அல் குர் ஆன் 65:4 குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறதா
وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِن نِّسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًاமேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாய் ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.
மேற்குறிப்பிட்ட வசனம் மூன்று சாரார் குறித்து பேசுகிறது:
1.வயதாகி மாதவிடாய் ஏற்பாடாத பெண்கள்2.மாதவிடாய் ஏற்படாத பெண்கள்
3.கர்பிணி பெண்கள்
அவதூறு பரப்பிகளின் வாதமும் நமது பதிலும்:
وَاللَّائِي لَمْ يَحِضْنَ
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا يَحْيَى بْنُ مُحَمَّدٍ الْعَنْبَرِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ السَّلَامِ، ثنا إِسْحَاقُ، أَنْبَأَ جَرِيرٌ، عَنْ مُطَرِّفِ بْنِ طَرِيفٍ، عَنْ عَمْرِو بْنِ سَالِمٍ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: " لَمَّا نَزَلَتِ الْآيَةُ الَّتِي فِي سُورَةِ الْبَقَرَةِ فِي عَدَدٍ مِنْ عَدَدِ النِّسَاءِ قَالُوا: قَدْ بَقِيَ عَدَدٌ مِنَ النِّسَاءِ لَمْ يُذْكَرْنَ الصِّغَارُ وَالْكُبَّارُ، وَلَا مَنِ انْقَطَعَتْ عَنْهُنَّ الْحَيْضُ، وَذَوَاتُ الْأَحْمَالِ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْآيَةَ الَّتِي فِي سُورَةِ النِّسَاءِ {وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَنْ يَضَعْنَ حَمْلَهُنَّ} [الطلاق: 4] «صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ»
[التعليق - من تلخيص الذهبي]
உபை இப்னு கஃப் (ரலி) கூறியதாவது " பெண்களின் இத்தா குறித்து அல் பகராவின் இத்தா குறித்த ஆயத் இறங்கிய போது சிலர் கேட்டார்கள்: " பெண்களின் இத்தா குறித்து கூறப்பட்டதில் சிலர் விடுபட்டுள்ளனர். (மாதவிடாய்) அற்றுப்போனதால் மாதவிடாய் ஏற்படாத குமரியும், கிழவியும், மேலும் கற்பிணிப் பெண்களும் இருக்கிறார்களே??”. அப்போது அல்லாஹ் அந்த பெண்கள் குறித்து இந்த ஆயத்தை இறக்கினான் மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் பெண்களுக்கும், 'இத்தா'(வின் தவணை) மூன்று மாதங்களாகவும், தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய ('இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும், மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.(65:4) (முஸ்தத்ரக் அல் ஹாக்கிம் ஹதீஸ் என் 3821),
لِقَوْلِ الله تَعَالَى واللائي لم يحضن فَجَعَلَ عِدَّتَهَا ثَلَاثَةَ أَشْهُرٍ قَبْلَ الْبُلُوغِ أَيْ فَدَلَّ عَلَى أَنَّ نِكَاحِهَا قَبْلَ الْبُلُوغِ جَائِزٌ وَهُوَ اسْتِنْبَاطٌ حَسَنٌ لَكِنْ لَيْسَ فِي الْآيَةِ تَخْصِيصُ ذَلِكَ بِالْوَالِدِ وَلَا بِالْبِكْرِ وَيُمْكِنُ أَنْ يُقَالَ الْأَصْلُ فِي الْأَبْضَاعِ التَّحْرِيمُ إِلَّا مَا دَلَّ عَلَيْهِ الدَّلِيلُ وَقَدْ وَرَدَ حَدِيثُ عَائِشَةَ فِي تَزْوِيجِ أَبِي بَكْرٍ لَهَا وَهِيَ دُونَ الْبُلُوغِ فَبَقِيَ مَا عَدَاهُ عَلَى الْأَصْلِ وَلِهَذَا السِّرِّ أَوْرَدَ حَدِيثَ عَائِشَةَ قَالَ الْمُهَلَّبُ أَجْمَعُوا أَنَّهُ يَجُوزُ لِلْأَبِ تَزْوِيجُ ابْنَتِهِ الصَّغِيرَةِ الْبِكْرِ وَلَوْ كَانَتْ لَا يُوطَأُ مِثْلُهَا إِلَّا أَنَّ الطَّحَاوِيّ حكى عَن بن شبْرمَة مَنعه فِيمَن لَا تُوطأ وَحكى بن حزم عَن بن شُبْرُمَةَ مُطْلَقًا أَنَّ الْأَبَ لَا يُزَوِّجُ بِنْتَهُ الْبِكْرَ الصَّغِيرَةَ حَتَّى تَبْلُغَ وَتَأْذَنَ وَزَعَمَ أَنَّ تَزْوِيجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَائِشَةَ وَهِيَ بِنْتُ سِتِّ سِنِينَ كَانَ مِنْ خَصَائِصِهِ وَمُقَابِله تجوير الْحَسَنِ وَالنَّخَعِيِّ لِلْأَبِ إِجْبَارِ بِنْتِهِ كَبِيرَةً كَانَتْ أَوْ صَغِيرَةً بِكْرًا كَانَتْ أَوْ ثَيِّبًا
அல்லாஹ் கூறுவதான "واللائي لم يحضن” - மாதவிடாய் ஏற்படாதவர்கள்" என்பது வயதுக்கு வராதவர்களையே குறிக்கும். மற்றொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் இது பருவ வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்யலாம் என்பதை குறிப்பதாக உள்ளது. இது சிறந்த முடிவுதான். ஆயினும் இதில் அதிகாரம் யாருக்கானது என்பது குறித்து இந்த ஆயத் நிறுவவில்லை தந்தைக்கானதா அல்லது இளம் பெண்ணுக்கானதா என்று இல்லை. இன்னும் கூறுவதாக இருந்தால் இதன் அடிப்படை சட்டம் என்னவென்றால், ஆதாரம் எவற்றை கூறுகிறதோ அவற்றை தவிர்த்த மற்றவை தடுக்கப்பட்டவை என்பதே ஆகும். ஆயிஷா(ரலி) அவர்களை பருவமடைவதற்கு முன்பே அபூபக்ர்(ரலி) திருமணம் செய்வித்தார்கள் என்ற ஆயிஷா(ரலி) அறிவிக்கும் ஆதாரத்தை தவிர வேறு ஏதும் இல்லாதாதால் அந்த சட்டம் அனைத்திலும் பொருந்தும்.(அதாவது வயதுக்கு வருவதற்கு முன்பு திருமணம் செய்விக்கலாம் ஆனால் உறவு கொள்ளக்கூடாது). இதை ஏற்று இதில் நிலைத்திருப்பதால்தான் ஆயிஷா(ரலி) அவர்களது ஹதீஸை அதில் குறிப்பிடுகிறார். அல் முஹல்லப் கூறுவதாவது: மகள் குழந்தையாக இருக்கும் போதே தந்தை திருமணம் செய்விக்கலாம் ஆனால் மேற்குறிபிட்ட உதாரணத்தின் படியே அமையாவிட்டால் அது ஏற்கப்படாது என்பது அனைவரும் ஏற்ற ஒன்று,இதற்கு மாறாக "இப்னு சுப்ருமா, வயதுக்கு வராதவரை திருமணம் செய்விப்பதை தடுத்தார்கள்" என்று தகவி குறிப்பிடுகிறார், இப்னு ஹஸம் குறிப்பிடுவதாவது இப்னு சுப்ருமா, "மகள் பருவவயதை அடைந்து அனுமதி வழங்கும் வரை தந்தை திருமணம் செய்விக்ககூடாது. ஆயிஷா(ரலி) 6 வயதாக இருந்த போது நபி(சல்) அவர்கள் திருமணம் செய்தது என்பது அவர்களுக்கு மட்டுமே உரிய சலுகையாகும்" என்று கூறுகிறார். அல் ஹஸன் மற்றும் அன் நகயீ ஆகியோர் கொண்டிருக்கும் மகள் சிறுமியாகவோ பெரியவளாகவோ இருந்தாலும் சரி, கண்ணியாகவோ விதவையாகவோ இருந்தாலும் சரி (திருமணம் செய்விக்க) வற்புறுத்தலாம் என்ற கருத்திற்கு மாற்றமாக (இப்னு சுப்ருமா) கூறுகிறார்கள்.(பாடம்: قَوْلُهُ بَابُ إِنْكَاحِ الرَّجُلِ وَلَدَهُ الصِّغَارَ ; ஃபத்ஹுல் பாரி 9/19 ஹதீஸ் எண் 5132)
عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَليه وسلَّم، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَليه وسلَّم كَانَ يُبَاشِرُ المَرْأَةَ مِنْ نِسَائِهِ وَهِيَ حَائِضٌ إذَا كَانَ عَلَيْهَا إزَارٌ يَبْلُغُ أَنْصَافَ الفَخِذَيْنِ أَوْ الرُّكْبَتَيْنِ مُحْتَجِرَةً بِهِ. حَدَّثَنَا وَكِيعٌ عَنْ الرَّبِيعِ عَنْ الحَسَنِ قَالَ: لاَ بَأْسَ إنْ بَلَغَتْ عَلَى بَطْنِهَا وَبَيْنَ فَخِذَيْهَا.
'நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்" என 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்கள். ஹசன் அல் பஸரி(ரஹ்) “ அவள் பூப்பெய்தியிருந்தால் அவளது வயிற்றிலோ, தொடையின் மீதோ கட்டியணைப்பது தவறல்ல" என்று கூறுகிறார்கள்.(முஸன்னஃப் இப்னு அபி ஷைபா 16832.16833)
وَاعْلَمْ أَنَّ الشَّافِعِيَّ وَأَصْحَابَهُ قَالُوا وَيُسْتَحَبُّ أنْ لَا يُزَوِّجَ الْأَبُ وَالْجَدُّ الْبِكْرَ حَتَّى تَبْلُغَ وَيَسْتَأْذِنُهَا لِئَلَّا يُوقِعَهَا فِي أَسْرِ الزَّوْجِ وَهِيَ كَارِهَةٌ
இமாம் ஷாஃபி மற்றும் அவரது சஹாக்கள் பருவமடையாத பெண்ணை, அவளது உடன்பாடில்லாமல் தந்தையோ பாட்டனாரோ திருமணம் செய்விப்பதை ஊக்குவிப்பதில்லை, அதனால் அந்த பெண் விரும்பாத கணவனிடம் சிக்கிக்கொள்வாள் என்கின்றனர்.(அந்நவவீயின் சரஹ் சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்:1422)
أجمع العلماء على أنه يجوز للآباء تزويج الصغار من بناتهم، وإن كن فى المهد، إلا أنه لا يجوز لأزواجهن البناء بهن إلا إذا صلحن للوطء
அறிஞர்கள் தந்தை தனது இளம் பெண்ணை தொட்டிலில் இருக்கும் போதே திருமணம் செய்விக்க முடியும். ஆனால் அவர்கள் உறவுக்கான பாதுகாப்பான தகுதியை அடையும் வரை அவர்களது கணவர்கள் அவர்களுடன் உறவு கொள்ள இயலாது என்பதில் ஒத்த கருத்தில் உள்ளனர். (அந்நவவீயின் சரஹ் சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண்:1422)
1.பெண்கள் பூப்பெய்ததும்தான் திருமணம் செய்விக்க வேண்டும். இந்த கருத்தைத்தான் நாமும் வலியுறுத்துகிறோம். அதை சென்ற தொடரில் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் மூலம் நிறுவியுள்ளோம். இந்த கருத்தை இமாம் ஷாஃபியீ, இப்னு ஹஸம், அத்தகவீ, இப்னு சுப்ருமா போன்றவர்கள் கொண்டிருக்கின்றனர்.2.மேற்குறிபிட்ட 65:4 இறைவசனத்தின் அடிப்படையில் சிறுமியை பூப்பெய்துவதற்கு முன்பே திருமணம் செய்விக்கலாம் என்று வாதிப்பவர்கள் பின்வரும் கருத்தை முன்வைக்கின்றனர். அதாவது சிறுமியை பூப்பெய்துவதற்கு முன்பே திருமணம் செய்விக்கலாம் . ஆனால் கணவன் அவர்களோடு உறவு கொள்ள இயலாது. இதற்கு ஆதாரமாக நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களை 6 வயதில் திருமணம் செய்து பூப்பெய்ததும் வீடு கூடினார்கள் என்ற ஹதீஸை முன்வைக்கின்றனர். இந்த கருத்தை அந்நக்கயீ, அல் ஹஸன் அல் பஸ்ரீ, அல் முஹல்லப் போன்றவர்கள் கொண்டிருக்கின்றனர்.
فَلَمَّا بَين الله عدَّة النِّسَاء اللَّاتِي يحضن قَامَ معَاذ فَقَالَ أَرَأَيْت يَا رَسُول الله مَا عدَّة النِّسَاء اللَّاتِي يئسن من الْمَحِيض فَنزل {واللائي يَئِسْنَ مِنَ الْمَحِيض} من الْكبر {مِن نِّسَآئِكُمْ إِنِ ارتبتم} شَكَكْتُمْ فِي عدتهن {فَعِدَّتُهُنَّ} فِي الطَّلَاق {ثَلاَثَةُ أَشْهُرٍ} فَقَامَ رجل آخر فَقَالَ أَرَأَيْت يَا رَسُول الله فِي اللائي لم يحضن للصغر مَا عدتهن فَنزل {واللائي لَمْ يَحِضْنَ} من الصغر فعدتهن أَيْضا ثَلَاثَة أشهر فَقَامَ رجل آخر فَقَالَ أَرَأَيْت يَا رَسُول الله مَا عدَّة الْحَوَامِل فَنزل {وَأُوْلاَتُ الْأَحْمَال} يَعْنِي الحبالى {أَجَلُهُنَّ} عدتهن {أَن يَضَعْنَ حَمْلَهُنَّ} ولدهن {وَمَن يَتَّقِ الله} فِيمَا أمره {يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْراً} يهون عَلَيْهِ أمره وَيُقَال يرزقه عبَادَة حَسَنَة فِي سريرة حَسَنَةமேற்குறிபிட்ட மொழியாக்கம் தவறாக உள்ளது. அதாவது
(And for such of your women as despair of menstruation) because of old age, (if ye doubt) about their waiting period, (their period (of waiting) shall be three months) upon which another man asked: “O Messenger of Allah! What about the waiting period of those who do not have menstruation because they are too young?” (along with those who have it not) because of young age, their waiting period is three months. Another man asked: “what is the waiting period for those women who are pregnant?” (And for those with child) i.e. those who are pregnant, (their period) their waiting period (shall be till they bring forth their burden) their child. (And whosoever keepeth his duty to Allah) and whoever fears Allah regarding what he commands him, (He maketh his course easy for him) He makes his matter easy; and it is also said this means: He will help him to worship Him well.
ஒரு மனிதர் " அல்லாஹ்வின் தூதரே! மாதவிடாய் ஏற்படாத இளம் பெண்ணின் இத்தா எதுவரை? என்று கேட்கிறார்
من الصغر فعدتهن أَيْضا ثَلَاثَة أشه
No comments:
Post a Comment