பக்கங்கள் செல்ல

Showing posts with label Female. Show all posts
Showing posts with label Female. Show all posts

Monday, February 27, 2017

"பெண் சிசுக்கொலை" - மதங்கள் என்ன சொல்கின்றன?

"பெண் சிசுக்கொலை" - மதங்கள் என்ன சொல்கின்றன?




 ஹிந்துயிசம் - ஹிந்து மத பிரமுகர்கள்  கண்டித்த போதிலும், மத/வேதங்கள் இது தொடர்பாக என்ன சொல்கின்றன என்ற விபரம் இல்லை. வேதங்களில் இது தொடர்பான விபரம் அறிந்தவர்கள்,  ஆதாரத்துடன் பதிவு செய்யுங்கள்.

இந்திய சட்டத்தில் தடை உள்ளது ஆனால் இந்த சட்டம் "ஹிந்து மத" சட்டம் அல்ல.


கிறித்துவத்திலும், யூத  மதத்திலும்  கண்டிக்கப்பட்டுள்ளது.


இஸ்லாத்திற்கு முன் அரேபியர்களிடத்தில் இந்த பழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. அதை இஸ்லாம் அடியோடு ஒழித்து, அதைக் கொலைக்குற்றமாக அறிவித்தது.


இது தொடர்பான திருக்குர்ஆன் வசனம்:

" என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது" [81:8-9]


"வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்." [17:31]

மனித சட்டங்களால் மட்டும்  இவைகளை தடுத்து நிறுத்த முடியாது.

இஸ்லாம் எப்படி இதை அடியோடு ஒழித்தது என்று பார்ப்போம்.


பெண் குழந்தைகளைக் கொல்பவர்களின் முக்கியமான  காரணம் பொருளாதார சுமை மட்டுமே.அந்தக் கவலை தீர்க்கப்பட்டால் இவை அடியோடு ஒழிந்துவிடும்.



1. வறுமைக்கு பயந்து அவர்கைளக் கொல்லாதீர்கள் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம் என்ற உறுதிமொழியை இறைவன் அளிக்கின்றான். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவானது. எந்த நிலையிலும் உயிரை எடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.


2. மீறிச் செய்தால், இறைவனின் நீதிமன்றத்தில் நீங்கள் குற்றவாளியாக நிறுத்தப்படுவீர்கள். அப்போது "என்ன குற்றத்திற்காக  அவள் கொல்லப்பட்டாள் " என்று உங்களிடம் விசாரிக்கப்படும்.


ஒன்று பொருளாதார உத்திரவாதம் - இரண்டு குற்றத்திற்க்கான தண்டனை.  மன நல ரீதியான இந்த போதனை, 100%  சதவீத வெற்றியைக் கொடுத்தது.


Ref:http://www.bbc.co.uk/ethics/abortion/medical/infanticide_1.shtml