பரிணாமம் டார்வினுக்கு முன்
பரிணாமம் குறித்து விளங்குவதற்கு அதன் வரலாற்று பார்வையை முதலில் நாம் அறிந்து கொள்வது இன்றியமையாததாகும். அனைவரும் பரிணாமம் குறித்து ஓரளவிற்கு அறிந்திருந்தாலும் அதன் கட்டமைப்பை புரிந்து கொள்ள பரிணாமம் குறித்த வரலாற்றை அறிந்து கொள்வது சிறந்த வழியாகும். இன்ஷா அல்லாஹ் அதன் வரலாறு குறித்து நாம் பார்ப்பதற்கு முன்பு பரிணாமம் என்றால் என்ன என்பதை பார்ப்போம்.
பரிணாமம் என்றால் என்ன?
பரிணாமம் (Evolution) என்பதற்கு மாற்றம் என்பது நேரடி பொருளாகும். ஒரு உயிரினத்தின் தலைமுறை தலைமுறையாக வடிவம், நடத்தை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றமே பரிணாமம் என எளிமையாக பொருள்படுத்தலாம்.

பரிணாம காலவரிசை ஒரு பார்வை

மேலும் மனிதன் வேறு ஒரு உயிரினத்தில் இருந்து பரிணமித்தவன் என்ற கருத்தை முன்வைத்தார்.
இதற்கு எதிர் கருத்தை கொண்டிருந்த, அதாவது மாற்றங்கள் யாவும் பயன் நோக்கியது அல்லது முன் நிர்ணயிக்கப்பட்டது என்ற கருத்தை முன்வைத்த அணியிலும் குறிப்பிடும் படியான கிரேக்க தத்துவவியாளர்கள் இருந்தனர். இவர்கள் இயல்திட்ட வாதத்தை(Teleology) முன்வைத்தனர். அதாவது இயற்கையில் உயிர்களில் தோன்றும் இத்தகைய மாறுதல்களின் காரண காரிய தொடர்புகள் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. இறுதி விளைவு நோக்கிய ஒரே மூலத்திட்ட அமைப்பின் கூறுகளே என்று வாதிட்டனர். ஹெராகிளிடஸ் போன்றவர்கள் இது கடவுளின் திட்டம் என வாதிட்டனர்.
அதே போன்று அரிஸ்டாட்டில் , பிளாட்டோ போன்றவர்கள் இயல்திட்ட வாதத்தை முன்வைத்தனர். அதாவது மனிதன் என்ற உயரிய படைப்பு நோக்கின் தோல்வியுற்ற சோதனைகளின் விளைவுதான் ஏனைய உயிரினங்கள் என்ற கருத்தை கொண்டிருந்தனர். இத்தகைய கருத்தை பிளாட்டோ குறியதால் தற்கால் பரிணாமவியலாளரான ஏர்ண்ஸ்ட் மைர் பிளாட்டோவை "Great Antihero of Evolution" என்று கூறுகிறார்.(2 )
தற்கால பரிணாமவியலின் ஆரம்பம்:

படிவளர்ச்சி கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை அழிவமைவு கோட்பாடாகும். இதை முன்பே விளக்கியது போல் இது பேரழிவுகளே நில அமைப்புக்களை தோன்றுவதற்கு காரணமாயின். இதுதான் வேறுபட்ட உயிர்கள் தோன்ற காரணமாயின என்ற கருத்தை முன்வைத்தது. புகழ்பெற்ற பக்லேண்ட், கூவியர் போன்ற நிலவியலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கோட்பாடாகும். இந்த கோட்பாடானது பரிணாமவியலாளர்களும் பெரிது ஒவ்வாமையை ஏற்படுத்த மூலகாரணம்:
1)இந்த கோட்பாட்டை தூக்கிப் பிடித்தால் அன்றிருந்த கிறித்தவர்கள் கூறுவது போல் இவ்வுலகம் தோன்றி 5000 ஆண்டுகள்தான் ஆகிறது என கூறப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
2) ஒரு திடீர் செயல்பாடு ஒரு உயிரினத்தை அழித்து வேறு ஒரு உயிரினத்தை தோற்றுவிக்கும் என்ற கொள்கையை இந்த கோட்பாடு முன்வைப்பதால், இந்த இயற்கை நிகழ்வுகள் யாவும் முன்முடிவு செய்யப்பட்ட ஒரு விசயத்திற்காக நிகழ்கிறது என்ற தோற்றத்தை அது ஏற்படுத்துகிறது. ஆக இறைமறுப்பை முன் நிறுத்தும் பரிணாமவியலாளர்களால் இந்த கோட்பாட்டை ஜீரணிக்க சிறிது சிரமமாக இருப்பதில் வியப்பேதும் இல்லை.
ஆனால் விதி அவர்களை விடுவதாக இல்லை. இன்றும் இந்த கோட்பாடு கூறும் விளைவுகளின் சுவடுகளை படிமங்கள்(fossil) கொண்டிருக்கின்றன. டைனோசர் போன்ற உயிர்களின் பேரழிவிற்கு இத்தகைய இயற்கை சீற்றங்களே குறிப்பாக விண்கல் மோதலே காரணமாக யூகிக்கப்படுகிறது.
பல ஆயிரம் ஆண்டுகள் நிலவியல் மாற்றங்களை சில மணிநேரங்களில் சுனாமி, நிலநடுக்கம், விண்கல் மோதல் போன்ற இயற்கை சீற்றங்கள் தோற்றுவித்துவிடுவதும், அதை இன்றும் நாம் காண்முடிவது பரிணாமவியலாளர்களை சற்று உறுத்தத்தான் செய்கிறது. ஆனால் இதில் கூத்து என்னவென்றால் இதே போன்ற திடீர் வெடிப்புக்கள் உயிர் அழிவுகள் அல்ல உயிர் தோற்றங்கள் உயிர்படிமங்களிலும் (fossil) காணப்படுவது படிவளர்ச்சி கொள்கையை போற்றும் பரிணாமவியலாளர்களுக்கு சம்மட்டி அடிதான். ஆனால் இதே நிலைதான் பரிணாம கோட்பாட்டின் மையத்திலேயே இருக்கிறது என்பதை இன்ஷா அல்லாஹ் வரும் தொடர்களில் காண்போம்.
Ref:
1. P.No.5 ,Evolution by Mark Ridley
2. P.No.304, The Growth of Biological Thought: Diversity, Evolution, and Inheritance