பக்கங்கள் செல்ல

Showing posts with label மக்கா. Show all posts
Showing posts with label மக்கா. Show all posts

Sunday, July 16, 2017

உயிர் :1.உயிர் என்றால் என்ன?.......... மக்காவில் ஒருநாள்

ஏக இறைவனின் திருப்பெயரால்


உயிர் என்றால் என்ன?.......... மக்காவில் ஒருநாள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது,

       “குரைஷியர்கள் அல் நள்ர் பின் அல் ஹாரிஸ் மற்றும் உக்பா பின் அபூ முயீத் ஆகியோரை “ முஹம்மது குறித்தும், அவர் கூறுவது குறித்தும் கேட்டுவாருங்கள். அவர்கள்தான் முதல் வேதத்திற்கு உரியவர்கள். நாம் அறியாதவற்றை அவர்கள் அறிவார்கள்” என கூறி அவர்கள் இருவரையும் மதீனாவில் இருந்த யூத ரப்பீக்களிடத்தில் அனுப்பிவைத்தனர். ஆகவே அல் நள்ர் மற்றும் உக்பா இருவரும் மதீனா சென்று யூத ரப்பீக்களிடத்தில் இறைத்தூதர் குறித்தும், அவர் கூறுவது குறித்தும் கூறினர். அவ்விருவரும் “நீங்கள் தாம் தவ்ராத்தையுடைய மக்கள், எங்கள் இந்த மனிதர் குறித்து அறிந்து கொள்ளவே உங்களிடம் வந்தோம்” என்றும் கூறினர்.

          அதற்கு அந்த ரப்பீக்கள் அவர்களிடத்தில் “ நாங்கள் கூறும் இந்த மூன்று விஷயம் குறித்து அவரிடம் கேளுங்கள். இந்த மூன்றும் குறித்து அவர் பதிலளித்தால் அவர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தாம். அவ்வாறில்லாமல் அவர் பதிலளிக்கவில்லை என்றால் அவர் பொய்யர். அவரை நீங்கள் விரும்பியவாரு செய்து கொள்ளுங்கள்.

      1.“முன்னொரு காலத்தில் வாழ்ந்த குறிபிட்ட வாலிபர்களைப் பற்றி ஏதாவது செய்தி தெரியுமா? ஏனெனில் அவர்களைப் பற்றி ஓர் ஆச்சரியமான செய்தி இருக்கிறது. அவர்கள் என்னவானார்கள்?

               2.பூமியின் கிழக்கு மேற்கு பகுதிகளையெல்லாம் சுற்றி வந்த பயணி ஒருத்தரைப் பற்றிய செய்தி தெரியுமா?

               3.ரூஹ்(உயிர்) என்றால் என்ன?

               இந்த மூன்று கேள்விகளை கேளுங்கள். அவர் இவற்றுக்கு சரியான பதிலளித்தால் அவர் இறைத்தூதர்தான், அவரை பின்பற்றுங்கள். அவர் பதிலளிக்கவில்லை என்றால் அவர் பொய்யர். அவரை நீங்கள் விரும்பியவாரு செய்து கொள்ளுங்கள். அவர்கள் நள்ர் மற்றும் உக்பா குரைஷியரிடம் திரும்பி வந்தனர்.

      “குரைஷியரே! உங்களுக்கும் முஹம்மதிற்கும் இடையில் முடிவு செய்வதற்கு தேவையான தீர்வை கொண்டுவந்துள்ளோம். ரப்பீக்கள் சிலவற்றை குறித்து கேள்வி எழுப்புமாறு கூறியுள்ளனர்.” என்று கூறினர். அவை என்ன என்பதையும் குறைஷியரிடம் விவரித்தனர்.

            ஆகவே குறைஷியர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போல கேள்விகளை தூதரிடம் முன்வைத்தனர். அல்லாஹ்வின் தூதர்(சல்) அவர்கள் “நீங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு நாளை விடையளிக்கிறேன்” என்று கூறிவிட்டார்கள். நபி(சல்) அவர்கள் இன்ஷா அல்லாஹ் –இறைவன் நாடினால் என்று குறிப்பிடாமல் விட்டுவிட்டார்கள்.

                 குரைஷியர்களும் சென்று விட்டனர். ஆனால் நபி(சல்) அவர்கள் எந்த வஹி அறிவிப்பும் இன்றி, ஜிப்ரில்(அலை) அவர்களது வருகைக்காக 15 நாட்கள் காத்திருந்தார்கள். அதனால் மக்காவாசிகள் வதந்திகளை பரப்ப துவங்கினர். “முஹம்மது நாளை பதிலளிக்கிறேன் என்று வாக்களித்தார் ஆனால் 15 நாட்கள் ஆகியும் நாம் கேட்ட எதற்கும் பதிலளிக்கவிலை” என்று பரப்ப துவங்கினர். வஹியின் தாமதம் இறைத்தூதருக்கு மிகப்பெரிய சிக்கலையும், மக்காவாசிகளின் சொற்கள் மிகப்பெரிய மனவேதனையையும் அளித்தது.

                அதன் பிறகு ஜிப்ரில்(அலை) அவர்கள் எல்லா புகழும் உடைய ஏக இறைவனிடம் இருந்து காஃப் அத்தியாயத்தை கொண்டுவந்தார்கள். அதில் அவர்களது வேதனைக்கான காரணம் குறித்தும், அந்த வாலிபர்கள் குறித்தும், அந்த பயணி குறித்தும் செய்திகள் இடம் பெற்றிருந்தன. மேலும் ஏக இறைவன் குறிபிட்டான், “ (முஹம்மதே!) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்'' என்று கூறுவீராக! (17:85.) (இப்னு கஸீரின் அல் சீரா அல் நபவிய்யா ப.எண்:351, பாகம் 1)

             மேற்குறிபிட்ட சம்பவமானது நபி(ஸல்) அவர்களின் மக்காவின் ஏகத்துவ பிரச்சாரத்தின் ஆரம்ப காலத்தில் நடை பெற்றதாகும். அங்கிருந்த குறைஷியர்கள் யூத ரப்பீகளிடம் ஆலோசனை செய்து நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட கேள்விதான இவை மூன்றும். உயிர் குறித்த இஸ்லாமிய பார்வையானது இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. நாத்திகர்களும் கிறித்தவ மிசனரிகளும் உயிர் குறித்த இஸ்லாமின் பார்வையை விமர்சனம் செய்து வருகின்றனர். இஸ்லாம் உயிர் குறித்து அப்படி என்னதான் கூறுகிறது. அது அறிவியலுடன் எவ்வளவு பொறுந்துகிறது என்பதை ஒத்து நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்

Wednesday, September 7, 2016

ஹஜ் பயணம் - பாகம் 1

இந்தியாவைப் பொறுத்தவரை "ஹஜ் பயணம்" என்பது மத வேறுபாடின்றி அனைவரும் அறிந்துள்ள ஒரு விடயம். இதன் உண்மையான விபரம் என்ன? அங்கே செல்லும் முஸ்லிம்கள் அன்றாட நிகழ்வுகள் பற்றி "அல்ஜசீரா" செய்தி நிறுவனம் தொகுத்துத் தருகின்றது... அனைத்து சகோதர(ரி)களும் பலன் பெரும் நோக்கத்தில் சுருக்கமாகத் தருகின்றோம்.

20 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் உலகம் முழுவதிலிருந்தும் ஹஜ் எனும் புனித பயணமாக சவூதி அரேபியாவில் உள்ள மக்காவிற்குச் சென்றுள்ளனர்.
உலகில் கூடும் மிகப்பெரிய மக்கள் கூட்டங்களில் ஒன்றான இந்த ஹஜ், இஸ்லாமிய கட்டாயக் கடமைகளில் ஒன்று. இது மக்களை பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்தவும், இறைவனுக்கு அடிபணிவதில் ஆர்வமூட்டும் வகையிலும் அமைந்துள்ளது.
பழமையான கஃபா படம் 
முஹம்மது நபி அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி அவர்கள் நடந்து சென்றப் பாதை மட்டுமில்லாமல், பைபிளில் சொல்லப்பட்டுள்ள தூதுவர்களான ஆப்ரஹாம், இஸ்மேவேல் போன்றோரின் வழிமுறையாகவும் அமைந்துள்ளது.
7 முறை காபாவை வலம் வருவது, மேலும் சபா & மர்வா என்று சொல்லக்கூடிய இரண்டு மலைகளுக்கிடையே 7 முறை வலம் வருவது போன்ற கடுமையான உடல் உழைப்பைக் கொண்டுள்ளது தான் இந்த ஹஜ் பயணம்.


இன்றைய கஃபா



ஹஜ் பயணம் - 2 - ஹஜ்ஜின் வரலாறு: ஜம்ஜம் நீரூற்று


ஹஜ் பயணம் - 2

ஹஜ்ஜின் வரலாறு: ஜம்ஜம் நீரூற்று

4000 வருடங்களுக்கு முன்பு  மனிதர்கள் வசிக்காத, வறண்ட  ஒரு பாலைவனம் தான் மக்கா.

Safaa & Marwa
இப்ராஹீமிடம்(ஆப்ரஹாம்), அவர் மனைவி ஹாஜாராவையும், குழந்தை இஸ்மாயீலையும் பாலஸ்த்தீனத்திலிருந்து, அரேபியாவில் கொண்டு வந்து விட்டு விடுமாறு இறைவன் கட்டளையிடுகிறான். இறைக் கட்டளையை ஏற்று, மக்கள் நடமாட்டமில்லாத அரேபியாவில் இபுறாஹீம் அவர்கள் விட்டு விட்டு சென்று விடுகின்றார்கள்.

குழந்தை இஸ்மாயில் பசியினால் துடிக்கும்போது, தாய் ஹாஜரா  ஏதாவது உதவி கிடைக்குமா என்று ஏங்கிய வண்ணம் அங்கே இருந்த ஸபா, மர்வா மலைகளுக்கிடையில் ஓடிச் சென்று பார்க்கின்றார்கள்.

இறுதியில் இறைவனிடம் பிரார்த்தித்த நிலையில், குழந்தைக்கு அருகே மயக்கமடைந்து விடுகின்றார்.

Zamzam water entering the well from the stony horizon
இறைக் கட்டளையின்பேரில், வானவர் ஜிப்ரயில் மூலம்  அங்கிருந்து மிகச் சிறந்த நீரூற்று வெளிப்படுகின்றது. நீர் பல வழிகளிலும் ஓட, ஹாஜரா கல்களையும்  மண்ணையும் வைத்து "ஜம்ஜம்" என்று கூறியவாறே  தடுக்க முயற்சிக்கின்றார். இதனைக் கொண்டு தான் இந்த நீரூற்று "ஜம்ஜம்" என்று அழைக்கப்படுவதாக ஒரு தகவலும் உண்டு.

 கடுமையான பாலைவனத்தில் மிகச் சிறந்த நீரூற்று இவர்களின் வசம் வந்ததால் இதை வைத்து கடந்து செல்லும் ஆடு மேய்ப்பவர்களிடம் உணவுகளை பரிமாற்றம்  செய்து வந்தனர்.
   
Conducting Water Sampling Test
4000 வருடங்களுக்கு முன்பு, வறண்ட பாலைவனத்தில் உண்டான ஒரு நீரூற்று, இன்று வரை பல்லாயிரம் மடங்கு அதிகமாக பலனளித்து கொண்டிருப்பது, மிகப் பெரிய அதிசயங்களில் ஒன்று.

ஹஜ் முடிந்து வருபவர்கள், கேன்களில் ஜம்ஜம் நீர் கொண்டு வருவதை காணலாம். முஸ்லீம் நண்பர்களிடம் கேட்டு அருந்திப் பாருங்கள்.  இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு.


Zamzam drinking water container for hajis


அன்று ஹாஜரா அவர்கள், இரன்டு மலைக்குன்றுகளுக்கிடையே ஓடிய சம்பவத்தை வருங்கால சந்ததிகள் நினைவு கூறும்  விதமாகத் தான் மக்கா பயணம் செல்பவர்களின் அலுவல்களில் 7 முறை இரு மலைகளுக்கிடையே நடப்பதும்  ஒன்று.

Part 1: ஹஜ் பயணம் - பாகம் 1

Ref:
1.   BBC 
2.   Zam Zam studies and Research Center