பக்கங்கள் செல்ல

Friday, February 8, 2019

தொடர் 5:பரிணாமம் : உண்மையா ஊகமா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்


உயிரினத் தோற்றம்:
                                     நாம் சென்ற தொடரில் பரிணாமத்தின் முக்கிய ஆதாரமாய் அமையும் இனப் பிரிகை அல்லது உயிரின தோற்றத்தின் மையமாக அமைந்த இனம் என்றால் என்ன என்பதை விளக்கும் கருத்தியல்களில் இருக்கும் சிக்கல்களையும் அதன் பலவீனங்களையும், அந்த கருத்துக்கள் மத்தியில் இருக்கும் பல முரண்களையும் பட்டியலிட்டு விவாதித்திருந்தோம். நிச்சயமாக அவற்றை எல்லாம் பரிணாமவியல் உலகம் ஒன்றினைக்குமா என்ற கேள்வி நிழலாடி கொண்டிருக்கையில், அறிவியல் உலகில் பரிணாமவியலாளர்கள் நவீன பரிணாமவியலை “உயிரியலை ஒருங்கிணைக்கும் கோட்பாடு (Unifying Theory of Biology” என்று சுயத்தம்பட்டம் அடித்து வருகின்றனர். ஆனால் அந்த சுயதம்பட்டத்திற்கு சென்ற தொடரில் விளக்கப்பட்ட இனம் என்ற சொல்லாக்கம் எப்படியெல்லாம் முடிவுரை எழுதுகிறது என்பதை கண்டோம். ஆனால் உன்மையில் பரிணாமம் என்பது அறிவியல் தானா அல்லது அது ஒரு நம்பிக்கை சார்ந்த ஊகமா என்பதை அறிவியலின் அளவு கோலை கொண்டு இனிவரும் தொடர்களில் ஆய்வு செய்வோம். இனப்பிரிகையை பரிணாமவியலால் விளக்க முடிகிறதா, அதன் இயங்கியல்கள் அதை தோற்றுவிக்குமா உள்ளிட்ட பலவற்றை நாம் அறிவியல் கண்ணாடி அணிந்து வரவிருக்கும் தொடர்களில் பார்க்கவுள்ளோம் இன் ஷா அல்லாஹ். மேலும் இந்த தொடரில் நாம் ஒரு விசயத்தை தெளிவு படுத்துகிறோம். அதாவது இஸ்லாம் கூறும் இறையியல் கோட்பாடு எவ்வாறு அறிவியலுடன் ஒத்து அமைகிறது என்பதை இந்த தொடர்களின் இறுதி பகுதியில் நாம் தர இருக்கிறோம். பொதுவாக நாத்திகர்கள் தாங்கள் முன்வைக்கும் பரிணாமவியல் குறித்து கேள்வி எழுப்பப்படும் போது தங்களை தற்காத்துக்கொள்ள அவர்கள் இறைகொள்கை குறித்து கேள்வி எழுப்பி தப்பிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர். இதுவே அவர்களால் அறிவியல் தளத்தில் இருந்து பரிணாமம் குறித்து வாதிக்க முடியாது என்பதைவிட பரிணாமம் அறிவியலே இல்லை என்பதற்கு போதிய சான்று. ஆக எதற்கும் ஆகாத நாத்திகர்களின் வெத்து வாதங்களை தவிர்த்து நாம் அறிவியல் தளத்தில் இருந்து நமது பரிணாமவியல் ஆய்வை முன்னெடுப்போம் இன் ஷா அல்லாஹ்.

அறிவியல் கோட்பாடு என்றால் என்ன?

                    அறிவியல் கோட்பாடு என்பதற்கு காலம் தோறும் பல வரைவுகளை (இதிலுமா??????) அறிவியல் உலகம் வழங்கி வந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அறிவியல் உலகத்தால் ஏற்கப்படும் வரையறையை முதலில் நாம் விளக்குவோம். அந்த வரையறைக்குள் பரிணாமத்தின் அடிப்படை முதல் கட்ட விளக்கம் வருகிறதா என்பதை இந்த தொடரில் சோதிப்போம். 

          ஆக அறிவியல் கோட்பாடு குறித்த வரைவுகளில் கார்ல் பாப்பரின் வரைவு மிகவும் எளிமையானது, நிதர்சன மனித பகுத்தறிவிற்கு மிக நெருக்கமானது. மேலும் படைப்பு கோட்பாடை எதிர் கொள்ள நாத்திக உலகம் எடுத்தாளும் அறிவியல் தத்துவவியலின் அளவுகோல். ஆக அதை கீழே வழங்குகிறோம்.
These considerations led me in the winter of 1919-20 to conclusions which I may now reformulate as  follows.

1. It is easy to obtain confirmations, or verifications, for nearly every theory--if we look for confirmations.
ஒவ்வொரு கோட்பாட்டிற்கும் நாம் அதன் உறுதி படுத்தலை தேடும் போது உறுதிபடுத்தலையும், சரிபார்த்தலையும் பெறுவது எளிது.
2. Confirmations should count only if they are the result of risky predictions; that is to say, if, unenlightened by the theory in question, we should have expected an event which was incompatible with the theory--an event which would have refuted the theory. 

துணிகரமான கணிப்பினால் கிடைக்கும் முடிவுகளே உறுதிபடுத்தல் என எடுத்துக்கொள்ளப்படும். அதை விளக்குவதென்றால், நமக்கு நாம் கருத்தில் கொள்ளும் அந்த கோட்பாடு குறித்து எந்த அறிவும் இல்லாத நிலையில் , நாம் இந்த கோட்பாட்டுடன் பெருந்தாத ஒரு நிகழ்வை நாம் எதிர் நோக்கி இருக்க வேண்டும்--- ஒரு நிகழ்வு அந்த கோட்பாட்டை மறுப்பதாய் இருப்பதை எதிர் நோக்கி இருக்க வேண்டும். 



               பாப்பர் அவர்களது உதாரணத்தையே இங்கு மேற்கோள் காட்டுவோம். அதாவது ஒளியானது சூரியன போன்ற நிறை அதிகமானவற்றின் ஈர்ப்புவிசையால் பாதிக்கப்படும் என்பது ஐண்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் கருத்து. இதனை சோதனை செய்ய சூரியனிற்கு சற்று விலகிய கோட்டில் அமைந்த ஒரு நடசத்திரத்தின் ஒளி நம்மை அடையும் போது சற்று சூரியனுக்கு அருகாமையில் இருப்பது போன்று தெரியும். அதன் நிலையை சோதிக்க இரவில் அதே நட்சத்திரத்தை கண்டால் இது உறுதியாகிவிடும். பகல் பொழுதில் இத்தகைய நடசத்திரங்களை காணவியலாது. ஆக இதை உறுதி படுத்த கிரணகனத்தின் போது இந்த நட்சத்திரத்தை கண்டால் அதன் ஒளி சூரியனின் நிறையால் பாதிக்கப்படுவதை காணமுடியும். இவ்வாறு நாம் ஒரு கோட்பாட்டை மறுக்கும் எண்ணத்துடனான ஆய்வை முன்வைக்க வேண்டும். இதன் விடையே உறுதிபடுத்தலாகும். 
3. Every 'good' scientific theory is a prohibition: it forbids certain things to happen. The more a theory forbids, the better it is.
ஒவ்வொரு நல்ல அறிவியல் கோட்பாடு என்பதும் தடையே. அது சில விஷயங்களை நடைபெறமால் தடைசெய்கிறது. எது அதிகமாக தடை செய்கிறதோ அதுவே சிறந்த கோட்பாடு. (நாம் முன் சென்ற தொடரில் கூறியது போல் எது வேண்டுமானாலும் எப்படியும் நடக்கலாம் என்று ஒரு கோட்பாடு கூறுமானால் அது அறிவியல் கோட்பாடு அல்ல. ஆக இனம் குறித்த வரைவுகளில் இந்த சிக்கலை முன்னமே கண்டிருக்கிறோம்- Link of art-4)
4. A theory which is not refutable by any conceivable event is nonscientific. Irrefutability is not a virtue of a theory (as people often think) but a vice.
எந்த கோட்பாடு அறியப்படக்கூடிய நிகழ்வால் மறுக்க முடியவில்லையோ அது அறிவியல் பூர்வமானது அல்ல. மறுக்க முடியாதது என்பது ஒரு கோட்பாட்டின் சிறப்பல்ல (மக்கள் நினைப்பது போல்) அதற்கு மாறானது.


         உதாரணமாக ஆர்தோஜெனிஸிஸில் உள்ளார்ந்த தோற்றுவாய் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. உள்ளார்ந்த தோற்றுவாய் என்ற ஒன்றை இல்லை என்று நிறுவ இயலாது. ஏனென்றால் உள்ளார்ந்த தோற்றுவாய் இல்லை என்பதை நிறுவ முதலில் அது என்ன என அறியப்பட்டிருக்க வேண்டும். ஆக உள்ளார்ந்த தோற்றுவாய் இல்லை என நிறுவும் எந்த அறியப்பட்ட நிகழ்வும் அதற்கு இருக்காது. உள்ளார்ந்த தோற்றுவாயால் இந்த நிகழ்வு நிகழ்ந்தது என கூறவும் முடியாது மறுக்கவும் முடியாது. ஆக காணப்படும் நிகழ்வுகளால் இத்தகைய கோட்பாட்டை நிறுவமுடியாது. 
5. Every genuine test of a theory is an attempt to falsify it, or to refute it. Testability is falsifiability; but there are degrees of testability: some theories are more testable, more exposed to refutation, than others; they take, as it were, greater risks.
ஒரு கோட்பாட்டிற்கான ஒவ்வொரு உண்மையான சோதனை என்பதும் அதை மறுப்பதற்கான அல்லது அதை பொய்ப்பிப்பதற்கான ஒரு முயற்ச்சியே. சில கோட்பாடுகள் அதிகமாக சோதிக்கப்படக்கூடியவை, ஏனையவற்றை விட அதிக மறுதலிப்பிற்கு ஆளாகியிருக்கும். அதனால் அவை அதிக துணிகர சோதனையை எதிர் கொண்டிருக்கும். 
6.Confirming evidence should not count except when it is the result of a genuine test of the theory; and this means that it can be presented as a serious but unsuccessful attempt to falsify the theory . (I now speak in such cases of 'corroborating evidence'.)

உண்மையான சோதனையின் முடிவுகளாக இல்லாதவை ஒரு கோட்பாட்டின் உறுதிபடுத்தும் ஆதாரமாய் எடுத்துக்கொள்ளப்படாது. அதாவது அந்த கோட்பாட்டை பொய்பிப்பதற்கான தீவிரமான சோதனைகள், அவை (கோட்பாட்டை பொய்பிப்பதில்) தோல்வியுற்ற முயற்சிகளாய் இருக்க வேண்டும்.



7. Some genuinely testable theories, when found to be false, are still upheld by their admirers--for example by introducing ad hoc some auxiliary assumption, or by re-interpreting the theory ad hoc in such a way that it escapes refutation. Such a procedure is always possible, but it rescues the theory from refutation only at the price of destroying, or at least lowering, its scientific status. (I later described such a rescuing operation as a 'conventionalist twist' or a 'conventionalist stratagem'.) 
சில உண்மையாக சோதனைக்கு தகுதியான கோட்பாடுகள், பொய்யென் அறியப்பட்டும் இன்னமும் அதன் ஆதாரவாளர்களால் முன்னெடுக்கப்படுகிறது- அதற்கமையும் படியான சில துணை அனுமானங்கள் நுழைக்கப்பட்டு அது மறுதளிப்பில் இருந்து காப்பாற்றப்படுகிறது. அத்தகைய முறைமை சாத்தியமே ஆனால் அந்த கோட்பாட்டின் அழிவை விலையாக கொடுத்தோ அல்லது அறிவியல் அஸ்தஸ்த்தில் இருந்து கீழ்யிறக்கியோ அந்த கோட்பாட்டை மறுதளிப்பில் இருந்து காப்பாற்றலாம். 
One can sum up all this by saying that the criterion of the scientific status of a theory is its falsifiability, or refutability, or testability.(1)
ஒருவர் இதை அனைத்தையும் ஒன்றினைத்து பின்வருமாரு கூறலாம்
“ஒரு அறிவியல் கோட்பாடு என்பது பொய்மை படுத்தவதற்கு, அல்லது மறுக்கப்படுவத்ற்கு அல்லது சோதிக்கப்படுவதற்கு ஏதுவானதாய் இருக்க வேண்டும். 


பாப்பரின் கருத்தில் இருந்து நாம் பெறும் முக்கிய முடிவுகள்:
1. ஒரு அறிவியல் கோட்பாடு என்பது சோதிக்கத்தக்கதாய் இருக்க வேண்டும்.  
2. சோதனை என்பது அதை பொய்பிக்கும் எண்ணத்துடன் நிகழ்த்தப்பட்டதாய் இருக்க வேண்டும். அதாவது முன்னமே முடிவு செய்துவிட்டு அதை நிறுவும் படி சோதிக்கக்கூடாது. 
3. இவ்வாறு சோதிப்படும் போது அந்த கோட்பாடு பொய்ப்பிக்கப்படும் நிலையில், அனுமானங்களை கொண்டு அந்த கோட்பாட்டிற்கு முட்டு கொடுக்க முற்பட்டால் அது அந்த கோட்பாட்டை அறிவியல் அந்தஸ்தில் இருந்து கீழிறக்கிவிடும். அதாவது சோதனையில் பொய்பிக்கப்படும் நிலையில் அந்த கோட்பாட்டை நிறுவ எத்துனை அனுமானங்களை துணைக்கு அழைத்து நிறுவ முற்பட்டாலும் அந்த கோட்பாடு அறிவியல் என்ற அந்தஸ்தை இழந்து விடும்.  
4. இது இப்படித்தான் நடக்கும் என தெளிவாக இருக்க வேண்டும். எதுவும் எப்படியும் நடக்கலாம் என்றிருகக்கூடாது.
        மேற்குறிபிட்ட இந்த நான்கு புரிதல்களின் அடிப்படையில் பரிணாமம் சோதிக்கப்பட்டால் நிலைத்து நிற்குமா என்பதைத்தான் நாம் நமது ஆய்வில் சோதிக்க இருக்கிறோம். மேலும் பரிணாமத்தின் முதல் நிலை அனுமானங்களை நாம் விவரித்து விமர்சிப்போம் இன்ஷா அல்லாஹ். 

பரிணாமம் சோதிக்கதக்கதா?
          உயிரியலில் பரிணாமம் என்பது இரண்டு வகையாகயான பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று ஒரு உயிரினத்தில் அந்த இனத்தை பாதுக்காக்க அவற்றில் தோன்றும் மாற்றங்கள். இன்னொன்று ஒரு உயிரினம் வேறு ஒரு உயிரினமாக மாறுவது. இவற்றில் ஒரு உயிரினம் அவை ஓர் இனமாக நிலைத்து நிற்க தேவையான மாற்றங்கள் நிகழ்வதை நம்மால் சோதித்து அறிய முடிகிறது அல்லது காணமுடிகிறது( இந்த கருத்து குறித்து பின்வரும் தொடர்களில் இன் ஷா அல்லாஹ் தெளிவாக காண்போம்) ஒரு இனத்தில் இருந்து இன்னொரு இனம் தோன்றுவதை( அதாவது இனப்பெருக்க தடை (அதாவது hybridization- இனக்கலப்பு உள்ளிட்டவற்றிலும் தடை ) மற்றும், உருவ மாற்றங்களுடன் கூடிய வேறு இனம் தோன்றுவதை சோதித்து சோதனை கூடத்தில் அறிய முடியுமா என்றால் இதுவரை அது நிகழ்தப்படவில்லை. அது இயற்கையாக நிகழ்வதையும் காணமுடியவில்லை.ஆக இந்த நிகழ்வை சோதனை கூடத்தில் நிகழத்தி சோதிக்கவும் முடியாது. அதனை பரிணாமவியலாளர்களே ஏற்கிறார் ஒரு இனம் இன்னொன்றாக மாற பல லட்சவருடங்கள் ஆகலாம் என்று பரிணாம கோட்பாட்டிற்கு ஒரு அனுமானத்தை கொண்டு முட்டு கொடுக்கிறார்கள். உதாரணமாக பழ ஈக்களில் நடத்தப்பட்ட ஆய்வில் அவற்றுள் இனப்பிரிகை ஏற்பட 1,500,000 முதல் 3,500,000 ஆண்டுகள் ஆகலாம் என ஜெர்ரி காய்ன் குறிப்பிடுகிறார்.(2)(3)
                     ஒரு இனம மற்றோர் இனமாக மாறுவதை சோதித்து அறிய முடியாது. ஆக அறிவியல் கோட்பாட்டின் ஆரம்ப வரைவிலக்கணத்தின் அடிப்படையிலும், பரிணாமவியலாளர்கள் அனுமானத்தால் கொடுக்கும் முட்டினாலும் ஒரு இனம் வேறு ஒரு இனமாக மாறும் என்பது அறிவியல் கோட்பாடு எனும் அந்தஸ்தை இழக்கிறது என்பது நிறுபனமாகிறது.  
( மேற்குறிபிட்ட பரிணாமத்திற்கு ஆதாரமாய் சில உதாரணங்களை சிலர் முன்வைக்கின்றனர். அது அறிவியல் மற்றும், நிதர்சனத்திற்கு எவ்வளவு எதிரானது என்பதனை ஆதாரங்கள் என்ற தலைப்பின் கீழ் விவரிக்கவுள்ளோம்). ஆக பரிணாமம் என்பது குறித்த ஒரு சாமனியனின் புரிதலுக்கு பூசப்பட்ட அறிவியல் சாயம் சற்று வெளுத்துள்ளது. பரிணாமம் என்பது மொத்தமும் ஊகம்தான என்பதை விளக்க பரிணாமம் சோதனைக்குரியது என்ற அனுமானத்தை??????? நாம் ஏற்று கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்வோம்...

நவீன டார்வினிஸம்: (MODERN EVOLUTIONARY SYNTHESIS) என்றால் என்ன???


               சென்ற தொடரில் உயிரியல் இனத்தோற்ற கருத்தியலுக்கு முழுவடிவம் கொடுத்த ஏர்ண்ஸ்ட் மைர் அவர்களின் இனப்பெருக்க பாகுபாடு அல்லது பிரிவின் அடிப்படையிலான கருத்தை அறிந்தோம். நாம் 2ம் மற்றும் 3ம் தொடர்களில் ஏன் உருவ அமைப்பில் தோன்றும் மாற்றங்கள் அடுத்தத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுவதில்லை என்பது குறித்து வைஸ்மேனின் ஆய்வுகள் அடிப்படையில் விளக்கி இருந்தோம். ஆக உடலியல் ரீதியான மாறுபாடுகள் அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாது என்பது நிறுவப்பட்ட நிலையில் பரிணாமத்தை அறிவியல் என வாதிட மாற்று கருத்து தேவைபட்டது. ஆக பரிணாமவியலை நிறுவ கிரிகர் மெண்டலின் கருத்து, மரபியல் கருத்துக்கள் ஆகியவற்றை தொகுத்து உருவாக்கப்பட்ட கருத்துதான் நவீன தொகுப்பு பரிணாமவியல் (MODERN EVOLUTIONARY SYNTHESIS) ஆகும்.

                20ம் நூற்றாண்டில் அதாவது 1918 முதல் 1970 வரை பரிணாமவியல் கருத்தாக்கத்தில் தோன்றிய, மாறிய புதிய புரிதல்களின் தொகுப்புத்தான் நவீன தொகுப்புப் பரிணாமம் ஆகும். கிரிகர் மெண்டலின் மரபியல், (MENDELIAN HERIDITARY) உயிரியல் அமைப்பு முறைப்படுத்தல் (BIOLOGICAL SYSTEMATICS) மற்றும் டார்வினின் இயற்கை தேர்வு (NATURAL SELECTION) ஆகியவற்றை ஒன்றினைத்து ஏர்ன்ஸ்ட் மைர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கோட்பாட்டியல் புரட்சிதான் இந்த நவீன தொகுப்புப் பரிணாமம் (MODERN EVOLUTIONARY SYNTHESIS) எனப்படுகிறது.

                பரிணாமவியலுக்கு மிக சாதகமாக இனத்தோற்ற அடிப்படையிலான இனக்கருத்து இருந்த போதிலும், ஏர்ண்ஸ்ட் மைர் போன்றவர்கள் இனப்பெருக்க பிரிவினை அடிப்படியிலான இனக்கருத்தை உயர்த்திப்பிடிக்க காரணம் இந்த நவீன தொகுப்பு பரிணாமத்தின் ஆதர்வு நிலைதான். ஆக இனங்கள் தோன்றுவதற்கு இருக்க வேண்டிய முக்கிய காரணி இனப்பெருக்க பிரிவினைதான் என்பதை ஏர்ண்ஸ்ட் மைரின் கருத்துக்கள் ஆணித்தனமாக மேற்குறிபிட்ட பரிணாமவியல் கொள்கையில் முன்வைக்கப்படுகிறது. ஆக படிமங்களினால் நிறுவப்படும் கருத்தியலும், பரிணாம உயிரிலாளர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களும் நேர் எதிரானவை. ஆனால் இவை இரண்டும் இணைந்து பரிணாமத்திற்கு முழு சான்று அளிக்கிறது என்பது எத்தகைய கேலிக்குறியது என்பதை இந்த தொடர்களை வாசிப்பவரின் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.

   பரிணாம்ம் குறித்து எர்ண்ஸ்ட் மைர் அவர்களது நேரடி வார்த்தைகளினாலே புரிந்து கொள்ள முயல்வோம்

THE LOGIC OF THE THEORY OF NATURAL SELECTION
Darwin's theory consisted of three inferences based on five facts derived in part from population ecology and in part from phenomena of inheritance.
Fact 1: All species have such great potential fertility that their population size would increase exponentially (Malthus called it geometrically) if all individuals that are born would again reproduce successfully.
Fact 2: Except for minor annual fluctuations and occasional major fluctuations, populations normally display stability.
Fact 3: Natural resources are limited. In a stable environment they remain relatively constant.
Inference 1: Since more individuals are produced than can be supported by the available resources but population size remains stable, it means that there must be a fierce struggle for existence among the individuals of  a population, resulting in the survival of only a part, often a very small part, of the progeny of each generation. 

These facts derived from population ecology lead to important conclusions when combined with certain genetic facts.
டார்வினின் கோட்பாடு இனத்திரள் சூழலியலியல் (Population Ecology) மற்றும் மரபுவழி பெறுகை(inheritance) நிகழ்வின் ஆகியவற்றில் இருந்து பெறப்படும் உண்மைகளின் அடிப்படையில் மூன்று அனுமானங்களை அல்லது உய்த்துணர்தல்களை கொண்டது. 
உண்மை  1: ஒவ்வொரு இனத்தில் உள்ள ஒவ்வொரு உயிரும் இனப்பெருக்கம் செய்யும் பட்சத்தில், அனைத்து இனங்களின் தொகையும் பல்கிப்பெருகும் இனப்பெருக்க வளம் கொண்டவை. (மால்துஸ் இதனை வடிவியல் பெருக்கம் எனக்குறிப்பிடுகிறார்) 
உண்மை 2: ஆண்டுதோறுமான சிறு மற்றும் பெரும் ஏற்றத்தாழ்வுகளை தவிர்த்து இனத்திரள் நிலைத்தன்மையை கொண்டிருக்கும். 
உண்மை 3: இயற்கை வளங்கள் வரையறுக்கப்பட்டவை. நிலையான சூழலில் அவை ஒப்பீட்டளவில் நிலையானது. 

அனுமானம் 1: இருக்கும் வளங்கள் ஆதரிக்கும் எண்ணிக்கையை விட ஒரு இனத்தின் தனித்த உயிர்களின் இனப்பெருக்கும் அதிகமாய் இருக்கின்ற போதும், இனத்திரள் நிலைத்தன்மையை கொண்டிருப்பது, அந்த இனத்திரளில் உள்ள தனித்த உயிர்களுக்கு மத்தியிலும் கடுமையான வாழ்கை போராட்டம் நிகழ்கிறது என்பதை காட்டுகிறது. இதனால் ஒரு இனத்திரளில் ஒரு பகுதி மட்டுமே பிழைத்து வாழ்கின்றது, பல நேரங்களில் ஒவ்வொரு தலைமுறையின் சிறு பகுதி மட்டுமே தப்பி பிழைக்கின்றது. 



இனத்திரள் சூழலியலின் இந்த உண்மைகளை சில மரபியல் உண்மைகளுடன் இணைக்கும் போது சில முக்கிய முடிவுகளை அடையமுடிகிறது. 


Fact 4: No two individuals are exactly the same; rather, every population displays enormous variability. 
Fact 5: Much of this variation is heritable. 

Inference 2: Survival in the struggle for existence is not random but depends in part on the hereditary constitution of the surviving individuals.  This unequal survival constitutes a process of natural selection. 


Inference 3: Over the generations this process of natural selection will lead to a continuing gradual change of populations, that is, to evolution and to the production of new species.(4)
உண்மை 4: (ஒரு இனத்திரளின்) இரண்டு தனித்த உயிர்கள் ஒரே போன்று இருப்பதில்லை. மாறாக ஒவ்வொரு இனத்திரளும் மிகப்பெறும் மாறுபாடுகளை தனக்குள்ளே காட்டுகிறது.

உண்மை 5: இந்த மாறல்கள் பெரும்பான்மையானவை பாரம்பரிமானவை. 

அனுமானம் 2: இந்த வாழ்கை போராட்டத்தில் தப்பிப்பிழைப்பது என்பது எதேச்சையான ஒன்றல்ல மாறாக இதன் ஒரு பகுதி தப்பிப்பிழைக்கும் தனித்த உயிரின் பாரம்பரிய உள்ளமைப்பினை சார்ந்து இருக்கிறது. இந்த சமமில்லாத தப்பிப்பிழைத்தல் இயற்கை தேர்வு என்ற செயல்முறையை தோற்றுவிக்கிறது. 


அனுமானம் 3: பல தலைமுறைகளாக இயற்கைதேர்வு என்ற இந்த செயல்முறை இனத்திரள்களில் தொடரும் படிநிலை மாற்றங்களை தோற்றுவிக்கிறது அதாவது பரிணாமத்தை தோற்றுவிக்கிறது. மேலும் புது இனங்களை உருவாக்குகிறது.

           நாம் மேற்குறிபிட்ட கருத்தியலை விளக்கி ஆய்வு செய்வோம். இதில் இருந்து பெறப்பட்டதாக கூறப்படும் உய்த்துணர்தல் எந்த அளவு சரியானது என்பதை பரிணாமவியலின் ஏனைய கருத்துகளையும் தலைப்புக்களையும் ஆய்வு செய்வதற்கு முன்பே புரிந்து கொள்வது இந்த பரிணாமவியல் என்ற கோட்பாட்டின் அடித்தளத்தின் வலிமை?????? எத்தகையது என்பதை புரிந்து கொள்ள போதுமானதாய் இருக்கும்.

அனுமானம் 1: இருக்கும் வளங்கள் ஆதரிக்கும் எண்ணிக்கையை விட ஒரு இனத்தின் தனித்த உயிர்களின் இனப்பெருக்கும் ஆற்றல் அதிகமாய் இருக்கின்ற போதும், இனத்திரள் நிலைத்தன்மையை கொண்டிருப்பது, அந்த இனத்திரளில் உள்ள தனித்த உயிர்களுக்கு மத்தியில் கடுமையான வாழ்கை போராட்டம் நிகழ்கிறது என்பதை காட்டுகிறது. இதனால் ஒரு இனத்திரளில் ஒரு பகுதி மட்டுமே பிழைத்து வாழ்கின்றது, பல நேரங்களில் ஒவ்வொரு தலைமுறையின் சிறு பகுதி மட்டுமே தப்பி பிழைக்கின்றது.

           மேற்குறிபிட்ட இந்த அனுமானத்தை கார்ல் பாப்பர் அவர்களின் அறிவியல் கோட்பாட்டின் வரைவிலக்கணத்தில் அடிப்படையில் சோதிக்க முடியுமா என்று பார்போம். அவ்வாறு சோதிக்கப்படும் போது அது எந்தளவிற்கு உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதை பார்ப்போம். 

               அதாவது ஒரு இனத்தில் இருக்கும் தனித்த ஒவ்வொரு உயிர்களும் பல்கிப்பெருகும் ஆற்றல் கொண்டவை. எண்ணிக்கையில் ஆண்டுதோறும் சிறு மாற்றங்கள் தோன்றினாலும் ஒரு இனத்தில் உள்ள உயிர்களின் மொத்த எண்ணிக்கை நிலையாகவே இருக்கிறது. அது போல இயற்கை வளத்தின் அளவு வரையறுக்கப்பட்டதுதான். இந்நிலையில் ஒரு பல்கிப்பெருகும் இனத்திரளின் எண்ணிக்கை நிலையாக இருப்பது என்பது எதை காட்டுகிறது என்றால் தனித்த உயிர்களுக்கு இடையே கடுமையான போராட்டம் நிகழ்கிறது. இந்த போராட்டதில் தப்பிப்பிழைப்பவை சில உயிர்கள் மட்டுமே. இந்த தப்பிப்பிழைக்கும் உயிர்களிலும் அவற்றின் சந்ததிகளிலும் சில உயிர்களே தப்பிப்பிழைக்கின்றன. 

              மேற்குறிபிட்ட இந்த அனுமானம் சரியாக தோன்றினாலும் இந்த கருத்து அறிவியல் ஆய்வு மற்றும் உண்மை புரிதலுக்கு மாற்றமானதாகும். இந்த அனுமானத்தின் மூலமாக அமைந்த இனத்திரள் சூழலியல், இந்த கருத்து குறித்து என்ன கூறுகிறது என்பதை காண்போம். 

            இது குறித்த தற்கால ஆய்வுகள் ஒரு இனத்திரளில் இருக்கும் உயிர்களின் எண்ணிக்கை நிலையாக இருப்பது போராட்டத்தினால் மட்டும் அல்ல அந்த உயிர்களின் இனப்பெருக்க ஆற்றலில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளினால்தான். அதாவது ஒரு இனத்திரளில் இருக்கும் உயிர்களின் இனப்பெருக்க ஆற்றல் மொத்த உயிர்களின் ஜனத்தொகைக்கு ஏற்றவாறு மாறுகிறது. அதாவது ஜனத்தொகை அதிகமாக இருக்கும் போது இனப்பெருக்க ஆற்றல் தானே குறைகிறது. அதுபோல் ஜனத்தொகை குறையும் போது இனப்பெருக்க ஆற்றல்(Fecundity) தானே உயர்கிறது. (Fecundity- என்பது கரு உற்பத்தி ஆற்றல் எனப்படுகிறது. இவ்வாறான ஜனத்தொகை சார்ந்து கரு உற்பத்தி அளவில் ஏற்படும் மாறுபாடுகளை Density Dependent Regulation of Fecundity என்று இனத்திரள் சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்(5)
மேலும் இத்தகைய செயல்பாட்டிற்கான காரணம் இன்னும் புலப்படவில்லை என்பது அதிகப்படியான தகவல். (6)



            ஆக முதல் அனுமானம் கூறுவது போல் உயிர்களில் என்றும் போராட்டம் நிகழ்வதில்லை. ஆக முதல் அனுமானம் முழுவதும் சரியல்ல. அதில் குறைகள் இருக்கிறது என்பதுடன் வாழ்கை போராட்டத்தினால் பலவீனமான உயிர்கள் ஒரு இனத்திரளில் முற்றிலும் அழியாது என்பதும் நிருபனம் ஆகிறது. பலவீனமானவை அல்லது சூழலுக்கு ஏற்ப தாக்குபிடிக்காதவை அதிக எண்ணிக்கையில் இனப்பெருக்கம் செய்யும், அதன் இழப்பை ஈடு செய்ய. மேலும் மால்தூஸ் என்ற பாதிரியின் (1766- 1834) இந்த வாழ்க்கை போராட்டம் குறித்த கருத்துக்கள் கார்ல் மார்கஸ் போன்றவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. முதலாளித்துவத்திற்கு வெண்சாமரம் வீசும் கருத்தாக எடுதுக்கொள்ளப்பட்டதால்தான் என்னவோ சோவியத்தில் மால்தூஸின் கருத்தியல் அடிப்படையிலான டார்வினிஸம் ஒதுக்கப்பட்டு லாமார்க்கியம் 1965 வரை கோலோச்சி இருந்தது போலும்..


      ஆக பரிணாமவியல் குறித்த முதல் அனுமானம் சோதனையில் தாக்குபிடிக்கவில்லை. ஆக இதனை அடிப்படையாக கொண்ட அடுத்த அனுமானம் என்ன ஆகும் என்பதையும் காண்போம்.
அனுமானம் 2: இந்த வாழ்கை போராட்டத்தில் தப்பிப்பிழைப்பது என்பது எதேச்சையான ஒன்றல்ல மாறாக இதன் ஒரு பகுதி தப்பிப்பிழைக்கும் தனித்த உயிரின் பாரம்பரிய உள்ளமைப்பினை சார்ந்து இருக்கிறது. இந்த சமமில்லாத தப்பிப்பிழைத்தல் இயற்கை தேர்வு என்ற செயல்முறையை தோற்றுவிக்கிறது. 
                அதாவது சூழலுக்கு தக்க தாக்கு பிடிக்கும் மாறல் இருக்கும் உயிரினம் ஒரு இனத்திரளில் அழியாது நிலைத்துவிடும். முன் கூறியது போல இந்த அனுமானமும் முழுமையும் சரியானதல்ல. அதாவது முன் கூறியது போலவே பலவீனமான உயிர்கள் தங்களது இருப்பை தக்கவைக்க அதிகமாக பல்கிபெருகுகிறது. அதன் விளைவாக தனது மரபை பெருமளவில் அடுத்த சந்ததிக்கு கடத்தி விடுகிறது. இதனால்தான் இன்றும் நிறக்குருடு போன்ற மரபியல் குறை இருக்கும் மனிதர்களை காணமுடிகிறது. உலக மக்கள் தொகையில் குறிப்பிட்ட சதவீத மக்கள் இத்தகைய மரபியல் குறைபாட்டுடனேயே இன்றும் இருப்பதை காணமுடிகிறது. இன்னும் தெளிவாக Mutation- Selection Balance theory இதை விளக்குகிறது.(7)
அனுமானம் 3: பல தலைமுறைகளாக இயற்கைதேர்வு என்ற இந்த செயல்முறை இனத்திரள்களில் தொடரும் படிநிலை மாற்றங்களை தோற்றுவிக்கிறது அதாவது பரிணாமத்தை தோற்றுவிக்கிறது. மேலும் புது இனங்களை உருவாக்குகிறது.
             ஆக மேற்குறிபிட்ட மூன்றாவது அனுமானம் இதற்கு முன் நாம விளக்கிய இரண்டு பலவீனமான அனுமானங்களின் மேல் கட்டமைக்கப்பட்டது. ஆக மூன்றாவது அனுமானம் தானகவே பலவீனமடைந்துவிடும். ஆயினும் இயற்கை தேர்வு என்பது நிகழத்தான் செய்கிறது. ஆனால் இயற்கை தேர்வும் அதை அடிப்படையாக கொண்ட டார்வினிஸ்மும் இனத்தோற்றத்தின் காரணம் என்பதெல்லாம் சுத்த கட்டுக்கதை. மாறாக இயற்கை தேர்வுதான் ஒரு இனத்தினை அழியாமல் பாதுகாக்கிறது என்பதை பின்வரும் தொடர்களில் இன் ஷா அல்லாஹ் விளக்குவோம். இந்த இயற்கை தேர்வுதான் இனங்களின் தோற்றத்திற்கும் , வாழ்க்கை போராட்டம்தான் இனங்களின் மறைவிற்கும் காரணம் என விளக்கவே இந்த அனுமானங்களை பிடித்து தொங்கிகொண்டுள்ளனர் பரிணாமவியலாளர்கள். மேலும் இந்த விளக்கத்தை பிடித்து தொங்கினால்தான் ஓரளவிற்காவது படிமங்களை பரிணாமத்திற்கு ஆதாரமாய் கொள்ளமுடியும். அதாவது மூதாதைகள் வாழ்க்கை போராட்டத்தில் அழிந்தன. மாறுபாட்டுடனான உயிர்கள் தப்பிப்பிழைத்தன என வாதிட முடியும், அழிந்த உயிர்களின் படிமங்களையும் எழும்பு கூடுகளையும் வைத்துக்கொண்டு இவைதான் இன்றிருக்கும் உயிர்களின் மூதாதை என பொய்யாக வாதிக்க முடியும்.

       ஆனால் படிமங்களிலும் பரிணாமவியலாளர்களுக்கு சிக்கல்கள் இருக்கின்றன. அதாவது படிமங்களில் உயிர்கள் திடிரென அழிந்திருக்கின்றன. அதே போல் தோன்றியும் இருக்கின்றன. இது இங்கு பேசப்படும் பரிணாமவியலின் படிநிலையில் சிறு சிறு தொடர் மாற்றங்களினால் உயிர் இனங்கள் இயற்கை தேர்வால் தோன்றும் என்பதற்கு நேர் எதிரானது. இயற்கை தேர்வினால் இனங்கள் தோன்றி இருந்தால் பூமி துவக்கம் முதல் இன்று வரை உள்ள இனங்கள் அப்படியே இருக்கும். சில அழிந்து படிமமாய் இருக்காது. அவ்வாறு அழிந்து ஒத்ததோற்றத்துடன் படிமமாய் இருப்பவற்றை “Pseudo extinct”(பொய்யாக அழிந்தவை)(8) என்று அழைக்கிறார்கள் படிமவியலாளர்கள்.


    அதாவது மூதாதைகள் அழிந்திருக்கும் ஆனால் அவற்றின் ஒத்த தோற்றமுடைய உயிர்கள் இன்றும் இருக்கும். அவை எந்த அளவிற்கு ஒத்திருக்கும் என்றால் அவற்றின் பாகுபாட்டை அவை இன்றிருக்கும் இனங்களுடன் அவை இனப்பெருக்கம் செய்தனவா என்பதை அறிந்தால் மட்டுமே சாத்தியம் எனும் அளவிற்கு அமைந்திருக்கும். நாம் சென்ற தொடரில் குறிபிட்டது போல் உருவத்தில் இருக்கும் சிறு வேற்றுமையின் அடிப்படையில் தொல்லியலாளர்கள் அவற்றை தனி இனமாக பிரித்திருப்பார்கள் ஆக படிநிலையில் சிறு தொடர் மாற்றங்களினால் உயிர் இனங்கள் தோன்றும் என்பதும், வாழ்க்கை போராட்டத்தில் உயிரினங்கள் முற்றிலும் அழிந்தன என்பதும் படிமங்களின் அடிப்படையில் நம்பும் படியாக இல்லை. இவ்வாறு உயிர் இனங்கள் படிநிலையில் சிறு சிறு தொடர் மாற்றங்களினால் தோன்றியதற்கான ஆதாரங்கள் படிமங்களில் இல்லாத காரணத்தினால்தான் ஜே கோல்ட் போன்றவர்கள் “Punctuated Equilibrium” எனும் கோட்பாட்டை முன்வைக்கின்றார்கள். எது பரிணாமத்தின் இயற்கை???? என்பதிலேயே கோல்டும் டாவ்கின்ஸும் மோதிக்கொள்கிறார்கள் என்பது கூடுதல் தகவல். (9) ஆனால் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட ஆயிரம் சிக்கல்களை அறிவியல் முன்வைக்கும் போது கோட்பாட்டியல் ரீதியில் பெருமாற்றங்கள் திடிரென உயிர்களில் தோன்றி அவை வேறு இனமாக எப்படி மாற முடியும் என்பது டாக்கின்ஸ் போன்ற பரிணாமவியலாளர்களால் எழுப்பப்படும் கேள்வி. கோல்ட் போன்றவர்கள் இத்தகைய சிறு சிறு தொடர் மாற்றங்களால் உயிர் இனங்கள் வேறு இனங்களில் இருந்து தோன்றின (Anagenesis)  என்பதற்கான படிம ஆவணங்கள் மிகவும் அரிதானது என்கிறார்கள்.(10) ஆக படிம ஆதாரங்கள் டாக்கின்ஸ் போன்ற பரிணாம ஆதரவாளர்களின் கருத்துக்கு ஒத்துவரவில்லை, ஆக உயிர்கள் திடிரென தோன்றி இருக்கின்றன என வாதிக்கின்றனர்.


        இன்னும் தெளிவாக கூறுவதாக இருந்தால் படிம ஆவணங்களில் உயிர் இனங்கள் திடீரென தோன்றியும் மறைந்தும் உள்ளது. ஆனால் ஒரு இனம் வேறு இனமாக பரிணமிக்க வேண்டுமாயின்,  படிநிலையில் சிறு சிறு தொடர் மாற்றங்கள் ஏற்பட்டு பிறகு ஒரு இனம் வேறு ஒரு இனமாக பரிணாமிக்கும் என உயிரியல், மரபியல், மற்றும் செல்லியல் தொடர்பான அறிவியல் ஆய்வுகள் காட்டுகிறது. ஆனால் இத்தகைய ஆய்வுகள் குறிப்பிடும் கால அளவு நேரடி ஆதாரங்களான படிமங்களோடு ஒத்துவரவில்லை. ஆக ஆய்வு குறிப்பிடும படிநிலை தொடர்மாற்றங்கள் என்பது கண்முன்னே இருக்கும் படிம ஆவணங்களுக்கு நேர்மாறாக இருக்கிறது. ஆக பரிணாம இயங்கியலின் இயற்கை என்ன என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது.

       அதுபோல் ஒரு உயிரியல் செயலாக்கம் என்பது அடிப்படையாக சில தன்மைகளை கொண்டிருக்கும். அதாவது அந்த செயலாக்கத்திற்கு உள்ளீடு இருக்கும், அடுத்து வெளியீடு இருக்கும். இதனை கொண்டு அந்த செயலாக்கத்தின் செயல்திறன் என்ன என்பனவற்றை அறிய முடியும். உதாரணமாக ஒளிச்சேர்கையை எடுத்துக்கொள்வோம் அதன் உள்ளீடு சூரிய ஒளி, கார்பன் டை ஆக்ஸைடு, நீர் உள்ளிட்டவை. வெளியீடு: குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸிஜன்.


           இது போல் இயற்கை தேர்வு என்ற செயலாக்கத்தின் உள்ளீடு என்ன. வெறும் வெளியீட்டை மட்டும் வைத்து ஒரு செயல்முறை இருப்பதாக வாத்திப்பதானால், ஏன் படைப்பு என்ற செயல்முறை நிகழ்ந்து இருக்கக்கூடாது?, என்ற வாதத்தை முன்வைக்கலாமே??? இயற்கை தேர்வின் செயல்திறன் என்ன? எவ்வளவு கால அளவை எடுத்துக்கொள்ளும் போன்ற அளவீடுகளை இயற்கை தேர்விற்கு வழங்க இயலுமா???? அந்த அளவீடுகள் படிமங்களோடு எந்த அளவிற்கு ஒத்தமைகின்றது போன்ற கேள்விகளுக்கு பரிணாமவியலில் பதில் இருக்கிறதா??? ஆக இயற்கை தேர்வுதான் உயிர்களில் இனங்களை தோற்றுவித்தது என்பது ஒரு முழு ஊகம். அது செயலாக்கத்திற்கான எந்த அளவீடுகளையும் கொண்டிருக்க வில்லை.

     பரிணாமத்தின் இறுதி இலக்கான “இனம்” என்ற வரைவில் குழப்பம். பரிணாமத்தின் அடிப்படை இயங்கியல் எப்படி நடைபெறுகிறது என்பதில் பரிணாமவியலாளர்களுக்கு இடையில் குழப்பம்....இப்படி இலக்கிலும், இயங்கியலிலும் கருத்து வேறுபாடுகளும் குழப்பமும் நிகழும் போது பரிணாமவியல் எப்படி அறிவியல் கோட்பாடு எனும் நிலையை அடையும்....... இதனால்தான் என்னவோ பாப்பர் ஆரம்பத்தில் பரிணாமம் என்பது அறிவியல் அல்ல என்று குறிபிட்டார். பின்னர் ஏற்பட்ட அழுத்தத்தினால் பரிணாமம் அறிவியல் என ஏற்கும் படியானது. ஆனால் மேல் குறியவற்றிற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அனுமான்ங்கள் பல இணைக்கப்பட்டு கொண்டே செல்கிறது எனும் போது பரிணாமம் அறிவியலா???? என்பதற்கான விடையை வாசிப்பவர் புரிந்து கொள்ளட்டும்.

Citation:
1.P.no: 36 , CONJECTURES AND REFUTATIONS by Karl Popper
2.https://www.ncbi.nlm.nih.gov/pubmed/28568554 , 3.https://onlinelibrary.wiley.com/doi/epdf/10.1111/j.1558-5646.1989.tb04233.x
4.P.No 479-480 The Growth of Biological Thought Diversity, Evolution, and Inheritance by ERNST MAYR
5.https://www.nature.com/scitable/knowledge/library/introduction-to-population-demographics-83032908
6.https://courses.lumenlearning.com/wm-biology2/chapter/population-dynamics-and-regulation/
7.P.No.702-704 Introduction to Genetic Analysis by Anthony J. F. Griffiths, Susan R. Wessler, Sean B. Carroll, John Doebley
8.https://en.wikipedia.org/wiki/Pseudoextinction
9.P.No.4 Dawkins Vs. Gould: Survival of the Fittest
10.P.No:606, The Structure of Evolutionary theory by Stephen Jay Gould.


References:
1.CONJECTURES AND REFUTATIONS by Karl Popper
2.The Growth of Biological Thought Diversity, Evolution, and Inheritance by ERNST MAYR
3.Introduction to Genetic Analysis by Anthony J. F. Griffiths, Susan R. Wessler, Sean B. Carroll, John Doebley
4.Dawkins Vs. Gould: Survival of the Fittest by Kim Sterelny
5.Essentials of Ecology by G.Tyler Miller Jr. and Scott E.Spoolman
6.The Structure of Evolutionary theory by Stephen Jay Gould

7.Prehistoric Life: evolution and fossil record by Bruce S.Lieberman and Roger Kaesler

Saturday, January 5, 2019

தொடர் 4:பரிணாமம் : உண்மையா ஊகமா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்


             பரிணாமவியலின் முக்கிய ஆவணம் அல்லது ஆதாரம் என்று அழைக்கப்படும் ஒரு இயங்கியல்(Process) இனப்பிரிகையாகும்(SPECIATION). இதன் வேர் சொல் அல்லது அடிப்படை இனம்(SPECIES) ஆகும்.    ஆம் பரிணாமவிலாளர்களின் இறுதி இலக்கான “ இனமாக பிரிதல்(speciation) என்னும் இயங்கியல் குறித்தும் அதன் மையமாக அமைந்த இனம்(species) என்ற பதம் குறித்தும் , உயிரியல் வகைபடுத்தலில் அடிப்படை அளகான அந்த இனம் என்ற சொல்லை வரையறுப்பத்திலும் அறிவியல் உலகம் பல்வேறு முரண்பட்ட விளக்கங்களை கூறி தத்தளித்து வருவதை காண்கையில் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஆக எது இலக்கு என தெரியாமலேயே ஒரு அறிவியல் தியரி?? பயணிக்கிறது என்றால் அது பரிணாமவியலாகத்தான் இருக்கும் என்பதில் நமக்கு எல்லளவும் சந்தேகேம் இல்லை. அதாவது ஒரு இனம்(species) "பல இனங்கள்”(Multiple Species)ஐ தோற்றுவிக்கிறது. பல இனங்கள் பேரினத்தை தோற்றுவிக்கிறது என்பது டார்வினின் கூற்று.(1) ஆக இனம் என்பது பரிணாமத்தின் தயாரிப்பு என்பது டார்வினின் கூற்று. ஆனால் அந்த தயாரிப்பு எது என்பதிலேயே குழப்பம் நிலவுகிறது என்பது நகைப்புக்குறியது. அந்த தயாரிப்பு எந்த எந்த குணங்களை கொண்டிருக்கும், அது எப்படி ஏனைய தயாரிப்புகளில் இருந்து மாறுபடுகிறது. எந்த செயல்பாடு இந்த வேறுபாட்டை உற்பத்தி செய்கிறது. அதன் இயங்கியல் என்ன???? உள்ளிட்ட விசயங்களில் நிலவும் இந்த குழப்பங்களை அறிவியல் உலகம் “The Species Problem” என அழைக்கிறது. மேலும் இது குறித்து எர்ண்ஸ்ட் மைர் குறிப்பிடுகையில் இனம் என்பதை வரையறுக்காமல் “எவ்வாறு இனங்கள் தோன்றின” என்பதை விவாதிக்க இயலாது என்று கூறுகிறார்(2). இந்த குழப்பம் குறித்தும், அறிவியல் உலகம் கூறும் பல முரண்பட்ட கூற்றுகளை ஒன்றினைத்து எவ்வாறு நாம் விளங்க வேண்டும் என்பது குறித்தும் பல ஆய்வு கட்டுரைகள் வலையகம் முழுவதும் கொட்டிக்கிடப்பதே தனது இறுதி இலக்கான இனம் மற்றும் இனப்பிரிதல் குறித்தே போதிய விளக்கங்களை பெற முடியாமல் விழிபிதுங்கி உயிரியல் நிற்கிறது என்பதற்கு போதிய சான்று. இனம் என்றால் என்ன???? என்பதை இன் ஷா அல்லாஹ் இந்த தொடரில் சுருக்கமாக காணவிருக்கிறோம்.

இனம் எனும் கருத்தியல்:

                      இனம் எனும் கருத்தியல் பலவாராக விளக்கப்படுகிறது. அறிவியல் உலகம் கிட்ட்த்தட்ட 26 மாறுபட்ட வரைவுகளை இனம் என்பதற்கு தருகிறது. (3)அவற்றை எல்லாம் விளக்க வேண்டும் என்றால் தனி நூல தேவைப்படும். இது குறித்து விளக்கும் நூல்கள் குறித்த தகவல் இந்த கட்டுரையின் இறுதியில் இடம் பெறும். அவற்றுள் மிக முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கு விளக்க இருக்கிறோம். அவை:

1. உருவியல் இன கருத்து- MORPHOLOGICAL Species concept

2. பெயரளவிலான இன கருத்து- NOMINALISTIC Species concept

3. உயிரியல் இன கருத்து- BIOLOGICAL SPECIES CONCEPT

4. இனத்தோற்ற வரலாறு அடிப்படையிலான இன கருத்து PHYLOGENETIC SPECIES CONCEPT
உருவவியல் இன கருத்து:
           இந்த கருத்தானது உயிர்களின் அமைப்பு ரீதியில் வகைப்படுத்தும் கருத்தியலாகும். இந்த கருத்து பிளாட்டோ முதல் பலரால் வரலாறு நெடுக எடுத்துகொள்ளப்பட்ட கருத்தியல் ஆகும். இதன் அடிப்படையில்யே கார்லோஸ் லினேயஸ் உயிரியல் வகைபடுத்தலை மேற்கொண்டார். இதனாலே அவர் உயிரியல் வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். இது மிக அடிப்படையிலான பாகுபாட்டியல் ஆகும். 


              ஆக மேற்குறிபிட்ட வரைபடமே போதுமானது உருவவியல் இன கருத்து என்றால் என்ன என்பதை விளங்க. இந்த கருத்து விளங்க எளிமையாக இருந்த போதிலும் இதில் சில குறைகளும் இருக்கின்றன. அதாவது ஒரே உயிரில் இருக்கும் பாலின உடற் பகுபாடு, (Sexual Dimorphism), பல்லுயிர் தோற்றம் (polymorphism) , வயது மாற்றம் போன்ற காரணங்களினாலும் உருவ அமைப்பில் வேறுபாடுகள் இருக்கும்.


            மனிதன் போன்ற உயிரினத்தில் பாலின பாகுபாடு பெரிதாக இருப்பதில்லை. ஆனால் தூண்டில் மீன் (Angler Fish) போன்றவற்றில் ஆண் மீனிற்கும் பெண் மீனிற்கும் பெரும் உருவவேறுபாட்டை காணமுடிகிறது இது போன்ற உயிரினங்களில் இத்தகைய இன கருத்து செல்லுபடியாகாது. அதே போல் குறிபிட்ட அளவு கோலை இந்த உடலியல் வேறுபாட்டிற்கு கூறவியலாது. மேலும் இதில் ஒரு கோட்பாட்டியல் சிக்கல் பரிணாமவியலாளர்களுக்கு இருக்கிறது. இன பிரிகையின் அடிப்படை அளகாக உடலியலை எடுத்துக்கொண்டோம் என்றால், இனப் பிரிகையின் ஆரம்பம் உடல் அமைப்பியலில் தோன்றும் மாற்றமாக எடுக்க நேரிடும். இது நாம் முன் சென்ற தொடர்களில் விளக்கியது போல் நிறுவப்பட்ட வைஸ்மேனின் ஆய்வுகளுக்கு மாற்றமாக அமைந்துவிடும். மேலும் இந்த சிக்கலை தீர்க அவர்களுக்கு இடைநிலை உயிர்கள் தேவைபட்டன. ஆனால் என்ன முயற்சித்தும் அது நடக்கவில்லை. ஆக இதை பரிணாமவியலாளர்களால் ஏற்க முடியாது.(4)
பெயரளவிலான இன கருத்து- NOMINALISTIC Species concept
                     லாமார்க் போன்றவர்கள் இந்த கருத்தை முன்வைத்தனர். அதாவது நமது தேவைக்காகத்தான் இனமாக உயிர்களை பிரிக்கிறோமே ஒழிய எல்லாம் ஒரே இனம்தான் என்ற கருத்தை முன் வைத்தாரகள். அதாவது இவர்கள் தங்களது ஆர்தோஜெனிஸிஸின் அடிப்படையில் இந்த கருத்தை முன்வைத்தனர். ஆக உயிர்கள் பல்வேறு வகைபட்டவை. அந்த வேறுபாடுகள் தெளிவாக தெரிகின்றன். டார்வின் கூறுவது போல் பரிணாமத்தின் உற்பத்திப்பொருளே இனம் தான் எனும் போது,….இனம் என்ற ஒன்றே இல்லை என்ற வாதத்தை எப்படி பரிணாமவியலாளர்களால் ஏற்கமுடியும்…...

உயிரியல் இன கருத்து- BIOLOGICAL SPECIES CONCEPT
                   இந்த கருத்து கே.ஜோர்டான் அவர்களால் முன்வைக்கப்பட்டது. இன்று இந்த கருத்தியல்தான் பெரும்பான்மை உயிரியலாளர்களாலும், பரிணாமவியலாளர்களாலும் ஏற்கப்பட்ட ஒன்றாகும். இந்த வரைவிற்கு முழு வடிவம் கொடுத்தவர் எர்ண்ஸ்ட் மைர் ஆவார். “ஒரு இனம் என்பது இயற்கையாக தனக்குள் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும், தனித்த இயற்கை வாழிடங்களை கொண்ட உயிர்களின் தொகுதி” என்று வரையறுத்தார். 

அதாவது ஒரு இனம் என்பது
1.ஒரு உயிரினக்கூட்டம். 
2.அவை தனக்குள் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும்
3.அவற்றிற்கு தனித்த வாழிடம் இருக்கும். அதாவது அவை தங்களுக்குள் மாறுபாடுகளை கொண்டிருக்கும். அவை அனைத்தும் இனைந்த ஒரு தொகுதியாக இருக்கும். அவை ஏனைய இத்தகைய தொகுதிகளுடன் ஒரு சூழலில் ஒன்றுடன் ஒன்று செயலாற்றும்.
          உதாரணமாக வரிகுதிரைகளை எடுத்துக்கொள்வோம். அவை இயற்கையாக வரிகுதிரைகளுடன் இனப்பெருக்கம் செய்யும். அவை ஆப்ரிக்க காடுகளில் ஒரே சூழலில் காட்டுக்கழுதைகளுடன் இணைந்திருந்தாலும் அவை அவற்றுடன் இயற்கையாக இனப்பெருக்கம் செய்யாது. இதில் வரிகுதிரை என்பது ஒரு இனம். அது போல் காட்டுக்கழுதைகள் தனி இனம். இவ்விரண்டு இனங்களும்  இயற்கையாக ஒன்றுடன் ஒன்று இனப்பெருக்கம் இயற்கையாக செய்யாததால் இவை இரண்டும் தனித்த இரண்டு இனங்கள்.

இந்த கருத்தும் ஏகமனதாக பலரால் ஏற்கப்பட்டாலும் இதிலும் சிக்கல்கள் இருக்கின்றன.

1.இதில் முதல் சிக்கல் பரிணாமவியலாளர்களுக்கு எங்கு எழுகின்றது என்றால் பழைய படிமங்களின் இன வகைபடுத்தல் சாத்தியமற்றதாகிவிடும். அதாவது படிமத்தில் இருக்கும் மூதாதை இனங்களும் இன்றிருக்கும் இனங்களும் இணைந்து இனப்பெருக்கம் செய்தனவா என்பதை படிமங்களை கொண்டு அறியமுடியாது. உதாரணமாக மனிதனுக்கும் குரங்கிற்கும் இடைபட்ட ஒரு இடைநிலை மூதாதை படிமம் கிடைக்கிறது என்று கொள்வோம். இந்த மூதாதை முதலில் தோன்றிய குரங்கு மூதாதை எனும் மாறலுடனும் மனிதன் மூதாதை என்ற மாறலுடனும் இனப்பெருக்கம் செய்திருக்குமா????அவை மனித மூதாதையுடன் மட்டும் இனப்பெருக்கம் செய்திருந்தால் அவை தனி இனமாக இருக்கும். அல்லது அது மனித இனமாக இருக்கும் என வரையறை செய்யலாம். ஆனால் அது படிமங்களில் சாத்தியமற்றது. ஆக இன்று இருக்கும் விலங்குகளை வேண்டும் என்றால் இந்த இன கருத்தியல் அடிப்படையில் வகைபடுத்தலாம்….படிமங்களில் அது சாத்தியம் இல்லை. ஆனால் படிமங்களை இன பாகுபாடுபடுத்த முடியவில்லை என்றால் பரிணாமம் மண்ணைக்கவ்விவிடும். பரிணாமத்திற்கு ஆதாரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் படிமங்களின் மேலும் சார்ந்து இருக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்று. ஆக இதுவும் பரிணாமத்திற்கு ஒவ்வாத கோட்பாடுதான்

2. வளைய இனங்கள்.(Ring Species)
இதை கொஞ்சம் விரிவாக பார்த்துவிடுவோம். அதாவது வளைய இனங்கள் என்பவை அருகருகே அமைந்த வாழிடங்களில் இருப்பவை. அவை தோற்றத்தால் ஒன்றி இருந்த போதிலும் தங்களது வாழிடங்களின் அருகாமையில் இருக்கும் இனங்களுடன் மட்டுமே இனப்பெருக்கம் செய்யக்கூடியவை.(5) அதை பின் வரும் படம் தெளிவாக விளக்கும் 


       மேற்குறிபிட்ட பல்லி இனமான (Ensatina Eschscholtzii) தனக்குள்ளே 7 சிற்றினங்களை கொண்டிருக்கிறது. இவை கலிஃபோர்னியாவை சுற்றி தங்களது வாழிடங்களை கொண்டுள்ளன. அவற்றில் ‘B’ என்ற சிற்றினம் ‘A’ மற்றும் ‘C’ சிற்றினங்களுடன் இனபெருக்கம் செய்கின்றன. ஆனால் இதர சிற்றினங்களுடன் இனபெருக்கம் செய்வதில்லை. இதே போன்று தனது அருகாமை சிற்றினங்களுடன் ஒவ்வொரு சிற்றினங்களும் இனப்பெருக்கம் செய்கின்றன A மற்றும் G ஐ தவிர. இங்கு உயிரியல் இனக்கருத்தில் என்ன சிக்கலென்றால், இவற்றை எப்படி தனி இனமாக பிரிபபது என்பதில்தான். உதாரணமாக ‘B’ ஐ ‘D' ல் இருந்து தனித்த இனமாக கொண்டால், ‘C’ ஐ ‘B’ல் சேர்பதா? ‘D’ ல் சேர்பதா? ஆக இனப்பெருக்க தனிப்படுத்தல் (Reproduvtive Isolation) அடிப்படையில் பிரிக்கும் போது இது போன்ற வளைய இனங்களை வகைபடுத்த இயலாது.(பின்வரும் தொடர்களில் இது குறித்து ஆதாரங்கள் பட்டியலில் தெளிவாக காணவிருக்கிறோம்)
3.கலப்பு இனங்கள்: இவற்றை மனிதன் பலகாலமாக வீட்டு வளர்ப்பில் செய்து வருகிறான். உதாரணமாக கோவேறு கழுதைகள். இவை கழுதைக்கும் , குதிரைக்குமான இனக்கலப்பு. இவ்வாறு குதிரை , கழுதை போன்ற உயிரினங்களை எந்த இனத்தில் சேர்ப்பது??? என்ற சிக்கலை இனப்பெருக்க தனிப்படுத்தல் அடிப்படையில் எவ்வாறு பாகுபடுத்த இயலும்.
            மேலும் பால்முறையினின்றும் தனித்துள்ள(asexual) இனப்பெருக்கம் செய்யும் உயிர்களை இனப்பாகுபாடுபடுத்தல் சாத்தியமற்றதாகி விடும். ஆக இது போன்ற மேற்குறிபிட்ட சிக்கல்கள் இந்த இனப்பெருக்க தனிப்படுத்தல் அடிப்படையிலான உயிரியல் இனப்படுத்தலை பொதுமை படுத்த இயலாமல் தடுத்து விடுகின்றது. 

இனத்தோற்ற வரலாறு அடிப்படையிலான இன கருத்து:

                   நாம் முற்பகுதியில் விளக்கியது போல் படிமங்களில் இனப்பாகுபாடு செய்வது உயிரியல் இன கோட்பாட்டின் அடிப்படையில் சாத்தியமற்றது. ஆக மீண்டும் உருவவியல் அடிப்படையிலான பாகுபாட்டைத்தான் படிமங்களில் மேற்கொள்ளவியலும். ஆக இனப்பெருக்க தனிப்படுத்தல் தடைகள் அடிப்படையில் உயிர்களின் தொகுதியை பிரிக்காமல், எந்த மூதாதையில் இருந்து இனங்கள் பிரிகின்றன என்ற கருத்தின்????? அடிப்படையில் இனங்களை பிரிப்பதாகும். இனத்தோற்ற வரலாறு அடிப்படையிலான இன கருத்து என்பது பின்வருமாறு கூறுகிறது:
ஒரு இனம் என்பது ஒரு சிறு ஜனத்தொகையிலான உயிரினம், அவற்றின் மூதாதைகளும் வழித்தோன்றல்களும் ஒரு குறிப்பிட்ட பெற்றோர் வழியிலான குணங்களின் தொகுப்பின் அடிப்படையில் வகைப்படுத்தக் கூடியவையாக இருக்கும்.(6)
            ஆக படிமங்களை பொருத்தவரை வகைப்படுத்தும் வகையில் இருக்கும் குணம் என்பது தோற்றம் மற்றோன்று மரபியல். இதில் மரபியல் குறிபிட்ட காலத்திற்குள்ளான படிமங்களில் மட்டுமே சாத்தியம். ஆக தோற்றம் என்பது இதில் முக்கிய பங்கு வகிப்பதாய் இருக்கிறது. ஆக ஒரு படிமத்தின் உருவ அமைப்பு மற்றும் குணம் ஆகியவற்றில் இருக்கும் ஒற்றுமையின் அடிப்படையில் அவை தனித்தொகுதியாக பிரிக்கப்படுகிறது. அவற்றிற்கு அடிப்படை அளகாக பின் வரும அளவுகொல்கள் முன்வைக்கப்படுகிறது

1.தனித்த பெற்றோர் வழி குணங்களையும். உருவ அமைப்பை கொண்டு இருக்கும் மூதாதைகளையும் வழித்தோன்றல்களையும் பெற்றிருக்க வேண்டும்

2.வகைப்படுத்தலை சிறிய ஜனத்தொகையிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
                       ஆக இத்தகைய வகைபடுத்தலுக்கு ஆதாராமாய் பல இனங்களின் உருவவியல் மற்றும் வெளித்தெரியும் குணங்கள் கொள்ளப்படும். உதாரணமாக எடுத்துக்கொண்டால் ஒரு படிமம் மரத்தில் வாழும் குரங்கினத்தினுடையதா என்பதை ஆய்வு செய்ய பின்வரும் அடிப்படை அளகுகளை தொல்மானிடவியலாளர்கள் (Paleoanthropologist) முன்வைக்கின்றனர்

1.மிக வலிமையான கைகள் மற்றும் கால்கள்.

2.குறைந்த உடல் எடை

3.விலகிச்செல்லும் பெருவிரல்கள் கைகளிலும் கால்களிலும் பக்கவாட்டில் நன்கு அசையக்கூடியதாய் இருப்பது, அதனால் மரக்கிளைகளை கைகளைப்போன்றும் கால்களினாலும் கவ்வி பிடிக்க ஏதுவாக இருக்கும்.

4.தனித்த பெரிய வால்கள் மரத்தில் தொங்க ஏதுவாக...

5.மனிதர்களை போல் அல்லாமல் கைகள் கால்களை விட நீளமானதாய் இருப்பது. இதன் மூலம் கைகளினால் மரக்கிளைகளை பிடித்து தொங்கவும், நான்கு கால்களால் நடக்கவும் ஏதுவாக இருக்கும்.
இதுபோன்ற சில குணக்களின் அடிப்படையில் இவை மரத்தில் வாழும் குரங்கினம் என்று தரப்படுத்திவிடுவார்கள்.

                மேற்குறிபிட்ட இந்த இனப்படுத்துதல் முறை படிமங்களில் சிறந்த முறையாக இருந்தாலும் இது முழுமையான இன கருத்து அல்ல. நாம் முன்பே கண்டது போல உருவவியல் அடிப்படையிலான இனப்படுத்துதலில் என்ன சிக்கல் இருந்ததோ அதே சிக்கல் இதிலும் இருக்கிறது. உதாரணமாக தூண்டில் மீனின் படிமமே கிடைக்கிறது என்று கொள்வோம். அதில் ஆண் மீனை தனி இனமாகவும், பெண் மீனை தனி இனமாக கொள்ளும் நிலையே ஏற்படும். அதனால் தான் நமது சமகால மானுடவியல் ஆராய்ச்சியாளரான ஜான் ஹாவ்க்ஸ் குறிப்பிடும் போது நீள மூக்குடைய ஐரோப்பியர்களின் படிமங்களும், கனமான புருவ விழும்புகள் இருக்கும் ஆஸ்திரேலியர்களின் படிமங்களும் தனித்தனியாக வேறு வேறு கண்டங்களில் கிடைக்க நேரிடும் போது, இந்த இனக்கருத்தின் அடிப்படையில் ஆய்வு செய்யும் ஆய்வாளர், அந்த இரண்டு படிமங்களை வேறு வேறு இனத்தினது என பிரித்துவிடுவார் எனக்குறிப்பிடுகிறார்.(7)



    இதன் அடிப்படையில் இந்த இரண்டு இனத்திற்கும் இடையில் இனப்பெருக்கம் நடந்தற்கான சான்று பின்னாளில் கிடைத்தால் ஐரோப்பிய-ஆஸ்திரேலிய ஹைபிரிட் என்றும் கூறிவிடுவார்கள் போலும். இதனால்தான் சமீபத்தில் கூட இது போன்ற ஒரு செய்தியை நாம் காண நேர்ந்த்து. 1856ல் நியாண்டர்தால்களின் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல் 2010ல் டெனிசோவன் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் உருவ அமைப்பின் அடிப்படையில் இவை வேறு வேறு இனத்தை சேர்ந்த உயிரினங்கள் என அறிவித்தனர். 2012ல் டெனிசோவன் குகைகளில் ஒரு பெண்ணின் கால் எழும்புதுண்டு கிடைத்தது. இதனை மரபியல் சோதனை செய்ததில் இது நியான்டர்தால் மற்றும் டெனிசோவன் இனக்கலப்பு என 2018 ஆகஸ்டில் அறியப்பட்டது(8). இந்த இடத்தில் ஒரு விசயத்தை நினைவு படுத்த வேண்டியுள்ளது. அதாவது ஒரு ஆசியருக்கும் , ஐரோப்பியருக்கும் இருக்கும் மரபியல் வேறுபாடு நியாண்டர்தாலுக்கும் நவீன மனிதனுக்கும் இருக்கும் மரபியல் வேறுப்பாட்டிற்கு ஒத்த ஒன்று. ஆக உருவவியல் அடிப்படையில் படிம பாகுபாடு செய்வதை சரிகாணும் போது சில நேரத்தில் ஒரே இனத்தை சார்ந்த ஆசிய ஐரோப்பியர் போன்ற சிறு பாகுபாட்டைக்கூட வேறு வேறு உயிர் இனங்களாக வகைப்படுத்தும் நிலை ஏற்படும். மேலும் இதில் இருக்கும் ஆய்வாளர்கள் இருவகையானவர்களாக இருக்கிறார்கள். சிலர் ஒன்று படுத்துபவர்கள். ஒரு குணத்தின் அடிப்படையில் ஒரு படிமத்தை முன்பே அறியப்பட்ட இனத்துடன் இணைத்துவிடுவார்கள். சிலர் இவற்றை வேறு இனமாக அறிவிக்க அதாவது புது இனத்தின் படிமத்தை தான் கண்டுபிடித்தாக காட்ட பெரும் முனைப்பும் ஆராய்ச்சியும் செய்வார்கள். ஆக படிமங்களை இனப்பாகுபடுத்தி இவற்றின் மூதாதை இது என பாகுபாடு படுத்துவதெல்லாம் தோராயமானவைதான், மாற்றத்திற்கு உட்பட்டது. இந்த நிலையில் இருக்கும் ஆவணங்கள் எப்படி பரிணாமத்தை உறுதி படுத்தும். ஆக ஆதாரமாகக் கொள்ளும் படிமங்களே தீர்கமானதாய் இல்லை என்றால் இதன் அடிப்படையில் அமையும் பரிணாமக்கோட்பாடு யூகமாக இல்லாமல் எப்படி இருக்கும்.

மனித பேரினத்தின் (Genus: Homo) மூதாதை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதா????? 

             பரிணாமவியலாளர்களின் ஆதாரங்களை தனிப்பட்டியலாக அவற்றின் குறைகளையும் எதிர்கருத்துகளையும் இந்த தொடர்களின் இறுதியில் தருவதாகவே நாம் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இந்த இடத்தில் இந்த கருத்தின் செரிவு மற்றும் அதனை தெளிவு படுத்த பரிணாமவியலாளர்கள் எடுத்து வைக்கும் மனித படிம ஆய்வு குறித்து இங்கு விளக்க வேண்டியுள்ளது. அதாவது ஆஸ்ட்ரலோபிதிகஸ் எனும் படிமத்தையும் இன்னும் பிற படிமங்களையும் காட்டி இது மனிதன் எனும் பேரினத்தின் மூதாதை என நிறுவ தொடர் முயற்சிகள் நடந்து வருகிறது. மேற்குறிபிட்டவாறு சில படிம எழும்பு கூடுகளுக்கு பாதி மனிதன்(Paranthrropos) என்று எல்லாம் பெயரிட்டு வருகின்றனர். இவ்வாறு கூறப்படும் படிமங்கள் கண்டுபிடிக்கப்படுவது, அவற்றிற்கு இது போன்ற பெயர்கள் சூட்டுவதும், அதை மனித மூதாதை என கதையளப்பதும் வாடிக்கைதான். அதேபோல் பல ஆண்டு ஆய்வுகளுக்கு பின்னர் இல்லை என கைகளை விரிப்பதும் தொடர்கதையாகிவிட்டது. ஆனால் இன்றுவரை மனித இனத்தின் மூதாதை என்று எந்த படிமமும் கண்டறியப்படவில்லை என்பதுதான் தற்போதைய நிலவரம். அது குறித்த ஒரு விளக்கபடம் இதோ(9).


                 அதே போல் மனிதன்(Homo) மற்றும் குரங்கு(Pongidae) ஆகியவற்றை தோற்றுவித்த அந்த பொது மூதாதையும் இன்றளவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி ஒரு மூதாதையின் படிமம் கிடைக்கும் என்ற கனவில் அத்தகைய படிமம் கிடைக்கும் போது அதற்கு என்ன பெயர் (Pan Prior)வைக்க வேண்டும், அதன் வகைபடுத்தல் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்து காத்திருக்கிறது பரிணாமவியல் உலகம் என்பது அதிகப்படியான தகவல்.(10)

                    மேற்குறிபிட்ட இன கருத்துக்கள் இல்லாமல் இன்னும் பல கருத்துகள் இருக்கின்றன. இது போன்ற இனக்கருத்துக்கள் தோராயமாக 26 இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆக எர்ணஸ்ட் மைர் கூறுவது போல் இனம் என்றால் என்ன என்பதை வரையறை செய்வதில் இருக்கும் அவசியம் அதன் இயங்கியலான இனப்பிரிகை குறித்த ஒத்த கருத்தை உருவாக்கத்தான். இனப்பிரிகையின் இயங்கியல்தான் பரிணாம கோட்பாட்டின் அடிப்படையே. ஆனால் உயிர் இனங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறையில் ஏனைய உயிர் இனங்களுடன் ஒன்றி இருக்கின்றன. அது போல் வேறு படுகின்றன. இது தான் இனங்கள்,இவைதான் இனத்தின் குணங்கள் என வகுக்காமல் அதன் இயங்கியல் எது என வகுப்பது இயலாத காரியம். சிலர் உருவவியலை முன்னிறுத்துகின்றனர், எர்ணஸ்ட மைர் போன்ற சிலர் இனப்பெருக்க பிரிவினைகளை முன்வைக்கின்றன. ஆனால் இவை இரண்டுமே முழுமையாக இனங்கள் குறித்து விளக்க போதுமானதாக இல்லை என்பதே இக்கட்டுரையில் மேலே விளக்கப்பட்டுள்ளது. தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை இனத்தின் அடிப்படியாக கொண்டு அதன் இயங்கியலை விளக்க இயலாது (வைஸ்மேன் ஆய்வுகளை நினைவு கூறுங்கள்) என்பதால் எர்ணஸ்ட மைர் போன்ற அறிஞர்கள் இனப்பெருக்க பிரிவினைகள் அடிப்படையிலேயே இனப்பிரிகையின்(Speciation) இயங்கியலை விளக்கவும் முற்பட்டுள்ளனர். ஆனால் நாம் எவற்றை எல்லாம் உயிரியல் இன கருத்தின் அடிப்படையில் வரையறுக்க முடியாது என பட்டியலிட்டோமோ அவற்றின் இனப்பிரிகை இயங்கியலையும் இனப்பெருக்க பிரிவினைகள் அடிப்படையில் விளக்க இயலாது. இவ்வாறு இனம் என்றால் என்ன என விளக்கப்புகுந்ததின் விளைவு இன்று 26. கருத்துக்கள். இனியும் தொடரும் என்பது எமது கணிப்பு. இதன் விளைவாக ஒவ்வொரு உயிரின் இனப்பிரிகைக்கும் ஒவ்வொரு இயங்கியல் என்ற விடைதான் இறுதியில் கிடைக்கும். இவற்றை இன்றைய பரிணாமக்கொள்கை கூறுவது போல் இயற்கை தேர்வு, ஜெனடிக் டிரிஃப்ட், ஜீன் புலோ என சில எண்ணிக்கையில் அடங்கும் இயங்கியலில் இதை அடக்க வியலாது.

            தனது இறுதி இலக்கு எது என்பதிலும், அதை தோற்றுவித்த இயங்கியல் குறித்த பார்வையிலும் காணப்படும் குளறுபடிகளே பரிணாமம் தியரியே அல்ல. அது ஒரு ஊகமே என்பதற்கு போதிய சான்று. இனப்பிரிகையை விளக்கவே இங்கு பெரும் போராட்டமாக இருக்கிறது, அதற்கு மேலுள்ள தரங்களை எப்படி விளக்குவார்கள், அல்லது எப்போது விளக்குவார்கள். அது முடிவடைந்த பிறகே பரிணாமவியல் என்பது முழுமையடைந்த தியரியாகும். அறிவியலின் அடிப்படை இது இப்படித்தான் நடக்கிறது என அறுதியிட்டு கூறுவதே. “எது வேண்டுமென்றாலும் எப்படியும் நடக்கலாம்” என்று ஒரு தியரி கூறுமானால் அது அறிவியல் அல்ல. அத்தகைய ஒரு கொள்கைதான் பரிணாமம் என்பதற்கு இனம் மற்றும் இனப்பிரிகையில் ஏற்பட்டிருக்கும் குழப்பமே போதிய சான்று.

Citations:
1.P.No:59, Chapter iv: Natural Selection, On the Origin of Species by Natural Selection.by Charles Darwin
2.P.No: 114,The New Species Concept, The Systematics and The Origin of Species by Ernst Mayr
3.https://scienceblogs.com/evolvingthoughts/2006/10/01/a-list-of-26-species-concepts
4.P.No: 111- The New Species Concept, The Systematics and The Origin of Species by Ernst Mayr
5.https://evolution.berkeley.edu/evolibrary/article/side_0_0/biospecies_01
6.P.No: 329,Phylogenetic species concept: myths and misrepresentations, Species The units of biodiversity       Edited By M. F. Claridge, H. A. Dawah and M. R. Wilson
7.http://johnhawks.net/weblog/topics/phylogeny/species_concepts.html
8.https://www.nationalgeographic.com/science/2018/08/news-denisovan-neanderthal-hominin-hybrid-             ancient-human/
9.HISTORY AND REALITY OF THE GENUS ‘HOMO’ WHAT IS IT AND WHY DO WE THINK          SO? by Ian Tattersall
10.https://en.wikipedia.org/wiki/Chimpanzee%E2%80%93human_last_common_ancestor

References:
1.On the Origin of Species by Natural Selection.by Charles Darwin
2.The Systematics and The Origin of Species by Earnst Mayr
3.Species The units of biodiversity Edited By M. F. Claridge, H. A. Dawah and M. R. Wilson
4.Handbook of Paleoanthropology by Prof. Dr. Dr. h. c. Winfried Henke, Dipl. Biol. Thorolf Hardt and Prof. Dr. Ian Tattersall
5.HUMAN EVOLUTION: AN ILLUSTRATED INTRODUCTION by Roger Lewin

Sunday, December 9, 2018

தொடர் 3: பரிணாமம் : உண்மையா ஊகமா?

அல்லாஹ்வின் திருப்பெயரால்

                நாம் சென்ற தொடரில் டார்வினிஸத்தின் மாற்றான லாமார்க்கிஸம் மற்றும் அதன் மறுப்பையும் கண்டோம். மேலும் டார்வின் தனது இயற்கை தேர்வு குறித்த புரிதலுக்கு மாற்றான பேஞ்ஜெனிஸிஸ் என்ற கருத்தை முன்வைத்தார் என்பதையும், பார்த்தோம். அதன் காரணமாக கலப்பு பாரம்பரியம் (Heriditary Blending) போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இயற்கைத்தேர்விற்கு அன்று விழிபிதுங்கியதால் ஆர்தோஜெனிஸிஸ் என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. அதாவது உதாரணமாக சிகப்பு நிற பூ இருக்கும் தாவரத்திற்கும் வெள்ளை நிற பூ இருக்கும் தாவரத்திற்கும் இடையே இனச்செர்க்கை ஏற்படும் போது டார்வினின் அன்றைய கருத்தியலான பேன்ஜெனிஸிஸ் அடிப்படையில் இனச்சேர்க்கையில் பிங்க் நிற பூ பூக்கும் தவாரம் கிடைக்க வேண்டும் முடிவாக. ஆனால் அதற்கு மாற்றமாக இரண்டாம் தலைமுறை பூக்கள் சில வெண்மையாகவும், சில சிகப்பாகவும் இருக்கிறது. (இது குறித்த தெளிவு பின்னாளில் கிரிகர் மெண்டலினால் தோன்றியது என்பது வேறு விஷயம். அது குறித்து பின்னாள் வரும் தொடர்களில் இன் ஷா அல்லாஹ் கண்போம்.) இது போன்ற கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் இயற்கை தேர்வு திணறிக்கொண்டிருந்த காலத்தில் ஆர்தோஜேனிஸிஸ் என்ற கருத்தியல் முன்வைக்கப்பட்டது. இன்றும் இந்த கருத்தை ஆதாரிக்கும் பரிணாமவியலாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் நவீன லமார்க்கிஸவாதிகள் என அழைக்கப்படுகிறார்கள்

                  நாம் முதல் தொடரில் கண்டது போல் பரிணாமம் என்பது இரண்டு எதிர் கருத்தியல் பிரிவுகளை ஆரம்ப காலம் முதலே கொண்டிருக்கிறது. இது குறித்த கருத்து மோதல்கள் இரு அணி அறிவியலாளர்களிடமும் (தத்துவவியலாளர்களிடமும்) காலம் காலமாக இருப்பதை பரிணாமவியல் வரலாறு நெடுக காணமுடிகிறது. அவை.
1.இன்றிருக்கும் நவீன டார்வினிஸம் கூறுவது போல் தற்செயல் மாற்றங்களால் உயிர்களில் இனங்கள் தோன்றியது. அதாவது ஒரு இனத்தை சார்ந்த உயிரில் ஏற்படும், எந்த குறித்த நோக்கமும் இல்லாத அதன் உறுப்பு மற்றும் அதன் மரபணுக்களில் ஏற்படும் தற்செயல் மாற்றங்கள், அவை இயற்கை தேர்வினால் தேர்வு செய்யப்பட்டு வேறு  ஓர் இனத்தை தோற்றுவித்ததாக நம்பப்படும் கருத்தியல். உதாரணமாக குரங்கு மற்றும் மனிதனின் இடைபட்ட மூதாதையருக்கு ஏற்பட்ட தற்செயல் மாற்றம் குரங்கினத்தையும் மனித இனத்தையும் தோற்றுவித்தது என்ற வாதம்.

2.முன்முடிவிட்ட முடிவினை (Final Cause) நோக்கிய மாற்றங்களே உயிர்களில் இனங்களை தோற்றுவித்தது. இதனால் உயிர்கள் “பூரணத்துவத்தை (perfection)” நோக்கி நகர்ந்தவாறு இருக்கும். இதனைதான் நாம் இயல்திட்ட வாதம் அடிப்படையிலான கோட்பாடு என்று முதல் தொடரில் கண்டோம். அதாவது ஒவ்வொரு உயிர்களின் அமைப்பிலும் தோன்றும் மாற்றங்கள் பின்னாளில் ஏற்படும் ஏதோ ஒரு இறுதி முடிவுக்கான படிகட்டுகளை போன்றது என்ற கருத்தியல். உதாரணமாக குரங்கில் தோன்றிய ஒவ்வொரு மாற்றங்களும் மனிதன் என்ற இறுதி முடிவை நோக்கியதாகவே இருந்தது. இந்த-இந்த மாற்றங்கள் இப்படி-இப்படி ஏற்பட்டால்தான் அவன் மனிதன் ஆவான் என்ற முன்முடிவு எடுக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே மாற்றங்கள் தோன்றின என்ற வாதம். இத்தகைய இயல்திட்ட வாதத்தின் அடிப்படையில் அமைந்த கோட்பாடுதான் ஆர்த்தோஜெனிஸிஸ் ஆகும்.

               இந்த கருத்தியலும் இதன் விமர்சனத்தையும் இந்த தொடரில் காண்போம் இன்ஷா அல்லாஹ்.

ஆர்தோஜெனிஸிஸ் (Orthogenesis): 


    இந்த வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் ஜெர்மன் விலங்கியலாளரான தியோடர் அய்மர் (1843- 1898) (Theodore Eimer) ஆவார். இவர் தனது புத்தகமான “Organic Evolution as the Result of the inheritance of Acquired Characteristics according to the Laws of Organic Growth (Translated in English- 1890)” ல் முதன்முதலில் ஆர்தோஜெனிஸிஸ் (Orthogenesis) என பயன்படுத்தினார். இவரும் ஆர்தோஜெனிஸிஸ் ஆதாரவாளர்தான். ஆயினும் இவர் இயற்கை தேர்வு உள்ளிட்டவற்றை இணைத்து கலவை கோட்பாட்டை முன்வைக்கிறார். ஆக ஆர்தோஜெனிஸிஸ் என்ற பெயர்தான் புதிதே தவிர இந்த கருத்தியல் நாம் குறிபிட்டது போல் முன்பே இருந்த கருத்தியல்தான். மேலும் ஆர்தோஜெனிஸிஸ் ஆதரவாளர், அய்மரின் சமகாலத்தில் வாழ்ந்த, புகழ் பெற்ற தாவரவியலாளரான கார்ல் வில்கம் வான் நகேலி( Carl Wilhom von Nagaeli) 1884ல் உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்கு உயிர்களில் இருக்கும் உள்ளார்ந்த தோற்றுவாயே(internal Causes) காரணம் எனும் வாதத்தை முன்வைத்தார் . ஒருமுறை இந்த செய்லபாட்டினால் உயிர்கள் மாற்றம் அடைய துவங்கிவிட்டால் அவை பூர்ணத்துவத்தை நோக்கி மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். இதனை ஆர்தோஜெனிஸிஸ்டகள் “Trend” என அழைக்கின்றனர். ஆக இவ்வாறான மாற்றங்கள் நேர்கோட்டில் அமையப் பெற்றிருக்கும். 
  
     மேலும் படிம ஆராய்ச்சியளர்களான ஆல்ஃபியஸ் ஹயாட்(1838-1902), எட்வர்ட் கோப் (1840- 1897) போன்றவர்கள் குதிரைகளின் படிமங்களை ஆய்வு செய்துவிட்டு குதிரைகளின் மூதாதைகள் நேர்கோட்டில் பயணித்தே இன்றிருக்கும் நிலையை அடைந்திருக்கின்றன என்ற கருத்தை முன்வைத்தனர். மேலும் சீரற்ற மாறுபாடுகளால்(Random variation) இது சாத்தியம் இல்லை என வாதிட்டனர். மேலும் அன்றைய படிமவியலாளர்கள் இந்த கோட்பாட்டை ஆதரிக்க மூல காரணம் இடைநிலை உயிர்களின் (Transitional Organism) படிமங்கள் இல்லாமையே. மேலும் படிம ஆவாணங்கள் குறித்து டார்வின் தனது உயிரினங்களின் தோற்றத்தில் குறிப்பிடும் போது பூமியின் மேற்பரப்பில் இத்தகைய இடைநிலை உயிர்களின் படிமங்கள் குவிந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லையே” என்கிறார்.(origin of Species by Natural selection: Difficulties on theory. P.No: 124). மேலும் இத்தகைய வாதங்களின் அடிப்படையில் தான் குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. 
      ஆனால் இது குறித்து அய்மர் விளக்கும் போது, “ கீழுள்ள உயிர்கள் பரிணமித்து மேலுள்ள உயிர்களை தோற்றுவித்தது என்றால் கீழுள்ள உயிர்கள் இருக்கக்கூடாது . ஆனால் யதார்த்தம் அதுவல்ல.” என்று மறுக்கிறார். உதாரணமாக குரங்கில் இருந்து மனிதன் வந்திருந்தால் குரங்கு இன்றிருக்கக்கூடாது. ஆனால் அது நிதர்சனத்திற்கு மாற்றமாக இருக்கிறது. ஆக அய்மரை பொறுத்தவரையில் நகேலியின் வாதம் என்பது பொருள்முதல் வாத தோல் போர்த்திய உயிர்த்திறவாதம்(vitalism) மற்றும் மாயவாதம்(Mysticism)”
        மேலும் இந்த கருத்தியல் குறித்து நமது சம கால அறிஞரான ஏர்ண்ஸ்ட் மைர் குறிப்பிடும் போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

1. உள்ளார்ந்த இயக்கம் அல்லது தோற்றுவாய் என்பது எது என்று விளக்கப்படவில்லை. அல்லது விளங்கமுடியவில்லை. ஆக இயங்கியல் அறியப்பட முடியாது .ஆக ஆர்த்தோஜெனிஸிஸ் மறுக்கப்படுகிறது.

2. படிமங்களை பொறுத்தவரையில் அதன் பயணத்திசை ஆர்த்தோஜெனிஸிஸை பொறுத்தவரை நேர்கோட்டில் இருக்க வேண்டும். ஆனால நிதர்சனத்தில் அதற்கு மாறாக முன்னோக்கி, பின்னோக்கி என அனைத்து திசைகளிலும் இருக்கிறது, ஆக ஒரு உயிரின் படிம அடிப்படையில் ஆர்த்தோஜெனிஸிஸை நிலை நிறுத்தமுடியாது.

    மேலும் ரிச்சர்ட் டாக்கின்ஸ் கூறும் போது: பெறப்பட்ட குணங்களில் பெறும்பாலானவை பாதிப்புகளே. ஆக உயிர்கள் பூர்ணத்துவத்தை நோக்கி நகர்கின்றது என்ற ஆர்த்தோஜெனிடிக் வாதம் சாத்தியம் அற்றது. என்று தனது “The Blind watchmaker: Doomed Rivals P.No: 216 " விளக்குகிறார்.
   
   மேலும் இத்தகைய தகவமைப்பு இயங்கியல் எங்கிருந்து வந்தது போன்ற பல அர்த்தமுள்ள கேள்விகளுக்கு ஆர்த்தோஜெனிடிக் ஆதாரவாளர்களால் போதிய விளக்கம் அளிக்க முடியாமல், இறையியல் மற்றும் இயல்திட்ட வாதத்திடம் மண்டியிட நேர்ந்ததால் ஆர்த்தோஜெனிஸிஸும் அறிவியல் ஊகமா பரிணமித்துவிட்டது...........

  சென்ற இரண்டு தொடர்களில் லாமார்கிஸம் மற்றும் ஆர்த்தோஜெனிஸிஸ்( நவீன லாமார்க்கிஸம்) இரண்டிற்கான மறுப்பையும் கண்டோம். அந்த மறுப்புக்கட்டுரையின் சாரத்தை இங்கு பதிந்துவிடுவோம். 


1. லாமார்க்கின் சந்ததிகளில் தோன்றும் பெறப்பட்ட குணங்கள்    (Inheritance of acquired characters) என்ற கோட்பாடு வைஸ்மேனின் ஆய்வுகளால் வீழ்த்தப்பட்டது. இன்னும் தெளிவாக கூறுவதென்றால் பாரம்பரிய குணங்கள் உயிரணுக்களில் இருந்து விந்து, முட்டை சேர்க்கையின் போது கருவின் (சொமாடிக் செல்களுக்கு) ஏனைய உடல் செல்களுக்கு செல்லுமே தவிர அதன் எதிர் திசையில் அதாவது உடலின் ஏனைய செல்களில் இருந்து விந்து மற்றும் கருமுட்டைக்கு தகவல் பரிமாற்றம் நடக்காது என நிறுவினார். அதே போல் இந்த தலைமுறையின் உயிரணுத்தகவலை அடுத்த தலைமுறையின் உயிரணுக்கள் தாங்கி நிற்கும் என்ற கருத்தை தனது ஆய்வின் மூலம் நிறுவினார்.

2. ஆர்த்தோஜெனிஸிஸை பொறுத்தவரையில் அதில் இருக்கும் உள்ளார்ந்த தோற்றுவாய் எனும் இயங்கியல் புலப்படவில்லை. இது பொருள் முதல்வாத தத்துவத்திற்கு முற்றிலும் மாறானது. கண்ணுக்குத்தெரியாத , விளக்கமுடியாத, அளவிடமுடியாத இயங்கியலை(Mechanism) அடிப்படையாக கொண்ட எந்த கோட்பாட்டையும் பொருள் முதல்வாதம் ஏற்காது. அது அறிவியலுக்கு பொருந்தாதது என வாதிக்கும்.

3. பூரணத்துவத்தை நோக்கி ஒவ்வொரு உயிரும் மாற்றம் அடைந்திருந்தால் மூதாதைகள் காணாமல் போயிருக்கும். ஆனால் அவை இன்றும் இருக்கிறது. இதன் காரணத்தினால்தான் இல்லாத, எந்த படிமத்திலும் காணமுடியாத மனிதனுக்கும் குரங்கிற்கும் மூதாதையாய் இருந்த இடைநிலை உயிரினத்தை இன்றும் நவீன டார்வினிஸ்ட்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை புரியமுடிகிறது.

4. ஒரு சில உயிர்களின் படிம ஆவணங்கள் அடிப்படையில் எல்லாம் ஆர்த்தோஜெனிஸிஸ் போன்ற கோட்பாடுகளை சரிகாண முடியாது. ஏனென்றால் படிமங்கள் எல்லா கருத்தையும் தரும்படியாகவே உள்ளன. ஆக இடை நிலை உயிரினங்களின் படிமங்கள் கிடைக்கபெறாதவரை திடிரென உயிர்கள் தோன்றின எனவும் அதை அடிப்படையாக கொண்டு வாதிக்கலாம். ஆக இது படிம ஆவணங்களின் பலவீனமான நிலையை நமக்கு உணர்த்துகிறது.

5. மேலும் பெறப்பட்ட குணங்களில் பெறும்பாலானவை பாதிப்புகளே. ஆக உயிர்கள் பூரணத்துவத்தை நோக்கி நகர்கின்றது என்ற வாதம் சாத்தியம் அற்றது.
        மேற்குறிப்பிட்ட தொகுப்பை நாம் நன்றாக கவனித்து உள்வாங்கிக்கொள்ள வேண்டும் இத்தகைய வாதங்களை நவீன டார்வினிஸ்டகளும் முன்னெடுக்கின்றனர். இவர்கள் எதன் அடிப்படையில் ஏனைய கோட்பாடுகளை மறுக்கின்றனரோ அதே அடிப்படையில் இவர்கள் முன்வைக்கும் பல ஆதாரங்கள் தகர்க்கப்படும், வரும் தொடர்களில் இன் ஷா அல்லாஹ்.


References:
1.What Evolution is? by Ernst Mayr
2.Evolution by Mark Ridley
3.Genesis: The Evolution of Biology by Jan Sapp
4.The Blind WatchMaker by Richard Dawkins
5.Origin of Species by Natural Selaction by Charles Darwin