பக்கங்கள் செல்ல

Showing posts with label ஆயிஷா(ரலி) திருமணம். Show all posts
Showing posts with label ஆயிஷா(ரலி) திருமணம். Show all posts

Wednesday, May 6, 2020

நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை திருமணம் செய்த போது வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை திருமணம் செய்த போது வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள்.

விமர்சனம்: நபி(சல்) அவர்களுக்கும் ஆயிஷா(ரலி) அவர்களுக்கும் வயது வித்தியாசம் அதிகம்: நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை திருமணம் செய்த போது வயது முதிர்ந்தவர்களாய் இருந்தார்கள். 


நமது பதில்:

                முதலில் இந்த விமர்சனமே தவறானது. இத்தகைய விமர்சனம் இன்றும் நாம் முழுமையாக ஏற்காத ஒன்று. இன்றும் இந்த வயதுடையவர் இந்த வயதுடையவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற எந்த அளவுகோலும் இல்லை. உள்ளங்கள் ஒத்துப்போனால் எந்த வயது வேறுபாட்டிலும் திருமணம் செய்யலாம் . உடலால், மனத்தால் தகுதியுடன் இருந்தால் போதுமானது. ஆயிஷா(ரலி) அத்தகைய தகுதியுடன் இருந்தார்கள் என்பதற்கு போதிய சான்றுகள் உள்ளன. உதாரணமாக முன் சென்ற அபீசினியர்கள் விளையாட்டுகளை கண்ணுற்ற சம்பவத்தை சற்று பார்ப்போம்.

முஸ்லிம் 1622. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

       என் அருகில் இரு சிறுமியர் "புஆஸ்” போர் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்; படுக்கையில் படுத்து, தமது முகத்தை (வேறு பக்கம்) திருப்பிக்கொண்டார்கள். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வந்து என்னை அதட்டி "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகிலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?" என்று கடிந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ரை முன்னோக்கி "அச்சிறுமியரை விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறுபக்கம் திரும்பியபோது அவ்விரு சிறுமியரையும் குறிப்பால் உணர்த்தி (வெளியேறச் சொன்)னேன். உடனே அவர்கள் இரு வரும் வெளியேறிவிட்டனர். அன்று பெருநாள் தினமாக இருந்தது. சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுகள்) விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது நான் (அந்த விளையாட்டைப் பார்க்க) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம் நீ (இவர்களின் வீரவிளையாட்டுகளைப்) பார்க்க விரும்புகிறாயா?" என்று கேட்க, நான் "ஆம்" என்று கூறியிருக்க வேண்டும் (சரியாக எனக்கு நினைவில்லை). உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் கன்னம் அவர்களுடைய கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்கவைத்துக்கொண்டார்கள். "அர்ஃபிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்" என்று கூறினார்கள். நான் (விளையாட்டை நன்கு ரசித்து) சலிப்புற்றுவிட்டபோது, "போதுமா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க,நான் "ஆம் (போதும்)" என்று சொன்னேன். "அப்படியானால் நீ போகலாம்!" என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

முஸ்லிம் 1624. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

    நான் அந்த விளையாட்டு வீரர்களிடம் "நான் உங்க(ளின் விளையாட்டு)களைப் பார்க்க விரும்புகிறேன்" எனக் கூறி (அனுப்பி)னேன். அவர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் விளையாடினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதைப் பார்த்துக்கொண்டு) நிற்க, நான் (எனது அறை) வாசலில் நின்றுகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காதுகளுக்கும் தோள்களுக்குமிடையே (எனது முகத்தை வைத்து) அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(அந்த வீரர்கள்,) பாரசீகர்கள் அல்லது அபிசீனியர்கள் ஆவர். "அல்ல; அவர்கள் அபிசீனியர்களே ஆவர்" என என்னிடம் இப்னு அத்தீக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
       ஆக மேற்குறிபிட்ட செய்தியானது ஆயிஷா(ரலி) அவர்களது 15 வயதில் நடைபெற்றதாக முன்பே கண்டோம். சராசரியாக நபி(சல்) அவர்களின் உயரத்திற்கு நிகரான உயரம்தான். எந்த பென்ணும் பூப்பெய்த பிறகு அதிகபட்சமாக மூன்று வருடங்கள் வளருவார்கள். அதிகபட்சமாக ½ அடி.(1) ஆக நபி(சல்)- ஆயிஷா(ரலி) வீடு கூடிய போது அவர்கள் நபி(சல்) அவர்களை விட அதிகபட்சமாக ½ அடிதான் உயரம் குறைவாக இருந்திருப்பார்கள் என்பதை உறுதி பட கூற முடியும்.

          அதுபோல் அவர்களது உடலும் திருமணத்திற்கு பிறகு வீடு கூடுவதற்காக தயார்படுத்தப்பட்டதாக ஆயிஷா(ரலி) அவர்களே கூறுவது கவனிக்கத்தக்கது. 

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا نُوحُ بْنُ يَزِيدَ بْنِ سَيَّارٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ أَرَادَتْ أُمِّي أَنْ تُسَمِّنِّي لِدُخُولِي عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمْ أَقْبَلْ عَلَيْهَا بِشَىْءٍ مِمَّا تُرِيدُ حَتَّى أَطْعَمَتْنِي الْقِثَّاءَ بِالرُّطَبِ فَسَمِنْتُ عَلَيْهِ كَأَحْسَنِ السِّمَنِ ‏.‏

முஃமீன்களின் அன்னை ஆயிஷா(ரலி) கூறியதாவது:
எனது தாயார் அல்லாஹ்வின் தூதரின் வீட்டுக்கு அனுப்புவதற்காக உடல் பருமனாக்க நினைத்து பலவற்றை முயன்றார்கள். ஆனால் வெள்ளரிக்காயுடன் பேரிச்சை பழங்களே பயனளித்தன. பிறகு நான் பருமனானேன்.( நூல்: அபூதாவுத், ஹதீஸ் எண்: 3904)
ஆக அவர்களது உடலும் வீடு கூடுவதற்கு ஏற்ற வகையில் இருந்ததை அறிய முடிகிறது.
حَدَّثَنَا أَبُو صَالِحٍ الأَنْطَاكِيُّ، مَحْبُوبُ بْنُ مُوسَى أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ، - يَعْنِي الْفَزَارِيَّ - عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، وَعَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ قَالَتْ فَسَابَقْتُهُ فَسَبَقْتُهُ عَلَى رِجْلَىَّ فَلَمَّا حَمَلْتُ اللَّحْمَ سَابَقْتُهُ فَسَبَقَنِي فَقَالَ ‏"‏ هَذِهِ بِتِلْكَ السَّبْقَةِ ‏"‏ ‏.‏
முஃமீன்களின் அன்னை ஆயிஷா(ரலி) கூறியதாவது: ஒருமுறை நான் அல்லாஹ்வின் தூதருடன் ஒரு பயணத்தில் இருந்த போது எனக்கும் அவர்களுக்கும் ஓட்டப்பந்தயம் வைத்துக்கொண்டோம். அதில் நான் நபி(சல்) அவர்களை முந்தியும் விட்டேன். நான் உடல் பருமனான பிறகு மீண்டும் அதே போன்று அவர்களும் நானும் ஓட்டப்பந்தயம் வைத்துக்கொண்டோம் அதில் அவர்கள் முந்திவிட்டார். அவர்கள் கூறினார்கள்; “அதற்கு இது நேராகிவிட்டது என்று கூறினார்கள். (நூல்: அபூதாவுத், ஹதீஸ் எண்: 2579)
            அதே போன்று உஹத் போரில் பங்கேற்றார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இது குறித்து அனஸ் ரலி பின்வருமாறு அறிவிக்கிறார்கள்.

புகாரி 2880. அனஸ்(ரலி) அறிவித்தார்.
உஹுதுப் போரின்போது மக்கள் நபி(ஸல்) அவர்களைவிட்டுவிட்டுத் தோல்வியுற்று (பின்வாங்கிச்) சென்றபோது நான் ஆயிஷா பின்த்து அபீ பக்ர்(ரலி) அவர்களையும் உம்மு சுலைம்(ரலி) அவர்களையும் கண்டேன். அப்போது அவர்கள் இருவரும் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து கொண்டு வேக வேகமாக நடந்து (சென்று காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதும் பிறகு (தண்ணீர் காலியானதும்) திரும்பிச் சென்று அவற்றை நிரப்பிக் கொண்டு, மீண்டும் வந்து மக்களின் வாய்களில் தண்ணீரை ஊற்றுவதுமாக இருந்தார்கள். நான் அவர்களின் கால்களில் அணிந்திருந்த தண்டைகளைப் பார்க்கும் அளவிற்கு வரிந்து கட்டிக் கொண்டு (மும்முரமாகப்) பணிபுரிந்து கொண்டிருந்தார்கள்.
"தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து வேகமாக நடந்து சென்று" என்பதற்கு பதிலாக, 'தோல் பைகளைத் தம் முதுகுகளில் சுமந்து எடுத்துச் சென்று" என்று மற்றோர் அறிவிப்பாளர் கூறினார்.

உஹத் யுத்ததிற்கும்(ஹிஜ்ரி 3) ஆயிஷா(ரலி) திருமணத்திற்கும் (ஹிஜ்ரி 1) அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள். போரில் பங்கேற்று காயம்பட்டோருக்கும் சேவை செய்யும் அளவிற்கு உடல் தகுதியுடன் இருப்பவர்தான் போருக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்பது உலகறிந்த ஒன்று. மேலும் இத்தகைய நீர்பைகளை சுமப்பவர் எத்தகைய உடல் தகுதியுடன் இருப்பார்கள் என்பது போர் தளவாடங்கள் குறித்து அறிந்தவர்களுக்கு தெரியும். ஒருவேளை அவதூறு பரப்பும் கூமுட்டைகளுக்கு அது தெரியாமல் இருக்கலாம். இப்படி ஒவ்வொரு விசயத்தையும் நாம் கண்ணுரும் போது அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் வீடு கூடுதலுக்கு தயரானவர் என்பதை நாம் அறிய முடிகிறது. அவதூறு பரப்பும் கூமுட்டைகள் கேலிச்சித்திரங்களை கண்டு ஏமாந்த அறிவிலிகளாகத்தான் நமக்கு தெரிகிறது.

இளம் பெண் ஆயிஷா(ரலி) அவர்கள் மீதான அவதூறும், அதில் அவதூறு பரப்பும் அறிவிலிகளும்

இளம் பெண் ஆயிஷா(ரலி) அவர்கள் மீதான அவதூறும், அதில் அவதூறு பரப்பும் அறிவிலிகளும்

ஆயிஷா(ரலி) குறித்த அவதூறு சம்பவம் தொடர்பான ஹதீஸ்கள்


புகாரி 4141. இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்

      என்னிடம் உர்வா இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு முஸய்யப், அல்கமா இப்னு வக்காஸ், உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் இப்னி உத்பா இப்னி மஸ்வூத்(ரஹ்.. அலைஹிம்) ஆகியோர் நபி(ஸல்) அவர்களின் துணைவியானரான ஆயிஷா(ரலி) குறித்து அவதூறு கூறியவர்கள் சொன்னதைப் பற்றி அறிவித்தனர். அவர்கள் (நால்வரில்) ஒவ்வொருவரும் இச்சம்பவம் பற்றி ஆளுக்கொரு பகுதியினை அறிவித்தனர். அவர்களில் சிலர், சிலரை விட இந்தச் சம்பவத்தை நன்கு நினைவில் நிறுத்தியவர்களாகவும், அதை எடுத்துரைப்பதில் சிறந்தவர்களாகவும் இருந்தனர். ஆயிஷா(ரலி) அவர்களின் (இச்சம்பவம்) தொடர்பாக ஒவ்வொருவரும் அறிவித்த செய்தியை நான் மனனமிட்டுக் கொண்டேன். இவர்களில் சிலர் சிலரை விட இந்தச் சம்பவத்தை நன்கு மனனமிட்டவர்களாக இருந்தாலும் ஒருவரின் அறிவிப்பு மற்றவரின் அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அவர்கள் கூறினார்.
….……..(தொடர்ந்து) ஆயிஷா(ரலி) கூறினார்.
பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து சேர்ந்து ஒரு மாத காலம் நான் றோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நான் நோயுற்றுபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகிற பரிவை (இந்த முறை நான் நோய்வாய்ப்பட்டிருந்தபோது) அவர்களிடம் காண முடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, 'எப்படி இருக்கிறாய்?' என்று கேட்பார்கள்; பிறகு போய் விடுவார்கள். அவ்வளவு தான் இதுதான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த) அந்த தீய சொல்லில் ஒரு சிறிதும், நான் நோயிலிருந்து குணமடைந்து வெளியே செல்லும் வரை எனக்குத் தெரியாது. அப்போது நான் மிஸ்தஹின் தாயாருடன் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த 'மனாஸிஉ' (எனப்படும் புறநகர்ப் பகுதியை) நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அரும்லேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் முந்தைய அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. எங்கள் வீடுகளுக்கு அரும்லேயே கழிப்பிடங்கள் அமைப்பதை நாங்கள் தொந்தரவாகக் கருதி வந்தோம். நானும் உம்மு மிஸ்தஹும் சென்றோம். அவர் அபூ ருஹ்கி இப்னு முத்தலிப் இப்னி அப்து மனாஃப் அவர்களின் மகளாவார். அபூ பக்ர்(ரலி) அவர்களின் தாயின் சகோதரியான (சல்மா) பின்த் ஸக்ர் இப்னி ஆமிர் தான் உம்மு மிஸ்தஹின் தாயாராவார். உம்மு மிஸ்தஹின் மகனே, மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னி அப்பாத் இப்னு முத்தலிப் ஆவார். (இத்தகைய) உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் (இயற்கைத்) தேவைகளை முடித்துக் கொண்டு என் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தன் ஆடையில் இடறிக் கொண்டார். உடனே அவர், 'மிஸ்தஹ் நாசமாகட்டும்" என்று (தன் மகனை சபித்தவராகக்) கூறினார். நான், 'மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டீர். பத்ருப்போரில் பங்கெடுத்த ஒரு மனிதரையா ஏசுகிறீர்" என்று கூறினேன். அதற்கு அவர், 'அம்மா! அவர் என்ன கூறினார் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?' என்று கேட்டார். 'என்ன கூறினார்?' என்று நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்துவிட்டது. நான் என் இல்லத்திற்குத் திரும்பி வந்தபோது (என் கணவர்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்து சலாம் கூறிவிட்டு 'எப்படி இருக்கிறாய்?' என்று கேட்டார்கள். அப்போது நான், 'என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?' என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகிறதூ என்று விசாரித்து, என் மீதான அவதூறுச்) செய்தியை என் பெற்றோரிடமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். (நான் என் தாய் வீட்டிற்குச் சென்றேன்) என் தாயாரிடம், 'அம்மா! மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்?' என்று கேட்டேன். என் தாயார், 'அன்பு மகளே! உன் மீது (இந்த விஷயத்தைப்) பெரிதுபடுத்திக் கொள்ளாதே அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத்தான் செய்வார்கள். அவ்வாறு பேசமாலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும்" என்று கூறினார்கள். நான், 'சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்" என்று (வியப்புடன்) கேட்டேன். அன்றிரவு காலை வரை அழுதேன் என் கண்ணீரும் நிற்கவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்த போதும் அழுதேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ இப்னு அபீ தாலிப் அவர்களையும், உஸாமா இப்னு ஸைத் அவர்களையும் அழைத்தார்கள் அப்போது வஹீ (இறைச்செய்தி) (வேத வெளிப்பாடு - தாற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா அவர்களோ, நான் நிரபராதி என தாம் அறிந்துள்ளதையும், நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீது உள்ளத்தில் தாம் கொண்டிருந்த (பாசத்)தையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். '(இறைத்தூதர் அவர்களே!) தங்களின் துணைவியரிடம் நல்ல (குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை" என்று உஸாமா கூறினார்கள். அலீ அவர்களோ (நபி-ஸல் - அவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாக), 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப்பெண்ணை (பரீராவை)க் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்" என்று கூறினார்கள்.
      எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பணிப்பெண்ணான) பரீராவை அழைத்து, 'பரீராவே! நீ (ஆயிஷாவிடம்) உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, 'தங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர் குழைத்த மாவை அப்படியே போட்டுவிட்டு உறங்கிப் போய் விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்று விடும்; அத்தகைய (கவனக்குறைவான) இளவயதுப் பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை" என்று பதில் கூறினார். ….………………………………….. ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படாமலேயே அவர்கள் இருந்து வந்தார்கள். பிறகு, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனைப் புகழ்ந்துவிட்டு, 'நிற்க, ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னை குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புகோரி அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன்னுடைய பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால் அவனுடைய கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்" என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்தபோது என்னுடைய கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை. நான் என் தந்தையார் (அபூ பக்ர் அவர்கள்) இடம், 'இறைத்தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்" என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, 'அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், 'இறைத்தூதர் சொன்னதற்கு (என் சார்பாக) பதில் கூறுங்கள்" என்று சொன்னேன். அதற்கு என் தாயார், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். அதற்கு நான், 'நானோ வயது குறைந்த இளம்பெண் ஆவேன். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவளும் ஆவேன். இந்நிலையில், அல்லாஹ்வின் மீதாணையாக! (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக் கொண்ட) இச்செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனத்தில் பதிந்து போய், அதை உண்மையென்று நீங்கள் நம்பி விட்டீர்கள் என்பதை அறிவேன். எனவே, நான் குற்றமற்றவள் என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் அதை நம்பப் போவதில்லை; நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் - நான் குற்றமற்றவன் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும் - (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப்(அலை) அவர்களின் தன்தை (நபி - யஅகூப்-அலை) அவர்களையே உவமையாகக் கருதுகிறேன். (அதாவது:) (இதைச்) சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும். (திருக்குர்ஆன் 12:18)" என்று கூறினேன். 'நான் அப்போது குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்; (அந்த) அல்லாஹ் நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான்" என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறுபக்கமாகத்) திரும்பிப் படுத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! என் விஷயத்தில் (மக்களால்) ஓதப்படுகிற வஹீ (இறைச்செய்தி) - வேத வெளிப்பாட்டை - (திருக்குர்ஆனில்) அல்லாஹ் அருளுவான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. …………………
             அவர்களின் மீது அருளப்பட்ட (இறைச்) சொற்களின் பாரத்தினால் தான் (அவர்களுக்கு வியர்வை வழியும் அளவிற்குச் சிரம நிலை) ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரைவிட்டு விலகியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே பேசிய முதல் வார்த்தையாக, 'ஆயிஷா! அல்லாஹ் உன்னை குற்றமற்றவள் என அறிவித்துவிட்டான்" என்று கூறினார்கள். உடனே என் தாயார், 'அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்" என்று (என்னிடம்) கூறினாக்hள். அதற்கு நான், 'மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்(ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன்" என்றேன். (அப்போது) அல்லாஹ், '(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்" என்று தொடங்கும் (திருக்குர்ஆன் 24:11 - 20) பத்து வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூ பக்ர் அஸ்ஸித்தீக்(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் மிஸ்தஹுக்காக நான் சிறிதும் செலவிட மாட்டேன்" என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள் - மிஸ்தஹ் இப்னு உஸாஸா, தம் உறவினர் என்பதாலும் அவர் ஏழை என்பதாலும், அவருக்காக அபூ பக்ர் அவர்கள் செலவிட்டு வந்தார்கள் - அப்போது அல்லாஹ், 'உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, இறைவழியில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்துப் (பிழைகளைப்) பொருட்படுத்தாமல்விட்டுவிடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கிறான்" என்னும் (திருக்குர்ஆன் 24:22) வசனத்தை அருளினான். அபூ பக்ர்(ரலி), 'ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்" என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். 'அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்" என்றும் கூறினார்கள். (திருக்குர்ஆனில் என்னுடைய கற்பொழுக்கம் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம் விசாரித்தார்கள். 'ஸைனபே! நீ (ஆயிஷாவைக் குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்?... அல்லது (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?... என்று (ஸைனபிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நல்லதையே அறிவேன்" என்று பதிலளித்தார்கள். ஸைனப் அவர்கள் தாம், நபியவர்களின் துணைவியரில் எனக்கு (அழம்லும் நபி-ஸல்-அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை (இறையச்சமுடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான். ஆனால், ஸைனபுக்காக அவரின் சகோதரி ஹம்னா (என்னுடன்) போரிடலானார். (என் விஷயத்தில் அவதூறு பேசி) அழிந்து போனவர்களுடன் அவரும் அழிந்து போனார்.

அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப்(ரஹ்) கூறினார்:

இதுதான் அந்த (நால்வர்) குழுவிடமிருந்து எனக்கு கிடைத்த அறிவிப்பாகும்.

ஆயிஷா(ரலி) கூறினார்:

      அல்லாஹ்வின் மீதாணையாக! எவரைக் குறித்து (அந்தப் பழிச்சொல்) கூறப்பட்டதோ அந்த மனிதர் (-ஸஃப்வான், தம் அன்னையான என்னுடன் தம்மை இணைத்து அவதூறு பேசுவதைக் கேட்டு), 'சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்); என்னுடைய உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் ஒருபோதும் எந்த (அந்நியப்) பெண்ணின் மறைவிடத்தையும் திறந்ததில்லை" என்று கூறினார். அதன் பிறகு அவர் இறைவழியில் (உயிர்த் தியாகியாகக்) கொல்லப்பட்டார்.

இதை உர்வா(ரஹ்) அறிவித்தார்.
மேற்குறிபிட்ட இந்த ஹதீஸ் மிக நீண்ட செய்தி இதை தேவையான அளவு மட்டுமே இங்கு பதியப்பட்டுள்ளது. இந்த ஹதீஸில் இருந்து அவதூறு பரப்பிகள் இரண்டு வாதங்களை முன்வைக்கின்றனர். 

1. அதாவது பரீரா(ரலி) அவர்களது கருத்து.

2.ஆயிஷா(ரலி) தன்னைதானே ஜாரியா- இளம் பெண் எனக்கூறுவது. 

1. பரீரா(ரலி) அவர்களது கூற்றை எடுத்துக்கொண்டோமேயானால் அதில் ஆயிஷா(ரலி) அவர்களது கவனக்குறைவுதான் சுட்டப்படுகிறது. அது ஆயிஷா(ரலி) பருவம் எய்தாதவர் என்பதை உணர்த்தாது


2.ஆயிஷா(ரலி) கூறும் ஜாரியா என்ற சொல் சிறு பெண் என்ற பொருளை மட்டும் கொண்டது அல்ல. ஜாரியா என்பது இளம் பெண்ணையும் குறிக்கும் சொல். அது அடிமைகள் குறித்து பேசும் போது வயதானவர், சிறுமியர் இரண்டுக்குமான சொல். ஆக இந்த பொதுச்சொல்லை கொண்டு ஆயிஷா(ரலி) பருவம் எய்தவில்லை என்று வாதிக்க இயலாது.
(الْجَارِيَة ) الْأمة وَإِن كَانَت عجوزا والفتية من النِّسَاء وَالشَّمْس والسفينة وَفِي التَّنْزِيل الْعَزِيز {حَمَلْنَاكُمْ فِي الْجَارِيَة } وَالرِّيح ( ج )جوَار

الْجَارِيَة என்பது வயது முதிர்ந்த மற்றும் சிறு வயது பெண்கள் என இரண்டையும் குறிக்கும் என்று அல் மஜ்மு அல் வஸீத் பாகம் 1 பக்கம் 119ல் குறிப்பிடப்டுகிறது.

இந்த சொல் குறித்து லேன்ஸ் லெக்ஸிகான் பின்வருமாறு கூறுகிறது.
جَارِيَةٌ : A girl, or young woman; (Ṣ,* Mgh, Mṣb,* Ḳ;) a female of which the male is termed غُلَام ; so called because of her activity and running; opposed to عَجُوزٌ: (Mgh:) and ‡ a female slave; (Mgh voce غُلَامٌ;) [in this sense] applied even to one who is an old woman, unable to work, or to employ herself actively; alluding to what she was: (Mṣb:) pl. as above.
    ஆக ஜாரியா என்பது பருவம் அடையாதவர் என்பதற்கு போதிய சொல் அல்ல.

 ஆயிஷா(ரலி) அவர்கள் நபி(சல்) அவர்களது இறுதி ஹஜ்ஜில்தான் பூப்பெய்தினார்கள்:

இந்த விமர்சனத்தை முன்வைப்பவர்கள் குறைந்த அளவிலானவர்கள்தான் 
புகாரி 294. 'நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். 'ஸரிஃப்' என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, 'உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம்வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்' என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் 'குர்பானி' கொடுத்தார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
     மேற்குறிபிட்ட ஹதீஸ் ஆயிஷா(ரலி)க்கு ஹஜ்ஜின் போதுதான் பூப்பெய்தினார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் மேற்குறிபிட்ட ஹதீஸை படிக்கும் யாருக்கும் ஆயிஷா(ரலி) அவர்கள் அழுவதை கண்டதும் நபி(சல்) “உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று கேட்பதில் இருந்தே ஆயிஷா(ரலி) அவர்களுக்கு முன்பே இத்தகைய மாதவிடாய் ஏற்படுவதை ஒரு கணவனாக நபி(ஸல்) அவர்கள் அறிந்து வைத்திருதார்கள் என்பதைத்தான் உணர்த்துகிறது. நபி(சல்) அவர்கள் பங்குகொண்ட முதலும் கடைசியுமான ஹஜ் அது வொன்றுதான். அந்த ஆண்டே நபி(சல்) அவர்கள் மரணித்தும் விட்டார்கள். அதாவது நபி(சல்) அவர்கள் அதன் பிறகு ரம்லான் நோன்பு நோற்கவில்லை என்பது இதில் இருந்து அறியலாம். ஆனால் ஆயிஷா(ரலி) ரமலானில் தனது மதவிடாய் காலத்தில் நபி(சல்) எப்படி நடந்து கொள்வார்கள் என்று ஏராளமான் செய்திகள் உண்டு. 

    புகாரி 301. 'நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் 'இஃதிகாப்' இருக்கும்போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

ஆக அவதூறு பரப்பிகளின் இந்த வாதத்திற்கும் எந்த அடிப்படையும் இல்லை.  

விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளம்பெண் ஆயிஷா(ரலி)

விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளம்பெண் ஆயிஷா(ரலி)


விளையாட்டில் ஆர்வம் கொண்ட இளம்பெண் ஆயிஷா(ரலி)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، عَنْ عِيسَى، عَنِ الأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَسْتُرُنِي بِرِدَائِهِ، وَأَنَا أَنْظُرُ إِلَى الْحَبَشَةِ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ، حَتَّى أَكُونَ أَنَا الَّذِي أَسْأَمُ، فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ الْحَرِيصَةِ عَلَى اللَّهْوِ.

புஹாரி 5236. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் என்னைத் தம் மேல் துண்டால் மறைத்துக்கொண்டிருக்க பள்ளிவாசல் வளாகத்தில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் (என் வீட்டிலிருந்தபடி) பார்த்துக கொண்டிருந்தேன். நானாகச் சடைந்துவிடும் வரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகளின் மீது பேராவல் கொண்ட இளம் வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.
    ஆதாவது மேற்குறிபிட்ட செய்தியை பதிவிட்டு ஆயிஷா(ரலி) இளம் பெண்ணாக இருந்தார் என்ற வாதத்தை முன்வைத்து, அவர் பருவம் அடையவில்லை என்று கூறுகிறார்கள். இதுவும் நேரடியான ஆதாரம் அல்ல ஆயிஷா(ரலி) பருவம் அடையவில்லை என்பதற்கு.

     மேலும் இது சார்ந்த ஏனைய ஹதீஸ்களை சற்று ஆய்வு செய்தால் ஆயிஷா(ரலி) இந்த சம்பவம் நடைபெறும் போது ஏற்குறைய 14 வயது என்பது விளங்கும். இந்த செய்தி சற்றுகூடுதல் விளக்கத்துடன் ஸஹீஹ் இப்னு ஹிப்பானில் காணப்படுகிறது. 

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ أَنَّ أَبَا بَكْرٍ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ تُغَنِّيَانِ بِدُفَّيْنِ، وَتُغَنِّيَانِ فِي أَيَّامِهِمَا، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَتِرٌ بِثَوْبِهِ، فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ، فَكَشَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَوْبَهُ، وَقَالَ: "دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ، فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ"، قَالَتْ عَائِشَةُ: وَلَمَّا قَدِمَ وَفْدُ الْحَبَشَةِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامُوا يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي بِرِدَائِهِ وَأَنَا أَنْظُرُ إِلَيْهِمْ وَهُمْ يَلْعَبُونَ فِي الْمَسْجِدِ حَتَّى أَكُونَ أنا الذي أَسْأَمُ، فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ الْحَرِيصَةِ على اللهو
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
        என் அருகில் இரு (அன்சாரிச்) சிறுமியர் (சலங்கையில்லா கஞ்சிராக்களை) அடித்து பாட்டு பாடிக்கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆடையால் போர்த்திக்கொண்டிருந்தார்கள். (இதைக் கண்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அச்சிறுமியர் இருவரையும் அதட்டினார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மீதிருந்த) துணியை விலக்கி "அவர்களை விட்டு விடுங்கள், அபூபக்ரே! இவை பண்டிகை நாட்கள்" என்று கூறினார்கள். ஆயிஷா(ரலி) கூறினார்கள் அபீசீனிய தூதுக்குழு நபி(சல்) அவர்களிடம் வந்த போது, அவர்கள் பள்ளிவாசல் வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக்கொண்டிருக்க, (என் வீட்டிலிருந்தபடி) பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் இளம்வயதுப் பெண்ணாக இருந்தேன். விளையாட்டுமீது பேராவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்.(சஹீஹ் இப்னு ஹிப்பான் 5876)
ஆதாவது மேற்குறிபிட்ட சம்பவமானது அபீசீனிய தூதுக்குழு வந்த போது நடைபெற்றதாக ஆயிஷா(ரலி) குறிப்பிடுகிறார்கள். அதாவது அபிசீனிய தூதுக்குழு கைபர் யூத்தத்திற்கு பிறகு நபி(சல்) அவர்களிடம் வந்த தூதுக்குழு இது குறித்து பின்வரும் செய்தி குறிப்பிடுகிறது.
புகாரி 3136. அபூ மூஸா அல்-அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டுவிட்ட செய்தி நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரிய வந்தது. உடனே, நானும் என் இரண்டு சகோதரர்களும் நபி(ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரண்டு சகோதரர்களில் ஒருவர் அபூ புர்தா அவர்களும் மற்றொருவர் அபூ ருஹ்கி அவர்களுமாவர். நானே அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன். 'என் குலத்தாரில் ஐம்பதிற்கு மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்' என்றோ, 'ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம்' என்றோ என் தந்தை அபூ மூஸா(ரலி) சொன்னார்கள் என்று நான் நினைக்கிறேன்" என அறிவிப்பாளர் அபூ புர்தா(ரஹ்) கூறினார் - நாங்கள் ஒரு கப்பலில் ஏறிப் பயணித்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் மன்னர் நஜாஷீயிடம் எங்களை இறக்கிவிட்டது. அவரிடம் (அபிசீனியாவில்) ஜஅஃபர் இப்னு அபீ தாலிப் அவர்களையும் அவர்களின் சகாக்களையும் தற்செயலாகச் சந்தித்தோம். ஜஅஃபர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களை இங்கு அனுப்பி (இங்கேயே) தங்கும்படி உத்தரவிட்டுள்ளார்கள். எனவே, நீங்களும் எங்களுடன் (இங்கேயே) தங்குங்கள்" என்று கூறினார்கள். எனவே, நாங்கள் அவருடன் தங்கினோம். இறுதியில் நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) சென்றோம். நபி(ஸல்) அவர்கள் கைபரை வென்றபோது அவர்களைச் சென்றடைந்தோம். உடனே அவர்கள் (கைபர் போரில் கிடைத்த பொருட்களில்) எங்களுக்கும் பங்கு கொடுத்தார்கள். அல்லது எங்களுக்கும் அதிலிருந்து கொடுத்தார்கள். கைபர் வெற்றியில் கலந்து கொள்ளாத எவருக்கும் அதிலிருந்து எதையும் நபி(ஸல்) அவர்கள் பங்கிட்டுத் தரவில்லை. தம்முடன் (அதில்) பங்கெடுத்தவர்களுக்கு மட்டும் தான். பங்கிட்டுத் தந்தார்கள். ஆனால், எங்கள் கப்பலில் வந்தவர்களுக்கு மட்டும் ஜஅஃபர்(ரலி) அவர்களுடனும் அவர்களின் சகாக்களுக்கடனும் (சேர்த்துப்) பங்கிட்டுத் தந்தார்கள். 
         ஆயிஷா(ரலி) அவர்களுக்கு அப்போது வயது 14 என்பதையும், இப்னு ஹஜர் அவர்களது விளக்கத்தையும் சென்ற ஆதாரத்தின் மறுப்பில் விளக்கியுள்ளோம். ஆக மேற்குறிபிட்ட செய்தியும் ஆயிஷா(ரலி) பூப்பெய்த வில்லை என்பதற்கான சான்றாக கொள்ள முடியாது. மேலும் மேற்குறிபிட்ட செய்தியில்- الْجَارِيَةِ என்ற சொல் இடம்பெறுகிறது அதனால் ஆயிஷா(ரலி) சிறுமி என்று வாதிடுகிறார்கள், அதன் விளக்கத்தை அடுத்த ஆதார விளக்கத்தில் காண்போம் இன்ஷா அல்லாஹ்.

ஆயிஷா(ரலி)யும் அவரது பொம்மைகளும்


       நபி(ஸல்)- ஆயிஷா(ரலி) திருமணம் குறித்த அடுத்த விமர்சனம் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) பூப்பெயவதற்கு முன்பே புணர்ந்தார்கள் என்பதுதான். ஆனால் சென்ற தொடரில் ஆயிஷா(ரலி) அவர்களது வயது குறித்தும் அவர்கள் பூப்பெய்திய பிறகுதான் வீடு கூடினார்கள் என்பதும் தெளிவான வரலாற்று அவணங்களை முன்வைத்து விளக்கப்பட்டுவிட்டது. 

      இந்த விஷயத்தில் நேரடியான எந்த ஆதாரத்தையும் இதுவரை இந்த அவதூறு பரப்பிகள் எடுத்து வைக்கவில்லை. அவர்கள் தங்களது ஆவணமாக முன்வைப்பது 

1.ஆயிஷா(ரலி) அவர்கள் திருமணத்திற்கு பிறகும் பொம்மைகளை வைத்து விளையாடினார்கள் என்பதும் அதற்கான் இப்னு ஹஜர் அவர்களது விளக்கமும்தான்.
2.எதியோப்பியர்கள் விளையாட்டை ஆயிஷா(ரலி) கண்டு ரசித்த சம்பவத்தையும்,
3.ஆயிஷா(ரலி) தொடர்பான அவதூறு சம்பவத்தையும்,
4.ஆயிஷா(ரலி) இறுதி ஹஜ்ஜில் தான் பூப்பெதினார்கள் கற்பனைவாதமும் தான் இவர்களின் கைச்சரக்கு. அவற்றை ஒவ்வொன்றாக இன்ஷா அல்லாஹ் காண்போம், அதன் விளக்கத்தையும் காண்போம்.…
ஆதாரம் 1:

புகாரி 6130. ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

        நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேள். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோரிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.

முஸ்லிம் 2780. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

          நான் ஏழு வயதுடையவளாக இருந்த போது, நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். நான் (பருவமடைந்து) ஒன்பது வயதுடையவளாக இருந்தபோது, அவர்களிடம் அனுப்பிவைக்கப்பட்டேன். அப்போது விளையாட்டுப் பொம்மைகள் என்னுடன் இருந்தன. நான் பதினெட்டு வயதுடையவளாக இருந்தபோது, நபி (ஸல்) அவர்கள் என்னை விட்டு இறந்தார்கள்.

  மேற்குறிபிட்ட இரண்டு செய்திகளின் அடிப்படையில் ஆயிஷா (ரலி) பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததால் அவர்கள் பூபெய்தவரில்லை என வாதிடுகின்றனர்.

      அவர்கள் இந்த விமர்சனத்தை வளுவாக பதிய மேலும் ஒரு காரணமும் உண்டு. அதாவது ஆயிஷா(ரலி) குறித்த புகாரி ஹதீஸ் எண் 6130 வை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தனது விளக்க நூலான ஃபத்ஹுல் பாரியில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
قال الخطابي في هذا الحديث أن اللعب بالبنات ليس كالتلهي بسائر الصور التي جاء فيها الوعيد وإنما أرخص لعائشة فيها لأنها إذ ذاك كانت غير بالغ قلت وفي الجزم به نظر لكنه محتمل لأن عائشة كانت في غزوة خيبر بنت أربع عشرة سنة إما أكملتها أو جاوزتها أو قاربتها وأما في غزوة تبوك فكانت قد بلغت قطعا فيترجح رواية من قال في خيبر ويجمع بما قال الخطابي لأن ذلك أولى من التعارض

அல் கத்தாபி கூறினார்கள்: “ இந்த ஹதீஸில் கூறப்படும் பொம்மைகளை வைத்து விளையாடுவது என்பது தடுக்கப்பட்ட மற்ற உருவங்களை பயன்படுத்துவது போன்றது அன்று. ஆயிஷா(ரலி) அவர்கள் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது அவர் பருவ வயதை அடையாதவர் என்பதால்தான்”. என்னை பொறுத்தவரை , நேராக கூறுவது என்றால் அது கேள்விக்குறியதுதான். ஆயினும் கைபர் யுத்ததின் போது ஆயிஷா(ரலி) பருவ வயதை அடையாமலிருக்கவும் சாத்தியம் உண்டு. அப்போது ஆயிஷா(ரலி) அவர்களுக்கு சற்று ஏறக்குறைய 14 வயதிருக்கும். தபூக் யுத்ததின் போது அவர்கள் நிச்சயம் பருவமடைந்துவிட்டார்.கைபர் யுத்ததின் போது இது நடந்தது என்று கூறப்பட்ட அறிவிப்புகளே ஏற்புடையவையாகும். மேலும் இதில் முரண்பாடுகளை தீர்க்க கத்தாபியின் கருத்தே ஏற்புடையது. கருத்தொற்றுமை முரண்பாடுகளை விட சிறந்தது. (ஃபத்ஹுல் பாரி 10/527)
    ஆனால் மேற்குறிபிட்ட இந்த செய்தி முழுமையானது அல்ல. முழுமையானதை இங்கு பதியும் படசத்தில் இவர்களது கருத்து அடிபட்டுவிடும் என்பதற்காகத்தான் இவர்கள் இப்னு ஹஜர் அவர்களது ஆய்வின் தங்களுக்கு சாதகமான முடிவை மட்டும் பதிகிறார்கள். இதோ விடுபட்ட முற்பகுதி: 
لْحَدِيثِ عَلَى جَوَازِ اتِّخَاذِ صُوَرِ الْبَنَاتِ وَاللَّعِبِ مِنْ أَجْلِ لَعِبِ الْبَنَاتِ بِهِنَّ وَخُصَّ ذَلِكَ مِنْ عُمُومِ النَّهْيِ عَنِ اتِّخَاذِ الصُّوَرِ وَبِهِ جَزَمَ عِيَاضٌ وَنَقَلَهُ عَنِ الْجُمْهُورِ وَأَنَّهُمْ أَجَازُوا بَيْعَ اللَّعِبِ لِلْبَنَاتِ لِتَدْرِيبِهِنَّ مِنْ صِغَرِهِنَّ عَلَى أَمْرِ بُيُوتِهِنَّ وَأَوْلَادِهِنَّ قَالَ وَذَهَبَ بَعضهم إِلَى أَنه مَنْسُوخ واليه مَال بن بطال وَحكى عَن بن أَبِي زَيْدٍ عَنْ مَالِكٍ أَنَّهُ كَرِهَ أَنْ يَشْتَرِيَ الرَّجُلُ لِابْنَتِهِ الصُّوَرَ وَمِنْ ثَمَّ رَجَّحَ الدَّاودِيّ أَنه مَنْسُوخ وَقد ترْجم بن حِبَّانَ الْإِبَاحَةَ لِصِغَارِ النِّسَاءِ اللَّعِبَ بِاللِّعَبِ وَتَرْجَمَ لَهُ النَّسَائِيُّ إِبَاحَةَ الرَّجُلِ لِزَوْجَتِهِ اللَّعِبَ بِالْبَنَاتِ فَلَمْ يُقَيَّدْ بِالصِّغَرِ وَفِيهِ نَظَرٌ قَالَ الْبَيْهَقِيُّ بَعْدَ تَخْرِيجِهِ ثَبَتَ النَّهْيُ عَنِ اتِّخَاذِ الصُّوَرِ فَيُحْمَلُ عَلَى أَنَّ الرُّخْصَةَ لِعَائِشَةَ فِي ذَلِكَ كَانَ قبل التَّحْرِيم وَبِه جزم بن الْجَوْزِيِّ وَقَالَ الْمُنْذِرِيُّ إِنْ كَانَتِ اللُّعَبُ كَالصُّورَةِ فَهُوَ قَبْلَ التَّحْرِيمِ وَإِلَّا فَقَدْ يُسَمَّى مَا لَيْسَ بِصُورَةٍ لُعْبَةً وَبِهَذَا جَزَمَ الْحَلِيمِيُّ فَقَالَ إِنْ كَانَتْ صُورَةٌ كَالْوَثَنِ لَمْ يَجُزْ وَإِلَّا جَازَ وَقِيلَ مَعْنَى الْحَدِيثِ اللَّعِبُ مَعَ الْبَنَاتِ أَيِ الْجَوَارِي وَالْبَاءُ هُنَا بِمَعْنَى مَعَ حَكَاهُ بن التِّينِ عَنِ الدَّاوُدِيِّ وَرَدَّهُ قُلْتُ وَيَرُدُّهُ مَا أخرجه بن عُيَيْنَةَ فِي الْجَامِعِ مِنْ رِوَايَةَ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيِّ عَنْهُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ فِي هَذَا الْحَدِيثِ وَكُنَّ جِوَارِي يَأْتِينَ فَيَلْعَبْنَ بِهَا مَعِيَ وَفِي رِوَايَةِ جَرِيرٍ عَنْ هِشَامٍ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ وَهُنَّ اللُّعَبُ أَخْرَجَهُ أَبُو عَوَانَةَ وَغَيْرُهُ وَأَخْرَجَ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ مِنْ وَجْهٍ آخَرَ عَنْ عَائِشَةَ قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ أَوْ خَيْبَرَ فَذَكَرَ الْحَدِيثَ فِي هَتْكِهِ السِّتْرَ الَّذِي نَصَبَتْهُ عَلَى بَابِهَا قَالَتْ فَكَشَفَ نَاحِيَةَ السِّتْرِ عَلَى بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ فَقَالَ مَا هَذَا يَا عَائِشَةُ قَالَتْ بَنَاتِي قَالَتْ وَرَأَى فِيهَا فَرَسًا مَرْبُوطًا لَهُ جَنَاحَانِ فَقَالَ مَا هَذَا قُلْتُ فَرَسٌ قَالَ فَرَسٌ لَهُ جَنَاحَانِ قُلْتُ أَلَمْ تَسْمَعْ أَنَّهُ كَانَ لِسُلَيْمَانَ خَيْلٌ لَهَا أَجْنِحَةٌ فَضَحِكَ فَهَذَا صَرِيحٌ فِي أَنَّ الْمُرَادَ بِاللُّعَبِ غَيْرُ الْآدَمِيَّاتِ

"இந்த ஹதீஸ் தடுக்கப்பட்ட உருவங்கள் மற்றும் படங்களை உருவாக்கி அதனை கொண்டு இளம் பெண்களை வீட்டு பொறுப்புகளையும, குழந்தைகள் பராமரிப்பையும் பயிற்றுவிக்க பயன்படுத்தலாம் என்பதற்கான அனுமதியாக கருத்தப்படுகிறது. 
இவ்வாறு இயாள் . அவர்கள் தனது சமூகத்திடம் தீர்பளித்துள்ளார்: இளம் பெண்கள் வீட்டு நிர்வாகத்தை கற்கவும், குழந்தை வளர்ப்பை அறியவும் இத்தகைய பொம்மைகளைசெய்து விற்கலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளார்கள்.
மேலும் தஹபீ இந்த சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்று கூறுகிறார்கள்.
இப்னு பத்தால் அவர்களது கருத்து:, இப்னு ஜியாத் பின்வருமாறு கூறுகிறார்: இமாம் மாலிக் அவர்கள் தனது மகள்களை இவ்வாறு பொம்மைகளை வழங்கி விளையாட அனுமதித்த நபரை கண்டித்தார்கள். மேலும் இந்த சட்டம் மாற்றப்பட்டுவிட்டது என்றும் கூறினார்கள்.
இப்னு ஹிப்பானின் கருத்தின் படி இளம் பெண்கள் கற்பதற்காக பொம்மைகளை பயன்படுத்தலாம்.
அந்நஸயீ கருத்தின் படி: ஒரு மனிதர் தனது மனைவியை இத்தகைய பொம்மைகளை கொண்டு விளையாட அனுமதிக்கலாம். அவர் அதை சிறுமிகளுக்கு மட்டுமே ஆனது என்று கொள்ளவில்லை.(அது பொதுவாக அனைவருக்கும் உரியது).
பைஹகீயின் கருத்தின் படி: இது தடை செய்யப்படுவதற்கு முன்பானது ஆகும். ஆகவே அன்று அவர் பொம்மைகளை வைத்து விளையாட அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுவே இப்னு ஜவ்ஸீ அவர்களது கருத்தாகும்.
அல் முந்தீர் அவர்களது கருத்தின் படி: அந்த பொம்மை தடுக்கப்பட்ட உருவமாக இருந்தால் இந்த சம்பவம் தடைக்கு முன்பானதாக இருக்கும். அப்படி இல்லையென்றார் அந்த உருவம் தடுக்கப்பட்டதாக இருக்காது. மேலும் கூறினார்கள் அது சிலை போல் இருந்தால் தடுக்கப்பட்டது. இல்லையெறால் அனுமதிக்கப்பட்டது.......
( மேற்குறிபிட்ட கருத்துக்களை எல்லாம் பதிவிட்டிவிட்டு அபூதாவூத்தின் பின்வரும் ஹதீஸ் குறித்து இப்னு ஹஜர் பேசுகிறார்)
முஃமீன்களின் அன்னை ஆயிஷா(ரலி) கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தபூக்கில் இருந்தோ, கைபரில்(அறிவிப்பாளர் சந்தேகத்துடன் அறிவிக்கிறார்) இருந்தோ வந்த போது காற்றடித்து எனது கிடங்கினில் தொங்கவிடப்பட்ட திரைச்சீலை விலகியது. அங்கிருக்கும் பொம்மைகள் தெரிந்தன. (நபி(சல்)) அவர்கள் "இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு "அது குதிரை" என்று பதிலளித்தார்கள் . (நபி(சல்)) அவர்கள் " அதிலிருப்பது என்ன?” என்று கேட்டார்கள். “அவை இரண்டு இறக்கைகள்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர்கள் " என்ன இரண்டு இறக்கைகள் இருக்கும் குதிரையா! “என்று வினவினார்கள். அதற்கு(ஆயிஷா(ரலி)) அவர்கள் " ஏன் சூலைமான்(அலை) அவர்களிடம் இரண்டு இறக்கை இருக்கும் குதிரை இருந்ததை நீங்கள் அறிந்ததில்லையா?” என்றார்கள். மேலும் : இதை கேட்டதும் நபி(சல்) அவர்கள் தனது கடைவாய்பல் தெரியும் அளவிற்கு சிரித்தார்கள் என்று (ஆயிஷா(ரலி) கூறினார்கள். (அபூதாவுத் 4934) இதில் தெளிவாக இருக்கிறது மனிதன்னாலாத உருவ பொம்மைகளையும் அவர்கள் வைத்திருந்தது.
இவை அனைத்தையும் பதிவிட்ட பிறகு மேற்குறிபிட்ட அறிஞர்களின் கருத்துக்களை ஒன்றினைக்கும் பொருட்டு அல் கத்தாபி அவர்களது கருத்தை முன்வைக்கிறார்கள் இப்னு ஹஜர் அவர்கள்.)
அல் கத்தாபி கூறினார்கள்: “ இந்த ஹதீஸில் கூறப்படும் பொம்மைகளை வைத்து விளையாடுவது என்பது தடுக்கப்பட்ட மற்ற உருவங்களை பயன்படுத்துவது போன்றது அன்று. ஆயிஷா(ரலி) அவர்கள் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது அவர் பருவ வயதை அடையாதவர் என்பதால்தான்”. என்னை பொறுத்தவரை , நேராக கூறுவது என்றால் அது கேள்விக்குறியதுதான். ஆயினும் கைபர் யுத்ததின் போது ஆயிஷா(ரலி) பருவ வயதை அடையாமலிருக்கவும் சாத்தியம் உண்டு. அப்போது ஆயிஷா(ரலி) அவர்களுக்கு சற்று ஏறக்குறைய 14 வயதிருக்கும். தபூக் யுத்ததின் போது அவர்கள் நிச்சயம் பருவமடைந்துவிட்டார்.கைபர் யுத்ததின் போது இது நடந்தது என்று கூறப்பட்ட அறிவிப்புகளே ஏற்புடையவையாகும். மேலும் இதில் முரண்பாடுகளை தீர்க்க கத்தாபியின் கருத்தே ஏற்புடையது. கருத்தொற்றுமை முரண்பாடுகளை விட சிறந்தது. (ஃபத்ஹுல் பாரி 10/527)

மேலும் காதி இயாத் அவர்களது 7/447 إكمال المعلم بفوائد مسلم என்ற நூலில் முஸ்லிம் ஹதீஸ் எண் 2440/2780 இன் விளக்கமாக இந்த கருத்தை முன்வைத்துள்ளார்: 
كنت ألعب بالبنات عند رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : فيه جواز اللعب بهن، وتخصيصهم من الصور المنهى
عنها لهذا الحديث، ولا فى ذلك من تدريب النساء فى

பெண்களுக்கு கற்பிப்பதற்காக , தடுக்கப்பட்டவை என்று ஹதீஸ்களில் ஒதுக்கப்பட்ட உருவங்களை வைத்து அவர்கள் விளையாட அனுமத்திக்கலாம்
ஆனால் மேற்குறிபிட்ட இப்னு ஹஜர் அவர்களது தீர்வினில் தவறுகள் உள்ளன. 
1.ஆயிஷா(ரலி) அவர்கள் கைபர் வரை பருவம் அடையவில்லை என்பதற்கும் அவர்கள் தபூக்கிற்கு பிறகு பருவம் அடைந்தார்கள் என்பதற்கும் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. இன்று வரை பெண்கள் 9 முதல் 14 வயதிற்குள்ளாக பூபெய்துகின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நாம் முன்பே கண்ட அபூதாவுத் அறிவிப்பான ஆயிஷா(ரலி) பருவம் அடைந்த பின்பே வீடு கூடினார்கள் என்பதற்கும், ஆயிஷா(ரலி) பொதுமை படித்திய 9 வயது பருவம் எய்தல் என்ற ஹதீஸிற்கும் நேர் முரணானது. மேலும் இந்த ஹதீஸ் பற்றி விளக்க முற்பட்ட ஹாபிழ் இப்னு ஹஜர் தனது தல்கீஷ் அல் ஹபீரில் (3/399 ஹதீஸ் எண்: 1695) இன் விளக்கமாக பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
وَرَدَ قَوْلُهَا: الْخَيْلُ ذَوَاتُ الْأَجْنِحَةِ فِي حَدِيثٍ آخَرَ لِعَائِشَةَ أَيْضًا: أَنَّهَا كَانَتْ تَلْعَبُ بِذَلِكَ وَهِيَ شَابَّةٌ، لَمَّا دَخَلَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي قُدُومِهِ مِنْ غُزَاةِ، أَخْرَجَهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيُّ وَالْبَيْهَقِيُّ. 
ஆயிஷா(ரலி) அவர்களது வார்த்தையான இறக்கையுடன் கூடிய குதிரை மற்றுமோர் ஹதீஸில் இடம் பெறுகிறது. அவர் இளம் பெண்ணாக, நபி(சல்) அவர்கள் ஒரு போரில் இருந்துவரும் போது விளையாடிக்கொண்டிருந்தார். மேலும் இந்த ஹதீஸ் அபூதாவுதிலும், நஸயீலும், பைஹகீயிலும் இடம் பெறுகிறது.
(நூல்:தல்கீஷ் அல் ஹபீரில் 3/399, ஹதீஸ் எண்: 1695)
    ஆக அவரே அல்கத்தாபியின் கருத்தில் உறுதியற்ற நிலையில் இருந்ததால்தான் ஃபத்ஹுல் பாரியில் இப்படி கூறுகிறார் ஹதீஸின் விளக்கத்தில் " என்னை பொறுத்தவரை , நேராக கூறுவது என்றால் அது கேள்விக்குறியதுதான்.” என்று.

2.அல் கத்தாபியின் கருத்தில் கூறுவதற்காக, ஆயிஷா(ரலி) அவர்களது மேற்குறிபிட்ட சம்பவம் கைபரின் போது நடந்தது என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. மாறாக இந்த சம்பவம் தபூக் யுத்தத்திற்கு பிறகு நடந்தது என்பதற்கு ஹதீஸ்கள் உண்டு. பைஹகீயின் சுனன் அல் குப்ராவில்(20982) தெளிவாக நபி(சல்) அவர்கள் தபூக்கில் இருந்துதான் வந்தார்கள் என்று இடம் பெறுகிறது
أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ الْمُزَكِّي , أنبأ أَبُو الْحَسَنِ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبْدُوسٍ , ثنا عُثْمَانُ بْنُ سَعِيدٍ الدَّارِمِيُّ , ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ , أنبأ يَحْيَى بْنُ أَيُّوبَ , حَدَّثَنِي عُمَارَةُ بْنُ غَزِيَّةَ , أَنَّ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ التَّيْمِيَّ , حَدَّثَهُ , عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , عَنْ عَائِشَةَ , رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: قَدِمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ وَقَدْ نَصَبْتُ عَلَى بَابِ حُجْرَتِي عَبَاءَةً , وَعَلَى عُرْضِ بَيْتِي سِتْرًا أَرْمِنِيًّا , فَدَخَلَ الْبَيْتَ فَلَمَّا رَآهُ قَالَ: " مَا لِي يَا عَائِشَةُ وَالدُّنْيَا؟ " , فَهَتَكَ السِّتْرَ حَتَّى وَقَعَ بِالْأَرْضِ , وَفِي سَهْوَتِهَا سِتْرٌ , فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ , فَقَالَ: " مَا هَذَا يَا عَائِشَةُ؟ " , قَالَتْ: بَنَاتِي , قَالَتْ: وَرَأَى بَيْنَ طُوبِهَا فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رُقَعٍ , قَالَ: " فَمَا هَذَا الَّذِي أَرَى فِي وَسَطِهِنَّ؟ " , قَالَتْ: فَرَسٌ , قَالَ: " مَا هَذَا الَّذِي عَلَيْهِ؟ " , قَالَتْ: جَنَاحَانِ , قَالَ: " فَرَسٌ لَهُ جَنَاحَانِ؟ " , قَالَتْ: أَوَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ بْنِ دَاوُدَ خَيْلًا لَهُ أَجْنِحَةٌ؟ قَالَتْ: فَضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ 
ஆக ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களது இந்த ஹதீஸின் புரிதலில் தவறு இருக்கிறது.

நாம் மிக சுருக்கமாக இந்த விளக்கத்தை புரிய வேண்டுமானால் இந்த ஹதீஸ் குறித்து மூன்று கருத்துக்கள் நிலவுகின்றன.
1.இது அனைவருக்குமானது. ஆகுமாக்கப்பட்டது கற்பித்தல் என்ற நோக்கத்திற்காக. இந்த கருத்தை காதி இயாள், நஸயீ போன்றவர்கள் முன்வைக்கிறார்கள். இந்த கருத்தை முன்வைத்துதான் தனது வாதத்தையே ஹாபிள் இப்னு ஹஜர் ஆரம்பிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.
2. இந்த அனுமதி மாற்றப்பட்டது என்ற கருத்து. இதனை தஹபீ இப்னு பத்தால், பைஹகீ, இப்னு ஜவ்ஸீ போன்றவர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால் இஸ்லாமின் இறுதியில்தான் தபூக் யுத்தம் நடை பெற்றது ஆக இந்த அனுமதி இஸ்லாமின் இறுதி காலம் வரை இருந்தது என்பதை அறிய முடிகிறது. அதனால் இந்த முடிவு தள்ளப்படுகிறது. மேலும் ஆயிஷா(ரலி) சிறுமி என்றால் இவர்களின் இந்த வாதம் தேவையற்றது. பருவம் அடையாதவரின் குற்றங்கள் கணக்கிடப்படாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
3.இறுதியாக ஆயிஷா(ரலி) சிறுமி என்பதால் இந்த அனுமதி பொருந்தும். என்ற வாதம். இதுவும் பலவீனமான கருத்துதான் ஆயிஷா(ரலி) தபூக் யுத்ததின் போது 15 வயதுடையவர் எனும் போது பருவமடைந்தவருக்கும் இந்த அனுமதி இருப்பதை அறிய முடிகிறது. ஆக ஹாபிழ் இப்னு ஹஜரின் அல் கத்தாபியிர்கு ஒத்தமைந்த கருத்தும் தள்ளப்படுகிறது,
         ஆக இன்றும் இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் கற்பதற்காக உருவங்களை பயன்படுத்தலாம் என்ற விதியை அறிஞர்கள் ஏற்றுள்ளனர். மேலும் பொம்மைகளை கொண்டு விளையாடுவது பெண்களுக்கு விருப்பமான ஒரு விளையாட்டு. இன்றும் பூப்பெய்த பெண்களுக்கும், இளம் பெண்களுக்குமான மாபெரும் உலகளாவிய பொம்மைக்கான சந்தை உண்டு. மேலும் பார்பீ போன்ற பொம்மைகள் இளம் பெண்களை குறிவைத்து தயாரிக்கப்படுவது நாம் அறிந்தது. ஒரு வேலை கட்டுரையாளர் மனித சஞ்சாரம் இல்லாத தனித்தீவில் வாழ்கிறார் போலும். 

              அவதூறு பரப்புபவர்களின் வாதம் ஆயிஷா(ரலி) பருவம் எய்தாதவர் என்பதால் பொம்மையை கொண்டு விளையாட அனுமதி வழங்கப்பட்டது. ஆகவே அவர் பருவமடையவில்லை. நமது வாதம் இந்த அனுமதி அனைவருக்குமானது. ஆக இந்த சட்ட அனுமதியை கொண்டு பருவம் எய்தினார் எய்தவில்லை என்பதை அறிய முடியாது. தெளிவாக சென்ற தொடரில் அவர் வீடு கூடும் போது பருவம் எய்திவிட்டார் என்பதற்கு ஆதாரம் பதியப்பட்டுள்ளது. அதற்கு மறுப்பு கூறுபவரிடம் சட்ட ஆய்வுகளை விட ஆயிஷா(ரலி) பருமடையவில்லை என்ற நேரடி ஆதாரத்தையே நாம் எதிர் பார்க்கிறோம்.

நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) யை மணந்ததால் அவர் ஒரு குழந்தை புணர்வாளர்: விமர்சனமும் பதிலும்


                  நபி(ஸல்) அவர்கள் குறித்த இந்த விமர்சனம் சற்று விளக்கமாக காண வேண்டிய ஒன்று. முதலில் இந்த விமர்சனத்தில் இடம் பெறும் குழந்தை புணர்வாளர்(Pedophile) என்ற மனநிலை பாதிப்பின் விளக்கம் இதுவே.
“ Over a period of at least 6 months, recurrent, intense sexually arousing fantasies, sexual urges, or behaviors involving sexual activity with a prepubescent child or children (generally age 13 years or younger)” (P.No: 697 DIAGNOSTIC AND STATISTICAL MANUAL OF MENTAL DISORDERS, FIFTH EDITION)
" குறைந்தது ஒரு ஆறு மாத காலமாக, பூப்பெய்தாத அல்லது குழந்தைகளின் மீதான தொடர்ச்சியான தீவிர பாலியல் தூண்டுதல் கற்பனைகள்,பாலியல் தூண்டுதல்கள் அல்லது பாலியல் செயல்பாடு சம்பந்தப்பட்ட நடத்தைகளில் ஈடுபடுதல்" 
மேற்குறிபிட்ட இந்த குற்றச்சாட்டில் ஒன்றையும் நபி(சல்) அவர்களின் மீது இந்த விடயத்தில் நிறுவ இயலாது. 

  நபி(சல்) அவர்களுக்கு ஆயிஷா(ரலி) மட்டுமே 6 வயதில் மணமுடிக்கப்பட்டவர். அவர் பூப்பெய்த பிறகு உறவு கொள்ளப்பட்டார். அதாவது 9 வயதில். அதனால்தான் ஆயிஷா(ரலி) பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.
حدثنا إسحاق، قال: أبنا زكريا بن عدي، عن أبي المليح، عن حبيب بن أبي مرزوق، عن عائشَة -رضي الله
عنها-، قالت: إذا بَلَغَت الجاريَة تِسعًا فهي امرأة
ஆயிஷா(ரலி) கூறியதாவது, “சிறுமி 9 வயதை அடைந்ததும் பெண்ணாகிறாள்"  (நூல்: مسائل ஹதீஸ் எண்:1289 ; ஆசிரியர்: حرب بن إسماعيل الكرماني)
அறிவிப்பாளர் தொடர்
عائشَة -رضي الله عنه ا حبيب بن أبي مرزوق حسن بن عمر بن يحيى )أبي المليح( زكريا بن عدي إسحاق بن إبراهيم بن مخلد بن إبراهيم بن مطر

         இந்த ஹதீஸை நாம் குறிபிட்டதும் இஸ்லாம் மீது அவதூறு பரப்புபவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களுக்கு தெரியாமல் கூறுகிறார் என்று உளறுகின்றனர். ஆனால் ஆயிஷா(ரலி) அவர்கள்தான் மாதவிடாய் குறித்து மிக அதிகமாக விளக்கியவர்கள். இது ஹதீஸ் கிதாப்களை படிக்கும் யாரும் அறிந்து கொள்ளலாம். அதனால் பெண்ணுக்கும் சிறுமிக்கும் ஆயிஷா(ரலி) க்கு வித்தியாசம் தெரியாது என்பது எல்லாம் சுத்த பேத்தல். 
              மேலும் மேற்குறிபிட்ட பூப்பெய்துதல் குறித்த ஆயிஷா (ரலி) அவர்களது ஹதீஸை பின்வருமாரு அல் பைகஹீ அவர்கள் தனது நூலான சுனன் அல் குப்ராவில் விளக்குகிறார்கள்:
الشَّافِعِيِّ قَالَ: أَعْجَلُ مَنْ سَمِعْتُ بِهِ مِنَ النِّسَاءِ يَحِضْنَ نِسَاءٌ بِتِهَامَةَ يَحِضْنَ لِتِسْعِ سِنِينَ
ஷாஃபி(ரஹ்) அவர்கள் கூறியதாவது: திகாமாவில் பெண்கள் ஒன்பது வயது அடைந்ததுமே பூப்பெய்வதாக கேள்விபட்டுள்ளோம்.
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ قِرَاءَةً عَلَيْهِ حَدَّثَنِي أَبُو أَحْمَدَ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الشَّعْبِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْأَرْزَنَانِيُّ ثنا أَحْمَدُ بْنُ طَاهِرِ بْنِ حَرْمَلَةَ ثنا جَدِّي ثنا الشَّافِعِيُّ، قَالَ: " رَأَيْتُ بِصَنْعَاءَ جَدَّةً بِنْتَ إِحْدَى وَعِشْرِينَ سَنَةً حَاضَتِ ابْنَةَ تِسْعٍ وَوَلَدَتِ ابْنَةَ عَشْرٍ وَحَاضَتِ الْبِنْتُ ابْنَةَ تِسْعٍ وَوَلَدَتِ ابْنَةَ عَشْرٍ وَيُذْكَرُ عَنِ الْحَسَنِ بْنِ صَالِحٍ، أَنَّهُ قَالَ: أَدْرَكْتُ جَارَةً لَنَا صَارَتْ جَدَّةً بِنْتِ إِحْدَى وَعِشْرِينَ سَنَةً وَعَنْ مُغِيرَةَ الضَّبِّيِّ أَنَّهُ قَالَ: احْتَلَمْتُ وَأَنَا ابْنُ اثْنَتَيْ عَشْرَةَ سَنَةً وَرُوِّينَا عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ: " إِذَا بَلَغَتِ الْجَارِيَةُ تِسْعَ سِنِينَ فَهِيَ امْرَأَةٌ " تَعْنِي وَاللهُ أَعْلَمُ فَحَاضَتْ فَهِيَ امْرَأَةٌ

         ஷாஃபி(ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் யமனில் 21 வயதில் பாட்டியாகும் பெண்ணை கண்டிருக்கிறேன். அவரது மகள் 9 வயதில் பூப்பெய்தி 10 வயதில் பெண் பிள்ளை பெற்றார். மேலும் அப்பெண்ணின் மகளும் 9 வயதில் பூப்பெய்தி 10 வயதில் பிள்ளை பெற்றார்.(அதாவது 19 அல்லது 20 வயதிலேயே பேரக்குழந்தைகளை கண்டுவிடுவார்கள்) மேலும் இப்னு ஸலாஹ் கூறினார்கள்: எனது அருகாமையில் 21 வயதை அடைந்த பாட்டி இருக்கிறார். மேலும் முகீரா அத் தபி கூறினார்கள் " பண்ணிரண்டு வயதில் நான் பருவ வயதை அடைந்திருந்தேன்.” மேலும் ஆயிஷா(ரலி) அவர்களது மற்றோரு அறிவிப்பில் "சிறுமி 9 வயதை அடைந்ததும் பெண்ணாகிறாள்" என்றிருக்கிறது. அதாவது அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு அதனால் பெண்ணாகிறாள் என்று பொருள்.அல்லாஹ்வே அறிந்தவன் (நூல்: பைஹகீ அவர்கள் ஸுனன் அல் குப்ரா ஹதீஸ் எண்:1531/1588 ;1/476)
மேலும் நபி(சல்)- ஆயிஷா(ரலி) சம்பவம் குறித்து பதிவிட்ட அபூதாவுத் அவர்கள் பின்வருமாரு விளக்குகிறார்கள்:
دَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالاَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزَوَّجَنِي وَأَنَا بِنْتُ سَبْعِ سِنِينَ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ أَتَيْنَ نِسْوَةٌ - وَقَالَ بِشْرٌ فَأَتَتْنِي أُمُّ رُومَانَ - وَأَنَا عَلَى أُرْجُوحَةٍ فَذَهَبْنَ بِي وَهَيَّأْنَنِي وَصَنَعْنَنِي فَأُتِيَ بِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَبَنَى بِي وَأَنَا ابْنَةُ تِسْعٍ فَوَقَفَتْ بِي عَلَى الْبَابِ فَقُلْتُ هِيهْ هِيهْ - قَالَ أَبُو دَاوُدَ أَىْ تَنَفَّسَتْ - فَأُدْخِلْتُ بَيْتًا فَإِذَا فِيهِ نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ فَقُلْنَ عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ. دَخَلَ حَدِيثُ أَحَدِهِمَا فِي الآخَرِ.
             உம்முல் முஃமினீன் ஆயிஷா(ரலி கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (சல்) அவர்கள் எனக்கு ஆறு அல்லது ஏழு வயதில் மணமுடித்தார்கள். நாங்கள் மதீனா வந்த போது, பிஸ்ர் அவரது அறிவிப்பின் படி’; உம்மூ ரூமான் நான் ஊசல் ஆடிக்கொண்டிருக்கும் போது வந்தார்கள். என்னை அழைத்து சென்று தயார் படுத்தி அலங்கரித்தார். பிறகு நான் நபி(சல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டேன். என்னை அவர்கள் வீடு கூடிய போது வயது ஒன்பது. அவர்(உம்மு ரூமான்) என்னை வாசல் அருகில் நிறுத்திவிட்டு சிரித்தார்கள்.
       அபுதாவூத் கூறினார்கள்:அதாவது என்ன கூறுகிறார்கள் என்றால், "நான் பூபெய்தினேன், பிறகு நான் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டேன், அங்கு சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் கூறினார்கள் நல்ல அருளும் வளமும் ஏற்படட்டும். ..............(அபுதாவுத் 4933) 
                ஆக மேற்குறிபிட்ட செய்தி தெளிவாக கூறுகிறது ஆயிஷா(ரலி) பூப்பெய்தியதும் தான் நபி(சல்) அவர்கள் வீடு கூடினார்கள் என்பதை. ஆக 9 வயதில் பூபெய்துவது அங்கு நடக்கும் இயல்பான விஷயமாக இருந்திருக்க வேண்டும். மேலும் இன்றும் கூட சில நேரங்களில் பெண்பிள்ளைகள் 8 அல்லது 9 வயதில் பூப்பெய்துகின்றனர். இது மேலை நாடுகளிலும் , ஆசிய நாடுகளிலும் ஏற்படத்துவங்கியுள்ளது. இது குறித்து டாக்டர் ,சாரா கிரக்மேன் குறிப்பிடுகிறார்.(1)
“It is not uncommon for girls to start their period as young as 8 or 9,” says Dr. Sara Kreckman, UnityPoint Health pediatrician.”
             இது ஒன்றும் புதிதல்ல என்று டாகடர் கூறுவதின் பிண்ணனி நாம் வேளாண்மை செய்து குடியேறிய காலங்களில் பெண்ணின் பூபெய்யும் வயது 7 முதல் 13 ஆக இருந்தது. என்று ஆய்வுகள் கூறுகின்றன.(Changing times: The evolution of puberty P.D. Gluckman a,∗, M.A. Hanson ,) 

            ஆக பூபெய்தல் என்பது 7ல் இருந்து 13 வரை நிகழ்வது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அது நமது மரபுகளில் பதிந்த ஒன்று. அதை ஆயிஷா(ரலி) யும் சந்தித்ததால்தான் 9 வயதில் சிறுமி பெண்ணாகிறாள் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். இப்படி ஒரு சிறுமியை திருமணம் முடித்து அவர் பூப்பெய்த பிறகும் அந்த திருமணம் தொடர்கிறது என்றால் இது நிச்சயம் குழந்தை புணர்வாளருக்கான அடையாளம் அல்ல. அதாவது பீடோஃபிலியாவின் அடிப்படை அளவியலே அடிபடுகிறது. 

       மேலும் இத்தகைய திருமண முறைகள் முன்பே அந்த சமுகத்தில் நிறைந்து காணப்பட்டது என்பதை வரலாறு தெளிவாக பதிவிட்டுள்ளது. நபி(ஸல்)-ஹதீஜா(ரலி) ஆகியோரின் பெண்பிள்ளைகளான ஜைனப் பின்த் முஹம்மத்(சல்) அவர்களின் வாழ்க்கை குறிப்பை பார்த்தோம் என்றால் அவர்களுக்கும் இந்த வகையான திருமணமே நிகழ்ந்துள்ளது, அவரது பிறப்பு குறித்து இப்னு அப்தில் பர் இயற்றிய அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிபத அல் அஸ்ஹாப் அறிவிப்பாளர் எண்:3360 இல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
قد تقدّم انها اكبر بناته صلّى الله عليه وسلم بلا خلاف الا ما لا يصح وانما الخلاف فيها وفى القاسم أيهما ولد أوّلا قال ابن اسحاق سمعت عبد الله بن محمد بن سليمان يقول ولدت زينب بنت رسول الله صلى الله عليه وسلم فى سنة ثلاثين من مولده صلّى الله عليه وسلم وادركت الاسلام واسلمت وهاجرت وكان رسول الله صلّى الله عليه وسلم محبا لها*
ஜைனப் பின்த் முஹம்மது(சல்) நபி(சல்) அவர்களின் முப்பதாவது வயதில் பிறந்தார்கள். (நூல் الاستيعاب في معرفة الأصحاب)

மேலும் அவரது திருமணம் குறித்து பின்வருமாறு இடம்பெறுகிறது இப்னு சஃத் தாரிக் அல் குப்ராவில் 
زينب بنت رسول الله صلى الله عليه وسلم وأمها خديجة بنت خويلد بن أسد بن عبد العزى بن قصي وكانت أكبر بنات رسول الله صلى الله عليه وسلم تزوجها بن خالتها أبو العاص بن الربيع بن عبد العزى بن عبد شمس بن عبد مناف بن قصي قبل النبوة

…….ஜைனப் பிந்த் முஹம்மது(சல்) அவர்கள் தனது அத்தை மகனான அபு அல் ஆஸ் அவர்களை நபித்துவத்திற்கு முன்பு திருமணம் செய்தார்கள்……(நூல்: الطبقات الكبرى ابن سعد vol 8/4098)

    ஆக நபி(ஸல்) அவர்களது முதல் மகளான ஜைனப்(ரலி) அவர்களும் தனது 10 வயதிற்கு முன்பாகவே திருமணம் செய்விக்கப்பட்டார். 

அதுபோல் ருகைய்யா பின்த் முஹம்மது(சல்) நபி(சல்) அவர்களது இரண்டாவது மகளும் இவ்வாறே திருமணம் முடிக்கப்பட்டார்கள்:
ذكر الزبير بن بكار وغيره انها أكبر بناته صلّى الله عليه وسلم وصححه الجرجانى النسابة وقد تقدّم أن الاصح والذى عليه الاكثر أن زينب أكبرهنّ ولدت رقية ولرسول الله صلّى الله عليه وسلم ثلاث وثلاثون سنة
……..ருகைய்யா(ரலி) நபி(ஸல்) அவர்கள் 33 வயதாக இருக்கும் போது பிறந்தார். (நூல்:தாரிக் அல் ஹமீஸ் பாகம் 1, பக்கம்: 274)
மேலும் அவரது திருமணம் குறித்து பின்வருமாறு இடம்பெறுகிறது
رقية بنت رسول الله صلى الله عليه وسلم وأمها خديجة بنت خويلد بن أسد بن عبد العزى بن قصي كان تزوجها عتبة بن أبي لهب بن عبد المطلب قبل النبوة
        ருஹைய்யா நபி(ஸல்) அவர்களது மகள், கதீஜா(ரலி) பிந்த் குவைலித் அவரது தாயாராவார். உத்பா பின் அபிலஹபிற்கு நபி(சல்) அவர்களது நபித்துவத்திற்கு ( நபி(சல்) அவர்கள் 40 வயதில் நபித்துவம் பெற்றார்கள்) முன்பு திருமணம் முடிக்கப்பட்டார்.      (الطبقات الكبرى ابن سعد Vol:8/4099)
         ஆக நபி(சல்) அவர்களது முதல் இரு மகளும் ஆயிஷா(ரலி) அவர்களை போன்றே திருமணம் செய்யப்பட்டுள்ளார்கள். இதே போன்று உம்மு குல்தும் பின்த் முஹம்மது(சல்) அவர்களது மூன்றாம் மகளும் இப்படித்தான் திருமணம் செய்துள்ளார்கள். ஆக நபித்துவத்திற்கு முன்பு நிகழந்த பல திருமணங்கள் நபி(சல்) மற்றும் ஆயிஷா(ரலி) போன்ற திருமணங்கள்தான். மேலும் இத்தகைய ஒரு செயலை நபி(ஸல்) அவர்கள் மட்டுமே செய்திருந்தால் இதையே காரணமாக காட்டி இஸ்லாமிய எதிரிகளான குரைஷி இறைமறுப்பாளர்களும், யூதர்களும் நபி(ஸல்) அவர்களை விமர்சனம் செய்திருப்பார்கள். இங்கு ஒரு விஷயம் கவனிக்கப்பட வேண்டியது உள்ளது. அதாவது திருமணம் குறித்த இஸ்லாமிய நெறிகள் தோன்றுவதற்கு முன்பு அந்த சமூகத்தில் எந்த நடைமுறை இருந்ததோ அதுவே பின்பற்றப்பட்டது. அதனால்தான் இந்த திருமணம் எந்த விமர்சனத்திற்கும் ஆளாகவில்லை. மேலும் இந்த திருமணம் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மக்காவில் குரைஷியர்களின் கை மேலோங்கி இருந்த போதே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் அந்த தருணத்தில் நபி(ஸல்) அவர்கள் அபுதாலிப் அவர்களை இழந்திருந்த நேரம். மேலும் அக்கால நடைமுறைகள் பற்றி நாம் மேலுள்ள் இஸ்லாமிய ஆவணங்களில் காணப்படும் இத்தகைய திருமணம் குறித்த வரலாற்று ஆவணங்களை தேடிய போது பின்வரும் செய்தி நமக்கு கிடைத்தது ."WORLD CIVILIZATIONS by Philip J. Adler East Carolina University & Randall L. Pouwels University of Central Arkansas SIXTH EDITION P.No: 26 என்ற புத்தகத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது
“Marriage was always arranged by the two families; something so important could never be left to chance attraction. A great many of the clay tablets dug up in Mesopotamian ruins deal with marital contracts. Some of them were made when the bride and groom were still babies. Such early arrangements were especially common for girls, who normally were considerably younger at marriage than their husbands. Marriage usually involved the exchange of bride money and a dowry. Bride money was a payment by the groom’s family to the bride’s family as specified in the marital contract. The dowry was also specified in the contract and was paid by the bride’s family to the groom when the couple began to live together”
மேலும் ஒரு பெண் பூப்பெய்துவதே வரலாறு நெடுக அவளது இசைவ்வுக்கான வயதாக கருத்தப்பட்டுவந்தது.
Age of Consent A Historical Overview Vern L. Bullough PhD, DSci, RN
            Age of Consent throughout history has usually coincided with the age of puberty although at sometimes it has been as early as seven. Early on age of consent was a familial or tribal matter and only became a legal one in the Greco-Roman period.
              இது போன்ற திருமணங்கள் அன்று மலிந்து காணப்பட்டதை இஸ்லாமிய ஆவணங்கள் அடிப்படையிலும் வரலாற்று ஆவணங்கள் அடிப்படையிலும் தெளிவாக அறிய முடிகிறது. இஸ்லாம் குறித்து அவதூறு பரப்பித்திரியும் மூடர்கள் நபி(சல்) அவர்கள் இத்தகைய திருமணம் செய்ததால் குழந்தை புணர்வாளர் என்று வாதிட்டால் நபி(ஸல்) அவர்களது காலத்தில் நபித்துவத்திற்கு முன்பிருந்து அதாவது கிபி 610 முன்பிருந்த ஒட்டு மொத்த அரபியே சமூகத்தையும் குழந்தை புணர்வாளர்கள் என்று கூறப்போகிறாரா... 

                ஒருவேலை இப்படியான ஒரு மூடத்தனத்தை இந்த அவதூறு பரப்பிகள் வேண்டுமானால் செய்வார்கள். ஆனால் அரபு சமூகம் மட்டும் இதில் விதிவிலக்கல்ல. இந்தியாவிலும் கூட 1891 வரை 10 வயது பெண்ணின் அனுமதியுடன் திருமணத்திற்கு பின் உறவு கொள்ளுவது அனுமதிக்கப்பட்டிருந்தது. 1891 ல் பிரிடடிஷ் இந்தியாவில் இசைவுக்கான வயது 10ல் இருந்து 12 ஆக மாற்றப்பட்டது. (Age of Consent Act 1891)(1) .12 வயதிற்கு முன்பாக அனுமதியுடனோ(திருமணம் மூலமாக) அனுமதி இல்லாமலோ உறவு கொண்டால் அது மைனர் பாலியல் துஷ்பிரயோகமாக கருத்தப்பட்டது. இந்த சட்டத்தை இயற்றும் போது ஆங்கிலேயேர்கள் வெள்ளை அல்லாத இனத்தவர்கள் முன்பே பூப்பெய்துவிடுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டதால்தான், 12 வயதாக நிர்ணயித்தனர். அன்று பிரிட்டனில் இசைவுக்கான வயது 16. மேலும் இத்தகைய பூபெய்தும் வயதின் உயர்வு கூட 19ம் நூற்றாண்டின் மத்திய காலத்திலேதான் நடைபெறத்துவங்கியதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Age at Menarche in Relation to Adult Height: The EPIC Study

In several countries, age at menarche remained stable or has even started to increase since the mid 20th century , whereas in other countries the downward trend still continues (2)
          அன்று 1891ல் இந்தியாவில் இந்த சட்டம் லோக்மானிய திளக் போன்றவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இன்றிலிருந்து சுமார் 150 வருடங்களுக்கு முந்தைய நிலை இப்படி இருக்க இன்றிலிருந்து 14 நுற்றாண்டுகளுக்கு முந்தைய நிலையை இன்றிருக்கும் காலக்கண்ணாடியால் பார்ப்பது எவ்வளவு அறியாமை என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். 

                    நபி(சல்) அவர்களது ஆயிஷா(ரலி) திருமணம் சிறுமி துஷ்பிரயோகம் என்று வாதிடும் மேற்குறிபிட்ட அவதூறு பரப்பிகள், தங்களின் வம்சாவளியினரும் ஃபீடோபைல்கள் என வாதிடப்போகிறார்களா ….. இஸ்லாம் மீது சேற்றை வாரி இறைக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள்.