பக்கங்கள் செல்ல

Friday, April 10, 2015

எதிர் தொடர் 5 , 6: மனைவியின் மீது சந்தேகமும் instant வேதவெளிப்பாடு –எதிர் தொடர்



      இந்த தொடரில் நபி(சல்) அவர்கள் தனது மனைவியாகிய ஆயிஷா(ரலி) மீது அவதூறு பரப்பட்ட சம்பவமும் அதை தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு நபி(சல்) அவர்கள் தனது மனைவியின் மீது சந்தேக, கொண்டதாகவும் நமது கட்டுரை(கதை) ஆசிரியர் குற்றம் சுமத்துகிறார். அவரது குற்றச்சாட்டு குறித்தும் அதற்கான பதிலையும் காண்போம். இந்த கட்டுரையே அடுத்த தொடரான இன்ஸ்டன்ட் வேதவெளிப்பாடு என்ற தொடருக்கும் பதிலாக அமையும் என்று எண்ணுகிறேன்.[ refer:Source]


குற்றச்சாட்டு 1: நபி(சல்) அவர்கள் தனது மனைவியின் மீது சந்தேகம் கொண்டார்களா?
 

நமது பதில்:

     முதலில் இந்த கட்டுரை ஆசிரியர் இந்த அவதூறு சம்பவத்தின் நோக்கத்தை விளங்க வில்லை என்பதைதான் இவரது இந்த கட்டுரை காட்டுகிறது. நயவஞ்சகர்கள் ஆயிஷா(ரலி) மீது அவதூறு பரப்ப வேண்டும் என்பது கணவன் மனைவியின் மத்தியில் பிரிவை ஏற்படுத்தும் சில்லறை காரணத்திற்கு அல்ல. இஸ்லாமியர்களுடன் அனைத்து தளங்களிலும் தோல்வியுற்ற பிறகு அவர்கள் இஸ்லாமிய ஒழுக்க விழுமிய தளங்களில் நட்த்திய தாக்குதல்தான் இது. மக்களின் மனதை இஸ்லாம் வெற்றி கொண்டிருக்கும் போது நயவஞ்சகர்களின் துணையோடு இஸ்லாமிய எதிரிகளால் அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சி. இதை ஒரு இறைத்தூதராக, ஒரு நாட்டின் தலைவனாக, ஒரு கணவனாக எப்படி நபி(சல்) அவர்கள் எதிர் கொள்ளப்போகிறார்கள் என்பதைதான் இஸ்லாமிய எதிரிகள் எதிர் நோக்கியது. சரி அவர் பதிந்த அந்த நீண்ட அறிவிப்பை இங்கு முழுமையாக பதிவோம்.


ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின்போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். நபி(ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்டபோது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள்.

நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்தபோது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்தபோது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. எனவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்திவிட்டது. எனவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கிற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கு சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். எனவே, சிவிகையைத் தூக்கியபோது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பிவிட்டு நடக்கலானார்கள். படையினர் சென்ற பிறகு நான் (தொலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர், நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன். ஸஃப்வான் இப்னு முஅத்தல் அல் ஸுலமீ என்பவர் படையினர் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார். அவர் (காலையில் விழித்தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்துவிட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (எனவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், 'இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்" என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஒட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப் பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி ஸலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் நோயுற்று விடும்போது நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டுகிற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும்போது அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, 'அவள் எப்படி இருக்கிறாள்?' என்று கேட்பார்கள்; (பிறகு போய் விடுவார்கள்.) அவ்வளவு தான். (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த அவதூறில்) ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது. இறுதியில், நான் (நோயிலிருந்து குணமடைந்து விட, நானும் உம்மு மிஸ்தஹ்(ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த 'மனாஸிஉ' என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் வனாந்திரங்களில் வசித்து வந்த முற்கால அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. நானும் அபூ ருஹ்மின் மகளாகிய உம்மு மிஸ்தஹும் நடந்து முன்னால் சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹை அவர் அணிந்திருந்த கம்பளி அங்கி இடறியது. அப்போது அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்" என்று கூறினார். நான், 'மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டாய். பத்ருப் போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா நீ ஏசுகிறாய்" என்று கூறினேன். அதற்கு அவர், 'அம்மா! அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்கள் கேள்விப்படவில்iயா?' என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, 'அவள் எப்படி இருக்கிறாள்?' என்று கேட்டார்கள். நான் 'என் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்" 'என்று கேட்டேன். அப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதூ என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கவே நான் என் தாய் தந்தையரிடம் சென்றேன். என் தாயாரிடம், 'மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். என் தாயார், 'என் அன்பு மகளே! உன் மீது இந்த விஷயத்பை; பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகுமிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்" என்று கூறினார்கள். நான், 'சுப்ஹானல்லாஹ் (இறைவன் தூய்மையானவன்!) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிது மின்றியும் காலை வரை கழித்தேன். காலை நேரம் வந்தது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களையும், உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது 'வஹீ' (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா(ரலி) அவர்களோ தம் உள்ளத்தில் நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! தங்கள் துணைவியரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்" என்று அவர்கள் கூறினார்கள். அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அவர்களோ (நபி(ஸல்) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல் கூறும் நோக்குடன்), 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்" என்று கூறினார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, 'பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு பரீரா(ரலி), 'தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை" என்று பதில் கூறினார். உடனே, அன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் (நான் வீட்டிலிருக்கும் போதே தவிர) வந்ததில்லை" என்று கூறினார்கள். உடனே, ஸஅத் இப்னு முஆத்(ரலி) எழுந்து வின்று, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனுடைய கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம்" என்று கூறினார்கள். உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த ஸஅத் இப்னு உபாதா(ரலி) எழுந்து நின்று, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது" என்று கூறினார். அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குலமாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டிவிட்டது. உடனே, உசைத் இப்னு ஹுளைர்(ரலி) எழுந்து நின்று, உபாதா(ரலி) அவர்களை நோக்கி, 'நீர் தாம் பொய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால்தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகிறீர்" என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரண்டு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மெளனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மெளனமானார்கள். அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன்; சிறிதும் உறங்கவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும்போது என் தாய்தந்தையார் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்தாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. மேலும், ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்கள், 'லாஇலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை)" என்று கூறிவிட்டு, 'ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்" என்றார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம், 'அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள்" என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, 'அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், 'இறைத்தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்" என்று சொன்னேன். அதற்கு என் தாயார், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். நானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிகமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன். எனவே, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள், மக்கள் என்னைப் பற்றிப் பேசியவற்றைக் கேட்டிருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனதில் பதிந்து போய், அதை உண்மையொன்று நம்பி விட்டீர்கள் என்பதையும் அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நானே தங்களிடம் சொன்னால்... நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்... நீங்கள் அதை நம்பப் போவதில்லை; நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையொன்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப்(அலை) அவர்களின் தந்தையை (யஃகூப்(அலை) அவர்களை)யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): (இதை) சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புத் கோர வேண்டும். (குர்ஆன் 12:83) பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். ஆயினும், திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகிற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்துவமுடையவளல்ல மிகச் சாதாரணமானவள் தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே -வேத வெளிப்பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளுவான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள்" என்றே எதிர்பார்த்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டிலிருந்து எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்துவிட்டான். உடனே, (வேத வெளிப்பாடு வருகிற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக, 'ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்" என்று கூறினார்கள். என் தாயார், 'அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்" என்று கூறினார்கள். நான், 'மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்" என்றேன். அப்போது அல்லாஹ், '(ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான்" என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11) வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளியபோது (என் தந்தை) அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக செலவிட மாட்டேன்" என்று கூறினார்கள். மிஸ்தஹ் இப்னு உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர்(ரலி) செலவிட்டு வந்தார்கள்... உடனே அல்லாஹ், 'உங்களிடையேயுள்ள (பொருள்) அருளப் பெற்றோரும் (பிறருக்கு உதவும்) இயல்புடையோரும், (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை மன்னித்துப் (பிழைகளைப்) பொருட்படுத்தாமல்விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிபளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கிறான்" என்னும் (திருக்குர்ஆன் 24:22) இறைவசனத்தை அருளினான். அதன் பிறகு அபூ பக்ர்(ரலி), 'ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று கூறிவிட்டு, மிஸ்தஹ்(ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடரலானார்கள்.

(திருக்குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள்; 'ஸைனபே! நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக்கிறாய்? (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) பாதுகாத்துக் கொள்வேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்" என்று பதிலளித்தார்கள். ஸைனப்(ரலி) தாம் எனக்கு (அழகிலும் நபி(ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை இறையச்சமுடைய, பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான்.

இந்த அறிவிப்பு இன்னும் பலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.     
                                                             நூல்: புஹாரி 2661
      என்னதான் தனது மனைவியின் மீது நம்பிக்கை கொண்டிருந்தாலும் ஒரு சமுகத்தின் ஆன்மீக தலைவனாக உன்மையை மக்களுக்கு நிறுவித்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் நயவஞ்சகர்கள் “ நபி(சல்) அவர்கள் தனது மனைவி என்ற காரணத்தால் இந்த விஷயத்தை கண்டும்காணாமல் இருந்து விட்டார்கள். சமூகத்தில் தலைவர்களும், தலைவர்களின் குடும்பத்தினரும் தவறு செய்யும் போது இப்படிதான் நடக்கும்” என்று விமர்சிக்க தொடங்குவர். இதை எதிர்பார்த்துதான் நயவஞ்சகர்கள் அவதூறு பரப்பியது. ஆனால் அவர்களின் எண்ணம் பலிக்கவில்லை.

      //உடனே, அன்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் (நான் வீட்டிலிருக்கும் போதே தவிர) வந்ததில்லை" என்று கூறினார்கள்// என்ற நபி(சல்) அவர்களது கூற்று ஒரு ஆன்மீக தலைவர் தனது சமுக மக்களிடம் தனது மனைவியின் உண்மைதன்மையை விளக்குவதாகத்தான் உள்ளது. சரி ஆயிஷா(ரலி) அவர்களை உறுதியான ஆதாரம் இன்றி குற்றமுள்ளவர் என்று விளகினாலும் அது சமுக ரீதியாக ஆயிஷா(ரலி) அவர்களை பெரிதும் பாதிக்கும். மேலும் நபி(சல்) அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் “தன்னுடைய விஷயம் என்பதால் தான் இது எந்த விசாரனையும் இன்றி துரிதமாக முடிக்கப்பட்டுவிட்டது” என்று நயவஞ்சகர்கள் பரப்ப முடியும்.  ஆக அந்த நேரத்தில் அவர்களின் காலதாமதமும் பொறுமையும் மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தியதோடு அல்லாமல் அவதூரு பேசுவதின் பாதகத்தையும் , அதை கண்டித்தும் இறைவசனங்கள் மக்களுக்காக இறங்கியது. மேலும் நபி(ஸல்) அவர்களின் திருமணம் அனைத்தும் இறைவனின் கட்டளை படியே நடைப்பெற்றது என்பதால் தான் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்காக காத்திருந்தார்கள்.  
       மேலும் இந்த நிகழ்வில் பாதிப்பை நேரிடையாக எதிர் கொண்ட ஆயிஷா(ரலி) கூட நபி(சல்) அவர்கள் ஆயிஷா(ரலி)க்கு அறிவுரை கூறும்போது இறைதூதராகத்தான் பார்த்தார்கள் கணவனாக அல்ல என்பதை ஆயிஷா(ரலி)ன் பின்வரும் கூற்றில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

    //இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் பேச்சை முடித்தபோது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம், 'அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள்" என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, 'அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், 'இறைத்தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்" என்று சொன்னேன். அதற்கு என் தாயார், 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள்//

      இந்த காத்திருப்பினால் நயவஞ்சகர்களை மக்கள் தெளிவாக அறிந்து கொள்ளும் நிலையும் அவர்களை அவர்களது இனத்தாரே ஒதுக்கும் நிலையும் ஏற்பட்டது.

      இப்னு இஸ்ஹாக்(ரஹ்) கூறுகிறார்கள்: இச்சம்பவதிற்கு பிறகு இப்னு உபை ஏதாவது பேசினால் அவனது கூட்டத்தினரேஅவனைக் கண்டித்து அடக்கி விடுவார்கள். இதை பார்த்த நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களிடம் “உமரே நீர் என்ன கருதுகிறீர்? நீர் என்னிடம் அவனை கொலை செய்ய வேண்டும் என்று கூறிய அன்றே நான் இவனை கொலை செய்து இருந்தால் அவனது கூட்ட்தினர் என் மீது மிகுந்த கோபம் அடைந்திருப்பார்கள். ஆனால், இன்று அவனது கூட்டதினரிடம் அவனைக் கொலை செய்து விடுங்கள் என்று நான் கூறினால் அவர்கள் அவனை கொலை செய்துவிடுவார்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களின் இவ்வார்த்தையை கேட்ட உமர்(ரலி) அவ்ர்கள “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதருடைய செயல் எனது செயலை விட நேர்த்திமிக்கது என்பதை இப்போது நான் உறுதியாக தெரிந்து கொண்டேன்” என்றார்கள்

                                                    நூல்: இப்னு ஹிஷாம்

அறிவிப்பாளர் தொடர்:

      ரபியா பின் உமய்யா(ரலி) --> அசிம் பின் உமர் பின் கத்தாதா --> இப்னு இஸ்ஹாக்


எளிமையாக சொல்வதென்றால் நபி(ஸல்) அவர்கள்
  • ஆன்மீக தலைவராக அது குறித்து விசாரித்து உண்மையை நிறுவுகிறார்கள் 
  • கணவராக அதை எண்ணி வருந்துகிறார்கள்
  • அல்லாஹ்வின் தூதராக தன் மனைவிக்கு நன்மையை ஏவுகிறார்கள்

    மேலும் இந்த அவதூறு சம்பவமும் அதற்கு அல்லாஹ்வின் வேதவெளிப்பாட்டிற்கான காலமும் இன்னும் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திகிறது நபி(சல்) அவர்கள் எவ்வளவு இக்கட்டான சூழலிலும் சுயமாக அல்லாஹ்வின் பெயரில் எதையும் இட்டுகட்டவில்லை என்பதும் நபி(சல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டி தந்தவற்றைத்தவிர மறைவானற்றின் அறிவு இல்லை என்பதை மேற்கூறிய நிகழ்வு உணர்த்துவதாய் உள்ளது.

குற்றச்சாட்டு 2: கதை ஆசிரியரின் சந்தேகமும் தெளிவும்
 இவைகளுக்கு சுருக்கமான பதில்கள்
 
 நமது பதில்:

*ஆயிஷா(ரலி) அவர்கள் யாரிடமும் தெரிவிக்கவில்லை. ஆகவே மற்றவர்கள் அறிவார்கள் என்பது இந்த கட்டுரை ஆசிரியரின் கற்பனை தவிர வெறு என்ன.

* கவனக்குரைவு என்பது அனைவரின் வாழ்க்கையிலும் சஹஜமானதுதான். மேலும் நபி(ஸல்) அவர்கள் ஒன்றும் தன்னுடைய ஒட்டகத்திலோ தனது சிவிகையிலோ ஆயிஷா(ரலி) அவர்களை ஏற்றி வரவில்லை. மேலும் இருட்டான நேரத்திலே நாங்கள் இயர்கை தேவையை நிறைவேற்ற செல்வோம் என்பது இந்த ஹதிஸில் உள்ளது. ஆக படை வீர்ர்கள் எண்ணியதை போலவே அவர்களும் எண்ணி இருப்பார்கள் என்பதுதான் சரி. மேலும் இந்த கட்டுரை ஆசிரியர் ஒரு அரைவேக்காடுதான் என்பதை நிறுவ அடுத்த சான்று. நபியவர்கள் ஜுவைரியா(ரலி) மீது கொண்ட ஏக்கம் தான் காரணம் என்று கூறியுள்ளார். அது முற்றிலும் தவறு. இந்த சம்பவம் நடக்கும் போது ஜுவரியா(ரலி) அவர்கள் ஸாபித் பின் கைஸ்(ரலி) அவர்களின் போர்செல்வத்தில் பெற்ற அடிமையாகத்தான் இருந்தார்கள். இதோ பின் வரும் ஹதிஸ்களை கவனியுங்கள்.

            ஜுவைரியா(ரலி) அவர்கள் கைதியாகப் பிடிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்த அவரின் தந்தை மதினாவிற்கு  ஒட்டகங்களை ஈட்டுதொகையாக எடுத்துகொண்டு ஜுவைரியா(ரலி) அவர்களை மீட்க புறப்பட்டார்கள். அவரகள் அல் அகியா எனும் இடத்தை அடைந்தபோது தனது ஒட்டகங்களை கண்டு அவற்றில் சிறந்த இரண்டு ஒட்டகங்களை அல் அகியாவின் கண்வாய் ஒன்றில்  மறைத்து வைத்தார்கள். மீதம் இருந்த ஒட்டகங்களை இழுத்துக்கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து கூறினார்கள் : நான் மதிப்பு மிக்கவன். என் மகளை சிறைபிடித்து வைப்பது சரியல்ல. எனவே மகளை விட்டு விடுங்கள்” என்றார்கள். “ நாங்கள் அவர் விருப்பம் போல் நடந்து கொள்ளலாமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். “ ஆம் அப்படி நடந்து கொண்டால் அது உங்கள் கடமையை நீங்கள் நிறைவேற்றியவராவீர்கள்” என்றார். பின்னர் தம் மகளிடம் சென்று “ இம்மனிதர் உனக்கு விரும்பியதை செய்ய அனுமதி வழங்கியுள்ளார். எனவே நீ எங்களை கேவலப்படுதிவிடாதே!” என்றார். அதற்கு ஜுவைரியா(ரலி), “நான் நபி(ஸல்) அவர்களையே தேர்வு செய்து கொள்கிறேன்” என்றார்கள். அதற்கு அவரின் தந்தை “ அல்லாஹ்வின் மீது ஆணையாக நீர் எம்மை கேவலப்படுத்தி விட்டீர்” என்றார்.
                           நூல்: தபக்கத் இப்னு சஃத் பாகம் 8, பக்கம் 118, அல் இஷாபாஹ்(566/7) )

     ஜுவைரியா(ரலி) அவர்கள் சாபித்(ரலி) அவர்களின் போர்கைதியாக இருந்தார்கள் மதினாவில் அவர்க்ளது தந்தை வந்து சந்திக்கும் வரை என்பது மேலே உள்ள ஹதிஸ் தெளிவாக கூறுகிறது

ஜுவைரியா(ரலி) அவர்களின் தேர்விற்கான காரணமும் ஜுவைரியா யாரின் போர் செல்வம்:

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:
ஜுவைரியா பின்த் அல் ஹாரித் பின் அல் முஷ்தலாக் அவர்கள் சாபித் பின் கைஸ்(ரலி) அவர்களின் போர்செல்வமாக பங்கிடப்பட்டார்கள். அவர்கள் சாபித் பின் கைஸ்(ரலி) அவ்ர்களுடன் தனது விடுதலைக்காக ஒப்பந்தம் செய்து
கொண்டார்கள். அவர் மிகவும் அழகானவராகவும், ஈர்க்க்க்கூடியவராகவும் இருந்தார்.அவர் நபி(ஸல்) அவர்களிடம் தன்னுடைய ஒப்பந்தம் குறித்து பேசுவதற்காக எங்களது வீட்டு வாசலில் நின்றபோது அதை நான் விரும்ப வில்லை. ஏனென்றால் நான் கண்டதை நபி(ஸல்) அவர்களும் காண்பார்கள் என்று எண்ணினேன். அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதரே,  நான் ஜுவைரியா பின்த் அல் ஹாரித் ஆவேன். எனக்கு ஏற்ப்பட்ட்தை நீங்கள் அறியாமல் இல்லை. நான் சாபித் பின் கைஸ்(ரலி) அவர்களின் போர்செல்வமாக பங்கிடப்பட்டேன். நான் எனது விடுதலைக்காக சாபித் பின் கைஸ்(ரலி) ஒப்பந்தம் செய்து கொண்டேன். நான் எனது விடுதலை குறித்து உங்களிடம் பேசவே வந்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “ உனக்கு இதை விட சிறந்த்தை கூறட்டுமா?” என்று கேட்டார்கள். ‘அது என்ன?’ என்று ஜுவைரியா(ரலி) அவர்கள் கேட்டார்கள். “உன்னை திருமனம் புரிந்து (ஸாபித்துக்கு) நீர் தர வேண்டியதையும் கொடுக்கிறேன்” என்றார்கள். ஜுவைரியா(ரலி) சரி என்றார்கள். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் ஜுவைரியா(ரலி) அவர்களை மணந்து விட்டார்கள் என்பதை அறிந்தவர்கள் தங்களிடம் உள்ள(பனு முஸ்தலிக்) அடிமைகள் அனைவரையும் ‘ நாங்கள் நபியவர்கள் சம்மந்தம் செய்து கொண்ட `ஒரு கூட்ட்தினரை எப்படி அடிமைகளாக வைத்து கொள்வது’ என்று கூறியவர்களாக விடுதலை செய்தனர். தம் கூட்ட்தார்க்கு பெரும் பேருபகாரம் செய்த பெண்ணாக ஜுவைரியாவைத் தவிர வேறு எவரையும் நான் கண்டதில்லை. அவர்களால் பனு முஸ்தலிக்கின் நூறு குடும்பத்தினர் விடுதலை பெற்றனர்”
                        நூல்: அபுதாவூத், பாடம்: அடிமைகளை விடுதலை செய்தல்(3931)
                                    இப்னு ஹிப்பான் 4055, அல் முன்தகா இப்னுல் ஜாருத்705
            ஆக ஜுவைரியா(ரலி) அவர்கள் மதீனா வந்த பிறகே நபி(ஸல்) அவர்களை தனது விடுதலை குறித்து அனுகினார்கள் என்பதும் அவரது தந்தை மதீனாவிற்கு தனது மகளை விடுதலை செய்யும் நோக்கத்திற்காக வந்ததில் இருந்தும் மதீனா வந்த பிறகே நபி(ஸல்) அவர்கள் ஜுவைரியா(ரலி) குறித்த திருமன முடிவு செய்தார்கள் என்பது தெளிவாக புரிய முடிகிறது. மேலும் போர் கைதிகள் 600 பேர் பிடிக்க பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் நடந்ததாக இந்த கட்டுரையின் ஆசிரியர் கூறுகிறார். ஆனால் மேலே உள்ள அறிவிப்பில் நபி(ஸல்), ஜுவைரியா(ரலி) அவர்களது திருமணம்  உறுதி செய்யப்பட்ட உடனே திருமணம் நடந்ததாகவும் அதன் விளைவாக 100 குடும்பத்தினர் விடுதலை அடைந்ததாகவும் உள்ளது. பிறகு எப்படி 600 அடிமைகள் மதினா வரை அழைத்துவரப்பட்டனர். அபூ தாவுத்தில் இடம் பெறும் ஹதிஸை ஆயிஷா(ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள் என்பது குறிபிடதக்கது. மேலும் இதனால் தான் பல அறிஞர்கள பனுமுஸ்தலிக் போருக்கும் இந்த திருமணத்திற்கும் இடைப்பட்ட காலம் 1 வருடம் என்று கணிக்கின்றனர்.  இந்த கட்டுரை ஆசிரியர் உண்மையில் அறிவாளியாக இருந்தால் ஒரு காரியம் செய்திருப்பார். பனு முஸ்தலிக் மற்றும் ஜுவைரியா(ரலி) அவர்களின் திருமன காலத்தையும் ஒத்து பாத்திருப்பார். எதோ ஒரு மிசனரிக்கு சேவை செய்பவரின் கட்டுரையை கப்பிதனமாக copy paste செய்தால் இப்படி தான் நடக்கும்.

*ஆயிஷா(ரலி) பெரிதாக ஒன்னும் காலம் தாழ்த்தி விடவில்லை. மொத்த படை பட்டாளமும் இரவில் கிளம்பி நண்பகலில் அடைந்த தொலைவை ஆயிஷா(ரலி) அவர்கள் காலையில் கிளம்பி அடைந்து கொண்டார்கள். போர் நேரத்தில் இரவில் பயணம் செய்வது ஆபத்து என்பது நான் சொல்லி விளங்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். தான் பதிவிட்ட ஹதிஸையே சரியாக படிக்க முடியாத ஒருவர் நீண்ட ஹதிஸ் என்று பதிவிட்டுவிட்டு படிப்பவர்கள் அனைவரும் கீழே படிக்க படிக்க மேலே மறந்து விடுவார்கள் என்ற எண்ணம் போலும்.

*மாத விலக்கை அடிப்படையாக கொண்டு எந்த திருமணமான பெண்ணையும் பத்தினி என்று நிறுவ முடியாது என்பது ஏனோ கட்டுரை ஆசிரியருக்கு தெரியவில்லை.

எதிர்தொடர் 6:
      மேற்கூறிய சம்பவம் போன்று ஒவ்வொரு சம்பவதிற்கும் காரணத்துடன் வேதவெளிப்பாடு ஏற்பட்டது. உடனே வேதவெளிபாடு வந்தால் அதை instant வெளிபாடு என்று நையாண்டி பேசும், தனக்கு தானே முரண்படும் கட்டுரையாளர் அனேகமாக மன நோயினால் பாதிக்கப்பட்டவராக இருப்பாரோ?????
 

No comments:

Post a Comment