பக்கங்கள் செல்ல

Showing posts with label உரை மாறுபாடுகள். Show all posts
Showing posts with label உரை மாறுபாடுகள். Show all posts

Wednesday, September 4, 2024

திருச்சபை பிதாக்களின் மேற்கோள்களும் காணாமல் போன தேவ வாக்குகளும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

திருச்சபை பிதாக்களின் மேற்கோள்களும் காணாமல் போன தேவ வாக்குகளும்


    கிறித்தவர்களின் வேதமான புதிய ஏற்பாட்டில், கிறித்தவ திருச்சபை பிதாக்களின் ஆக்கங்களில் காணப்படும் மாறுபட்ட வாசிப்புக்களை சென்ற கட்டுரையில் கண்டிருந்தோம்.(1) இந்த கட்டுரை அதன் தொடர்ச்சி என்று கொள்ளலாம். ஏனென்றால் இந்த தொடரில் திருச்சபை பிதாக்களின் ஆக்கங்களில் காணப்படும், புதிய ஏற்பாட்டில் இல்லாத இயேசுவால் கூறப்பட்ட வசனங்களை காணவிருக்கிறோம், இன் ஷா அல்லாஹ்.

    இஸ்லாமிய கிரந்தங்களில் காணப்படும் மாறுபட்ட குர்ஆன் ஓதல்களை கொண்டுவந்து குர்ஆனின் பகுதிகள் காணாமல் போனதாக உளறிய வாதங்களுக்கு ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக நாம் விளக்கம் கொடுத்திருக்கிறோம்.(2)அந்த வசனங்கள் ஒரு சில அறிவிப்புக்களில் காணப்படுபவை, முஸ்லீம் சமூகத்தினால், பெரும்திரள் மக்களினால் ஓதல் கேட்டல் மூலமாக வாழையடி வாழையாக கடத்தப்பட்ட முத்தவாதீரான கிராத்களில் அவை காணப்படாததினால் அவை நிராகரிக்கப்படுகிறது என்ற தெளிவான, பகுத்தறிவான அளவுகோலை கொண்டு இஸ்லாமிய சமூகம் அதனை நிராகரிக்கிறது என்பதையும் ஒவ்வொரு கட்டுரையிலும் விளக்கி கூறியிருக்கிறோம். இப்படி அறிவார்ந்த விளக்கத்தை புறம் தள்ளும் கிறித்தவ மிசனரிகளின், திருச்சபை பிதாக்களின் ஆக்கங்களில் காணப்படும், புதிய ஏற்பாட்டில் இல்லாத இயேசுவால் கூறப்பட்ட வசனங்களுக்கு அவர்களால் கூறப்படும் அறிவார்ந்த???? விளக்கத்தை எதிர் நோக்கி இந்த கட்டுரையும், இதற்கு முந்தைய கட்டுரையும் உருவாக்கப்பட்டுள்ளது.

✅திருச்சபை பிதாக்களின் சாட்சியமும் புதிய ஏற்பாடும்:


    நற்செய்தி நூல்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகும் போதெல்லாம், இந்த கிறித்தவ திருச்சபை பிதாக்களின் நற்செய்தி நூல்களின் மேற்கோள்கள் அதனை எதிர்கொள்ள மிசனரிகள் பயன்படுத்துவதுண்டு. உதாரணமாக நார்மன் கீஸ்லரின் தனது Baker encyclopedia of christian apologetics பின்வருமாறு கூறுகிறார்
"Of the four gospels alone there are 19,368 citations by the church fathers from the late first century on. This includes 268 by Justin Martyr (100-165), 1038 by Ireneaus (active in the late second century), 1017 by Clement of Alexandria (ca. 155-ca. 220), 9231 by Origen (ca. 185-ca. 254), 3822 by Tertullian (ca. 160s-ca. 220), 734 by Hippolytus (d. ca. 236) and 3258 by Eusebius (ca. 265-ca. 339)
நான்கு சுவிசேஷங்களில் மட்டும் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து சர்ச் பிதாக்களால் 19,368 மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ளன. இதில் தியாகி ஜஸ்டின்-268 (சுமார் 100-165 காலப்பகுதி), ஐரேனியஸ்- 1038 (இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செயல்பாட்டில் இருந்தவர்), அலெக்ஸாண்ட்ரியாவின் கிளெமென்ட்- 1017 (சுமார் 155-. 220 காலப்பகுதி), ஓரிகன்- 9231 (சுமார் 185- 254 காலப்பகுதி) டெர்டுல்லியன்- 3822 (சுமார் 160களில் இருந்து 220 வரையிலான காலப்பகுதி), ஹிப்போலிட்டஸ்-734 (d. ca. 236) மற்றும் யூசிபியஸ் 3258 (சுமார் 265- 339 காலப்பகுதி) ஆகியவை அடங்கும். (Baker-encyclopedia-of-christian-apologetics by Norman L. Geisler Nn, P.No. 18).
        இப்படி நற்செய்தி நூலின் ஆதாரமாக சிலாகித்து காட்டப்படும் திருச்சபை பிதாக்களின் ஆக்கங்களில் இந்த கட்டுரையில் நாம் பட்டியலிட்டுள்ள பின்வரும் இயேசுவின் வார்த்தைகளை இன்றிருக்கும் புதிய ஏற்பாட்டில் இருந்து கிறித்தவ மிசனரிகள் காட்டுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

✔ரோமின் முதலாம் கிளமண்ட் (கி.பி. 30–100):

        For it is written, "Cling to those who are holy; for those who cling to them will themselves be made holy."
    “பரிசுத்தமானவர்களை பற்றிக்கொள்ளுங்கள்; ஏனென்றால், அவர்களை பற்றிக்கொள்பவர்கள் தாங்களும் பரிசுத்தமாக்கப்படுவார்கள்” என்று எழுதப்பட்டுள்ளது (I Clement 46.2)

        For this reason, when you do these things, the Lord has said, "Even if you were nestled close to my breast but did not do what I have commanded, I would cast you away and say to you, 'Leave me! I do not know where you are from, you who do what is lawless.'"

     இந்தக் காரணத்தினாலேயே, நீங்கள் இவற்றைச் செய்யும்போது,. “நீ என் மார்புக்கு அருகில் கூடு கட்டி இருந்தாலும், நான் கட்டளையிட்டதைச் செய்யாமல் இருந்தால், நான் உன்னைத் தூக்கி எறிந்துவிட்டு, 'என்னை விட்டுவிடு! அக்கிரமத்தைச் செய்கிற நீ எங்கிருந்து வருகிறாய் என்று எனக்குத் தெரியாது” என்று கர்த்தர் கூறுகிறார்(II Clement 4.5)

Jesus said to Peter, "After they are dead, the sheep should fear the wolves no longer. So too you: do not fear those who kill you and then can do nothing more to you; but fear the one who, after you die, has the power to cast your body and soul into the hell of fire. (II Clement 6.4)

    இயேசு பேதுருவிடம், "ஆடுகள் இறந்த பிறகு, அவை ஓநாய்களுக்கு அஞ்சப்போவதில்லை அதுபோல்தான் நீங்களும்: உங்களைக் கொல்பவர்களுக்கு அஞ்சாதீர்கள், பிறகு உங்களை ஒன்றும் செய்ய முடியாது; ஆனால் நீங்கள் இறந்த பிறகு, உங்கள் உடலையும் ஆன்மாவையும் அக்கினி நரகத்தில் தள்ளும் ஆற்றலைப் பெற்றவனுக்கு அஞ்சுங்கள்.” என்று கூறினார் (II Clement 6.4)

For the Lord says, "My name is constantly blasphemed among all the Gentiles And again he says, "Woe to the one who causes my name to be blasphemed."And again he says, "Woe to the one who causes my name to be blasphemed."( II Clement 13.2)

        கர்த்தர் கூறுகிறார்: “எல்லாப் புறஜாதிகளிடத்திலும் என் பெயர் தொடர்ந்து நிந்திக்கப்படுகிறது”. மேலும் அவர் மீண்டும் கூறுகிறார்: "என் பெயரை நிந்திக்கச் செய்கிறவனுக்கு கேடுதான்.” மேலும் அவர் மீண்டும் கூறுகிறார், "என் பெயரை நிந்திக்கச் செய்கிறவனுக்கு கேடுதான்.” ( II Clement 13.2)

He says this: "Protect the flesh that you may receive the Spirit (II Clement 14.3)

    "நீங்கள் ஆவியைப் பெறுவதற்கு மாம்சத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று கூறுகிறார்

the Lord hath said, “Even though ye were gathered together to Me in My very bosom, yet if ye were not to keep My commandments, I would cast you off, and say unto you, Depart from Me; I know you not whence ye are, ye workers of iniquity.”( II Clement, The Homily, Chap. iv.—true confession of christ.)

    கர்த்தர் “நீங்கள் என் மடியிலே என்னிடத்தில் கூடிவந்தாலும், நீங்கள் என் கட்டளைகளைக் கடைப்பிடிக்காவிட்டால், நான் உங்களைத் தள்ளிவிட்டு, “என்னைவிட்டுப் போங்கள்; நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் அக்கிரமத்தின் வேலையாட்கள் என்று சொல்வேன்." என்று கூறினார். .”( II Clement, The Homily, Chap. iv.—true confession of christ.)

Ἐπερωτηθεὶς γὰρ ὑπό τινος πότε ἤξει αὐτοῦ ἡ βασιλεία εἶπεν Ὅταν ἔσται τὰ δύο ἓν καὶ τὸ ἔξω ὡς τὸ ἔσω καὶ τὸ ἄρσεν μετὰ τῆς θηλείας οὔτε ἄρσεν οὔτε θήλυ.

The Lord Himself, on being asked by someone when His Kingdom should come, said, When the two shall be one, and the outward as the inward, and the male with the female, neither male nor female. (Clem. Rom. Ep. II. 12.)

    அவரது ராஜ்யம் எப்போது வரும் என்று ஒருவரால் கேட்கப்பட்டதற்கு, “நீங்கள் இரண்டை ஒன்றாக்கும் போது, அகமும் புறமும் ஒன்றாகும் போது, ஆணை பெண்ணாக்கும் போது, ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் ஆக்கும் போது” என்று கர்த்தர் தாமே சொன்னார். (Clem. Rom. Ep. II. 12.)

✔தியாகி ஜஸ்டீன் (கி.பி. 100–165)

Wherefore also our Lord Jesus Christ said, ‘In whatsoever things I shall take you, in these I shall judge you. (Justin Martyr , Dialogue of Justin, Philosopher and Martyr, with Trypho, a Jew,Chapter XLVII.—Justin communicates with Christians who observe the law.)

    ஆகையால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், ‘நான் உன்னை எந்தக் காரியங்களில் ஆட்கொண்டேனோ, அவைகளிலே உன்னை நியாயந்தீர்ப்பேன்’ என்றார்(Justin Martyr , Dialogue of Justin, Philosopher and Martyr, with Trypho, a Jew,Chapter XLVII.—Justin communicates with Christians who observe the law.)

And then, when Jesus had gone to the river Jordan, where John was baptizing, and when He had stepped into the water, a fire was kindled in the Jordan;( Justin Martyr, Dialogue of Justin, Philosopher and Martyr, with Trypho, a Jew,,Chapter LXXXVIII.—Christ has not received the Holy Spirit on account of poverty)

    பின்னர், இயேசு யோர்தான் ஆற்றுக்குச் சென்றபோது, அங்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்து, அவர் தண்ணீரில் இறங்கியபோது, யோர்தானில் நெருப்பு மூண்டது; (Justin Martyr , Dialogue of Justin, Philosopher and Martyr, with Trypho, a Jew,,Chapter LXXXVIII.—Christ has not received the Holy Spirit on account of poverty)

✔ஐரீனியஸ்(கி.பி.130 – 200)

Moreover, when He said, “I have often desired to hear one of these words, and I had no one who could utter it,( Irenaeus, Against Heresies: Book I Chapter XX.—The apocryphal and spurious Scriptures of the Marcosians, with passages of the Gospels which they pervert.)

    மேலும், அவர் கூறியபோது, “இந்த வார்த்தைகளில் ஒன்றை நான் அடிக்கடி கேட்க விரும்பினேன், அதை உச்சரிக்க யாரும் இல்லை.

Lord would teach about those times and would say: The days will come in which vines will grow, each having ten thousand shoots, and on each shoot ten thousand branches, and on each branch ten thousand twigs, and on each twig ten thousand clusters, and in each cluster ten thousand grapes, and each grape, when pressed, will give twenty-five measures of wine. And, when one of those saints takes hold of a cluster, another cluster will clamor: I am better, take me, bless the Lord through me! Similarly a grain of wheat also will generate ten-thousand heads, and each head will have ten thousand grains, and each grain five double pounds of clear and clean flour. And the remaining fruits and seeds and herbiage will follow through in congruence with these, and all the animals using these foods which are taken from the earth will in turn become peaceful and consenting, subject to men with every subjection.( Irenaeus, Against Heresies 5.33.3-4)

    கர்த்தர் அந்தக் காலங்களைப் பற்றிக் கற்பித்து பின்வருமாறு கூறுவார்: திராட்சை கொடிகள் ஒவ்வொன்றும் பத்தாயிரம் தளிர்களும், ஒவ்வொரு தளிரிலும் பதினாயிரம் கிளைகளும், ஒவ்வொரு கிளையிலும் பத்தாயிரம் சிறுகிளைகளும், ஒவ்வொரு சிறுகிளையிலும் பதினாயிரம் கொத்துகளும், ஒவ்வொரு கொத்தும் பத்தாயிரம் திராட்சைகளை கொண்டு வளரும் நாட்கள் வரும். ஒவ்வொரு திராட்சை, பிழியப்படும் போது, இருபத்தைந்து மடங்கு மதுவைக் கொடுக்கும். மேலும், அந்த துறவிகளில் ஒருவர் ஒரு கொத்தை பிடிக்கும்போது, மற்றொரு கொத்து “நான் நன்றாக இருக்கிறேன், என்னை எடுத்துக் கொள்ளுங்கள், என் மூலம் இறைவனை ஆசீர்வதியுங்கள்!” என்று கூச்சலிடும். அதேபோல் ஒவ்வொரு கோதுமை மணியும் பத்தாயிரம் கதிர்களை உருவாக்கும், ஒவ்வொரு கதிரிலும் பத்தாயிரம் மணிகள் இருக்கும், மேலும் ஒவ்வொரு மணியிலும் ஐந்து இரட்டை பவுண்டுகள் தெளிவான மற்றும் சுத்தமான மாவு இருக்கும். மீதமுள்ள பழங்கள் மற்றும் விதைகள் மற்றும் மூலிகைகள் இவற்றுடன் ஒத்துப்போகும், பூமியில் இருந்து எடுக்கப்படும் இந்த உணவுகளைப் பயன்படுத்தும் அனைத்து விலங்குகளும் அமைதியானதாகவும், சம்மதத்துடனும், ஒவ்வொரு கீழ்ப்படிதலுடனும் மனிதர்களுக்கு உட்பட்டு மாறும்.( Irenaeus, Against Heresies 5.33.3-4)

The Lord declared to those who showed themselves ungrateful towards Him: “If ye have not been faithful in that which is little, who will give you that which is great?”( Irenaeus ,Against Heresies: Book II Chapter XXXIV.—Souls can be recognised in the separate state, and are immortal although they once had a beginning.)

    தமக்கு நன்றியில்லாதவர்களாகக் காட்டிக்கொண்டவர்களிடம் கர்த்தர் “சிறியவற்றில் நீங்கள் உண்மையாக இருக்கவில்லையென்றால், பெரியவற்றை யார் உங்களுக்குத் தருவார்?” என்று அறிவித்தார்?” ( Irenaeus ,Against Heresies: Book II Chapter XXXIV.—Souls can be recognised in the separate state, and are immortal although they once had a beginning.)

He elsewhere declares: “The sacrifice to God is an afflicted heart: a sweet savour to God is a heart glorifying Him who formed it.”( Irenaeus , Against Heresies: Book IV, Chapter XVII.—Proof that God did not appoint the Levitical dispensation for His own sake, or as requiring such service; for He does, in fact, need nothing from men.)

    அவர் வேறொரு இடத்தில் கூறுகிறார்: "கடவுளுக்கான தியாகம் துன்புறுத்தப்பட்ட இதயம் ஆகும்: கடவுளுக்கு இனிமையான சுவை அதை உருவாக்கியவரை மகிமைப்படுத்தும் இதயம்.”( Irenaeus , Against Heresies: Book IV, Chapter XVII.—Proof that God did not appoint the Levitical dispensation for His own sake, or as requiring such service; for He does, in fact, need nothing from men.)

✔அலெக்ஸாண்டிரியாவின் கிளமண்ட் (கி.பி. 150 – 215)

When Salome asked, “How long  will death prevail?” the Lord replied, “For as long as you women bear children.” But he did not say this because life is evil or creation wicked; instead he was teaching the natural succession of  things; for everything degenerates after coming into being. (Clement of Alexandria, Miscellanies, 3, 45, 3)

    “எவ்வளவு காலம் மரணம் நிலவும்?” என்று சலோமி கேட்டபோது,  ஆண்டவர், "பெண்களாகிய நீங்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வரை" என்றார். ஆனால் வாழ்க்கை பொல்லாதது அல்லது சிருஷ்டி பொல்லாதது என்பதற்காக அவர் இதைச் சொல்லவில்லை; அதற்குப் பதிலாக அவர் விஷயங்களின் இயற்கையான தொடர்ச்சியைக் கற்பித்தார்; உருவான பிறகு எல்லாமே சீரழிந்து விடுகிறது. (Clement of Alexandria, Miscellanies, 3, 45, 3)

Ειδες, γαρ φησι, τον αδελφον σου; ειδες τον θεον σου.

For he says: Have you seen your brother? You have seen your God. (Clement of Alexandria, Miscellanies 1.19)

    ஏனென்றால் அவர் கூறுகிறார்: நீங்கள் உங்கள் சகோதரனைப் கண்டீர்களா? நீங்கள் உங்கள் கடவுளைப் பார்த்தீர்கள். (Clement of Alexandria, Miscellanies 1.19) 

Αιτεισθε γαρ φησι τα μεγαλα και τα μικρα υμιν προστεθησεται.

For he says: Ask for the great things, and the little things will be added unto you. ( Clement of Alexandria, Miscellanies 1.24)

    “ஏனென்றால், பெரியவைகளைக் கேளுங்கள், சிறியவைகள் உங்களுக்குச் சேர்க்கப்படும்” என்று அவர் கூறுகிறார்.

Και παλιν ο κυριος φησιν• Ο γημας μη εκβαλλετω και ο μη γαμησας μηγαμειτω• ο κατα προθεσιν ευνουχιας ομολογησας μη γημαι, αγαμοςδιαμενετω.

And again the Lord says: Let the one who has married not be cast out, and let the one who has not married not marry. He who has confessed that he will not marry according to his decision of eunuch hood, let him remain unmarried.( Clement of Alexandria, Miscellanies 3.15)

    மீண்டும் ஆண்டவர் கூறுகிறார்: திருமணம் செய்தவர் தூக்கி எறியப்படாமல் இருக்கட்டும், திருமணம் செய்யாதவர் திருமணம் செய்யாமலும் இருக்கட்டும். தன் திருநங்கையாகும் தீர்வின்படி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று வாக்குமூலம் கொடுத்தவர், திருமணமாகாமல் இருக்கட்டும்.( Clement of Alexandria, Miscellanies 3.15)

Ναι, μην και περι αγαπης• Αγαπη, φησι, καλυπτει πληθος αμαρτιων.

Yes, indeed, concerning love also he says: Love covers a multitude of sins.( Clement of Alexandria, The Instructor 3.12; Miscellanies 4.8)

    ஆம், உண்மையில், அன்பைப் பற்றியும் அவர் கூறுகிறார்: அன்பு பல பாவங்களை மறைக்கிறது. (Clement of Alexandria, The Instructor 3.12; Miscellanies 4.8)

Και ο κυριος• Εξελθετε, ειπεν, εκ των δεσμων οι θελοντες.

And the Lord said: Go out, those who wish to do so, from your bonds.( Clement of Alexandria, Miscellanies 6.44)

    “அப்படிச் செய்ய விரும்புகிறவர்களே, உங்கள் கட்டுகளை விட்டு வெளியே போங்கள்.” என்று கர்த்தர் கூறினார். ( Clement of Alexandria, Miscellanies 6.44)

as the Scripture says, in consequence of being overcome the habits which formerly had sway by over him, the habits must be entirely put a stop to, and the soul trained to oppose them.( The Stromata, or Miscellanies. Book VII. Chapter XVI.—Scripture the Criterion by Which Truth and Heresy are Distinguished)

    வேதம் கூறுவது போல், முன்பு அவர் மீது ஆதிக்கம் செலுத்திய பழக்கவழக்கங்களை முறியடித்ததன் விளைவாக, பழக்கங்களை முற்றிலும் நிறுத்த வேண்டும், மேலும் அவற்றை எதிர்க்க ஆன்மா பயிற்சியளிக்க வேண்டும். ( The Stromata, or Miscellanies. Book VII. Chapter XVI.—Scripture the Criterion by Which Truth and Heresy are Distinguished)

Μυστήριον ἐμὸν ἐμοὶ καὶ τοῖς υἱοῖς τοῦ οἴκου μου. 

"For it was not grudging that the Lord in a certain gospel announced 'my mystery for me and for the sons of my house'"( Clem. Alex. Strom. v. 10. 64. Clement of Alex. l. c.; cf. Clementine Hom. xix. 20.)

    "ஏனென்றால், கர்த்தர் ஒரு குறிப்பிட்ட நற்செய்தியில் 'எனக்கும் என் வீட்டுக் குழந்தைகளுக்கும் என் மறைபொருளை' அறிவித்தது வெறுப்புக்காக அல்ல."( Clem. Alex. Strom. v. 10. 64. Clement of Alex. l. c.; cf. Clementine Hom. xix. 20.)

ὁ θαυμάσας βασιλεύσει καὶ ὁ βασιλεύσας ἀναπαυθήσεται

He that wonders shall reign, and he that reigns shall be made to rest.( Clement of Alexandria, Strom. II. ix. 45. Cf. Strom. V. xiv. 96.)

    ஆச்சரியப்படுபவன் ஆட்சி செய்வான், ஆட்சி செய்பவன் ஓய்வெடுக்க வைக்கப்படுவான். .( Clement of Alexandria, Strom. II. ix. 45. Cf. Strom. V. xiv. 96.)

Rightly, therefore, the Scripture in its desire to make us such dialecticians, exhorts us: "Be ye skilful moneychangers," rejecting some things, but retaining what is good. (Clem. Alex., Stromata, I. 28)

    எனவே, வேதம் நம்மை இத்தகைய இயங்கியல்வாதியாக ஆக்க விரும்புகிறது: "நீங்கள் திறமையான பணம் மாற்றுபவர்களாக இருங்கள்," சில விஷயங்களை நிராகரித்துவிட்டு ஆனால் நல்லதைத் தக்கவைத்துக்கொள்ளுங்கள். (Clem. Alex., Stromata, I. 28)

"These are they who ply their looms and weave nothing," saith the Scripture(Clemens Alex., Strom., I, 8, 41)

    "இவர்கள் தங்கள் தறிகளை நெசவு செய்து ஒன்றும் நெய்யாதவர்கள்" என்று வேதம் கூறுகிறது. (Clemens Alex., Strom., I, 8, 41)

✔ஓரிகன் (கி.பி.185 – 253)

Και Ιησους γουν φησιν• Δια τους ασθενουντας ησθενουν και δια τουςπεινωντας επεινων και δια τους δειψωντας εδιψων.

And Jesus indeed says: On account of the sick I was sick and on account of the hungry I was hungry and on account of the thirsty I was thirsty.( Origen, On Matthew13.2)

    மேலும் இயேசு உண்மையில் கூறுகிறார்: நோயுற்றவர்களுக்காக நான் நோயுற்றேன், பசியுள்ளவர்களுக்காக நான் பசித்தேன், தாகித்திருந்தவர்களுக்காக நான் தாகமாயிருந்தேன்.( Origen, On Matthew13.2)

εἶπε γὰρ ὁ Ἰησοῦς τοῖς μαθηταῖς αὐτοῦ• Αἰτεῖτε τὰ μεγάλα καὶ τὰ μικρὰ . ὑμῖν προστεθήσεται, καὶ αἰτεῖτε τὰ ἐπουράνια καὶ τὰ ἐπίγεια προστεθή- σεται ὑμῖν. – 

Ask the great things and the small shall be added unto you ask the heavenly things and the earthly shall be added unto you. (Origen de Orat. § 2.)

    பெரியவைகளைக் கேளுங்கள், சிறியவை உங்களோடு சேர்க்கப்படும், பரலோகத்தைக் கேளுங்கள், பூமிக்குரியவை உங்களுக்குச் சேர்க்கப்படும். (Origen de Orat. § 2.)

Αὐτὸς ὁ Σωτήρ φησιν "Αρτι ἔλαβέ με ἡ μήτηρ μου τὸ ἅγιον πνεῦμα ἐν μιᾷ τῶν τριχῶν μου καὶ ἀπήνεγκέ με εἰς τὸ ὄρος τὸ μέγα Θαβώρ. 

The Saviour Himself says, Now took me by one of my hairs my mother the Holy Spirit, and carried me off to the great mountain Tabor.( Origen on John ii. 6.)

    இரட்சகர் தாமே கூறுகிறார், இப்போது என் தாயாகிய பரிசுத்த ஆவியானவர் என் தலைமுடிகளில் ஒன்றை பற்றிக்கொண்டு, பெரிய மலையான தாபோருக்கு என்னை அழைத்துச் சென்றார். ( Origen on John ii. 6.)

✔யூசிபியஸ்(கி.பி. 260-339)

[Cf. Matt. 25:14–30] For the Gospel that has come down to us in Hebrew letters makes the threat not against the one who hid the (master’s) money but against the one who engaged in riotous living. For [the master] had three slaves, one who used up his fortune with whores and flute-players, one who invested the money and increased its value, and one who hid it. The first was welcomed with open arms, the second was blamed, and only the third was locked up in prison. (Eusebius, Theophania, 4, 22)

    எபிரேய எழுத்துக்களில் நமக்கு வந்துள்ள நற்செய்தி (எஜமானின்) பணத்தை மறைத்தவருக்கு எதிராக அல்ல, மாறாக கலகத்தனமான வாழ்க்கையில் ஈடுபட்டவருக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கிறது. அதாவது, [எஜமானுக்கு] மூன்று அடிமைகள் இருந்தனர், ஒருவர் தனது செல்வத்தை வேசிகள் மற்றும் புல்லாங்குழல் வாசிப்பவர்களுடன் செலவிட்டார், ஒருவர் பணத்தை முதலீடு செய்து அதன் மதிப்பை அதிகரித்தார், மற்றொருவர் அதை மறைத்து வைத்தவர். முதலாமவர் இருகரம் விரித்து வரவேற்கப்பட்டார், இரண்டாமவர் குற்றம் சுமத்தப்பட்டார், மூன்றாமவர் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டார். (Eusebius, Theophania, 4, 22)

But [the Lord] taught about the reason for the division of the souls in the houses, as we have found somewhere in the Gospel used by the Jews and written in Hebrew, where he says “I will choose for myself those who are good— those given to me by my Father in heaven.”( Eusebius, Theophania 4, 12)

ஆனால் [கர்த்தர்] வீடுகளில் உள்ள ஆன்மாக்கள் பிரிவதற்கான காரணத்தைப் பற்றி கற்பித்தார், எபிரேய மொழியில் எழுதப்பட்ட யூதர்கள் பயன்படுத்திய நற்செய்தியில் “அங்கு அவர் "நல்லவர்களை நானே தேர்ந்தெடுப்பேன். அவர்கள் பரலோகத்தில் உள்ள என் தந்தையால் எனக்குக் கொடுக்கப்பட்டவர்கள்." என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டோம், ( Eusebius, Theophania 4, 12)

✔ஜெரோம் (கி.பி.342 – 420)

In the Gospel that the Nazareans  and Ebionites use, which I recently translated from Hebrew into Greek, and which most people consider the authentic version of Matthew, the man with a withered hand is described as a mason, who sought for help in words like these: “I was a mason who made a living with my hands; I beseech you, Jesus, restore my health so I do not have to beg for food shamefully.” (Jerome, Commentary on Matthew, 12, 13)

நான் சமீபத்தில் எபிரேய மொழியிலிருந்து கிரேக்க மொழியில் மொழிபெயர்த்த, நசரேயர்களும் எபியோனியர்களும் பயன்படுத்தப்படும், பெரும்பாலான மக்களால் உண்மையான மத்தேயுவின் பதிப்பாக கருதப்படும் சுவிஷேசத்தில், கொத்தனார் என்று விவரிக்கப்படுகிற விழுந்துபோன கையை உடைய மனிதர், இது போன்ற வார்த்தைகளில் உதவி தேடினார். அவை: ‘நான் என் கைகளால் வாழ்க்கை நடத்தும் கொத்தனாராக இருந்தேன். இயேசுவே, என் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நான் உங்களை மன்றாடுகிறேன், அதனால் நான் அவமானகரமான முறையில் உணவுக்காக பிச்சை எடுக்க வேண்டியதில்லை.’ என்பதாகும். (Jerome, Commentary on Matthew, 12, 13)

In the Gospel we have often referred to, we read that “the enormous lintel of the temple was broken and split apart.”( Jerome, Commentary on Matthew 27, 51)

நாம் அடிக்கடி குறிப்பிடும் நற்செய்தியில், "கோயிலின் மகத்தான கதவின் விட்டம் உடைந்து பிளவுபட்டது" என்று வாசிக்கிறோம். ( Jerome, Commentary on Matthew 27, 51)

As we read in the Hebrew Gospel, the Lord said to his disciples: “You should never rejoice except when you look upon your brother in love.” (Jerome, Commentary on Ephesians, 5:4)

    நாம் எபிரேய நற்செய்தியில் வாசிக்கும்போது, கர்த்தர் தம்முடைய சீஷர்களிடம் கூறினார்: “உங்கள் சகோதரனை அன்புடன் பார்க்கும் போது தவிர நீங்கள் ஒருபோதும் சந்தோஷப்படவேண்டாம்”

✅இஸ்லாமியர்களாகிய நமது பார்வை:

    இஸ்லாமிய ஆவணங்கள் கூறும் இன்ஜீல் என்ற தலைப்பிட்ட கட்டுரையில் இஸ்லாமிய ஆவணங்களில் காணப்படும் இன்ஜீல் குறித்த பல குறிப்புக்களை முன்வைத்து குர்ஆனில் கூறப்படும் இன்ஜீல் இன்றிருக்கும் புதிய ஏற்பாட்டில் இருந்து மாறுபட்ட நூல் என்பதை விளக்கியிருந்தோம்.(3) அதனை உறுதி படுத்தும் விதமாக மேற்குறிபிட்ட திருச்சபை பிதாக்களின் குறிப்புக்கள் உள்ளன. நமது சிறிய தேடல் பல வசனங்களை கொண்டுவந்தது. சுருக்கம் கருதி அதில் சிலவற்றை மட்டுமே சென்ற இரு கட்டுரைகளிலும் பதிவிட்டுள்ளோம். கிறித்தவர்கள் தங்களது புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல்களை நிறுவ முன்வைக்கும் திருச்சபை பிதாக்களின் குறிப்புக்களில் இன்றைய புதிய ஏற்பாட்டின் நற்செய்தி நூல் அல்லாத நூல்கள் அன்று திருச்சபைகளிலேயே பயன்பாட்டில் இருந்ததையே காட்டுகிறது. மேலும் இதற்கு முந்தைய கட்டுரையில் ஒத்தமை நற்செய்தி நூல்களின் சிக்கல் குறித்தும், அதனை தீர்க்க கிறித்தவ உலகம் படும்பாடினையும், அதற்காக முன்வைக்கப்படும் பல அனுமானங்களையும் கண்டிருந்தோம். அந்த அனுமானங்களில் பல ஒத்தமை நற்செய்தி நூல்கள் முன்னிருந்த நற்செய்தி நூலில் இருந்து எழுதப்பட்டதாக கூறுவதை விளக்கியும் இருந்தோம்.(4) அவர்களது அனுமானங்கள் கூறுவதை உறுதி படுத்துவதாய் மேலே உள்ள திருச்சபை பிதாக்களின் குறிப்புக்கள் உள்ளன.  

    நற்செய்தி நூல்களின் வசனங்கள் பல கிறித்தவ திருச்சபை பிதாக்களின் ஆக்கங்களில் மேற்கோள்களாக காணப்படுவதால் அவர்களது கூற்றுக்கள் நற்செய்தி நூல்களுக்கு ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது. அதே திருச்சபை பிதாக்களின் ஆக்கங்களில் தான் முன்சென்ற கட்டுரையின் மாறுபட்ட வாசிப்புக்களும், புதிய ஏற்பாட்டிலேயே இல்லாத பல இயேசுவின் வார்த்தைகளும் காணப்படுகிறது. மாறுபட்ட கிராஅத்களில் எது அங்கிகரிக்கப்பட்டது என்பதற்கு இஸ்லாமிய சமூகத்தின் வரலாற்று ஆவணங்கள் தெளிவாக அதனை நிர்ணயித்திருக்கும் போது   மாறுபட்ட  வாசிப்புக்கள் இருப்பதாலேயே குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று கூறித்திரியும் கிறித்தவ மிசனரிகள், இப்படி மாறுபட்ட பல வசனங்களும், புதிய ஏற்பாட்டில் இல்லாத வசனங்களும் கிறித்தவ திருச்சபை பிதாக்களின் ஆக்கங்களில் காணப்படுவதற்கு கிறித்தவ மிசனரிகளின் பார்வையில் புதிய ஏற்பாடும் பாதுகாக்கப்படவில்லை என்ற முடிவிற்குத்தான் வரவேண்டும். ஆரம்ப கால கி.பி. 4ம் நூற்றாண்டு வரையுள்ள கிறித்தவ திருச்சபை பிதாக்கள் நற்செய்தி நூல்களின்  பல வசனங்களை தங்களது ஆக்கங்களில் மொத்தமாக 19,368 தடவை மேற்கோள்காட்டியுள்ளார்கள் என்று பெருமை பேசுபவர்கள், அதே பிதாக்கள் இப்படி நற்செய்தி நூல்களில் இல்லாத இயேசுவின் வாக்குகளை மேற்கோள் காட்டியுள்ளதற்கு என்ன கூறுவார்கள்.??? மேலும் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கயஸ் போன்றவர்களை பொறுத்தவரை வெளிப்படுத்தின விஷேசம் (ஆதாரம்:கத்தோலிக்க என்ஸைக்லோபீடியா)(5) மற்றும் யோவானின் படியான சுவிஷேசம் ஆகியவை செரிந்தஸினால் எழுதப்பட்டது. அது நிராகரிக்கத்தக்கது.(Gaius:The oxford dictionary of the christian church edited by F.L.Cross).  இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது கிறித்தவ ஆரம்பகால திருச்சபைகள் கைகளில் வைத்திருந்த ஏடுகள் இன்றைய புதிய ஏற்பாட்டில் இருந்து மாறுபட்டவை என்பது தெளிவாக தெரிகிறது. மேற்குறிபிட்ட வசனங்கள் மரபுகளின் தொகுப்பு நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை அல்ல. திருச்சபை பிதாக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தங்களது ஆக்கங்களில் மேற்கோள் காட்டியவை. 

    மேலும் மேற்குறிபிட்ட அட்டவணையில், பல இடங்களில் எழுதப்பட்ட ஏடுகளில் இருந்தும், பெரும்பான்மை மக்களால் ஏற்கப்பட்ட பதிப்புகளில் இருந்தும் கூறுவதாக திருச்சபை பிதாக்களால் மேற்கோள் காட்டப்படுகிறது. இன்றிருக்கும் நற்செய்தி நூல்களை இவர்கள் மேற்கோள் காட்டுவதால் அது ஆதாரமாகும் என்று வாதிட்டால், எபியோனைட்டுகள் போன்ற பேதக்காரர்களின் ஏடுகளை ஏற்கத்தயரா???? அல்லது யோவான் நற்செய்தி நூல் கூறுவது போல் நற்செய்தி நூல்கள் அனைத்தும் அரைகுறையான வேதம்தானா?????. இயேசுவின் பல வசனங்கள் மாற்றப்பட்டும், துளைந்தும் போய்விட்டதாக இதன்மூலம் தெரிகிறது . அல்லது இவர்களது மேற்குறிபிட்ட கூற்றுக்கள் அனைத்தும் நிராகரிக்கத்தக்கவை என்று கூறி, பொய்யர்களின் கூற்றுக்கள்தான் எங்களது புதிய ஏற்பாட்டின் இருப்பிற்கான ஆதாரங்களில் ஒன்று என்று மிசனரிகள் கூறுவார்களோ??? அப்படியும் கூறமுடியாது.  கிறித்தவ புதிய ஏற்பாட்டை பொறுத்தவரை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்தும் ஆவி இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு வந்துவிட்டது.

சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். (யோவான் 16:13-14).
    பல நூற்றாண்டாக இந்த ஆவி திருச்சபை பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை என்றாகிவிடும். எனவே திருச்சபை பிதாக்களின் கருத்துக்களை ஏற்கமாட்டோம் என்று கூறியெல்லாம் தப்ப இயலாது. (பரிசுத்த ஆவி குறித்து பார்க்கையில் இன்னும் விளக்கமாக கிறித்தவத்தில் இறைசெய்தி வருகை மற்றும் சத்தியத்தை பிரித்துக்காட்டுவது குறித்து காணவிருக்கிறோம் இன் ஷா அல்லாஹ்.) ஜேரோம், ஓரிகன் போன்றவர்கள் எல்லாம் முன்னிருந்த அப்போகிரைப்பாக்களையே ஏற்க மறுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.(6) வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும். (லூக்கா 16:17) என்று கூறும் புதிய ஏற்பாட்டில், இயேசுவின் வாக்குகள் பல காணவில்லை, பல வசனங்களில் பல வார்த்தைகளை காணவில்லை எனும் போது புதிய ஏற்பாடு எப்படி வேதமாகும். இறைவனின் வேதத்தை பாதுகாக்க தவறிய ஒரு சமூகமாக கிறித்தவ சமூகம் இன்று நிற்கிறது என்பதுதான் நிதர்சனம்… அல்லாஹூ அஃலம். 

Monday, August 19, 2024

கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கிறித்தவ திருச்சபை பிதாக்களும் மாறுபட்ட புதிய ஏற்பாடும்

        கிறித்தவ மிசனரிகள் இஸ்லாமியர்களின் அல்குர்ஆனின் பாதுகாப்பு குறித்து விமர்சனம் செய்கையில் கண்டிப்பாக குர்ஆனின் ஹஃப்ஸ் வர்ஸ் போன்ற மாறுப்பட்ட ஓதல் முறைகள் குறித்து விமர்சனம் செய்து அதன் காரணத்தினால் குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை என்று முடிவிற்கு வருவார்கள். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த மாறுபட்ட ஓதல் முறை என்பது அல்லாஹ்வால் அங்கிகரிக்கப்பட்டு நபி(ஸல்) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்ட மாறுபட்ட ஓதல் முறை என்பதையும், அது இன்றுவரை முத்தவாதிரான ஓதல் முறைகளாக இன்றும் இருப்பது குறித்தும், அதன் சங்கிலி தொடர் குறித்தும் தெளிவாக விளக்கி பதிலளித்தும் உள்ளோம்.(1)(2) ஹதீஸ்களில் காணப்படும் மாறுபட்ட ஓதல் முறைகள் குறித்த விமர்சனத்தில் அவை முத்தவாதிரான கிராத்துடன் ஒத்தமையாமல் இருக்கும் பட்சத்தில் அந்த ஹதீஸ்களை பலவீனமானது என்பதையும் விளக்கியும் இருக்கிறோம். இன்றும் அல்குர்ஆன் கல்லூரிகள், பயிலும் மாணவரான காரீ, யாரிடம் இருந்து இந்த ஓதலை பெற்றார் என்பதை நபி(ஸல்) அவர்கள் வரை செல்லும் முறியாத அறிவிப்பாளர் தொடரை தாங்கி நிற்கும் சான்றிதழ்களாக வழங்கி வருகின்றன. வாழையடி வாழையாக யார் யாரிடம் இருந்து இந்த ஓதலை கற்றார் என்பதை முழு விவரமாக குறிப்பிட்டு இன்றும் இஸ்லாமிய கல்லூரிகள் சான்றிதழ்களை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கல்லூரிகளால் வழங்கப்பட்ட சில இஜாஸாக்களை கீழே இணைக்கிறோம்.

    ஒரு சாதரண கூகுள் தேடல் கூட இந்த இஜாஸாக்கள் குறித்த விக்கிபீடியா போன்ற தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளதை காட்டுகிறது. இஸ்லாமியர்களாகிய நாம் குர்ஆனின் மாறுபட்ட ஓதல்களில் எது சரியானது என்பதை உறுதி படுத்திக்கொள்ள தீர்க்கமான அளவீடுகளை கொண்டிருக்கிறோம் என்பதையும், அல்லாஹ் தனது வேதத்தை எவ்வாறு பாதுகாத்துள்ளான் இந்த சமூகத்தின் அளப்பரிய அக்கறையின் மூலம் என்பதையும் மேலே உள்ள இஜாஸாக்கள்(சான்றிதழ்கள்) படம் பிடித்து காட்டுகிறது. அல்லாஹு அக்பர்.

    இவ்வளவு தெளிவான சான்றுகள் கொண்டு விளக்கிய பிறகும், குர்ஆன் பாதுகாக்கப்பட வில்லை என்று கூறித்திரியும் கிறித்தவ மிசனரிகள் எப்படி மாறுபட்ட புதிய ஏற்பாட்டின் வாசிப்புக்களில் சரியானதை உறுதி படுத்தினார்கள், படுத்துகிறார்கள் என்பதை இந்த கட்டுரையில் இன் ஷா அல்லாஹ் பார்ப்போம். அல் குர்ஆனில் இடம்பெறும் குத்தீபு, குஃத்தீபு மாறுபட்ட ஓதல் முறைபற்றி மணிக்கணக்கில் விமர்சனம் செய்தவர்கள், இவர்களின் புதிய ஏற்பாட்டின் மாறுபட்ட வாசிப்பிற்கு என்ன விளக்கம் கொடுப்பார்கள் என்பதை பார்ப்போம். என்ன மாறுபாடு ஏற்பட்டாலும் மைய கருத்து மாறாது என்ற வாதம் குர்ஆனின் மாறுபட்ட கிராத்திற்கும் பொருந்தும் எனும் போதிலும் இன்றும் குர்ஆன் பாதுக்காக்கப்படவில்லை என்று கூறித்திரியும் கிறித்தவ மிசனரிகளின் புதிய ஏற்பாட்டை அதே அளவீட்டை கொண்டு அளக்கப்போகிறோம்., குர்ஆனைவிட மிக தீர்க்கமான வாத்தையை கொண்டு புதிய ஏற்பாடு வேத்தின் பாதுகாப்பு குறித்த விசயத்தில் பேசுகிறது என்பதை நாம் முன்பே கண்டிருக்கிறோம். மாறுபட்ட குர்ஆன் ஓதலை நிர்ணயிக்க எப்படி அறிவிப்பாளர் தொடருடன் கூடிய தீர்க்கமான அளவீடுகளை நாம் முன்வைக்கிறோமோ அதே போன்று எதாவது அளவீடுகளை இவர்களின் முன்னோர்களும் இவர்களும் கொண்டிருக்கிறார்களா என்பதை இந்த கட்டுரையில் விளக்க உள்ளோம். 

சபைப்பிதாக்களை சாட்சிக்கு அழைக்கும் கிறித்தவர்கள்:

    முன்சென்ற கட்டுரைகளில் புதிய ஏற்பாட்டு நூலின் பாதுகாப்பு குறித்து காணும்போது சபைபிதாக்களின் ஆதாரங்களின் அவல நிலையை படம் பிடித்து காட்டி இருந்தோம். வரலாற்று ஆதாரங்களின் அவல நிலையும், நற்செய்தி நூல்களின் அரைகுறை தகவல்களும் நற்செய்தி நூல்களின் நிலையை கேள்விக்கு உள்ளாக்குவதால் கிறித்தவ உலகம் அதனை எதிர் கொள்ள, இந்த சபை பிதாக்களின் எழுத்துக்களில் இருக்கும் நற்செய்தி நூல்களின் மேற்கோள்களை காட்டி நற்செய்தி நூல்கள் ஆதி காலம் தொட்டே புலக்கத்தில் இருப்பவை என்று நிறுவுவதற்கு முயல்கின்றனர். இந்த முயற்சி எவ்வளவு பலவீனமானது என்பதையும் சேர்த்து இந்த கட்டுரையில் காண இருக்கிறோம். அதாவது இவர்கள் கூறும் சபைப்பிதாக்கள் இன்றிருக்கும் நற்செய்தி நூல்களின் வசன்ங்களை மட்டும் மேற்கோள் காட்டவில்லை, மாறாக இன்னும் இன்றைய புதிய ஏற்பாட்டில் இல்லாத பல வசனங்களையும், இன்றிருக்கும் நற்செய்தி நூல்களின் வசனங்களின் மாறுபட்டவைகளையும் மேற்கோள்காட்டியுள்ளனர். இந்த கட்டுரையில் மாறுபட்ட வாசிப்புக்கள் குறித்து காணவிருக்கிறோம். இந்த மாறுபட்ட வாசிப்பு குறித்த தொகுப்பினை Dr. J. A. Moorman அவர்களது Early Manuscripts, Church Fathers, & the Authorized Version என்ற நூலில் இருந்து காட்டவிருக்கிறோம். CHAPTER FIVE: THE DIGEST: 149 DOCTRINAL PASSAGES “DISTINCTLY BYZANTINE” என்ற பகுதியில் கிட்டதட்ட KJVல் இருந்து NIVல் மாறுபடும் 149 வசனங்களை சபைப்பிதாக்களின் மேற்கோள்களுடன் தொகுத்து வழங்கியுள்ளார். அதில் சிலவற்றை மட்டும் கீழே தருகிறோம்.

வ.
எண்
வசனம் மாறுபட்ட வாசிப்பு -1  மற்றும் ஆதாரம் மாறுபட்ட வாசிப்பு -2  மற்றும் ஆதாரம்
1. மத்தேயு 5.22
That whosoever is angry with his brother without a cause shall be in danger of the Judgment.

Wednesday, November 8, 2023

முரண்பாட்டின் மொத்த உருவம் ஆர்தர் ஜெஃப்ரி

 بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

முரண்பாட்டின் மொத்த உருவம் ஆர்தர் ஜெஃப்ரி

    நாம் சென்ற தொடரில் அர்தர் ஜெஃப்ரி தனது நூலின் தலைப்பிலேயே எவ்வளவு மோசடிகளை கட்டவிழ்துள்ளார் என்று கண்டோம். இந்த கட்டுரையில் அவர் குர்ஆனின் தொகுப்பு குறித்து எவ்வாறு வரலாற்று மோசடிகளை செய்துள்ளார் என்பதையும் எப்படி தனக்குத்தானே முரண்படுகிறார் என்பதையும் காண்போம், இன் ஷா அல்லாஹ்.
  

முதல் பக்கத்திலேயே......

மிக சுருக்கமாக மேலே குறிப்பிடும் கருத்து என்னவென்றால
  1. குர்ஆன் குறித்த விசாரணை இன்னும் குழந்தை பருவத்தில்தான் இருக்கிறதாம்.
  2. இஸ்லாமிய வட்டத்தில் இது அதிக கவனத்தை ஈர்க்கவில்லையாம் காரிகளின் அதிகரிப்பு, இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் இந்த ஆர்வம் இருந்ததற்கு ஒரு சான்றாம்.
  3. உரையை இப்னு முக்லா மற்றும் இப்னு ஷா ஹி.322 நிலைநிறுத்திய பிறகு அதாவது ஹி. 328 பிறகு அந்த ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. 
    இவ்வாறு ஆர்தர் ஜெஃப்ரி தனது புத்தகத்தின் முதல் பக்கத்தில் புலம்பி தள்ளியுள்ளார். ஆனால் இப்படி எல்லாம் குர்ஆனில் உரைமாறுபாடுகள் இருந்ததாக ஆய்வு செய்த ஆர்தர் ஜெஃப்ரி, அவரது நூலின் ஆய்விற்கு துணைக்கு எடுத்த ஆதார நூல்கள் எல்லாம் எந்த காலத்தை சார்ந்தவை என்று பார்தோம் என்றால் இவரது முரண்பாடு எத்தகையது என்பது நமக்கு புரியும். 

    நாம் சென்ற தொடரில் ஆர்தர் ஜெஃப்ரி உரை மாறுபாடுகளை கண்டறிய அவர எடுத்துக்கொண்ட ஆதார நூல்களின் பட்டியலை நாம் கொடுத்திருந்தோம். அதன் ஆசிரியர்களின் காலத்தை இங்கு பதிவிடுகிறோம். 






         ஆர்தர் ஜெஃப்ரி 32 நூல்களை ஆதாரநூல்களாக காட்டியுள்ளார். அதில் 3 நூல்கள் மேற்கத்திய ஆய்வாளர்களின் நூல்கள். ஏனைய 29 நூல்களில் ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டிற்கு முன்னுள்ள நூல்கள் 6. மீதம் இருக்கும் 23 நூல்கள் 4ம் நூற்றாண்டிற்கு பின்னுள்ளவை. ஹி. 328 பிறகு மாறுபட்ட குர்ஆன் ஓதல் குறித்த மக்களின் ஆர்வம் முடிவிற்கே வந்துவிட்டது என்பது எல்லாம் வடிகட்டிய பொய். ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டிற்கு பிறகு எழுதப்பட்ட இஸ்லாமிய நூல்களையே தனக்கு ஆதாரமாக வைத்துக்கொண்டு இப்படி ஆர்தர் ஜெஃப்ரி முன்னுக்கு பின் முரணாக உளறுவது தனது இஸ்லாமோஃபோபியா வாசகர்கள் எப்படி பட்ட குருடர்கள் என்பதை நன்கு அறிந்திருந்தார் என்று வேண்டுமானால் ஆச்சரியம் கொள்ளலாம்!!!!!

அபூபக்ர்(ரலி) அவர்களது தொகுப்பு அவரது தனிநபருக்கான தொகுப்பா????

That Abû Bakr was one of those who collected the revelation material was doubtless true. He may possibly have inherited material that the Prophet had stored away in preparation of the Kitâb. That he ever made an official recension as the orthodox theory demands is exceedingly doubtful. His collection would have been a purely private affair, just as quite a few number of Companions of the Prophet had made personal collections as private affairs. (Materials For The History Of The Text Of The Quran The Old Codices P.No.6-7)
        மேற்குறிபிட்ட அபூபகர்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பு குறித்த செய்தியில் மிகப்பெரிய ஒரு கற்பனையை கட்டவிழ்த்துள்ளார் ஆர்தர் ஜெஃப்ரி. அதாவது குர்ஆனை தொகுக்க வேண்டும் என்பது அபூபக்ர்(ரலி) அவர்களது தனிப்பட்ட தேவைக்கு என்பது வடிகட்டிய பொய். யமாமா யுத்தத்திற்கு பிறகு குர்ஆனை பாதுக்காக்க வேண்டும் என்பதற்காக அபூபகர்(ரலி) எடுத்த முயற்சியின் பயன்தான் முதல் எழுத்து வடிவிலான , இரு அட்டைக்கு மத்தியில் இருக்கும் குர்ஆன் முஸ்ஹஃப் என்பது ஆதாரப்பூர்வ ஹதீஸ்களினால் நிறுவப்பட்ட ஒன்று. அடுத்ததாக இவர் கற்பனையான சில நபித்தோழர்கள் அவ்வாறு வைத்திருந்தார்கள் என்பதும் பொய்.
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﺎ ﻋﻤﺮ ﺑﻦ ﺷﺒﺔ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺃﺣﻤﺪ اﻟﺰﺑﻴﺮﻱ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ، ﻋﻦ اﻟﺴﺪﻱ، ﻋﻦ ﻋﺒﺪ ﺧﻴﺮ، ﻋﻦ ﻋﻠﻲ ﻗﺎﻝ: ﺃﻋﻈﻢ اﻟﻨﺎﺱ ﺃﺟﺮا ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻓﺈﻧﻪ ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻊ ﺑﻴﻦ اﻟﻠﻮﺣﻴﻦ
அலி(ரலி) கூறினார்கள், “முஸ்ஹஃப் விஷயத்தில் மிகப்பெரும் வெகுமதிக்கு உரியவர் அபூபக்ர்(ரலி) அவர்கள்தான். அவர்தான் முதன் முதலில் இரண்டு அட்டைகளுக்கு நடுவில் தொகுத்தவர் ஆவார்.”(அல் மஸாஹிஃப் 1/49)
        முழு தொகுப்பை வைத்திருந்த இவர் கூறும் அந்த சில நபித்தோழர்கள் யார் யார் என்று இவர் பட்டியலிடுவாரா???. அப்படி இருந்ததற்கான ஆதாரப்பூர்வ ஹதீஸ்கள் எதுவும் இல்லை என்பதே உண்மை. ஆனால் இப்படியான ஒரு பொய்யை ஆர்தர் ஜெஃப்ரி வலிந்து திணித்ததில் ஒரு காரணம் இருக்கிறது.

உஸ்மான்(ரலி) கெனானைஸ் செய்தாரா...பிரதி எடுத்தாரா???

It is quite clear that the text which Uthmân canonized was only one out of many rival texts, and we need to investigate what went before the canonical text.[7] There can be no doubt that the text canonized by Uthmân was only one among several types of texts in existence at the time.    (Materials For The History Of The Text Of The Quran The Old Codices –Preface P.No.X )
        மேற்குறிபிட்ட ஆர்தர் ஜெஃப்ரியின் கருத்தில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் “உஸ்மான்(ரலி) அன்று இருந்த பல போட்டி உரைகளில் ஒன்றை canonize செய்தார்” என்ற கருத்தியலைத்தான். இது எந்த அளவிற்கு சரி என்பதை இது குறித்த ஹதீஸ்களில் இருந்து காண்போம்.

حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، حَدَّثَهُ أَنَّ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ قَدِمَ عَلَى عُثْمَانَ وَكَانَ يُغَازِي أَهْلَ الشَّأْمِ فِي فَتْحِ إِرْمِينِيَةَ وَأَذْرَبِيجَانَ مَعَ أَهْلِ الْعِرَاقِ فَأَفْزَعَ حُذَيْفَةَ اخْتِلاَفُهُمْ فِي الْقِرَاءَةِ فَقَالَ حُذَيْفَةُ لِعُثْمَانَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَدْرِكْ هَذِهِ الأُمَّةَ قَبْلَ أَنْ يَخْتَلِفُوا فِي الْكِتَابِ اخْتِلاَفَ الْيَهُودِ وَالنَّصَارَى فَأَرْسَلَ عُثْمَانُ إِلَى حَفْصَةَ أَنْ أَرْسِلِي إِلَيْنَا بِالصُّحُفِ نَنْسَخُهَا فِي الْمَصَاحِفِ ثُمَّ نَرُدُّهَا إِلَيْكِ فَأَرْسَلَتْ بِهَا حَفْصَةُ إِلَى عُثْمَانَ فَأَمَرَ زَيْدَ بْنَ ثَابِتٍ وَعَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ وَسَعِيدَ بْنَ الْعَاصِ وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الْحَارِثِ بْنِ هِشَامٍ فَنَسَخُوهَا فِي الْمَصَاحِفِ وَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ الْقُرَشِيِّينَ الثَّلاَثَةِ إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي شَىْءٍ مِنَ الْقُرْآنِ فَاكْتُبُوهُ بِلِسَانِ قُرَيْشٍ فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ فَفَعَلُوا حَتَّى إِذَا نَسَخُوا الصُّحُفَ فِي الْمَصَاحِفِ رَدَّ عُثْمَانُ الصُّحُفَ إِلَى حَفْصَةَ وَأَرْسَلَ إِلَى كُلِّ أُفُقٍ بِمُصْحَفٍ مِمَّا نَسَخُوا وَأَمَرَ بِمَا سِوَاهُ مِنَ الْقُرْآنِ فِي كُلِّ صَحِيفَةٍ أَوْ مُصْحَفٍ أَنْ يُحْرَقَ‏.

         அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார் : ஹுதைஃபா யமான்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தின்போது மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள். (அப்போது) உஸ்மான்(ரலி), அர்மீனியா மற்றும் அஃதர் பைஜான் ஆகிய நாடுகளை இராக்கியருடன் சேர்ந்து வெற்றிகொள்வதற்கான போரில் கலந்துகொள்ளுமாறு ஷாம்வாசிகளுக்கு ஆணை பிறப்பித்தார்கள். ஹுதைஃபா(ரலி) அவர்களை, (இராக் மற்றும் ஷாம் நாட்டு) முஸ்லிம்கள் குர்ஆனை ஓதும் முறையில் கருத்துவேறுபாடுகொண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனவே, ஹுதைஃபா(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களிடம், 'யூதர்களும் கிறிஸ்தவர்களும் (தங்களின் வேதங்களில்) கருத்து வேறுபாடுகொண்டது போல் இந்தச் சமுதாயமும் இந்த(த் திருக்குர்ஆன்) வேதத்தில் கருத்து வேறுபாடு கொள்வதற்கு முன்பே இவர்களைக் காப்பாற்றுங்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அவர்களே!' என்று கூறினார்கள். எனவே, உஸ்மான்(ரலி) (அன்னை) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் ஆளனுப்பி 'தங்களிடமுள்ள குர்ஆன் பதிவை எங்களிடம் கொடுத்து அனுப்புங்கள்! நாங்கள் அதனைப் பல பிரதிகள் படியெடுத்துவிட்டு திருப்பித் தந்து விடுகிறோம்' என்று தெரிவித்தார்கள். (ஸஹீஹ் புகாரி 4987)

மேற்குறிபிட்ட ஹதீஸில் இரண்டு கருத்துக்கள் உள்ளன

1.இராக் வாசிகள் ஓதும் முறையில் (الْقِرَاءَةِ) வேறுபாடு கொண்டார்கள்.

2.உஸ்மான்(ரலி) முன்பே இருந்த முஸ்ஹஃபை பிரதி மட்டுமே எடுத்தார். 

கருத்து 1 கூறும் செய்தி:
        மேற்குறிபிட்ட செய்தியில் எந்த இடத்திலாவது இரண்டு முஸ்ஹஃப்களை வைத்து அல்லது குர்ஆன் உரைகளை வைத்துக்கொண்டு கருத்து வேறுபாடு கொண்டார்கள் என்றிருக்கிறதா? இல்லை. எனவே உரையை உஸ்மான் கெனானைஸ் செய்தார் என்ற கருத்தே சுத்த உளறல் அல்லது திரிபு வாதம்.

கருத்து 2 கூறும் செய்தி:
    உஸ்மான்(ரலி) முன்பே இருந்த பிரதியை ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் இருந்து பெற்று பிரதி எடுத்தார்கள் என்று கூறுகிறது. மேலும் இவ்வாறு பிரதி எடுத்தப்பிறகு மீண்டும் ஒருமுறை உஸ்மான்(ரலி) அவர்களே அதனை சரியும்பார்த்தார்கள்.
ﻗﺎﻝ ﺯﻳﺪ:…. ﻭﺃﺭﺳﻞ ﻋﺜﻤﺎﻥ ﺇﻟﻰ ﺣﻔﺼﺔ ﺃﻥ ﺗﻌﻄﻴﻪ اﻟﺼﺤﻴﻔﺔ ﻭﺣﻠﻒ ﻟﻬﺎ ﻟﻴﺮﺩﻧﻬﺎ ﺇﻟﻴﻬﺎ، ﻓﺄﻋﻄﺘﻪ، ﻓﻌﺮﺿﺖ اﻝﻣﺼﺤﻒ ﻋﻠﻴﻬﺎ ﻓﻠﻢ ﻳﺨﺘﻠﻔﺎ ﻓﻲ ﺷﻲء،

        ஸைத்(ரலி), “……உஸ்மான்(ரலி) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம்  எழுத்துப்பிரதியை கொடுத்தனுப்புமாறும் அதனை திருப்பி தந்துவிடுவதாகவும் உறுதியளித்தார்கள். எனவே அதனை அவர்கள் கொடுத்தார்கள். நான் முஸ்ஹஃப்பை அதனுடன் ஒப்பிட்டுகாட்டினேன், அதில் எந்த மாறுபாடும் காணப்படவில்லை” என்று கூறினார்கள்.(ஸரஹ் முஸ்கில் அல் அஸார் 8/128).

        முன்பே இருந்த முஸ்ஹஃப்பை பிரதி எடுத்து அதனை புதிதாக இஸ்லாம் பரவிய அரபி அல்லாத பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார்கள். இந்த உரையை எப்படி சரியான அங்கிகரிக்கப்பட்ட ஓதல் முறைகளின் படி ஓதவேண்டும் என்பதற்கு அதனுடனே காரிகளையும் அனுப்பினார்கள் என்று கிராஅத் குறித்த வரலாறு கூறுகிறது. 

 قال ابو علي"أﻣﺮ ﻋﺜﻤﺎﻥ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﺃﻥ ﻳﻘﺮﺉ ﺑﺎﻟﻤﺪﻧﻲ، ﻭﺑﻌﺚ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ اﻟﺴﺎﺋﺐ ﻣﻊ اﻟﻤﻜﻲ، ﻭاﻟﻤﻐﻴﺮﺓ ﺑﻦ ﺷﻬﺎﺏ ﻣﻊ اﻟﺸﺎﻣﻲ، ﻭﺃﺑﺎ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ اﻟﺴﻠﻤﻲ ﻣﻊ اﻟﻜﻮﻓﻲ، ﻭﻋﺎﻣﺮ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻘﻴﺲ ﻣﻊ اﻟﺒﺼﺮﻱ.

    அபூ அலி "உஸ்மான்(ரலி) ஜைத் இப்னு ஸாபித் அவர்களை மதீனாவில் ஓதும்படி கட்டளையிட்டார்கள், மேலும் அவர் அப்துல்லா பின் அல்-சயீப் அவர்களை மக்காவாசிகளுக்கும், அல்-முகீரா பின் ஷிஹாப் அவர்களை சிரியா வாசிகளுக்கும், அபா அப்துர் ரஹ்மான் அல்ஸுலாமி அவர்களை கூஃபா வாசிகளுக்கும், மற்றும் அமீர் பின் அப்த் அல்-கைஸ் அவர்களை பஸராவாசிகளுக்கும் அனுப்பினார்கள்,” என்று கூறினார்கள். (அல் ஜஹ்பரி அவர்களது ஜமீலா அர்பாப் அல் மராஸித் 1/370)
            உஸ்மான்(ரலி) அவர்களது இந்த செயல் அவர்களது நோக்கத்தை மிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. குர்ஆனின் ஓதலில் ஏற்பட்ட முரண்பாடுகளை சரி செய்ய அதனை நபி(ஸல்) அவர்களால் அங்கிகரிக்கப்பட்ட முறையில் ஓதக்கூடிய காரீகளையும், அதற்கு சான்றாக முதன் முதலில் அபூபகர்(ரலி) அவர்களால் பிரதி எடுக்கப்பட்ட முழு முஸ்ஹஃப்பின் பிரதிகளையும், இஸ்லாமிய அரசு சார்பாக அதன் ஆட்சிக்கு உட்பட்ட அரபுமொழி அல்லாத பிராந்தியத்திற்கும் அனுப்பி வைக்கிறார்கள். இதில் உஸ்மான்(ரலி) குர்ஆனின் உரையை கெனானைஸ் செய்தார் என்ற ஆர்தர் ஜெஃப்ரியின் வாதம் சுத்த பேத்தலாக தெரிகிறது. இந்த பேத்தல் வாதத்திற்கு முட்டு கொடுக்கத்தான் அபூபக்ர்(ரலி) அவர்களது குர்ஆன் தொகுப்பு என்பது தனிமனித தொகுப்பு என்ற கருத்தை முன்பே விதைக்கிறார்…..

 முரண்களின் முழு உருவம் ஆர்தர் ஜெஃப்ரி


ஆர்தர் ஜெஃப்ரியின் இந்த நூல் முழுமையிலும் தனக்குத்தானே பல இடங்களில் முரண்பட்டு பேசுவதையும், தனது நிலையை தானே மறுப்பதுமாக காணமுடிகிறது. அவற்றுள் சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறோம்.

தனது நூலில் இப்னு அபீதாவுத் அவர்களது நூலான கிதாப் அல் மஸாஹிஃப் குறித்து பின்வருமாறு கூறுகிறார்.   

Much of the material given by Ibn Abî Dâwûd regarding the history of the text of the Qur'ân, though extremely unorthodox, yet agrees so closely with the conclusions one had reached from quite other directions that one feels confident in making use of it, however weak orthodoxy may consider its isnâds to be. [ Materials For The History Of The Text Of The Quran The Old Codices –Preface P.No.VIII]

    அதாவது இப்னு அபீதாவூத் அவர்களது நூலில் குர்ஆன் உரை குறித்து வரும் வரலாறு மிகவும் பலவீனமான அறிவிப்பாளர் தொடர்களை உடையவையாக இருந்தாலும், மற்ற கோணங்களின் ஆய்வினால எட்டிய முடிவுகளுக்கு (குறிப்பு:அந்த முடிவுகள் எத்தகையவை என்பதை இறுதியில் காண்போம்) மிக நெருக்கமாக இருப்பதால அதனை ஏற்கலாம் என்ற வாதத்தை முன்வைக்கும் ஆர்தர் ஜெஃப்ரி இதே அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த பாடத்தில் பின்வருமாறு முரண்பட்டு குறிப்பிடுகிறார்.

Variants from the Codex of Anas b. Malik are quoted in quite a number of works on Quranic science, showing that though the variants given from him were few they were famous. In some lists he is given as one of those who had collected Quranic material in the lifetime of the Prophet (Nashr, I, 6). The evidence for this is weak,  [ Materials For The History Of The Text Of The Quran The Old Codices –Preface P.No.215]

        ஏன் மேற்குறிபிட்ட செய்தி பலவீனமானது என்பதற்கு எந்த சான்றுகளையும் முன் நிறுத்த வில்லை. ஆனால் இஸ்லாமிய அறிஞர்கள் அறிவிப்பாளர் தொடர்களையும், குர்ஆன் கற்பிக்கப்பட்ட வரலாற்றையும்  ஆய்வு செய்து பலவீனமான செய்திகளை மறுப்பதை ஏற்க இயலாதாம். சரி மேற்குறிபிட்ட நிலையிலாவது இறுதிவரை நிற்கிறாரா என்றால் அதுவும் இல்லை.
“ஆசிரியரால் குறிப்பிடப்படும் அறிவிப்பாளர் தொடர்களில் இருக்கும் மிகப்பெரிய சிக்கல் என்பது நாம் அனைத்து கட்டுப்பாடுகளை கைகொண்ட பிறகும், அதில் இருக்கும் சிலவை, அறிவிப்பாளர் தொடர்  குறித்து விமர்சிக்கும்  ஆய்வாளர்களிடம் தாக்குபிடிக்கவில்லை. இஸ்லாமிய அறிஞர்களின் துணையயை நாடினாலும் அது எந்த பயனும் தரவில்லை, ஏனென்றால் மரபுவழியில் இருந்து மாறுபடும் வாக்கியத்திற்கான ஒவ்வொரு அறிவிப்பாளர் தொடரும் அடிப்படையில் (அல்லது உண்மையில்) கண்டனத்திற்குரியது என்ற கோட்பாட்டை நம்மால் எதிர்கொள்ள முடியவில்லை.”
            அதாவது ஆர்தர் ஜெஃப்ரி என்ன சொல்றாருனா - இந்த மாதிரி குர்ஆன் உரை மாறுபாடு குறித்த செய்திகளின் அறிவிப்பாளர் தொடர் ஹதீஸ் கலை ஆய்வில் மண்ணை கவ்வுகிறதுனு புலம்புகிறார். இத்தகைய மாறுபாட்டுடன் கூடிய செய்திகளை முஸ்லீம் அறிஞர்கள் ஏற்கவில்லை என்று கூறுகிறார். மேலும் பின்வருமாறு கூறுகிறார்…
A similar problem of accurate transmission naturally attaches to variants themselves. Being uncanonical variants there was none of the meticulous care taken over their transmission such as we find for the canonical readings, and we not infrequently have various forms of the variants attributed to the same Reader in different sources. ( Materials For The History Of The Text Of The Quran The Old Codices P.No.15)
    இதேபோன்ற துல்லியமான கடத்தலுக்கான சிக்கல் இயற்கையாகவே மாறுபாடுகளுடன் தன்னை இணைத்துள்ளது. அங்கீகரிக்கப்படாத மாறுபாடுகளாக அவை இருப்பதால், ஏற்கப்பட்ட ஓதல்களின் கடத்தலுக்கு நாம் பார்ப்பது போன்ற பெரும் கவனம் செலுத்தப்படவில்லை. ஒரே காரீக்கான கூறப்பட்ட மாறுபாடுகளின் பல்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கும் வெவ்வேறு மூலங்கள் அறிதாகவும் நம்மிடம் இல்லை.”
        மாறுபட்ட ஓதல்களை கற்று கற்பிப்பதில் எந்த கவனமும் செலுத்தப்படவில்லை என்று ஆர்தர் ஜெஃப்ரி கூறுகிறார். (குறிப்பு :இந்த இடத்தில் ஏன் இத்தகைய சிரத்தையை உலகின் பல பகுதிகளில் இருந்த மக்கள் எடுத்துக்கொண்டார்கள் என்பதற்கு எந்த அறிவார்ந்த விளக்கத்தையும் ஆர்தர் ஜெஃப்ரி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது). ஆனால் பிரிதொரு இடத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் மாறுபாட்ட ஓதல்களை தஃப்ஸீராக அதாவது விளக்கவுரையாக ஏற்பதாக உளருகிறார்.
Modern Muslim savants almost invariably set aside the variants recorded from the Old Codices on the grounds that they are Tafsîr, or as we would say, explanatory glosses on the Uthmânic text, and they roundly condemn such ancient scholars as Ibn Khalawaih and Ibn Jinnî for not knowning the difference between Qirâ'ât and Tafsîr. It is clear, however that only such Qirâ'ât as were of the kind that could be used for tafsîr had any likelihood of being preserved.( Materials For The History Of The Text Of The Quran The Old Codices P.No.10)
   தற்கால முஸ்லீம் அறிஞர்கள் பழைய எழுத்துப்பிரதிகளில் இருந்து பதிவு செய்யப்பட்ட மாறுபாடுகளை தஃப்சீர் அல்லது நாம் கூறுவது போல், உத்மானிய உரையின் விளக்க உரைகள் என்ற அடிப்படையில் ஒதுக்கி வைத்துள்ளனர், மேலும் கிராத் மற்றும் தஃப்ஸிருக்கு இடையே உள்ள வித்தியாசத்தை அறியாததற்காக இப்னு கலவாய் மற்றும் இப்னு ஜின்னி போன்ற பண்டைய அறிஞர்களை அவர்கள் கடுமையாக கண்டிக்கிறார்கள். எவ்வாறாயினும், தஃப்ஸீருக்குப் பயன்படுத்தக்கூடிய வகையான கிராத் மட்டுமே பாதுகாக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பது தெளிவாகிறது.,
        அதாவது ஆர்தர் ஜெஃப்ரி என்ன கூறுகிறாரென்றால், பதிவு செய்யப்பட்ட மாறுபாடுகள் என்பவை தஃப்ஸீர் விளக்கங்கள். இவை தஃப்ஸீருக்கு பயன்படுவதாலேயே பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். ஒரு இடத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் மாறுபாடுகள் கொண்ட செய்திகளை கண்டனத்திற்குரிய அறிவிப்பாளர் தொடர் கொண்டவை என்று கூறி மறுக்கின்றனர் என்றும், அதனை கடத்த எந்த சிரத்தையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறுகிறார். அதற்கு மாற்றமாக அவை தஃப்ஸீர்கள் என்று அறிஞர்கள் ஏற்கிறார்கள் என்று உளருகிறார். ஒரு சில பக்கங்களுக்குள்ளாகவே தன்னுடைய நிலைபாட்டை பலமுறை மாற்றுகிறார் ஆர்தர் ஜெஃப்ரி என்பது இங்கு தெளிவாக தெரிகிறது. மேற்குறிபிட்டதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு பின்வருமாறு கூறுகிறார்,
Some of the variants in the form in which they have survived to us seem linguistically impossible, and in certain cases this has been noted in the source which quote the variant. The defect is doubtless due to faulty transmission, and it is possible that some of the scholars may even now spot where the corruption lies and restore us to original reading. ( Materials For The History Of The Text Of The Quran The Old Codices P.No.16) 
அவற்றுள் சில மாறுபாடுகள் இன்று நமக்கு கிடைத்திருக்கும் நிலையில், அவை மொழியியல் ரீதியாக சாத்தியமற்றதாகத் தோன்றுகின்றன. மேலும் சில சந்தர்ப்பங்களில் இவை குறிபிடப்படும் மூலங்களிலும் இதையே காணமுடிகிறது. இந்த குறைபாட்டிற்கு தவறான கடத்தலே காரணம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது, மேலும் சில அறிஞர்கள் இப்போது கூட தவறு எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அசல் ஓதலுக்கு நம்மை மீட்டெடுக்கலாம்.
        அதாவது மாறுபட்ட ஓதல்கள் தவறான அறிவிப்பாளர் தொடரை கொண்டிருப்பதாலேயே, அது மொழியியல் ரீதியாக சாத்தியமற்றதாக தோன்றுகிறதாம். இப்படி இரு வாக்கியத்தை கூறி தான் கூறும் மாறுபட்ட ஓதல் முறைகள் அனைத்தும் ஏன் ஏற்கப்படவில்லை என்று சொல்லி தனது நூலிற்கும் நோக்கத்திற்கும் முடிவுரையே எழுதிவிட்டார் சில பக்கங்களில்…. ஆர்தர் ஜெஃப்ரி…
    இன்னும் இதுபோல் பல குருட்டுத்தனமான வாதங்களையும், முரண்பாடுகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு நூல்தான் ஆர்தர் ஜெஃப்ரியின் “MATERIALS FOR THE HISTORY OF THE TEXT OF THE QUR’AN THE OLD CODICES”. அவற்றை பட்டியலிட்டு, பலர் இஸ்லாமிய ஆங்கில வலைதளத்திலும், வலைபூக்களிலும் எழுதியும் உள்ளனர். இப்படி ஓரியண்டலிஸ்ட்கள் மனம் போன போக்கில் முரண்பட்டு உளருவதற்கு ஒரு காரணம் உண்டு. அதனை எட்வர்ட் செய்ட் என்பவர் தனது “Orientalism” என்ற நூலில் உறித்து தொங்கவிட்டுள்ளார். அதில் சில பகுதிகள்.
Orientalism teaches us a great deal about the intellectual dishonesty of dissembling on that score, the result of which is to intensify the divisions and make them both vicious and permanent. Yet an openly polemical and right-minded "progressive" scholarship can very easily degenerate into dogmatic slumber, a prospect that is not edifying either,(Orientalism P.No.327 by Edward Said)
ஓரியண்டலிஸம் அந்த மதீப்பீட்டை சிதைப்பதில் அறிவார்ந்த நேர்மையற்றவைகளை அதிகமாக கற்றுக்கொடுக்கிறது, அதன் விளைவாக பிரிவிணைகளை அதிகப்படுத்தி, அதனை நிரந்தர தீமையாக மாற்றுகிறது. இன்னும் ஒரு வெளிப்படையான விவாதம் மற்றும் சரியான எண்ணம் கொண்ட முற்போக்கு புலமைப்பரிசிலையே மிகவும் எளிமையாக, மீழாத, பிடிவாதமான தூக்கத்தில் வீழ்ந்து சிதைந்துவிடும்,
I consider Orientalism's failure to have been a human as much as an intellectual one; for in having to take up a position of irreducible opposition to a region of the world it considered alien to Its own. Orientalism failed to identify with human experience. Failed also to see it as human experience (Orientalism P.No.328 by Edward Said)
உலகின் ஒரு பகுதியை தனக்கு புறம்பானதாகக் கருதி, மாற்ற முடியாத எதிர்ப்பின் நிலைப்பாட்டை எடுக்க வேண்டியிருப்பதால், நான் ஒரு மனிதனாக ஓரியண்டலிஸத்தின் தோல்வியை அறிவார்ந்த ஒன்றாக பார்க்கிறேன். ஓரியண்டலிசம் மனித அனுபவத்தை அடையாளம் காணத் தவறிவிட்டது. அதனை மனித அனுபவமாக பார்க்கவும் தவறிவிட்டது.
If the knowledge of Orientalism has any meaning, it is in being a reminder of the seductive degradation of knowledge, of any knowledge, anywhere, at any time. Now perhaps more than before.(Orientalism P.No.328 by Edward Said)
ஓரியண்டலிசத்தின் அறிவுக்கு ஏதேனும் அர்த்தம் இருக்குமானால், அது எந்த அறிவையும், எங்கும், எந்த நேரத்திலும் அந்த அறிவினை மயக்கும் சீரழிவை நினைவூட்டுவதாக இருக்கிறது,. இப்போது முன்பை விட அதிகமாக இருக்கலாம்…..
       மேற்குறிபிட்ட பகுதிகளுக்கு நான் எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். மிக எளிமையாக சொல்வதாக இருந்தால் ஓரியண்டலிஸம் என்பது தெளிவாக ஏமாற்றக்கற்று கொடுகத்து, அதன் மூலம் பிரிவிணைகளை ஏற்படுத்தும் ஓர் கோட்பாடு. இத்ததைய ஓரியண்டலிஸத்தின் மட்டமான கோட்பாடுகள்தான் ஆர்தர் ஜெஃப்ரி, மிகப்பெரும் கல்வியையும், பட்டங்களையும், அனுபவத்தையும் பெற்று அறிவூஜீவியாக இருந்த போதீலும், அவரை ஒரு மூடன் போல முரண்படச்செய்திருக்கிறது. ஆர்தர் ஜெஃப்ரியின் அடியோட்டிய கோட்பாட்டின் மேல் அமைக்கப்பட்ட கருத்தியலின் அடிப்படைகளை கொண்டே தற்கால இஸ்லாமோஃபோபுகள்- குர்ஆனின் பாதுகாப்பு குறித்து விமர்சனங்களையும் கேள்விகளையும் எழுப்பிவருகின்றனர். ஒரு சில பக்கங்களிலேயே ஒரு அறிஞனை இவ்வளவு முரணபட்டு உளரச்செய்யும் ஒரு கோட்பாடுதான் இவர்களின் மூலாதாரம் என்றால் இன்றைய இஸ்லாமோஃபோபுகள் மற்றும் கிறித்தவ மிஸனரிகளின் நிலையை எண்ணி பரிதாபம் கொள்ளுவதை தவிர ஒன்றுமில்லை……..                                                                                         அல்லாஹு அஃலம்

Sunday, October 29, 2023

ஆர்தர் ஜெஃப்ரி “ Materials for the History of the Text of the Qur'ān” நூல் ஆய்வு - பாகம் 1

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஆர்தர் ஜெஃப்ரி “ Materials for the History of the Text of the Qur'ān”  நூல் ஆய்வு - பாகம் 1

        நாம் குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பி வரும் விமர்சனங்களுக்கான விடைகளை ஆதாரப்பூர்வமான செய்திகளில் இருந்து வழங்கிவருகிறோம். அதன் ஊடாக இஸ்லாமோஃபோபுகளுக்கு அரைகுறையாக அறிவை போதிக்கும் வலைதளங்களின் உளறல்களை தோழுரித்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த கட்டுரையில் மிசனரி ஓரியண்டலிஸ்டான ஆர்தர் ஜெஃப்ரி என்ற அரைவேக்காடு குறித்தும், அவரது உளறல் நிறந்த “ Materials for the History of the Text of the Qur'ān” என்ற அவரது நூல் குறித்தும் காணயிருக்கிறோம், இன் ஷா அல்லாஹ்.


    ஆர்தர் ஜெஃப்ரி (1892-1959), ஆஸ்திரேலியாவைத் சேர்ந்த மிஷனரி ஓரியண்டலிஸ்ட் ஆவார். குர்ஆனின் உரை விமர்சனம் மற்றும் குர்ஆனின் சரித்திரம் பற்றிய மேற்கத்திய புலமைப்பரிசில் பெரும் பெயர் பெற்றவர். முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் இராணுவத்தில் உடல்நலக் காரணங்களுக்காக அவர் சேர முடியவில்லை, எனவே அவர் மிஷனரியாக இராணுவம் அல்லாத போர் சேவையில் சேர்ந்தார். அவர் சாலமன் தீவுகள், இந்தியா மற்றும் எகிப்தில் மிசனரி பணிக்காக நியமிக்கப்பட்டார். ‘Materials for the History of the Text of the Qur'ān’, ‘The Foreign Vocabulary of the Qur'ān’, ‘The Qur'ān as Scripture and The Koran: Selected Suras’. ஆகிய இவரது எழுத்தாக்கங்கள் குறிப்பிடத்தக்கவை. அவர் தனது வாழ்க்கையின் கடைசி இருபது ஆண்டுகளை கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் யூனியன் இறையியல் கல்லூரியில் கழித்தார். மேலும் ஆர்தர் ஜெஃப்ரியின் மிசனரி சாகசங்களை “அன்ஸரிங் இஸ்லாம்” என்ற இஸ்லாஃபோஃபியாவை பரப்பும் மிசனரி வலைத்தளம் மெச்சுவதை இங்கு காணலாம். ஆர்தர் ஜெஃப்ரி ஒரு வடிகட்டிய கிறித்தவ மிசனரி என்பதற்கு இதுவே போதுமான தகவல்.

ஆர்தர் ஜெஃப்ரி கொடுத்த மோசடி தலைப்பு


        ஆர்தர் ஜெஃப்ரி தனது “MATERIALS FOR THE HISTORY OF THE TEXT OF THE QUR’AN THE OLD CODICES” என்ற நூலில் ,மோசடியை தலைப்பில் இருந்தே துவங்குகிறார். அதாவது அவர் தலைப்பிலேயே தான் மாறுபட்ட ஓதல்களை இப்னு மஸ்வூத்(ரலி), உபை(ரலி), அலி(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அனஸ்(ரலி) அபூ மூஸா(ரலி) மற்றும் இதர ஆரம்ப கால குர் ஆனிய நிபுனர்களின் வேத எழுத்துச்சுவடிகளில் இருந்து பெற்றதாக ஒரு கதையை அளக்கிறார்.




MATERIALS FOR THE HISTORY OF THE TEXT OF THE QUR’AN THE OLD CODICES
                      THE KITAB AL-MASAHIF OF IBN ABl DAWUD TOGETHER                    WITH A COLLECTION OF THE VARIANT READINGS FROM THE CODICES OF IBN MA'SUD, UBAI, ‘ALI, IBN ABBAS, ANAS, ABU MUSA AND OTHER EARLY QURANIC AUTHORITIES WHICH PRESENT A TYPE OF TEXT ANTERIOR TO THAT OF THE CANONICAL TEXT OF ‘UTHMAN
        உண்மையில் இவர் குறிப்பிடும் வேத எழுத்துச்சுவடிகள், அவரது காலத்தில் இருந்ததா? அல்லது இப்னு அபூதாவூத் அவர்கள் கிதாப் அல் மஸாஹீப்பை எழுதும் போதாவது அவர் கைகளிலாவது இருந்ததா? இந்த இரண்டு கேள்விக்கான பதில்களான “இல்லை” என்பதே ஆர்தர் ஜெஃப்ரியின் மோசடியை விளக்க போதிய சான்று. இவர் குறிப்பிடும் முஸ்ஹஃப்கள் குறித்த வரலாற்று சான்றுகளையும் அதன் விளக்கத்தையும் பார்த்தோம் என்றால் இவர் குறிப்பிட்ட எந்த நபர்களின் ஆதாரப்பூர்வ எழுத்துப்பிரதியையும் இவர் கண்டிருக்கமாட்டார் என்பதை உறுதிபட கூறலாம்.

இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்:

ﻭﺭﻭﻯ اﻟﻔﻀﻞ ﺑﺈﺳﻨﺎﺩﻩ ﻋﻦ اﻷﻋﻤﺶ ﻗﺎﻝ ﻓﻲ ﻗﻮﻟﻪ ﻓﻲ ﻗﺮاءﺓ ﻋﺒﺪ اﻟﻠﻪ (ﺣﻢ ﺳﻖ) ﻗﺎﻝ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺇﺳﺤﺎﻕ ﺭﺃﻳﺖ ﻋﺪﺓ ﻣﺼﺎﺣﻒ ﻗﺎﻝ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺇﺳﺤﺎﻕ ﺭﺃﻳﺖ ﻋﺪﺓ ﻣﺼﺎﺣﻒ ﺫﻛﺮ ﻧﺴﺎﺧﻬﺎ ﺃﻧﻬﺎ ﻣﺼﺤﻒ ﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻟﻴﺲ ﻓﻴﻬﺎ ﻣﺼﺤﻔﻴﻦ ﻣﺘﻔﻘﻴﻦ
        முஹம்மத் இப்னு இஸ்ஹாக் கூறியதாவது (கிபி ~ 700) நான் இப்னு மஸ்வூதின் முஸ்ஹஃப் என்று எழுத்தர்களால் கூறப்படும் பல முஸ்ஹஃப்களை கண்டுள்ளேன் .ஆனால் அவற்றுள் ஒன்று போல் அமைந்த இரு முஸ்ஹஃப்கள் இருந்ததில்லை." (அறிவிப்பாளர்: அல் அஃமாஸ்,  ஃபிஹ்ரிஸ்த் 1/44)
        மேற்குறிப்பிட்ட குறிப்பானது ஒரு விஷயத்தை தெளிவாக கூறுகிறது அதாவது கிபி 7ம் நூற்றாண்டிலேயே இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் பெயரால் பல போலி கையெழுத்துப்பிரதிகள் இருந்ததை அறிய முடிகிறது. எனவே கிபி 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்த்தர் ஜெஃப்ரி அதன் உரைமாறுபாடுகளை கையெழுத்துப்பிரதியில் இருந்து எடுத்ததாக தலைப்பிட்டது வடிகெட்டிய பொய்.

உபை இப்னு கஃஅப்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﺮﺑﻴﻊ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ اﺑﻦ )ﻭﻫﺐ، ﺃﺧﺒﺮﻧﻲ ﻋﻤﺮﻭ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺑﻜﻴﺮ: ﺣﺪﺛﻨﻲ ﺑﺴﺮ ﺑﻦ ﺳﻌﻴﺪ، ﻋﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﻧﺎﺳﺎ ﻣﻦ ﺃﻫﻞ اﻟﻌﺮاﻕ ﻗﺪﻣﻮا ﺇﻟﻴﻪ ﻓﻘﺎﻟﻮا: ﺇﻧﻤﺎ ﺗﺤﻤﻠﻨﺎ ﺇﻟﻴﻚ ﻣﻦ اﻟﻌﺮاﻕ، ﻓﺄﺧﺮﺝ ﻟﻨﺎ ﻣﺼﺤﻒ ﺃﺑﻲ ﻗﺎﻝ ﻣﺤﻤﺪ: " ﻗﺪ ﻗﺒﺾﻫ ﻋﺜﻤﺎﻥ ﻗﺎﻟﻮا: ﺳﺒﺤﺎﻥ اﻟﻠﻪ ﺃﺧﺮﺟﻪ ﻟﻨﺎ ﻗﺎﻝ: ﻗﺪ ﻗﺒﺾﻫ ﻋﺜﻤﺎﻥ "
பஸ்ர் இப்னு ஸயீத் கூறியதாவது:
            இராக் வாசிகளில் சிலர் முஹம்மத் இப்னு உபை (உபை(ரலி) அவர்களது மகன் முஹம்மத்) அவர்களிடம் வந்து " நாங்கள் இராக்கில் இருந்து வருகிறோம். எங்களிடம் உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃபை கொண்டு வாருங்கள் " என்று கூறினார்கள். அதற்கு முஹம்மத் அவர்கள், "உஸ்மான்(ரலி) அதை கைப்பற்றி கொண்டார்கள்." என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் ," அல்லாஹ் தூயவன். அதை எங்களிடம் கொண்டு வாருங்கள்", என்றனர். அதற்கு (முஹம்மத்) அவர்கள், "உஸ்மான்(ரலி) அதை கைப்பற்றி கொண்டார்கள்." என்று கூறினார்கள்.   (மஸாஹிஃப் இப்னு அபீ தாவூத் 1/103)
        மேற்குறிபிட்ட செய்தியில் உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃப் உஸ்மான்(ரலி) ஆட்சிக்காலத்திலேயே அழிந்துவிட்டது எனும் போது, கிபி 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்த்தர் ஜெஃப்ரி அதன் உரைமாறுபாடுகளை கையெழுத்துப்பிரதியில் இருந்து எடுத்ததாக தலைப்பிட்டது வடிகெட்டிய பொய்.

அனஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்:

அபூ அல்ஹஸன் அல் அஸ்அரி கூறியதாவது:                                                               நான் அனஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பை பஸராவில் அவரது வழிதோன்றல்களிடம் கண்டேன். இன்றைய முஸ்ஹஃப்புடன் எந்த மாற்றமுமின்றி அது சரியாக ஒத்திருப்பதை கண்டேன். மேலும் இது உபை(ரலி) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்டு அனஸ்(ரலி) அவர்களால் எழுதப்பட்டது என்று அவரது வழித்தோன்றல்கள் கூறினார்கள். (அல் இன்திஸார் 1/277)
            உபை(ரலி) அவர்களது ஓதல்தான் அனஸ்(ரலி) அவர்களது பிரதி என்று கூறப்படுவதில் இருந்தும், அது இன்றைய முஸ்ஹஃப்போடு ஓத்திருப்பதாக கூறப்படுவதில் இருந்தும் ஒரு விஷயம் தெளிவாகிறது அதில் உரை மாறுபாடுகள் இல்லை என்பதே. இவர் எந்த ஆதாரங்களில் இருந்து இந்த உரை மாறுபாடுகளை எடுத்தார் என்பதை அவரே பட்டியலிட்டுள்ளார். அதனையும் இந்த கட்டுரையின் பிற்பகுதியில் காண்போம்.

அபூ மூஸா(ரலி) அவர்களது முஸ்ஹஃப்:

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺜﻤﺎﻥ، ﺣﺪﺛﻨﺎ ﺟﺮﻳﺮ، ﻋﻦ ﻋﻤﺮ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﻗﺎﻝ: ﻛﺎﻥ ﻟﺃﺑﻲ ﻣﻮﺳﻰ ﻣﺻﺤﻒ ﻭﻛﺎﻥ ﻳﺴﻤﻴﻪ ﻟﺒﺎﺏ اﻟﻔﺆاﺩ
              அபூ மூஸா (ரலி) அவர்களிடம் ஒரு முஸ்ஹஃப் இருந்தது அதனை “லுபாப் அல் ஃபுவ்ஆத்” என்று அழைப்பார்கள்” என்று அம்ரு இப்னு ஸாபித்(ரலி) கூறினார்கள் (அல் ஜுஹ்த் 2288 , தாரிக் திமிஷ்க் 38/242)
        அபூமூஸா(ரலி) அவர்களே தனது முஸ்ஹஃப்பை, குர்ஆன் என்று அழைக்காத போது அதன் உரை மாறுபாடுகள் எந்த மதிப்பும் அற்றவை.

அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப்:


               அலி(ரலி) அவர்களது முஸ் ஹஃப் என்பது தனித்த உரை மாறுபாடுகளை கொண்டவை என்ற கருத்தை நான்கு கோணங்களில் ஆய்வுசெய்வதினால் அதனை பொய் என நிறுவலாம்.

கோணம் 1: உஸ்மான்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பை ஏற்ற அலி(ரலி)

ﻋﻠﻲ ﺑﻦ ﺃﺑﻲ ﻃﺎﻟﺐ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﺳﻤﻌﺘﻪ ﻳﻘﻮﻝ: " ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﻨﺎﺱ §ﻻ ﺗﻐﻠﻮا ﻓﻲ ﻋﺜﻤﺎﻥ ﻭﻻ ﺗﻘﻮﻟﻮا ﻟﻪ ﺇﻻ ﺧﻴﺮا ﺃﻭ ﻗﻮﻟﻮا ﻟﻪ ﺧﻴﺮا ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﻭﺇﺣﺮاﻕ اﻟﻤﺼﺎﺣﻒ، ﻓﻮاﻟﻠﻪ ﻣﺎ ﻓﻌﻞ اﻟﺬﻱ ﻓﻌﻞ ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﺇﻻ ﻋﻦ ﻣﻸ ﻣﻨﺎ ﺟﻤﻴﻌﺎ،

            அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் “ மக்களே! உஸ்மான்(ரலி) குறித்து வரம்பு மீறிவிடாதீர்கள். முஸ்ஹஃப் குறித்தும், முஸ்ஹஃப்கள் எறிக்கப்பட்டது குறித்தும் அவர் விஷயத்தில் நல்லதை தவிர ஏதும் கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீதானையாக, முஸ்ஹஃப்பின் விஷயத்தில் அவர்கள் செய்தது எல்லாம், எங்களது அலோசனையின் படி அல்லாமல் வேறு எதுவும் அல்ல.”   ( அல் மஸாஹிஃப் 1/97-98)

        மேற்குறிபிட்ட செய்தியில் இருந்து உஸ்மான்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த முடிவுகள் அனைத்தும் தன்னாலும் ஏற்கப்பட்ட ஒன்று என்று அலி(ரலி) அவர்களே சான்று பகிர்கிறார்கள் என்பதை அறியலாம்.

கோணம் 2: அபூபகர்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த பணியை சிலாகித்து கூறுவதும் அபூபகர்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்தான் அட்டைக்கு நடுவே தொகுக்கப்பட்ட முதல் முஸ்ஹஃப் என்ற சான்றும்:

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﺎ ﻋﻤﺮ ﺑﻦ ﺷﺒﺔ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺃﺣﻤﺪ اﻟﺰﺑﻴﺮﻱ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ، ﻋﻦ اﻟﺴﺪﻱ، ﻋﻦ ﻋﺒﺪ ﺧﻴﺮ، ﻋﻦ ﻋﻠﻲ ﻗﺎﻝ: ﻋﻈﻢ اﻟﻨﺎﺱ ﺃﺟﺮا ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻓﺈﻧﻪ ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻊ ﺑﻴﻦ اﻟﻠﻮﺣﻴﻦ

        அலி(ரலி) கூறினார்கள், “முஸ்ஹஃப் விஷயத்தில் மிகப்பெரும் வெகுமதிக்கு உரியவர் அபூபக்ர்(ரலி) அவர்கள்தான். அவர்தான் முதன் முதலில் இரண்டு அட்டைகளுக்கு நடுவில் தொகுத்தவர் ஆவார்.”(அல் மஸாஹிஃப் 1/49)

        அபூபகர்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த பணியை சிலாகித்து அலி(ரலி) அவர்களே கூறுவது அந்த பணியை அலி(ரலி) அவர்களும் ஏற்றார்கள் என்பதற்கு போதிய சான்று. மேலும் அபூபக்ர்(ரலி) அவர்களால் தொகுக்கப்பட்ட அந்த முஸ்ஹஃப்பும் , உஸ்மான்(ரலி) அவர்களால் பிரதி எடுக்கப்பட்டதும் ஒன்றுதான் என்பதை பின்வரும் செய்தி தெளிவாக கூறுகிறது.  

ﻗﺎﻝ ﺯﻳﺪ: ﻭﺃﺭﺳﻞ ﻋﺜﻤﺎﻥ ﺇﻟﻰ ﺣﻔﺼﺔ ﺃﻥ ﺗﻌﻄﻴﻪ اﻟﺼﺤﻴﻔﺔ ﻭﺣﻠﻒ ﻟﻬﺎ ﻟﻴﺮﺩﻧﻬﺎ ﺇﻟﻴﻬﺎ، ﻓﺄﻋﻄﺘﻪ، ﻓﻌﺮﺿﺖ اﻝﻣﺼﺤﻒ ﻋﻠﻴﻬﺎ ﻓﻠﻢ ﻳﺨﺘﻠﻔﺎ ﻓﻲ ﺷﻲء،
        ஸைத்(ரலி), “உஸ்மான்(ரலி) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் எழுத்துப்பிரதியை கொடுத்தனுப்புமாறும் அதனை திருப்பி தந்துவிடுவதாகவும் உறுதியளித்தார்கள். எனவே அதனை அவர்கள் கொடுத்தார்கள். நான் முஸ்ஹஃப்பை அதனுடன் ஒப்பிட்டுகாட்டினேன், அதில் எந்த மாறுபாடும் காணப்படவில்லை” என்று கூறினார்கள்.(ஸரஹ் முஸ்கில் அல் அஸார் 8/128)
        மேலும் மேற்குறிபிட்ட அலி(ரலி) அவர்களது அறிவிப்பில் ஒரு முக்கிய செய்தியும் அடங்கியுள்ளது. அதாவது குர்ஆன் என்பது ஒரு முஸ்ஹஃப் ஆக தொகுக்கப்பட்டது அபூபகர்(ரலி) அவர்களுடைய ஆட்சிக்காலத்தில்தான். அதற்கு முன்பு ஜம்வூ செய்யப்பட்ட்தாக வரும் அனைத்து அறிவிப்புகளும் மனனத்தில் தொகுக்கப்பட்டதைதான் குறிப்பிடுகிறது என்பதை தெளிவாக விளக்குகிறது. எனவே அபூபக்ர்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பை ஏற்ற அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பில் உரைமாறுபாடுகள் இருப்பதாக கூறுவது பொய்.

கோணம் 3: அலி(ரலி) அவர்களது கிராஅத் இன்றைய கிராஅத்துடன் ஒத்திருப்பது.

        இன்றிருக்கும் முத்தாவதீர் கிராஅத் ஆன ஹஃப்ஸின் கிராஅத், ஹம்ஸாவின் , அபூ அம்ர்ன் கிராஅத் ஆகிய அனைத்தும் அலி(ரலி) அவர்களின் ஓதலையும் அடிப்படையாக கொண்டவை. எனவே அலி(ரலி) அவர்கள்து முஸ்ஹஃப்பில் உரை மாறுபாடுகள் இருந்ததாக கூறுவது பொய்.

கோணம் 4: அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப் என்று கூறப்படுபவை குறித்த தற்கால ஆய்வு


        அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப் என்று கூறப்படுபவை குறித்து ஆய்வு செய்த தய்யார் ஆல்டிகுலாக் பின்வருமாறு கூறுகிறார்.

        There is no difference between them as regards to the surats, the arrangement of ayats within the surats and their sequence. In all the copies, there is uniformity in the text from the beginning to the end. If an ayat is written in a certain way in one copy, there is no doubt that it is the same in every other copy. Some insignificant spelling differences which do not affect the meaning and some simple and very limited mistakes made by the scribes do not carry any importance as regards to the protected nature of the Holy Book.

       Therefore the following may be briefly said with a clear conscience: We had the opportunity of examining the copies that reached us way back from 13-14 centuries ago. The Holy Book reached the present day from all geographies and all periods of time not only through memorization and recitation by the imams of reading, but it is in the hands of the people of the 21st century, with documents that were written in periods which were very close to the generation of the Companions, probably when some of them were alive (maybe some were penned by the Companions).
                சூராக்கள், சூராக்களுக்குள் ஆயத்துகளின் அமைப்பு மற்றும் அவற்றின் வரிசை ஆகியவற்றில் அவைகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாப் பிரதிகளிலும் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே மாதிரியான எழுத்து முறை. ஒரு ஆயத் ஒரு பிரதியில் ஒரு குறிப்பிட்ட முறையில் எழுதப்பட்டிருந்தால், மற்ற எல்லா பிரதிகளிலும் அதுவே இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. புனித நூலின் பாதுகாக்கப்பட்ட தன்மையைப் பொறுத்தவரை, அர்த்தத்தை பாதிக்காத சில முக்கியமற்ற எழுத்து வேறுபாடுகள் மற்றும் சில எளிய மற்றும் மிகக் குறைந்த எழுத்தர் பிழைகள், எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை.
        எனவே, தெளிவான மனசாட்சியுடன் பின்வருவனவற்றைச் சுருக்கமாகச் சொல்லலாம்: 13-14 நூற்றாண்டுகளுக்கு முந்தைய பிரதிகளை ஆராயும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இந்த புனித நூலானது அனைத்து புவியியல் மற்றும் அனைத்து காலக்கட்டத்தில் இருந்தும் இன்றைய நாளை அடைந்திருக்கிறது என்பது, ஓதல் இமாம்கள் மனனமிட்டு ஓதியதின் வழியாக மட்டும் அல்ல, மாறாக இது நபிதோழர்களின் தலைமுறைக்கு மிக நெருக்கமான காலங்களிலும், அவர்களில் சிலர் உயிருடன் இருந்தபோதும் எழுதப்பட்ட, ஆவணங்களுடனும் சேர்த்து (சிலவை தோழர்களால் எழுதப்பட்டிருக்கலாம்), 21ம் நூற்றாண்டு மக்களின் கைகளில் அது உள்ளது, (Al Mushaf al Sharif Attributed to Ali b. Abi talib (The Copy of Sana) By Tayyar Altikulac P.No.157)
        அதாவது 20ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் ஆர்த்தர் ஜெஃப்ரிக்கு, தய்யார் ஆல்டிகுலாக் போன்ற அறிஞர்களுக்கு கிடைத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று அந்த முஸ்ஹஃப்களை ஆய்வு செய்த அறிஞர்கள் குர்ஆனின் 14 நூற்றாண்டு பாதுகாப்பை பெருமையுடன் கூறுகின்றனர். அதாவது குர்ஆனின் பாதுகாப்பை உறுதி படுத்தும் ஆவணமாக இந்த எழுத்துப்பிரதிகளை அறிஞர்கள் முன்னிறுத்தும் நிலை இன்றுள்ளது. எனவே அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பில் உரைமாறுபாடுகள் என்று கூறுவதெல்லாம் வெறும் அரைவேக்காட்டு உளறல்தான்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்: 

முஸ்ஹஃப் குறித்த வாதங்களிலே ஆக அறிவின்மையான வாதத்தை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்து ஆர்த்தர் ஜெஃப்ரி முன்வைக்கிறார்.அதனை கீழே தருகிறோம்.

            அதாவது “ அவரது விஷயத்தில், அது அரிதாக குறிப்பிடப்படுவதாலேயே, அது உண்மையானது என்பதற்கான வாதமாக அமைகிறது,”….என்று கூறுகிறார். அரிதாக கூறப்படுவதால் ஒரு விஷயம் எப்படி உண்மை என்றாகும். உதாரணமாக ஆர்தர் ஜெஃப்ரி ஒரு அரை மெனடல் என்று நான் கூறுவது அரிதான குறிப்பு அதற்காக அது உண்மை ஆகிவிடுமா. இவ்வாறான உளறலே, இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது எந்த முஸ்ஹஃப்பும் இவரால காணமுடியவில்லை என்பதற்கு போதிய சான்று.

தலைப்பிற்கு  முரணாக உளரும் ஆர்தர் ஜெஃப்ரி:

   எந்த எழுத்துப்பிரதிகளில் இருந்தும் தனது ஆய்வின் ஆதாரங்களை வைக்கத்தவறியதில் இருந்து, ஆர்தர் ஜெஃப்ரி வாசகர்களை திசை திருப்பும் நோக்கத்தோடு மட்டுமே இவ்வாறு தலைப்பிட்டிருக்கிறார் என்பது ஆணித்தரமாக உறுதியாகிறது. மேலும், இவர் உண்மையில் மேற்குறிபிட்ட நபித்தோழர்களின் உரை மாறுபாடுகளை எதில் இருந்து பெற்றார் என்பதையும் தானிட்ட தலைப்பிற்கே முரண்படுகிறதே என்பதை கூட உணராமல பின்வருமாறு இஸ்லாமிய நூல்களை பட்டியலிட்டும் உள்ளார்.


        இப்படி தஃப்ஸீர் கிதாப்கள், வரலாற்று கிரந்தங்கள், ஆய்வு நூல்கள், மொழியறிவு நூல்கள் அனைத்திலும் இருந்து பெறப்பட்ட செய்திகளில் இருந்து தான் தனது நீண்ட நெடிய ஆய்வை முன்னெடுத்துள்ளார். மேலும் இவர் பட்டியலிடும் உரைமாறுபாடுகள் அனைத்தும் ஒற்றை அறிவிப்பாளர் தொடர் கொண்ட ஹதீஸ்கள்தாம். அதுவும் அவற்றுள் பெரும்பாலனவை குறிபிட்ட நபித்தொழர்கள் ஓதியதாக இடம் பெறும் ஒற்றை அறிவிப்பாளர் தொடர்களை கொண்ட விசித்திர செய்திகள்(ஷாத் ஹதீஸ்கள்) என்று இஸ்லாமிய அறிஞர்களாலேயே முத்திரை குத்தப்பட்டவை. இத்தகைய செய்திகளால் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்ட முத்தவாதீரான ஓதல்களை எப்படி கேள்விக்குள்ளாக்க இயலும். ஆக இவரது ஆக்கம் என்பதே இஸ்லாமோஃபோபுகளை மெய்சிலிர்க்கச் செய்யும் வெத்து புத்தகம். இதில் கூத்து என்னவென்றால் உரை மாறுபாடுகள் குறித்த ஆய்வுகளுக்கு இஸ்லாமிய சமூகம் அஞ்சுவதாக மிசனரிகள் கதை சொல்லி திரிகின்றனர். . மேலே பட்டியலிடப்பட்ட நூல்கள் பல இஸ்லாமிய அறிஞர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே செய்யப்பட்ட ஆய்வுகள் தான் என்பதை இங்கு குறிப்பிட்டுக்கொள்கிறோம்........தொடரும் இன் ஷா அல்லாஹ்