பக்கங்கள் செல்ல

Showing posts with label ஸைத்(ரலி). Show all posts
Showing posts with label ஸைத்(ரலி). Show all posts

Wednesday, September 28, 2022

உபை இப்னு கஅப்(ரலி)யும் அவர்களது ஓதலும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

 குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் விமர்சனங்களில் அடுத்ததாக முக்கிய இடத்தை வகிப்பது நபித்தோழர் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது ஓதலை அடிப்படையாக கொண்டதாகும். அதாவது நபி(ஸல்) அவர்களால் குர்ஆன் ஓதிக்கற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நபித்தோழராகிய உபை இப்னு கஅப்(ரலி) அவர்களின் ஓதலில் உமர்(ரலி) அவர்கள் சில பகுதிகளை விட்டு விட்டதாக கூறுகிறார்கள். என்வே உபை இப்னு கஅப்(ரலி) அல்லாத நபித்தோழர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட குர்ஆன்தான் இன்றிருப்பது என்பது இஸ்லாமோஃபோபுகளின் வாதம். அதற்கு அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களையும், அதன் ஊடாக அவர்கள் எழுப்பும் வாதத்தையும் பார்த்துவிட்டு அதற்கான நமது விளக்கத்தையும் பார்ப்போம் இன் ஷா அல்லாஹ்.


ஆதாரம் 1: அல்குர்ஆனை உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் இருந்து குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
         இப்னு மஸ்வூத்(ரலி), அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப் மற்றும் முஆத் இப்னு ஜபல் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புஹாரி 3806)

ஆதாரம் 2: உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது ஓதலில் சிலவற்றை விட்டுவிடுவோம் என்ற உமர்(ரலி) அவர்களது கருத்து

உமர்(ரலி) அறிவித்தார்.
         எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ(ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். (புஹாரி 4481)
மேற்குறிபிட்ட ஆதாரங்களை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் வாதம்:

            நபி(சல்) அவர்களால் அறிவுறுத்தப்பட்ட குர்ஆன் ஆசிரியரான உபை இப்னு கஅப்(ரலி) அவர்களின் சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம் என்று உமர்(ரலி) கூறுகிறார். எனவே உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது ஓதலின் மீது அமையாத இன்றைய குர்ஆன் நபி(சல்) அவர்களின் ஓதலில் அமையவில்லை. எனவே குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்பதே இஸ்லாமோஃபோபுகளின் வாதம் ஆகும். இன் ஷா அல்லாஹ் இவர்கள் முன்வைக்கும் வாதங்களுக்கான விளக்கத்தை காண்போம்.

உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் இருந்து குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள்


            முன்சென்ற தொடரில் இதே அறிவிப்பானது ((புஹாரி 3806) இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் குர்ஆனை கற்றுக்கொடுக்க இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் நபி(ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டவர் என்பதனை கூறுவதாக குறிப்பிட்டோம். அந்த ஹதீஸில் இடம் பெறும் ஒவ்வொரு நபித்தோழர்களும் இதே நிலையில் இருப்பவர்கள்தான். ஆனால் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை பொறுத்தவரையில் அவர்கள் நபி(சல்) அவர்கள் இருக்கும் போதே குர்ஆனை முழுமையாக கற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை பின்வரும் ஹதீஸ்கள் விளக்குகிறன.

கதாதா(ரஹ்) அறிவித்தார்.
                இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் தாம் அவர்கள்" என்று அனஸ்(ரலி) கூறினார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்" என்று பதிலளித்தார்கள்.(புகாரி 3810)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: «جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةٌ مِنَ الْأَنْصَارِ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَبُو الدَّرْدَاءِ، وَسَعْدُ بْنُ عُبَادَةَ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَفِي حَدِيثِ زَكَرِيَّا وَكَانَ جَارِيَةُ بْنُ مُجَمِّعِ بْنِ جَارِيَةَ قَدْ قَرَأَهُ إِلَّا سُورَةً أَوْ سُورَتَيْنِ

ஆமிர் அல் ஸ’அபி கூறியதாவது:                                              
    நபி(சல்) அவர்களிடம் அவர்களது காலத்தில் முழுமையாக மனனமிடப்பட்டு தொகுக்கப்பட்டது. அவர்கள் ஆறு பேரும் அன்சாரிகள் ஆவார்கள். அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அபூ ஸைத்(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி), அபூதர்தா(ரலி), சஅத் இப்னு உபாதா(ரலி) மற்றும் உபை இப்னு கஃப்(ரலி) ஆவர். மேலும் ஸகரிய்யா அவர்களது அறிவிப்பில் , முஜம்மி பின் ஜாரியா(ரலி) முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்தார்கள் ஒன்றிரண்டு சூராக்களை தவிர என்று இடம் பெற்றுள்ளது. ( மஜ்ம உல் கபீர் 2092)

                மேற்குறிபிட்ட ஹதீஸ்களின் அடிப்படையில் காணும் போது உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே முழு குர்ஆனையும் கற்றிருந்தார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது. மேலும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களை உஸ்மான்(ரலி) அவர்கள் குர்ஆன் தொகுப்பு குழுவிலும் நியமித்தார்கள் என்பதை பின்வரும் செய்தி கூறுகிறது.
أخبرنا أبو بكر محمد بن عبد الباقي أنا الحسن بن علي أنبأ أبو عمر بن حيوية أنا أحمد بن معروف نا الحسين بن الفهم نا محمد بن سعد قال وأنا محمد بن عمر حدثني هشيم عن المغيرة عن مجاهد أن عثمان أمر أبي بن كعب يملي ويكتب زيد بن ثابت ويعربه سعيد بن العاص وعبد الرحمن بن الحارث
        உஸ்மான்(ரலி), உபை இப்னு காஃப்(ரலி) அவர்களை ஓதவும், அதை ஜைத் இப்னு தாபித்(ரலி) அவர்கள் எழுதவும் , அதை ஸயீத் இப்னு அல் ஆஸ்(ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு அல் ஹாரித்(ரலி) அவர்களை பிரதி எடுக்கவும் கட்டளை இட்டார்கள் (தாரிக் திமிஸ்க் 34/276:3779)

அதனால்தான் மேற்குறிப்பிட்ட செய்தியை ஒத்த செய்தியை அலி இப்னு அப்துல் மாலிக் தனது நூலான கன்சூல் உம்மாலில் பதிவிட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
عن عطاء أن عثمان بن عفان لما نسخ القرآن في المصاحف أرسل إلى أبي بن كعب، فكان يملي على زيد بن ثابت وزيد يكتب ومعه سعيد بن العاص يعربه، فهذا المصحف على قراءة أبي وزيد.

அதாஃ அவர்கள் கூறியதாவது:                             
    உஸ்மான்(ரலி) குர்ஆனை தொகுத்த போது, உபை இப்னு கஅப்(ரலி)யை அழைத்து ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் ஓதிக்காண்பிக்கவும்,அதை ஸைத் இப்னு ஸாபித்(ரலி) எழுதவும் கட்டளை இட்டார்கள். அவருடன் ஸயீத் (ரலி) அவர்களும் அதை செய்தார்கள். அதனால் இந்த முஸ்ஹஃப் உபை மற்றும் கஅப் அவர்களது ஓதலில் அமைந்ததாகும் .(கன்சூல் உம்மால் 4789)

            மேலே நாம் குறிப்பிட்ட ஆதாரங்கள் அனைத்தும் முன்சென்ற தொடர்களில் வேறு பல கட்டுரைகளில் கண்டவைதான். எனவே இன்றைய குர்ஆன் என்பது உபை இப்னு கஅப்(ரலி) மற்றும் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோரின் ஓதலில் அமைந்த குர்ஆன் எனும் போது இஸ்லாமோஃபோபுகள் எழுப்பும் " உபை இப்னு கஅப்(ரலி) அவர்களது ஓதலின் மீது அமையாத இன்றைய குர்ஆன் நபி(சல்) அவர்களின் ஓதலில் அமையவில்லை" என்ற வாதம் அர்த்தமற்றது.


முதலில் உமர்(ரலி) அவர்களால் அறிவிக்கப்படும் அந்த ஹதீஸை பார்ப்போம்.

உமர்(ரலி) அறிவித்தார்.
                   எங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் உபை இப்னு கஅப்(ரலி) ஆவார். எங்களில் நன்கு தீர்ப்பு வழங்கும் ஞானமுடையவர் அலீ(ரலி) ஆவார். நாங்கள் உபை அவர்களின் சொற்களில் சிலவற்றைவிட்டுவிடுவோம். ஏனெனில் அவர், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து நான் செவிமடுத்த எதையும் கைவிடமாட்டேன்' என்று சொல்வார். ஆனால், அல்லாஹ்வோ, எந்த ஒரு வசனத்தையாவது நாம் மாற்றிவிட்டால், அல்லது அகற்றிவிட்டால் (அதற்கு பதிலாக) அதனினும் சிறந்த, அல்லது அதைப்போன்ற வேறு வசனத்தை நாம் கொண்டு வருகிறோம்' என்று கூறியுள்ளான். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.(புஹாரி 4481)
             மேற்குறிபிட்ட செய்தியில் உபை(ரலி) அவர்களது சொற்களில் சிலவற்றை விட்டுவிடுவோம் என்று உமர்(ரலி) கூறுவதன் காரணமும் முழுமையாக பதியப்பட்டுள்ளது. ஆகவே குர்ஆனில் அல்லாஹ்வால் எடுத்துக்கொள்ளப்பட்ட அல்லது மாற்றப்பட்ட சொற்களையும் உபை(ரலி) அறிவிப்பார் அந்த சொற்களை நாங்கள் விட்டுவோம் என்று உமர்(ரலி) கூறுகிறார்கள். மேலும் உபை(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகிய இருவருக்கும் மத்தியில் நிகழ்ந்த சில கருத்துரையாடல்களை இங்கு பதிவிட்டு விளக்கினால் உமர்(ரலி) அவர்கள் எந்த பொருளில் கூறுகிறார் என்பதும், உபை(ரலி) அவர்கள் உஸ்மான்(ரலி) அமைத்த குர்ஆன் தொகுப்புக்குழுவில் இடம்பெற்றும் உபை(ரலி) அவர்களது ஓதல் என்று ஹதீஸ்களில் காணப்படும் சில வசனங்களின் மிகைபடுத்துதல் ஏன் இன்றைய குர்ஆனில் இடம்பெறவில்லை என்பதும் விளங்கும்.

சம்பவம் 1: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களது ஓதலை எழுத கூறிய உபை(ரலி)

حَدَّثَنَا عَمْرُو بْنُ قُسْطٍ قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلَاءِ بْنِ زَبْرٍ، وَغَيْرُهُ، عَنْ عَطِيَّةَ بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، أَنَّ أَبَا الدَّرْدَاءِ، وَأَصْحَابًا لَهُ خَرَجُوا بِمُصْحَفِهِمْ حَتَّى قَدِمُوا الْمَدِينَةَ يُثْبِتُونَ حُرُوفَهُ عَلَى عُمَرَ وَزَيْدِ بْنِ ثَابِتٍ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ يَقْرَأُ عَلَيْهِمْ آيَ {إِذْ جَعَلَ الَّذِينَ كَفَرُوا فِي قُلُوبِهِمُ الْحَمِيَّةَ حَمِيَّةَ الْجَاهِلِيَّةِ} [الفتح: 26] (وَلَوْ حَمَيْتُمْ كَمَا حَمَوْا لَفَسَدَ الْمَسْجِدُ الْحَرَامُ).........فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: يَا أُبَيُّ، اقْرَأْ. فَقَرَأَ كَمَا أَخْبَرُوهُ فَقَالَ: يَا زَيْدُ، اقْرَأْ. فَقَرَأَ قِرَاءَةَ الْعَامَّةِ فَقَالَ عُمَرُ: اللَّهُمَّ لَا عِلْمَ إِلَّا كَمَا قَرَأْتَ فَقَالَ أُبَيٌّ: أَمَا وَاللَّهِ يَا عُمَرُ إِنَّكَ لَتَعْلَمُ أَنِّي كُنْتُ أَحْضُرُ وَيَغِيبُونَ،وَإِنْ شِئْتَ لَا أَقْرَأْتُ أَحَدًا آيَةً مِنْ كِتَابِ اللَّهِ،وَلَا حَدَّثْتُ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: اللَّهُمَّ غَفْرًا، قَدْ جَعَلَ اللَّهُ عِنْدَكَ عِلْمًا، فَأَقْرِئِ النَّاسَ وَحَدِّثْهُمْ. قَالَ: فَكَتَبُوهَا عَلَى قِرَاءَةِ عُمَرَ وَزَيْدٍ "
அபீ இத்ரீஸ் கூறியதாவது, 
      "அபூதர்தா(ரலி)யும் அவர்களது தோழர்களும் அவர்களது குர்ஆன் பிரதிகளுடன், உமர்(ரலி) மற்றும் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோரிடம் தங்களது எழுத்துக்களை உறுதி செய்ய மதீனா மாநகரத்திற்கு வந்தார்கள். உபை இப்னு கஅப்(ரலி) "(ஏக இறைவனை) மறுத்தோர் தமது உள்ளங்களில் வைராக்கியத்தை, மூடத்தனமான வைராக்கியத்தை ஏற்படுத்தியபோது, அவர்கள் வைராக்கியம் கொண்டது போல் நீங்களும் வைராக்கியம் கொண்டால் மஸ்ஜித் அல் ஹரம் பாழ்படுத்தப்பட்டிருக்கும் (அல்குர்ஆன் 48:26) என்று ஓதினார்கள்........ உமர்(ரலி), "உபையே! நீங்கள் ஓதுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் கூறியது போல ((உபை(ரலி))அவர்கள் ஓதினார்கள். பிறகு உமர்(ரலி) அவர்கள்" ஸைத்தே! நீங்கள் ஓதுங்கள்", என்று கூறினார்கள். கிராத் அல் ஆம்மா (பெரும்பான்மை ஓதல்)-ஐ ஸைத்(ரலி) ஓதினார்கள். பிறகு (உபை அவர்களிடம்) "அல்லாஹ்வின் மீதானையாக நீங்கள் ஓதியதை போன்று நான் அறியவில்லையே",என்று கூறினார்கள். அதற்கு உபை(ரலி) “அல்லாஹ்வின் மீதானையாக, நான் (நபி(ஸல்) அவர்களிடம்) இருந்த தருணங்களில் நீங்கள் இல்லாமல் இருந்ததை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கூறினீர்கள் என்றால் நான் அல்லாஹ்வின் வேதத்தின் ஒரு ஆயத்தையும் ஓத மாட்டேன், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் ஒரு ஹதீஸையும் அறிவிக்கவும் மாட்டேன்" என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி) அவர்கள், "அல்லாஹ் பிழைபொறுப்பவன், அல்லாஹ் உங்களுக்கு ஞானத்தை அளித்துள்ளான். எனவே மக்களுக்கு ஓதிக்காட்டுங்கள், ஹதீஸ்களையும் அறிவியுங்கள்", என்று கூறிவிட்டார்கள். " உமர்(ரலி) மற்றும் ஸைத்(ரலி) ஆகியோரின் ஓதலை எழுதிக்கொள்ளுங்கள்" என்று (உபை(ரலி)) கூறிவிட்டார்கள்.....(இப்னு ஸப்பா அவர்களது தாரிக் அல் மதீனா 2/709-710)

சம்பவம் 2: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களது ஓதலை சரிகண்ட உபை(ரலி)

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻐﻔﺎﺭ ﺑﻦ ﺩاﻭﺩ، ﻋﻦ اﺑﻦ ﻟﻬﻴﻌﺔ، ﻋﻦ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﺩﻳﻨﺎﺭ، ﻋﻦ ﺑﺠﺎﻟﺔ، ﺃﻥ ﻋﻤﺮ ﺑﻦ اﻟﺨﻄﺎﺏ، ﻣﺮ ﺑﺮﺟﻞ ﻳﻘﺮﺃ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ (اﻟﻨﺒﻲ ﺃﻭﻟﻰ ﺑﺎﻟﻤﺆﻣﻨﻴﻦ ﻣﻦ ﺃﻧﻔﺴﻬﻢ ﻭﺃﺯﻭاﺟﻪ ﺃﻣﻬﺎﺗﻬﻢ، ﻭﻫﻮ ﺃﺑﻮﻫﻢ) ﻓﻘﺎﻝ ﻋﻤﺮ: ﻻ ﺗﻔﺎﺭﻗﻨﻲ ﺣﺘﻰ ﻧﺄﺗﻲ ﺃﺑﻲ ﺑﻦ ﻛﻌﺐ . ﻓﺄﺗﻴﺎ ﺃﺑﻲ ﺑﻦ ﻛﻌﺐ ﻓﻘﺎﻝ: ﻳﺎ ﺃﺑﻲ، ﺃﻻ ﺗﺴﻤﻊ ﻛﻴﻒ ﻳﻘﺮﺃ ﻫﺬا ﻫﺬﻩ اﻵﻳﺔ؟ ﻓﻘﺎﻝ ﺃﺑﻲ: ﻛﺎﻧﺖ ﻓﻴﻤﺎ ﺃﺳﻘﻂ .

பஜாலா கூறியதாவது:   

உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் ஒரு மனிதரை கடந்து செல்லும் போது குர்ஆன் பிரதியில் இருந்து "இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். அவர் அவர்களுக்கு தந்தையாவார்" (அல்குர்ஆன் 33:6), (அவர் அவர்களுக்கு தந்தையாவார் என்பது அதிகமாக இடம்பெற்றுள்ளது) என்று ஓதுவதை செவியுற்றார்கள். உடனே, உமர்(ரலி) அவர்கள், " நாம் உபை இப்னு கஅப்பிடம் செல்லும் வரை எங்கும் சென்று விடாதே" என்று கூறினார்கள். அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) யிடம் சென்றவுடன் உமர்(ரலி), “ உபையே !இந்த மனிதர் ஓதியதை கேட்டீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு உபை(ரலி), “நான் கவனக்குறைவாக இருந்த போது ஏற்பட்டுவிட்டது" என்று பதிலளித்தார்கள். (ஃபாதாயில் அல் குர்ஆன் 1/322)

        இதே செய்தி ‘ அந்த மனிதர் "உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பில் இவ்வாறே இருந்தது" என்று கூறினார் என்பது உள்ளிட்ட அதிகப்படியான தகவலுடன் முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 18748ல் பதியப்பட்டுள்ளது.

மேற்குறிபிட்ட செய்திகளை பார்க்கும் போது, பின்வரும் முடிவுகளை நாம் பெறமுடியும்
      
     1. உபை(ரலி) அவர்களது ஓதலில் இருக்கும் அதிகப்படியான சொற்கள் நபி(சல்) அவர்களால் ஆரம்ப காலத்தில் ஓதிக்காண்பிக்கப்பட்டது. உபை(ரலி) அவர்களது ஓதலில் இருக்கும் அதிகப்படியான சொற்கள் கிராத் அல் ஆம்மா அல்லது கிராத் அல் ஆகிராவில் இடம் பெறவில்லை. ஆகவே கிராத் அல் ஆகிராவில் இடம் பெறாத அதிகப்படியான சொற்களையே உமர்(ரலி) விட்டுவிட கூறுகிறார்கள்.

    2. நபி(சல்) அவர்களால் இறுதியாக ஸைத் இப்னு ஸாபித்(ரலி)யிடம் கூறப்பட்ட கிராத்தே (கிராத் அல் ஆம்மா) முஸ்ஹஃப்பில் இடம்பெற தகுதிவாய்ந்த அதிகாரப்பூர்வ கிராத், என்பதே நபி(சல்) அவர்களால் அறிவுறுத்தப்பட்ட, நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கும் போதே குர்ஆன் ஓதலை முழுமையாக கற்ற உபை(ரலி) அவர்களது முடிவாகும். அதனால்தான் உபை(ரலி) அவர்களது ஓதல் என்று ஹதீஸ்களில் காணப்படும் சில வசனங்களின் மிகைபடுத்துதல் இன்றைய குர்ஆனில் இடம்பெறவில்லை. அல்லாஹூ அஃலம்.  

Thursday, October 29, 2020

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுக்க தகுதியற்றவரா?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு,ஸைத் இப்னு ஸாபித்(ரலி) குர்ஆனை தொகுக்க தகுதியற்றவரா?


          குர்ஆனின் பாதுகாப்பு குறித்து விளக்கங்கள் கொடுக்கப்படும் போது அதற்கு இஸ்லாமிய எதிர்ப்பாளர்களிடம் புறப்படும் விமர்சனங்களில் மிக முக்கிய இடம் வகிப்பது இந்த தலைப்பு ஆகும். இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் ஓதல் குறித்த சிறப்புகளை முன்னிறுத்தி, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களது தொகுப்பில் குறை இருப்பதாகவும் , நபி(சல்) அவர்களால் புகழப்பட்ட இப்னு மஸ்ஊத்(ரலி) போன்ற நபித்தோழரே இதனை எதிர்த்துள்ளார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இஸ்லாமோஃபோபுகள் பெரும் முயற்சியை மேற்கொள்கின்றனர். இந்த நிகழ்வின் உண்மை நிலை என்ன என்பதை இங்கு காண்போம் இன் ஷா அல்லாஹ்.

இஸ்லாமோ போஃபுகளின் குருட்டு வாதம் 


     குர்ஆனை ஓதவும் அதனை கற்றுக்கொடுக்கவும் நபி(சல்) அவர்களால் பெரிதும் முன்னிறுத்தப்பட்டவர் இப்னு மஸ்ஊத்(ரலி) என்று மிசனரிகள் முதற்கொண்டு பல இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால் முன்னிறுத்தப்படுவதற்கு ஆதாரமாய் அமைந்த  ஹதீஸ்களையும் அதன் மூலம் அவர்கள் வைக்கும் வாதங்களை சற்று பார்போம்.

ஆதாரம் 1:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

       இப்னு மஸ்வூத்(ரலி), அபூ ஹுதைஃபாவின் (முன்னாள்) அடிமையான சாலிம், உபை இப்னு கஅப் மற்றும் முஆத் இப்னு ஜபல் ஆகிய நான்கு பேரிடமிருந்து குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்ளுங்கள். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். (புகாரி 3806)
   குறிப்பு: மேற்குறிபிட்ட செய்தியில் இடம் பெறும் முஆத் இப்னு ஜபல் மற்றும் சாலிம் இருவரும் அபூபகர்(ரலி) அவர்களது ஆட்சிக்காலத்திலேயே மரணித்துவிட்டார்கள். இதில் எஞ்சியவர்கள் இப்னு மஸ்ஊத்(ரலி) மற்றும் உபை இப்னு கஅப்(ரலி) ஆகியோர் மட்டுமே. என்பது குறிப்பிடதக்கது.

        மேலும் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள்தான் மக்காவில் ஹிஜ்ரத்திற்கு முன்பு நபி(சல்) அவர்களுடன் குர்ஆனை ஓதக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.

ஆதாரம் 2:

قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ وَالْفَضْلُ بْنُ دُكَيْنٍ قَالا: حَدَّثَنَا الْمَسْعُودِيُّ عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: كَانَ أَوَّلُ مَنْ أَفْشَى الْقُرْآنَ بِمَكَّةَ مِنْ فِيَّ رَسُولِ الله.
     காஸிம் இப்னு அப்துர் ரஹ்மான் கூறியதாவது: நபி(சல்) அவர்களிடம் இருந்து முதன் முதலில் குர்ஆனை மக்காவில் ஓதியவர் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆவார்கள்.(தபக்கத் இப்னு சாஃத் 3/112)
 இதுவல்லாத மேலும் ஒரு செய்தியையும் முன்வைக்கிறார்கள்: அதாவது ஸைத்(ரலி) அவர்களை விட இப்னு மஸ்ஊத்(ரலி) தான் சிறந்தவர் என்று இப்னு மஸ்ஊத்(ரலி) கூறுவதான பின்வரும் செய்தியையும் முன்வைத்து ஸைத் இப்னு ஸாபித்(ரலி) இந்த பொறுப்பிற்கு தகுதியற்றவர் என்பதாக வாதிக்கின்றனர். 

ஆதாரம் 3:

قَالَ الزُّهْرِيُّ فَأَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ كَرِهَ لِزَيْدِ بْنِ ثَابِتٍ نَسْخَ الْمَصَاحِفِ وَقَالَ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ أُعْزَلُ عَنْ نَسْخِ كِتَابَةِ الْمُصْحَفِ وَيَتَوَلاَّهَا رَجُلٌ وَاللَّهِ لَقَدْ أَسْلَمْتُ وَإِنَّهُ لَفِي صُلْبِ رَجُلٍ كَافِرٍ يُرِيدُ زَيْدَ بْنَ ثَابِتٍ 
       அல் ஜுஹ்ரி கூறியதாவது உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் பின் உத்பா தெரிவிப்பதாவது ,அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) மஸாஹிஃப்களை பிரதி எடுப்பதை விரும்பவில்லை. மேலும் கூறினார்கள் : முஸ்லீம் மக்களே! அந்த முஸ்ஹஃபையும் , அவரது ஓதலையும் பிரதி எடுப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் இஸ்லாத்தை தழுவிய போது அவர் (ஸைத் (ரலி) இறைமறுப்பாளரின் முதுகில் இருந்தார். (திர்மிதி 3104) 

 குருட்டு வாதம்:

     மேற்குறிபிட்ட செய்திகள் மற்றும் இன்ன பிற செய்திகளை முன்னிறுத்தி பின்வரும் வாதங்களை இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் முன்வைக்கிறார்கள்:

1.  இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் மட்டுமே குர்ஆன் ஓதலில் தலைசிறந்தவர்  அதனால்  இப்னு மஸ்ஊத்(ரலி) மட்டுமே குர்ஆனை கற்று கொடுக்க , தொகுக்க முழு தகுதிவாய்ந்தவர். 

2. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களை இப்னு மஸ்ஊத்(ரலி)யே விமர்சித்திருப்பதால் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) இதற்கு தகுதியற்றவர் . 

இப்னு மஸ்ஊத்(ரலி) மட்டும்தான் குர்ஆன் ஓதலில் தலைசிறந்தவரா?


        மேற்குறிபிட்ட ஆதாரம் 1 மற்றும் 2 நபி(சல்) அவர்களிடம் மக்காவிலும், மதீனாவின் ஆரம்ப காலத்திலும் இப்னு மஸ்ஊத்(ரலி) குர்ஆனை நபி(சல்) அவர்களிடம் இருந்தே கற்றவராய் இருந்தார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறது. ஆனால் நபி(சல்) அவர்களின் மரணத்திற்கு பின்னான இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் கருத்து முழு குர்ஆனையும் அவர்கள் நபி(சல்) அவர்களிடம் கற்கவில்லை என்பதை பிரதிபளிப்பதாய் இருக்கிறது.

ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
        (ஒரு முறை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "யார் மோசடி செய்கிறாரோ அவர், தாம் மோசடி செய்தவற்றுடன் மறுமை நாளில் வருவார்" (3:161) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டி விட்டு, "யாருடைய ஓதல் முறைப்படி நான் ஓத வேண்டுமெனக் கூறுகிறீர்கள்? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எழுபதுக்கும் மேற்பட்ட அத்தியாயங்களை ஓதிக்காட்டியுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், அவர்களிலேயே நான்தான் இறைவேதத்தை நன்கு கற்றவன் என்பதை அறிந்துள்ளார்கள். என்னைவிட (இறைவேதத்தை) நன்கு அறிந்த ஒருவர் இருக்கிறார் என நான் அறிந்தால், (அவர் எங்கு இருந்தாலும் சரி) அவரை நோக்கி நான் பயணம் மேற்கொள்வேன்" என்று கூறினார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் கூடியிருந்த (அந்த) அவையில் வீற்றிருந்தேன். அவர்களில் எவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை; அதற்காக அவரைக் குறை கூறவுமில்லை.(முஸ்லிம் 4860)
      மேற்குறிபிட்ட இந்த செய்தி இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் நேரடியான சாட்சியாக இருக்கிறது. 

நபி(ஸல்) அவர்களிடம் முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்த ஸைத்(ரலி)


        இதற்கு மாற்றமாக நபி(சல்) அவர்களது காலத்தில் அவர்களின் நாவினாலே முழு குர்ஆனையும் கற்றவர்கள் பலர் இருதுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. அதில் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும் ஒருவர் ஆவார்கள். 
கதாதா(ரஹ்) அறிவித்தார்.
          இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித் ஆகியோர் தாம் அவர்கள்" என்று அனஸ்(ரலி) கூறினார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்" என்று பதிலளித்தார்கள்.(புகாரி 3810)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: «جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةٌ مِنَ الْأَنْصَارِ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَبُو الدَّرْدَاءِ، وَسَعْدُ بْنُ عُبَادَةَ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَفِي حَدِيثِ زَكَرِيَّا وَكَانَ جَارِيَةُ بْنُ مُجَمِّعِ بْنِ جَارِيَةَ قَدْ قَرَأَهُ إِلَّا سُورَةً أَوْ سُورَتَيْنِ
ஆமிர் அல் ஸ’அபி கூறியதாவது:
       நபி(சல்) அவர்களிடம் அவர்களது காலத்தில் முழுமையாக மனனமிடப்பட்டு தொகுக்கப்பட்டது. அவர்கள் ஆறு பேரும் அன்சாரிகள் ஆவார்கள். அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அபூ ஸைத்(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி), அபூதர்தா(ரலி), சஅத் இப்னு உபாதா(ரலி) மற்றும் உபை இப்னு கஃப்(ரலி) ஆவர். மேலும் ஸகரிய்யா அவர்களது அறிவிப்பில் , முஜம்மி பின் ஜாரியா(ரலி) முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்தார்கள் ஒன்றிரண்டு சூராக்களை தவிர என்று இடம் பெற்றுள்ளது. ( மஜ்ம உல் கபீர் 2092) 
أخبرنا أبو بكر محمد بن عبد الباقي أنا الحسن بن علي أنا أبو عمر بن حيوية أنا أحمد بن معروف نا الحسين بن الفهم نا محمد بن سعد أنا محمد بن يزيد الواسطي عن إسماعيل بن أبي خالد عن الشعبي قال جمع القرآن على عهد رسول الله صلى الله عليه وسلم ستة نفر أبي بن كعب ومعاذ بن جبل وأبو الدرداء وزيد بن ثابت وسعد وأبو زيد وكان مجمع ابن جارية قد جمع القرآن إلا سورتين أو ثلاثا وكان ابن مسعود قد أخذ بضعا وسبعين سورة وتعلم بقية القرآن من مجمع.
         ஆமிர் அல் ஸ’அபி கூறியதாவது: நபி(சல்) அவர்களிடம் அவர்களது காலத்தில் முழுமையாக மனனமிடப்பட்டு தொகுக்கப்பட்டது. அவர்கள் ஆறு பேர் ஆவார்கள். அவர்கள் உபை இப்னு கஃப்(ரலி),முஆத் இப்னு ஜபல்(ரலி), அபூதர்தா(ரலி), ஸைத் இப்னு ஸாபித்(ரலி),சஅத் (ரலி) மற்றும் அபூ ஸைத்(ரலி), ஆவர். மேலும் முஜம்மி இப்னு ஜாரியா குர்ஆன் முழுவதையும் மனனமிட்டிருந்தார்கள் இரண்டு அல்லது மூன்று சூராக்களை தவிர. மேலும் இப்னு மஸ்ஊத்(ரலி) 70 சூராக்களை மனனமிட்டிருந்தார்கள். குர்ஆனின் ஏனைய பகுதியை முஜம்மி(ரலி)- அவர்களிடம் இருந்து மனனமிட்டார்கள்.        (அல் தாரிக் வ அல் திமிஸ்க் பாகம் 47 பக்கம் 111) 
       அதாவது நபி(சல்) அவர்களிடம் இருந்து குர்ஆனின் எழுவது சூராக்களை இப்னு மஸ்ஊத்(ரலி) கற்றுள்ளார்கள். ஏனைய சூராக்களை முஜம்மி(ரலி) அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டார்கள் என்பதை மேற்குறிபிட்ட செய்தியும், இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் சுய சாட்சியமும் தெளிவாக விளக்குகின்றன.

" நிதர்சனம் என்னவென்றால் அபூபக்ர்(ரலி), உமர்(ரலி) மற்றும் உஸ்மான்(ரலி) ஆகியோர் ஸைத்தை(ரலி) குர்ஆனை தொகுக்க முன்னிறுத்தியது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களைவிட ஸைத் அவர்கள் சிறந்தவர் என்பதற்காக அல்ல. இப்னு மஸ் ஊத்(ரலி) இஸ்லாமில் முந்தியவர், அதிக போரில் பங்கு பெற்றவர் மேலும் பல சிறப்புக்கள் அவருக்கு உண்டு. ஆனால் ஸைத்(ரலி) அவர்கள் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களைவிட குர்ஆனில் அதிகம் கற்றவர். அவர்கள் நபி(சல்) அவர்களது காலத்திலேயே முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்தார்கள். மாறாக இப்னு மஸ்ஊத்(ரலி) எழுவது சூராக்களைதான் மனனமிட்டிருந்தார்கள். யார் நபி(சல்) அவர்களது காலத்திலேயே முழூ குர்ஆனையும் கற்று மனனமிட்டிருந்தாரோ அவர்தான் குர்ஆனை தொகுக்க முழு தகுதி உடையவர் அதனால் தேர்வு செய்யவும் பட்டார். இது இப்னு மஸ்ஊத்(ரலி) மீதான தாக்குதலாக எந்த அறிவற்றவரும் கருதக்கூடாது, இருவரிலும் ஸைத்(ரலி) அவர்கள் அதிகம் குர்ஆனை மனமிட்டவர் என்பதானது அனைத்திலும் சிறந்தவர் என்ற பொருளைத்தராது ஏனென்றால் ஸைத்(ரலி) அபூபகர் மற்றம் உமரை விட அதிகம் குர்ஆனை மனனமிட்டவர், ஆனால் அவர்கள் இருவரின் சிறப்பில் (ஸைத்(ரலி) மேன்மையானவரோ, நிகரனாவரோ அல்ல என்பது உறுதியானது." (தஃப்ஸீர் குர்துபீ 1/54)
மேற்குறிபிட்ட செய்திகளில் இருந்து இரு விசயங்கள் தெளிவாகிறது. 

1. நபி(சல்) அவர்களது நாவுகளில் இருந்து முழுமையாக குர்ஆனை மனனமிட்டவர்களில் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும் ஒருவர். இவர்தான் நபி(சல்) அவர்கள்து இறுதி ஓதலின் சாட்சியும் ஆவார்கள். இது குறித்து சென்ற தொடரில் விளக்கியுள்ளோம்

2.  மறுபக்கத்தில் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் 70 சூராக்களை மனனமிட்டிருந்தார்கள். 

   மேற்குறிபிட்ட செய்திகளே போதுமானது ஸைத்(ரலி) குர்ஆனை தொகுக்க முழு தகுதியுடையவர் என்பதை புரிந்து கொள்ள. மேலும் நபி(சல்) அவர்களின் நெருங்கிய தோழர்களான அபூபகர்(ரலி), உமர்(ரலி), ஹப்ஸா(ரலி), உஸ்மான்(ரலி) உள்ளிட்ட பலரால் அறியப்படாத ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களின் குறை பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர் வந்து சில இஸ்லாமிய புத்தகங்களை அறையும் குறையுமாக வாசித்த ஓரியண்டலிஸ்ட்களுக்கும்,  அவர்களின் பிதற்றலை அப்படியே நம்பும் அரைவேக்காடு இஸ்லாமோஃபோபுகளுக்கும் தெரிந்துவிட்டதா என்ன??????

குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத் பின் ஸாபித்(ரலி)

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

குர்ஆன் தொகுப்பு குழுவில் ஸைத் பின் ஸாபித்(ரலி)


       நபி(சல்) அவர்களின் மரணத்திற்கு பிறகு குர்ஆனை தொகுக்கும் குழுக்கள் இரண்டு முறை இஸ்லாமிய கலிஃபாக்களால் நியமிக்கப்பட்டுள்ளது. முதல் முறை அபூபக்ர்(ரலி) அவர்களால், இரண்டாவது முறை உஸ்மான்(ரலி) அவர்களால். இரண்டிலுமே ஸைத் பின் ஸாபித்(ரலி) பங்குபெற்றுள்ளார்கள். குர் ஆன் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களிற்கான விளக்கங்களை புரிந்து கொள்ள முதலில் மேற்குறிப்பிட்ட ஸைத பின் ஸாபித்(ரலி) அவர்களின் நியமனத்தின் நியாயங்கள அறிந்து கொள்வது அவசியமாகும். அது குறித்த ஹதீஸ்களை முதலில் பார்ப்போம்.

அபூபக்ர்(ரலி) அவர்களது காலத்தில்


          ஸைத் இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) - அன்னார் வேத அறிவிப்பினை (வஹியை) எழுதுவோரில் ஒருவராக இருந்தார் அவர்கள் கூறினார்.

         யமாமா போர் நடைபெற்ற பின் (கலீஃபா) அபூ பக்(ரலி), எனக்கு ஆளனுப்பி (என்னை அழைத்துவரக் கூறினார்கள். (நான் சென்றேன். அங்கே) அவர்களுக்கு அருகில் உமர் இப்னு கத்தாப்(ரலி) இருந்தார்கள். 

அப்போது அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) கூறினார்கள்:
          உமர் அவர்கள் என்னிடம் வந்து, 'இந்த யமாமாப் போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள். (இறைமறுப்பாளர்களுடன் போர் நடக்கும்) பல்வேறு இடங்களில் குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு, அதனால் குர்ஆனை நீங்கள் திரட்டினால் தவிர, அதன் பெரும் பகுதி (நம்மைவிட்டுப்) போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன். (எனவே,) தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்' என்று கூறினார்கள். நான் 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இது (குர்ஆனைத் திரட்டுவது) நன்மை(யான பணி)தான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும் வரை இது விஷயத்தில் (தொடர்ந்து) அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். (முடிவில்) உமர் அவர்கள் கருதியதை(யே) நானும் (பொறுத்தமானதாகக்) கண்டேன். (இதை அபூ பக்ர் அவர்கள் என்னிடம் கூறியபோது) உமர்(ரலி) (ஏதும்) பேசாமல் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள்.
        (பிறகு) அபூ பக்ர்(ரலி) (என்னிடம்) 'நீங்கள் புத்திசாலியான இளைஞர்; உங்களை நாங்கள் (எந்த விதத்திலும் சந்தேகப்படமாட்டோம். நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்காக வஹி (வேத வசனங்களை) எழுதக்கூடியவராயிருந்தீர்கள். எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள்.

       அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது; குர்ஆனை ஒன்று திரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் இருவரும் எப்படிச் செய்யப்போகிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி)தான்' என்று பதிலளித்தார்கள். இதையே நான் தொடர்ந்து (அவர்கள் இருவரிடமும்) வலியுறுத்திக் கொண்டிருந்தேன். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்று திரட்ட முன்வந்தேன்.) எனவே, நான் எழுந்து சென்று (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை துண்டுக் தோல்கள், அகலமான எலும்புகள், போரிச்சமட்டைகள் மற்றும் (குர்ஆன் வசனங்களை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகள் ஆகியவற்றிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டிபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் (கடைசி) இரண்டு வசனங்களை குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; இவை வேறெவரிடமிருந்தும் (எழுதப்பட்டு) கிடைக்கவில்லை.
         (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் (அர்யுன்) அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128 , 129)
             (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்ப பெற்ற குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர். (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்தது. பிறகு உமர் அவர்களின் புதல்வியார் ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது.(புகாரி 4679).

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

        ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.
        எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறைஷிக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறைஷியரின் (வட்டார) மொழிவழக்குப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷியரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். (புஹாரி 4987.)

     மேற்குறிபிட்ட செய்தியில் முதல் செய்தியை ஆய்வு செய்யும் போது அபூபக்ர்(ரலி) அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள் குறித்து பின்வரும் முக்கியத்துவங்களை முன்வைத்து அவரது நியமனத்தின் காரணத்தை விளக்குவதை நாம் புரிந்து கொள்ளலாம்:

1. புத்திசாலியான இளைஞர். ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் புத்தி கூர்மை உடையவராகவும், இளைய வயதுடையவராகவும் இருந்தார்கள்.

2. நபி(சல்) அவர்களின் எழுத்தர். ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களின் எழுத்தராகவும் குறிப்பாக வஹி செய்திகளை எழுதுபவராக இருந்தார்கள்.

3. மிகுந்த நம்பத்தகுந்தவர்.
      மேற்குறிபிட்ட சிறப்புகள் அல்லாமல், இந்த குர்ஆனை தொகுப்பதற்கு ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் நியமிக்கப்பட மேலும் சில சிறப்பு காரணங்களும் உண்டு.  அவற்றையும் நாம் காண்போம்.

கதாதா(ரஹ்) அறிவித்தார்.

       இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ஆகியோர் தாம் அவர்கள்" என்று அனஸ்(ரலி) கூறினார். நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'அபூ ஸைத் என்பவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் தந்தையின் சகோதரர்களில் ஒருவர்" என்று பதிலளித்தார்கள்.(புகாரி 3810)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْحَضْرَمِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ عُثْمَانَ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: «جَمَعَ الْقُرْآنَ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةٌ مِنَ الْأَنْصَارِ زَيْدُ بْنُ ثَابِتٍ، وَأَبُو زَيْدٍ، وَمُعَاذُ بْنُ جَبَلٍ، وَأَبُو الدَّرْدَاءِ، وَسَعْدُ بْنُ عُبَادَةَ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ، وَفِي حَدِيثِ زَكَرِيَّا وَكَانَ جَارِيَةُ بْنُ مُجَمِّعِ بْنِ جَارِيَةَ قَدْ قَرَأَهُ إِلَّا سُورَةً أَوْ سُورَتَيْنِ 
ஆமிர் அல் ஸ’அபி கூறியதாவது: 
     நபி(சல்) அவர்களிடம் அவர்களது காலத்தில் முழுமையாக மனனமிடப்பட்டு தொகுக்கப்பட்டது. அவர்கள் ஆறு பேரும் அன்சாரிகள் ஆவார்கள். அவர்கள் ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அபூ ஸைத்(ரலி), முஆத் இப்னு ஜபல்(ரலி), அபூதர்தா(ரலி), சஅத் இப்னு உபாதா(ரலி) மற்றும் உபை இப்னு கஃப்(ரலி) ஆவர். மேலும் ஸ்கரிய்யா அவர்களது அறிவிப்பில் , முஜம்மி பின் ஜாரியா(ரலி) முழு குர்ஆனையும் மனனமிட்டிருந்தார்கள் ஒன்றிரண்டு சூராக்களை தவிர என்று இடம் பெற்றுள்ளது.                        ( மஜ்ம உல் கபீர் 2092)
         மேற்குறிபிட்ட அறிவிப்புகளின் அடிப்படையில் பார்த்தோம் என்றால் ஸைத பின் ஸாபித்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களது காலத்திலேயே குர்ஆனை முழுமையாக மனனமிட்டவர்களில் ஒருவர் என்பது நிரூபனமாகிறது.


قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ: قَرَأَ زَيْدُ بْنُ ثَابِتٍ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعَامِ الَّذِي تَوَفَّاهُ اللَّهُ فِيهِ مَرَّتَيْنِ، وَإِنَّمَا سُمِّيَتْ هَذِ الْقِهِرَاءَةُ قِرَاءَةَ زَيْدِ بْنِ ثَابِتٍ، لأَنَّهُ كَتَبَهَا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَرَأَهَا عَلَيْهِ، وَشَهِدَ الْعَرْضَةَ الأَخِيرَةَ، وَكَانَ يُقْرِئُ النَّاسَ بِهَا حَتَّى مَاتَ، وَلِذَلِكَ اعْتَمَدَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ فِي جَمْعِهِ، وَوَلاهُ عُثْمَانُ كِتْبَةَ الْمَصَاحِفِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَجْمَعِينَ
அபூ அப்துர் ரஹ்மான் அல ஸலாமி கூறியதாவது:

     ஸைத்(ரலி), நபி(சல்) அவர்களிடம், நபி(சல்) அவர்கள் இறந்த ஆண்டில் இரண்டுமுறை ஓதிக்காட்டினார்கள். அந்த ஓதல்தான் ஸைத்தின் ஓதல் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அவர் நபி(சல்) அவர்களுக்காக அதை எழுதினார்கள், அவர்களிடம் ஓதியும் காட்டினார்கள். நபி(சல்) அவர்களின் இறுதி ஓதலான அர்தத் அல் ஆகிராவின் சாட்சியுமாக இருந்தார்கள். அதையே அவர்கள் இறக்கும் வரையில் மக்களுக்கு கற்றும் கொடுத்தார்கள். அதனால்தான் அபுபக்கர்(ரலி) மற்றும் உமர்(ரலி) அவர்கள் இருவரும் அவரை தொகுக்க நியமித்தார்கள். மேலும் உஸ்மான்(ரலி) அவர்களும் அவரை தொகுக்க நியமித்தார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. (அல் பாகவியின் ஸ்ரஹ் அஸ் ஸுன்னாஹ் 4/526) 
    மேலும் இதை அறிவிக்கும் அபூ அப்துர் ரஹ்மான் அல் ஸலாமிதான் குர்ஆனை கற்று கொடுக்க உஸ்மான்(ரலி) அவர்களால் கூஃபாவிற்கு அனுப்பப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களது மாணவரும் கூட ( சியார் அல் நுஃபுலா இமாம் தஹபி 4/268).

        இப்படி ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களது இறுதி ஓதலை மனமிட்டிருந்ததால்தான் அதன் அடிப்படையில் தொகுக்கப்பட்ட குர்ஆன் ஓதலை நபிதோழர்களும், தாபியீன்களும் அர்தா அல் ஆகீரா என்று குறிப்பிடுகின்றனர். இது குறித்து சென்ற தொடரில் நாம் விளக்கியுள்ளோம்.

أَخْبَرَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ الْخَلَدِيُّ، ثنا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ الْبَغَوِيُّ، بِمَكَّةَ، ثنا حَجَّاجُ بْنُ الْمِنْهَالِ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «عُرِضَ الْقُرْآنُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَرَضَاتٍ فَيَقُولُونَ: إِنَّ قِرَاءَتِنَا هَذِهِ هِيَ الْعَرْضَةُ الْأَخِيرَةُ
       சமூரா (ரலி) அவர்கள் கூறியதாவது ; நபி(சல்) அவர்களுக்கு பல முறை குர்ஆன் ஓதிகாண்பிக்கப்பட்டது. இன்று நமது ஓதல்தான் அர்தத் அல் ஆகிரா (இறுதி ஓதல்) என்று கூறப்படுகிறது.( முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் 2904) 
      அல்ஹசன் அல் பஸரி கிபி 642ல் பிறந்தவர் ஆவார். உஸ்மான(ரலி) அவர்களது ஆட்சிக்காலம் கிபி 644- 656 வரையிலானது கிபி 650ல் தான் குர்ஆனை தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அல்ஹசன் அல் பஸரி அவர்களிடம் சமூரா(ரலி) (மரணம் கிபி 680) குறிப்பிட்டு கூறுவதாக மேற்குறிபிட்ட செய்தி இடம் பெறுகிறது. ஆக மேற்குறிபிட்ட செய்தியானது உஸ்மான்(ரலி) அவர்களின் தொகுப்பு குறித்துதான் பேசுகிறது என்பது நமக்கு தெளிவாக நிருபனமாகிறது. 
    மேலும் உஸ்மான்(ரலி) அவர்களது காலத்தை சேர்ந்தவரும், இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களில் மாணவர்களில் ஒருவரான உபைதா(ரஹ்) அவர்கள் இப்னு ஸீரின் வழியாக பின்வரும் செய்தியை குறிப்பிடுகிறார்கள்: 

حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَعَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبِيدَةَ، قَالَ: الْقِرَاءَةُ الَّتِي عُرِضَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعَامِ الَّذِي قُبِضَ فِيهِ هِيَ الْقِرَاءَةُ الَّتِي يَقْرَؤُهَا النَّاسُ الْيَوْمَ فِيهِ
    உபைதா அவர்கள் கூறியதாவது: நபி(சல்) அவர்கள் இறந்த ஆண்டில் ஓதப்பட்டதுதான் நபி(சல்) அவர்களது ஓதல் ஆகும். அதைதான் இன்று மக்கள் ஓதி கொண்டிருக்கிறார்கள் (முஸன்னஃப் இப்னு அபிஷைபா 30291) 
   உபைதா அவர்கள் அபூபகர்(ரலி) அவர்களது காலத்தின் குர்ஆன் தொகுப்பையும் கண்டவர், உஸ்மான்(ரலி) காலத்தின் குர்ஆன் தொகுப்பையும் கண்டவர் ஆவார். 

    மேற்குறிபிட்ட செய்திகள் ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்கள் குர்ஆனை தொகுக்கும் குழுவில் நியமிக்கப்பட்டதற்கான தெளிவான காரணங்களை விளக்க போதுமானது. மேலும் மேற்குறிபிட்ட செய்திகளில் இடம் பெறும் அபூ அப்திர் ரஹ்மான் ஸ்லாமி, உபைதா, இப்னு சீரின் என்று அனைவரும் இப்னு மஸ்ஊத்(ரலி) உள்ளிட்ட பல நபிதோழர்களின் மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களால் தொகுக்கப்பட்ட குர்ஆனிற்கு கலிஃபாக்களான அபூபக்ர்(ரலி), உஸ்மான்(ரலி) அவர்கள் வழங்கிய அங்கீகாரம், குர்ஆன் தொகுப்பினை கண்ட முதல் இரு தலைமுறையான சஹாபாக்கள் மற்றும் தாபீயீன்களின் சாட்சியங்கள் ஆகியவையே, ஸைத் பின் ஸாபித்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பு நபி(சல்) அவர்களது இறுதி ஓதல்தான் என்பதை நிறுவ போதுமானது.. மேற்குறிபிட்ட ஆதாரங்களை மறுக்கும் வண்ணம் நேரடியான எதிர் சாட்சியங்கள் எதையும் கொண்டு வரமுடியாத மிசனரிகளும், இஸ்லாமோஃபோபுகளும் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்களின் எதிர்ப்பு குறித்த சில செய்திகளை தூக்கித்திரிகின்றன. அது குறித்து அடுத்த தொடரில் இன் ஷா அல்லாஹ் காண்போம்.