பக்கங்கள் செல்ல

Thursday, April 16, 2015

இஸ்லாமும், வாஸ்து சாஸ்திரமும்! - அர்த்தமுள்ள கேள்விகள் - 06

இஸ்லாமும், வாஸ்து சாஸ்திரமும்!

இஸ்லாமும்வாஸ்து சாஸ்திரமும்!

கேள்வி இஸ்லாமிய மார்க்கச் சகோதரர்களில் சிலர் வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில்வீடுகடைகள் அமைக்கின்றார்களேஇஸ்லாம் எப்படி அறிவுப்பூர்வமான மார்க்கம் எனக்கூற முடியும் என்று சிலர் கேட்கிறார்கள்விளக்கம் தரவும்.
முஷேக்மைதீன்தென்காசி.
பதில் : முஸ்லிம்களில் அறிவீனர்கள் செய்யும் செயலை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தக் கூடாதுஇஸ்லாம் ஆதரிக்கிறதா என்பதைத் தான் கவனிக்க வேண்டும்.கடவுளை நம்புவோர் மனிதனை விட கடவுளுக்கு அறிவு அதிகம் என்பதை நம்பவேண்டும்
.நீங்கள் ஒரு கொலை செய்து விடுகிறீர்கள்அதற்காக உங்களுக்குத் தூக்குத்தண்டனையோஆயுள் தண்டனையோ விதிக்கப்படுகிறது.
உடனே நீங்கள் உங்கள் வீட்டின் அமைப்பை மாற்றி அமைக்கிறீர்கள்மாற்றிஅமைக்கப்பட்ட வீட்டைப் பார்த்து விட்டு இவர் வீட்டை மாற்றி அமைத்துள்ளதால்இவரது தண்டனையை ரத்துச் செய்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பளித்தால் அவருக்கு மறைகழன்று விட்டது எனக் கூறுவோம்உலகமே கை கொட்டிச் சிரிக்கும்.
வாஸ்து சஸ்திரத்தை நம்புபவர்கள் இறைவனை இத்தகைய நிலையில் தான்நிறுத்துகின்றனர்.
ஒவ்வொரு மனிதனைப் பொருத்தே அவனுக்கு ஏற்படும் நன்மை - தீமைகளை ஏகஇறைவன் நிர்ணயம் செய்கிறான்இந்த ஆளுக்கு இது தான் என இறைவன் தீர்மானம்செய்து விட்ட பிறகு வீட்டை மாற்றுவதால்வீட்டின் அமைப்பை மாற்றுவதால்,அணிந்திருக்கும் ஆடையை மாற்றுவதால் இவர் வேறு ஆள்என்று இறைவன் நினைத்துஏமாந்து போவான் என்று நம்புகிறார்களா?
இறைவனைப் பற்றிய இவர்கள் நம்பிக்கை இது தான் என்றால் இதை விடநாத்திகர்களாக அவர்கள் இருந்து விட்டுப் போகலாம்.
'ஐயாஎன் பெயரை மாற்றிக் கொண்டதால்அதிஷ்டக்கல் மோதிரம் அணிந்துள்ளதால்என்னைத் தண்டிக்காதீர்கள்!' என்று நீதிபதியிடம் ஒரு குற்றவாளி முறையிட்டால்தப்பித்து விட முடியாது எனும் போது நுண்ணறிவாளனான இறைவனிடம் எப்படி இதுபோன்ற கிறுக்குத் தனங்களால் தப்பிக்க இயலும்?
நமக்கென விதிக்கப்பட்ட நன்மைகளும் இப்படித் தான்.
உங்கள் வீட்டுக்கு இரண்டு ஜன்னல்கள் இருக்கும் போது உங்களுக்கு ஒருவர் ஒரு லட்சம்ரூபாய் கொடுத்தனுப்புகிறார்அன்றைய தினம் தான் ஒரு ஜன்னலை வாஸ்துப் படிஅடைக்கிறீர்கள்உங்களுக்கென அனுப்பட்ட தொகையை அவர் உங்களிடம் தராமல்திரும்பி விடுவாராபணம் ஆளுக்குத் தானே தவிர ஜன்னலுக்கு அல்ல.
சாதாரண மனிதனே இவ்வளவு தெளிவாக விளங்கும் போதுஇறைவனுக்கு இதுவிளங்காதுஏமாந்து விடுவான் என எண்ணுவது என்னே பேதமை!
நமது தமிழகத்தைப் பொருத்த வரை 95 சதவிகிதம் கட்டிடங்கள் எல்லாவிதமானசாஸ்திரங்களும் பார்க்கப்பட்ட பிறகே கட்டப்படுகின்றனவாஸ்து சாஸ்திரம் உண்மைஎன்றால் 95 சதவிகிதம் பேர் எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும்.ஆனால் பத்து சதவிகிதம் பேர் கூட நிம்மதியாக இல்லை.
வாஸ்து சாஸ்திரம் பித்தலாட்டம் என்பதற்கு இது ஒன்றே நிதர்சனமான சான்றாகஉள்ளது.
வாஸ்து நிபுணர் என்ற ஃபிராடு பேர்வழிகள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான்ஒருகட்டடம் இப்படி இருந்தால் இன்ன விளைவு ஏற்படும் என்பதை இவர்களுக்கு யார்சொல்லிக் கொடுத்தார்கள்கடவுளே இவர்களிடம் இதைக் கூறினாராநிச்சயமாகஇல்லைஎவனோ ஒருவன் உளறி வைத்ததைப் பிழைப்புக்கு உதவுவதால் பற்றிப்பிடித்துக் கொண்டார்கள்.


இஸ்லாத்தை நம்பும் ஒருவன் எந்த நிமிடம் இத்தகைய கிறுக்குத் தனங்களைநம்புகிறானோ அந்த நிமிடமே இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவான்உலகில் தான்முஸ்லிம்கள் கணக்கில் இவன் சேர்க்கப்படுவானே தவிர இறைவனிடத்தில் இறைவனைவிபரங்கெட்டவனாகக் கருதிய குற்றத்தைச் செய்தவனாவான்அறியாத முஸ்லிம்கள்இனியாவது திருந்திக் கொள்ள வேண்டும்.


பீஜே எழுதிய அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் எனும் நூலில் இருந்து

No comments:

Post a Comment