்வத்தை), ஸ்ரத்தயா அர்சிதும்-நம்பிக்கையுடன் அர்ச்சிக்க விரும்புகிறானோ, தஸ்ய தஸ்ய ஸ்ரத்தாம்-அந்த அந்த பக்தனுக்கு சிரத்தையை, அஹம் தாம் ஏவ-நான் அந்த தேவதையிடமே, அசலாம் விததாமி-ஸ்திரமாக செய்கிறேன்.
|
I am in everyone's heart as the Super soul. As
soon as one desires to worship the demigods, I make his faith steady so that
he can devote himself to some particular deity.
|
எப்போது உண்மையான இறைவனை அல்லாமல், அந்நிய/மாற்று தேவதைகளை எவன் வழிபடுகின்றானோ, அவன் உள்ளத்தை அதன் பக்கமே விழ செய்கின்றேன், என்பது தானே இதன் அர்த்தம்!
22. ஸ தயா ஸ்ரத்தயா யுக்தஸ்தஸ்யாராதநமீஹதே
லபதே ச தத: காமாந்மயைவ விஹிதாந்ஹிதாந்
ஸ தயா ஸ்ரத்தயா யுக்த:-அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து, தஸ்ய ஆராதநம் ஈஹதே-அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான், ச தத: காமாந் லபதே-மேலும் அதனின்றும் விரும்பியனவற்றை எய்துகிறான், ஹி தாந் விஹிதாந் மயா ஏவ-எனினும் அவை என்னாலேயே வகுத்துக் கொடுக்கப் பட்டது.
|
Endowed with such a faith, he seeks favors of a
particular demigod and obtains his desires. But in actuality these benefits
are bestowed by Me alone.
|
23. யேऽப்யந்யதேவதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா:
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதிபூர்வகம்
கௌந்தேய-குந்தியின் மகனே, யே பக்தா-எந்த பக்தர்கள், ஸ்ரத்தயா அந்விதா: அபி-நம்பிக்கையுடன் கூடியவர்களாக இருந்த போதிலும், அந்ய தேவதா: யஜந்தே-மற்ற தேவதைகளை வழிபடுகிறார்களோ, தே அபி அவிதி பூர்வகம்- அவர்களும் விதிமுறைப்படி அல்லாமல் (அஞ்ஞானத்துடன்), மாம் ஏவ யஜந்தி-என்னையே தொழுகின்றனர். (
|
O Arjuna, even those devotees who worship demigods with faith, they too worship Me, but in an improper way. (9.23)
|
இந்த வசனத்தை படிக்கும்போது நமக்கு ஏற்பட்ட கேள்விகள்:
தவறான வழிமுறைப்படி வணங்குபவனின் வணக்கம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும்?
ஒரு மாணவன், தான் தேர்வில் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தேர்வை எழுதுகின்றான். தவறான பதிலை கொடுத்தால் வெற்றி அடைய முடியுமா?
இது கடவுளின் வார்த்தையாக நீங்கள் நம்பினால், "கடவுளே, என்னையல்லாமல் வேறு யாரையும் வணங்குபவர் தவறான முறையிலே வணங்குகின்றனர் என்று சொல்லும்போது",
சரியான வழியை கண்டறிந்து வணங்குவது முறையா அல்லது கடவுளே சொன்னாலும் நான் தவறாகத்தான் வணங்குவேன் என்று சொல்வது சரியே?
இன்னும் ஓர் தெளிவான வசனம்:
9/25. யாந்தி தேவவ்ரதா தேவாந்பித்ரூந்யாந்தி பித்ருவ்ரதா:
பூதாநி
யாந்தி
பூதேஜ்யா
யாந்தி
மத்யாஜிநோऽபி மாம்
தேவவ்ரதா:
தேவாந்
யாந்தி-தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளை அடைகிறார்கள்,
பித்ருவ்ரதா: பித்ரூந் யாந்தி-பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களை அடைவார், பூதேஜ்யா பூதாநி யாந்தி-பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார், மத்யாஜிந: அபி மாம் யாந்தி-என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்.
|
Worshippers of the demigods
go to the demigods,
the worshippers of the ancestors go to the ancestors,
and
the worshippers of the ghosts go to the ghosts,
but My devotees come
to Me .
(9.25)
|
தெளிவாக இந்த வசனம் சொல்கின்றது, இறைவனை வழிபடுபவன் மட்டும் தான் இறைவனை அடைவதாக.
நேர்மையாக சிந்திக்கும் மக்களுக்கு, இவைகள் மிக தெளிவான, சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், உண்மையான இறைவனை அல்லாமல் வேறு யாரையும். எவைகளையும் வணங்குபவன், இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டன் என்று நிரூபணம் ஆகின்றது, மேலும் இந்த கீழ்க்கண்ட மொழியாக்கமும் சரியாகவே படுகின்றது.
"எவர் ஒருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகின்றாரோ, அவர் பொய்யானதையே வணங்குகிறார்" [7:20]
இதைபற்றி குரான் என்ன சொல்கின்றது, என்று பார்ப்போம்:
"என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!)" [2:186]
"அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!"
"அவனையன்றி கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். தமக்கே தீங்கும், நன்மையும் செய்ய அவர்களுக்கு இயலாது. வாழ்வதற்கோ, மரணிப்பதற்கோ, (பின்னர்) எழுப்புவதற்கோ அவர்கள் அதிகாரம் படைத்தோராக இல்லை." [25:3]
By: Nadodi Tamilan
Thanks:
1. (
2. Bhagavad-gita (www.AsItIs.com)












