பக்கங்கள் செல்ல

cross tab2

Saturday, February 14, 2026

1 பேதுருவை எழுதியது சில்வானுவா?????

 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

       
    நாம் சென்ற கட்டுரையை, 1 பேதுருவை எழுதியது பேதுருவின் உதவியாளரில் ஒருவர் என்ற அனுமானக் கற்பனை குறித்து சில கேள்விகளை முன்வைத்து அதனை முடித்திருந்தோம். அந்த அனுமானமே இந்த நிருபம் பேதுருவால் எழுதப்பட்டது என்ற அந்த நிருபத்தின் சுயசாட்சியை தூக்கி நிறுத்தும் தூணாக உள்ளது. அந்த அனுமானத்தின் அவசியத்தை “இந்த நிருபம் பேதுருவால்தான் எழுதப்பட்டது” என்று வாதிட்டு வரும் அறிஞர் ஒருவரின் வார்த்தைகளில் இருந்து பார்ப்போம்.
          For anyone reading the Epistle in the original language the most obvious difficulty in the way of accepting the Petrine authorship is the character of the Greek-the good style and extensive literary vocabulary. Is it likely that a Galilean fisherman, who at the beginning of the apostolic mission could be described as 'unlearned and ignorant' (Acts 4.13), would ever have managed to write some of the best Greek in the New Testament? But this difficulty disappears on the assumption that Silvanus (5.12) played the part of a responsible secretary rather than a mere scribe writing to dictation (P.No,13-14, Introduction, I & II Peter And Jude: Introduction And Commentary by C.E.B. Cranfield (Torch Bible Commentaries))

     மூல மொழியில் இந்த நிருபத்தைப் படிக்கும் எவருக்கும், பேதுருவை எழுத்தாளராக ஏற்றுக்கொள்வதில் இருக்கும் மிகவும் வெளிப்படையான சிரமம் அதன கிரேக்க நயம், அதன் நல்ல நடை மற்றும் விரிவான இலக்கியச் சொற்களஞ்சியம்  ஆகும். அப்போஸ்தலிக்கப் பணியின் தொடக்கத்தில் 'கல்வியறிவற்றவர் மற்றும் அறிவிலி' (அப்போஸ்தலர் 4.13) என்று விவரிக்கப்படக்கூடிய ஒரு கலிலேய மீனவர், புதிய ஏற்பாட்டில் சிறந்த கிரேக்க மொழியில் சிலவற்றை எப்போதாவது எழுதியிருக்க சாத்தியமா? ஆனால் சில்வானு (5.12) சொல்ல சொல்ல எழுதும் வெறும் எழுத்தாளராக அல்லாமல், ஒரு பொறுப்பான காரியதரிசியாக கடமையாற்றினார் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இந்தச் சிரமம் மறைந்துவிடும். (P.No,13-14, Introduction, I & II Peter And Jude: Introduction And Commentary by C.E.B. Cranfield (Torch Bible Commentaries)) 

அதாவது C.E.B. Cranfield அவர்களது கருத்தின் படி 1 பேதுருவின் கிரேக்க மொழியியல் நடை என்பது அப்போஸ்தலர் 4.13 நேர் எதிரானது. எனவே இந்த சிக்கலை அல்லது சிரமத்தை சரிகெட்ட இருக்கும் ஒரே வழி இந்த நிருபத்தை இயற்றியது சில்வானுதான், அதுவும் பேதுரு சொல்ல சொல்ல எழுதாமல், அதை திரம்பட எழுதிய காரியதரிசியாக சில்வானு இருந்தார் என்று அனுமானிக்க வேண்டுமாம். எனவே இந்த அனுமானத்திற்கு அடிப்படையாய் அமைந்த 1 பேதுருவின் வசனம் குறித்த மொழியியல் விமர்சனத்தை கிறித்தவ வல்லுனர்களின் பார்வையில் இங்கு முன்வைப்போம் இன் ஷா அல்லாஹ். 

1 பேதுரு 5:12ன் மொழியியல் ஆய்வு:

        1 பேதுருவை இயற்றியது சில்வானுதான் என்ற கருத்தை முன்வைக்கும் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் தங்களது வாதத்திற்கு பிரதானமாக முன்வைக்கும் ஆதாரமாக இருப்பது 1 பேதுரு நிருபத்தின் 5:12 வசனமாகும். இந்த வசனம் உண்மையில் அதைத்தான் கூறுகிறதா என்பதை பார்ப்போம்.

Διὰ Σιλουανοῦ ὑμῖν τοῦ πιστοῦ ἀδελφοῦ, ὡς λογίζομαι, δι’ ὀλίγων ἔγραψα, παρακαλῶν καὶ ἐπιμαρτυρῶν ταύτην εἶναι ἀληθῆ χάριν τοῦ θεοῦ• εἰς ἣν στῆτε.

உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன். 

        “1 பேதுருவை இயற்றியது சில்வானுதான்” என்ற கருத்தை முன்வைக்கும் புதிய ஏற்பாட்டு அறிஞர்கள், மேலே இடம் பெறும் Διὰ Σιλουανοῦ……. ἔγραψα, என்ற வார்த்தைகளை மொழிபெயர்க்கும் போது, இது சில்வானு மூலமாக எழுதி அனுப்பியது என்ற பொருளை தருவதாய் வாதிக்கின்றனர். உண்மையில் மேற்குறிபிட்ட படியான வார்த்தை கோர்வை எப்படி அன்றைய காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அதே காலப்பகுதியில் (தோராயமாக கி.பி. 110 ல்) எழுதப்பட்ட இக்னேஷியஸின் கடிதங்கள், பாலிகார்ப்பின் கடிதம் மற்றும் PFay 123 பாப்பிரஸை கொண்டு ஆய்வு செய்து   பாம் பீச் அட்லாண்டிக் பல்கலைகழகத்தின் புதிய ஏற்பாட்டு பேராசிரியாரன E. Randolph Richards ((https://www.pba.edu/directory/randy-richards/)) பின்வருமாறு முடிவினை முன்வைக்கிறார். 

To summarize the argument that the formula γράφω διά τινος was used solely to identify the letter-carrier and never to identify the secretary, let us note four points.

First, although references identifying a secretary are found in Greco-Roman letters, we have found no examples of the formula γράφω διά τινος- (meaning- writing through someone) being used to identify the secretary. There is an adequate number of examples of this formula. The formula seems always to be identifying the letter-carrier. 

Second, the best two examples we have of this formula come from literature that is quite analogous to the NT and clearly demonstrate that the formula γράφω διά τινος 42  was meant to identify the letter-carrier and not the secretary. The remaining secular papyri support this contention.

Third, the expanded superscription for Romans found in the majority text reads: ".... προς Πωμαιους εγράφη από Κορίνθου δια Φοιβης..." where Phoebe is clearly the carrier and not the secretary. While we would not argue for the historical reliability of the superscription, it is noteworthy that εγράφη - - - δια is use to identify the carrier, not the secretary.

Fourth, a variation of this formula is found in the letter/decree of the Apostolic Council (Acts 15). There we find the text of the letter introduced: "They sent Judas called Barsabbas, and Silas, leading men among the brethren, writing through their hand..."43 The structure and wording is sufficiently different, so that it might not serve as an example of the γράφω διά τινος formula. Nevertheless, the usual interpretation of this phrase is that Judas and Silas were chosen as bearers of the letter to accompany Paul and Barnabas and are commended to the church in Antioch in the manner we have seen as fairly typical for a letter-carrier. ……..

…………However, 1 Pet 5:12 does not address the role of the secretary. While many—perhaps most—commentators now interpret this verse as identifying Silas as the carrier, there are still lingering tendencies among us evangelicals, those defending Petrine authorship of 2 Peter, to “seek water for thirsty souls” here in 1 Pet 5:12. 85 Yet this is a “broken cistern that can hold no water.” (Silvanus was not Peter's Secretary: Theological Bias In Interpreting Διὰ Σιλουανοῦ ἔγραψα Ιν 1 Ρeter 5:12 By E. Randolph Richards )

γράφω διά τινος என்ற (வாக்கிய) அமைப்பு கடிதத்தை எடுத்துச் செல்பவரை அடையாளம் காண மட்டுமே பயன்படுத்தப்பட்டது, காரியதரிசியை அடையாளம் காண ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை என்ற வாதத்தை சுருங்கச்சொல்ல நான்கு புள்ளிகளைக் குறிப்பிடுவோம். 
முதலாவதாக, ஒரு காரியதரிசியை அடையாளம் காணும் குறிப்புகள் கிரேக்க-ரோமன் எழுத்துக்களில் காணப்பட்டாலும், செயலாளரை அடையாளம் காண γράφω διά τινος - (பொருள் - யாரோ ஒருவர் மூலமாக எழுதியனுப்புதல்) என்ற (வாக்கிய) அமைப்பு பயன்படுத்தப்பட்டதற்கான எந்த உதாரணங்களையும் நாம் காணவில்லை. இந்த (வாக்கிய) அமைப்பிற்கு போதுமான எண்ணிக்கையிலான எடுத்துக்காட்டுகள் உள்ளன. (வாக்கிய) அமைப்பு எப்போதும் கடிதத்தை எடுத்துச் செல்பவரை அடையாளம் காண்பதாகத் தெரிகிறது.
இரண்டாவதாக, இந்த (வாக்கிய) அமைப்பின் சிறந்த இரண்டு எடுத்துக்காட்டுகள் புதிய ஏற்பாட்டிற்கு மிகவும் ஒத்த இலக்கியங்களிலிருந்து வருகின்றன, மேலும் γράφω διά τινος 42 என்ற (வாக்கிய) அமைப்பு கடிதத்தை எடுத்துச் செல்பவரை அடையாளம் காணவே உருவாக்கப்பட்டது, காரியதரிசியை அல்ல என்பதை தெளிவாக நிரூபிக்கிறது. மீதமுள்ள மதச்சார்பற்ற பாப்பிரஸ் இந்த வாதத்தை ஆதரிக்கிறது.
மூன்றாவதாக, பெரும்பான்மை உரையில் காணப்படும் ரோமர்-இன் விரிவுபடுத்தப்பட்ட மேற்குறிப்பு இவ்வாறு கூறுகிறது: " προς Πωμαιους εγράφη από Κορίνθου δια Φοιβης...".... இங்கு பெபெயா தெளிவாக கடிதத்தை எடுத்துச் செல்பவர், காரியதரிசி அல்ல. மேற்குறிப்பின் வரலாற்று நம்பகத்தன்மைக்காக நாம் வாதிட மாட்டோம் என்றாலும், εγράφη - - - δια என்பது காரியதரிசியை அல்ல, எடுத்துச் செல்பவரையே அடையாளம் காணப் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நான்காவதாக, இந்த (வாக்கிய) அமைப்பின் ஒரு மாறுபாடு அப்போஸ்தலிக்க கவுன்சிலின் கடிதம்/ஆணையில் காணப்படுகிறது (அப்போஸ்தலர் 15). அங்கு அறிமுகப்படுத்தப்பட்ட கடிதத்தின் வாசகத்தைக் இவ்வாறு காண்கிறோம்: “அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே. இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது…..” இது γράφω διά τινος என்ற (வாக்கிய) அமைப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக இல்லாமல் இருப்பதற்கு போதிய அளவு, அமைப்பு மற்றும் வார்த்தைகளில் வேறுபட்டுள்ளது. ஆயினும்கூட, இந்த சொற்றொடரின் வழக்கமான விளக்கம் என்னவென்றால், பவுல் மற்றும் பர்னபாவுடன் சேர்ந்து நிருபத்தைத் தாங்குபவர்களாக யூதாவும் சீலாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் மிகவும் பொதுவானதாக நாம் கண்ட விதத்தில், அந்தியோகியாவில் உள்ள தேவாலயத்திற்கு கடிதம் எடுத்துச் செல்பவராக அங்கிகரிக்கப்படுகிறார்கள்.
…………….…………ஆனால், 1 பேதுரு 5:12 செயலாளரின் பங்கைக் குறிப்பிடவில்லை. தற்காலத்தில் பல - சொல்லப்போனால் பெரும்பாலான- வர்ணனையாளர்கள் இந்த வசனம் சில்வானுவை எடுத்துச் செல்பவராக அடையாளம் காட்டுவதாக விளக்கும் போதும், 1 பேதுரு 5:12-ல் "தாகமுள்ள ஆத்துமாக்களுக்குத் தண்ணீர் தேடும்" போக்குகள், 2 பேதுருவின்,  “பேதுரு ஆசிரியத்துவத்தை” ஆதரிக்கும் நம் சுவிசேஷகர்கள் மத்தியில் இன்னும் நீடிக்கின்றன. ஆனாலும் இது "தண்ணீர் வைக்க முடியாத உடைந்த குடம்." (Silvanus was not Peter's Secretary: Theological Bias In Interpreting Διὰ Σιλουανοῦ ἔγραψα Ιν 1 Ρeter 5:12 By E. Randolph Richards )

        புதிய ஏற்பாட்டு பேராசிரியாரன E. Randolph Richards அவர்களின் ஆய்வினால் பெறப்படும் கருத்தே, சில்வானுவை 1 பேதுருவின் எழுத்தராக ஆக்கத்துடிக்கும் கிறித்தவ அறிஞர்களின் ஆதாரமான 1 பேதுரு 5:12-கு கொடுக்கப்பட்ட சம்மட்டி அடியாகும். 1 பேதுருவின் சமகால கிரேக்க இலக்கிய நடையில் இல்லாத விசித்தித்திர பொருளை 5:12 வசனத்திற்கு இவர்கள் கொடுக்க நினைப்பது எவ்வளவு பரிதாபத்திற்குரியது என்பதை நாம் மேலும் விளக்கத்தேவை இல்லை. போதிய உவமைகளினால், பேராசிரியாரன E. Randolph Richards விளக்கிவிட்டார். 

யார் இந்த சில்வானு? சில்வானு மொழி வல்லுனர் என்று புதிய ஏற்பாட்டில் எங்குள்ளது:

         சில்வானுவை, பேதுருவின் கருத்துகளுக்கு உருவம் கொடுத்து 1 பேதுருவை இயற்றிய எழுத்தர்/காரியதரிசி என்பதற்கு பின்வரும் வசனங்களை முன்வைக்கின்றனர்.  

          அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து,………. சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலையாக்கும்படிக்கு அதிகாரிகள் கட்டளை அனுப்பினார்கள்; ஆகையால் நீங்கள் இப்பொழுது புறப்பட்டுச் சமாதானத்துடனே போங்கள் என்றான். அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பி விடட்டும் என்றான். (Acts 16:29-37)

      அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக்கண்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே. இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்: (Acts 15:22-23)

    அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள். எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே. (Acts 15:27 - 28)

   என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார். (2Cor 1:19) 

        மேற்குறிபிட்ட புதிய ஏற்பாட்டின் வசனங்கள் எதிலும் சில்வானு, மெருகேரிய கிரேக்கத்தில் புலமையுடைய எழுத்தர் என்றில்லை. அவரை மேற்குறிபிட்ட வசனங்கள் அனைத்தும் சபையில் செல்வாக்கு மிக்கவராக காட்டுகிறதே ஒழிய ஒரு எழுத்தராக காட்டவில்லை. மேலும் மார்க், லூக்கா, குளோசியஸ், போன்றவர்களை எழுத்தர்கள் என்று கூறிய ஆரம்ப காலசபைபிதாக்கள், சபைத்தலைவர் எனும் அளவிற்கு தகுதி பெற்றிருந்த சில்வானுவின் எழுத்தாற்றல் குறித்தோ, அவர் 1 பேதுருவை இயற்றிய எழுத்தர் என்றோ எந்த இடத்திலும் கூறவில்லை. சில்வானு போன்று புகழ் பெற்ற சபைத்தலைவரின் இந்த சிறப்பை சரியாக பதிவு செய்யப்பட வேண்டிய இடம் 1 பேதுருவை இயற்றியதில் அவரது பங்களிப்பை பகிரங்கமாக கூறுவதுதான். ஆனால் அத்தகைய குறிப்புக்கள் எதுவும் ஆரம்பகால சபை பிதாக்களின் குறிப்புக்களில் காண முடியவில்லை. ஆரம்பகால சபை பிதாக்களின் குறிப்புக்களில் மயான அமைதி நிலவுகிறது. வரலாற்று ரீதியாக இது ஒரு அடிப்படையும் இல்லாத வாதம் என்பது இதன் மூலம் தெரிகிறது. 

தெசலோனிக்கேயர் நிருபங்களும் கிறித்தவ அறிஞர்களின் இரட்டை நாக்கும் 

        சில்வானுவை எழுத்தராக காட்ட எந்த முகாந்திரமுமே இல்லாத வசனங்களை எல்லாம் தூக்கிவந்து புதிய ஏற்பாட்டு அறிஞர்களில் ஒரு சாரார் 1பேதுருவை இயற்றியது சில்வானுதான் என்று வாதிடுகின்றனர். ஆனால் சில்வானுவை துணை எழுத்தராக பகிரங்கமாக அறிவிக்கும் புதிய ஏற்பாட்டின் 1ம் மற்றும் 2ம் தெசலோனிக்கேயர் நிருபங்களின் பின்வரும் வசனங்களுக்கு எப்படி எல்லாம் கிறித்தவ புதிய ஏற்பாட்டு அறிஞர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள் என்பதை காணலாம்.

பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. (1Thess 1:1)

பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: (2Thess 1:1)

I & II Thessalonians, A Commentary By M.Eugene Boring,

When Paul writes 1 Thessalonians, his authority as an apostle has not yet been challenged in the churches of the Aegean mission. He is no individualist, sensitive about placing himself in a special category. Paul can emphasize the corporate mission shared by his coworkers and the congregations they are establishing without detriment to his apostolic status. The repeated we-form is an indication that Paul’s Letters, thought direct and personal, are also intended to represent the Pauline mission, the missionary team, and the supporting churches in which the mission is integrated. The letter is not composed by a committee chaired by Paul. He includes his coworkers in the greeting as cosenders, not as coauthors. Paul writes (= dictates) the letter; he is the responsible author. (The Senders, 1:1 Prescript (Greeting), Commentary On 1 Thessalonians, The New Testament Library, Published By Westminster John Knox Press)

பவுல் 1 தெசலோனிக்கேயருக்கு நிருபத்தை எழுதும்போது, ஏஜியன் மிஷன் சபைகளில் ஒரு அப்போஸ்தலராக அவரது அதிகாரம் இன்னும் சவாலுக்கு உள்ளாகவில்லை. அவர் தன்னை சிறப்பான பிரிவினராக காட்டிக்கொள்ள அவர் சுயபற்றுவாதி அல்ல. பவுல் தனது அப்போஸ்தலிக்க அந்தஸ்துக்கு தீங்கு விளைவிக்காமல், தனது சக ஊழியர்களாலும் அவர்கள் நிறுவும் சபைகளாலும் பகிர்ந்து கொள்ளப்படும் கூட்டுப் பணியை வலியுறுத்த முடிந்தது. "நாங்கள்" என்ற வடிவம் மீண்டும் மீண்டும் வருவது, பவுலின் கடிதங்கள், நேரடியாகவும் தனிப்பட்ட முறையிலும் சிந்திக்கப்பட்டு, பவுலின் மிஷன், மிஷனரி குழு மற்றும் மிஷன் ஒருங்கிணைக்கப்பட்ட துணை தேவாலயங்களைக் குறிக்கும் நோக்கம் கொண்டவை என்பதற்கான அறிகுறியாகும். . இந்தக் கடிதம் பவுலின் தலைமையிலான குழுவால் இயற்றப்படவில்லை. அவர் தனது சக ஊழியர்களை வாழ்த்துக்களில் இணை ஆசிரியர்களாக அல்ல, இணை அனுப்புநர்களாகவே சேர்க்கிறார். பவுல் கடிதத்தை எழுதுகிறார் என்பது எழுத சொல்கிறார்; அவர்தான் பொறுப்பு ஆசிரியர் ஆவார். (The Senders, 1:1 Prescript (Greeting), Commentary On 1 Thessalonians, The New Testament Library, Published By Westminster John Knox Press)

The New international commentary on the New Testament
        Paul is designated neither as “an apostle of Christ Jesus” nor as “a servant of Christ.” The three of them are simply named as co-authors, jointly speaking into the situation in Thessalonica, even though the letter itself is dictated by Paul. (Authorship and Date, Commentary On 1 Thessalonians, The First and Second Letters to the Thessalonians by  Gordon D. Fee.)
பவுல் "கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலன்" என்றோ அல்லது "கிறிஸ்துவின் ஊழியன்" என்றோ நியமிக்கப்படவில்லை. இந்த நிருபம் பவுலால் எழுத சொல்லப்பட்டாலும்  , அவர்கள் மூவரும் இணை ஆசிரியர்கள் என்று மட்டுமே பெயரிடப்பட்டுள்ளனர், தெசலோனிக்கேயின் சூழ்நிலையைப் பற்றி கூட்டாகப் பேசுகிறார்கள். 

An Introduction to the New Testament—Second Edition by D. A. Carson and Douglas J. Moo 

As we have seen, both letters name Paul, Silas, and Timothy as the authors of the letters. Yet the letters are traditionally ascribed to Paul alone. Is this fair? Many scholars answer no………The inclusion of more than one person in the salutation of a letter was most unusual in antiquity; readers would probably have read the plural “we” as a genuine indication of authorship. However, there is reason to pause before drawing this conclusion. First person singular references do pop up in both letters (1 Thess. 2:18; 3:5; 5:27; 2 Thess. 2:5; 3:17). These would be most unusual if the letters had been genuinely co-authored. The first person plural may, then, be no more than a literary device, an “authorial plural” appropriate to the parenetic form of the letters. Perhaps, however, a mediating solution is the best. Paul’s mention of Silas and Timothy, because of their close associations with the Thessalonians, must be taken seriously. But Paul is the primary author. It is his voice that we hear in the letters, and their ascription to the apostle is not, therefore, unjustified. (P.No.535)

நாம் பார்த்தபடி, இரண்டு நிருபங்களும் பவுல், சீலா மற்றும் தீமோத்தேயு ஆகியோரை நிருபங்களின் ஆசிரியர்கள் என்று குறிப்பிடுகின்றன. இருப்பினும், பாரம்பரியமாக இந்தக் நிருபங்கள் பவுலுக்கு மட்டுமே சொந்தமானதாகக் கூறப்படுகிறது. இது நியாயமா? பல அறிஞர்கள் இல்லை என்று பதிலளிக்கின்றனர்……ஒரு நிருபத்தின் வணக்கத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களைச் சேர்ப்பது பழங்காலத்தில் மிகவும் அசாதாரணமானது; வாசகர்கள் "நாங்கள்" என்ற பன்மையை ஆசிரியரின் உண்மையான குறியீடாக படித்திருப்பார்கள். இருப்பினும், இந்த முடிவுக்கு வருவதற்கு முன் சிறிது நேரம் நிதானிப்பதற்கு காரணம் உள்ளது. இரண்டு நிருபத்திலும் முதல் நபர் ஒருமை குறிப்புகள் உதிக்கின்றன (1 தெச. 2:18; 3:5; 5:27; 2 தெச. 2:5; 3:17). நிருபங்கள் உண்மையிலேயே இணைந்து எழுதப்பட்டிருந்தால் இவை மிகவும் அசாதாரணமானதாக இருக்கும். எனவே, முதல் நபர் பன்மை என்பது ஒரு இலக்கிய சாதனமாக மட்டுமே இருக்க முடியாது, அவை நிருபங்களின் அறிவுரை வழங்கும் தனமைக்கு பொருத்தமான "ஆசிரியர் பன்மை". இருப்பினும், சாத்தியமானால், ஒரு நடுனிலையான தீர்வே சிறந்தது. சீலாவும் தீமோத்தேயுவும் தெசலோனிக்கேயருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால், பவுல் அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் பவுல் முதன்மை ஆசிரியர் ஆவார். இந்த நிருபங்களில் நாம் கேட்கும் குரல் அவருடையது, எனவே, அவர்கள் அப்போஸ்தலருக்குரியதாக கூறுவது நியாயமற்றது அல்ல.

    கிறித்தவ அறிஞர்களில் பெரும் பகுதியினரின் கருத்து சுருக்கமாக,  1ம் மற்றும் 2ம் தெசலோனிக்கேயர் நிருபங்களின் முதல் வசனங்கள், சில்வானுவை துணை எழுத்தர் என்று நேரடியாக கூறினாலும், 1ம் தெசலோனிக்கேயர் 2:1-12, 2ம் தெசலோனிக்கேயர் 3:10, போன்ற வசனங்களில் “நாங்கள்” என்று கூறி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தாலும் இக்கடிதங்கள் பவுலின் நேரடி கடிதம். இதில் 1ம் தெசலோனிக்கேயர் கிறித்தவ அறிஞர்கள் மத்தியில் எந்த சர்ச்சையும் இல்லாத கடிதம் வேறு. ஆனால் 1 பேதுருவில் இத்தகைய துணை எழுத்தர்களின் கோரல் இல்லை, “நாங்கள்” என்ற கும்பல் கோஷம் இல்லை, ஆயினும் அது துணை எழுத்தர்களால் எழுதப்பட்ட கடிதம். இதுதான் கிறித்தவ அறிஞர்கள் இரட்டை வேஷம் போடும் அவல நிலையை படம் பிடித்து காட்டுகிறது. 

  நாம் எப்போதும் இவர்களது முரண்களை புதிய ஏற்பாட்டில் இருக்கும் புத்தகங்களில் இருக்கும் குளறுபடிகளை சுட்டிகாட்டும் குறிகாட்டிகவே எடுத்துக்கொள்வோம். நாம் பகுப்பாய்வின் மூலம் அதன் உண்மைதன்மையை வெளிகொணருவோம். அந்த அடிப்படையில் இந்த கடிதத்தின் எழுத்து நடையின் ஆராய்ச்சியை தேடினோம்..

எழுத்தரை நிர்ணயம் செய்யும் ஆய்வு முறைமை: Stylometry

   1 பேதுருவை இயற்றியது சில்வானுதான் என்பதற்கு ஆதாரமாய் வைக்கப்பட்ட வசனம் 5:12 அதற்கான பொருளை பெற்றிருக்கவில்லை. அதுபோல் அதற்கு வரலாற்று தரவுகளும் இல்லை. எனவே  அதன் எழுத்தர் சில்வானுதான் என்பதை உறுதி செய்ய எழுத்தரை நிர்ணயம் செய்யும் அறிவியல் ஆய்வு முறைமையை கொண்டு சில்வானு எழுத்தர் என்று கூறப்படும் 1 பேதுருவையும் 1 தெசலோனிக்கேயரையும் ஒப்பீடு செய்த எழுத்தியல் நடை அறிஞர்களின் ஆய்வுகள் மற்றும் கூற்றை தேடினோம். அந்த ஆய்வு முடிவுகளை முன்வைப்பதற்கு முன்பாக எழுத்தியல் ஆய்வு- Stylometry குறித்து பார்ப்போம்

Stylometry என்றால் என்ன?

        ஒரு எழுத்தாளரின் எழுத்து பாணியை அறிவியல், புள்ளிவிவர முறையில் ஆய்வு செய்து அந்த எழுத்தை யார் எழுதியது என்பதை கண்டுபிடிக்க உதவும் ஒரு ஆய்வு துறை. ஒரு எழுத்தாளரின் அறியாமல் உருவாகும் மொழி வழக்கங்களை கணக்கிட்டு ஆராய்கிறது. அடிக்கடி வரும் சொற்கள், அரிய சொற்கள், சொல் வளம் இலக்கணம் வாக்கிய நீளம், நிறுத்தக்குறி பயன்பாடு, வினைச்சொல் அமைப்பு, எழுத்தர் அறியாமல் பயன்படுத்தும் ஆனால், மேலும் போன்ற சொற்களின் பயன்பாடு, இரண்டு /மூன்று சொற்களை இணைத்து பயன்படுத்துதல், வாக்கிய ஓட்டம் போன்றவற்றை கொண்டு ஒரே எழுத்தாளரின் எழுத்துகளா? பெயரில்லா நூலை யார் எழுதியிருக்கலாம்? ஒரே புத்தகத்தில் பகுதிகள் வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டதா? பழைய கிரந்தங்களில் உண்மையான / போலியாக சேர்க்கப்பட்ட பகுதிகள் உள்ளதா? போன்றவற்றை நிர்ணயம் செய்யும் அறிவியல் முறைமைதான் Stylometry. 

Katarina Laken அவர்களது ஆய்வு

    மேற்கூறிய முறைமையை கையாண்டு, பவுலிய கடிதங்களை Katarina Laken என்ற சாண்டியாகோ பல்கலை மாணவி பகுபாய்வு செய்து அதனை An Authorship Study on the Letters of Saint Paul  என்ற ஆய்விதழாக வெளியிட்டுள்ளார். பிலேமோன் கடிதம் சிறிதாக இருந்ததால் அதனை மட்டும் தவிர்த்துள்ளார். அதில் இடம்பெறும் அனைத்து புதிய ஏற்பாட்டின் கடிதங்களின் மொழிநடையின் பல கூறுகளை ஆய்வு செய்து வெளியிட்ட வரை கட்டங்கப் படங்களில்(graph) ஒன்று இதோ. இதில் X- அச்சில் இடம் பெறும் மொழியல் கூறுகள் வார்த்தை செழுமை, வார்த்தையின் நீளம், வார்த்தை தேர்வு உள்ளிட்ட பொதுவான மொழியில் கூறுகளை கொண்டுள்ளது. இது எழுத்தாளர் எவ்வாறு வார்த்தைகளை கையாண்டுள்ளார் என்பதை காட்டுகிறது. Y- அச்சு வாக்கிய அமைப்பு, நீளம், சிக்கலான இலக்கண அமைப்பு உள்ளிட்ட மொழியில் கூறுகளை கொண்டுள்ளது. இது எழுத்தாளர் எவ்வாறு வாக்கியங்களை உருவாக்கியுள்ளார் என்பதை காட்டுகிறது
    1 தெசலோனிக்கேயர் பவுலிய கடிதத்தொகுப்பில் சர்ச்சைகளற்ற கடிதங்களின் தொகுப்பான கலாத்தியர், ரோமர், 1 & 2கொரிந்தியர், பிலிப்பியர் ஆகியவற்றின் கூட்டத்தில் இடம்பெற்றிருப்பதை மேலே காணலாம். 1பேதுரு 1 தெசலோனிக்கேயரில் இருந்து வார்த்தை அமைப்பிலும், வாக்கிய அமைப்பிலும் முழுமையாக வேறுபட்டுள்ளதை காட்டுகிறது. இது இரண்டு செய்திகளை நமக்கு உணர்த்துகிறது

👉1 தெசலோனிக்கேயரின் எழுத்தருக்கும் 1 பேதுருவின் எழுத்தருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

👉1 தெசலோனிக்கேயர் பவுலின் நேரடி எழுத்துக்களாக இப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம்.

👉சில்வானு கிரேக்க புலமையுடன் கூடிய கடிதத்தை எழுதும் ஆற்றலுடையவர் என்ற கிறித்தவ அறிஞர்களின் கோரலுக்கு எந்த முகாந்திரத்தையும் வழங்கவில்லை. எனவே 1ம் தெசலோனிக்கேயரின் முதல் வசனம் எவ்விதத்திலும் சில்வானுவை கிரேக்க புலமையுடன் கூடிய எழுத்தர் என்று நிருவ உதவாது என்பதை அறிவியல் எழுத்தியல் பகுப்பாய்வு காட்டுகிறது.

        மேற்குறிபிட்ட அறிவியல் ஆய்வையும் தாண்டி, 1 பேதுருவின் உயரிய கிரேக்க நடைக்கு காரணம் சில்வானுவே என்று வாதிக்கும் Karen H. Jobes இவ்வாறான ஆய்வை செய்துவிட்டு பின்வருமாறு புலம்புவதை காண முடிகிறது. அந்த புலம்பலில் அவர் கண்டறிந்த ஒரு உண்மையையும் கூறுகிறார். இதோ…. 
Being based on an analysis of syntax, the study presented is not sufficient for determining who the author of 1 Peter was, or for concluding that the same author wrote both 1 Peter and 1 Thessalonians, because syntax is shared by all speakers and writers of a given language. The interference in Greek as a second language caused by Semitic syntax could be expected to be similar for all Semitic speakers whose second language was Greek and who had attained equivalent proficiency in the language. It does demonstrate that it is unlikely that the author of 1 Peter was a native speaker of Greek.  (The Syntax of 1 Peter: Just How Good Is the Greek? by Karen H. Jobes Westmont College,  Bulletin for Biblical Research 13.2 (2003) 159- 173)

        Karen H. Jobes 1 பேதுருவை இயற்றியவர் கிரேக்கத்தை தாய்மொழியாக கொண்டவர் அல்ல என்ற உண்மைதான் அது. ஆனால் சில்வானு கிரேக்கத்தை தாய்மொழியாக கொண்ட ரோம யூதர் என்று Acts 16:29-37 கூறுகிறது.   மேலும் இப்படி பாலஸ்தீனம் அல்லாத பகுதியில் வாழ்ந்த யூத மக்கள் குறித்து THE JEWISH ENCYCLOPEDIA பாகம் 6 Hellenism என்ற தலைப்பின் கீழ் முதலாம் நூற்றாண்டின் பைலோவின் கருத்தை பின்வருமாறு கூறுகிறது: The Jews called themselves Palestinians in religion, but Hellenes in language (Philo, "De Congressu  Quserendse Erud." § 8),  அதாவது கி.பி.முதலாம் நூற்றாண்டில் பாலஸ்தீனம் அல்லாத பகுதிகளில் வாழ்ந்த யூதர்கள் தங்களது தாய்மொழியாக கிரேக்கத்தை ஏற்றிருந்தனர் என்கிறார் பைலோ என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் Karen H. Jobes 1 பேதுருவை இயற்றியர் கிரேக்கத்தை தாய்மொழியாக கொண்டவர் அல்ல என்கிறார். சில்வானு போன்றே பவுலும் கிரேக்கமயமான ரோம யூதர்தான்.  அவரது எழுத்துக்களுடன் 1 பேதுரு பொருந்த வில்லை. அதாவது ரோம யூதரான பவுலின் எழுத்தியல் நடையுடனும்  1 பேதுரு பொருந்த வில்லை.

    Katarina Laken  அவரது ஆய்வில் கிரேக்கமயமான யூதரான பவுலின் கடிதத்தொகுப்பு தனித்து நிற்பது,  Karen H. Jobesன் கருத்துடன் ஒத்தமைந்து இருப்பதை பார்க்க முடிகிறது. வாக்கிய அமைப்பிலும் வார்த்தை பயன்பாட்டிலும் தனித்து நிற்கிறது. இது தெளிவாக 1பேதுருவை இயற்றியது சில்வானு என்ற ரோம யூதர் அல்ல என்பதை காட்டுகிறது. 

 தீராத மொழி பிரச்சனையை தீர்த்த சில்வானு

1 பேதுருவின் மொழியியல் எந்த கிரேக்கத்தை தாய்மொழியாக கொண்ட யூத எழுத்துக்களுடனும் பொருந்தவில்லை. அவரை இணை எழுத்தராக கருதப்படும் 1ம் தெசலோனிக்கேயர்ருடனும் பொருந்தவில்லை. இப்படி தீராத மொழி சிக்கல் இன்று தோன்றியது அல்ல மாறாக இந்த நிருபத்தின் கிரேக்கத்தை அடிப்படையாக கொண்டு கி.பி. 5ம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது என்பதை பின்வரும் ஜெரோமின் எழுத்துக்களால் அறிய முடிகிறது:

Also we see that the two epistles attributed to Saint Peter have different styles and turn phrases differently, by which it is discerned that it was sometimes necessary for him to use different interpreters . ( Question 11, Jerome, Letter 120: To Hedibia)

    இந்த தீராத சிக்கலை தீர்க்க கண்டுபிடித்து திணிக்கப்பட்ட யூகம்தான் 1 பேதுருவின் 5:12 கூறப்படும் சில்வானுதான் இதன் எழுத்தர் என்ற கப்ஸா. இந்த யூகம் கிறித்தவ வரலாற்றில் நாம் தேடிய வரை, 18ம் நூற்றாண்டில் ஜான் கில் தனது விளக்கவுரையில் முதன் முதலில் முன்வைத்தார். அதன் பிறகு வந்த F.C.Baur போன்றவர்களின் 1பேதுருவின் மொழியியல் மீதான கடும் விமர்சனம் இந்த யூகத்தை பிடித்து கிறித்தவ உலகத்தை தொங்க வைத்தது. பேபியஸ் போன்றவர்கள் பேதுருவின் எழுத்தர் குறித்து எல்லாம் பட்டியலிட்டவர்கள், சபைத்தலைவராக இருந்த சில்வானுவின் எழுத்தாற்றல் குறித்தும் அவர் பேதுருவிற்கு ஆற்றிய எழுத்துச்சேவை குறித்தும் வாய்த்திறக்காததே இது வெறும் யூகம் என்பதற்கு போதிய சான்று.  நாம் முதலில் கூறிய C.E.B. Cranfield-ந் கருத்தில் இருந்து நமது புரிதல், சில்வானு பேதுருவின் எழுத்தர் என்பதை நிருவ முடியாவிட்டால், பேதுருதான் 1பேதுருவின் கர்த்தா என்பது வெறும் கற்பனையே……அல்லாஹு அஃலம்.


No comments:

Post a Comment