பக்கங்கள் செல்ல

Showing posts with label ஆயிஷா(ரலி). Show all posts
Showing posts with label ஆயிஷா(ரலி). Show all posts

Monday, May 30, 2022

பால்குடி வசனம் குர்ஆனில் காணவில்லையா???

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

பால்குடி வசனம் குர்ஆனில் காணவில்லையா???

        குர்ஆனின் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களில் அடுத்தாக இஸ்லாமோஃபோபுகள் முன்வைப்பது ஐந்து முறை பால் அருந்துவதால் தாய் சேய் உறவு ஏற்படும் என்ற வசனம் குர்ஆனில் காணவில்லை என்பதாகும். இது சென்ற கட்டுரையின் தொடர்ச்சி எனவும் கூறலாம். இந்த விமர்சனத்திற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களையும் அதன் விளக்கத்தையும் காண்போம் இன் ஷா அல்லாஹ்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். (நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 2876,முவத்தா மாலிக் பாடம் 30/ ஹதீஸ் 18,அபூதாவுத் 2062, சுனன் நசயீ 3307.)
ஆதாரம் 2:
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، ‏.‏ وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ نَزَلَتْ آيَةُ الرَّجْمِ وَرَضَاعَةُ الْكَبِيرِ عَشْرًا وَلَقَدْ كَانَ فِي صَحِيفَةٍ تَحْتَ سَرِيرِي فَلَمَّا مَاتَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَتَشَاغَلْنَا بِمَوْتِهِ دَخَلَ دَاجِنٌ فَأَكَلَهَا ‏.‏
ஆயிஷா(ரலி) கூறியதாவது:
           கல்லெறி குறித்த ஆயத்தும், பருவமடைந்தவருக்கு பாலுட்டுவது குறித்த ஆயத்தும் இறங்கியிருந்தது. அது எழுதப்பட்ட காகிதம் எனது தலயணைக்கு கீழ் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் இறந்த போது ,நாங்கள் கவலையில் இருந்தோம். அப்போது வளர்ப்பு ஆடு ஒன்று அதை தின்றுவிட்டது (இப்னு மாஜா 2020)
மேற்கூறிய இவ்விரண்டு ஆதாரங்களை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள்,
1)நபி(சல்) அவர்கள் காலத்தில் ஓதப்பட்ட இந்த பால்குடி தொடர்பான வசனம் இன்றிருக்கும் குர்ஆனில் இல்லை.

2)இந்த வசனம் எழுதப்பட்ட காகிதத்தை ஆடு தின்றுவிட்டது எனவே குர்ஆனை தொகுக்கும் போது இணைக்க முடியவில்லை.

எனவே நபி(சல்) அவர்களது காலத்தில் இருந்த குர்ஆன் இன்றிருக்கும் குர்ஆன் அல்ல என்ற வாதத்தை முன்வைக்கின்றனர்.

      மேற்குறிபிட்ட ஆதாரங்களுக்கும் அதன் அடிப்படையில் எழுப்பப்படும் வாதத்திற்கான பதிலை காண்போம் இன் ஷா அல்லாஹ்.

ஆதாரம் 1-ன் பொருள் விளக்கம் :-
عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ كَانَ فِيمَا أُنْزِلَ مِنَ الْقُرْآنِ عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ ‏.‏ ثُمَّ نُسِخْنَ بِخَمْسٍ مَعْلُومَاتٍ فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُنَّ فِيمَا  يُقْرَأُ مِنَ الْقُرْآنِ ‏.‏"
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம்2876, முவத்தா மாலிக் பாடம் 30 ஹதீஸ் எண் 18, அபூதாவுத் 2062, சுனன் நசயீ 3307
        ஸரஹ் ஸஹீஹ் முஸ்லிம் என்ற ஸஹீஹ் முஸ்லீமின் விளக்க நூலில் மேற்குறிபிட்ட ஹதீஸை பதிந்து விட்டு இமாம் நவவீ அவர்கள் பின்வருமாறு அதன் பொருளை விளக்குகிறார்கள்.
هو بضم الياء من ( يقرأ ) ومعناه أن النسخ بخمس رضعات تأخر إنزاله جدا حتى أنه صلى الله عليه وسلم توفي وبعض الناس يقرأ خمس رضعات ويجعلها قرآنا متلوا لكونه لم يبلغه النسخ لقرب عهده فلما بلغهم النسخ بعد ذلك رجعوا عن ذلك وأجمعوا على أن هذا لا يتلى
            "யுக்ராஉ - يُقْرَأُ " என்ற வார்த்தையில் இடம் பெறும் "யா -ي " என்ற எழுத்தில் "உகர குறியீடு- ◌ُ " இடம் பெறுகிறது. இதன் பொருள் ஐந்து முறை பால் அருந்துவது என்பது மிக தாமதமாக, நபி(சல்) அவர்கள் இறக்கும் தருவாயில் தான் மாற்றப்பட்டது, அதை அறியாமல் சில மக்கள் குர்ஆனின் பகுதியாக எண்ணி ஓதினார்கள் என்பதே ஆகும்.  அதனால் அவர்கள் (நபி(சல்)) அதனை தெரிவித்த பிறகு அதை ஓதுவதை நிறுத்தி விட்டார்கள். அதன் பிறகு அதை ஓதக்கூடாது என்ற ஒருமித்த கருத்து ஏற்பட்டு விட்டது.
حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ كَانَ فِيمَا أَنْزَلَ اللَّهُ مِنَ الْقُرْآنِ ثُمَّ سَقَطَ لاَ يُحَرِّمُ إِلاَّ عَشْرُ رَضَعَاتٍ أَوْ خَمْسٌ مَعْلُومَاتٌ ‏.‏"

     ஆயிஷா(ரலி) கூறியதாவது:அல்லாஹ்வால் அல் குர்ஆனில்        இறக்கிவிட்டு பின்னர் நீக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று பத்து முறை அல்லது ஐந்து முறை பால் உறிஞ்சி குடிக்கப்பட்டிருந்தால் திருமண உறவு தடுக்கப்பட்டு விடும் என்பதாகும்.                         (நூல்: இப்னு மாஜா 1942)

              மேற்குறிபிட்ட செய்தியை மேலும் உறுதி படுத்தும் விதமாக முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் என்ற நூலில் பின்வருமாறு ஹதீஸ் இடம் பெறுகிறது.
ﻗﺎﻝ: ﺯﻋﻤﻮا ﺃﻥ ﻋﺎﺋﺸﺔ ﻗﺎﻟﺖ: " ﻟﻘﺪ ﻛﺎﻥ ﻓﻲ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ: ﻋﺸﺮ ﺭﺿﻌﺎﺕ، ﺛﻢ ﺭﺩ ﺫﻟﻚ ﺇﻟﻰ ﺧﻤﺲ، ﻭﻟﻜﻦ ﻣﻦ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻣﺎ ﻗﺒﺾ ﻣﻊ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ "

       ஆயிஷா(ரலி) கூறியதாவது " பத்து முறை உறிஞ்சி பாலருந்துதல் என்பது திடமாக குர்ஆனில் கூறப்பட்டிருந்தது. பின்னர் அது ஐந்து முறை என்று மாற்றப்பட்டது. அல்லாஹ்வின் வேதத்தில் அது இருந்தது. ஆனால் அது நபி(சல்) அவர்கள் இருக்கும் போதே எடுக்கப்பட்டுவிட்டது.(முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 13928)

    மேற்குறிபிட்ட ஹதீஸ்கள்  இந்த வசனம் அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் உயிருடன் இருக்கும் காலத்தில், அதாவது அவர்களின் இறுதிகாலத்தில் அது நீக்கப்பட்டுவிட்டது என்பதை உறுதிபடுத்துகின்றன. எனவே அல்குர்ஆனில் இந்த வசனம் இடம் பெறவில்லை என்பது தெளிவாகிறது.

பால்குடி தொடர்பான வசனம் எழுதப்பட்டிருந்த காகிதத்தை ஆடு தின்றுவிட்டதால் அது குர்ஆனில் இடம்பெறவில்லையா?

حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، ‏.‏ وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ نَزَلَتْ آيَةُ الرَّجْمِ وَرَضَاعَةُ الْكَبِيرِ عَشْرًا وَلَقَدْ كَانَ فِي صَحِيفَةٍ تَحْتَ سَرِيرِي فَلَمَّا مَاتَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَتَشَاغَلْنَا بِمَوْتِهِ دَخَلَ دَاجِنٌ فَأَكَلَهَا ‏.‏
ஆயிஷா(ரலி) கூறியதாவது:
                    கல்லெறி குறித்த ஆயத்தும், பருவமடைந்தவருக்கு பாலுட்டுவது குறித்த ஆயத்தும் இறங்கியிருந்தது. அது எழுதப்பட்ட காகிதம் எனது தலயணைக்கு கீழ் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் இறந்த போது ,நாங்கள் கவலையில் இருந்தோம். அப்போது வளர்ப்பு ஆடு ஒன்று அதை தின்றுவிட்டது (இப்னு மாஜா 2020, முஸ்னத் அஹ்மத் 26316)
            மேற்குறிப்பிட்ட இந்த செய்தியில் இடம் பெறும் முஹ்ம்மது இப்னு இஸ்ஹாக் குறித்து சுஃப்யான் அஸ்ஸவ்ரி, சுஅபா இப்னு ஹஜ்ஜாஜ் போன்றவர்கள் போற்றியுள்ளனர். ஆயினும் இவர் குறித்து பலரும் விமர்சித்தும் உள்ளனர். அபூ பகர் அல் பைஹக்கி இவர் குறித்து கூறுகையில் இவர் பலவீனமானவர் என்கிறார். இவரை குறித்து அபூபக்ர் அல் பைஹக்கி கூறுகையில் இவர் நேரிடையாக செவியுற்றதற்கான வார்த்தைகள் இன்றி அறிவிக்கும் போது இவரது செய்திகள் பலவீனமானது என்கிறார். மேலும் இவரது செய்திகள் வழுவான அறிவிப்பாளரின் செய்திக்கு ஒத்தமைந்தால் ஏற்கப்படும் என்று கூறுகிறார், இவர் குறித்து இருட்டடிப்பு செய்பவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்.(தஹ்ரீப் அல் தஃதீப் 2/54 ). இவர் குறித்து அபூஹாத்தம் கூறுகையில் இவர் ஹதீஸில் பலவீனமானவர் என்றும், இவரது செய்திகளை மற்றவர் ஒத்துபார்த்து ஏற்க வேண்டும் என்கிறார். நஸ்யீ கூறுகையில் இவர் பலமானவர் அல்ல என்று கூறுகிறார். இதில் இவர் குறித்து உகைலீ கூறுகையில்:  அபூ அப்தில்லாஹ் "அவர் அதிகமாக இருட்டடிப்பு செய்பவர். அவர் இன்னாரிடம் கேட்டேன், அல்லது இன்னார் கூறினார் என்று கூறினாலும் அவர் அதில் இருட்டடிப்பு செய்வார்.  (அதாவது நான் இன்னாரிடம் கேட்டேன் என்று அவர் கூறும் போதும் கூட அவர் யாரிடம் கேட்டார் என்பது இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் என்று கூறுகிறார்)  

        இவ்வாறு முஹம்மத் இப்னு இஸ்ஹாக் குறித்த முரண்பட்ட விமர்சனங்களை ஓப்பிட்டு பின்வருமாறு அத்தஹபீ முடிவை முன்வைக்கிறார்.  இஸ்லாமிய சட்டவியல் குறித்த செய்திகளில் இவரது ஹதீஸ்கள் ஸஹீஹ் என்ற தரத்தில் இருந்து ஹஸன் என்ற தரத்திற்கு இறங்கிவிடும். இவர் மட்டும் தனித்து அறிவிக்கும் நிலையில் அந்த செய்தி நிராகரிக்கவே பட்டுவிடும். (சியார் 7/33-35) 

      இதுதான் இந்த செய்தியை பொருத்தவரை நமது நிலைபாடும். மேற்குறிபிட்டவாறு குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட ஏடுகளை ஆடு தின்றதாக அறிவிக்கும் செய்தி இவர் மட்டுமே தணித்து அறிவிக்கும் செய்தி. எனவேதான் முஸ்னத் அஹ்மதின் இந்த செய்தியை பதிவிட்டு இது ளயீபானது என்று ஷேக் சுஐப் அர்னாவுத் அவர்கள் தனது முஸ்னத் அஹ்மதின் விளக்கவுரை(43/343)-ல் குறிப்பிடுகிறார்.
               
                    அப்படியே இந்த செய்தியில் இருப்பது போல பாலகுடித்தல் குறித்த ஆயத் எழுதப்பட்ட காகித்தை ஆடு தின்றிருந்தாலும் அந்த வசனம் மக்கள் நினைவில் இருந்ததை மேற்குறிபிட்ட  ஹதீஸ்ளில் காணலாம். ஆக அது குர்ஆனின் வசனமாக இடம்பெறவில்லை என்பதற்கு ஆடு திண்றது காரணம் அல்ல. அது குர்ஆனின் வசனமாக இல்லை என்பதுதான் காரணம். எனவே தான் இந்த செய்தி குறித்து விளக்கயில் இப்னு ஹஸம் மேலே நாம் கூறும் இதே கருத்தை முன்வைக்கிறார்.(அல்முஹல்லாஹ் 12/ 177)

            எனவே ஐந்து முறை பாலகுடித்தால் தாய் சேய் உறவு ஏற்படும் என்ற வசனம் அல்லாஹ்வால் நபி(சல்) அவர்கள் உயிருடன இருக்கும் காலத்திலேயே  உயர்த்தப்பட்டுவிட்டது.  அந்த வசனம் இன்றிருக்கும் அல்குர்ஆனில் இடம் பெறவில்லை என்ற இஸ்லாமோஃபோபுகளின் வாதம் அர்த்தமற்றது என்பது இதன் மூலம் நிறுவப்பட்டுள்ளது.


Sunday, March 20, 2022

கல்லெறி தண்டனை குர்ஆனில் காணவில்லையா???

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கல்லெறி தண்டனை - குர்ஆனில் காணவில்லையா???
  
 குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்ற இஸ்லாமோஃபோபுகளின் குற்றச்சாட்டில் மிக பிரதானமான இடத்தை பிடிக்கும் வாதம் குர்ஆனில் இருந்த கல்லெறி தண்டனை தொடர்பான வசனம் காணவில்லை என்பதாகும். அதாவது திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்ததற்காக பிடிக்கப்பட்டால் அவர்களின் மீது கல்லெறிதல் என்ற தண்டனை நிறைவேற்றப்படுதல் குறித்த வசனம் நபி(சல்) அவர்களது காலத்தில் குர்ஆனில் இருந்ததாகவும், அது தற்போதைய குர்ஆனில் காணவில்லை அல்லது உஸ்மான்(ரலி) தொகுத்த குர்ஆனில் காணவில்லை என்ற குற்றச்சாட்டுதான் அது. அதற்கு இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் ஆதாரங்கள் மற்றும் அதன் விளக்கத்தையும் காண்போம்.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
........................................ அப்போது உமர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மெளனமானதும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகு, 'நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும்; (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும்! இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிற (அவர் மட்டுமல்ல் வேறு) யாரும் என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன்' (என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள்:)

        நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளியதில் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கிவிடவேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி கொல்லலாகும்.

                அறிந்துகொள்ளுங்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மர்யமின் புதல்வர் ஈசா எல்லை மீறிப் புகழப்பட்டதைப் போன்று என்னை நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள். மாறாக, (என்னைக் குறித்து நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள்......(புகாரி 6830)
ஆதாரம் 2:

حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، ‏.‏ وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ نَزَلَتْ آيَةُ الرَّجْمِ وَرَضَاعَةُ الْكَبِيرِ عَشْرًا وَلَقَدْ كَانَ فِي صَحِيفَةٍ تَحْتَ سَرِيرِي فَلَمَّا مَاتَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَتَشَاغَلْنَا بِمَوْتِهِ دَخَلَ دَاجِنٌ فَأَكَلَهَا ‏.‏
ஆயிஷா(ரலி) கூறியதாவது:
              கல்லெறி குறித்த ஆயத்தும், பருவமடைந்தவருக்கு பாலுட்டுவது குறித்த ஆயத்தும் இறங்கியிருந்தது. அது எழுதப்பட்ட காகிதம் எனது தலயணைக்கு கீழ் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் இறந்த போது ,நாங்கள் கவலையில் இருந்தோம். அப்போது வளர்ப்பு ஆடு ஒன்று அதை தின்றுவிட்டது (இப்னு மாஜா 2020)
          மேற்குறிபிட்ட இரு ஆதாரங்களின் விளக்கம் மற்றும் விமர்சனங்களை முன்வைப்பதன் மூலம் இஸ்லாமோஃபோபுகளின் பிதற்றல் வாததத்திற்கான பதிலை காண்போம் இன் ஷா அல்லாஹ்.

கல்லெறி தண்டனை வசனம் காணாமல் போனதா?


       மேற்குறிபிட்ட ஆதாரம் 1 க்கு இருவகையான விளக்கம் ஏனைய ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது பெற முடியும்

1.கல்லெறி தண்டனை வசனம் குர்ஆனில் முதலில் இறங்கிய வசனம் பின்பு அது உயர்த்தப்பட்டுவிட்டது. சட்டம் வழக்கில் உள்ளது.

2.கல்லெறி தணடனை வசனம் குர்ஆனின் ஆயத்தாக என்றும் இருந்ததில்லை. அது இறை சட்டமாக வந்தது. அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களால் பின்பற்றப்பட்ட சட்டம்.

விளக்கம் 1: கல்லெறி தண்டனை வசனம் குர்ஆனில் இறங்கிய வசனம் பின்பு அது உயர்த்தப்பட்டுவிட்டது சட்டம் வழக்கில் உள்ளது.


       கல்லெறி தண்டனை குறித்த வசனம் அல்லாஹ் முதலில் இறக்கிய வசனமாகும் ஆயினும் பின்னாளில் அது உயர்த்தப்பட்டுவிட்டது என்ற கருத்து பின்வரும் ஹதீஸில் இடம் பெறுகிறது.

حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا ابْنُ فَضَالَةَ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، قَالَ: قَالَ لِي أُبَيُّ بْنُ كَعْبٍ: «يَا زِرُّ» كَأَيِّنْ تَقْرَأُ سُورَةَ الْأَحْزَابِ؟ " قَالَ: قُلْتُ: كَذَا وَكَذَا آيَةً قَالَ: " إِنْ كَانَتْ لَتُضَاهِي سُورَةَ الْبَقَرَةِ، وَإِنْ كُنَّا لَنَقْرَأُ فِيهَا: وَالشَّيْخُ وَالشَّيْخَةُ إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا أَلْبَتَّةَ نَكَالًا مِنَ اللَّهِ وَرَسُولِهِ، فَرُفِعَ فِيمَا رُفِعَ "
            ஜிர் அவர்கள் கூறியதாவது : உபை இப்னு கஅஃப் (ரலி) அவர்கள் " ஜிர்ரே! நீங்கள் அல் அஹ்ஸாப் சூராவை எவ்வாறு ஓதுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான் "இந்த இந்த ஆயத்களை ஓதுகிறேன்" என்று கூறினேன். அதற்கு அவர்கள் "அது சூரத் அல் பக்ரா விற்கு நிகராக இருந்தது. மேலும் அதில் நாங்கள் 'ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்கள் மாற்றமின்றி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்பது அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் தண்டனை ஆகும்' என்பதை ஓதியிருக்கிறோம். பின்னர் உயர்த்தப்பட்டவைகளுடன் அதுவும் உயர்த்தப்பட்டுவிட்டது " என்று கூறினார்கள் (நூல்: முஸ்னத் அபிதாவூத் அல் தயாலிசி ஹதீஸ் எண்: 542)
          இதற்கு எல்லாம் முத்தாய்பாக உமர்(ரலி) அவர்களே தெளிவாக இந்த வசனம் அல்குர்ஆனில் இறங்கியது. அல்லாஹ்வின் தூதர்(சல்) இருந்த போது எடுத்துக்கொள்ளப்பட்ட வசனங்களுடன் அது எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று குறிப்பிடும் செய்தி இதோ:
اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻳﻘﻮﻝ: ﺃﻣﺮ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ ﻣﻨﺎﺩﻳﺎ ﻓﻨﺎﺩﻯ ﺃﻥ اﻟﺼﻼﺓ ﺟﺎﻣﻌﺔ، ﺛﻢ ﺻﻌﺪ اﻟﻤﻨﺒﺮ ﻓﺤﻤﺪ اﻟﻠﻪ ﻭﺃﺛﻨﻰ ﻋﻠﻴﻪ، ﺛﻢ ﻗﺎﻝ: ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﻨﺎﺱ، ﻻ ﺗﺨﺪﻋﻦ ﻋﻦ ﺁﻳﺔ اﻟﺮﺟﻢ، ﻓﺈﻧﻬﺎ ﻗﺪ ﻧﺰﻟﺖ ﻓﻲ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ ﻭﻗﺮﺃﻧﺎﻫﺎ، ﻭﻟﻜﻨﻬﺎ ﺫﻫﺒﺖ ﻓﻲ ﻗﺮﺁﻥ ﻛﺜﻴﺮ ﺫﻫﺐ ﻣﻊ ﻣﺤﻤﺪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻭﺁﻳﺔ ﺫﻟﻚ ﺃﻧﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺪ ﺭﺟﻢ، ﻭﺃﻥ ﺃﺑﺎ ﺑﻜﺮ ﻗﺪ ﺭﺟﻢ، ﻭﺭﺟﻤﺖ ﺑﻌﺪﻫﻤﺎ، ﻭﺇﻧﻪ ﺳﻴﺠﻲء ﻗﻮﻡ ﻣﻦ ﻫﺬﻩ اﻷﻣﺔ ﻳﻜﺬﺑﻮﻥ ﺑﺎﻟﺮﺟﻢ، ﻭﻳﻜﺬﺑﻮﻥ ﺑﻄﻠﻮﻉ اﻟﺸﻤﺲ ﻣﻦ ﻣﻐﺮﺑﻬﺎ ﻭﻳﻜﺬﺑﻮﻥ ﺑﺎﻟﺸﻔﺎﻋﺔ، ﻭﻳﻜﺬﺑﻮﻥ ﺑﺎﻟﺤﻮﺽ، ﻭﻳﻜﺬﺑﻮﻥ ﺑﺎﻟﺪﺟﺎﻝ، ﻭﻳﻜﺬﺑﻮﻥ ﺑﻌﺬاﺏ اﻟﻘﺒﺮ، ﻭﻳﻜﺬﺑﻮﻥ ﺑﻘﻮﻡ ﻳﺨﺮﺟﻮﻥ ﻣﻦ اﻟﻨﺎﺭ ﺑﻌﺪﻣﺎ ﺃﺩﺧﻠﻮﻫﺎ

    இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது: உமர்(ரலி) கூட்டுத்தொழுகைக்காக அறிவிப்பு செய்ய கட்டளையிட்டார்கள். பிறகு மின்பரில் ஏறி அல்லாஹ்வை புகழ்ந்தார்கள்.பிறகு, " மக்களே! ஆயத் அல் ரஜ்ம் குறித்து நீங்கள் ஏமாந்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் வேதத்தில் அது இறக்கியிருந்தது. அதை நாங்கள் ஓதியும் இருக்கிறோம். ஆனால் முஹம்மது(ஸல்) அவர்கள்  இருக்கும் போது குர்ஆனில் பேரளவானது எடுத்து கொள்ளப்பட்டதுடன் அதுவும் எடுத்து கொள்ளப்பட்டுவிட்டது. அந்த ஆயத்தினால்தான் அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் கல்லெறி தண்டனையை நிறைவேற்றினார்கள். அபூபக்ர்(ரலி) அவர்களும் கல்லெறி தண்டனையை நிறைவேற்றினார்கள். அவர்களுக்கு பின் நானும் கல்லெறி தண்டனையை நிறைவேற்றினேன். ஆனால் இந்த சமூகத்தில் சில மக்கள் தோன்றி கல்லெறி தண்டனையை மறுப்பார்கள்,(உலக அழிவின் நெருக்கத்தில்) மேற்கில் இருந்து சூரியன் உதிப்பதையும், பரிந்துரைப்பதையும் மறுப்பார்கள், (கவ்ஸர்) தடாகத்தை மறுப்பார்கள், தஜ்ஜாலை மறுப்பார்கள், கப்ரின் வேதனையை மறுப்பார்கள், நரகத்தில் நுழைந்தவர்கள் சிறிது காலத்திற்கு பிறகு விடுவிக்கப்படுவார்கள் என்பதை மறுப்பார்கள்,"கூறினார்கள்.  (நூல்: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 13364, துர்ருல் மன்ஸூர் 6/558, ஜாமீயுல் அஹாதீஸ் 28257, கன்ஸூல் அஃமால் 13518,முஸ்னத் ஜாமிஃ 10555)  

      எனவே கல்லெறி தண்டனை குறித்த வசனம் அல்லாஹ்வால் இறக்கப்பட்டது பின்னர் அது உயர்த்தப்பட்டுவிட்டது என்பது தெளிவாக இந்த செய்தி குறிப்பிடுகிறது. எனவே உயர்த்தப்பட்ட வசனம் தற்கால குர்ஆனில் இடம் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பது தெளிவாகிறது.

1) இந்த கருத்தை அல் பைஹக்கி தனது சுனன் அல் குப்ராவில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

فِي هَذَا وَمَا قَبْلَهُ دَلَالَةٌ عَلَى أَنَّ آيَةَ الرَّجْمِ حُكْمُهَا ثَابِتٌ، وَتِلَاوَتُهَا مَنْسُوخَةٌ وَهَذَا مِمَّا لَا أَعْلَمُ فِيهِ خِلَافًا
           இந்த செய்தியும் இதற்கு முன்பு இருப்பதும் கல்லெறி தண்டனை என்பது உறுதியானது என்பதற்கு சான்றாகும். மேலும் அதன் ஓதல் உயர்த்தப்பட்டுவிட்டது என்பதில் எந்த மாற்று கருத்தும் இருப்பதாக நான் அறியவில்லை. (சுனன் அல் குப்ரா அல் பைஹக்கி 16913)

2) இதே கருத்தை நவவீ அவர்கள் தனது ஸரஹ் ஸஹீஹ் முஸ்லீமின் 1691 வது செய்தியின் விளக்கத்தின் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்:

ﻗﻮﻟﻪ (ﻓﻜﺎﻥ ﻣﻤﺎ ﺃﻧﺰﻝ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﺁﻳﺔ اﻟﺮﺟﻢ ﻗﺮﺃﻧﺎﻫﺎ ﻭﻭﻋﻴﻨﺎﻫﺎ ﻭﻋﻘﻠﻨﺎﻫﺎ) ﺃﺭاﺩ ﺑﺂﻳﺔ اﻟﺮﺟﻢ اﻟﺸﻴﺦ ﻭاﻟﺸﻴﺨﺔ ﺇﺫا ﺯﻧﻴﺎ ﻓﺎﺭﺟﻤﻮﻫﻤﺎ ﺃﻟﺒﺘﺔ ﻭﻫﺬا ﻣﻤﺎ ﻧﺴﺦ ﻟﻔﻈﻪ ﻭﺑﻘﻲ ﺣﻜﻤﻪ
          ("அல்லாஹ் அருளியதில் கல்லெறி தண்டனை குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதை மனனமிட்டிருக்கிறோம். அதை விளங்கியுமிருக்கிறோம்") என்ற கூற்று 'திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்கள் மாற்றமின்றி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற வசனத்தில் ஓதல் உயர்த்தப்பட்டு அதன் சட்டம் மட்டும் வழக்கில் இருப்பதை கூறுகிறது. (ஸரஹ் ஸஹீஹ் முஸ்லீம் பாகம் 11 பக்கம் 191)

விளக்கம் 2: கல்லெறி தணடனை வசனம் குர்ஆனின் ஆயத்தாக என்றும் இருந்ததில்லை.அது இறை சட்டமாகவே வந்தது.


                    கல்லெறி தண்டனை குறித்த வசனம் இறங்கும் போதே குர்ஆனின் ஆயத்தாக இறங்கவில்லை. அது சட்டமாகவே இறங்கியது. என்பதற்கு பின்வரும் செய்தி ஆதாரமாக அமைந்துள்ளது.

ஆதாரம் 1:
أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ الْمُقْرِئُ، أنبأ الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، ثنا يُوسُفُ بْنُ يَعْقُوبَ، ثنا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، ثنا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: نُبِّئْتُ، عَنِ ابْنِ أَخِي كَثِيرِ بْنِ الصَّلْتِ قَالَ: كُنَّا عِنْدَ مَرْوَانَ، وَفِينَا زَيْدُ بْنُ ثَابِتٍ، قَالَ زَيْدٌ: كُنَّا نَقْرَأُ: الشَّيْخُ وَالشَّيْخَةُ إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا الْبَتَّةَ، قَالَ: فَقَالَ مَرْوَانُ: أَفَلَا نَجْعَلُهُ فِي الْمُصْحَفِ؟ قَالَ: لَا، أَلَا تَرَى الشَّابَّيْنِ الثَّيِّبَيْنِ يُرْجَمَانِ؟ قَالَ: وَقَالَ: ذَكَرُوا ذَلِكَ وَفِينَا عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: أَنَا أَشْفِيكُمْ مِنْ ذَاكَ، قَالَ: قُلْنَا: كَيْفَ؟ قَالَ: آتِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذْكُرُ كَذَا وَكَذَا، فَإِذَا ذَكَرَ الرَّجْمَ أَقُولُ: يَا رَسُولَ اللهِ أَكْتِبْنِي آيَةَ الرَّجْمِ، قَالَ: فَأتَيْتُهُ فَذَكَّرْتُهُ، قَالَ: فَذَكَرَ آيَةَ الرَّجْمِ، قَالَ: فَقَالَ: يَا رَسُولَ اللهِ أَكْتِبْنِي آيَةَ الرَّجْمِ، قَالَ: " لَا أَسْتَطِيعُ ذَاكَ "
                கஸீர் இப்னு சல்த் கூறியதாவது: நாங்கள் மர்வான் மற்றும் ஜைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோருடன் இருக்கும் போது , ஜைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள், " நாங்கள் 'திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்கள் மாற்றமின்றி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்' என்று ஓதியிருக்கிறோம்" என்று கூறினார்கள். அதற்கு மர்வான் அவர்கள், “அதை  ஏன் நாம் முஸ்ஹஃப்பில்  சேர்க்கக்கூடாது? என்றார்கள். அதற்கு "கூடாது. நீங்கள் (விபச்சாரம் செய்த) திருமணமான ஆணும் பெண்ணும் கல்லெறிந்து கொல்லப்படுவதை காணவில்லையா? என்று கேட்டார்கள். அதை குறிபிட்டதும், எங்களது மத்தியில் இருந்த உமர் இப்னு அல் கத்தாப்(ரலி) அவர்கள், “நான் இது குறித்த தெளிவை தரட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள் "எப்படி?" என்று கேட்டோம். அதற்கு (உமர்(ரலி)) அவர்கள் "நபி(சல்) அவர்கள் இவ்வாறு இவ்வாறு கல்லெறி தண்டனை குறித்து கூறியதும், நான் “ அல்லாஹ்வின் தூதரே! எனக்கு கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை எழுதி தாருங்கள்", என்று கேட்டேன். அதற்கு நபி(சல்), “நான் அவ்வாறு செய்ய இயலாது", என்று கூறிவிட்டார்கள். (சுனன் அல் குப்ரா அன் நஸ்யீ 7110, சுனன் அல் குப்ரா அல் பைஹக்கி 16913)
        மேற்குறிபிட்ட செய்தியில் ஆயத் அல் ரஜ்ம் குர்ஆனில் ஏன் இடம் பெறவில்லை என்ற மர்வான் அவர்களது கேள்விக்கு உமர்(ரலி) அவர்களே அது அல்லாஹ்வின் தூதர் எழுதித்தரவில்லை. ஆக அது குர்ஆனில் இடம் பெறவில்லை என்று விளக்குகிறார்கள்.

ஆதாரம் 2:
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ صَالِحِ بْنِ هَانِئٍ، ثَنَا الْحُسَيْنُ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَا: ثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ يُونُسَ بْنِ جُبَيْرٍ، عَنْ كَثِيرِ بْنِ الصَّلْتِ، قَالَ: كَانَ ابْنُ الْعَاصِ، وَزَيْدُ بْنُ ثَابِتٍ يَكْتُبَانِ الْمَصَاحِفَ فَمَرَّا عَلَى هَذِهِ الْآيَةِ، فَقَالَ زَيْدٌ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الشَّيْخُ وَالشَّيْخَةُ إِذَا زَنَيَا فَارْجُمُوهُمَا الْبَتَّةَ» فَقَالَ عَمْرٌو: " لَمَّا نَزَلَتْ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: أَكْتُبُهَا؟ فَكَأَنَّهُ كَرِهَ ذَلِكَ " فَقَالَ لَهُ عَمْرٌو: «أَلَا تَرَى أَنَّ الشَّيْخَ إِذَا زَنَى وَقَدْ أُحْصِنَ جُلِدَ وَرُجِمَ، وَإِذَا لَمْ يُحْصِنْ جُلِدَ، وَأَنَّ الثَّيِّبَ إِذَا زَنَى وَقَدْ أُحْصِنَ رُجِمَ» هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ "

        கஸீர் இப்னு சல்த் கூறியதாவது: இப்னு அல் ஆஸ்(ரலி) அவர்களும் ஜைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும் முஸ்ஹஃப்பை எழுதி கொண்டிருந்தார்கள். இந்த வசனத்தை கடந்து சென்றார்கள், மேலும் ஜைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள் "ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்கள் மாற்றமின்றி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்'” என்று நபி(சல்) அவர்கள் கூற கேட்டுள்ளோம் என்று கூறினார்கள். அப்போது அம்ர் இப்னு அல் ஆஸ்(ரலி) கூறினார்கள் "இது இறங்கியதும் நபி(சல்) அவர்களிடம் சென்று "இதை எழுதட்டுமா?" என்று கேட்டேன். அவர்கள் அதை விரும்பவில்லை. மேலும் அம்ரு(ரலி) ,”திருமாணமானவர் விபச்சாரம் செய்தால் அவர் கசையடி கொடுக்கப்பட்டு கல்லெறிந்து கொல்லப்படுவதையும், திருமணமாகதவராக இருந்தால் கசையடி கொடுக்கப்படுவதையும், திருமாணவள் விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்லப்படுவதையும் நீங்கள் காணவில்லையா? என்று கேட்டார்கள். (முஸ்தத்ரக் அல் ஹாகிம் 8071)
            அம்ர் இப்னு அல் ஆஸ்(ரலி) அவர்களும் நபி(சல்) அவர்கள் ஆயத் அல் ரஜ்மை எழுத அனுமதிக்கவில்லை என்று கூறுகிறார்கள். ஆக இந்த செய்தியானது ஒன்றுக்கு மேற்ப்ட்ட நபித்தோழர்களால் உறுதி செய்யப்பட்டது ஆகும். மேலும் முன்சென்ற முதல் விளக்கத்தின் ஆதாரமான முஸ்னத் அபிதாவூத் அல் தயாலிசி ஹதீஸ் எண்: 542, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 13364 ஆகிய செய்திகளை   விட அறிவிப்பாளர் தொடர் ரீதியாக மிகவும் உயர்ந்த தரத்தில் உள்ளதாகும்.

             மேலும் நபி(சல்) அவர்களுக்கு குர்ஆனின் வஹி இறங்கும் தருணங்களில் எப்படி செயல் படுவார்கள் என்று பின்வரும் செய்தி உறுதிபடுத்துகிறது:

இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது:

            நான் உஸ்மான் பின் அஃபானிடம் “ அல் அன்ஃபால் நூறுக்கு குறைவான வசனங்களை கொண்டிருக்க, அது குறித்து உங்களது கருத்து என்ன ?, அல் பராஹ் அல்லது அத் தவ்பா நூறு வசனங்களுக்கு மேல் கொண்டிருக்க, அது குறித்து உங்களது கருத்து என்ன?” என்று கேட்டேன். மேலும் “நீங்கள் ஏன் அவ்விரணடையும் ஒன்றாக பதிவிட்டு ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதை எழுதாமல் விட்டீர்கள்” என்றும் கேட்டேன். அதற்கு உஸ்மான் அவர்கள் “ நபி(சல்) அவர்களுக்கு இறை அறிவிப்பு ஏதுமின்றி பல நாட்கள் சென்றிருக்கும், பிறகு சில நேரங்களில் அதிகமானவை இறங்கும். ஆக ஏதேனும் இறைவனிடம் இருந்து அறிவிக்கப்பட்டால், எழுத்தர்களை அழைப்பார்கள். மேலும் கூறுவார்கள் இந்த இந்த இடத்தில் இன்ன இன்ன வசனங்கள் இடம்பெறும் சூராவில் இந்த வசனத்தை எழுதுங்கள் என்று கட்டளையிடுவார்கள் ........( நூல்: திர்மிதி 3086)
           அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் குர்ஆனின் ஆயத்கள் இறங்கும் போது அதனை உடனே எழுத்தில் பதியவே கூறுவார்கள். நபி(சல்) அவர்கள் கல்லெறி தண்டனை வசனத்தை எழுத மறுத்ததில் இருந்து இந்த வசனம் குர்ஆனின் வசனம் அல்ல என்பது உறுதியாகிறது.

     மேலும் மேற்குறிபிட்ட செய்திகளை உறுதி படுத்தும் விதமாக உமர்(ரலி) அவர்களின் பின்வரும் செய்தி அமைந்துள்ளது:

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ، حَدَّثَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ عُمَرَ، - يَعْنِي ابْنَ الْخَطَّابِ - رضى الله عنه خَطَبَ فَقَالَ إِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صلى الله عليه وسلم بِالْحَقِّ وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ فَكَانَ فِيمَا أَنْزَلَ عَلَيْهِ آيَةُ الرَّجْمِ فَقَرَأْنَاهَا وَوَعَيْنَاهَا وَرَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَرَجَمْنَا مِنْ بَعْدِهِ وَإِنِّي خَشِيتُ - إِنْ طَالَ بِالنَّاسِ الزَّمَانُ - أَنْ يَقُولَ قَائِلٌ مَا نَجِدُ آيَةَ الرَّجْمِ فِي كِتَابِ اللَّهِ فَيَضِلُّوا بِتَرْكِ فَرِيضَةٍ أَنْزَلَهَا اللَّهُ تَعَالَى فَالرَّجْمُ حَقٌّ عَلَى مَنْ زَنَى مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ إِذَا كَانَ مُحْصَنًا إِذَا قَامَتِ الْبَيِّنَةُ أَوْ كَانَ حَمْلٌ أَوِ اعْتِرَافٌ وَايْمُ اللَّهِ لَوْلاَ أَنْ يَقُولَ النَّاسُ زَادَ عُمَرُ فِي كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ لَكَتَبْتُهَا ‏.‏
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
 
      உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொற்பொழிவாற்றினார்கள். அதில், "முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்தியத்துடன் அல்லாஹ் அனுப்பினான். அவர்களுக்கு வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளியதில் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதை மனனமிட்டிருக்கிறோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மணமானவர்கள் விபச்சாரம் செய்தால் அவர்களுக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்ம்) நிறை வேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாமும் அந்தத் தண்டனையை நடைமுறைப்படுத்தினோம். காலப்போக்கில் மக்களில் சிலர் "இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை" என்று கூறி, இறைவன் அருளிய விதியொன்றைக் கைவிடுவதன் மூலம் வழிதவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபச்சாரம் செய்து, அதற்குச் சாட்சி இருந்தாலோ, அல்லது கர்ப்பம் ஏற்பட்டாலோ, அல்லது ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறைச்சட்டத்தில் உள்ளதாகும். அல்லாஹ்வின் மீது ஆணையாக "உமர் அல்லாஹ்வின் வேதத்தில் அதிகபடுத்திவிட்டார் " என்று மக்கள் கூறிவிடுவார்கள் என்ற அச்சம் இல்லை என்றால் நான் அதை அதில் எழுதியிருப்பேன்" ,என்று கூறினார்கள். ( நூல்: சுனன் அபூதாவுத் 4418)
      மேற்குறிபிட்ட ஆதாரங்களில் இருந்து உமர்(ரலி) அவர்கள் ஆயத் அல் ரஜ்ம் அல்குர்ஆனின் வசனம் அல்ல என்பதை தெளிவாக விளங்கியிருந்தார்கள் என்பதை அறியமுடிகிறது.

      அப்படி இருக்கையில் ஏன் உமர்(ரலி) “ அல்லாஹ் அருளியதில் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது.அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம் ". என்றும் “மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும்.” என்றும் கூறுவது எதனால்???? அதற்கான விடை இதோ.......

அல்லாஹ்வின் தூதர்(சல்) தடுத்தவையும் அனுமதித்தவையும் அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளதுதான்:


              அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் தடுப்பதும், அனுமதிப்பதும் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதுதான். அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்,
       இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார். யாரேனும் புறக்கணித்தால் உம்மை அவர்களின் காப்பாளராக நாம் அனுப்பவில்லை. (அல் குர்ஆன் 4:80)
மேலும் நபி(சல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ حَدَّثَنَا مَنْصُورُ بْنُ حَيَّانَ، سَمِعَ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، يُحَدِّثُ أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، وَابْنَ، عَبَّاسٍ أَنَّهُمَا شَهِدَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ وَالنَّقِيرِ ثُمَّ تَلاَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم هَذِهِ الآيَةَ ‏ {‏ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا ‏}
இப்னு உமர்(ரலி) மற்றும் இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்:
            அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் அத்துப்பா, அல் ஹன்தம், அல் முசஃப்பத் மற்றும் அன் நகீர் ஆகியவற்றை தடை செய்தார்கள். பிறகு நபி(சல்) அவர்கள் பின்வரும் வசனத்தை ஓதினார்கள்: இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! (அறிவிப்பாளர்:சயீத் இப்னு ஜுபைர் நூல்: சுனன் அந்நஸயீ 5643)
மேலும் அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டல் அல்குர்ஆனின் வழிகாட்டல்தான் என்பதை நபி(சல்) அவர்களே விளக்கியுள்ளார்கள்

            நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்: (பரீரா என்ற அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி விடுதலை செய்வது சம்பந்தமான) விஷயத்தை அவர்களிடம் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'நீ விலைக்கு வாங்கி விடுதலை செய்! (அந்த அடிமை மரணித்த பின்) அவருக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத் தான்!" என்று கூறினார்கள். பிறகு, மாலை நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் எழுந்து அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்து, 'அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களின் அந்த நிபந்தனை வீணானது; (செல்லாதது;) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும் உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்!" எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர்:ஆயிஷா(ரலி) .புகாரி 2155. )
    மேற்குறிபிட்ட நிபந்தனையான "அடிமை மரணித்த பின் அவருக்கு வாரிசாகும் உரிமை, விடுதலை செய்தவருக்குத் தான்!" என்பது அல்குர்ஆனில் வசனமாக இல்லை. ஆயினும் இது வேதத்தின் நிபந்தனை என்று நபி(சல்) அவர்கள் கூறுவது அல்லாஹ்வின் தூதராகிய தன்னால் விதிக்கப்படும் நிபந்தனை என்பது வேதத்தின் நிபந்தனை என்பதால்தான்.

            அல்லாஹ் அல்குர்ஆனில் "இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார் (அல்குர்ஆன் 4:80) " மற்றும் "இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்!” என்னும் ஆயத்களின் அடிப்படையில் அல்லாஹ்வின் தூதரின் நிபந்தனை என்பது வேதத்தின் கட்டளை என்பது தெளிவாகிறது. மேலும் நபிதோழர்களும் அப்படித்தான் விளங்கியிருந்தனர் என்பதை பின்வரும் செய்தியும் உறுதி செய்கிறது.
அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்:
            அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?' என்று கூறினார்கள்.6 இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, 'உம்மு யஅகூப்' எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து, 'இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், '(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!' என்று கேட்டதற்கு அவர்கள், 'நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். 'இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகி இருங்கள்' எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?' என்று கேட்டார்கள். அந்தப் பெண், 'ஆம் (ஒதினேன்)' என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்' என்று கூறினார்கள். .........(புகாரி 4886)

          ஆகவே நபி(சல்) அவர்கள் விதிக்கும் சட்டம் என்பது வேதத்தின் சட்டம் தான். எனவே தான் அல்லாஹ் விபச்சாரம் செய்தவர்கள் குறித்து முதலில் பின்வருமாறு வசனத்தை இறக்கிவைத்தான்.
            உங்கள் பெண்கள் வெட்கக் கேடானதைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் சொல்லுங்கள்! அவர்கள் சாட்சி கூறினால் அப்பெண்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்கள் விஷயத்தில் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை வீடுகளில் அவர்களைத் தடுத்து வையுங்கள்!(அல் குர்ஆன் 4:15)
     அல்லாஹ் அந்த வழியை தனது வேதத்தின் வாயிலாகவும் நபி(ஸல்) அவர்களது விளக்கத்தின் மூலமாக காட்டினான். அதை நபி(சல்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்
உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
            நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படும்போது, அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். அவர்களது முகம் (கறுத்து) நிறம் மாறிவிடும். ஒரு நாள் அவர்களுக்கு வேத அறிவிப்பு அருளப்படவே அவர்கள் இந்நிலையைச் சந்தித்தார்கள். பின்னர் அவர்களைவிட்டு அந்நிலை விலகியதும், "(விபச்சாரத்திற்கான தண்டனைச் சட்டத்தை) என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். (விபச்சாரம் செய்த) பெண்கள் தொடர்பாக அல்லாஹ் ஒரு வழியை ஏற்படுத்திவிட்டான். மணமான பெண் மணமான ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால் (அதற்குத் தனிச் சட்டமாகும்). மணமாகாத பெண் மணமாகாத ஆணுடன் விபச்சாரம் செய்துவிட்டால் (அதற்குத் தனிச்சட்டமாகும்). மணமானவர்களுக்கு நூறு சாட்டையடிகளும் கல்லெறி தண்டனையும் வழங்கப்பட வேண்டும். மணமாகாதவர்களுக்கு நூறு சாட்டையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தலும் தண்டனையாக வழங்கப்பட வேண்டும். (ஸஹீஹ் முஸ்லீம் 3490)
                ஆகவே அல்லாஹ் முதலில் இறக்கிய வேத வசனத்தின்படி (அல் குர்ஆன் 4:15) அவன் காட்டும் வழியை பின்பற்ற வேண்டும் என்பது கட்டளை. அதன் தொடர்ச்சிதான் நபி(சல்) அவர்களுக்கு காட்டித்தரப்பட்ட அல் ரஜ்ம் சட்டமாகும் ஆகும். அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் விதிக்கும் கட்டளை வேதத்தின் கட்டளைதான் என்று நபி(சல்) அவர்களே கூறியிருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களது கட்டளை வேதத்தின் கட்டளை என்று இப்னு மஸ்ஊத்(ரலி) போன்ற நபித்தோழர்கள் விளங்கியிருந்தார்கள் எனும் போது, உமர்(ரலி) அவர்கள் “மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபச்சாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும்.” என்று கூறுவது சரிதான். எனவே அல் ரஜ்ம் என்பது வேதத்தில் உள்ளதுதான்.

இந்த கருத்தை முன்வைக்கும் அறிஞர்கள்
(ﻭاﻟﺸﻴﺦ ﻭاﻟﺸﻴﺨﺔ ﺇﺫا ﺯﻧﻴﺎ ﻓﺎﺭﺟﻤﻮﻫﻤﺎ ﺃﻟﺒﺘﺔ ﻧﻜﺎﻻ ﻣﻦ اﻟﻠﻪ ﻭاﻟﻠﻪ ﻋﺰﻳﺰ ﺣﻜﻴﻢ). ﻓﺈﺫا: ﺇﻥ ﺃﺭﻳﺪ ﺑﺎﻟﻜﺘﺎﺏ اﻟﻘﺮﺁﻥ ﻓﺈﻥ ﺫﻟﻚ ﻣﻮﺟﻮﺩ ﻓﻴﻪ، ﻭﺇﻥ ﺃﺭﻳﺪ ﺑﺬﻟﻚ اﻟﺤﻜﻢ ﻣﻄﻠﻘﺎ ﻓﺈﻥ اﻟﻜﺘﺎﺏ ﻭاﻟﺴﻨﺔ ﻛﻠﻬﺎ ﺣﻜﻢ اﻟﻠﻪ ﻭﻛﻠﻬﺎ ﻓﻲ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ
('திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்கள் மாற்றமின்றி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்பது அல்லாஹ்வின் சட்டம். அல்லாஹ் ஞானமிக்கவன்). 
       இங்கு வேதம் என்று கூறப்படுவது அல் குர்ஆனை குறிப்பதாக இருக்குமாயின், அந்த தீர்வை நாம் உறுதியாக ஏற்கும்பட்சத்தில், வேதமும், சுன்னாஹ்வும் அல்லாஹ்வின் சட்டங்களே. அவை அனைத்தும் அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளதுதான்.  (இவ்வாறு அபாத் அவர்கள் கூறிவிட்டு இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் பச்சை குத்திவிடும் பெண்களை சபித்த ஹதீஸை முன்வைத்து இந்த கூற்றை உறுதி படுத்துகிறார்கள்) (ஸரஹ் சுனன் அபூதாவுத் அல் அபாத் பாகம் 500 பக்கம் 13)
ﺭﻭاﻳﺔ ﻇﺎﻫﺮﺓ ﺃﻥ ﻋﻤﺮ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ ﻟﻠﻨﺒﻲ - ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ - ﻟﻤﺎ ﻧﺰﻟﺖ ﺁﻳﺔ اﻟﺮﺟﻢ: ﻭاﻟﺸﻴﺦ ﻭاﻟﺸﻴﺨﺔ ﻓﺎﺭﺟﻤﻮﻫﻤﺎ ﺃﻟﺒﺘﺔ، ﺃﺛﺒﺘﻬﺎ ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﻓﻘﺎﻝ ﻟﻪ: ﻻ ﺃﺳﺘﻄﻴﻊ ﺫﻟﻚ, ﻟﻘﻮﻟﻪ ﻋﻠﻴﻪ اﻟﺴﻼﻡ ﺇﻧﻪ ﻣﻤﺎ ﻧﻬﻲ ﻋﻦ ﺭﺳﻤﻪ، ﻭﻟﻮ ﻛﺎﻥ ﻣﻤﺎ ﺃﻣﺮﻧﺎ ﺑﺈﺛﺒﺎﺗﻪ ﻻﺳﺘﻄﺎﻉ ﺃﻥ ﻳﺜﺒﺘﻪ ﻭﻟﻢ ﻳﻜﻦ ﻟﺘﺮﻛﻪ
     (இந்த) நிகழ்வில் உமர்(ரலி) அவர்கள் " நபி(சல்) அவர்களுக்கு திருமணமான ஆணோ பெண்ணோ விபச்சாரம் செய்தால் அவர்கள் மாற்றமின்றி கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற ஆயத் இறங்கியவுடன் அதை எழுதிக்கொடுங்கள் " என்று கேட்கிறார்கள், அதற்கு அவர்கள்(ஸல்)" அது என்னால் முடியாது" என்று கூறிவிடுகிறார்கள். அவ்வாறு அவர்கள் (ஸல்) கூறுவது அது எழுதுவதற்கு தடுக்கப்பட்டது என்பதால்தான். அது எழுதுவதற்கு கட்டளையிடப்பட்டிருந்தால் அதை நிச்சயம் எழுதியிருப்பார்கள், அதை எழுதாமல் விட்டிருக்க மாட்டார்கள்.
(அபூபக்ர் அல் பாக்கிலானியின் அல் இன்திஸார் 1/364)
ﻗﺎﻝ ﺃﺑﻮ ﻣﺤﻤﺪ: ﻭﻫﺬا ﺣﺪﻳﺚ ﺻﺤﻴﺢ ﻭﻟﻴﺲ ﻫﻮ ﻋﻠﻰ ﻣﺎ ﻇﻨﻮا، أَنَّ آيَةَ الرَّجْمِ إذْ نَزَلَتْ حُفِظَتْ وَعُرِفَتْ وَعَمِلَ بِهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إلَّا أَنَّهُ لَمْ يَكْتُبْهَا نُسَّاخُ الْقُرْآنِ فِي الْمُصْحَفِ وَلَا أَثْبَتُوا لَفْظَهَا فِي الْقُرْآنِ وَقَدْ سَأَلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ذَلِكَ كَمَا أَوْرَدْنَا فَلَمْ يُجِبْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إلَى ذَلِكَ
        (அபூமுஹம்மத் கூறினார்கள்) கல்லெறி தண்டனை குறித்த வசனம் இறங்கியதும், அது மனனமிடப்பட்டு, அது ஏற்கப்பட்டு, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் செயல்படுத்தவும் பட்டது. ஆனால் குர்ஆன் பிரதிகளில் அதை எழுதவும் இல்லை. அதை குர்ஆனின் வார்த்தைகளாக உறுதிபடுத்தவும் இல்லை. முன்பே நாம் குறிப்பிட்டது போல உமர்(ரலி) அவர்கள் கேட்டபோது, அதனை எழுத அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் கட்டளையிடவுமில்லை. (இப்னு ஹஸம் அவர்களது அல்முஹல்லாஹ் 12/ 177)

மனனமிடப்பட்டதால் ஆயத் அல் ரஜ்ம் குர்ஆனின் வசனமா????

       நாம் சென்ற தொடரில் நபித்தோழர்கள் குர்ஆனை மட்டும் மனனம் செய்யவில்லை. அவர்கள் சுன்னாஹ்வையும் மனனமிட்டு ஓதினார்கள் என்று விளக்கியிருந்தோம். அல்லாஹ்வே குர்ஆனில்
وَاذْكُرْنَ مَا يُتْلَىٰ فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ ۚ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا
        உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும், இருக்கிறான். (அல் குர்ஆன்33:34)
            மேற்குறிபிட்டபடி அல்லாஹ் கூறுவது போல நபித்தோழர்கள் குர்ஆனை அதன் விளக்கத்தையும் மனனமிட்டு ஓதிக்கொண்டிருந்தனர் என்பதை பின்வரும் செய்தி நமக்கு உறுதி படுத்துகிறது.
      'நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கவில்லை, அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்களைத் தவிர. அவர்களிடம் கொஞ்சம் நபிமொழிகள் இருந்தன. காரணம் அவர்கள் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார்கள். நான் (நினைவில் வைத்துள்ளேன்) எழுதி வைத்ததில்லை" என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார்.(புகாரி 113 )
எனவே மனனமிடப்பட்டு ஓதப்பட்டதால் ஆயத் அல் ரஜ்ம் குர்ஆனின் வசனமாக ஆகாது. அது வேதத்தின் சட்டம் மட்டுமே.

ஆயத் என்று அழைக்கப்டுவதால் ரஜ்ம் சட்டம் குர்ஆனின் ஆயத்தா???


        கல்லெறி சட்டத்தை "ஆயத் அல் ரஜ்ம்" என்று அழைக்கப்ப்டுவதால் அது குர்ஆனின் ஆயத்  என்று வாதிக்கின்றனர்.   எனவே முதலில் அரேபிய அகராதிகளான லேன்ஸ் லெக்சிகனும் , ஹன்ஸ் வெர் அகராதியும் என்ன கூறுகின்றன என்பதை பார்ப்போம்.


         
            மேற்குறிபிட்ட அகராதிகளின் படி ஆயத் என்பதின் முதன்மை பொருள் அத்தாட்சி என்பது. மேலும் அதற்கு குர்ஆனின் வசனம், ஒரு புத்தகத்தின் பத்தி, இறைவனின் வேதத்தின் வசனம், எச்சரிக்கை, ஒருவரிடம் இருந்து கிடைக்கும் தகவல் தொடர்பு , அற்புதம், ஆதாரம் உள்ளிட்ட பல பொருள்கள் உண்டு. அல்லாஹ்வும் அவனது தூதரும் வேறுபட்ட பல பொருள்களில் ஆயத் என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளதை குர்ஆனிலும் ஹதீஸிலும் பயன்படுத்தியுள்ளதை பார்க்கமுடியும்.

அல்லாஹ்வின் மொத்த வஹியும் ஆயத் :


هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ
         அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய ஆயத்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான், அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.(அல் குர்ஆன் 62:2)

        மேற்குறிபிட்ட வசனத்தில் அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை ஓதி காண்பிப்பதின் மூலம், அவர்களுக்கு வேத்ததையும் ஞானத்தையும் கற்பிப்பார் என்று இருக்கிறது. ஆயத் என்பது அல்லாஹ்வின் வஹீ மொத்தத்தையும்   குறிப்பதாக இருப்பதால்தான்  அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிப்பார் என்று இடம்பெறுகிறது.

மேலும் நபி(சல்) அவர்கள் குறிபிடும் போது,

8439- وحَدَّثنا بِشْر بن خالد العسكري، قال: أَخْبَرنا شبابة بن سوار عن اللَّيْث بن سَعْد، عَن سَعِيد بن أبي سعيد، عَن أَبِيه، عَن أَبِي هُرَيرة، عَن النَّبِيّ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم قَالَ: مَا مِنْ الأنبياء نبي إلاَّ قد أعطى من الآيات ما مثله - أظنه - تؤمن عليه، وَإنَّما كان الذي أوتيت وحيا أوحاه الله إِلَيَّ فأرجو أن أكون أكثرهم تابعا يوم القيامة.
    
       " ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஆயத்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் மக்கள் 'நம்பியே ஆகவேண்டியிருந்தது. எனக்கு வழங்கப்பட்டது, அல்லாஹ் எனக்கு அருளிய வஹீதான். எனவே, நபிமார்களிலேயே மறுமைநாளில், பின்பற்றுவோர் அதிகமுள்ள நபியாக நானே இருப்பேன் என எதிர்பார்க்கிறேன். " என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்' (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: முஸ்னத் பஸ்ஸார் 8439)
மேலும் நபி(சல்) கூறும்போது பின்வருமாறு கூறுகிறார்கள்:

حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي كَبْشَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏" بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلاَ حَرَجَ، وَمَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏‏.‏
    இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி (ஆயத் ) கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என் மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி 3421, திர்மிதி 2669)
         மேற்குறிபிட்ட செய்தியில் இடம்பெறும் "‏ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً" என்ற சொற்றொடருக்கு பின்வருமாறு மழ்ஹரி விளக்கம் அளிக்கிறார்:
فقد أمر النبي -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- بالتبليغ عنه حيث قال: "بلغوا عني ولو آية" الحديث رواه البخاري رحمه الله. قال المظهري أي بلغوا عني أحاديثي ولو كانت قليلة.

       நபி(சல்) அவர்கள் ஹதீஸ்களை எடுத்துரைப்பது குறித்து  " என்னிடமிருந்து ஒரேயொரு  ஆயத்  கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள்" என்று கூறி கட்டளையிட்டார்கள்.  இந்த ஹதீஸ் புகாரி(ரஹ்) அவர்களது அறிவிப்பாகும் ஆகும்.  "என்னிடம் இருந்து சில ஹதீஸ்களை பெற்றாலும் அதை எடுத்துரையுங்கள் என்பதே இதன் பொருள் ஆகும் " என்று  மழ்ஹரி கூறுகிறார் (உம்தத்துல் காரீ1/4) 

            இவ்வாறு அல்லாஹ் தனது வஹீயை மொத்தமாக ஆயத் என்று கூறுகிறான். அதையே நபி(சல்) அவர்களும் குறிப்பிடுகிறார்கள்.  

குர்ஆனின் வசனங்களும் ஆயத் என்று அழைக்கப்படுதல்:

                    அதே போல் அல்லாஹ் குர்ஆனில் ஆயத் என்ற சொல்லை குர்ஆனின் வசனத்தை குறிக்கவும் பயன்படுத்தியுள்ளான்.

وَلَوْ جَعَلْنَاهُ قُرْآنًا أَعْجَمِيًّا لَقَالُوا لَوْلَا فُصِّلَتْ آيَاتُهُ 
        இதை அரபு மொழியில் அல்லாத குர்ஆனாக நாம் ஆக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்படக் கூடாதா? (அல் குர்ஆன் 41:44)
                அதே போல் அல்லாஹ் குர்ஆனில் ஆயத் என்ற சொல்லை முன்சென்ற வேதத்தில் இருக்கும் ஆயத்களை குறிக்கவும் பயன்படுத்தியுள்ளான்.
وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِآيَاتِنَا وَسُلْطَانٍ مُبِينٍ
                நிச்சயமாக நாம் மூஸாவை நம் ஆயத்களுடனும், தெளிவான அத்தாட்சியுடனும், அனுப்பிவைத்தோம். (அல் குர்ஆன் 11: 96)
            மேலும் முன்சென்ற வேதமான தவ்ராத்தில் இடம்பெற்று இருக்கும் கல்லெறி தண்டனை, " ஆயத் அல் ரஜ்ம்" என்ற பெயராலே அழைக்கப்பட்டுள்ளதை நாம் ஹதீஸ்களில் காணமுடியும்.
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ الْيَهُودَ، جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرُوا لَهُ أَنَّ رَجُلاً مِنْهُمْ وَامْرَأَةً زَنَيَا فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ فِي شَأْنِ الرَّجْمِ ‏"‏‏.‏ فَقَالُوا نَفْضَحُهُمْ وَيُجْلَدُونَ‏.‏ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ كَذَبْتُمْ، إِنَّ فِيهَا الرَّجْمَ‏.‏ فَأَتَوْا بِالتَّوْرَاةِ فَنَشَرُوهَا، فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ، فَقَرَأَ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا‏.‏ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ ارْفَعْ يَدَكَ‏. فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهَا آيَةُ الرَّجْمِ‏. فَقَالُوا صَدَقَ يَا مُحَمَّدُ، فِيهَا آيَةُ الرَّجْمِ‏.‏ فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَرُجِمَا‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ فَرَأَيْتُ الرَّجُلَ يَجْنَأُ عَلَى الْمَرْأَةِ يَقِيهَا الْحِجَارَةَ‏.‏
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
                    யூதர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்று அவர்களிடம், தம் சமுதாயத்தாரிடையே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கவர்கள், 'அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது" என்று பதிலளித்தார்கள். உடனே, (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி) 'நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபசாரம் செய்தவர்களை சாகும்வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் 'விபசாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்படவேண்டும்' என்று கூறும் வசனத்தின் மீது தன்னுடைய கையை வைத்து மறைத்து, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார். அப்போது அப்துல்லாஹ் இப்னு சலாம்(ரலி), 'உன் கையை எடு" என்று சொல்ல, அவர் தன்னுடைய கையை எடுத்தார். அப்போது அங்கே (ஆயத் அல் ரஜம்) (விபசாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், 'அப்துல்லாஹ் இப்னு சலாம் உண்மை கூறினார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத்தான் செய்கிறது" என்று கூறினார்கள். உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும் வரை கல்லால் அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவளின் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை பார்த்தேன்.(புகாரி 3635)

    மேற்குறிபிட்ட ஹதீஸை பார்க்கும் யாரும், "ஆயத்" என்ற பதம் அல்லாஹ்வின் கட்டளை என்ற பொருளில்தான் பயன்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறிவிடுவார்கள்.   

               ஆயத் என்பது இடத்துக்கு தக்க பொருள்தரும் பொதுவான சொல்தானே தவிர குர்ஆனின் வசனத்தை மட்டும் குறிக்கும் குறிப்புச்சொல் அல்ல. ஆகவே ஆயத் அல் ரஜ்ம் என்ற சொற்பிரயோகம் குர்ஆனின் ஆயத் என்ற பொருளில் பயன்படுத்தப்பட வில்லை. அல்லாஹ்வின் கட்டளை என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்பும் ஆயத் என்பது குர்ஆனின் வசனத்தை மட்டும் குறிக்கும் குறிப்புச்சொல் என்று யாரேனும் வாதிட்டால், ஆயத் என்ற சொல் குறித்த எந்த ஞானமும் அவர்களுக்கு இல்லை என்பதே பொருள்.

ஆயத் அல் ரஜ்ம் வசனம் எழுதப்பட்டிருந்த காகிதத்தை ஆடு தின்றுவிட்டதால் அது குர்ஆனில் இடம்பெறவில்லையா?

حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ خَلَفٍ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، ‏.‏ وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَقَدْ نَزَلَتْ آيَةُ الرَّجْمِ وَرَضَاعَةُ الْكَبِيرِ عَشْرًا وَلَقَدْ كَانَ فِي صَحِيفَةٍ تَحْتَ سَرِيرِي فَلَمَّا مَاتَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَتَشَاغَلْنَا بِمَوْتِهِ دَخَلَ دَاجِنٌ فَأَكَلَهَا ‏.‏
ஆயிஷா(ரலி) கூறியதாவது:
                    கல்லெறி குறித்த ஆயத்தும், பருவமடைந்தவருக்கு பாலுட்டுவது குறித்த ஆயத்தும் இறங்கியிருந்தது. அது எழுதப்பட்ட காகிதம் எனது தலயணைக்கு கீழ் இருந்தது. அல்லாஹ்வின் தூதர் இறந்த போது ,நாங்கள் கவலையில் இருந்தோம். அப்போது வளர்ப்பு ஆடு ஒன்று அதை தின்றுவிட்டது (இப்னு மாஜா 2020, முஸ்னத் அஹ்மத் 26316)
            மேற்குறிப்பிட்ட இந்த செய்தியில் இடம் பெறும் முஹ்ம்மது இப்னு இஸ்ஹாக் குறித்து சுஃப்யான் அஸ்ஸவ்ரி, சுஅபா இப்னு ஹஜ்ஜாஜ் போன்றவர்கள் போற்றியுள்ளனர். ஆயினும் இவர் குறித்து பலரும் விமர்சித்தும் உள்ளனர். அபூ பகர் அல் பைஹக்கி இவர் குறித்து கூறுகையில் இவர் பலவீனமானவர் என்கிறார். இவரை குறித்து அபூபக்ர் அல் பைஹக்கி கூறுகையில் இவர் நேரிடையாக செவியுற்றதற்கான வார்த்தைகள் இன்றி அறிவிக்கும் போது இவரது செய்திகள் பலவீனமானது என்கிறார். மேலும் இவரது செய்திகள் வழுவான அறிவிப்பாளரின் செய்திக்கு ஒத்தமைந்தால் ஏற்கப்படும் என்று கூறுகிறார், இவர் குறித்து இருட்டடிப்பு செய்பவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்.(தஹ்ரீப் அல் தஃதீப் 2/54 ). இவர் குறித்து அபூஹாத்தம் கூறுகையில் இவர் ஹதீஸில் பலவீனமானவர் என்றும், இவரது செய்திகளை மற்றவர் ஒத்துபார்த்து ஏற்க வேண்டும் என்கிறார். நஸ்யீ கூறுகையில் இவர் பலமானவர் அல்ல என்று கூறுகிறார். இதில் இவர் குறித்து உகைலீ கூறுகையில்:  அபூ அப்தில்லாஹ் "அவர் அதிகமாக இருட்டடிப்பு செய்பவர். அவர் இன்னாரிடம் கேட்டேன், அல்லது இன்னார் கூறினார் என்று கூறினாலும் அவர் அதில் இருட்டடிப்பு செய்வார்.  (அதாவது நான் இன்னாரிடம் கேட்டேன் என்று அவர் கூறும் போதும் கூட அவர் யாரிடம் கேட்டார் என்பது இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் என்று கூறுகிறார்)  

        இவ்வாறு முஹம்மத் இப்னு இஸ்ஹாக் குறித்த முரண்பட்ட விமர்சனங்களை ஓப்பிட்டு பின்வருமாறு அத்தஹபீ முடிவை முன்வைக்கிறார்.  இஸ்லாமிய சட்டவியல் குறித்த செய்திகளில் இவரது ஹதீஸ்கள் ஸஹீஹ் என்ற தரத்தில் இருந்து ஹஸன் என்ற தரத்திற்கு இறங்கிவிடும். இவர் மட்டும் தனித்து அறிவிக்கும் நிலையில் அந்த செய்தி நிராகரிக்கவே பட்டுவிடும். (சியார் 7/33-35) 

            இதுதான் இந்த செய்தியை பொருத்தவரை நமது நிலைபாடும். மேற்குறிபிட்டவாறு குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட ஏடுகளை ஆடு தின்றதாக அறிவிக்கும் செய்தி இவர் மட்டுமே தணித்து அறிவிக்கும் செய்தி. எனவேதான் முஸ்னத் அஹ்மதின் இந்த செய்தியை பதிவிட்டு இது ளயீபானது என்று ஷேக் சுஐப் அர்னாவுத் அவர்கள் தனது முஸ்னத் அஹ்மதின் விளக்கவுரை(43/343)-ல் குறிப்பிடுகிறார்.
               
                    அப்படியே இந்த செய்தியில் இருப்பது போல கல்லெறி குறித்த ஆயத் எழுதப்பட்ட காகித்தை ஆடு தின்றிருந்தாலும் அந்த வசனம் மக்கள் நினைவில் இருந்ததை மேற்குறிபிட்ட பல ஹதீஸ்ளில் காணலாம். ஆக அது குர்ஆனின் வசனமாக இடம்பெறவில்லை என்பதற்கு ஆடு திண்றது காரணம் அல்ல. அது குர்ஆனின் வசனமாக இல்லை என்பதுதான் காரணம். எனவே தான் இந்த செய்தி குறித்து விளக்கயில் இப்னு ஹஸம் மேலே நாம் கூறும் இதே கருத்தை முன்வைக்கிறார்.(அல்முஹல்லாஹ் 12/ 177)

            மேற்குறிபிட்ட விளக்கங்களே கல்லெறி வசனம் குர்ஆனின் வசனம் அல்ல என்பதற்கு போதுமானதாகும் ஆயினும் இவர்கள் வைத்த விமர்சனத்தின் ஊடாக பின்வரும் முடிவுகளையும் நாம் அடைய முடிகிறது.

1) கல்லெறி தண்டனை குறித்த வசனம் குர்ஆனில் இடம் பெறவில்லை என்பதற்கு இருகாரணங்கள் முன்வைக்கப்படுகிறது:
1)  முதலில் அந்த வசனம் குர்ஆனின் வசனமாக இறங்கியது. பின்பு அது உயர்த்தப்பட்டுவிட்டது.அதன் சட்டம் மட்டும் நடைமுறையில் இருக்கிறது. எனவே இன்றிருக்கும் குர்ஆனில் ஒரு வசனமாக இடம்பெறவில்லை. இதற்கு ஆதாரமாக உபை இப்னு கஃப்(ரலி) அறிவிக்கும் முஸ்னத் அபிதாவூத் அல் தயாலிசி ஹதீஸ் எண்: 542 பதியப்பட்டுள்ளது.
2) அல்லது இந்த வசனம் குர்ஆனின் வசனமாக இறங்கவில்லை. அது நபி(சல்) அவர்களது சுன்னாஹ்வாக இறங்கியது. எனவே இன்றிருக்கும் குர்ஆனில் ஒரு வசனமாக இடம்பெறவில்லை. இதற்கு ஆதாரங்களாக இரு நபிதோழர்களான உமர் (ரலி) மற்றும் அமர் (ரலி) ஆகியோரது முறையே சுனன் அல் குப்ரா அன் நஸ்யீ 7110, சுனன் அல் குப்ரா அல் பைஹக்கி 16913 மற்றும் முஸ்தத்ரக் அல் ஹாகிம் 8071 ஆகிய செய்திகள் பதியப்பட்டுள்ளது.
2)அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டல் அல்குர்ஆனின் வழிகாட்டல்தான் என்பதை நபி(சல்) அவர்களே விளக்கிய செய்தி புகாரி 2155, அவ்வாறே விளங்கியிருந்த இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களது செய்தி புகாரி 4886 பதியப்பட்டுள்ளது. அந்த வரிசையில் உமர்(ரலி) கல்லெறி தணடனை வசனம் இறைவேதத்தில் உள்ளது என்று கூறும் செய்தியும் அதை உறுதி படுத்துகிறது. மேலும் உமர்(ரலி) அவர்களே ஏன் குர்ஆனில் ஆயத் அல் ரஜ்ம் இடம்பெறவில்லை என்பதை விளக்கியிருக்கும் செய்தி (சுனன் குப்ரா அன் நஸ்யீ 7110, சுனன் அல் குப்ரா அல் பைஹக்கி 16913) இங்கு கவனிக்கப்படவேண்டியது.

3)ஆடு தின்றதால் இந்த வசனம் குர்ஆனில் இடம்பெறவில்லை என்பது ஜமுக்காலத்தில் வடிகட்டிய பச்சை பொய் என்பது இதன் மூலம் நிறுவப்பட்டுள்ளது. அந்த செய்தி பலவீனமானது மட்டும் அல்லாமல் அந்த வசனத்தை மக்கள் நினைவில் கொண்டிருந்தும் அதனை குர்ஆனில் பதியவில்லை என்பதற்கு அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்களே அதை பதிய அனுமதிக்க வில்லை, நபி(சல்) அவர்களுக்கும் அந்த அனுமதியை அல்லாஹ் வழங்கவில்லை என்பதால்தான் என்பது தெளிவாகிறது.

4)அல்குர்ஆனை உஸ்மான்(ரலி) தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாற்றிவிட்டார்கள் என்று கப்ஸா விட்டுத்திரியும் இஸ்லாமோஃபோபுகளின் இந்த விமர்சனம் பொய்யானது என்று தெளிவாகிறது. இஸ்லாமிய ஆட்சியின் ஆரம்ப காலத்தில் அபூபக்ர்(ரலி) அவர்களுக்கு பிறகு உச்சபட்ச அதிகாரம் படைத்த கலிஃபாவான உமர்(ரலி) அவர்களாலேயே குர்ஆனில் எதையும் மாற்ற இயலவில்லை எனும் போது உஸ்மான்(ரலி) அவர்கள் குர்ஆனில் சேர்த்துவிட்டார் நீக்கிவிட்டார் என்பது எல்லாம் சுத்த கட்டுக்கதை என்பது இதன் மூலம் நிரூபனமாகிறது.

அல்லாஹூ அஃலம்

Tuesday, December 27, 2016

எதிர் தொடர் 23: பாதுகாக்கப்பட்ட திருக்குர்ஆன்

ஏகஇறைவனின் திருப்பெயரால்


      இந்த தொடரில் கட்டுரையாளர் குர்ஆன்பாதுகாக்கப்பட்டது குறித்து சில கேள்விகளை முன்வைத்துள்ளார். ஒவ்வோர் தொடரிலும் கட்டுரையாளரின் இஸ்லாம் குறித்த பார்வை மிசனரிகளின் வாந்திதான் என்பதை தோழுரித்து வருகிறோம். இவர் தன்னை நாத்திகராக காட்டி கொண்டாலும் இவரால் கூறப்படும் ஆதாரங்கள் யாவும் கிறித்தவ மிசனரிகளின் வளைத்தளங்களில் இருந்து பெறப்பட்டவைதான். அதே வரிசையில் இந்த கட்டுரையும் எதிர் கட்டுரையாளரால் முன்வைக்க பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இந்த தொடரில் குர் ஆன் குறித்த கட்டுரையாளரின் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பதிலளிப்போம்.

வசன மாற்றம் அல்லது சட்ட மாற்றம் ஏன்?
 
நமது பதில்:
      வசனங்களை அல்லாஹ் மாற்றுவது என்பதற்கு நமது கட்டுரையாளர் முன் சொன்னது என்ன சொதப்பலா என்ற அறிவுப்பூர்வமான???? ஒரு கேள்வியை முன்வத்துள்ளார். அதற்கான விடையை அல்லாஹ் தெள்ளத்தெளிவாக தனது வேதத்தில் கூறிவிட்டான்.

وَإِذَا بَدَّلْنَا آيَةً مَكَانَ آيَةٍ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوا إِنَّمَا أَنْتَ مُفْتَرٍ بَلْ أَكْثَرُهُمْ لا يَعْلَمُونَ (١٠١) قُلْ نَزَّلَهُ رُوحُ الْقُدُسِ مِنْ رَبِّكَ بِالْحَقِّ لِيُثَبِّتَ الَّذِينَ آمَنُوا وَهُدًى وَبُشْرَى لِلْمُسْلِمِينَ (١٠٢)

ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் "நீர் இட்டுக்கட்டுபவர்'' எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். மாறாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். நம்பிக்கையாளர்களைப் பலப்படுத்திடவும், முஸ்லிம்களுக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இதை உமது இறைவனிடமிருந்து "ரூஹுல் குதுஸ்' உண்மையுடன் இறக்கினார்' என்பதை (முஹம்மதே!) கூறுவீராக!  (அல் குர்ஆன் 16:101,102)
மேற்கூறிய காரணம்தான் பிர் மவூனா சம்பவத்தின் போது வசனங்களை இறக்கியதற்கும் அதை நீக்கியதற்கும் காரணம் என்பது பின்வரும் செய்தியே போதுமானது:

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

   பிஃரு மஊனாவில் தம் தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி(ஸல்) அவர்கள் முப்பது நாள் காலை(த் தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ்வுக்கம் அவனுடைய தூதருக்கம் மாறு செய்த உஸய்யா, ரிஅல், தக்வான், (பனூ) லிஹ்யான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.

அனஸ்(ரலி) கூறினார்:

      எனவே, இறைவன் தன்னுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கு பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்களின் விஷயத்தில் குர்ஆன் வசனம் ஒன்றை அருளினான். அதை நாங்கள் ஓதிவந்தோம். பின்னர் (இறைவனால் அந்த வசனம்) நீக்கப்பட்டுவிட்டது.

(அந்த வசனம் இதுதான்:) 'நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்து விட்டோம். அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான். நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தியடைந்தோம்' என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்.
                                                   நூல் : புஹாரி 4095
  


      மேற்குறிபிட்ட சம்பவத்தை குறிப்பிட்டு கட்டுரையாளர் விமர்சித்துள்ளார். பிஃர் மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் அவர்களது சமுதாயத்திற்கு அல்லாஹ்விடம் அறிவிக்க வேண்டியதை அவர்கள் சமுதாயத்திற்கு அறிவித்துவிட்டான். அவர்களது சமுகத்தாருக்கு பயம் நீங்கிவிட்ட்து அல்லது அவர்கள் சமுதாயத்தாரின் கவலை நீங்கிவிட்டது. பிறகு அந்த வசனத்தின் தேவை இல்லாமல் போனதும் அல்லாஹ் அதை நீக்கிவிட்டான். அந்த வசனத்தை படிக்கும் யாருக்கும் இந்த விஷயம் புரியும். ஏனோ நடுநிலை நாத்திகன் என்று கூறும் கட்டுரையாளருக்கு இது தோன்றவில்லை.  


நபி(சல்) அவர்கள் காலத்தில் குர்ஆனுக்கு இறுதி வடிவம் வழங்கப்பட வில்லையா?
நமது பதில்:
            நபி(சல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆனுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படவில்லை என்ற கருத்தை தனது விமர்சனத்தில் முன்வைத்துள்ளார். நாம் சிறிது ஆய்வு செய்தோமென்றால் குர்ஆனை நபி(சல்) அவர்கள் எந்த வடிவில் விட்டு சென்றார்ளோ அதே வடிவத்தில்தான் இன்றும் பயன்பாட்டில் உள்ளது என்பதைதான் காட்டும். அதற்கான வரலாற்று செய்திகளை வரிசைபடுத்தினால் கட்டுரையாளரின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும்.
நபி (சல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆன் முழுமையாக்கப்பட்டதா?
      முதலில் குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது அல்லது பாதுக்காக்கப்படும் என்பதை அல்லாஹ் முன்பே அறிவித்துவிடுகிறான். அதன் அடிப்படையில்தான் இன்று வரை பாதுகாக்கப்படுகிறது. அல்லாஹ் தான் எவ்வாறு குர்ஆனை பாதுகாக்கவுள்ளேன் என்பதை பின்வருமாறு கூறுகிறான்:
بَلْ هُوَ آيَاتٌ بَيِّنَاتٌ فِي صُدُورِ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلا الظَّالِمُونَ (٤٩)

     மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 29:49)

மேலும் நபி(சல்) அவர்கள் அல்லாஹ் கூறுவதாக பின்வருமாறு கூறுகிறார்கள்:
وَقَالَ إِنَّمَا بَعَثْتُكَ لأَبْتَلِيَكَ وَأَبْتَلِيَ بِكَ وَأَنْزَلْتُ عَلَيْكَ كِتَابًا لاَ يَغْسِلُهُ الْمَاءُ تَقْرَؤُهُ نَائِمًا وَيَقْظَانَ

இயாள் பின் ஹிமார் அல்முஜாஷிஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்:
.................மேலும் (என்னிடம்) இறைவன், நான் உம்மைச் சோதிப்பதற்கும் உம்மைக் கொண்டு (பிறரைச்) சோதிப்பதற்குமே உம்மை நான் அனுப்பினேன். நீரில் அழிந்துபோய்விடாத வேதத்தையும் உமக்கு நான் அருளினேன். அதை உறங்கும்போதும் விழித்திருக்கும் நிலையிலும் நீர் ஓதுகின்றீர்" என்று கூறினான்.
                                                நூல்: முஸ்லிம் 5498
      அதாவது நீரினால் அழிக்க முடியாத , மனனமிட எளிமையான வகையிலும் அமைந்த வேதத்தை தான் வழங்கியதாக அல்லாஹ் கூறுவதாக நபி(சல்) அவர்கள் கூறுகிறார்கள்.
     மனதில்தான் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது. மேலும் இவ்வாறு வழங்கப்பட்ட வசனங்களை நபிதோழர்கள் மனனம் செய்தே பாதுகாத்தும் வந்தனர்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَشَخَصَ بِبَصَرِهِ إِلَى السَّمَاءِ ثُمَّ قَالَ " هَذَا أَوَانٌ يُخْتَلَسُ الْعِلْمُ مِنَ النَّاسِ حَتَّى لاَ يَقْدِرُوا مِنْهُ عَلَى شَيْءٍ " . فَقَالَ زِيَادُ بْنُ لَبِيدٍ الأَنْصَارِيُّ كَيْفَ يُخْتَلَسُ مِنَّا وَقَدْ قَرَأْنَا الْقُرْآنَ فَوَاللَّهِ لَنَقْرَأَنَّهُ وَلَنُقْرِئَنَّهُ نِسَاءَنَا وَأَبْنَاءَنَا .........

ஜுபைர் பின் நுஃபைர் அவரகள் அபூ தர்தா(ரலி) கூறியதாக அறிவித்ததாவது:
      நாங்கள் நபி(சல்) அவர்களுடன் இருந்த போது வானத்தை நோக்கி பார்த்தவர்களாக “மக்களிடம் இருந்து கல்வி முற்றிலுமாக மக்களிடம் எதுவுமே இல்லை எனும் அளவிற்கு அகற்றப்படும் என்று கூறினார்கள். அதற்கு ஜியாத் பின் லபீத்(ரலி) அவர்கள் நாங்கள் குர்ஆனை மனனமிட்டு ஓதிவருகிறோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் ஓதுவோம், எங்கள் பெண்களும் குழந்தைகளும்  ஓதுவார்கள். இந்நிலையில் எப்படி அது எங்களிடம் இருந்து அகற்றப்படும் என்று கேட்டார்கள்........  
                                                   நூல்:  திர்மிதி 2653

இப்படி குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த நபிதோழர்களில் சிலர்:
      இப்னு மஸூத்(ரலி), அபூ அய்யூப்(ரலி), அபூபக்கர்(ரலி), அபூ தர்தா(ரலி), அபூ ஜைது(ரலி), அபூ மூஸா அல் அஸ்அரி(ரலி), அபூ ஹூரைரா(ரலி), உபை பின் காஹ்ப்(ரலி), உம்மு சலாமா(ரலி), தமிமுத் தாரி(ரலி), ஹுதைஃபா(ரலி), ஹஃப்ஸா(ரலி), ஸைது பின் தாபித்(ரலி),சஃத் பின் உபாதா(ரலி), உபைத் அல் காரி(ரலி), சஃத் பின் முந்தீர்(ரலி), சிஹாப் அல் குரைஷி(ரலி), தல்ஹா(ரலி), ஆயிஷா(ரலி), உபாதா பின் அஸ்ஸாமித்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அப்துல்லாஹ் பின் உமர்(ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி), உத்மான் பின் அஃப்பான் (ரலி), உக்பா பின் அமீர்(ரலி), அலி பின் அபிதாலிப்(ரலி), உமர் பின் அல்கத்தாப்(ரலி), அம்ர் அல் ஆஸ்(ரலி), முஃஆது பின் ஜபல்(ரலி),…………….

      குர்ஆனின் அமைப்பும் அந்த வகையிலேயேதான் அமைந்துள்ளது. அதாவது மனனம் செய்ய எதுவாகவும், செவி வழியில் மனனமிடுவது எதுவாகவும் அதன் மொழியியல் அமைப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக அல்லாஹ் கூறுவது போல இன்றுவரை மூலப்பிரதியாக இருப்பது குர்ஆனை மனனமிட்டவரின் உள்ளம்தான்.

சூராக்களின் வடிவம் நபி(சல்) அவர்கள் காலத்திலேயே முடிந்தது:
      மனனமிட்டு பாதுகாத்தல் என்பது மட்டும் அல்லாமல் எழுத்து வடிவிலும் குர்ஆனை பாதுகாக்க நபி(சல்) அவர்கள் ஏற்பாடுகளை செய்தார்கள்
      நபி(சல்) அவர்கள் காலத்திலேயே நபி(சல்) அவர்களின் மேற்பார்வையில் குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் சூராக்களின் வடிவம் முழுமையடைந்துவிட்டது. அதாவது எந்த எந்த சூராவில் எந்த எந்த வசனங்கள் இடம்பெற வேண்டும் என்பது நபி(சல்) அவர்கள் காலத்திலேயே நபி(சல்) அவர்களால் நிர்ணயிக்கப்பட்டது.

பராஉ(ரலி) அறிவித்தார்
         'இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்' எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனம் அருளப்பட்டபோது, நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'ஸைதை அழைத்து வாருங்கள். அவர் தம்முடன் 'பலகை, மைக்கூடு, அகலமான எலும்பு அல்லது 'அகலமான எலும்பு, மைக்கூடு' ஆகியவற்றை எடுத்துவரட்டும்' என்று கூறினார்கள். (ஸைத் இப்னு ஸாபித்(ரலி) வந்தபோது,) 'இந்த (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனத்தை எழுதிக்கொள்ளுங்கள்!' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முதுகுக்குப் பின்னால், கண் பார்வையற்றவரான அம்ர் பன் உம்மி மக்த்தூம்(ரலி) இருந்தார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எனக்கு என்ன உத்தரவிடுகிறீர்கள். நானோ, கண்பார்வையற்ற மனிதனாயிற்றே!' என்று கேட்டார்கள். உடனடியாக அதே இடத்தில் 'இடையூறு உள்ளவர்கள் தவிர' எனும் (இணைப்புடன்) இவ்வசனம் (முழுமையாக) இறங்கிற்று.
                                                    நூல்: புஹாரி 4990
      இவ்வாறு வசனங்கள் இறங்க இறங்க குர்ஆனை மனனமிட்டது அல்லாமல் எழுத்து வடிவிலும் பாதுகாக்கப்பட்ட்து. மேலும் ஒவ்வோர் சூராவிலும் வசனங்கள் எவ்வாறு இடம் பெறவேண்டும் என்பதையும் எழுத்து பிரதிகளில் பதிய ஆணையிட்டார்கள்:

                حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَابْنُ أَبِي عَدِيٍّ، وَسَهْلُ بْنُ يُوسُفَ، قَالُوا حَدَّثَنَا عَوْفُ بْنُ أَبِي جَمِيلَةَ، حَدَّثَنَا يَزِيدُ الْفَارِسِيُّ، حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، قَالَ قُلْتُ لِعُثْمَانَ بْنِ عَفَّانَ مَا حَمَلَكُمْ أَنْ عَمَدْتُمْ، إِلَى الأَنْفَالِ وَهِيَ مِنَ الْمَثَانِي وَإِلَى بَرَاءَةَ وَهِيَ مِنَ الْمِئِينَ فَقَرَنْتُمْ بَيْنَهُمَا وَلَمْ تَكْتُبُوا بَيْنَهُمَا سَطْرَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَوَضَعْتُمُوهُمَا فِي السَّبْعِ الطُّوَلِ مَا حَمَلَكُمْ عَلَى ذَلِكَ فَقَالَ عُثْمَانُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِمَّا يَأْتِي عَلَيْهِ الزَّمَانُ وَهُوَ تَنْزِلُ عَلَيْهِ السُّوَرُ ذَوَاتُ الْعَدَدِ فَكَانَ إِذَا نَزَلَ عَلَيْهِ الشَّىْءُ دَعَا بَعْضَ مَنْ كَانَ يَكْتُبُ فَيَقُولُ ضَعُوا هَؤُلاَءِ الآيَاتِ فِي السُّورَةِ الَّتِي يُذْكَرُ فِيهَا كَذَا وَكَذَا وَإِذَا نَزَلَتْ عَلَيْهِ الآيَةُ فَيَقُولُ ضَعُوا هَذِهِ الآيَةَ فِي السُّورَةِ الَّتِي يُذْكَرُ فِيهَا كَذَا وَكَذَا ……..

இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது:
            நான் உஸ்மான் பின் அஃபானிடம் “ அல் அன்ஃபால் நூறுக்கு குறைவான வசனங்களை கொண்டிருக்க, அது குறித்து உங்களது கருத்து என்ன ?, அல் பராஹ் அல்லது அத் தவ்பா நூறு வசனங்களுக்கு மேல் கொண்டிருக்க, அது குறித்து உங்களது கருத்து என்ன?” என்று கேட்டேன். மேலும் “நீங்கள் ஏன் அவ்விரணடையும் ஒன்றாக பதிவிட்டு ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதை எழுதாமல் விட்டீர்கள்” என்றும் கேட்டேன். அதற்கு உஸ்மான் அவர்கள் “ நபி(சல்) அவர்களுக்கு இறை அறிவிப்பு ஏதுமின்றி பல நாட்கள் சென்றிருக்கும், பிறகு சில நேரங்களில் அதிகமானவை இறங்கும். ஆக ஏதனும் இறைவனிடம் இருந்து அறிவிக்கப்பட்டால், எழுத்தர்களை அழைப்பார்கள். மேலும் கூறுவார்கள் இந்த இந்த இடத்தில் இன்ன இன்ன வசனங்கள் இடம்பெறும் சூராவில் இந்த வசனத்தை எழுதுங்கள் என்று கட்டளையிடுவார்கள் ........( நூல்: திர்மிதி 3086)

      இப்படி ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் நபி(சல்) அவர்கள் எந்த சூரவில் அதை பதிவிட வேண்டும் என்பதையும் சேர்த்து கூறுவார்கள். மேலும் சந்தர்ப்பங்கள் அமையும் போது குர் ஆன் அத்தியாயங்களை மொத்தமாக ஓதியும் காட்டுவார்கள். 

      ஹாரிஸா பின் நுஅமான் (ரலி) அவர்களின் புதல்வியார் உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஓராண்டு அல்லது ஓராண்டும் சில மாதங்களும் ஒரே அடுப்பையே பயன்படுத்திவந்தோம். நான் "காஃப். வல்குர்ஆனில் மஜீத்" எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நாவிலிருந்தே மனனமிட்டேன். அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி மக்களுக்கு உரையாற்றும் போது அந்த அத்தியாயத்தை ஓதுவார்கள். (முஸ்லிம் 1582.)
      இப்படியாக ஒவ்வொரு அத்தியாயத்தின் அமைப்பும் நபி(சல்) அவர்கள் காலத்திலேயே சரிபார்க்கப்பட்டு மக்களின் உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டது. மேலும் ஒவ்வோர் தொழுகையிலும் அத்தியாயங்கள் ஓதப்பட்டு சரியான அமைவு சரிபார்க்கப்பட்டது. தொழுகையும் மக்களின் மனதில் குர் ஆனை நிலை நிறுத்துவதில் பெரும் பங்காற்றியது. மேலும் நபி(சல்) அவர்கள் காலத்தில் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் அதுவரை இறங்கிய குர்ஆனை நபி(சல்) அவர்களுக்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூலமாக தொகுத்து வழங்கப்பட்டது. நபி(சல்) அவர்கள் இறந்த வருடத்தில் இரண்டு முறை இந்த நிகழ்வு நடந்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்:
      ஒவ்வோர் ஆண்டுக்கொரு முறை (வானவர் ஜிப்ரீல் அதுவரை அருளப்பெற்ற) குர்ஆன் வசனங்களை நபி(ஸல்) அவர்களுக்கு (மொத்தமாக) ஓதிக்காட்டுவது வழக்கம். நபி(ஸல்) அவர்கள் இறந்த ஆண்டில் இரண்டுமுறை அவர்களுக்கு (ஜிப்ரீல்) ஓதிக்காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் (ரமளான் மாதத்தின் இறுதிப்)பத்து நாள்கள் 'இஃதிகாஃப்' மேற்கொள்வது வழக்கம். அவர்கள் இறந்த ஆண்டு, (ரமளானில்) இருபது நாள்கள் 'இஃதிகாஃப்' மேற்கொண்டார்கள். (புஹாரி 4998)

    இப்படியாக சரிபார்க்கபட்ட குர் ஆன் தான் நபி(சல்) அவர்கள் மறைவிற்குப் பிறகு நபிதோழர்களிடம் இருந்தது.

அப்துல் அஸீஸ் இப்னு ருஃபைஉ(ரஹ்) கூறினார்
      நானும் ஷத்தாத் இப்னு மஅகில்(ரஹ்) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஷத்தாத்(ரஹ்), 'நபி(ஸல்) அவர்கள் (உலகைப் பிரிந்தபோது, இந்தக் குர்ஆனில் இடம் பெறாத) வேறு (இறைவசனங்கள்) எதையும் (நம்மிடையே)விட்டுச் சென்றார்களா?' என்று கேட்டார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), '(இந்தக் குர்ஆனின்) இரண்டு அட்டைகளுக்கிடையேயுள்ள வசனங்களைத் தான் (இறைவேதமாக) நபி(ஸல்) அவர்கள்விட்டுச் சென்றார்கள்' என்று பதிலளித்தார்கள்.

      நாங்கள் (அலீ(ரலி) அவர்களின் புதல்வரான) முஹம்மத் இப்னு ஹனஃபிய்யா(ரஹ்) அவர்களிடம் சென்று, இது குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள் (இப்னு அப்பாஸ்(ரலி) பதிலளித்தது போன்றே) '(இந்தக் குர்ஆனின்) இரண்டு அட்டைகளுக்கிடையேயுள்ள வசனங்களைத்தான் (இறைவேதமாக) நபி(ஸல்) அவர்கள்விட்டுச் சென்றார்கள்' என்று பதிலளித்தார்கள்.( புஹாரி 5019)

அபூபக்ர்(ரலி) செய்தது என்ன?
 (வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) கூறினார்
.........எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) எனவே, (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை போPச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டியபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூ குஸைமா அல் அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; அவரல்லாத வேறெவரிடமிருந்தும் இதனை நான் பெறவில்லை. (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128, 129)
      (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் வாழ்நாளில் இருந்தது. (அவர்களின் இறப்பிற்குப்) பிறகு உமர்(ரலி) அவர்களின் புதல்வி ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது. (புஹாரி 4986).
      மேலே கூறப்பட்ட செய்தியையும் முன் சென்ற தலைப்பிகளிலும் உள்ள செய்திகளையும் வாசிப்பவர் எளிதாக ஒரு விஷயத்தை அறிந்து கொள்ளமுடியும். நபி(சல்) அவர்களது காலத்தில் துண்டு துண்டாக எழுதப்பட்ட குர்ஆனின் ஏடுகள் மொத்த குர்ஆனையும் கொண்ட மூலப்பிரதியான உள்ளத்தோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுமையாக ஓரே புத்தகமாக மாற்றப்பட்டது என்பதுதான். அதனால்தான் மேற்குறிபிட்ட செய்தியில் ‘தொகுக்கப்பட்ட குர்ஆன்என்று பொருள்படும். جَمْعِ الْقُرْآنِ என்ற பதமே பயன்படுத்தப்படுகிறது. 
 
உஸ்மான்(ரலி) செய்தது என்ன?

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
            ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.
      எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். (புஹாரி 4987.)
     
     இஸ்லாம் பல பகுதிகளில் பரவலான பிறகு குர் ஆனை மனனமிட்டவர்களின் எண்ணிக்கை குர்ஆனை பரவலாக்கவும், குழப்பத்தை தவிர்க்கவ்ய்ம் போதியதாக இல்லை. ஆக தொகுக்கப்பட்டு இருந்த ஒற்றை பிரதியை பரவலாக்குவதன் மூலம், சிறு பகுதிகளை கைகளில் வைத்துக்கொண்டு இது குர்ஆன் என்று கூறி குழப்பம் ஏற்படுவதை தடுக்க வழிசெய்தார்கள் உஸ்மான் (ரலி). அதனால் தான் ஏனைய பிரதிகள் அழிக்கப்பட்டது.

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்
      நாங்கள் (உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) குர்ஆனுக்குப் பிததிகள் எடுத்தபோது 'அல்அஹ்ஸாப்' எனும் (33 வது) அத்தியாயத்தில் ஒரு வசனம் காணவில்லை. அதனை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். அதை நாங்கள் தேடியபோது அது குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டோம். (அந்த வசனம் இதுதான்:) 'அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெயப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் உயிரை அர்ப்பணிக்க வேண்டுமென்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்ற தக்க தருணம்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23)
       உடனே நாங்கள் அ(ந்த வசனத்)தை குர்ஆன் பிரதியில் அதற்குரிய அத்தியாயத்தில் இணைத்துவிட்டோம். (புகாரி 4988)


      மேற்குறிபிட்ட செய்தி ஸைத் பின் சாபித்(ரலி) எப்படி குர்ஆன் பிரதியை ஒப்பிட்டார்கள் என்பதை அறிய முடிகிறது. அதாவது உள்ளத்தில் இருந்த அந்த மூல பிரதியோடுதான் எழுத்துப்பிரதிகளை ஒப்பிட்டார்கள் எனபதை தெளிவாக மேற்குறிப்பிட்ட செய்தி கூறுகிறது. அதனால்தான் இது குறித்து வில்லியம் கிரகாம் என்ற ஹார்வர்ட் பல்கலை ஆசிரியர் குறிபிடும் போது பின்வருமாறு கூறுகிறார்,
ஒரு ஆங்கில அரபியே ஆய்வாளர் முன்பே குறிபிட்டது "குர் ஆனின் முதலில் இருந்து கடைசி வரை கேட்கப்படவேண்டிய புத்தகமே அன்றி வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் அல்ல. இஸ்லாமிய வரலாற்றின் 13 நூற்றாண்டுகளாய் எண்ணிலடங்கா மில்லியன் இஸ்லாமியர்களுக்கு அல் கிதாப் கற்கப்பட்டு, ஓதப்பட்டு பல தடவை ஓதல்களால் மணனமிடப்பட்டு வாய்வழியாக கடத்தப்பட்டிருக்கிறது (P.No: 79-80, Beyond the Written Word: Oral Aspects of the Scriptures in History of Religion by William A.Graham )


    மேற்குறிபிட்ட அறிஞரின் கூற்றே அறிவுள்ள மனிதனுக்கு போதுமானது எப்படி அல்லாஹ்வின் தீர்க்கதரிசனம் மெய்படுத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள. 

எழுத்து வடிவிலான பாதுகாப்பு:

      இந்த பகுதிதான் கிறித்தவ மிசனரிகளுக்கு மிகவும் பிடித்த விமர்சன பகுதி. ஏனென்றால் அவர்களது வேதத்தின் மூலங்கள் வெறும் பிரதிகளை நம்பி இருப்பதால் அவர்கள் இந்த கோணத்திலான விமர்சனத்தையே பெரிதும் முன்வைப்பார்கள். ஆனால் இவர்கள் இவர்களது ஏடுகளின் வரலாறு குறித்து அறியாததுதான் இத்தகைய அறிவீனமான விமர்சனத்திற்கான காரணம்.
         அதாவது எழுத்து பூர்வமாக குர் ஆன் பாதுகாக்கப்பட வில்லை என்பது இன்றிருக்கும் மிசனரிகளின் வாதமாக இருக்கிறது. இது குறித்து நாம் விளங்கும் முன்னர் இன்று சுருள்களின் காலத்தை நிர்ணயம் செய்யும் Radiocarbon Dating குறித்து நாம் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது இவ்வாறு Radiocarbon Dating தரும் தகவல் குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் அதன் துல்லியத்தின் அளவு குறித்த விபரங்களை நாம் அறிந்து கொள்வது இந்த கட்டுரையை விளங்க ஏதுவானதாக இருக்கும்.

       இப்போது குர் ஆன் மூல எழுத்துப்பிரதி குறித்த தகவலை பார்ப்போம். இது பிரிமிங்காம் சுருள் குறித்த தகவல் இதோ. 
95.4% confidence to the calendar years CE 568–645 when calibrated
   இதை பின்வருமாறு புரிந்து கொள்ள வேண்டும். 

1. 1950ல் இந்த சுருள் ஆய்வுகுட்படுத்தப்படுகிறது அதன் உத்தேசமாக 1343 ஆண்டுகள் பழமையானது அதுவும் 95.4% அதை உறுதியாக கூறலாம் என்றால் அதன் ஆண்டுகள் +/- 61 இருக்கும் என்று பொருள் கொண்டால். ஆக இந்த சுருள் குறிபிடபட்ட ஆண்டில் இருந்து முன்ன பின்ன 61 ஆண்டுகள் இருக்கலாம் என்று பொருள். அப்படி பார்க்கையில் இந்த சுருள் நபி(சல்) அவர்களது தோழர்களின் காலத்தினது என்பது அறிந்து கொள்ளலாம்.இதனால்தான் குர் ஆன் சுருள்கள் குறித்து ஆய்வு செய்த அறிஞ்சரான புஇன் 100-200 வருடங்கள் மார்ஜினல் குறை ஏற்படும் என்று கூறுகிறார்.

2.அடுத்ததாக இந்த சுருள்களில் மேல் எழுத்து கீழ் எழுத்து உள்ளது என்று கூறுகின்றனர். 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு இன்று போல் எழுது உபகரணமான தோல் சுருள்கள் மலிந்த காலம் அல்ல. ஆக அவற்றை மறுபயன்பாடு செய்வது என்பதும், முன்பே பதியப்பட்ட ஆவணங்களில் அரிப்பு, சேதம் ஏற்படும் போது இதை செய்வார்கள். மேலும் இன்றிருக்கும் அறிவியல் முறைப்படி மைய்யின் வயதை எழுத்தை சிதைக்காமல் அறியும் முறைகள் ஏதும் நம்பகமாக இல்லாததால் அதை அறிய முடியாது.

        1முதல் 2 நூற்றாண்டு ஹிஜ்ரியை சார்ந்த ஏடுகளின் பட்டியலையும் அவை எந்தளவுக்கு இன்றிருக்கு குர் ஆனின் சூராக்களை கொண்டிருக்கிறது என்பதையும் சுருக்கமாக இனி காண்போம்.பின்வரும் பட்டியல் 1-2 நூற்றாண்டு எழுத்துப்பிரதிகள் சில எங்கு இருக்கிறது என்பதை கூறுகிறது.

தூனிஷியாவின் சுருள்கள்:
1) Ms. R 38,Ms. R 119
2) Ms. P 511
ஏமனின் சுருள்கள்:
1.DAM 01-28.1
2.DAM 01-18.3,
3.DAM 01-30.1
4.DAM 01-32.1,
5.DAM 01-29.2
6.DAM 01-32.2
துருக்கியின் டாப்காப்பி மூயூசியத்தில் இருக்கும் சுருள்கள்:
1.Topkapı Sarayı Medina 1a / TSM M1,
2.TIEM Env. 51, 53, Ms. 678,Sam Fogg IAGIC,Ghali Adi Fragment (ஒரே சுருள்),
3.TIEM ŞE 80,
4.TIEM ŞE 85,
5.TIEM ŞE 89,
6.TIEM ŞE 358,
7.TIEM ŞE 364,
8.TIEM ŞE 709
9.TIEM ŞE 12995.
இங்கு மேலும் பல உமையாக்கள் கால சுருள்களும் இருக்கின்றது.
ஆஸ்டிரியாவின் சுருள்கள்
1.A. Perg. 186,
2.A. Perg 202,
3.Mixt. 917
அமெரிக்காவின் சுருள்கள்
1.AL-17, `Ayn 444(ஒரே சுருள்),
2.1-85-154.101
3.P. Garrett Coll. 1139
எகிப்தின் சுருள்கள்
1.Arabic Palaeography Plates 39-40
2.Mss. Arab 21-25
3.Arabe 330d
4.KFQ42
5.KFQ62
பிரிட்டனின் சுருள்கள்
1.BL Add. 11737/1
2.மேலும் பல சுருள்கள் Nasser D. Khalili Collection of Islamic Artல் இருந்து
பிராண்ஸ் சுருள்கள்
1.Arabe 330a + Ms. 66(ஓரே சுருள்)
அயர்லாந்து சுருள்கள் 
1.Is. 1404
2.Arabic Palaeography Plates 19-30
ரஸ்யாவின் நேசனல் நூலகம்
1.Codex Amrensis 1
சோத்பேயில் ஏலம் விடப்பட்ட சுருள்கள்
1. 15 அக் 1984 அன்று ஏலம் விடப்பட்ட Lot 206
2. 22மே 1986, அன்று ஏலம் விடப்பட்ட Lot 269
3. 30 ஏப்ரல் 1992, அன்று ஏலம் விடப்பட்ட Lots 318 & 319
4. 28 ஏப்ரல் 1993, அன்று ஏலம் விடப்பட்ட Lot 73
5. 22அக் 1993, அன்று ஏலம் விடப்பட்ட Lot 11, 15, 28 & 29
6. 19அக்1994, அன்று ஏலம் விடப்பட்ட Lot 16
7. 24th April 1996, அன்று ஏலம் விடப்பட்ட Lot 1
8. 16அக் 1996, அன்று ஏலம் விடப்பட்ட Lot 1
9. 5அக்1997, அன்று ஏலம் விடப்பட்ட Lot 12
10.13ஏப்ரல் 2000, அன்று ஏலம் விடப்பட்ட Lot 1,
11. 3மே 2001, அன்று ஏலம் விடப்பட்ட Lot 8
12. 5அக் 2011, அன்று ஏலம் விடப்பட்ட Lot 47
13. 3அக் 2012, அன்று ஏலம் விடப்பட்ட Lot 11 

       மேலே குறிபிடபட்ட சுருள்களின் பெயரை கூகுளில் தேடிப்பார்க்க் ஏதுவாக இருக்க அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் டாப்காப்பின் சுருள், பெர்லினில் இருக்கும் சுருள், பிரிமிங்காம் சுருள்கள், சமர்கண்ட் சுருள்கள் , சனா சுருள்கள் என்று பலவற்றிலும் ஹிஜ்ரி 1-2ம் நூற்றாண்டின் சுருள்கள் உள்ளன.

    ஆக இப்படி கிடைத்திருக்கும் முதல்-இரண்டாம் ஹிஜ்ரிக்குள் ஆன சுருள்கள் பல ஏலத்தில் விடப்பட்டும் விற்கப்பட்டும் உள்ளது. இவ்வாறு இந்த தோல் சுருள்கள் பல மூயூசியத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இந்த சுருள்கள் எந்த அளவிற்கு இன்றிருக்கும் குர்ஆன் உடன் ஒத்திருக்கிறது என்பது இங்கு  பட்டியலிடப்பட்டுள்ளது. (1)

     அதாவது தோல் சுருள்களில் இருப்பவையும் , சில தட்டுகளில் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே மேலே குறிபிட்ட பட்டியலில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது இது வல்லாத கல்வெட்டுக்கள், நாணயங்கள் மற்றும் ஜெருசலேம் பள்ளி மினாராவில் இருக்கும் குர் ஆன் வசனங்கள் என்று அனைத்து எழுத்து ஏடுகளையும் ஒன்றினைத்தால் பெரும்பகுதி அதாவது 97% குர்ஆனும் வந்துவிடும்....

          Sergio Noja Noseda அவரது கணக்கின் படி 97% குர்அனின் எழுத்து பிரதிகள் ஹிஜ்ரி 1-2ம் நூற்றாண்டு உள்ளாகவே இருக்கிறது.ஆக இப்படி இருக்கையில் இரண்டாம் நூற்றாண்டு சுருள்களை கணக்கில் எடுத்தால் குர் ஆனின் முழு பகுதியும் கிடைத்துவிடும். இதுதான் குர் ஆனின் எழுத்து வடிவிலான பாதுகாப்பின் நிலை. இந்த சுருள்களில் இருக்கும் எழுத்துப்பிழைகளையும் முஸ்லிம்களின் மனதில் காணப்படும் ஓதல் முறைகளோடு ஒப்பிட்டு பிரதி எடுத்தவரின் பிழைகளை இன்றும் அறிந்து கொள்ளும் நிலையில் குர் ஆன் இரு அடுக்கு, இரு பிரதி பாதுகாப்பை கொண்டு அல்லாஹ்வின் கிருபையால் முழுவதுமாக பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை .

நபி(சல்) அவர்கள் முத்தியிரையிட்ட பிரதியை ஏன் தரவில்லை:
      இதற்கு முன்பிருந்த யூத கிறித்தவ வேதங்களின் நிலை குறித்து சென்ற பல தொடர்களில் கண்டோம். எது எந்த மார்க்கினால் எழுத்தப்பட்டது, எத்தனை பேதுரு இருந்தார்கள், எத்துனை கிளமண்ட் இருந்தார்கள், அவற்றுள் எத்துனை போலி என்பதை இன்றுவரை கிறித்தவ உலகம் விவாதித்து கொண்டிருக்கையில் “ நபி(சல்) அவர்கள் ஏன் முத்திரையிட்டு குர்ஆனை வழங்கவில்லை என்ற கேள்வி பகுத்தறிவை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்ததாக கூறிக்கொள்பவர்கள் கேட்பது கேலிக்குரியது இல்லையா?. என்றைக்கும் இருக்கப்போகும் குர்ஆனை எப்படி பாதுகாக்க வேண்டுமோ அப்படியே அது பாதுகாக்கப்பட்டுள்ளது. நபி(சல்) அவர்களது முத்திரையை கண்டு உண்மை குர்ஆனை அடையாளப்படுத்தலாம் என்ற கட்டுரையாளரின் அறியாமையை என்னவென்பது. முத்திரை என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது. அதை யாரும் உருவாக்கலாம். முத்திரையிட்டு பாதுகாக்கும் முறை எல்லாம் சுத்த வீணானது என்பதைதான் யூத கிறித்தவ ஏடுகளின் எழுத்தர் குறித்த குழப்பங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. கட்டுரையாளர் கூறுவதை விட சிறந்த முறையில் குர்ஆன் பாதுகாக்க பட்டிருப்பதால்தான் இன்றும் எந்த வேதத்தையும் விட பாதுகாப்பான நிலையில் குர்ஆன் இருக்கிறது. எழுத்து வடிவிலான பிரதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டாலும் சில மணி நேரங்களில் மீண்டும் எழுத்து பிரதிகளை உருவாக்கிவிட முடியும்.
 
      இது போக ஆயிஷா(ரலி) கையில் இருந்த பிரதிகளை ஆடு தின்றது, போன்ற ஹதிஸ்கள் யாவும் கட்டுகதைகளே. கட்டுரையாளர் அவற்றை ஆதாரத்துடன் பதியவில்லை என்பதால் அந்த செய்திகள் குறித்து அதிக விளக்கம் தரதேவையில்லை என்று எண்ணுகிறேன்.

உஸ்மான்(ரலி)யை கொலைசெய்ய ஆயிஷா(ரலி) தூண்டினார்களா?

நமது பதில் :
      நமது கட்டுரையாசியர் பழுதான செய்திகளை முன்னிருத்தியே இஸ்லாமிய விமர்சனத்தை அவரது தொடர்கள் முழுவதும் முன்னெடுத்துள்ளார். என்ன் செய்வது ஷியாக்களின் வாந்தியை அடிப்படையாக கொண்டு கிறித்தவ மிசனரிகளின் வலைத்தளங்களில் இஸ்லாமிய விமர்சனம் காணப்படுகிறது. இவர் அதை அப்படியே அவரது தொடரில் பதிந்துள்ளார்.

      நாம் மேற்குறிபிட்ட செய்திகள் குறித்து பார்ப்போம்.
1.முதலில் இந்த செய்தி இடம் பெறுவதாக கட்டுரையாளர் குறிப்பிடும் அன் நிகாயா என்ற நூலே இப்னு அதிரால் எழுதப்பட வில்லை. அந்த நூலின் பெயர் “அல் காமில் ஃபி அல் தாரிக்”  எனபதாகும். கதையாசிரியர் இப்னு கதிரின் புத்தகம் போல பொய்யாக காட்ட முயன்றுள்ளார்.

2. அல் காமில் ஃபி அல் தாரிக்கில் மேற்குறிபிட்ட செய்தி காணப்படுகிறது. ஆனால் அதில் அறிவிப்பாளர் தொடர் இடம் பெறவில்லை. அந்த நூலில் இடம் பெறும் செய்திகள் யாவும் இப்படியான வர்ணனையாக இருக்குமே தவிர அதில் எந்த அறிவிப்பாளரின்  தொடர இருக்காது.

3.இது போன்ற செய்திகளின் மூலம் தபரியில் இடம் பெறும் பின்வரும் செய்திதான்.

ஆயிஷா(ரலி) மக்காவில் இருந்து திரும்பி கொண்டிருக்கையில் சரிஃப் எனும் இடத்தில் உபைத் பின் அபிசலாமாவை சந்தித்தார்கள். “என்ன செய்தி? என்று ஆயிஷா(ரலி) என்று உபைத் பின் அபிசலாமாவிடம் வினவினார்கள்.  அதற்கு “அவர்கள் உஸ்மான்(ரலி)யை கொலை செய்துவிட்டு எட்டு நாட்கள் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்கள் என்று உபைத் பதிலளித்தார்கள்.................அல்லாஹ்வின் மீது ஆணையாக! உஸ்மான்(ரலி) அவர்கள் அந்நியாயமாக கொல்லப்பட்டுள்ளார்கள், அவர்களது ரத்தத்திற்கு பலிவாங்குவேன் என்று ஆயிஷா (ரலி) கூறிவிட்டு மக்காவிற்கு கிளம்பினார்கள். இப்னு உம்மு கிலாப் (உபைத் பின் அபிஸலாமா) “அது எப்படி? அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள்தான் “அந்த முட்டாள் கிழவனை கொள்ளுங்கள். அவர் காஃபிர் ஆகிவிட்டார் “ என்று கூறி உஸ்மான்(ரலி)யை எதிர்த்து முதலில் வாள் எடுத்தீர்கள் என்று வினவினார்கள்.........
                    (P.No: 52,53 Vol16 ENGLISH VERSION HISTORY OF TABARI)

அறிவிப்பாளர் தொடர்:
அஷத் பின் அப்தில்லாஹ் ---> உமர் இப்னு சஃத் -->நசர் பின் முஷாஹிம் -->அல் ஹுஸைன் பின் நசர் அல் அத்தார்--->அலி பின் அஹமத் பின் அல் ஹசன் அலி இஜ்லி--> தபரி
முஹம்மது பின் நுவைரா ---> சயிஃப் பின் உமர் -->நசர் பின் முஷாஹிம் -->அல் ஹுஸைன் பின் நசர் அல் அத்தார்--->அலி பின் அஹமத் பின் அல் ஹசன் அலி இஜ்லி--> தபரி
தல்கா பின் அல் அஃலாம் அல் ஹனஃபி ---> சயிஃப் பின் உமர் -->நசர் பின் முஷாஹிம் -->அல் ஹுஸைன் பின் நசர் அல் அத்தார்--->அலி பின் அஹமத் பின் அல் ஹசன் அலி இஜ்லி -->தபரி

ஆய்வு: 

1. அலி பின் அஹமது பின் அல ஹசன் அல் இஜ்லி குறித்து என்த குறிப்பும் வரலாற்று ஆய்வாளர்களின் நூலில் எந்த குறிப்பும் காணப்படவில்லை. ஆக இவர் யார் என்று அறியப்படாதவர்.

2. ஹுசைன் பின் நசர் அல் அத்தார் குறித்தும் எந்த குறிப்பும் இடம் பெறவில்லை, ஆக இவரும் அறியப்படாதவர்.

3.சயிஃப் பின் உமர் குறித்து இப்னு ஹிப்பான் போன்ற அறிஞர்கள் இட்டுக்கட்டகூடியவர் என்று கூறியுள்ளனர்.(மீஸான் அல் இஹ்திதால்)

4. நசர் பின் முசாஹிம் :  இவரும் ஏற்றுகொள்ளபடாதவர், இட்டுகட்டக்கூடியவர், ஷியா வெறியர் என்று இஜ்லி, தாரகுத்னி போன்ற அறிஞர்கள் சாடியுள்ளனர். (லிசானுல் மீசான்)

      ஆக கட்டுரையாளர் குறிப்பிட்ட செய்தி முற்றிலும் பொய்யான இட்டுகட்டபட்ட செய்தி என்பது நிருபனமாகியுள்ளது. மேலும் இத்தகைய கருத்துகள் எல்லாம் ஷியாக்களினால் தொடர்ந்து பரப்பப்பட்டது. இன்றும் பரப்பப்பட்டும் வருகிறது. 

உஸ்மான்(ரலி) உடல் எங்கு புதைக்கப்பட்டது?



நமது பதில்

      சென்ற பகுதியில் ஆயிஷா(ரலி) யின் கூற்று குறித்தும் அது இட்டுகட்டபட்டது என்பதையும் தெளிவாக கண்டோம். அதை தொடர்ந்து உஸ்மான்(ரலி) மரணித்த பிறகு அவரது உடல் மூன்று நாட்கள் குப்பையில் விசப்பட்டதாகவும் அதன் பிறகு கழிப்பிடத்தில் புதைக்கப்பட்டதாகவும் என்ற அடுத்த அவதூறு. இந்த செய்தி தப்ரானியின் மஜ்மு அல் கபீர் போன்ற நூல்களில் காணப்படுகிறது. ஆனால் இந்த அறிவிப்புகளும் பலவீனமானது. இதில் இடம் பெறும் அப்துல் மாலிக் இப்னு மஜசூன் சாஹாபாக்கள் குறித்து விசித்திரமான நம்பகமற்ற செய்திகளை மாலிக் (ரஹ்) அவர்கள் வழியாக அறிவிப்பவர் என்று அல் சஜ்ஜி போன்ற அறிஞர்களால் சாடப்பட்டவர். அடுத்ததாக இந்த செய்தி இமாம் மாலிக்(ரஹ்) அவர்களால் நேரடியாக அறிவிக்கப்படுகிறது. இமாம் மாலிக்(ரஹ்) அவர்களது பிறப்பு ஹிஜ்ரி 93. ஆனால் உஸ்மான்(ரலி) கொல்லப்பட்ட்து ஹிஜ்ரி 35. ஆக இது நேரடி சாட்சியோ அறிவிப்போ இல்லை. ஆக இந்த செய்தியும் நிராகரிக்கப்பட்டது. அடுத்ததாக கழிப்பிடத்தில் உஸ்மான்(ரலி) அவர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுவதும் தவறு. அவரது அடக்கம் தொடர்பான செய்திகளில் இடம் பெறும் “ஹுஸ்- தோட்டம்  என்ற வார்த்தைக்கு கழிப்பிடம் என்று ஷியாக்கள் மொழியாக்கம் செய்தனர். அதையே நமது கட்டுரையாளர் காப்பி அடித்துள்ளார்.  
      இங்கு ஒரு விஷயத்தை சுட்ட வேண்டியுள்ளது. அதாவது கிறித்தவர்களின் அளுகைக்கு உடபட்ட பல பகுதிகளில் குர்ஆனை பரவலாக்க மூல காரணமாக இருந்தவர், சைப்ரஸ் போன்ற பகுதியை கைப்பற்றினார் என்பது போன்ற காழ்புணர்ச்சியால் மேற்குறிபிட்ட செய்தியை பதிந்து அவதூறு கூறுகின்றனர். ஷியாக்கள் அவர்கள் நபிதோழர்கள் மீது கொண்ட காழ்புணர்ச்சி என்று கொள்ளலாம். ஆனால் தன்னை பகுத்தறிவுவாதியாக அடையாளம் காட்ட நினைக்கும் இந்த கட்டுரையாளர் ஏன் இந்த செய்தியை பதிவிட வேண்டும். மேலும் ஒருவர் இறந்த பின் புதைக்கப்படும் இடத்தை கொண்டுதான் தண்டனையும், வெகுமதியும் நிர்ணயிக்கப்படுமா? என்னே ஒரு பகுத்தறிவு...... சின்னப்புள்ளத்தனமால இருக்கு!!!!!!!!!!!!!
அல்லாஹ் ஏன் நேர்வழியை வழங்குகிறான்?


 நமது பதில்:
 சராசரியாக யாருக்கும் புரியும் இந்த வசனம் ஏனோ பகுத்தறிவை முழுமையாக குத்தகை எடுத்தது போல் பேசும் கட்டுரையாளருக்கு தெரியவில்லை. வழிகேட்டில் இருப்பவனைத்தான் நேர்வழியை பின்பற்றுமாறு ஏவ முடியும். சுகமாக வாழ்வது என்றால் தீயவழியில் மக்களை சுரண்டி, விபச்சாரத்தினாலும் லஞ்சத்தினாலும் சுகமாக வாழ்பவருக்கு வக்காலத்து வாங்குகிறார் போல கட்டுரையாளர்......................