பக்கங்கள் செல்ல

Sunday, October 29, 2023

ஆர்தர் ஜெஃப்ரி “ Materials for the History of the Text of the Qur'ān” நூல் ஆய்வு - பாகம் 1

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

ஆர்தர் ஜெஃப்ரி “ Materials for the History of the Text of the Qur'ān”  நூல் ஆய்வு - பாகம் 1

        நாம் குர்ஆனின் பாதுகாப்பு குறித்து இஸ்லாமோஃபோபுகள் எழுப்பி வரும் விமர்சனங்களுக்கான விடைகளை ஆதாரப்பூர்வமான செய்திகளில் இருந்து வழங்கிவருகிறோம். அதன் ஊடாக இஸ்லாமோஃபோபுகளுக்கு அரைகுறையாக அறிவை போதிக்கும் வலைதளங்களின் உளறல்களை தோழுரித்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த கட்டுரையில் மிசனரி ஓரியண்டலிஸ்டான ஆர்தர் ஜெஃப்ரி என்ற அரைவேக்காடு குறித்தும், அவரது உளறல் நிறந்த “ Materials for the History of the Text of the Qur'ān” என்ற அவரது நூல் குறித்தும் காணயிருக்கிறோம், இன் ஷா அல்லாஹ்.


    ஆர்தர் ஜெஃப்ரி (1892-1959), ஆஸ்திரேலியாவைத் சேர்ந்த மிஷனரி ஓரியண்டலிஸ்ட் ஆவார். குர்ஆனின் உரை விமர்சனம் மற்றும் குர்ஆனின் சரித்திரம் பற்றிய மேற்கத்திய புலமைப்பரிசில் பெரும் பெயர் பெற்றவர். முதல் உலகப் போரில் பிரிட்டிஷ் இராணுவத்தில் உடல்நலக் காரணங்களுக்காக அவர் சேர முடியவில்லை, எனவே அவர் மிஷனரியாக இராணுவம் அல்லாத போர் சேவையில் சேர்ந்தார். அவர் சாலமன் தீவுகள், இந்தியா மற்றும் எகிப்தில் மிசனரி பணிக்காக நியமிக்கப்பட்டார். ‘Materials for the History of the Text of the Qur'ān’, ‘The Foreign Vocabulary of the Qur'ān’, ‘The Qur'ān as Scripture and The Koran: Selected Suras’. ஆகிய இவரது எழுத்தாக்கங்கள் குறிப்பிடத்தக்கவை. அவர் தனது வாழ்க்கையின் கடைசி இருபது ஆண்டுகளை கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் நியூயார்க் யூனியன் இறையியல் கல்லூரியில் கழித்தார். மேலும் ஆர்தர் ஜெஃப்ரியின் மிசனரி சாகசங்களை “அன்ஸரிங் இஸ்லாம்” என்ற இஸ்லாஃபோஃபியாவை பரப்பும் மிசனரி வலைத்தளம் மெச்சுவதை இங்கு காணலாம். ஆர்தர் ஜெஃப்ரி ஒரு வடிகட்டிய கிறித்தவ மிசனரி என்பதற்கு இதுவே போதுமான தகவல்.

ஆர்தர் ஜெஃப்ரி கொடுத்த மோசடி தலைப்பு


        ஆர்தர் ஜெஃப்ரி தனது “MATERIALS FOR THE HISTORY OF THE TEXT OF THE QUR’AN THE OLD CODICES” என்ற நூலில் ,மோசடியை தலைப்பில் இருந்தே துவங்குகிறார். அதாவது அவர் தலைப்பிலேயே தான் மாறுபட்ட ஓதல்களை இப்னு மஸ்வூத்(ரலி), உபை(ரலி), அலி(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), அனஸ்(ரலி) அபூ மூஸா(ரலி) மற்றும் இதர ஆரம்ப கால குர் ஆனிய நிபுனர்களின் வேத எழுத்துச்சுவடிகளில் இருந்து பெற்றதாக ஒரு கதையை அளக்கிறார்.




MATERIALS FOR THE HISTORY OF THE TEXT OF THE QUR’AN THE OLD CODICES
                      THE KITAB AL-MASAHIF OF IBN ABl DAWUD TOGETHER                    WITH A COLLECTION OF THE VARIANT READINGS FROM THE CODICES OF IBN MA'SUD, UBAI, ‘ALI, IBN ABBAS, ANAS, ABU MUSA AND OTHER EARLY QURANIC AUTHORITIES WHICH PRESENT A TYPE OF TEXT ANTERIOR TO THAT OF THE CANONICAL TEXT OF ‘UTHMAN
        உண்மையில் இவர் குறிப்பிடும் வேத எழுத்துச்சுவடிகள், அவரது காலத்தில் இருந்ததா? அல்லது இப்னு அபூதாவூத் அவர்கள் கிதாப் அல் மஸாஹீப்பை எழுதும் போதாவது அவர் கைகளிலாவது இருந்ததா? இந்த இரண்டு கேள்விக்கான பதில்களான “இல்லை” என்பதே ஆர்தர் ஜெஃப்ரியின் மோசடியை விளக்க போதிய சான்று. இவர் குறிப்பிடும் முஸ்ஹஃப்கள் குறித்த வரலாற்று சான்றுகளையும் அதன் விளக்கத்தையும் பார்த்தோம் என்றால் இவர் குறிப்பிட்ட எந்த நபர்களின் ஆதாரப்பூர்வ எழுத்துப்பிரதியையும் இவர் கண்டிருக்கமாட்டார் என்பதை உறுதிபட கூறலாம்.

இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்:

ﻭﺭﻭﻯ اﻟﻔﻀﻞ ﺑﺈﺳﻨﺎﺩﻩ ﻋﻦ اﻷﻋﻤﺶ ﻗﺎﻝ ﻓﻲ ﻗﻮﻟﻪ ﻓﻲ ﻗﺮاءﺓ ﻋﺒﺪ اﻟﻠﻪ (ﺣﻢ ﺳﻖ) ﻗﺎﻝ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺇﺳﺤﺎﻕ ﺭﺃﻳﺖ ﻋﺪﺓ ﻣﺼﺎﺣﻒ ﻗﺎﻝ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺇﺳﺤﺎﻕ ﺭﺃﻳﺖ ﻋﺪﺓ ﻣﺼﺎﺣﻒ ﺫﻛﺮ ﻧﺴﺎﺧﻬﺎ ﺃﻧﻬﺎ ﻣﺼﺤﻒ ﺑﻦ ﻣﺴﻌﻮﺩ ﻟﻴﺲ ﻓﻴﻬﺎ ﻣﺼﺤﻔﻴﻦ ﻣﺘﻔﻘﻴﻦ
        முஹம்மத் இப்னு இஸ்ஹாக் கூறியதாவது (கிபி ~ 700) நான் இப்னு மஸ்வூதின் முஸ்ஹஃப் என்று எழுத்தர்களால் கூறப்படும் பல முஸ்ஹஃப்களை கண்டுள்ளேன் .ஆனால் அவற்றுள் ஒன்று போல் அமைந்த இரு முஸ்ஹஃப்கள் இருந்ததில்லை." (அறிவிப்பாளர்: அல் அஃமாஸ்,  ஃபிஹ்ரிஸ்த் 1/44)
        மேற்குறிப்பிட்ட குறிப்பானது ஒரு விஷயத்தை தெளிவாக கூறுகிறது அதாவது கிபி 7ம் நூற்றாண்டிலேயே இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் பெயரால் பல போலி கையெழுத்துப்பிரதிகள் இருந்ததை அறிய முடிகிறது. எனவே கிபி 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்த்தர் ஜெஃப்ரி அதன் உரைமாறுபாடுகளை கையெழுத்துப்பிரதியில் இருந்து எடுத்ததாக தலைப்பிட்டது வடிகெட்டிய பொய்.

உபை இப்னு கஃஅப்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﺮﺑﻴﻊ ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ اﺑﻦ )ﻭﻫﺐ، ﺃﺧﺒﺮﻧﻲ ﻋﻤﺮﻭ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺑﻜﻴﺮ: ﺣﺪﺛﻨﻲ ﺑﺴﺮ ﺑﻦ ﺳﻌﻴﺪ، ﻋﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﻧﺎﺳﺎ ﻣﻦ ﺃﻫﻞ اﻟﻌﺮاﻕ ﻗﺪﻣﻮا ﺇﻟﻴﻪ ﻓﻘﺎﻟﻮا: ﺇﻧﻤﺎ ﺗﺤﻤﻠﻨﺎ ﺇﻟﻴﻚ ﻣﻦ اﻟﻌﺮاﻕ، ﻓﺄﺧﺮﺝ ﻟﻨﺎ ﻣﺼﺤﻒ ﺃﺑﻲ ﻗﺎﻝ ﻣﺤﻤﺪ: " ﻗﺪ ﻗﺒﺾﻫ ﻋﺜﻤﺎﻥ ﻗﺎﻟﻮا: ﺳﺒﺤﺎﻥ اﻟﻠﻪ ﺃﺧﺮﺟﻪ ﻟﻨﺎ ﻗﺎﻝ: ﻗﺪ ﻗﺒﺾﻫ ﻋﺜﻤﺎﻥ "
பஸ்ர் இப்னு ஸயீத் கூறியதாவது:
            இராக் வாசிகளில் சிலர் முஹம்மத் இப்னு உபை (உபை(ரலி) அவர்களது மகன் முஹம்மத்) அவர்களிடம் வந்து " நாங்கள் இராக்கில் இருந்து வருகிறோம். எங்களிடம் உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃபை கொண்டு வாருங்கள் " என்று கூறினார்கள். அதற்கு முஹம்மத் அவர்கள், "உஸ்மான்(ரலி) அதை கைப்பற்றி கொண்டார்கள்." என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் ," அல்லாஹ் தூயவன். அதை எங்களிடம் கொண்டு வாருங்கள்", என்றனர். அதற்கு (முஹம்மத்) அவர்கள், "உஸ்மான்(ரலி) அதை கைப்பற்றி கொண்டார்கள்." என்று கூறினார்கள்.   (மஸாஹிஃப் இப்னு அபீ தாவூத் 1/103)
        மேற்குறிபிட்ட செய்தியில் உபை(ரலி) அவர்களது முஸ்ஹஃப் உஸ்மான்(ரலி) ஆட்சிக்காலத்திலேயே அழிந்துவிட்டது எனும் போது, கிபி 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆர்த்தர் ஜெஃப்ரி அதன் உரைமாறுபாடுகளை கையெழுத்துப்பிரதியில் இருந்து எடுத்ததாக தலைப்பிட்டது வடிகெட்டிய பொய்.

அனஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்:

அபூ அல்ஹஸன் அல் அஸ்அரி கூறியதாவது:                                                               நான் அனஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பை பஸராவில் அவரது வழிதோன்றல்களிடம் கண்டேன். இன்றைய முஸ்ஹஃப்புடன் எந்த மாற்றமுமின்றி அது சரியாக ஒத்திருப்பதை கண்டேன். மேலும் இது உபை(ரலி) அவர்களால் ஓதிக்காண்பிக்கப்பட்டு அனஸ்(ரலி) அவர்களால் எழுதப்பட்டது என்று அவரது வழித்தோன்றல்கள் கூறினார்கள். (அல் இன்திஸார் 1/277)
            உபை(ரலி) அவர்களது ஓதல்தான் அனஸ்(ரலி) அவர்களது பிரதி என்று கூறப்படுவதில் இருந்தும், அது இன்றைய முஸ்ஹஃப்போடு ஓத்திருப்பதாக கூறப்படுவதில் இருந்தும் ஒரு விஷயம் தெளிவாகிறது அதில் உரை மாறுபாடுகள் இல்லை என்பதே. இவர் எந்த ஆதாரங்களில் இருந்து இந்த உரை மாறுபாடுகளை எடுத்தார் என்பதை அவரே பட்டியலிட்டுள்ளார். அதனையும் இந்த கட்டுரையின் பிற்பகுதியில் காண்போம்.

அபூ மூஸா(ரலி) அவர்களது முஸ்ஹஃப்:

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺜﻤﺎﻥ، ﺣﺪﺛﻨﺎ ﺟﺮﻳﺮ، ﻋﻦ ﻋﻤﺮ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﻗﺎﻝ: ﻛﺎﻥ ﻟﺃﺑﻲ ﻣﻮﺳﻰ ﻣﺻﺤﻒ ﻭﻛﺎﻥ ﻳﺴﻤﻴﻪ ﻟﺒﺎﺏ اﻟﻔﺆاﺩ
              அபூ மூஸா (ரலி) அவர்களிடம் ஒரு முஸ்ஹஃப் இருந்தது அதனை “லுபாப் அல் ஃபுவ்ஆத்” என்று அழைப்பார்கள்” என்று அம்ரு இப்னு ஸாபித்(ரலி) கூறினார்கள் (அல் ஜுஹ்த் 2288 , தாரிக் திமிஷ்க் 38/242)
        அபூமூஸா(ரலி) அவர்களே தனது முஸ்ஹஃப்பை, குர்ஆன் என்று அழைக்காத போது அதன் உரை மாறுபாடுகள் எந்த மதிப்பும் அற்றவை.

அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப்:


               அலி(ரலி) அவர்களது முஸ் ஹஃப் என்பது தனித்த உரை மாறுபாடுகளை கொண்டவை என்ற கருத்தை நான்கு கோணங்களில் ஆய்வுசெய்வதினால் அதனை பொய் என நிறுவலாம்.

கோணம் 1: உஸ்மான்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பை ஏற்ற அலி(ரலி)

ﻋﻠﻲ ﺑﻦ ﺃﺑﻲ ﻃﺎﻟﺐ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ ﺳﻤﻌﺘﻪ ﻳﻘﻮﻝ: " ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﻨﺎﺱ §ﻻ ﺗﻐﻠﻮا ﻓﻲ ﻋﺜﻤﺎﻥ ﻭﻻ ﺗﻘﻮﻟﻮا ﻟﻪ ﺇﻻ ﺧﻴﺮا ﺃﻭ ﻗﻮﻟﻮا ﻟﻪ ﺧﻴﺮا ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﻭﺇﺣﺮاﻕ اﻟﻤﺼﺎﺣﻒ، ﻓﻮاﻟﻠﻪ ﻣﺎ ﻓﻌﻞ اﻟﺬﻱ ﻓﻌﻞ ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﺇﻻ ﻋﻦ ﻣﻸ ﻣﻨﺎ ﺟﻤﻴﻌﺎ،

            அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் “ மக்களே! உஸ்மான்(ரலி) குறித்து வரம்பு மீறிவிடாதீர்கள். முஸ்ஹஃப் குறித்தும், முஸ்ஹஃப்கள் எறிக்கப்பட்டது குறித்தும் அவர் விஷயத்தில் நல்லதை தவிர ஏதும் கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீதானையாக, முஸ்ஹஃப்பின் விஷயத்தில் அவர்கள் செய்தது எல்லாம், எங்களது அலோசனையின் படி அல்லாமல் வேறு எதுவும் அல்ல.”   ( அல் மஸாஹிஃப் 1/97-98)

        மேற்குறிபிட்ட செய்தியில் இருந்து உஸ்மான்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த முடிவுகள் அனைத்தும் தன்னாலும் ஏற்கப்பட்ட ஒன்று என்று அலி(ரலி) அவர்களே சான்று பகிர்கிறார்கள் என்பதை அறியலாம்.

கோணம் 2: அபூபகர்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த பணியை சிலாகித்து கூறுவதும் அபூபகர்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்தான் அட்டைக்கு நடுவே தொகுக்கப்பட்ட முதல் முஸ்ஹஃப் என்ற சான்றும்:

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻗﺎﻝ ﺣﺪﺛﻨﺎ ﻋﻤﺮ ﺑﻦ ﺷﺒﺔ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺃﺣﻤﺪ اﻟﺰﺑﻴﺮﻱ ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ، ﻋﻦ اﻟﺴﺪﻱ، ﻋﻦ ﻋﺒﺪ ﺧﻴﺮ، ﻋﻦ ﻋﻠﻲ ﻗﺎﻝ: ﻋﻈﻢ اﻟﻨﺎﺱ ﺃﺟﺮا ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻓﺈﻧﻪ ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻊ ﺑﻴﻦ اﻟﻠﻮﺣﻴﻦ

        அலி(ரலி) கூறினார்கள், “முஸ்ஹஃப் விஷயத்தில் மிகப்பெரும் வெகுமதிக்கு உரியவர் அபூபக்ர்(ரலி) அவர்கள்தான். அவர்தான் முதன் முதலில் இரண்டு அட்டைகளுக்கு நடுவில் தொகுத்தவர் ஆவார்.”(அல் மஸாஹிஃப் 1/49)

        அபூபகர்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்த பணியை சிலாகித்து அலி(ரலி) அவர்களே கூறுவது அந்த பணியை அலி(ரலி) அவர்களும் ஏற்றார்கள் என்பதற்கு போதிய சான்று. மேலும் அபூபக்ர்(ரலி) அவர்களால் தொகுக்கப்பட்ட அந்த முஸ்ஹஃப்பும் , உஸ்மான்(ரலி) அவர்களால் பிரதி எடுக்கப்பட்டதும் ஒன்றுதான் என்பதை பின்வரும் செய்தி தெளிவாக கூறுகிறது.  

ﻗﺎﻝ ﺯﻳﺪ: ﻭﺃﺭﺳﻞ ﻋﺜﻤﺎﻥ ﺇﻟﻰ ﺣﻔﺼﺔ ﺃﻥ ﺗﻌﻄﻴﻪ اﻟﺼﺤﻴﻔﺔ ﻭﺣﻠﻒ ﻟﻬﺎ ﻟﻴﺮﺩﻧﻬﺎ ﺇﻟﻴﻬﺎ، ﻓﺄﻋﻄﺘﻪ، ﻓﻌﺮﺿﺖ اﻝﻣﺼﺤﻒ ﻋﻠﻴﻬﺎ ﻓﻠﻢ ﻳﺨﺘﻠﻔﺎ ﻓﻲ ﺷﻲء،
        ஸைத்(ரலி), “உஸ்மான்(ரலி) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் எழுத்துப்பிரதியை கொடுத்தனுப்புமாறும் அதனை திருப்பி தந்துவிடுவதாகவும் உறுதியளித்தார்கள். எனவே அதனை அவர்கள் கொடுத்தார்கள். நான் முஸ்ஹஃப்பை அதனுடன் ஒப்பிட்டுகாட்டினேன், அதில் எந்த மாறுபாடும் காணப்படவில்லை” என்று கூறினார்கள்.(ஸரஹ் முஸ்கில் அல் அஸார் 8/128)
        மேலும் மேற்குறிபிட்ட அலி(ரலி) அவர்களது அறிவிப்பில் ஒரு முக்கிய செய்தியும் அடங்கியுள்ளது. அதாவது குர்ஆன் என்பது ஒரு முஸ்ஹஃப் ஆக தொகுக்கப்பட்டது அபூபகர்(ரலி) அவர்களுடைய ஆட்சிக்காலத்தில்தான். அதற்கு முன்பு ஜம்வூ செய்யப்பட்ட்தாக வரும் அனைத்து அறிவிப்புகளும் மனனத்தில் தொகுக்கப்பட்டதைதான் குறிப்பிடுகிறது என்பதை தெளிவாக விளக்குகிறது. எனவே அபூபக்ர்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பை ஏற்ற அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பில் உரைமாறுபாடுகள் இருப்பதாக கூறுவது பொய்.

கோணம் 3: அலி(ரலி) அவர்களது கிராஅத் இன்றைய கிராஅத்துடன் ஒத்திருப்பது.

        இன்றிருக்கும் முத்தாவதீர் கிராஅத் ஆன ஹஃப்ஸின் கிராஅத், ஹம்ஸாவின் , அபூ அம்ர்ன் கிராஅத் ஆகிய அனைத்தும் அலி(ரலி) அவர்களின் ஓதலையும் அடிப்படையாக கொண்டவை. எனவே அலி(ரலி) அவர்கள்து முஸ்ஹஃப்பில் உரை மாறுபாடுகள் இருந்ததாக கூறுவது பொய்.

கோணம் 4: அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப் என்று கூறப்படுபவை குறித்த தற்கால ஆய்வு


        அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப் என்று கூறப்படுபவை குறித்து ஆய்வு செய்த தய்யார் ஆல்டிகுலாக் பின்வருமாறு கூறுகிறார்.

        There is no difference between them as regards to the surats, the arrangement of ayats within the surats and their sequence. In all the copies, there is uniformity in the text from the beginning to the end. If an ayat is written in a certain way in one copy, there is no doubt that it is the same in every other copy. Some insignificant spelling differences which do not affect the meaning and some simple and very limited mistakes made by the scribes do not carry any importance as regards to the protected nature of the Holy Book.

       Therefore the following may be briefly said with a clear conscience: We had the opportunity of examining the copies that reached us way back from 13-14 centuries ago. The Holy Book reached the present day from all geographies and all periods of time not only through memorization and recitation by the imams of reading, but it is in the hands of the people of the 21st century, with documents that were written in periods which were very close to the generation of the Companions, probably when some of them were alive (maybe some were penned by the Companions).
                சூராக்கள், சூராக்களுக்குள் ஆயத்துகளின் அமைப்பு மற்றும் அவற்றின் வரிசை ஆகியவற்றில் அவைகளுக்கு இடையே எந்த வித்தியாசமும் இல்லை. எல்லாப் பிரதிகளிலும் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே மாதிரியான எழுத்து முறை. ஒரு ஆயத் ஒரு பிரதியில் ஒரு குறிப்பிட்ட முறையில் எழுதப்பட்டிருந்தால், மற்ற எல்லா பிரதிகளிலும் அதுவே இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. புனித நூலின் பாதுகாக்கப்பட்ட தன்மையைப் பொறுத்தவரை, அர்த்தத்தை பாதிக்காத சில முக்கியமற்ற எழுத்து வேறுபாடுகள் மற்றும் சில எளிய மற்றும் மிகக் குறைந்த எழுத்தர் பிழைகள், எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்கவில்லை.
        எனவே, தெளிவான மனசாட்சியுடன் பின்வருவனவற்றைச் சுருக்கமாகச் சொல்லலாம்: 13-14 நூற்றாண்டுகளுக்கு முந்தைய பிரதிகளை ஆராயும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இந்த புனித நூலானது அனைத்து புவியியல் மற்றும் அனைத்து காலக்கட்டத்தில் இருந்தும் இன்றைய நாளை அடைந்திருக்கிறது என்பது, ஓதல் இமாம்கள் மனனமிட்டு ஓதியதின் வழியாக மட்டும் அல்ல, மாறாக இது நபிதோழர்களின் தலைமுறைக்கு மிக நெருக்கமான காலங்களிலும், அவர்களில் சிலர் உயிருடன் இருந்தபோதும் எழுதப்பட்ட, ஆவணங்களுடனும் சேர்த்து (சிலவை தோழர்களால் எழுதப்பட்டிருக்கலாம்), 21ம் நூற்றாண்டு மக்களின் கைகளில் அது உள்ளது, (Al Mushaf al Sharif Attributed to Ali b. Abi talib (The Copy of Sana) By Tayyar Altikulac P.No.157)
        அதாவது 20ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் ஆர்த்தர் ஜெஃப்ரிக்கு, தய்யார் ஆல்டிகுலாக் போன்ற அறிஞர்களுக்கு கிடைத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்று அந்த முஸ்ஹஃப்களை ஆய்வு செய்த அறிஞர்கள் குர்ஆனின் 14 நூற்றாண்டு பாதுகாப்பை பெருமையுடன் கூறுகின்றனர். அதாவது குர்ஆனின் பாதுகாப்பை உறுதி படுத்தும் ஆவணமாக இந்த எழுத்துப்பிரதிகளை அறிஞர்கள் முன்னிறுத்தும் நிலை இன்றுள்ளது. எனவே அலி(ரலி) அவர்களது முஸ்ஹஃப்பில் உரைமாறுபாடுகள் என்று கூறுவதெல்லாம் வெறும் அரைவேக்காட்டு உளறல்தான்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப்: 

முஸ்ஹஃப் குறித்த வாதங்களிலே ஆக அறிவின்மையான வாதத்தை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது முஸ்ஹஃப் குறித்து ஆர்த்தர் ஜெஃப்ரி முன்வைக்கிறார்.அதனை கீழே தருகிறோம்.

            அதாவது “ அவரது விஷயத்தில், அது அரிதாக குறிப்பிடப்படுவதாலேயே, அது உண்மையானது என்பதற்கான வாதமாக அமைகிறது,”….என்று கூறுகிறார். அரிதாக கூறப்படுவதால் ஒரு விஷயம் எப்படி உண்மை என்றாகும். உதாரணமாக ஆர்தர் ஜெஃப்ரி ஒரு அரை மெனடல் என்று நான் கூறுவது அரிதான குறிப்பு அதற்காக அது உண்மை ஆகிவிடுமா. இவ்வாறான உளறலே, இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களது எந்த முஸ்ஹஃப்பும் இவரால காணமுடியவில்லை என்பதற்கு போதிய சான்று.

தலைப்பிற்கு  முரணாக உளரும் ஆர்தர் ஜெஃப்ரி:

   எந்த எழுத்துப்பிரதிகளில் இருந்தும் தனது ஆய்வின் ஆதாரங்களை வைக்கத்தவறியதில் இருந்து, ஆர்தர் ஜெஃப்ரி வாசகர்களை திசை திருப்பும் நோக்கத்தோடு மட்டுமே இவ்வாறு தலைப்பிட்டிருக்கிறார் என்பது ஆணித்தரமாக உறுதியாகிறது. மேலும், இவர் உண்மையில் மேற்குறிபிட்ட நபித்தோழர்களின் உரை மாறுபாடுகளை எதில் இருந்து பெற்றார் என்பதையும் தானிட்ட தலைப்பிற்கே முரண்படுகிறதே என்பதை கூட உணராமல பின்வருமாறு இஸ்லாமிய நூல்களை பட்டியலிட்டும் உள்ளார்.


        இப்படி தஃப்ஸீர் கிதாப்கள், வரலாற்று கிரந்தங்கள், ஆய்வு நூல்கள், மொழியறிவு நூல்கள் அனைத்திலும் இருந்து பெறப்பட்ட செய்திகளில் இருந்து தான் தனது நீண்ட நெடிய ஆய்வை முன்னெடுத்துள்ளார். மேலும் இவர் பட்டியலிடும் உரைமாறுபாடுகள் அனைத்தும் ஒற்றை அறிவிப்பாளர் தொடர் கொண்ட ஹதீஸ்கள்தாம். அதுவும் அவற்றுள் பெரும்பாலனவை குறிபிட்ட நபித்தொழர்கள் ஓதியதாக இடம் பெறும் ஒற்றை அறிவிப்பாளர் தொடர்களை கொண்ட விசித்திர செய்திகள்(ஷாத் ஹதீஸ்கள்) என்று இஸ்லாமிய அறிஞர்களாலேயே முத்திரை குத்தப்பட்டவை. இத்தகைய செய்திகளால் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்ட முத்தவாதீரான ஓதல்களை எப்படி கேள்விக்குள்ளாக்க இயலும். ஆக இவரது ஆக்கம் என்பதே இஸ்லாமோஃபோபுகளை மெய்சிலிர்க்கச் செய்யும் வெத்து புத்தகம். இதில் கூத்து என்னவென்றால் உரை மாறுபாடுகள் குறித்த ஆய்வுகளுக்கு இஸ்லாமிய சமூகம் அஞ்சுவதாக மிசனரிகள் கதை சொல்லி திரிகின்றனர். . மேலே பட்டியலிடப்பட்ட நூல்கள் பல இஸ்லாமிய அறிஞர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே செய்யப்பட்ட ஆய்வுகள் தான் என்பதை இங்கு குறிப்பிட்டுக்கொள்கிறோம்........தொடரும் இன் ஷா அல்லாஹ்

Friday, May 19, 2023

சமர்கண்ட் எழுத்துப்பிரதியும் இஸ்லாமோஃபோபுகளும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
சமர்கண்ட் எழுத்துப்பிரதியும் இஸ்லாமோஃபோபுகளும்

        குர்ஆன் பாதுகாப்பு குறித்து அடுத்ததாக இஸ்லாமோஃபோபுகளும், கிறித்தவ மிசனரிகளும் முன்வைக்கும் வாதம் குர்ஆன் கையெழுத்து பிரதியான சமர்கண்ட் கையெழுத்து பிரதி அல்லது தாஸ்கண்ட் கையெழுத்து பிரதி குறித்ததாகும். இந்த சமர்கண்ட் மூலபிரதிகள் எப்படி இன்றைய குர்ஆனில் இருந்து மாறுபட்டுள்ளது என்பது குறித்த நீண்ட(???) பட்டியல் ஒன்றை ஆன்சரிங் இஸ்லாம் போன்ற வலைத்தளங்கள் வெளியிட்டு தங்களின் மே(ல்)தாவி தனத்தை காட்டியுள்ளனர். அதற்கான விளக்கத்தை இன் ஷா அல்லாஹ் காணவுள்ளோம்

 

சமர்கண்ட் எழுத்துப்பிரதி- ஒரு பார்வை

Ø  வரலாறு

            சமர்கண்ட் குர்ஆன் குறித்த ஆரம்பகால குறிப்புகள் 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் மத்திய ஆசியாவில் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து வந்தவை. ஆசிய , ஆஃப்ரிக்கா நாடுகளின் பண்டைய தொல்பொருட்களையும், கையெழுத்து பிரதிகளையும், கலைபொருட்களையும் திருடியோ/ வாங்கியோ பெருஞ்செல்வத்திற்கு விற்பதில் ஐரோப்பாவில் பெரும் போட்டி நிகழ்ந்த காலம் அது. அன்றைய ஸார் ரஷ்யாவின் ஜெனரல் அலெக்சாண்டர் கே. அப்ரமோவ், தைமூரின் (1370-1405) நூலகத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேடலின் போது, இந்த குர்ஆனைப் பற்றி அறிந்து கொண்டார், அந்த நேரத்தில் அது சமர்கண்டில் உள்ள கோட்ஜா-அஹ்ரார் மசூதியில் பாதுகாக்கப்பட்டிருந்தது. அது குறித்து பின்வரும் கருத்துக்கள் அந்த பகுதியில் அலெக்சாண்டர் ஜெனரல் கே. அப்ரமோவ்- அவர்களிடம் கூறப்படுகிறது.
  • உள்ளூர் வாசிகளின் கதையின் படி இது உஸ்மான்ரலி) அவர்களது சொந்த குர்ஆன் பிரதி. அவர் அதை ஓதிகொண்டிருக்கும் நிலையிலேயே கொல்லப்பட்டார். அதில் அவரது இரத்தம் படிந்துள்ளது என்று கூறப்படுகிறது.
  • இந்த கையெழுத்து பிரதி, உஸ்மானிய சுல்தான் பாயஸீத்-I அவர்களால் கோட்ஜா உபைதுல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்று அந்த பள்ளிவாசலின் இஸ்லாமிய அறிஞர்களால் கூறப்படுகிறது.
  • இந்த கையெழுத்து பிரதி தைமூரினால் சமர்கண்டிற்கு கொண்டுவரப்பட்டது என்று புகாராவின் அமீரால் உறுதிப்பட ரஷ்யர்களிடம் கூறப்படவே, ரஷ்ய ஜெனரல் அலெக்சாண்டர் கே. அப்ரமோவ் அந்த கையெழுத்து பிரதியை கைபற்றிக்கொண்டார்.
         இது 1869 ஆண்டு பீட்டர்ஸ்பர்க் அரச நூலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. 1917 வரை அது அங்கிருந்தது. 1917ல் பாஷ்கொர்டொஸ்தானுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பிறகு 1924ல் தாஸ்கண்டிற்கு வந்து சேர்ந்தது. ரஷ்யாவில் இருந்த காலப்பகுதியில் 1905ல் இது S. பிஸாரெவ் என்ற ரஷ்ய ஓரியண்டலிஸ்டால் பிரதி எடுக்கப்பட்டு சுமார் 50 பிரதிகள் உருவாக்கப்பட்டது. இன்று இந்த பிரதிகள்தான் சமர்கண்ட் குர்ஆனின் கையெழுத்து பிரதியாக காட்டப்படுகிறது.

Ø  உஸ்மான்(ரலி) அவர்கள் உருவாக்கிய மூலபிரதியா?????

         இந்த எழுத்துப்பிரதியின் காலக்கட்டத்தை ரேடியோ கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வு செய்ததில் இந்த எழுத்துப்பிரதியின் தோலானது கிபி 775 க்கும்- கிபி 995க்கும் இடைபட்ட காலத்தை சேர்ந்தது என்பதற்கு 95.4% வாய்ப்புள்ளது. எழுத்தின் வடிமானது எட்டாம் நூற்றாண்டின் இறுதி கால் பகுதிக்கு பிந்தையது. இது சரியாக ரேடியோ கார்பன் டேட்டிங் குறிப்பிடும் காலத்துடன் ஒத்தமைந்த காலமாகும்(1).

        எனவே சமர்கண்ட் எழுத்து பிரதி என்பது உஸ்மான்(ரலி) அவர்களது கையெழுத்து பிரதி அல்ல என்பது உறுதிபட தெரிகிறது. ஆனால் உஸ்மான்(ரலி) அவர்களது பிரதிகள் என்று கூறப்படுபவை அனைத்தும் ஒரே மூல பிரதியில் இருந்து பிரதி எடுக்கப்பட்டவை. உஸ்மான்(ரலி) அவர்களின் குர்ஆன் எழுத்துப்பிரதிகள் என்று கூறப்படும் ஆவணங்களின் வார்த்தை வடிவங்களை ஆய்வு செய்த மரிஜின் வான் பூட்டன் பின்வருமாறு கூறுகிறார்.


            அதாவது உஸ்மான்(ரலி) அவர்களது எழுத்துப்பிரதிகள் என்று கூறப்படும் குர்ஆன் எழுத்துப்பிரதிகளில், வார்த்தைகளின் நிலையான பிற்கால மறுஉருவாக்கம் எவ்வாறு சாத்தியமானது என்பதை “ ஒரே மூல எழுத்துப்பிரதியில் இருந்து பிரதி எடுக்கப்பட்டவை என்று அனுமானிப்பதின் மூலமே விளக்க முடியும்” என்று மரிஜின் வான் பூட்டன் கூறுகிறார்.

Ø  உண்மை பிரதியின் இன்றைய நிலை

        தற்காலத்தில் சமர்கண்ட் உண்மை எழுத்துப்பிரதியின் நிலை குறித்து அறிந்து கொள்வது நமது ஆய்விற்கு உதவியாக இருக்கும் என்பதால் அது குறித்து பார்ப்போம். சமர்கண்ட் உண்மை எழுத்துப்பிரதி இன்று தாஸ்கண்டின் ஹஜ்ரதி இமாம் பள்ளியின் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது குர்ஆன் 2ம் அத்தியாயத்தின் 7ம் வசனம் முதல் 43ம் அத்தியாயத்தின் 10ம் வசனம் வரை கொண்டுள்ளது. ஏனைய பகுதிகள் உலகின் பல பாகங்களில் உள்ளன. எங்கெங்கு இந்த மூலப்பைரதியின் பாகங்கள் உள்ளன என்ற பட்டியலை எலியோனூர் செல்லார்ட் என்ற அறிஞர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். கிட்டத்தட்ட 40 பகுதிகள் உலகின பல கலைபொருள் சந்தைகளிலும்,அதன் ஏலத்திலும் தனியார் தொகுப்புகளிலும் இருப்பதாக குறிபிட்டு பின்வரும் பட்டியலை தருகிறார்.


            பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் இவ்வாறு படையெடுப்பகளின் மூலமும், கொள்ளையிட்டு, கையாடல் செய்து கைபற்றிய குர்ஆன் பிரதிகளை ஏலம் விட்டு பெரும்வணிகத்தினை நடத்தி வருகின்றன. இதனை எகிப்து போன்ற நாடுகள் எதிர்த்து வருவது குறிப்பிடதக்கது.

Ø  ஓரியண்டலிஸ்ட் S. பிஸாரெவ் செய்த மோசடி

            ரஷ்யாவில் இந்த கையெழுத்துப்பிரதிகள் இருந்த காலப்பகுதியில், ஜார் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் 1905ல் S. பிஸாரெவ் என்ற ரஷ்ய ஓரியண்டலிஸ்டால் பிரதி எடுக்கப்பட்டு சுமார் 50 பிரதிகள் உருவாக்கப்பட்டது. இந்த பிஸாரெவ் குறித்து தெளிவான தகவல் ஏதும் இல்லை. இவர் குறித்து ரஷ்யாவின் அரசு நூலகத்தின் வலைத்தளம் பின்வருமாறு கூறுகிறது.
                From other documents we learn that the publication, one copy of which was valued at 500 rubles, was undertaken by "an assistant clerk of the Board of the People's Teachers' Pension Fund, who does not have a rank", "the head of the Museum of the Archaeological Institute" Vasily Uspensky and "St. Petersburg Merchant Semyon Pisarev". (Semyon Pisarev, contrary to some unknown opinion, was not an Arabist. The merchant of the second guild sold fabrics in his own shop on Staro-Nevsky Prospekt and at the same time took part in publishing activities under the auspices of the Archaeological Institute.)(3)
       இந்த கையெழுத்துப்பிரதிகளை பிரதி எடுப்பதற்கு முன்பு அரபு அறிஞர்???? அல்லாத பிஸாரெவ் ஒரு மோசடியான வேலையை மேற்கொண்டார். அதாவது மூலபிரதிகளில் தெளிவில்லாமல் இருக்கும் வார்த்தைகளை அவரே நிரப்பி எழுதினார். இதனால் பல பிழைகள் அவர் விரும்பியோ விரும்பாமலோ அதில் ஏற்பட்டது. வெளியில் சுழற்சியில் இருக்கும் எஞ்சிய பிரதிகளுடன் அதனை ஒப்பிட்டு பார்க்கையில் பின்வரும் வேறுபாடுகளை பிஸாரெவ்வினால் மாற்றப்பட்ட பிரதிகள் கொண்டிருப்பதாக எலியோனூர் செல்லார்ட் குறிப்பிடுகிறார்.
                These stylistic discrepancies between the dispersed leaves and Pisarev’s facsimile raise the possibility of an improvement during the writing process, as well as questions about the reliability of the facsimile. The degree to which the reinking of the leaves – which is not discernible in the facsimile – and the warping of the parchment may have affected the letters and causing fluctuations in the interlinear spacing. These questions can be answered only by physically inspecting the manuscript in Tashkent.( Elleonore Cellard,The Samarkhand Quran P.No.7)
                வெளிய பரவி இருக்கும் பிரதியின் பகுதிக்கும், பிஸாரெவின் பிரதிக்கும் இடையிலான இந்த ஸ்டைலிஸ்டிக் முரண்பாடுகள், எழுதும் போது ஏற்பட்ட மாற்றங்களுக்கான சாத்தியத்தையும், பிஸாரெவின் பிரதியின் உண்மை தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. எந்த அளவிற்கு இந்த பிரதி மறு மையிடப்பட்டுள்ளது என்றால்,- (அது (பிஸாரெவின்) பிரதியில் புலனாக வில்லை) பிரதிகளை மடிப்பதே அதிலுள்ள எழுத்துக்களை பாதித்து, இரண்டு வரிகளுக்கான இடைவெளியில் கூட மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கேள்விகளுக்கான விடையை நிஜ மூலப்பிரதியை தாஸ்கண்டில் நேரிடையாக ஆய்வு செய்தே அறிய முடியும்.( Elleonore Cellard,The Samarkhand Quran P.No.7)
            அதாவது இரண்டு வரிகளுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியை கூட பாதிக்கும் அளவிற்கு குருட்டுத்தனமாக மறு மையிட்டுளார் பிஸாரெவ். இப்படி மறு மையிட்டுவிட்டு அதனை பிரதி எடுத்துள்ளார் பிஸாரெவ் என்ற அட்ரஸ் இல்லாத நபர் அதுதான் இன்றைய மிஸனரிகளின் குர்ஆன் பிரதிகள் குறித்த ஆய்வின் மையம்???????
        Another Russian orientalist S. Pissareff, went over the illegible parts in the original copy with ink trying to make it more legible before the facsimile edition was made in 1905  However, numerous unintentional mistakes were made in this attempt."( Al Mushaf al Sharif Attributed to Ali b. Abi Talib P.No.83 by Tayyar Altikulac)
        மற்றொரு ரஷ்ய ஓரியண்டலிஸ்ட் எஸ்.பிஸாரெவ், 1905ல் பிரதிகளை உருவாக்கும் முன்னர், நிஜ மூலபிரதியில் உள்ள தெரியாத பகுதியை, மையை கொண்டு தெரியும் படி செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும், இந்த முயற்சியில் எண்ணற்ற பிழைகள் ஏற்பட்டுள்ளன." ( Al Mushaf al Sharif Attributed to Ali b. Abi Talib P.No.83 by Tayyar Altikulac)

        இதே குற்றச்சாட்டை அன்றைய இஸ்லாமிய அறிஞர்களும் கூறியதாக ஆர்தர் ஜேஃப்ரீயும் குறிப்பிடுகிறார்.(THE ORTHOGRAPHY OF THE SAMARQAND CODEX by A. JEFFERY and I. MENDELSOHN P.No.3).

Ø  செபூனின் என்ற அறிஞரின் அறிக்கை

        1902 ஆம் ஆண்டு (அதாவது பிஸாரெவ் பிரதிகளில் கையாடல் செய்வதற்கு முன்பு) இந்த சமர்கண்ட் எழுத்துபிரதிகள், கெய்ரோவில் இருக்கும் பண்டைய எழுத்துப்பிரதியுடன் (Cairo, al-Maktaba al-Markaziyya li-l-Maḫṭūṭāt al-Islāmiyya: Great Qur'anic Codex) அனைத்து வகையிலும் ஒத்திருப்பதாக செபூனின் குறிப்பிடுகிறார். (14th volume of "Proceedings of the Eastern Branch of the Eastern Branch of the Imperial Russian Archaeological Society" )

        செபூனின் கூறியது போல நாம் பிஸாரெவின் பிரதிகளை , கெய்ரோவின் எழுத்து பிரதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அதற்கு மாற்றமாக அமைந்திருப்பதை காண முடிகிறது. நாம் செய்த இந்த ஒப்பீடு 1902 செபூனின் ஆய்வு செய்த போது இருந்த சமர்கண்ட் பிரதி பிஸாரெவ் என்ற அரைகுறை ஓரியண்டலிஸ்டினால் 1905ல் மாற்றப்பட்டுள்ளதை உறுதி செய்கிறது. சில எடுத்துக்காட்டுகள்.


Ø  ஆன்சரிங்க் இஸ்லாம் வலைதளத்தின் கூச்சலும் நமது பதிலும்

        இவ்வாறு ரீ இன்கிங்க் செய்து மாற்றப்பட்ட மூல பிரதியில் இருந்து எடுக்கப்பட்ட பிரதிகளைத்தான் இன்றைய இஸ்லாமோஃபோபுகள் எடுத்து வந்து இன்றைய குர்ஆனுடன் ஒப்பிட்டுக்கொண்டுள்ளனர். இதில் ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் அனைத்தும் பிஸாரெவ் வின் எழுத்தர் பிழைகள்தாம் என்பதை உறுதி படுத்த சமர்கண்ட் பிரதியின் ஒத்த காலத்தை உடைய ஏனைய பிரதிகளை இங்கு ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.











































            இப்படி அறியப்படாத மாறுபாடுகள் உள்ளதாக உளறித்திரியும் ஜே ஸ்மித் போன்ற அறைவேக்காடுகளுக்கு ஹைதம் சித்கீ என்ற ஆய்வாளரின் ஆய்வு முடிவுகள் சம்மட்டி அடியை கொடுத்துள்ளது. அனைத்து எழுத்துப்பிரதிகளில் எத்துனை சதவீதம் ஓதல் முறைகளுடன் ஒத்தமைந்துள்ளது என்பதை தனது “ON THE REGIONALITY OF QURʾĀNIC CODICES” என்ற ஆய்வில் விளக்கி பின்வரும் ஒப்பீடு அட்டவனையை வழங்கியுள்ளார்.


        அதாவது சமர்கண்ட் எழுத்துப்பிரதியின் ஓதல் என்பது 92% கூஃபாவினரின் ஓதலாகவும் மீதம் 8% சிரியாவினரின் ஓதலை கொண்டிருக்கிறது என்று கூறுகிறார். அரைவேக்காடு மிசனரிகள் உளறுவதுபோல் இருக்குமானால் சமர்கண்ட் எழுத்துப்பிரதி தனித்த ஓதல் முறை என்று கூறியிருப்பார்.

Ø  மேற்குறிபிட்ட குர்ஆன் பிரதிகளின் ஒப்பிட்டில் கிறித்தவ மிஸனரிகள் பின்வரும் தங்களது அறியாமையை வெளிபடுத்தியுள்ளனர்.

1.  கிறித்தவ மிசனரிகள் இந்த ஆய்வில் தவற விட்ட முதல் விஷயம் குர்ஆன் என்பது எழுத்து வடிவம் பெற்று அந்த பிரதிகள் பரவலாக்கப்படுவதற்கு முன்பே ஓசை வடிவில் பெரும் பகுதி முஸ்லிம்களால் மனனமிடப்பட்டிருந்தது என்பதைத்தான். எழுத்துப்பிரதிகள் என்றும் குர்ஆனின் மூல ஆதாரமாக இருந்ததில்லை. அது ஒரு துணைச்சாதனமே. உஸ்மான்(ரலி) அவர்களால் எழுத்துவடிவில் கொடுக்கப்பட்ட குர்ஆன் பெரும்பான்மை மக்களின் ஓதல் வடிவத்துடன் ஓத்திருந்ததாலேயே அது இன்றுவரை பெரும்பான்மை மக்களின் முத்தவாத்திரான கிராத் ஆக நிலை பெற்றுவிட்டது என்ற அடிப்படை விஷயத்தை மறந்துவிட்டனர். மேலும் இது குறித்த ஆய்வை முன்பே நாம் வழங்கியுள்ளோம்.

2. மொழியியல், எழுத்து வடிவங்கள் மற்றும் ஓசை மாற்றங்கள் குறித்த அடிப்படை அறிவே சமர்கண்ட் பிரதி குறித்த விமர்சனத்தை முன்வைத்தவரிடம் இல்லை என்பதை நிறுவியுள்ளனர். 3:147, 6:11, 6:39, 6:54, 6:68, 7:3, 7:9, 7:38, 7:40, 7:51, 7:58, 18:57, 20:42, 20:76, 27:5, 42:21, 42:25, 37:106, 41:31 ஆகிய 19 ஆயத்துக்களில் இவர்களின் குறிப்புக்களில், இவர்களின் எழுத்து வடிவ மாற்றம் மற்றும் ஒலிக்குறியீடு குறித்த அறியாமை பல்லிளிக்கிறது. நாம் அரபு எழுத்து மற்றும் ஓசை மாற்றம் குறித்த வரலாற்று தகவல்களை கிபி 10ம் நூற்றாண்டை சார்ந்த அபூ அம்ரு அல் தானீ அவர்களது அல் முக்னீ ஃபீ ரஸ்ம் மஸாஹிஃப் அல் அம்ஸார் என்ற நூலை கொண்டு நிறுவியுள்ளோம்.

3. சாதரணமாக எழுத்துப்பிரதிகள் காலத்தால் பாதிப்படைந்து சிதைவடையும் என்ற அடிப்படை அறிவு இல்லை. 2:170, 37:103-105, 27:3-4, 36:18 ஆகிய இடங்களில் இந்த அறியாமை பல்லிளிக்கிறது

4.  எழுத்தர் பிழைகளா? அல்லது மாறுபடுகளா(Variants)? என்பதை ஏனைய சமகால பிரதிகளை ஒப்பிட்டு அறியும் அறிவு அறவே இல்லை. எனவே தான் தனித்தனி எழுத்துப்பிரதிகளை எடுத்துகொண்டு அவை மாறுபட்ட குர்ஆன் என்று மக்களை நம்பவைக்க பெரும் முயற்சி எடுப்பது பல்லிளிக்கிறது.

Ø  மேற்குறிப்பிட்ட ஆய்வின் அடிப்படையில் பின்வரும் முடிவுகளை நாம் அடைகிறோம் 

1. சமர்கணட் மூல பிரதி என்பது உஸ்மான்(ரலி) அவர்களால் எழுதப்பட்டது அல்ல. மாறாக அந்த பிரதியில் இருந்து பிரதி எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்பதை மாரிஜின் வான் பூட்டன் அவர்களது முடிவின் மூலம் விளக்கியுள்ளோம்.

2. சமர்கண்ட் பிரதி எஸ்.பிஸாரெவ் என்ற அட்ரஸில்லாத ஓரியண்டலிஸ்டினால் மறு மையிடப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது என்பதை செபூனின், எலியோனூர் செல்லார்ட், தய்யார் ஆல்டிகுலாக் போன்ற ஆய்வாளர்களின் கூற்றை கொண்டு நிருவியுள்ளோம்.

3. மாற்றம் செய்த பிறகு எடுக்கப்பட்ட பிரதிகளின் அடிப்படையிலேயே இன்றைய கிறித்தவ மிசனரிகள் தங்களது உளறலை முன்வைத்துள்ளனர். ஏனைய சமகால/அதற்கு முந்தைய பிரதிகளை ஒப்பிட்டு அதனை நிறுவியுள்ளோம்.

4. எழுத்துப்பிழைகள், மாறுபாடுகள் என்று எந்த கையாடல் செய்தாலும், எது சரியான பிரதி என்பதை இன்றிருக்கும் ஓதல் முறைகளை கொண்டு பிரித்து அறியக்கூடிய வகையில் இருப்பதை இந்த ஆய்வு உறுதிபடுத்துகிறது.

5. “Literary Critcism” என்று என்ன முயன்றாலும், உண்மை குர்ஆனின் ஓதல் இன்றும் பாதுக்கப்பட்டுதான் இருக்கிறது என்பதனை இன்றிருக்கும் குர்ஆனின் எழுத்து வடிவங்களை, பண்டைய எழுத்துப்பிரதிகளுடன் ஒப்பிட்டு அறிய முடிகிறது. Keith E.Small போன்ற ஓரியண்டலிஸ்ட்களே இந்த விஷயத்தில் பண்டைய எழுத்துபிரதிகளின் சூராக்களில் இருப்பவையே இன்றிருக்கும் குர்ஆனின் சூராக்களில் இருப்பதாக ஒத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also, while there may have been a longer period of flexibility of the order of surahs in collected Qur’āns, it appears that the basic content of the surahs that are represented in early manuscripts is the same as what is observed today. (Textual Criticism and Quran Manuscripts by Keith Small P.No.174)
எழுத்துபிரதிகள் பரவலாவதற்கு முன்பு குர்ஆன் வேறுபட்டிருந்தது என்று ஓரியண்டலிஸ்ட்கள் முன்வைக்கும் ஹதீஸ்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களை, முன்சென்ற தொடர்களில் அந்த ஹதீஸ்கள் மற்றும் அந்த செய்திகளின் நிலையையும் விளக்கிவிட்டோம்.

    மேற்குறிபிட்ட ஆய்வின் மூலம் “நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.” என்ற அல்லாஹ்வின் வாக்கு உறுதியாகியுள்ளது. அல்லாஹூ அஃலம்

 Reference:

1. On the Dating of an “Uthmanic Quran” from St.Petersburg bt E.A.Rezvan
2. Van Putten “ ‘The Grace of God’ as Evidence for a Written’Uthmanic Archetype: The Importance of       Shared Orthographic Idiosncrasies” P.No.286

Monday, December 26, 2022

அல்குர்ஆனின் பகுதிகள் காணாமல் போய்விட்டது என்று ஹதீஸ்கள் கூறுகிறதா??

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


     குர்ஆனின் பாதுகாப்பு குறித்த இஸ்லாமோஃபோபுகளின் கேள்விகளுக்கு தொடர்களாக நாம் பதிலளித்து வருகிறோம். அந்த வரிசையில் இந்த கட்டுரையில் குர்ஆனின் பகுதிகள் காணவில்லை என்று கூறும் சில ஹதீஸ்களை முன்னிறுத்தி இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கும் விமர்சனங்களையும் அதற்கான விளக்கங்களையும் வரிசைப்படுத்தி காணவுள்ளோம் இன்ஷா அல்லாஹ்.

உஸ்மான்(ரலி) அவர்கள் அல் அஹ்ஸாப் சூராவை முழுமையாக பெறவில்லையா?? 

ﻭﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﺮﻳﻢ ﻋﻦ اﺑﻦ ﻟﻬﻴﻌﺔ ﻋﻦ ﺃﺑﻲ اﻷﺳﻮﺩ ﻋﻦ ﻋﺮﻭﺓ ﺑﻦ اﻟﺰﺑﻴﺮ ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ ﻗﺎﻟﺖ ﻛﺎﻧﺖ ﺳﻮﺭﺓ اﻷﺣﺰاﺏ ﺗﻘﺮﺃ ﻓﻲ ﺯﻣﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﺎﺋﺘﻲ ﺁﻳﺔ ﻓﻠﻤﺎ ﻛﺘﺐ ﻋﺜﻤﺎﻥ اﻟﻤﺼﺎﺣﻒ ﻟﻢ ﻳﻘﺪﺭ ﻣﻨﻪا ﺇﻻ ﻋﻠﻰ ﻣﺎ ﻫﻮ اﻵﻥ.
ஆயிஷா(ரலி) கூறியதாவது:
            நபி(ஸல்) அவர்களது காலத்தில் அல் அஹ்ஸாப் சூரா இருநூறு வசனங்களாக ஓதப்பட்டு வந்தது.உஸ்மான்(ரலி) முஸ்ஹஃபை எழுதியபோது இப்போது இருப்பதை தவிர எதையும் பெற முடியவில்லை. (அறிவிப்பாளர்: உர்வா இப்னு ஜுபைர். நூல்: இத்கான் 3/82, அல் ஃபதாயில் அல் குர்ஆன் 1/320)
        மேற்குறிபிட்ட ஆதாரத்தின் அடிப்படையில் "அல் அஹ்ஸாப் ஸூராவில் 200 வசனங்கள் இருந்தன. ஆனால் தற்போது 73 வசனங்கள்தான் உள்ளன. எனவே உஸ்மான் அவர்கள் முழுமையாக அல் அஹ்ஸாப் ஸூராவை பெறவில்லை. எனவே அல்குர்ஆன் பாதுகாக்கப்படவில்லை" என்ற வாதத்தை இஸ்லாமோஃபோபுகள் முன்வைக்கின்றனர்.

நமது பதில்:

        மேற்குறிபிட்ட அறிவிப்பில் இடம் பெறும் இப்னு லஹீஆ பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். அல் ஸுயூத்தி அவர்கள் தனது அஸ்மா உல் முதல்லிஸீன் என்ற நூலில் பக்கம் எண்: 66ல் இருட்டடிப்பு செய்யும் பலவீனமானவர் என்று கூறுகிறார். இப்னு மயீன், "பலவீனமானவர்" என்று கூறுகிறார்.இப்னு மஹ்தி "இப்னு லஹீஆ அவரிடம் இருந்து எதையும் எடுத்துக்கொள்ள மாட்டேன்" என்று கூறுகிறார். பஸ்ர் இப்னு அல் ஸர்ஈ "இப்னு லஹீஆ-வை சந்தித்தால் அவரிடம் இருந்து எந்த வார்த்தையையும் எடுத்துக்கொள்ளாதே" என்று கூறுவதாக யஹ்யா இப்னு ஸயீத் கூறுகிறார்( மீஸான் அல் இஃதிதால் 2/476)
    எனவே இஸ்லாமோஃபோபுகள் முன்வைத்த செய்தி பலவீனமான நிராகரிக்கத்தக்க ஹதீஸ் ஆகும்.

அல் குர்ஆனில் இரு வசனங்கள் விடுபட்டுவிட்டதா??

ﻭﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﺮﻳﻢ ﻋﻦ اﺑﻦ ﻟﻬﻴﻌﺔ ﻋﻦ ﻳﺰﻳﺪ ﺑﻦ ﻋﻤﺮﻭ اﻟﻤﻌﺎﻓﺮﻱ ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻔﻴﺎﻥ اﻟﻜﻼﻋﻲ ﺃﻥ ﻣﺴﻠﻤﺔ ﺑﻦ ﻣﺨﻠﺪ اﻷﻧﺼﺎﺭﻱ ﻗﺎﻝ ﻟﻬﻢ ﺫاﺕ ﻳﻮﻡ: ﺃﺧﺒﺮﻭﻧﻲ ﺑﺂﻳﺘﻴﻦ ﻓﻲ اﻟﻘﺮﺁﻥ ﻟﻢ ﻳﻜﺘﺒﺎ ﻓﻲ اﻟﻤﺼﺤﻒ ﻓﻠﻢ ﻳﺨﺒﺮﻭﻩ ﻭﻋﻨﺪﻫﻢ ﺃﺑﻮ اﻟﻜﻨﻮﺩ ﺳﻌﺪ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﻓﻘﺎﻝ ﻣﺴﻠﻤﺔ " ﺇﻥ اﻟﺬﻳﻦ ﺁﻣﻨﻮا ﻭﻫﺎﺟﺮﻭا ﻭﺟﺎﻫﺪﻭا ﻓﻲ ﺳﺒﻴﻞ اﻟﻠﻪ ﺑﺄﻣﻮاﻟﻬﻢ ﻭﺃﻧﻔﺴﻬﻢ ﺃﻻ ﺃﺑﺸﺮﻭا ﺃﻧﺘﻢ اﻟﻤﻔﻠﺤﻮﻥ ﻭاﻟﺬﻳﻦ ﺁﻭﻭﻫﻢ ﻭﻧﺼﺮﻭﻫﻢ ﻭﺟﺎﺩﻟﻮا ﻋﻨﻬﻢ اﻟﻘﻮﻡ اﻟﺬﻳﻦ ﻏﻀﺐ اﻟﻠﻪ ﻋﻠﻴﻬﻢ ﺃﻭﻟﺌﻚ ﻻ ﺗﻌﻠﻢ ﻧﻔﺲ ﻣﺎ ﺃﺧﻔﻲ ﻟﻬﻢ ﻣﻦ ﻗﺮﺓ ﺃﻋﻴﻦ ﺟﺰاء ﺑﻤﺎ ﻛﺎﻧﻮا ﻳﻌﻤﻠﻮﻥ "
    மஸ்லமா இப்னு முஹல்லத்(ரலி) ஒரு நாள் அவர்களுடன் இருந்தவர்களிடம் " முஸ்ஹஃப்பில் எழுதப்படாத இரண்டு வசனங்கள் குறித்து கூறுங்கள்" என்று கூறினார்கள். யாரும் பதிலளிக்கவில்லை. அவர்கள் மத்தியில் அபூ அல்கனூத் ஸஅத் இப்னு மாலிக் இருந்தார்கள். மஸ்லமா(ரலி) கூறியதாவது : நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர் நற்செய்தியை பெற்றுக்கொள்ளுங்கள்.நீங்கள் தாம் வெற்றி பெற்றோர். மேலும் அல்லாஹ் கோபம் கொண்டோருக்கு எதிராக அவர்களுக்கு உறையுள், உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கியோரும்( வெற்றி பெற்றோர்). யாரும் அவர்கள் செய்ததற்காக அவர்களுக்கு காத்திருக்கும் கூலியை அறியமாட்டார். (அறிவிப்பாளர்: அபீ ஸுஃப்யான் அல் கலாயீ, நூல்: அல் இத்கான் 3/84)

நமது பதில்:

    மேற்குறிபிட்ட அறிவிப்பில் இடம் பெறும் இப்னு லஹீஆ பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். அல் ஸுயூத்தி அவர்கள் தனது அஸ்மா உல் முதல்லிஸீன் என்ற நூலில் பக்கம் எண்: 66ல் இருட்டடிப்பு செய்யும் பலவீனமானவர் என்று கூறுகிறார். இப்னு மயீன், "பலவீனமானவர்" என்று கூறுகிறார்.இப்னு மஹ்தி "இப்னு லஹீஆ அவரிடம் இருந்து எதையும் எடுத்துக்கொள்ள மாட்டேன்" என்று கூறுகிறார். பஸ்ர் இப்னு அல் ஸர்ஈ "இப்னு லஹீஆ-வை சந்தித்தால் அவரிடம் இருந்து எந்த வார்த்தையையும் எடுத்துக்கொள்ளாதே" என்று கூறுவதாக யஹ்யா இப்னு ஸயீத் கூறுகிறார்( மீஸான் அல் இஃதிதால் 2/476)
    எனவே இஸ்லாமோஃபோபுகள் முன்வைத்த செய்தி பலவீனமான நிராகரிக்கத்தக்க ஹதீஸ் ஆகும்.

கல்லெறி தன்டனை குறித்த ஆயத்தை கொண்டுவந்த உமர்(ரலி)யை, ஸைத் இப்னு ஸாபித்(ரலி) மறுத்துவிட்டார்களா??

ﻭﻗﺪ ﺃﺧﺮﺝ اﺑﻦ ﺃﺷﺘﺔ ﻓﻲ اﻟﻤﺼﺎﺣﻒ ﻋﻦ اﻟﻠﻴﺚ ﺑﻦ ﺳﻌﺪ ﻗﺎﻝ: ﺃﻭﻝ ﻣﻦ ﺟﻤﻊ اﻟﻘﺮﺁﻥ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻭﻛﺘﺒﻪ ﺯﻳﺪ ﻭﻛﺎﻥ اﻟﻨﺎﺱ ﻳﺄﺗﻮﻥ ﺯﻳﺪ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﻓﻜﺎﻥ ﻻ ﻳﻜﺘﺐ ﺁﻳﺔ ﺇﻻ ﺑﺸﺎﻫﺪﻱ ﻋﺪﻝ ﻭﺇﻥ ﺁﺧﺮ ﺳﻮﺭﺓ ﺑﺮاءﺓ ﻟﻢ ﺗﻮﺟﺪ ﺇﻻ ﻣﻊ ﺧﺰﻳﻤﺔ ﺑﻦ ﺛﺎﺑﺖ ﻓﻘﺎﻝ: اﻛﺘﺒﻮﻫﺎ ﻓﺈﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺟﻌﻞ ﺷﻬﺎﺩﺗﻪ ﺑﺸﻬﺎﺩﺓ ﺭﺟﻠﻴﻦ ﻓﻜﺘﺐ. ﻭﺇﻥ ﻋﻤﺮ ﺃﺗﻰ ﺑﺂﻳﺔ اﻝﺭﺟﻢ ﻓﻠﻢ ﻳﻜﺘﺒﻬﺎ ﻷﻧﻪ ﻛﺎﻥ ﻭﺣﺪﻩ.

     அபூ பகர் (ரலி) அவர்கள் தான் முதன்முதலில் குர்ஆனை ஒன்றாக தொகுத்தவர்கள். அதனை ஸைத்(ரலி) எழுதினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் மக்கள் வருவார்கள். இரண்டு சாட்சியம் இல்லாமல் எந்த வசனத்தையும் எழுத மாட்டார்கள். அல் பராஅத் ஸுராவின் இறுதி பகுதி, குஸைமா இப்னு ஸாபித்(ரலி) அவர்களிடம் இருந்தது. ஸைத் (ரலி) " அதனை எழுதிக்கொள்ளுங்கள்.ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் குஸைமாவின் சாட்சியத்தை இரண்டு நபர்களின் சாட்சிக்கு நிகராக்கியுள்ளார் ", என்று கூறினார்கள். அதனால் எழுதி கொண்டார்கள். உமர்(ரலி) கல்லெறி குறித்த வசனத்துடன் வந்தார்கள். அவர் மட்டும் தனித்து வந்ததால் அது எழுதப்படவில்லை. (அறிவிப்பாளர்: லைஸ் இப்னு சஅத்           நூல்: அல் இத்கான் 1/206)

நமது பதில்:

        மேற்குறிபிட்ட ஹதீஸை அறிவிக்கும் அல் லைஸ் இப்னு சஅத் ஹிஜ்ரி 94ல் பிறந்து ஹிஜ்ரி 175ல் மரணித்த தபா தாபியீ ஆவார் (திக்காத் இப்னு ஹிப்பன் பாகம் 7). உமர்(ரலி) அவர்கள் ஹிஜ்ரி 23ல் மறைந்துவிட்டார்கள். அப்படி இருக்கையில் இந்த செய்தி அறிவிப்பாளர் தொடர் முறிந்த செய்தியாகும். எனவே இஸ்லாமோஃபோபுகள் முன்வைத்த மேற்குறிபிட்ட செய்தி பலவீனமான நிராகரிக்கத்தக்க ஹதீஸ் ஆகும்.

உஸ்மான்(ரலி) முஸ்ஹஃப்பை மாற்றுவதற்கு முன்பிருந்த வசனம் பிறகு காணவில்லையா??

ﺣﺪﺛﻨﺎ ﺣﺠﺎﺝ ﻋﻦ اﺑﻦ ﺟﺮﻳﺞ ﺃﺧﺒﺮﻧﻲ اﺑﻦ ﺃﺑﻲ ﺣﻤﻴﺪ ﻋﻦ ﺣﻤﻴﺪﺓ ﺑﻨﺖ ﺃﺑﻲ ﻳﻮﻧﺲ ﻗﺎﻟﺖ ﻗﺮﺃ ﻋﻠﻲ ﺃﺑﻲ ﻭﻫﻮ اﺑﻦ ﺛﻤﺎﻧﻴﻦ ﺳﻨﺔ ﻓﻲ ﻣﺼﺤﻒ ﻋﺎﺋﺸﺔ " ﺇﻥ اﻟﻠﻪ ﻭﻣﻼﺋﻜﺘﻪ ﻳﺼﻠﻮﻥ ﻋﻠﻰ اﻟﻨﺒﻲ ﻳﺄﻳﻬﺎ اﻟﺬﻳﻦ ﺁﻣﻨﻮا ﺻﻠﻮا ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻤﻮا ﺗﺴﻠﻴﻤﺎ ﻭﻋﻠﻰ اﻟﺬﻳﻦ ﻳﺼﻠﻮﻥ اﻟﺼﻔﻮﻑ اﻷﻭﻝ " ﻗﺎﻟﺖ ﻗﺒﻞ: ﺃﻥ ﻳﻐﻴﺮ ﻋﺜﻤﺎﻥ اﻟﻤﺼﺎﺣﻒ. ﻗﺎﻝ: ﻗﺎﻝ اﺑﻦ ﺟﺮﻳﺞ: ﻭﺃﺧﺒﺮﻧﻲ اﺑﻦ ﺃﺑﻲ ﺣﻤﻴﺪ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻫﺮﻣﺰ ﻭﻏﻴﺮﻩ ﻣﺜﻞ ﺫﻟﻚ ﻓﻲ ﻣﺼﺤﻒ ﻋﺎﺋﺸﺔ

        ஹமீதா பின்த் அபீ யூனிஸ் கூறியதாவது: எனது தந்தை என்பது வயதாக இருக்கும் போது ஆயிஷா(ரலி) அவர்கள் முஸ்ஹஃப்பில் "இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அவனது வானவர்களும் (அவருக்காகப்) பிரார்த்திக்கின்றனர். இறைநம்பிக்கையாளர்களே! மேலும் அவர் மீதும், தொழுகையில் முதல் வரிசையில் நிற்ப்பவர்கள் மீதும் ஸலவாத் சொல்லுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! " என்று ஓதினார்கள். மேலும் அவர்கள்(ஹமீதா பின்த் அபீ யூனிஸ்) " அது உஸ்மான் முஸ்ஹஃபை மாற்றுவதற்கு முன்பாகும்" என்று கூறினார்கள். (நூல்: அல் இத்கான் 3/82, ஃபதாயில் அல் குர்ஆன் 1/324) 

நமது பதில்:

        மேற்குறிபிட்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் இப்னு அபீ ஹமீதா ஹதீஸ்களில் "கைவிடப்பட்டவர்", என்று இமாம் புகாரி கூறுகிறார்கள். "இப்னு அபீ ஹமீதா ஒன்றுமில்லாதவர். அவரது செய்திகளை எழுதவேண்டாம்", என்று யஹ்யா இப்னு மயீன் கூறுகிறார் (அல் காமில் 2/241). எனவே மேற்குறிபிட்ட செய்தி பலவீனமான செய்தியாகும்.

"நீங்கள் முதலில் போராடியது போல் போராடுங்கள்" என்ற வசனம் விடப்பட்டுவிட்டதா??


ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﺮﻳﻢ ﻋﻦ ﻧﺎﻓﻊ ﺑﻦ ﻋﻤﺮ اﻟﺠﻤﺤﻲ ﻭﺣﺪﺛﻨﻲ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﻠﻴﻜﺔ ﻋﻦ اﻟﻤﺴﻮﺭ ﺑﻦ ﻣﺨﺮﻣﺔ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﻋﻤﺮ ﻟﻌﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻋﻮﻑ: ﺃﻟﻢ ﺗﺠﺪ ﻓﻴﻤﺎ ﺃﻥﺯﻝ ﻋﻠﻴﻨﺎ " ﺃﻥ ﺟﺎﻫﺪﻭا ﻛﻤﺎ ﺟﺎﻫﺪﺗﻢ ﺃﻭﻝ ﻗﺎﻝ: ﺃﺳﻘﻄﺖ ﻓﻴﻤﺎ ﺃﺳﻘﻂ ﻣﻦ اﻟﻘﺮﺁﻥ

    Umar said to ’Abdul-Rahman Ibn ’Oaf, ‘Didn’t you find among the verses that we received one saying, "Strive as you strove at the first?" We do not locate it (any more).’ ’Abdul-Rahman Ibn ’Oaf told him, ‘This verse has been removed among those others which were removed from the Qur’an."’ ( Al itqaan 3/84  - ஆன்சரிங்க் இஸ்லாம் தளத்தின் ஆங்கில மொழியாக்கம்) .
     உமர்(ரலி) அவர்கள்," 'நீங்கள் முதலில் போராடியது போல் போராடுங்கள்' என்று இறங்கியதை நீங்கள் அறிவீர்களா?அதை நாம் காணவில்லையே ?" என்று அப்துர் ரஹ்மான் இப்னு அஃப்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு, "குர்ஆனில் நீக்கப்பட்டவைகளுடன் அதுவும் நீக்கப்பட்டுவிட்டது" என்று அவர்கள் கூறினார்கள்.

நமது பதில்:

        மேற்குறிப்பிட்ட செய்தியில் ﺃﺳﻘﻂ- என்ற சொல்லை நீக்கப்படுதல் என்று அன்ஸரிங்க இஸ்லாம் வலைத்தளம் மொழியாக்கம் செய்துள்ளது. இது ﺳﻘﻂ என்ற வேர் சொல்லில் இருந்து வந்த சொல்லாகும். இந்த சொல்லானது சட்டவியல் சார்ந்த இடங்களில் பயப்படுத்தப்படும் போது திரும்பப்பெறுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்படும். இந்த சொல்லின் பொருள் குறித்து அல்மானி அரபி அகராதி விளக்கியுள்ளது.

       அதனால்தான் ஒரே மைய கருத்தை தரும் செய்திகளில் ﺃﺳﻘﻂ என்ற சொல்லுக்கு நிகராக கைப்பற்றப்படுதல் என்ற பொருளை கொண்ட ﻗﺒﺾ என்ற சொல் பயன்படுத்தப்படுவதை காணமுடிகிறது.

உதாரணம்: 1
حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ كَانَ فِيمَا أَنْزَلَ اللَّهُ مِنَ الْقُرْآنِ ثُمَّ سَقَطَ لاَ يُحَرِّمُ إِلاَّ عَشْرُ رَضَعَاتٍ أَوْ خَمْسٌ مَعْلُومَاتٌ ‏.‏"
    ஆயிஷா(ரலி) கூறியதாவது:அல்லாஹ்வால் அல் குர்ஆனில் இறக்கிவிட்டு பின்னர் நீக்கப்பட்ட விஷயங்களில் ஒன்று பத்து முறை அல்லது ஐந்து முறை பால் உறிஞ்சி குடிக்கப்பட்டிருந்தால் திருமண உறவு தடுக்கப்பட்டு விடும் என்பதாகும். (நூல்: இப்னு மாஜா 1942)
மேற்குறிபிட்ட இதே மைய கருத்தை கொண்ட செய்தி பின்வருமாறு
ﻗﺎﻝ: ﺯﻋﻤﻮا ﺃﻥ ﻋﺎﺋﺸﺔ ﻗﺎﻟﺖ: " ﻟﻘﺪ ﻛﺎﻥ ﻓﻲ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ: ﻋﺸﺮ ﺭﺿﻌﺎﺕ، ﺛﻢ ﺭﺩ ﺫﻟﻚ ﺇﻟﻰ ﺧﻤﺲ، ﻭﻟﻜﻦ ﻣﻦ ﻛﺘﺎﺏ اﻟﻠﻪ ﻣﺎ ﻗﺒﺾ ﻣﻊ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ "
ஆயிஷா(ரலி) கூறியதாவது " பத்து முறை உறிஞ்சி பாலருந்துதல் என்பது திடமாக குர்ஆனில் கூறப்பட்டிருந்தது. பின்னர் அது ஐந்து முறை என்று மாற்றப்பட்டது. அல்லாஹ்வின் வேதத்தில் அது இருந்தது. ஆனால் அது நபி(சல்) அவர்கள் இருக்கும் போதே எடுக்கப்பட்டுவிட்டது.(முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் 13928)
    அதே போல இஸ்லாமோஃபோபுகள் இதே ﺳﻘﻂ என்ற சொல்லின் அடிப்படையில் அமைந்த மாலிக்(ரஹ்) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் செய்தியையும் குர்ஆனின் பகுதிகள் நீக்கப்பட்டுவிட்டதாக கூறுவதற்கு ஆதாரமாக கொண்டுவருகின்றனர். அதிலும் ﺳﻘﻂ என்ற சொல்லிற்கு நிகராக ரத்து செய்யப்பட்டு எடுத்துக்கொள்ளப்படுதல் என்ற பொருளை தரும் نسخ ورفع என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணம்: 2
ﻭﻋﻦ ﻣﺎﻟﻚ ﺃﻥ ﺃﻭﻟﻬﺎ ﻟﻤﺎ ﺳﻘﻂ ﺳﻘﻂ ﻣﻌﻪ اﻟﺒﺴﻤﻠﺔ ﻓﻘﺪ ﺛﺒﺖ ﺃﻧﻬﺎ ﻛﺎﻧﺖ ﺗﻌﺪﻝ اﻟﺒﻘﺮﺓ ﻟﻄﻮﻟﻬﺎ.
    மாலிக் அவர்களது அறிவிப்பில் " அதில் (அத் தவ்பா ஸூரா) முதல் பகுதிகள் விடப்பட்ட போது, பிஸ்மில்லாஹ்வும் விடப்பட்டுவிட்டது. நீளத்தில் அது (அத் தவ்பா ஸூரா) அல்பகரா ஸூராவிற்கு இணையானது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது",என்று இடம் பெற்றுள்ளது. (இத்கான் 1/226)
وروي عن مالك أنه قال: بلغنا أنها كانت نحو سورة البقرة ثم نسخ ورفع كثير منها وفيه البسملة

    மாலிக் அவர்களது அறிவிப்பில் "அது அல் பகரா ஸூராவிற்கு இணையானது. பிறகு அதில் கணிசமானது ரத்து செய்யப்பட்டு உயர்த்தப்பட்டுவிட்டது. அதில் பிஸ்மில்லாஹ்வும் அடக்கம் என்று கேள்விப்பட்டோம்" என்று இடம் பெறுகிறது.( தஃப்ஸீர் அல் அதிய்யா 3/4) 

    அதனால்தான் இஸ்லாமோஃபோபுகள் முன்வைத்த உமர்(ரலி) குறித்த செய்தியை பதிவிட்ட அல் சுயூத்தி அவர்களாகட்டும், கன்ஸுல் உம்மாலின் ஆசிரியாரான அலி இப்னு அப்துல் மாலிக் அல் ஹிந்தி அவர்களாகட்டும் நஸ்ஹ் மன்ஸூஹ் பற்றிய பாடத்தில் கொண்டுவந்துள்ளனர். எனவே மேற்குறிபிட்ட அரபி அகராதி மற்றும் ஹதீஸ்களில் இடம் பெறும் சொல்லாடல் அடிப்படையில் இஸ்லாமோஃபோபுகள் முன்வைத்த உமர்(ரலி) குறித்த செய்தியின் சரியான புரிதல் இதுவே.
உமர்(ரலி) அவர்கள்," 'நீங்கள் முதலில் போராடியது போல் போராடுங்கள்' என்று இறங்கியதை நீங்கள் அறிவீர்களா?அதை நாம் காணவில்லையே ?" என்று அப்துர் ரஹ்மான் இப்னு அஃப்(ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு, "குர்ஆனில் எடுத்துக்கொள்ளப்பட்டவையுடன் அதுவும் எடுத்து கொள்ளப்பட்டுவிட்டது" என்று (அப்துர் ரஹ்மான் இப்னு அஃப்(ரலி)) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: மிஸ்வர் இப்னு மஹ்ரமா, அல் இத்கான் 3/84)

    எனவே இஸ்லாமொஃபோபுகள் குர்ஆனின் பகுதிகள் காணவில்லை என்ற வாதம்,  ஆதாரங்களை தவறாக புரிந்து கொண்டதாலும், காழ்புணர்வினால் ஏற்பட்ட அறியாமையினாலுமே என்பதை மேற்குறிபிட்ட நமது பதில்களும், முன்சென்ற தொடர்களும் உறுதிபடுத்துகின்றன. அல்லாஹு அஃலம்.