பக்கங்கள் செல்ல

Showing posts with label முஸ்லிம். Show all posts
Showing posts with label முஸ்லிம். Show all posts

Saturday, May 2, 2015

அர்த்தமுள்ள கேள்விகள் - 12 - முஸ்லிம்கள் இந்த உலகின் வளர்ச்சிக்கு எந்த விதப் பங்கும் ஆற்றாதது ஏன்?

நாத்திகர்கள்  உடன் வாதிடும் போது பல முறை எழுப்பபடும் வினாக்களில்  ஒன்று தான் முஸ்லிம்கள் இந்த உலகத்தில் அறிவியல் வளர்ச்சி அடைய என்ன பங்களிப்பு செய்துள்ளார்கள் என்பது உண்மையை சொல்லப்போனால் முஸ்லிம்கள் கால் பதிக்காத துறையே இல்லை எனலாம்.


கேள்வி:  இன்றைய  உலகில் கண்டுபிடிப்புகளுக்கும், விஞ்ஞான வளர்ச்சிகளுக்கும்  முழுவதும்  காரணமாக இருந்தவர்கள், இருப்பவர்கள், மேற்கத்திய நாட்டினர்  தான்.  இவர்களால்  உலகில்  சில தீமைகள்
ஏற்பட்டிருக்கலாம்.  அதை  விடப்  பன்மடங்கு நன்மைகளை  உலகிற்குச் செய்துள்ளனர். இன்று  அரபு தேசங்களில்  மக்கள்  வசதியாக வாவதற்கு  வழி வகுத்தவர்கள்  மேற்கத்திய நாட்டினர்.  எண்ணெய்க் கண்டுபிடிப்பு, கடல்நீரை குடிநீராக  மாற்றும்  தொழில்  நுட்பம் ஆகியவற்றை  உதாரணமாகக் கூறலாம். ஆனால்,  முஸ்லிம்கள்  இந்த  உலகின் வளர்ச்சிக்கு  எந்த  விதப் பங்கும் ஆற்றவில்லை மாறாக,  உலகத்தைக் குழப்பத்தில்  ஆழ்த்தி, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்  கொண்டு  -  தானும்  அழிந்து கொண்டு, மற்ற நாட்டினரையும்  அழித்து தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் செய்து  கொண்டு  இந்த  உலகத்தை நிம்மதியிழக்கச்  செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி  உலகத்திற்கு  எந்த  நன்மையும் செய்யாத இவர்களை உலக முஸ்லிம்கள் அனைவரும் ஆதரிப்பது ஏன்?

இன்று  உலகில்  கிறிஸ்தவர்கள், கல்விச் சாலைகள், மருத்துவ மனைகள் ஆரம்பித்து தொண்டாற்றி வருகிறார்கள்.  அப்படி  இந்த உலகத்திற்கு  சேவை  செய்த, மருத்துவ மனைகள்  ஆரம்பித்து  தொண்டாற்றி கண்டுபிடிப்புகளை  நிகழ்த்திய  முஸ்லிம்கள் யாரேனும் உண்டா? என மாற்று மத நண்பர் கேட்கிறார். இதற்கு விரிவான பதில் அளிக்கவும்.

- அபூ மஸ்ஹாத், நெல்லிக்குப்பம்.

பதில்: நவீன கண்டுபிடிப்புகளுக்கு முழுவதும் காரணமாக இருந்தவர்கள் மேலை நாட்டவர் என்ற கூற்று முற்றிலும் தவறானதாகும். மேலை  நாட்டவர்கள் விஞ்ஞான  ஆய்வு செய்திட மதத்தின் பெயரால் தடுக்கப்பட்ட காலத்திலேயே முஸ்லிம்கள் மிகப் பெரும் கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கினார்கள். இன்றைய கண்டுபிடிப்புகளுக்குப் பெரும்பாலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கேள முஸ்லிம்கள் தாம்.

வியக்கத்தக்க சாதனைகள் படைத்த முஸ்லிம் விஞ்ஞானிகளில் சிலர்...

(மேற்கத்திய உலகில் இவர்கள் அறியப்படும் பெயர்கள் அைடப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது)

பெயர் காலக்கட்டம் துறை (கி.பி.)
அல்குவாரிஸ்மி 780-850 கணிதம்-வானவியல் (அல்காரிஸ்ம்)
அல் ராஜி 844-946 மருத்துவம் (ரேஜஸ்)
அல் ஹைதம் 965-1039 கணிதம்-ஒளியியல்(அல்ஹேஜன்)
அல்பிரூணி 973-1048 கணிதம்-தத்துவம்-வரலாறு
இப்னு சீனா 980-1037 மருத்துவம் (அவிசென்னா)
அல் இத்ரீஸி 1100 புவியியல் (டிரேஸஸ்)
இப்னு ருஸ்து 1126-1198 மருத்துவம்-தத்துவம் (அவிர்ரோஸ்)
ஜாபிர் இப்னு 803 பௌதீகம் ஹையான் (ஜிபர்)
அல் தபரி 838 மருத்துவம்
அல் பத்தானி 858 தாவரவியல் (அல்பதக்னியஸ்)
அல் மசூதி 957 புவியியல்
அல் ஜஹ்ராவி 936 அறுவை சிகிச்சை (அல்புகேஸிஸ்)
இப்னு ஹல்தூண் 1332 வரலாறு
இப்னு ஜுஹ்ர் அறுவை சிகிச்சை (அவன்ஜோர்)

இன்றைய நிலையில் மேலை நாட்டவரின் பங்களிப்பு அதிகமாக உள்ளது என்று கூறினால் அது சரிதான்.

இன்றைக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு இஸ்லாம் காரணம் அல்ல.

மேலை நாட்டவர் அதிகம் பங்களிப்புச் செய்வதற்கு அவர்களின் மதமும் காரணம் அல்ல.

மாறாக பொருளாதார வசதி, ஆள்வோரின் ஊக்குவிப்பு போன்றவை காரணங்களாகவுள்ளன. காலச் சக்கரம் சுழலும் போது மேலை நாடுகள் பின் தங்கும் நிலையை அடையலாம். பொருளாதார வசதிகள் இன்னொரு பக்கம் குவியலாம். அப்போது அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
முந்தைய முஸ்லிம் ஆட்சியாளர்கள் அறிவாளிகளையும், ஆராய்ச்சியாளர்களையும் பெரியளவில் ஊக்குவித்தனர்.

இன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்கேளா சுகேபாகங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
எனவே தான் முஸ்லிம்களின் பங்களிப்பைக் காண முடியவில்லை.

ஆயினும், கடந்த காலத்தின் மீது பழியைப் போட்டு விட்டு முஸ்லிம்கள் தப்பித்துக் கொள்ளக் கூடாது.

அந்த நண்பன் விமர்சனத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு முஸ்லிம் இளைஞர்கள் முயற்சி செய்தாக வேண்டும்.

நமது நாட்டில் கிறித்தவர்கள் தாம் கல்விக் கூடங்கைளயும், மருத்துவ மனைகைளயும் நிறுவியுள்ளனர் என்று நண்பர் கூறுவது உண்மை தான். இந்த நிலையை மாற்றும் கடமை முஸ்லிம்களுக்கு இருப்பதும் உண்மை தான்.

ஆனாலும், இதற்கான காரணத்தையும் அந்த நண்பருக்கு விளக்க வேண்டும்.
ஆங்கில வழிக்கல்வி தான் இன்றைக்குக் கல்வி எனப்படுகிறது.

வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆண்ட போது அவர்களை நாட்டை விட்டே விரட்டும் பல்வேறு போரட்டங்களில் கலவியைப் புறக்கணிப்பதும் ஒரு போராட்ட முறையாக அறிவிக்கப்பட்டது.

எல்லாச் சமுதாயமும் இந்தப் போராட்டத்தில் பெயரளவுக்குத் தான் பங்களிப்புச் செய்தன.
ஆனால், முஸ்லிம்கேளா முழு அளவுக்கு இப்போராட்டத்தில் குதித்தனர்.

ஆங்கிலம் படிப்பது பாவம் என்று பள்ளிவாசல் களில் மார்க்க அறிஞர்கள் பிரகடனம் செய்தனர்.

இதன் காரணமாக படித்துக் கொண்டிருந்த முஸ்லிம்கள் கல்விச் சாலையை விட்டு வெளியேறினார்கள்.

முஸ்லிம்கள் யாரும் கல்விச் சாலைக்குள் நுழையவில்லை. பாவமான காரியம் என்ற முஸ்லிம் மத அறிஞர்களின் அறிவிப்பினால் தேச பக்தி என்ற பெயரால் தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டனர்.
(காயிதே மில்லத் அவர்கள் கூட இவ்வாறு படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வெளியேறியவர் தாம்)

கிறிஸ்தவர்களும், பிராமணர்களும் எவ்விதப் புறக்கணிப்பும் செய்யாமல் கல்விக் கூடங்களை நிறுவி வந்த போது முஸ்லிம்கள் ஆங்கிலம் கற்பது ஹராம்' என்று கூறினார்கள்.
இதனால் வெள்ளையர்கள் மீது கடும் வெறுப்பு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டு விடுதைலப் போரில் தங்களின் சதவிகிதத்தை விட அதிகமான பங்கைச் செய்தனர். நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு இந்தப் புறக்கணிப்பு உதவியது. ஆனால், முஸ்லிம்களுக்குப் பேரிழப்பை அது ஏற்படுத்தியது.

வெள்ளையர்கள் காலத்தில் முஸ்லிம்களுக்கு என தனியாக இட ஒதுக்கீடு இருந்தும் தேச பக்தியின் பெயரால் அதைப் பயன்படுத்தத் தவறினார்கள்.

நாடு சுதந்திரம் பெற்றதும் முஸ்லிம்களுக்கு வெள்ளையர்கள் வழங்கிய இட ஒதுக்கீட்டை நீக்கி ஆள்வோர் நன்றிக் கடன் செலுத்தினார்கள்.

· வெள்ளையர்கள் காலத்தில் நிறுவப்பட்ட கல்வி நிறுவனங்களின் தொடர்ச்சி,

· நிறையக் கல்வி கற்றவர்கள் உருவானதால் அவர்களால் உருவாக்கப்பட்ட கல்வி நிைலயங்கள்,

· மேலைநாடுகளிலிருந்து தாராளமாகக் கிடைக்கும் நிதியுதவி
போன்றவை காரணமாக கிறித்தவர்கள் கல்விக்கு அதிகம் பங்களிப்பைச் செய்தனர்.

ஆனால், நாடு விடுதலையைடந்த பிறகு தான் அடிப்பைடக் கல்வியிருந்து முஸ்லிம்கள் ஆரம்பித்தார்கள். இவர்களுக்கு பணக்கார முஸ்லிம் நாடுகளின் உதவியும் இல்லை. தமது சொந்தக் காலில் தான் நிற்க வேண்டிய நிலை.

ஆனாலும், 250 ஆண்டு காலத்தில் கிறித்தவ சமுதாயத்தினர் பெற்ற வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது முஸ்லிம்களின் ஐம்பது ஆண்டு கால வளர்ச்சி விகிதம் மிகமிக அதிகம் தான்.

சொந்தக் காலில் தான் நிற்க வேண்டும் என்பதை உணர்ந்து தமிழகத்தில் முஸ்லிம் வள்ளல்கள் பல கல்வி நிறுவனங்கைள உருவாக்கி சாதனை பைடத்துள்ளனர்

இவை யாவும் ஐம்பது வருடங்களில் வெளியார் உதவியின்றி முஸ்லிம்கள் செய்த சாதனைகள்.

இன்னும் 50 ஆண்டுகளில் கிறிஸ்தவர்களின் 250 ஆண்டு கால சாதனைக்கு நிகராக அல்லது அதை மிஞ்சும் அளவுக்குச் சாதனை படைப்பார்கள். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

முஸ்லிம் வள்ளல்கள் உருவாக்கிய கல்வி நிலையங்கள்! தமிழகத்தில் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன் அளித்துவரும் உயர்நிலைக் கல்விக் கூடங்கள்.

1) இஸ்லாமியா கல்லூரி, வாணியம்பாடி
2) புதுக்கல்லூரி, சென்னை
3) ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி
4) சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, பாளையங்கோட்டை
5) சி. அப்துல் ஹக்கீம் கல்லூரி, மேல்விஷாரம்
6) ஜாஹிர் ஹுசைன் கல்லூரி, இளையான்குடி
7) ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம்
8) காதிர் முஹைதீன் கல்லூரி, அதிராம்பட்டிணம்
9) ஜஸ்டிஸ் பஷீர் அஹ்மது பெண்கள் கல்லூரி, சென்னை
10) காயிதே மில்லத் ஆடவர் கல்லூரி, மேடவாக்கம்
11) முஸ்லிம் கைலக் கல்லூரி, திருவிதாங்கோடு
12) மழ்ஹருல் உலும் கல்லூரி, ஆம்பூர்
13) எம்.என்.எஸ். வக்ஃப் கல்லூரி, மதுரை
14) கிரஸ்கேன்ட் பொறியியல் கல்லூரி, வண்டலுர் (தமிழக பொறியியல் கல்லூரிகளில் முதல் இடத்தை பல ஆண்டுகளாக இக்கல்லூரி பெற்று வந்துள்ளது.)
15) சதக் பொறியியல் கல்லூரி, கீழக்கரை

உட்பட 18 கலைக்கல்லூரிகள், 5 பெண்கள் கலைக் கல்லூரிகள், 12 பொறியியல் கல்லூரிகள், 8 பாலிடெக்னிக் கல்லூரிகள் மருந்தியல் கல்லூரிகள் எனப் பலதரப் பட்ட கல்லூரிகைளயும், மெட்ரிகுலேசன் பள்ளிக்கூடங்களையும் முஸ்லிம்கள் தமிழகத்தில் நடத்தி வருகிறார்கள்.
இக்கல்ல்லூரிகளில் அதிகம் பயின்று பயன் பெற்றவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்தத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்திந்திய அளவில் அலிகார் முஸ்லிம் பல்கைலக் கழகமும் பன்நெடுங்காலமாக கல்விச் சேவையை ஆற்றி வருகின்றது.
கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் தமிழகத்தை விட பன்மடங்கு அதிகமான அளவில் முஸ்லிம்கள் கல்வி நிலையங்கள் நடாத்தி வருகிறார்கள்.

முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அந்த நண்பர் கூறுவது மீடியாக்களின் மூளைச் சலவையால் ஏற்பட்ட பாதிப்பு. உண்மை நிலை  என்னவென்றால் மற்ற சமுதாயத்தில் தீவிரவாதிகள் சிலர் இருப்பது போல் முஸ்லிம்களிலும் இருக்கிறார்கள். ஆனால், மற்றவர்கள் வெறும் தீவிரவாதிகள் என்றோ, போராளிகள் என்றோ மீடியாக்களில் தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றனர்.

ஆனால், ஒரு சில முஸ்லிம்கள் இத்தகைய காரியங்களில் ஈடுபட்டால் மட்டும் அவர்களது நடவடிக்கையுடன் இஸ்லாம் சேர்க்கப்படுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதம் என்று தவறாமல் மீடியாக்கள் குறிப்பிடுகின்றன. இஸ்ரேல் பயங்கரவாதிகள் கூட யூதத் தீவிரவாதிகள் எனக் கூறப்படுவதில்லை. இந்தப் பாதிப்பின் காரணமாகவே அவர் இவ்வாறு கருதுகிறார். தக்க சான்றுகளை முன் வைத்து அவரது தவறை  உணரச் செய்யுங்கள்.

சகோதரர் P. ஜெயினுலாப்பதீனால் எழுதப்பட்ட அர்த்தமுள்ள கேள்விகள் அறிவு பூர்வமான பதில்கள் என்னும் புத்தகத்தில் இருந்து........




Wednesday, April 29, 2015

"பாரதத்தில் இஸ்லாமும்-பசுக்கொலையும்"- இஸ்லாம், உணவுக்காக பசுவை கொல்வதை தடைசெய்கின்றதா?

"பாரதத்தில் இஸ்லாமும்-பசுக்கொலையும்", என்ற தலைப்பில் முகநூளில் வந்த பதிவிற்கு, பதில்.

இதை பார்க்கும் எந்த ஒரு முஸ்லிமுக்கும்,  இது  இஸ்லாம் சொன்னது அல்ல என்று தெரிந்துவிடும். மாற்று
மத சகோதரர்களுக்கு தெளிவாக்க வேண்டும் என்ற காரணத்தினால் இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


இஸ்லாம் என்று எதையேனும் கொண்டுவந்தால், அது இந்த இரண்டு மட்டுமே:

1. திருக்குரானில் இடம்பெற்று இருக்கவேண்டும்
2. ஆதாரபூர்வமான நபிவழியாக இருக்கவேண்டும் 

இது அல்லாமல், யார் என்ன சொன்னாலும், அவர் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் எடுபடாது. இதை மனதில் படிய வைத்துக்கொள்ளுங்கள்.
மற்ற மதங்கள் போல் கலப்படம் செய்ய முடியாமல் போனதற்கு மேலே சொன்ன அடிப்படை அளவுகோல்கள் தான் காரணம். உலகம் அழியும் வரை எவராலும் இதை மாற்ற முடியாத அளவிற்கு இருப்பதால் தான் இஸ்லாம் தனித்து நிற்கின்றது.

//• அரபு தேசங்களை இஸ்லாமின் கீழ் ஒரே ஆட்சிக்கு அடிகோலிய ஹசரத் முகம்மது அவர்கள், “பசுவின் பால் ஒரு மருந்து; அதன் நெய் அமிர்தம்; அதன் மாமிசம் ஒரு நோய்”// 


மேலே சொல்லப்பட்ட ஹதீத், " முலய்காஹ் பின்த் உமர்"   என்பவரின் மூலமாக அறிவிக்கப்பட்டதாக அல்-பாகவி  என்ற புத்தகத்திலும், இப்னு மசூத் அவர்கள் மூலமாக அறிவிக்கப்பட்டதாக (Mustadrak al-Hakim) முஷ்ததர்க் அல்-ஹகீம் என்ற புத்தகத்திலும் இடம்பெற்றத்தாக ஷேய்க் ரியாத் அல்-,முசைமிரி அறிவிக்கின்றார்கள். இது ஒரு இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீத் என்பது பெரும்பான்மையான அறிஞ்சர்களின் கருத்து. மேலும் இன்னும் பல ஆதாரபூர்வமான ஹதீத்கள் இதை மறுக்கும் வகையிலும் அமைந்துள்ளது.

எதை உண்ணக்கூடாது?
 நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மை யானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின்,  அவனுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.
  •  (தானாகச்) செத்த பிராணி, 
  •   உதிரம், 
  •   பன்றியிறைச்சி, 
  •   அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்ட பிராணி 
ஆகியவற்றையே உங்களுக்கு அல்லாஹ் தடைசெய்துள்ளான். ஆயினும், எவரேனும் விருப்பமில்லாமலும் வரம்பு மீறாமலும் (உண்ண) நிர்ப்பந்திக்கப் பட்டால், அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. (2:172, 173) 
"... ஆனால், உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமை யினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (விலக்கப் பட்டவற்றைப் புசித்து)விட்டால் (அது குற்றமாகாது)" (5:3). 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள். (புஹாரி  3914).


நபி (ஸல்) அவர்கள் மாட்டை குர்பானி கொடுத்தார்கள்:

"...இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , தம் துணைவியருக்காக மாடுகளை அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள்' ...." (புஹாரி  5559).
இதிலிருந்து இஸ்லாத்தில் மாட்டிறைச்சியை தடை செய்யப்பட வில்லை என்று தெளிவாக தெரிகிண்றது.


பிற  உயிரினங்களிடம் கருணை காட்டுதல்::

இஸ்லாம் எந்த நிலையிலும், எந்த ஒரு உயிரினத்தையும் துன்புறுத்தக்கூடாது என்றும், உணவுக்காக கொல்ல நேரும்போது கூட, கடுமையான  வழிமுறைகளை வைத்துள்ளது .

"'ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி 174)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒரு பூனையை, அது சாகும்வரை சிறைவைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்துவைத்தபோது, அவள் அதற்கு உண்பதற்கும் கொடுக்கவில்லை; பருகுவதற்கும் கொடுக்கவில்லை;பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அதை அவிழ்த்து) விடவுமில்லை. அதனால் அவள் நரகத்தில் நுழைந்தாள். ((புஹாரி 4514)

நான் இரண்டு விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே,கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும். (புஹாரி 3955)




Monday, April 20, 2015

முஸ்லிம் பெண்கள் விவாகரத்து சட்டமா? 125 சி.ஆர்.பி.சி சட்டமா?


=========================================================
Which one cmpatiple to apply on muslim women's maintanace Isuue 
CRPC 125 Act? or The Muslim women (Protection of Rights on Divorce) Act 1986?
========================================================
ஒரு கணவர் மனைவியை விவாகரத்து செய்த பின் அவள் மறுமணம் செய்யும் வரை அல்லது மரணிக்கும்வரை ஜீவனாம்சம் தரச் சொல்கிறது சி.ஆர்.பி.சி. 125வது பிரிவு. இதை வைத்தே இந்திய நீதிமன்றங்கள் முஸ்லிம் பெண்களின் விவாகரத்து வழக்கிலும் தீர்ப்பளிக் கின்றன என்றாலும், முஸ்லிம் பெண்களின் விவாக ரத்து வழக்கில் வெவ்வேறு விதமான (செய்திக் கட்டுரையில் கண்ட மும்பை குடும்பநல நீதிமன்றத் தைப்போல) தீர்ப்புகளையும் பல்வேறு காலகட்டத் தில் அவை வழங்கியிருக்கின்றன.

1973ல் இயற்றப்பட்ட சி.ஆர்.பி.சி. 125 என்கிற ஜீவனாம்ச சட்டம் அனைத்து இந்தியக் குடிமக்க ளுக்குமான பொதுவான சட்டமாகும். இது எவர் மீதும் விதிக்கப்படும் சட்ட அந்தஸ்து கொண்ட தாக இருந்தாலும், முஸ்லிம் தனியார் சட்டத் தையும் இது விட்டு வைக்கவில்லை. முஸ்லிம் தனியார் சட்டத்தின் மீது மேலாண்மை செய்யும் வகையில் நீதிமன்றங்களில் இந் தச் சட்டம் பிரயோகிக்கப்படுகிறது. 
இந்திய அரசியல் சாசனம் முஸ்லிம் தனியார் சட்டத்தை அங்கீகரித்துள்ளது. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, ஜீவ னாம்சம், திருமண மஹர் தொகை, காப்பாளராகுதல், வக்ஃபு செய் தல், அறக்கட்டளை, அன்பளிப்பு, பெண்களுக்கான சிறப்பு சொத்து உயிலில்லா உரிமையிறக்கம் மற் றும் குடும்ப பிரச்சினைகள் போன்றவற்றை தங்கள் மத வழக் கப்படி தீர்த்துக் கொள்ள உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் தனியார் சட்டம் (Muslim Personal Law (shariat) Application ACT 1937ல் இயற்றப் பட்டு நாம் மேற்சொன்னவற்றை ஷரீயத் சட்டத்தின் அடிப்படை யில் தீர்த்துக் கொள்ள இந்திய முஸ்லிம்களுக்கு சட்ட ரீதியான உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தச் சட்டங்களைப் பாது காக்கும் வகையில் 1973ல் முஸ் லிம் தனியார் சட்ட வாரியம் என்ற அரசு சாரா நிறுவனம் உரு வாக்கப்பட்டது. முஸ்லிம்களின் பிரச் சினைகள் குறித்து அது அவ்வப்போது அரசுக்கு ஆலோ சனை சொல்லி வரு கிறது.
இது தவிர, இந் திய அரசியல் சாச னச் சட்டத்தின் பிரிவு 125 எந்த மதத் தினரும் தாங்கள் விரும்பிய மதத்தைப் பின்பற்ற உரிமை தரு கிறது என்ற வகையி லும் தனியார் சட் டங்களை முஸ்லிம் கள் பின்பற்றத் தகுந் தவர்கள் என்றாகிறது.
ஆயினும், இந்த சட்ட உரிமை கள் இருந்தும் இந்திய நீதிமன்றங் களில் அவ்வப்போது வழங்கப்ப டும் தீர்ப்புகள் ஷரீயத் சட்டங்க ளுக்கு முரணாக அமைந்து விடு கின்றன.
இதில் அடிக்கடி இந்திய நீதி மன்றங்களின் தீர்ப்புகளால் சர்ச்சைக்குள்ளாவது ஜீவனாம்ச விவகாரம்தான். ஜீவனாம்சம் கோரி சில முஸ்லிம் பெண்கள் அவ்வப்போது நீதிமன்றத்திற்கு செல்ல... நீதிமன்றம் சி.ஆர்.பி.சி. 125ன் கீழ் தீர்ப்பளிக்க... முஸ்லிம் அறிஞர்களோ முஸ்லிம் தனியார் சட்டத்தில் நீதிமன்றங்கள் தலை யிடுகின்றன என எதிர்ப்புகளை வெளிப்படுத்துகின்றனர். இது விவாதமாக்கப்படுகிறது.

உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் இந்துத்துவா சிந்தனை கொண்டவர்களாக அல்லது இஸ்லாமிய சட்டங்க ளுக்கு எதிரான சிந்தனை கொண்ட இயல்பினராக இருப்ப தாலும், பொது சிவில் சட்டம் தான் இந்தியாவில் இருக்க வேண் டும் என்ற பொதுவான (முஸ்லிம் களுக்கு எதிரான நோக்கமல் லாத) சிந்தனை கொண்டவர்க ளாக இருப்பதா லுமே முஸ்லிம் தனியார் சட்டம் அவ்வப்போது உர சிப் பார்க்கப்படுகி றது.


உயர் நீதிமன்றங் களும், உச்ச நீதி மன்றங்களும் முஸ் லிம் பெண்களின் ஜீவனாம்ச வழக்கு களில் சி.ஆர்.பி.சி. பிரிவு 125ன்படி தீர்ப்பு வழங்காமல் 1986ல் இயற்றப் பட்ட முஸ்லிம் பெண்கள் (விவாக ரத்து உரிமை பாது காப்பு) சட்டத்தின் படி தீர்ப்பளித்தால் சர்ச்சைக்கு இடமிருக்காது. 
ஆனால் இந்த நீதிமன்றங்கள் அவ்வாறு செயல்படுவதில்லை என்பதுதான் வாய்ப்புக் கேடானது.

1980களின் மத்தியில் ஷாபானு வழக்கு இந்திய முஸ்லிம் சமுதா யத்தில் பெரும் விவாத அலை களை உண்டு பண்ணிய பிறகு தான் தனியார் சட்டம் குறித்த விழிப்புணர்வு முஸ்லிம்கள் மத்தி யில் ஏற்பட்டது எனலாம்.
70 வயது நிரம்பிய பேகம் ஷா பானுவை அவரது கணவர் விவா கரத்து செய்கிறார். இதனால் ஷா பானு குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.) 125ன் கீழ் ஜீவனாம்சம் (பராமரிப்புத் தொகை) கேட்டு வழக்குத் தொடர, இதன்படி ஷா பானு மறுமணம் செய்யும்வரை அல் லது மரணிக்கும்வரை ஜீவனாம் சம் கொடுக்க வேண்டும் என கண வருக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். இது மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.

ஷா பானுவின் கணவர் இதை மறுத்து இத்தா (விவாகரத்துக் குப் பின் காத்திருப்பு காலம்) வரைதான் பராமரிப்புத் தொகை தர முடியும் என்றார். இதற்கு தனி யார் சட்டத்தை ஆதாரமாகக் காட்டினார் ஷா பானுவின் கணவர். 
பின்னர் உச்ச நீதிமன்றமும் ஷா பானுவிற்கு ஆதரவாக தீர்ப் பளித்தது. சி.ஆர்.பி.சி. 125ன்படி வாழ்க்கை முழுவதும் ஷா பானு விற்கு பராமரிப்புத் தொகை தர வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தீர்ப்பளித்தார்.

சி.ஆர்.பி.சி. 125 என்பது இந் திய குடிமக்கள் அனைவருக்கும் பொதுவான சட்டமாகும் என்ப தால் இதன் கீழ் ஷா பானு உரிமை கோரியிருந்தார். 
"சி.ஆர்.பி.சி. 125 பிரிவு எல்லோ ருக்கும் பொதுவானது என்கிற வகையில் இதன் கீழ் ஷாபானு உரிமை கோர முடியும். முஸ்லிம் தனியார் சட்டம் இந்த விஷயத் தில் பொருந்தாது' என நீதிபதி சந்திர சூட் தனது தீர்ப்பில் குறிப் பிட்டிருந்தார்.

இஸ்லாமிய உலமாக்கள் இந்த தீர்ப்பை எதிர்த்தனர். முஸ்லிம் தனியார் சட்டத்தில் நீதிமன்றம் தலையிடுகிறது என கொந்தளித் தனர். ஷரீயத் சட்டம் இறைச் சட்டம். அதில் நீதிமன்றம் தலை யிடக் கூடாது என்றனர். 
இந்த தீர்ப்பில் உச்ச நீதிமன் றம், அப்துல்லாஹ் யூசுஃப் அலி யின் ஆங்கில மொழி பெயர்ப்பு திருக்குர்ஆனிலிருந்து 2.41வது வசனத்தை எடுத்துக் காட்டி விளக்கம் அளித்திருந்தார் நீதிபதி!
"விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண் டும். இது இறையச்சமுடையோ ருக்கு கடமையாகும்' என்கிறது இந்த வசனம்.
நீதிபதி சந்திர சூட், தொடர் ந்து ஜீவனாம்சம் தர வேண்டும் என தீர்ப்பெழுதிவிட்டு, மேற் கண்ட திருக்குர்ஆன் வசனத்தை அந்த தீர்ப்பிற்கு தவறாக பொருத்தியிருந்தார்.
இதனால், குர்ஆன் வசனத் திற்கு எப்படி நீதிபதி தவறான அர்த்தம் கொடுக்கலாம் என முஸ் லிம்கள் கொந்தளித்தனர்.

இந்த சர்ச்சை பெரும் அரசியலாக உருவெடுத்தது. தேசிய அளவில் விவாதமாக்கப்பட்டது இந்த தீர்ப்பு. 
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம்கள் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இறுதியில் நெருக்கடி யின் காரணமாக ராஜீவ் காந்தி அரசு பணிந்தது. பின்னர் சி.ஆர்.பி.சி. 125வது பிரிவிலிருந்து முஸ்லிம் பெண்க ளுக்கு விலக்களிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியது ராஜீவ் அரசு. இது தான் முஸ்லிம் பெண்கள் (விவா கரத்து பாதுகாப்பு உரிமைச்) சட் டம் 1986.

1986லேயே இது அமுலுக்கு வந்தது. இந்தச் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு பின்னடைவு என்று, முற்போக்கு முஸ்லிம்கள் சிலர் கருத்துரைத்தனர். சி.பி. ஆர்.சி. 125 சட்டம் இஸ்லாத்திற்கு முரணானதல்ல என்றும் அவர் கள் கூறினர்.

புதிய சட்டம் ஒரே தடவை மொத்தமாக ஜீவனாம்சம் தரச் சொல்லி வலியுறுத்துகிறது. முஸ் லிம் அறிஞர்கள், திருக்குர்ஆனின் 2.41வது வசனம், விவாகரத்து செய்யும்போது போதுமான வச திகளுடன் ஒரே தடவை முழுமை யான ஜீவனாம்சம் தருவதை "நல்ல முறையில் வசதிகள் செய்து தரப்பட வேண்டும்' என்று கூறுவ தன் மூலம் இந்த வசனமும் தெளி வுபடுத்துகிறது என்கின்றனர்.

முஸ்லிம் பெண்கள் சட்டம் 1986, கணவர் முன்பு திருமணத் தின்போது மஹர் தராமல் இருந் திருந்தால் அந்த மஹர் தொகையை தர வேண்டும்; குர்ஆனில் சொல் லியிருப்பதுபோல் ஒரே தடவை முழுமையான ஜீவனாம்சம் தொகை தர வேண்டும்; அதோடு, மூன்று மாத காலம்வரை இத்தா கால பராமரிப்புத் தொகை தர வேண்டும் என்கிறது.


இந்த சட்டத்தின்படி, லக்னோ மாவட்ட மாஜிஸ்ட்ரேட் நீதிமன் றம் முதன் முறையாக ரேகா தீட் சித் என்ற (முஸ்லிமாக மாறிய) பெண்ணுக்கு 80 ஆயிரம் ரூபாய் ஜீவ னாம்சம் ஒரே தடவை தர வேண்டும் என்றும், இதில் 60 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வும், 20 ஆயிரம் ரூபாய் மூன்று மாத இத்தாவிற்கான பராமரிப் புத் தொகையாகவும் தர வேண் டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இருப்பினும் ஏராளமான வழக் குகள் சி.ஆர்.பி.சி. 125ன் கீழ் முஸ் லிம் பெண்களால் நீதிமன்றங்க ளில் தாக்கல் செய்யப்படுகின்றன. பல பெண்கள் அமைப்புகள் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் 1986ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தி ருந்திருக்கின்றன. 
சில வருடங்களுக்கு முன் மும்பை உயர் நீதிமன்றம் இந்த புதிய சட்டத்தின்படி ஒரே தடவை ஜீவனாம்சம் வழங்கி தீர்ப்பளித் தது.
இதேபோல கொல்கத்தா உயர் நீதிமன்றமும் ஷகிலா பர்வீன் என்ற பெண்ணின் விவாகரத்து வழக்கில் அவள் வாழ்க்கை முழு வதற்கும் தேவையான பொருளா தாரத்தை ஒரே தடவையில் தர வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது.

கடந்த ஜூலை 11, 2000த்தில், இத்தா காலத்திற்குள் விவாக ரத்து செய்யப்பட்ட பெண்ணிற்கு முழு வாழ்க்கைக்குமான நியாய மான வசதிகளை செய்து கொடு க்க வேண்டும் அல்லது அப் பெண் மறுமணம் செய்யும்வரை அல்லது 1986 பெண்கள் பாது காப்பு சட்டத்தின் கூறுகளுக்கு ஒப்ப இவற்றை செய்து தர வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத் தின் முழு அமர்வு தீர்ப்பளித்தி ருந்தது.

நீதிமன்றங்கள் முஸ்லிம் பெண் கள் சட்டம் 1986ன் பிரிவு 3 (ஏ)விற்கு தவறான அர்த்தங்களும் அவ்வப்போது கொடுத்து இத்தா காலம் முடிந்த பின்பும் பெண் ணுக்கு பராமரிப்புத் தொகை தர வேண்டும் என்று தீர்ப்பளிக்கின் றன.
ஆனால் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3 (ஏ) A Reasonable and Fair Provision and Maintenance to be made and paid to her within the iddat period by her former husband என்கிறது.
(நியாயமான முறையில் பொரு ளாதார வசதிகளும் பராமரிப்புத் தொகையும் முன்னாள் கணவரிட மிருந்து இத்தா காலத்திற்குள் பெண்ணுக்கு கொடுக்க வேண் டும்) இந்த அடிப்படையில் நீதிமன் றங்கள் செயல்பட்டாலும் பிரச் சினை இல்லை. ஆனால் இதற்கு தவறான அர்த்தம் தந்து சி.ஆர். பி.சி. 125ஐ அமல்படுத்தி தனியார் சட்டத்தை காலி செய்ய பார்க் கின்றன நீதிமன்றங்கள்.

இஸ்லாம் விவாகரத்தின் போதே போதுமான அளவிற்கு முன்னாள் மனைவியின் வாழ்க் கைக்கு உரிய வசதிகளை அழகிய முறையில் செய்து கொடுக்கச் சொல்லுகிறது. ஆனால் ஜமாஅத் துகள் இதைச் செய்வதில்லை. 
இத்தா காலம்வரை ஜீவனாம் சம் தர வேண்டும் என்று தவறான தீர்வுகளை தரும் சில ஜமாஅத்து கள், திருமணம் நடக்கும்போதும் அந்தப் பெண்ணுக்குரிய மஹரை முறையாக வாங்கித் தருவதில்லை. கடன் மஹர் என்று சொல்லி விட்டு பெண்ணின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகின்றன.

ஆணாதிக்கத்தனம் வெளிப்படும் இது போன்ற ஜமாஅத்துகளின் செயல்பாடுகள்தான் இஸ்லாமிய பெண்களுக்கு உரிமைகள் மறுக் கப்படுகின்றன என பெண்ணுரி மைவாதிகள் பேசவும், நீதிமன் றங்கள் தனியார் சட்டத்தில் தலையிடவும் காரணிகளாகின் றன.  
எப்படியிருப்பினும், ராஜீவ் காந்தி அரசு கொண்டு வந்த 1986 சட்டத்தின்படி நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தாலே ஜீவனாம்ச வழக்குகள் இலகுவாக தீர்க்கப்ப டும். ஆனால் முஸ்லிம் தனியார் சட்டத்தை நீதிமன்றங்கள் மீறுவ துதான் பிரச்சினையே!
கட்டுரையாளர் - அபு ஃபைஸல்

Saturday, April 18, 2015

அமெரிக்காவின் முதல் ஹிஜாப் அணிந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி - நூர் அல் ஹுதா


சிறிய வயதிலேயே, எனக்கு நிருபர் ஆக வேண்டும் என்ற ஆவல் இருந்தது.. எதையும் திறமையாக சொல்லும்  திறன் என்னிடம் இருந்தது

என்னுடைய பெயர் நூர் அல் ஹுதா - நூர் என்றால் ஒளி என்று பொருள் . ஹுதா என்றால் வழிகாட்டி என்று பொருள்-  என்னுடைய பெயருக்கு, "வழிகாட்டும் ஒளி" என்று பொருள். என் பெயரே எனக்கு ஊக்கமளித்தது .

ஹிஜாப் போடுவேன் என்று நான் நினைக்கவில்லை ஆனால் போட ஆரம்பித்த பிறகும், நிருபர் ஆக வேண்டும் என்ற ஆவல்  இருந்தது, மேலும் ஹிஜாப்  இதற்கு ஒரு தடைக்கல்லாக இருக்ககூடாது என்று விரும்பினேன்.

இந்த சகோதரி, 2012 இல் #LetNoorShine சமூக ஊடகங்களில், தனக்கும், இன்னும் மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்கும் விதமாக பிரச்சாரம் ஆரம்பித்தார்.

"நான்  அமெரிக்காவில் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆகவேண்டும் என்பதை தெளிவாக உலகம் அறியும் வண்ணம் சொல்வதற்காகவே, இந்த பிரச்சாரம் ஆரம்பித்தேன்." என்று சொல்லும் இந்த பெண்ணின் முகநூல் பக்கத்தை 89,000 பேர் பின்பற்றுகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னால் உலக எய்ட்ஸ் தினத்தன்று நடந்த , இதழியல் துறையின் மாணவர்களுக்கான ஒரு போட்டியில்  மிகச்சிறந்த முறையில் பேசி பரிசு வென்றதை கவனித்த CBS ரேடியோவை சார்ந்த Justine Love என்பவர், இவருக்கு தற்காலிக வேலை கொடுத்தார்.

என்னுடைய போட்டியின் முதல் நாள் இரவு, நான் இஸ்திகார தொழுகை  மூலம் இறைவனிடத்தில்,  எனக்கு இந்த துறையில் வேலை வாய்ப்போ அல்லது இதைவிட மிக சிறந்த ஒன்றிற்காக  உதவி தேடினேன்.

ஒரு இளம் பயிற்சியாளராக, இவருக்கு CBS Radio கிடைத்த வேலை தான், இவருடைய  கனவை, சாதிக்க உதவியது.

" அந்த வேலை, என்னுடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்தது", என்கிறார் நூர் அல் ஹுதா.

முகநூல் : Noor Tagouri

#LetNoorShine  காணொளி:


Thanks :http://www.onislam.net/english/news/americas/484903-first-veiled-tv-anchor-appears-in-us.html

Friday, April 3, 2015

எதிர் தொடர் 4: வேத வெளிப்பாடு

எதிர் தொடர் 4: வேத வெளிப்பாடு

உங்களின் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

இஸ்லாத்தின் மீது ஆதார பூர்வமற்ற வகையில்   சிலர்  இணையதளத்தில் குற்றச்சாட்டுகளை  பதிந்து வருவதற்கு மறுப்பு சொல்லும் விதமாக குரான் & ஹதீத் ஆதாரம் கொண்டு இங்கே விளக்கப்படுகின்றது. [refer]




குற்றச்சாட்டுகள் முதலில் கொடுக்கப்பட்டு, கீழே நமது பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

     குற்றச்சாட்டு 1: வஹீயா அருள்வாக்கா?





நமது பதில்:

      இந்த தொடரில் நமது அருமை கட்டுரையாசிரியர் நபி(ஸல்) அவர்களுக்கு வந்த வேத வெளிப்பாடு குறித்து விளக்கியுள்ளார். ஆனால் தான் ஒரு மிசனரியல்ல என்பதை மிகவும் பாடுபட்டு நிறுவ மிசனரிகளின் கருத்தில் இருந்து மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார். ஆம் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் வேத வெளிப்பாடானது இது வரை வந்த தூதர்களின் வேத அறிவிப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. அது சைத்தானால் தான் ஏற்ப்பட்டது என்று நிறுவ முயர்சிப்பர். இவர் அதே ஆதாரங்களை எடுத்து கொண்டு அருள்வாக்கு சாமியார் என்று கூறுகிறார். ஆனால் இவரது கூற்று அவர்களின் கூற்றைவிட மிக பலவீனமானது. மேலும் இந்த கட்டுரை ஆசிரியர் நபி(ஸல்) அவர்களின் வேதவெளிப்பாட்டிற்கு வேறு எந்த சாட்சியும் இல்லை என்று வேறு கூறுகிறார்.

இது அனைத்திற்கும்  ஹதிஸை பதிவு செய்து முழுமையாக விளக்கி விடலாம்.

ஸஹ்ல் இப்னு அஸ்ஸா இதீ(ரலி) அவர்கள் அறிவித்தார்
நான் மர்வான் இப்னு ஹசுமைப் பள்ளி வாசலில் பார்த்தேன். அவரை நோக்கிச் சென்று அவருக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர், ஸைத் இப்ன் ஸாபித் (ரலி) (பின்வருமாறு) தமக்குத் தெரிவித்ததாக எங்களிடம் கூறினார்:
“இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்.(4:95) எனும் வசனத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் ஓதிக்காட்டி கொண்டிருந்தார்கள். அவர்கள் ஓதிக்காட்டி கொண்டிருக்கும் போது, இப்னு உம்மி மக்த்தும்(ரலி) வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னால் அறப்போர் புரிய முடிந்திருந்தால் அறப்போர்’ புரிந்திருப்பேன் என்று கூறினார். அவர் கண்பார்வையற்றவராக இருந்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தொடை என் தொடை மீதிருக்க, அவர்களின் மீது அல்லாஹ் (வேத அறிவிப்பை) அருளினான். எனவே, என் தொடை நசுங்கிப்போய் விடுமோ என்று நான் அஞ்சும் அளவிற்கு நபி(ஸல்) அவர்களின் தொடை என் மீது கனத்து விட்டது. பிறகு அந்நிலை அகன்றது..........
                              நூல்: புஹாரி 4592

ஹாரிஸ் பின் ஹிஸாம்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் தங்களுக்கு வஹீ எப்படி வருகின்றது என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், அவையெல்லாம் (இப்படித்தான்) சில வேளைகளில் வானவர் (ஜிப்ரீல்) என்னிடம் மணியோசையைப் போன்று வருவார். அவர் கூறியதை நான் நினைவில் வைத்துக் கொண்ட நிலையில் அவர் என்னை விட்டுப் பிரிந்து விடுவார். இவ்வாறு வருவது எனக்கு மிகக் கடுமையான் சிரமம் தரக்கூடியதாக இருக்கும். சில வேளைகளில் அந்த வானவர் ஒரு மனிதரைப் போன்று காட்சியளித்து என்னுடன் பேசுவார். அப்போது அவர் கூறுவதை நான் நினைவிலிருத்திக் கொள்வேன் என்று பதிலளித்தார்கள்.
                                    நூல்: புஹாரி 3216

      ஆக இப்படி பட்ட சிரமான நிலையை எந்த அருள்வாக்கு சாமியாரும் அடைவதை பார்த்த்தில்லை. அருள் வாக்கு கூறும் சாமியார்கள் தங்களது உடலை முறுக்கி வித்தை காட்டலாமே தவிர உடலின் எடையை அதிகரிக்க முடியுமா. நபி(ஸல்) அவர்களுக்கு மனியோசை போன்று வஹீ வரும போது அவர்களது எடை அதிகரிக்கும் என்பதை பல ஹதிஸ்கள் கூறுகின்றன. இதோ ஒர் எடுத்துக்காட்டு

அஸ்மா பின்த் யசீத்(ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி(ஸல்) அவர்களின் ஒட்டகமான அல் அத்பாவின் கயிற்றை பற்றி கொண்டிருந்த போதுதான் நபி(ஸல்) அவர்களுக்கு சூரத் அல் மாயிதா வசனங்கள் அருளப்பட்டது. அப்போது அந்த ஒட்டகம் எடை தாங்க முடியாமல் கீழே அமர்ந்து விட்டது.
            அறிவிப்பாளர்: சஹர் பின் ஹுஸாப்(ரஹ்)
            நூல்: அஹ்மத், இப்னு கஸீரின் ஸீரத் அல் நபவிய்யா 1/308

அறிவிப்பாளர் தொடர்:

Asma' bint Yazid bin al-Sakan (rali)-->Shar bin Hushab al-Asha'ri(tabi) --> al-Lyth bin Abi Sulaym(tabi) -->     Abd al-jabbar bin S'aid Abu [Abu Mua'wiya](taba tabi)-->Amr bin Nadr Abu al-Nadr(taba tabi) --->Ahmad bin Hanbal [Abu 'Abdullah](3rd century earlier scholar)


     இதன் மூலம் தெரிவது நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிப்பானது வெளியில் இருந்துதான் வந்தது. அதை சஹாபக்கள் கண்டுள்ளனர் என்பது தெளிவு. ஆகவே அவர்கள் அதை ஏற்று கொண்டனர் என்பதுதான் நிதர்சனமான உன்மை.


குற்றச்சாட்டு 2: வஹீ என்பதை ஆறிய ஹதீஜா(ரலி)யின் சோதனை:



நமது பதில்:

      கட்டுரை ஆசிரியர் கதிஜா(ரலி) எவ்வாறு சோதனை செய்து முஹம்மது(சல்) அவர்களுக்கு வஹீ வந்ததை உண்மை படுத்தினார்கள் என்பதை நிறுவ இரண்டு பலவீனமான செய்திகளை குறிப்பிட்டுள்ளார். இப்னு இஸாகின் நூலில் இருந்து:

அல் ஜுபைர் குடும்பத்தாரால் விடுதலை செய்யப்பட்ட இஸ்மாயில் பின் அபு ஹக்கிம் கூறியதாவது,
      கதிஜா(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் கூறினார்கள்: என் மாமனின் மகனே! உங்களிடம் வருபவர் அடுத்த முறை உங்களிடம் வரும் போது என்னிடம் கூறுவிரா? அவர்கள்சரிஎன்று பதில்ளித்தார்கள். ஆகவே அடுத்த முறை ஜிப்ரில் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்த போது கதிஜா(ரலி) அவர்களிடம் : ‘இதுதான் என்னிடம் வரும் ஜிப்ரில் ஆவார்’. என்று கூறினார்கள். அதற்கு கதிஜா(ரலி) அவர்கள்எழுந்து எனது இடது தொடையின் பக்கம் அமர்வீராகஎன்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். “இப்பொழுது அவரை காண்கிறீர்களா?” என்று நபி(ஸல்) அவர்களிடம் கதிஜா(ரலி) அவர்கள் கேட்டார்கள். ‘ஆம்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “இப்பொழுது எழுந்து எனது வலது தொடையில் அமர்வீராகஎன்று கதிஜா(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களும் அவ்வாறே செய்தார்கள். “இப்பொழுது அவரை காண்கிறீர்களா?” என்று நபி(ஸல்) அவர்களிடம் கதிஜா(ரலி) அவர்கள் கேட்டார்கள். ‘ஆம்என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு அமர்ந்து இருக்கும் போது தனது திரையை விலக்கி தன்னை வெளிப்படுத்திவிட்டுஇப்பொழுது அவரை காண்கிறீர்களா?” என்று நபி(ஸல்) அவர்களிடம் கதிஜா(ரலி) அவர்கள் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள்இல்லைஎன்று கூறினார்கள். “மகிழ்ச்சி கொள்ளுங்கள் நீங்கள் கண்டது ஜிப்ரிலைதான். ஷைத்தானை அல்லஎன்று கதிஜா(ரலி) அவர்கள் உறுதி செய்தார்கள்.
                              நூல் : இப்னு இஸாக் ப. எண்:107

இந்த செய்தியை பதிவு செய்தவர் ஏன் இப்னு இஷாக் வழங்கிய அறிவிப்பாளர் தொடரை குறிப்பிடவில்லை என்ற சிந்தனையோடு அதன் அறிவிப்பாளர் தொடரை அணுகினால் அது பின் வருமாறு உள்ளது.

      கதிஜா(ரலி)(மரணம் ஹிமு 3 )---> இஸ்மாயில் பின் அபு ஹக்கிம் (பிறப்பு ஹிபி 90 ) -->இப்னு இஷாக்

      ஆக இந்த அறிவிப்பு ஒரு அறிவிப்பாளர் முறிந்த ஹதிஷாகும். கதிஜா(ரலி) அவர்களுக்கும் அடுத்த அறிவிப்பாளருக்கும் இடையில் 93 ஆண்டுகள் இடைவெளி உள்ளது. மேலும் இதை அறிவிக்கும் அபு ஹக்கிம் ஹதிஜா(ரலி) கூறியதாக கூறினாலும் ஹதிஜா(ரலி) அவர்கள் தன்னிலையில் (first person) எந்த வார்த்தையையும் பயன்படுத்தவில்லை. எல்லாம் படர்க்கையாக( third person) உள்ளது என்பது குறிப்பிடதக்கது.



நமது பதில்:
      அவர் தன்னுடைய இரண்டாவது ஆதாரமாக பதிவு செய்திருக்கும் செய்தி:
     
நான் (இப்னு இஸாக்) இந்த நிகழ்வை அப்துல்லாஹ் பின் ஹசன் அவர்களிடம் கூறினேன். அவர் கூறினார் “எனது தாயார் ஃபாத்திமா பின்த் ஹூசைன் ஹதீஜா(ரலி)யின் (இந்த) ஹதீஸை கூறும்போது கதிஜா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களை உறவு கொள்ள அழைத்தாகவும், அதை காண விரும்பாத ஜிப்ரில் உடனே விலகிச் சென்றதாகவும் அதை கேட்ட  கதிஜா(ரலி) “இது உண்மையில் ஜிப்ரில்தான். சைத்தான் அல்லஎன்று கூறியதாகவும் தெரிவித்தார்கள்                                             நூல் : இப்னு இஸாக் ப. எண் 107

அறிவிப்பாளர் தொடர்:
கதிஜா(ரலி)(மரணம் ஹிமு 3 ) -->ஃபாத்திமா பின்த் அல் ஹுசைன் (பிறப்பு ஹிபி 50ம் ஆண்டு) -->அப்துல்லாஹ் பின் அல் ஹசன் பின் அல் ஹசன் (மரணம் ஹிபி 145) --> இப்னு இஸாக்.

இதுவும் அறிவிப்பாளர் முறிந்த செய்திதான். இப்படி வழுவற்ற செய்திகளை கொண்டு இஸ்லாத்தின் ஒரு துரும்பைகூட அசைக்க முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------  
ஹிமு - ஹிஜ்ரிக்கு முன்