பக்கங்கள் செல்ல

Monday, September 5, 2016

மக்கா பாதுகாப்பான நகரமா?

"அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக"
-----------------------------------------------------------------------------
இயற்கைச் சீற்றங்களின் கொடுமைகளிலிருந்து அதிக அளவு பாதுகாப்பான உலக நாடுகளின் வரிசையில் கத்தார் முதலிடத்திலும், சவூதி அரேபிய மூன்றாவது இடத்திலும் உள்ளது.
1400 வருடங்களுக்கு முன்புள்ள ஒரு புத்தகத்தில் இவ்வளவு தீர்க்கமாக

சொல்லமுடியுமென்றால், அது மனித அறிவினால் நிச்சயம் முடியாது என்பது பாமரனுக்கும் தெரியும்.
திருக்குரானில் இறைவன் மக்காவின் பாதுகாப்பு பற்றி பல இடங்களில் கூறுகின்றான்:

95:3. மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-

2:125. (இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்;

14:35. நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).

29:67. அன்றியும் (மக்காவைச்) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா?

இது மனித அறிவு தான் என்று சொல்லும் பகுத்தறிவாதிகள் (!!), 21ம் நூற்றாண்டில் உள்ள அறிவியல் அறிவோடு இது போன்ற ஒரு அறிவிப்பை செய்யலாமே !
இறைவன் தன் கருணையினால் பாதுகாப்பாக அமைத்திருந்தாலும், மனித அறிவைக் கொன்டு செயல்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இவர்கள் பின்தங்கி இருப்பது வேதனைக்குரியது.


No comments:

Post a Comment