பக்கங்கள் செல்ல

Saturday, March 2, 2024

புதிய ஏற்பாட்டின் மொழி குழப்பமும் அது ஏற்படுத்தும் சிக்கலும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

புதிய ஏற்பாட்டின் மொழி குழப்பமும் அது ஏற்படுத்தும் சிக்கலும்

        நாம் சென்ற கட்டுரையில் இஸ்லாம் கூறும் இன்ஜீல் எத்தகைய நூல் என்பதையும், அது இன்றைய கிறித்தவம் காட்டும் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்கள் அல்ல என்பதனையும் ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவியிருந்தோம். சரி இன்று இவர்கள் வைத்திருக்கும் புதிய ஏற்பாடாவது இறைவேதத்தின் அளவுகோல்களை கொண்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. வேதத்திற்கான அளவுகோலை நாம் அல் குர்ஆனில் இருந்து எடுத்து காண்பித்தோம் என்றால், இஸ்லாமியர்களாகிய நாம் காழ்புணர்ச்சியினால் கூறுவதாக கூறப்பட வாய்ப்பு உண்டு. எனவே இவர்களது வேத்தில் இருந்தே அந்த அளவுகோலை இங்கு முன்வைப்போம்.

    வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜன முள்ளவைகளாயிருக்கிறது.(2 திமோத்தியூ 3:16-17)

    வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும். (லூக்கா 16:17)

இவர்களது வேதத்தின் அளவுகோலை இவர்களது புதிய ஏற்பாடு நிறைவு செய்கிறதா இனி வரும் தொடர்களில் காணவிருக்கிறோம் இன் ஷா அல்லாஹ். இவர்களது வேதம் எழுத்தினை தெளிவாக்குவதற்கு முன்பு அது எந்த மொழியின் எழுத்து என்பதை தெளிவு படுத்தியதா??? எப்படி தெளிவு படுத்தியுள்ளது??? என்பதை இக்கட்டுரையில் காணவுள்ளோம்.

    ✅புதிய ஏற்பாட்டின் மூல மொழியும் அதன் குழப்பமும்
    உறைகளின் வகைப்பாடு - ஓர் அறிமுகம்
    வாதம் 1: புதிய ஏற்பாட்டின் மொழி கிரேக்கமே!!!!
              ✔உதாரணங்களும் சுருக்கமான விளக்கமும்
    வாதம் 2: புதிய ஏற்பாட்டின் மொழி அரமேயமே!!!!
              1.இரட்டை அர்த்த வார்த்தைகள்- முரண்பட்ட கிரேக்க எழுத்துப்பிரதிகளும்
              2.கிரேக்க புதிய ஏற்பாட்டில் பல அரமேய வார்த்தைகள் ஒலிபெயர்ப்பு (transliterate) செய்து பயன்படுத்தப்பட்டிருப்பது
              3.இயேசுவின் பேச்சு வழக்கு மொழி புனிதமான ஹீப்ரூவின் மருவலான அரமேயமே.
              4.மூலமொழி கிரேக்கம் என்பதை மறுக்கும் சில வசனங்கள்
    புதிய ஏற்பாட்டின் மூல மொழி எது என்பதில் குழம்பி நிற்கும் கிறித்தவசபைகள்
    புதிய ஏற்பாட்டின் மொழி குறித்த குழப்பமும் காற்றில பரந்த வேத பாதுகாப்பும்          

 புதிய ஏற்பாட்டின் மூல மொழியும் அதன் குழப்பமும் 

       புதிய ஏற்பாடு அதன் அளவுகோலின் படி பாதுக்காக்கப்பட்டுள்ளதா என்பதற்கு அதன் மொழி எது என்று அறிவது மிக அவசியமாகும். எழுத்தின் ஒரு உருபு அவமாவதையே மிகப்பெரும் விஷயமாக நாம் மேற்குறிபிட்ட வசனம் காட்டுகிறது, ஆனால் எதார்த்தம் வேறாக உள்ளது. எந்த பெருமதத்தின் நூலிலும் இல்லாத மொழி சிக்கல் கிறித்தவர்களின் புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறது. உதாரணமாக அல் குர்ஆனை எடுத்துக்கொண்டால் அது அரபு மொழியில் இறக்கப்பட்டதாக அதுவே சான்று பகர்கிறது. (அல் குர்ஆன் 16:103, 41:3, 41:44). மறுபுறம் புதிய ஏற்பாட்டின் மூல மொழி எது என்பதில் பல ஆண்டு கால குழப்பம் கிறித்தவ உலகில் நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. புதிய ஏற்பாட்டின் மூலமொழி கிரேக்கம் என்று வாதிடுவோர் ஒரு சாராரும். புதிய ஏற்பாட்டின் மூல மொழி அரமேயம் என்று மற்றொரு சாராரும் எதிர் எதிராக பலதசாப்தங்களால வாதித்து வருகின்றனர். அவர்களின் வாதம் மற்றும் பிரதி வாதங்கள் குறித்த சிறு கண்ணோட்டத்தை இங்கு தருகிறோம், அதுவே புதிய ஏற்பாட்டின் அள்ளியும் புள்ளியும் அவமாகி, வேதம் சல்லி சல்லியாக ஆகிவிட்டதை படம்பிடித்து காட்டும். இங்கு புதிய ஏற்பாட்டின் மூலமொழி எது? என்று நிறுவுவது நமது நோக்கம் அன்று. மாறாக வேத மொழி குறித்து கிறித்தவ அறிஞர்களே எப்படி முரண்படுகின்றனர் என்பதை இங்கு விளக்குவதே நமது நோக்கம்.

        புதிய ஏற்பாட்டின் மூல மொழி எது என்று வாதிப்போரின் கருத்தினை ஆய்வு செய்வதற்கு முன்பு, புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பிற்கு பயன்படுத்தப்படும் அடிப்படை உறைகளின்  வகைப்பாடு குறித்து சிறிது அறிந்து கொள்வது அவசியமாகும். 

  உறைகளின்  வகைப்பாடு - ஓர் அறிமுகம்: 

Textus Receptus: "Textus Receptus" என்ற இலத்தீன் சொல்லின் பொருள் பெறப்பட்ட உறை என்பதாகும். இதுவே கி.பி.15ம் நூற்றாண்டிற்கு பிறகான புதிய ஏற்பாட்டின் வட்டார மொழிபெயர்ப்புகளுக்கு உரை அடிப்படையை வழங்கியது. இது 15-16ம் நூற்றாண்டில், உறை அடிப்படையில் துள்ளிய கிரேக்க புதிய ஏற்பாட்டினை உருவாக்கும் நோக்குடன் அச்சிடப்பட்ட உறையாகும். கிபி 15ம் நூற்றாண்டில் எராஸ்மஸ் எனும் டச்சு இறையியலாளர், 10ம் நூற்றாண்டிற்கு பின்னுள்ள கிரேக்க, இலத்தீன் கையெழுத்து பிரதிகளில் இருந்து தயாரித்ததாகும். எராஸ்மஸ் மேலும் இரு பதிப்புக்களை 1527 மற்றும் 1535 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்டார். இவருக்கும் பிறகு பல Textus Receptus-கள் வெளிவந்தன. கொலினெஸ் பதிப்பு 1534,ஸ்டீபன்ஸ் பதிப்பு 1546,1549,1550,1551, தியோடர் பீஸாவின் 1565 முதல் 1611 வரையிலான 10 பதிப்புக்கள், எல்ஸீவரின் 1624,1633, 1641 ஆகிய பதிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. இந்த Textus Receptus-தான் பின்னாள் வந்த 250 ஆண்டுக்களுக்கு, புதிய ஏற்பாட்டின் மொழியாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த கிரேக்க பதிப்பாக கோலோச்சியது. இந்த Textus Receptus-தான் KJV, NKJV பைபிள்களின் அடிப்படையாக அமைந்தது.

Majority Text: "Majority Text" என்பது பெரும்பான்மை உறை என்பதாகும். இதனை பைஸாந்திய உறை அல்லது திருச்சபையின் உறை என்றும் கூறுவார்கள். இது வேதத்தின் அசலான வாசிப்பு எது என்பதை எந்த மாறுபட்ட வாசிப்பு கையெழுத்து பிரதிகளில் அதிகமுறை இடம் பெறுகிறது என்ற அளவுகோலின் படி நிர்ணயிக்கும் முறையாகும். இந்த முறையை ஜனநாயக முறை என்றும் அழைப்பார்கள். இந்த முறைமை அடிப்படையாக கொண்டு டல்லாஸ் இறையியல் செமினரியின் இரு அறிஞர்களான ஜேன் ஹாட்ஜ்ஸ் மற்றும் ஆர்தர் ஃபர்ஸ்டட் 1982ல் The Greek New Testament According to the Majority Text என்ற புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பிற்கு பயன்படுத்தப்படும் அடிப்படை உறையை வெளியிட்டார்கள். இந்த அடிப்படை உறையை பயன்படுத்தி Berean Standard Bible பதிப்பிக்கப்பட்டது.

Critical Text: "Critical Text" என்பது புதிய ஏற்பாட்டின் கிரேக்க உரையாகும், இது பண்டைய கிரேக்க கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அவற்றின் மாறுபாடுகளின் தொகுப்பில் இருந்து முடிந்த அளவிற்கான மிகவும் துல்லியமான வார்த்தைகளைப் பெறுவதற்கான முயற்சியினால் உண்டான உரையாகும். Textus Receptus-ஐ பிழைகள் நிறைந்த ஒரு தரம் குறைந்த உரை என்று நிராகரித்து, வெஸ்ட்காட் மற்றும் ஹார்ட் ஆகிய அறிஞர்கள், இரண்டு 4ம் நூற்றாண்டு கையெழுத்துப் பிரதிகளான கோடெக்ஸ் வாடிகனஸ் மற்றும் கோடெக்ஸ் சினைட்டிகஸ் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி புதிய கிரேக்க உரையைத் தொகுத்தனர். வெஸ்ட்காட் மற்றும் ஹார்ட்டின் பணியின் விளைவாக, அவர்களின் விமர்சன உரையானது கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளாக நவீன விளக்கம் மற்றும் மொழிபெயர்ப்பிற்காக பயன்படுத்தப்படும் நிலையான கிரேக்க உரையாக மாறியது. Novum Testamentum Graece, UBS5 ஆகியவை தற்காலத்தில் பிரசித்திபெற்ற கிரேக்க Critical Edition-களாக விளங்குகிறது. New International Version, the New American Standard Bible, the English Standard Version, மற்றும் தற்காலத்தில் வெளிவரும் பல புதிய ஏற்பாட்டின் மொழியாக்கத்தின் அடிப்படை உறையாக இவை அமைந்துள்ளன.

வாதம் 1: புதிய ஏற்பாட்டின் மொழி கிரேக்கமே!!!!


    புதிய ஏற்பாட்டின் மூல மொழி கிரேக்கம் என்போர் பல தரப்பட்ட ஆதாரங்களை முன்வைத்தாலும், அவர்களது வாதங்களில் மிக முக்கியமான கோணமாக நாம் கருதுவது புதிய ஏற்பாட்டின் உள்ளடக்கத்தின் அடிப்படையாக கொண்ட வாதத்தைதான். அதாவது புதிய ஏற்பாட்டின் உள்ளடக்கமே அதன் மூல மொழி அரமேயம் அல்ல என்பதை காட்டுவதாய் உள்ளது. உதாரணமாக பின்வரும் வசனங்களை நாம் எடுத்துக்கொள்வோம்.
    அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.( மத்தேயூ 1:23) 
        ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.(மத்தேயூ 27:46)

    அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.(யோவான் 19:17)

     இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.(யோவான் 1:38)

    அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.(யோவான் 1:41)

    பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம்.(மாற்கு 5:41)

    வானத்தை அண்ணார்ந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம்.(மாற்கு 7:34)
    ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.(மாற்கு 15:34)

        மேற்குறிபிட்ட வசனங்களில் இடம்பெறும் “இம்மானுவேல்”, “ஏலி! ஏலி! லாமா சபக்தானி”, “கொல்கொதா”, “மேசியா”, “ரபீ”, “தலீத்தாகூமி”, “எப்பத்தா”, “எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி”, ஆகிய சொற்கள் அனைத்தும் எபிரேய சொற்கள் ஆனால் அவற்றை எல்லாம் மொழியாக்கம் செய்துள்ளனர். புதிய ஏற்பாடு உண்மையில் எபிரேயம் பேசும் மக்களுக்காக எழுதப்பட்டிருந்தால் அவற்றை மொழியாக்கம் செய்யும் அவசியம் ஏற்பட்டிருக்காது. எனவே புதிய ஏற்பாட்டின் நூல்கள் எபிரேயம்/அரமேய பேசாத மக்களுக்கு அல்லது கிரேக்கம் பேசும் மக்களுக்காக எழுதப்பட்டது. என்பது கிரேக்கம்தான் புதிய ஏற்பாட்டின் மூல மொழி என்போரின் பிரதான வாதம். இதுவல்லாமல், இன்றிருக்கும் புதிய ஏற்பாட்டின் கிரேக்க பிரதிகளே காலத்தால் முந்தியவை, எனவே கிரேக்கம்தான் புதிய ஏற்பாட்டின் மூல மொழி என்பது இவர்களின் வாதம்.     


புதிய ஏற்பாட்டின் மூலமொழி அரமேயமே என்போரது வாதங்கள் பின்வரும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்டது.

1.இரட்டை அர்த்த வார்த்தைகள்- முரண்பட்ட கிரேக்க எழுத்துப்பிரதிகளும்


        புதிய ஏற்பாட்டின் கிரேக்க பிரதிகளில் அநேக இடங்களில் ஒரே வசனத்தில் வெறுபட்ட பொருளை தரும் இரு கிரேக்க வார்த்தைகள் வேறு வேறு பிரதிகளில் இடம் பெறுகிறது. ஆனால் அரமேய பிரதிகளில் இருக்கும் அதே வசனத்திற்கான சொற்கள் இவ்விரு கிரேக்க வார்த்தைகளின் பொருளையும் தருவதாய் இருப்பதால், கிரேக்க பிரதிகள் அரமேய புதிய ஏற்பாட்டின் பிரதிகளை அடிப்படையாக கொண்டு மொழிபெயர்க்கப்பட்டவை என்று வாதிக்கின்றனர். அவர்கள் தரும் சில உதாரணங்களை கீழே காண்போம்.

மத்தேயு 11.19 :- 

உரை வகை வசனம் உரை சார் மொழியாக்கங்கள்
Textus Receptus

ηλθεν ο υιος του ανθρωπου εσθιων και πινων και λεγουσιν ιδου ανθρωπος φαγος και οινοποτης τελωνων φιλος και αμαρτωλων και εδικαιωθη η σοφια απο των τεκνων αυτης



The Son of man came eating and drinking, and they say, Behold a man gluttonous, and a winebibber, a friend of publicans and sinners. But wisdom is justified of her children.
Darby, Douay-Rheims, Geneva, ISV, KJ21, KJV, LITV, MKJV, NKJV, Webster, Wycliffe, YLT.
Majority Text

Ἦλθεν ὁ Υἱὸς τοῦ ἀνθρώπου ἐσθίων καὶ πίνων, καὶ λέγουσιν· ἰδοὺ ἄνθρωπος φάγος καὶ οἰνοπότης, τελωνῶν φίλος καὶ ἁμαρτωλῶν. καὶ ἐδικαιώθη ἡ σοφία ἀπὸ τῶν τέκνων αὐτῆς.


The Son of man came eating and drinking, and they say, Behold a man gluttonous, and a winebibber, a friend of publicans and sinners. But wisdom is justified of her children.”
Darby, Douay-Rheims, Geneva, ISV, KJ21, KJV, LITV, MKJV, NKJV, Webster, Wycliffe, YLT.
Critical Text

ἦλθεν ὁ υἱὸς τοῦ ἀνθρώπου ἐσθίων καὶ πίνων, καὶ λέγουσιν• ἰδοὺ ἄνθρωπος φάγος καὶ οἰνοπότης, τελωνῶν φίλος καὶ ἁμαρτωλῶν. καὶ ἐδικαιώθη ἡ σοφία ἀπὸ τῶν ἔργων αὐτῆς.


The Son of Man came eating and drinking, and they say, 'Behold, a gluttonous man and a drunkard, a friend of tax collectors and sinners!' Yet wisdom is vindicated by her deeds
ALT, ASV, BBE, CEV, ESV, GodsWord, Holman, NASB, NIV, NIV-UK, NLT, Rotherham, RSV, TEV, WE, Weymouth.
Aramaic Text
ܐܬܐ ܒܪܗ ܕܐܢܫܐ ܐܟܠ ܘܫܬܐ ܘܐܡܪܝܢ ܗܐ ܓܒܪܐ ܐܟܘܠܐ ܘܫܬܐ ܚܡܪܐ ܘܪܚܡܐ ܕܡܟܣܐ ܘܕܚܛܝܐ ܘܐܙܕܕܩܬ ܚܟܡܬܐ ܡܢ ܥܒܕܝܗ

אתא ברה דאנשׁא אכל ושׁתא ואמרין הא גברא אכולא ושׁתא חמרא ורחמא דמכסא ודחטיא ואזדדקת חכמתא מן עבדיה

The Son of Man came eating and drinking, and they say, 'Behold, a gluttonous man and a drunkard, a friend of tax collectors and sinners!' Yet wisdom is vindicated by her deeds/Childrens
The Peshitta Aramaic-English Interlinear Gospels by Rev. Glenn David Bauscher

The Peshitta Aramaic-English New Testament An Interlinear Translation (Volume 1- The Gospels) Translated (with notes and commentary) by Rev. Glenn David Bauscher, மேற்குறிபிட்ட வசனத்தின் அடிக்குறிப்பில் பின்வருமாறு கூறுகிறது
The Greek has two readings: The Majority of mss. have, “Works” and the Critical Text (2 mss.) has Children”. עבדיה - can mean either “Works”or “Servant”. The Greek word “Teknon”(“Child”) can refer to a disciple or pupil as well
அதாவது עבדיה- என்ற சொல்லிற்கு செயல்கள் என்றும், பிள்ளைகள் என்றும் பொருள் உண்டு.

மாற்கு 4:30 :-

உரை வகை வசனம் உரை சார் மொழியாக்கங்கள்
Textus Receptus

και ελεγεν τινι ομοιωσωμεν την βασιλειαν του θεου η εν ποια παραβολη παραβαλωμεν αυτην

And he said, Where unto shall we liken the kingdom of God? or with what comparison shall we compare it?

DARBY, Douay-Rheims, Geneva, Gods Word, KJ21, KJV, LITV, MKJV, NKJV, Webster, Wycliffe, YLT
Majority Text

Καὶ ἔλεγε· πῶς ὁμοιώσωμεν τὴν βασιλείαν τοῦ Θεοῦ; ἢ ἐν τίνι παραβολῇ παραβάλωμεν αὐτὴν;

And he said, Where unto shall we liken the kingdom of God? or with what comparison shall we compare it?

DARBY, Douay-Rheims, Geneva, Gods Word, KJ21, KJV, LITV, MKJV, NKJV, Webster, Wycliffe, YLT
Critical Text

Καὶ ἔλεγεν· πῶς ὁμοιώσωμεν τὴν βασιλείαν τοῦ θεοῦ ἢ ἐν τίνι αὐτὴν παραβολῇ θῶμεν;

Another saying of His was this: "How are we to picture the Kingdom of God? or by what figure of speech shall we represent it?”

CEV, NASB, NIV, NIV-UK, NLT, TEV, Weymouth
Aramaic Text

ܘܐܡܪ ܠܡܢܐ ܢܕܡܝܗ ܠܡܠܟܘܬܐ ܕܐܠܗܐ ܘܒܐܝܢܐ ܡܬܠܐ ܢܡܬܠܝܗ

 ואמר למנא נדמיה למלכותא דאלהא ובאינא מתלא

נמתליה


And he said, To what shall we compare the kingdom of God? and with what parable shall we picture/compare it?

Lamsa, Murdock 
        மேற்குறிபிட்ட வசனத்தின் ܡܬܠܐ – என்ற சொல்லிற்கு ஒப்புமையாக்குவது , எடுத்துரைத்தல் என்று இரு பொருள் இருப்பதாக Payne Smith ன் லெக்ஸிகான் ப.எண்: 317 கூறுகிறது. மேற்குறிபிட்ட உதாரணங்களை போல் இன்னும் பல வசனங்கள் இருப்பதால், கிரேக்க பிரதிகளில் இடம்பெறும் இரண்டு சொற்களின் பொருளையும் குறிப்பிடும் ஒரே சொல் அரமேயத்தில் இருப்பதால், அரமேய எழுத்துப்பிரதிகளின் கிரேக்க மொழியாக்க பிரதிகளே நமக்கு கிடைக்கும் கிரேக்க பிரதிகள் என்பது இவர்களின் வாதம்.

2.கிரேக்க புதிய ஏற்பாட்டில் பல அரமேய வார்த்தைகள் ஒலிபெயர்ப்பு (transliterate)  செய்து பயன்படுத்தப்பட்டிருப்பது


    கிரேக்க புதிய ஏற்பாட்டின் பிரதிகள் பல அரமேய வார்த்தைகளை கிரேக்கத்தில் ஒலிபெயர்ப்பு(transliterate) செய்து பல வசனங்களில் பயன்படுத்தியுள்ளதை காணமுடிகிறது.  உதாரணமாக
            
அரமேயச் சொல் ஒலிபெயர்ப்பு செய்யப்பட்ட கிரேக்க சொல் வசனம்
ܪܩܐ – רקא –  ரகா-  முட்டாள்

ῥακά- ரகா

மத்தேயூ 5:22
ܩܢܢܝܐ – קנניא- கனானியா

Καναναῖος- கனனாயோஸ்

 மத்தேயூ 10:4,
 மாற்கு 3:18
ܐܘܫܥܢܐ - אושׁענא  - ஹொசன்னா

ὡσαννὰ- ஹொசன்னா

மத்தேயூ 21:9, 15; மாற்கு 11:9, 
யோவான் 12:13
ܪܰܒ݁ܺܝ – רבי - ரப்பீ
ῥαββουνί- ரப்பூனீ
மாற்கு 10:51,
யோவான் 20:16

       
     மேற்குறிபிட்ட சொற்களுக்கு நிகரான கிரேக்க சொற்கள் இருந்தாலும் இவ்வாறு ஒலிபெயர்ப்பு(transliterate) செய்து பயன்படுத்தப்பட்டுள்ளதால், கிரேக்க புதிய ஏற்பாட்டின் பிரதிகள், அரமேய பிரதிகளின் மொழிபெயர்ப்பே என்பது இவர்களது வாதம்.

3.இயேசுவின் பேச்சு வழக்கு மொழி புனிதமான ஹீப்ரூவின் மருவலான அரமேயமே.


            ஏசு வாழ்ந்த காலத்தில், யூதேயாவில் பாலஸ்தீனம் உள்ளிட்ட பகுதிகளில் யூத மக்களின் பேச்சு வழக்கு மொழியாக இருந்தது கிரேக்கம் அல்ல, மாறாக ஹீப்ரூவின் திரிபான அரமேயம். இது குறித்து ஏசுவின் சமகாலத்தவரான ஜோசபஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
                I have also taken a great deal of pains to obtain the learning of the Greeks, and understand the elements of the Greek language, although I have so long accustomed myself to speak our own tongue, that I cannot pronounce Greek with sufficient exactness; for our nation does not encourage those that learn the languages of many nations, and so adorn their discourses with the smoothness of their periods;
         கிரேக்கர்களின் கல்விகளைப் பெறுவதற்கும், கிரேக்க மொழியின் கூறுகளைப் புரிந்துகொள்வதற்கும் நான் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டேன், ஆனால் நான் நீண்ட காலமாக எனது சொந்த மொழியைப் பேசப் பழகியிருந்தாலும், போதுமான துல்லியத்துடன் என்னால் கிரேக்கத்தை உச்சரிக்க முடியவில்லை;ஏனென்றால், பல தேசங்களின் மொழிகளைக் கற்று, அவர்களின் ஆக்கங்களை அவர்களின் காலகட்டங்களின் சுமூகம் அலங்கரிக்கிறவர்களை நம் தேசம் ஊக்குவிப்பதில்லை; ( Antiquities of Jews XX, chapter XI)

        I have proposed to myself, for the sake of such as live under the government of the Romans, to translate those books into the Greek tongue, which I formerly composed in the language of our country, and sent to the Upper Barbarians; Joseph, the son of Matthias, by birth a Hebrew, a priest also, and one who at first fought against the Romans, myself, and was forced to be present at what was done afterwards, [am the author of this work]. 

   ரோமானியர்களின் அரசாங்கத்தின் கீழ் வசிப்பவர்களுக்காக, அந்த புத்தகங்களை கிரேக்க மொழியில் மொழிபெயர்க்க நான் முன்மொழிந்தேன், அதை நான் முன்பு நம் நாட்டின் மொழியில் இயற்றி, மேலிருக்கும் (கிரேட்ட ரோம) நாகரிகத்தை சாராதவர்களிடம் அனுப்பினேன்; மத்தியாஸின் மகனான ஜோசப், பிறப்பால் எபிரேயன், பாதிரியும் கூட, முதலில் ரோமானியர்களுக்கு எதிராக போராடியவனும் நானே , பின்னர் நானே நடந்தவற்றில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, [இந்த படைப்பின் ஆசிரியர் நான்]. (Jewish Wars (Book 1, Preface, Paragraph 1) 

        மேற்குறிபிட்ட ஜோசபஸின் குறிப்புகள் ஊடாக நாம் தெரிந்து கொள்வது இதைத்தான். அதாவது கிரேக்கம் ஏசுவின் காலத்தில் பேச்சுவழக்கு மொழியல்ல. அதாவது பெரும்பகுதி யூத மக்களால் பேசப்படும் மொழியல்ல. ஜோசபஸின் கூற்றின் படி மிக சிரத்தை எடுத்து கற்றவர்கள் மட்டுமே கைகொள்ளும் மொழியாக கிரேக்கம் இருந்துள்ளது. ஏசுவை முதலில் ஏற்று கொண்டவர்கள் யார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. பேதுரு போன்ற மக்கள்தான் முதலில் ஏற்றவர்கள் என்று புதிய ஏற்பாடு பதிவு செய்கிறது. எனவே ஏசுவின் பேசுமொழி கிரேக்கம் அல்ல. 

4.மூலமொழி கிரேக்கம் என்பதை மறுக்கும் சில வசனங்கள்

        எப்படி புதிய ஏற்பாட்டில் பல அரமேய சொற்கள் விளக்கப்ப்பட்டுள்ளதோ, அதே போல் புதிய ஏற்பாட்டின் சில வசனங்களில் கிரேக்க சொற்களும் விளக்கப்பட்டுள்ளது. 

Acts 9:36 யோப்பா பட்டணத்தில் கிரேக்குப்பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்.

Rev 9:11 அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்.

இன்னும் இதுபோல் பல தரப்பட்ட வாதங்களை அரமேயத்தை முன்னிறுத்துவோர் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலும், புதிய ஏற்பாட்டின் உள்ளடக்கத்தின் அடிப்படையிலும் முன்வைக்கின்றனர். அவை குறித்து எல்லாம் பின்வரும் கட்டுரைகளில் இன் ஷா அல்லாஹ் காண்போம். இங்கு பிரதான சில வாதங்களையே நாம் குறிப்பிட்டு காட்டியுள்ளோம். அதுவே சிந்திக்கும் மக்களுக்கு போதுமானது.

  புதிய ஏற்பாட்டின் மூல மொழி எது என்பதில் குழம்பி நிற்கும் கிறித்தவசபைகள்

புதிய ஏற்பாட்டின் மூல மொழி அரமேயம் என்றும் பெஸிட்டாதான் மூல பிரதி என்றும், பின்வரும் சிரியாக் கிறித்தவ திருச்சபைகள் கூறியும் வருகின்றன.

சிரியாக் ஆர்த்தடாக்ஸ் திருச்சபை, ஜேக்கபைட் சர்ச்- தமாஸ்கஸ், சிரியா,

மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் திருச்சபை - கொச்சி, கேரளா, இந்தியா, 

மலபார் சுதந்திர சிரியன் திருச்சபை, தொழியூர், கேரளா, இந்தியா

மரோனைட் கத்தோலிக் திருச்சபை, பிகேர்கேயில், லெபனான்

சிரியாக் கத்தோலிக் திருச்சபை, பெய்ரூத், லெபனான்

மலங்கரா சிரியன் கத்தோலிக்க திருச்சபை, திருவனந்தபுரம், கேரளா, இந்தியா

மார் தோமா சிரியன் திருச்சபை, கேரளா, இந்தியா

செயின்ட் தாமஸ் இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியா, திருவலகேரளா, இந்தியா

கிழக்கு அசிரியன் திருச்சபை

கல்தேய சிரிய திருச்சபை

கிழக்கின் பண்டைய திருச்சபை

கல்தேய கத்தோலிக்க திருச்சபை

சீரோ மலபார் திருச்சபை…………………….இன்னும் பல

புதிய ஏற்பாட்டின் மொழி குறித்த குழப்பமும் காற்றில பரந்த வேத பாதுகாப்பும்


        இஸ்லாமிய மக்களும் பல பிரிவுகளாக உலகில் பிரிந்து கிடந்தாலும், குர்ஆனின் மூலமொழி அரபி என்பதை எந்த இஸ்லாமியரும் இவ்வுலகில் மறுப்பதில்லை. குர்ஆனின் மூல கையெழுத்துப்பிரதிகள் என்று கூறப்படுபவை எல்லாம் அரபியில் இருப்பதை காணமுடிகிறது. கிறித்தவ புதிய ஏற்பாட்டின் நிலை என்ன என்பதை மேலே நாம் விளக்கிவிட்டோம். கிரேக்கம் தான் மூல மொழி என்போரின் வாதமும், அரமேயம்தான் மூல மொழி என்போரின் வாதமும், ஒன்றுக்கு ஒன்று சளைத்ததாகவும் இல்லை.
வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.(லூக்கா 16:17)
    மிஸனரிகள் கூறுவது போல கிரேக்க பிரதிகளும், அரமேய பிரதிகளும் ஒரே உட்கருவை கொண்டவைதான் என்ற வாதம், அவர்களது புதிய ஏற்பாட்டின் வசனங்களுக்கு முரணானது. புதிய ஏற்பாடு, வேத பாதுகாப்பின் அளவுகோலாக எழுத்தின் உறுப்பை முன்னிறுத்துகிறது. கிரேக்க எழுத்தின் உறுப்பும், அரமேய எழுத்தின் உறுப்பும் ஒன்றாய் இருக்கிறது என்பதை யாரும் ஏற்க மாட்டார்கள். எது மூல மொழி என்று அறிந்து கொள்ளமுடியாத அளவிற்கு வாத பிரதிவாதங்கள் உள்ளன. மூல மொழி எது என்பதிலேயே கிறித்தவ சபைகள் குழம்பி நிற்கும் போது, எழுத்தின் பாதுகாப்பை எப்படி உறுதிபடுத்த இயலும். மேற்குறிபிட்ட புதிய ஏற்பாட்டின் வசனங்களுக்கு இணங்க, ஒன்று புதிய ஏற்பாடு வேதம் அல்ல என்று கிறித்தவர்கள் ஏற்க வேண்டும் அல்லது ஏசுவின் வார்த்தைகள் பொய்பிக்கப்பட்டது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

Reference:

Monday, January 15, 2024

இஸ்லாமிய ஆவணங்கள் கூறும் இன்ஜீல்

  بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
இஸ்லாமிய ஆவணங்கள் கூறும் இன்ஜீல்

       குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபியாவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட கிறித்தவ மிசனரிகளால் எழுப்பப்பட்ட பல விமர்சனங்களையும் அதன் விளக்கங்களையும் தொடராக கண்டுவந்தோம். அவர்களால் எழுப்பப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் விடைகாணும் போது, அல் குர்ஆன் இன்றுவரை பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பதை, அதன் பாதுகாப்பு மற்றும் வரலாறு குறித்தும் இஸ்லாமிய ஆவணங்கள் தெளிவான சான்றுகளையும், வழிமுறைகளையும் கொண்டுள்ளது என்பதை நம்மால் தீர்க்கமாக அறிந்து கொள்ளவும் முடிந்தது. மாஷா அல்லாஹ். நாம் இன் ஷா அல்லாஹ் இனி வரும் தொடர்களில் கிறித்தவர்களின் மத நூலான புதிய ஏற்பாடு குறித்தும் அதன் நிலை குறித்தும் வரலாற்று தரவுகளின் அடிப்படையில், கையெழுத்துப்பிரதிகளின் அடிப்படையில் காணவுள்ளோம்.

குர்ஆன் புதிய ஏற்பாடு குறித்து சாட்சி பகர்கிறதா????


        பொதுவாக இஸ்லாமியர்கள் ஆகிய நாம் புதிய ஏற்பாடு குறித்து ஆவணங்கள் அடிப்படையில் விமர்சனங்களை முன்வைக்கும் போது மிஸனரிகள் முன்வைக்கும் மிக பிரதானமான எதிர் விமர்சனம் “உங்கள் குர்ஆனே இன்ஜீலிற்கு சான்று பகர்ந்திருக்கும் போது அதனை நீங்கள் மறுக்கிறீர்கள்” என்பதுதான். எனவே இந்த தொடரில் நாம் இஸ்லாமிய ஆவணங்கள், மற்றும் வரலாற்று ஆவணங்கள் கூறும் இன்ஜீல் குறித்து காண இருக்கிறோம்.

இன்ஜீல்- பெயர் விளக்கம்


    குர்ஆன் கூறும் இன்ஜீல் என்ற சொல்லானது ܐܘܢܓܠܝܘܢ – அவங்கலியூன் என்ற அரமேய சொல்லில் இருந்து பிறந்த சொல். இது குறித்து இப்னு மன்ஸூர் லீசான் அல் அரப் (11/648)-ல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
ﺇﻧﺠﻴﻞ، ﻭﻫﻮ اﺳﻢ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ اﻟﻤﻨﺰﻝ ﻋﻠﻰ ﻋﻴﺴﻰ، ﻋﻠﻴﻪ اﻟﺴﻼﻡ، ﻭﻫﻮ اﺳﻢ ﻋﺒﺮاﻧﻲ ﺃﻭ ﺳﺮﻳﺎﻧﻲ،
    இன்ஜீல் ஈஸா(அலை) அவர்களுக்கு இறங்கிய அல்லாஹ்வின் வேதத்தின் . பெயராகும். அது ஹீப்ரு அல்லது அரமேய பெயராகும்.
சுவிசேஷம் அல்லது நற்செய்தி (Gospel) என்பது அதன் பொருள். அல் குர்ஆனில் இந்த சொல்லானது 12 இடங்களில் இடம்பெறுகிறது. 

எத்துனை இன்ஜீல்கள்- நற்செய்தி நூல்கள்??


        கிறித்தவ மிசனரிகள் இன்ஜீல் என்பது பைபிளின் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்கள்தான் என பல வருடங்களாக பொய்யுரைத்து வருகின்றனர். ஆனால் வரலாற்றில் எத்தனை நற்செய்தி நூல்கள் (இன்ஜீல்) இருந்தன என்று தேடினோம் என்றால் புதிய ஏற்பாட்டில் இருக்கும் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகிய நான்கு நற்செய்தி நூற்கள் அல்லாமல் இன்னும் பல நற்செய்தி நூல்கள் நபி(ஸல்) அவர்களது காலத்திற்கு முன்பே இருந்துள்ளதாக பல வரலாற்று தரவுகள் உள்ளன. அந்த நூல்களை கிறித்தவ உலகம் பேதக்காரர்களின் ஏடுகள் என்று முத்திரை குத்தி ஓதுக்கித்தள்ளிவிட்டனர் அல்லது அழித்தொழித்துவிட்டனர். அந்த நூல்களில் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறோம்.

மறுக்கப்படும் சுவிஷேசம் 
 
குறிப்புரைகிடைக்கப்பட்ட    
பிரதி

தோமாவின் சுவிசேஷம்


ஹிபோபோலிடஸ் (கி.பி.170–236) The Refutation of all Heresies, Book V, Chapter II, P.No.131

1)Oxyrhynchus Papyrus (3rd Century AD) -  P.Oxy. 654,P.Oxy. 655,P.Oxy. 01.
2)Nag Hammadi Codex II(4th /5th century AD)- Tractate 2 (NHC II, 2)
மார்சியோன் சுவிசேஷம்
ஓரிகனின் (கி.பி.185- 254), Commentary on the Gospel of John., Book V, Chapter IV, P.No.649

Oxyrhyncus Papyrus 69
(3rd Century AD)-           P.Oxy. 2383
பாஸிலிடியஸின் சுவிசேஷம்
ஓரிகனின் (கி.பி.185- 254), Homilies on Luke , Homily 1, P.No.6
காணவில்லை
ஐரேனியஸின் (கி.பி.130- 202), Against Heresies, Book III, Ch.XI, P.No. 1091
Nag Hammadi Codex (4th /5th century AD)-
1)Codex I, Tractate 3 (NHC I, 3),
2)Codex XII, Tractate 2 (NHC XII, 2),
மரியாளின் சுவிசேஷம் --
1) Berlin Codex, 5th Century AD
2) Oxyrhynchus Papyrus 3525, 3rd Century AD
3) Rylands Papyrus 463, 3rd Century AD
யூதாசின் சுவிசேஷம்
ஐரேனியஸின் (கி.பி.130- 202), Against Heresies,
Book I, Ch.XXXI, P.No. 935

Codex Tchacos, 3rd Century AD

ஹிபோபோலிடஸ் (கி.பி.170–236) The Refutation of All Heresies, Book V, Ch II, P.No.129

காணவில்லை
பேதுருவின் சுவிசேஷம்
ஓரிகனின் (கி.பி.185- 254), Commentary on the Gospel of Matthew, Book X, Ch 17, The Brethren of Jesus. P.No.810

1)The Akhmim Fragment(6th Century AD)-   P.Cair. 10759
2) Oxyrhynchus Papyrus(2nd /3rd Century AD)- P.Oxy. 2949
3)Oxyrhynchus Papyrus (2nd Century AD)- (P.Oxy. 4009)
இரகசிய மாற்கு சுவிசேஷம்அலெக்ஸான்டிரியா வின் கிளமணட் இன் (கி.பி. 150 – 215), Mar Saba Letter Morton Smith’s,  Clement of Alexandria and a Secret Gospel of Mark
செரின்தஸின் சுவிசேஷம்ஸலாமிஸின் எபிஃபேனியஸின் (கி.பி 310 - 403) Panarion, Against Ebionites, P.No.133காணவில்லை

பர்த்தலோமியுவின்
சுவிசேஷம்

ஜெரோமின் (கி.பி.342 –420), Commentary on Matthews, Preface. காணவில்லை
லூசியஸின் சுவிசேஷம்
போப் கெலசியஸ் I-
(கி.பி. 492 –496), Decretum Gelasianum, Ch V,
காணவில்லை
பிலிஃப்பின் சுவிசேஷம்--Nag Hammadi Codex (4th /5th century) CodexII, Tractate 3 (NHC II, 3)
ஓரிகனின் (கி.பி.185- 254), Homilies on Luke , Homily 1, P.No.6Harvard Syriac 93 (8th Century)
பரிபூரணத்தின் சுவிசேஷம்ஸலாமிஸின் எபிஃபேனியஸின் (கி.பி 310 - 403) Panarion, Against Gnostics, P.No.92) காணவில்லை
ஓரிகனின் (கி.பி.185- 254), Homilies on Luke , Homily 1, P.No.6 Nag Hammadi Codex (4th /5th century) Codex III, Codex IV
எபிரேயர்களின் சுவிசேஷம் ஜெரோமின் (கி.பி.342 –420), Commentary on Ezekiel 6காணவில்லை
எபியோனைட்களின் சுவிசேஷம்ஸலாமிஸின் எபிஃபேனியஸின் (கி.பி 310 - 403) Panarion, Against Ebionites, P.No.133 காணவில்லை
மத்தியாஸின் சுவிசேஷம்ஓரிகனின் (கி.பி.185- 254), Homilies on Luke , Homily 1, P.No.6 காணவில்லை
அப்பெலஸின் சுவிசேஷம்ஜெரோமின் (கி.பி.342 –420), Commentary on Matthews, Preface. காணவில்லை
பார்னபாவின் சுவிசேஷம்
போப் கெலசியஸ் I-
(கி.பி. 492 –496), Decretum Gelasianum, Ch V,
காணவில்லை

        மேலே நாம் காட்டியுள்ள நற்செய்தி நூல்கள் (இன்ஜீல்) அல்லாத இன்னும் பல இன்ஜீல்கள் நபி(ஸல்) அவர்களது காலத்தில் அதற்கு முன்பும், பின்பும் புலக்கத்தில் இருந்துள்ளதை சர்ச் வரலாறு பதிவு செய்துள்ளது. நாம் இத்தனை இன்ஜீல் இருந்ததற்கான ஆவண வரலாற்றை அவர்களது சர்ச் பிதாக்களின் குறிப்புக்களில் இருந்தே கொடுத்துள்ளோம். அவற்றுள் பல நற்செய்தி நூல்கள் காணாமல் போயுள்ளன. அதன் எழுத்துப்பிரதிகள் எதுவும் கிடைக்கவில்லை. இவ்வாறு காணாமல் போன நற்செய்தி நூல்களின் கையெழுத்து பிரதிகள் எதையும் நாம் கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் அந்த சர்ச் பிதாக்களின் குறிப்புகளில் இருந்து அந்த நூல்களின் உள்ளடக்கம் என்ன என்பதை அறியமுடியும்.

கிறித்தவத்தின் அடங்காத நூல் அழிப்பு வெறியும் அழிக்கப்பட்ட இன்ஜீல்களும்


        இஸ்லாம் கூறும் இன்ஜீலும், பைபிளின் நற்செய்தி நூலும் வேறுபட்டவை என்று கூறியதும், மிஸனரிகள் முன்வைக்கும் மிக முக்கிய கேள்வி அதனை காட்டச்சொல்வதே. எழுத்துப்பிரதியாக இருப்பதே, அது வேத நூலுக்கு ஆதாரம் என்றால் நாம் முன்னர் காட்டிய அட்டவனையில் பல நற்செய்தி நூல்கள் நமக்கு எழுத்துப்பிரதியாக கிடைத்துள்ளது அதனை வேதம் என்று ஏற்பார்களா???. மேலும் இந்த கேள்வியை கேட்கும் எந்த கிறித்தவரும் தனது வரலாற்றையும் உலக வரலாற்றையும் சிறிதும் அறியாத மூடராகத்தான் இருப்பார்கள். இவர்களது வரலாற்றை நாம் ஆய்வு செய்தோம் என்றால் கி.பி 4ம் நூற்றாண்டிற்கு பிறகு இவர்களது கத்தோலிக்க சர்ச் பாதிரிகள் தொடர்ந்து பிறப்பித்த ஒரே உத்தரவு அவர்களது கொள்கைக்கு மாற்றமான நூல்களை தீயிட்டு கொளுத்த வேண்டும் என்பதே. கிட்டத்தட்ட சென்ற நூற்றாண்டு வரை இந்த வேலையை கணக்கட்சிதமாக முடித்த ஒரு கூட்டம் இவர்களது கொள்கையில் இருந்து மாறுப்பட்ட செய்திகள் கொண்ட அல்லாஹ் இறக்கிய அந்த இன்ஜீலை கொண்டு வந்து காட்டுங்கள் என்பது ஆக அயோக்கியத்தனம் அல்லவா???? கி.பி 4ம் நூற்றாண்டில் இவர்களுக்கு அதிகாரம் கிடைக்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு நூற்றாண்டிலும் அவரகளது கொள்கையில் இருந்து மாறுபட்ட நூல்களை குறி வைத்து கொளுத்தி இருக்கிறார்கள் என்பது வரலாற்று பக்கங்கள் கூறும் சாட்சி அதில் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறோம்.

காலம் அழிக்கப்பட்ட நூல்கள்/நூலகங்கள்
கி.பி. 325     கிறித்தவத்தை ஏற்ற கான்ஸ்டண்டைனின் உத்தரவின் பேரில் ஏரியஸின் “தாலியா” என்ற நூலிற்கும், கிறித்தவ பிஷப்புகள் மாறி மாறி ஏசிக்கொண்ட தொகுப்பினை கொண்ட “லைபெல்லி” என்ற குறிப்பேட்டிற்கும், இன்னும் பல பேதக்காரர்களுக்கும் தடையாணை பிறக்கப்பட்டு, எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது.(1)
கி.பி. 386    தியோடோஸியஸ்-I கத்தோலிக்க கிறித்தவத்தை அரச மதமாக அறிவித்தார். இதற்கு மாற்றமான கொள்கைகள், மதங்கள் அனைத்திற்கும் தடை பிறபிக்கப்பட்டது. கத்தோலிக்கத்திற்கு மாற்றமான ஏடுகளை யாரெனும் வைத்திருந்தால் அதனை அழித்து விட வேண்டும், அல்லது அதன் எழுத்தர் யார் என்பதை காட்டிக்கொடுக்க வேண்டும் அல்லது அதனை வைத்திருப்பவர் கொல்லப்படுவார்.(2)
கி.பி. 398     ஆர்கேடியஸின் உத்தரவின் பேரில் ஏரியஸின் பேதத்தில் இருந்து உருவான யூனோமியர்கள் எனும் கிறித்தவ பிரிவின் நூல்கள் தடையாணை பிறக்கப்பட்டு, எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது.(3)
கி.பி. 407     ஹொனோரியஸ் மற்றும், தியோடோஸியஸ்-II ஆகிய இருவரும், “பலதெய்வ வழிபாட்டாளர்கள், பேதக்காரகள், மானியர்கள் ஆகியோர்கள் மற்றும் அவர்களது நூல்கள் மீது முன்பு விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தும் நடைமுறையில் இருக்கிறது என்று அறிவித்தார்கள். அவர்களை நாடு கடத்துவதும், அவர்களது நூல்களை எறிப்பதும் தொடரும் என்று அறிவித்தார்கள்.(4)
கி.பி. 431      தியோடோஸியஸ்-II இன் உத்தரவின் பேரில் நெஸ்டோரிய கிறித்தவ பிரிவினரின் நூல்கள் அழிக்கப்பட்டன.(5)
கி.பி. 435     தியோடோஸியஸ்-II இன் உத்தரவின் பேரில் கிறித்தவதத்திற்கு எதிராக களமாடிய போர்பைரி என்ற தத்துவவியலாளரின் நூல்கள் அனைத்தும் கிறித்தவத்திற்கு ஆபத்தானது என்று கூறி எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டது. இத்துடன் கிறித்தவத்திற்கு எதிரான அனைத்து நூல்களும் அழிக்கப்பட்டது.(6)
கி.பி. 455     தியோடோஸியஸ்-II இன் உத்தரவை, மார்சியோன் மேலும் விரிவுபடுத்தி, புத்தக அழிப்பில் அப்போலிநேரியஸ் மற்றும் யூடிகீஸ் ஆகியோரின் புத்தகங்களும் சேர்த்து கொள்ளப்பட்டது.(7)
கி.பி. 5ம் நூற்றாண்டின் பிற்பகுதி     மானியின் புத்தகங்களை அழிக்க ரோமின் பிஷப்கள் உத்தரவிட்டனர். மானியர்களின் புத்தகங்கள் அனைத்தும் ரோமின் புனித மரியா பேராலயம் முன்பு தீயிட்டு கொளுத்தப்பட்டது. சிமாக்கஸ் மானியர்களை நாடு கடத்தி அவர்களது எஞ்சிய நூல்கள் அனைத்தும் கான்ஸ்டண்டைன் பேராலயம் முன்பாக தீயிலிடப்பட்டது.(8)
கி.பி 514 - 523     போப் ஹொர்மிஸ்டஸ் ஆணைப்படி முன்பு தடைசெய்யப்பட்ட கொள்கையில் உடையோரின் நூல்கள் கண்டறியப்படவே, அவர்களை நாடு கடத்தி, அவர்களது நூல்கள் அனைத்தும் தீயிலிடப்பட்டது. நகரத்தின் மத்தில்யில் வைத்து பேதக்காரர்களின் நூல்களை தீயிலிடுவது மத்திய காலம்வரை தொடர்ந்தது.(9)
கி.பி  589     ஸ்பெயினின் விசிகோதிக் சர்ச்களுக்கு முடிவுரை எழுதப்பட்டது. அவர்களது நூல்களும், ஏரியனின் பைபிள்களும் அழிக்கப்பட்டன.(10)
கி.பி. 649    லேட்டரன் கவுன்சில், கிறித்தவ பிரிவான மோனோதெலைட்களின் புத்தகங்கள் தீயிலிட ஆணைபிறப்பித்தது. கிபி 649 லேட்டரன் கவுன்சிலின் ஆணையை கிறிஸ்தவப் பொதுச்சங்கம், கான்ஸ்டண்டினோபிளிலில் வழிமொழிந்தது.(11) 
கி.பி. 692     ட்ருல்லன் கவுன்சில் கிறித்தவ தியாகிகளை கொச்சைப்படுத்தும் நூல்களை பொதுவில் வாசிக்க தடை விதித்தது. மேலும் அந்த நூல்களை கொளுத்த ஆணையிட்டது.(12)
கி.பி. 866     முஸ்லீம்களிடம்(சராசன்ஸ்) இருந்து கைபற்றிய நூல்களை தீயிட்டு கொளுத்த போப் நிக்கோலஸ்-I உத்தரவிடுதல்.(13)
கி.பி. 1099         சிலுவை வீரர்கள் ஜெருசலேமில் இருந்த இஸ்லாமிய, யூத மற்றும் கிறித்தவ பேதக்காரர்களின் கல்வி நிலையங்களும், ஆலயங்களும் தீக்கிரையாக்கப்பட்டது(14).
சிரியாக் கிறித்தவர்களும் குறிவைத்து தாக்கப்பட்டார்கள்.(15)
கி.பி. 1109     திரிப்போலியின் நூலகம் சிலுவை வீரர்களால் அழிக்கப்பட்டது. ஓஸாமா இப்னு முன்கீஸ் என்ற கவிஞரின் கவிதை தொகுப்பு- கிட்டதட்ட 4000 நூல்கள், ஏக்கர் கோட்டைக்கு திருடி செல்லப்பட்டது.(16)
கி.பி. 1204     கான்ஸ்டண்டினோபிளின் அரச நூல்கம் சிலுவை வீரர்களால் சூறையாடப்பட்டது. அந்த நூல்கத்தில், பலங்கால எழுத்துப்பிரதிகள் பல அழிக்கப்பட்டது. இந்த சூறையாடலில் கிறித்தவ அரசர்களின் கல்லறைகளுக்கும் அடக்கம். இந்த நூல்கத்தில் பல பணடைய கிரேக்க நூல்களை பிரதியாக்கி பாதுகாக்க கான்ஸ்டன்டைன்-II என்பது குறிப்பிடத்தக்கது.(17)
கி.பி. 1208     கதார் எனும் கிறித்தவ பிரிவினரை இன சுத்திகரிப்பு செய்ய போப் இன்னொசண்ட்-III அழைப்பு விடுத்தார்.14ம் நூற்றாண்டிற்குள் அவர்களும் அவர்களது நூல்களும் முழுமையாக அழித்தொழிக்கப்பட்டது.(18)(19)

        இன்னும் இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எனவே எலைன் பேகல்ஸ் போன்ற சில வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தை இங்கு பதிவிட்டாள் அதுவே இந்த கிறித்தவ கூட்டத்தின் அவர்களுக்கு ஒவ்வாத கோட்பட்டினை கூறும் புத்தங்கங்களின் மேல் இருக்கும் வன்மம் என்னவென்று புலப்படும்.
    This campaign against heresy involved an involuntary admission of its persuasive power; yet the bishops prevailed. By the time of the Emperor Constantine's conversion, when Christianity became an officially approved religion in the fourth century, Christian bishops, previously victimized by the police, now commanded them. Possession of books denounced as heretical was made a criminal offense. Copies of such books were burned and destroyed. But in Upper Egypt, someone, possibly a monk from a nearby monastery of St. Pachomius,19 took the banned books and hid them from destruction—in the jar where they remained buried for almost 1,600 years. (Elaine Pagels, the Gnostic gospels, Introduction, P.No. XVIII- XiX)
    பேதங்களுக்கு எதிரான இந்த பிரச்சாரம் அதன் வற்புறுத்தும் ஆற்றல் அனிச்சையாக உட்படுத்தப்பட்டது; மேலும் ஆயர்கள் வெற்றி பெற்றனர். பேரரசர் கான்ஸ்டன்டைன் மதம் மாறிய நேரத்தில், நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மதமாக மாறியது, முன்பு காவலர்களால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவ ஆயர்கள் இப்போது அவர்களுக்கு கட்டளையிட்டனர். கண்டிக்கப்பட்ட பேத புத்தகங்களை வைத்திருப்பது கிரிமினல் குற்றமாக ஆக்கப்பட்டது. அத்தகைய புத்தகங்களின் பிரதிகள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. ஆனால் மேல் எகிப்தில், யாரோ ஒருவர், ஒருவேளை அருகிலுள்ள புனித பச்சோமியஸ் மடத்தைச் சேர்ந்த ஒரு துறவி, 19 தடை செய்யப்பட்ட புத்தகங்களை எடுத்து அழிவிலிருந்து மறைத்து வைத்தார் - கிட்டத்தட்ட 1,600 ஆண்டுகளாக அவை ஜாடியில் புதைந்துகிடந்தன.(Elaine Pagels, the Gnostic gospels, Introduction, P.No. XVIII- XiX)
    Access to the texts (Nag Hammadi Library) was deliberately suppressed not only in ancient times but, for very different reasons, in the more than thirty years since the discovery.( Elaine Pagels, the Gnostic gospels, Introduction, P.No. XXIV)
    அந்த நூல்களை அணுகுவது (நாக் ஹம்மாடி லைப்ரரி) பண்டைய காலத்தில் மட்டுமல்ல, கண்டுபிடிக்கப்பட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வேறுபட்ட காரணங்களுக்காக வேண்டுமென்றே நசுக்கப்பட்டது .( Elaine Pagels, the Gnostic gospels, Introduction, P.No. XXIV)

    Up until our time, this movement was known almost solely by the battle that the Fathers of the Church, who regarded it as a Christian heresy, waged against it. Numeruus refutations of this heresy had survived, while the writings of the Gnostics themselves, hunted down and destroyed during the centuries, had almost all disappeared.(Simon Petrement , A Separate God, P.No.1)
     நம் காலம் வரை, இந்த இயக்கம் கிறிஸ்தவ மதங்களுக்கு எதிரான கொள்கையாகக் கருதப்பட்ட திருச்சபையின் பிதாக்கள் அதற்கு எதிராக நடத்திய போரின் மூலம் மட்டுமே அறியப்பட்டது., பல நூற்றாண்டுகளில் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்ட ஞானவாதிகளின் எழுத்துக்கள் கிட்டத்தட்ட அனைத்தும் மறைந்துவிட்ட நிலையில், இந்த பேதங்களுக்கு எதிரான மறுப்புகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. (Simon Petrement , A Separate God, P.No.1)

            மேலே இருக்கும் தொகுப்பை அய்வு செய்யும் யாரும் ஒவ்வொரு ரோம கத்தோலிக்க ஆயர்களும் தங்களது கொள்கைக்கு எதிரான நூற்களை அரச பயங்கரவாத துணை கொண்டு குறிவைத்து அழிப்பதையே பிழைப்பாக கொண்டிருந்தனர் என்பதை கூறிவிடுவார்கள். மேலும் ஒரு ஆயர் விட்டு சென்ற நூல் அழிப்புப்பணியை அடுத்தடுத்து வந்தவர்கள் தொடர்ச்சியாக, தடையில்லாமல் செய்துள்ளனர். சிலுவை யுத்தம் என்ற பெயரில் இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், கிறித்தவ ஆட்சிக்கு உட்பட்ட, உடபடாத பகுதிகளிலும் படையெடுப்பு நிகழ்த்தியும், படுகொலைகளை அரேங்கேற்றியும் தங்களுக்கு எதிரான நூல்களையும், அறிங்ஞர்களையும் அழித்தொழித்துள்ளனர். இதன் மூலம் இவர்களது கொள்கைக்கு எதிரான நூல்களை இல்லாமல் அழித்துள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. இன்றைய கிறித்தவ மிஸனரிகளும், அவர்களது மூதாதைய கிறித்தவ வெறியர்களின் அடியொட்டி  அல்குர்ஆனை பொது இடங்களில் எரித்து தங்களது தீராத வெறியை தீர்த்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.. 

மேற்குறிபிட்ட விஷயங்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக ரிச்சர்ட் ஓவெண்டென் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
        Many key works were, however, lost during the period we now call ‘Late Antiquity’ (the period from roughly the third to the eighth centuries), and we know this through the occasional ghostly traces of them in later books, or from chance finds of fragments of papyri, where previously unknown texts have been found by archaeological digs over the last 150 years. (Burning the Books, A History of the Deliberate Destruction of Knowledge by RICHARD OVENDEN P.No.39 )
    எவ்வாறாயினும், நாம் இப்போது 'லேட் ஆண்டிக்விட்டி' (தோராயமாக மூன்றாம் முதல் எட்டாம் நூற்றாண்டு வரையிலான காலம்) என்று அழைக்கும் காலகட்டத்தில் பல முக்கிய படைப்புகள் தொலைந்துவிட்டன, மேலும் இதைப் பிற்கால புத்தகங்களில் அவ்வப்போது நிழல் தடயங்கள் மூலமாகவோ அல்லது தற்செயலான பாப்பிரஸ் துண்டுகள் கண்டுபிடிப்புகளின் மூலமாகவோ அறிகிறோம். கடந்த 150 ஆண்டுகளில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி மூலம் முன்னர் அறியப்படாத நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது(Burning the Books, A History of the Deliberate Destruction of Knowledge by RICHARD OVENDEN P.No.39 )
        இன்ஜீலை எடுத்து வாருங்கள் என்று கூறும் எந்த மிஸனரிக்கும் வரலாறு குறித்த அறிவு உப்புக்கும் இல்லை என்பதை ரிச்சர்ட் ஓவெண்டென் அவர்களது குறிப்பு தொழுரித்து காட்டுகிறது. இப்படி தங்களுக்கு எதிரான கொள்கை உடைய நூல்களை குறிவைத்து அழித்தொழித்த பெருமைக்குரிய கிறித்தவ வெறியர்கள், இஸ்லாம கூறும் இன்ஜீலை கொண்டுவந்து காட்டுங்கள் என்று கொக்கரிப்பது எவ்வளவு அயோக்கியத்தனம் என்பது இப்போது விளங்கியிருக்கும்.

இஸ்லாமிய ஆவணங்களில் குறிப்பிடப்படும் இன்ஜீல்


     கிறித்தவ மிசனரிகள் தொடர்ச்சியாக தங்களுக்கு எதிரான நூல்களையும், நூலகங்களையும் அழித்தொழித்த போது, அல்லாஹ்வின் வேதமான இன்ஜீலின் சிலபகுதிகள் நம்மை வந்தடைந்திருப்பது இங்கு கவனிக்கத்தக்கது. சர்ச் பிதாக்களின் பேதக்கார நற்செய்தி நூல்களின் எதிர் உரைகளில் இருந்து எப்படி காணாமல் போன பேதக்கார நற்செய்தி நூல்களின் உள்ளடக்கம் என்ன என்பதை நம்மால் அறிய முடிகிறதோ, அதே அடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த இன்ஜீல் எது?, அது எத்தகைய நூல்? என்பதை இஸ்லாமிய அவணங்கள், மற்றும் வரலாற்று நூல்களில் இருந்து நம்மால் பெறமுடிகிறது. குறிப்பாக இவர்கள் நாடுகளை தாண்டி தங்களது கோறைப்பற்களை காட்டிய சிலுவை யுத்தத்திற்கு முன்பான அவணங்களில் காணப்படும்,  இன்ஜீல் என்று அறியப்பட்ட நூலின் சில பகுதிகளை இங்கு பதிவிட்டாலே இன்றிருக்கும் நற்செய்தி நூல்கள், குர்ஆனும் இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களும் கூறும் இன்ஜீல் அல்ல என்பதை நாம் அறிந்து கொள்ள போதுமானதாயிருக்கும். 

ஆதாரம் 1:

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (அல் குர்ஆன்  5:46) 

 ஆதாரம் 2:

இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவாசியிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் -ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான். (அல் குர்ஆன் 48:29)

 ஆதாரம் 3:

நூஹுக்கு எதனை அவன் உபதேசித்தானோ, அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான். ஆகவே (நபியே) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்றாஹீமுக்கும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் நாம் உபதேசித்ததும் என்னவென்றால்; "நீங்கள் (அனைவரும்) சன்மார்க்கத்தை நிலை நிறுத்துங்கள், நீங்கள் அதில் பிரிந்து விடாதீர்கள்' என்பதே - இணைவைப்போரை நீங்கள் எதன் பக்கம் அழைக்கின்றீர்களோ, அது அவர்களுக்குப் பெரும் சுமையாகத் தெரிகிறது - தான் நாடியவர்களை அல்லாஹ் தன் பால் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் - (அவனை) முன்னோக்குபவரை அவன் தன்பால் நேர்வழி காட்டுகிறான்.( அல் குர்ஆன் 42:13)

 ஆதாரம் 4:

(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும். (அல் குர்ஆன் 9:111)

 ஆதாரம் 5:

"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! (அல் குர்ஆன்  3:55)

 ஆதாரம் 6:

ﺃﺧﺒﺮﻧﺎ ﺟﺮﻳﺮ، ﻭﻋﻴﺴﻰ ﺑﻦ ﻳﻮﻧﺲ، ﻋﻦ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﺑﻦ ﺃﺑﻲ ﺧﺎﻟﺪ، ﻋﻦ اﻟﻌﻴﺰاﺭ ﺑﻦ ﺣﺮﻳﺚ، ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ، ﻗﺎﻟﺖ: ﻭاﻟﻠﻪ ﺇﻥ ﻣﺤﻤﺪا ﻟﻤﻜﺘﻮﺏ ﻓﻲ اﻝﺇﻧﺠﻴﻞ ﻟﻴﺲ ﺑﻔﻆ ﻭﻻ ﻏﻠﻴﻆ ﻭﻻ ﺳﺨﺎﺏ ﻓﻲ اﻷﺳﻮﺃﻕ ﻭﻻ ﻳﺠﺰﺉ ﺑﺎﻟﺴﻴﺌﺔ ﺳﻴﺌﺔ ﻭﻟﻜﻦ ﻳﻌﻔﻮ ﺃﻭ ﻳﻐﻔﺮ.
    ஆயிஷா(ரலி) கூறியதாவது, “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக முஹம்மத் குறித்து இன்ஜீலில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது. அவர் முரட்டு சுபாவம் உடையவராகவோ, அகம்பாவம் கொண்டவரகவோ, சந்தைகளில் சச்சரவு செய்பவராகவோ இருக்க மாட்டார். அவர் தீமைக்கு பகரமாக தீங்கிழைப்பவராக இருக்கமாட்டார். மாறாக பொறுத்து கொள்பவராகவும், மன்னிக்கக்கூடியவராகவும் இருப்பார். (முஸ்னத் இஸ்ஹாக் இப்னு ரஹவைஹ் 1610)

ஆதாரம் 7:

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻗﺎﻝ ﻧﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻜﺮﻳﻢ، ﻗﺎﻝ: ﻧﺎ ﻧﺼﺮ ﺑﻦ ﻏﺎﺯﻳﺔ، ﻗﺎﻝ: ﻧﺎ اﺑﻦ ﻋﻴﺎﺵ، ﻋﻦ ﻳﺰﻳﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﺳﻌﻴﺪ اﻟﻘﻴﺴﻲ، ﻗﺎﻝ: ﻧﺎ ﺭﺟﻞ، ﻓﻲ ﻣﺠﻠﺲ ﻣﻜﺤﻮﻝ ﻗﺎﻝ: ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ: ﻃﻮﺑﻰ ﻟﻠﻤﺘﺮاﺣﻤﻴﻦ، ﻓﻲ ﺃﻭﻟﺌﻚ اﻟﻤﺮﺣﻮﻣﻮﻥ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ، ﻃﻮﺑﻰ ﻟﻠﻤﺘﻮاﺿﻌﻴﻦ، ﻓﻲ ﺃﻭﻟﺌﻚ اﻟﻤﺮﻓﻮﻋﻮﻥ ﻟﻤﻨﺎﺑﺮ اﻟﻤﻠﻚ ﻳﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ، ﻃﻮﺑﻰ ﻟﻠﻤﻄﻬﺮﺓ . "
யஜீத் இப்னு சயீத் அல் கைஸ் கூறியதாவது மக்ஹூலின் சபையில் இருந்த மனிதர் : "இஞ்சீலில் பின்வருமாறு எழுதப்பட்டள்ளது: கியாம நாளில் எழுப்பப்படுபவர்களில் கருணையாளர்கள் பாக்கியவான்கள். கியாம நாளில் அரசர்களில் அடக்கமுடையவர்கள் பாக்கியவான்கள். தூய்மையடைந்தவர்கள் பாக்கியவான்கள்" என்று கூறினார். (அல் ஜுஹ்த் லி அபூ தாவுத் 2)

ஆதாரம் 8:

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺣﺎﺗﻢ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﻃﺮﻳﻒ، ﻋﻦ ﺇﺳﻤﺎﻋﻴﻞ، ﻋﻦ ﺛﻌﻠﺒﺔ ﺑﻦ ﻣﺴﻠﻢ، ﻋﻦ ﺃﺑﻲ ﻋﻤﺮاﻥ اﻷﻧﺼﺎﺭﻱ: ﻗﺎﻝ: ﻭﺳﻤﻌﺖ ﺑﻌﺾ ﻣﻦ ﻳﻘﺮﺃ اﻟﻜﺘﺐ: ﺇﻧﻪ ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ: «ﺃﻓﻠﺢ اﻟﺬﻳﻦ ﻳﺼﻠﺤﻮﻥ ﺑﻴﻦ اﻟﻨﺎﺱ، ﺃﻭﻟﺌﻚ ﺧﺼﺎﺋﺺ اﻟﻠﻪ ﻣﻦ ﺧﻠﻘﻪ
அபீ இம்ரான் அல் அன்ஸாரி கூறியதாவது: சிலர் வேதங்களில் வாசிக்கிறதை கேட்டுள்ளேன். இது இஞ்சீலில் எழுத்தப்பட்டுள்ளது. மனிதர்களுக்கிடையே சமாதானம் செய்பவர்கள் வெற்றியாளர்கள். இது தன்னை படைத்த இறைவனின் பண்பாகும். (அல் ஜுஹுத் இப்னு அபீ ஹாத்திம் 6)

 ஆதாரம் 9:

ﺳﻤﻌﺖ ﺷﻌﻴﺐ ﺑﻦ ﻋﻠﻲ ﺑﻦ ﺷﻌﻴﺐ اﻟﻘﺎﺿﻲ، ﺑﻬﻤﺪاﻥ ﻳﻘﻮﻝ: ﺳﻤﻌﺖ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺃﻭﺱ اﻟﻤﻘﺮﺉ، ﻳﻘﻮﻝ: ﺛﻨﺎ ﺇﺑﺮاﻫﻴﻢ ﺑﻦ اﻟﺤﺴﻴﻦ، ﺛﻨﺎ ﻣﻬﺪﻱ ﺑﻦ ﺃﺑﻲ ﻣﻬﺪﻱ، ﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻤﻠﻚ اﻟﺬﻣﺎﺭﻱ، ﺛﻨﺎ ﺧﺎﻟﺪ ﺑﻦ ﻳﺰﻳﺪ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﻭﻫﺒﺎ، ﻳﻘﻮﻝ: §ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ: اﻟﺮﺷﻮﺓ ﺗﻌﻤﻲ ﻋﻴﻨﻲ اﻟﺤﻜﻴﻢ، ﻓﻜﻴﻒ ﻣﺒﻠﻐﻬﺎ ﻣﻦ اﻟﺠﺎﻫﻞ؟
ஹாலித் இப்னு யஸீத் கூறியதாவது, " இஞ்சீலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: லஞ்சம் அறிவாளியின் கண்ணையும் குருடாக்கும், அறிவிலி எப்படி செலவு செய்வான்??(அதுபோல)." என்பதை நான் செவியுற்றுள்ளேன். (அல் ஃபவாயித் அபீ யஃலா அல் ஹலீலி 17)

 ஆதாரம் 10:

ﺣﺪﻳﺜﻪ ﺃﺧﺒﺮﻧﺎ ﺃﺑﻮ اﻟﻤﻈﻔﺮ ﺑﻦ اﻟﻘﺸﻴﺮﻱ ﺃﻧﺎ ﺃﺑﻮ ﻋﺜﻤﺎﻥ اﻟﺒﺤﻴﺮﻱ ﺃﻧﺎ ﻭاﻟﺪﻱ ﺃﺑﻮ ﻋﻤﺮﻭ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺃﺣﻤﺪ اﻟﺤﺎﻓﻆ اﻟﺒﺤﻴﺮﻱ ﺃﻧﺎ ﺃﺑﻮ اﻟﻘﺎﺳﻢ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺳﻌﻴﺪ اﻷﻧﺪﻟﺴﻲ ﻣﻦ ﻛﺘﺎﺑﻪ ﻧﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ اﻟﻘﺎﺿﻲ ﻧﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ اﻟﺤﺴﻦ ﺑﻦ ﻗﺘﻴﺒﺔ اﻟﻌﺴﻘﻼﻧﻲ ﻧﺎ ﺃﺣﻤﺪ ﺑﻦ اﻟﻮﻟﻴﺪ ﺑﻦ ﺑﺮﺩ ﻧﺎ ﺿﻤﺮﺓ ﺑﻦ ﺭﺑﻴﻌﺔ ﻋﻦ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﻤﺮﻭ اﻟﺴﻴﺒﺎﻧﻲ ﻗﺎﻝ ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ اﺳﺘﻮﺻﻮا ﺧﻴﺮا ﺑﻤﻦ ﻳﻘﺪﻡ ﻋﻠﻴﻜﻢ ﻣﻦ ﻏﻴﺮ ﺑﻼﺩﻛﻢ ﻣﻦ اﻟﻐﺮﺑﺎء
    யஹ்யா இப்னு அபீ அம்ரூ அஷ்ஷைபானி கூறியதாவது: "உங்களைத் தவிர வேறு நாட்டிலிருந்து உங்களிடம் வரும் அந்நியர்களிடம் அன்பாக இருங்கள் என்று இஞ்சீலில் எழுத்தப்பட்டுள்ளது (தாரிக் திமிஷ்க் 64/166)

ஆதாரம் 11:

ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺤﻤﺪ، ﺃﻧﺎ ﺃﺑﻮ اﻟﺤﺴﻦ ﻋﻠﻲ ﺑﻦ ﻣﻌﺮﻭﻑ اﻟﺒﺰاﺯ، ﻧﺎ ﺃﺑﻮ ﻋﻴﺴﻰ ﻣﺤﻤﺪ ﺑﻦ اﻟﻬﻴﺜﻢ ﺑﻦ ﺧﺎﻟﺪ، ﻧﺎ ﺇﺑﺮاﻫﻴﻢ ﺑﻦ ﺳﻌﻴﺪ اﻟﺠﻮﻫﺮﻱ، ﻧﺎ ﻫﺎﺷﻢ ﺑﻦ اﻟﻘﺎﺳﻢ، ﻋﻦ ﺻﺎﻟﺢ اﻟﻤﺰﻱ، ﻋﻦ ﺃﺑﻲ ﻋﻤﺮاﻥ اﻟﺠﻮﻧﻲ، ﻗﺎﻝ: ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ: ﺗﻌﻤﻠﻮﻥ اﻟﺨﻄﺎﻳﺎ ﻭﺗﻨﻜﺮﻭﻥ اﻟﻌﻘﻮﺑﺔ "
அபீ இம்ரான் அல் ஜூனி கூறியதாவது: நீங்கள் "பாவங்களைச் செய்கிறீர்கள், அதற்கான தண்டனையை மறுக்கிறீர்கள்" என்று இஞ்சீலில் எழுதப்பட்டுள்ளது. (அல் ஜஸா ஸாதஸ் 10)

ஆதாரம் 12:

ﻗﺘﺎﺩﺓ: ﻣﺜﻞ ﺃﺻﺤﺎﺏ ﻣﺤﻤﺪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ ﺃﻧﻪ ﺳﻴﺨﺮﺝ ﻗﻮﻡ ﻳﻨﺒﺘﻮﻥ ﻧﺒﺎﺕ اﻟﺰﺭﻉ ﻳﺄﻣﺮﻭﻥ ﺑﺎﻟﻤﻌﺮﻭﻑ ﻭﻳﻨﻬﻮﻥ ﻋﻦ اﻟﻤﻨﻜﺮ
கத்தாதா கூறியதாவது: முஹம்மத்( ஸல்) அவர்களது தோழர்கள் போன்றவர்கள் குறித்து இஞ்சீலில் " நன்மையை ஏவி தீமையை தடுப்பதை விதைக்கும் மக்கள் வருவார்கள்" என்று எழுதப்பட்டுள்ளது (தஃப்ஸீர் அல் ஹாஸன் 4/173)

ஆதாரம் 13:

ﻋﻦ ﻛﻌﺐ اﻷﺣﺒﺎﺭ ﻗﺎﻝ: ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ: "ﻳﺎ ﻋﻴﺴﻰ، ﻗﻠﺐ ﻻ ﻳﺨﺸﻊ ﻋﻤﻠﻪ ﻻ ﻳﻨﻔﻊ، ﻭﺻﻮﺗﻪ ﻻ ﻳﺴﻤﻊ، ﻭﺩﻋﺎﺅﻩ ﻻ ﻳﺮﻓﻊ".
கஃப் அல் அஹ்பார் கூறியதாவது: இது இஞ்சீலில் எழுதப்பட்டுள்ளது: "ஓ ஈஷாவே! தன்னைத் தாழ்த்திக்கொள்ளாத இதயத்தின் வேலை பயனளிக்காது, அதன் குரல் கேட்கப்படாது, அதன் துவா ஏற்கப்படாது"((தஃஸீர் ரஜப் அல் ஹன்பலி 2/17)

ஆதாரம் 14:


ﻭﻋﻦ ﺃﺑﻲ ﺣﺎﺯﻡ اﻟﻘﻴﺴﺎﺭﻱ ﻗﺎﻝ: ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ: "ﻳﺎ ﻋﻴﺴﻰ، اﻟﺤﻖ ﻭاﻟﺤﻖ ﺃﻗﻮﻝ: ﺇﻧﻲ ﺃﺣﺐ ﺇﻟﻰ ﻋﺒﺪﻱ ﻣﻦ ﻧﻔﺴﻪ اﻟﺘﻲ ﺑﻴﻦ ﺟﻨﺒﻴﻪ ".
“ ‘ஈஷாவே! உண்மைக்கு உண்மையாக நான் சொல்கிறேன்: என் அடியானுக்கு அவனது இரு பக்கங்களுக்கு இடையே உள்ள ஆன்மாவை விட நான் மிகவும் பிரியமானவன்.’ என்று இஞ்சீலில் எழுதப்பட்டுள்ளது”, என்று அபீ ஹாசம் அல்கைஸாரி கூறினார் (தஃஸீர் ரஜப் அல் ஹன்பலி 2/556)

ஆதாரம் 15:

ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ: ﻛﻤﺎ ﺗﺪﻳﻦ ﺗﺪاﻥ. ﻭﺑﺎﻟﻜﻴﻞ اﻟﺬﻱ ﺗﻜﻴﻞ ﺗﻜﺘﺎﻝ."ﻓﺮ - ﻋﻦ ﻓﻀﺎﻟﺔ ﺑﻦ ﻋﺒﻴﺪ" 
நீங்கள் தீர்ப்பளிப்பது போல் நியாயம் தீர்க்கப்படுவீர்கள். எதை கொண்டு அளந்தீர்களோ அதை கொண்டே அளக்கப்படுவீர்கள் என்று இஞ்சீலில் எழுத்தப்பட்டுள்ளது என்று ஃபதாலா இப்னு உபைத் கூறினார்கள். (கன்சுல் அஹ்மல் 43031)

ஆதாரம் 16:

ﻣﻛﺘﻮﺏ ﻓﻲ اﻹﻧﺠﻴﻞ: اﺑﻦ ﺁﺩﻡ! ﺃﺧﻠﻘﻚ ﻭﺃﺭﺯﻗﻚ ﻭﺗﻌﺒﺪ ﻏﻴﺮﻱ! اﺑﻦ ﺁﺩﻡ ﺗﺪﻋﻮﻧﻲ ﻭﺗﻔﺮ ﻣﻨﻲ، اﺑﻦ ﺁﺩﻡ! ﺗﺬﻛﺮﻧﻲ ﻭﺗﻨﺴﺎﻧﻲ، اﺑﻦ ﺁﺩﻡ! اﺗﻖ اﻟﻠﻪ ﺛﻢ ﻧﻢ ﺣﻴﺚ ﺷﺌﺖ. "ﺃﺑﻮ ﻧﻌﻴﻢ، ﻭاﺑﻦ ﻻﻝ - ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ".
இப்னு உமர்(ரலி) கூறியதாவது :ஆதமின் மகனே! நான் உன்னை படைத்து உணவளிப்பது என்னை மட்டுமே வணங்குவதற்காகத்தான். ஆதமின் மகனே! என்னை நீ அழைத்தால் ஓடிவருவேன். ஆதமின் மகனே! என்னை நினைவு கூறு, உன்னை நான் நினைவு கூறுவேன். ஆதாமின் மகனே! அல்லாஹ்விற்கு அஞ்சிய நிலையில் எங்கு வேண்டுமானலும் நீ உறங்கு (கன்சுல் அஹ்மல் 44005)
        மேற்குறிபிட்ட வசனங்கள் தெளிவாக ஒரு விஷயத்தை இங்கு பதிவு செய்கிறன. அதாவது ஈஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய வேதம் இன்ஜீல். இஸ்லாமியர்களின் பார்வையில் இறைவேதம் என்பது அல்லாஹ்வின் சொற்களை மட்டுமே கொண்டிருக்கும். ஏனைய மனிதர்களின் விவரிப்புக்ளை அது கொண்டிருக்காது. இன்றிருக்கும் “Gospel According to Matthew”, “Gospel According to Mark”, “Gospel According to Luke”, “Gospel according to John” என்று கிறித்தவ பைபிளே சாட்சி கூறிக்கொண்டிருக்கும் போது அவர்களே அதில் இருந்து முரண்பட்டு இந்த நற்செய்தி நூல்கள், ஈஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் நேரடியாக கொடுத்தான் என்று கூறுவதே நகைமுரண். மேலும் அல்லஹ்விடம் இருந்து இறைச்செய்தி வர வர, அல்குர்ஆனை, எழுத நபி(சல்) அவர்கள் ஜைத்(ரலி) போன்ற பல எழுத்தர்களை நியமித்திருந்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இஸ்லாமிய ஆவணங்களில் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் குர்ஆனை போன்று தற்போது இருக்கும் நற்செய்தி நூல்களை, இறைச்செய்தி வர வர, எழுதுவதற்கு இந்த மத்தேயூ, லூக்கா, மாற்கு, யோவான் ஆகியோரை இயேசு பணித்திருந்தார் என்பதற்கு எந்த ஆவணங்களும் கிறித்தவ ஏடுகளிலோ, வரலாற்று நூல்களிலோ இல்லை.  கர்த்தரின் வேத வெளிப்படாக, இயேசு பிரித்தறிவித்த அனைத்தையும் முழுமையாக மனனமிட்டு தொகுத்தவர்கள் இருந்தார்கள் என்பதற்காவது  ஏசுவின் சமகால ஆதாரம் எதுவும் இருக்கிறதா, என்றால் அதுவும் இல்லை. அப்படி ஏதேனும் ஆதாரங்கள் இருந்தாலாவது ஏசுவிற்கு அல்லாஹ் இறைச்செய்தி கொடுத்தான், அந்த இறைசெய்திகள் மட்டும் ஒன்றிணைக்கப்பட்டு இன்ஜீல் என்றானது என்று கிறித்தவர்கள் வாதிக்க சிறு வாய்ப்பாக இருந்திருக்கும். ஆனால் நற்செய்தி நூலை வாசிக்கும் யாரும், அதன் உள்ளடக்கத்தை அறிந்த யாரும், இது இறைவனிடம் இருந்து வந்த வஹீ-இறைச்செய்தி அல்ல என்று கூறிவிடுவார்கள். மாறாக இது இஸ்லாமில் கைகொள்ளும் ஸீரா போன்ற ஒரு நூல் என்று கூறிவிடுவார்கள்,(இஸ்லாமிய ஸீராவில் கூட அறிவிப்பாளர் தொடருடன் செய்திகள் பல இருக்கும் என்பது வேறு விடயம்). அப்படி இருக்க இன்றிருக்கும் புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்கள்தான், அல்லாஹ்வால் ஈஸா(அலை) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இன்ஜீல் என்று கூறுவது எல்லாம் மிக கேலிக்குரியது. மேலும் இன்றிருக்கும் நற்செய்தி நூல்கள்தான் இன்ஜீல் என்று வாதிடுபவர்கள் மேற்குறிபிட்ட வசனங்கள் அனைத்தும் ஒரு சேர அமைந்த நூலை இன்றிருக்கும் புதிய ஏற்பாட்டில் இருந்து காட்டுவார்களா??? இவர்களது பாஷையில் சொல்வதாக இருந்தால் திராணி இருந்தால் இவர்கள் வைத்திருக்கும் புதிய ஏற்பாட்டில் இருந்து இதைகாட்ட வேண்டும் நற்செய்தி நூல்கள்தான் இன்ஜீல் என்று வாதிடுபவர்கள்…

முன்சென்ற வேதத்தை பாதுகாக்க இயலாதவனா அல்லாஹ்???


        நபி(ஸல்) அவர்களது காலத்துவரை இருந்த இன்ஜீல் இப்போது இல்லை. அது அழிக்கப்பட்டுவிட்டது என்று கூறியதும் கிறித்தவ மிசனரிகள் அடுத்ததாக முன் வைக்கும் வாதம், “முன்சென்ற வேதமான இன்ஜீலை ஏன் பாதுகாக்கவில்லை? எனவே முன்சென்ற வேதத்தை பாதுகாக்க இயலாதவன் இறைவனாக இருக்க முடியாது” என்பதே ஆகும். ஆனால் அல்லாஹ் எந்த இடத்திலும் இன்ஜீலை தான் பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்ததாக அல் குர்ஆனில் எந்த இடத்திலும் அல்லாஹ் குறிப்பிடவில்லை. மாறாக அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.
    (நபியே!) இவ்வாறே அரபி (மொழி)யில் சட்ட திட்டங்களைக் கொண்டதாக, இ(வ் வேதத்)தை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்; எனவே உமக்கு ஞானம் வந்த பின்னரும் அவர்களுடைய (வீணான) இச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து (உம்மை இரட்சிக்கும் உற்ற) உதவியாளரோ, பாதுகாவலரோ (எவரும்) உமக்குக் கிடைக்க மாட்டார். (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம்; மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை ஒவ்வொரு தவணைக்கும் ஒரு  ஏடு உள்ளது. (எனினும்,) தான் நாடியதை (அதிலிருந்து) அல்லாஹ் அழித்து விடுவான். (தான் நாடியதை அதில்) நிலைத்திருக்கவும் செய்வான் - அவனிடத்திலேயே உம்முல் கிதாப் (மூலப் பதிவேடும்) இருக்கறது.(அல் குர்ஆன் 13:37-39)
    மேற்குறிபிட்ட வசனமே போதுமானது அல்லாஹ் ஏன் முன்சென்ற வேதங்களை பதுகாக்கவில்லை என்பதற்கு. ஆக்கலும் அழித்தலும் அவனது நாட்டத்தை பொறுத்தது. இதில் சுய விருப்பம் கொள்ள யாருக்கும் அதிகாரம் இல்லை. மாறாக அல்லாஹ் குர்ஆனை பாதுகாப்பதில் அவன் பொறுப்பெடுத்துக்கொண்டான். இன்ஜீலை பாதுக்காக்காதவன் இறைவனா என்று கேள்வியை முன்வைப்பவர்கள், அல்குர்ஆன் கூறும் இன்ஜீலில் “அல்லாஹ் இன்ஜீலை பாதுகாப்பேன்” என்று வாக்களித்ததை காட்ட வேண்டும் அல்லது அல்குர்ஆனில் இன்ஜீலை பாதுகாப்பேன் என்று கூறப்பட்டிருப்பதையாவது காட்ட வேண்டும். இவர்கள் வைத்திருக்கும் பைபிளில் இருந்து எதையாவது காட்டுவது நியாயம் ஆகாது, அவர்களது “Gospel According to Matthew”, “Gospel According to Mark”, “Gospel According to Luke”, “Gospel according to John” ஆகியவை இஸ்லாம் கூறும் இன்ஜீல் அல்ல….

Reference:
  1.   Margins and Metropolis: Authority across the Byzantine Empire P.No.340
  2.   Christianity, Book-Burning and Censorship in Late Antiquity P.No.69-70
  3.   Christianity, Book-Burning and Censorship in Late Antiquity P.No.76
  4.   Christianity, Book-Burning and Censorship in Late Antiquity P.No.71
  5.   Christianity, Book-Burning and Censorship in Late Antiquity P.No.115
  6.   Books on Fire- The Destruction of Libraries throughout History P.No.324 
  7.   Christianity, Book-Burning and Censorship in Late Antiquity P.No.100
  8.   Margins and Metropolis: Authority across the Byzantine Empire P.No.342
  9.   Margins and Metropolis: Authority across the Byzantine Empire P.No.342
  10.   Christianity, Book-Burning and Censorship in Late Antiquity P.No.274
  11.   Margins and Metropolis: Authority across the Byzantine Empire P.No.342
  12.   Margins and Metropolis: Authority across the Byzantine Empire P.No.349
  13.   Christianity, Book-Burning and Censorship in Late Antiquity P.No.276
  14.   Books on Fire- The Destruction of Libraries throughout History P.No.66
  15.   The Crusades by Asbridge Thomas P.No.174
  16.   Books on Fire- The Destruction of Libraries throughout History P.No.66
  17.   Christianity, Book-Burning and Censorship in Late Antiquity P.No.259
  18.   The Cathars and the Albignesian Crusade- A Source book
  19.   The Albignesian Crusade by Jonathan Sumption

Thursday, November 30, 2023

அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) மட்டும்தான் சாட்சியா???

  بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) மட்டும்தான் சாட்சியா???
 
        குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகள் மற்றும் கிறித்தவ மிசனரிகளின் விமர்சனங்களுக்கான மறுப்பை நாம் தொடராக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்கள் குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பும் விமர்சனத்திற்கான பதிலை இந்த கட்டுரையில் காணவுள்ளோம் இன் ஷா அல்லாஹ்.

 

இஸ்லாமோஃபோபுகளின் வாதமும் அதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களும்

ஆதாரம் 1:
ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) - அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார்.
………………….எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை. (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்யுன்) அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128 , 129) (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர். (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது. இந்த ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. இப்ராஹீம் இப்னு ஸஅத்(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், '(அவ்விரு வசனங்கள்) 'குஸைமா'(ரலி) அல்லது 'அபூ குஸைமா'(ரலி) அவர்களிடம் இருந்தன' என (ஐயப்பாட்டுடன்) அறிவிக்கப்பட்டுள்ளது. (ஸஹீஹ் புகாரி 4679, மேலும் பார்க்க ஸஹீஹ் புகாரி 4986,4989,7191)

ஆதாரம் 2:
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.
        நான் திருக்குர்ஆனைப் பல ஏடுகளில் பிரதியெடுத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்த, 'அல்அஹ்ஸாப்' அத்தியாயத்தைச் சேர்ந்த இறைவசனம் ஒன்று (அதில்) இல்லாதிருப்பதைக் கண்டேன். நான் அதை குஸைமா இப்னு ஸாபித் அல் அன்சாரீ(ரலி) அவர்களிடம் தான் பெற்றேன். (ஒரு வழக்கின் போது) அவரின் சாட்சியத்தை இரண்டு மனிதர்களின் சாட்சியத்திற்குச் சமமாக நபி(ஸல்) அவர்கள் கருதியிருந்தார்கள்.  அந்த இறைவசனம் இதுதான்: அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் மரணமடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்றத் தருணம்) எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23) (ஸஹீஹ் புகாரி 2807,மேலும் பார்க்க:4049, 4784, 4988)

ஆதாரம் 3:

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ أَنَّ الْحَكَمَ بْنَ نَافِعٍ حَدَّثَهُمْ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُمَارَةَ بْنِ خُزَيْمَةَ أَنَّ عَمَّهُ حَدَّثَهُ وَهُوَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَ فَرَسًا مِنْ أَعْرَابِيٍّ فَاسْتَتْبَعَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَقْضِيَهُ ثَمَنَ فَرَسِهِ فَأَسْرَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَشْيَ وَأَبْطَأَ الْأَعْرَابِيُّ فَطَفِقَ رِجَالٌ يَعْتَرِضُونَ الْأَعْرَابِيَّ فَيُسَاوِمُونَهُ بِالْفَرَسِ وَلَا يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَهُ فَنَادَى الْأَعْرَابِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنْ كُنْتَ مُبْتَاعًا هَذَا الْفَرَسِ وَإِلَّا بِعْتُهُ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ سَمِعَ نِدَاءَ الْأَعْرَابِيِّ فَقَالَ أَوْ لَيْسَ قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَقَالَ الْأَعْرَابِيُّ لَا وَاللَّهِ مَا بِعْتُكَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَلَى قَدْ ابْتَعْتُهُ مِنْكَ فَطَفِقَ الْأَعْرَابِيُّ يَقُولُ هَلُمَّ شَهِيدًا فَقَالَ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ أَنَا أَشْهَدُ أَنَّكَ قَدْ بَايَعْتَهُ فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خُزَيْمَةَ فَقَالَ بِمَ تَشْهَدُ فَقَالَ بِتَصْدِيقِكَ يَا رَسُولَ اللَّهِ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَةَ خُزَيْمَةَ بِشَهَادَةِ رَجُلَيْنِ

உமாரா பின் குஸைமா தனது தந்தையின் சகோதரி கூறியதாக கூறியதாவது:
        நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் குதிரையை விலைபேசி முடித்தார்கள். அந்தக் கிராமவாசி (அதற்கான கிரயத்தைப் பெறுவதற்காக) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரைந்து நடக்க, அந்தக் கிராமவாசி மெதுவாக நடந்து வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விலைபேசி வாங்கியதை அறியாத மக்கள் அந்தக் கிராமவாசியிடம் கூடுதல் விலைக்கு கேட்கலானார்கள். அப்போது கிராமவாசி நபிகள் நாயகத்தை உரத்த சப்தத்தில் அழைத்து நீங்கள் இதை வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நான் மற்றவருக்கு விற்று விடுவேன் என்று கூறினார். உடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்றார்கள். நான் தான் உன்னிடம் விலை பேசி வாங்கி விட்டேனே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தக் கிராமவாசி அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இதை உங்களுக்கு விற்கவில்லை என்றார். இல்லை நான் உன்னிடம் இதை விலைக்கு வாங்கி விட்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது கிராமவாசி இதற்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார். அப்போது குஸைமா என்ற நபித்தோழர் கிராமவாசியைப் பார்த்து நீ நபிகள் நாயகத்திடம் விற்றாய் என்று சாட்சி கூறுகிறேன் என்றார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குஸைமாவிடம் நீ எப்படி சாட்சி கூறினாய் என்று கேட்டார்கள். உங்கள் மீது உள்ள நம்பிக்கையால் சாட்சி கூறினேன் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது சாட்சியத்தை இருவரின் சாட்சியத்துக்குச் சமமாக ஆக்கினார்கள். (அபூதாவூத் 3130)

மேற்குறிபிட்ட ஆதாரங்களின் ஊடாக இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் வாதங்கள்:

வாதம் 1:
அல்குர்ஆன் 9:128-129, 33:23 ஆகிய வசனங்கள் ஒரே சாட்சியினால்தான் கூறப்பட்டுள்ளது, எனவே அது குர்ஆன் தொகுப்பு குழுவிற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு மாற்றமான ஒன்று. எனவே இம்மூன்று வசனங்களும் ஆதாரமற்றவை.

வாதம் 2:
ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தின் முதல் குர்ஆன் தொகுப்பின் போது ஒரு வசனம் விடுபட்டுவிட்டது அதனை மீண்டும் உஸ்மான்(ரலி) அவர்களது காலத்தில் தான் ஸைத்(ரலி) கணடறிந்தார்கள். எனவே முதல் தொகுப்பு அரைகுறையான தொகுப்பு.

வாதம் 3:
ஆதாரம் 3ன் அடிப்படையில் காணும் போது நிகழிடத்தில் இல்லாத குஸைமா(ரலி) பொய்சாட்சியம் பகர்ந்துள்ளார். எனவே அல்குர்ஆன் 9:128-129, 33:23 ஆகிய வசனங்கள் குறித்த அவரது சாட்சியம் நம்பகமற்ற பொய் சாட்சி எனவே அம்மூன்று வசனங்களும் குர்ஆனின் வசனங்களாக இருக்க முடியாது என்பது இஸ்லாமோஃபோபுகள் மற்றும் கிறித்தவ மிசனரிகளின் வாதம்.

நமது விளக்கமும் ஆதாரங்களும்


அல்குர்ஆன் 9:128-129 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) மட்டும்தான் சாட்சியா


        அல் குர்ஆன் 9:128-129 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) அவர்கள் மட்டும்தான் சாட்சி என்பது போல் அவர்கள் முன்வைக்கும் ஆதாரத்தில் தெரிந்தாலும் மொழிபெயர்ப்பாளர்கள் அதில் “எழுதப்பட்டு” என்ற குறிப்பை அடைப்புக்குறிக்குள் இட்டுள்ளதை காணமுடிகிறது. அதாவது எழுத்து வடிவில் குஸைமா(ரலி) அவர்களிடம் மட்டுமே இருந்தது என்பதை குறிக்கும்படியாக அவர்கள் கூறியுள்ளனர். அதற்கான காரணம் பின்வரும் ஆதாரங்கள் தான்.

ஆதாரம் 1: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களது சாட்சியம்

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺩاﻭﺩ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺇﺑﺮاﻫﻴﻢ ﺑﻦ ﺳﻌﺪ، ﻋﻦ اﻟﺰﻫﺮﻱ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﻴﺪ ﺑﻦ اﻟﺴﺒﺎﻕ، ﺃﻥ ﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ، ﺣﺪﺛﻪ ﻗﺎﻝ: " ﻓﻘﺪﺕ ﺁﻳﺔ ﻛﻨﺖ ﺃﺳﻤﻊ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﺮﺃ ﺑﻬﺎ، ﻓﺎﻟﺘﻤﺴﺘﻬﺎ، ﻓﻮﺟﺪﺗﻬﺎ ﻋﻨﺪ ﺧﺰﻳﻤﺔ ﺑﻦ ﺛﺎﺑﺖ {ﻟﻘﺪ ﺟﺎءﻛﻢ ﺭﺳﻮﻝ ﻣﻦ ﺃﻧﻔﺴﻜﻢ   (اﻟﺘﻮﺑﺔ :128) اﻵﻳﺔ، ﻓﺄﻟﺤﻘﺘﻬﺎ ﻓﻲ ﺳﻮﺭﺗﻬﺎ

 ஸைத் இப்னு ஸாபித்(ரலி) “நான் ஒரு ஆயத்தை விட்டுவிட்டேன், அதனை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஓத கேட்டுள்ளேன், அதனை தேடினேன், அது குஸைமா இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் பெற்றுக்கொண்டேன்., ‘நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்.(அத் தவ்பா:128)’ என்ற அந்த ஆயத்தை அந்த சூராவில் சேர்த்துக்கொண்டேன்.” என்று கூறினார்கள் (முஸ்னத் அபீதாவூத் அல் தயாலிசி 612)

ஆதாரம் 2: உபை இப்னு கஃஅப்(ரலி) அவர்களது சாட்சியம்

حَدَّثَنَا أَبِي، ثنا يَحْيَى بْنُ الْمُغِيرَةِ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنِ الرَّبِيعِ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ " أَنَّهُمْ جَمَعُوا الْقُرْآنَ، فَلَمَّا انْتَهَوْا إِلَى هَذِهِ الْآيَةِ: {ثُمَّ انْصَرَفُوا صَرْفَ اللَّهُ قُلُوبَهُمْ} [التوبة: 127] فَظُنُّوا آخِرَ مَا نَزَلَ مِنَ الْقُرْآنِ فَقَالَ لَهُمْ أُبَيُّ بْنُ كَعْبٍ: إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْرَأَنِي بَعْدَ هَذَا آيَتَيْنِ: {لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ} [التوبة: 128] إِلَى قَوْلِهِ: {لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ} [التوبة: 129]

அபூ ஆலியா,  உபை இப்னு கஃஅப்(ரலி) வழியாக அறிவிப்பதாவது:              அவர்கள் குர்ஆனை தொகுத்து கொண்டிருக்கையில், “பிறகு அவர்கள திரும்பி விடுகின்றனர்; அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான். (அத் தவ்பா:127)” என்ற ஆயத்தை அடைந்த போது, இதுதான் குர்ஆனின் இறுதி ஆயத் என்று எண்ணினார்கள். அப்போது உபை இப்னு கஃஅப், “இதன் பிறகு நபி(ஸல்) அவர்கள் இரண்டு ஆயத்களை என்னிடம் ஓதிக்காட்டியுள்ளார்கள், அவை ‘நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்.( (அத் தவ்பா:128)’ என்பதிலிருந்து ‘அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி" என்று நீர் கூறுவீராக!’ (அத் தவ்பா:12) வரை” என்று கூறினார்கள் (தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்தம் 10172)

மேற்குறிபிட்ட செய்தியில் குஸைமா(ரலி) அவர்கள் மட்டும் இந்த வசனத்திற்கு சாட்சியாக இருக்கவில்லை. மாறாக ஸைத் இப்னு ஸாபித்(ரலி), உபை இப்னு கஃஅப்(ரலி) ஆகியோரும் இந்த 9:128-129 வசனத்திற்கு சாட்சியாக இருந்துள்ளனர். எனவே ஒற்றை சாட்சியத்தின் அடிப்படையில் இந்த வசனங்கள் குர்ஆனில் இணைக்கப்பட்டுள்ளது என்பது எல்லாம் அரைவேக்காட்டு வாதம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குஸைமா(ரலி) அவர்களை தவிர யாரிடமும் அந்த வசனம் இல்லை என்பது எழுத்து பிரதியாக இல்லை என்பதைத்தான் குறிக்கும் என்பதாலேயே மொழிப்பெயர்ப்பாளர் “இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை”  என்று அடைப்புக்குறியுடன் மொழியாக்கம் செய்துள்ளார்.

அல்குர்ஆன் 33:23 வசனத்திற்கு குஸைமா(ரலி) மட்டும்தான் சாட்சியா


9:128-129 வசனம் எப்படி பலரால் அறியப்பட்டிருந்ததோ அதுபோலத்தான் 33:23 வசனமும் பலரால் அறியப்பட்டிருந்தது. அதற்கான ஆதாரத்தை இங்கு பதிவிடுகிறோம்.

ஆதாரம் 1: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களது சாட்சியம்

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்
நாங்கள் குர்ஆனுக்குப் பிததிகள் எடுத்தபோது 'அல்அஹ்ஸாப்' எனும் (33 வது) அத்தியாயத்தில் ஒரு வசனம் காணவில்லை. அதனை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். அதை நாங்கள் தேடியபோது அது குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டோம். (அந்த வசனம் இதுதான்:) 'அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெயப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் உயிரை அர்ப்பணிக்க வேண்டுமென்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்ற தக்க தருணம்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23) உடனே நாங்கள் அ(ந்த வசனத்)தை குர்ஆன் பிரதியில் அதற்குரிய அத்தியாயத்தில் இணைத்துவிட்டோம். (ஸஹீஹ் புகாரி 4988)

  ஆதாரம் 2: அனஸ்(ரலி) அவர்களது சாட்சியம்

 ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺣﺎﺗﻢ ﺑﻦ ﻧﻌﻴﻢ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﺣﺒﺎﻥ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﻋﻦ ﺳﻠﻴﻤﺎﻥ ﺑﻦ اﻟﻤﻐﻴﺮﺓ، ﻋﻦ ﺛﺎﺑﺖ، ﻋﻦ ﺃﻧﺲ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﻋﻤﻲ ﺃﻧﺲ ﺑﻦ اﻟﻨﻀﺮ: ﺳﻤﻴﺖ ﺑﻪ. ﻭﻟﻢ ﻳﺸﻬﺪ ﺑﺪﺭا ﻣﻊ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻜﺒﺮ ﺫﻟﻚ ﻋﻠﻴﻪ ﻭﻗﺎﻝ: «ﺃﻭﻝ ﻣﺸﻬﺪ ﺷﻬﺪ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻏﻴﺒﺖ ﻋﻨﻪ، ﺃﻣﺎ ﻭاﻟﻠﻪ ﻟﺌﻦ ﺃﺭاﻧﻲ اﻟﻠﻪ ﻣﺸﻬﺪا ﻓﻴﻤﺎ ﺑﻌﺪ ﻟﻴﺮﻳﻦ اﻟﻠﻪ ﻣﺎ ﺃﺻﻨﻊ» ﻗﺎﻝ: «ﻭﻫﺎﺏ ﺃﻥ ﻳﻘﻮﻝ ﻏﻴﺮﻫﺎ، ﻓﺸﻬﺪ ﻣﻊ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻮﻡ ﺃﺣﺪ ﻣﻦ اﻟﻌﺎﻡ اﻟﻤﻘﺒﻞ، ﻓﺎﺳﺘﻘﺒﻠﻪ ﺳﻌﺪ ﺑﻦ ﻣﻌﺎﺫ» ﻓﻘﺎﻝ: ﻳﺎ ﺃﺑﺎ ﻋﻤﺮﻭ «ﺃﻳﻦ؟» ﻗﺎﻝ: «ﻭاﻫﺎ ﻟﺮﻳﺢ اﻟﺠﻨﺔ، ﺃﺟﺪﻫﺎ ﺩﻭﻥ ﺃﺣﺪ، ﻓﻘﺎﺗﻞ ﺣﺘﻰ ﻗﺘﻞ، ﻓﻮﺟﺪ ﻓﻲ ﺟﺴﺪﻩ ﺑﻀﻊ ﻭﺛﻤﺎﻧﻮﻥ ﻣﻦ ﺑﻴﻦ ﻳﻌﻨﻲ ﺿﺮﺑﺔ، ﻭﺭﻣﻴﺔ، ﻭﻃﻌﻨﺔ» ﻓﻘﺎﻟﺖ ﻋﻤﺘﻲ اﻟﺮﺑﻴﻊ ﺑﻨﺖ اﻟﻨﻀﺮ ﺃﺧﺘﻪ: ﻓﻤﺎ ﻋﺮﻓﺖ ﺃﺧﻲ ﺇﻻ ﺑﺒﻨﺎﻧﻪ ﻗﺎﻝ: ﻭﺃﻧﺰﻟﺖ ﻫﺬﻩ اﻵﻳﺔ {ﻣﻦ اﻟﻤﺆﻣﻨﻴﻦ ﺭﺟﺎﻝ ﺻﺪﻗﻮا ﻣﺎ ﻋﺎﻫﺪﻭا اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻓﻤﻨﻬﻢ ﻣﻦ ﻗﻀﻰ ﻧﺤﺒﻪ ﻭﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﻨﺘﻈﺮ ﻭﻣﺎ ﺑﺪﻟﻮا ﺗﺒﺪﻳﻼ}[ اﻷﺣﺰاﺏ: 23] 

அனஸ்(ரலி)  “என் தந்தையின் சகோதரர் அனஸ் இப்னு நள்ர்(ரலி) பத்ருப் போரில் கலந்து கொள்ளவில்லை. அவர் (திரும்பி வந்தவுடன்) “இறைத்தூதர் அவர்களுடன் முதல் போரில் நான் கலந்து கொள்ளவில்லை; மீண்டும் போரில் அல்லாஹ் என்னைப் பங்குபெற வைத்தால் நான் செய்வதை (வீரமாகப் போரிடுவதை) அவன் நிச்சயம் பார்த்திருப்பான்.” என்று கூறினார்கள். அனஸ்(ரலி) கூறினார்கள் “ இன்னும் சிலவற்றை அவர் கூற விரும்பினார். அடுத்த ஆண்டில் இறைத்தூதர் அவர்களுடன் உஹத் போரில் அவர்கள் கலந்துகொண்டார்கள். ஸஅத் இப்னு முஆத்(ரலி) அவருக்கெதிரில் வரக்(கண்டு), அபூ அம்ரே! நான் சொர்க்கத்தையே விரும்புகிறேன். அதனை உஹுது மலையில் காண்கிறேன்" என்று கூறினார்.அங்கே கொல்லப்படும் வரை போரிட்டார்கள். நாங்கள் அவர் உடலில் வாளால் வெட்டப்பட்டும், ஈட்டியால் குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் இருந்த எண்பதுக்கும் மேற்பட்ட காயங்களைக் கண்டோம். அவரின் சகோதரி ரபியா பின்த் நள்ர்(ரலி) அவர்களைத்  தவிர வேறெவரும் அவரை (இன்னாரென்று) அறிந்து கொள்ள முடியவில்லை; அவரின் விரல்(நுனி)களை வைத்துத் தான் அவரை அடையாளம் காண முடிந்தது.” என்று கூறினார்கள். மேலும் அனஸ்(ரலி) "அல்லாஹ்விடம் தாம் கொடுத்த உறுதிமொழியை மெய்ப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ளனர்." என்கிற (திருக்குர்ஆன் 33:23) இறைவசனம் இறங்கியது.” என்று கூறினார்கள். (ஸுனன் அல் குப்ரா 8223, மேலும் பார்க்க திர்மிதி 3201)   

  ஆதாரம் 3: அபூதர்(ரலி) அவர்களது சாட்சியம்

ﺣﺪﺛﻨﻲ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺻﺎﻟﺢ ﺑﻦ ﻫﺎﻧﺊ، ﺛﻨﺎ ﻳﺤﻴﻰ ﺑﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻳﺤﻴﻰ اﻟﺸﻬﻴﺪ، ﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻮﻫﺎﺏ اﻟﺤﺠﺒﻲ، ﺛﻨﺎ ﺣﺎﺗﻢ ﺑﻦ ﺇﺳﻤﺎﻋﻴﻞ، ﻋﻦ ﻋﺒﺪ اﻷﻋﻠﻰ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﺃﺑﻲ ﻓﺮﻭﺓ، ﻋﻦ ﻗﻄﻦ ﺑﻦ ﻭﻫﻴﺐ، ﻋﻦ ﻋﺒﻴﺪ ﺑﻦ ﻋﻤﻴﺮ، ﻋﻦ ﺃﺑﻲ ﺫﺭ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: " ﻟﻤﺎ ﻓﺮﻍ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻮﻡ ﺃﺣﺪ ﻣﺮ ﻋﻠﻰ ﻣﺼﻌﺐ اﻷﻧﺼﺎﺭﻱ ﻣﻘﺘﻮﻻ ﻋﻠﻰ ﻃﺮﻳﻘﻪ، §ﻓﻘﺮﺃ {ﻣﻦ اﻟﻤﺆﻣﻨﻴﻦ ﺭﺟﺎﻝ ﺻﺪﻗﻮا ﻣﺎ ﻋﺎﻫﺪﻭا اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ} (اﻷﺣﺰاﺏ: 23) 

"அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை விட்டுச் சென்ற உஹத் போரின் போது, பாதையில் கொல்லப்பட்டு கிடந்த முஸ்அப் அல் அன்சாரி அவர்களை கடந்து சென்றார்கள். அப்போது “அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெயப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். (அல் குர்ஆன் 33:23) என்ற வசனத்தை ஓதினார்கள்," என்று அபூதர்(ரலி) கூறினார்கள். (முஸ்தத்ரக் அல் ஹாகிம் 4905) 

    மேற்குறிப்பிட்ட செய்திகளை காணும் போது அல்குர்ஆன் 33:23 வசனம் இறங்கிய சூழல் முதற்கொண்டு நபித்தோழர்கள் அறிந்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது. நபி(சஸல்) அவர்கள் அந்த வசனத்தை ஓதக்கேட்டதாக மேற்குறிபிட்ட நபித்தோழர்கள் சாட்சியம் பகர்கின்றனர்.  முன்பு கூறியது போலவே, 9:128-129 ஆகிய வசனங்களைப் போல அல் குர்ஆன்33:23 வசனமும் குஸைமா(ரலி) அவர்களிடம் மட்டுமே எழுத்து வடிவில் இருந்தது என்றே ஸஹீஹ் புகாரி 2807 ஹதீஸ் கூறுகிறது. எனவே  இந்த வசனம் குறித்து குஸைமா(ரலி) அவர்களது சாட்சி மட்டுமே இருப்பதாக கூறும் இஸ்லாமோஃபோபுகளின் வாதம் எந்த மதிப்பும் அற்றது என்பது உறுதியாகிறது. 

உள்ளத்தில் இவ்வசனங்கள் பாதுக்காக்கப்பட்டிருந்தால் ஏன் தேட வேண்டும்??

        இந்த இடத்தில் “உள்ளத்தில் இவ்வசனங்கள் பாதுக்காக்கப்பட்டிருந்தால் ஏன் தேட வேண்டும்? என்ற கேள்வி எழும். அதற்கான விடையை ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள், தனது ஃபத்ஹுல் பாரி- ஸஹீஹ் புகாரி 4986 ஹதீஸின் விரிவுரையில் பின்வருமாறு விளக்குகிறார்.
وكأن المراد بالشاهدين الحفظ والكتاب , أو المراد أنهما يشهدان على أن ذلك المكتوب كتب بين يدي رسول الله صلى الله  عليه وسلم , أو المراد أنهما يشهدان على أن ذلك من الوجوه التي نزل بها القرآن . وكان غرضهم أن لا يكتب إلا من عين ما كتب   بين يدي النبي صلى الله عليه وسلم لا من مجرد الحفظ

 மேலும் இரண்டு சாட்சிகள் என்பதன் நோக்கம், ஒன்று மனனம் மற்றும் எழுத்து என்பதாகும், அல்லது அவர்கள் இருவரும், எது எழுதப்பட்டுள்ளதோ, அது இறைத் தூதர்(ஸல்) அவர்களின் கட்டளையின் கீழ் எழுதப்பட்டது என்று சாட்சியம் அளித்தார்கள் என்று பொருள். மேலும் அவர்கள் மனனம் செய்யப்பட்டிருந்தால் மட்டும் அதனை எழுதவில்லை, எதனை நபி(ஸல்) அவர்களது காலத்திலேயே எழுதப்பட்டதாகவும் பெறுகிறார்களோ அதையே எழுதுவது என்பதே அவர்களது குறிக்கோளாகும். 

            அதாவது மனனத்தில் இருப்பதை மட்டும் எழுதுவதற்காக இரு சாட்சிகள் என்ற அளவுகோல் முன்வைக்கப்படவில்லை. மாறாக எது மனனமும் செய்யப்பட்டு நபி(ஸல்) அவர்களது காலத்தில் நபி(சல்) அவர்களது உத்தரவின் பேரில் எழுதவும் பட்டதோ அதனையே குர்ஆன் தொகுப்பில் இணைத்தார்கள். அதனால்தான் ஸைத்(ரலி) தானே அதனை அறிந்திருந்த போதும், அந்த வசனத்தை தேடியதாக கூறுகிறார்.

அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தின் தொகுப்பு அரைகுறையானதா???

     அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தின் தொகுப்பு அரைகுறையானது என்ற இஸ்லாமோஃபோபுகளின் இந்த வாதத்திற்கான காரணம் புகாரி ஹதீஸ் 4988 ஆகிய ஹதீஸ்களில் அடைப்புக்குறியில் “(உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) என்ற குறிப்பை மொழிபெயர்ப்பாளர்கள் சேர்த்துள்ளனர். இவ்வாறு அல் குர்ஆன் 33:23 வசனம் சேர்க்கப்பட்ட்து உஸ்மான்(ரலி) அவர்களது ஆட்சிக்காலத்தில் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அல் குர்ஆன் 33:23 வசனம் தொடர்பாக இடம் பெறும் எந்த ஹதீஸிலும் அது எந்த காலத்தின் தொகுப்பு என்ற எந்த குறிப்பும் இடம் பெறவில்லை மாறாக பின்வரும் செய்திகள், இரண்டு வசனங்களின் சேர்க்கையும் அபூபகர்(ரலி) அவர்களது காலத்திலேயே நடைபெற்றது என கூறுகிறது…….(குறிப்பு: ஸஹீஹ் புகாரி 4679 ஹதீஸை படித்துவிட்டு இந்த செய்தியை படிக்கவும்)

ﺣﺪﺛﻨﺎ ﺣﻔﺺ ﺑﻦ ﻋﻤﺮ اﻟﺪﻭﺭﻱ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﺑﻦ ﺟﻌﻔﺮ ﺃﺑﻮ ﺇﺑﺮاﻫﻴﻢ، ﻋﻦ ﻋﻤﺎﺭﺓ ﺑﻦ ﻏﺰﻳﺔ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ، ﻋﻦ ﺧﺎﺭﺟﺔ ﺑﻦ ﺯﻳﺪ ,عن زيد بن ثابت ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ: " ﻋﺮﺿﺖ اﻟﻤﺼﺤﻒ ﻓﻠﻢ ﺃﺟﺪ ﻓﻴﻪ ﻫﺬﻩ اﻵﻳﺔ {ﻣﻦ اﻟﻤﺆﻣﻨﻴﻦ ﺭﺟﺎﻝ ﺻﺪﻗﻮا ﻣﺎ ﻋﺎﻫﺪﻭا اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻓﻤﻨﻬﻢ ﻣﻦ ﻗﻀﻰ ﻧﺤﺒﻪ ﻭﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﻨﺘﻈﺮ ﻭﻣﺎ ﺑﺪﻟﻮا ﺗﺒﺪﻳﻼ}[اﻷﺣﺰاﺏ: 23] ﻗﺎﻝ: ﻓﺎﺳﺘﻌﺮﺿﺖ اﻟﻤﻬﺎﺟﺮﻳﻦ ﺃﺳﺄﻟﻬﻢ ﻋﻨﻬﺎ ﻓﻠﻢ ﺃﺟﺪﻫﺎ ﻣﻊ ﺃﺣﺪ، ﺛﻢ اﺳﺘﻌﺮﺿﺖ اﻷﻧﺼﺎﺭ ﺃﺳﺄﻟﻬﻢ ﻋﻨﻬﺎ، ﻓﻠﻢ ﺃﺟﺪﻫﺎ ﻣﻊ ﺃﺣﺪ ﻣﻨﻬﻢ، ﺣﺘﻰ ﻭﺟﺪﺗﻬﺎ ﻣﻊ ﺧﺰﻳﻤﺔ ﺑﻦ ﺛﺎﺑﺖ اﻷﻧﺼﺎﺭﻱ ﻓﻜﺘﺒﺘﻬﺎ، ﺛﻢ ﻋﺮﺿﺘﻪ ﻣﺮﺓ ﺃﺧﺮﻯ ﻓﻠﻢ ﺃﺟﺪ ﻓﻴﻪ ﻫﺎﺗﻴﻦ اﻵﻳﺘﻴﻦ: {ﻟﻘﺪ ﺟﺎءﻛﻢ ﺭﺳﻮﻝ ﻣﻦ ﺃﻧﻔﺴﻜﻢ}  [اﻟﺘﻮﺑﺔ: 128] ، ﺇﻟﻰ ﺁﺧﺮ اﻟﺴﻮﺭﺓ  ﻗﺎﻝ: ﻓﺎﺳﺘﻌﺮﺿﺖ اﻟﻤﻬﺎﺟﺮﻳﻦ ﺃﺳﺄﻟﻬﻢ ﻋﻨﻬﺎ ﻓﻠﻢ ﺃﺟﺪﻫﻤﺎ ﻣﻊ ﺃﺣﺪ ﻣﻨﻬﻢ، ﺛﻢ اﺳﺘﻌﺮﺿﺖ اﻷﻧﺼﺎﺭ ﺃﺳﺄﻟﻬﻢ ﻋﻨﻬﻤﺎ ﻓﻠﻢ ﺃﺟﺪﻫﻤﺎ ﻣﻊ ﺃﺣﺪ ﻣﻨﻬﻢ ﺣﺘﻰ ﻭﺟﺪﺗﻬﻤﺎ ﻣﻊ ﺭﺟﻞ ﺁﺧﺮ ﻳﺪﻋﻰ ﺧﺰﻳﻤﺔ ﺃﻳﻀﺎ ﻣﻦ اﻷﻧﺼﺎﺭ ﻓﺄﺛﺒﺘﻬﻤﺎ ﻓﻲ ﺁﺧﺮ ﺑﺮاءﺓ "

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) கூறியதாவது: நான் முஸ்ஹஃபை முதல் முறை சரி பார்த்தேன், அதில் "அல்லாஹ்விடம் எதைப் பற்றி உறுதிமொழி எடுத்தார்களோ அதை உண்மைப்படுத்தியோரும் நம்பிக்கை கொண்டோரில் உள்ளனர். தமது இலட்சியத்தை அடைந்தவரும் அவர்களில் உள்ளனர் (அதை) எதிர்பார்த்துக் கொண்டிருப்பவரும் அவர்களில் உள்ளனர். அவர்கள் சிறிதளவும் (வாக்கை) மாற்றவில்லை [அல்குர்ஆன் 33:23]" என்ற வசனத்தை காணவில்லை. அதனை முஹாஜிர்களிடம் தேடினேன், யாரிடமும் கிடைக்கவில்லை. பிறகு அன்ஸாரிகளிடம் தேடினேன், குஸைமா இப்னு ஸாபித் அல் அன்ஸாரி அவர்களைத் தவிர யாரிடமும் கிடைக்கவில்லை. அதனை எழுதிக்கொண்டேன். பிறகு மீண்டும் ஒருமுறை அதனை சரிபார்த்தேன். அப்போது "உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். .[அல்குர்ஆன் 9:128] என்பதிலிருந்து அந்த சூராவின் முடிவு வரை உள்ள இரு வசனங்களை காணவில்லை. அதனை முஹாஜிர்களிடம் தேடினேன், யாரிடமும் கிடைக்கவில்லை. பிறகு அன்ஸாரிகளிடம் தேடினேன், அன்ஸாரிகளில் ஒருவரான குஸைமாவிடம் தவிர யாரிடமும் கிடைக்கவில்லை. அதனை பாரஅத் சூராவின் இறுதியில் சேர்த்துவிட்டேன்." (தாரிக் மதீனா 3/1001)

 எனவே மேற்குறிபிட்ட செய்தியை காணும் போது 9:128-129 மற்றும் 33:23 ஆகிய குர்ஆன் வசனங்கள் அபூபக்ர்(ரலி) குர்ஆன் தொகுப்பிலேயே இடம் பெற்றுவிட்டது என்பதை அறிய முடிகிறது. உஸ்மான்(ரலி) அவர்கள் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்த அபூபக்ர்(ரலி) காலத்து குர்ஆன் தொகுப்பினை பிரதி எடுத்தும், ஒவ்வொரு முறையும் ஒப்பிட்டு சரிபார்த்தும் இஸ்லாமிய ஆட்சியின் அரபு அல்லாத பகுதிக்கு அனுப்பினார்கள் என்று இந்த தொடரின் பல இடத்தில் பதிவு செய்துள்ளோம். எனவே அபூபக்ர்(ரலி) காலத்து குர்ஆன் தொகுப்பு முழுமையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை… 

        மேற்குறிபிட்ட ஆதாரங்களே அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) அவர்கள் மட்டுமே சாட்சியாக இல்லை என்பதை விளக்க.  அவர்கள் முன்வைக்கும் ஆதாரம் 3ன் அடிப்படையிலும் அது தொடர்பான ஹதீஸ்களின் அடிப்படையிலும் குஸைமா(ரலி) அவர்களது சாட்சி பொய்யானது அல்ல என்பதை நிறுவ சில சிந்தனைக்கான விஷயங்களை முன்வைக்கிறோம்.

1.குஸைமா(ரலி) அவர்களது சாட்சியை வாதி பிரதி வாதியாக இருந்த நபி(ஸல்) மற்றும் அந்த கிராமவாசி ஏற்றிருக்கும் போது 14 நூற்றாண்டுகள் பிறகு வந்தவர்கள் எதன் அடிப்படையில் பொய் சாட்சி என்று கூறுகின்றனர். குறிப்பாக கிராமவாசி குஸைமா(ரலி) அவர்களது சாட்சியை பொய் சாட்சி என்று கூறினாரா???. 

 2.மேலும் அஹ்மத் 21883 ஹதீஸில் பின்வருமாறு இடம்பெறுகிறது 

 .......ﺟﺎء ﻣﻦ اﻟﻤﺴﻠﻤﻴﻦ ﻗﺎﻝ ﻟﻷﻋﺮاﺑﻲ: ﻭﻳﻠﻚ ﺇﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻟﻢ ﻳﻜﻦ ﻟﻴﻘﻮﻝ ﺇﻻ ﺣﻘﺎ. ﺣﺘﻰ ﺟﺎء ﺧﺰﻳﻤﺔ ﻟﻤﺮاﺟﻌﺔ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭﻣﺮاﺟﻌﺔ اﻷﻋﺮاﺑﻲ

......முஸ்லீம்களில் ஒருவர் கிராமவாசியிடம் " உங்களுக்கு கேடுதான்! அல்லாஹ்வின் மீதாணையாக!, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையைத் தவிர வேறு எதையும் சொல்ல மாட்டார்கள் என்று குஸைமா(ரலி), நபி(ஸல்) அவர்களையும், கிராமவாசியையும் சந்தித்து பரிசீலிக்கும் வரை கூறிக்கொண்டிருந்தார்.....

3.குஸைமா(ரலி),  நபி(ஸல்) அவர்களையும், கிராமவாசியையும் பரிசீலித்து கிராமவாசி விற்றார் என்று அறிவித்தால் அது எப்படி பொய் சாட்சியமாகும்?...ஷஹித என்ற சொல் கண்ணால் கண்டதற்கு சாட்சியம் அளிப்பதை மட்டும் குறிக்காது. பரிசீலித்து அறிவிப்பதையும் குறிக்கும். இன்றும் முஸ்லீம்கள் சொல்லும் “ஷஹாதா” அது போன்றதுதான். 

4.இஸ்லாமின் முழு அதிகாரம் படைத்த நபி(ஸல்) அவர்களே குஸைமா(ரலி) அவர்களது சாட்சியத்தை ஏற்றிருக்கும் போது, முஸ்லீம்களாகிய எங்களுக்கும், ஸைத்(ரலி) அவர்களுக்கும் அதில் எந்த சிக்கலும் இல்லை.

        மேற்குறிபிட்ட செய்திகளையும் கேள்விகளையும் அறிவுள்ள யார் ஆய்வு செய்தாலும் குஸைமா(ரலி) கூறியது பொய் சாட்சி அல்ல என்றே கூறுவார். 

        நாம் முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்களுக்கு குஸைமா(ரலி) மட்டும் ஆதாரம் அல்ல, ஸைத் இப்னு ஸாபித்(ரலி), உபை இப்னு கஃஅப்(ரலி), அனஸ்(ரலி), அபூதர்(ரலி) உள்ளிட்ட நபித்தோழர்கள் நேரடியாக அந்த வசனங்களை நபி(ஸல்) அவர்களிடமே சேவியுற்றுள்ளனர் என்பது நிரூபனம் ஆகிறது. குஸைமா(ரலி) கூறிய சாட்சியம் அவர் பரிசீலித்து வழங்கியது என்பது நிரூபனம் ஆகிறது. எனவே அது பொய் சாட்சியம் அல்ல என்பது உறுதியாகிறது. அவரது சாட்சியம் எந்த விதத்திலும் குறையுள்ளது அல்ல. இவை எல்லாவற்றுக்கும் மேலாக நபிதோழர்கள் நபி(ஸல்) அவர்களிடம் செவியுற்று அறிவிக்கும் எந்த முத்தவாதீர் கிராத்திலும் மேற்குறிபிட்ட வசனங்கள் விடுபடவில்லை என்பதிலிருந்து அல் குர்ஆன் 9:128-129 மற்றும் 33:23 ஆகிய வசனங்கள் அல் குர்ஆனின் பகுதிதான் என்று உறுதியாகிறது…..அல்ஹம்துலில்லாஹ்….