பக்கங்கள் செல்ல

Showing posts with label மாற்கு சுவிஷேசம். Show all posts
Showing posts with label மாற்கு சுவிஷேசம். Show all posts

Saturday, July 20, 2024

நற்செய்தி நூல்களின் ஆர்தர்ஸிப் அலப்பரைகள்- மாற்கின் படியான சுவிஷேசம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


    
புதிய ஏற்பாட்டின் நூல்களின் பாதுகாப்பு மற்றும் வரலாற்று ஆவாணங்களை நிலை குறித்து தொடராக கண்டு வருகிறோம். அந்த வரிசையில் அடுத்ததாக காணவிருப்பது மாற்கு சுவிஷேசமாகும். மாற்கு சுவிஷேசத்தை பொறுத்தவரை பீட்டரின் சீடர் அல்லது மொழிபெயர்ப்பாளரான மாற்கு என்பவரால் இயற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மாற்கு குறித்த வரலாற்று ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துவற்கு முன்பாக, யார் இந்த மாற்கு? என்பதையும், கிறித்தவ உலகம் எப்படி யார் இந்த மாற்கு என்பதில் தெளிவற்று நிற்கிறது என்பதையும் முதலில் காண்போம்.

✅யார் இந்த மாற்கு❓


    நாம் சென்ற கட்டுரையில் கண்டது போலவே மாற்கின் படியான சுவிஷேத்தின் எந்த இடத்திலும் இது மாற்கு எழுதியது என்பதற்கோ, நேரடியாக கண்ட சாட்சியம் என்பதற்கோ எந்த வெளிப்படையான செய்திகளையோ, நேரடியாக கண்ட சாட்சியங்கள் விவரிக்கும் முறையயோ இந்த சுவிஷேசம் பெற்றிருக்க வில்லை. இந்த மாற்கு யார் என்பது குறித்து கிறித்தவ உலகம் என்ன கூறிவருகிறது என்பதை முதலில் இங்கு காண்போம்.

    “இந்த சுவிஷேசத்தை எழுதிய மாற்கு, பேதுருவிற்கு நெருக்கமான மொழிபெயர்ப்பாளர் அல்லது விரிவுரையாளர் ஆவார். எனவே பேதுருவிடம் கேட்டே இந்த சுவிஷேசம் எழுதப்பட்டது” என்பது கிறித்தவ உலகம் இந்த சுவிஷேசம் குறித்து கூறிவருவதாகும். பின்வரும் வசனங்ககளில் குறிப்பிடப்படும் ஜான் மாற்கு என்பவர்தான் இந்த சுவிஷேசத்தின் எழுத்தாளர் என்று கிறித்தவ உலகம் கூறி வருகிறது.
அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். (அப்போஸ்தல நடபடிகள்  12:12)
பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.(அப்போஸ்தல நடபடிகள்  12:25) 
சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெபஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.
(அப்போஸ்தல நடபடிகள்  13:5) 
பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.(அப்போஸ்தல நடபடிகள்  13:13)

பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான். அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானை கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான். பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான். இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான். 
(அப்போஸ்தல நடபடிகள் 15:35-39)
என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.(பிலேமோன் 1:24) 
என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள்.(கொலோசெயர் 4:10)

லூக்கா மாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்.(2 தீமோத்தேயு 4:11)  
உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.(1 பேதுரு 5:13)

நற்செய்தியாளர் மாற்கு பேதுருவின் பிள்ளையா? பவுலின் அடிமையா?: அரைகுறையாக இருக்கும் புதிய ஏற்பாட்டின் செய்திகள்:


    மேற்குறிபிட்ட வசனங்களில் 1பேதுரு தவிர எந்த இடத்திலும் மாற்க் பேதுருவுடன் இணைந்து செயல் பட்டதாக அறியப்பட வில்லை. ஆனால் மேற்குறிபிட்ட புதிய ஏற்பாட்டின் தரவுகளும் முழுமைபெறாமல் சிக்கலை தோற்றுவிக்கிறது. பவுல் பிலேமோனிற்கு நிருபம் எழுதும் போது அவர் செசரியாபட்டணத்தில் சிறைக்காவலில் இருந்த போது எழுதியதாகும்.
பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி ஒரு நிருபத்தையும் எழுதினான்; ……………அவர்கள் செசரியாபட்டணத்தில் சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள். தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது: உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான்.( Acts 23:24-35)

இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்குத் தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான். (Acts 24:27) 

        மேற்குறிபிட்ட செய்திகள் யாருடைய ஆட்சிக்காலத்தில் இந்த சம்பவம் நடை பெற்றது என்பதை காட்டுகிறது. அதாவது செசரியாபட்டணத்தில் பேலிக்ஸ் மற்றும் பொர்க்கியுபெஸ்து ஆகிய இருவர் தேசாதிபதியாக இருந்த காலத்தில் என்று கூறுகிறது. ரோம வரலாற்றாளர் ஜோஸபஸின் படி கிபி 60ல் பேலிக்ஸின் ஆட்சிக்காலம் முடிகிறது. ஆக பேலிக்ஸின் ஆட்சிக்காலம் முடிவடையும் தருவாயில் பவுல் சிறையில் இரண்டாண்டு காலம் கழித்தார் என்றால் அது கிட்டதட்ட கிபி 59 முதல் 60 வரை உள்ள காலம்.

    மறுபுறம் 1பேதுரு நிருபம், பாபிலோனிய சபையில் இருந்து பேதுரு எழுதுவதாக கூறுகிறது. அன்று பாபிலோனிய சபை என்று எதுவும் இருக்கவில்லை. அது ரோம் திருச்சபையையே குறிக்கிறது என்று கிறித்தவ விரிவுரையாளர்கள் சப்பை கட்டு கட்டி வருகின்றனர்(1). அது ரோம் திருச்சபையை குறிக்கிறது என்று எடுத்துக்கொண்டால், பேதுருவின் ரோமின் ஊழியக்காலம் நீரோ மன்னனின் ஆட்சிக்காலத்தின் இறுதி பகுதி. அதாவது கிபி 64-68.(2). அதன் கடினத்தை கருத்தில் கொண்டே 1பேதுரு ரோமை, “பாபிலோனிய சபை” என்று கூறுகிறது என்று அனுமானிப்போம். கி.பி.60 வரை ஜான் மாற்கு தன்னுடன் கழித்ததாக பவுல் பிலேமோன், கொலோசெயர் ஆகிய நிரூபத்தில் கூறுவதை காணமுடிகிறது. அதன் பிறகும் தன்னிடம் அழைத்து வர பவுல் கூறுவதாக தீம்மோத்தியுவிற்கு கடிதம் எழுதியதை அறிய முடிகிறது. தீம்மோத்தியு தன்னுடைய ஊழியகாலத்தை துருக்கி நாட்டில் செலவிட்டதாக அப்போஸ்தல நடபடிகள் 20:4-5, மற்றும் யூஸுபியஸின் சர்ச் வரலாறு கூறுகிறது. இதற்கு முன்பும் பிறகும் மாற்கு பேதுருவிடம் சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே 1பேதுருவில் கூறப்படும் மாற்க்தான், பவுலின் ஊழியக்காரனான ஜான் மாற்கு என்பதையும், அவர்தான் மாற்கின் படியான சுவிஷேசத்தை எழுதினார் என்பதை ஆணித்தரமாக நிறுவ இயலாது. அனுமானிக்க கூட போதிய முகாந்திரம் இல்லை.

    மேலும் இதே சிறையில் இருக்கும் போது பவுல் எழுதிய நிருபமான ரோமர் 16:3-15 வரை, ரோம சபையில் இருந்த தனது வேலையாட்கள் முதற்கொண்டு பலருக்கு வாழ்த்து தெரிவிக்கும் பவுல் பேதுருவையே விட்டுவிட்டார், ரோமில் மாற்கு இருந்ததாக எந்த குறிப்பும் புதிய ஏற்பாட்டில் இல்லை. மேலும் அன்றைய காலத்தில் யூதர்கள் மத்தியில் மிகப்பிரபலமான 99 பெயர்களில் மாற்கு என்ற பெயரும் ஒன்று. அதிகமான யூதர்கள் அந்த பெயரை சூட்டிக்கொண்டிருந்தனர் (Ref: Jesus and the eyewitnesses by Richard Bauckham, Ch.4.Palestinian Jewish Names, Table 6: The 99 Most Popular Male Names among Palestinian Jews, 330 BCE-200 CE58). இந்நிலையில் மிக எளிமையாக கூறுவது என்றால், புதிய ஏற்பாட்டின் தரவுகளை கொண்டு பேதுருவுடன் தொடர்பில் இருந்த மாற்குதான், பவுலின் அடிமையாக இருந்த ஜான் மாற்கு என்று நிறுவ இயலாது. வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவல்களை ஒப்பு நோக்கும் போது இன்னும் சிக்கல்கள் எப்படி வருகிறது என்பதை காண்போம்.

வரலாற்று தரவுகளில் இருக்கும் குளறுபடிகள்:


    நாம் சென்ற தொடரில் நற்செய்தி நூல்களின் வரலாற்று தரவுகளை கண்டிருக்கிறோம். அந்த தரவுகளில் இருக்கும் குளறுபடிகள் என்ன என்ன என்பதை முதலில் காண்போம்.
👉மாற்கு சுவிஷேசம்தான் முதலில் எழுதப்பட்டதாக மொழியியல் மற்றும் உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டு நாம் அறிய இயலும். ஆனால் மேற்குறிபிட்ட ஆதாரங்கள் அனைத்தும் மத்தேயூவிற்கு பிறகு எழுதப்பட்டதாக கூறுகிறது. 

👉மாற்கு பேதுருவின் மரணத்திற்கு பிறகு மாற்கு சுவிஷேசத்தை எழுதியதாக ஐரீனியஸ் கூறுகிறார். ஆனால் அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் பேதுரு உயிருடன் இருக்கும் போதே எழுதியதாக கூறுகிறார். மேலும் அதனை பேதுரு கண்டுகொள்ளவில்லை என்று கூறுகிறார். ஆனால் கி.பி, 4ம் நூற்றண்டை சார்ந்த எபிஃபேனியஸ் பேதுருதான் மாற்கிற்கு சுவிஷேசம் எழுத கட்டளையிட்டதாக கூறுகிறார்.  

👉யோவான் கிறிசோஸ்தோம் மாற்கு எகிப்தில் சுவிஷேசம் எழுதியதாக கூறுகிறார். மேலே குறிபிட்ட அனைவரும் ரோமில் எழுதியதாக கூறுகிறார்கள்.
ஆரம்ப கால திருச்சபைகள் மாற்கின் படியான சுவிஷேசத்தை ஏற்றிருந்தன, என்றால் அதன் ஆசிரியரின் வரலாற்று குறிப்பில் ஏன் இத்துனை குளறுபடிகள். கி.பிக்கு முன்பே பலரும் அறிந்த நூல்களின், ஆசிரியர்களின் வரலாற்று குறிப்புகள்  தெளிவாக வரலாற்றில் பதிக்கப்பட்டிருக்கையில், அனைவரும் அறிந்த பரவலான நூலின் வரலாறு இவ்வளவு குளறுபடிகளுடன் இருக்காது. அதற்கு மாற்றமாக இங்கு இருப்பதை காணமுடிகிறது. எழுதப்படிக்க தெறியாத கூட்டத்திடம் இந்த நற்செய்தி நூல்கள் வந்து சேரவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இனி வரலாற்று தரவுகள் எப்படி புதிய ஏற்பாட்டின் தரவுகளுடன் மோதுகிறது என்பதை காண்போம்.

வரலாற்று தரவுகளோடு மோதும் புதிய ஏற்பாட்டின் தரவுகள்:


நாம் இந்த கட்டுரையின் ஆரம்பத்திலேயே புதிய ஏற்பாட்டின் மாற்கு குறித்த குறிப்புக்கள் அரைகுறையாக, தெளிவற்றதாக இருப்பதை விளக்கியுள்ளோம். மேலே கொடுக்கப்பட்ட வரலாற்றுத்தரவுகள் மேலும் குளறுபடிகளை இங்கு அதிகப்படுத்துவதை கீழே காண்போம். 4ம் நூற்றாண்டிற்கு முன்புள்ள எந்த வரலாற்று தரவுகளும், எந்த இடத்திலும் மாற்கை பவுலுடன் இணைத்து கூறவில்லை. மாற்கை பேதுருவுடன் மட்டுமே இணைத்து கூறுகிறார்கள். 
Mark the disciple and interpreter of Peter wrote a short gospel at the request of the brethren at Rome embodying what he had heard Peter tell. When Peter had heard this, he approved it and published it to the churches to be read by his authority as Clemens in the sixth book of his Hypotyposes and Papias, bishop of Hierapolis, record. Peter also mentions this Mark in his first epistle, figuratively indicating Rome under the name of Babylon “She who is in Babylon elect together with you saluteth you and so doth Mark my son.” So, taking the gospel which he himself composed, he went to Egypt and first preaching Christ at Alexandria he formed a church so admirable in doctrine and continence of living that he constrained all followers of Christ to his example. Philo most learned of the Jews seeing the first church at Alexandria still Jewish in a degree, wrote a book on their manner of life as something creditable to his nation telling how, as Luke says, the believers had all things in common at Jerusalem, so he recorded that he saw was done at Alexandria, under the learned Mark. He died in the eighth year of Nero and was buried at Alexandria, Annianus succeeding him. ( Jerome, Lives of Illustrious Men. Chapter VIII, Mark)
பேதுருவின் சீடரும் மொழிபெயர்ப்பாளருமான மார்க், ரோமில் உள்ள சகோதரர்களின் வேண்டுகோளின் பேரில் பேதுரு சொன்னதைக் கேட்டு ஒரு சிறிய நற்செய்தியை எழுதினார். கிளெமென்ஸ் அவருடைய ஹைப்போடைபோஸ்ஸின் ஆறாவது புத்தகம் மற்றும் ஹைராபோலிஸின் பிஷப் பாபியஸ் பதிவின் படி, பேதுரு இதைக் கேட்டதும், அதை அங்கீகரித்து, படிக்கும்படி தேவாலயங்களுக்கு வெளியிட்டார், பேதுரு தனது முதல் நிருபத்தில், இந்த மாற்க்கை குறிப்பிடுகிறார். பாபிலோன் என்ற பெயரில் ரோமை அடையாளப்பூர்வமாகக் குறிப்பிடுகிறார் “உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்” எனவே, அவரே இயற்றிய நற்செய்தியை எடுத்துக் கொண்டு, அவர் எகிப்துக்குச் சென்று, முதலில் அலெக்ஸாண்டிரியாவில் கிறிஸ்துவைப் பிரசங்கித்து, கோட்பாட்டிலும், வாழ்வாதாரத்திலும் போற்றத்தக்க ஒரு தேவாலயத்தை உருவாக்கினார், அவர் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் அனைவரையும் தனது முன்மாதிரிக்குக் கட்டுப்படுத்தினார். அலெக்ஸாண்டிரியாவில் உள்ள முதல் தேவாலயம் இன்றும் ஓரளவு யூதமயமாக இருப்பதை பார்த்த யூதர்களில் மிகவும் கற்றறிந்த ஃபிலோ, அவர்களின் வாழ்க்கை முறை பற்றி, அது எப்படி அவரது தேசத்திற்கு பெருமை சேர்க்கும்? என்று ஒரு புத்தகத்தை எழுதினார், லூக்கா சொல்வது போல, விசுவாசிகளுக்கு ஜெருசலேமில் எல்லா விஷயங்களும் பொதுவானவை, எனவே கற்றறிந்த மார்க்கின் கீழ் அலெக்ஸாண்டிரியாவிலும் இவ்வாறு நடந்ததைக் கண்டதாக அவர் பதிவு செய்தார். அவர் நீரோவின் எட்டாவது ஆண்டில் இறந்து, அலெக்ஸாண்ட்ரியாவில் அடக்கம் செய்யப்பட்டார், அவருக்குப் பிறகு அன்னியனஸ் பொறுப்பேற்றார். ( Jerome, Lives of Illustrious Men. Chapter VIII, Mark)
When Nero was in the eighth year of his reign, Annianus succeeded Mark the evangelist in the administration of the parish of Alexandria. (The Church History of Eusebius, Book 2, Chapter XXIV.—Annianus the First Bishop of the Church of Alexandria after Mark.)
நீரோ தனது ஆட்சியின் எட்டாவது ஆண்டில் இருந்தபோது, அலெக்ஸாண்டிரியாவின் திருச்சபையின் நிர்வாகத்தில் சுவிசேஷகரான மாற்கு மறைந்த பிறகு பிறகு அன்னியனஸ் பதவியேற்றார்.(The Church History of Eusebius, Book 2, Chapter XXIV.—Annianus the First Bishop of the Church of Alexandria after Mark.)
        புதிய ஏற்பாட்டின் செய்திகள், மாற்க் பேதுருவுடன் கிபி 64ல் ரோமில் ஓர் இடத்திலும், துருக்கியில் திமோத்தியுடன் இருந்ததாக மற்றோர் இட்த்திலும் கூறுகிறது. கூறுகிறது. வரலாற்று தரவுகள் கிபி 62ல் மாற்க் அலெக்ஸாண்டிரியாவில் மரித்து விட்டதாக கூறுகிறது புதிய ஏற்பாட்டின் செய்திகள், மாற்க் கிபி 60ல் பவுலுடன் இருந்ததாக கூறுகிறது. கிபி 60ல் பவுலுடன் பயணப்பட்ட மாற்கு கிபி 62ல் அலெக்ஸாண்டிரியாவில் மரித்து, பிறகு மீண்டும் பேதுருவுடன் கி.பி.64ல் ரோமில் வலம் வந்தாரா என்ன. இந்த பகுதிகள் ஒவ்வொன்றையும் அந்த காலத்தில் கடக்கவே இந்த ஆண்டுகள் போதுமானதாய் இருக்காது. அப்படி இருக்கையில் இது தெளிவான முரணாக இருக்கிறது. மேலே நாம் குறிபிட்ட கருத்துக்களை உறுதி படுத்தும் வண்ணம் ஹிப்போபோலிடஸ் (மரணம் கி.பி. 236), தனது “On the Seventy Apostles” என்ற நூலில், நற்செய்தியாளர் மாற்கு(வ.எண்:14), பார்னபாவின் உறவினர் மாற்கு(வ.எண்:56) மற்றும் ஜான் மாற்கு வ.எண்:65) ஆகிய மூவரையும் தனித்தனியே பிரித்து காட்டுகிறார்.

    எனவே மேற்குறிபிட்ட வாதங்களின் அடிப்படையில் வரலாற்று தரவுகளும், புதிய ஏற்பாட்டின் தரவுகளும் முரண்பட்டு நிற்பதை காண முடிகிறது. கிறித்தவ உலகின் நம்பிக்கையை உறுதி படுத்தும்படி குழப்பங்களற்ற ஆணித்தரமான ஆதாரங்கள் புதிய ஏற்பாட்டின் உள்ளேயும் வெளியேயும் இல்லை என்பதே நிதர்சன உண்மை.  எனவே மாற்கின் சுவிஷேசத்தின் உள்ளடக்கத்தை கொண்டு, யார் இந்த மாற்க் என்பதை உறுதி படுத்துவோம்.

மாற்கு சுவிஷேசத்தின் எழுத்தர் பேதுருவின் எழுத்தரும் அல்ல பவுலின் அடிமையும் அல்ல


    கிறித்தவ உலகின் நம்பிக்கையை உறுதி படுத்தும் வகையில், புதிய ஏற்பாட்டின் எந்த இடத்திலும் “மாற்காகிய நான் பேதுருவிடம் கேட்டு இந்த சுவிஷேசத்தை எழுதினேன்” அல்லது மாற்கு பேதுருவிடம் கேட்டு சுவிஷேசம் எழுதினார் என்று இடம் பெறவில்லை. அதன் உள்ளடக்கத்தை சற்று ஆய்வு செய்தோம் என்றால் இந்த சுவிஷேசத்தை எழுதியவர் நிச்சயம் மேலே கூறப்பட்ட பேதுருவின் விரிவுரையாளரும் அல்ல, பவுலின் அடிமையான ஜான் மாற்கும் அல்ல என்பது விளங்கும்

பேதுரு குறித்த தகவல்களை அறியாத/மறைத்த மாற்கு சுவிஷேசம்❕


    மாற்கின் படியான சுவிஷேசத்தை ஆய்வு செய்தால் ஒரு விஷயம் தெளிவாக புலப்படும். அது, இயேசுவின் சீடரான பேதுருவிற்கு மட்டும் உரித்தான செய்திகள் மறைக்கப்பட்டிருப்பது அல்லது விடுபட்டிருப்பதாகும். உதாரணமாக பின்வரும் நிகழ்வை எடுத்துக்கொள்வோம்.
அதற்கு சீமோன் பேதுரு, “நீரே கிறிஸ்து, (ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்)” என்று பதிலளித்தான். இயேசு அவனிடம், “யோனாவின் குமாரனாகிய சீமோனே! நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். உனக்கு யாரும் அதைக் கற்பிக்கவில்லை. நான் யார் என்பதைப் பரலோகத்தில் இருக்கும் என் பிதா உனக்குக் காட்டினார். எனவே, நான் சொல்கிறேன். நீயே பேதுரு (பாறை போன்றவன்.) என் சபையை இப்பாறையின் மீது கட்டுவேன். மரணத்தின் வலிமை என் சபையை வீழ்த்த முடியாது.(மத்தேயூ 16:16-18)
    மேலே கூறப்படும் நிகழ்வில் இயேசுவை கிறிஸ்து என்று பேதுரு அறிக்கை இடுகிறார். அதற்கு பகரமாக இயேசு பேதுருவை ஆசீர்வதித்தும் உயர்த்தியும் பேசுவதை மத்தேயூவின் படியான சுவிஷேசத்தில் காணமுடிகிறது. ஆனால் மாற்கு சுவிஷேசம் இதே செய்தியை எப்படி இருட்டடிப்பு செய்கிறது என்று பார்ப்போம்.
அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான். அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார். (மாற்கு 8:29-30)
அதேபோல் பின்வரும் நிகழ்வையும் கவனிப்போம்.
அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான். நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார். நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லை என்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது. அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; (யோவான் 18:5-10)

    இயேசுவை கைது செய்யும் போது நிகழ்ந்ததை யோவான் சுவிஷேசம் பதிவு செய்துள்ளது. அது பேதுரு இயேசுவின் மீது கொண்டிருந்த பற்றை பட்டவர்த்தனமாக பதிவு செய்கிறது. ஆனால் மாற்கு சுவிஷேசம் எப்படி இந்த நிகழ்வை பதிவு செய்கிறது என்பதை பார்ப்போம்

அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார். அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். (மாற்கு 14:46-50)

அதேபோல் பின்வரும் நிகழ்வையும் கவனிப்போம்:

அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து, அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து, சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான். (யோவான் 20: 3-7)

மாற்கு சுவிஷேசத்தில் மேற்குறிபிட்ட செய்தி இடம் பெறவில்லை. உண்மையில் மாற்கு சுவிஷேசத்தை எழுதியவர் பேதுருவின் சீடராக இருக்கும் பட்சத்தில் பேதுருக்கு மட்டுமே உரித்தான் தகவல்கள் ஏன் இல்லாமல் போனது. இந்த செய்தி விடுபடுதல் என்பது மாற்கின் படியான சுவிஷேசத்தை எழுதியவர், நிச்சயம் பேதுருவின் விவரிப்பாளர் அல்ல என்பதை காட்டுகிறது.  

யூதம் அறியாத பவுலின் அடிமை  ஜான் மாற்கு எனும் யூதர்


    மாற்கு ஆகமத்தை இயற்றிவர் ஜான் மாற்கு யூதர் என்று கிறித்தவ உலகம் கூறிவருகிறது. ஆனால் இந்த சுவிஷேசத்தில் இடம்பெறும் பல கருத்துகள் இதை இயற்றியவர் ஒரு யூதராக இருக்கமாட்டார் என்பதை ஆணித்தரமாக கூறுகிறது. உதாரணமாக பின்வரும வசனத்தை காண்போம்.   
எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.(மாற்கு 7:10)
        ஆதாவது மோசே கூறியதாக ஒரு சட்டத்தை ஏசு பரிசேயருக்கு விளக்குவதாக மாற்கு குறிப்பிடுகிறார். இது ஏசுவின் வார்த்தையாக இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. காரணம் இது கர்த்தர் மக்களுக்கு வழங்கியதாக மோசே கூறியது. (எண்: 21:15) எந்த யூதரும் இதை மோசேயின் கருத்தாக தவறுதலாகவும் கூறமாட்டார். இதை பேதுருவோ, பவுலோ கூறியிருக்க மாட்டார்கள். இதை நிச்சயம் பேதுரு/பவுலின் சீடரான மாற்கு என்ற யூதர் பதிவு செய்திருக்க மாட்டார். இதன் காரணத்தினால்தான் மத்தேயுவில் இதே சம்பவம் சரிசெய்யப்பட்டு கையாளப்பட்டுள்ளதை காணமுடியும்.
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. (மத்தேயு: 15:4).
இது போல பழைய ஏற்பாடின் வசனங்கள் மாற்கால குளறுபடியுடனே கையாளப்பட்டுள்ளது. அடுத்ததாக
தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்; யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான். (மாற்கு 1:1-3)
அதாவது இரண்டாவது வசனம் தீர்க்கதரிசனத்தில் இருப்பதாக மாற்கு கூறுகிறார். அது யோவான் குறித்து பேசுவதாக கூறுகிறார் மாற்கு. ஆனால் மலாச்சியில் இடம்பெறும் வசனம் எதை கூறுகிறது என்பதை காண்போம்.
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார். அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ் செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (மல்கியா: 3:1-5).
        மேலே குறிப்பிடப்படும் வசனமானது அந்த நாள் எத்தகையது என்பதையும் கூறுகிறது. அதாவது ஏசு விண்ணேற்றம் அடையும் காலம் வரை யூதர்கள் முழுமையாக சுத்திகரிக்கப்படவில்லை என்பதை நான் குறிப்பிட தேவையில்லை என்று எண்ணுகிறேன். இன்றும் முழு யூதர்களும் கிறித்தவதத்தை ஏற்று கொள்ளவில்லையே. மேலும் யூதா மற்றும் எருசலேமின் காணிக்கைகள் கர்த்தருக்கு பிரியமாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏசுவின் விண்ணேறத்திற்கு பிறகு யூதர்கள் காணிக்கை செலுத்தும் எருசலேம் ஆலயம் கிபி 70ல் தீக்கிரையாக்கப்பட்டது. ஆக மாற்கு குறிப்பிடுவது போல இந்த பழைய ஏற்பாட்டின் வசனத்திற்கும் யோவானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை புரிந்து கொண்ட மத்தேயு இந்த வசனத்தை தூக்கிவிட்டார் தனது ஆகமத்தில் (மத்தேயு 3:3). ஒன்று பேதுரு/ பவுல் ஆகிய இருவரும் தப்பும் தவறுமாக யூதரான மாற்கிற்கு சொல்லி கொடுத்திருக்க வேண்டும். அல்லது மாற்கு சுவிஷேசத்தை இயற்றிவர் நிச்சயம் பேதுரு/ பவுலிற்கு நேரடி தொடர்பில்லாத, யூதரல்லாதவராக இருக்கவேண்டும். எனவேதான் அமேரிக்காவின் விவிலிய அறிஞரான கிரைக் எவான்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
The difficulty is ascertaining the identity of Mark. Scholars debate whether he is John Mark of Jerusalem, associate of Paul (Acts 12:12, 25; 13:5, 13; 15:36–41; 2 Tim 4:11), and the one who may well be assumed by Papias as an associate of Peter (e.g. Hengel 45–53; Gundry 1026–45), or another person simply named Mark who was not native to Palestine. Many scholars have opted for the latter option due to the Gospel’s lack of understanding of Jewish laws (1:40–45; 2:23–28; 7:1–23), incorrect Palestinian geography (5:1–2, 12–13; 7:31), and concern for Gentiles (7:24–28:10) (e.g. Marcus, 1999: 17–21). (The Routledge Encyclopedia of the Historical Jesus by Craig A. Evans (ed.), P.No.252)

மார்க்கின் அடையாளத்தைக் கண்டறிவதே சிரமம். அவர், பவுலின் கூட்டாளியான ஜெருசலேமின் ஜான் மாற்கா (Acts 12:12, 25; 13:5, 13; 15:36–41; 2 Tim 4:11) மேலும் அவரே பேதுருவின் கூட்டாளியாக பேப்பியஸால் அனுமானிக்கப்பட்டவராக இருக்கக்கூடும், (e.g. Hengel 45–53; Gundry 1026–45), அல்லது பாலஸ்தீனத்தை பூர்வீகமாகக் கொண்டிராத மாற்கு என்ற மற்றொரு நபரா என்று அறிஞர்கள் விவாதிக்கின்றனர். யூதச் சட்டங்களைப் பற்றிய நற்செய்தியின் புரிதல் இல்லாததாலும்,(மாற்கு 1:40–45; 2:23–28; 7:1–23) தவறான பாலஸ்தீன புவியியல் குறிப்புக்கள் (மாற்கு 5:1–2, 12–13; 7:31), மற்றும் புறஜாதிகள் மீதான அக்கறை(மாற்கு 7:24–28:10) ஆகிய காரணங்களினால்  பல அறிஞர்கள் பிந்தைய கருத்தையே தேர்ந்தெடுத்துள்ளனர். (The Routledge Encyclopedia of the Historical Jesus by Craig A. Evans (ed.), P.No.252)

மாற்கு எழுதப்பட்ட காலம்:

    மாற்கு சுவிஷேசத்தின் வரலாற்று ஆதாரம் என்று கூறப்பட்டும், நம்பப்படும் கூற்றுகள் எதுவும் இன்றிருக்கும் மாற்கு சுவிஷேசத்தின் உள்ளடக்கத்தினை உறுதிபடுத்துவதாய் இல்லை. மாற்கு சுவிஷேசம் எழுதப்பட்ட காலமாக பின்வரும் காலங்களை கிறித்தவ உலகம் கூறி வருகிறது.  அது குறித்த தகவலை An introduction to the literature of The New Testament by JAMES MOFFATT. B.D., D.D. Oct 1918 P.No.213 என்ற நூலில் இருந்து வழங்குகிறோம்.

c. 44 A.D. Belser
c. 48 A.D. Birks
c. 44-49 A.D. Allen
c. 55-57 A.D. Hitzig
c.  ̴55 A.D. Gloag
c. 63 A.D. Mill
c. 64-67 A.D. Bartlet, Schafer, Kuppers, Schanz, Zimmermann, Zahn, J.Weiss
c. 65-70 A.D. Abbott, Alford, W. Bruckner, Stanton, Swete, Salmond, Wendt, Weiss, Harnack Maclean, Barth, Peake, Hoffmann, Burkitt.
c. 70 A.D. Carpenter, Menzies, Feine, W. Haupt
c. 70-80 A.D.Volkmar , Renan, Beyschlag, Wright, Wernle, Bacon, Well- hausen, von Soden, Loisy, O.Schmiedel, Montefiore
c. 75-85 A.D. Goguel 
c. 80-90 A.D. Holsten, Hilgenfeld, Rovers , Bleek.
c. 100 A.D. Hoekstra
c. 100-110 A.D.
Kostlin 
c. 115-120 A.D. Keim 
c. 120 A.D. S. Davidson
c. 120-130 A.D. Usener
c. 130 A.D. Baur

        கிறித்தவ அறிஞர்களால் கிட்டதட்ட 90 ஆண்டு கால இடைவெளி மாற்கு சுவிஷேசம் எழுதப்பட்டதற்கான காலமாக அனுமானிக்கப்படுகிறது,. இது ஒவ்வொருவரும் அவர் அவர்களது அனுமானத்திற்கு ஒரு ஆதாரத்தை கொண்டிருப்பார்கள். இயற்றப்பட்ட வருடத்திலும் எந்த ஒரு உறுதியான நிலைபாடும் இல்லை. வரலாற்று ஆவணங்களின் பலவீனம்தான் இந்த நிலைக்கு காரணம் என்பது தெளிவாக விளங்குகிறது.

    எனவே யார் மாற்கு என்று சரியாக அறியப்படாத நிலையில், வரலாற்றுத்தரவுகள் தனக்குள்ளேயே முரண்படுகின்றது என்ற நிலையில், மாற்கு என்ற நபர் குறித்த புதிய ஏற்பாட்டின் தரவுகளும் அரைகுறையாகத்தான் இருக்கிறது என்ற நிலையில், புதிய ஏற்பாட்டின் தரவுகளும், வரலாற்று தரவுகளும் முரண்பட்டு நிற்கும் நிலையில், எப்போது எழுதப்பட்டது என்பதில் கூட கருத்து ஒற்றுமை இல்லாத நிலையில், வரலாறு கூறும் மாற்கால் நேரடியாக எழுதப்பட்ட ஒரு ஆவணம் , “மாற்கின் படியான சுவிஷேசம்” என்று யார் என்று அட்ரஸில்லாத நபரின் விவரிப்பாக தலைப்பை இன்று தாங்கி நிற்கும் நிலையில், “மாற்கின் படியான சுவிஷேசம் அட்ரஸ் இல்லாத அனாமதேய எழுத்தர்களால் முன்பிருந்த நற்செய்தி நூல்களில் இருந்தும், சில வாய்வழிச் செய்திகளில் இருந்தும், கட்டுக்கதைகளில் இருந்தும் ஒன்று திரட்டி மாற்கின் பெயரால் இட்டுக்கட்டபட்ட நூல்” என்ற முடிவிற்கே வர இயலும்.

Friday, September 16, 2016

எதிர் தொடர் 19:உடைந்த சிலுவை-பாகம்-7 மாற்கு சுவிஷேசம்



ஏக இறைவனின் திருப்பெயரால்



எதிர்தொடர் 19: உடைந்த சிலுவை பாகம்-7: மாற்கின் சுவிஷேசம் 
      சென்ற தொடரில் புதிய ஏற்பாட்டின் ஆகமங்களில் எண்ணிக்கை குறித்த முரண்பட்ட நிலையை எடுத்து கூறினோம். இந்த தொடரில் இந்த ஆகமங்களின் உன்மைதன்மை குறித்தும் இதை இயற்றியவர்கள் உன்மையில் ஏசுவை கண்டவர்களா? அல்லது ஏசுவின் சீடர்களை கண்டவர்களா என்பதையும் புதிய ஏற்பாட்டில் காணப்படும் நான்கு சுவிஷேசங்களின் நிலையையும் ஆய்ந்து அறிவோம் இன்ஷா அல்லாஹ்.

மாற்கின் சுவிஷேசம்:

      இந்த சுவிஷேசம் தான் இன்று இருக்கும் கிறித்தவ அறிஞர்களால் நான்கு சுவிஷேசங்களிலும் மிகப்பழமையானது என்று கொள்ளப்படுகிறது. பரப்பரியமாக எபிரேய மத்தேயுதான் பழமையானது என்று கூறப்பட்டாலும் இன்று இருக்கும் மத்தேயு எபிரேய மத்த்தேயு அல்ல. இன்று இருக்கும் மத்தேயு கிரேக்க மொழியிலான மொழிபெயர்ப்பு என்று உறுதி செய்யப்பட்டதால் மாற்குதான் மிகப்பழமையானது என்று கொள்ளப்படுகிறது. மாற்கு சுவிஷேசமானது கிபி 70 களில் அதன் மூல மொழியான கிரேக்க மொழியில் இயற்றப்பட்டது. மாற்கு சுவிஷேசம் 5 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. அத்தியாயம் 1.1 முதல் 1.13 வரை உடையது ஏசுவின் பொது வாழ்க்கையின் ஆரம்பத்தை கூறுவதாகவும், 1.14 முதல் 9.50 வரை ஏசுவின் போதனைகள் மற்றும் அற்புத்ங்களை குறித்து கூறுவதாகவும், 10ம் அத்தியாயம் ஏசுவின் ஜெருசலம் பயணம் குறித்தும், 11முதல் 15 வரை உள்ள அத்தியாயங்கள் ஏசுவின் சிலுவை மரணம் வரை உள்ள இறுதி பகுதிகளையும் 16.1-8 ஏசுவின் உயிர்தெழுதல் குறித்தும் பேசுகிறது. இதை எழுதிய மாற்கு ஏசுவின் நேரடி சீடரான பேதுருவின் சீடராக கருத்தப்படுகிறார். இந்த கருத்தை முதல் முதலில் கூறியவர் பேப்பியேஸ் (Papias of Hieropolis CE:60-130) பின்வரும் வாசகம் பேப்பியஸ் கூறியதாக யூசிபியஸ் அவர்களால் தனது History of Eccelestial church என்ற புத்தகத்தில் கூறுகிறார்:

                14.  Papias  gives also in his own work other accounts of the words of the Lord on the authority of Aristion who was mentioned above, and traditions as handed down by the presbyter John; to which we refer those who are fond of learning. But now we must add to the words of his which we have already quoted the tradition which he gives in regard to Mark, the author of the Gospel.
                15. “This also the presbyter said: Mark, having become the interpreter of Peter, wrote down accurately, though not in order, whatsoever he remembered of the things said or done by Christ. For he neither heard the Lord nor followed him, but afterward, as I said, he followed Peter, who adapted his teaching to the needs of his hearers, but with no intention of giving a connected account of the Lord’s discourses,so that Mark committed no error while he thus wrote some things as he remembered them. For  he was careful of one thing, not to omit any of the things which he had heard, and not to state any of them falsely.” These things are related by Papias concerning Mark.
              Writings of Papias, Book III, The History of Eccelestial church By Eusebius
      
      இதில் ஜான் என்ற மதபோதகர் கூறியதாக கூறப்படுகிறது. இந்த ஜான் யார் என்பதில் பல குழப்பம் இன்றும் நிலவுகிறது. இவரது வாழ்க்கை குறித்த தெளிவான சான்றுகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் மேற்குறிப்பிட்ட செய்தியில் மாற்கு பேதுருவின் எழுத்தராக இருந்து சுவிஷெத்தை வரைந்தார் என்ற குறிப்பு கிடைக்கப்பெறுகிறது. மார்க்கினால் பேதுருவிடம் இருந்து பெறப்பட்டு பேதுருவின் மரணத்திற்கு பிறகு கிபி 70ல் இயற்றப்பட்டதாக கிறித்தவ உலகத்தால் கூறப்பட்டாலும் இதுவரை கிபி 70ஐ சேர்ந்த உண்மை ஏடு எதுவும் கிடைக்கப்பெற வில்லை. 

ஆய்வு 1: மாற்கு சுவிஷேசம் கிபி 70ல் இயற்றப்பட்டதா?

இந்த சுவிஷேசம் கிபி 70ல் இயற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் இடம்பெறும் செய்திகள் கிபி 2-3 ம் நூற்றாண்டை சார்ந்தவையாக உள்ளது. உதாரணமாக பின்வரும் வசனத்தை எடுத்துக்கொள்வோம்.

எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள். ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைத் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள். (மாற்கு 7:1-3).

மேலே குறிப்பிடப்பட்ட வசனங்களில் சாப்பிடுவதற்கு முன்பு கைகளை கழுவுவதை யூதர்களின் பாரம்பரியமாகக் காட்டுகிறார் மாற்கு. யூதர்களின் பாரம்பரியத்தை விளக்கும் அவசியம் இங்கு என்ன? யூதரல்லாத மக்களுக்கு கூறப்படுவதால்தான் யூதர்களின் பாரம்பரியத்தை விளக்குகிறார் மாற்கு. மேலும் இத்தகைய பரிசேயரின் வழக்கங்கள் எல்லாம் யூதர்களின் பழக்கமானது கிபி 70க்கு பிறகுதான். அதாவது ஜெருசலம் ஆலயம் தீக்கிரை ஆக்கப்பட்டு சதுசேயர்களின் கைகளில் இருந்த யூதர்களுக்கான அதிகாரம் கடைநிலையிலிருந்த பரிசேயர்களின் கைகளில் விழுந்த பிறகுதான் யூதர்களின் வாழ்வியல் நெறிகளில் மாற்றங்கள் உண்டாயிற்று. ரப்பிக்களால் யூதர்களின் வாழ்வியல் நெறிமுறைகள் வரையறுக்கப்பட துவங்கியது. குறிப்பாக மிஸ்னா, தல்மூத் இயற்றப்பட்ட 2-3ம் நூற்றாண்டுகளில் இத்தகைய பழக்கங்கள் யூதர்களின் பாரம்பரியமானது. (Refer: Mishnah, Pharisees: Vol.8,9, Jewish Encyclopedia By Isidore Singer, Jewish History Wikipedia, Babylonian Talmud). ஆக இந்த மாற்கு சுவிஷேசமானது கிறித்தவர்களால் கூறப்படுவது போல பேதுருவால் மாற்கிற்கு வழங்கப்பட்டதல்ல. நமக்கு கிடைக்கும் பழமையான சுருள்கள் 2-3ம் நூற்றாண்டுகளை சார்ந்தவைதான் என்பது குறிப்பிடதக்கது.
 
ஆய்வு 2: மாற்கு யூதரா?

      மாற்கு ஆகமத்தை இயற்றிவர் யூதர் என்று கிறித்தவ உலகம் கூறிவருகிறது. ஆனால் இந்த ஆகமத்தில் இடம்பெறும் பல கருத்துகள் இதை இயற்றியவர் ஒரு யூதராக இருக்கமாட்டார் என்பதை ஆணித்தரமாக கூறுகிறது. யூதர்களின் மரபு குறித்த கருத்தே இதற்கு உதாரணம். மேலும் பின்வரும வசனத்தை காணும் பொழுது இதை இயற்றியவர் ஒரு யூதராக இருக்க முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.(மாற்கு 7:10)

ஆதாவது மோசே கூறியதாக ஒரு சட்டத்தை ஏசு பரிசேயருக்கு விளக்குவதாக மாற்கு குறிப்பிடுகிறார். இது ஏசுவின் வார்த்தையாக இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை. காரணம் இது கர்த்தர் மக்களுக்கு வழங்கியதாக மோசே கூறியது. (எண்: 21:15) எந்த யூதரும் இதை மோசேயின் கருத்தாக தவறுதலாகவும் கூறமாட்டார். இதை பேதுரு என்ற யூதர் நிச்சயம் கூறியிருக்க மாட்டார். இதை நிச்சயம் பேதுருவின் சீடரான மாற்கு என்ற யூதர் பதிவு செய்திருக்க மாட்டார். இதன் காரணத்தினால்தான் மத்தேயுவில் இதே சம்பவம் மிகத்துல்லியமாக கையாளப்பட்டுள்ளதை காணமுடியும்.

உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே.(மத்தேயு: 15:4).

இது போல பழைய ஏற்பாடின் வசனங்கள் மாற்கால குளறுபடியுடனே கையாளப்பட்டுள்ளது. அடுத்ததாக

தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்; யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருந்தான். (மாற்கு 1:1-3)

அதாவது இரண்டாவது வசனம் தீர்க்கதரிசனத்தில் இருப்பதாக மாற்கு கூறுகிறார். அது யோவான் குறித்து பேசுவதாக கூறுகிறார் மாற்கு. ஆனால் மலாச்சியில் இடம்பெறும் வசனம் எதை கூறுகிறது என்பதை காண்போம்.

இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் அவர் வரும் நாளை சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார். அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும் எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ் செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (மல்கியா: 3:1-5).

மேலே குறிப்பிடப்படும் வசனமானது அந்த நாள் எத்தகையது என்பதையும் கூறுகிறது. அதாவது ஏசு விண்ணேற்றம் அடையும் காலம் வரை யூதர்கள் முழுமையாக சுத்திகரிக்கப்படவில்லை என்பதை நான் குறிப்பிட தேவையில்லை என்று எண்ணுகிறேன். இன்றும் யூதர்கள் கிறித்தவதத்தை ஏற்று கொள்ளவில்லையே. மேலும் யூதா மற்றும் எருசலேமின் காணிக்கைகள் கர்த்தருக்கு பிரியமாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏசுவின் விண்ணேறத்திற்கு பிறகு யூதர்கள் காணிக்கை செலுத்தும் எருசலேம் ஆலயம் கிபி 70ல் தீக்கிரையாக்கப்பட்டது.  ஆக மாற்கு குறிப்பிடுவது போல இந்த பழைய ஏற்பாட்டின் வசனத்திற்கும் யோவானுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை புரிந்து கொண்ட மத்தேயு இந்த வசனத்தை தூக்கிவிட்டார் தனது ஆகமத்தில் (மத்தேயு 3:3). இப்படி தப்பும் தவறுமாக பழைய ஏற்பாட்டின் வசனங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் மாற்கு சுவிஷேசத்தை இயற்றிவர் நிச்சயம் யூதராக இருக்க மாட்டார்.

ஆய்வு 3: மாற்கின் புவியியல் அறிவு: 

மாற்கு சுவிஷேசத்தை இயற்றிய பேதுருவின் சீடரான மாற்கு அவர்கள் எருசலேமை சேர்ந்தவர் என்றும் (அப்போஸ்தல் நடபடிகள்: 12:12) பவுல் மற்றும் பார்னபாவுடன் ஆசியா மைனர் வரை சுற்றி வந்தவர் என்றும் கிறித்தவ உலகம் கூறி வருகிறது. ஆனால் மாற்கு சுவிஷேசத்தை ஆய்வு செய்தால் அவருக்கு எருசலேம், பாலஸ்தீன புவியியல் சார்ந்த  அறிவு சுத்தமாக இல்லை என்பதே விடையாக உள்ளது. உதாரணமாக ஏசுவின் பயணங்கள் குறித்து கூறும் இடங்களில் மாற்கு சுவிஷேசம் முற்றிலும் எருசலேம் மற்றும் அதன் சுற்றுபுறம் குறித்த புவி அமைப்பிற்கு முரண்பட்டதாகவே உள்ளது. 

அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்..................அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மறுபடியும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார். (மாற்கு 9:33-10:1)

அதாவது மேற்கூறிய வசனத்தில் ஏசு கப்பர்நகூமில் இருந்து யூதேய தேசத்திற்கு யோர்தான் ஆற்றின் மறுகரை வழியாக வந்ததாக மாற்கு கூறுகிறார். ஆனால் யூதேயாவும் கப்பர்நகூமும் யோர்தான் ஆற்றின் மேற்கு கரையில் தான் உள்ளது. அதாவது யோர்தான் ஆற்றை இரண்டு முறை கடந்தால்தான் அது சாத்தியம். பின்வரும் வரைபடம் இதை தெளிவாக விளக்கும். இவ்வாறு ஏன் யோர்தான் ஆற்றை இருமுறை கடக்க வேண்டும் கப்பநகூமில் இருந்து யூதேயாவிற்கு நேரடி பாதை இருக்கும் போது.

 
இதே போல் ஆவிகள் பன்றிகள் கூட்டத்தில் நுழைந்த கதையிலும் மேற்கூறியது போன்ற புவியியல் பிழையை காணவியலும்.

பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய  நாட்டில் வந்தார்கள். அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்.அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான். அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப்பணிந்துகொண்டு.............அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது. (மாற்கு 5:1-13). கதரேனருடைய  பகுதியை சுற்றிலும் இத்தகைய நீர்நிலைகள் எதுவும் இல்லை. இதை அறிந்திருந்த மத்தேயு இதை கெர்கசேனர் என்று மாற்றிவிட்டர். (மத்தேயு 8:24)(பார்க்க உள்படம்)

இப்படி பாப்பியஸின் கருத்திற்கு ஒத்துவராத ஒருவரால் தான் மாற்கு சுவிஷேஷம் இயற்றபட்டுள்ளது என்பதற்கான சான்றுகள்தான் மேலே குறிபிட்டது. மேலும் மார்க்கின் சுவிஷேஷம் பணடைய சுருள்களில் இன்று இருப்பதை போல இல்லை. உதரணமாக codex sinaiticusல் மாற்கின் சுவிஷேஷம் 16:8 உடன் முழுமையடைகிறது. அதன் பிறகு லூக்கா ஆரம்பமாகிறது. இப்படி குளறுபடிகளின் மொத்த உருவமாக திகழ்கிறது மாற்கு சுவிஷேசம். இந்நிலையில் மாற்கு சுவிஷேசம் குறித்து அலெக்ஷாண்டிரியாவின் கிளமண்ட் , தியோடர் என்பவருக்கு வரைந்த கடிதமான மார் ஷபா கடிதம் மாற்கு சுவிஷேசம் குறித்து வேறு வகையில் கூறுகிறது. மார் ஷபா கடிதம் குறித்து அடுத்த தொடரில் காண்போம், இன்ஷா அல்லாஹ்........

எதிர்தொடர்அனைத்து கட்டுரைகளையும் காண             உடைந்தசிலுவை அனைத்து கட்டுரைகளையும் காண