பக்கங்கள் செல்ல

Showing posts with label ரூஹ். Show all posts
Showing posts with label ரூஹ். Show all posts

Sunday, July 16, 2017

உயிர் :1.உயிர் என்றால் என்ன?.......... மக்காவில் ஒருநாள்

ஏக இறைவனின் திருப்பெயரால்


உயிர் என்றால் என்ன?.......... மக்காவில் ஒருநாள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது,

       “குரைஷியர்கள் அல் நள்ர் பின் அல் ஹாரிஸ் மற்றும் உக்பா பின் அபூ முயீத் ஆகியோரை “ முஹம்மது குறித்தும், அவர் கூறுவது குறித்தும் கேட்டுவாருங்கள். அவர்கள்தான் முதல் வேதத்திற்கு உரியவர்கள். நாம் அறியாதவற்றை அவர்கள் அறிவார்கள்” என கூறி அவர்கள் இருவரையும் மதீனாவில் இருந்த யூத ரப்பீக்களிடத்தில் அனுப்பிவைத்தனர். ஆகவே அல் நள்ர் மற்றும் உக்பா இருவரும் மதீனா சென்று யூத ரப்பீக்களிடத்தில் இறைத்தூதர் குறித்தும், அவர் கூறுவது குறித்தும் கூறினர். அவ்விருவரும் “நீங்கள் தாம் தவ்ராத்தையுடைய மக்கள், எங்கள் இந்த மனிதர் குறித்து அறிந்து கொள்ளவே உங்களிடம் வந்தோம்” என்றும் கூறினர்.

          அதற்கு அந்த ரப்பீக்கள் அவர்களிடத்தில் “ நாங்கள் கூறும் இந்த மூன்று விஷயம் குறித்து அவரிடம் கேளுங்கள். இந்த மூன்றும் குறித்து அவர் பதிலளித்தால் அவர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தாம். அவ்வாறில்லாமல் அவர் பதிலளிக்கவில்லை என்றால் அவர் பொய்யர். அவரை நீங்கள் விரும்பியவாரு செய்து கொள்ளுங்கள்.

      1.“முன்னொரு காலத்தில் வாழ்ந்த குறிபிட்ட வாலிபர்களைப் பற்றி ஏதாவது செய்தி தெரியுமா? ஏனெனில் அவர்களைப் பற்றி ஓர் ஆச்சரியமான செய்தி இருக்கிறது. அவர்கள் என்னவானார்கள்?

               2.பூமியின் கிழக்கு மேற்கு பகுதிகளையெல்லாம் சுற்றி வந்த பயணி ஒருத்தரைப் பற்றிய செய்தி தெரியுமா?

               3.ரூஹ்(உயிர்) என்றால் என்ன?

               இந்த மூன்று கேள்விகளை கேளுங்கள். அவர் இவற்றுக்கு சரியான பதிலளித்தால் அவர் இறைத்தூதர்தான், அவரை பின்பற்றுங்கள். அவர் பதிலளிக்கவில்லை என்றால் அவர் பொய்யர். அவரை நீங்கள் விரும்பியவாரு செய்து கொள்ளுங்கள். அவர்கள் நள்ர் மற்றும் உக்பா குரைஷியரிடம் திரும்பி வந்தனர்.

      “குரைஷியரே! உங்களுக்கும் முஹம்மதிற்கும் இடையில் முடிவு செய்வதற்கு தேவையான தீர்வை கொண்டுவந்துள்ளோம். ரப்பீக்கள் சிலவற்றை குறித்து கேள்வி எழுப்புமாறு கூறியுள்ளனர்.” என்று கூறினர். அவை என்ன என்பதையும் குறைஷியரிடம் விவரித்தனர்.

            ஆகவே குறைஷியர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போல கேள்விகளை தூதரிடம் முன்வைத்தனர். அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் “நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாளை விடையளிக்கிறேன்” என்று கூறிவிட்டார்கள். நபி(சல்) அவர்கள் இன்ஷா அல்லாஹ் –இறைவன் நாடினால் என்று குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள்.

                 குரைஷியர்களும் சென்று விட்டனர். ஆனால் நபி(சல்) அவர்கள் எந்த வஹி அறிவிப்பும் இன்றி, ஜிப்ரில்(அலை) அவர்களது வருகைக்காக 15 நாட்கள் காத்திருந்தார்கள். அதனால் மக்காவாசிகள் வதந்திகளை பரப்ப துவங்கினர். “முஹம்மது நாளை பதிலளிக்கிறேன் என்று வாக்களித்தார் ஆனால் 15 நாட்கள் ஆகியும் நாம் கேட்ட எதற்கும் பதிலளிக்கவிலை” என்று பரப்ப துவங்கினர். வஹியின் தாமதம் இறைத்தூதருக்கு மிகப்பெரிய சிக்கலையும், மக்காவாசிகளின் சொற்கள் மிகப்பெரிய மனவேதனையையும் அளித்தது.

                அதன் பிறகு ஜிப்ரில்(அலை) அவர்கள் எல்லா புகழும் உடைய ஏக இறைவனிடம் இருந்து காஃப் அத்தியாயத்தை கொண்டுவந்தார்கள். அதில் அவர்களது வேதனைக்கான காரணம் குறித்தும், அந்த வாலிபர்கள் குறித்தும், அந்த பயணி குறித்தும் செய்திகள் இடம் பெற்றிருந்தன. மேலும் ஏக இறைவன் குறிபிட்டான், “ (முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக! (17:85.) (இப்னு கஸீரின் அல் சீரா அல் நபவிய்யா ப.எண்:351, பாகம் 1)

             மேற்குறிபிட்ட சம்பவமானது நபி(ஸல்) அவர்களின் மக்காவின் ஏகத்துவ பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் நடை பெற்றதாகும். அங்கிருந்த குறைஷியர்கள் யூத ரப்பீகளிடம் ஆலோசனை செய்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட கேள்விதான இவை மூன்றும். உயிர் குறித்த இஸ்லாமிய பார்வையானது இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. நாத்திகர்களும் கிறித்தவ மிசனரிகளும் உயிர் குறித்த இஸ்லாமின் பார்வையை விமர்சனம் செய்து வருகின்றனர். இஸ்லாம் உயிர் குறித்து அப்படி என்னதான் கூறுகிறது. அது அறிவியலுடன் எவ்வளவு பொறுந்துகிறது என்பதை ஒத்து நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்