பக்கங்கள் செல்ல

Monday, May 29, 2017

எதிர்தொடர் 24: சந்திரன் பிளந்துவிட்டது

ஏக இறைவனின் திருப்பெயரால்

          இஸ்லாம் இது இறைவனின் மார்க்கம்தான் என்பதை நிறுவ தன்னகத்தே எத்தனையோ ஆதாரங்களை கொண்டுள்ளது. அவற்றில் சில அறிவியல் உண்மைகளை உள்ளடக்கியவையாகவும் உள்ளன. நமது எதிர் தரப்பு கட்டுரையாளர் இந்த முறை, முஹம்மது(சல்) அவர்களுக்கு அன்றைய அரபிய குரைஷியர்களுக்கு தன்னை இறைவனின் தூதர் என்று நிறுவ ஏக இறைவன் அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஓர் அற்புதமான, நிலவு பிளவுண்டது குறித்து சில விமர்சனங்களை முன்வைத்துள்ளார்(1).
இந்த விமர்சனங்கள் யாவும் இஸ்லாமிய எதிர்ப்பு வளைதளங்களில் இருந்து என்றும் போல் திருடப்பட்டவைதான். இந்த கட்டுரையாளர் இஸ்லாமிய எதிர்ப்பு விமர்சனங்களில் பகுத்தாய்வு என்பதை மேற்கொள்ளவே மாட்டாரா? என்ற எண்ணம் தான் இந்த கட்டுரையை எழுதும் போது நமக்கு ஏற்படுகிறது. சென்ற தொடர்களில் எல்லாம் கட்டுரையாளரின் பல அபத்தங்களையும், அவதூறுகளையும், அறியாமையையும் தோழுரித்திருக்கிறோம். இம்முறை கட்டுரையாளரின் அறிவியல் ஞானத்தையும், அந்த அறிவியல் ஞானம் எப்படி காழ்ப்புணர்ச்சியினால் மழுங்கடிக்கப்பட்டுள்ளது என்பதையும் காண்போம். மேலும் தன்னை என்னதான முன்னாள் முஸ்லிம் என்று கூறினாலும், இஸ்லாம் குறித்து அடிப்படை அறிவு கூட கட்டுரையாளருக்கு இருந்ததில்லை என்பதையும் இந்த கட்டுரையிலும் காண்போம் இன்ஷா அல்லாஹ்….

சந்திரனும் பிளந்துவிட்டது:

       அவரது இந்த கட்டுரையின் முடிவாக பின்வரும் நான்கு விமர்சனங்களை நம்மால் பெற முடியும். அந்த விமர்னங்களையும் அதற்கான விளக்கத்தையும் காண்போம்.

விமர்சனம் 1: நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதம் குறித்த விமர்சனம்.     நபிகளாருக்கு(சல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்கள் என்பவை குர்ஆனிற்கு முரண்படுகிறது என்பது கட்டுரையாளரின் வாதம்.

நமது பதில்:
        கட்டுரையாளர் தனது கட்டுரையில் நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட குர்ஆன் அல்லாத ஏனைய அற்புதங்கள் குறித்த தனது புரிதலை முன்வைக்கிறார் அது குர்ஆனிற்கே முரண்படுவதாகவும் குற்றம் சுமத்துகிறார். ஆனால் குர் ஆனில் இருந்து அதற்கு எந்த வசன ஆதாரத்தையும் முன்வைக்காமல் தனது வாதத்தின் முக்கிய ஆதாராமாக ஹதீஸையே முற்படுத்திகிறார். முதலில் நபி(சல்) அவர்களுக்கு குர்ஆன் அல்லாத ஏனைய அற்புதங்கள் வழங்கப்பட்டது குறித்து குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை கண்டுவிட்டு இவரது முக்கிய ஆதாரமான ஹதீஸின் விளக்கத்தையும் காண்போம்.

நபி(சல்) அவர்களுக்கு அற்புதங்கள் வழங்கப்படவில்லையா???

وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ جَاءَتْهُمْ آيَةٌ لَيُؤْمِنُنَّ بِهَا قُلْ إِنَّمَا الآيَاتُ عِنْدَ اللَّهِ وَمَا يُشْعِرُكُمْ أَنَّهَا إِذَا جَاءَتْ لا يُؤْمِنُونَ (١٠٩) وَنُقَلِّبُ أَفْئِدَتَهُمْ وَأَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوا بِهِ أَوَّلَ مَرَّةٍ وَنَذَرُهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ (١١٠)

     "எங்களிடம் அற்புதம் வந்தால் அதை நம்புவோம்'' என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர். அற்புதங்கள் அல்லாஹ்விடமே உள்ளன எனக் கூறுவீராக! "அது நிகழும்போது அவர்கள் நம்ப மாட்டார்கள்'' என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? அவர்கள் ஆரம்பத்தில் நம்பிக்கை கொள்ளாமல் இருந்தது போலவே அவர்களின் உள்ளங்களையும், பார்வைகளையும் புரட்டுவோம். அவர்களது அத்துமீறலில் அவர்களைத் தடுமாற விட்டு விடுவோம் (6:109,110)

      மேற்குறிபிட்ட வசனமே தெளிவாக குறிப்பிடுகிறது, அற்புதங்கள் நிகழும் என்பதை அல்லாஹ்வே உறுதிப்பட தெரிவித்திருக்கும் போது அற்புதமே நிகழாது என்று எப்படி கட்டுரையாளர் கூறுகிறார். மேலும் நபி(சல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஏனைய அற்புதங்கள் குறித்தும் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். உதாரணமாக பத்ர் யுத்தத்தில் நபி(சல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் அற்புதம் தொடர்பாக பின்வருமாறு திருக்குர்ஆன் கூறுகிறது.

    அவர்களை நீங்கள் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான். (முஹம்மதே!) நீர் எறிந்த போது (உண்மையில்) நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான். நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய முறையில் பரிசளிப்பதற்காக இவ்வாறு செய்தான். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.(அல்குர்ஆன் 8:17)

      இதேபோன்று மிஃராஜ் பயணம் என்ற அற்புதம் குறித்து அல்குர்ஆன் 53:01-18 கூறுகிறது. நபி(சல்) அவர்களை மனிதர்கள் கொல்லமுடியாது என்ற அற்புதம் குறித்து அல்குர்ஆன் 5:67 குறிப்பிடுகிறது. மக்காவில் இருந்து மதினா ஹிஜ்ரத்தின் போது அல்லாஹ் நபி(சல்) அவர்களை பாதுகாக்க மக்கள் அறியாத படைகளை கொண்டு உதவி செய்த அற்புதத்தை அல்குர்ஆன் 9:40 கூறுகிறது. இதைபோன்ற பல அற்புதங்கள் நபி(சல்) அவர்களுக்கு வழங்கப்பட்டதாக குர்ஆனே கூறுகிறது. அவற்றிற்கு எல்லாம் முத்தாய்ப்பாய் சந்திரன் பிளந்தது என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.

اقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ (١)

(யுகமுடிவு நேரம் நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது (குர்ஆன் 54:1

    ஆக சந்திரன் பிளந்தது குறித்த செய்தியானது எந்த வகையிலும் குர்ஆனிற்கு முரண்படவில்லை. கட்டுரையாளரின் புரிதல் ஒருவேலை குர்ஆனிற்கு மாற்றமாக, அற்புதங்களை நபிமார்கள் தங்களது சுயவிருப்பத்தால் செய்ய முடியும் என்று இருக்குமேயானால் நிச்சயம் சந்திரன் பிளந்த சம்பவம் அவர் கூறிப்பிடும் குர்ஆன் வசனத்திற்கு முரண்பட்டிருக்கும். அவ்வாறில்லாமல் அற்புதங்கள் இறைவனின் அதிகாரத்தில் உள்ளவை என்று குர்ஆன் கூறுவதை ஏற்கும் பட்சத்தில் சந்திரன் பிளந்ததும் இறைவனின் கட்டளைபடியே என்பதை விளங்கிகொள்ளலாம்.

அப்படியென்றால் நபிகள்(சல்) அவர்கள் குறிப்பிடுவதாக கூறப்படும் அந்த ஹதீஸ் என்ன கூறுகிறது என்ற கேள்வி எழும்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

       ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். எனவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.( (புஹாரி 4981)

     அதாவது ஒவ்வொரு நபிமார்களுக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டன, அவற்றை அந்த சமுகமக்கள் கண்ணுற்றனர். அதனால் ஏகஇறைவனை நம்பிக்கை கொண்டனர். அதுபோல நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கிய அத்தகைய அற்புதம் வஹிதான் என்று மேற்குறிபிட்ட செய்தி கூறுகிறது. அதாவது முன்சென்ற நபிமார்களுக்கு வழங்கப்பட்ட அற்புதமாகட்டும், நபி(சல்) அவர்களுக்கு வழங்கபட்ட வஹி அல்லாத ஏனைய அற்புதங்கள் யாவும் அந்த அந்த காலத்தை சார்ந்த சமூகத்தினருக்கு உரியதாய் இருந்தது. அந்த சமுகத்திற்கு அந்த அற்புதங்களை துணையாகக் கொண்டு நபிமார்கள் தங்களை நம்பும்படி வாதிட்டனர். உதரணமாக மூசா அலை அவர்கள் காலத்தில் கடல் பிளந்த அற்புதம். அவரது சமுகத்தினர் அனைவரும் கண்ணுற்றனர். நம்பிக்கை கொண்டனர். 

  அதுபோல நபி(சல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட வஹீயானது நபி(ஸல்) அவர்களது மரணத்திற்கு பிறகும் யுகமுடிவு நாள்வரை உள்ள மக்களுக்கு இஸ்லாத்தை போதிக்கும் அற்புதமாக, யுகமுடிவு நாள்வரை உள்ள மக்கள் அதை காணும் படியாக, யுகமுடிவுவரை சுயசாட்சி பகர்வதாய், நபி(சல்) அவர்களுக்கும் அந்த வஹியே சாட்சி பகர்வதாய் அமைந்த அற்புதமாக இன்றும் இருப்பதை நம்மால் காணமுடிகிறது. அந்த அற்புதம்தான் இன்றும் அமேரிக்க, ஐரோப்பிய கண்டத்தை அனைத்து எதிர்ப்பையும் மீறி வென்றுகொண்டிருக்கிறது என்பது உண்மை அல்லவா. நபி(சல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட ஏனைய அற்புதங்களான சந்திரன் பிளந்தது உள்ளிட்ட எதுவும் இந்த தனிச்சிறப்பை கொண்டிருக்கவில்லை. இதைதான் நபி(சல்) அவர்கள் “அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது” என்ற தொடரின் மூலம் விளக்குகிறார்கள்.

விமர்சனம் 2: ஹதீஸில் கூறப்பட்ட சந்திரன் பிளந்தது என்ற செய்தியின் உண்மைதன்மை சந்தேகத்திற்குரியது, அந்த விண்ணியல் சம்பவம் குறித்த அரபு அல்லாத மற்ற சமுகத்தாரின் குறிப்புகள் இல்லை. 

நமது பதில்:

மேற்குறிபிட்ட சந்திரன் பிளந்த செய்தியானது ஹதீஸ்களில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது:
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
           மக்காவாசிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) நபி(ஸல்) அவர்கள் காட்டினார்கள்.(புகாரி 3637)

            இதேபோன்று பல சஹாபாத் தோழர்கள் அறிவிக்கின்றனர். அவர்களுள் இப்னு அப்பாஸ்(ரலி), இப்னு உமர்(ரலி), இப்னு மஸூத்(ரலி), ஆகியோர் அறிவிக்கும் ஒரே செய்தி பல அறிவிப்பாளர் தொடர்களை பெற்று முத்தவாதிர் (அறிவிப்பாளர் தொடரின் ஓவ்வொரு நிலையிலும் குறைந்த பட்சம் நான்கிற்கு மேற்பட்ட அறிவிப்பாளர்களை கொண்டிருக்கும் செய்தியாகும்). ஆக இந்த செய்தி மிக வழுவான செய்தியாகும். ஒரு சம்பவம் குறித்து குறிப்பிட்ட பகுதியில் வாழ்ந்த சமகால மக்களின் நேரடி சாட்சியாக இந்த ஹதீஸ்கள் அமைகின்றன.

          ஆனால் இந்த சம்பவம் குறித்து ஏன் மற்ற சமூகத்தினர் பதியவில்லை என்ற கட்டுரையாளரின் கேள்வி எவ்வளவு அபத்தமானது என்பது அது குறித்த அறிவியல் பார்வை நமக்கு காட்டிவிடும். பொதுவாக விண்ணியல் நிகழ்வுகளை உலகில் உள்ள அனைவரும் ஒரு சேர கண்ணுர இயலாது என்பது ஏனோ கட்டுரையாளரின் சிந்தனையில் தோன்றவில்லை. உதாரணமாக சந்திர கிரகணம், சூரிய கிரகணம் போன்றவற்றின் குறிபிட்ட நிலையை அனைத்து மக்களும் ஒரு சேர காணவியலாது. வரலாறு நெடுகிலும் பதிவு செய்யப்பட்ட பல கிரகணங்கள் ஒவ்வோரு முறையும் ஏதேனும் ஒரு சமுகத்தாரால்தான் பதிவு செய்யப்பட்டிருப்பதை நம்மால் காணவியலும். உதரணமாக கிபி 14 செப் 27ல் நிகழ்ந்த சந்திர கிரகணத்தை ரோம் பகுதியில் வாழ்ந்த மக்களின் குறிப்புகளில் காணமுடிகிறது, ஏனைய சமூக மக்களின் குறிப்புக்களில் காண வியலாது. (2)

     ஆக இத்தகைய நெடுநேரம் நிடிக்கும் விண்ணியல் நிகழ்வுகளே இந்த நிலையில் இருக்கும் போது, சிறிது நேரம் நடை பெறும் நிகழ்வுகளை ஒரு சமுகத்தினர் பதிந்திருக்கும் போது ஏனையோர் பதியவில்லை என்ற கேள்வி விண்ணியல் நிகழ்வுகள் குறித்து சிறிதும் ஞானம் இல்லாதவரிடமே தோன்றும். மேலும் இதே போன்றதொரு நிகழ்வு “கேண்டர்பெரியின் கெர்வேஸ் (Gervase of Canterbury ) தனது தொகுப்பில் (“ த குரோனிக்கல்) கிபி 1178 ஜூன் 18ல் நடைபெற்றதாக பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

      “This year on the 18th of June, when the Moon, a slim crescent, first became visible, a marvellous phenomenon was seen by several men who were watching it. Suddenly, the upper horn of the crescent was split in two. From the mid point of the division, a flaming torch sprang up, spewing out over a considerable distance fire, hot coals and sparks. The body of the Moon which was below, writhed like a wounded snake. This happened a dozen times or more, and when the Moon returned to normal, the whole crescent took on a blackish appearance.”
    
    அதாவது நிலவானது இரண்டாக பிளந்ததாகவும், அந்த நிலவின் வெடிப்பில் இருந்து தீ பிளம்பு வெளியேறியதாகவும், அப்போது நிலவானது அடிபட்ட பாம்பை போல் சுடித்ததாகவும், பல முறை இந்த அதிர்வானது ஏற்பட்ட பிறகு நிலவு தனது நிலைக்கு திரும்பியதாகவும் கூறுகிறது அந்த குறிப்பு.  இத்தகைய நிகழ்வுகள் நடைபெறும் போது நிலவு தானே தன்னிலைக்கு வந்துவிடும் என்று மேற்கூறிய செய்தி குறிப்பிடுவதை நம்மால் அறிய முடிகிறது.(3)

     மேலும் இந்த நிகழ்வும் இங்கிலாந்து அல்லாத மக்களினால் பதிவு செய்யப்படவில்லை. இது குறித்து கூறும்போது சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருக்கும் மக்களால் மட்டுமே இத்தகைய நிகழ்வுகளை காணமுடியும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். (இதைதான் ஒருதலைபட்சம் என்று மக்கள் கூறுவார்கள் என்பது வேறு விஷயம்)


           "I think they happened to be at the right place at the right time to look up in the sky and see a meteor that was directly in front of the moon, coming straight towards them," Withers said. This idea was strongly suggested by others in a 1977 scientific paper.(4)



விமர்சனம் 3: சேர மன்னன் நிலவு பிளந்த்தை காண்டாரா????? 

நமது பதில்:




     நிலவு பிளந்த சமபவத்தினை உறுதி செய்ய சேரமான் பெருமானின் சாட்சியம் அவசியமற்றது என்பதுதான் நமது வாதம். ஆயினும் இது குறித்த பல இஸ்லாமிய எதிர்ப்பு வலைதளங்கள் உளறிவருவதால் இந்த சமபவம் குறித்து நாம் விளக்க வேண்டியுள்ளது.
     
        சேரமான் பெருமான் என்ற கேரள மன்னன் இந்த சம்வத்தை கண்டார் அதன் பிறகு அவர் இஸ்லாத்தை ஏற்றார் என்ற வாய்வழிச்செய்தி இருப்பதாக நாம் அறிய முடிகிறது. இது குறித்து இப்னு கஸீர் போன்ற அறிஞர்கள் காலத்திலும்(14ம் நூற்றாண்டு) இந்த தகவல்கள் இருந்ததாகவும் நாம் அறியமுடிகிறது. (பிதாயா வந் நிகாயா, பாகம் 2).இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் உள்ளது. அதாவது குறிபிட்ட இந்த விண்ணியல் அற்புதமும் அதை ஒரு மன்னர் கண்டதாகவோ அல்லது கேள்விப்பட்டதாவோ இடம்பெறும் செய்திகள் 6ம் நூற்றாண்டில் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் இது குறித்த குறிப்புகள் ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த கேரள வரலாற்று நூல்களில் காணமுடியவில்லை. இது களப்பிரர்களின் காலமாகும் (3 முதல் 7ம் நூற்றாண்டு). இதனை இருண்ட காலமாக வரலாற்று ஆசிரியர்கள் வருணிக்கின்றனர். இந்த காலத்தைய இலக்கியங்கள் பல காணமல் போய்விட்டன. இந்த காலம் குறித்து ரோமிலா தாப்பர் பின் வருமாறு குறிப்பிடுகிறார்.

        The Kalabhras are said to have been hill tribes, but soon became sufficiently settled to extend patronage to Buddhists and Jainas. Possibly this is why they were reviled in later texts, some of which were of Brahman authorship. The Change encouraged the breaking down of the system of clan-based societies. (P.No:327, Ch:10 The Peninsula: Emerging Regional Kingdoms c. AD 500-900, Penguin History of Early India from the Origins to AD 1300 by Romila Thapar)

       அதாவது களப்பிரர்கள் பவுத்த சமண சமயத்தை வளர்த்தனர். அதனால் அவர்களது வரலாறு சிதைக்கப்பட்டதாக ரோமிலா தாப்பர் குறிப்பிடுகிறார். மேலும் அது சாதிய அடிப்படையிலான சமூக அமைப்பை உடைத்தது என்று கூறுகிறார். ஆக பிராமணர்களால் உருவாக்கப்ட்ட பெரியபுராணம் போன்ற நூல்களை அடிப்படையாக கொண்டு எல்லாம் ஒரு வரலாற்று குறிப்பை மறுக்க இயலாது.

        மேலும் இவ்வாறு மக்காவிற்கு பயணம் மேற்கொண்ட இரு பெருமாள்கள் குறித்து பேராசிரியர் ஹெர்மான் குண்டார்ட் தனது கேரளோபதியில் குறிப்பிடுகையில் அதில் பானபெருமாள் பவுத்தத்தை ஏற்றதாகவும், அவர் பிறகு மக்காவிற்கு சென்றதாகவும் கூறுகிறார்.

     இங்கு இன்னொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டியுள்ளது. அதாவது சேரமான் பெருமாள் என்பது சேர நாட்டை (சேர நாடு = கேரள நாட்டை) ஆட்சி செய்த அரசர்களை குறிக்கும் பொதுப்பெயரும் கூட. “சேர” என்ற வார்த்தை குறித்து வின்செண்ட் சுமித் என்ற வரலாற்று ஆசிரியர் தனது 

The Early History of India(P.No:447) என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்.


     நாம் முன்பே கண்டது போல பவுத்த அரசர்களின் வரலாறு அழிக்கப்பட்டது போல இந்த மன்னனின் வரலாறும் ஏன் அழிக்கப்பட்டிருக்கக்கூடாது? இதில் சேரமான் ஜும்மா மசூதி முன்னாள் பவுத்த விஹாரமாக இருந்த இடம் என்பது குறிப்பிட்தக்கது.(5)

      மேலும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் தலைவரான M.G.S. நாராயணன் குறிப்பிடும் போது

     “ there is no reason to reject the tradition that the last Chera king embraced Islam and went to Makkah, since it finds a place, not only in Muslim chronicles, but also in Hindu brahmanical chronicles like the Keralolpatti which need not be expected to concoct such a tale which is no way enhances the prestige or the interests of the Brahmins or Hindu population.” (Perumlas of Kerala, M.G.S Narayanan,P.No: 65 )

   சேர மன்னன் இஸ்லாத்தை ஏற்றது தொடர்பாக இஸ்லாமிய நூல்கள்* மற்றும் இந்து பிராமணர்களின் ஏடுகளில் காணப்படும் செய்தியை மறுப்பதற்கு எந்த வரலாற்று முகாந்திரமும் இல்லை என்று குறிப்பிடுகிறார்.

*தாரிக் ஜுஹூருல் இஸ்லாம் ஃபில் மலபாரி என்ற முஹம்மத் பின் மாலிக் அவர்களின் நூல சேரமான் மன்னன் நிலவு பிளந்ததை கண்டுதான் இஸ்லாத்தை ஏற்றதாக கூறும் மிக பழமையான வரலாற்று நூல் என்பது குறிப்பிட்தக்கது


     மேலும் இந்த வரலாற்று செய்தி பற்றி கட்டுரையாளரின் விமர்சனம் ஒன்றை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது நபி(சல்) அவர்களை எந்த இந்திய அரசரும் சந்தித்தற்கான குறிப்பு இல்லை என்று கூறுகிறார். ஆனால் அல் இஷாபாவில் (பாகம் 3, பக்கம் 170) நபி(சல்) அவர்களை சந்தித்த இந்திய மன்னரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரை சர்பனாக் அல் ஹிந்த் என்ற பெயரால் நபிதோழர்கள் அழைத்ததாகவும் குறிப்பு காணப்படுகிறது.


    இப்போது நமது கேள்வி என்னவென்றால் சாதிய சமூக அமைப்பை எதிர்க்கும் பவுத்த சமண சமயத்தை வளர்த்த களப்பிரர்களின் வரலாறே சிதைக்கப்பட்டிருக்கும் போது, இஸ்லாமியர்களின் வரலாறு மட்டும் துள்ளியமாக காணக்கிடைக்கும் என்று எவ்வாறு கட்டுரையாளர் நம்புகிறார்?

      இஸ்லாம் 7ம் நூற்றாண்டிலேயே மலபாரை வெற்றி கொண்டது எப்படி? அதாவது மாலிக் இப்னு தீனார் என்ற தாபிஈயால் (மரணம்: ஹிஜ்ரி 130/748 கிபி) கேரளாவின் கசார்கோடு , கொடுங்காநல்லுர் பகுதியில் நிறுவப்பட்ட ஜும்மா பள்ளிகளை காணும் போது அது பெருந்திரலான மக்களுக்கு நிறுவப்பட்டிருப்பதை நாம் அறிய முடியும். ஆக மாலிக் இப்னு தீனார் வருவதற்கு முன்பாகவே கேரளாவில் இஸ்லாம் இவ்வளவு விரைவாக காலூண்ற காரணம் என்ன???

விமர்சனம் 4: லூனார் ரெயில் என்று அழைக்கப்படும் சந்திரனில் காணப்படும் பிளவுகள் குறித்த இன்றைய அறிவியலின் நிலைபாட்டை அடிப்படையாக கொண்ட விமர்சனம்.

நமது பதில்:

       இறைவனால் அன்றைய மக்களுக்காக நிகழ்த்தப்பட்ட ஓர் அற்புதம் நிலவு பிளந்த சம்பவம். அதன் சுவடுகள் இன்றிருக்கும் நிலவில் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை. நிலவு தொடர்ச்சியாக விண்கற்களினால் பாதிக்கப்படுகிறது. அதில் சுவடுகள் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதுதான் நிதர்சன உண்மை. இதில் லூனார் ரெயில்கள் குறித்த நாசாவின் கூற்று ஏற்று கொள்ளப்பட்டாலும் நாசா உள்ளிட்ட எந்த ஆய்வு நிறுவனமும் நிலவை முழுமையாக ஆராய்ந்து முடிக்கவில்லை. லூனார் ரெயில்கள் எதனால் தோன்றி இருக்கும் என்பதற்கு காரணங்கள் அனைத்தும் யூகங்களாகத்தான் உள்ளனவே ஒழிய ஆய்வுக்குட்படுத்தி உறுதிசெய்யப்பட்டவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.(7)(8)



Monday, February 27, 2017

"பெண் சிசுக்கொலை" - மதங்கள் என்ன சொல்கின்றன?

"பெண் சிசுக்கொலை" - மதங்கள் என்ன சொல்கின்றன?




 ஹிந்துயிசம் - ஹிந்து மத பிரமுகர்கள்  கண்டித்த போதிலும், மத/வேதங்கள் இது தொடர்பாக என்ன சொல்கின்றன என்ற விபரம் இல்லை. வேதங்களில் இது தொடர்பான விபரம் அறிந்தவர்கள்,  ஆதாரத்துடன் பதிவு செய்யுங்கள்.

இந்திய சட்டத்தில் தடை உள்ளது ஆனால் இந்த சட்டம் "ஹிந்து மத" சட்டம் அல்ல.


கிறித்துவத்திலும், யூத  மதத்திலும்  கண்டிக்கப்பட்டுள்ளது.


இஸ்லாத்திற்கு முன் அரேபியர்களிடத்தில் இந்த பழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. அதை இஸ்லாம் அடியோடு ஒழித்து, அதைக் கொலைக்குற்றமாக அறிவித்தது.


இது தொடர்பான திருக்குர்ஆன் வசனம்:

" என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும்போது" [81:8-9]


"வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்." [17:31]

மனித சட்டங்களால் மட்டும்  இவைகளை தடுத்து நிறுத்த முடியாது.

இஸ்லாம் எப்படி இதை அடியோடு ஒழித்தது என்று பார்ப்போம்.


பெண் குழந்தைகளைக் கொல்பவர்களின் முக்கியமான  காரணம் பொருளாதார சுமை மட்டுமே.அந்தக் கவலை தீர்க்கப்பட்டால் இவை அடியோடு ஒழிந்துவிடும்.



1. வறுமைக்கு பயந்து அவர்கைளக் கொல்லாதீர்கள் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம் என்ற உறுதிமொழியை இறைவன் அளிக்கின்றான். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவானது. எந்த நிலையிலும் உயிரை எடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.


2. மீறிச் செய்தால், இறைவனின் நீதிமன்றத்தில் நீங்கள் குற்றவாளியாக நிறுத்தப்படுவீர்கள். அப்போது "என்ன குற்றத்திற்காக  அவள் கொல்லப்பட்டாள் " என்று உங்களிடம் விசாரிக்கப்படும்.


ஒன்று பொருளாதார உத்திரவாதம் - இரண்டு குற்றத்திற்க்கான தண்டனை.  மன நல ரீதியான இந்த போதனை, 100%  சதவீத வெற்றியைக் கொடுத்தது.


Ref:http://www.bbc.co.uk/ethics/abortion/medical/infanticide_1.shtml

Tuesday, December 27, 2016

எதிர் தொடர் 23: பாதுகாக்கப்பட்ட திருக்குர்ஆன்

ஏகஇறைவனின் திருப்பெயரால்


      இந்த தொடரில் கட்டுரையாளர் குர்ஆன்பாதுகாக்கப்பட்டது குறித்து சில கேள்விகளை முன்வைத்துள்ளார். ஒவ்வோர் தொடரிலும் கட்டுரையாளரின் இஸ்லாம் குறித்த பார்வை மிசனரிகளின் வாந்திதான் என்பதை தோழுரித்து வருகிறோம். இவர் தன்னை நாத்திகராக காட்டி கொண்டாலும் இவரால் கூறப்படும் ஆதாரங்கள் யாவும் கிறித்தவ மிசனரிகளின் வளைத்தளங்களில் இருந்து பெறப்பட்டவைதான். அதே வரிசையில் இந்த கட்டுரையும் எதிர் கட்டுரையாளரால் முன்வைக்க பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இந்த தொடரில் குர் ஆன் குறித்த கட்டுரையாளரின் ஒவ்வொரு விமர்சனத்திற்கும் பதிலளிப்போம்.

வசன மாற்றம் அல்லது சட்ட மாற்றம் ஏன்?
 
நமது பதில்:
      வசனங்களை அல்லாஹ் மாற்றுவது என்பதற்கு நமது கட்டுரையாளர் முன் சொன்னது என்ன சொதப்பலா என்ற அறிவுப்பூர்வமான???? ஒரு கேள்வியை முன்வத்துள்ளார். அதற்கான விடையை அல்லாஹ் தெள்ளத்தெளிவாக தனது வேதத்தில் கூறிவிட்டான்.

وَإِذَا بَدَّلْنَا آيَةً مَكَانَ آيَةٍ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ قَالُوا إِنَّمَا أَنْتَ مُفْتَرٍ بَلْ أَكْثَرُهُمْ لا يَعْلَمُونَ (١٠١) قُلْ نَزَّلَهُ رُوحُ الْقُدُسِ مِنْ رَبِّكَ بِالْحَقِّ لِيُثَبِّتَ الَّذِينَ آمَنُوا وَهُدًى وَبُشْرَى لِلْمُسْلِمِينَ (١٠٢)

ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை நாம் மாற்றினால் "நீர் இட்டுக்கட்டுபவர்'' எனக் கூறுகின்றனர். எதை அருள வேண்டும் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவன். மாறாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள். நம்பிக்கையாளர்களைப் பலப்படுத்திடவும், முஸ்லிம்களுக்கு நேர்வழியாகவும், நற்செய்தியாகவும் இதை உமது இறைவனிடமிருந்து "ரூஹுல் குதுஸ்' உண்மையுடன் இறக்கினார்' என்பதை (முஹம்மதே!) கூறுவீராக!  (அல் குர்ஆன் 16:101,102)
மேற்கூறிய காரணம்தான் பிர் மவூனா சம்பவத்தின் போது வசனங்களை இறக்கியதற்கும் அதை நீக்கியதற்கும் காரணம் என்பது பின்வரும் செய்தியே போதுமானது:

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

   பிஃரு மஊனாவில் தம் தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி(ஸல்) அவர்கள் முப்பது நாள் காலை(த் தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ்வுக்கம் அவனுடைய தூதருக்கம் மாறு செய்த உஸய்யா, ரிஅல், தக்வான், (பனூ) லிஹ்யான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.

அனஸ்(ரலி) கூறினார்:

      எனவே, இறைவன் தன்னுடைய தூதர்(ஸல்) அவர்களுக்கு பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்களின் விஷயத்தில் குர்ஆன் வசனம் ஒன்றை அருளினான். அதை நாங்கள் ஓதிவந்தோம். பின்னர் (இறைவனால் அந்த வசனம்) நீக்கப்பட்டுவிட்டது.

(அந்த வசனம் இதுதான்:) 'நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்து விட்டோம். அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான். நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தியடைந்தோம்' என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்.
                                                   நூல் : புஹாரி 4095
  


      மேற்குறிபிட்ட சம்பவத்தை குறிப்பிட்டு கட்டுரையாளர் விமர்சித்துள்ளார். பிஃர் மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் அவர்களது சமுதாயத்திற்கு அல்லாஹ்விடம் அறிவிக்க வேண்டியதை அவர்கள் சமுதாயத்திற்கு அறிவித்துவிட்டான். அவர்களது சமுகத்தாருக்கு பயம் நீங்கிவிட்ட்து அல்லது அவர்கள் சமுதாயத்தாரின் கவலை நீங்கிவிட்டது. பிறகு அந்த வசனத்தின் தேவை இல்லாமல் போனதும் அல்லாஹ் அதை நீக்கிவிட்டான். அந்த வசனத்தை படிக்கும் யாருக்கும் இந்த விஷயம் புரியும். ஏனோ நடுநிலை நாத்திகன் என்று கூறும் கட்டுரையாளருக்கு இது தோன்றவில்லை.  


நபி(சல்) அவர்கள் காலத்தில் குர்ஆனுக்கு இறுதி வடிவம் வழங்கப்பட வில்லையா?
நமது பதில்:
            நபி(சல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆனுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படவில்லை என்ற கருத்தை தனது விமர்சனத்தில் முன்வைத்துள்ளார். நாம் சிறிது ஆய்வு செய்தோமென்றால் குர்ஆனை நபி(சல்) அவர்கள் எந்த வடிவில் விட்டு சென்றார்ளோ அதே வடிவத்தில்தான் இன்றும் பயன்பாட்டில் உள்ளது என்பதைதான் காட்டும். அதற்கான வரலாற்று செய்திகளை வரிசைபடுத்தினால் கட்டுரையாளரின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைத்துவிடும்.
நபி (சல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆன் முழுமையாக்கப்பட்டதா?
      முதலில் குர்ஆன் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது அல்லது பாதுக்காக்கப்படும் என்பதை அல்லாஹ் முன்பே அறிவித்துவிடுகிறான். அதன் அடிப்படையில்தான் இன்று வரை பாதுகாக்கப்படுகிறது. அல்லாஹ் தான் எவ்வாறு குர்ஆனை பாதுகாக்கவுள்ளேன் என்பதை பின்வருமாறு கூறுகிறான்:
بَلْ هُوَ آيَاتٌ بَيِّنَاتٌ فِي صُدُورِ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلا الظَّالِمُونَ (٤٩)

     மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப்பட்டோரின் உள்ளங்களில் இருக்கின்றன. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 29:49)

மேலும் நபி(சல்) அவர்கள் அல்லாஹ் கூறுவதாக பின்வருமாறு கூறுகிறார்கள்:
وَقَالَ إِنَّمَا بَعَثْتُكَ لأَبْتَلِيَكَ وَأَبْتَلِيَ بِكَ وَأَنْزَلْتُ عَلَيْكَ كِتَابًا لاَ يَغْسِلُهُ الْمَاءُ تَقْرَؤُهُ نَائِمًا وَيَقْظَانَ

இயாள் பின் ஹிமார் அல்முஜாஷிஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள்:
.................மேலும் (என்னிடம்) இறைவன், நான் உம்மைச் சோதிப்பதற்கும் உம்மைக் கொண்டு (பிறரைச்) சோதிப்பதற்குமே உம்மை நான் அனுப்பினேன். நீரில் அழிந்துபோய்விடாத வேதத்தையும் உமக்கு நான் அருளினேன். அதை உறங்கும்போதும் விழித்திருக்கும் நிலையிலும் நீர் ஓதுகின்றீர்" என்று கூறினான்.
                                                நூல்: முஸ்லிம் 5498
      அதாவது நீரினால் அழிக்க முடியாத , மனனமிட எளிமையான வகையிலும் அமைந்த வேதத்தை தான் வழங்கியதாக அல்லாஹ் கூறுவதாக நபி(சல்) அவர்கள் கூறுகிறார்கள்.
     மனதில்தான் குர்ஆன் பாதுகாக்கப்பட்டது. மேலும் இவ்வாறு வழங்கப்பட்ட வசனங்களை நபிதோழர்கள் மனனம் செய்தே பாதுகாத்தும் வந்தனர்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ أَبِيهِ، جُبَيْرِ بْنِ نُفَيْرٍ عَنْ أَبِي الدَّرْدَاءِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَشَخَصَ بِبَصَرِهِ إِلَى السَّمَاءِ ثُمَّ قَالَ " هَذَا أَوَانٌ يُخْتَلَسُ الْعِلْمُ مِنَ النَّاسِ حَتَّى لاَ يَقْدِرُوا مِنْهُ عَلَى شَيْءٍ " . فَقَالَ زِيَادُ بْنُ لَبِيدٍ الأَنْصَارِيُّ كَيْفَ يُخْتَلَسُ مِنَّا وَقَدْ قَرَأْنَا الْقُرْآنَ فَوَاللَّهِ لَنَقْرَأَنَّهُ وَلَنُقْرِئَنَّهُ نِسَاءَنَا وَأَبْنَاءَنَا .........

ஜுபைர் பின் நுஃபைர் அவரகள் அபூ தர்தா(ரலி) கூறியதாக அறிவித்ததாவது:
      நாங்கள் நபி(சல்) அவர்களுடன் இருந்த போது வானத்தை நோக்கி பார்த்தவர்களாக “மக்களிடம் இருந்து கல்வி முற்றிலுமாக மக்களிடம் எதுவுமே இல்லை எனும் அளவிற்கு அகற்றப்படும் என்று கூறினார்கள். அதற்கு ஜியாத் பின் லபீத்(ரலி) அவர்கள் நாங்கள் குர்ஆனை மனனமிட்டு ஓதிவருகிறோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக நாங்கள் ஓதுவோம், எங்கள் பெண்களும் குழந்தைகளும்  ஓதுவார்கள். இந்நிலையில் எப்படி அது எங்களிடம் இருந்து அகற்றப்படும் என்று கேட்டார்கள்........  
                                                   நூல்:  திர்மிதி 2653

இப்படி குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த நபிதோழர்களில் சிலர்:
      இப்னு மஸூத்(ரலி), அபூ அய்யூப்(ரலி), அபூபக்கர்(ரலி), அபூ தர்தா(ரலி), அபூ ஜைது(ரலி), அபூ மூஸா அல் அஸ்அரி(ரலி), அபூ ஹூரைரா(ரலி), உபை பின் காஹ்ப்(ரலி), உம்மு சலாமா(ரலி), தமிமுத் தாரி(ரலி), ஹுதைஃபா(ரலி), ஹஃப்ஸா(ரலி), ஸைது பின் தாபித்(ரலி),சஃத் பின் உபாதா(ரலி), உபைத் அல் காரி(ரலி), சஃத் பின் முந்தீர்(ரலி), சிஹாப் அல் குரைஷி(ரலி), தல்ஹா(ரலி), ஆயிஷா(ரலி), உபாதா பின் அஸ்ஸாமித்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அப்துல்லாஹ் பின் உமர்(ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி), உத்மான் பின் அஃப்பான் (ரலி), உக்பா பின் அமீர்(ரலி), அலி பின் அபிதாலிப்(ரலி), உமர் பின் அல்கத்தாப்(ரலி), அம்ர் அல் ஆஸ்(ரலி), முஃஆது பின் ஜபல்(ரலி),…………….

      குர்ஆனின் அமைப்பும் அந்த வகையிலேயேதான் அமைந்துள்ளது. அதாவது மனனம் செய்ய எதுவாகவும், செவி வழியில் மனனமிடுவது எதுவாகவும் அதன் மொழியியல் அமைப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக அல்லாஹ் கூறுவது போல இன்றுவரை மூலப்பிரதியாக இருப்பது குர்ஆனை மனனமிட்டவரின் உள்ளம்தான்.

சூராக்களின் வடிவம் நபி(சல்) அவர்கள் காலத்திலேயே முடிந்தது:
      மனனமிட்டு பாதுகாத்தல் என்பது மட்டும் அல்லாமல் எழுத்து வடிவிலும் குர்ஆனை பாதுகாக்க நபி(சல்) அவர்கள் ஏற்பாடுகளை செய்தார்கள்
      நபி(சல்) அவர்கள் காலத்திலேயே நபி(சல்) அவர்களின் மேற்பார்வையில் குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் சூராக்களின் வடிவம் முழுமையடைந்துவிட்டது. அதாவது எந்த எந்த சூராவில் எந்த எந்த வசனங்கள் இடம்பெற வேண்டும் என்பது நபி(சல்) அவர்கள் காலத்திலேயே நபி(சல்) அவர்களால் நிர்ணயிக்கப்பட்டது.

பராஉ(ரலி) அறிவித்தார்
         'இறைநம்பிக்கையாளர்களில் அறப்போரில் கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டவர்களும், தம் உயிராலும் பொருளாலும் இறைவழியில் அறப்போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள்' எனும் (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனம் அருளப்பட்டபோது, நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்) 'ஸைதை அழைத்து வாருங்கள். அவர் தம்முடன் 'பலகை, மைக்கூடு, அகலமான எலும்பு அல்லது 'அகலமான எலும்பு, மைக்கூடு' ஆகியவற்றை எடுத்துவரட்டும்' என்று கூறினார்கள். (ஸைத் இப்னு ஸாபித்(ரலி) வந்தபோது,) 'இந்த (திருக்குர்ஆன் 04:95 வது) இறைவசனத்தை எழுதிக்கொள்ளுங்கள்!' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் முதுகுக்குப் பின்னால், கண் பார்வையற்றவரான அம்ர் பன் உம்மி மக்த்தூம்(ரலி) இருந்தார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எனக்கு என்ன உத்தரவிடுகிறீர்கள். நானோ, கண்பார்வையற்ற மனிதனாயிற்றே!' என்று கேட்டார்கள். உடனடியாக அதே இடத்தில் 'இடையூறு உள்ளவர்கள் தவிர' எனும் (இணைப்புடன்) இவ்வசனம் (முழுமையாக) இறங்கிற்று.
                                                    நூல்: புஹாரி 4990
      இவ்வாறு வசனங்கள் இறங்க இறங்க குர்ஆனை மனனமிட்டது அல்லாமல் எழுத்து வடிவிலும் பாதுகாக்கப்பட்ட்து. மேலும் ஒவ்வோர் சூராவிலும் வசனங்கள் எவ்வாறு இடம் பெறவேண்டும் என்பதையும் எழுத்து பிரதிகளில் பதிய ஆணையிட்டார்கள்:

                حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، وَابْنُ أَبِي عَدِيٍّ، وَسَهْلُ بْنُ يُوسُفَ، قَالُوا حَدَّثَنَا عَوْفُ بْنُ أَبِي جَمِيلَةَ، حَدَّثَنَا يَزِيدُ الْفَارِسِيُّ، حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ، قَالَ قُلْتُ لِعُثْمَانَ بْنِ عَفَّانَ مَا حَمَلَكُمْ أَنْ عَمَدْتُمْ، إِلَى الأَنْفَالِ وَهِيَ مِنَ الْمَثَانِي وَإِلَى بَرَاءَةَ وَهِيَ مِنَ الْمِئِينَ فَقَرَنْتُمْ بَيْنَهُمَا وَلَمْ تَكْتُبُوا بَيْنَهُمَا سَطْرَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَوَضَعْتُمُوهُمَا فِي السَّبْعِ الطُّوَلِ مَا حَمَلَكُمْ عَلَى ذَلِكَ فَقَالَ عُثْمَانُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِمَّا يَأْتِي عَلَيْهِ الزَّمَانُ وَهُوَ تَنْزِلُ عَلَيْهِ السُّوَرُ ذَوَاتُ الْعَدَدِ فَكَانَ إِذَا نَزَلَ عَلَيْهِ الشَّىْءُ دَعَا بَعْضَ مَنْ كَانَ يَكْتُبُ فَيَقُولُ ضَعُوا هَؤُلاَءِ الآيَاتِ فِي السُّورَةِ الَّتِي يُذْكَرُ فِيهَا كَذَا وَكَذَا وَإِذَا نَزَلَتْ عَلَيْهِ الآيَةُ فَيَقُولُ ضَعُوا هَذِهِ الآيَةَ فِي السُّورَةِ الَّتِي يُذْكَرُ فِيهَا كَذَا وَكَذَا ……..

இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாவது:
            நான் உஸ்மான் பின் அஃபானிடம் “ அல் அன்ஃபால் நூறுக்கு குறைவான வசனங்களை கொண்டிருக்க, அது குறித்து உங்களது கருத்து என்ன ?, அல் பராஹ் அல்லது அத் தவ்பா நூறு வசனங்களுக்கு மேல் கொண்டிருக்க, அது குறித்து உங்களது கருத்து என்ன?” என்று கேட்டேன். மேலும் “நீங்கள் ஏன் அவ்விரணடையும் ஒன்றாக பதிவிட்டு ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதை எழுதாமல் விட்டீர்கள்” என்றும் கேட்டேன். அதற்கு உஸ்மான் அவர்கள் “ நபி(சல்) அவர்களுக்கு இறை அறிவிப்பு ஏதுமின்றி பல நாட்கள் சென்றிருக்கும், பிறகு சில நேரங்களில் அதிகமானவை இறங்கும். ஆக ஏதனும் இறைவனிடம் இருந்து அறிவிக்கப்பட்டால், எழுத்தர்களை அழைப்பார்கள். மேலும் கூறுவார்கள் இந்த இந்த இடத்தில் இன்ன இன்ன வசனங்கள் இடம்பெறும் சூராவில் இந்த வசனத்தை எழுதுங்கள் என்று கட்டளையிடுவார்கள் ........( நூல்: திர்மிதி 3086)

      இப்படி ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் நபி(சல்) அவர்கள் எந்த சூரவில் அதை பதிவிட வேண்டும் என்பதையும் சேர்த்து கூறுவார்கள். மேலும் சந்தர்ப்பங்கள் அமையும் போது குர் ஆன் அத்தியாயங்களை மொத்தமாக ஓதியும் காட்டுவார்கள். 

      ஹாரிஸா பின் நுஅமான் (ரலி) அவர்களின் புதல்வியார் உம்மு ஹிஷாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஓராண்டு அல்லது ஓராண்டும் சில மாதங்களும் ஒரே அடுப்பையே பயன்படுத்திவந்தோம். நான் "காஃப். வல்குர்ஆனில் மஜீத்" எனும் (50ஆவது) அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நாவிலிருந்தே மனனமிட்டேன். அவர்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி மக்களுக்கு உரையாற்றும் போது அந்த அத்தியாயத்தை ஓதுவார்கள். (முஸ்லிம் 1582.)
      இப்படியாக ஒவ்வொரு அத்தியாயத்தின் அமைப்பும் நபி(சல்) அவர்கள் காலத்திலேயே சரிபார்க்கப்பட்டு மக்களின் உள்ளங்களில் பாதுகாக்கப்பட்டது. மேலும் ஒவ்வோர் தொழுகையிலும் அத்தியாயங்கள் ஓதப்பட்டு சரியான அமைவு சரிபார்க்கப்பட்டது. தொழுகையும் மக்களின் மனதில் குர் ஆனை நிலை நிறுத்துவதில் பெரும் பங்காற்றியது. மேலும் நபி(சல்) அவர்கள் காலத்தில் ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் அதுவரை இறங்கிய குர்ஆனை நபி(சல்) அவர்களுக்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் மூலமாக தொகுத்து வழங்கப்பட்டது. நபி(சல்) அவர்கள் இறந்த வருடத்தில் இரண்டு முறை இந்த நிகழ்வு நடந்ததாக ஹதீஸ்கள் கூறுகின்றன.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்:
      ஒவ்வோர் ஆண்டுக்கொரு முறை (வானவர் ஜிப்ரீல் அதுவரை அருளப்பெற்ற) குர்ஆன் வசனங்களை நபி(ஸல்) அவர்களுக்கு (மொத்தமாக) ஓதிக்காட்டுவது வழக்கம். நபி(ஸல்) அவர்கள் இறந்த ஆண்டில் இரண்டுமுறை அவர்களுக்கு (ஜிப்ரீல்) ஓதிக்காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வோர் ஆண்டும் (ரமளான் மாதத்தின் இறுதிப்)பத்து நாள்கள் 'இஃதிகாஃப்' மேற்கொள்வது வழக்கம். அவர்கள் இறந்த ஆண்டு, (ரமளானில்) இருபது நாள்கள் 'இஃதிகாஃப்' மேற்கொண்டார்கள். (புஹாரி 4998)

    இப்படியாக சரிபார்க்கபட்ட குர் ஆன் தான் நபி(சல்) அவர்கள் மறைவிற்குப் பிறகு நபிதோழர்களிடம் இருந்தது.

அப்துல் அஸீஸ் இப்னு ருஃபைஉ(ரஹ்) கூறினார்
      நானும் ஷத்தாத் இப்னு மஅகில்(ரஹ்) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஷத்தாத்(ரஹ்), 'நபி(ஸல்) அவர்கள் (உலகைப் பிரிந்தபோது, இந்தக் குர்ஆனில் இடம் பெறாத) வேறு (இறைவசனங்கள்) எதையும் (நம்மிடையே)விட்டுச் சென்றார்களா?' என்று கேட்டார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), '(இந்தக் குர்ஆனின்) இரண்டு அட்டைகளுக்கிடையேயுள்ள வசனங்களைத் தான் (இறைவேதமாக) நபி(ஸல்) அவர்கள்விட்டுச் சென்றார்கள்' என்று பதிலளித்தார்கள்.

      நாங்கள் (அலீ(ரலி) அவர்களின் புதல்வரான) முஹம்மத் இப்னு ஹனஃபிய்யா(ரஹ்) அவர்களிடம் சென்று, இது குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள் (இப்னு அப்பாஸ்(ரலி) பதிலளித்தது போன்றே) '(இந்தக் குர்ஆனின்) இரண்டு அட்டைகளுக்கிடையேயுள்ள வசனங்களைத்தான் (இறைவேதமாக) நபி(ஸல்) அவர்கள்விட்டுச் சென்றார்கள்' என்று பதிலளித்தார்கள்.( புஹாரி 5019)

அபூபக்ர்(ரலி) செய்தது என்ன?
 (வேத அறிவிப்பை எழுதுவோரில் ஒருவராக இருந்த) ஸைத் இப்னு ஸாபித் அல் அன்சாரி(ரலி) கூறினார்
.........எனவே, நீங்கள் குர்ஆனைத் தேடிக் கண்டுபிடித்து (ஒரே பிரதியில்) ஒன்று திரட்டுங்கள்' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! மலைகளில் ஒன்றை நகர்த்த வேண்டுமென எனக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தாலும் கூட அது எனக்குப் பளுவாக இருந்திருக்காது. குர்ஆனை ஒன்றுதிரட்டும்படி எனக்கு அவர்கள் கட்டளையிட்டது அதைவிட எனக்குப் பளுவாக இருந்தது. நான், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! இது நன்மை(யான பணி) தான்' என்று பதிலளித்தார்கள். இதையே அன்னார் என்னிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள். முடிவில் எதற்காக அபூ பக்ர் மற்றும் உமர் ஆகியோரின் மனத்தை அல்லாஹ் விரிவாக்கினானோ அதற்காக என் மனத்தையும் அல்லாஹ் விரிவாக்கினான். (குர்ஆனை ஒன்றுதிரட்ட முன் வந்தேன்.) எனவே, (மக்களின் கரங்களிலிருந்த) குர்ஆன் (சுவடிகளைத்) தேடினேன். அவற்றை போPச்ச மட்டைகள், ஓடுகள் மற்றும் (குர்ஆனை மனனம் செய்திருந்த) மனிதர்களின் நெஞ்சுகளிலிருந்து திரட்டினேன். (இவ்வாறு திரட்டியபோது) 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயத்தின் கடைசி (இரு) வசனங்களை அபூ குஸைமா அல் அன்சாரி(ரலி) அவர்களிடமிருந்து பெற்றேன்; அவரல்லாத வேறெவரிடமிருந்தும் இதனை நான் பெறவில்லை. (அவை:) 'உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பத்திற்குள்ளாவது அவருக்குக் சிரமமாக இருக்கிறது. மேலும், உங்கள் (வெற்றியின்) விஷயத்தில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்களின் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கிறார். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கிறேன். மேலும், அவன் மகத்தான அரியாசனத்தின் அதிபதியாயிருக்கிறான்.' (திருக்குர்ஆன் 09:128, 129)
      (என் வாயிலாக) திரட்டித் தொகுக்கப்பட்ட குர்ஆன் பிரதிகள் (கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும் வரை இருந்(து வந்)தது. பின்னர் (கலீஃபாவான) உமர்(ரலி) அவர்களிடம் அவர்களின் வாழ்நாளில் இருந்தது. (அவர்களின் இறப்பிற்குப்) பிறகு உமர்(ரலி) அவர்களின் புதல்வி ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்தது. (புஹாரி 4986).
      மேலே கூறப்பட்ட செய்தியையும் முன் சென்ற தலைப்பிகளிலும் உள்ள செய்திகளையும் வாசிப்பவர் எளிதாக ஒரு விஷயத்தை அறிந்து கொள்ளமுடியும். நபி(சல்) அவர்களது காலத்தில் துண்டு துண்டாக எழுதப்பட்ட குர்ஆனின் ஏடுகள் மொத்த குர்ஆனையும் கொண்ட மூலப்பிரதியான உள்ளத்தோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுமையாக ஓரே புத்தகமாக மாற்றப்பட்டது என்பதுதான். அதனால்தான் மேற்குறிபிட்ட செய்தியில் ‘தொகுக்கப்பட்ட குர்ஆன்என்று பொருள்படும். جَمْعِ الْقُرْآنِ என்ற பதமே பயன்படுத்தப்படுகிறது. 
 
உஸ்மான்(ரலி) செய்தது என்ன?

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்
            ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். 9 ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 10 எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது சூபால் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள்.
      எனவே, ஹஃப்ஸா(ரலி) தம்மிடமிருந்த குர்ஆன் பதிவை உஸ்மான்(ரலி) அவர்களிடம் கொடுத்தனுப்பினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), ஸயீத் இப்னு ஆஸ்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம்(ரலி) ஆகியோரிடம் அவற்றைப் பல பிரதிகளில் படியெடுக்கும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். மேலும், உஸ்மான்(ரலி) (அந்த நால்வரில்) குறையுக் குழுவினரான மூவரை நோக்கி, 'நீங்களும் (அன்சாரியான) ஸைத் இப்னு ஸாபித் அவர்களும் குர்ஆனில் ஏதேனும் ஒரு (எழுத்திலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறையுயரின் (வட்டார) மொழிவழககுப்படியே பதிவு செய்யுங்கள். ஏனெனில், குர்ஆன் குறையுயரின் மொழிவழக்குப்படியே இறங்கிற்று' என்று கூறினார்கள். அந்த நால்வரும் அவ்வாறே செயல்பட்டார்கள். (ஹஃப்ஸா(ரலி) அவர்களிடமிருந்த) அந்தக் குர்ஆன் பதிவை பல பிரதிகளில் படியெடுத்தார்கள். பிறகு உஸ்மான்(ரலி) அந்தப் பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். பிறகு அவர்கள் படியெடுத்த பிரதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பகுதிக்கு அனுப்பிவைத்தார்கள். இதுவல்லாமல் (புழக்கத்திலிருந்த) இதர பிரதிகளை, அல்லது ஏடுகளை எரித்து விடும்படி உஸ்மான்(ரலி) உத்தரவிட்டார்கள். (புஹாரி 4987.)
     
     இஸ்லாம் பல பகுதிகளில் பரவலான பிறகு குர் ஆனை மனனமிட்டவர்களின் எண்ணிக்கை குர்ஆனை பரவலாக்கவும், குழப்பத்தை தவிர்க்கவ்ய்ம் போதியதாக இல்லை. ஆக தொகுக்கப்பட்டு இருந்த ஒற்றை பிரதியை பரவலாக்குவதன் மூலம், சிறு பகுதிகளை கைகளில் வைத்துக்கொண்டு இது குர்ஆன் என்று கூறி குழப்பம் ஏற்படுவதை தடுக்க வழிசெய்தார்கள் உஸ்மான் (ரலி). அதனால் தான் ஏனைய பிரதிகள் அழிக்கப்பட்டது.

ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்
      நாங்கள் (உஸ்மான்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) குர்ஆனுக்குப் பிததிகள் எடுத்தபோது 'அல்அஹ்ஸாப்' எனும் (33 வது) அத்தியாயத்தில் ஒரு வசனம் காணவில்லை. அதனை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓத நான் கேட்டிருந்தேன். அதை நாங்கள் தேடியபோது அது குஸைமா இப்னு ஸாபித் அல்அன்சாரி(ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டோம். (அந்த வசனம் இதுதான்:) 'அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை மெயப்படுத்திவிட்டவர்களும் இறைநம்பிக்கையாளர்களில் உள்ளனர். அவர்களில் சிலர் (இறை வழியில் உயிரை அர்ப்பணிக்க வேண்டுமென்ற) தம் இலட்சியத்தை நிறைவேற்றிவிட்டார்கள். அவர்களில் சிலர் (அதை நிறைவேற்ற தக்க தருணம்) எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர். (திருக்குர்ஆன் 33:23)
       உடனே நாங்கள் அ(ந்த வசனத்)தை குர்ஆன் பிரதியில் அதற்குரிய அத்தியாயத்தில் இணைத்துவிட்டோம். (புகாரி 4988)


      மேற்குறிபிட்ட செய்தி ஸைத் பின் சாபித்(ரலி) எப்படி குர்ஆன் பிரதியை ஒப்பிட்டார்கள் என்பதை அறிய முடிகிறது. அதாவது உள்ளத்தில் இருந்த அந்த மூல பிரதியோடுதான் எழுத்துப்பிரதிகளை ஒப்பிட்டார்கள் எனபதை தெளிவாக மேற்குறிப்பிட்ட செய்தி கூறுகிறது. அதனால்தான் இது குறித்து வில்லியம் கிரகாம் என்ற ஹார்வர்ட் பல்கலை ஆசிரியர் குறிபிடும் போது பின்வருமாறு கூறுகிறார்,
ஒரு ஆங்கில அரபியே ஆய்வாளர் முன்பே குறிபிட்டது "குர் ஆனின் முதலில் இருந்து கடைசி வரை கேட்கப்படவேண்டிய புத்தகமே அன்றி வாசிக்கப்பட வேண்டிய புத்தகம் அல்ல. இஸ்லாமிய வரலாற்றின் 13 நூற்றாண்டுகளாய் எண்ணிலடங்கா மில்லியன் இஸ்லாமியர்களுக்கு அல் கிதாப் கற்கப்பட்டு, ஓதப்பட்டு பல தடவை ஓதல்களால் மணனமிடப்பட்டு வாய்வழியாக கடத்தப்பட்டிருக்கிறது (P.No: 79-80, Beyond the Written Word: Oral Aspects of the Scriptures in History of Religion by William A.Graham )


    மேற்குறிபிட்ட அறிஞரின் கூற்றே அறிவுள்ள மனிதனுக்கு போதுமானது எப்படி அல்லாஹ்வின் தீர்க்கதரிசனம் மெய்படுத்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள. 

எழுத்து வடிவிலான பாதுகாப்பு:

      இந்த பகுதிதான் கிறித்தவ மிசனரிகளுக்கு மிகவும் பிடித்த விமர்சன பகுதி. ஏனென்றால் அவர்களது வேதத்தின் மூலங்கள் வெறும் பிரதிகளை நம்பி இருப்பதால் அவர்கள் இந்த கோணத்திலான விமர்சனத்தையே பெரிதும் முன்வைப்பார்கள். ஆனால் இவர்கள் இவர்களது ஏடுகளின் வரலாறு குறித்து அறியாததுதான் இத்தகைய அறிவீனமான விமர்சனத்திற்கான காரணம்.
         அதாவது எழுத்து பூர்வமாக குர் ஆன் பாதுகாக்கப்பட வில்லை என்பது இன்றிருக்கும் மிசனரிகளின் வாதமாக இருக்கிறது. இது குறித்து நாம் விளங்கும் முன்னர் இன்று சுருள்களின் காலத்தை நிர்ணயம் செய்யும் Radiocarbon Dating குறித்து நாம் கொஞ்சம் அறிந்து கொள்ள வேண்டும். அதாவது இவ்வாறு Radiocarbon Dating தரும் தகவல் குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் அதன் துல்லியத்தின் அளவு குறித்த விபரங்களை நாம் அறிந்து கொள்வது இந்த கட்டுரையை விளங்க ஏதுவானதாக இருக்கும்.

       இப்போது குர் ஆன் மூல எழுத்துப்பிரதி குறித்த தகவலை பார்ப்போம். இது பிரிமிங்காம் சுருள் குறித்த தகவல் இதோ. 
95.4% confidence to the calendar years CE 568–645 when calibrated
   இதை பின்வருமாறு புரிந்து கொள்ள வேண்டும். 

1. 1950ல் இந்த சுருள் ஆய்வுகுட்படுத்தப்படுகிறது அதன் உத்தேசமாக 1343 ஆண்டுகள் பழமையானது அதுவும் 95.4% அதை உறுதியாக கூறலாம் என்றால் அதன் ஆண்டுகள் +/- 61 இருக்கும் என்று பொருள் கொண்டால். ஆக இந்த சுருள் குறிபிடபட்ட ஆண்டில் இருந்து முன்ன பின்ன 61 ஆண்டுகள் இருக்கலாம் என்று பொருள். அப்படி பார்க்கையில் இந்த சுருள் நபி(சல்) அவர்களது தோழர்களின் காலத்தினது என்பது அறிந்து கொள்ளலாம்.இதனால்தான் குர் ஆன் சுருள்கள் குறித்து ஆய்வு செய்த அறிஞ்சரான புஇன் 100-200 வருடங்கள் மார்ஜினல் குறை ஏற்படும் என்று கூறுகிறார்.

2.அடுத்ததாக இந்த சுருள்களில் மேல் எழுத்து கீழ் எழுத்து உள்ளது என்று கூறுகின்றனர். 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு இன்று போல் எழுது உபகரணமான தோல் சுருள்கள் மலிந்த காலம் அல்ல. ஆக அவற்றை மறுபயன்பாடு செய்வது என்பதும், முன்பே பதியப்பட்ட ஆவணங்களில் அரிப்பு, சேதம் ஏற்படும் போது இதை செய்வார்கள். மேலும் இன்றிருக்கும் அறிவியல் முறைப்படி மைய்யின் வயதை எழுத்தை சிதைக்காமல் அறியும் முறைகள் ஏதும் நம்பகமாக இல்லாததால் அதை அறிய முடியாது.

        1முதல் 2 நூற்றாண்டு ஹிஜ்ரியை சார்ந்த ஏடுகளின் பட்டியலையும் அவை எந்தளவுக்கு இன்றிருக்கு குர் ஆனின் சூராக்களை கொண்டிருக்கிறது என்பதையும் சுருக்கமாக இனி காண்போம்.பின்வரும் பட்டியல் 1-2 நூற்றாண்டு எழுத்துப்பிரதிகள் சில எங்கு இருக்கிறது என்பதை கூறுகிறது.

தூனிஷியாவின் சுருள்கள்:
1) Ms. R 38,Ms. R 119
2) Ms. P 511
ஏமனின் சுருள்கள்:
1.DAM 01-28.1
2.DAM 01-18.3,
3.DAM 01-30.1
4.DAM 01-32.1,
5.DAM 01-29.2
6.DAM 01-32.2
துருக்கியின் டாப்காப்பி மூயூசியத்தில் இருக்கும் சுருள்கள்:
1.Topkapı Sarayı Medina 1a / TSM M1,
2.TIEM Env. 51, 53, Ms. 678,Sam Fogg IAGIC,Ghali Adi Fragment (ஒரே சுருள்),
3.TIEM ŞE 80,
4.TIEM ŞE 85,
5.TIEM ŞE 89,
6.TIEM ŞE 358,
7.TIEM ŞE 364,
8.TIEM ŞE 709
9.TIEM ŞE 12995.
இங்கு மேலும் பல உமையாக்கள் கால சுருள்களும் இருக்கின்றது.
ஆஸ்டிரியாவின் சுருள்கள்
1.A. Perg. 186,
2.A. Perg 202,
3.Mixt. 917
அமெரிக்காவின் சுருள்கள்
1.AL-17, `Ayn 444(ஒரே சுருள்),
2.1-85-154.101
3.P. Garrett Coll. 1139
எகிப்தின் சுருள்கள்
1.Arabic Palaeography Plates 39-40
2.Mss. Arab 21-25
3.Arabe 330d
4.KFQ42
5.KFQ62
பிரிட்டனின் சுருள்கள்
1.BL Add. 11737/1
2.மேலும் பல சுருள்கள் Nasser D. Khalili Collection of Islamic Artல் இருந்து
பிராண்ஸ் சுருள்கள்
1.Arabe 330a + Ms. 66(ஓரே சுருள்)
அயர்லாந்து சுருள்கள் 
1.Is. 1404
2.Arabic Palaeography Plates 19-30
ரஸ்யாவின் நேசனல் நூலகம்
1.Codex Amrensis 1
சோத்பேயில் ஏலம் விடப்பட்ட சுருள்கள்
1. 15 அக் 1984 அன்று ஏலம் விடப்பட்ட Lot 206
2. 22மே 1986, அன்று ஏலம் விடப்பட்ட Lot 269
3. 30 ஏப்ரல் 1992, அன்று ஏலம் விடப்பட்ட Lots 318 & 319
4. 28 ஏப்ரல் 1993, அன்று ஏலம் விடப்பட்ட Lot 73
5. 22அக் 1993, அன்று ஏலம் விடப்பட்ட Lot 11, 15, 28 & 29
6. 19அக்1994, அன்று ஏலம் விடப்பட்ட Lot 16
7. 24th April 1996, அன்று ஏலம் விடப்பட்ட Lot 1
8. 16அக் 1996, அன்று ஏலம் விடப்பட்ட Lot 1
9. 5அக்1997, அன்று ஏலம் விடப்பட்ட Lot 12
10.13ஏப்ரல் 2000, அன்று ஏலம் விடப்பட்ட Lot 1,
11. 3மே 2001, அன்று ஏலம் விடப்பட்ட Lot 8
12. 5அக் 2011, அன்று ஏலம் விடப்பட்ட Lot 47
13. 3அக் 2012, அன்று ஏலம் விடப்பட்ட Lot 11 

       மேலே குறிபிடபட்ட சுருள்களின் பெயரை கூகுளில் தேடிப்பார்க்க் ஏதுவாக இருக்க அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும் டாப்காப்பின் சுருள், பெர்லினில் இருக்கும் சுருள், பிரிமிங்காம் சுருள்கள், சமர்கண்ட் சுருள்கள் , சனா சுருள்கள் என்று பலவற்றிலும் ஹிஜ்ரி 1-2ம் நூற்றாண்டின் சுருள்கள் உள்ளன.

    ஆக இப்படி கிடைத்திருக்கும் முதல்-இரண்டாம் ஹிஜ்ரிக்குள் ஆன சுருள்கள் பல ஏலத்தில் விடப்பட்டும் விற்கப்பட்டும் உள்ளது. இவ்வாறு இந்த தோல் சுருள்கள் பல மூயூசியத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இந்த சுருள்கள் எந்த அளவிற்கு இன்றிருக்கும் குர்ஆன் உடன் ஒத்திருக்கிறது என்பது இங்கு  பட்டியலிடப்பட்டுள்ளது. (1)

     அதாவது தோல் சுருள்களில் இருப்பவையும் , சில தட்டுகளில் பதிவு செய்யப்பட்டவை மட்டுமே மேலே குறிபிட்ட பட்டியலில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது இது வல்லாத கல்வெட்டுக்கள், நாணயங்கள் மற்றும் ஜெருசலேம் பள்ளி மினாராவில் இருக்கும் குர் ஆன் வசனங்கள் என்று அனைத்து எழுத்து ஏடுகளையும் ஒன்றினைத்தால் பெரும்பகுதி அதாவது 97% குர்ஆனும் வந்துவிடும்....

          Sergio Noja Noseda அவரது கணக்கின் படி 97% குர்அனின் எழுத்து பிரதிகள் ஹிஜ்ரி 1-2ம் நூற்றாண்டு உள்ளாகவே இருக்கிறது.ஆக இப்படி இருக்கையில் இரண்டாம் நூற்றாண்டு சுருள்களை கணக்கில் எடுத்தால் குர் ஆனின் முழு பகுதியும் கிடைத்துவிடும். இதுதான் குர் ஆனின் எழுத்து வடிவிலான பாதுகாப்பின் நிலை. இந்த சுருள்களில் இருக்கும் எழுத்துப்பிழைகளையும் முஸ்லிம்களின் மனதில் காணப்படும் ஓதல் முறைகளோடு ஒப்பிட்டு பிரதி எடுத்தவரின் பிழைகளை இன்றும் அறிந்து கொள்ளும் நிலையில் குர் ஆன் இரு அடுக்கு, இரு பிரதி பாதுகாப்பை கொண்டு அல்லாஹ்வின் கிருபையால் முழுவதுமாக பாதுக்காக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை .

நபி(சல்) அவர்கள் முத்தியிரையிட்ட பிரதியை ஏன் தரவில்லை:
      இதற்கு முன்பிருந்த யூத கிறித்தவ வேதங்களின் நிலை குறித்து சென்ற பல தொடர்களில் கண்டோம். எது எந்த மார்க்கினால் எழுத்தப்பட்டது, எத்தனை பேதுரு இருந்தார்கள், எத்துனை கிளமண்ட் இருந்தார்கள், அவற்றுள் எத்துனை போலி என்பதை இன்றுவரை கிறித்தவ உலகம் விவாதித்து கொண்டிருக்கையில் “ நபி(சல்) அவர்கள் ஏன் முத்திரையிட்டு குர்ஆனை வழங்கவில்லை என்ற கேள்வி பகுத்தறிவை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்ததாக கூறிக்கொள்பவர்கள் கேட்பது கேலிக்குரியது இல்லையா?. என்றைக்கும் இருக்கப்போகும் குர்ஆனை எப்படி பாதுகாக்க வேண்டுமோ அப்படியே அது பாதுகாக்கப்பட்டுள்ளது. நபி(சல்) அவர்களது முத்திரையை கண்டு உண்மை குர்ஆனை அடையாளப்படுத்தலாம் என்ற கட்டுரையாளரின் அறியாமையை என்னவென்பது. முத்திரை என்பது மனிதனால் உருவாக்கப்பட்டது. அதை யாரும் உருவாக்கலாம். முத்திரையிட்டு பாதுகாக்கும் முறை எல்லாம் சுத்த வீணானது என்பதைதான் யூத கிறித்தவ ஏடுகளின் எழுத்தர் குறித்த குழப்பங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. கட்டுரையாளர் கூறுவதை விட சிறந்த முறையில் குர்ஆன் பாதுகாக்க பட்டிருப்பதால்தான் இன்றும் எந்த வேதத்தையும் விட பாதுகாப்பான நிலையில் குர்ஆன் இருக்கிறது. எழுத்து வடிவிலான பிரதிகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டாலும் சில மணி நேரங்களில் மீண்டும் எழுத்து பிரதிகளை உருவாக்கிவிட முடியும்.
 
      இது போக ஆயிஷா(ரலி) கையில் இருந்த பிரதிகளை ஆடு தின்றது, போன்ற ஹதிஸ்கள் யாவும் கட்டுகதைகளே. கட்டுரையாளர் அவற்றை ஆதாரத்துடன் பதியவில்லை என்பதால் அந்த செய்திகள் குறித்து அதிக விளக்கம் தரதேவையில்லை என்று எண்ணுகிறேன்.

உஸ்மான்(ரலி)யை கொலைசெய்ய ஆயிஷா(ரலி) தூண்டினார்களா?

நமது பதில் :
      நமது கட்டுரையாசியர் பழுதான செய்திகளை முன்னிருத்தியே இஸ்லாமிய விமர்சனத்தை அவரது தொடர்கள் முழுவதும் முன்னெடுத்துள்ளார். என்ன் செய்வது ஷியாக்களின் வாந்தியை அடிப்படையாக கொண்டு கிறித்தவ மிசனரிகளின் வலைத்தளங்களில் இஸ்லாமிய விமர்சனம் காணப்படுகிறது. இவர் அதை அப்படியே அவரது தொடரில் பதிந்துள்ளார்.

      நாம் மேற்குறிபிட்ட செய்திகள் குறித்து பார்ப்போம்.
1.முதலில் இந்த செய்தி இடம் பெறுவதாக கட்டுரையாளர் குறிப்பிடும் அன் நிகாயா என்ற நூலே இப்னு அதிரால் எழுதப்பட வில்லை. அந்த நூலின் பெயர் “அல் காமில் ஃபி அல் தாரிக்”  எனபதாகும். கதையாசிரியர் இப்னு கதிரின் புத்தகம் போல பொய்யாக காட்ட முயன்றுள்ளார்.

2. அல் காமில் ஃபி அல் தாரிக்கில் மேற்குறிபிட்ட செய்தி காணப்படுகிறது. ஆனால் அதில் அறிவிப்பாளர் தொடர் இடம் பெறவில்லை. அந்த நூலில் இடம் பெறும் செய்திகள் யாவும் இப்படியான வர்ணனையாக இருக்குமே தவிர அதில் எந்த அறிவிப்பாளரின்  தொடர இருக்காது.

3.இது போன்ற செய்திகளின் மூலம் தபரியில் இடம் பெறும் பின்வரும் செய்திதான்.

ஆயிஷா(ரலி) மக்காவில் இருந்து திரும்பி கொண்டிருக்கையில் சரிஃப் எனும் இடத்தில் உபைத் பின் அபிசலாமாவை சந்தித்தார்கள். “என்ன செய்தி? என்று ஆயிஷா(ரலி) என்று உபைத் பின் அபிசலாமாவிடம் வினவினார்கள்.  அதற்கு “அவர்கள் உஸ்மான்(ரலி)யை கொலை செய்துவிட்டு எட்டு நாட்கள் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்கள் என்று உபைத் பதிலளித்தார்கள்.................அல்லாஹ்வின் மீது ஆணையாக! உஸ்மான்(ரலி) அவர்கள் அந்நியாயமாக கொல்லப்பட்டுள்ளார்கள், அவர்களது ரத்தத்திற்கு பலிவாங்குவேன் என்று ஆயிஷா (ரலி) கூறிவிட்டு மக்காவிற்கு கிளம்பினார்கள். இப்னு உம்மு கிலாப் (உபைத் பின் அபிஸலாமா) “அது எப்படி? அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள்தான் “அந்த முட்டாள் கிழவனை கொள்ளுங்கள். அவர் காஃபிர் ஆகிவிட்டார் “ என்று கூறி உஸ்மான்(ரலி)யை எதிர்த்து முதலில் வாள் எடுத்தீர்கள் என்று வினவினார்கள்.........
                    (P.No: 52,53 Vol16 ENGLISH VERSION HISTORY OF TABARI)

அறிவிப்பாளர் தொடர்:
அஷத் பின் அப்தில்லாஹ் ---> உமர் இப்னு சஃத் -->நசர் பின் முஷாஹிம் -->அல் ஹுஸைன் பின் நசர் அல் அத்தார்--->அலி பின் அஹமத் பின் அல் ஹசன் அலி இஜ்லி--> தபரி
முஹம்மது பின் நுவைரா ---> சயிஃப் பின் உமர் -->நசர் பின் முஷாஹிம் -->அல் ஹுஸைன் பின் நசர் அல் அத்தார்--->அலி பின் அஹமத் பின் அல் ஹசன் அலி இஜ்லி--> தபரி
தல்கா பின் அல் அஃலாம் அல் ஹனஃபி ---> சயிஃப் பின் உமர் -->நசர் பின் முஷாஹிம் -->அல் ஹுஸைன் பின் நசர் அல் அத்தார்--->அலி பின் அஹமத் பின் அல் ஹசன் அலி இஜ்லி -->தபரி

ஆய்வு: 

1. அலி பின் அஹமது பின் அல ஹசன் அல் இஜ்லி குறித்து என்த குறிப்பும் வரலாற்று ஆய்வாளர்களின் நூலில் எந்த குறிப்பும் காணப்படவில்லை. ஆக இவர் யார் என்று அறியப்படாதவர்.

2. ஹுசைன் பின் நசர் அல் அத்தார் குறித்தும் எந்த குறிப்பும் இடம் பெறவில்லை, ஆக இவரும் அறியப்படாதவர்.

3.சயிஃப் பின் உமர் குறித்து இப்னு ஹிப்பான் போன்ற அறிஞர்கள் இட்டுக்கட்டகூடியவர் என்று கூறியுள்ளனர்.(மீஸான் அல் இஹ்திதால்)

4. நசர் பின் முசாஹிம் :  இவரும் ஏற்றுகொள்ளபடாதவர், இட்டுகட்டக்கூடியவர், ஷியா வெறியர் என்று இஜ்லி, தாரகுத்னி போன்ற அறிஞர்கள் சாடியுள்ளனர். (லிசானுல் மீசான்)

      ஆக கட்டுரையாளர் குறிப்பிட்ட செய்தி முற்றிலும் பொய்யான இட்டுகட்டபட்ட செய்தி என்பது நிருபனமாகியுள்ளது. மேலும் இத்தகைய கருத்துகள் எல்லாம் ஷியாக்களினால் தொடர்ந்து பரப்பப்பட்டது. இன்றும் பரப்பப்பட்டும் வருகிறது. 

உஸ்மான்(ரலி) உடல் எங்கு புதைக்கப்பட்டது?



நமது பதில்

      சென்ற பகுதியில் ஆயிஷா(ரலி) யின் கூற்று குறித்தும் அது இட்டுகட்டபட்டது என்பதையும் தெளிவாக கண்டோம். அதை தொடர்ந்து உஸ்மான்(ரலி) மரணித்த பிறகு அவரது உடல் மூன்று நாட்கள் குப்பையில் விசப்பட்டதாகவும் அதன் பிறகு கழிப்பிடத்தில் புதைக்கப்பட்டதாகவும் என்ற அடுத்த அவதூறு. இந்த செய்தி தப்ரானியின் மஜ்மு அல் கபீர் போன்ற நூல்களில் காணப்படுகிறது. ஆனால் இந்த அறிவிப்புகளும் பலவீனமானது. இதில் இடம் பெறும் அப்துல் மாலிக் இப்னு மஜசூன் சாஹாபாக்கள் குறித்து விசித்திரமான நம்பகமற்ற செய்திகளை மாலிக் (ரஹ்) அவர்கள் வழியாக அறிவிப்பவர் என்று அல் சஜ்ஜி போன்ற அறிஞர்களால் சாடப்பட்டவர். அடுத்ததாக இந்த செய்தி இமாம் மாலிக்(ரஹ்) அவர்களால் நேரடியாக அறிவிக்கப்படுகிறது. இமாம் மாலிக்(ரஹ்) அவர்களது பிறப்பு ஹிஜ்ரி 93. ஆனால் உஸ்மான்(ரலி) கொல்லப்பட்ட்து ஹிஜ்ரி 35. ஆக இது நேரடி சாட்சியோ அறிவிப்போ இல்லை. ஆக இந்த செய்தியும் நிராகரிக்கப்பட்டது. அடுத்ததாக கழிப்பிடத்தில் உஸ்மான்(ரலி) அவர்கள் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுவதும் தவறு. அவரது அடக்கம் தொடர்பான செய்திகளில் இடம் பெறும் “ஹுஸ்- தோட்டம்  என்ற வார்த்தைக்கு கழிப்பிடம் என்று ஷியாக்கள் மொழியாக்கம் செய்தனர். அதையே நமது கட்டுரையாளர் காப்பி அடித்துள்ளார்.  
      இங்கு ஒரு விஷயத்தை சுட்ட வேண்டியுள்ளது. அதாவது கிறித்தவர்களின் அளுகைக்கு உடபட்ட பல பகுதிகளில் குர்ஆனை பரவலாக்க மூல காரணமாக இருந்தவர், சைப்ரஸ் போன்ற பகுதியை கைப்பற்றினார் என்பது போன்ற காழ்புணர்ச்சியால் மேற்குறிபிட்ட செய்தியை பதிந்து அவதூறு கூறுகின்றனர். ஷியாக்கள் அவர்கள் நபிதோழர்கள் மீது கொண்ட காழ்புணர்ச்சி என்று கொள்ளலாம். ஆனால் தன்னை பகுத்தறிவுவாதியாக அடையாளம் காட்ட நினைக்கும் இந்த கட்டுரையாளர் ஏன் இந்த செய்தியை பதிவிட வேண்டும். மேலும் ஒருவர் இறந்த பின் புதைக்கப்படும் இடத்தை கொண்டுதான் தண்டனையும், வெகுமதியும் நிர்ணயிக்கப்படுமா? என்னே ஒரு பகுத்தறிவு...... சின்னப்புள்ளத்தனமால இருக்கு!!!!!!!!!!!!!
அல்லாஹ் ஏன் நேர்வழியை வழங்குகிறான்?


 நமது பதில்:
 சராசரியாக யாருக்கும் புரியும் இந்த வசனம் ஏனோ பகுத்தறிவை முழுமையாக குத்தகை எடுத்தது போல் பேசும் கட்டுரையாளருக்கு தெரியவில்லை. வழிகேட்டில் இருப்பவனைத்தான் நேர்வழியை பின்பற்றுமாறு ஏவ முடியும். சுகமாக வாழ்வது என்றால் தீயவழியில் மக்களை சுரண்டி, விபச்சாரத்தினாலும் லஞ்சத்தினாலும் சுகமாக வாழ்பவருக்கு வக்காலத்து வாங்குகிறார் போல கட்டுரையாளர்......................